அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன்

115 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Dec 17, 2010, 10:12:19 PM12/17/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, thantha...@googlegroups.com, anb...@googlegroups.com


அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன்

(1642-1727)

சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா

"உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !"

ஐஸக் நியூட்டன்

"எந்த ஓர் உயிரினமும் விண்வெளியை ஏதோ ஓர் முறையில் சார்ந்திருக்க முடியாமல் தனித்திருக்க இயலாது.  கடவுள் எங்கும் உள்ளது.  படைக்கப் பட்ட மனித உள்ளங்கள் எங்கோ இருக்கின்றன.  அதை ஆட்கொண்ட உடல் விண்வெளியில் உள்ளது."

"பேரெழில் கொண்ட இந்தப் (பிரபஞ்ச) ஏற்பாடு பேரறிவும், பேராற்றலும் உள்ள ஓர் உயிர்ப்பு அரங்கிலிருந்துதான் தோன்றி இருக்க முடியும்."

ஐஸக் நியூட்டன்

"நாம் போதுமான பாலங்களைக் கட்டாமல், பல்வேறு மதில் சுவர்களைத்தான் எழுப்புகிறோம்."

ஐஸக் நியூட்டன்

"இயற்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நியூட்டனுக்கு அதில் உள்ள மெய்ப்பாடுகள் சிரமமின்றி எளிதாகப் புரிந்தன,"

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்!  அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன!  நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்!  அது இரு நூறாண்டுகள் நீடித்தன!  இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்!  அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)

கோபுரத்தில் நின்று கோள்களை நோக்கிய நியூட்டன் !

'மற்றவரை விடத் தீர்க்கமாக நான் எதையும் காண முடிவதற்குப் பல மாமேதைகளின் தோள் மீது நின்று கொண்டு நான் நோக்குவதுதான் காரணம்' என்று ஐஸக் நியூட்டன் ஒருமுறை கூறியிருக்கிறார்! அவருக்குத் தோள் கொடுத்துத் தூணைப்போல் தாங்கிக் கொண்டிருப்பவரில் தலையாய மேதைகள் இருவர்! முப்பெரும் அண்டக் கோள்களின் சுற்று விதிகளைப் படைத்த ஜொஹானஸ் கெப்ளர், ஒருவர்! அடுத்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 'பெளதிக விஞ்ஞானத்தின் பிதா' என்று போற்றிய காலிலியோ! பெளதிக விஞ்ஞானத்திற்கு விதையிட்டு நீர் ஊற்றிச் செடி யாக்கியவர் காலிலியோ என்று சொன்னால், அதை விருத்தி செய்துப் படரும் ஆல விழுதுகளாகப் பெருகச் செய்தவர், ஐஸக் நியூட்டன்!  முதன் முதல் விஞ்ஞானத் துறையில் நிறை [Mass], பளு [Weight], விசை [Force], முடத்துவம் [Inertia], வளர்வேகம் [Acceleration], தளர்வேகம் [Deceleration], ஈர்ப்பியல் [Gravity], அசைப்பியல் [Dynamics], ஓளிப்பட்டை [Light Spectrum], பகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus], தொகுப்பியல் கால்குலஸ் [Integral Calculus] ஆகிய கணித விஞ்ஞானப் பதங்களைத் தெளிவாக விளக்கி, அவற்றைக் கணிதச் சார்பியல் சமன்பாடுகளில் இணைத்தவர், ஐஸக் நியூட்டன் !

பிரபஞ்சக் கோள் நகர்ச்சிக்குச் சீரான கணித அமைப்பாட்டை ஆக்கிய கெப்ளரின் ஒப்பற்ற விதிகளைப் பற்றிப் பரவசப் பட்டு, 1605 இல் நியூட்டன் கூறினார்: 'பிரபஞ்சத்தின் அண்டகோள யந்திரம், வெறும் தெய்வீக ஆக்கம் என்று இல்லாது, ஒரு கடிகார வேலைப்பாடு என்று கெப்ளரால் அறியப்படுவது இனிமை தருகிறது ! கடவுள் சாவி கொடுத்துத் துவங்கிய பிரம்மாண்டமான கடிகார இரும்புச் சுருள் [Watch Spring] கொண்டது இந்தப் பிரபஞ்சம்' என்று காண நியூட்டன் விரும்புகிறார்! பிரபஞ்ச அண்டங்களின் நகர்ச்சிகளில் [Celestial Mechanics of the Universe] மாறாத கணித விதிகளால் ஆளப்படுகின்றது என்று நியூட்டன் உறுதியாய் நம்பிடக் கெப்ளரின் அண்டகோள் விதிகள் உதவி செய்தன! புரியாத பிரபஞ்ச மர்மங்களைப் பூர்த்தி செய்ய இறுதியில், நியூட்டனே அண்டங்களின் இயக்கத்திற்குப் புதிய நியதிகள் ஆக்கவும், அவற்றின் நகர்ச்சிகளுக்கு ஓர் 'கட்டமைப்பு அரங்கம்' [Frame Work] அமைக்கவும் வேண்டிய தாயிற்று!

காலிலியோ, கெப்ளர் பாதையைத் தொடர்ந்த கணித மேதை

ஜெர்மன் வானியல் மேதை கெப்ளர் தனது முப்பெரும் அண்டக் கோள் விதிகளை ஆக்கிய பிறகு, அவை ஒன்றை ஒன்று ஓர் ஒழுங்கு நியதியில் ஏன் சுற்றி வருகின்றன என்ற வினா அவர் சிந்தையில் எழுந்தது! 1596 இல் கெப்ளர் எழுதிய 'பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம்' [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்!

1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டுபிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்!  அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசைகளே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றிவர உதவுகின்றன என்றும் கூறினார். மேலும் நியூட்டன் கால்குலஸ் [Calculus] என்னும் கணிதத்தை ஆக்குவதற்கு முன்னோடியாக உதவியவர் கெப்ளரே! தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதை யிட்டவரும் கெப்ளரே!

பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட பளுக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காட்டியவர், காலிலியோ! அதன்பின் 1604 இல் 'விழும் அண்டங்களின் விதியை' ஆக்கினார். 'விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது' [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்!

'வெளிப்புற விசை பாதிக்காத ஓர் அண்டம் திசை மாறாமல், வேகம் திரியாமல் சீராகச் செல்கிறது' என்று ஐஸக் நியூட்டனின் நகர்ச்சி விதிகளுக்கு [Newton 's Laws of Motion] அடியெடுத்துக் கொடுத்த பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், காலிலியோவின் சோதனைகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தனது உன்னத 'ஈர்ப்பியல் நியதியை' [Theory of Gravitation] உருவாக்கினார்!

பெளதிகத்தில் ஐஸக் நியூட்டனின் அற்புதப் படைப்புகள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒருவரைத் தவிர, உலக மாந்தர் கருதி யிருந்த பிரபஞ்சத்தின் அமைப்பாடை மாபெரும் அளவில் மாற்றிக் காட்டியவர், ஐஸக் நியூட்டன்! கெப்ளரின் ஒப்பற்ற அண்டக்கோள் சுற்று விதிகளையும் [Laws of Planetary Motion], காலிலியோவின் யந்திரவியலையும் [Galileo 's Mechanics] ஒருங்கிணைத்து, பிரபஞ்ச கோளங்களின் 'அகிலமய ஈர்ப்பியல் விதியை' [Universal Law of Gravitation] ஆக்கினார். நியூட்டனின் எதிரிகளும் அவரது ஈர்ப்பியல் தத்துவத்தை மனதுக்குள் ஆதரித்து வரவேற்றனர்!

மூன்று யந்திரவியல் விதிகளையும், ஒப்பற்ற ஈர்ப்பியல் நியதியையும் படைத்ததாக நியூட்டன் நினைவுக்கு வந்தாலும், அவர் அணுவியலைப் [Atomism] பற்றி எழுதி யிருப்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்! அவர் 1704 இல் ஆக்கிய 'ஒளியியல்' [Opticks] என்னும் நூலில் 'அணுவியல் நியதிக்கு' [Atomic Theory] வேண்டிய அரிய பல விஞ்ஞானக் கருத்துக்களை வழங்கி யுள்ளார்! 'சோதனை அணுவியல் ரசாயனத்திற்கு' [Experimental Atomic Chemistry] மூல கர்த்தாவான பிரிட்டிஷ் மேதை ஜான் டால்டன் [John Dalton (1766-1844)], நியூட்டனின் அணுவியல் கூற்றைப் பின்பற்றித் தனது புகழ் பெற்ற அணுவியல் நியதியை பிறப்பித்தார்!


நியூட்டன் மனித இனத்துக்குப் பரிசாக அளித்த 'இயற்கை வேதாந்தத்தின் கணிதக் கோட்பாடுகள்' ['Principia' The Mathematical Principles of Natural Philosophy (1687)] விஞ்ஞான உலகில் புரட்சி செய்த முதல் கணிதப் படைப்பு. பதினெட்டு மாதங்களில் உதயமாகி வடிவம் பெற்ற அந்நூல், நியூட்டனின் தனித்துவ ஆராய்ச்சிகளில்தான் உருவானது. அது சிறப்பாக அண்ட கோளங்களின் நகர்ச்சி, அவற்றிடையே ஒன்றை ஒன்று கவர்ந்து ஆட்சி புரியும் ஈர்ப்பியல்பு ஆகியவற்றைக் கணித வடிவில் விளக்குகிறது. வெளிவந்த உடனே விஞ்ஞான வரலாற்றில் உலகின் மாபெரும் மகத்தான கணிதக் காவியமாக அது இடம் பெற்றது! அந்நூல் பிரபஞ்சத்தில் நிகழும் மர்மமான, புதிரான, மாயமான பல நிகழ்ச்சிகளுக்கு 'அகிலமய ஈர்ப்பியல்பு' [Universal Gravitation] மூலக் காரணம் என்று காட்டுகிறது! கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] எழுவதற்குக் காரணம் காட்டியது! நிலவின் ஒழுங்கற்ற நகர்ச்சி [Irregular Motion] எவ்வாறு உண்டகிறது என்பதை விளக்குகிறது. ஆட்டமிடும் பிரபஞ்ச அரங்கை, அந்நூல் கணிதக் கோட்பாடுகள் மூலம் அறிவிக்கிறது!

நியூட்டனின் அற்புதப் படைப்பு 'கோட்பாடுகள்' [Principia] என்னும் நூலின் கணிதச் சிறப்பை ஒப்பிட்டால், அது கணித மேதை யூக்ளிட் [Euclid] ஆக்கிய 'அடிப்படைகள்' [Elements] என்னும் நூலுக்கு இணையாகும்! அதன் பெளதிக நுணுக்கத்தையும், விளைவுகளையும் ஒப்பிட்டால், சார்லஸ் டார்வின் படைத்த 'உயிர்ப்பிறவிகளின் மூல அடிப்படைகள்' [Darwin 's Origins of Species] என்னும் நூலுக்குச் சமமாகும் !

ஐஸக் நியூட்டனின் அரிய வாழ்க்கை வரலாறு

இத்தாலிய மேதை காலிலியோ காலமான அதே ஆண்டு [1642], ஏசு மகான் பிறந்த நாள் டிசம்பர் 25 இல் உலக மெல்லாம் கொண்டாட, மாமேதை ஐஸக் நியூட்டன் இங்கிலாந்து லிங்கன்ஷயர், உல்ஸ்தோர்ப்பில் [Woolsthorpe, Lincolnshire] ஒரே பிள்ளையாகப் பிறந்தார். வானியல் மேதை கெப்ளர் பிறந்தது போல், குழந்தை முழு முதிர்ச்சிக்கு முன்னே [Premature Baby] வெளிவந்து, உயிரோடு வாழுமா என்று ஐயுறும்படி நலிந்து, மெலிந்து சிறிய வடிவில் இருந்தது! ஆனால் நியூட்டன் 84 வயது வரை வாழ்ந்து, வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்க முடியாத மகத்தான விஞ்ஞான மெய்ப்பாடுகளை ஆக்கினார்! வேளாண்மையில் ஈடுபட்ட அவரது தந்தை, பிள்ளை பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். இரண்டு வருடங்களில் மறு முறைத் திருமணம் செய்து கொண்ட தாயும், புதுத் தந்தையும், ஐஸக் நியூட்டனைப் பாட்டியிடம் விட்டுவிட்டு, அருகில் இருந்த கிராமத்தில் வாழச் சென்றனர்! இரண்டு வயது பச்சிளம் குழந்தை நியூட்டன், தாய் தந்தையரின் அன்பும், அணைப்பும், ஆதரவும் இன்றி ஒன்பது ஆண்டுகள் தனித்து வாழ வேண்டிய தாயிற்று! சிறுவன் நியூட்டன் தந்தையை வெறுத்துத் தாயோடு அவரையும் எரித்து, வீட்டைக் கொளுத்தி அவர்கள் மீது தள்ளப் போவதாய் ஒரு சமயம் பயமுறுத்தினான்! பிற்கால மனநோயில் அவர் பாதிக்கப் பட்டதற்குப் பால்ய வயதில் இல்லறப் பாதுகாப்பு இல்லாது, பயங்கரத் தனி வாழ்வில் அவதி யுற்றதே காரணம், என்று பின்னால் கூறினார் நியூட்டன்!


இரண்டாம் முறையாக விதவை ஆனதும், தாய் பத்து வயது நியூட்டனை அழைத்துக் கொண்டு போய் விவசாயத்தில் நுழைக்க முயன்றாள். அது தவறு என்று உணரப் பட்டு, பாட்டி நியூட்டனைக் கிரந்தம் இலக்கணப் பள்ளியில் [Grammar School in Grantham] சேர்த்தாள்! அங்கே அமைதியாக நடந்து கொண்ட நியூட்டன் படு மோசமாய்ப் படித்தான்! பிறகு பிரமிக்கத் தக்க அளவில் நியூட்டனின் அறிவு வெள்ளம் மடை திறந்தது! அவர் தங்கி யிருந்த இல்லம் ஒரு மருந்தியல் பட்டதாரிக்குச் [Pharmacist] சொந்த மானது. நியூட்டனின் பிற்கால ரசாயன வேட்கைக்கு, அவரே அடிகோலியவர்! சிறு வயதிலே சூரிய கடிகாரம் [Sun Dials], காற்றாடி மாடல் யந்திரம் [Model Windmill], நீர்க் கடிகாரம் [Water Clock], யந்திர வாகனம் [Mechanical Carriage], விளக்குக் கட்டிய பட்டம் [Kite with Lanterns at the Tail] ஆகியவற்றை சிறுவன் நியூட்டன் செய்தான். கிரந்தப் பள்ளி ஆசிரியர் ஒருவர், நியூட்டனின் அபார அறிவை வியந்து, நியூட்டன் கல்லூரிக்குப் போகத் தாயை உடன்பட வைத்தார்!

