ஐ என்பதன் பொருள்கள்

9 views
Skip to first unread message

செல்வா

unread,
Jun 6, 2009, 11:35:25 PM6/6/09
to தமிழ் மன்றம்
ஐ என்பதன் பொருள்கள் (வெறும் அகராதிபொருள்
என்று நினைக்கவேண்டாம். இவற்றை விரித்துக் கூற
இயலும்- தமிழில் நெடுக ஊடுருவி நிற்கும்
ஒரு சொல்)- கீழுள்ள பொருள்களைத்
தருவது கழகத் தமிழ் அகராதி. நன்றி.

1 அரசன்
2 அழகு
3 இருமல்
3 ஒரு சாரியை
4 ஒரு தொழிற் பெயர் விகுதி
5 ஒரு பண்புப்பெயர் விகுதி
6 கடவுள்
7 கடுகு
8 கருவிப்பொருளில் வரும் ஒரு பெயர் விகுதி
9 குரு
10 கோழை
11 தலைவன்
12 சர்க்கரை
13 சவ்வீரம்
14 சிவன்
15 தண்ணீர் முட்டான் கிழங்கு
16 சிலேட்டுமம்
17 செயப்படுபொருளிலே வரும் ஒரு பெயர் விகுதி
18 ஒரு பெயர் விகுதி
19 தும்பை
20 துர்கை
21 நுண்மை
22 பருந்து
23 தந்தை
24 பெருநோய்
25 யானையைப் பாகன் அதட்டும் ஓசை
26 வினைமுதற் பெயரிலே வரும் ஒரு பெயர் விகுதி
27 வெண்ணெய்
28 வியப்பு
29 ஐந்து
30 ஐயம்
31 ஓர் இடைச்சொல்
32 கணவன்
33 மருந்து

அன்புடன்
செல்வா

வேந்தன் அரசு

unread,
Jun 7, 2009, 10:20:41 PM6/7/09
to tamil...@googlegroups.com


இத்தனை பொருளா?

இரண்டாம் வேற்றுமை உருபு?

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது பாடலில் என் ஐ என வருமே அது என்ன ஐ?


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

அன்புடன் புகாரி

unread,
Jun 7, 2009, 10:26:37 PM6/7/09
to tamil...@googlegroups.com
ஆம் வேந்தன்
 
செல்வா அவர்களின் பட்டியல் சிரத்தை மிகக்கொண்டது
அதிசயிக்க வைத்தது
 
முனைவர் செல்வாவுக்கு நன்றி
 
அன்புடன் புகாரி

2009/6/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

Kumaran Malli

unread,
Jun 7, 2009, 10:28:18 PM6/7/09
to tamil...@googlegroups.com
அந்தப் பாடலில் வரும் ஐ சொல்வது இந்தப் பட்டியலில் 11வதாக இருக்கும் பொருள் தானே வேந்தன் ஐயா? அந்தப் பொருள் கொண்டால் தான் இந்தப் பாடல் ஒரு பெண்/தலைவி பாடியதாக அமையும்.

2009/6/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

அன்புடன் புகாரி

unread,
Jun 7, 2009, 10:37:23 PM6/7/09
to tamil...@googlegroups.com
அன்பின் குமரன் மல்லி,
 
உங்களைப் பற்றிய அறிமுகம் தாருங்களேன். எந்த ஊர் என்ன செய்கிறீர்கள் போன்ற விபரங்கள். அறியும் ஆவலோடு
 
அன்புடன் புகாரி

2009/6/7 Kumaran Malli <kumara...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jun 7, 2009, 10:44:38 PM6/7/09
to tamil...@googlegroups.com
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் க்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

ஐ எனில் அம்மா?

Kumaran Malli

unread,
Jun 7, 2009, 10:59:11 PM6/7/09
to tamil...@googlegroups.com

அன்பரே புகாரி,

நான் மதுரைக்காரன். பிறப்பால் சௌராட்டிர மொழி பேசுபவன் (இங்கே என் சாதியைச் சொல்லவில்லை; தமிழன் என்று ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதைப் போல் என் மொழியை முன்னிட்ட அறிமுகத்தைத் தருகிறேன்). மதுரை வாழ் / தமிழகம் வாழ் சௌராட்டிரர் அனைவருக்கும் தமிழ் இரண்டாம் தாய்மொழி. எனக்கு தமிழின் மீது கொஞ்சம் அன்பு மிகுதி. அதனால் சிறுவயதிலிருந்து பக்தி இலக்கியங்களில் தொடங்கி அண்மைக்காலமாக (ஐந்தாறு வருடன்ங்களாக) சங்க இலக்கியங்களையும் படித்துக் கொண்டிருக்கிறேன். 1998 முதல் பல குழுமங்களில் இணைந்திருந்தாலும் எழுதியவை குறைவு. 2005 முதல் வலைப்பதிவுகளில் நிறைய எழுதியிருக்கிறேன்.
 
எனக்கு 37 அகவை ஆகிறது. நானும் என் துணைவியாரும் கணிமென்கலனாளர்கள். இரு குழந்தையர். மகள் தேஜஸ்வினிக்கு வயது ஆறு. மகன் சேந்தனுக்கு வயது இரண்டு. (தமிழும் வடமொழியும் என் இரு கண்கள் என்று சொல்வேன். குலக்கடவுள் பரங்குன்றம் முருகன். அவனது பெயரை இரு குழந்தைகளுக்கும் இரு மொழிகளிலும் வைத்திருக்கிறோம்). கடந்த பன்னிரண்டாண்டுகளாக வாழ்வது அமெரிக்காவில் இருக்கும் மினசோட்டா மாநிலத்தில்.
 
எனது கிறுக்கல்களை கூடலில் பார்க்கலாம். http://koodal1.blogspot.com
 
எனது மற்ற வலைப்பதிவுகளைக் காண http://www.blogger.com/profile/07949712075078577802
 
தமிழ்மண நாட்காட்டியாக 2006ல் இருந்த போது எழுதியது. மைந்தன் பிறந்ததை இந்தப் பாடலில் இணைத்தது 2008 மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்த போது.
 
நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்று தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினெட்டு; அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

விளையாட்டுத் தோழனாய்
வீட்டிலே அக்கைக்கு
விளைந்தானே மைந்தனவனே!
தளை நீக்கி அடியாரைத்
தான் தாங்கிக் காப்பாற்றும்
சிவகுமரன் சேந்தனவனே!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்;
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்
தமிழ்மணத்தின் விண்மீனாய்
வாழ்த்திடுவீர்! வாழ்த்துவீரே!
மின் தமிழ் குழுமத்தில் என் அஞ்சல்கள் சிலவற்றைக் காணலாம். தமிழ் மன்றம் தொடங்கப்பட்ட போது இணைந்தேன். இன்று தான் பேசும் வாய்ப்பு கிட்டியது.
 
அன்பன்,
குமரன்.


 
2009/6/7 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

Kumaran Malli

unread,
Jun 7, 2009, 11:00:09 PM6/7/09
to tamil...@googlegroups.com
ஐ அம்மா எனில் இந்தப் பகுதிக்கு என்ன பொருள் வேந்தன் ஐயா?
 
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

2009/6/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

N. Ganesan

unread,
Jun 8, 2009, 7:04:55 AM6/8/09
to தமிழ் மன்றம்

On Jun 6, 10:35 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> ஐ என்பதன் பொருள்கள் (வெறும் அகராதிபொருள்
> என்று நினைக்கவேண்டாம். இவற்றை விரித்துக் கூற
> இயலும்- தமிழில் நெடுக ஊடுருவி நிற்கும்
> ஒரு சொல்)- கீழுள்ள பொருள்களைத்
> தருவது கழகத் தமிழ் அகராதி.  நன்றி.
>

சென்னைத் தமிழ்ப் பேரகராதி தரும் பொருள்கள்:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.4379.0.69.tamillex

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 8, 2009, 7:57:07 AM6/8/09
to தமிழ் மன்றம், மின்தமிழ், Santhavasantham
On Jun 7, 9:44 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
> நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
> எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
> பசலை உணீஇயர் வேண்டும்
> திதலை அல்குல் என் மாமைக் கவினே
>
> ஐ எனில் அம்மா?
>

ஐ என்றால் பாடல் தலைவியின் ஐயன் = காதலன் (தலைவன்).

பயன்படாமல் வீணாகும் ஆவின் பாலைப் போல்
என் பெண்மை எனக்கோ, அன்றி என் காதலனுக்கோ இன்றி
என் பொலிவு குறைகிறது என்கிறாள் தலைவி.

தமிழ் சினிமாவில் இப்பாடல் பாடப்பட்டுள்ளது:
சேட்டுப் பெண் போல :)
http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8

விஜயநகர மன்னர்கள் தாபித்த பம்பை (கன்னடத்து ஹம்பி நகரம்)
காணலாம்.
பம்பை = மெதுவாய்ப் பம்பிச் செல்லும் ஆறு.
(தமிழ்நாட்டிலும் பம்பை என்னும் வேறோர் ஆறு உள்ளது)
விஜயநகர மன்னர்கள் தமிழ்நாட்டுக் கலைவடிவுகளை
(உ-ம்: ராஜகோபுரம். திருமங்கை ஆழ்வாருக்குக் கோவில், ...)
அமைத்தமை பம்பைநாதர் விரூபாக்‌ஷர் கோயிலில் காண்க.

இந்த ”ஐ” - பெரியார்வாதிகள் எழுதும் “அய்” உடன் சமானம் அன்று.
ஐ > அய் ஆகாது. இரண்டும் வேறான சொற்கள், ஒலிப்புகள்.
ஐ > அய், ஔ > ஔ என்றெழுதுதல் தமிழின் தொல்காப்பியத்தின்
இரண்டு உயிர் எழுத்தையே நீக்குதல். அது கூடாது.

மேலும் ஒன்று, சீர்மையாளர் சொல்லும் எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம்
வேறுபட்டது. அது காலம் காலமாக மாறும் தமிழ் *வடிவத்தை*
மாத்திரம் அறிவியல் அமைப்பாக்குவதாகும். எழுத்தையே
நீக்குவதல்ல. உ-ம்: நாம் பயன்படுத்தும் எம்ஜிஆர் எழுத்து.
சாதாரணர்களுக்காக ஏன் எளிய மாற்றம்
எழுத்தில் வேண்டும் என்கிறார் அறிஞர்
வா. செ. குழந்தைசாமி.
http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274
எம்ஜிஆர் எழுத்தாலோ, உயிர்மெய் (உ/ஊ) உடைப்பாலோ
தமிழ் எழுத்தின் ஒலிகள் பிசகுவதில்லை.

நா. கணேசன்

விரூபாக்‌ஷர் சிவன் கோயில் பழனி மலைகளிலும் உண்டு.
அவ்விடத்தில் விளையும் வாழைப் பழம் விருப்பாச்சிப்
பழம் - இப்போது அழிந்தே விட்டது என்கின்றனர்.
விரூபாக்‌ஷன் (முக்கண்ணன்) = விருப்பாச்சன்.
ராஜபக்‌ஷன் = இராயபக்கன்/இராயபட்சன்/இராயபச்சன் (தமிழில்).

N. Ganesan

unread,
Jun 22, 2009, 6:48:07 PM6/22/09
to சந்தவசந்தம், tamil...@googlegroups.com, மின்தமிழ்

செல்வா எழுதினார்:

>அண்மையில் உண்மடி என்று ஒரு சொல்லைக் கண்டேன்.
>நாம் ஆங்கிலத்தில் couch potato என்கிறோமே. அதேதான்.
>மடிமை என்றால் சோம்பல். உண்டு உண்டு சோம்பி இருப்பவனுக்கு
>உண்மடி என்று பெயர். இது பற்றி ஒரு கட்டுரையைத் தமிழ்
>விக்கிப்பீடியாவில் எழுத எண்ணியுள்ளேன் (சுருக்கமாகவேனும்).

நல்ல சொல்! நன்கு எழுதுங்கள்.

அகராதிப் பொருள்: ”உண்மடி - உண்ணுஞ் சோம்பேறி”
http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t8825.html

இப்பொழுதுதான் நன்னூலின் ஒருசொல் விளங்குகிறது.
http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0152.html
” மாணாக்கராகாதார் இலக்கணம்
களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித்
தடுமா றுளத்தன் தறுகணன் பாவி
படிறன்இன் னோர்க்குப் பகரார் நூலே 39 ”

(வீணே) களியாட்டங்களில் ஈடுபட்டுப்
பணிமுடிக்காச் சோம்பேறி = களிமடி
என்று பொருள் கொண்டால் சிறக்கும்.
உண்மடி = உண்ணுஞ் சோம்பேறி,
அதுபோல், களிமடி = களிக்கும்/களியாடும் சோம்பேறி.
கள்ளுண்டு சோம்பிக் கிடப்பவன் எனலும் தகும்.

மடி என்னும் பெயர்ச்சொல் அடையாக
களி என்று கொள்ளும் நன்னூல் உரைகள்
உளவா? என்று பார்க்கவேண்டும்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages