என் கொல்லை இன்று எப்படி காட்சியளிக்கிறது என்று தெரியும்.
http://photo-view.blogspot.com/
கவிதை எழுத வரவில்லையெனில் காமிரா சில நேரம் துணை கொடுக்கும்.
க.>
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
K.>
2010/8/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
http://photo-view.blogspot.com/
க.>
இப்போதெல்லாம் மாலை நடையில் ‘கண்டுகொள்ளப்படாத ஜீவன்களை’ படமெடுக்க
முடிவெடுத்தேன். எத்தனை அழகு, தினம், தினம் - நம் கண்ணில் படாமல்!!
அது என்ன கொடி என்று தெரியவில்லை. அந்தப் பூங்கொத்திற்கு மாலை போட்டு
நிற்கிறது! என் கண்ணில் பட்டது, என் பாக்யம் என்று எண்ணிக்கொண்டேன்.
க.>
2010/8/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
யாக்கை ஒன்றையொன்று சார்ந்தே உள்ளது. தெருவோரக் களையென்றாலும் அதற்கும்
நோயுண்டு, நொடியுண்டு. இங்கு நீர்த்துளி போல் தென்படும் திட்டுக்கள்
நோய்க்கட்டிகள். பாவம்தான்!
http://photo-view.blogspot.com/2010/08/blog-post_16.html
க.>
1. அப்டித்தான், 'நான் ஆணையிட்டால்...' என்று முடுக்கிவிட்டு, விவேக சம்பந்தத்தை 'அம்போ' என்று விட்டு விட்டார்.
2. தாவர இயலிலே, ஏன்? உயிரின வாழ்வியலிலே, பிழையாத்மா உண்டு என்பதும் யாக்கையைச் சார்ந்ததே.
இன்னம்பூரான்
2010/8/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ஐயா! நீர் இந்த மின் தமிழ், செந்தமிழ் மாநாடு என்று பலதிலும் தலையை விட்டுக்கொண்டு உம்முள் இருக்கும் கவிதைக்குத் துரோகம் பண்ணிக் கொண்டிருப்பதாய் படுகிறது.முறைக்காதீரு......நான் ஜூட்...
--
நன்றி.
க.>
2010/8/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
அதிசயமாக இருக்கிறது. இந்த புராஜெக்ட் எடுத்த போது என் கொல்லைப்
புறத்தில் தினம், தினம் படமெடுக்க என்னவிருக்குமென்று? என்று நினைத்தேன்.
ஆனால் தினமொரு சப்ஜெக்ட் வந்து கொண்டே இருக்கிறது. தி.ஜாவிடம் சிறுகதை
எழுத கதைக்கரு எங்கு கிடைக்கும்? என்று கேட்டார்களாம். அவர் சும்மாக்
காலற கடைத்தெருவிற்குப் போய் வந்தால் கரு கிடைக்கும் என்றாராம். அது
போல்தான் இருக்கிறது!
இன்றைய சப்ஜெக்ட் 3.
1. பூத்துக்குலுங்கும் இளமை, அழகு.
2. இளம் கர்ப்பவதி
3. இளம் தாய்
http://photo-view.blogspot.com/
மூன்றாம் கண்!
மொழி மேவிய பார்வை....
கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://photo-view.blogspot.com/2010/08/blog-post_18.html
க.>
சிப்பிகள் இயல்பாகக் கற்றுக்கொடுக்கும் வாழ்வஇயல் நமக்கு புரிவதில்லை. நண்பர் வெங்கட் ஸ்வாமினாதனின் பின்னூட்டம் எனக்கு வியப்பைத் தரவில்லை. அன்றாடாம், நமக்கு தெரியாதவை, புலப்படாதவை தான் அதிகம் என்று தெரிகிறது. எனக்கென்னமோ கல்லுக்கும், பாறைக்கும், மண்ணுக்கும், மணலுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞானம் நிரூபிக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
2010/8/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
சிப்பிகள் சிறுவயதில் ஓடியாடும் உயிரினங்கள். இக்கூட்டத்திற்கு
ஜூபிளாங்கட்டான் என்று பெயர். பின்னர் ஒரு நிலையில் ஏதாவதொரு இடத்தில்
அவை நிலையுறுகின்றன. நிலைபெற்றபின் அவை சிப்பிகளை (மேலோடு) உருவாக்கி
உள்ளிருக்கும் உடலைப் பாதுகாத்துக் கொள்கின்றன. சிப்பி வேளாண்மை (Oyster
farming) என்பது கொரியாவின் முக்கியத் தொழில். சிப்பியை உடைத்து உள்ளே
இருக்கும் சிறு உடலை மக்கள் உண்பர். பிரெஞ்சுக்காரர்களுக்கு மிகவும்
பிடித்த உணவு கடற்சிப்பி.
எங்கள் கொல்லைப்புற வளைகுடா உயிர்த்துடிப்புள்ள வளைகுடா. ரொம்ப நேரம்
சும்மா கடலில் நின்றிருந்தால் போதும் நம் காலில் சிப்பிகள்
வளரத்தொடங்கிவிடும்! ;-)
க.>
2010/8/18 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:
பற்றுற்றதைப் பற்றறுத்து பற்றற்றதைப் பற்றினால்பற்றற்றது பற்றாகு மே.
இன்று என் கொல்லைப் புறத்தில் எடுக்கமுடியவில்லை. மேலும் இது இன்று இல்லை, நேற்று! (காலையில் வெளியிடுவதால் இன்று).
திரையோ வெள்ளி! நீர்ப்புகையோ வெளிர்நீலம்!
நல்லவேளை! என்னாடாது!இத்தனை சீக்ரம் சமுத்ரஸ்நானமா? என்று நினைத்தேன்!
2010/8/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>
திரையோ வெள்ளி! நீர்ப்புகையோ வெளிர்நீலம்!கருந்திரையில் காண்க! என்று போட்டிரிக்க வேண்டுமோ? ;-)
நல்லவேளை! என்னாடாது!இத்தனை சீக்ரம் சமுத்ரஸ்நானமா? என்று நினைத்தேன்!உண்மையில் செய்யலாம்! என் பெண் இங்கு வந்திருந்த போது ஆகஸ்ட்மாதம் முழுதும் கடற்குளியல். கொல்லைப்புறத்திலேயே புழை (கடல்) இருக்கிறது :-)கோடையில் மட்டும்தாம் குளிக்கமுடியும். மற்ற காலங்களில் நீர் குளிர். அதுவும் தனியாகக் குளிப்பதில் சுகமில்லை!மாணவர்களின் நீர்விளையாட்டு!க.>
--
2010/8/19 N. Kannan <navan...@gmail.com>
2010/8/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>
திரையோ வெள்ளி! நீர்ப்புகையோ வெளிர்நீலம்!கருந்திரையில் காண்க! என்று போட்டிரிக்க வேண்டுமோ? ;-)
வேண்டாம். சும்மா அடிச்சு விட்டேன். சமுத்ுத்திரஸ்நான சுகம்![]()
நல்லவேளை! என்னாடாது!இத்தனை சீக்ரம் சமுத்ரஸ்நானமா? என்று நினைத்தேன்!உண்மையில் செய்யலாம்! என் பெண் இங்கு வந்திருந்த போது ஆகஸ்ட்மாதம் முழுதும் கடற்குளியல். கொல்லைப்புறத்திலேயே புழை (கடல்) இருக்கிறது :-)கோடையில் மட்டும்தாம் குளிக்கமுடியும். மற்ற காலங்களில் நீர் குளிர். அதுவும் தனியாகக் குளிப்பதில் சுகமில்லை!மாணவர்களின் நீர்விளையாட்டு!க.>--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நல்லா இருக்கு கண்ணனின் நவீனக் குளியலும், தேனீ அவர்களின் பாரம்பரியக் கடல் ஸ்நானமும். கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து.
