இன்று தமிழ்ச் சமூகம் பல்வேறுவிதமாக ஆண்டாண்டுகாலமாக போற்றிப் பாதுகாத்த
அடையாளங்களை இழந்தும் புதுவித அடையாளங்களை ஏற்பதும் தான் சரியான பாதை
என்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல நூற்றண்டுகளாகவும் நாம் நம்
அடையாளங்களை இழந்து வந்தாலும் தற்காலத்தில் இவ்விழப்பு பெரிய அளவில்
நடைபெற்று வருகிறது.
தமிழாக்கம் செய்த பிற மொழிச் சொற்களின் மூலப்பொருள் தேடி அதையே, முடிந்த
அளவிற்கு, அம்மொழியில் குறிப்பிடும்படியே, வெளிப்படுத்தும் நிலைமை
வந்திருக்கிறது. சேகரன், சேகர் என்றாகி இப்பொழுது ஷேக்கர் என்று
அறிவுடையோர் என்று அறியப்படுபவர்களால் அழைக்கப்படுகிறது. பல சொற்கள்
சாந்தி-ஷாந்த்தி, வசந்தி-வசந்த்தி, சந்திரன்-ச்சந்திரன், அசோகன் -அசோக்,
என்றாகி கணேசன்-gaணேசன்-gaணேஷ், தமயந்தி-dhaமயந்தி-dhaமயந்த்தி என்று
மாற்றமடைந்து வருகிறது. இவை போன்ற சொற்களை உச்சரிக்கத் தெரிந்தும்
அவர்தம் மொழியால் அம்மக்களாலே எழுதமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.
பாவம்-baaவம், பால்-baaல், பாஸ்- baaஸ், என்ற நாள்தோறும் பயன்படும்
சொற்களின் வேறுபாடுகளை எழுத்தால் தெளிவுறுத்த முடியாமல் இருக்கின்றோம்.
கீதா, கோபி, பாரதி (Keedhaa, kobi, paaradhi) என்பவை இன்று Geetha,
Gopi, Bharathi என்று உச்சரிக்கப்படுகின்றன. சங்கீதம், சாந்தம்,
அசோகவனம் என்பவை சந்கீத்தம், சாந்த்தம் அசோக்கவனம் என்று முதன்முதலில்
நம் சமூகத்தில் அறிமுகப்பட்டிருந்தால் வன்மையானவையாக கருதப்பட்டு
அடையாளம் காணப்படாமலேயே நம்மைவிட்டு போயிருக்கும். இன்று நாமே இவற்றை
மாற்றி உச்சரிக்க முயல்கிறோம்.
உலகமயமாக்கல்: கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பது கொணர்ந்திங்கு
கொட்டப்படுகிறதாகியுள்ளது. இதில் நல்லவை பலவும் உள. தயாரித்த பொருட்கள்,
விதவிதமான நுணுக்கமான சொற்கள், கலை என யாவும் தமிழருக்கு என்றாகாமல்,
தமிழ்ப்படுத்தப்படாமல் திணிக்கப்படுகிறது. மறுப்பேதும் இல்லாமல்
ஏற்றுக்கொள்ளும் நிலையில் சமூகம் இருக்கிறது.
விளைவு, உச்சரிக்கத் தெரியாத நிலையிலும் பிறமொழிச்சொற்களை அம்மொழி பேசும்
மக்களின் பேச்சு முறையிலேயே பேச முயல்கிறோம். firstu, flightu, faastu,
frontu, என்று faகரம் அறிமுகமானது. straight, bright, prepaid என்று
இலக்கண வரைமுறைகளை மீறி உச்சரிக்க கற்றுக்கொண்டோம். கண்டோன்மென்ட்
என்பதில் ணகரம் அடுத்துவரும் டகரம் மெலிந்து வரும் என்ற இலக்கண விதியை
மாற்றி ணகரம் அடுத்த டகரத்தை வல் எழுத்தாக உச்சரிக்கின்றோம்.
தமிழ் எழுத்துக்கள்: தூய தமிழில் 247 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன.
தொல்காப்பியம் வகுத்த நெறிமுறைகளை தவறாத வரையில் 247 எழுத்துக்கள்
நிறைவைத் தந்தன. ஆனால், அவ்விதிகளைத் தளர்த்தத் தொடங்கியதால், ஸ, ஜ, ஷ,
ஹ என்ற சொற்களை ஏற்றோம். அதனால் 299 எழுத்துக்கள் என்றானது. இப்பொழுது
தமிழக அரசு ksha மற்றும் ssa என்பனவற்றிக்கு இரு எழுத்துக்களையும் அதனால்
24 உயிர்மெய் எழுத்துக்களையும் தமிழுடன் இணைத்துள்ளது. இன்று தமிழக
அரசின் ஆணையின்படி தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 325.
இன்று மேலும் ஒரு ஒலி பயன்பாட்டில் உள்ளது. துரித உணவகம் என்பதை விட
fast food என்றே எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் உள்ளதை உச்சரிக்கத்
தெரிந்தும் தமிழ் எழுத்துக்களால் எழுத முடியாததால் ஃபகரத்தை
உருவாக்கினர். விளைவாக, உச்சரிக்கும்படியே ஃபாஸ்ட் ஃபூட் (ஃபூடு) என்று
எழுத முடிகிறது. ஆக, 1 +12 என்று 13 எழுத்துக்களும், சேர்ந்து தமிழின்
பயன்பாட்டில், அட்டவணை படுத்தினால், 338 எழுத்துகள் உள்ளன. கூடுதலாக
இத்தனை எழுத்துக்கள் சேர்க்கப்பட்டும் இன்றைய தேவைகளை தமிழில் எழுதி
இயம்ப முடியுமா?
சோனி தொ.கா. பெட்டியின் புது வடிவத்தின் பெயர் - பிரவியா அல்லது ப்ரவியா
என்பதை சரியாக உச்சரிக்க (Bravia) என ஆங்கிலத்தில் அருகே எழுத
வேண்டியிருக்கிறது. . ஸ்டார் மூவிஸில் வந்த படத்தின் பெயர் டீப் ப்ளூ
சீ. தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவும் இல்லை ஒழுங்காக உச்சரிக்கவும்
முடியவுமில்லை. .ஒரு கடையின் பெயர் பிக் பாய். இதை Big Boy, Big Paai,
Bik Boy, Bik Paai, Pig Boy, Pig Paai, Pik Boy, Pig Paai என்ற
குழப்பத்துடன் படித்து சரியான ஒன்றை கண்டறிய வேண்டிய நிலை இந்திய
மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இதுவே big pot
என்றிருந்தால் 16 விதமான சொற்களில் இருந்து சரியானதை கண்டடுக்க
வேண்டும்.
இதுபோல பல சொற்களும் தொடர்களும் மொழிமாற்றம் இன்றி வருகின்றன.
இச்சிக்கல்களை தமிழ் வழியே எப்படி தீர்ப்பது என்று எண்ணாமல் அந்நேரத்தில்
தனக்கு ஆங்கிலம் போதும் என்ற எண்ணம் தமிழறிஞர்களுக்கு வந்ததால்
இச்சிக்கல் இன்றுவரை அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது.
இந்நிலையில், 1) 247 எழுத்துக்களை மட்டுமல்லாமல் 338 எழுத்துக்களைக்
கொண்டும் (மற்ற இந்திய மொழிகளில் 500 ம் மேற்பட்ட எழுத்துக்கள்
இருக்கும்போது) அல்லது பெரும்பாலான அறிவியல் மற்றும் பிறமொழிச் சொற்களை
எழுத முடியாது என்பது தெளிவு. 2) தொல்காப்பிய இலக்கண அடிப்படையில் தமிழை
இன்றைய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. 3) உலக மொழியாக இன்றும்
நாளையும் இருக்கப்போவது ஆங்கிலம் மட்டுமே. அறிவியல், தொழில் நுட்பம்,
போன்றவை ஆங்கிலம் சார்ந்ததாகவே உள்ளது - இனியும் இருக்கும். 4) தமிழில்
புதியவை எல்லாம் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே உருவாக்கப்பட்டு
வருகிறது - நீளமான காரணப்பெயர்களை மக்கள் விரும்புவதில்லை.
எனவே, தமிழ் இலக்கணத்தை மீறி தமிழ் மட்டுமே தெரிந்தவரும் பிறமொழிச்
சொற்களை பொதுவாகப் பேசி வரும் நிலையில், ப்ரிபெய்டு, ஹுண்டாய், போன்றவை
பழக்கப்பட்ட நிலையில், உலகமயமாக்களில் ஏராளமானவற்றை அறிந்துவரும்
நிலையில், அறிவியல் மற்றும் நுட்பத்தில் தமிழை முன்னிலைப்படுத்தாத
நிலையில், தமிழ் ஆசிரியர்களுள் பலர் தமிழை தெளிவுற கற்றுக் கொடுக்காத
நிலையிலும், பல தமிழாசிரியர்கள் நன்கு கற்றுக்கொடுத்தும் மாணவர் தெளிவாக
உச்சரிக்கத் தெரியாத நிலையிலும், தமிழை முன்னிலைப்படுத்தாத அமைப்புகள்
(அரசு முதல் அமைப்பு வரை) உள்ள நிலையிலும், தமிழை, பிற மொழியை
ஆங்கிலத்தில் எழுதுவது போல் தமிழில் எழுத முடியும் என்ற நிலை
வரவேண்டுமென்பது அவசியமாகிறது.
புதியனவற்றை, தேவைகளை தானே உருவாக்காத சமூகமாக இருக்கும் நிலையில்,
ஆங்கிலமே என்றும் உயர்ந்திருக்கும் என்ற நிலையில் தமிழர் பிறவற்றை, பிற
செயல்களை, பிற இடங்களை, தெளிவுடன் எழுத, எழுதியதை குழப்பமின்றி படிக்க,
இணையவழி மொழிபெயர்ப்பு (இருவழியிலும்) போன்றவற்றில் சீருடன் செயல்பட
தமிழில் சில எழுத்துக்களை சேர்ப்பது அவசியம்.
18 மெய் எழுத்துக்களுடன் ஸகர, ஜகர, ஷகர, ஹகர ஃபகரமும் ஏற்கனவே
பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும், (ங்)க, (ண்)ட, (ந்)த, (ம்)ப
என்பவைகளுக்கான மெயஎழுத்துக்களைச் சேர்த்தால் 27 மெய்யெழுத்துக்களுடன்
தெளிவாகப் பல தமிழல்லாத, தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்படாத, சொற்களை
எழுத, படிக்க முடியும்.
தமிழுக்குரிய ஒலிகள்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ - க, ச, ட, த, ப, ற - ங், ஞ ந, ண,
ம, ன - ய, ர, ல, வ, ழ, ள
இதில் க, ச, ட, த, ப என்ற எழுத்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகளைக்
கொண்டு ஒலிக்கின்றன.
(க்)க –(ங்)க
(ச்)ச - ச –(ஞ்)சு (ஜு)
(ட்)ட – (ண்)ட
(த்)த – (ந்)த
(ப்)ப – (ம்)ப
மேலும் தமிழில் பொதுவாக மூன்று பிறமொழி ஒலிகள் பயனில் உள்ளன.
ஹ
ஷ
ஃப
புதிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் உருவத்தோடு இருப்போதோடல்லாமல்,
ஸகர, ஜகர, ஷகர, ஹகர ஃபகர எழுத்துக்களையும் தமிழ் வழிப்படுத்தலாம்.
அவ்வாறு இருந்தால் அனைவராலும் எளிதில் படிக்க முடியுமென்பதோடு நம்மொழி
ஒரு ஒழுங்கமைப்புடனும் இருக்கும். மாறாக, டியாக்ரிடிக் குறியீடுகளைப்
பயன்படுத்தினால் கீழ் வரும்படி எழுதப்பட்டு தமிழ் மிக விரைவில் பயனற்று
போகும். எ.கா ப்2ரவியா, டீ2ப்1 ப்2ளூ சீ2. பி2க்2 பா2ய்.
தமிழ்ப் பேராசிரியர்கள் முதல் அறிவியலார்கள் வரை இந்த சிக்கல்களை தமிழில்
தீர்வாக்காமல் அத்தேவைகளை தாங்கள் சந்திக்கும் போது அந்நேரங்களில்
ஆங்கிலத்தை தயக்கமின்றி பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் தெரியாதவர்க்கு,
தமிழை பயன்படுத்த விரும்புவோருக்கு தீர்வுகள் முழுமையாக இல்லாத நிலையே
காணப்படுகிறது. ஆங்கிலம் தெரியாத பலகோடி மக்கள் வாழும் தமிழகத்தில்
ஆங்கிலமொழியின், அவ்வெழுத்துக்களின் தாக்கம் இல்லாமலும் தீர்வு காணுதல்
அவசியமாகிறது.
ஆங்கிலத்தில் தமிழ் எழுதப்படும் நிலை
தகர, டகர பயன்பாடு சமஸ்கிருதத்தில் வேறுபட்டு பார்க்கப்படவில்லை
என்பதால் Bharat - Bharath, - Maruti - Maruthi, Anandi- Anandhi -
அவர்களுக்கு வேறு பல எழுத்துக்கள் இருந்ததால், அவற்றை எழுத ஆங்கிலத்தில்
தேவையான எழுத்துக்கள் இல்லை என்பதால் தகரமும் டகரமும், ஆங்கிலத்தில்
எழுதும்போது, ஒன்றாக்கப்பட்டன. தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் தகர, டகர
வேறுபாட்டுடன் எழுத முடியுமென்றாலும் ஒன்றாகவே எழுதப்பட்டன - Tanjore,
Pudukkottai, Dindigul, Gingi, என்று தஞ்சாவூரும், புதுக்கோட்டையும்,
திண்டுக்கல்லும்,செஞ்சியும் சிதைக்கப்பட்டன.
விளைவு. அடையாளம் இழந்தோம். தனிநபரின், இடங்களின், ஊர்களின் பொருட்களின்
பெயர்கள் திரிக்கப்பட்டன. மேலும் தமிழர் என்ற அடையாளத்தை விட மற்ற
அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டன. சமயம், இசை, அரசு என்பவற்றிலிருந்து
தமிழ் விலக்கிவைக்கப்பட்டது. இன்று அரசு முதல் அமைப்பினர் வரை என பல
இடங்களில். ஆங்கிலத்திலிருந்து தமிழ் படிக்கப்படுகிறது.
இணையவழி மொழிபெயர்ப்பின் அவசியமும் தமிழில் நடைமுறைப்படுத்த
செய்யவேண்டியனவும்
இன்று இணையம் வாயிலாக உலகம் தொடர்புகளால் பின்னிப்பிணைந்திருக்கிறது.
இத்தொடர்புகள் உறவு, எல்லை மற்றும் மொழி என்பவனவற்றை தாண்டி
நடைபெறுகின்றன. இந்த தொடர்புகள் நாளுக்கு நாள் பன்மடங்கு பெருகும்
என்பது தெளிவு. இணையம் மக்களை எழுத்து, ஒலி மற்றும் காட்சி என பல்வேறு
விதமாகத் தொடர்புகொள்ளச் செய்கிறது. எழுத்து மூலம் தொடர்பு கொள்ளுதல் மிக
எளிமையானதுடன் பலராலும் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இணையத்தின்
வேகம் அதிகரிக்கவே ஒலி மற்றும் காட்சிகளின் மூலம் தொடர்பு கொள்ளுதல்
சாத்தியமாகிறது. ஆனால் பிறமொழி பேசுவோரிடம் ஒலியின் மூலம் தொடர்பு
கொள்ளுவது இயலாததாகிறது. காட்சிகளின் மூலம் அதாவது முகபாவனை மற்றும்
உடல் அசைவுகளை மட்டுமே கொண்டு ஓரளவிற்கே நாம் பரிமாற்றம் செய்யமுடியம்.
ஒலியும் கூடவே இணையும்போது பரிமாற்றம் சிறப்புறுகிறது. ஆனால் தொடர்பு
கொள்ளுபவர் வேறொரு மொழி பேசுபவராக இருக்கும்பொழுது ஒன்று அவருக்கு
தெரிந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ஒலி எழுத்தாக
மாற்றப்பட்டு, மற்றொரு மொழியின் எழுத்துக்களாக மொழிமாற்றம் அடைந்து பிறகு
அந்த மொழியில் ஒலிக்கவேண்டும். எனவே எழுத்துக்களே மொழிமாற்றத்திற்கு
அடிப்படையாக அமைகிறது.
இணையவழி மொழிமாற்றம் என்பது ஆங்கிலத்தின் வாயிலாகவே நடைபெறுகிறது.
அதாவது சீன மொழியிலிருந்து அரபு மொழிக்கு மாற்றவேண்டுமானால், சீன மொழி
முதலில் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டு அதன் பிறகு அரபு மொழியாகிறது. இதே
நிலையிலேயே அரபு மொழி சீனத்திற்கு மாறும்போது ஆங்கிலம் வாயிலாக
நடக்கிறது. ஒருவேளை, ஒருசில சீன மொழிச் வார்த்தைகள் அரபு மொழியில்
இல்லையென்றால் அச்சீன வார்த்தைகள் அரபு மொழி எழுத்துக்களுக்கிடையில்
ஆங்கில எழுத்துக்களில் எழுதப்படும். எனவே இணையவழி மொழிமாற்றத்தில்
ஏற்கும் மொழிளில் தகுந்த சொற்கள் இல்லாத நிலையில் அச்சொற்கள்
ஆங்கிலத்தில் அமையும்.
