புதிய தமிழ்த்தாய் வாழ்த்து - மலேசியா

9 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 27, 2011, 5:00:30 AM1/27/11
to
மலேசிய எழுத்தாளர் சங்கம் ஜனவரி 23ம் தேதி வெளியிட்டுள்ள புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.


பாட்டைக் கேட்டருள்வீர்!

-----------------------

நிலைபெறநீ வாழியவே!
ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்

காப்பியனை ஈன்றவளே!
     காப்பியங்கள் கண்டவளே!
   கலைவளர்த்த தமிழகத்தின்
     தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
     தனிப்பெருமை கொண்டவளே!
  தமிழரொடு புலம்பெயர்ந்து
     தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
        சிங்கைதனில் ஈழமண்ணில்
   இலக்கியமாய் வழக்கியலாய்
        இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
        புத்தாக்கம் அத்தனைக்கும்
   பொருந்தியின்று மின்னுலகில்
        புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
        செழித்திருந்த பொற்காலம்
    சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
        செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
        அறிவுயர்ந்த தற்காலம்
    அழகழகாய் உரைநடையும்
        ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
        நிலவரம்பின் தடைகடந்து
     கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
       நிலவினுக்கே பெயர்ந்தாலும்
    நினதாட்சி தொடருமம்மா!
       நிறைகுறையாச் செம்மொழியே
           நிலைபெறநீ வாழியவே!

Reply all
Reply to author
Forward
0 new messages