சீமைக் காயாம்பூ/காசாம்பூ (Blue Jacaranda)

449 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 4, 2015, 10:50:23 AM9/4/15
to மின்தமிழ், housto...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, Santhavasantham, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, Ramachandran Nagaswamy, K Rajan, V Murugan, Kasi
ஏராளமான வெளிநாட்டுத் தாவரங்களுக்குச் சீமை என்ற முன்னொட்டுடன், அதே குலத்தில் பிறந்த தாவரப் பெயரை வைப்பது தமிழர் வழக்கம். காட்டாக, சீமைக் கத்தரி, சீமைக் கமலம், சீமைக் கள்ளி, சீமைக் கற்றாழை, சீமைக் கொய்யா, சீமைக் கொன்றை, சீமைச் சோம்பு, சீமைச் சிவதை, சீமைத் துத்தி, சீமைப் பலா, சீமைப் பனை, சீமை மகிழ், சீமை அலரி, சீமை அகத்தி, சீமை வாகை, சீமை வெள்ளரி, சீமைப் புளி, சீமைச் சணல், .... இன்ன பிற தாவரங்கள். இதே மரபில் மத்திய அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த அழகான நீலப் பூக்கள் வருட இறுதியிலே பூத்துக்குலுங்கும் Blue Jacaranda மரத்த்தை  சீமைக் காயா/காசா மரம் எனலாம்.

எப்பொழுதும் காயா/காசா மரம் “Ironwood" இந்தியாவில் உண்டு. அதன் அழகிய நீலப் பூக்களை கண்ணனின் நிறத்துக்கும், இராமனின் நிறத்துக்கும் உவமையாகச் சொல்லும் பாடல்கள் ஆயிரக்கணக்கில் தமிழில் காணலாம். சென்ற தலைமுறைவரை காயாம்பூ/காசாம்பூ பெண்களுக்கும், ஆண்களுக்கும் நாட்டுபுறத்திலே அதிகம். கர்நாடக சங்கீத மூவருக்கு முந்தியவரும், தமிழிசை முன்னோடிகளில் ஒருவர் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர். அவருக்கு மிகவும் இஷ்டமான பூ காயாம்பூ, இவர் கிருஷ்ணனைக் கண்டுபாடிய ‘காயாம்பூ வண்ணனே நில்லும்’ (மணிரங்கு அராகக் கீர்த்தனை. 3 முறை கண்ணனை நேரில் கண்டவர் என்றும், அந்த நிகழ்வொன்றில் பாடினது இக் கீர்த்தனை என்ப.)  வெகுநாளாகத் தேடிக்கொண்டுள்ளேன், கிடைக்கலாம். 

-ஆ விகுதி செடி, கொடிகளுக்கும், பறவைகளுக்கும் நிறைய வரும். வண்டு கட்டுதல் என்றால் துணி போன்றவற்றால் சாற்றை வடித்தல், எனவே, பெலிகன் பறவைக்கு ஒரு தமிழ்ப் பெயர் வண்டா. வண்டா என்னும் பெயரால் ஏற்பட்ட நெய்தல் திணைப்பெயர்கள் பல. வண்டாநம்: கப்பலோட்டிய தமிழர் வண்டானம் உலகநாதபிள்ளை சிதம்பரனார் (வ.உ.சி.). கலிங்கத்துப்பரணிக் கதாநாயகன் முதற் குலோத்துங்கனின் சேனாபதி கருணாகரத் தொண்டமான் ஊர் வண்டாழ்ஞ்சேரி. வண்டா ’Pelican" வரும் ஊர்கள் வண்டாநம், வண்டாழ்/வண்டாழம் எனப் பேர் பெறுதல் இயற்கை. கோவையிலே வாலாங்குளம் பெரிய குளம். வாலா - இரண்டாகப் பிளவுபட்ட Pin-tail ducks. அதே போல, ஏற்பட்ட பெயர் காயா/காசா. காய்தல் என்னும் வினையை வேராக உடைத்து. நீல வானம் போல இருக்கும் பூக்களால் காயா/காசா என்ற பெயர் கண்டது. 

தொல்காப்பியர் ஆகாயம் என்ற வானத்துக்கான சம்ஸ்கிருதப் பெயர் காயாம் பூநிறத்தால் என சூத்திரமே தந்துள்ளார்: "விண்ணென வரூஉங் காயப் பெயர்" (தொல். எழுத்து. 305).
"செஞ்சுடரின்   வெப்பத்தால்   காய்கின்ற   இடமாதலின்   (காய்+அம்)
விண்வெளிக்குக்  காயம்  என்பது  காரணப்  பெயர்.  அஃது வியப்பையும்
பரப்பையும்    உணர்த்தும்    ஆ   என்னும்   உரிச்சொல்லொடு   கூடி
‘‘ஆகாயம்’’ என வழங்கும். இது தமிழ்ச்சொல். " பேரா. ச. பாலசுந்தரனார், கரந்தைத் தமிழ்க்கல்லூரி.

காயாம்பூ கண்ணில் விடரும் (1969)

        காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த வீசர்
        தோற்றனார் கடலு ணஞ்சைத் தோடுடைக் காதர் சோதி
        ஏற்றினா ரிளவெண் டிங்க ளிரும்பொழில் சூழ்ந்த காயம்
        பாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே.

‘விண்ணென வரூஉம் காயப்பெயர்’. (தொல்காப்பியம். 305) என்றதில், வெயிலும் நிலவும் காய்தல் பற்றி விண்ணைக்காயம் என்னும் தமிழ் வழக்குண்மையுணர்க. ஆகாசம் என்னும் வடசொல் முதற் குறையாய்க் காசம் எனவாராது. வரின்; அது காயம் என மருவலாம். இளவெண்டிங்கள் சோதி ஏற்றினார் என்றும் இரும்பொழில் சூழ்ந்த காயம் இள வெண்டிங்கள் சோதி ஏற்றினார் என்றும் மாற்றி உரைக்கலாம்.

இவ்வாறு அண்மைக்கால உரை குறிப்பினும், காயம் என்பது போலவே காசம் என்பதும் ஆகாயத்தைக் குறிக்கும்.
கம்பன் பாடலைப் பார்ப்போம்:
வாச நாள் மலரோன்தன் உலகு அளவும் 
    நிமிர்ந்தன, மேல் வானம் ஆன
காசம்
ஆயின எல்லாம் கரந்த தனது
    உருவிடையே கனகத் தோள்கள்
வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான்

     உடல் பிறந்த முழக்கம் விம்ம,
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார்;
     விதிர் எறிந்தது, அண்டகோளம்.

பாவாணர் அவர்களின் காயம் > ஆ! காயம் > ஆகாம் பற்றிய விளக்கம்:

காயம்/காசம் போல உள்ள பூ மரம் காயா/காசா (Ironwood = Memecylon edule):

காசா கடன்மழை யனையானை (கம்பரா. கங்கை. 53) - இராமன் நிறத்திற்கு கம்பன்



சீமைக் காயா/காசா - தென்னமெரிக்காவின் துப்பி மக்களின் யக்கரண்டா, போர்ச்சுகீசியர் ஜக்கரண்டா என்னும் மரம்
பெங்களூரில் உண்டு. சீமைக்காயா/காசா என Jacaranda மரத்தை அழைப்பதால், பள்ளி மாணவர்களுக்கும்
இயற்கையை, அதன் அழகை, காயா/காசா என்னும் சொல்லை, தன் தாதுவை விளக்கமுடியும்.




லாஸ் ஏஞ்சலஸ் மாநகரில் நீல ஜக்கரண்டா பூத்துக் குலுங்கும் காட்சி:

நா. கணேசன்





Malarvizhi Mangay

unread,
Sep 5, 2015, 3:02:59 AM9/5/15
to mint...@googlegroups.com

கண் நிறைந்த அழகு.நீலவண்ணப்பூக்கள்
தொடரை.,குவியலை முதன்முதலாகப்
பார்க்கிறேன்.மகிழ்ச்சி இல்லையில்லை
மலர்ச்சி! நன்றி.நா.க அவர்களே!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 5, 2015, 10:48:52 AM9/5/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Saturday, September 5, 2015 at 12:02:59 AM UTC-7, malarmangay64 wrote:

கண் நிறைந்த அழகு.நீலவண்ணப்பூக்கள்
தொடரை.,குவியலை முதன்முதலாகப்
பார்க்கிறேன்.மகிழ்ச்சி இல்லையில்லை
மலர்ச்சி! நன்றி.நா.க அவர்களே!


நன்றி, மலர்விழி. பலரும் காயா/காசாம்பூவைப் பார்த்திருக்க மாட்டார்கள்.
கேரளாவிலும், மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் இன்னமும் இருக்கிறது.
ஆகாஷ்வாணி என ரேடியோவுக்கு தாகூர் பெயர் கொடுத்தார் என்பார்கள்.
அதில் உள்ள ஆகாஶம் என்னும் சொல் காயம்/காசம் என்னும் தமிழ்ச் சொல்லின்
விரிவாக்கல். -ஆ விகுதி பெற்று காயா/காசா என்று மலருக்கும் அம் மலர் ஈனும்
மரனுக்கும் பெயராயிற்று.

ஆகாயம் என்று வடமொழிக்கு தமிழ்தரும் சொற்கள் வாயிலாகப் பிறப்பது
காயா/காசா. காயாம்பூ/காசாம்பூ  (Ironwood = Memecylon edule): 
காயா/காசா - அஞ்சனி என்ற பெயரும் இதற்குண்டு (அஞ்சனம் - கண் மை)
தமிழக நாட்டுப்புறங்களில் அனேகமாக அழிக்கப்பட்டுவிட்ட மரங்களில் ஒன்று
காயா/காசா.

bala subramani

unread,
Sep 5, 2015, 10:54:29 AM9/5/15
to mint...@googlegroups.com
இந்த மரம் கொரியாவில் உள்ளதா

கொரிய தமிழ் நாட்டிற்கும் இடையே உள்ள மரம் தாவரங்களை பற்றிய ஒப்புமை
செய்ய முடியுமா

On 05/09/2015, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> On Saturday, September 5, 2015 at 12:02:59 AM UTC-7, malarmangay64 wrote:
>>
>> கண் நிறைந்த அழகு.நீலவண்ணப்பூக்கள்
>> தொடரை.,குவியலை முதன்முதலாகப்
>> பார்க்கிறேன்.மகிழ்ச்சி இல்லையில்லை
>> மலர்ச்சி! நன்றி.நா.க அவர்களே!
>>
>
> நன்றி, மலர்விழி. பலரும் காயா/காசாம்பூவைப் பார்த்திருக்க மாட்டார்கள்.
> கேரளாவிலும், மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் இன்னமும் இருக்கிறது.
> ஆகாஷ்வாணி என ரேடியோவுக்கு தாகூர் பெயர் கொடுத்தார் என்பார்கள்.
> அதில் உள்ள ஆகாஶம் என்னும் சொல் காயம்/காசம் என்னும் தமிழ்ச் சொல்லின்
> விரிவாக்கல். -ஆ விகுதி பெற்று காயா/காசா என்று மலருக்கும் அம் மலர் ஈனும்
> மரனுக்கும் பெயராயிற்று.
>
> ஆகாயம் என்று வடமொழிக்கு தமிழ்தரும் சொற்கள் வாயிலாகப் பிறப்பது
> காயா/காசா. காயாம்பூ/காசாம்பூ (Ironwood = *Memecylon edule*):
> காயா/காசா - அஞ்சனி என்ற பெயரும் இதற்குண்டு (அஞ்சனம் - கண் மை)
> தமிழக நாட்டுப்புறங்களில் அனேகமாக அழிக்கப்பட்டுவிட்ட மரங்களில் ஒன்று
> காயா/காசா.
>
> https://www.flickr.com/photos/sekitar/9214694581/sizes/l
> http://www.samunpri.com/?p=20472
>
> <https://lh3.googleusercontent.com/-n-Cr0Kc1rDg/VesASOl6qDI/AAAAAAAAEuk/yAqXvmWF7lU/s1600/IMG_2437.jpg>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> காயா - பெருமரம்
>
> <https://lh3.googleusercontent.com/-yBNudezB6FA/VesAXn1gkFI/AAAAAAAAEus/LNaZUpL5k3Y/s1600/Anjani_7.jpg>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> <https://lh3.googleusercontent.com/-pUdpnJk068A/VesAq_pWhnI/AAAAAAAAEvE/CNKlAShG-U8/s1600/2697866671_2af4b437dd_o.jpg>
>
>
>
>
>
> <https://lh3.googleusercontent.com/--sFgGUKS7Zw/VesAk7zr9VI/AAAAAAAAEu8/JUhQIns6VKk/s1600/Anjani_A.jpg>
>
> <https://lh3.googleusercontent.com/-CB-Z5gdVlw0/VesAfyKqOPI/AAAAAAAAEu0/SJyXRuuhL60/s1600/Anjani_9.jpg>

