Bharathi -125

18 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Jul 18, 2008, 4:07:34 PM7/18/08
to yAppulagam / யாப்புலகம்
பாரதி மணிமண்டபம் பற்றிய ஸ்ரீராமின் கட்டுரை
 
என் நினைவுகளைத் தூண்டிவிட்டது. அச் சுரங்கத்திலிருந்து  
சிலவற்றைத் தோண்டி எடுக்க முயல்கிறேன்.
 
பாரதி மணிமண்டபம் குறித்து நான் சேகரித்த சில கட்டுரைகள்,
தகவல்கள், படங்கள் இவற்றை மெதுவாக இங்கே பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
இந்தத் தலைமுறையில் பலரும் இவற்றைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றே
நினைக்கிறேன்.
 
இவை யாவும்.. ஒரு விதத்தில் நானும், என் குடும்பமும் குடியிருந்த வீட்டிலிருந்து
தொடங்குகிறது.
 
சென்னையில், தி.நகரில், பஸ்லுல்லா ரோடில் 1950- வரை நாங்கள் குடியிருந்தோம்; பக்கத்து வீட்டில் ராஜாஜி, அதற்குப் பக்கத்தில் அவர் குமாரர் கிருஷ்ணசாமி. கிருஷ்ணசாமி படா தமாஷ் பேர்வழி; 'ஹிண்டு'வில் ஒரு ஆசிரியர். என் தந்தைக்குச் சேலம் நாளிலிருந்தே தெரிந்தவர். அடிக்கடி வீட்டிற்கு வந்து என் அம்மாவின் 'காபி'யைக் குடித்துக் கொண்டே அரட்டையின் மூலம் பல சுவையான தகவல்கள் கொடுப்பார். 
(ஒரு வேளை அவர் சொல்லியதின் மூலம்தான் என் தந்தை அங்கே குடி வந்தாரோ
என்னமோ ..தெரியவில்லை.) 
 
அப்போது நான் அறிந்தது ..ராஜாஜிக்கு முன் அந்த வீட்டில் 'கல்கி' குடியிருந்தார்
என்று. கல்கியும், அவர் குடும்பத்தினரும், எம்.எஸ் , சதாசிவம் இவர்களும் அடிக்கடி ராஜாஜியைப் பார்க்க அங்கு வருவார்கள். இதன் முக்கிய விளைவு:
நான் 'கல்கி' யை வாடிக்கையாகப்  படிக்கத் தொடங்கியது தான் ! பழைய 'கல்கி' இதழ்களையும் சேகரிக்க ஆரம்பித்தேன். ( இப்போது நிறைய கட்டுரைகள்  தொலைந்துவிட்டன..சில மிஞ்சி உள்ளன.) அப்போதைய ஒரு 'கல்கி' இதழிலிருந்து ஒரு பக்கம் இணைக்கிறேன்.
 
1944-இல் 'கல்கி'யில் 'சிவகாமியின் சபதம்' தொடங்கியது.
(சரியாகச் சொன்னால் 1-1-1944 இதழில் ) 'மணியம்' படங்களுடன், வரும்.
சி.ச -வின் ஒரு அத்தியாயத்தின் முதற்பக்கத்தின் படம் கீழே
 
பிறகு பாரதி மண்டபம் பற்றி அறிந்து , அது பற்றித் தகவல்கள் கொண்ட கல்கி, விகடன் சேகரித்தேன்.....
 
(தொடரும்)
kalki_ss_44.jpg

Pas Pasupathy

unread,
Jul 18, 2008, 4:10:50 PM7/18/08
to yAppulagam / யாப்புலகம்
பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' பல கட்டுரைகள் 'கல்கி'யில் எழுதி இருக்க
வேண்டும். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
எட்டயபுரம் ராஜா நிலம் கொடுத்தது பற்றி எழுதி இருக்கிறார். ராஜாஜியின் தலைமையில் அஸ்திவார விழா நடத்துவ தென்ற தீர்மானத்தையும் சொல்கிறார்.
 
அதே இதழில் ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதியிடமிருந்து கிடைத்துள்ள ஒரு கடிதத்தையும் பிரசுரிக்கிறார் 'கல்கி'. ( அண்மைக்  'கல்கி' யில் வெளியான 'விஷயம்' ஒன்றைக் குறிப்பிடுகிறார் செல்லம்மா; பலரும் சேர்ந்து அவருக்கு ஒரு நன்கொடை
அளிப்பது பற்றிய ஒரு அறிக்கை அது என்று நினைக்கிறேன். )  'கல்கி'க்கும்
ஒரு அன்பளிப்பு வைத்திருக்கிறேன் என்கிறார் செல்லம்மா. அது என்ன அன்று அறிய
கடிதத்தைப் படியுங்கள்!
 
(தொடரும்)
 
kalki_appeal_45_1.jpg
kalki_appeal_45_2.1.jpg
kalki_appeal_cb_letter.jpg

Pas Pasupathy

unread,
Jul 18, 2008, 4:13:02 PM7/18/08
to yAppulagam / யாப்புலகம்
பாரதி நினைவுச் சின்னம் எழுப்ப எட்டயபுரம் ராஜா, பாரதி இலக்கிய மன்றம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றிக் 'கல்கி' எழுதியதைப் படித்திருப்பீர்கள். அவர்கள்
பங்கேற்ற இன்னொரு விழா: ராஜாவின் பிறந்த நாள் பரிசாக , அவருக்குச் சொந்தமான இரு கோவில்களை ( சமஸ்தானத்துத் தெப்பக் குளம் கூட)  ராஜா எல்லோருக்கும்  திறந்து விட்ட வைபவம். இதுவும் 45-இல் தான் நடந்தது.
 
இதைப் பற்றி பழம் எழுத்தாளர் 'நாடோடி' ( இவரும் 50-களில் தி.நகரில் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் அருகில் குடியிருந்தவர். கருப்பு ஷெர்வானி உடை அணிந்து ஜோராகக் காலையில் மோட்டார் சைகிளில் போவார்.) 'வீரர் எட்டப்பர்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை 'கல்கி'யில் எழுதினார். அதில் வெளியான சில புகைப்படங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். 
 
பி.கு.
 
 
இந்த விழாவில் தமிழ் அறிஞர் டி.கே.சி ஒரு பாடலை எல்லார் மனதிலும் பதியும்படி எடுத்துச் சொன்னதாக எழுதியுள்ளார் நாடோடி. டி.கே.சி அன்று  விவரித்த பாடல் 
 
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் -- வாரி 
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
 
இது திருமுருகாற்றுப் படையின் பின் காணப்படும் அழகான வெண்பாக்களில் ஒன்று.
(பிற்காலத்துப் புலவர் ஒருவரின் வெண்பாக்கள் இவை என்பது அறிஞர் கருத்து.)   
nAdOdi-kOvil_1a.jpg
nAdOdi_kOvil_2a.jpg
nAdOdi-kOvil_3a.jpg

Pas Pasupathy

unread,
Jul 18, 2008, 4:19:08 PM7/18/08
to yAppulagam / யாப்புலகம்
பாரதி நினைவு விழா 45- ஜூனில் நடந்தது. இதைப் பற்றிக் 'கல்கி'யில் வந்த
கட்டுரையை வைத்திருந்தேன்; எங்கோ காணாமற் போய்விட்டது.
 
'விகடனி'ல் அதைப் பற்றி வந்த " ராவுஜி" யின் கட்டுரையை இணைத்திருக்கிறேன். சில படங்களை அடுத்த மடலில் அனுப்புகிறேன்.

 

பசுபதி
vikatan_ravuji_1.jpg
av_ravuji_2a.jpg
vikatan_ravuji_3.jpg

Pas Pasupathy

unread,
Jul 18, 2008, 4:20:39 PM7/18/08
to yAppulagam / யாப்புலகம்
'தமிழர் விழா' என்ற "ராவுஜி" யின் கட்டுரையில் வந்த  சில படங்கள்
 
பசுபதி
18-7-08

 
vikatan_pic_1a.jpg
vikatan_pic_2a.jpg

Pas Pasupathy

unread,
Jul 18, 2008, 4:22:26 PM7/18/08
to yAppulagam / யாப்புலகம்
'தமிழர் விழா'க் கட்டுரையில் வந்த இன்னொரு புகைப்படப் பக்கம்.
'கல்கி'யில் இதைப் பற்றி வந்த இன்னொரு புகைப் படம்.
 
( முற்றும்)
 
vikatan_pic_3a.jpg
kalki_pic_1b.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages