அன்பின் சுரேஷ்குமார்,
இவ்வூரின் பெயர் பொத்தாம்பட்டி ஆகும். பொத்தாம்பட்டிமலையில் வெகுகாலம் தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் உள்ளன.
ஆனால், இப்பொழுது திருத்தப்பட்டுள்ளன. மீசை எல்லாம் வைத்து விழிதிறந்த நிலைக்குத் ஆழ்வார்கள்
எனப்படும் தியானத்தில் ஆழ்ந்துள்ள மூர்த்திகளை மாற்றியுள்ளனர். இப்போது தான் பலருக்கும் தெரிந்து
திருநீறு, குன்குமம் அப்பியுள்ளனர். இதற்கு முன்பே உள்ள ஒளிப்படங்களும் உள்ளன.
இப்படிச் சமணர் திருவுருவங்களை ஹிந்து நாட்டார் தெய்வங்கள் ஆக்கும் முயற்சிகள் பல உண்டு.
ஆழியாறு அணைக்கட்டு அருகே உள்ள தீர்த்தங்கரர் ஆதாழி அம்மன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னே திருத்திஉள்ளனர்.
இவை போலவே, பாண்டி முனீசுவரர் என்னும் நல்ல கூட்டம்வரும் கோவிலிலும் நடந்திருக்க வாய்ப்புகள் உள.
பாண்டிமுனியின் நல்ல ஒளிப்படங்கள் (அலங்காரமின்றி) கலைவரலாற்று ஆய்வர்கள் பார்க்கணும்.
சேலத்தில் தலைவெட்டி முனியப்பன் என்று புத்தர் சிலை வழிபாட்டில் உள்ளது. நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி பூசை உண்டு.
மிகப்பழைய தமிழ் வரலாற்று முறைகள் மார்க்கம் எனப்படும் வேளிர்கள் கொணர்ந்து நாட்டிய சிலைகள் தேசி
என்ற நாட்டார் வணங்கும் முறைகளுக்கு மாறுகின்றன. These are age old interactions between the Great Tradition (Maarga)
and the Little Traditions (Desi) in Hindustan.
காசிஸ்ரீ காளைராசன் அவர்களுக்கு பாண்டிமுனி பற்றிய என் குறிப்புகளைப் பாருங்கள்:
பாண்டிமுனி தான் யார் என ஒளிப்படங்கள் மூலம் காட்டும் நாள் வரும் என நம்புவோம்.
நன்றி,
நா. கணேசன்