1661 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடி கல்லூரியில், நியூட்டன் சேர்ந்தார். அங்கே கணிதம், ஜியாமெட்ரி, டிரிகொனாமெட்ரி [Trignometry], வானியல் [Astronomy], ஒளியியல் [Optics] ஆகியவற்றைப் படித்தார். அவரது 23 ஆவது வயதில் அங்கே B.A. பட்டம் வாங்கினார். 1665 ஆம் ஆண்டு நியூட்டனின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போது பிளேக் நோய் பரவி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இரண்டு ஆண்டுகள் தற்காலியமாக மூடப் பட்டது! அந்த சமயத்தில் ஈரிலக்கக் கூட்டின் nth அடுக்கு எனப்படும் 'பைனாமியல் நியதி' [Binomial Theorem (X + Y) to power n], பகுப்பியல் கால்குலஸ், தொகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus & Integral Calculus] ஆகியவற்றின் அடிப்படைகள், ஈர்ப்பியல்பின் [Gravitation] துவக்கக் கருத்துக்கள் நியூட்டனுக்கு உதயம் ஆகின!


கால்குலஸ் என்று இப்போது அழைக்கப் படுவதை, நியூட்டன் ·பிளக்ஸியான்ஸ் [Fluxions] என்று அப்போது பெயரிட்டி ருந்தார். அடுத்து முப்பட்டைப் பளிங்கில் [Prism] சூரிய ஒளியைச் செலுத்தி நிறப்பட்டை [Light Spectrum] விரியும் விந்தையைக் கண்டு பிடித்தார்!  இதுவரை யாரும் ஓராண்டுக்குள் இவ்வாறு அரிய புதிய விஞ்ஞானக் கணிதப் படைப்புக்களை ஆக்கிய தில்லை!

1668 இல் M.A. பட்டத்தைப் பெற்று, டிரினிடியில் சிறப்புநராகி [Fellow of Trinity], தனது 26 ஆம் வயதில் புகழ்மிக்க லுகாஸியன் கணிதப் பேராசிரியர் [Lucasian Professor of Mathematics] உயர் பதவி கிடைத்தது! முப்பது ஆண்டுகள் நியூட்டன் கேம்பிரிட்ஜிலே தங்கி, ஏறக் குறைய முழு நேரமும் தனியாகப் படித்துக் கொண்டும், மற்ற விஞ்ஞானிகளுக்குக் கடிதம் எழுதிக் கொண்டும் காலம் தள்ளினார்! 1672 இல் நியூட்டன் 30 வயதாகும் போது லண்டன் ராயல் குழுவினரின் சிறப்புநர் [Fellow of Royal Society, London] விருதைப் பெற்றார்!

1687 இல் நியூட்டனின் முதல் பதிப்பு 'பிரின்ஸிபியா' வானியல் வல்லுநர், செல்வந்த நண்பர் எட்மண்டு ஹாலியின் [Edmund Halley (1656-1742)] நிதி உதவியில் அச்சாகி வெளிவந்தது. அப்போது லண்டனுக்கு வருகை தந்த உன்னத டச் விஞ்ஞானி கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens (1629-1695)] நியூட்டனைக் கண்டு பேசினார். 'பிரின்ஸிபியா' 1713 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு முறை திருத்தப் பெற்றது.  ஓய்வின்றி இரவும் பகலும் உழைத்ததால், நியூட்டன் மிகவும் சோர்வுற்று, 1692 இல் தீவிர மனமுடக்கம் [Severe Mental Depression] அடைந்து, அவரது சீரான சிந்தனா சக்தி சிதைந்தது! அதற்குப் பிறகு நியூட்டனின் விஞ்ஞானப் படைப்புகள் பெருமளவில் குறைந்தன!

நியூட்டன் கண்டுபிடித்த நகர்ச்சி விதிகள்

1665 இல் பிளேக் நோய் பரவி அடைபட்டுப் போன அந்த இரண்டு ஆண்டுகளில் நியூட்டனின் 'அசைப்பியல்' [Dynamics] பெளதிகச் சிந்தனை ஆரம்ப மானது. அதற்கு முன்பே அவர் 'வட்ட நகர்ச்சி' [Circular Motion], 'மோதும் அண்டங்கள்' [Colliding Bodies] ஆகியவற்றைப் பற்றி சிந்தித்திருந்தார். விசை [Force], முடத்துவம் [Inertia], நகர்ச்சி [Motion], சுழல்வீச்சு விசை [Centrifugal Force] ஆகியவை அண்டங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் அவர் அறிந்திருந்தார். அவற்றைப் பயன் படுத்தி அவர் புதிய நகர்ச்சி விதிகளை [Laws of Motion] ஆக்கினார்!

முதல் விதி: ஓர் அண்டத்தைப் புற விசை எதுவும் தள்ளாத போது, அது நிற்கும்; அல்லது நேர் கோட்டில் சீரான வேகத்தில் செல்லும். இவ்விதியே இப்போது 'முடத்துவக் கோட்பாடு' [Principle of Inertia] என்று அழைக்கப்படுவது.  எந்த ஒரு பண்டத்தையும் நகர்த்த, ஒரு விசை தேவைப்படும் என்பது அரிஸ்டாடில் காலம் முதலே கூறப் பட்டது! இவ்விதி விசைக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகிறது.

இரண்டாம் விதி: ஓர் அண்டத்தின் நகர்ச்சி வேக மாறுபாடு அதன் நிறைக்கு எதிர் விகிதத்திலும், தள்ளும் விசைக்கு, செல்லும் திசைக்கு நேர் விகிதத்திலும் உள்ளது. இவ்விதி வளர்வேகக் கோட்பாடு [Principle of Acceleration] என்று குறிப்பிடப் படுகிறது. [விசை = நிறை x வளர்வேகம்], [Force = Mass x Acceleration]. அதாவது விசை ஓர் அண்டத்தின் நிறைக்கு [Mass] ஏற்றபடி நேர் விகிதத்தில் வேக வளர்ச்சியை அதனில் உண்டாக்குகிறது.

மூன்றாம் விதி: ஒவ்வொரு நேர் உந்தலுக்கும் எதிரே அதற்குச் சமமான எதிர் உந்தல் உண்டாகுகிறது. நியூட்டன் ஆறு உபரி விதிகளை [Corollaries], மூன்றாவது விதிக்கு எழுதினார். எப்படி ஓர் அண்டம் நகர்த்தப் படுகிறது என்பதை, மூன்றாம் விதி விளக்குகிறது.

ஆப்பிள் பழ வீழ்ச்சி, ஈர்ப்பியல் நியதிக்கு அடிகோலியது!

நியூட்டன் தனது ஈர்ப்பியல் நியதியை 23 ஆவது வயதில் யூகித்தார்! ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுந்து சிந்தனையைக் கிளரியது,  ஐஸக் நியூட்டனின் கூற்றுப்படி மெய்யாக நடந்த ஒரு நிகழ்ச்சி! ஆப்பிளைத் தன்னகத்தே இழுக்கும் பூமி, மாபெரும் நிலவையும் அதே போன்று தன்வசம் இழுத்துப் பாதையில் சுற்ற வைக்க வேண்டும் என்று நியூட்டன் அனுமானித்தார்! ஆனால் அந்தக் கருத்து முழுமை பெறும் வரைத் தாமதம் செய்துக் கவனமோடுப் பல்லாண்டுகள் கழித்தே அதை வெளியிட்டார்! அவரது ஈர்ப்பியல் நியதி அண்டக் கோள்கள் நீள்வட்ட வீதியில் சுற்றுவதற்குக் காரணத்தை விளக்கியது. பூமியை நோக்கி அண்டங்கள் விழுவதை எடுத்துக் காட்டியது. கை தவறிக் கீழே விழுந்துடையும் பண்டத்துக்கும் காரணி ஈர்ப்பியல் விசையே! அண்ட கோளங்களைச் சீராகப் பரிதியைச் சுற்றி வரச் செய்வதும் ஈர்ப்பியல் விசையே என்று நியூட்டன் கருதினார்.

அவர் ஆக்கிய 'அகிலமய ஈர்ப்பியல் நியதி' [Universal Gravitational Theory] இதுதான்: 'இரு அண்டங்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு எனப்படும் கவர்ச்சி விசை அவற்றின் நிறைகளின் பெருக்கலுக்கு [Product of two Masses] நேர் விகிதத்திலும், இடைத் தூரத்தின் ஈரடுக்கிற்குத் தலைகீழ் விகிதத்திலும் [Inversely Proportional] உள்ளது'.  பூமியின் மேலே எறியப்படும், அல்லது கீழே விழும் ஓர் அண்டத்தின் பளு [Weight], அந்த அண்டத்தின் ஈர்ப்பியல் விசையின் அளவைக் காட்டுகிறது. ஆனால் ஐன்ஸ்டைனின் 'ஒப்பியல் நியதி' [Theory of Relativity] ஈர்ப்பியலை, வரைவடிவில் [Geometrically] காண்கிறது. அதாவது 'ஓர் அண்டத்தின் பிண்டம் [Matter] அதன் அருகே உள்ள பிரதேசத்தில், நாற்புற அங்களவு கொண்ட கால-வெளித் தொடர்ச்சி வளைவை [Curvature of the Four Dimensional Space-Time Continuum] உண்டாக்குகிறது'. அவ்வாறு ஐன்ஸ்டைன் ஈர்ப்பியலை இருபதாம் நூற்றாண்டில் விளக்கினார்!

நியூட்டன் ஆக்கிய ஒளியியல் (Optics) நியதி

நியூட்டனின் படைப்புப் பொற்காலம் எனப்படும் [1665-1666] இரண்டு ஆண்டுகளில் ஒருசமயம், சூரிய ஒளியை முப்பட்டைப் பளிங்கில் [Prism] கடந்து செல்ல விட்டு, ஒளி பல்நிறப் பட்டையாய்ப் [Light Spectrum] பிரிவு படுவதைக் காட்டினார். அந்நிறங்கள் ஏழு: [(VIBGYOR) Violet, Indigo, Blue, Green, Yellow, Orange & Red]. அச்சோதனை மூலம் நிறப் பிரிவுகள் ஒளியின் உடன்பிறந்த குணாதிசயம் என்றும், நிறங்கள் முப்பட்டைப் பளிங்கின் தன்மைகள் இல்லை என்றும் விளக்கம் தந்தார்! அந்தச் சோதனையின் துணை விளைவு நியூட்டன் எதிரொளி தொலை நோக்கியை [Reflecting Telescope] மேம்படுத்தி விருத்தி செய்தது!

1704 ஆம் ஆண்டில் நியூட்டன் எழுதிய ஒளியியல் [Optics] நியதி என்ன கூறுகிறது ? 'கதிர் வீசும் அண்டங்களின் ஒளியானது நுண்ணிய துகள்களைக் [Particles] கொண்டது'. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அக்கோட்பாடு நீடித்தது. அதன் பின்பு 'ஒளியின் அலைக் கோட்பாடு' [Wave Theory of Light] ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.  பிறகு 20 ஆம் நூற்றாண்டில் மைகேல்ஸன் ஐன்ஸ்டைன் [Michelson, Einstein] 'ஒளியின் மின்காந்தக் கோட்பாடு' [Electro-magnetic Theory of Light] மற்ற கோட்பாடுகளைக் கீழே தள்ளி, அதன் கை ஓங்கியது!

நியூட்டன், லைப்னிஸ் படைத்த கால்குலஸ் கணிதம்

நியூட்டன் விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்து கொண்டு வந்த போது, 1665 இல் அவர் கண்டு பிடித்து விருத்தி செய்தது, சிற்றிலக்கங்களைக் கையாளும் 'பகுப்பியல் கால்குலஸ்' [Differential Calculus].  பலவித யந்திரவியல், நீரழுத்த அசைப்பியல் பிரச்சனைகளைத் [Mechanical, Hydrodynamic Problems] தீர்வு செய்ய கால்குலஸ் கணித முறையை உபயோகிக்கலாம். விஞ்ஞானப் பொறியியல் பிரச்சனைகளையும் தீர்வு செய்யப் பயன்படுத்தலாம். '·பிளக்ஸியான் கோட்பாடு' [Theory of Fluxions] என்று பகுப்பியல் கால்குலஸ் கணிதத்திற்குப் பெயர் கொடுத்த நியூட்டன், அதை 38 வருடங்கள் தாண்டி 1704 ஆம் ஆண்டில்தான் அவர் எழுதிய 'பிரின்ஸிபியா' [Principia] என்னும் நூலில் வெளியிட்டார்! ஆனால் அந்நூலில் கூறப்படும் கோட்பாடுகளுக்குக் கால்குலஸை நியூட்டன் பயன் படுத்தவில்லை!

கால்குலஸை முதலில் கண்டு பிடித்தது யாரென்று ஒரு முரண்பாடுக் கேள்வி நியூட்டன் காலத்திலே வாய்ப் போராய் மூண்டது! சிலர் நியூட்டன் என்று எண்ணுகிறார்! வேறு சிலர் ஜெர்மன் கணித மேதை லைப்னிஸ் [Leibniz] என்று கருதுகிறார்! நியூட்டன்தான் முதலில் கண்டு பிடித்தாலும், அவர் முப்பத்தி யெட்டு ஆண்டுகள் வரை அதை வெளியிடவே யில்லை! ஒரே சமயத்தில் தனியாகச் சற்றுத் தாமதமாக விருத்தி செய்த லைப்னிஸ் முதலாகக் கால்குலஸை வெளி உலகுக்கு அறிவித்தார்! அத்துடன் லைப்னிஸியன் கால்குலஸ் நியூட்டனின் ·பிளக்ஸியான்ஸை விடச் சீரானதாகவும், செம்மைப்பாடு உள்ளதாகவும், முழுமைப்பாடு பெற்றதாலும் அதுவே இப்போது யாவராலும் கையாளப் படுகிறது.

நியூட்டன் கால்குலஸைப் பயன்படுத்தி, சூரியன், பூமி உள்படச் சூரிய குடும்பத்தின் ஒவ்வோர் அண்டத்தின் நிறையைக் கணித்தார்! பூமியின் திணிவு [Density] நீரின் திணிவைப் போல் ஐந்து, ஆறு மடங்குகளுக்கு இடைப்பட்ட தென்று [மெய்யாக 5.5] மதிப்பீடு செய்தார். வாழையடி வாழையாய் வாழ்ந்து மறைந்த பல்வேறு மேதைகள், நியூட்டனின் விஞ்ஞான சாதனைகளைக் கண்டு பிரமித்து, 'அவை மானிட ஆற்றலுக்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு மாமேதையின் ஆக்கமென்று' வியந்தனர்!

கடவுளைப் பற்றி ஐஸக் நியூட்டன் கருத்துக்கள்.

நியூட்டனுக்கு ரசவாதம் [Alchemy], மதவியல் [Theology], சரித்திரம் [History], மாய விஞ்ஞானம் [Occult Science] ஆகியவற்றில் ஆர்வமும் மிக்க நம்பிக்கையும் உண்டாயினும், அவர் வெளியே அதைக் காட்டிக் கொள்வதில்லை! தனது ஆழ்ந்த கருத்துக்கள், சிந்தனைகள், கண்டு பிடிப்புகள், நம்பிக்கைகள் எதையும் மற்ற மாந்தரிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இன்றித், தனிமையின் இனிமையில் எப்போதும் ஆராய்ச்சியில் காலம் தள்ளுவதே, நியூட்டனுக்குப் பிடித்தமானது! தான் செய்யும் ஆராய்ச்சியில் மனம் ஊன்றி நியூட்டன் ஆழமாய் மூழ்கிப் போவதுண்டு! அல்லாவிடில் அவரது மூளை மதச் சிந்தனையில் சிதறிப் போய்விடும்!

நியூட்டன் ஒரு மூர்த்தியை நம்புபவர், மும்மூர்த்தி அன்று [Unitarian not a Trinitarian] ! அதாவது கடவுள் ஒன்றே !  அது மூவடிவம் அற்றது! [Trinity means Father, Son & Holy Spirit]. நியூட்டனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு!  ஆனால் அவருக்கு ஏசுக் கிறிஸ்து மீதும், புனித ஆவி [Holy Spirit] மீதும் நம்பிக்கை இல்லை! நியூட்டன் காலத்தில் அவரைப்போல் மத நம்பிக்கை கொண்டவர், பிரிட்டனில் தண்டிக்கப் பட்டனர்! 1696 ஆம் ஆண்டில் மும்மூர்த்தி மீது நம்பிக்கையற்ற ஒருவர் தூக்கிலிடப் பட்டார்!  மூவடிவத்தில் நம்பிக்கையற்ற ஐஸக் நியூட்டன் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பிக் கொண்டார்!  1689, 1701 ஆண்டுகளில் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில், நியூட்டன் பணி செய்தார். 1696 முதல் 1727 வரை பண அச்சகத்தில் அதிபதியாகப் [Master of Mint] பணி யாற்றினார். ராயல் சொஸடியின் [Royal Society] அதிபதியாக 1703 இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1705 ஆம் ஆண்டு அன்னி ராணியால் [Queen Anne] பிரிட்டிஷ் தீரராக [Knight] ஆக்கப் பட்டார்!

நியூட்டனின் குண மாறுபாடு, இறுதிக் கால வாழ்வு

முப்பது வயதிலே தலை நரைத்துப் போனாலும், 84 வயது வரைக் கிழவராய் வாழ்ந்த நியூட்டன், கடைசிவரை கண்ணாடி போட்டுக் கொள்ள வில்லை! அத்தோடு திடகாத்திரமாயும் இருந்தார்! எல்லாப் பற்களும் ஒருவிதப் பழுதின்றி அத்தனையும் சீராக இருந்தன வென்று அறியப் படுகிறது!  நியூட்டனுக்கு ஞாபக மறதி மிகுதி! பெளதிகச் சிந்தனையில் ஆய்வுக் கடலில் மூழ்கி யிருக்கும் போதெல்லாம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, தன்னைச் சுற்றி யாருள்ளார் என்பது நியூட்டனுக்குத் தெரியாது! ஒன்றையே ஆழ்ந்து எண்ணிக் கொண்டு உலகையே மறந்து விடுபவர், நியூட்டன்! படுக்கை மெத்தை மேல் அரை நிர்வாணத்தில் மணிக் கணக்காக அமர்ந்திருப்பார் என்று சொல்லப் படுகிறது! அடிக்கடி தான் உணவு அருந்தி விட்டோமா, இல்லையா என்பது கூட அவருக்கு நினைவிருக்காது!

நியூட்டன் ஒரு பேராசைக்காரர்! புகழ்ச்சிகள் மீது அவருக்கு வேட்கை மிகுதி! எதையும் சந்தேகப்பட்டு, அவரது கோட்பாடுகளை எதிர்ப்போரிடம் போரிடத் தாவும் சண்டைக்காரர்! கால்குலஸை யார் முதலில் படைத்தவர் என்ற வாதப் போரில், தனியாகப் படைத்த ஜெர்மன் கணித மேதை லைப்னிஸ் [Leibniz] கூட நியூட்டன் போட்ட சண்டை ஓர் உதாரணம்! கால்குலஸை முதலில் கண்டு பிடித்த நியூட்டன், வெளியிடாமலே பல்லாண்டுகள் வைத்திருந்தவர்! ஆனால் லைப்னிஸ் அவருக்குப் பின்னால் கண்டு பிடித்து, உலகுக்கு முதலாக அறிவித்தவர்!

நியூட்டன் பதினேழாம் நூற்றாண்டில் ஆக்கிய 'பிரின்ஸிபியா' கணித நூல், ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதி [Relativity Theory], குவாண்டம் யந்திரவியல் [Quantum Mechanics] தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் புதிய விஞ்ஞான முற்போக்கு நிலைக்கு மாற்றப்பட வேண்டிய தாகிறது! ஆயினும் ஒளிவேகத்திற்கு நிகரற்ற வேகமுடைய அண்டங்கள், நாமறிந்த முப்புற அமைப்பாடுகளில் [X,Y,Z Three Dimensional Systems] நகரும் அண்டங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நியூட்டனின் நியதிகள் ஏற்றவை.

லண்டன் மாநகரில் இனிதாக வாழ்ந்து, தன் அழகிய மருமாள் [Niece] இல்லத்தைக் கண்காணித்துக் கொள்ள, நியூட்டன் இறுதி ஆண்டுகளில் படிப்புகளைத் தொடர்ந்தார்! இல்லத்தில் அவரது ஆராய்ச்சிகளுக்குத் தேவையான எல்லாக் கருவிகளும், சாதனங்களும் வசதியாக எப்போதும் அமைக்கப் பட்டிருந்தன. 1725 ஆம் ஆண்டு நியூட்டனுடைய புப்புசங்களில் பழுதேற்பட்டு, தூய காற்றுள்ள இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டார்! அதன் பின்பு படிப்படியாக வலுவிழந்து, ஐஸக் நியூட்டன் தனது 84 ஆவது வயதில் 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி காலமானார். பிரிட்டனின் மகா மேதைகள் புதைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் [Westminster Abbey], அரச மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது!

 

நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை! வாலிப வயதில் அண்டை வீட்டுப் பெண்ணொருத்தி மீது லிங்கன்ஷயரில் [Lincolnshire] அவருக்கு அன்பு உண்டானது! ஆனால் தனது விஞ்ஞானப் பணிக்கு தடையாக இருக்கும் என்று நியூட்டன் அந்த உறவைத் தொடரவில்லை! அதற்குப் பிறகு எந்தப் பெண்ணின் மீதும் அவருக்குக் காதல் மலராமலே போனது! நியூட்டனின் காம இச்சையைப் பற்றி அவரது சரிதையில் எதுவும் அறிய முடிவதற்கு இல்லை!

"இயற்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நியூட்டனுக்கு அதில் உள்ள மெய்ப்பாடுகள் சிரமமின்றி எளிதாகப் புரிந்தன," என்று ஐஸக் நியூட்டனைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார்!

*****************************
தகவல்:

1.  Men of The Stars -Sir Isaac Newton By Patrick Moore (1986)

2  Isaac Newton's Like By Alfred Rupert Hall (Microsoft Encarta) (1998)

3.  Philosophy 100 Essential Thinkers -Sir Isaac Newton By Philips Stokes (2002)

4.  The Story of Astronomy "The Clockwork Universe" By Peter Auguston (2008)

5.  Wikipedia - Sir Isaac Newton (December 15, 2010)

**************

S. Jayabarathan (jaya...@tnt21.com) December 17, 2010


வேந்தன் அரசு

unread,
Dec 18, 2010, 9:53:37 AM12/18/10
to tamizh...@googlegroups.com, தமிழ் மன்றம்

>>முதன் முதல் விஞ்ஞானத் துறையில் நிறை [Mass], பளு [Weight], விசை [Force], முடத்துவம் [Inertia], வளர்வேகம் [Acceleration], தளர்வேகம் [Deceleration], ஈர்ப்பியல் [Gravity], அசைப்பியல் [Dynamics], ஓளிப்பட்டை [Light Spectrum], பகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus], தொகுப்பியல் கால்குலஸ் [Integral Calculus] ஆகிய கணித விஞ்ஞானப் பதங்களைத் தெளிவாக விளக்கி, அவற்றைக் கணிதச் சார்பியல் சமன்பாடுகளில் இணைத்தவர், ஐஸக் நியூட்டன் !
 
 
அருமையான கட்டுரை ஐயா.  எம் பாராட்டுக்கு உரியவர் நீவிர்.
 
தமிழாக்கமும் மிக சிறப்பு
 
 
அசை எனும் சொல் பழம்தமிழில் இப்பொதுள்ள சொல்லுக்கு எதிர் பொருள்.
 
இலம் என்று அசைஇ இருந்தாரை காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும்
 
 
வளர்விசை என்பதை முடுக்குவிசை எனலாம்
அதன் எதிர் சொல்லாக முடக்குவிசை அலல்து தடுக்குவிசை.
 
நீங்க வளர் வேகம் நு சொல்ல்றீஙக் ஆனால் அவை விசைகள்தானே
 
 

--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

சி. ஜெயபாரதன்

unread,
Dec 18, 2010, 12:02:55 PM12/18/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர்களே,
 
 
தொலைநோக்கிகளை ஒப்புநோக்கக் கீழிருக்கும் இணைப்பைத் தட்டுங்கள்.  டாலர் விலையை ரூபாயில் மாற்றிக் கொள்ளுங்கள்.    விற்கும் கடையில் உள்ள தொலை நோக்கிகளை இயக்கிப் பாருங்கள்.   நண்பரிடம் இருந்தால் இயக்கிப் பாருங்கள்.
 
விலைக்கு ஏற்பத் தொலைநோக்கித் தரம் மாறுகிறது. 
 
 
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++
2010/12/18 tamil payani <tamil...@gmail.com>
ஜெயபாரதன் அய்யா,

                  நீண்ட நாட்களாக கேட்க நினைத்திருந்த கேள்வி. ராஜா அவர்களும் கேட்டு விட்டார்.

                  ஆராய்ச்சி நோக்கம் இல்லாது பொழுது போக்கிற்க்காக வானத்தை பார்க்கவும், அக்கம்பக்கம்
சிறார்களுக்கு ஒரு ஆர்வத்தை தூண்டவும் வாங்க நினைக்கிறேன்.

                   இந்தியாவில் இந்திய ரூபாயில் வாங்க வேண்டும் எனில் என்ன விலை வரும். அடிப்படையாக
என்ன தரஅடிப்படையில் அமைந்தது வாங்க வேண்டியிருக்கும்..?


2010/12/18 nellaiexpress <rcraj...@gmail.com>

தொலை நோக்கி வாங்க விருப்பமாக உள்ளது. என்ன விலை ஆகும்? அது பற்றி

கொஞ்சம் எழுதுங்களேன்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஊர் உலகம் – 04-11-2010

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

சி. ஜெயபாரதன்

unread,
Dec 18, 2010, 1:04:39 PM12/18/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
பாராட்டுக்கு நன்றி வேந்தரே,
 
 
வளர்வேகம், தளர்வேகம் என்பவை ஒரு குறிப்பிட்டக் காலத்து வேக மாறு பாடுகளே.  அவை விசைகள் அல்ல.  விசையின் அளவியல் வேறு (units of force : dyne or newton)
 
(Acceleration & Deceleration are positive & negative change of velocities in a period)  ie  5 ft per sec per sec (5 ft per sec^2)

ஜெயபாரதன்.
 
++++++++++++++
 
2010/12/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Dec 18, 2010, 6:10:56 PM12/18/10
to tamil...@googlegroups.com


18 டிசம்பர், 2010 1:04 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

பாராட்டுக்கு நன்றி வேந்தரே,
 
 
வளர்வேகம், தளர்வேகம் என்பவை ஒரு குறிப்பிட்டக் காலத்து வேக மாறு பாடுகளே.  அவை விசைகள் அல்ல.  விசையின் அளவியல் வேறு (units of force : dyne or newton)
 
(Acceleration & Deceleration are positive & negative change of velocities in a period)  ie  5 ft per sec per sec (5 ft per sec^2)
 
 
ஐயா
 
வேகத்தில் ஏற்படும் மாறுபாடுகள் விசைகள்தானே நியூட்டனின் இரண்டாம் விதி அதைதானே இயம்புகிறது.  rate of change of momentum is force

சி. ஜெயபாரதன்

unread,
Dec 18, 2010, 7:03:54 PM12/18/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
வேந்தரே,
 
 
(Force) = (mass) x (acceleration)
 
(dynes/newton) = gram x (vi - v2)/sec 
Hence Force is NOT mere acceleration
 
Jayabarathan
 
++++++++++++++++++++

வேந்தன் அரசு

unread,
Dec 18, 2010, 11:34:28 PM12/18/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


18 டிசம்பர், 2010 7:03 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,
 
 
(Force) = (mass) x (acceleration)
 
சரியே ஐயா
 
ஆனால் மாஸ் என்பது மாறிலி.
 