N. Ganesan

unread,
Sep 5, 2015, 6:51:02 PM9/5/15
to மின்தமிழ்


On Saturday, September 5, 2015 at 12:02:59 AM UTC-7, malarmangay64 wrote:

கண் நிறைந்த அழகு.நீலவண்ணப்பூக்கள்
தொடரை.,குவியலை முதன்முதலாகப்
பார்க்கிறேன்.மகிழ்ச்சி இல்லையில்லை
மலர்ச்சி! நன்றி.நா.க அவர்களே!


ஏன் மலர்களில் நீலம் அபூர்வம்?

எனவே தான் காயா மிக அரிது. நீல வானத்தின் பெயரை வைத்துக் கொண்டாடியுள்ளனர் தமிழர்கள்.
நீலம் < நீர் இதுவும் இந்தியா முழுதும் உள்ள திராவிடச்சொல். 
ஆ-காயம் காயா என்னுஞ்சொல்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 28, 2015, 5:55:13 PM11/28/15
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
மா- = கருமை, இருள். இவ்வேர் தரும் மாகம் மாகு எனவும், மாக்கம் எனவும் வழங்கும்.
ஆ- என்னும் வேர் தரும் ஆகு, ஆக்கம் போல.

மாக்கம் = மாகம் (< மா-) உதாரணம்:




பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர் 
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம் 
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால் 
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. 

மா - மாகம் = ஆகாயம். மாகம் மாகு என்றும் வரும். போ போகுதல். அதுபோல், மா ‘கருமை’ மாகு/மாகம்/மாழ்கு.

மாகு = மாகம் என்பதன் உதாரணம்:
நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.

 
காசா,கடல், மழை அனையானை - கம்பன்.
காயாம்பூவும், கடலும், முகிலும் கருமை(அ)நீலம் என்பதைச் சொல்கிறார்.

மா - கருமை. ‘பொண்ணு மா நிறமா இருப்பா’ = பெண் கரிய நிறத்தவள்.
மா குறுகி மய் (மை) என்றும் வரும்.

அதுபோல், நாகம்/நகம் (மலை). சீ = date palm tree. இவ்வழக்கு கொங்கில் இன்றும் உண்டு.
சீமாறு = விளக்குமாறு. சீந்து = ஈந்து/ஈஞ்சு/ஈங்கு (ஈந்தூர் ஈரோடு அருகே உளது.
ஈந்தூர் கிழான் - சங்கப் பாடல் பாடினவன்.) சீ - சீழ் - சீழம்:ஈழம் ‘கள், நாடு’.
ஈழவர் - கேரளாவில் கள்ளிறக்குவோர். சீந்து:சிந்து நதி மற்றும் நாட்டுப் பெயர்.

மா = கருமை. எனவே, மாயோன், மாயோள், மால் (திருமால்).
பிரபஞ்சத்தின் வர்ணம் விஷ்ணுவுக்கு.(மால் என்பது அதனால்).
மா குறுகி மய்(மை), மா- மயங்கு/மசங்கு மசக்கை என்னும் வினைச் சொற்கள்.

சீ (சீமாறு/ஈக்கமாறு) - மரத்தில் வடியும் சீழ் = கள். சீழம் > ஈழம் (சிப்பி> இப்பி, சமணர் > அமணர், ... போல).
மா ‘கருமை/இருள்’ மயக்கம் என்னும் சொல் பிறப்பித்தல் போல
மா ழ் விகுதியும் பெறும். மாழ்குதல் - மயங்குதல் (சீ -ழ் விகுதி ஏற்று சீழ் ‘கள்’ ஆதற்போல்).
"குழறி மாழ்கி" (கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம் 237).
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை  ஆஅது மென்னு மவர் (குறள்)
மா- மாழ்குதல் - இருளடைதல் = கெடுதல், மங்குதல், மாழ்கு - மழுங்குதல். மாழார்ந்து - மாழாந்து எனவும்
இலக்கியங்களில் உண்டு. மனங்கவல்பின்றி மாழாந்தெழுந்து (பொருநர் ஆற்றுப்படை).

மா - மாகம் = ஆகாயம். மாகம் மாகு என்றும் வரும். போ போகுதல். அதுபோல், மா ‘கருமை’ மாகு/மாகம்/மாழ்கு.
நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.

த்ராவிடச் சொற்களில் வட இந்தியாவில் ஒன்றும், தென்னிந்தியாவில்
ஒன்றும் பெரும்பான்மையும் புழங்குவதைக் காணலாம். இதற்கு
ஒரு நல்ல உதாரணம்: வட வ்ருக்ஷம் என வடக்கேயும், ஆல மரம் (< யால்- யாலும் விழுது)
தெற்கேயும் Banyan fig என்னும் இந்தியாவின் தேசியமரம் அழைக்கப்படுதல்.
கருமை/நீலம் என்ற பொருள் கொண்ட காயா/காசா ஆ-காசம் என வடக்கே வழங்க,
அதே பொருள் கொண்ட மா ‘கருமை’யில் இருந்து மாகம் (அ) மாகு தெற்கே வழங்குகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 28, 2015, 5:55:37 PM11/28/15
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com

வேந்தன் அரசு

unread,
Nov 28, 2015, 9:10:49 PM11/28/15
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
காயாமலர்கள் பூத்திருக்கு என தெரியுது. குலுங்குவதுதான் தெரியலே.


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Nov 28, 2015, 11:04:39 PM11/28/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, November 28, 2015 at 6:10:49 PM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
காயாமலர்கள் பூத்திருக்கு என தெரியுது. குலுங்குவதுதான் தெரியலே.

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதினால்  போன்ற படம் எல்லாம் வேண்டுமானால் துரையைத்தான் கேட்க வேண்டும் வேந்தே.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. 


..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Nov 29, 2015, 7:56:23 AM11/29/15
to vallamai, மின்தமிழ்


28 நவம்பர், 2015 ’அன்று’ 11:04 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:



On Saturday, November 28, 2015 at 6:10:49 PM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
காயாமலர்கள் பூத்திருக்கு என தெரியுது. குலுங்குவதுதான் தெரியலே.

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதினால்  போன்ற படம் எல்லாம் வேண்டுமானால் துரையைத்தான் கேட்க வேண்டும் வேந்தே.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. 

வள்ளுவராவது ஒரு சில குறள்களில் கலங்கலா எழுதி இருப்பார். குழ்ப்பம் இல்லாமல் 10 ஆயிரம் பாடலை எழுதிய கம்பன்  கொம்பன்தான்.



--

வேந்தன் அரசு

unread,
Nov 29, 2015, 8:04:28 AM11/29/15
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


28 நவம்பர், 2015 ’அன்று’ 3:45 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


.
ஆகாஷ்வாணி என ரேடியோவுக்கு தாகூர் பெயர் கொடுத்தார் என்பார்கள்.
அதில் உள்ள ஆகாஶம் என்னும் சொல் காயம்/காசம் என்னும் தமிழ்ச் சொல்லின்
விரிவாக்கல். -ஆ விகுதி பெற்று காயா/காசா என்று மலருக்கும் அம் மலர் ஈனும்
மரனுக்கும் பெயராயிற்று.

ஆகாயம் என்று வடமொழிக்கு தமிழ்தரும் சொற்கள் வாயிலாகப் பிறப்பது
காயா/காசா. காயாம்பூ/காசாம்பூ  (Ironwood = Memecylon edule): 
காயா/காசா - அஞ்சனி என்ற பெயரும் இதற்குண்டு (அஞ்சனம் - கண் மை)
தமிழக நாட்டுப்புறங்களில் அனேகமாக அழிக்கப்பட்டுவிட்ட மரங்களில் ஒன்று
காயா/காசா.

காயா எனும் சொல் காஷம் ஆனது என ஒப்புக்கு ஒப்பினாலும் ஆ எனும் முன்னொட்டு எப்படி வந்தது. ஆ என வாய் பிளந்து காஷ்ம்;ஐ பார்ப்பதாலா ஆகாஷம்?


 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages