2)மழை வருவதற்கான முன்னேற்பாடுகள்நடக்கின்றன.உருள் இடிகள் சுருதி கூட்டிமழை நாளங்களில் நிரவல்கள்காற்றின் கமகங்கள்கார்மேகக் குரல்வளையில் குமிழ்க்கின்றன.எண்ணில் அகலேற்றும் இயக்கத்தின் மின்னால்தூநீர்ப் பைம்பொழிவின்பசுந்தளிரின் நுனியில்தொங்கும் உலகின்ஒரு துளி வானும் மண்ணும்கிருஷ்ணமாய்க் காண்பித்துக்காற்றின் தீண்டலில்கிளையில் ஒழுகிய நீரில்நகராது மடிந்து சுருங்கிக் கரந்துபின் விட்ட திசை வீழும் விச்ராந்தியில்ஒரு புழு மண்ணில் விழுகிறது.செடியிலேயே வாழ்வதற்குமண்ணில் புழங்கக்கற்றுக் கொடுத்தது யார்?பூர்வீகம் மண் எனினும்புறப்பட்ட பின்னர்புனர்ஜன்மம் ஆகத்தானோ?வெளிப்பட்ட பரிதியும்விழுவதாய்க் கண்டதுவும்விரிகின்ற மதியத்தின் வாழ்வைச் சுருக்கிசுருண்டயரும் பசுந்தழையோ மேற்கில்யந்திரங்கள் விரையும் ஒலிவேகங்கள்ஆளற்ற பாதையில் அலறும் ஓலத்தூடுஅணுகவரும் உயிர்கள்அவசரத்தின் தந்திகளில் சிக்கிஅலைமோதும் தலைதெறிப்பு.உச்சந்தலை வேர்த்து அரிக்கிறது.ஏதோ ரகசியங்கள் பரிமாறப் போகின்றன.மண்ணின் பொறுமையின்மைஇயங்கு திணையில் தெரிகிறதுவிண்ணின் ஆற்றொழுக்காய்விளங்கவரும் வீழ்ச்சி.***(தொ)--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
3)வாழி எழுகூற்றிருக்கைஒன்றான இருமனங்கள்முக்காலும் நானிலத்தில்ஐம்பூத சாட்சியாகஅறிவொன்றே ஆறாகஎழுகின்ற இல்வேட்டுஆறாத காதல் சொரிந்துஐம்புலனும் சங்கமிக்கநாற்பொருளில் முப்பொருளைஇருநிலத்து எய்தியஇறும்பூதில் ஒன்றாகக்காண்கின்ற காட்சியில்மாணுயர் மங்களம் வாழி வாழி !தேனான வாழ்வினில்திகட்டாத மின்னலாய்ஆறாத அமுதத்துள்குமிழிடும் களிப்புனல்உமிழ்போதக் குடுமியில்முதிராநல் அழ்காய்தமிழ்வேத நிலவாய்தவழ்ந்திடும் உவகையில்துளிர்த்திடும் மழலையில்மிழற்றிடும் மங்களம் வாழி வாழி !வாழ்வுக்குள் வனைந்திடும்வண்ண அருவங்கள்எண்ணத்தில் ஒலித்திடும்மௌனத்தின் நாவுகள்சொல்லுக்குள் சத்தத்தின்நிழல்படா பிரதேசம்உள்ளுக்குள் தித்திக்கும்உயிர்படர்ந்த நேசம்மதுவாரும் மொட்டலரும்பூவின் புனர்ஜன்மம்கட்டெழிலில் கால்பாவாகரையற்ற போகம்விண்ணாகி நிலவாகிவிரிகதிர் ஒளியாகிமண்ணாகி விதையாகிமறிகடல் ஏழுமாகிபெண்ணாகி நின்றதும்ஆணாகி வந்ததும்எண்ணாகி நின்றெண்ணில்எண்ணா தியன்றஒன்றாக நிலைத்திடும்ஓர் மங்களம் வாழி வாழி !
***(தொ)--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
9)போஸ்டர் ஒட்டுவதற்குப்பசை;போஸ்டர் ஒட்டுபவனைஒட்டுவதற்குப் பேச்சு;போஸ்டரை மேயும் மாடுகள்கறக்கின்றன;போஸ்டரில் பசை;மாடுகளில் பால்;பேச்சுகளில் பசப்பு;காயும் முன் ஒன்று.பின்......புனரபி..பசைபேச்சுகறவை.
***(தொ)--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
தோண்டி எடுத்திருக்கிறீர்கள் ....
4)உருப்படாக் கவிமண்கன்றுயர் விண்ணின்மடிமுட்டிடு மிளங்காலைகண்ணின்வெளி கடந்தேபுவிகூட்டுமொளிர் கருத்தேஉண்ணின்றொளிர் உயிரொன்றெனஓதுந லளிமறைபோல்பல்கும் உயிர் புல்கும்தனிபிடிப்பாம் புவிவாழ்வில்ஒல்காப்புகழ் ஓங்கும்கவிஓதும் ஒற்றை ஆசைபிடர்தள்ளிட பண்ணள்ளிடபார்விண்ணெலா மளந்தேன்இடரெங்கணும் திடராகிடஇயற்கைப் பொருளெல்லாம்நகைமீக்குற தனியன் எனைநனியேளனம் புரியும்திகைத்தேன் அவை தெருட்டும் ஒருதுணிபில்மனம் தளர்ந்தேன்வகையேதுமிங் கறியேனுடன்வாகாய்பதில் தரவே.*கண்ணுலாம் பொருளெலாம்கவியுலாம் கருத்தாய்எண்ணுலாம் ஏக்கமாய்இழைந்துலாம் நிறத்தோய்மண்ணுலாம் இயல்பினில்மாண்புலாம் எழுச்சியும்காண்கொலாம் நண்பகொல்!கருணையால் உரைத்தேம்.பணம்குவி; குணம்மற;பகட்டினில் தேர்ச்சிகொள்;கவிதைகள் போல்பலவடிவினில் சொல்குவி;கவிக்குயில், பாக்குலக்கோக்கவி சாம்ராட்எனப்பலப் பதாகைசெலவழித் தீட்டுக!மண்டலம் ஆண்டிடும்மகிபர்கள் நெஞ்சினில்அண்டிட ஒருவழிகுடைந்திடு நிம்மதி.!உண்டுகொல் இவரெனாஉற்றுயர்ந் தோரையேகண்டும்நீ காணிடாதிருந்திடப் பெறுதி.உய்வகை உரைத்தேம்உருப்பட வழிகாண்சையோ கித்தலும்செல்வாக் கினில்காண்ஐயகோ பெருமஅறிவுனக் கிலையோநையவோ நாளும்நலங்கெழு கவியாய்?*இவையெலாம் ஏதோபட்டப் பகலில்பாவலர் காணும்நெட்டைக் கனவோகுட்டைக் காட்சியோஎனக்கவ லாதீர்!காலை யொளியில்கவலை வெப்பினில்வேலை தொடங்கவிரையவ சத்தில்நட்ட நடுவில்நனவில் குதிரும்கொனஷ்டை என்றேகூறுவன் யானே!உருப்படாக் கவியிதுஉட்பொருள் இல்லைதுருப்பைத் தேடித்துருவுதல் ஏனோ?****
2010/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> நன்றி கோரல் ஸ்ரீ, துரை ஐயா(வாங்கய்யா வாங்க),
> ஷைலஜா, கீதாம்மா, ஐயா தமிழ்த்தேனீ, மீனாமுத்து.
> எதையோ எடுக்கும் போது இவை மாட்டின.
> நீங்களும் வசமாக மாட்டிக்கொண்டீர்கள்.
> :-)
>
> 2010/12/10 meena muthu <ranga...@gmail.com>
39)எழுத்துக்கும் பணத்திற்கும்சம்பந்தம் இருக்கிறது தோழரே!ஆயிரம்தான் சொன்னாலும்பணம் வருகிறது என்று சொன்னால்எழுத்து விரட்டி விரட்டிவேலை பார்க்கிறது.லஞ்சம் அன்று.பணமுடிப்பு அன்று.நயமன்று.வாக்கரிசியன்று நான் சொல்லுவதுஎரிபொருள்ஆயிரமோ ஐந்நூறோஅதன் மடங்கோ எதுவானாலும்நான் எரிக்கும் நள்ளென் யாமத்துத்தைலக் காசாய்ப்பின்னூட்டாய்நான் வாங்கும் நூலின்அட்டை போடும் செலவோசேரும் நூலக அட்டைச் செலவோகுறிப்பேட்டின் விலையோகுத்திக் கிறுக்கும் கோல் மாற்றிக்கொள்கைக் கோலின்முனை முறியாக் கடைச் செலவோகாமச் செலவோகுடும்பச் செலவோகுழந்தைச் செலவோகோல்கை ஊன்றித் தளராமுன்எதுவானாலும்எழுத்துக்கும் பணத்துக்கும்சம்பந்தம் இருக்கிறது தோழரே.***(தொ)(எங்கள் குடியைச் சார்ந்த ஒருவன் இன்று பிறந்தான்; 39 அகவைகள் நிரம்பி, நாற்பது எட்டுமுன் நித்யனாய் ஆனான்.)