அதனால் Force) = (acceleration)   எனலாமே
acceleration என்பது விளைவு. அதற்கு காரணம் விசைதானே
 

ADISIL Bala

unread,
Dec 19, 2010, 5:09:26 AM12/19/10
to tamil...@googlegroups.com
ஐயா
Dynamics என்பதற்கு துனைமவியல் என்ற சொல்லை அருளி தமிழ் மரபில் இருந்து எடுக்கிறார். இது தமிழில் இருந்து கிரேக்கம் சென்றதை அவர் விளக்குவர் 
அன்புடன் 
paamayan 

2010/12/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
ADISIL
15/B Pioneer Colony
Thirumangalam
Madurai-625706
Tamilnadu, India
Ph: 0919842048317
http://adisiltrust.blogspot.com

வேந்தன் அரசு

unread,
Dec 19, 2010, 7:29:56 AM12/19/10
to tamil...@googlegroups.com


19 டிசம்பர், 2010 5:09 am அன்று, ADISIL Bala <adisi...@gmail.com> எழுதியது:

ஐயா
Dynamics என்பதற்கு துனைமவியல் என்ற சொல்லை அருளி தமிழ் மரபில் இருந்து எடுக்கிறார். இது தமிழில் இருந்து கிரேக்கம் சென்றதை அவர் விளக்குவர் 
அன்புடன் 
paamayan 
 
ஆமாம் இராமகி ஐயா பல புதிய சொற்களை அருளுகிறார். எனக்கு தெறும துனவியல் என்றால் விளங்கும்
 
தமிழால் எல்லாம் இயலும். தமிழனால் ஒரு மசிறும் இயலாது
 
 
பல சொற்களில் இருந்து டார்வின் கோட்பாடுகளின்படி தக்கவை தாக்கு பிடிக்கும்
 
 
வெப்பநிலை என்ற நீண்ட சொல்லைவிட வெம்மை பொருத்தமானது. மை விகுதி பண்பு பெயர்களை சுட்டும். வெப்பம் என்பது ஒரு பொருள். அது தண்மையை நோக்கி பாயும். வெம்மை என்பது வெப்பத்தின் விளைவு.
 
வெப்பமானியை விட வெம்மைமானி பொருத்தமான சொல் என்பது என் கருத்து
 
நானும் கணேசரும் மென்கலன், வன்கலன் என்ற சொற்களை பயன்படுத்துகிறோம். அணிகலன், படைக்கலன் என்ற பாணியில்.
 
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Dec 19, 2010, 10:28:15 AM12/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
வேந்தரே,
 
 
விசையும் அதன் விளைவும் ஒன்றா ?  காரணி வேறு அதன் கைவினை வேறு.   கடவுள் வேறு அதன் படைப்பு வேறு. 
 
எல்லாம் ஒன்று எனச் சொல்லாதீர்.  நாமிங்கு விஞ்ஞானம் பேசுகிறோம்.   கவிதை இல்லை.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++

2010/12/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Dec 19, 2010, 10:33:51 AM12/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பரே,
 
Dynamics என்பதற்கு இயக்கவியல், அசைப்பியல், துடிப்பியல் எனச் சொல்லலாம்.  துனைமவியல் என்றால் புரியவில்லை.
 

ஜெயபாரதன்.
 
+++++++++++++++++
2010/12/19 ADISIL Bala <adisi...@gmail.com>

ADISIL Bala

unread,
Dec 19, 2010, 11:00:03 AM12/19/10
to tamil...@googlegroups.com
இயக்கவியலுக்கு kinetics என்ற சொல் உள்ளது 
பாமயன்  

2010/12/19 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 19, 2010, 11:26:02 AM12/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


19 டிசம்பர், 2010 10:28 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
வேந்தரே,
 
 
விசையும் அதன் விளைவும் ஒன்றா ?  காரணி வேறு அதன் கைவினை வேறு.   கடவுள் வேறு அதன் படைப்பு வேறு. 
 
 
ஐயா நானும் அதே சொல்லுகிறேன்
 
ஏக்சலேரேசன் வேகம் அல்ல. வேகத்தின் மாற்றம்
 
அந்த மாற்றத்துக்கு காரணம் விசை
முடுக்குவிசை என்பதே பொருத்தமான சொல்

சி. ஜெயபாரதன்

unread,
Dec 19, 2010, 11:27:37 AM12/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
Dynamics & Kinetics are more or less the same as per தெ technical dictionary.  தமிழில் இரண்டும் யந்திரவியலைக் குறிக்கும்.
 
 
ஜெயபாரதன்

2010/12/19 ADISIL Bala <adisi...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Dec 19, 2010, 11:34:09 AM12/19/10
to tamil...@googlegroups.com
வேந்தரே,
 
ஆக்ஸலரேசன் என்பது வேக மாற்றம் என்பது 100% சரியே.   நான் அதை வளர்வேகம் என்று வேக வளர்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.   அது போல் வேகத் தளர்ச்சி டிசெல்ரேசன்.
 
ஆனால் முடுக்குவிசை ஆக்ஸலரேசன் ஆகாது. விசை வேறு வேக வளர்ச்சி வேறு.  
 
விசை என்பது  வேக வளர்ச்சி, வேகத் தளர்ச்சிக்கு நேரிய வீதத்தில் மாறுகிறது.
 
 
ஜெயபாரதன்.
 

 
2010/12/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Dec 19, 2010, 12:08:23 PM12/19/10
to tamil...@googlegroups.com
முடுக்கம் = acceleration
முடுக்குவிசை = accelrating force
 
ஒடுக்கம் = deceleration  (மடுக்கம் = deceleration)
மடுக்குவிசை, ஒடுக்குவிசை = decelerating force
 
(மடுத்தல் = அடக்கிக் கொள்ளுதல்; மடுப்பு = கேடு, அடக்கிக்கொள்ளுதல், இடையூறு ஏற்படுதல்  <- கழக அகராதி பார்க்கவும்)
 
வளர்வேகம் ஓரளவுக்குச் சரியான சொல் எனினும் 
ஏற்கனவே உள்ள் முடுக்கம் என்னும் சொல் பொருத்தமமனது
வழக்கிலும் உள்ளது (அ.கி மூர்த்தியின் அறிவியல் அகராதியைப்
பார்க்கவும்). காலத்தால் விரைவு மாறுவது (ஏறுவது) முடுக்கம்.
காலத்தால் விரைவு தாழ்வது மடுக்கம்.
முடுக்கு என்னும் வினைச்சொல்லும் இருப்பது அருமை.
சுருக்கமாகவும் உள்ளது, ஏற்கனவே வழக்கிலும் உள்ளது.
முடுக்கம் x மடுக்கம்  (அல்லது முடுக்கம் x ஒடுக்கம் ).
முடுக்கு என்பது போலவே ஒடுக்கு என்றும் மடுக்கு என்றும்
வினைச்சொல்லாக ஆளலாம்.  மடு என்பதை வினைச்சொல்லாக
ஆளலாம். கழக அகராதியில் மடுவென்னேவல் என்று தெளிவாகக்
குறிப்பிட்டும் இருக்கின்றார்கள். மடுத்தல், மடுப்பு என்பன நல்ல
வழக்கில் உள்ள சொல். இங்கு அறிவியல் துல்லியத்தோடு
பொருளேற்றப்படுகின்றது அவ்வளவே.
 
காலத்தால் விரைவு மாறல் முடுக்கம் என்பதை எல்லாம்
ஏதோ நூற்பா போல சொல்லி நிலைபெறச் செய்ய வேண்டும்.
 
Dynamics, Kinetics, mechanics, kinamatics போன்ற சொற்கள் பற்றிய
உரையாடல் ஒன்று இரண்டாண்டுகளுக்கு முன்பு
தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்தது. பார்க்கவும்:
வெப்ப இயக்கவியல் (thermodynamics), பாய்ம இயக்கவியல் (fluid dynamics),
போன்ற இடங்களில் இயக்கவியல் என்பது dyanamics என்பதற்கு
ஈடாகப் பயன்படுகின்றது.
 
அன்புடன்
செல்வா
 


 
2010/12/19 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

சி. ஜெயபாரதன்

unread,
Dec 19, 2010, 1:11:21 PM12/19/10
to tamil...@googlegroups.com
நண்பர் செல்வா,
 
 
///காலத்தால் விரைவு மாறுவது (ஏறுவது) முடுக்கம்.
காலத்தால் விரைவு தாழ்வது மடுக்கம்.////
 
 
விரைவு மாறுவது காலத்தால் வருவதில்லை.   விசையைக் கூட்டிக் குறைப்பதால் நேருவது.   விசை, விரைவு மாற்றம், காலம் மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.   
 
விசை ஒரு காரணி.  வேக மாற்றம்  அதன் விளைவு.    காலம் ஒரு காரணி இல்லை.
 
எனக்குப் புரியவில்லை இது:  http://tinyurl.com/visaiyiyal   புரிந்தவர் விளக்கலாம்.
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++

2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Dec 19, 2010, 2:12:54 PM12/19/10
to tamil...@googlegroups.com
ஐயா செயபாரதன் அவர்களே,
 
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது
 
என்னும் திருக்குறளைக் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
 
"உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்",
"முருகன் கோடாரியால் மரத்தை வெட்டினான் " என்பது போன்ற
வழக்காறுகளை மட்டும் கேட்டிருப்பீர்கள் போல் தெரிகின்றது.
 
காலத்தால், காலத்தினால் என்னும் சொல்லாடல் காலத்தில் என்றும்
பொருள்படும்.
 
விரைவு மாற்றம் விசையால் ஏற்படும் என்பது தெளிவு.
 
இடத்துக்கு இடம் ஒரு பொருளின் விரைவு மாறலாம்,
நேரத்துக்கு நேரம் ஒரு பொருளின் விரைவு மாறலாம்.
 
கால வெளியில், கால அளவையில் விரைவு மாற்றம் பற்றிக்
கூறினேன். விசை என்பது முதல், விரைவு மாற்றம் என்பது
விளைவு என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது.
 
வேகம்-விரைவு ஆகிய சொல் வேறுபாடு பற்றியும் குறிப்பிட
விரும்புகிறேன். விர் என்று போனான், விரைசலாப் போனியே
என்பன பேச்சு வழக்குகள்.
விருவிருப்பு = விரைவு;
வினைச்சொல்லாக விரை என்றும் வரும்.
விரை என்பது விரைதல், விரைந்து என்னும் வினையடியாகப்
பிறக்கும் சொற்களுக்கும்
இடம்தரும். வேகம் என்னும் கடன் சொல் இப்படியான
விரிவுகள் தராது. அதனால் வேகமென்பது கூடாது என்பது
பொருள் அல்ல. பெரும்பாலும் விரிவுதரவல்ல விரைவு என்னும்
சொல்லை அடிப்படையாகக் கொண்டு கலைச்சொற்களை
வழங்கினால் பொருள் நீட்சிக்கு உதவும்,
புதிய கலைச்சொல்லாக்கத்துக்கு வழிதரும் என்பதே கருத்து.
தமிழ்ச்சொல்லை நாம் ஆளாவிடில் யார் வந்து ஆள்வார்கள்,
அருள் கூர்ந்து எண்ணிப்பாருங்கள். நல்ல தமிழ்ச்சொற்களைப்
பயன்படுத்துவது பல கோணங்களில் அறிவுடைமை ஆகும்.
தமிழரின் கடமை ஆகும். பிறமொழிச் சொற்களையும் தக்கவாறு
பயன்படுத்தவும் வேண்டும்.

வேந்தன் அரசு

unread,
Dec 19, 2010, 4:55:22 PM12/19/10
to tamil...@googlegroups.com
இனெர்சியா என்பதற்கு முடத்துவம் நல்ல சொல் எனினும் முடமை என்னும் தமிழ் சொல் சுருக்கமாக இருக்கும். முடங்கி போதலால் முடமை

சி. ஜெயபாரதன்

unread,
Dec 19, 2010, 7:11:00 PM12/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
அப்படியும் எழுதலாம் வேந்தரே.  அகராதியில் Inertia  என்பதற்குச் சடத்துவம் என்றும் உள்ளது. 
 
 
ஜெயபாரதன். 
++++++++++++
2010/12/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இனெர்சியா என்பதற்கு முடத்துவம் நல்ல சொல் எனினும் முடமை என்னும் தமிழ் சொல் சுருக்கமாக இருக்கும். முடங்கி போதலால் முடமை

C.R. Selvakumar

unread,
Dec 19, 2010, 10:08:15 PM12/19/10
to tamil...@googlegroups.com
செயபாரதன் ஐயா காலத்தால் என்பதற்குக் கொண்ட பொருளைப்
படித்த பிறகு, இந்த ஆல் என்பதன் பயன்பாட்டை மீண்டும்
எண்ணிப்பார்க்கத் தோன்றியது. ஆல் என்பதற்குத் தமிழில் உள்ள
பல பொருள்களுள், மூன்றாம் வேற்றுமை உருபு என்பது
நாம் யாவரும் அறிந்தது. ஆனால் இலக்கணத்தில்
ஒப்பரியவர்களாகிய முனைவர் இராசம் போன்றவர்கள்
ஆழ்ந்த, வலுவான கருத்துகள் கூற முடியும். ஆணித்தரம்
என்பார்களே அப்படிக் கூற முடியும்
 
(ஆணிப்பொன் என்றால் ஒப்பீடு செய்து பார்க்க உதவியாக
இருக்கும் மிகு உயர்ந்த தரமான
பொன். மற்ற பொன்னால் ஆன பொருள்களை அவற்றின்
பொன்னைத் தரத்தால் ஒப்பிட்டுப் பார்க்க உதவும் முதல்தரப்
பொன், ஆணிப்பொன். இப்படி முதல்தர முத்தை ஆணிமுத்து
என்பர், பெரியாழ்வாரின் திருமொழியில் வருமே
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால் செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு காணிகொண்ட கைகளால்
சப்பாணி கருங்குழற் குட்டனே! சப்பாணி.
அப்படியான ஆணிப்பொன்)
எனவே இங்கே நான் எழுதுவ்தை பெரியோர்கள்
தேர்ந்து என்னைத் திருத்த வேண்டும்.
பொதுவாக ஆல், ஆன், ஓடு, ஒடு என்பன என்பன
மூன்றாம் வேற்றுமை உருபுகள் என்பர். தற்காலத்தில்
உடன்  என்பதையும் சேர்த்துக்கொள்வர் (என்னோடு வந்தான்
= என்னுடன் வந்தான்). இந்த மூன்றாம் வேற்றுமை உருபு
கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என்பனவற்றைக் குறிக்கும்
என்கிறார்கள். 
 