2010/8/20 N. Kannan <navan...@gmail.com>:
--
Photography என்பதை நிழற்படம், புகைப்படம் என்கிறோம். இதில் நிழல்
முக்கியப்படுகிறது. நிழல் இல்லையெனில் படமெடுப்பது கடினம். இன்றுள்ள
புகைப்படத்தில் இந்த நிழல் இரட்டைக் காட்சிகள் தருவதைக் காணலாம். முழு
இரவும் கூடாது. நிழலே இருக்காது. அந்தி சாயும் நேரம், சாய்ந்த பின்னும்
சரிப்படும்.
காட்சி 1. (கீழிருந்து மேல்) ஒரு ஊசியிலை மரம். இது கடலுக்குக் கட்டிய
கல் கரையில் எப்படியோ வளர்ந்து இன்று காய் காய்க்கும் பருவத்திற்கு
வந்துவிட்டது (அன்று இட்ட கூம்புக்காய் (cone) இதனுடையதுதான்). அது
கொஞ்சம் முன் படிவத்தில் வருமாறு வைத்து எடுத்திருக்கிறேன். பின்னால்
இருப்பது ஜங்மோக் கிராமம்.
காட்சி 2. ஓடத்துறையில் கயிற்றைப் பிரதானப்படுத்தி எடுத்துள்ளேன். யசோதை
சிறு கயிற்றால் கிருஷ்ணனைக் கட்டினாளாம். எங்கே கட்டினாள் என்கிறார்
என்கிறார் மதுரகவி? ‘கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்” என்கிறார். எல்லாம்
கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். இதனால்தான் ‘கால்கட்டு’
என்கின்றனர் போலும். கால்கட்டு இல்லாதவர்கள் புத்தகத்தைக் கட்டிக்கொண்டு
அழுகிறார்கள் :-)))
காட்சி 3. தரையில் நிற்கும் நீர்மூழ்கி!
காட்சி 4. ஒளி கூடும் போது, அதுவும் இரவு நேரத்தில், ஒரு ஒளிர்தல் (
haze) கிடைக்கிறது. அதுவே படத்திற்கு அழகைக்கூட்டுகிறது.
இன்றைய பேசும் சித்திரங்களை (நன்றி: இன்னம்புரான்)க் காண:
http://photo-view.blogspot.com/
மூன்றாம் கண்
மொழி கடந்த பார்வை.
மலர்கள் மலர்வது தன் இனப்பெருக்கத்திற்காக என்பது அறிவியலார் துணிபு.
ஆனால் ஒரு காதலனுக்கு அது தன் காதலிக்காக என்று தோன்றுகிறது. ஸ்வர்ணா
போன்றவர்களுக்கு தன் அம்பாளுக்காக என்று தோன்றுகிறது. படக்காரர்களுக்கு
அது கேமிராக்குள் வாழ வேண்டிய வஸ்து என்று தோன்றுகிறது. ரசனை அடிப்படை!
பாருங்கள் ஒரு கவிஞராகிய உங்களுக்கு அது கவிக்கரு என்று தோன்றுகிறது!
ஈடுபாடும், ரசனையும் சேரும் போது வாழ்வு சுவைக்கிறது.
நன்றி!
கண்ணன்
2010/8/21 ஆராதி <aara...@gmail.com>:
> திரு கண்ணன்
> படங்கள் அருமையிலும் அருமை.
> இப்படி,
தாங்கள் தொடர்ந்து இதை அனுபவித்து வருகிறீர்கள். படகாட்சி என்று
இருந்தால் நாலு பேர் பார்த்தால் அல்லவோ கலைஞனுக்கு மகிழ்ச்சி ;-) கொஞ்சம்
பயம் கூட வருவதுண்டு. இரவில் குடா என்ற படத்திற்கு ‘a piece of crap'
என்று ஒரு அநாமத்து பின்னூட்டம் போட்டது! அதற்கென்ன தெரியும் அழகின்
ரகசியம். படங்களுக்குப் பின்னால் விரியும் ஒரு பிரபஞ்சம் அவன்
கண்ணுக்குத் தெரியுமோ? தூரத்து மணியோசையும், தூரத்து ஒளிக்கணமும்
எழுப்பும் சிலிர்ப்பு என்னவென்று அனுபவித்து இருந்தால் அல்லவோ புரியும்.