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
12)உயிர் மன்றில் கலந்தோம்உணர்வொன்றிப் புலர்ந்தோம்பயில்வேதப் பொருளாய் விளைந்தோம்.தீயொன்று கண்டோம் -- தெய்வத்தீயொன்றக் கண்டோம்.***(தொ)
20)யோனிப் பொருத்தம் 2அடுப்பெரி தீயைப் பார்த்துநீர் கொதிக்கக் காக்கும் பொழுது,பெருமூச்சு எறிந்தாலும்,பார்வை வெறித்தாலும்,கண்களில் ஒற்றி எடுக்கபுடவைத் தலைப்பைத் தேடிக்கை சென்றாலும்.....***(தொ)
23)தீக்குள் விரலை வைத்தால்....இந்த வழியாகப் போகாதே.வேறுவழியாகப் போய்ப்பார்.அங்கேகனல் மணக்கும் பூக்கள்கொட்டிக் கிடப்பனவாம்.***(தொ)--
25)ஊருக்கு நடுவில் ஒரு டீக்கடைஒண்ணாந்தெரம் சாயா கேட்டல்லோஎன்பான் நாயர்.ஒரு சிங்கிள் டீக்குச் சொல்லிவிட்டுஉள்ளத்தின் ரேழியில் இறங்கிச் சென்றேன்;சென்று முடிந்ததோர் பாதைசொல் சமுதாயச் சந்தையில்.மார் கழித்த பனிக் குளிரில்பீடிகையாய் விட்டபுகை***(தொ)
36)கடவுள் காணவந்தார்என்னை ஒரு நாள்கவிதையில் அமிழ்ந்திருந்தேன்காத்துப் பார்த்தார்நிழலாட நேர் பார்த்தேன்நல்லாசனம் காட்டிஇருக்கச் சொல்லிக்கவிதைக்குள் சென்று விட்டேன்நேரம் கடந்து எங்கென்றுதேடும் பொழுதுநயமான குறுமுறுவல்வைத்துவிட்டுப் போயிருந்தார்அதன் குறிப்பு புரியவில்லைதிருவுளத்தின் முகவரியும்கிடைக்கவில்லைகவிதை தீர்க்கத்தின் எல்லையில்காத்திருந்தேன்கடவுள் வரவில்லைரசனையின் முகவரிதேடிச் சென்று தட்டித்திறந்த திருமுகத்தில்திகழ்ந்ததந்த முறுவல்எவரும் காணா காட்சிக்குஏதோ ஒரு தடயமாய்.***(தொ)
37)
குழல் விரிந்த நின் கேசம்
நான் திரியும் காடாகும்
கான் விலங்காய் எனை எதிரும்***(தொ)
39)
கோல்கை ஊன்றித் தளராமுன்எதுவானாலும்எழுத்துக்கும் பணத்துக்கும்சம்பந்தம் இருக்கிறது தோழரே.***(தொ)(எங்கள் குடியைச் சார்ந்த ஒருவன் இன்று பிறந்தான்; 39 அகவைகள் நிரம்பி, நாற்பது எட்டுமுன் நித்யனாய் ஆனான்.)
--
'தாம் தீம் தரி கெட' என்று ஓயாமாரி கொட்ட, மடைகளெல்லாம் திறந்து கொள்ள, பாரதி வெள்ளம் பெருக்கெடுத்தோட, அதில் நாமெல்லாம் நனைந்து திளைக்க, ஒரு வரி தொட்ட நெஞ்சில் ஒட்டிக்கொண்டது: '...எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்...' என்று எழுதுமுன், இன்னொரு பிளாஸ்திரி, 'திக்குத்தெரியாத காட்டில்...' என்கிறது. உடம்பு பூரா பிளாஸ்திரி, சார்! எல்லாம் இன்பமயம்.இன்னம்பூரான்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
41)வாருமய்யா எழுத்தாளரே!வரகரிசிச் சோற்றிற்குவெங்காந்த காலம் போய்வண்ண அடுக்கு அஞ்சு விண்மீன்திண்டு போட்டு எழுதுகின்ற காலமய்யா!செண்டு போட்டுப் புடைக்காமல்நண்டு பிடிப்பவர் போல்ஏதோ நோட்டம் விடுகின்றீர்!வாரும். என்ன தயக்கம்?சேருகின்ற துட்டைக்காப்பாக வைக்கும்வழிபற்றிக் கவலைதானோ?கவியரசு, புவியரசுக்கால் போட்டுப் பேசுகின்றஎக்காளப் பாவரசுஎன்ற பீடுக்கும்பீடை பிடித்ததுவோ?எதுவானால் என்ன?கொட்டியழும்.கொள்கை புதைத்துவைத்தசமாதி தான் திறந்துசம்மதியா ஆவியாகிவிரட்டிவந்த வேர்ப்பைத்துடைத்துவிட்ட முகம்போலேஉம்மென்றிருக்கும்உள் புயலை அவிழ்த்துவிடும்.ஊடகத்தே சதிராடிஉலகப்பொதுச் சொத்தாடிஉன்மத்தமாகி நின்றீர்!உருட்டிவிட்டே ஊடகக் கண்முன்னாடி நிற்பதற்குமுளைத்தனரோ இளவரசு?அன்றி என்றோ மறந்து போனதாய்த்தமிழின் சேலைகளாய்செல்லு பிடித்தயரும்சீரிளமை இலக்கியங்கள்வாரி முகர்ந்துவாஞ்சையுடன் பார்த்திடவேஇன்னும் கருகாதஇலக்கிய மொட்டும் உம்முள்பூத்திடுமோ?பணத்திற்கே விற்றுத்தொலைத்திட்ட பண்பாடும்,பாவலனின் கர்வங்களும்மண்ணோடு மண்ணாகிப்பின்னருமே ஒருகால்புறப்பட்டுத் தாம் வருமோஎன்ற பயத்தினிலேஎனைக்காண வந்தீரோ?இல்லை,புறமெரித்துப் புறமெரித்துநெற்றிக்கண் வற்றியதால்ஊற்றுக்கண் பொங்கும் வரைஉறக்கம் புரிகின்ற உருத்திரனார்ஒரு வேளை எழுந்தாரோஎன்ற குலை நடுக்கம்பிடரி தள்ளப் பேயறைந்துவந்தீரோ சொல்லுமய்யா!ஒற்றிவைத்த ஊர் சொத்தில்ஒப்பனையாய் உப்பரிகைஊதிவாழ்ந்த பலூன்வாழ்வும்ஒருநாள் வெடித்துத்தான் போகும்.சாகாத வரம் வேண்டிசந்து பொந்து கோயில்களில்சிந்தும் ஊர்ப்பணங்கள்பந்தக்கால் பக்குவங்கள்ப்ரோநோட்டு ஜாலங்கள்எல்லாம் ஒருநாளில்நாறித்தான் போகும்.கல்லாத பேர்களேநல்லவர்கள் நல்லவர்கள்என்றுரைத்த பெருமகனைவென்றுவிட்ட வரிசைகளாய்ப்பூசிய திருநீறும்போம்வழிக்கு வாராது.புதைகுழியில் போய்ப்படுத்துப்பயின்றாலும் பாவிஎமன்துயின்றுமுடித்தபின்னர்தான் தான்வருவான்.நெருநல் உளனொருவன்இன்றுமட்டும் ஆடுகின்றஆட்டத்தின் பாதி முடித்துவிட்டீர்!மீதியையும் முடித்துவிடும்.நாதியத்துப் போகுமுன்னேநாட்டாமை பார்த்துவிடும்.சேதிவரும்.அதற்குள்ளேசோதிடங்கள் ஏனய்யா?நீதி துயின்றாலும்நியாயங்கள் அயர்ந்தாலும்நீறுபூத்த நெருப்பாகிநீலகண்டர் பயின்றாலும்சோற்றுப் பருக்கைக்கும்சோகாக்கும் காலம் வரும்.அதுவரையில் சத்தியமாய்கவிதையென்றோஇலக்கிய ரசனையென்றோதத்துவாதீதமென்றோஅத்துவா மார்க்கமென்றோமானிட மகத்துவமென்றோபொய்க்கால் குதிரைகள் நீர்ஆடவேண்டாம் !அதையெல்லாம்பிழைக்கத் தெரியாமல்போக்கற்று கதியற்றுதிக்கற்ற பஞ்சைப் பநாதிகளாம்யாங்கள் பார்த்துக் கொள்வோம்.போங்கால் கதவடைத்துப்போம்.***(தொ)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
நம்மாழ்வார்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
2010/12/18 coral shree <cor...@gmail.com>
நாட்டு நடப்பை நயமுடனே கவிதையாக்கி.......பாட்டுப் படிப்பவனின் பயத்தினையும் முன்னிறுத்திஏட்டுக் கவியின் நோக்கத்தையும் சொல்லாக்கிவீட்டுக் குயிலின் தாக்கத்தையும் கருத்தாக்கிய..............கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
அடேயப்பா! கவிதையைப்பற்றிக் கவிதையாகவே அபிப்ராயமா?அது என்ன வீட்டுக் குயில்?:-))
2010/12/18 coral shree <cor...@gmail.com>அன்றி என்றோ மறந்து போனதாய்த்தமிழின் சேலைகளாய்செல்லு பிடித்தயரும்சீரிளமை இலக்கியங்கள்வாரி முகர்ந்துவாஞ்சையுடன் பார்த்திடவேஇன்னும் கருகாதஇலக்கிய மொட்டும் உம்முள்பூத்திடுமோ? - வீட்டுக்குயில்
அட! அசத்திட்டீங்க போங்க :--))
42)ஆன்மிகம் ஆன்மிகம் என்றாலும்தரையில்தான் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறோம்.புழுதி கிளம்பி, நுரை தள்ளிஆறுக்கு ஆறுபள்ளம் தோண்டியதுதான் மிச்சம்.கழுதைப் பொதியாய்க் கருத்துகளும்கழுத்துப் பொதியாய் பேச்சுகளும்கிடைத்த காதுகளிலும்கிட்டிய கண்களிலும்கலப்பை இல்லாமல்உழுததுதான் மிச்சம்.விளைச்சல் பேய்த்தேர்களில்மூட்டை மூட்டையாய்ஏற்றுமதியாகிறதுஎங்கென்று தெரியாமல்எப்படி என்று புரியாமல்ஏதோ கொள்முதல்;இவ்வுலகை விண்ணாக்கமுடிகிறதோ இல்லையோவிண்ணை மண்ணாக்கிவிளைநிலமும் ஆக்கிவிட்டோம்.வானில் விளைந்துகடிதில் இழிந்துதரையில் கிளைபரப்பிக்கனிகுலுங்கப் பூத்துவிட்டால்அப்புறம் அஸ்வத்தம்;எங்கோ சாவித் துளை இருக்கிறது;முதலில் சாவியைத்தான் தேட வேண்டும்.***
42)ஆன்மிகம் ஆன்மிகம் என்றாலும்தரையில்தான் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறோம்.புழுதி கிளம்பி, நுரை தள்ளிஆறுக்கு ஆறுபள்ளம் தோண்டியதுதான் மிச்சம்.
***
அட, ஆளையே காணோமேனு பார்த்தா, இங்கே வந்து உட்கார்ந்து என்னைத் திட்டிட்டு இருக்கீங்களா??
மோகனரங்கன்
எப்படி ஐயா இது? எப்படி சாத்தியமாகிறது?
ஏற்கனவே டெல்லியில் பனி மண்டலம். கரோல்பாக் பகுதியில் இப்போது புகைமண்டலம். காது சூடேறி வருகிறது.
அன்புடன்
பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------
45)ஏனோ ஓர் ஏணி நடுவானில்ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.இறக்கிவைக்கத் தெரியாமல்இறந்து போகிறார்கள் மக்கள்.மாட்டிவைத்தவரைக் கேட்டால் தெரியும்எந்தக் கொக்கியில் தொங்கும் என்று.தரையாவது ஏணியைத் தொட்டால்ஊசல் நிற்கும்.ஊழிக்கு ஒருமுறைதரை அதனைத் தொடும்என்ற பேச்சுமட்டும் பரவலாக வருகிறது.ஏற்றும் ஏணி ஏனோ இறக்குவதில்லை!இறக்கும் ஏணியில் ஏனோ நமக்குஏறத்தெரியவில்லைபறக்கின்ற ஜாதிக்குஈதொன்றும் பிரச்சனையில்லை.ஏணியில் அமர்ந்தும் எச்சமிடுகிறதுஏணி தலையில் விழாதவரைதப்பித்தோம் என்று நகர்வோர் தலையிலும்.ஏணியைப் பிடிக்க எம்பியேவாழ்க்கை கழிகிறது.எழுந்து நின்ற குற்றம்அண்ணாந்து பார்க்கிறோம்.நாற்காலிட்டுத் திரிந்து கொண்டிருந்தால்இந்தப் பிரச்சனையில்லை;தரையின் பரப்பளவில்காலம் ஸாயுஜ்யம் ஆகிவிடும்.வானம் ஒரு பிரச்சனைதான்;கண்ணுக்குத் தெரியா ஏணிகளைக்காற்றில் ஊசலாட விடுகிறது.யார் இறங்கிவர? அன்றேல்யார் மேலேற?வானத்தையும், மண்ணையும்பிரித்துவைத்த மேஸ்திரிகழட்ட மறந்து போனதாய்க்கதைவிட்டாலும்கண்ணுக்குத் தெரியாத ஏணிகள்வானில் தொங்கப்பார்க்கத்தானே செய்கிறோம் ஒருவிதத்தில்.ஆனால் நிச்சிந்தையாய்அமர்ந்துவிடுவோருக்குவானும் மண்ணும் ஏணிகளும்பிரச்சனை எதுவும் உண்டோ?விடை கண்ட நிறைவோவிடை வேண்டா அமைதியோஏதோ ஒன்று குமிணகையாய்ப் பூக்கும்.***<<<<<>>.மிகவும் ஆழ்ந்த உட்கருத்துகொண்ட கவிதை... இதையெல்லாம் புரிந்துகொள்ளவே கொஞ்சம் அதிகப்படி மூளை வேண்டும் போல இருக்கிறது ஏதோ அரைகுறையாய் புரிகிறது// வடக்குவாசல் ஆசிரியர் சொல்கிற மாதிரி எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ என இப்போதைக்கு பிரமிக்கமட்டுமே முடிகிறது! ஆனால் தொடர்க ,என்றாவது முழுக்க புரிஞ்சிடாதா என்ன?!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
எப்படி ஐயா இது? எப்படி சாத்தியமாகிறது?
2010/12/27 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
எப்படி ஐயா இது? எப்படி சாத்தியமாகிறது?
இதான் இதேதான்.. ஒவ்வொருமுறையும் சத்தமின்றி எழுகிறது! //
49)அந்தி மாலைபுந்தி மயங்கும் வேளைமேலை மஞ்சம் அயர்ந்த பரிதிஇன்னும் தன் கதிர்ச்சலாகை களையவில்லை.உச்சிவானம் எட்டிப்பார்த்துநாணத்தில் கன்னம் சிவக்கிறது.எங்கும் உறைகுத்திய நீல வானம்நீள்பயணம் போகும் புட்குலக் குழாம்குறுவாள் ஒத்த தம் சிறகுகள் கொண்டுவிடுத்ததிரை கிழித்துக் காணும்ரகசியம் தமக்குள்மாறி மாறிப் பரிமாறிச்செல்லும்.ஒட்டுக் கேட்க விழைவன போன்றுஓடும் நீர்த்தடம் முகமொத்தும் மீன்கள்.எங்கோ பழங்காலத்தின் புதுக்குரலாய்இரைந்து போகும் இரயில்கள்.குலைக்கத் தொடங்கித் தொலைவில்நிறுத்த மறந்துபோன நாய் ஒன்றிற்குஅனுதாபமாய் உறுமும் இங்கொன்று.மனமும் புறமாகித் திரிய மகிழும்இயற்கையின் சொப்பனமாய்சந்தியா காலம்.***
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
'எங்கும் உறை குத்திய வானம்' - மெல்லிய அபூர்வக் கவிநயம். அருமையான நடை உங்களுடையது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
48)ஆயிரங்கால் மண்டபத்தில்ஒரு சிலை மட்டும் பேசுகிறது;எந்தச் சிலை என்பதுதான் புதிராக இருக்கிறது.நானும் ஒவ்வொரு சிலையாகஉற்று உற்றுப் பார்க்கிறேன்;நாணிக் கவிழ்வன போலும் தலைகள்;ஆனாலும் அந்தப் பேசும் சிலைஇன்னமும் அகப்பட்ட பாடில்லை;நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?இல்லை; அது யாரோடும்பேசியதாக நினைவில்லை;சிலை பேசக் கேட்டவர்கள்சிந்தை அரட்டை அடிக்கத் தொடங்கிவிடும்.நாலு பேரை அழைத்துச் சென்றுஆளுக்கு ஒரு சிலையாகப் பார்த்துக்காது வைத்துக் கேட்டுப்புலன் விசாரணை நடத்தினாலும் பயனில்லை;எந்தச் சிலை? எல்லாம் அம்மக் கள்ளம்.தொட்டால் சிணுங்கிகள்;எல்லாம் கல்லாகிவிடும்; தொடக்கூடாது.தன்னந்தனியாய் ஓய்வாகநான் போய் அமர்ந்தால் போதும்ஏதோ வௌவால் நாத்தம் வரும்;பின்பு கல்லுக்குள்ளிருந்து,உள் ஆழத்திலிருந்துஆதிக்கல் வயிற்றில் புதைந்ததுபோல்காலப் பலகணி தாண்டிச் சன்னமாகஓர் உளிச்சத்தம் வரும்;உள்ளே மாட்டிய ஒரு தவளைஉயிருக்குப் போராடுவதுபோல் ஒரு பிரமை.அதற்கப்புறம்தான் அந்தச் சிலைபேசத் தொடங்குவது வழக்கம்;எந்தச் சிலை என்று உடனே பார்க்கவேண்டும்என்று நானும் ஒவ்வொரு முறையும்நிச்சயம் செய்து போவது வழக்கம்.உளிச்சத்தம் கேட்டதும் உன்மத்தம் ஆகும்.அதற்குப் பின் ஒன்றன்பின் ஒன்று;சிலையின் பெயர் கேட்க வேண்டும்,ஏன் சிலையாகி நிற்கக் காரணம்,என்னோடு பேசும் நோக்கம்,எல்லாம் கேட்கத் தீர்மானம் உண்டு;ஆனால் உளிச்சத்தம்.....அதுமட்டும் எங்கிருந்து என்றுதெரிந்தாலும் பரவாயில்லை;பாதிப் புதிர் விளங்கும்;பேசும் சிலையின் கோத்திரமாவது புரியும்;வௌவால்கள் எதைக் கேட்டாலும்சிரித்துப் பறக்கின்றன;எனக்கென்னமோ ஏதோ ஓர் பேரழகிசிலைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறாள்;சித்தம் தளரும் எனைப் போன்றோர்தனியே வந்து அமருங்கால்தாங்கொணாது பேசுகிறாள்;ஆனால் தான் எந்தச் சிலையில்என்று சொன்னால் என்ன?எந்த தேவ ரகசியம் பாழாய்ப் போகும்?போனால் என்ன மானுடம் வாழும்.எங்கிருந்தோ வந்தவினோதப் பறவை ஒன்றுபக்கத்து நந்தவனத்தில் நின்றுநன்றாய் உற்றுக் கேட்டது ஒரு சமயம்நான் கேட்ட அதே கணத்தில்;ஆச்சரியம் தாங்காமல் உள் மண்டபம் சுற்றிஎன் எதிர் தூணில் உச்சி அமர்ந்து கேட்டது என்னைஏன் நீ ஏன் நீ ஏன் நீஉளிச்சத்தம் அதன் காதில் விழுமோ?வௌவாலிடம் அது ஒரு வேளைகேட்கக்கூடும்எப்பொழுதேனும் சித்தம் கலங்கிஒருவன் ஓய்ந்து தனிமை நாடி அமர்கிறானேஅவன் எந்த மண்டபத்தின் சிலையென.
***--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
!!!!!!!!
எதையோ நோண்டப்போகக் கவிதையாய்க் கொட்டுகிறது! கொட்டட்டுமே! என்ன
குறைந்துபோய் விட்டது என்று இப்படி ஒரு அங்கலாய்ப்பு, அடிக்குறிப்பு
அரங்கனாரே!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
நம்மை இன்னதென்று வகைப்படுத்தத் தெரிந்து கொண்டால் அப்புறம் இத்தனை வம்பு
வழக்குகள், கமெண்டுகள், கவிதைகள் இத்தனைக்கும் அவசியம் இருந்திருக்கவே
முடியாது!
இப்படியும் அப்படியுமாக, இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் நடுவில்,
உண்மைக்கும் பொய்மைக்கும் நடுவில், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும்
நடுவில் என்று ஒரு permutation and combination..அது என்னவென்று
புரியாமல் ஒரு தேடல், அதில் என்னமோ தெரிந்துவிட்டதாகக் கொஞ்சம் மயக்கம்,
சற்று விலகி நின்று பார்த்தால் ஒன்றுமே தேறவில்லை என்ற ஞானம்!
ஆனால் தன்னை இப்படி வகைப் படுத்திக் கொள்ள எவருமே இங்கே முனைவதில்லை!
முயற்சி செய்த அரங்கனார் எழுத்து என்னமோ என்னைப் பாடாய்ப் படுத்திக்
கொண்டிருக்கிறதையா! எது பக்தி என்று சொல்லப் புகுந்த நேரமாக
இருக்கட்டும், ரங்கனின் மன மின்வானில் பாரதியின் சாக்தத்தைப் படித்த
தருணங்களாகட்டும் , இப்படி எதை எதையோ வகைப் படுத்த முயற்சித்தது தான்
பெரிதாகத் தெரிகிறதே தவிர, வகையில் அல்ல!
இறைவா உன்னை நான் ஒன்று….....
இறைவா உன்னை நான் ஒன்று கேட்கின்றேன்
ஏன் படைத்தாய் என்னை நீ
ஓட்டையுடன் வெற்றுக் குடமெனவே
சிறு வயதில் செய்திட்டால் குறும்பு
கற்றுத் தந்திடுவேன் பாட்டுனக்கு
என்றிடுவாள் அன்னையின் தங்கை
வால் சுருட்டி வந்தே
அமர்ந்திடுவேன் அவள் முன்னே
வாலிபத்தில் கச்சேரியோ நாடகமோ சென்றால்
களித்திடல் விட்டுக் குமறுதல் தொடங்கும்
ஏங்கிடுவேன் என்னுள்ளே என்னை
ஏன் படைத்தாய் நீ
வெற்றுக் குடமாய்
அதிலும் ஓட்டையுடன் என்றே
ஐம்பதில் வந்தார் இசைக் கலைஞர் ஒருவர்
அவரிடம் கேட்டேன் எனக்கும் தர இசைப் பயிற்சி
ஐந்தில் வளையாதது ஐம்பதிலா
என்றவர் ஏளனம் செய்திட
ஏங்கினேன் நான் என்னை
ஏன் படைத்தாய் நீ யென்றே
கதை கட்டுரை கவிதை யென
எழுதத்தான் திறனில்லை
படித்திடலாம் என்றாலோ
பத்து வரி தாண்டு முன்னே
வந்திடுதே தூக்கம்
பறந்தென்னைப் பற்றிடவே
ஏன் படைத்தாய் இறைவா
என்னையுந்தான் நீ
பொருள் ஈட்டிடவே ஆசை இல்லை ஆன்மீகம்
நாடிடலாம் என்றாலோ ஓடுகின்றேன் ஆறு காதம்
ஏன் படைத்தாய் இறைவா என்னையுந்தான் நீ
உன்னை நான் கேட்கின்றேன் மாற்றிடு என்னை நீ என்றே
உன்னுள்ளே சிரிக்கின்றாயோ எண்பதிலா என எண்ணி
நீ நினைத்தால் ஆகாத தொன்றில்லை
எக்கணமும் செயல் படத்தான் செய்திடலாம் நீ
இறைவா உன்னை நான் ஒன்று….....
இறைவா உன்னை நான் ஒன்று….....
52)எப்பிறவி வாய்க்கினும்அப்பிறவிதோரும் உள்ளேகாப்பாக நின்றென்றும் நற்கதிக்கே உய்க்கும்காளிபத கமலங்கள் இதயத்தில் திகழக்காரிருள் துயரத்தின் பிடியில்கட்டுண்டு நெஞ்சே!உன்னை நீயே ஏனோஏமாற்றிக் கொள்ள வேண்டும்?***
55)கொடுங்கை முக மிருகம்என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.நெடுங்கதை கூறாமல்நெத்தியில் அடித்தால் போல்அதன் ஒலியற்ற சிரிப்பு.உள்ளத்தின் ஏடுகள் ஒப்புகின்றன.ஒரு தனி வழிப்போக்கனாய்ப்பாலை வாழ்க்கையில்பருந்துகளின் ஸ்நேகம்;படுத்து உறங்குங்கால்அவற்றின் கிசுகிசுப்பு காதில்:’பட்டிக்காட்டான் இறந்துவிட்டானா பார்!அவன் இதயத்தின் சதை எனக்கு மட்டும்.பாவம் அன்புக்கு ஏங்கியேஇறந்தவனின் இதயம்இளமையாய் இருக்கும்.இன்சுவைக் கோது’விழித்ததும் யதார்த்தங்கள் உறங்கிவிடுகின்றன.வினைகள் முழித்துக்கொள்கின்றன.தண்டனைக் கைதியாய்த் தள்ளாடும் உயிர்;தலை சாய்க்க ஒரு தாயின் மடி தேடும்;சாய்த்திடின் அது முள்மரம் ஆகும்;தாகம் தீர்க்க கண்களும்கடுநெஞ்சம் கொண்ட வெப்பம்;நிழல் என்று கண்ணுக்குத் தோன்றிநீளும் அழலாய் நிதர்சன அனுபவங்கள்மூளும் வினைமுகட்டில்மூர்க்கம் கொள்ளும்;ஓயாமல் மூட்டி எரித்துஎன்னை அடுப்பாக்கிச் சமைக்கும்கைகளும் புரிவதில்லை;சமைக்கும் பதார்த்தமும்யாதெனத் தெரிவதில்லை;யாருண்ண இந்த உயிரின் வேகல்?பாருண்ண ஒருநாள் விழும் உடலோபாவம் பாமரமாய்ச் சிரிக்கிறது; >>>>>>
பக்குவம் வரும் வரையில்பாழும் மனமும் துடிக்கும்;மொக்குள் வாழ்க்கையில்முளைத்த இடமெல்லாம் பெருங்கதை;சிக்காப் பொருளாய்ச் சீவன்சக்கைகளை மென்று சளைக்கிறது;அருளின் அக்கறையும் ஒரு நாள் பிறக்கலாம்;மருளே பழகிப் போனபின்மனம் வருமா அன்றுஅருளே அந்நியமாய்த் தோன்றுமோ என்றுஐயமும் புதிர்ப்புன்னகையாய்ப்புரையோடி, யார்நினைத்தாரெனத்தலைதட்டிக் கொள்கிறதோதீராத எதிர்பார்ப்பில் தீர்க்க சிந்தனையாய்?போகட்டும் விடு என்று சொல்லப்பழகிப்போன குரல்கள் இல்லை;சாகட்டும் விடு என்று தள்ளஜீவிதம் ஜீர்ணம் ஆகவில்லை;சர்வம் துக்கம் என்றுரைத்தசித்தார்த்தன் பொய்யுரைக்கவில்லை;வானும் வழியும் சூழலும்ஒரே பகலாய்ப் பொடிக்கும் கோடையில்நிழல் ஒரு கொடுமைகிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும்;ஊன்பொதியென உடல் சுமந்த உயிர்க்கும்ஊழ்ப்பொதியென வினைசுமந்த எனக்கும்தான் பொருளெனக் காட்டும் தண்ணருள்ஏன்வரவேண்டும் என்றஎந்த நியதியும் இல்லை இயற்கையில்.***<>>>>>>>>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
56)பூம்போதுகளில்நடுநிசித் துயிலும்பனித்துளி போன்றுஉன் இதயம் நடுங்குகிறது;வேகும் என் ஆவியினுள்ளும்உன்னிதயப் பனிவாடை ஈர்கின்றது.
அற்புதம் ரங்கன்ஜி.
மெய்ம் மறந்து படித்தேன்.
என்னை எனக்குள் அத்வைதமாய் உணர்ந்தேன்.
நன்றி.
அஷ்வின்ஜி.
On Jan 19, 11:51 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 58)
>
> உளறுகின்றேன்;
> உள்ளத்தின் வேதனையில் ஒருவாறு
> மரத்துப் போயிற்று நெஞ்சம்;
> தள்ளத் தெரியாத தாயின் கைதேடி
> தள்ளாடி விழுந்ததென் வாழ்வு;
> அகம் விட்டுப் பிரித்துவிட
> அந்த யமன் வரும்வரையில்
> நெட்டுயிர்க்கும் என் ஆவி;
> யாருக்கும் தெரியாத மறைபொருளாய்ப்
> பேருக்கு எனைச் சுமந்த உயிர்
> வேரில் விரக்தி பிடித்து விரையத் துடிக்கும்.
> கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்
> சீறிச்சிவக்கும் என் ஜீவிதத்தில்;
> யார் வந்தாலும் என்ன, போனாலும் என்ன
> என்று அலட்சியமாய் விரையும் காலம்;
> விட்டுப் பிரியாத பந்தமாய்
> வினைசூழச் செல்லும் என் விதி;
> தொட்டுப் பேசிப் பின் தொடராத சொந்தமாய்த்
> தொலைத்துவிட்ட நட்புகள்
> விட்டுச் சென்ற நகைப்புகள்
> வியர்த்தமென ஆக்கும்;
> தெப்ப மண்டபத்தில் குட்டிகளை ஈன்ற நாய்
> இரை தேடப் போயிற்று
> என்று நண்பன் உரைப்பச்
> சென்று கொணர்ந்த குட்டிகளின் பிரிவு
> அந்தப் பைரவத்தைப் படுத்திய பாடு
> மீண்டும் கொண்டு விட்டாலும்
> என்னை விடாமல் துரத்தும்;
> ஆணி மாண்டவ்யனாய்க்
> கூர்வேல் படுக்கையின் மேல்
> என் பகற்கனவுகள் பழிக்கும்;
> கண்ணன் குழலூதக் கன்று மடிமறக்கும்
> ஆவினம் எனை வெறித்துச் செல்லும்;
> மன்மதன் எரிந்தகதை கேட்டு
> மாகாளிக் கோயில் பலியாடாய்
> என் மனசாட்சிகள் அலறும்;
> சாட்சியற்ற கூண்டில்
> சந்நத்தமாகும் சத்தியங்கள்
> தீர்ப்புகளைத் தாமே நிறைவேற்றிப் போகும்;
> சரி என்றும் இல்லையென்றும்
> புரியாத லயங்கரையில்
> சரி பாதி வாழ்நாள்
> மோதி மோதிக் கழியும்.
> எனை நானே சகித்துக்கொள்ளச்
> சங்கடப் படும்பொழுது
> உன்னைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
> அன்னை என்றாலும் அவளுக்கும் நெஞ்சுண்டே!
> என்ன இருந்தாலும் நீ எந்தன் தாயன்றே?
> சேற்றில் இருந்தாலும் நானும் உன் சேயன்றே?
> ஏற்றிவிடு என்று உன்
> அருள் நோக்கி அழுவதல்லால்
> கூற்றுவர்க்கோ குடிக்குணவாய்க்
> கொள்ளை போகும் என் வாழ்வு?
> காற்றாகி நின்றென் மூச்சிழைத்தாய்;
> ககன வெளியாகி நின்றென் வாழ்வமைத்தாய்;
> தீயாகி நின்றென்
> உயிர்ச்சூட்டில் ஊக்கவந்தாய்;
> புனலாகி என் குருதியுள் புரிந்தாய்;
> மண்ணாகி வந்தென் உடலோடுவந்து
> மனத்துயர் மாற்றும் மருந்தானாய்;
> எண்ணத் தொலையாத கவலைகள்
> எனையுண்ண நாளும்
> உனை எண்ணும் ஓர்வரம் போதும்
> அது தனை வெல்லத் தந்திரம் ஆகும்.
>
> ***
ஆனந்த சுகம் தரும் வார்த்தைகள். நன்றி அரங்கனாரே.
சொற்களைப் பின்னி எங்கள் உணர்வுகளைத் தாலாட்டுகிறீர்கள்.
On Jan 22, 9:03 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 60)
>
> ஏய்! யாரது? யாரது?
> என்னுள்ளே ஒளிவது?
> ஊரெல்லாம் ஓடி
> உழைத்துவந்த களைப்பென்றாலும்
> ஒளிந்துகொள்ள என்னெஞ்சம்தான்
> கிட்டியதோ கள்ளப்பொய் இருளுக்கு?
>
> இன்றுமட்டும் என்னை விட்டுவிடு.
> இருநிலம் எங்கும் தேடினாலும்
> மருள் என்ற மஞ்சமிட்ட
> ஒரு குகை உன்னெஞ்சம் விட்டால்
> கிடைப்பரிது; பரவாயில்லை;
> எத்தனையோ நாட்கள் நீ
> என் பவனக் கொலுவிருப்பில்
> உன்னிஷ்டப்படியெல்லாம் திரிந்தாயே!
> நான் எதுவும் சொன்னதுண்டா?
>
> உனை அண்டிவந்த நாட்கள்
> ஓர் இருட்காலம்;
> எனை மண்டிச் சேர்ந்த பொய்கள்
> ஏராளம்;
> இன்றுதான் காலக் கசடுகளைக்
> கழுவிச் சுரண்டிக் காயவிட்டுத்
> தூயதாய் ஆக்கி வைத்தேன்;
> தொலைவில் போ!
>
> பேயானாலும் பிரிவு கொடிது;
> தாய்போல் உன்னைத்
> தாங்கியதெல்லாம் மறந்தாயா?
> ஏங்கியதெல்லாம் ஏற்று நீ மகிழ
> என் பெயர் சொல்வாய்
> என்றிருந்தேன் யான்
> நோவாய் உனக்கு ஆனதும் என்?
>
> இருளின் மடிசுகம் ஒரு பொய் நிகழ்வு;
> அருளின் விடியலில் அது பொடியும்;
> அதுவரை மயக்கில்
> அநுபவம் கோடி தந்ததாய்ப்
> பொய்யாய்க் கணக்கெழுதும்;
> போகட்டும் விடு என்று
> பொல்லாங்கு அஞ்சுகின்ற
> மெல்லியவென் உள்ளம் மலைக்கும்;
> புல்லிய காரணங்கள் புனிதம் பூசும்;
> வில்லுதைத்த சரங்களெனெ
> விழைவு முகம் பல தைக்கும்;
> அடிபட்ட மானாய் அகம் குழையும்;
> ஆர்ப்பரிக்கும் இரவின் அதிர்வுகளில்
> அந்தரங்கம் கலகலத்துப் போகும்;
> ஆன்மப் பாழாகி
> ஊன்பொதியில் உயிர் தேம்பும்;
> உருள் வையக் கண்ணாகி
> ஒற்றைத்தேர் உருட்டிவரும்
> ஒரு வெய்யோன்
> பையத்தன் கதிர்க்கரத்தால்
> தைவரும் இன்புலரிக்கே
> மயலாகி நெஞ்சம்
> வடக்கிருக்கும் இந்நாளில்
> இடக்காகப் பேசி
> என்னதான் நீ புகன்றாலும்
> இருளுக்கிங் கில்லை யிடம்.
>
> ***
60)ஏய்! யாரது? யாரது?என்னுள்ளே ஒளிவது?ஊரெல்லாம் ஓடிஉழைத்துவந்த களைப்பென்றாலும்
ஒளிந்துகொள்ள என்னெஞ்சம்தான்
கிட்டியதோ கள்ளப்பொய் இருளுக்கு? <>>>
***<<<<<<<<<<அச்சாக உள்ளதை பு்ரியவைக்கவும் அரங்கனாரே.!கவிதை இந்த இருள் மனசையும் ஒளியூட்டி ஒரு ஓரமாகவாவது உட்கார்ந்து கவனி என்கிறது!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
மெல்லியவென் உள்ளம் மலைக்கும்;
புல்லிய காரணங்கள் புனிதம் பூசும்;வில்லுதைத்த சரங்களெனெவிழைவு முகம் பல தைக்கும்;அடிபட்ட மானாய் அகம் குழையும்;ஆர்ப்பரிக்கும் இரவின் அதிர்வுகளில்அந்தரங்கம் கலகலத்துப் போகும்;ஆன்மப் பாழாகி
ஊன்பொதியில் உயிர் தேம்பும்;
Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.
ராபர்ட் லீ ஃபிராஸ்ட், 1916
http://www.youtube.com/watch?v=SnWU29o2xwA&NR=1
யாரும் அதிகப் பயணம் செய்திராத பாதையைத் தேர்ந்தெடுத்து, அதில் பயணிக்கிற
அரங்கனாருக்கு வாழ்த்துக்கள்! மின்தமிழில் தேவ் ஐயா சொன்ன ப்ரஹ்லாத
ஆழ்வான் -ஹிரண்யன் இரண்டில் எதுவானால் தான் என்ன?!!
-------------------
61)வார்த்தைகளின் விளிம்பில்நடக்கப் பயின்றுசமன் குலைந்து விழுந்த தருணங்களில்உன் பூமடி படியும் பொன் தாதுவாய்என் நாடித் துடிப்புகள் நகைக்கும்;தென்னங்கீற்றிசைதாங்காமல் அதை அரட்டும்;தானும் ஒப்பியதாய்க்கிளத்திய அணிலை அணில் விரட்டும்;வானும் விழுந்து நகைக்கும்என்றந்த இடியும் உகைத்தமின்னின் புன்முறுவல்கண்ணிமை வெருட்டும்;காணாமல் கோணிக் கண்டு நகையாடும்கள்ளநிலா மெள்ளத் தன் முகம் மறைக்கும்;பேணாமல் விட்ட பெருங்காடுபார்பூத்த காமமெனப் பரந்து தழைக்கும்;சேணுயர்ந்த செக்கர்வான் சல்லாபத்தில்நாணும் நளினம் நள்ளிருள் மூடத்தேடும்;பாண் தேடும் விறலியாய்ஆண்புட்கள் பாடியே தம் துணையைத் தேடும்;ஊண்மறந்த குழவியாய் உள்ளம் அலைக்கும்;வேண்பெரிய மாநிலம் விரியும் பகல்;நாணிச் சிவந்த நேரிழையின்கச்சடர்த்த களியெழில் பிறைக்கோடன்னஉச்சிக்குள் சென்றுறைத்த உட்பொருளைமெச்சி மனம் குதப்பும் வார்த்தைகளின்விளிம்பில் நடக்கப் பயின்றுசமன் குலைந்து விழுந்த தருணம்உன் பூமடிமேல் படியும் பொன் தாது.
***--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
என்னே அருமை! என்னே தத்துவ விசாரணை! என்னே வினா-விடை! ஶ்ரீமோர! யான் இதை
தலைப்பாக வைத்து விசாரணையை தொடங்குவதி, உமக்கு ஆக்ஷேபணை உண்டோ?
இன்னம்பூரான்
26 01 2011
பி.கு. நான் ஆரம்பத்தில் இருந்து இதை படித்து வருகிறேன், ஸ்வாமி.
2011/1/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> 62)
> எங்கோ எங்கோ உள்ளேதான்
> உன்வாசம்.
> எங்கென்று தேடித்தான் கண்ணை
> மூடுகிறேன்;
> ஆனால் வெளியில் எங்கோ உன் குரல் கேட்கிறது.
> வெளியில், வானில், விரிந்த அண்டப்
> பரப்பின்
> விளிம்பிற்கப்பால் உன்னைத் தேடிச் செல்கிறேன்.
> உள்ளத்துக்குள்ளிருந்து உன்குரல்
> கேட்கிறது;
> நேற்று, நேற்றுக்குமுன் என்று
> கடந்த காலம் எல்லாம் தேடி,
> எதிர்காலச் சந்தில் வந்து நிற்கிறேன்;
> எங்கும் உன் காலடித் தடங்கள்.
> தடம் ஒற்றித் தொடரும் திறலில்
> தேடுகிறேன்;
> நிகழ்காலத் தேட்டத்தின் நிழலாய்
> நீளும் பழமை;
> பழமைதான் உன்கோயில் என்று விரதம் காத்து வந்து நின்றேன்;
> புதுமைக்குள் புதுமையாய்ப் புறப்பட்டுப் போனாய்;
> புதுமைக்குள் முகிழ்க்கும் உன் பிரஸன்னம் என்று பொறுமை காத்தேன்;
> என்றோ நீ வந்து சேர்ந்துவிட்ட செய்தி உரைத்து வந்தது காலம்.
> தேடிக் களைத்தயர்ந்தேன்;
> தூங்குங்கால் எனை மடிமீது கிடத்தித் தலைகோதி விட்டதாய்க்
> கதைத்தன பஞ்சபூதங்கள்;
> இருக்கின்றாய் என்று தேடி வந்தேன்;
> இல்லையென நிரூபித்துச் சென்றாய்;
> இல்லை என நிம்மதியாய்த் திரிந்தேன்;
> இருக்கும் தடம் காட்டி என்னை வளைத்துக்கொண்டாய்;
> உன் இன்பத்துக்குப் பொருளாக எண்ணி
> எனை உவந்தேன்;
> உன் லீலைக்குப் பொருளாக ஆக்கி
> எனை மகிழ்ந்தாய்;
> உன் கையில் குழலாக ஆகி கீதம்
> இசைத்தேன்;
> அதன் அடியோடும் ஆதார சுருதியாக என் அகங்காரம் ஆக்கிச் சிரித்தாய்;
> என்னில் நான் உட்சிறையாகி மடிந்தேன்
> என விழுந்தேன்;
> உன்னில் நீ என்னை ஏற்று உயிர்க் குயிராய் எழுந்தாய்;
> கண்ணில் நீ உன்னைக் காட்டாமல் சென்றாய்;
> காணும் வேட்கையில் நானும் கருத்திழந்தேன்;
> முடிவாக ஒன்றைச் சொல்லிப்போ முழுமுதலே!
> நம்மிலிருந்து நாம் ஒருவரை ஒருவர்
> நழுவித்தான் போமோ காலம்?
> நேர்கொடு நேர் சந்தித்தால்
> நில்லாது போமோ வையம்?
> நான் என்பது உதித்த இடத்தே
> ஒடுங்கிப் போனால்
> ஏன் என்பது தெரிய வருமோ
> உணர்வின் மூர்த்தி!
ஆஹா...காத்திருக்கிறோம்.........தொடங்குங்கள்...........
2011/1/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
2011/1/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> 63)
> உயிர் தோன்றி வளரும் போது
> உறவுகள் அமைந்திருக்கின்றன.
>
> உறவுகளைச் சொல்லிச் சொல்லிப்
> பாசத்தை வளர்க்கிறோம்.
>
> தந்தை என்றதும் பெரும் உலக அரணாக
> நிம்மதி அடைகிறோம் குழந்தைமையில்.
>
> தாய் என்றதும் தடையற்ற அன்பின்
> ஜீவ நதியாகக் களித்துக் குளிர்கிறோம்
> சேயென்ற காலம் தொட்டு.
>
> அண்ணன், அக்கா, தங்கை, தம்பி,
> சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா,
> மாமா, அத்தை, பாட்டி, தாத்தா
> என்று என்று உறவின் கைகள்
> காலக் கொழுகொம்பில்
> கொடிகள் போல் படர்ந்து
>
> உறவின் மரம் உயிரில் வேரூன்ற
> ஊற்றிய பாசம்
> உறவின் பரஸ்பரங்களின் உரத்தோடு
> ஒன்றி உணர, உணர்ந்து,
> உணர்ச்சி கொண்டு ஒன்ற
> நாம், நமது, நாங்க, எங்கள் என்ற
> உறவு கெட்டித்த
> தன்மைப் பன்மைகளாய்ப்
> பெருகிய அடர்த்தியில்
>
> என்றேனும், என்றோ,
> உணர்கிறோமா, உணர்வோமா
>
> 'இவை பொய்.
> இவை வெறும் நாடகம்
> சுய லாபக் கணக்கு
> முடைந்தெடுத்த வெற்றுப் பூச்சுகள்'
>
> என......
>
> அருள் பூத்த கவிகள்
> உடலெல்லாம் வாய்கொண்டு
> அலறினாலும்
> உணரும் போது நிதர்சனமாகும்
> வெறுமை
> அந்த வெறுமையின்
> மெய்மை அமிலத்தில்
> கரைந்து மறையும்
> உறவின் முடைந்த
> பொய்ப் புறப்பூச்சுகள்
> சிரிப்பொன்று வாய் வேண்டாது
> தானே படர்ந்து உலகூடு ஊடாடி
> நமை நோக்கி வரத்தொடங்கும்
> ஸ்தம்பித கணம்...........
>
> ஸ்ரீரங்கா
> ஊரும் சதமன்று;
> உற்றார் சதமல்ல;
> உறவுகள் பொய்
> என்பது உண்மையப்பா.
>
> (இதைப் படித்துவிட்டு, ’பக்குவம் வந்துசேரும், அதுவரை வேடிக்கை
> பார்த்திருப்போம்’ என்று தேற்றிய திரு ஆராதியாருக்குப் பதிலாக)
>
> பக்குவம் வருவதற்குள்
> பொட்டி படுக்கைக் கட்டுகிறோம்
> பக்கத்தில் நமனிருக்கப்
> பார்சுமக்க நாமிருக்க
> அக்கப்போர் அத்தனையும்
> ஆலவட்டம் இட்டிருக்க
> வெக்கங் கெட்ட பிழைப்பினிலே
> விளங்காத விரசம்தான்.
>
> விளங்காத விரசத்தில்
> வீறாப்பால் என்ன பயன்?
> ஆண்டியாய்ப் போனாலும்
> அரசமரப் பிள்ளைக்குப்
> பேச்சுத்துணை யானாலும்
> பூசிவைத்த ஜிகினா
> பொடியாகிப் போகையிலே
> ஏசிவரும் விரசத்தில்
> எக்குரலும் எடுக்கலையே.
>
> வேடிக்கை பார்த்திருப்போம்
> பாழ்வெளியாம் கிணற்றினிலே
> பக்கெட்டுக் கயிறுவிட்டு
> பக்குவமாய் அமைதியினைப்
> பெற்றுவப்போம் நன்று சொன்னீர்
> பவப்பகலின் கடுவெப்பில்
> கிணறுகாய்ந்து நாளாச்சு
> பக்கெட்டும் ஓட்டை
> பல்லிளிக்கும் கயிறோடு
> போராடும் வேளையிலே
> பேச்சுத் துணைக்குவந்தீர்!
> பெரியவரே வாழிய நீர்.
63)
***
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
66)ஒரு காலும் தாண்டிவிட முடியாதசுவர்களின் பின்னே நின்றபடிதான்ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம்கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள்அல்லது கண்களைத் தடை செய்யாதுவெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர்.மிகமிக நேரிடையான சுருக்கு வழியும்சுற்றிவளைத்த சுழல்வழி எனசார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும்இணையும் கைகளுக்கு நடுவிலும்அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர்.சுவர் சமயத்தில் பல உடுப்புகளும்வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு.ஆண் பெண் கிழவர் குழந்தைஅந்நியள், நம்மவள், எவனோ, இவளோஇவரோ, அதுவோ,அவர்களோ, இவர்களோ, உவர்களோஎனப்பல எனப்பல எனப்பலநினைப்பினில், நடப்பினில்,நனவினில் நடைமுறை நிஜத்தினில்கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில்தடைச்சுவர் கண் மறைக்காமல்எண் மறைக்காமல்எங்கோ எப்படியோ எவ்விதமோதட்டுப்படும் தடைச்சுவர்தோன்றாமல் தோன்றி.நீயும் நானும் வேறிலாது நிற்கநயந்தாலும் நளினமான விலகல்பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவுஅயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம்கடக்க முனைந்த கால்தூரப்பட்டுப் பின்னடையும் மாயம்இத்தனைக்கும் நீயும் நானும்பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம்.இன்னும் சொல்லப் போனால்என்னுள் நீயும் உன்னுள் நானும்உயிர்த்த கணங்களும் உண்டுதானே!ஆயினும் தொலைவு இடையிட்டபாடுடைப் போலிகளோ நாம்?போயினும் வருவோம்என்ற நம்பிக்கையில்விலகிச் சேயிடைப்படா நிற்கும்ஓருயிரின் பல பிம்பங்களாய்ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த்தனித்தனி உயிர்களின்பிம்பங்களே மெய்மைகளாய்அம்புவியில் வளைய வரும்நெருக்க விழைவின் முறிவுகளாய்உருவு சுமந்த அந்நியங்களாய்உருக்கரந்த அந்நியோந்நியமாய்வெருவரத் திரிதரும்உயிர்க்குலக் கரவறப்பயிலொளி அன்பென நின்றதும்எதுவென அறியா முனைப்பினில்கதுவிடும் மோனம் முகிழ்த்திடும்சதுரது சத்தியம் என்றிடும்குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும்யதுகுல முரளியின் பண்களோ? <<<>தெரியாமத்தான் கேட்கறேன் தமிழ் என்ன உங்ககிட்ட மட்டும் இவ்வளவு அந்நியோன்மாய் கைகோத்து வருகிறது! பாராட்டக்கூட தமிழில் சரியான வார்த்தை அகப்படவில்லையே !ஆயினும்உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன்என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன்நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன்நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன்நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்றுமற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன்சுற்றமாய்க் கலந்து கலக்கஉற்றதும் உறுவதுமாய்நிலவிடும் ஒரு பெரும் விழைவுஅகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம்அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்?அத்வைத நிலையிலும் தீருமோஇந்த அணுகலால் விலகும் மாயமும்விலகிட அணுகிடும் விழைவும்?(தொ..)
"நிறமே" "பாசமாக"
!!!!
-------------------
எதையோ நோண்டப்போகத் தான்
தங்கம், வைரம் என்று என்ன என்னவோ கிடைக்கிறது
:-)))))
கிருஷ்ணமூர்த்தி
On Mar 8, 8:46 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 67)
>
> முள் தைக்கும் போது
> தோன்றும்
> ரோஜாவின் அழகு
> ரத்த நிறம் உடையது.
>
> மனம் உடைந்த பொழுது
> உதிக்கும்
> வைகறைப் பொழுது
> ரத்த பாசம் கொண்டது.
>
> ***
72)கானகத்தில் சந்தித்த தசரதன்பரமனைப் பாடு;பக்தியைத் தேடு;பரிதவிக்கும் ஒரு தந்தையின்பாவமும் உண்டு என்றுஎன்றேனும் கூறு.***(தொடரும்)
- 'திக்குத் தெரியாதக் காட்டில்......'
இன்னம்பூரான்
30 03 2011
2011/3/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
73)அவள் சொன்னாளா?சொல்லியிருப்பாள்சொல்லக் கூடியவள் தானே!ஒரு மாதம் உயிர் சுமப்பேன்ஓராயிரம் துயர் பொறுப்பேன்ஒரு வில்லால் மீட்கும் நாள்வரும் அதற்குள் என்றால்என்றாளா?இன்னும் என்ன சொன்னாள்?ஏன் இதுவரையில் வரவில்லைஎன்றெதுவும் கேட்டாளா?கேட்டிருப்பாள்;கேட்கக் கூடியவள்தானே!ஒரு கணமும் உயிர் தரியேன்எனப்புலம்பி ஓராண்டுஓட்டிவிட்டேன்;என்னைப் போல் அன்று அவள்;கெடு சொன்னால், பிழைத்தால்முடிவென்றே அர்த்தம்;அடிநிலை பெற்றாளும் அரசும்படிகொண்ட கீர்த்திமிதிலையம் பொற்கொடியும்சொல் பிழையார்;பிழைத்தால் தாம் பிழையார்;குழைச் சரக்காய் இங்கொருவன் நோககுவலயத்தார் கூடிமுச்சந்தி கதை கேட்டுநாளை நான் அணைகட்டும்வேளை எனப்போவார்.போன ஆண்டு பட்ட துயர் சொன்னது போல்இவ்வாண்டு அமையவில்லைஎனக் கருத்தளிப்பார்;
மைக்குழலாள் எனை வெறுத்துஏதேனும் சொன்னாளோ?மாநிலத்து மன்னரையேமனம் வெதும்பி நொந்தாளோ?தினம் வெந்து துடிக்கும் என் ஆவிஅனல் அவள் பால் எட்டிடுமோ?என்னுயிர்க்கும் உள்ளுயிராய் நின்றாளே?அன்னையர் பால் அவநம்பிக்கை ஆனாளோ?தன் ஐயர் பால் திரிந்த உளம் கொண்டாளோ?வில் நயத்தை விளையாட்டாய்ச் சிரித்தாளோ?வீரத்தைப் புன்னகைத்து மறைத்தாளோ?விரத முனி அனைவருமே வேடமெனக் கொண்டாளோ?பரதன் ஒருவனையே தன்மகனாய்ச் சொன்னாளோ?வாங்கிய ஆழியில் தன் முகத்தைக் கண்டாளோ?அன்றேல் என் முகத்தைக் கண்டுஏக்கத்தில் கண் புதைத்தாளோ?ஊக்கம் நீ தந்தாய் கொலோ?ஆக்கம் என்று ஏதேனும் புகன்றாய் கொலோ?இளையவன் அழுகின்றான் என்று புகன்றாயா?களைத்த கழுகின் கதையையும் சொன்னாயா?என்ன சொன்னாய் சொல்!ஏதவள் சொன்னாள் புகல்?மாதவள் இருக்கின்றாள்என்றுரைத்தாய் அன்றோ?அது போதும் அகமகிழ்வேன்விதி மோதும் போதும்விட்டு வைத்த கருணை என்பேன்.மாதவளின் மனம் கொதித்துஇகழ் மலராய்ச் சிந்தியதும்ஒரு புன்னகையே என்றாலும்போதும் இப்பிறவிக்கு;பெரிதாக எதற்கும் எனக்காசையிலை;பெண் பெருமாள் இருக்கின்றாள்என்ற ஒன்றே இவ்வுலகம் பிழைத்தது;நான் பிழைத்தேன்;நயந்து எனைக் கானுக்கு அனுப்பியஎந்தையும் பிழைத்தனன்;சொல் என்னதான் சொன்னாள்?கண்டு வந்து சொல்லநீ போனாயா?மீண்டு வந்து கண்குளத்தில்ஆழ்ந்துவிட வந்தாயா?பிரிந்தவள் வாட்டுகின்ற பெருவித்தைசொல்லாமல் நீர்வார்ந்து எனை நலியஅவளிடமே கல்வி பயின்று வந்தாயா?துவளிடத்தில் தானே துயர் வாட்டும்;தனியானேன் பாவி;என்னுயிரின் வேரில் அவள் சொல் பெய்துஉன்னருளைக் காட்டஉவப்பில்லை உனக்கு போலும்.அன்று அன்று எம் அண்ணால்!அவள் சொன்னாளா?அவள்தானா சொன்னாள்?ஆம் அவள் தான் சொல்லியிருக்க வேண்டும்;இங்கெழுந்த கேள்வியெல்லாம்அங்கும் அவள் எழுப்பக் கண்டேன்;உள் குலைந்து உன்மத்தம் ஆனேன்;விள்ளும் வகையறியேன்;வாயுலர்ந்து வறியன் ஆனேன்;இங்குயிர்க்கும் உடலுக்குஅங்கு குமையும் ஆவிஅங்குயிர்க்கும் மேனிக்குஇங்கு உள் நிலவக் கண்டேன்;அங்குன்னைக் கண்டேன்,ஈண்டவளைக் காணா நின்றேன்;என் சொல்வேன் எம்மான் இதற்கே,என்னுள்ளியிராய் இருவீரும் நிற்கக் கண்டே?
79)பரிதியின் பரிவுஆழ நெடுங்கடல் பழகிய மீன்அலை எத்தியடித்திட கரைமீதுவாழத் துடித்திட்ட காட்சியினைவேர்த்த உளத்துடன் பார்த்திருந்தான்மேலுயர்ந் திட்டவிண் நடுப்பகலோன்வெள்ளி துடித்திட்ட மீனொளியில்மாலை அடைந்தனன் மனமயங்கிஅயர்ந்து விழுந்தனன் மைவரையில்காலை தொடங்கி தான் செய்தசெயல்கடமைதான் என்றுதான் கொண்டாலும்ஆலைவாய்க் கரும்பெனத் துடித்தவுயிர்வாழ்க்கையின் வேட்கையில் குழைந்தவனாய்வடிவைக் களைந்தொரு குளிர்நிலவாய்வான்வயல் கான்கடல் வரப்பெங்கும்படிந்து பரப்பினன் பாலமுதைப் பாரில்பதைக்கும் உயிர்க்குலம் தழைத்திடவே.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
80)எங்கே போகிறாய்?ஊர்ந்துசெலும் சிற்றெரும்பே!எங்கே போகிறாய்?ஊருகின்ற காலறியும்கால்விரையும் மண்ணறியும்மண்ணில்வரும் மணமறியும்நானறிவேனா?நரனே!நானறிவேனா?ஆழ்கடலில் திமிங்கிலமே!அவசரத்தில் அங்காத்திட்டவாய்மூடாமல் விரைவதென்ன?எங்கே போகிறாய்?ஆரய்யா கேட்கிறது?பக்கவாட்டில் திரும்புதற்குபக்குவமில்லை இப்போதுபரவாயில்லை வாருமிங்கே.வானமழை தான்பொழிந்துவிரிஉலகம் தான் நனைந்துவிரிந்து மண்ணில்புகுந்த தண்ணீர்எங்கே போகுது?மீதியெலாம் எங்களுக்குக்குடமுழுக்கு ஆனபின்னர்கூடியெல்லாம் ஒன்றாகிஎங்கே போகுது?கதிரவனின் ஓரக்கண்ணில்காதலாகுது.புதிர் அவனின் பகலினிலேஆவியானதும்கதிர்க்கரத்தைப் பற்றியெல்லாம்எங்கே போகுது?பறந்துசெலும் பறவையரே!எங்கே போகிறீர்?பருந்து போகும்பச்சைக்கிளி தான் போகும்பக்குவமாய்ப் புறா போகும்பரக்காவட்டி காக்கா போகும்பரபரத்த குருவி போகும்பார்மீதெங்கள் நிழல் போகும்உணவுக்கான நேரம் போகும்ஒரு நிமிஷம் தேடிவிட்டுதிரும்பிவந்தால் பொழுதுபோகும்.ஒற்றையடி ஓரத்தில்ஓரால நிழலமர்ந்துஒரு நால்வர் நடுவமர்ந்துஒன்றும் பேசாதீர்ஒரு நொடியில் திரும்பிடுவோம்உம்ம கேள்வி எங்க போகும்?என்றந்தப் புள்ளும்எதிர்வான் முட்டில் எங்கோஇரை தேடிச் சென்றதுவால்.ஆல நிழலமர்ந்துஆலின் இலை கிடந்துதுயிலும் சுக மாலாகித்துஞ்சாத கண்ணிமையில்பயிலும் பகற்கனவில்பள்ளி கொண்டேன்பல்லூழிப் பாழின்பள்ளியறைக் கட்டிலிலே.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2011/6/23 Innamburan Innamburan <innam...@gmail.com>
அது பெண்பால் எரும்பாகவும் இருக்கலாம், மென்மையாக.
நன்றி, வணக்கம்.இன்னம்பூரான்
இப்படிச் சொல்லுமே!அது இடையின எரும்புவல்லினம் சேரா
83)நாம் ஏன் பொய் சொல்லுகிறோம்?நல்லதை நாம் விரும்புவதில்லை.கெட்டதை நாம் ரகசியக் காதல்செய்யாமல் இருப்பதில்லை.ஆனால் நன்மையின் கட்சி என்று கூசாமல்...தீமையோடு போய்ச் சேர்ந்துநன்மையின் கௌரதையை இழக்க விரும்பாமல்நன்மை என்று முழு மனதாகித்தீமையின் காந்தல் ருசியை விட முடியாமல்இது என்ன சர்வ ஜன ஒப்பந்தப் பொய்?
91)போதிமரம் சிரிக்கிறதுவிட்டகன்ற வக்கணத்தே எட்டுத் திசையெழுந்தஅட்டஹாசத் தொன்றாமிப் பா.***
2011/10/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> 95)
> ஆதி உலகிடை ஆர்ந்தெழுந்த தீ
> ஆதவர்க்கிடைக் காயந்தழன்ற தீ
> கூதிர்கம்பனம் போக்கவந்த தீ
> கோதிலாவகை ஆக்க வந்த தீ
> நாதியுற்றிட முன்னடந்த தீ
> நியதியுற்றிடப் பின்சுடர்ந்த தீ
> வேதியல்விதி விரிவடைந்த தீ
> ஓதுவாய்மையின் உள்ளமர்ந்த தீ
> தீதிலாவகைத் திறலெழுந்த தீ
> தாதுலாவகைத் தடையழித்த தீ
> காதுலாக்கயல் விழியுமிழ்ந்த தீ
> போதுலாக்கதிர் புலர்ந்துவந்த தீ
> மீதுலாம்அலை குழைந்துவந்த தீ
> வாதுலாம்நெறி விளங்கவந்த தீ
> மாதுலாம்சடை ஆடவந்த தீ
> மோதுமைம்புலன் சாம்பரான தீ
> மீதுறாவகை மனமடங்கு தீ
> பேதுறாவகைப் புலன்விளங்கு தீ
> சேதமைத்துசெல் சரம்துரந்த தீ
> சூதமைத்தபுன் கூட்டழித்த தீ
> ஊதுகின்றதோர் குழல்படர்ந்த தீ
> ஓதுகின்றதோர் மெய்யடர்ந்த தீ
> மாதமர்ந்ததோர் மலர்பழித்த தீ
> ஊதைக்காற்றினில் உள்குமைந்த தீ
> பேதைக்கோவியர் பிரிவடர்ந்த தீ
> தீதிலாநெறித் தீப ஆவளித் தீ தீ தீ