முடிவுரை
தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம். எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
(ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை தமிழ்
ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
எழுத்துரு செய்தல் வேண்டும். தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
மென்பொருள் மூலம் செய்விக்கலாம். தமிழக அரசு, உத்தமம் போன்றவை திணித்த,
பொதுவாக ஒலிக்கவும் எழுதவும் பயன்படுத்தப்படாத ஒலிகளுக்கான எழுத்துக்களை
நீக்க வேண்டும்.
இது அறிவியல் மற்றும் பல நுட்பங்களை தமிழ் வழியே கற்க பெரிதும்
பயன்படும். ஆங்கில எழுத்துக்களை தனித்தனியே படிக்கத்தெரிந்தும் ஆங்கில
வார்த்தைகளை படிக்க முடியாதோர் மட்டுமல்லாது ஆங்கிலத்தை தமிழில்
எழுதிப்படிப்போருக்கும் பெரிதும் பயன்படும். பல்வேறு மொழிகளை
ஆங்கிலத்தின் துணையின்றி கற்க முடியும்.
இவ்வாறு செய்தால் எங்கும், எதிலும், எவரும் எளிதான முறையில் பலவற்றை
தமிழ் மூலம் கற்று, கண்டு, செய்து, அறிந்து செயல்படுத்தலாம்.
ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
த. ஞான பாரதி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை
முடிவுரை
தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம். எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
(ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை தமிழ்
ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
எழுத்துரு செய்தல் வேண்டும்.
தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
மென்பொருள் மூலம் செய்விக்கலாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
தமிழல்லாதவரும் தமிழை பிடிக்காதவரும் கடந்த 700 ஆண்டுகளாக, சில
பத்தாண்டுகளைத் தவிர, ஆட்சியில் இருந்தனர், இருக்கின்றனர். காலங்கள்
மாறிவிட்டன. மீளமுடியா நிலைக்கு உலகின் பழமொழிகளும் வந்துவிட்டன. உலகை
ஆளும் என்றிருந்த மொழிகள் இன்று அடையாளங்களைத்
தொலைத்துக்கொண்டிருக்கின்றன.
தமிழ் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அல்லது தமிழ் ஆர்வலர் தலைமையில்
இருந்தால் மட்டுமே தமிழ் வாழும் என்ற காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கல்
என்பதை பிடித்தோ பிடிக்காமலோ ஏற்றுக்கொண்டு விட்டோம்.
முள்ளிவாய்க்காலில் மக்களை அடைத்து வைத்தது மூடத்தனம். இரண்டு செயல்கள்
நடந்தன. எதிரியால் எளிதாக மக்களைக் கொல்ல/நசுக்க முடிந்தது -
கட்டுப்பாட்டை மீறி வந்தவர்களே பிழைத்தார்கள். நான், மலையாளத்தை நம்
கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
கருதுகிறேன்.
தகவமைத்துக்கொள்ளவில்லை எனில் என்னவாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
உலகை நமதாக்க வேண்டும் => மேலெழுந்து நிகராக வரவேண்டும் => ஏற்றுக்கொள்ள
வேண்டும் => அழிந்துபோக வேண்டும்
என்பதே நியதி.
பாரதி
On Jan 8, 12:25 am, Govindasamy Thirunavukkarasu
<gthirunavukkar...@gmail.com> wrote:
> அன்புடையீர்,
>
> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>
> > ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
> > த. ஞான பாரதி
> > மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை
>
> > முடிவுரை
> > தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
> > நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
> > நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம். எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
> > (ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை தமிழ்
> > ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
> > தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
> > எழுத்துரு செய்தல் வேண்டும்.
>
> *சமற்கிருத சொற்களை தமிழில் எழுத வந்தது கிரந்தம்.தங்களின் வாதம் குறிப்பாக
> ஆங்கில சொற்கலை தமிழ் ஓடு உருவொத்த புதியஎழுத்துக்களைக்கொண்டு எழுத
> உதவும்.தமிழை வளப்படுத்டுவது என்பது தமிழின் வேர்சொல்கொண்டு காரணப்பெயர்களாக
> புது கலைச்சொற்கலைக்காண்பதிலும் ,தமிழ்ச்சொற்கலிஅ புழக்கத்தில் கொண்டு
> வருவதையும் பிற மொழிச்சொற்கலிஅ தவிர்ப்பதையும் ஒரு இயக்கமாக வளர்ப்பதிலும்தான்
> இருக்க முடியும்.*
>
> > தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
> > செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
> > தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
> > செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
> > மென்பொருள் மூலம் செய்விக்கலாம்.
>
> *அன்றாடப்புழகத்திற்கும் அறிவியல் கருத்துக்களை எளிதாக பரிமாறிக்கொள்ள
> வசதியாகவும் தமிழ் வளராவிட்டாலும் தமிழின் உயிர் நீடிக்காது.செந்தமிழுக்கு
> என்று ஒரு நியதி பிற பயன்பாட்டுக்கு ஒரு நியதி என்பதெல்லாம் எதற்கு. மென்பொருள்
> பொருட்டன்று.
>
> அன்புடன்*
> *அரசு*
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த எழுத்தல்லவா? என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!
On Jan 8, 2:34 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த எழுத்தல்லவா?
> என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!...
>
கவிஞரே,
ஆய்த எழுத்து பழையது. ஆனால் ஒரு எழுத்தைத் தொடர்ந்துதான் வரும்.
ஃபரூக், ஃபாத்திமா, என்று எழுத புதிதாய் விதி செய்தோம்
- மிக அண்மைக் காலத்தில்.
நா. கணேசன்
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
//பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?//
/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ? அல்லது இடாடா தொழிற்சாலையா ? அல்லது அடாடா தொழிற்சாலையா ?
பெயர்ச் சொல் : ரூபாய் - உரூபாயா அல்லது இரூபாயா ? அல்லது அரூபாயா ?
பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ? அல்லது இரம்பாவா ?அல்லது அரம்பாவா ?
பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?ஜெயபாரதன்.++++++++++++++++++
8 ஜனவரி, 2011 6:07 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ? அல்லது இடாடா தொழிற்சாலையா ? அல்லது அடாடா தொழிற்சாலையா ?பெயர்ச் சொல் : ரூபாய் - உரூபாயா அல்லது இரூபாயா ? அல்லது அரூபாயா ?பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ? அல்லது இரம்பாவா ?அல்லது அரம்பாவா ?பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
--ராஜேந்திரன்இதை ஆங்கிலத்தில் எழுதி காட்டுங்க ஐயாஇல்லை தமிழ் என்பதையாவது?
வேந்தன் அரசுஎம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
On Jan 8, 8:19 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *வேந்தரே*
> **
> *அப்பன் வைத்த மாடசாமி என்னும் பெயரை நெடுஞ்சுழியன் என்று மாற்றி வைத்துக்
> கொண்டு தமிழை வளர்ப்பதாயும் பாதுகாப்பதாகவும் நாடகம் ஆடுகிறார். *
> **
> *பெரியார் ராமசாமி என்றுதான் தன்னைக் கூறிக் கொண்டார்.*
> **
> *தமிழில் பலருக்கு நான்கு வரிகள் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.
> *
> **
> *ஜெயபாரதன்.*
>
ஜெயபாரதன் ஐயா,
நான் இன்று படித்த வலையிடுகை. திமுக ஆட்சி தமிழ்க்
கல்வியைக் காமெடி ஆக்கியது பற்றியது.
http://moonramsuzhi.blogspot.com/2011/01/blog-post_08.html
நா. கணேசன்
8 ஜனவரி, 2011 11:02 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
உங்கள் வினா உங்களுக்கு முதலில் புரிகிறதா ? எனக்குப் புரிய வில்லை தமிழ் வேந்தரே !அட தேவரேஎன் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்அல்லது தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும்.
////தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும். ///வேந்தரே,இப்படிச் சொல்லி நீங்கள் மாரைத் தட்டிக் கொள்வது தமிழுக்குக் கீர்த்தியா இகழ்ச்சியா ?
மொழி என்பது உரு, ஓசை, உச்சரிப்பு, அர்த்தம்.
ஜெயபாரதன்.++++++++++++++++++++2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
8 ஜனவரி, 2011 11:02 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
உங்கள் வினா உங்களுக்கு முதலில் புரிகிறதா ? எனக்குப் புரிய வில்லை தமிழ் வேந்தரே !அட தேவரேஎன் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்அல்லது தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவீர்கள்தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும்.--
வேந்தன் அரசுஎம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
ரஷ்ய மேதை டால்ஸ்டாயை எப்படிக் கோமாளித்தனமாக எழுதுவது :உருசிய மேதை உடால்சுடாய், அல்லதுஇரசிய மேதை இடால்சுடாய்.
> தமிழில் புதிய எழுத்துகள் எதுவும் நுழைப்பது அறிவுடைமை
> ஆகாது.
உலகில் பல மொழிகள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. மேன்மையுடன்
வாழவேண்டுமெனில் மாற்றம் அவசிமாகிறது.
> டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> எந்தக் குறையும் இல்லை.
யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?
> பிபிசி தொலைக்காட்சிகளைப்
> பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே
> ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.
அது அம்மொழியை நன்கு புரியாதவருக்காக செய்யும் செயல்.
> டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
> ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
> (taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
> என்ன தவறு?
யாரும் உச்சரிப்பதில்லையே? (பகரமும் வல்லொலியாக வேண்டும் அல்லவா?)
உச்சரிப்பதை எழுத வேண்டாமா?
> எத்தனியோ மொழிகளில் எத்தனையோ
> சொற்கள் இப்படி மாறி ஒலிக்கின்றனவே?
தமிழர் இப்பொழுது மூலத்த்தை தேடிச்சென்றுகொண்டு இருக்கின்றனரே! எப்படி
கேட்கிறாரோ அப்படியே ஒலிக்கவும் முற்படுகிறார் என்பதை தாஙள் அறியிவீர்.
> அப்படி அந்த மெல்லொலி டகரம் முகனை என்றால்
> இடால்ஃவின் எனலாம். அலல்து எந்த புதிய
> எழுத்தும் இல்லாமல்" டா'ல்ஃவின்" எனலாம்.
தேவை இருப்பதை "டா'ல்ஃவின்" என்பது கூட உணர்த்துகின்றதல்லவா!
> இதே ஐபீசுக்கசை இத்தாலிய
> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல
> மொழியாகிய கிரேக்கத்தில் ἱϐίσκος என்றும் வெவ்வேறு
> விதமாகக் கூறுகின்றனர்.
நான் குறிப்பிட்டது அறிவியற்சொல்- உள்ளூர் பெயரல்ல- அது உலகம் முழுவதும்
ஒன்றே.
> அப்படியே முதல் ஒலி
> காற்றொலி ககரமாக வர வேண்டும் எனில் ஃகைபிசுக்கசு
> எனலாம். இதில் கடைசியில் வரும் சு குற்றியலுகரம்.
> இடையே வருவதையும் சுருக்கியே ஒலிப்போம்.
புதிய இலக்கணம் ஒன்றையும் வகுக்கவேண்டுமென்கிறீர்களா?
> தமிழில் எந்த அறிவியல், பொறியியல், மருத்துவ, மென்கலன்,
> கணினியியல், மொழியியல், குமுக அறிவியல் போன்ற
> எந்தத் துறையானாலும், எந்தப் புதிய எழுத்தும் இல்லாமல்
> 100% தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதி
> அலச முடியும்.
ஐயா, தமிழ் உலகை ஆளும் மொழியென்றால் நானும் இதையே வலியுறுத்துவேன். ஆனால்
இல்லையே!!!! உற்பத்தி செய்விக்கும் சமூகமாக இருந்தாலும் சமாளிக்கலாம்.
அவ்வாறும் இல்லை. ஏற்கும் சமூகம் என்று மட்டுமல்லாமல் தன் தேவையை
வலியுறுத்தாத சமூகமாகவும் இருக்கிறோம். நோக்கியா முதல் எத்தனையோ
நிறுவனங்கள் தமிழ் மண்ணில் நிறுவப்பட்டாலும் நம் அடையாளத்தையும்
இட்டுவையுங்கள் என்றுகூட கேட்காமல் இருக்கிறோம்.
> "சரியான" ஒலி என்று
> அறிவியல் சொற்களுக்கு ஏதும் இல்லை.
இது முழுவதும் ஏற்கக்கூடியாதாக எனக்குப்படவில்லை. da கரத்தை ta கரம்
என்றோ, ba கரத்தை pa கரம் என்றோ, ga கரத்தை ka கரம் என்றோ, dha கரத்தை
tha கரம் என்றோ, ஸகர, ஜகர, ஷகரத்தை ச்சகரம் என்றுதான் தொடங்குவேன்
என்றால் அதை தமிழரே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!!!!!!
> அப்புறம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தக்
> கிரந்தம் நம்மிடையே 1000 ஆண்டுகள் இருந்தன அப்படி
> இப்படி என்பார்கள். உண்மைதான் யார் யாரோ என்ன என்னமோ
> எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை
> எல்லாம் தமிழ் அறிந்தவர்கள், த்மிழை ஆழ அறிந்த
> தமிழ் இலக்கண ஆசிரியர்கல் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.
கிரந்தம் போன்ற தேவை எத்தனை இந்திய மொழிகளுக்கு தேவைப்பட்டன? தமிழுக்கு
மட்டும் தானே. தனித்தமிழ் இயக்கத்தினர் என்றுமே உயர்ந்து இருந்ததாக
எனக்கு தெரியவில்லை. தனித்தே இருந்திருந்தாலும் சமூகம் சமயம் என்றிருந்த
சமஸ்கிருதத்தை வேண்டுமானால் வென்றிருக்கலாம் ஆனால் அறிவியல், நுட்பம்,
உலகமயமாதல் என்று வந்தபிறகு அடம்பிடிப்பது நல்லதை விளைவிக்குமா?
சற்றே வளைந்திருந்தால் மலையாளம்கூட நம்மை விட்டு பிரிந்திருக்காது.
> இராம.கி ஐயா எடுத்துக்காட்டிய கல்வெட்டுகளில்
> ஒரே சொல்லில் பாதி கிரந்தமாகவும் பாதி தமிழாகவும் என்று
> கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்கள்.
இராமகி ஐயாவும் ஒருங்குறியில் கிரந்தம் இருந்துவிட்டு தொலையட்டும்
(பேசும்போது) என்றுதான் கூறுகிறார்.
நான்கே நான்கு எழுத்துக்கள் தமிழின் தேவைகள் பலவற்றை நிறைவேற்றும்
என்றுதான் நான் கூறிவருகிறேன்.
தமிழக அரசு நுழைத்த க்ஷகரம் SSAகரம் என்ற பயனிலே இல்லாத எழுத்துக்களுக்கு
பதிலாக நாம் இப்பொழுது பொதுவாக பயன்படுத்தும் ஒலிகளுக்கு தனி எழுத்து
கொடுக்க வேண்டும். அதனால் தம்மொழியின் அடையாளங்களையும் இழந்துவரும்
கமூகம் மீண்டெழுந்து வரச்செய்யும்போது உதவும் என்பதே எனது கூற்று.
மாறாக, நாங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த தமிழ் இலக்கண
முறைப்படி மட்டும்தான் எழுதுவேன் என்பவர்கள் ஒரே ஒருநாள் அந்த இலக்கண
வரைமுறைகளை பேச்சிலும் ஒலித்துக்காட்டுங்களேன். வீட்டிலும்
அலுவலகத்திலும், நாட்டிலும் அயல்நாட்டிலும், நண்பர்களிடமும்
பகைவர்களிடமும், உற்றாரோடும் உறவினரோடும் ஒரே ஒரு
நாள்................
அன்புடன்
பாரதி
On Jan 9, 12:48 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல
> நாம் பரம்பரையாக ...
>
> read more »
கனடாவில் டல்ஹௌஸி பல்கலைக் கழகம் உள்ளது. அதைத் தமிழில் உடல்கவ்சி என்று கொலை செய்வோமா ? அல்லது தல்கவ்சி என்று சொல்வோமா ?ஜெயபாரதன்.
பாரதியார் காலம் வரை அதை கடைபிடித்தோம். விடுதலை பெற்றதும் அதை
விட்டுவிட்டோமே !!!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
பேரா. செல்வா,
உலகில் பல மொழிகள் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. மேன்மையுடன்
> தமிழில் புதிய எழுத்துகள் எதுவும் நுழைப்பது அறிவுடைமை
> ஆகாது.
வாழவேண்டுமெனில் மாற்றம் அவசிமாகிறது.
> டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> எந்தக் குறையும் இல்லை.
யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?
அது அம்மொழியை நன்கு புரியாதவருக்காக செய்யும் செயல்.
யாரும் உச்சரிப்பதில்லையே? (பகரமும் வல்லொலியாக வேண்டும் அல்லவா?)
உச்சரிப்பதை எழுத வேண்டாமா?
> எத்தனியோ மொழிகளில் எத்தனையோ
> சொற்கள் இப்படி மாறி ஒலிக்கின்றனவே?
தமிழர் இப்பொழுது மூலத்த்தை தேடிச்சென்றுகொண்டு இருக்கின்றனரே! எப்படி
கேட்கிறாரோ அப்படியே ஒலிக்கவும் முற்படுகிறார் என்பதை தாஙள் அறியிவீர்.
தேவை இருப்பதை "டா'ல்ஃவின்" என்பது கூட உணர்த்துகின்றதல்லவா!
> அப்படி அந்த மெல்லொலி டகரம் முகனை என்றால்
> இடால்ஃவின் எனலாம். அலல்து எந்த புதிய
> எழுத்தும் இல்லாமல்" டா'ல்ஃவின்" எனலாம்.
> இதே ஐபீசுக்கசை இத்தாலிய
> மொழியில் அவர்கள் L'*Ibisco *என்றும், அச்சொல் வந்த மூல
> மொழியாகிய கிரேக்கத்தில் ἱϐίσκος என்றும் வெவ்வேறு
> விதமாகக் கூறுகின்றனர்.
நான் குறிப்பிட்டது அறிவியற்சொல்- உள்ளூர் பெயரல்ல- அது உலகம் முழுவதும்
ஒன்றே.
புதிய இலக்கணம் ஒன்றையும் வகுக்கவேண்டுமென்கிறீர்களா?
> அப்படியே முதல் ஒலி
> காற்றொலி ககரமாக வர வேண்டும் எனில் ஃகைபிசுக்கசு
> எனலாம். இதில் கடைசியில் வரும் சு குற்றியலுகரம்.
> இடையே வருவதையும் சுருக்கியே ஒலிப்போம்.
> தமிழில் எந்த அறிவியல், பொறியியல், மருத்துவ, மென்கலன்,
> கணினியியல், மொழியியல், குமுக அறிவியல் போன்ற
> எந்தத் துறையானாலும், எந்தப் புதிய எழுத்தும் இல்லாமல்
> 100% தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதி
> அலச முடியும்.
ஐயா, தமிழ் உலகை ஆளும் மொழியென்றால் நானும் இதையே வலியுறுத்துவேன். ஆனால்
இல்லையே!!!! உற்பத்தி செய்விக்கும் சமூகமாக இருந்தாலும் சமாளிக்கலாம்.
அவ்வாறும் இல்லை. ஏற்கும் சமூகம் என்று மட்டுமல்லாமல் தன் தேவையை
வலியுறுத்தாத சமூகமாகவும் இருக்கிறோம். நோக்கியா முதல் எத்தனையோ
நிறுவனங்கள் தமிழ் மண்ணில் நிறுவப்பட்டாலும் நம் அடையாளத்தையும்
இட்டுவையுங்கள் என்றுகூட கேட்காமல் இருக்கிறோம்.
> "சரியான" ஒலி என்று
> அறிவியல் சொற்களுக்கு ஏதும் இல்லை.
இது முழுவதும் ஏற்கக்கூடியாதாக எனக்குப்படவில்லை. da கரத்தை ta கரம்
என்றோ, ba கரத்தை pa கரம் என்றோ, ga கரத்தை ka கரம் என்றோ, dha கரத்தை
tha கரம் என்றோ, ஸகர, ஜகர, ஷகரத்தை ச்சகரம் என்றுதான் தொடங்குவேன்
என்றால் அதை தமிழரே ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!!!!!!
> அப்புறம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தக்
> கிரந்தம் நம்மிடையே 1000 ஆண்டுகள் இருந்தன அப்படி
> இப்படி என்பார்கள். உண்மைதான் யார் யாரோ என்ன என்னமோ
> எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அதனை
> எல்லாம் தமிழ் அறிந்தவர்கள், த்மிழை ஆழ அறிந்த
> தமிழ் இலக்கண ஆசிரியர்கல் ஏன் கணக்கில் கொள்ளவில்லை.
கிரந்தம் போன்ற தேவை எத்தனை இந்திய மொழிகளுக்கு தேவைப்பட்டன? தமிழுக்கு
மட்டும் தானே. தனித்தமிழ் இயக்கத்தினர் என்றுமே உயர்ந்து இருந்ததாக
எனக்கு தெரியவில்லை. தனித்தே இருந்திருந்தாலும் சமூகம் சமயம் என்றிருந்த
சமஸ்கிருதத்தை வேண்டுமானால் வென்றிருக்கலாம் ஆனால் அறிவியல், நுட்பம்,
உலகமயமாதல் என்று வந்தபிறகு அடம்பிடிப்பது நல்லதை விளைவிக்குமா?
சற்றே வளைந்திருந்தால் மலையாளம்கூட நம்மை விட்டு பிரிந்திருக்காது.
> இராம.கி ஐயா எடுத்துக்காட்டிய கல்வெட்டுகளில்இராமகி ஐயாவும் ஒருங்குறியில் கிரந்தம் இருந்துவிட்டு தொலையட்டும்
> ஒரே சொல்லில் பாதி கிரந்தமாகவும் பாதி தமிழாகவும் என்று
> கண்டபடியெல்லாம் எழுதியுள்ளார்கள்.
(பேசும்போது) என்றுதான் கூறுகிறார்.
நான்கே நான்கு எழுத்துக்கள் தமிழின் தேவைகள் பலவற்றை நிறைவேற்றும் என்றுதான் நான் கூறிவருகிறேன்.
தமிழக அரசு நுழைத்த க்ஷகரம் SSAகரம் என்ற பயனிலே இல்லாத எழுத்துக்களுக்குபதிலாக நாம் இப்பொழுது பொதுவாக பயன்படுத்தும் ஒலிகளுக்கு தனி எழுத்து கொடுக்க வேண்டும். அதனால் தம்மொழியின் அடையாளங்களையும் இழந்துவரும்
கமூகம் மீண்டெழுந்து வரச்செய்யும்போது உதவும் என்பதே எனது கூற்று.
மாறாக, நாங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்த தமிழ் இலக்கண
முறைப்படி மட்டும்தான் எழுதுவேன் என்பவர்கள் ஒரே ஒருநாள் அந்த இலக்கண வரைமுறைகளை பேச்சிலும் ஒலித்துக்காட்டுங்களேன்.
வீட்டிலும் அலுவலகத்திலும், நாட்டிலும் அயல்நாட்டிலும், நண்பர்களிடமும்
பகைவர்களிடமும், உற்றாரோடும் உறவினரோடும் ஒரே ஒரு
நாள்................
அன்புடன்
பாரதி
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
9 ஜனவரி, 2011 12:47 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
பக்கத்தில் இருப்பவன் புழுதியைப் பூசிக் கொண்டால் நாமும் பூசிக் கொள்ள வேண்டுமா ?நீங்கள் சிந்தனை சிற்பி நாத்திகர் அல்லவா ?தமிழில் ழகரம் இருப்பதால் உங்கள் தலையில் ஒளிவட்டம் சுழல்கிறதா வேந்தரே !!!ஐயாஉலகின் எந்த மொழியும் மற்ற மொழிகளின் சொற்களை எழுத முடியாது என்ற உண்மையை நீங்க ஏற்க மாட்டாமல் ப்ழுதி, ஒளிவட்டம் என எதைதையோ சொல்லுறீங்கஎன் பெயரை ஆங்கிலத்தில் எழுத முடியாது என ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்ஆங்கிலம் என் முகத்தில் தினமும் துப்புவதை நான் ஏற்க வேண்டும். அவன் முகத்தில் நான் துப்பினால் அது என மேல் தான் புழூதியா?. நல்லா இருக்கு உங்க ஏரணம்இங்லிஸ் மொழியை ஆங்கிலம்னு சொன்னால் வெள்ளையன் நம்மை பீரங்கி வைத்து பிளப்பானா?
ஜெயபாரதன்.+++++++++++++++++
2011/1/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
9 ஜனவரி, 2011 9:45 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
////தமிழ் என்ற சொல்லை உலகின் எம் மொழியிலும் எழுத முடியாது. மலையாளம் அன்றியும். ///வேந்தரே,இப்படிச் சொல்லி நீங்கள் மாரைத் தட்டிக் கொள்வது தமிழுக்குக் கீர்த்தியா இகழ்ச்சியா ?
மீண்டும் உங்களுக்கு நான் சொல்லுவது புரியவில்லைமற்ற மொழிகளில் குறை இருக்கும் போது தமிழை ஏன் கிண்டலிக்கிறீர்கள்?
>பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ? அல்லது இரம்பாவா ?
அல்லது அரம்பாவா ?
>>பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?
மற்ற மொழிகளும் அறுக்கின்றன என்று சொல்லவந்தேன்
--
வேந்தன் அரசுஎம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
வேந்தன் அரசுஎம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
> ஃ பழமையானது என்பது அதன் யாப்பிலக்கணப் பயன்பாட்டில் மட்டுமேயன்றே தனித்த
> சொல்லில் அல்ல என்று நினைக்கிறேன். அதாவது அது என்ற சொல்லை அஃது என்று யாப்பில்
> எழுதி இசைக்குச் சரிகட்டுவார்கள். அஃது என்ற சொல்லில் ஆய்தத்தை
> நீக்கிவிட்டாலும் பொருள் மாறாது. எனவே அது ஒரு எழுத்தே அல்ல.
>
> பிறகு ஏன் ஃ என்ற குறியை எழுத்து எழுத்து என்று கூறிக்கொண்டிருக்கிறோம்?
>
>
அஃகாமையில் உள்ள ஃ நீக்கப்பட்டால் அகாமை என்றாகி பொருள் மாறுபட்டுவிடும்
அஃகி அகன்ற அறிவென்னாம்.... ஃஐ நீக்கமுடியுமா?
>
அன்புடன்
அரசு
> அன்புடன் புகாரி
>
>
>
>
>> On Jan 8, 2:34 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
>> > இந்த ஆய்த எழுத்து தமிழ் எழுத்தா? தமிழில் இசைக்காக உள் நுழைந்த
>> எழுத்தல்லவா?
>> > என்ன... காலத்தால் சற்றே பழமையானது. அவ்வளவுதான்!...
>> >
>>
>> கவிஞரே,
>>
>> ஆய்த எழுத்து பழையது. ஆனால் ஒரு எழுத்தைத் தொடர்ந்துதான் வரும்.
>>
>> ஃபரூக், ஃபாத்திமா, என்று எழுத புதிதாய் விதி செய்தோம்
>> - மிக அண்மைக் காலத்தில்.
>>
>> நா. கணேசன்
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "தமிழ் மன்றம்" group.
>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>> To unsubscribe from this group, send email to
>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>> .
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>
>>
>
>
> --
> [image: image]
> அன்புடன் புகாரி 1-416-500-0972
> http://anbudanbuhari.blogspot.com
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
--
நான், மலையாளத்தை நம்
கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
கருதுகிறேன்.
On Jan 10, 5:15 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>
> > நான், மலையாளத்தை நம்
> > கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
> > கருதுகிறேன்.
>
> வெளிவந்ததால் மலையாளம் தமிழை விட எந்த எந்த வகைகளில் சிறப்பாக வாழ்ந்துவிட்டது
> என்று தயவுசெய்து சொல்லமுடியுமா?
> சொ.வினைதீர்த்தான்.
அன்பு வினைதீர்த்தான்,
மலையாளம் பழந்தமிழ்ச் சொற்களை மிகவும் போற்றிப்
பாதுக்காத்து வரும் ஒரு மொழியாகும். தமிழ் இழந்துவிட்ட
பல சொற்கள் இன்னமும் வாழ்கின்றன கேரளாவில்.
விரிவாக, மலையாளம் நன்கு படித்த தமிழறிஞர்கள்
பலர் எழுதியுள்ளனர். வையாபுரிப்பிள்ளையவர்கள், சிற்பி,
தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவிய வ. ஐ. சுப்ரமணியம் ஐயா
... கட்டுரைகள், நூல்களில் அறியலாகும்.
நா. கணேசன்
On Jan 7, 1:06 pm, ஞானபாரதி <dgbhara...@gmail.com> wrote:
> ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
> த. ஞான பாரதி
> மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை
>
> இன்று தமிழ்ச் சமூகம் பல்வேறுவிதமாக ஆண்டாண்டுகாலமாக போற்றிப் பாதுகாத்த
> அடையாளங்களை இழந்தும் புதுவித அடையாளங்களை ஏற்பதும் தான் சரியான பாதை
> என்று செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல நூற்றண்டுகளாகவும் நாம் நம்
> அடையாளங்களை இழந்து வந்தாலும் தற்காலத்தில் இவ்விழப்பு பெரிய அளவில்
> நடைபெற்று வருகிறது.
>
> தமிழாக்கம் செய்த பிற மொழிச் சொற்களின் மூலப்பொருள் தேடி அதையே, முடிந்த
> அளவிற்கு, அம்மொழியில் குறிப்பிடும்படியே, வெளிப்படுத்தும் நிலைமை
> வந்திருக்கிறது. சேகரன், சேகர் என்றாகி இப்பொழுது ஷேக்கர் என்று
> அறிவுடையோர் என்று அறியப்படுபவர்களால் அழைக்கப்படுகிறது. பல சொற்கள்
> சாந்தி-ஷாந்த்தி, வசந்தி-வசந்த்தி, சந்திரன்-ச்சந்திரன், அசோகன் -அசோக்,
> என்றாகி கணேசன்-gaணேசன்-gaணேஷ், தமயந்தி-dhaமயந்தி-dhaமயந்த்தி என்று
> மாற்றமடைந்து வருகிறது. இவை போன்ற சொற்களை உச்சரிக்கத் தெரிந்தும்
> அவர்தம் மொழியால் அம்மக்களாலே எழுதமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.
>
> பாவம்-baaவம், பால்-baaல், பாஸ்- baaஸ், என்ற நாள்தோறும் பயன்படும்
> சொற்களின் வேறுபாடுகளை எழுத்தால் தெளிவுறுத்த முடியாமல் இருக்கின்றோம்.
> கீதா, கோபி, பாரதி (Keedhaa, kobi, paaradhi) என்பவை இன்று Geetha,
> Gopi, Bharathi என்று உச்சரிக்கப்படுகின்றன. சங்கீதம், சாந்தம்,
> அசோகவனம் என்பவை சந்கீத்தம், சாந்த்தம் அசோக்கவனம் என்று முதன்முதலில்
> நம் சமூகத்தில் அறிமுகப்பட்டிருந்தால் வன்மையானவையாக கருதப்பட்டு
> அடையாளம் காணப்படாமலேயே நம்மைவிட்டு போயிருக்கும். இன்று நாமே இவற்றை
> மாற்றி உச்சரிக்க முயல்கிறோம்.
>
> உலகமயமாக்கல்: கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பது கொணர்ந்திங்கு
> கொட்டப்படுகிறதாகியுள்ளது. இதில் நல்லவை பலவும் உள. தயாரித்த பொருட்கள்,
> விதவிதமான நுணுக்கமான சொற்கள், கலை என யாவும் தமிழருக்கு என்றாகாமல்,
> தமிழ்ப்படுத்தப்படாமல் திணிக்கப்படுகிறது. மறுப்பேதும் இல்லாமல்
> ஏற்றுக்கொள்ளும் நிலையில் சமூகம் இருக்கிறது.
>
> விளைவு, உச்சரிக்கத் தெரியாத நிலையிலும் பிறமொழிச்சொற்களை அம்மொழி பேசும்
> மக்களின் பேச்சு முறையிலேயே பேச முயல்கிறோம். firstu, flightu, faastu,
> frontu, என்று faகரம் அறிமுகமானது. straight, bright, prepaid என்று
> இலக்கண வரைமுறைகளை மீறி உச்சரிக்க கற்றுக்கொண்டோம். கண்டோன்மென்ட்
> என்பதில் ணகரம் அடுத்துவரும் டகரம் மெலிந்து வரும் என்ற இலக்கண விதியை
> மாற்றி ணகரம் அடுத்த டகரத்தை வல் எழுத்தாக உச்சரிக்கின்றோம்.
>
> தமிழ் எழுத்துக்கள்: தூய தமிழில் 247 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன.
> தொல்காப்பியம் வகுத்த நெறிமுறைகளை தவறாத வரையில் 247 எழுத்துக்கள்
> நிறைவைத் தந்தன. ஆனால், அவ்விதிகளைத் தளர்த்தத் தொடங்கியதால், ஸ, ஜ, ஷ,
> ஹ என்ற சொற்களை ஏற்றோம். அதனால் 299 எழுத்துக்கள் என்றானது. இப்பொழுது
> தமிழக அரசு ksha மற்றும் ssa என்பனவற்றிக்கு இரு எழுத்துக்களையும் அதனால்
> 24 உயிர்மெய் எழுத்துக்களையும் தமிழுடன் இணைத்துள்ளது. இன்று தமிழக
> அரசின் ஆணையின்படி தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 325.
>
> இன்று மேலும் ஒரு ஒலி பயன்பாட்டில் உள்ளது. துரித உணவகம் என்பதை விட
> fast food என்றே எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் உள்ளதை உச்சரிக்கத்
> தெரிந்தும் தமிழ் எழுத்துக்களால் எழுத முடியாததால் ஃபகரத்தை
> உருவாக்கினர். விளைவாக, உச்சரிக்கும்படியே ஃபாஸ்ட் ஃபூட் (ஃபூடு) என்று
> எழுத முடிகிறது. ஆக, 1 +12 என்று 13 எழுத்துக்களும், சேர்ந்து தமிழின்
> பயன்பாட்டில், அட்டவணை படுத்தினால், 338 எழுத்துகள் உள்ளன. கூடுதலாக
> இத்தனை எழுத்துக்கள் சேர்க்கப்பட்டும் இன்றைய தேவைகளை தமிழில் எழுதி
> இயம்ப முடியுமா?
>
> சோனி தொ.கா. பெட்டியின் புது வடிவத்தின் பெயர் - பிரவியா அல்லது ப்ரவியா
> என்பதை சரியாக உச்சரிக்க (Bravia) என ஆங்கிலத்தில் அருகே எழுத
> வேண்டியிருக்கிறது. . ஸ்டார் மூவிஸில் வந்த படத்தின் பெயர் டீப் ப்ளூ
> சீ. தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவும் இல்லை ஒழுங்காக உச்சரிக்கவும்
> முடியவுமில்லை. .ஒரு கடையின் பெயர் பிக் பாய். இதை Big Boy, Big Paai,
> Bik Boy, Bik Paai, Pig Boy, Pig Paai, Pik Boy, Pig Paai என்ற
> குழப்பத்துடன் படித்து சரியான ஒன்றை கண்டறிய வேண்டிய நிலை இந்திய
> மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இதுவே big pot
> என்றிருந்தால் 16 விதமான சொற்களில் இருந்து சரியானதை கண்டடுக்க
> வேண்டும்.
>
> இதுபோல பல சொற்களும் தொடர்களும் மொழிமாற்றம் இன்றி வருகின்றன.
> இச்சிக்கல்களை தமிழ் வழியே எப்படி தீர்ப்பது என்று எண்ணாமல் அந்நேரத்தில்
> தனக்கு ஆங்கிலம் போதும் என்ற எண்ணம்
>
ஞானபாரதி,
பிற மொழி இலக்கியங்கள், அறிவியல் புத்தகங்கள்
நாம் படிக்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
கிரந்தம் யூனிக்கோடில் பயன்படுத்தலாம்.
உ-ம்: பிபிசி மலையாளம் அல்லது இந்தி -
என்ன இருக்கிறது என்று தெரிய, கன்வெற்றர் எழுதி
படித்துக் கொள்ளலாம்.
தமிழ் எழுத்தை தமிழில் எழுதிப் படிப்போம்.
பிற மொழி வலைப்பக்கங்களுக்கு கிரந்த எழுத்தைப்
பயன்படுத்தலாம்.
நா. கணேசன்
> read more »...
நீங்கள் கூறிய பிற மொழி இலக்கியத்தைப் படிக்க எதற்காக கிரந்தம்?
இந்தியில் ஒரு பாட்டை எடுத்துக்கொள்வோம்.
" நீங்கள் சொல்லும் கிரந்தக்கலப்புடன்
:ஆஜாரே...... பர்தேசி " எழுத்துக்கு எழுத்து.ஒருங்குறியில் எளிதாக
மாற்றிவிடலாம் என்பதுதானே..
பொருள் புரியாது. இந்த வேலை தேவையற்றது.
ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்க மென்பொருட்கள்
வந்துவிட்டன்வே. அவ்வாறு ம்ழிபெயர்க்கும்போது இந்த கிரந்த எழுத்துக்கள்
இருக்காது.கிரந்த வரிவடிவங்களை ஒதுக்கிவிட்டால் எப்படி கிரந்தம் வரும்.
அன்புடன்
அரசு
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
--
நீர்க்குமிழ் போன்ற வாழ்வில், காலம் மேல்தளத்தைத் தொடும்வரைதான்.
இறங்கவேண்டிய இடம் ,காஅம் தெரியாத பயணத்தில் முடிவு மட்டும் மிக உறுதியான ஒன்று.
யாவும் ஒரு அளவுக்குட்பட்டதுதான்.அதற்காக முழக்கத்தைவிட்டு ஈசா என்ற
முனகலில் ஆழ்ந்துவிடவா முடியும்.
எந்தமிழர் சுமார் 17000 ஊர்களில் பல நகர்களில் பல நாடுகளில்
வாழ்ந்திருக்கிறார்கள்..அவர்கள் விட்டுச்சென்றுள்ள செல்வங்கள் அளப்பரியன
அனைத்தையும் நான் ஒருவனாகவா சமளிக்கப்போகிறேன்.மக்கள் எழுவர் என்பதை
உறுதியாக நம்புகிறவன் நான். சரியான எண்ணங்களால் மக்கள் வெள்ளம்
பொங்கியிருக்கிறது என்பதுதானே வரலாறு.
கடந்துபோனவைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து புதியனவற்றை வாழ்வில் புக
விடலாமே. தகவல் தொடர்புகள் வளரும் உலகில் 1,2,4,8,16 என்று பெருகும்போது
தமிழர் பாசறைகள் நிரம்பி வழியும்.
தனித் தமிழ் படையில் என்னை 1 எனக்கொண்டால், சனவரி09.2011 அன்றே எண்ணிக்கை
பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.
வெல்லமுடியாது என்கிறீர்கள். முடியும்.
ஒரு சீனத்துக்கதை:மூடக்கிழவன் ஒருவனைப்பற்றியது.கேளுங்கள்.
ஒரு கிழவன் வீட்டைகட்டியபிறகு தனது வீட்டிற்கு காற்றைவிடாமல் மறிக்கும்
மலையைக் காண்கிறான். அதை அகற்றினால்தான் சரி என்று மலையை உடைக்க
ஆரம்பிக்கிறான்.
"மூடக்கிழவா? நீயும் உன் மகன்களும் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் இந்த
பெரிய மலையை உடைக்க முடியுமா " என்று வழிப்போக்கர்கள் கேட்கின்றனர்.பகடி
செய்கிறார்கள் வழிப்போக்கர்கள்.
கிழவன் சொல்கிறான்
" ஆயுள் முழுதும் நான் உழைப்பேன்.பின் என் மகன்கள்,பேரக்குழந்தைகள் என
உடைப்போம். நாங்கள் வளர்வோம்.இந்த மலை வளரமுடியாதல்லவா? ஒரு நாள் மலையை
முற்றாக அகற்றிவிடுவோம்"
வானத்துத் தேவதைகள் கிழவனின் உறுதியைக்கண்டு நெகிழ்ந்து மலையை பெயர்த்து
வேறிடத்திற்கு கொண்டு சென்றுவிட்டன .
முட்டாள்தனமான கதைதான் நமது புராணகாலத்து சரக்குகளைப்போல. எம் போன்ற
முட்டாள்களுக்கு இத்தகைய கதைகள் பொருத்தமான ஒன்றுதான்.
கான முயலெய்த அம்பினும் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிதல்லவா?/
அன்புடன்
அரசு
On 1/10/11, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
> *நண்பர் திநாவுக்கரசு,*
> **
> **
> *இதுவரை எழுதப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கிரந்தக் கலவை இலக்கியங்களை,
> கல்வெட்டுகளை, ஏடுகளை எல்லாம் எப்படி நீங்கள் ஒருவர் தூய தமிழாக்கப் போகிறீர்
> ? உங்கள் தனித்தமிழ்ப் படையில் எத்தனை பேர் உள்ளார் ? *
> **
> *அட்சய பாத்திரம் போல் எடுக்க, எடுக்க, அழிக்க அழிக்க வளரும் களஞ்சியம் அது. *
> **
> *வட சொற்களையும், அந்நிய மொழிச் சொற்களையும் அப்படியே வழித்துத் துடைக்கப்
> போகிறீரா ? நல்ல பணி ! இதுவரை யாரும் செய்யாத புரட்சிப் பணி !
> *
> *ஆனால் அது ஓர் இமாலயப் பணி ! உங்கள் ஆயுள் போதாது ! உங்கள் வாரிசுகளின்
> ஆயுட் காலங்களும் போதா !*
> **
>
> *ஜெயபாரதன்.*
> **
> *+++++++++++++++*
>> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>> .
>> > For more options, visit this group at
>> > http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>> >
>> >
>>
>>
>> --
>> கோ.திருநாவுக்கரசு
>> தாளாண்மை உழவர் இயக்கம்
>> செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
>> திருவாரூர் மாவட்டம்.
>> பேசி: 9380297522
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "தமிழ் மன்றம்" group.
>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>> To unsubscribe from this group, send email to
>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
J என்ற எழுத்து ஸ்பானிய ஜெர்மானிய மொழிகளில் உள்ளது. தம் மொழிக்கு வேறு
வேறுவகையாக ஒலித்தாலும் பிறமொழிகளுக்கு J (ஜ) என்றே ஒலிக்கிறது.
http://www.rcaguilar.com/german/pronunciation/grmn-letters.htm
http://spanish.about.com/cs/forbeginners/a/beg_alphabet.htm
> இப்பொழுதும் Cap என்பதை
> கேப் அல்லது காப் என்னாமல் கேஅப் என்று எகர, அகர கூட்டுயிர்
> ஒலியைக் கூட குறிக்க முடியும் (இது தேவை என்று நான் கூறவில்லை).
இதை நான் கெஅப், பெஅங்க, க்ரைஒஜெனிக் என்பது போல் ஒலியை விளக்கப்
பயன்படுத்தலாமென முன்பு உரைத்திருந்தேன்.
> > > டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்
> > > எந்தக் குறையும் இல்லை.
>
> > யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?
>
> பிற மொழியாளர்கள்;
>
> Meresƿīn, Toliña, Delfinlər, min-nan:Hái-ti, Lumod,
> Dofí, Delfinu, Delfiner, Tábąąstiin, Delphinidae, Delfenoj, Izurde, Dauphin,
> Deilf
> Golfiño, Delfino, Lumba-lumba, Höfrungar, Pomboo, Dofen,
> Yûnis, Delphinus, Delfīni, Delfinai, Dolfijne, Delfiner, Golfinho, Delfiinit
தமிழில் அதை ஓங்கில் என்று அழைத்ததுண்டு. இன்று யார் அழைக்கிறார்கள்?\
> > பிபிசி தொலைக்காட்சிகளைப்
> > பார்த்தீர்களானால், ஆங்கிலத்தில் பேசினாலும் கீழே
> > ஆங்கில எழுத்தில் எழுதிக்காட்டுவார்கள்.
> > அது அம்மொழியை நன்கு புரியாதவருக்காக செய்யும் செயல்.
>
> அல்ல!! இந்தியர்கள் (இதே போல பிற பல நாட்டவர்கள்),
> ஆங்கிலத்தில் பேசினாலும் இங்கே கனடாவில் கீழே
> எழுதிக்காட்டுவர். அவர்கள் பேசும் ஆங்கிலம் இவர்களுக்குப்
> புரியாது!!
இந்தியாவில் ஸ்டார் மூவிஸ் இம்முறையைக் கொணர்ந்தபோது, இது
ஆங்கிலப்பேச்சு புரியாதவரும் புரிந்து கொள்ள உதவும் என்றே கூறப்பட்டது.
>
> > டால்ஃவின் என்பதில் மெல்லொலி டகர ஒலி
> > ஏன் வருதல் வேண்டும்? தமிழில் அது டால்ஃவின்
> > (taalfin) அல்லது டால்பின் (taalbin) என்று இருந்தால்
> > என்ன தவறு?
> > யாரும் உச்சரிப்பதில்லையே? (பகரமும் வல்லொலியாக வேண்டும் அல்லவா?)
> > உச்சரிப்பதை எழுத வேண்டாமா?
>
> சரியான ஒலிப்பைக் கொடுத்துள்ளேன். பகரமோ பிற வல்லின
> எழுத்தோ வல்லொலியாக ஒலிக்கும் இடம் இரண்டே
> 1) சொல்லின் முதல் எழுத்தாக வருதல்
> 2) அந்த வல்லின எழுத்துக்கு முன் வல்லின ஒற்று (புள்ளி வைத்த
> எழுத்து) வருதல்.
>
> மற்ற இடங்களில் வல்லின எழுத்து மெலிந்தே வரும்.
> பாடு என்னும் சொல்லில் வரும் டு மெலிந்தே ஒலிக்கும்.
> ல் என்பது வல்லின ஒற்று அல்ல ஆகவே அடுத்து வரும்
> பகரம் மெலிந்தே ஒலிக்கும். *பல்கிப் பெருத்தது* என்பதில் வரும்
> -ல்கி என்பது lgi என்றுதான் ஒலிக்கும். கல்கி என்பது kalgi
> என்றுதான் ஒலிக்கும். எப்படி பிறமொழிச் சொற்கள் தமிழின்
> சீரொழுக்கமான ஒலிப்பு விதிகளை சிதைக்கின்றது என்பதற்கு
> கல்கி கிழமை இதழ் (வார இதழ்) -இன் பெயரே போதுமான
> சாட்சி. இங்கு கிரந்தம் எல்லாமும் கூடக் கிடையாது.
> உல்குபொருள் = ulguporuL. , வெல்கின்றான் = velginRaan.
> ல் என்னும் எழுத்துக்கு அடுத்து வரும் கு, கி என்னும் வல்லினங்கள்
> மெலிந்தே ஒலிக்கும்.
கல்(க்)கி என்று உச்சரிப்பது அவரவர் விருப்பம். கல்பனாவை கல்baனா என்று
ஒலித்தால் யார் ஏற்றுக்கொள்வர்? அல்பம் பல்பம் என்ற புதிய? தமிழ்ச்
சொற்களும் வல்லினமாகவே ஒலிக்கின்றன. தேவைப்படின் எழுத வேண்டாமா?
> நான் கூறுவதும் அறிவியற் பெயரே. அறிவியற் சொல்லை
> தமிழ் போன்ற ஒலியெழுத்துகளால் குறிப்பிடப்பெறும் பொழுது
> தமிழ் வழக்கின் படிதான் வழங்க முடியும்.
தமிழகப்பள்ளிகளில் எங்கு இது நடைமுறைப்படுத்தப்படுகிறது?இல்லையே!!!!!
இன்னும் எத்தனை காலத்திற்கு நிலையில்லாமல் இருப்பது?
> அறிவியற்பெயரை நாம் நம் மொழியில் எப்படி வழங்குகின்றோம்
> என்பதே பேச்சு. ஐபீசுக்கசு (Hibiscus) என்று முதலில் தருவோம். பின்னர்
> வழங்கும் இடங்களிலலெல்லாம் நாம் ஐபீசுக்கசு என்று குறித்தால்
> போதுமானது. அறிவியற்பெயரை ஒலிப்பதில் சீர்மை கிடையாது
இந்த அடைக்குறிப்புகளை வெகுவாகக் குறைக்க வேண்டும். இல்லையெனில் சன்
டிவி, கலைஞர் டிவி போன்றவற்றின் தொகுப்பாளர்கள் செய்வது போல், மக்கள்
அவர்களை ஏற்றுக்கொண்டதுபோல், தமிழ் சிறுமைப்படுத்தப்படும்.
> அறிவடிப்படையில் எடுத்துச் சொன்னால் ஏற்பார்கள். அறிவை
> முன்னிறுத்தியோ பல்வேரு முறைமைகளை முன்னிறுத்தியோ
> எடுத்துச் சொன்னாலும் ஒருசிலர் ஏற்கமாட்டார்கள். அதனால்
> கவலைப் பட வேண்டியதில்லை. இராச்யேந்திரன் என்று ஒரு
> 4-5 முறை எழுதியும் சொல்லியும் பாருங்கள். பழகிவிடும்.
> இராசேந்திரன் என்பது இன்னும் அழகு. எளிமையைப் போற்றிப்
> பழகினால் அதன் சிறப்பையும் அறிவுடைமையையும்
> உணரலாம்.
ஐயா, மிக அருமை. ஆனால் சமூகம் வேறுதிசையில் போய்க்கொண்டிருக்கிறது.
மூலத்தை நோக்கி- எம்மொழியினர் எவ்வாறு என்று தேடியறிந்து அவ்வாறே
உச்சரிக்க வேண்டுமென்று- தடுக்க முடியாது. ஆடுகிற மாட்டை ஆடித்தான்
கறக்கணும், இல்லையா!
> வருங்கால தொழில்நுட்பத்தைக் கணக்கில் கொண்டால் உடனுக்குடன்
> எந்தத் தமிழ்ச்சொல்லுக்கும் (அறிவியலாகட்டும் பிற துறைகளாகட்டும்),
> ஈடான பன்மொழி பெயர்ப்புகளைத் தரும்.
> அவை மில்லியன் சொற்கள் எனினும் ஒரு பொருட்டே அல்ல.
உலகமே ஆங்கில சொல்லாக்கத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது. தற்பொழுதே
தனிமைப் படுத்தப்பட்டுள்ளோம். தாங்கள் கூறியபடி செய்தால் அது காலத்தை
பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே கருதப்படும்.
http://www.guardian.co.uk/world/2003/sep/09/worlddispatch.germany
> ஞானபாரதி தனி எழுத்துகள் தருவது மிக மிகப் பெரும் பிழை!!
> தமிழை முற்றுமாய் சீரழிக்கும்.
வேறு வழியில்லை. முன்பு, தமிழில் மீக்குறியிடவேண்டும் என்று தாங்கள்
வலியுறுத்தியது எதனால்? திரு ரமண ஷர்மா செய்வதும் கிட்டத்தட்ட
அதைத்தானே. முனைவர் கணேசன் கிரந்தத்தில் தமிழ் கலக்கட்டும் என்கிறார்.
இரமாகி ஐயா தமிழில் கிரந்தம் இருக்கட்டும் என்கிறார். தாங்களோ மீக்குறி
திரு சர்மாவோ அதை கிரந்தம் அல்லது மீக்குறி என்றவாறான ஒருங்குறி
என்கிறார்.
ஃபகரம் வந்ததைப் போல தமிழர் ஒலிக்கக்கூடிய ஒலிகளுக்கு தனி எழுத்துக்கள்
(இலக்கணம் மீறியும் ஒலிக்கவேண்டும் என்பதால்) அவசியம்.
"புசுப்பா,"
அழைத்துப்பாருங்கள், பிறகு தெரியும் தங்களின் மேல் அவர் (புஷ்பா)
கொண்டிருந்த மதிப்பு என்னாவாகிறது என்று.
என் கருத்தை நிலைநாட்ட பொது விவாதத்திற்கு, பொதுமன்றத்தில் வாதாட நான்
தயார்.
On Jan 10, 4:15 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>
"புசுப்பா,"
அழைத்துப்பாருங்கள், பிறகு தெரியும் தங்களின் மேல் அவர் (புஷ்பா)
கொண்டிருந்த மதிப்பு என்னாவாகிறது என்று.