நாம் மொழியால்/கருத்தால் மாறுபடுகின்றோம் என்றால் மொழியின்
அடிப்படையில் மாறுபடுகின்றோம். இங்கு மொழி, கருத்து என்பன
கத்தியால் மைசூர்பாக்கை வெட்டினான் என்று கூறும் கருவிப்
பொருள் வருமா அல்லது அடிப்படை ("கருத்தா") பொருள் வருமா?
உவேசா ஐயாவால், சி.வை.தாமோதரம் ஐயாவால் பல தமிழ்நூல்கள்
கண்டுபிடிக்கப்பட்டு அச்சேறின என்றால் அது கருத்தாப் பொருள்
அல்லவா? ஐயாவின் உதவியுடன் என்றும் பொருள் கொள்ளலாம்,
ஆனால் கண்டுபிடித்து அச்சேற்றியவர் என்பது முதற்/கருத்தாப் பொருள்
என்பதே சிறப்பாகத் தோன்றுகின்றது. பொன்னால் ஆன நகை என்பதில்
வரும் ஆல் அடிபப்டை, அடிப்பொருள் என்னும் கருத்தில் வருவது.
காலத்தால் மாறுபடும் என்றால் காலத்தின் அடிப்படையில்
(நோக்கும்பொழுது)  ஒன்று மாறுபடும். இந்த சட்டை இரண்டும் ஒரே
மாதிரி இருந்தாலும் நிறத்தால் மாறுபடுகின்றன என்றால் நிறத்தின்
அடிப்படையில் (ஒப்பிடும் பண்பில்) மாறுபடுகின்றன. இலக்கணம் நன்றாக
அறிந்தவர்கள் இன்னும் தெளிவாக விளக்கிக் கூற முடியும்.
 
இன்னொரு கேள்வி:  நிறத்தால் மாறுபடும் என்றால் என்ன பொருள்
என்று கேட்டால்,   இவற்றில் வரும் என்று+ஆல், கேட்டு+ஆல் ஆகிய
ஆல் இறந்தகால இடைநிலையை அடுத்து வரும் வினையெச்ச விகுதியா?
வந்தால் வருவேன், போனால் போவேன், இரண்டு ஐதரசன் அணுக்களும் ஓர் ஆக்ஃசிசன் அணுவும் சேர்ந்தால் நீர் என்னும் மூலக்கூறு கிடைக்கும் என்பதில் வரும் ஆல் கட்டாய உடன்பாட்டுப் பொருளில் (conditional sense, "if")
வருகின்றதா?  கட்டாய உடனிகழ்ச்சிப் பொருள்? அல்லது இதுவும் இறந்தகால இடைநிலையை அடுத்து வரும் வினையெச்ச விகுதியா? (சேர்ந்து+ஆல்)?
அப்புறம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்களே, அந்த பின்+ஆல்
என்பது என்னால் நீ உயர்ந்தாய், உன்னால் நான் உயார்ந்தேன் என்பதில் வரும் அதே பொருள் பொருந்தாதே?
 
அறிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும் :)
 
அன்புடன்
செல்வா
 

2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Dec 19, 2010, 10:37:52 PM12/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் செல்வா,
 
நான் விஞ்ஞானம் பேசுகிறேன்.   நீங்கள் தமிழ் இலக்கணம் விளக்குகிறீர்கள்.    இணை கோடுகளில் நாம் தனியே பயணம் செய்கிறோம் சந்திக்க முடியாமல்.  
சி. ஜெயபாரதன்.
 
+++++++
2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 19, 2010, 10:39:06 PM12/19/10
to tamil...@googlegroups.com


19 டிசம்பர், 2010 10:08 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அப்புறம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்களே, அந்த பின்+ஆல்
என்பது என்னால் நீ உயர்ந்தாய், உன்னால் நான் உயார்ந்தேன் என்பதில் வரும் அதே பொருள் பொருந்தாதே?
 
அறிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும் :)
 
அன்புடன்
 
 
ஆல் அங்கு வேற்ருமை உருபு அல்ல
 
பின்னால்
பின்னாடி
பின்பு
பின்னர்
பின்னை
 
 
யாவும்  ஒரே பொருள்தான்
 

C.R. Selvakumar

unread,
Dec 19, 2010, 11:16:17 PM12/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நான் அறிவியல் பேசுகிறேன், நீங்கள் விஞ்ஞானம் பேசுகின்றீர் :)
நான் காலத்தால் மாறுபடும் விரைவைப் பற்றிப் பேசிய பொழுது
நீங்கள் காலத்தால் என்பதற்குக் கொண்ட பொருளால் திசை
மாறிப்போயிற்று.
நீங்கள் கொண்டபொருள் தந்த விசையால் மாறிய திசை.
இதுவும் ஒரு ஐசக் நியூட்டன் விதிப்பட்டதே :)
 
ஆக்ஃசலரேசன் என்பதை முடுக்கம் என்பதை ஏற்பீர்களா அல்லது
உஷ்ணம், விஞ்ஞானம் மாதிரி மாறா உறுதியில் இருப்பீரா ?
 
ஐயா நாம் தமிழில் ஆழவும், பல கோணங்களிலும், பல நிலைகளிலும்
விளக்கி எழுத வேண்டியன மிக நிறைய உள்ளன. சீரான கலைச்சொல்
பயன்பாடு மிகவும் தேவையானது. எழுத்துப் பெயர்ப்பிலும் சீர்மை
மிக வேண்டுவது. பலரும் இதனை உணர்வதில்லை.
ஊசி, பாசி, பசி, கசிவு, காசு என்று பற்பல சொற்களில்
சகர உயிர்மெய்க்கு முன்னே வல்லின ஒற்று
வராமலும், இனமான ஞ் முன்னே வராமலும்
வரும் சகரம் காற்றொலி சகரமாக (S போல) ஒலிப்பதை அறிந்திருந்த போதும், நீங்கள்
ஐசக் நியூட்டன் என்று எழுதாமல் வேண்டுமென்றே
ஐஸக் நியூட்டன் என்று எழுதுகின்றீர்கள். அது உங்கள் உரிமை
மறுக்கவில்லை, ஆனால் சீர்மை கருதி அறிவடிப்படை கருதி
ஒத்துப்போகக்கூடிய ஒருசில இடங்களிலும் கூட
ஒத்துப்போக இயலாமல் உள்ளோம்.
 
கலைச்சொற்களில் சீர்மை இல்லாமல் இருத்தல்
புதிதல்ல, ஆங்கிலத்திலும் (தொடக்க காலங்களில்)
இருந்துள்ளது, ஆனால் நாம் குறுகிய காலத்தில் ஒற்றுமை
கண்டு தேர்ந்து ஆள்வது நமக்குத்தான் நல்லது.
 
Dynamics, Kinetics,Mechanics, Kinematics போன்ற சொற்களுக்கு நீங்கள்
உகந்ததாக நினைக்கும் சொற்கள் யாவை? thermodynamics,
fluid dynamics, quantum mechanics, biomechanics ஆகியவற்றை எப்படிக்
கூறுவது நல்லது என்று ந்இனைக்கின்றீர்கள்?
 
தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்த உரையாடல் புரியவில்லை
என்று கூறியிருந்தீர்கள், எனவே மேலே உள்ள கேள்வி

C.R. Selvakumar

unread,
Dec 19, 2010, 11:24:04 PM12/19/10
to tamil...@googlegroups.com
//ஆல் அங்கு வேற்ருமை உருபு அல்ல
 
பின்னால்
பின்னாடி
பின்பு
பின்னர்
பின்னை
 
யாவும்  ஒரே பொருள்தான்//
 
நன்றி வேந்தனாரே.
அப்பாலே பார்க்கலாம் என்பது அப்பால் (அச்சொல் பால், ஆல் அல்ல)
என்பது சரி. ஆனாலும் (இந்த ஆனாலில் வரும் ஆல்?, கட்டாய உடன் இருப்பு நிலையா? அல்லது வேறா?), பின்னால், பின்னாடி,பின்னர், பின்னை என்பதில் வரும் பின்னொட்டுகளுக்கும் பெயர் இருக்க வேண்டுமே?! அணுவணுவாய்த் தமிழில் பொருள் இருக்குமே. என்ன என்பது என்னை என்பது போல பின்னை என்பதுமா? பின்னே என்பதில் ஏகாரம் பொருள் தருவதாயிற்றே.
 
அன்புடன்
செல்வா


2010/12/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Dec 19, 2010, 11:35:00 PM12/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
வாழ்நாள் முழுவதும் தனித்தமிழைத் துருவித் துருவித் தேடும் தூய தமிழர், உருப்படியாக இதுவரை விஞ்ஞானப் படைப்பு நூல்களை ஆக்கிய தில்லை.  ஆக்கப்  போவது மில்லை.   
 
நண்பர் செல்வா, தூய தனித் தமிழில் யார் இதுவரை ஒரு விஞ்ஞான நூலை முழுவதாக எழுதியுள்ளார் என்று கூறுங்கள் !!!! 
 
 
சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++++++++++
 
 
2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Dec 19, 2010, 11:47:44 PM12/19/10
to tamil...@googlegroups.com
மாற்ற்ம் என்பது கால இடைவெளியில் ஏற்படுவது.விரைவு மாற்றமும் ஒரு கால இடைவெளியில் ஏற்படுவது..இந்த விரைவுமாற்றம் ஒரு நொடிக்கு விரைவில் ஏற்படும் மாற்றத்தால் அளக்கப்படுகின்றது.

{மீட்டர்/நொடி) /நொடி                    முடுக்குவதால் ஏற்படுவது முடுக்கம்
                                                         ஒடுக்குவதால் ஏர்படுவது  ஒடுக்கம்.

மணிக்கு 60கி,மீ  வேகத்தில் சென்று கொண்டிருந்த மகிழுந்து 10 விநாடிகளில் மனிக்கு 100கி.மீட்டராக முடுக்கப்படும்போது,  10 நொடிகளில் 40 கி.மீ விரைவு மாற்றம் ஏற்படுகின்ரது. ஒரு நொடியில் 4கிமீ என்ற வீதத்தில் ஏற்படுகிறது.எனவே முடுக்கம் என்பது நொடிக்கு 4 கிமீ.
ஒரு நொடியில்/ ஒரு மணி நேரத்தில்  கடக்கும் தூரம்   ---    விரைவு ---      கி.மீ/நொடி  அல்ல்து கி.மீ/மணி
நொடியில் விரைவில் ஏற்படும் மாற்றம்  -முடுக்கம்/ஒடுக்கம் --(-கி.மீ/ நொடி ) / நொடி

கால -வெளி (Time -space) இருப்பில்தான்     கடந்த தூரத்தை,விரைவை , முடுக்க ஒடுக்கத்தை கணக்கிட முடியும்.
அன்புடன்
அரசு
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி:  9380297522


C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 12:00:55 AM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ஏன் செயபாரதன் ஐயா, நீங்கள் எளிய ஒரு செய்தியைச் சுட்டிக்காட்டினாலும்
எதிர்கொள்ளாமல், தூய தமிழ் என்கிறீர்?  Helium என்பதை ஈலியம் என்றால்
"தூய" தமிழா? இத்தாலியன் Elio என்கிறான். ஐதரான் என்றால் தூய
தமிழா (உலக மொழிகளில் ஐதரசன் என்பதை எப்படி எழுதியுள்ளார்கள்
என்று முன்பொருமுறை எடுத்துக்காட்டியுள்ளேன்).
ஐதரசக் குளோரைடு என்றால் அறிவியல் குறைந்துவிடுமா?
ஐசக் நியூட்டன் என்றால் "தூய" தமிழா?
ஈலியம், ஐதரசன், குளோரின் என்றால் தூய தமிழா?
கூடிய மட்டிலும் எளிய தமிழில் எழுதலாமே என்றால்
ஏன் இப்படிக் கூறுகின்றீர்கள்?
தூய தமிழ் என்று நீங்களாகக் கற்பனை செய்கின்றீர்கள்.
நான் கூறிய காரணங்களை எதிர்கொள்ளுங்கள்.
அறிவியல் என்று எழுத மாட்டேன்,
வெப்பநிலை என்று எழுத மாட்டேன் என்று அடம் பிடிப்பது
நீங்கள்தான் :) எப்படி எழுதினாலும் எழுதுங்கள், ஆனால்
கலைச்சொர்கலில் சீர்மை இருந்தால் நல்லது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 12:07:47 AM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com

கலைச்சொற்களில் சீர்மை இருந்தால் நல்லது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

என்று திருத்திப் படிக்கவும்!!



2010/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 9:36:50 AM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
////Dynamics, Kinetics,Mechanics, Kinematics போன்ற சொற்களுக்கு நீங்கள்

உகந்ததாக நினைக்கும் சொற்கள் யாவை? thermodynamics,
fluid dynamics, quantum mechanics, biomechanics ஆகியவற்றை எப்படிக்
கூறுவது நல்லது என்று ந்இனைக்கின்றீர்கள்? ////
 
 
Dynamics  :   நகர்ச்சியியல்
 
Kinetics :  அண்ட இயக்கவியல்
 
Mechanics : யந்திரவியல்
 
Kinematics :  வெறுமை இயக்கவியல்
 
Thermodynamics : வெப்ப இயக்கவியல்
 
Fluid Dynamics : திரவ இயக்கவியல்
 
Quantum Mechanics :  குவாண்டம் யந்திரவியல்
 
Biomechanics : உயிரங்க யந்திரவியல்.
 
 
ஜெயபாரதன்

++++++++++++++++++++
2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 9:47:54 AM12/20/10
to tamil...@googlegroups.com
நண்பர் செல்வா
 
ஜெர்மன், ஜப்பான், ஸ்பெயின், ஸ்ட்ரான்சியம், ஸ்டாலின், ஹிக்ஸ் போஸான், ஷாஜஹான்,

ஃபாஸ்ஃபரஸ் போன்ற பெயர்ச் சொற்களை உச்சரிப்பக்கு ஏற்ப எப்படி எழுதுவீர் ? 
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++
 
2010/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Mani Manivannan

unread,
Dec 20, 2010, 10:36:25 AM12/20/10
to tamilmanram
2010/12/20 சி. ஜெயபாரதன் jayaba...@gmail.com


ஃபாஸ்ஃபரஸ் போன்ற பெயர்ச் சொற்களை உச்சரிப்பக்கு ஏற்ப எப்படி எழுதுவீர் ?  
 