இப்படக்கவிதைகள் எல்லாமே நம்மாழ்வார் ‘மல்லிகை கமழ்தென்றல் ஈரும் ஆலோ!’
எனும் பத்தில் சொல்லும் ஒரு தனிமையை, சந்திப்பிரிவில் நிற்கும் ஓர்
ஆன்மாவின் கீதங்கள் என்றல்லவோ தோன்ற வேண்டும்!
இப்படக்கவிதைகள் ஓர் தூண்டு கோலாக செயல்பட வேண்டும் என்பது என் ஆசை.
நம்மவருக்கு ஒரு பெரிய காவிய, கவிப்பாரம்பரியும் உள்ளது. தமிழன்
எழுதத்தொடங்குவதே கவிதையில்! ஆனால் மற்ற கலாச்சாரங்களில் கவிதை என்பது
கற்றோர் மொழி! அக்கவிதை உணர்வை காமராவிற்குள் புகுத்தி தாம் வாழும்
இடங்களை புகைப்படம் எடுத்தால்? என் மனம் தமிழக ஊர்களையும், வயல்களையும்
சுற்றி வட்டமிடுகிறது. அடுத்து நான் தமிழகத்தில் எடுத்த சில படங்களைப்
போடுகிறேன்.
மரபு என்பதைப் படங்களை விட எளிதாகச் சொல்லும் வேறு வழியுண்டோ! தமிழர்கள்
எல்லோரும் காமிராவும் கையுமாக அலையக்கடவது!
கண்ணன்
2010/8/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
ஆகா! அந்தக் கதையை முதலில் சொல்லும்! :-)
நேற்று தாவரங்கள் பற்றிய நேஷனல் ஜியாகிரபிஃக் ஆவணம் மீண்டும் பார்த்தேன்.
தாவரங்களின் உணர்வுகளை, முக்குணமும் அமையப் பெற்ற அவைகளின் தன்மை அறிய
ஆச்சர்யப்பட்டுப் போனேன்.
அது என்ன குப்ஜா மரம்?
ஆராதி சார் கவிதை வரணும்ன்னா இப்படிப் படம் காட்டணும் போல :-)))
க.>
இல்லை! இல்லை! பிலிம்மே இல்லாமல் பிலிம் காட்டறதுதான் வித்தை :-))) (இது
டிஜிட்டல் கேமிரா)
க.>
படம் 1. களை வெட்டு (எட்டிப்பார்க்கும் களை)
எங்கள் ஆய்வகத்தில் பல்வேறு வகையான மரங்கள், பல்வேறு வகையாக வெட்டப்பட்டு
அழகாக வைக்கப்பட்டிருக்கும். நம்ம குழந்தைக்கு கிராப்பு வெட்டுவது போல்
தோட்டக்காரன் வந்து எல்லாவற்றிற்கும் முடி வெட்டி (சாரி, இலை வெட்டி)
விட்டுப் போவான். அவனை இரண்டு வாரமாகக் காணோம், நல்ல வெய்யில்,
வெளிச்சம், மட, மடவென உள்ளே வளரும் புல்லும், கொடியும் வளர்ந்து தலை
தூக்கி நிற்கின்றன. பார்த்தவுடன் அவற்றின் பரவசம் கண்டு எனக்குப் பரவசம்.
‘மரணத்துள் வாழ்வு’ எனும் விதிக்கேட்ப நாளை தலை வெட்டப்படும் என்றாலும்
(அறியாமல் இருத்தலில் ஒரு சுகமுண்டு) இன்று தலை தூக்கி நிறபதுதான்
வாழ்வு!
படம்.2 மீண்டுமோர் அந்து!
இன்னொரு அந்துப் பூச்சி. இப்பூச்சிகளின் மீது யார்தான் தூரிகை கொண்டு
இப்படி வண்ணம் தீட்டினரோ?
படம். 3. கொரியக் குழந்தைகள் ஆடை
இப்போதெல்லாம் சம்பிரதாய உடைகள் அணிந்து கொரியக் குழந்தைகளையும்,
பெரியோர்களையும் காணுதல் அரிதாகிவிட்டது. சீனக்கலாச்சாரத்தின் வெற்றிக்கு
ஒரு காரணம் தமது பாரம்பரியத்திலிருந்து விடுதலை பெற்றது. இது அவர்களுக்கு
பொருளாதார முன்னேற்றத்தை விரைவில் அளித்தது. ஒரே அலையில் இவர்கள் மேலை
உடை கலாச்சாரத்திற்குப் போய்விட்டனர். இதன் சாதக, பாதங்களை அலசுவது
தனிக்கட்டுரையாகப் போய்விடும். கடை பொம்மையாவது அணிந்து இருக்கிறதே என
எடுத்தேன். எவ்வளவு அழகு பாருங்கள்.
படம் 4. திருவடியா? வெறும் அடியா?
பஸ்ஸுக்கு உட்கார்ந்திருக்கும் போதுதான் புலப்பட்டது இப்படியொரு கேமிராக்
கோணம். ச்ரவணபெலகோலா தீர்த்தங்கரர் கோயிலுக்குப் போன பிரம்மாண்டம்
மனதிலோடியது. தொடுப்பு கொடுத்துள்ளேன். மலர்கள் தம்மைத்தாமே
அர்ச்சித்துக் கொள்வது போல் என் திருவடி தரிசனம் எனக்கே ;-)
--
க.>
2010/8/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
தாய் மண்ணை இழந்த
தாவரப்
படைவீரர்கள்
வழியின்றி
வீதிக்கு வந்தவர்கள்
திரு கண்ணன், நீங்கள் என்னுடையதைக் கவிதை என்கிறீர்கள். எனக்கு அவைகள்
கடவுளுக்கும் ஆகாத
கார்குழலில் சூடாத
கண்ணாடிக் குப்பிக்குள்
காட்சிக்கு நிற்காத
கயிற்றில் தொங்காத
காட்டு மலர்கள்
கண்ணைப் பறிக்கும்
கார்கால மின்னல்
தவமாய்த் தவமிருந்தும்
தர மறுக்கும்
வரம்
கட்டிக்கொண்டவள்/ன் என்றாலும் கட்டாயப்படுத்தவா முடியும்?
--
உங்கள் கவிதைக்கு பின்னால் வருகிறது பின்னூட்டம்.
என் படங்கள் ரங்கன்+ஆராதி+இன்னம்புரான் பின்னூட்டங்களால் புத்துயிர் பெருகின்றன!
க.>
2010/8/23 ஆராதி <aara...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
என் படங்கள் ரங்கன்+ஆராதி+இன்னம்புரான் பின்னூட்டங்களால் புத்துயிர் பெருகின்றன!
க.>
உண்மைதான். நன்கு அறிவேன். ஆயினும் தமிழில் சொல்வதில் ஓர் ஆனந்தம். தமிழை
முதன் மொழியாகக் கொண்டு பள்ளி இறுதிவரை படித்ததாலோ என்னவோ ஆங்கிலத்தை
தமிழ் வரிவிடில் காணச் சகிப்பதில்லை. பேஸ்புக் என்று எழுதுவது
பெரிதில்லைதான். புரிகிறது! இது என் தனிமனித பிரச்சனையோ? அதனால்தான்
அருகிலேயே அதன் ஆங்கிலப்பெயரையும் கொடுக்கிறேன். அதையொரு பரிந்துரையாகச்
சொல்ல வரவில்லை. என் இயலாமையைக் குறிப்பதற்கு மட்டுமே!
அடுத்தது, படங்கள் அதனளவில் உயிரோட்டம் உள்ளவைதான். படமெடுக்கும் தாங்கள்
அறிவீர்கள். ஆயினும் இவர்கள் அதற்கொரு புதிய பரிமாணம் தருகிறார்கள்.
பெருமாள் மரமாக வந்தார் என்பதை அறிந்ததிலிருந்து அப்படத்தைப் பார்க்கும்
போது மரம் போய் விட்டது. பெருமாள்தான் நிற்கிறார் (மரத்தை மறைத்த மாமத
யானை காணாமல் போய்விட்டது அல்லது பரத்தை மறைந்த பார்முதல் பூதமில்லை!).
அது போல்தான் ஆராதியார் வழங்கும் கவிதைகள். இவையெல்லாம் இவ்விழையை ஒரு
கூட்டுப்பிரார்த்தனை ஆக்கிவிடுகிறது (குறிப்பாக இன்று ரங்கன் சொன்னது
என்னை உலுக்கிவிட்டது).
க.>
அப்படித்தான் இருக்க வேண்டும்!
க.>
காட்சி 1.கூட்டமர்வு
கொரியர்கள் மிக இயல்பாக தரையில் சப்ளாங்கொட்டி உட்கார்ந்து விடுகின்றனர்.
அதே போல் தரை மண் தரையாக இருந்தால் காலை மடக்கி உட்கார்ந்துவிடுகின்றனர்.
பள்ளிச் சிறுவனாய் இருந்த காலத்தில் இதே போல் நான் தரையில் அமர்ந்த
காலங்கள் நினைவிற்கு வருகின்றன. இக்காலக் குழந்தைகளை அமரச் சொன்னால்
செய்வார்களா? என்று தெரியவில்லை!
காட்சி 2. தலை அலங்காரம்
ராஜா வீட்டுக்கலயாணம் எப்படி நடக்கும் என்று செய்து காட்டினார்கள்.
எங்கே? இன்ச்சோன் விமான நிலையத்தில். எனக்கு அந்தப் பெண்ணின் அபரிதமான
முடியலங்காரம் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் இவளவு முடி யாரும்
வைத்துக் கொள்வதில்லை. இதுவும் விக்தான். இருந்தாலும் ஒரு காலத்தில்
இப்படியொரு அலங்காரம் இருந்திருக்கிறது!
காட்சி 3. கைதாங்கும் உணவுக்கூடம்!
தைவான் பல்கலைக்கழக உயிரியல்துறைக்கு முன்னால் இப்படியொரு மரம், வசதியாக.
துப்புரவு வேலை செய்யும் மூதாட்டி காலை உணவை முடித்துக்கொண்டிருக்கிறாள்.
காட்சி 4. மேகத்தூண்
மேகங்கள் கீழிருந்து நாம் மேலே பார்க்கும் போது இருப்பதை விட மேலிருந்து
அவைகளைக் கீழே பார்த்தாலோ அல்லது சம உயரத்தில் இருந்து பார்த்தாலோ
வித்தியாசமாக இருக்கும். பெரும் பாலான நேரங்களில் இந்த அற்புதக்
காட்சிகளை படமெடுக்கக் கையில் காமிரா இருப்பதில்லை. அன்று இருந்தது!
http://photo-view.blogspot.com/
மூன்றாம் கண்
1 படம் = ஆயிரம் சொற்கள் (ஒரு பழைய கணக்கு)
அவள் நான் படமெடுப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. கிளிக் சத்தம்
கேட்டதும் என்னைப் பார்த்து சிரித்தாள்.
க.>
2010/8/24 Chandar Subramanian <chandarsu...@gmail.com>:
அதே! அதே!
வியட்நாமிலிருந்து ஒரு பெண் இங்கு வந்திருந்தது. அவளுக்கும் ஆறடி கூந்தல்.
ஜப்பானில் (கியோத்தோ) ஒரு கோயிலில் இப்படி முடியளித்த பெண்டிர் முடியை
வைத்து பிரம்மாண்டமான கயிறு திரித்து வாசலில் கட்டி இருக்கிறார்கள்.
முன்பு படமெடுத்தது. சிலைடாக புரணில் கிடக்கிறது (இந்தியாவில்).
> இது என்ன எந்த நாயகி பாடிக்கொண்டு இருக்கிறாள்?
> “திரண்டெழுந்த மாமுகில்காள், மாருதங்காள்” என்று?
> வெண்மேகத்தை முகில் என்று கூறமுடியுமா?
> :--)))
>
ஆண்டாள் ஞாபகம்தான் வந்தது.
விண்ணீல மேலாப்பு
விரித்தாற் போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே!
கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணீர்மை யீடழிக்கும்
இது தமக்கோர் பெருமையே?
க.>
http://www.kamalagaanam.blogspot.com
----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
http://photo-view.blogspot.com/
--
கமலம் இதைவிட அழகாக மேகக்கூட்டங்கள் சஞ்சாரிக்கும். எத்தனை வகைகள்!
அடுத்தமுறையாவது இன்னும் அழகான மேகங்களை எடுக்க முயல்கிறேன்.
அன்று ஒரு சின்ன வானவில் தோன்றியது (மேலேதான்), எடுப்பதற்குள் விமானம்
நகர்ந்துவிட்டது. எல்லாம் நொடிக்காட்சி!!
க.>
க.>--
வித்தியாசமான கோணம்!
நிலாவைப் பிடிக்கும் போது நான் அத்வைதம் எண்ணவில்லை.
அதன் அழகு, தொழில் நேர்த்தி - இவைதான் உள்ளத்தில் நின்றன.
அத்வைதமெனக் கொண்டால் ஒரு மயக்கம் இயல்பாக வருகிறது.
இதுவொரு கனவா? நிலவும் நானே! அதைப் போட்டோ பிடிப்பவனும் நானே!
சார் இப்ப இது வேண்டாம். விஷிட்டாத்வைதமே இருக்கட்டும் :-))
க.>
முழுநிலவு வந்தவுடன் இரவு தணிகிறது.
இன்னும் சென்சிடிவ் செட்டப்பில் வைத்து எடுத்துப் பார்த்தால் சூரியன்
போல் தகிக்கிறது ;-)
ஏதோ ஓவியம் போல் தென்படுகிறது. அதை பேஸ்புக்கில் போட்டிருக்கிறேன்.
> கோபுர கலசம், கம்போடியா!
> --------------------------
> என் நெஞ்சின் எண்ணத்தை
> எட்டாதான் செவிசேர்க்க
> எழும்பி நிற்கும்
> ஓர் அண்டெனா!
ஆகா! இதற்குப் பெயர்தான் கோபுர தரிசனமா? சரி..சரி..
> பேரிங் ஜலசந்தியில் சூரிய அஸ்தமனம்
> ------------------------------------
> அங்குமா?
> நாட்பொழுதும்
> நயவஞ்சகர்களின்
> செயல் கண்டு, கொதித்து,
> கோபத்தொடு மறையும் சூரியன்!
>
ம்..ம்..
சூரிய அஸ்தமனம் அழகானது. அமைதியானது.
ஜப்பானில்தான் உலகின் அதி அற்புதமான சூரிய அஸ்தமனங்கள் நிகழ்கின்றன.
என் பெண்ணிற்கு அப்படியொரு ஜப்பானியப் பெயர் வைக்க ஆசைப்பட்டேன். யூகி
(யூஹி) என்றால் சூரிய அஸ்தமனம் என்று பெயர்.
ஆனால் சம்பிரதாயப்படி குழந்தைகளுக்கு மறையும் சூரியன் பெயர் வைப்பதில்லை.
அசாஹி (அஸாஹி) என்றால் காலைச் சூரியன். இது ஏற்புடையது.
க.>
க.>--
பாரதி அவள் விழிக்கோணம் கொண்டு நிலவைப் பிடித்த கதை சொன்னால், இவுரு நிலவே விழிகோணம் உருட்டி என்னமோ தேடிக்கிட்டு போவுதுங்கறாரு.தேட்டத்தின் பொருளாய்க் கண்ட நிலவை தேடும் தம்பிரானாய் ஆக்க என்ன ஒரு துணிச்சல்!! பலே.
காட்சி 5. பொசு, பொசு
செடி, கொடிகள் எங்கும் வளர்ந்து விடுகின்றன. புல்லின் கனியொரு பொசு, பொசு. அது நெல்லாக, இருந்தாலும், மக்காச் சோளமாக இருந்தாலும், இந்தப் புல்லாக இருந்தாலும்!!
இது இப்போ கோஷ்டி போல்தான் நடை போடுகிறது.
என் கவலையெல்லாம், இனி எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டிவருமோ! என்ற
பயம்தான் ;-) ஏதோ இப்போதைக்கு ஓடுகிறது. ஆச்சர்யம், வெளியே போனவுடன்
எதாவது புதிதாக கிடைக்கிறது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து என் தேடுதலைப்
புதுமைப்படுத்தியுள்ளீர்கள். வாழ்க! கோஷ்டி!!
க.>
2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> கண்ணன், ஜெர்மன் மொழியில் பேச்சு வழக்கில் இந்தச் செடிக்கு Lampe putzen என்று பெயர். விளக்கு துடைக்கப் பயன்படுத்தும் ப்ரஷ் போல இந்தச் செடியின் பூ இருப்பதால்!
>
சுபா:
நீங்கள் பார்த்தது நாணலின் ஒரு வகை. நாணல் பூ அப்படித்தான் இருக்கும்.
பினாங்கில் எடுத்த பழைய படங்களில் தென்படுகிறதா பார்ப்போம்!
க.>
இன்று.....இரவில் மீன்பிடிப்பதில் ஒரு சுகம் காணுகின்றனர் கொரியர்கள். அதுவும் கோடையென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்களுக்காக எவ்வளவு பெரிய கம்ப விளக்கு பாருங்கள். எல்லாம் காந்தி கணக்குதான் போலும் ;-)2. படிகள்குறியீட்டளவில் படிகள் முக்கியமானவை. பகலில் எடுத்தது போல் தோற்றமளிக்கும் இப்படம் இரவில் எடுத்ததுதான். சாம்சுங்கின் digital enhancement technology என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. நான் Facebook-ல் போட்டிருக்கும் ஒரு படத்தில் இரவைப் பகல் போல் ஆக்கிக்காட்டியிருக்கிறது. வரும் காலம் மென்பொருள் காலம்.சூரியன் போல் தோற்றமளிக்கும் நிலா!எனது பழைய ஆல்பத்திலிருது ஒரு படம். ஆஸ்திரேலியாவில் எடுத்தது. ஆஸ்திரேலிய தாவர, விலங்குகள் மிக வித்தியாசமானவை. அவைகளை இங்கு கொஞ்சம் அறிமுகப்படுத்துகிறேன். இந்தப்படம் என் சுவரொட்டியாக (Wall paper) பல காலம் இருந்தது.காலையில் எழுந்து வெளியே வந்தால் இப்படிக் குட்டிக் குட்டிக் குழந்தைகள், எங்கள் தோட்டத்தில்! எல்லாம் சிறு செடிகள். அருகே எடுக்கும் போது மலர் பெரிதாய் தெரியும். பூவெல்லாம் இரட்டையர் ஜாதியோ?
நல்ல வேளை இது என் காலில் மிதிபடாமல் தப்பியது. வெளி வாசல் படியில் கிடக்கிறது. என்ன தூக்கமோ? 9 மணி வரைக்கும்!மேலும் பல படங்கள் எடுத்தேன். அவைகளைத் தனி ஆல்பமாக்கி Facebook-ல் போட்டிருக்கிறேன். இங்கே சொடுக்கி அதைக் காண்க!க.>
--
--