என் கருத்தை நிலைநாட்ட பொது விவாதத்திற்கு, பொதுமன்றத்தில் வாதாட நான்
தயார்.
அன்பரே,
மலையாளிகளால் ழகரத்தையும், gaகர, dhaகர, daகர, baகரத்தையும் தெளிவுற
உச்சரிக்கவும் முடியும் எழுதவும் முடியும்.
அன்புடன்
பாரதி
On Jan 10, 4:15 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>
மலையாளத்தை நம்
> > கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
> > கருதுகிறேன்.
>
> வெளிவந்ததால் மலையாளம் தமிழை விட எந்த எந்த வகைகளில் சிறப்பாக வாழ்ந்துவிட்டது
> என்று தயவுசெய்து சொல்லமுடியுமா?
> சொ.வினைதீர்த்தான்.
J என்ற எழுத்து ஸ்பானிய ஜெர்மானிய மொழிகளில் உள்ளது. தம் மொழிக்கு வேறு
> சொற்களைக் கடன்வாங்குவதும், புதிய சொற்களை ஆக்கிக்கொள்வதும்
> மாற்றம் ஆகாதா? ஏன் J என்ற ஆங்கில ஒலிக்கு நேரான ஒலிப்பை
> இடாய்ச்சு மொழி (செருமானிய மொழி), எசுப்பானியம், பிரான்சியம்
> ஏற்றுக்கொள்ளவில்லை? ஏன் அவர்கள் Japan என்பதை ஆங்கிலேயன்
> சொல்லக் கேட்டிருக்கவில்லையா? உலகில் பல மொழிகளைப்
> பேசும் ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் J என்னும்
> ஒலியை ஒலிப்பதில்லை.
வேறுவகையாக ஒலித்தாலும் பிறமொழிகளுக்கு J (ஜ) என்றே ஒலிக்கிறது.
http://www.rcaguilar.com/german/pronunciation/grmn-letters.htm
http://spanish.about.com/cs/forbeginners/a/beg_alphabet.htm
> இப்பொழுதும் Cap என்பதைஇதை நான் கெஅப், பெஅங்க, க்ரைஒஜெனிக் என்பது போல் ஒலியை விளக்கப்
> கேப் அல்லது காப் என்னாமல் கேஅப் என்று எகர, அகர கூட்டுயிர்
> ஒலியைக் கூட குறிக்க முடியும் (இது தேவை என்று நான் கூறவில்லை).
பயன்படுத்தலாமென முன்பு உரைத்திருந்தேன்.
10 ஜனவரி, 2011 3:18 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:
"புசுப்பா,"
அழைத்துப்பாருங்கள், பிறகு தெரியும் தங்களின் மேல் அவர் (புஷ்பா)
கொண்டிருந்த மதிப்பு என்னாவாகிறது என்று.
என் கருத்தை நிலைநாட்ட பொது விவாதத்திற்கு, பொதுமன்றத்தில் வாதாட நான்
தயார்.ஷ் என்ற கிரந்தம் இருந்ததால்தான் புஷ்பா பேர்வச்சுகிட்டாங்கஇல்லேனா புட்பா நு வச்சு இருப்பாங்கஇராமாயண பாத்திரங்கள் எல்லாம் கிரந்தம் இல்லாமல் எப்படி தமிழ் ஆச்சு ஐயா?உங்க பேர் ப்பாரதியா பாரதியா? இடம் பார்த்து வாசிக்கிறமாதி வாசிச்சுட்டு போக வேண்டும்என்க ஊரில் reading road நு ஒரு ஊர் இருக்கு. நான் ரீடிங் ரோட் சொன்னப்போ அது ரெட்டிங் ரோட் நு சொன்னான்இன்னும் ச்சிகாகோவா? ஷிகாகோவானு எனக்கு தெரியலேஉலகின் சிறந்த மொழியின் நிலை இதுதான்
அடுத்த வீட்டு ஆயா தன் பேதியை புசுப்பா என்றுதான் பாப்பா மாதிரிக் கூப்பிடுகிறார்கள். ஒன்றும் குறைந்துவிடவில்லை.அன்புதான் தெரிகிறது.
(மற்மொழியின் தொடர்ச்சி)
> > > டால்ஃவின் என்றோ இடால்ஃவின் என்றோ கூறுவதால்தமிழில் அதை ஓங்கில் என்று அழைத்ததுண்டு. இன்று யார் அழைக்கிறார்கள்?\
> > > எந்தக் குறையும் இல்லை.
>
> > யார் அவ்வாறு ஒலிக்கிறார்கள்?
>
> பிற மொழியாளர்கள்;
>
> Meresƿīn, Toliña, Delfinlər, min-nan:Hái-ti, Lumod,
> Dofí, Delfinu, Delfiner, Tábąąstiin, Delphinidae, Delfenoj, Izurde, Dauphin,
> Deilf Golfiño, Delfino, Lumba-lumba, Höfrungar, Pomboo, Dofen,
> Yûnis, Delphinus, Delfīni, Delfinai, Dolfijne, Delfiner, Golfinho, Delfiinit
[..]
கல்(க்)கி என்று உச்சரிப்பது அவரவர் விருப்பம். கல்பனாவை கல்baனா என்று ஒலித்தால் யார் ஏற்றுக்கொள்வர்?
அல்பம் பல்பம் என்ற புதிய? தமிழ்ச்
சொற்களும் வல்லினமாகவே ஒலிக்கின்றன. தேவைப்படின் எழுத வேண்டாமா?
> அறிவியற்பெயரை நாம் நம் மொழியில் எப்படி வழங்குகின்றோம்
> என்பதே பேச்சு. ஐபீசுக்கசு (Hibiscus) என்று முதலில் தருவோம். பின்னர்
> வழங்கும் இடங்களிலலெல்லாம் நாம் ஐபீசுக்கசு என்று குறித்தால்
> போதுமானது. அறிவியற்பெயரை ஒலிப்பதில் சீர்மை கிடையாது
இந்த அடைக்குறிப்புகளை வெகுவாகக் குறைக்க வேண்டும். இல்லையெனில் சன் டிவி, கலைஞர் டிவி போன்றவற்றின் தொகுப்பாளர்கள் செய்வது போல், மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டதுபோல், தமிழ் சிறுமைப்படுத்தப்படும்.
ஐயா, மிக அருமை. ஆனால் சமூகம் வேறுதிசையில் போய்க்கொண்டிருக்கிறது. மூலத்தை நோக்கி- எம்மொழியினர் எவ்வாறு என்று தேடியறிந்து அவ்வாறே உச்சரிக்க வேண்டுமென்று- தடுக்க முடியாது. ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்கணும், இல்லையா!
> அறிவடிப்படையில் எடுத்துச் சொன்னால் ஏற்பார்கள். அறிவை
> முன்னிறுத்தியோ பல்வேரு முறைமைகளை முன்னிறுத்தியோ
> எடுத்துச் சொன்னாலும் ஒருசிலர் ஏற்கமாட்டார்கள். அதனால்
> கவலைப் பட வேண்டியதில்லை. இராச்யேந்திரன் என்று ஒரு
> 4-5 முறை எழுதியும் சொல்லியும் பாருங்கள். பழகிவிடும்.
> இராசேந்திரன் என்பது இன்னும் அழகு. எளிமையைப் போற்றிப்
> பழகினால் அதன் சிறப்பையும் அறிவுடைமையையும்
> உணரலாம்.
உலகின் சிறந்த மொழியின் நிலை இதுதான்அடுத்த வீட்டு ஆயா தன் பேதியை புசுப்பா என்றுதான் பாப்பா மாதிரிக் கூப்பிடுகிறார்கள். ஒன்றும் குறைந்துவிடவில்லை.அன்புதான் தெரிகிறது.சொ.வினைதீர்த்தான்,
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
On Jan 10, 10:26 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/11 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>
> > அன்பரே,
> > மலையாளிகளால் ழகரத்தையும், gaகர, dhaகர, daகர, baகரத்தையும் தெளிவுற
> > உச்சரிக்கவும் முடியும் எழுதவும் முடியும்.
> > அன்புடன்
> > பாரதி
>
காரணம் - அவர்களின் கிரந்த மலையாள எழுத்தமைப்பு.
மலையாள வலைப்பக்கத்தை கிரந்த யூனிக்கோடில்
சரியாகப் படிக்கமுடியும். யூனிகோடு மலையாளத்தை
தவறாக கிரந்தத்தில் எழுத விடாது.
> ஒலிக்க முடிகிறது.
> ஆனால் மலையாள நண்பர்களும் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான்
> மலையாளம் பேசுகிறார்கள்.
> மலையாளம் தமிழைவிட என்ன வாழ்ந்துவிட்டது ஐயா.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்..
>
மலையாளமும் தமிழ் போல ஆங்கிலம் கலந்துபேசுகிறார்கள்.
ஆனால், இது ஆளுக்கு ஆள் வேறுபடும் - அவர் படிப்புநிலை,
வாழியல் சூழல், இங்கிலீஷ் மீடியம் பள்ளியா?, ... என்று
பல காரணங்கள் இருக்கின்றன. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.
நா. கணேசன்
On Jan 10, 10:26 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 2011/1/11 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
> ஒலிக்க முடிகிறது.மலையாளமும் தமிழ் போல ஆங்கிலம் கலந்துபேசுகிறார்கள்.
> ஆனால் மலையாள நண்பர்களும் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான்
> மலையாளம் பேசுகிறார்கள்.
> மலையாளம் தமிழைவிட என்ன வாழ்ந்துவிட்டது ஐயா.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்..
>
ஆனால், இது ஆளுக்கு ஆள் வேறுபடும் - அவர் படிப்புநிலை,
வாழியல் சூழல், இங்கிலீஷ் மீடியம் பள்ளியா?, ... என்று
பல காரணங்கள் இருக்கின்றன. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.
நா. கணேசன்
அன்பிற்கினிய நண்பர் திரு கணேசன்,
நா. கணேசன்அன்பிற்கினிய நண்பர் திரு கணேசன்,அங்கு காலை மணி நான்கு இருக்கும் என எண்ணுகிறேன். தங்கள் உழைப்பும் அயராத்தன்மையும் என்னை வியக்கவைக்கின்றன. வாழ்த்துக்கள். நம் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கவில்லை. தமிழ் வழிக்கல்வி குறைந்து வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் பாடத்திற்கு பெற்றோர் முன்னுரிமை மற்ற பாடங்களுக்குக் கொடுப்பது போல அளிப்பதில்லை.இந்தச் சூழலில் இப்பொழுது உள்ளதைக் காக்கத் தங்களைப் போன்ற அறிஞர் பெருமக்களைவேண்டிக்கொள்கிறேன்மிக்க அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
பள்ளிகளில் தான் நான் baaரதி ஆனேன். அதையும் நான் ஏற்றுக்கொண்டேன்.
அன்புடன்
பாரதி
. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.
> > > இப்பொழுதும் Cap என்பதை
> > > கேப் அல்லது காப் என்னாமல் கேஅப் என்று எகர, அகர கூட்டுயிர்
> > > ஒலியைக் கூட குறிக்க முடியும் (இது தேவை என்று நான் கூறவில்லை).
>
> > இதை நான் கெஅப், பெஅங்க, க்ரைஒஜெனிக் என்பது போல் ஒலியை விளக்கப்
> > பயன்படுத்தலாமென முன்பு உரைத்திருந்தேன்.
>
> நன்று. நானும் ஒரு 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்படி எண்ணியிருக்கின்றேன்.
> கிரையோசெனிக் (மீக்குளிரிய) என்றால் என்ன
> ஐயா பெரிய இழப்பு வந்துவிடும்?!! ஏன் இப்படி ஒலிப்புத்துல்லியம்
> காணப்போய் நம் அருமையான மொழியை அழிக்கின்றீர்கள்!
என் புரிதலில் நுட்பம், நுண்ணியம்,நுணுக்கம் என்ற மூன்றே உயர்வைத் தரும்.
இவை நாட்பட பழமையாகும்/பழக்கமாகும். சோழப் பேரரசுக் காலம் வரை இவை
நம்மிடம் இருந்தன. பின்னர் இவற்றை வளர்க்கவில்லை.
பழந்தமிழரின் நுட்பத்தை மேம்படுத்தாதது (இன்னமும் சித்த மருத்துவத்தில்
சித்தர்கள் சொல்லியவற்றை நுட்பமாக ஆய்ந்து மேம்படுத்தாமல்,
திருத்தியமைக்காமல், மருந்தின் முறையை மட்டும் ஆங்கில வழி முறைக்கு
மாற்றியிருக்கிறார்கள், வேளாண்மையிலும் அதேபோல.........)
நுண்ணியம் மொத்தமாகக் கைவிடப்பட்டது. இருமல்,உறுமல், செருமல், கணைத்தல்
என்பனபோன்ற நுண்ணியமான வேறுபாடுகளை பிறவற்றில் நாம் வளர்த்தெடுக்கவில்லை.
நுணுக்கம் தனித்தும் செயல்படக்கூடியது. பிறமொழி மன்னர்கள் தமிழகத்தை,
இந்தியாவை ஆண்டது இதனால்தான். நகரத்தார் கிழக்காசியாவில் பெருவணிகம்
செய்ததுபோல. இழந்தோமானால் நொடியில் குழியில்.
இழந்தவை பல. மீட்டெடுக்க முடிந்தவை மிகச்சிலவே. இயலாததை மீட்டெடுக்க
முயல்வது வீண்.
எனக்கு என்மொழி நீண்டகாலம் பயனோடு, பயன்படுத்தப்பட்டு, எதிலும் பயணித்து
வாழ்ந்தாக வேண்டும். இயலாமொழியாக, மக்கள் மாறியதால் வழக்கொழிந்து
போகாமல், செழிப்புடன் இருக்கவேண்டும். உலகமே பின்னிப்பிணைந்து வரும்போது
வட கொரியாவைப்போல் தனித்து வாழ்ந்தாலே நிலைத்து வாழமுடியும் என்ற
தலைமைக்காக வாழாமல், தமக்காக வாழும், உலகத்துடன் கலந்து போகும் மக்களும்
நம் மொழியை இழக்காமல் இருக்கவேண்டும்.
வலதுகையில் கொடுத்தால்தான் மதிப்பு என்று பிறரையும் ஏற்றுக்கொள்ளச்
செய்யும் அதேவேளை.வேட்டி அணிந்துதான் ஆலையில் வேலை செய்வேன் என்று
கூறமாட்டேன்.
என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் வைக்கும் அதேவேளை பக்கத்து வீட்டு
குழந்தையை அவர்பெற்றோர் அழைக்கும் முறையில் புஷ்பா என்றுதான், என்னாலும்
சிக்கலின்றி கூறமுடியுமென்பதால், அழைப்பேனே தவிர புசுப்பா என்று
அழைக்கமாட்டேன்.
தாங்கள் கூறிவரும் மீக்குறிகள் இன்றைய நிலையில், நாம் பயன்படுத்தும்
ஒலிகளை எழுதுவதில், நமக்கிருக்கும் இயலாமையைக் குறிக்கிறது.
பயன்படுத்தக்கூடாது என்று கூறவில்லை என்றாலும் அளவுக்கதிகமாக
பயன்படுத்துதல் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தும்.
வல்லினம் மெலியும் ஒலிகள் என்று குறிப்பிட ஆங்கிலத்துக்கு போகும் தாங்கள்
இயலாமை இருப்பதையல்லவா சுட்டி வெளிப்படுத்துகிறீர்.
சில கிரந்த எழுத்துக்கள் தமிழ அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பயன்பாட்டில் உள்ளன. எதனால் அவை முன்னிறுத்தப்பட்டன? தேவையின்
அவசியத்தால் தானே.
அன்புடன்
பாரதி
> நாம் எழுதுவது நம் மொழியில். நமக்கு இணக்கமாக இருக்கவே.
> ஏதோவொரு தாழ்வு உளப்பான்மையாலும், எதற்காக எப்பயனுக்காக
> ஒரு சொல் உள்ளது என்று சரிவர அறியாமையாலும் இப்படி ஒலிப்புத்துல்லியம்
> காணப்போய் நம் மொழியை அழிக்கின்றீர்கள்!
> எந்த ஆங்கில சொல்லும் ஒரே மாதிரி எங்கும் ஒலிப்பதும் இல்லை.
> (semi என்பதை செமி என்பார் சிலர் செமை என்பார் இன்னும் சிலர்.
> diffraction என்பதை டி'வ்'ராக்ச^ன் என்றும் டை'வ்'ராக்ச^ன் என்றும்
> கூறுகிறார்கள். அது மட்டுமல்ல, அது காலத்தாலும் மாறுபடும்)
> cryogenics என்பதை இடாய்ச்சு மொழியாளர் *Kryotechnik* என்கின்றனர்.
> நாம் இதனை குளிர்நுட்பம் என்றும் கூடக் கூறலாம்*.*
ஜெயபாரதன்.
+++++++++++++++++++
--
செல்வாஅதனால்தான் தனி மலையாளத்தில் மலையாளிகள் உரையாடுவதில்லை.
ஜெயபாரதன்.
+++++++++++++++++++2011/1/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.தனி மலையாளம் தமிழாக இருக்கும் :)செல்வா--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
பனை மரத்தில் ஏறிய மனிதன் தோட்டக்காரனைக் கண்டதும் பயந்து இறங்க ஆரம்பித்தான்.
தோட்டக்காரன் கேட்டான்,"அங்கே என்னடா செய்கிறாய் ? "
மனிதன்: "நான் இளநி பறிக்கப் போனேன்."
தோட்டக்காரன்: "பனை மரத்தில் ஏதடா இளநி ?"
மனிதன்: "அதனால்தான் கீழே இறங்குகிறேன்." என்றானாம்.
ஜெயபாரதன்.
+++++++++
அன்பு நண்பர்க்கு,
Tsunami - யாரும் டிசுனாமி என்று ஒலிப்பதில்லை.(இதுவும் பெயர்ச்சொல்தான்)
Psorium - எவரும் பிசோரினம் என்று சொல்ல்வதில்லை.(இதுவும் பெயர்ச்சொல்தான்)
இடால்ஃபின் என்று தமிழில் எழுதினால் மட்டும் ஏற்கமாட்டீர்.
இது எந்த ஊர் வ்ழ்க்கு ?
அன்பன்,
மீ.கணேசன்.
2011/1/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
/// டால்ஃபின் என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம் வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை. ///பெயர்ச் சொல் : டாடா தொழிற்சாலை - உடாடா தொழிற் சாலையா ? அல்லது இடாடா தொழிற்சாலையா ? அல்லது அடாடா தொழிற்சாலையா ?பெயர்ச் சொல் : ரூபாய் - உரூபாயா அல்லது இரூபாயா ? அல்லது அரூபாயா ?பெயர்ச் சொல் : ரம்பா - இது உரம்பாவா ? அல்லது இரம்பாவா ?அல்லது அரம்பாவா ?பெயர்ச் சொற்களை இப்படி விருப்பம் போல் அறுப்பதா தமிழ் ?ஜெயபாரதன்.++++++++++++++++++2011/1/8 ஞானபாரதி <dgbha...@gmail.com>
திரு அரசு,நான் கூறவந்தது ஆங்கிலச் சொற்களுக்காக மட்டும் என்றில்லை.
பிறமொழிகள் மற்றும் அறிவியல் சொற்கள் ஆகியவற்றிற்கும் தான். டால்ஃபின்
என்பதை உடால்பின் அல்லது இடால்பின் என்றும் கூறுவதில்லை டகரம்
வல்லோலியாகவும் ஒலிப்பதில்லை.
எத்தனை எத்தனை உயிரினங்கள் உலகில். நாம் பெயரிட்டு அழைப்பது ஆயிரங்களில்
தான் இருக்கும். ஆனால் கண்டறியப்பட்ட அத்தனை உயிரினங்களுக்கும் உள்ளூர்
பெயர்கள் பல இருக்குமென்றாலும் பொதுவான ஒரு அறிவியல் பெயரும்
இடப்பட்டிருக்கும். செம்பருத்தியை ஹைபிஸ்கஸ் ரோசாசயன்சஸ் என்பதை
பொதுமக்களால் ஒலிக்க முடிந்தும் கைபிசுகசு உரோசாசயனன்சு என்றுதான்
ஒலிக்கவேண்டும் என்பது சரியா?
நம் அறிவு பரந்திருக்கிறது அதை நம்மால் எழுத முடியவில்லை. பொதுமக்கள்
கூட தாம் ஒலிப்பதை தெளிவுற எழுதமுடியாவண்ணம் இருக்கின்றனர்.
தமிழல்லாதவரும் தமிழை பிடிக்காதவரும் கடந்த 700 ஆண்டுகளாக, சில
பத்தாண்டுகளைத் தவிர, ஆட்சியில் இருந்தனர், இருக்கின்றனர். காலங்கள்
மாறிவிட்டன. மீளமுடியா நிலைக்கு உலகின் பழமொழிகளும் வந்துவிட்டன. உலகை
ஆளும் என்றிருந்த மொழிகள் இன்று அடையாளங்களைத்
தொலைத்துக்கொண்டிருக்கின்றன.
தமிழ் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அல்லது தமிழ் ஆர்வலர் தலைமையில்
இருந்தால் மட்டுமே தமிழ் வாழும் என்ற காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கல்
என்பதை பிடித்தோ பிடிக்காமலோ ஏற்றுக்கொண்டு விட்டோம்.
முள்ளிவாய்க்காலில் மக்களை அடைத்து வைத்தது மூடத்தனம். இரண்டு செயல்கள்
நடந்தன. எதிரியால் எளிதாக மக்களைக் கொல்ல/நசுக்க முடிந்தது -
கட்டுப்பாட்டை மீறி வந்தவர்களே பிழைத்தார்கள். நான், மலையாளத்தை நம்
கட்டுப்பாட்டை மீறி வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மொழியாகவே
கருதுகிறேன்.
தகவமைத்துக்கொள்ளவில்லை எனில் என்னவாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
உலகை நமதாக்க வேண்டும் => மேலெழுந்து நிகராக வரவேண்டும் => ஏற்றுக்கொள்ள
வேண்டும் => அழிந்துபோக வேண்டும்
என்பதே நியதி.
பாரதி
On Jan 8, 12:25 am, Govindasamy Thirunavukkarasu
> 2011/1/8 ஞானபாரதி <dgbhara...@gmail.com>
>
> > ஒருங்குறியில் தமிழ் - சாதாரண மனிதன் பார்வையில்
> > த. ஞான பாரதி
> > மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அடையாறு, சென்னை
>
> > முடிவுரை
> > தமிழுக்கான இலக்கண வரையறைகளை மீறி தமிழ் சமூகம்
> > நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கென்றான ஒலிகளையும் தமிழ் இலக்கண
> > நெறிமுறைகளையும் மீறிப் பயன்படுத்துகிறோம். எனவே, (ங்)க, (ண்)ட, (ந்)த,
> > (ம்)ப என்ற நான்கு ஒலிகளுக்கு எழுத்துரு உருவாக்கி அவற்றை தமிழ்
> > ஒருங்குறியில் சேர்க்கவேண்டும். தமிழர் பொதுவாகப் பயன்படுத்தும்
> > தமிழல்லாத ஒலிகளையும் தமிழ் எழுத்துக்களுக்கான அடையாளங்களைப்போலவே
> > எழுத்துரு செய்தல் வேண்டும்.
>
> *சமற்கிருத சொற்களை தமிழில் எழுத வந்தது கிரந்தம்.தங்களின் வாதம் குறிப்பாக
> ஆங்கில சொற்கலை தமிழ் ஓடு உருவொத்த புதியஎழுத்துக்களைக்கொண்டு எழுத
> உதவும்.தமிழை வளப்படுத்டுவது என்பது தமிழின் வேர்சொல்கொண்டு காரணப்பெயர்களாக
> புது கலைச்சொற்கலைக்காண்பதிலும் ,தமிழ்ச்சொற்கலிஅ புழக்கத்தில் கொண்டு
> வருவதையும் பிற மொழிச்சொற்கலிஅ தவிர்ப்பதையும் ஒரு இயக்கமாக வளர்ப்பதிலும்தான்
> இருக்க முடியும்.*
>
> > தமிழில் பயன்படும் இப்புதிய அடையாளங்களை
> > செந்தமிழுக்கு பயன்படுத்தும்போது தவிர்த்தும் அறிவியல் மற்றும் இன்றைய
> > தேவைகளுக்கு வெளிப்படுத்தும்படியும் வேண்டுவோருக்கு
> > செயல்படுத்தும்படியும் வேண்டாதோருக்கு தவிர்த்தும் வெளிப்படும்படி
> > மென்பொருள் மூலம் செய்விக்கலாம்.
>
> *அன்றாடப்புழகத்திற்கும் அறிவியல் கருத்துக்களை எளிதாக பரிமாறிக்கொள்ள
> வசதியாகவும் தமிழ் வளராவிட்டாலும் தமிழின் உயிர் நீடிக்காது.செந்தமிழுக்கு
> என்று ஒரு நியதி பிற பயன்பாட்டுக்கு ஒரு நியதி என்பதெல்லாம் எதற்கு. மென்பொருள்
> பொருட்டன்று.
>
> அன்புடன்*
> *அரசு*
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>
> > .
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
> --
> கோ.திருநாவுக்கரசு
> தாளாண்மை உழவர் இயக்கம்
> செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
> திருவாரூர் மாவட்டம்.
> பேசி: 9380297522
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html
என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் வைக்கும் அதேவேளை பக்கத்து வீட்டு
குழந்தையை அவர்பெற்றோர் அழைக்கும் முறையில் புஷ்பா என்றுதான், என்னாலும்
சிக்கலின்றி கூறமுடியுமென்பதால், அழைப்பேனே தவிர புசுப்பா என்று
அழைக்கமாட்டேன்.
வேந்தரே,
ஜெயபாரதன்.
+++++++++++++++++++++++++++
--
மலையாளம் உருவானதற்குக் காரணம் என்று நான் நினைப்பது, அவர்கள் வடமொழியை நேசித்து தமிழுக்குள் ஏராளமாக ஏற்றுக்கொண்டதுதான்.
வடமொழி தனியேயும் தமிழ் தனியேயும் என்று உரையாடி இருந்தால்கூட மலையாளம் உருவாகி இருக்காது.
மலையாளத்தில் கிரந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எழுத்துக்களை அப்படியே மாற்றி புதிய எழுத்துக்களை உருவாக்கி வடமொழித் தேவைக்கான அத்தனை ஒலிப்புகளையும் உருவாக்கிக்கொண்டார்கள்.
கிரந்தம் இருந்ததாலோ என்னவோ நாம் நம்பித்தோம் :) இல்லாவிட்டால் அந்த மணிப்பிரவாளநடைக் காலத்தில் புதிய தமிழ் எழுத்துக்களையும் உருவாக்கி இருக்கக்கூடும். தமிழ் எழுத்துக்கள் மறைந்துபோயிருக்கும்.
இன்று குறியீட்டை ஏற்றுக்கொண்டால் மலையாளம்போலத்தான் தமிழ் ஆகிவிடும். அப்படியே வடமொழியை தமிழில் எழுதத்தொடங்கிவிடுவார்கள். என்பாடு திண்டாட்டம்தான் :) நான் தமிழை நேசிக்கிறேன்.
24 காரட் என்பது 22 காரட்டாக ஆகிவிட்டதுதான். ஆனாலும் அது 14 காரட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியாகினும் தங்கம் என் தமிழ். மலையாளம்போல 4 காரட் ஆகி தங்கமே அல்ல என்ற நிலையில் இல்லை.
அன்புடன் புகாரி2011/1/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
. தனிமலையாளம் இயக்கம்
அங்கே காணோம்.தனி மலையாளம் தமிழாக இருக்கும் :)செல்வா--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
தனிமலையாளம் என்று ஒன்று இல்லை,அப்படி இருந்தால் அது தமிழே.தமிழுடன் பலவாறு சமசுக்கிருதம் கலந்ததால்மலையாளம் உருவாகியது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
அன்புமிகு வேந்தன் ஐயா,
மலையாளிகள் நமது குருதியில் பிரிந்தவர்கள் என்றால் என்றோ அவர்களுக்கு உடன்பிறப்பு நேயம் உருவாகும்.
வரும்பொங்கல் விழாவை இனிதே கொண்டாடி புத்தாண்டை இனிதே வரவேற்போம்.
தமிழை அறிவியல் தொழில் நுட்பக்கருத்துக்களை எளிமையாக இனிமையாக உரையாடு வதற்கு ஏற்ற கலைச்சொற்களை உருவாக்க முயலவேண்டும். பிற மொழியில் படித்துவிட்டு மேலும் தெளிவான புரிதலுக்கு தமிழில் படிக்க மாக்கள் வரவேண்டும்." ஏய் அது என்னடா எந்திரோபி .சரியா அறுத்துட்டாருப்பா" போன்ற மனதுடன் நம்பிக்கையுடன் தமிழுக்கு மக்கள் திரும்பவேண்டும்.
அன்பு செல்வாவும்,திரு இராமகியும் இதில் நம்மை முன்னின்று அழைத்துச்செல்லமுடியும்.
அன்புடன்
அரசு
--
இல்லை எல்லாம் திருக்குறளில் இருந்து அல்ல.சங்க இலக்கியத்தில் பிற்கால இலக்கியத்திலும்,இன்றைய கட்டுரைநடைத் தமிழிலும் (புனைகதை,கவிதை போன்ற இலக்கியமல்லா எழுத்துகள்)உண்டு. எங்கெங்கு எவ்வளவு இந்த ஆய்தம் பயன்பட்டுள்ளது என்று கட்டாயம் அலசமுடியும்.யாரும் செய்திருக்கின்றார்களா அறியேன்.
தாய் என்றாலும் யாய் என்றாலும் ஒன்றுதான் நான் என்றாலும்யான் என்றாலும் ஒன்றுதான் (பொருள் வேறுபாடு இல்லை),
அகரம் என்பதைஅஃகான் என்றால் அங்கே ஆய்தம் அ என்னும் ஒலிப்பைக்காட்டுகின்றாது. ஆனால் இதே சொல் குறைவுபடாதவன்(அஃகுதல் = சுருங்குதல்) என்றும் பொருள்படும். அட்சயபாத்திரம்என்பதை அஃகா ஏனம் என்றோ அஃகாக்கிண்ணி என்றோ கூடக்கூறலாம். அதாவது இசைக்காக இல்லை எழுத்தோரன்ன பணிபுரிகின்றது என்று சொல்ல வந்தேன்.
ஆய்தம் மிக நுணுக்கமான ஒரு படைப்பு, வடிப்பு.
மலையாளம் உருவானதற்குக் காரணம் என்று நான் நினைப்பது, அவர்கள் வடமொழியை நேசித்து தமிழுக்குள் ஏராளமாக ஏற்றுக்கொண்டதுதான்.
மொழி மட்டும் மாறவில்லை, எத்தனையோ குமுக மாற்றங்களும்எற்பட்டுள்ளன.
இன்று குறியீட்டை ஏற்றுக்கொண்டால் மலையாளம்போலத்தான் தமிழ் ஆகிவிடும். அப்படியே வடமொழியை தமிழில் எழுதத்தொடங்கிவிடுவார்கள். என்பாடு திண்டாட்டம்தான் :) நான் தமிழை நேசிக்கிறேன்.நான் குறியீட்டை பொது வழக்குக்கு ஏற்கப் பரிந்துரைக்கவில்லை.எங்கேனும் ஒலிப்பைக் காட்ட (அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கைப்பயன்படுத்துகிறார்களே அது போல ஆனால் அத்தனைத் துல்லியமாகஇல்லை) என்று வைத்துக்கொள்ளுங்கள்.
24 காரட் என்பது 22 காரட்டாக ஆகிவிட்டதுதான். ஆனாலும் அது 14 காரட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியாகினும் தங்கம் என் தமிழ். மலையாளம்போல 4 காரட் ஆகி தங்கமே அல்ல என்ற நிலையில் இல்லை.நான் அப்படிக் கருதவில்லை. என்னைப் பொருத்த அளவிலே,மலையாளமும் 22 காரட்டுத் தங்கமே. அவரவர்களுக்கு அவரவர் மொழிஉயர்வு, இனிமை.அன்பாகப் பேசினால் எல்லா மொழியும் இனிமை.
நண்பர் திருநாவுக்கரசு,
இந்தியாவில் ஓடும் ரயில்கள், பறக்கும் விமானங்கள், கப்பல்கள், துணைக் கோள்கள், அணுமின்சார நிலையங்கள், அனல்மின்சார நிலையங்கள், ரசாயனத் தொழிற் சாலைகள், அண்டவெளி ராக்கெட் அமைப்பகம், விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள், பேரணைகள், கணினி தொழில் நுணுக்கம் ஆகியவற்றை எல்லாம் பீரங்கி கொண்டு பிளக்கப் போகிறீரா ?
நூறாயிரம் வீரர்கள் கொண்ட சிராசு உத் தௌளா எனற வங்காள் நவாபை 500
ஆங்கிலத் துருப்புகளும் சுமார் 4000 இந்திய கூலிப்படையையும் கொண்டு நடந்த
போரில் இராபர்ட் கிளவ் ஓடச்செய்தான். நவாபின் முக்கிய தளபதியின் மகன்
நவாபை விரட்டிச்சென்று வெட்டிக்கொன்றான். இப்படித்தான் ஆங்கில
கிழக்கிந்தியக்கம்பெனி தன் முதல் அரசை பிடித்தது.
கட்டபொமன்,மருதுபாண்டியர்கள்,திப்பு சுல்தான் அனைவரும் வீழ்ந்தது கூடவே
இருந்து காட்டிகொடுக்கப்பட்டவர்களால்தான். துரொகம் இந்த மண்ணில் நன்றாகவே
வளர்கிறது.
எனவே தனித்தமிழ் நூல்கள் வரவேயில்லை என்பதல்ல.அதற்கான அழுத்தம் இல்லை.
தேவையும் அரசின் கவனமும் கொடுக்கப்பட்டால் நூல்கலை
கொண்டுவந்துவிடமுடியும்.
தனித்தமிழின் தேவை தமிழர்களால் உணரப்படவேண்டும். அருமையான பல
கலைச்சொற்கலுடன் வரும் தங்கள் நூல்களை தனித்தமிழ்ப்படுத்துவது பெரிய
சிக்கலே இல்லை.
மொழி ஆயிரம்காலத்துப்பயிர்.
