ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)

19 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 2, 2014, 12:38:42 AM5/2/14
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம்  என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.


பார்சுவநாதர்நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர்.  இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.

ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)

Inline image 1Inline image 2


N. Ganesan

unread,
May 2, 2014, 12:46:58 AM5/2/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Thursday, May 1, 2014 9:38:42 PM UTC-7, N. Ganesan wrote:
ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம்  என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.


பார்சுவநாதர்நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர்.  இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.

ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)

N. Ganesan

unread,
May 2, 2014, 12:56:20 AM5/2/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை






















 Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.

N. Ganesan

N. Ganesan

unread,
May 2, 2014, 1:00:19 AM5/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com

ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
 
 Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.

N. Ganesan


பழைய ஓவியங்களில், ஆத்தியும் ஆத்திசூடியும்:


N. Ganesan

unread,
May 2, 2014, 1:19:35 AM5/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com
அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்


ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

சூடுதல் சுவடுதல் என்றாவது தமிழில் உண்டு. சூடு/சோடு - சோடித்தல் - ஜோடனை.
ஜோடி என்பதும் சுவடி என்ற சொல் தருவதே. ஆத்தி சூடுவது இந்திய கலை, இலக்கிய வரலாற்றிலே பார்சுவநாதர். (25 நூற்றாண்டாய்).
தீர்த்தங்கரருக்கு தலையில் நிறைய முடி. தோளிலோ, தலையிலோ அடியார்கள்
சூட்ட, ஆத்தி சூடி விளங்குகிறார். ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி
தொழுவோம் என்கிறார் அவ்வை. இங்கேயே மாணவருக்கு தெய்வ வழிபாடு
சொல்லிவிட்டாள் ஔவைப் பாட்டி. அமர்ந்த தேவன் - ஆத்திலோகத்தில் (தாதகித்வீபத்தில்)
அமர்ந்த தேவன் எனினும் அமையும். 

அதனால் தான், ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்று நூலின் நடுமத்தியில் ஆத்திசூடியை
மீண்டும் சொல்ல தேவையில்லை. சமணர்கள் போற்றும் திருமால் = அரசன் 
சொற்படி கேட்டு சட்டம், ஒழுங்குடன் வாழ் எனப் பள்ளிச் சிறார்களுக்குப் போதிக்கிறார்
நூலின் இடையிலே. ஔவை எழுதியது கல்வியொழுக்கம், ஆத்திசூடி.

இது போல் பழைய சமணர் தந்த பாட நூல் புத்தகங்கள் பல. திரு. இரா பானுகுமார்
சிலவற்றைக் குறிப்பிட்டார். அவற்றைப் பார்த்தால் ஆத்தி சூடும்/சுவடும் தீர்த்தங்கர
தொழுகை புரியும்,

”திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!

“முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - இலக்கம் - கடவுள் வாழ்த்து

“வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - நெல்லிலக்கம் - கடவுள் வாழ்த்து

“முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
அத்தனேயாதி யறவரசே சித்தனே
எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
இந்நூலை யானுணர்க வென்று” - எண்சுவடி - கடவுள் வாழ்த்து

“பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - பெருகுழி - கடவுள் வாழ்த்து

“அருகனை அமலனை அசலனை அடிதொழச்
சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - சிறுகுழி - கடவுள் வாழ்த்து “

 
நா. கணேசன்

N. Ganesan

unread,
May 2, 2014, 1:39:36 AM5/2/14
to mint...@googlegroups.com, Banukumar Rajendran, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Thursday, May 1, 2014 10:18:49 PM UTC-7, Prakash Sugumaran wrote:
அருமையான பதிவு. நன்றி கணேசன் ஐயா.


நன்றி, ப்ரகாஷ். கட்டுரை ஒன்று விரிவாக எழுதித் தர ஆவல். அதற்குச் சில குறிப்புகள் இவை.


ஆத்தி சூடி அமரும் தேவன் - கர்நாடம், 12-ஆம் நூற்றாண்டு.

ஔவை - கர்நாடகத்தில் சமண பெண் துறவிகளுக்கான பெயர். மூத்தவர் எனப் பொருள்.


ஆத்தி சூடி - தீர்த்தங்கரசாமிக்கு எவ்வளவு அழகாக ஆத்தி/தாதகி அமைகிறது பாருங்கள்.

 

N. Ganesan

unread,
May 3, 2014, 12:44:03 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com


On Saturday, May 3, 2014 9:35:36 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:
இந்தப் படத்திலும் தலையில் சூடப்பட்டிருப்பது அரவம் தான். 


பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கான
தமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.

 
அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.


யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 3, 2014, 12:55:28 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Saturday, May 3, 2014 9:49:59 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:

2014-05-04 0:44 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கான
தமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.

 
அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.


யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,

நா. கணேசன் 

​ஐயன்மீர்,
இது ஆய்வுக்கான பதில் இல்லையே. நீங்கள் ஆத்திச் சூடி என்று படங்களை வாரி வாரி அளித்தீர்கள். அவற்றில் இருப்பவை அனைத்தும் அரவம்.  அப்படியானால் ஆத்திச்சூடி எப்படி தமிழர் தொழுதலின் வரலாறு என்று போதிய ஆதாரம் அல்லவா தாங்கள் அளிக்க வேண்டும். அது விடுத்து... நீ என்னான்னா பண்ணிக்கோ நான் சொல்றது தான் ​ சரி என்பது எப்படி ஒரு ஆய்வின் முடிவாக ஏற்க முடியும்?   

இன்ன இன்ன காரணங்கள் -  இன்ன இன்ன அனுமானங்கள்.. அவற்றிற்கு இன்ன இன்ன ஆதாரங்கள் ஆகவே முடிவு என்பது இது என்று ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியது அல்லவா ஆய்வு என்று நான் இதுகாறும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.  கொஞ்சம் விளக்கமாக பதில் சொல்லுங்கள். 


ஆராய்ச்சி செய்யும் ஐயன்மீர், இழையையும் கொடுத்த சிற்பங்கள், ஓவியங்கள் யாவும் ஆராய்ந்து பார்த்தருள்க.
ஆத்தி தாவரம், புஷ்பம் - அரவம் மட்டுமில்லை - பலவர்றில் உள்ளன. ஆத்திசூடி என்று ஏன் தீர்த்தங்கரர் அழைக்கப்படுகிறார்
- உ-ம்: போதியுடன் ஏன் புத்தர் போற்றப்படுகிறார் - என்பதும் சொல்லியிருக்கிறேன். உண்மையான முனைவகள்
ஆராய்ச்சியிலும் எழுதியுள்ளனர்.

N. Ganesan, PhD

 


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

N. Ganesan

unread,
May 3, 2014, 3:42:19 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Saturday, May 3, 2014 12:34:12 PM UTC-7, Dev Raj wrote:
On Saturday, 3 May 2014 10:43:30 UTC-7, Prakash Sugumaran wrote:
ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!
 

ஆன்மிக அடையாளங்களை மாற்றவோ, அவமதிப்பதோ நோக்கமில்லை.
அதில் தகிடுதத்தம் எதற்காக ? ரிஷபரின் தீக்ஷா தரு ஆல மரம்
என்பதில் விவாதம் இல்லை. சிவபெருமானுக்கு மட்டுமே அது
ஆன்மிக அடையாளம் என்றும் விவாதிக்கவில்லை. பார்சுவரின்
தீக்ஷா தரு எது என்பதில் விவாதிக்க இடமுள்ளதால் அதைச்
செய்ய நேர்கிறது. முந்தைய வினா ஒன்றைப் பாருங்கள் -

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

On Monday, 28 April 2014 20:14:46 UTC-7, N. Ganesan wrote:
 ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.


ஆல இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி
இருக்கிறார்; சால இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமிகளும்
உண்டு. முக்கியமாக மஹாவீரர் சால மரக் கவிகை சூடி இருக்கும்
தீர்த்தங்கரசாமி ஆவார். அவரை இதுபோல் ஏத்தி ஏத்தித் தொழும் 
பாடல் உள்ளதா ?

அரவஞ்சூடி தீர்த்தங்கரசாமி -


அரவஞ்சூடி புத்தர் அரைசூடி (அ) போதிசூடியாக விளங்குகிறார்
அரவஞ்சூடி தீர்த்தங்கரர் ஆத்திசூடியாக விளங்குகிறார்.
அரவஞ்சூடி தக்கணாமூர்த்தி ஆலஞ்சூடியாக விளங்குகிறார்

ஒவ்வொருவருக்கும் தனியான மரங்கள் உள்ளன.
சிரமண சமயத்தவர் மரங்களின் இலை, பூ சிவனுக்குச்
சொல்லுதல் தேவாரத்தில் இல்லை. உ-ம்: அரச மரம்,
ஆத்தி மரம் சிவன் திருமேனியில் வருவதில்லை.

அழகான ஆத்தி, அரவம் அலங்காரத்தில் ஆத்திசூடி தீர்த்தங்கரர்:

மேலும் ஒரு ஆத்திசூடி. எவ்வளவு அழகாக ஆத்தி புஷ்பம், இலைகள்
தீர்த்தங்கரர் மீது காட்டப்பெற்றுள்ளன என்பதைப் பார்க்கலாம்:


நா. கணேசன்
 

தேவ்

N. Ganesan

unread,
May 3, 2014, 4:06:49 PM5/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Saturday, May 3, 2014 1:02:56 PM UTC-7, வேந்தன் அரசு wrote:
>ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.
தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.


திருவள்ளுவதேவர் உண்டு சமணத்தில். ஆத்திசூடும் தீர்த்தங்கரதேவரும் உண்டு.

சைவத்தில் மகாதேவன். ஆனால், அவர் கொன்றைசூடி.
எனவே தான் ஔவைக் குரத்தியின் ஆத்திசூடிக்கு வழிநூல்
கொன்றைவேந்தன் என்று பெயர் சைவ ஆசிரியர் வைக்கிறார்.

நா. கணேசன்


 

-- வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages