முழுதுணர்ந்த தெய்வ முனிக்கணங்கள் போற்றும்
வழுதி வளநாடன் மாறன் - பழுதிலா
எண்ணார் மறைப் பொருளை எல்லாரும் தாமறியப்
பண்ணார் தமிழாற் பரிந்தெடுத்துக்-கண்ணீர்
திரைக் கொண்டு நெஞ்சுடைப்பத் தித்திக்கும் வார்த்தை
உரைக்கும் திருநாவுடையான்
என்று தத்துவராய சுவாமிகள் போற்றிய அவ்வார்த்தைகள் மெய்படும்படி தாங்கள்
இன்று திருவாய்மொழி உபன்யாசம் மின்தமிழில் ஆரம்பித்திருப்பது கண்ணனின்
இன்னருள் திண்ணமாய் இங்குண்டு என்பதைச் சுட்டுகிறது. இன்று ஈதோரு
பொன்னாள்.
செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய ஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே!
(தேசிகப்பிரபந்தம், அதிகாரசங்கிரஹம்-1)
வாழ்த்துக்கள்.
உட்கார்ந்து கேட்பவர்கள் எல்லாம், ஒரு உள்ளேன் ஐயா! போடுங்கோ!!
கண்ணன்
எம் விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்ததற்கு மிக்க நன்றி
வேங்கடேஷ்.தேனோ, பாலோ, கன்னலோ என்று அமைந்து
மின் தமிழுக்குச் சுவைகூட்ட இருக்கும் இத்தொடரில் கட்டாயம்
குறைகளுக்கு இடமிருக்காது.
ச்ரிய:பதி க்ருபை செய்தான்.
தேவ்
தேவ் சார்,
சுகுமாரன் சார்,
ஒவ்வொரு துறை சார்ந்தோர் ஒவ்வொரு கருத்துச் சொல்வர். அரங்கனார் ஒரு பெரிய
கட்டுரை எழுத்திக்கொண்டிருக்கிறார்.
நம்மாழ்வார் ஓரு தொன்மையான மரபை நமக்கு மீட்டுத்தந்திருக்கிறார்.
ஒரு புதிய பாதையை காட்டி அருளியிருக்கிறார்.
நம் எல்லோருக்கும் எக்காலத்திலும் உற்ற தோழனாய்/தோழியாய் இருக்கும்
வண்ணம் பாமாலையில் உறைந்து காட்டியிருக்கிறார்.
நம்மாழ்வாருக்கு 'வெறும்' நாமத்தைச் சார்த்திவிட்டு ஒதுக்கிவிடாமல் அவரது
பனுவல்களை தமிழராகிய நாம் ரசித்து, உய்த்துணரப் பழக வேண்டும். அதற்கு
இத்தொடர் உதவும்.
மனையும் பெருஞ்செல் வமுமக்க ளுமற்றை வாழ்வுந் தன்னை
நினையும் பதமென நின்றபி ரான்குரு கூர்நிமலன்
புனையுந் தமிழ்க்கவி யால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையுந் திரிவுற் றனகுற்ற நீங்கின வேதங்களே!
குடும்பம், சொத்து, பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, குற்றமற்ற
நம்மாழ்வார் பாதங்கள் கிடைக்கப்பெற்ற பின், அவரது இன்சுவை தமிழ் கவியால்
நம் வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி, இதுவறை செய்திருந்த
குற்றங்கள் எல்லாம் நீக்கப்பெற்று வளம் பெற்றன வேதம் புதிதெனும் அவன்
வாக்கால்.
இந்தக் கடைசி வரியை எப்படிப் பொருள் கொள்ளலாமென யோசித்தேன்? நம்
குற்றங்களை அவன் வேதங்கள் நீக்கினவா? இல்லை, அவன் இன்கவியால் வேதங்கள்
தம்மிடமிருந்த குற்றங்களை நீக்கினவா? நினைக்கக்கூட பயமாக இருந்தது!
வேதத்தில் குற்றமா? இருக்காதுதான். ஆயினும், இந்த அரங்கத்து 'தாமரைப்
புரட்சியை' கண்ணுறும் போது அப்படியொரு பொருள் பூடகமாக உள்ளுரைவதுபோல்
தோன்றுகிறது.
திருவள்ளுவத்தைப் புகழ்ந்து எழுந்த திருவள்ளுவ மாலையில் ஒரு பா. வெள்ளி
வீதியார் என்பவர் எழுதியிருக்கிறார். அது அப்படியே திருவாய்மொழிக்குப்
பொருந்துவதுதான் ஆச்சர்யம்!
'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா
அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.'
அதாவது, செய்யா மொழி (எழுதாக்கிளவி) என்று சொல்லப்படும் வேதத்தின்
பொருளும், திருவள்ளுவர் செய்த பொய்யா மொழியும் பொருளால் ஒன்றே. ஆயின்,
செய்யாமொழி (வேதம்) அந்தணர்க்கு என்றாகிப்போனது. இக்குறை தீர்க்க
வள்ளுவனின் புதிய வேதம் எல்லோர்க்கும் என்றாகிப்போனது.
மிக அழகான பாடல். நம் மண்ணில் 50களில் உருவான கலாச்சார புரட்சியால்
வள்ளுவனை சுத்தப்படுத்த முயன்றாலும், தமிழ் மரபு திருக்குறளை வேதம் என்றே
சொல்கிறது. At least, அவர் காலத்தவர்கள் அப்படித்தான் கண்டனர் என்று
தெரிகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவன் வேதத்தைப்
பொதுமைப்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், மிகச்சாமர்த்தியமாக, வேதம்
என்று சொல்லிவிட்டால் பிற மதத்தினர், பிற சாதியினர் (குறிப்பாக
அந்தணர்கள்) மிரண்டு விடுவர் என்றெண்ணி வள்ளுவன் அதை எப்பெயரிட்டும்
அழைக்காமல், மற்றோரும் எப்பெயரிட்டும் அழைக்கமுடியாமல் ஒரு பெரும்
காரியம் செய்துவிட்டான். ஏனப்படி செய்தான்? என்று யோசித்தால், அப்படிச்
செய்தால்தான் வேதக்கருத்துக்கள் மக்களை எவ்வித filters ம் இல்லாமல்
சென்றடையும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. கருத்து போவது
முக்கியமா? இல்லை அதை எடுத்துச்செல்லும் பாத்திரம் முக்கியமா? என்ற
கேள்வி வந்தால், கருத்திற்கே முதலிடம் கொடுத்தனர் சான்றோர். எல்லோரும்
திருக்குறளைச் சொல்லுகின்றனர். ஆத்திகமோ, நாத்திகமோ. எப்படியோ
வேதக்கருத்துக்கள் மக்களிடம் சென்றால் சரி, என்று சொல்லவருகிறார்
வெள்ளிவீதியார் எனும் சங்கப்புலவர்.
அதே போல், பல நூற்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் வேதம் புதிது செய்ய
வேண்டிய காலம் நம்மாழ்வார் காலம். இவரும் வள்ளுவர் போல், வேதத்தின்
சாரத்தை அப்படியே தமிழ்ப்பாவில் வடிக்கிறார். வடித்து அதை அந்தணர்க்கு
மட்டுமின்றி எல்லோருக்கும் விநியோகம் செய்கிறார். இவரின் உளக்கிடக்கை
(ஆசார்ய ஹ்ருதயம்) அறிந்த வைணவப் பெரியோர்கள் இதையே கோயில் மொழியாக்கி,
எல்லோரும் அறிவும் வண்ணம் செய்துவிட்டுப் போயினர். ஆயினும் காலப்போக்கில்
இதுவும் அந்தணர்மாட்டே நின்று போனது.
எனவே மீண்டும், அதை எடுத்து எல்லோருக்கும் விநியோகம் செய்ய மின்தமிழ் முயல்கிறது!
சரி, வேதத்தில் குறை என்ன? கேள்வியை தி.க, தி.மு.காவிடம் கொடுத்தால்
பேசுவர், பேசுவர் அவ்வளவு பேசுவர். அவ்வளவு குறைகளை எடுத்துச் சொல்வர்.
சரி, இதை நமது ஆச்சார்ய சீலர்கள் உணரவில்லையா? என்றால். ஆம்! அவர்களும்
உணர்ந்துள்ளனர். நான் முன்பு எழுதியது போல், வேதம் என்பது காலம்கடந்து
நிற்கிறது. மனித பரிணாமத்தில், தோற்றமுற்ற காலங்களில்
அக்காலக்கட்டத்திற்கு தேவையான விதிமுறைகளைச் சொல்லிச் சென்றது. ஆயின்,
காலம் மாற, மாற பழைய கணக்குகள் பொருந்துவதில்லை. எனவே அவற்றைக்களைய
வேண்டியது அவசியமே. இதை அறிந்துதான் பட்டபிரான், வல்லப பாண்டியனுக்கு
பரஞானம் காட்டிய போது எல்லா வேதங்களையும் எடுத்துரைக்கவில்லை. கழிப்பதைக்
கழித்து, ஏற்பதை ஏற்று, "வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்"
என்று சொல்கிறது சரித்திரம். எனவே, எப்படி திருக்குறள் குற்றமற்று
நிற்கிறதோ, அதே போல், திருவாய்மொழியும் குற்றமற்று நிற்கிறது.
அப்படியெனில் "குற்றம் நீங்கின வேதங்களே" என்று சொல்லலாம் அல்லவா!
இதுவொரு பின்னவீனத்துவ பார்வை. ஏற்போருக்கு ஏற்பு, மற்றோருக்கு துவர்ப்பு
என்று இருக்க வாய்ப்புள்ளது ;-)
க.>
நன்றி குமரன்.
ஆச்சார்ய சீலரான தேசிகன் நம்ம பக்கம் என்று சுட்டிக்காட்டியதற்கு நன்றி ;-)
க.>
ஆசார்ய ஸார்வபௌமர் ஸ்வாமி தேசிகன்
-------------------------------------------------------------------------
சந்தமிகு தமிழ் மறையவரான தூப்புற்பிள்ளை
தமிழின் பக்கம்தான்.
அவர் வாழ்ந்த இடம் மதவாதியர் பலர் நிறைந்த காஞ்சீபுரம்;
வடமொழி வெகுவாக வழக்கில் இருந்த நேரம்;
தமிழ்ப்பனுவல்களுக்கு மறைக்கு நிகராக மதிப்பளித்ததற்கு
எதிர்ப்பு நிறைய இருந்தது. ஸ்வாமி வாதத்திறமையால்
த்ராவிட வேதச் சான்றாண்மையை வடமொழி வாயிலாக நிலைநாட்டினார்.
அவர் அருளிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களிலும்
ரஹஸ்ய த்ரயங்களும் நிலை நிறுத்தப்பட்டன.
வேறு வகையான காவியங்கள் செய்திருந்தால் வடமொழி
வாணர்களிடையே நிறைந்த புகழ் பெற்றிருக்கலாம்;
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
‘யதிப்ரவர பாரதீ ரஸபரேண நீதம் வய:’என்று தம் இளமை
கழிந்த விதத்தை அவர் தெரிவிப்பது மனத்தை நெகிழ்விக்கிறது.
(இந்த இழைக்கு நேரடியாகத் தொடர்பில்லாத போதிலும்)
திருவரங்கத்தில் நின்றுபோன திருவாய் மொழி உத்ஸவத்தை
மீண்டும் நடைபெறச் செய்தது; ச்ருதப்ரகாசிகையை ரக்ஷித்தது;
நிகம பரிமளம் அருளியது போன்ற அவர் செய்த
நிகரற்ற தொண்டுகளை நினைவு கூர்தல் அவசியம்.
ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அவர் எடுத்தாண்ட நாலாயிரப்பகுதிகள்
எண்ணற்றவை.
தேவ்
பரனூர் பெரியவர் சொல்லித்தான் எனக்கு தேசிகர் பற்றி தெரியும்.
சங்கரர் வாழ்வில் நிகழ்ந்தது போலவே தேசிகர் வாழ்விலும் ஒரு 'கனகதாரா'
வைபம் நடந்திருக்கிறது. ஒரு ஏழைக்கு இறங்கி பெருந்தேவியிடம் முறையிட்டு
பொன்மழை பெய்ய வைத்திருக்கிறார். இது அவ்வளவாக போற்றி அறியப்படுவதில்லை.
தியாகைய்யர் வாழ்வில் 'நிதிசால சுகமா? இராமா! நின் சந்நிதி சாலசுகமா?'
என்ற கீர்த்தனைக்கு பின்புலமாக நடந்தது போலவே தேசிகர் வாழ்விலும்
நடந்திருக்கிறது. தேடிவந்த பல்லக்கையும், சுகத்தையும் நிராகரிக்கும்
கொள்கைப் பிடிப்பு அப்பெரியவர்களுக்கு இருந்திருக்கிறது.
இவையெல்லாம் நம் பாடத்திட்டதில் வருவதில்லை. குப்பை, சொப்பையான ஔரங்கசீப்
வரலாறு பற்றி படித்திருக்கிறோம். கொலை வெறி பிடித்த மூர்க்கன் அவன்!
எப்படிப் பிள்ளைகளுக்கு உயர் விழுமியங்கள் பின் மனதில் பதியும்?
அவ்வப்போது நம் பெரியவர்கள் வாழ்வு பற்றிச் சொல்லுங்கள்.இப்பவாவது
தெரிந்து கொள்வோம்.
க.>
2009/2/22 devoo <rde...@gmail.com>:
> "தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே"
<குருகூர் நிமலன்
புனையுந் தமிழ்க்கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையுந் திரிவுற்றன குற்ற நீங்கின வேதங்களே!>
நாரணனே காரணன் என்பதை மிகவும் மறைத்துச் சொன்ன
ஒரே ஒரு குறைபாடுதான் தெரிகிறது; வேறு காரணங்கள் இருப்பின்
தெரிவிக்கலாம்.
<வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்>
பகவத் பரத்வத்தைத் தெரிவிக்கும் வேதப்பகுதிகளே இங்கு வேண்டிய வேதங்கள்
எனப்பட்டன.
'குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாந் அசேஷாந்....’
என்னும் ப்ரமாண வசநம் விஷ்ணு சித்தர் குருமுகமாகப் பயின்றிராத –
மேலுலகங்களில் நடையாடிய வேதப் பகுதிகளையும் பாண்டியனின் அவையில் ஓதினார்
என்பதைத் தெரிவிக்கிறது.
தேவ்
இது கொஞ்சம் நெருடல்தான். குறை என்பது உண்மையான குறை அல்ல. வேதத்தின்
எல்லாப்பகுதியும், எல்லோர்க்கும் பொருந்துமென்றில்லை. அந்தந்த அதிகாரி
யோக்யதை இருக்கிறது. அது பல சமயம் எடுத்துச் சொல்லப்பட்டு
விவாதிக்கப்படும். அவ்வளவே. அந்த நோக்கில் பட்டர்பிரான் 'வேண்டிய வேதம்
ஓதியதாக' அண்ணா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும்
வெள்ளைக்காரர்கள் எடுத்தாளும் ஆரம்ப கால வேதவசனங்கள் பெரும்பாலும்
தத்துவமின்றி சடங்குகள் மட்டுமே இருக்கும். திராவிட வேதத்தில் சடங்குகளே
இல்லை என்று சொல்லும் அளவு தத்துவமும், பாவமும் மண்டிக்கிடக்கும். இதை
மனதில் கொண்டு எழுந்தது. நாரணனைப் பரமென உரத்து ஓதாதது..ம்ம்(பயமாக
இருக்கிறது) குறைதான்!!
2009/2/22 devoo <rde...@gmail.com>:
<திராவிட வேதத்தில் சடங்குகளே இல்லை என்று
சொல்லும் அளவு தத்துவமும்,பாவமும் மண்டிக்கிடக்கும். இதை
மனதில் கொண்டு எழுந்தது. நாரணனைப் பரமென உரத்து ஓதாதது
..ம்ம்(பயமாக இருக்கிறது) குறைதான்!!>
’நாராயணனே பரன் ;நாம் அவனுக்கு நிலையடியோம்’
என்று உரத்து ஓதிய இடங்கள் நிறையவே உள்ளன.
“திவ்யோ தேவ ஏகோ நாராயண:”- இதைக் காட்டிலும்
வேறு என்ன தெளிவு வேண்டும் !
நீங்கள் எடுத்தாண்ட தமிழ் ப்ரமாணம் நஹி நிந்தா ந்யாயத்தில்
அமைந்த ஒன்று.அவ்வப்போது கருத்துக்களை நிர்வஹித்துச்
செல்வது வேதாந்த மரபு.
புத்தூர் ஸ்வாமியின் ‘விஷ்ணுசித்த விஜயம்’ வேதமொழிகளை
மட்டுமே கொண்டு பரத்வ ஸ்தாபனம் செய்யும் நூலாகும்.
அதில் வேண்டிய அளவு ப்ரமாணங்கள் உள்ளன.
தேவ்
எல்லாம் நீங்கள் சொல்லி இன்னொருமுறை கேட்டு அனுபவிக்கத்தான் ;-)
> நீங்கள் எடுத்தாண்ட தமிழ் ப்ரமாணம் நஹி நிந்தா ந்யாயத்தில்
> அமைந்த ஒன்று.அவ்வப்போது கருத்துக்களை நிர்வஹித்துச்
> செல்வது வேதாந்த மரபு.
அப்படித்தான் இதுவும் என்று கொண்டு, ரசித்தருள்க ;-)
> புத்தூர் ஸ்வாமியின் 'விஷ்ணுசித்த விஜயம்' வேதமொழிகளை
> மட்டுமே கொண்டு பரத்வ ஸ்தாபனம் செய்யும் நூலாகும்.
> அதில் வேண்டிய அளவு ப்ரமாணங்கள் உள்ளன.
>
இன்னருள் முழுவதும் பெற்ற மகாபண்டிதர்களன்று இது பற்றி பேசி ஒப்பு நோக்க
வல்லார். அப்படித்தானே இதுவரை நடந்து வந்துள்ளது.
குழந்தையிடம் அப்பா செல்லமா? அம்மா செல்லமா? என்றால் பாதிக்கு மேலே அம்மா
செல்லம்தான். அவள் முதல்தாய் சடகோபன். நாமெல்லாம் அவள்பிள்ளைகள்.
பெருந்தேவிதானே நம்மாழ்வார். அவள் செல்லமாக இருப்பதே சம்சாரிகளுக்கு
பலம், நம்பிக்கை.
க.>
On Feb 22, 10:23 am, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
"நான் முன்பு எழுதியது போல், வேதம் என்பது காலம்கடந்து
நிற்கிறது. மனித பரிணாமத்தில், தோற்றமுற்ற காலங்களில்
அக்காலக்கட்டத்திற்கு தேவையான விதிமுறைகளைச் சொல்லிச் சென்றது. ஆயின்,
காலம் மாற, மாற பழைய கணக்குகள் பொருந்துவதில்லை. எனவே அவற்றைக்களைய
வேண்டியது அவசியமே. இதை அறிந்துதான் பட்டபிரான், வல்லப பாண்டியனுக்கு
பரஞானம் காட்டிய போது எல்லா வேதங்களையும் எடுத்துரைக்கவில்லை.
கழிப்பதைக்
கழித்து, ஏற்பதை ஏற்று, "வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்"
என்று சொல்கிறது சரித்திரம். எனவே, எப்படி திருக்குறள் குற்றமற்று
நிற்கிறதோ, அதே போல், திருவாய்மொழியும் குற்றமற்று நிற்கிறது."
கண்ணன்,
சிக்கெனப் பிடித்தீர்கள்.
எல்லா வேதங்களுக்கும் இது பொருந்தும் என எடுத்துக் கொள்ளுகிறேன்.
பைபிள், குரான்காரர்கள் இதனை ஏற்க மாட்டார்கள். ஆனால் ஒரு
வெளிச்சத்திலிருந்து
பார்த்தால் அவற்றுக்கும் பொருந்தும். கீதைக்கும் பொருந்தும்.
திருக்குறளுக்கும் பொருந்தும்.
ஆகவே "மிகைநாடி மிக்க கொளல்." ; "அப்பொருள் மெய்ப்பொருள் காணல்";
"தமசோமா ஜ்யோதிர் கமய" எல்லாம் பொருந்தி வருகிறது.
ரெ.கா.
>
இன்னொரு வசதியும் செய்து வைத்திருக்கிறார்கள். அதுதான் நவில்தொறும்
நூல்நயம் எனும் hermaneutic approach. இறைவனை ஒரு பொருளாகச் சொல்லாமல்,
ஓர் அட்சரமாக, நாதமாக, இயக்கமாக, ஞானமாக பார்க்கும் போது அணுகுபவனுக்கு
அளவுகடந்த சுதந்திரம் கிடைக்கிறது. திருவாய்மொழிக்குள் புதைந்து
கிடைக்கும் அறிவைக் காலம், காலமாக அள்ளமுடிகிறது. இது குறளுக்கும்
பொருந்தும். இல்லையெனில் 21ம் நூற்றாண்டிலும் குறளுக்கு புது அர்த்தம்
எப்படி கற்பிக்க முடிகிறது? இல்லையெனில் துணிந்து என்னால் பாசுரமடல்கள்
எப்படி எழுதமுடிகிறது. ஒரு நல்ல இலக்கியம் என்பது ஒரு தாய் போல. நாம்
அணுகத்தயங்க வேண்டியதில்லை!
க.>