அன்புடன்
அரசு
On 1/13/11, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
> *நண்பர் செல்வா,*
> **
> **
> *தூய தமிழில், சங்கத் தமிழில், கிரந்தமற்ற தனித்தமிழில் யார் விஞ்ஞானத்தைப்
> படைக்கக் கூடாதென்று தடுக்கிறார் ? கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்த் திராவிடக்
> கட்சிகள்தானே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இதுவரை தனித்தமிழில் எத்தனை விஞ்ஞான
> நூல்கள், படைப்புகள் வெளிவந்துள்ளன ????*
> **
> **
> *ஜெயபாரதன்*
>
> +++++++++++++++++++++++
>
> 2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
>
>>
>>
>> 2011/1/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
>>
>>> *நண்பர் திருநாவுக்கரசு,*
>>> **
>>> **
>>> *இந்தியாவில் ஓடும் ரயில்கள், பறக்கும் விமானங்கள், கப்பல்கள், துணைக்
>>> கோள்கள், அணுமின்சார நிலையங்கள், அனல்மின்சார நிலையங்கள், ரசாயனத் தொழிற்
>>> சாலைகள், அண்டவெளி ராக்கெட் அமைப்பகம், விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள்,
>>> பேரணைகள்,
>>> கணினி தொழில் நுணுக்கம் ஆகியவற்றை எல்லாம் பீரங்கி கொண்டு பிளக்கப்
>>> போகிறீரா ?*
>>>
>>
>> இல்லைங்க நீங்க சொல்றமாதிரி
>> கிரந்தத்தை வைத்தே காப்பாத்திடலாங்க :) :)
>>
>> செல்வா
>>
>>
>>
>>
>>>
>>>
>>> *ஜெயபாரதன்.*
>>> **
>>> *+++++++++++++++*
>>>>>> *தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு
>>>>>> வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித்
>>>>>> தமிழ்
>>>>>> மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது !
>>>>>> *
>>>>>> **
>>>>>> *அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ் மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ்
>>>>>> வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடு களைத் தமிழ்
>>>>>> உலக
>>>>>> மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள்
>>>>>> தமிழர்
>>>>>> புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப்
>>>>>> போய்,
>>>>>> நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும்.*
>>>>>> **
>>>>>>
>>>>>> *தலைக்கு ஏற்றபடி தொப்பி. காலுக்கு உகந்த செருப்பு.*
>>>>>>
>>>>>>
>>>>>> *சி. ஜெயபாரதன்*
>>>>>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>>>>>>> .
>>>>>>> For more options, visit this group at
>>>>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>>>>
>>>>>>
>>>>>> --
>>>>>> அன்புடன் - உலகின் முதல்
>>>>>> யுனித்தமிழ்க் குழுமம்
>>>>>> http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html
>>>>>>
>>>>>
>>>>> --
>>>>> You received this message because you are subscribed to the Google
>>>>> Groups "தமிழ் மன்றம்" group.
>>>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>>> To unsubscribe from this group, send email to
>>>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>>>>> .
>>>>> For more options, visit this group at
>>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>>
>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> கோ.திருநாவுக்கரசு
>>>> தாளாண்மை உழவர் இயக்கம்
>>>> செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
>>>> திருவாரூர் மாவட்டம்.
>>>> பேசி: 9380297522
>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google
>>>> Groups
>>>> "தமிழ் மன்றம்" group.
>>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>> To unsubscribe from this group, send email to
>>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>>>> .
>>>> For more options, visit this group at
>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>
>>>
>>> --
>>> You received this message because you are subscribed to the Google Groups
>>> "தமிழ் மன்றம்" group.
>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>> To unsubscribe from this group, send email to
>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>>> .
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>
>>
>>
>>
>> --
>> Regards
>> Selva
>> ___________________
>> C.R.(Selva) Selvakumar
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "தமிழ் மன்றம்" group.
>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>> To unsubscribe from this group, send email to
>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>> .
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
--
நூறாயிரம் வீரர்கள் கொண்ட சிராசு உத் தௌளா எனற வங்காள் நவாபை 500 ஆங்கிலத் துருப்புகளும் சுமார் 4000 இந்திய கூலிப்படையையும் கொண்டு நடந்த போரில் இராபர்ட் கிளவ் ஓடச்செய்தான். நவாபின் முக்கிய தளபதியின் மகன் நவாபை விரட்டிச்சென்று வெட்டிக்கொன்றான். இப்படித்தான் ஆங்கில கிழக்கிந்தியக்கம்பெனி தன் முதல் அரசை பிடித்தது.
கட்டபொமன்,மருதுபாண்டியர்கள்,திப்பு சுல்தான் அனைவரும் வீழ்ந்தது கூடவே இருந்து காட்டிகொடுக்கப்பட்டவர்களால்தான். துரொகம் இந்த மண்ணில் நன்றாகவே வளர்கிறது.
நன்றாகச் சொன்னீர்கள்!
எனவே தனித்தமிழ் நூல்கள் வரவேயில்லை என்பதல்ல.அதற்கான அழுத்தம் இல்லை.தேவையும் அரசின் கவனமும் கொடுக்கப்பட்டால் நூல்கலைகொண்டுவந்துவிடமுடியும்.
[..]
மொழி ஆயிரம்காலத்துப்பயிர்.
பேராசிரியர் செல்வா,
நீரும் உமது தனித்தமிழ்க் கூட்டமும் தனித்தமிழில் எழுதினால் விஞ்ஞானம். கிரந்தம், வடமொழி கலந்து எழுதினால் முழுமையாக விஞ்ஞானமில்லை என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக என்னோடு தர்க்கமிட்டு வருகிறீர்.
என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் வைக்கும் அதேவேளை பக்கத்து வீட்டு குழந்தையை அவர்பெற்றோர் அழைக்கும் முறையில் புஷ்பா என்றுதான், என்னாலும் சிக்கலின்றி கூறமுடியுமென்பதால், அழைப்பேனே தவிர புசுப்பா என்று அழைக்கமாட்டேன்.
தாங்கள் கூறிவரும் மீக்குறிகள் இன்றைய நிலையில், நாம் பயன்படுத்தும்
ஒலிகளை எழுதுவதில், நமக்கிருக்கும் இயலாமையைக் குறிக்கிறது.
பயன்படுத்தக்கூடாது என்று கூறவில்லை என்றாலும் அளவுக்கதிகமாக
பயன்படுத்துதல் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தும்.
வல்லினம் மெலியும் ஒலிகள் என்று குறிப்பிட ஆங்கிலத்துக்கு போகும் தாங்கள் இயலாமை இருப்பதையல்லவா சுட்டி வெளிப்படுத்துகிறீர்.
அன்புடன்
பாரதி
அன்புள்ள அரசு,நூறாயிரம் வீரர்கள் கொண்ட சிராசு உத் தௌளா எனற வங்காள் நவாபை 500 ஆங்கிலத் துருப்புகளும் சுமார் 4000 இந்திய கூலிப்படையையும் கொண்டு நடந்த போரில் இராபர்ட் கிளவ் ஓடச்செய்தான். நவாபின் முக்கிய தளபதியின் மகன் நவாபை விரட்டிச்சென்று வெட்டிக்கொன்றான். இப்படித்தான் ஆங்கில கிழக்கிந்தியக்கம்பெனி தன் முதல் அரசை பிடித்தது.
கட்டபொமன்,மருதுபாண்டியர்கள்,திப்பு சுல்தான் அனைவரும் வீழ்ந்தது கூடவே இருந்து காட்டிகொடுக்கப்பட்டவர்களால்தான். துரொகம் இந்த மண்ணில் நன்றாகவே வளர்கிறது.நன்றாகச் சொன்னீர்கள்!
பேராசிரியர் செல்வா,நீரும் உமது தனித்தமிழ்க் கூட்டமும் தனித்தமிழில் எழுதினால் விஞ்ஞானம். கிரந்தம், வடமொழி கலந்து எழுதினால் முழுமையாக விஞ்ஞானமில்லை என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக என்னோடு தர்க்கமிட்டு வருகிறீர்.
--
> உங்களால் முடியுது, கூப்பிடறீங்க
>
> என் பெயரை எந்த வெள்ளையனாலும் சொல்ல முடியலே
>
> இதுக்கும் அவனுக்காக எழுத்துக்கூட்டை மாற்றி வச்சிருக்கேன்
>
> RAJENDRAN
>
> இதை அவன் எப்படி எல்லாம் சங்கதி போட்டு சொல்லுறான்
> ரஜென்றன்
> ரயென்றன்
> ரஜென்றான்
>
> என ஒரு சில
>
> இனி raajEnthiran வச்சா ராஜெந்திரன் நு சொல்லுவானே
>
> அதுக்கு பாரதியும் பரதனும் என்ன சொல்ல போறீங்க
அவர்தம் மொழியால் எழுதியதையே, வேற்றுமொழிச் சொல் என்பதால், அவர்களால்
உரைக்க/படிக்க முடியவில்லை. நாமோ நாம் நாளும் சொல்ல்வததையே
எழுதமுடிவதில்லை.
STAR TV என்பதை தூய தமிழில் "சுடர் இடிவி" (சுட்டர்/சுட்டார் உடுவி)
என்றும் அவர்கள் விசய மல்லையாவிடமிருந்து வாங்கிய வகிடத்தை (channel)
"விசய் இடுவி" என்று தான் உச்சரிப்பேன் என்கிறீர்களா?
>
> அமெரிக்காக்காரன் பவுண்டையும் இஞ்சையும், காலனையும் இன்னும் விடமாட்டேன்
> என்கிறான். அவனுக்காக உலக தொழிற்கூடங்கள் எல்லாம் இரண்டு அலகுகளிலும் பண்டம்
> படைக்குது
>
> நமக்கு அந்த திமிறு ஏன் இல்லாமல் போச்சு. ஏழ்மையா?
இருப்பவனுக்குத்தான் திமிர் இருக்கணும், ஏற்பவனுக்கல்ல. அவர்களின்
ஏகாதிபத்தியம் தளர்ந்ததால்தான் இரண்டு அலகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அன்புடன்
பாரதி
>
> லாட்டின் மொழி இட்டாலியன் மொழி ஆனது போல் தமிழை திமிழ் ஆக மாற்றிட என்னவெல்லாம்
> காரணம் கண்டு பிடிக்கிறீங்க?
>
> சேக்ஸ்பியரை செகப்பிரியர்னு சொனன செகப்பிரியர் நொந்து போவாரம்
>
> லக்ஷ்மண் ஐ இலக்குவன் னு சொன்ன கம்பரால் இலக்குவன் தற்கொலை செய்துகிட்டானா?
>
> சைனாக்காரியை எவராவது கட்டிக்கிட்டு வந்து அவள் பேரை எழுத தமிழில் எழுத்து
> இல்லைனு புலம்பபோறாரு
நானும் முன்னர் தங்களைப்போன்ற எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் இன்று
உலகம் முழுவதும் அறிவியல்/நுட்பம்/வணிகம் என்பவை ஆங்கிலத்தை
முன்னிறுத்திச் சென்றுகொண்டு இருக்கின்றன. நாளை புள்ளிவிபரங்களைத்
தருகிறேன்.
எனவே அடிப்படை, அறிமுகம், மேலோட்டம் என்ற அளவில்தான் அறிவியல்/நுட்பம்/
வணிகம் போன்றவற்றில் நம்மால் வளர்க்க முடியும். உலகின் சிறந்த அறிவியல்
நுட்ப கட்டுரைகளைக் கொண்டிருந்த மொழிகள் இன்று ஆங்கிலத்திடம் சரணடைந்து
வருகின்றன. நம் பேரா. செல்வாவின் நுட்பம் சார்ந்த கட்டுரைகளைப் பாருங்கள்
http://valluvar.uwaterloo.ca/~selvakum/selva1.html அவர் எழுதிவரும்
ஆயிரக்கணக்கான தமிழ் விக்கிபீடியா மற்றும் ஜெயபாரதன் ஐயாவின் நுட்பியல்
கட்டுரைகள் அறிமுகம் அல்லது மொழிபெயர்ப்பு என்றுதான் அமைந்திருக்கும்.
தனித்தமிழ் இயக்கத்தின் மூலம் சமயம் சார்ந்த சமஸ்கிருதத்தை
வென்றெடுத்தோம். ஆனால் அறிவியலும், நுட்பியலும் வணிகமும் மிகப்பெரியான.
உலகவழி செல்லுதலே நன்மைபயக்கும்.
அன்புடன்
பாரதி
> அன்பு செல்வாவும்,திரு இராமகியும் இதில் நம்மை முன்னின்று
> அழைத்துச்செல்லமுடியும்.
> அன்புடன்
> அரசு
>
> 2011/1/12 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > 11 ஜனவரி, 2011 10:34 pm அன்று, C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>எழுதியது:
>
> > தனிமலையாளம் என்று ஒன்று இல்லை,
> >> அப்படி இருந்தால் அது தமிழே.
> >> தமிழுடன் பலவாறு சமசுக்கிருதம் கலந்ததால்
> >> மலையாளம் உருவாகியது.
>
> > செல்வா
> > மலையாளிகள் எங்கள் மொழிதான தமிழ்னு சொல்லி போராடினால் எம்தமிழர் எங்கு சென்று
> > ஒளிவார்கள்?
>
> > நான் மலையாள திரைப்படபாடல்களை விரும்பி கேட்பேன். ஊடே பெயத ஒரு சில வடசொற்களை
> > களைந்தால் மலையாள பாடல்கள் சங்கத்தமிழ் போல் இருக்கும்
>
> > --
> > வேந்தன் அரசு
>
> > எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
> > ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>
STAR TV என்பதை தூய தமிழில் "சுடர் இடிவி" (சுட்டர்/சுட்டார் உடுவி)
என்றும் அவர்கள் விசய மல்லையாவிடமிருந்து வாங்கிய வகிடத்தை (channel)
"விசய் இடுவி" என்று தான் உச்சரிப்பேன் என்கிறீர்களா?
நான் நம்மால் உச்சரிக்கக் கூடியதை நம்மக்களால் சந்தேகமின்றி படிக்கவும்
வேண்டும் என்றுதான் சொல்லிக்கினே தவிர, தாங்கள் கூறுவதுபோல் நான் என்றுமே
நினைத்ததில்லை. சிதறம் (விக்கிபீடியா) என்ற சொல்லைத்தான் நான்
விரும்புவேன்.
அன்புடன்
பாரதி
>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
ஆகவே நதி ஓடுவதைக் காண நான் இங்கே கூத்தாடுகிறேன்.
மனதில் உறுதி வேண்டும் என்பதை உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று எழுதினால்தான் தமிழா? அல்லது மனதில் உறுதி வேண்டும் என்றும் எழுதலாமா?
2011/1/13 Mani Manivannan <mmani...@gmail.com>
இந்த முன்மொழி x மறுமொழி கலந்துரையாடலில் இம்மன்றத்தில் இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களும், மொழியியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளவில்லை என்பதைக் காண்கிறேன்.மொழி வளர்ச்சி என்பது ஒரு தனித்துறை. மொழிக்குத் தேவையானவற்றைப் பற்றி ஆற அமரச் சிந்தித்துப் பரிந்துரைகள் செய்யக் கூடிய அறிஞர்கள் பலர் கூடிப் பேச வேண்டும்.இங்கே வாதிடுவோர்கள் பெரும்பாலும் பொறியாளர்கள்.பொறியாளர்களுக்கு என்று ஒரு தனிப் பண்பு உண்டு.இருக்கும் எதையும் சும்மா விட்டு வைக்க மாட்டோம். நோண்டிக் கொண்டே இருப்போம். திருத்திக் கொண்டே இருப்போம். முழுமையாக எதையாவது படைத்து விட்டால் எங்களுக்குத் தலையே வெடித்து விடும்! அதுதான் எங்கள் துறையின் பண்பு. இதில் மென்கலன் துறை என்றால் இப்படிப் பட்ட நோண்டல்கள் மிகவும் எளிதாகச் செய்ய முடியும். யூனிக்கோடு குறியீடு மென்கலன் தொடர்புள்ளது அல்லவா! நன்றாக நோண்டலாம். ;-)--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
வேந்தரே,
> உங்களால் முடியுது, கூப்பிடறீங்க
>
> என் பெயரை எந்த வெள்ளையனாலும் சொல்ல முடியலே
>
> இதுக்கும் அவனுக்காக எழுத்துக்கூட்டை மாற்றி வச்சிருக்கேன்
>
> RAJENDRAN
>
> இதை அவன் எப்படி எல்லாம் சங்கதி போட்டு சொல்லுறான்
> ரஜென்றன்
> ரயென்றன்
> ரஜென்றான்
>
> என ஒரு சில
>
> இனி raajEnthiran வச்சா ராஜெந்திரன் நு சொல்லுவானே
>
> அதுக்கு பாரதியும் பரதனும் என்ன சொல்ல போறீங்க
அவர்தம் மொழியால் எழுதியதையே, வேற்றுமொழிச் சொல் என்பதால், அவர்களால்
உரைக்க/படிக்க முடியவில்லை. நாமோ நாம் நாளும் சொல்ல்வததையே
எழுதமுடிவதில்லை.
STAR TV என்பதை தூய தமிழில் "சுடர் இடிவி" (சுட்டர்/சுட்டார் உடுவி)
என்றும் அவர்கள் விசய மல்லையாவிடமிருந்து வாங்கிய வகிடத்தை (channel)
"விசய் இடுவி" என்று தான் உச்சரிப்பேன் என்கிறீர்களா?
எனது படைப்புகளுக்கு எத்தகைய வரவேற்பு என்று பாருமையா பேராசிரியர் செல்வா அவர்களே.
1. http://jayabarathan.wordpress.com/wp-admin/index.php?page=stats&view=postviews&date=2011-01-12&blog=633798 (ஜனவரி 12, 2011)2. http://jayabarathan.wordpress.com/wp-admin/index.php?page=stats&blog=633798&view=postviews&numdays=-1&summarize (இதுவரைப் பார்த்தோர், படித்தோர் எண்ணிக்கை)
இந்தப் படைப்புகள் அகந்தை, ஆணவம், செருக்கல்ல. நெற்றி வேர்வை. தமிழ்ச் சேவை.
கருத்துகளைக்கூறி முடிவு செய்ய வேண்டியவை இரண்டு நெறிகளைப்பற்றியது.
1. ஜ,ஸ,ஹ ..போன்ற கிரந்த வரி வடிவங்களை தமிழ் எழுத்துக்களுடன் கலந்து
எழுவதை தவிர்க்கவேண்டும்.
2.புதிய கலைச்சொற்களைப்படைகும்போது தமிழ்ச்சொற்களாக படைப்பது.
பிறமொழிச்சொற்களைத் தவிர்த்து தமிழ்ச்சொற்களை
பயன்படுத்துவது.பிறமொழிச்சொற்கலை பயன்படுத்துவது என்றால் தமிழின் இலக்கண
மரபுக்கு கட்டுப்பட்டு பயன்படுத்துவது.
இந்த நெறிகள் பற்றி இவ்வளவு நீளமாக பேசிக்கொண்டே போக என்ன இருக்கின்றது.
நடைமுறையில் எவளவோ நடக்கின்றன. போது இடங்களில் எச்சல் துப்புவது, போது
இடங்களில் கழிப்பது, குப்பைகலை வீசுவது, நெகிழிப் பைகளை கண்டபடி
பயன்படுத்துவது போன்று எவ்வளவோ நிகழ்ச்சிகள்
நடக்கின்றன.தனிமனித உரிமை என்பதுபோல செய்கிறார்கள். ஏதாவது குறுக்கீடு
என்றால் நீ யாரடா அதைக்கேட்க என்று முகத்தைக்காட்டுகிறார்கள்.
பொது வழியில் இடதுபக்கமோ,வலது பக்கமோ ஏதாவது ஒருவழியை ஒத்துக்கொண்டு
அவ்வாறு செல்லவேண்டும்.
இந்தியாவில் இடதுபக்கம் செல் என்பது சாலை விதி.அமெரிக்காவில் வலதுபக்கம்
செல் என்பது நெறி.
இந்திய சாலைகளில் நான் வலது பக்கம்தான் எனது மகிழுந்தை ஓட்டுவேன் என்பது
குற்றம். தனிமனித உரிமை பொதுவழியில் அடங்கித்தான் போக வேண்டும்.
தமிழில் கலப்புத்தமிழ் என்றும் தூய தமிழ் என்றும் பேசுவது வேடிக்கைதானே.
மொழிக்கல்ப்பும், பண்பாட்டுக்கலப்பும் பல நூற்றாண்டு களாக அன்னிய
இனங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த அவலத்தால் வந்தவை.உடலைப்பீடித்த
ஒட்டுண்ணிகள்.இவைகளைப்புறக்கணிக்க வேண்டுமென்றால் அதை ஏன் இவளவு
கடுமையாகப்பார்க்கிறீர்கள்.
நாம் பயன்படுத்தும் மொழி பல நாடுகளிலும் பயன்படுகிறது.வருங்காலங்களிலும்
பயன்படப்போகின்றது.ஆளுக்கு ஒரு நெறி அந்தந்த நேரத்திற்கு வசதியான
நடைமுறையென்பதை எப்படி ஏறுக்கொள்வது..
"உஷ்ணம்" என்ற சொல்லை பயன்படுத்தும்போது, ஐயா இதற்கு இணையாக எத்தனையோ
தமிழ்ச்சொற்கள் இருக்க ஏன் இந்த சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் என்று
கேட்பதில் என்ன தவறு.?
நீங்கள் ஏராளமான மொழி பெயர்ப்புகள் செய்கிறீர்கள்? மொழி பெயர்க்கும்போது
தமிழில் எழுதுங்கள். பிற மொழிச்சொற்களையும் ,பிற வரி வடிவங்களையும்
கொண்டுவராதீர்கள். கோடிக்கணக்கானவர்கள் வாசிக்கிறார்கள் என்பதே
மொழிக்கலப்பினை அவர்கள் அனுமதிக்கிறார்கள் என்று பொருளா? அந்த
மொழிக்கலப்பு இருப்பதால்தான் அறிவியல் விளங்குகிறது என்று பொருளா?
ஆங்கிலத்தில் எழுதும்போது, " what i want to சொல் is பாஷை is just a tool
for communication like a toilet பேப்பர்." என்று எழுதும் நெஞ்சுரம்
யாருக்காவது இருக்கிறதா? இது முடியும் என்றால் நீங்கள் சொலவதும்
சரிதான் ??
தமிழக படித்த கூட்டத்தின் இழிந்த் ஒரு பண்பாட்டுச்சிதைவு
இந்த.மொழிக்கலப்பு இதை இழிவென்பதைவிட ஒரு பண்பாட்டின் உயர்வாகக் கருதும்
ஒரு எடுபிடிக் கூட்டத்தின் பரிமாற்ற மொழி.
கிரந்த வரிவடிவத்தையும் , பிறமொழிச்சொற்களையும் கொண்டு வந்து
சேர்க்கும்போது தமிழ்மொழி ஒரு பொதுபயன்பாட்டு கருவூலம் எனபதை மனதில்
கொள்ளுங்கள் என்றுதான் வேண்டுகிறோம்.
அன்புடன்
அரசு
On 1/13/11, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
> *பேராசிரியர் செல்வா,*
> **
> *விஞ்ஞானம், பிரபஞ்சம், சக்தி, உஷ்ணம், வளர்வேகம், பௌதிகம், ஐன்ஸ்டைன்,
> ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான், டால்ஸ்டாய், டாடா, ஜெயபாரதன், ராஜம்,
> என்றெல்லாம் தமிழிலும் விஞ்ஞானத்திலும் எழுதக் கூடாது என்று எனக்கு
> அறிவுரை புகட்டிய தனித் தமிழாசிரியர் அல்லவா நீங்கள் ? *
> **
> *யாரையா வலை உலகில் புளுகுவது ?*
> **
> **
> *சி. ஜெயபாரதன்
>
> *++++++++++++++++++++
>
>
> 2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
>
>>
>>
>> 2011/1/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
>>
>>> *பேராசிரியர் செல்வா,*
>>> **
>>>
>>> *நீரும் உமது தனித்தமிழ்க் கூட்டமும் தனித்தமிழில் எழுதினால் விஞ்ஞானம்.
>>> கிரந்தம், வடமொழி கலந்து எழுதினால் முழுமையாக விஞ்ஞானமில்லை என்று கடந்த
>>> ஐந்தாறு ஆண்டுகளாக என்னோடு தர்க்கமிட்டு வருகிறீர்.*
>>> *
>>> *
>>>
>>
>>
>> ஐயா,
>>
>> *பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
>> புறஞ் சொல்லலாகாது பாப்பா*
>>
>> என்று வரும் மகாகவி பாரதியாரின் பாட்டைக்
>> கேட்டிருப்பீர்கள்!
>>
>> மேலே நீங்கள் சுட்டியவாறு எங்கே நான்
>> சொன்னேன் என்று கூறுங்கள் !
>> கிரந்தம் இல்லாமல் தமிழில் "விஞ்ஞானம்" வளராது
>> என்று நீங்கள் கூறியதற்கு பல எடுத்துக்காட்டுகல்
>> தரமுடியும்.
>> தமிழ் எழுத்தில் எழுதுவதால் தனித்தமிழா?!!
>> இது திரிப்பு அல்லவா?
>> ஐதரசன், ஈலியம், வாடிக்கை, கமலம், அலமாரி
>> தலம் முதலான ஆயிரக்கணக்கான சொற்கள்
>> தமிழில் உள்ளனவே. நானும் என்னைப் போன்ற
>> எத்தனையோ பேரும் பயன்படுத்துகின்றோமே!
>> கிரந்தம் கலந்துதான் கட்டாயம் எழுத வேண்டும் என்னும்
>> திணிப்புவாதத்தை (வாதம் என்பது சமசுக்கிருதமமென்பார்கள்
>> அல்லவா/ :) ) நான் ஏற்பவன் அல்லன். தமிழில் எழுதும்பொழுது
>> தமிழ் எழுத்துகளில், வழிவழியாய் வந்த தமிழ் முறைப்படி,
>> தமிழை மதித்து எழுதுவதைப் போற்றுபவன். எழுதும்
>> மொழியை மதிப்பவன்.
>>
>> *துன்பம் நெருங்கிவந்த போதும் -நாம்
>> சோர்ந்துவிட லாகாது பாப்பா
>> அன்பு மிகுந்ததெய்வ முண்டு -துன்பம்
>> அத்தனையும் போக்கிவிடும் பாப்பா*
>>
>> அப்படியான அன்பே தெய்வம் அல்லது கடவுள் என்பதை
>> நம்பும் ஒருவன். எண்ணிப்பார்க்க இயலா
>> கொடுமைகள் உள்ளன என்றறிவேன். நன்றும் தீதும்
>> ஏனுளதென்றல் அறிதலோ கூறுதலோ அரிது,
>> அது இயற்கை, அது அவன் ஆடல், அதுவிதுவுது எனலாம்.
>> ஆனால் சிற்றறிவுக்கு எட்டியவாறு நல்லதுக்காக,
>> அன்புக்காக நல்லறிவுக்காக, நல்லொளிக்காக நம்மால்
>> ஆன அளவு உழைத்தல் வேண்டும். என்னும் எண்ணத்தால்
>> உந்தப்படுபவன். என் வழி தவறெனில் திருத்திக்கொள்ளக்
>> கடவேன்.
>>
>> அன்புடன்
>> செல்வா
>>
>>
>>
>>>
>>> *ஜெயபாரதன்.*
>>> **
>>> ++++++++++++++++++++++
>>> 2011/1/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
>>>
>>>> அன்புள்ள அரசு,
>>>>
>>>>
>>>>> நூறாயிரம் வீரர்கள் கொண்ட சிராசு உத் தௌளா எனற வங்காள் நவாபை 500 ஆங்கிலத்
>>>>> துருப்புகளும் சுமார் 4000 இந்திய கூலிப்படையையும் கொண்டு நடந்த போரில்
>>>>> இராபர்ட் கிளவ் ஓடச்செய்தான். நவாபின் முக்கிய தளபதியின் மகன் நவாபை
>>>>> விரட்டிச்சென்று வெட்டிக்கொன்றான். இப்படித்தான் ஆங்கில
>>>>> கிழக்கிந்தியக்கம்பெனி
>>>>> தன் முதல் அரசை பிடித்தது.
>>>>> கட்டபொமன்,மருதுபாண்டியர்கள்,திப்பு சுல்தான் அனைவரும் வீழ்ந்தது கூடவே
>>>>> இருந்து காட்டிகொடுக்கப்பட்டவர்களால்தான். துரொகம் இந்த மண்ணில் நன்றாகவே
>>>>> வளர்கிறது.
>>>>>
>>>> நன்றாகச் சொன்னீர்கள்!
>>>>
>>>>
>>>>> எனவே தனித்தமிழ் நூல்கள் வரவேயில்லை என்பதல்ல.அதற்கான அழுத்தம்
>>>>> இல்லை.தேவையும் அரசின் கவனமும் கொடுக்கப்பட்டால்
>>>>> நூல்கலைகொண்டுவந்துவிடமுடியும்.
>>>>>
>>>>
>>>>
>>>> செயபாரதன் ஐயா அறியவில்லை என்றால் வரவில்லை என்றா பொருள்?!
>>>> தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 34 தொகுதிகளாக அமைந்த அறிவியல்,
>>>> வாழ்வியற் கலைக்களஞ்சியங்களைப் படித்திருக்கின்றாரா? இசுட்டீவன் ஆக்கிங்
>>>> அவர்களின் நூலை நலங்கிள்ளி என்பார்
>>>> தமிழில் *காலம்* என்னும் தலைப்பில் வெளியிட்ட நூலைப் படித்திருக்கின்றாரா,
>>>> ஒரு கோடி சொற்களால் அமைந்த தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல தமிழில்
>>>> வெளியாகியுள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் படித்திருக்கின்றாரா? போகட்டும்,
>>>> அவர் ஆற்றும் பணியை நான் மிகப்போற்றுகின்றேன் எனினும் அவர் பல முறை கூடாத
>>>> அகந்தையுடன், தான் மட்டுமே அறிவியல் நூல் எழுதுவது போலவும்,
>>>> கிரந்தம் இல்லாமல் அறிவியல் வளர்ச்சி நடவாது என்பது போலவும்
>>>> திரித்துப் பேசுவதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
>>>> கொஞ்சமாவது அறிவோடு சிந்தித்துப் பாருங்கள், நீங்களோ
>>>> மற்றவர்களோ எழுதிய, கிரந்தம் கலந்து எழுதிய நூல்களிலோ,
>>>> கட்டுரைகளிலோ, *கிரந்தத்தை நீக்கிவிட்டால் அறிவியல்*
>>>> *போய்விடுமா?* *விஞ்ஞானம் என்பதை அறிவியல் என்று மாற்றி*
>>>> *எழுதிவிட்டால் அறிவியல் போகுமா?!!* அடிப்படை அறிவு
>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>
>>>>> >
>>>>> >>>>>>> .
>>>>> >>>>>>> For more options, visit this group at
>>>>> >>>>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>> >>>>>>>
>>>>> >>>>>>
>>>>> >>>>>> --
>>>>> >>>>>> அன்புடன் - உலகின் முதல்
>>>>> >>>>>> யுனித்தமிழ்க் குழுமம்
>>>>> >>>>>> http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html
>>>>> >>>>>>
>>>>> >>>>>
>>>>> >>>>> --
>>>>> >>>>> You received this message because you are subscribed to the
>>>>> Google
>>>>> >>>>> Groups "தமிழ் மன்றம்" group.
>>>>> >>>>> To post to this group, send email to tamil...@googlegroups.com
>>>>> .
>>>>> >>>>> To unsubscribe from this group, send email to
>>>>> >>>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>
>>>>> >
>>>>> >>>>> .
>>>>> >>>>> For more options, visit this group at
>>>>> >>>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>> >>>>>
>>>>> >>>>
>>>>> >>>>
>>>>> >>>>
>>>>> >>>> --
>>>>> >>>> கோ.திருநாவுக்கரசு
>>>>> >>>> தாளாண்மை உழவர் இயக்கம்
>>>>> >>>> செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
>>>>> >>>> திருவாரூர் மாவட்டம்.
>>>>> >>>> பேசி: 9380297522
>>>>> >>>>
>>>>> >>>>
>>>>> >>>>
>>>>> >>>> --
>>>>> >>>> You received this message because you are subscribed to the Google
>>>>> >>>> Groups
>>>>> >>>> "தமிழ் மன்றம்" group.
>>>>> >>>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>>> >>>> To unsubscribe from this group, send email to
>>>>> >>>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>
>>>>> >
>>>>> >>>> .
>>>>> >>>> For more options, visit this group at
>>>>> >>>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>> >>>>
>>>>> >>>
>>>>> >>> --
>>>>> >>> You received this message because you are subscribed to the Google
>>>>> Groups
>>>>> >>> "தமிழ் மன்றம்" group.
>>>>> >>> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>>> >>> To unsubscribe from this group, send email to
>>>>> >>> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>
>>>>> >
>>>>> >>> .
>>>>> >>> For more options, visit this group at
>>>>> >>> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>>>>> >>>
>>>>> >>
>>>>> >>
>>>>> >>
>>>>> >> --
>>>>> >> Regards
>>>>> >> Selva
>>>>> >> ___________________
>>>>> >> C.R.(Selva) Selvakumar
>>>>> >>
>>>>> >> --
>>>>> >> You received this message because you are subscribed to the Google
>>>>> Groups
>>>>> >> "தமிழ் மன்றம்" group.
>>>>> >> To post to this group, send email to tamil...@googlegroups.com.
>>>>> >> To unsubscribe from this group, send email to
>>>>> >> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsu...@googlegroups.com>
>>>>> <tamilmanram%2Bunsu...@googlegroups.com<tamilmanram%252Buns...@googlegroups.com>
13 ஜனவரி, 2011 2:25 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:
--
14 ஜனவரி, 2011 9:03 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
ஸ்டீஃபன் ஹாக்கிங் ஜூன் 20, 2010 இல் கனடாவின் வாட்டர்லூ பல்கலைக் கழகத்துக்கு உரையாற்ற வருகை தந்திருந்தார்.
நண்பர் செல்வா பகலில் நடந்த ஆங்கில வரவேற்புரையில் :we cordially welcome you Dr. Stephen Hawking என்று கூறுவார்.மாலை தமிழர் சார்பாக அழைத்திருக்கும் மேடையில் செல்வா ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை எப்படி அழைத்து வரவேற்பார் ?
ஐயாரஜினிகாந்த் என ஒரு தமிழ்நடிகர் இருக்கார்அவர் மராட்டியர்.அவரு பேரு சிவாஜிராவ். ஆனால் திரைஉலகில் அவர் பேர் ரஜினிகாந்த்ரஜிகாந்த்னு சொன்னால் திரையுலகம் அறியும்.இது போல்தான் எந்த ஆங்கில சொல்லானால்னும் அதுக்கு தமிழ் சொல் படைப்போம்.நான் போய் Dr. Stephen Hawking இடம் தமிழில் பேசப்போவது இல்லை. ஆனால் உங்களிடம் அவரைப்பற்றி பேசும் போது சுடீவன் ஆக்கிங்க் என்பேன்.கன்னடக்காரனிடமோ அல்லது சீனனிடமோ பேசும்போது தமிழில் பேசுவது இல்லை. ஆங்கிலம்தான். Dr. Stephen Hawking னு செப்பிடுங்கோ.சோ வாட் ஈசு யுவரு புராபிளமு?
வேந்தன் அரசுஎம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்