பிறமொழி உச்சரிப்புக்கு ஏற்பத் தமிழ்ச் சொற்களை உருவாக்கத் தேவையில்லை.  எழுதவும் முடியாது.
 
அறிவியலிலும் ஏனைய துறைகளிலும் அமெரிக்க, மேலைநாட்டின் ஆதிக்கம் குறைந்து சீனர்களும் ஆசியர்களும் எழத் தொடங்கியுள்ளனர்.  சீன மொழியில் உச்சரிப்புகள் தொனி வழியாக வேற்றுமை காட்டுபவை.  அம்மொழியில் பயிற்சி இல்லாதவர்களால் தொனி வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியாது.  அதற்காகத் தமிழில் தொனிக் குறியீடுகளை உருவாக்க வேண்டுமா என்ன?
 
என்னைப் பொருத்தவரையில், ஆளாளுக்குக் கலைச்சொற்களை உருவாக்குவதற்குப் பகராக, ஏற்கனவே தமிழக/ஈழ்த் தமிழ்ப் பள்ளிப் பாடநூல்களில் இருக்கும் கலைச்சொற்களைப் பரப்புவது மேலானது.
 
அதே நேரத்தில், அறிவியல் கருத்துகளைப் பரப்புவதற்கு முதலிடம் கொடுப்பது சரியே தவிரத் தனித்தமிழ்க் கலைச்சொற்களை ஆள வேண்டும் என்று நான் வற்புறுத்துவது இல்லை.
 
பல பத்தாண்டுகளாய்த் தொடர்ந்து அறிவியல் தமிழில் எழுதிக் கொண்டு வந்திருக்கும் ஜெயபாரதன் போன்றோரிடம் அவர்கள் புழங்கும் கலைச்சொற்கள் தற்காலத் தமிழர்களுக்குப் புரியாமல் போகலாம் என்று சொன்னாலும் எடுபடாது.  அது பரவாயில்லை.  அதற்காக அடிப்படை வாதமும் புரியத் தேவையில்லை. இன்று ஜெயபாரதன் எழுதுவது பரவாவிட்டால், அவரது எழுத்திலிருந்து மற்றவர்கள் ஊக்கமடைந்து அவர்கள் தற்கால நடைக்கு ஏற்ப எழுதிப் புகழ் பெறப் போகிறார்கள்.  எழுத்தும் கருத்தும் முதன்மையே ஒழிய கலைச்சொற்கள் இல்லை.  கலைச்சொற்களைப் பற்றி ஆய வேண்டிய களம் வேறு.  நெல்லை சு. முத்து அவர்களின் நேர்காணலில் அறிவியலைத் தற்காலத் தமிழில் எழுதுவது எப்படி என்பது பற்றிய கருத்துகளைக் காணலாம் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4658:2010-03-08-10-54-39&catid=990:10&Itemid=244 ).  அவர் ஆங்கிலம் கலந்து எழுதினாலும், கிரந்தம் கலந்து எழுதினாலும், அறிவியல், பாஸ்பரஸ், பாஸ்ஃபீன், விண்மீன், ஏவூர்தி உந்து எரிபொருள், வால்நட்சத்திரம்,
 
நெல்லை சு. முத்து சொல்வது போல “ அறிவியல் வார்த்தைகள் பரப்புவதிலே இருந்தால் அறிவியல் பரவாது. இன்றைக்கு நிறைய பேராசிரியர்கள் கலைச்சொல் தயாரிப்பில் இருக்கிறார்கள். அது பத்து வருடம் கழித்து வழக்கொழிந்து போகும் அபாயமும் உண்டு.”  மேலும், தமிழிலும் பாமர நடை, பள்ளி மாணவர் நடை, அறிஞர் நடை என்ற வேறுபாடுகள் உண்டு.  இது ஆங்கிலத்திலும் உண்டு. அது பற்றி நெல்லை சு முத்துவுக்குத் தெரிந்திருக்கவில்லை போலிருக்கிறது.  ஆங்கிலச் சொல்லையே அப்படியே எடுத்தாளுவது பெயர்ச்சொற்கள் சிலவற்றிற்கு மட்டுமே ஏற்புடையதாகும்.
 
அறிவியலைப் பரப்புவோம். நடைமுறைத் தமிழில்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 11:00:32 AM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நன்பர் மணி வண்ணன்,
 
////அறிவியலைப் பரப்புவோம். நடைமுறைத் தமிழில்./////
 
நடைமுறைத் தமிழில், நல்ல தமிழில் 50 ஆண்டுகளாக 450 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளை இதுவரை எழுதி வந்திருக்கிறேன்.  அவற்றில் நியூட்ரான், புரோட்டான் போன்ற ஆங்கிலச் சொற்கள் உள்ளன.   ஸ்டிரான்சியம், ஹிக்ஸ் போஸான், ஃபாஸ்ஃபரஸ் என்று கிரந்தக் கலப்பும் (ஸ, ஷ, ஜ, ஹ மட்டும்) உள்ளன.  
 
 
போற்றுபவர் போற்றட்டும் ! புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் ! தொடர்ந்து செல்வேன் !
ஏற்றதொரு கருத்தை என்னுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் ! அஞ்சேன் !
 
 
கண்ணதாசன் பாடல்

ஜெயபாரதன்
 
2010/12/20 Mani Manivannan <mmani...@gmail.com>

--

C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 11:01:11 AM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
மிக்க நன்றி.
என் கருத்துகளையும் ஒவ்வொரு சொல்லுக்கும் கீழே
பதிவு செய்கின்றேன்.

2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

////Dynamics, Kinetics,Mechanics, Kinematics போன்ற சொற்களுக்கு நீங்கள்

உகந்ததாக நினைக்கும் சொற்கள் யாவை? thermodynamics,
fluid dynamics, quantum mechanics, biomechanics ஆகியவற்றை எப்படிக்
கூறுவது நல்லது என்று ந்இனைக்கின்றீர்கள்? ////
 
 
Dynamics  :   நகர்ச்சியியல்
 
Kinetics, dynamics, mechanics, kinematics ஆகிய யாவுமே நகர்ச்சியைக் குறிபப்தே. ஆகவே இது ஓரளவுக்குப் பொருந்தும் எனினும், விசைக்கு அலகாக dyne என்பதை பயன்படுத்தினர். செண்ட்டிமீட்டர்-கிராம்-நொடி (cgs) முறையில் இன்றும் இது விசையின் அலகே. கிரேக்க மொழியில்  δύναμις (dynamis) என்றால் விசை  வலுவுந்தம் (force, power) என்று பொருள். டை'னமிக்ஃசு என்னும் சொல் நகர்ச்சியைப் பற்றியதாயினும், விசையால் உந்தப்பட்டு நகரும் இயல்புகளைக் குறிக்கும். இயக்கவியல் அல்லது விசைநகர்ச்சியியல் என்பன இன்னும் பொருந்தும் என்பது என் கருத்து. மேலும் வெப்பவியக்கவியல் என்று thermodynamics -உக்கு நீங்களும் கூருவதால் அதில் வரும் -dynamics என்பதோடும் பொருந்தி வரும்.  ஆகவே இயக்கவியல் இன்னும் கூடிய பொருத்தமான சொல்லாகத் தெரிகின்றது.  
 
Kinetics :  அண்ட இயக்கவியல்
 
ஏன் அண்ட என்னும் முன்னொட்டு உள்ளதென்று விலங்கவில்லை.
இதனை நகர்ச்சியியல் என்பது பொருந்தும். இயக்கவியல் என்பதும் பொருந்தும். ஆனால் Dynamics, Kinetics,Mechanics, Kinematics என்னும்
சொற்களை ஒருசேர எண்ணி, தேர்வு செய்வது வேண்டும். எல்லாமே
நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவையே.
 
Mechanics : யந்திரவியல்
 
இயந்திரவியல் என்றும் கூறலாம். இயங்குதல் இயக்குதல் என்னும் பொருல் சுட்டு இருக்கும். ஆனால் இதனை விசையியல் என்பது பொருந்தும்.
 
Kinematics :  வெறுமை இயக்கவியல்
 
இது நகர்ச்சியியல் (விசை, நிறை முதலான எதுவும் பொருட்டில்லை).
 
Thermodynamics : வெப்ப இயக்கவியல்
 
 
ஆ! நாம் இருவரும் முழுவதுமாக ஒப்பும் சொல்!!
 
Fluid Dynamics : திரவ இயக்கவியல்
 
Fluid என்பது காற்று (வளி) போன்ற வளிமப் பொருட்களுக்கும்,
நீர் போன்ற வடிவம் கொண்ட நீர்மப் பொருட்களுக்கும் பொதுவானது.
இவை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குத் பாய்வதால் (தொடர்ச்சியாய் பாயவல்லது) ஆகையால் பாய்மம் என்றும் தமிழில்
கூறுகிறோம். எனவே பாய்ம இயக்கவியல் என்பது பொருந்தும்.
நீர்மம் என்பது நீர் வடிவு கொண்ட்து. திரவம் என்பதும் அதுவே.
சூறாவளி என்பதில் வரும் வளி காற்று. தமிழ் மருத்துவ நூல்களிலும்
ஏராளமான இலக்கியங்களிலும் வளி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.
வளி போன்ற வடிவம் கொண்ட பொருள் வளிமம். இதனை வாயு
என்றும் குறிப்பர்.
 
Quantum Mechanics :  குவாண்டம் யந்திரவியல்
 
குவாண்டம் விசையியல் என்பது பொருந்தும். இங்கு யந்திரவியலோ
இயந்திரவியலோ பொருந்தாது. ஏனெனில், இயந்திரம் (யந்திரம் machine)
அல்ல. ஆற்றலின் கற்றையாக இருப்பதால் கற்றை விசையியல் என்றும்
கூறலாம். குவாண்டம் விசையிய்ல என்பதைப்போலவே குவிண்டம்
விசையியல் எனலாம். ஆற்றல் பொட்டலங்கலாக (!! :) ), குவிப்புகளாக (குவிகைகளாக) உள்ளவாற்றால்  இயங்குவதாகக் கருதும். விசையியல்.
 
Biomechanics : உயிரங்க யந்திரவியல்.
 
 
உயிருடல விசையியல், உயிருடல இயக்கவியல் என்றும் கூறலாம்.
(உயிரங்கம் என்பதும் நல்ல சொல்லே ஆனால் உயிருறுப்பு என்பது ஒரு
குறிப்பிட்ட உறுப்பு, அங்கம் என்பதற்கு மட்டும் என்பது போல தோற்றம்
தருகின்றது. ஆனக்வே உயிருடலம் என்பதைத் தேர்கின்றேன்; பொதுவாகப்
பேசும்பொழுது தமிழில் உடல் என்றாலே உயிருடல்தான், உயிரோடு உடன் இருப்பது).
 
 
ஜெயபாரதன்
 
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நடுநின்று இங்கு நான் கூறியிருக்கும்
கருத்துகளையும் தேர்ந்து பார்க்க வேண்டுகிறேன். சில உங்களுக்கு
ஏலாதனவாக இருகக்லாம். கருத்துப் பரிமாற்றம் என்பதே
இப்படி கருத்துகளை, முறைப்படி முன்வைத்துக் கூட்டாக சிந்திப்பதற்கே.

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 11:01:46 AM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
திருத்தம்
 
நண்பர் மணி வாண்ணன்

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 11:14:26 AM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் செல்வா
 
 
///ஆக்ஃசலரேசன் என்பதை முடுக்கம் என்பதை ஏற்பீர்களா அல்லது
உஷ்ணம், விஞ்ஞானம் மாதிரி மாறா உறுதியில் இருப்பீரா ? /////
யார் நீங்கள் ?   அகத்தியரின் இரண்டாம் சீடரா ?  அல்லது சீத்தலைச் சாத்தனாரா ?
 
வளரும் விஞ்ஞானத் துறையில் இப்படிப் பிறர் கையை முறிப்பது, உரிமையைப்  பறிப்பது  புதிதாக எழுந்துள்ள, தவிர்க்கப்பட வேண்டிய தமிழ்த் தாலிபானிசம் !!!!  
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++++
2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

Mani Manivannan

unread,
Dec 20, 2010, 11:14:04 AM12/20/10
to tamilmanram
:-)
 
என் பெயர் மணி மு. மணிவண்ணன்

அதைக் கடந்த 15 ஆண்டுகளாய் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் அடியில் எழுதி வந்திருக்கிறேன்.  உங்கள் திருத்தமும் பிழையானதே!
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 11:16:57 AM12/20/10
to tamil...@googlegroups.com
மன்னிக்க வேண்டும் நண்பர் மணிவண்ணன்.
 
ஜெயபாரதன்.

++++++++++++++++++
 
2010/12/20 Mani Manivannan <mmani...@gmail.com>
:-)
 
என் பெயர் மணி மு. மணிவண்ணன்

அதைக் கடந்த 15 ஆண்டுகளாய் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் அடியில் எழுதி வந்திருக்கிறேன்.  உங்கள் திருத்தமும் பிழையானதே!
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 
 
2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
திருத்தம்
 
நண்பர் மணிவண்ணன்

2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நண்பர் மணி வண்ணன்,
 

C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 12:04:12 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
செயபாரதன் ஐயா,
 
நீங்கள் எடுத்துக்காட்டும் கண்ணதாசன் பாடல்
என் நிலைப்பாட்டுக்கும்
பொருந்தும். இவற்றோடு என் கருத்தாக
இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்,
 
என் கருத்து தவறெனில்
திருத்திக்கொள்ளவும் அஞ்சேன்.
 
//போற்றுபவர் போற்றட்டும் ! புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் ! தொடர்ந்து செல்வேன் !
ஏற்றதொரு கருத்தை என்னுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் ! அஞ்சேன் !
 
 
கண்ணதாசன் பாடல்//
அன்புடன்
செல்வா

C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 12:40:14 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நண்பர் செல்வா
 
 
///ஆக்ஃசலரேசன் என்பதை முடுக்கம் என்பதை ஏற்பீர்களா அல்லது
உஷ்ணம், விஞ்ஞானம் மாதிரி மாறா உறுதியில் இருப்பீரா ? /////
யார் நீங்கள் ?   அகத்தியரின் இரண்டாம் சீடரா ?  அல்லது சீத்தலைச் சாத்தனாரா ?
 
நான் உங்கள் நண்பன் செல்வாதான். 21 ஆம் நூற்றாண்டில் வாழக்
கொடுத்துவைத்த ஓர் எளிய மாந்தன், தமிழன் அம்மட்டே.
 
 
வளரும் விஞ்ஞானத் துறையில் இப்படிப் பிறர் கையை முறிப்பது, உரிமையைப்  பறிப்பது  புதிதாக எழுந்துள்ள, தவிர்க்கப்பட வேண்டிய தமிழ்த் தாலிபானிசம் !!!!  
 
 
ஐயா, நீங்கள் உங்கள் விருப்பப்படியே எழுதுங்கள்.
நன்னோக்கத்துடன் புதிய அறிவியல் கருத்துகளை
எப்படி எழுதினாலும் அது  நல்லது வ்இரும்பும்
யாவருக்கும் உவப்பே. கருத்து வேறுபாடுகள்,
வளர்முகமான முறையில், அறிவை முன்வைத்து
அலசப்படுவதில் தவறில்லை.   தமிழ்த் தாலிபானிசம்
என்னும் தாக்குதல்கள் முறையற்றவை.
இப்படியான முறையற்ற தாக்குதல்கள்தான் தவிர்க்கப்பட
வேண்டும்.
 
நான் கூறும் கருத்துகளுக்கான காரணங்களை முன் வைத்துள்ளேன்.
அவற்றை எதிர்கொள்ளுங்கள், கருத்தைக் கருத்தால் எதிர்த்து
மறுங்கள். அப்படி மறுக்கும்பொழுதும் நேர்மையுடன், வளர்முக
கண்ணோட்டத்தில், பண்புடன் மறுப்பது கற்றோருக்கு அழகு.

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 1:07:32 PM12/20/10
to tamil...@googlegroups.com
Kinetics --  As per Webster's Science Dictionary (1998).  :  Dynamics dealing with action of forces producing or changing the motion of a body.
 
 
 சி. ஜெயபாரதன்
++++++++++++++++
2010/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 1:11:26 PM12/20/10
to tamil...@googlegroups.com
 //// தமிழ்த் தாலிபானிசம் என்னும் தாக்குதல்கள் முறையற்றவை. ///
 
நண்பர் செல்வா,
 
தமிழ்த் தாலிபானாக இல்லாதவர் ஏன் வருந்த வேண்டும் ?
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++

2010/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>


C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 1:55:18 PM12/20/10
to tamil...@googlegroups.com, அன்புடன், தமிழமுதம்
2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
 //// தமிழ்த் தாலிபானிசம் என்னும் தாக்குதல்கள் முறையற்றவை. ///
 
நண்பர் செல்வா,
 
தமிழ்த் தாலிபானாக இல்லாதவர் ஏன் வருந்த வேண்டும் ?
 
 
மீண்டும் கூறுகிறேன்,
நான் கூறியது இதுதான்:
 
//ஐயா, நீங்கள் உங்கள் விருப்பப்படியே எழுதுங்கள்.
நன்னோக்கத்துடன் புதிய அறிவியல் கருத்துகளை
எப்படி எழுதினாலும் அது  நல்லது வ்இரும்பும்
யாவருக்கும் உவப்பே. கருத்து வேறுபாடுகள்,
வளர்முகமான முறையில், அறிவை முன்வைத்து
அலசப்படுவதில் தவறில்லை.   தமிழ்த் தாலிபானிசம்
என்னும் தாக்குதல்கள் முறையற்றவை.
இப்படியான முறையற்ற தாக்குதல்கள்தான் தவிர்க்கப்பட
வேண்டும்.
 
நான் கூறும் கருத்துகளுக்கான காரணங்களை முன் வைத்துள்ளேன்.
அவற்றை எதிர்கொள்ளுங்கள், கருத்தைக் கருத்தால் எதிர்த்து
மறுங்கள். அப்படி மறுக்கும்பொழுதும் நேர்மையுடன், வளர்முக
கண்ணோட்டத்தில், பண்புடன் மறுப்பது கற்றோருக்கு அழகு. //
 
எங்கே கூறினேன் நான் வருந்தினேன் என்று?
தமிழ்த் தாலிபானிசம் என்பது என்ன?
ஐசக் நியூட்டன், ஐதரசன், ஈலியம் என்று எழுதினால்
தமிழ்த் தாலிபானிசமா?  "ஆங்கிலவழி, சமசுக்கிருதவழி"  நீங்கள்
அறிந்த சொற்களை உங்கள் நோக்கில் "ஒலிப்புத் தூய்மையுடன்"
எழுதினால் அது  தாலிபானிசம் ஆகாதா? 
அதனை ஆரியத் தாலிபானிசம் என்பீரா?
ஆங்கில-சமசுக்கிருதத் தாலிபானிசம் என்பீரா?
திணித்தாலிகளா? இப்படியெல்லாம் பேசுவதால்
உண்மையான நற்பயன் யாதும் விளையுமா?
எண்ணிப்பாருங்கள்!
ஐயா, பண்புடன் கருத்துகளை எதிர்கொள்ளுங்கள்.
கருத்துகளால் எதிர்கொள்ளுங்கள். இப்படியான
வசைமொழிகளால் ஏதும் பயன் இல்லை. உங்களை
நீங்களே தாழ்த்திக்கொள்வீர்கள்.

Mani Manivannan

unread,
Dec 20, 2010, 2:45:55 PM12/20/10
to tamilmanram, அன்புடன்
நண்பர்கள் ஜெயபாரதன், செல்வா,
 
தாலிபானிசம் என்ற சொல் தேவையில்லாமல் புண்படுத்தும் சொல்.
 
தனித்தமிழ் நடை என்பது ஒரு சிறப்பு நடை.  இதன் தாக்கம் அளவிட முடியாதது.  கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று எழுதினால்தான் விளங்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா போன்ற எழுத்தாளர்களையே கணினி, இணையம் என்று மாற்றி எழுத வைத்தது.  இன்று பட்டி தொட்டி எல்லாம் கணினி, இணையம் என்ற சொற்கள் பரவியிருப்பதைப் பார்க்கும்போது இந்தச் சொற்கள் படைக்கப் பட்ட காலத்தில் அல்லது எடுதாளப் பட்ட காலத்தில் தமிழ்.நெட் குழுமத்தில் இருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.
தமிழ் இணையத்தின் தொடக்க காலப் பயனாளர்களின் தனித்தமிழ் ஆர்வத்தால்தான் நல்ல பல தமிழ்க் கலைச்சொற்கள் வேரூன்றின என்பதில் ஐயமே இல்லை.
 
சன் டிவியின் தொடக்க கால இயக்குநர்களின் கருத்தினால்தான் தமிங்கிலம் ஒரு திராவிடக் கட்சியின் ஊடகத்தின் மூலம் பல்கிப் பெருகிப் பரவியது என்பதில் ஐயமே இல்லை.
 
என்னுடைய இளம் பருவத்தில் இயக்குநர் பாலச்சந்தர் படங்களில் மேஜர் சுந்தரராஜன் பாத்திரம் ஆங்கிலத்தில் ஒரு வசனத்தைப் பேசி உடனேயே அதை அவரே தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுவார்.  அதாவது உயர்-நடுத்தரக் குடும்பங்களில் ஆங்கிலத்தின் தாக்கம் இருந்ததால் அவர்கள் பேச்சுமொழியில் ஆங்கிலம் வெகுவாகக் கலந்திருந்ததைச் சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் நாட்டுப்புற மக்களுக்கும் கதை புரிவதற்காகத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது.
 
அம்மாவை ‘மம்மி’ என்றும், அப்பாவை ‘டாடி’ என்றும் சொல்வது உயர்குலச் செல்வந்தர் குடும்பங்களின் அடையாளங்களாய் உருவெடுத்தன.  இன்று அப்படிப் பேசுவதுதான் நாகரீகம் என்பதும், அப்படிப் பேசாதவர்கள் பட்டிக்காடுகளென்றும் அடையாளங்களாகி விட்டன.  இதை வளர்த்தவர்கள் குமுதம், விகடன் போன்றோர் மட்டுமல்ல, அங்கிருந்து சன் டிவிக்குச் சென்று அதே நாகரீகத்தை உருவாக்கிய தமிங்கிலத் தாலிபான்களும்தான். ;-)
 
ஆனாலும், இவர்களையும் மீறித் தனித்தமிழ் இன்றும் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது.  சிக்கல் அதுவல்ல.
 
கலைச்சொற்களை உருவாக்கும் களம் வேறு, அறிவியற் கட்டுரைகளை உருவாக்கும் களம் வேறு.  கலைச்சொற்களைப் பரப்பும் களம் வேறு.  சில சொற்களை சுஜாதா போன்றவர்களே பரப்பினார்கள். முதலில் கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று எழுதிய அதே சுஜாதா, கணினி, இணையம் என்ற சொற்கள் தமிழ் இணையத்தின் முதற்பயனாளர்களிடம் இயல்பாகப் புழங்குவதைக் கண்டு அவரே தனது கடைசிப் பக்கக் கட்டுரைகளில் இதை எழுதிப் பரப்பினார்.  தான் முன்னர் எழுதியது தவறு என்று சொல்லித் தன்னைத் தானே திருத்தி எழுதிய அவரைப் போன்ற பெருந்தன்மையுள்ள அறிவியல் கட்டுரையாளர்களைக் காண்பது அரிது.  மிக அரிது.  சுஜாதா செய்தார் என்பதற்காக எல்லோரிடமும் அதே பெருந்தன்மையை நாம் எதிர்பார்த்தால் ஏமாறுவோம்.
 
ஜெயபாரதன் கட்டுரையிலும் நல்ல பல தமிழ்ச் சொற்கள் உள்ளன.  அவருக்குப் பழக்கப் பட்ட பழைய கலைச்சொற்களைக் கொண்டு எழுதுவதால் அவரால் விரைவாகப் பல நெடுங்கட்டுரைகளை எழுத முடிவதால், அவரிடம் கலைச்சொற்களை மாற்றச் சொல்லத் தயங்குகிறேன்.  புதிய கலைச்சொற்களை அவரே படைக்கும் முன்னர் ஏற்கனவே தமிழ்ப் பள்ளி நூல்களிலும், கலைச்சொல் அகராதிகளிலும் இருக்கும் கலைச்சொற்களை அவரே பார்த்து எடுத்துக் கொண்டால் படிப்பவர்களுக்குக் குழம்பாது.
 
கலைச்சொற்களை ஆளுக்கு ஆள் மாற்றிக் கொண்டே இருந்தால் அறிவியல் கட்டுரை படிப்பவர்களுக்குப் பொறுமை இழந்து போய் விடும்.  அடிப்படைக் கலைச்சொற்களில் தரமான ஒரு கோட்பாடு கொண்டு படைப்பவர்கள் ஒரு புறம் இருக்க வேண்டும்.  அப்படிப் படைக்கப் பட்ட கலைச்சொற்களைத் தம் கட்டுரைகளில் எடுத்தாளும் நண்பர்களும் வேண்டும். அப்படிக் கலைச்சொற்கள் பரவிய பின்னர்தான் பொதுமக்களுக்கு எழுதும் ஜெயபாரதன் போன்றோர் அப்படிப் பட்ட கலைச்சொற்களை எடுத்தாளக் கூடும்.
 
விஞ்ஞானம் என்ற சொல் வழக்கிலிருந்து அருகி (591,000 Google results ) அறிவியல் என்ற சொல் பரவி (1,870,000 Google results ) 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும், அது வழக்கொழிந்து போகவில்லை.  அறிவியல் என்று எழுதினால் மேலும் பலருக்குப் புரியும் என்பதை உணர்ந்தால் ஜெயபாரதன் அறிவியல் என்ற சொல்லை எடுத்தாளக் கூடும்.  அப்படி எழுதுவதால் அவருக்குச் சிந்தனைத் தடையோட்டம் ஏற்பட்டு அவரால் எழுத முடியவில்லை என்றால் அவர் விஞ்ஞானம் என்றே எழுதிக் கொள்ளட்டுமே.  அது அவரது வயதைக் காட்டும் அறிகுறி மட்டும்தான்.  அவரே சயன்ஸ் என்று எழுதினால் (4,450 Google results ) தமிங்கிலத்தைக் குறைக்கச் சொல்லிக் கேட்கலாம்.  மாட்டேன் என்று சன் டிவி போல் அடம் பிடித்தார் என்றால்?
 
மற்றவர்களும் ஜெயா டிவி, விஜய் டிவி, மெகா டிவி, கேப்டன் டிவி, என்று ஈயடிச்சான் காப்பி(!) அடித்தால் சேன்னலை (73 results ) மாற்றக் கூட வாய்ப்பில்லாமல் போய் விடுமே!
 
எனவே எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் ஊக்குவிப்போம்.  நல்ல தமிழில், நடைமுறைத் தமிழில், தனித்தமிழில் எழுதுபவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டி ஊக்குவிப்போம்.  குறை சொல்வதால் யாரும் மாறப் போவது இல்லை.  பாராட்டினால் மகிழ்வார்கள்.
 
பாராட்டுவோம்.
 
தாலிபான் போன்ற சொற்கள்  தேவையில்லை.
 
ஜெயபாரதன் அவருக்குக் கை வந்த நடையிலேயே எழுதட்டும். மற்றவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தால், அவரும் நல்ல பல தனித்தமிழ்ச் சொற்களில் எழுதுகிறார் என்று புலப்படும். அதைப் பாராட்டுவோம்.
 
அவரையும் ஐதரசன், ஈலியம் என்று எழுத வைக்க வேண்டும் என்றால் அவர் கலந்து கொள்ளும் குழுமங்களில் பலரும் ஐதரசன், ஈலியம் என்று எழுத வேண்டும்.
 
இல்லையேல், அவர் தாம் எழுதுவது தனது வாசகர்களைச் சென்றடைகிறதா என்று கவலை கொள்ள நேரிடும்.
 
கலைச்சொல்லாக்கக் கோட்பாடுகள் குறித்து ஜெயபாரதன் - செல்வா பட்டி மன்றங்கள் எண்ணற்ற பல ஏற்கனவே அரங்கேறியுள்ளன.
 
இருவரும் தம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போவது இல்லை.
 
எனவே இது குறித்த விடாக்கண்டன் - கொடாக்கண்டன் பட்டிமன்ற விவாதங்கள் அலுப்புத்தட்டத் தொடங்கி விடுகின்றன.
 
எனவே ஒவ்வொருவருமே என் வழி, தனீஇ வழி என்று பாட்டை போட்டு நடப்பதே நலம்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 

2010/12/21 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>


2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
 //// தமிழ்த் தாலிபானிசம் என்னும் தாக்குதல்கள் முறையற்றவை. ///
 
நண்பர் செல்வா,
 
தமிழ்த் தாலிபானாக இல்லாதவர் ஏன் வருந்த வேண்டும் ?

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 2:57:24 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் செல்வா,
 
 
 உங்கள் பெயரை  Chelvakumar  என்று ஏன் ஆங்கிலத்தில் எழுதாமல்   Selvakumar  என்று எழுதுகிறீர் ?
 
என் பெயரைச் செயபாரதன் என்றுதான் எழுதுவேன் என்பது தாலிபானிசம் என் கருத்துப்படி.  
 
நீங்கள் மெல்லோசைக்குக் குறியிட்டு எழுதுவதும் ஜெர்மனி என்பதை இடாய்ச்சுலாந்து என்பதும் ஸ்பெய்னை எசுமானியா என்பதும் தாலிபானிசமே.  ஹிக்ஸ் போஸானை கிச்சு போசான் என்பது கிண்டலாகத் தெரிகிறது எனக்கு.   ஹைடிரஜனை ஐரதன் என்று நீங்கள் எழுதுவதை நான்  ஒன்றும் தடுக்க வில்லையே.  
 
ஆனால் ஜெயபாரதன், ராஜம், ஷைலஜா என்றும், புஷ்பா, தாஜ் மஹால், ஐஸக் நியூட்டன் என்றும் எழுதினால் உங்களுக்கு ஏன் சினம் உண்டாகுது ?
 
   
தாலிபானிசம் என்றால் கையில் தடியை வைத்துக் கொண்டு ஆக்ஸ்லரேசன் என்றால்  முடுக்கம் என்று ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா என்று ஏறிக் கொண்டு வருவது.  
 
நியூட்டன் விதியில் பயன்படுத்திய ஆக்ஸ்லரேசன் மிகையாகும் வேக வேறுபாடு.  நான் வளர்வேகம் என்று குறிப்பிடுகிறேன்.   முடுக்கம் என்றால் வேக வேறுபாட்டு மிகுதியைக் குறிப்பிட வில்லை.
 
முடுக்கம், ஒடுக்கம், மடுக்கம் என்றால் மயக்கம் உண்டாகுது !!    நீங்கள் அவற்றைப் பயன்படுத்துங்கள்.  
 
 
ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 3:09:59 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நியூட்டன் கட்டுரை உள்பட எனது விஞ்ஞானக் கட்டுரைகளைத் தினம்  எத்தனை முறைத் தமிழர் பார்க்கிறார் என்பதற்கு ஓரிரு உதாரணங்கள்.
 
 
 
 
 
 
ஜெயபாரதன்
 
++++++++++++++++

C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 4:18:35 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
நண்பர் செல்வா,
 
 
 உங்கள் பெயரை  Chelvakumar  என்று ஏன் ஆங்கிலத்தில் எழுதாமல்   Selvakumar  என்று எழுதுகிறீர் ?
 
சரியான ஒலிப்பு Chelvakumaar தான். (திருந்தாத, பேச்சுவழக்கு)
மாற்று ஒலிப்பு Selvakumaar. ஆனால் எல்லா எழுத்துகளும்
ஆங்கிலத்தில் (இலத்தீன்/உரோமன்) எழுத்துகளில்தான் உள்ளன.
 
 
என் பெயரைச் செயபாரதன் என்றுதான் எழுதுவேன் என்பது தாலிபானிசம் என் கருத்துப்படி.  
 
சுப்பிரமணிய பாரதியார் தாலிபானா? வீமன் என்றானே.?!
அருச்சுனன் என்றானே? பாரதியைத் தாலிபான் என்பீரா?
எழுதும் மொழியின் எழுத்துகளில் எழுதுவது தவறா?
 
 
நீங்கள் மெல்லோசைக்குக் குறியிட்டு எழுதுவதும் ஜெர்மனி என்பதை இடாய்ச்சுலாந்து என்பதும் ஸ்பெய்னை எசுமானியா என்பதும் தாலிபானிசமே. 
 
இடாய்ச்சு மொழியரின் பெயரில் இல்லாத ஒலியைக்கொண்டு
Germany என்றுதான் கட்டாயம் எழுத வேண்டும் என்பது என்ன
இசமாம்? திணிப்பானிசம்? :) எசுப்பானியர் தங்கள் மொழியின் பெயரை
எப்படி எழுதுகின்றார்கள் என்று பாருங்கள்! எப்படியாயினும் தமிழ்
வழக்குப்படி எழுதுவது புதிதல்ல. exonym பற்றி பன்முறை
இங்கு எடுத்துரைத்திருக்கின்றேன். இடாய்ச்சுலாந்து என்று
அந்நாட்டவரிடம் சொல்லிப்பாருங்கள். போற்றுவார்கள். எசுப்பானியரிடம்
எசுப்பானியம் என்று சொல்லிப்பாருங்கள் அவர்கள் மகிழ்வார்கள்.
ஆனால் இவை யாவும் நமக்கு, நம் தமிழில் வழங்கவே. ஆகவே
தமிழ் முறைப்படி இருப்பதில் ஒரு குறையுமோ தாழ்வுமோ இல்லை.
உங்கள் அறியாமையைப் போக்கிக்கொள்ளுங்கள்!! தாலிபானிசம்
போன்ற வசை மொழிகள் வீசுவதைத் தவிருங்கள்! 
 
ஹிக்ஸ் போஸானை கிச்சு போசான் என்பது கிண்டலாகத் தெரிகிறது எனக்கு.   ஹைடிரஜனை ஐரதன் என்று நீங்கள் எழுதுவதை நான்  ஒன்றும் தடுக்க வில்லையே.  
 
இக்ஃசு போசான் எனலாமே. நீங்கள் எழுதியிருப்பதை நான் Hicks Pohsaan
என்றும் படித்துக் குழம்ப வாய்ப்புள்ளதே? வேற்றுமொழிப் பெயர்கள்
சிலவற்றை வழங்குகையில் பிறழ்வுகள் இருக்கும் என்பது அனைவரும் அறிவது. இத்னை பெரிது படுத்தலாமா? ஃகிக்'சு போ'சான் என்று பிறழ்வு
மிகக்குறைந்தவாறு எழுதவும் கூடும் (பொது வழக்குக்கு அல்ல, ஒலிப்பைக்
காட்டும் ஓரிரு இடங்களுக்கு). கா'ந்தி, பா'ரதி என்று எழுத முடியுமே.
புரட்சி எதும் செய்யத் தேவை இல்லை. சிறப்பு நூல்களில் எம்மொழிச்
சொல்லாயினும் "முழு"த் துல்லியத்துடன் தமிழ் எழுத்துக்களோடு
சில குறியீடுகளைப் பயன்படுத்தி எழுத இயலும். ஆனால் பொது வழக்கில்
காந்தி (kaandhi), பாரதி (paaradhi) தான். உங்கள் பெயரை உலகில் உள்ள
பல மொழிகளில் வெவ்வேறு விதமாகத்தான் எழுதுவர், பலுக்குவர்.
இடாய்ச்சு மொழியில் யெயபாரதன்/யெயபாரடன், பிரான்சிய, எசுப்பானிய
மொழிகளிலும் ழெயபாரதன், ஃகெயபாரதன் (??). எசுப்பானிய. உலகில்
பில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் ஆங்கில Ja ஒலி இல்லாமல்
இருக்கின்றார்கள். தமிழில் முதல் ஒலியாக வரலாகாது, ஆனால் பஞ்சு,
நெஞ்சு என்பது போல வரும் இடங்களில் இவ்வொலி உண்டு.
உங்கள் பெயரை செ'யபாரதன் என்று ஒலிப்புப் பிறழ்வு குறைவாக
இருக்குமாறு எழுத இயலும். ஒலிப்பு மட்டுமே முகனை (= முதன்மை, தலைமை) என்றால் பல வழிகள் உள்ளன.
 
 
ஆனால் ஜெயபாரதன், ராஜம், ஷைலஜா என்றும், புஷ்பா, தாஜ் மஹால், ஐஸக் நியூட்டன் என்றும் எழுதினால் உங்களுக்கு ஏன் சினம் உண்டாகுது ?
 
 
ஜெயபாரதன், ராஜம், ஷைலஜா, புஷ்பா, தாஜ் மஹால் என்றெல்லாம்
எழுத வேண்டும் எனில் எழுதுங்கள் ஆனால் ஐசக் நியூட்டன் என்றோ
போசான் என்றோ எழுதுவதில் என்ன தவறு,
ஏன் தேவை இல்லாமல் கிரந்தம் கலக்கின்றீர்கள்.
என் வாதம் என்னவென்றால் தாச்சு மகால் என்றால்
பெரிதாக பிறழ்வு ஏதும் இல்லை. தமிழ்ப்பெயராக இல்லாவிடில்
தமிழ் முறைப்படி எழுதுவதில் தவறு ஏதும் இல்லை.
அதுவே முறையும் ஆகும். ராஜம் என்னும் பெயரை ராசு (சின்னராசு,
பெரிய ராசு) என்று பலரும் அழைப்பதைக் கேட்டிருக்கின்றேன்.
தமிழில் இராசம் என்று எழுதுதல் தவறல்ல. தமிழை
மதிப்பதில் என்ன அவ்வளவு கடுப்பு?  புசுப்பா, ரமேசு
என்று கூறுவதைக் கேட்டதில்லையா? சைலசா என்றுதான்
தமிழில் எழுதுதல் கூடும். Shyலजा என்று எழுத முடிகிறதே
என்று கேட்காதீர்கள். அப்படி எழுதுவது தமிழ் அல்ல.
தமிழின் எழுத்துகளை தமிழ் இலக்கண நூல்கள் தெளிவாகக்
கூருகின்றன. அது தவிரவும், அதில் ஒண்மை உளது, எளிமை
உள்ளது, மூச்சுச் சிக்கனம் உள்ளது, அறிவார்ந்த நல்வழி அது.
2500 ஆண்டுகளாக உயிர்த்து வாழும் மொழி. அதனை, அதன்
மரபுகளைப் போற்றி எழுதுவது தவறல்ல.
கடமை. அறிவுடைமை.
 
,   

தாலிபானிசம் என்றால் கையில் தடியை வைத்துக் கொண்டு ஆக்ஸ்லரேசன் என்றால்  முடுக்கம் என்று ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா என்று ஏறிக் கொண்டு வருவது.  
 
தடியை வைத்துக்கொண்டா? :) நல்ல கற்பனை ஐயா உங்களுக்கு !!  :)
முடுக்கம் என்று அகராதிகளில் கொடுத்துள்ளதையும், பிற காரணங்களையும்
சுட்டிக்காட்டினேன். அறிவடிபப்டையில் கூறும் கருத்துகள் உங்களுக்குத்
தடியாகத் தெரிந்தால், நான் என்ன செய்ய இயலும் ?! :)
 
நியூட்டன் விதியில் பயன்படுத்திய ஆக்ஸ்லரேசன் மிகையாகும் வேக வேறுபாடு.  நான் வளர்வேகம் என்று குறிப்பிடுகிறேன்.   முடுக்கம் என்றால் வேக வேறுபாட்டு மிகுதியைக் குறிப்பிட வில்லை.
 
முடுக்கம் என்றாலே மேலும் மேலும் விரைவு உந்தப்படுவதைக் குறிக்கும்.
முடுக்கம் ஏறுவிரைவைச் சுட்டும்.  மட்டுபடுதல், ஒடுங்குதல் என்பன
வழக்கில் உள்ள சொற்கள். முடுக்கத்துக்கு எதிர்மறையாக மடுக்கம், ஒடுக்கம்.
 
முடுக்கம், ஒடுக்கம், மடுக்கம் என்றால் மயக்கம் உண்டாகுது !!    நீங்கள் அவற்றைப் பயன்படுத்துங்கள்.  
 
வளர்விரைவு, தளர்விரைவு என்றாலும் கருத்து சிறக்கவில்லை ஐயா
அதனாலேயே வளர்வேகம், தளர்வேகம் ஏற்புடையதாக இல்லை என்றேன்.
முடுக்கம் என்னும் சொல்லில் உள்ள உந்துற்ற ஏறுவிரைவு வளர்விரைவு
என்னும் சொல்லில் இல்லை. மேலும் முடுக்கு = accelrate என்று வினையாகவும் வழங்கும்  வசதி உள்ளது. இவ்வகையான நோக்குகளும்,
கலைச்சொல்லாக்கத்தில் தேவை என்பேன்.

C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 4:33:29 PM12/20/10
to tamil...@googlegroups.com, அன்புடன்
அன்புள்ள மணி,
 
உங்கள் மடலுக்கு நன்றி. நான் திரு செய்பாரதன் அவர்கள் தம்
கருத்தை மாற்றிக்கொள்வார் என்னும் நினைப்பில் எழுதவில்லை.
அறிவியல் வளராது அது இது என்று செல்லாத (அறிவடிப்படையில் எற்றுக்கொள்ள இயலாத)  கருத்துகளை முன் வைப்பதால்,
அக்கருத்துகளை மறுத்துரைக்க வேண்டியுள்ளது.
படிப்பவர்களில் யாருக்கேனும் இவை உதவக்கூடுமே
என்னும் நோக்கில் எழுதப்பட்டவை.
கடுமையாகத் தாக்குவது, தாழ்த்திப் பேசுவது,
பொய்யான உரிமைக் குரல் கொடுப்பது, தமிழில் எழுதினால்
எதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டது போல
பழிப்பது போன்றவற்றை எதிர்க்க வேண்டியதாக
உணர்ந்ததால் எழுதுகிறேன்.
 
செயபாரதன் அவர்கள் அவருக்கு உகந்த நடையிலேயே
எழுதட்டும் என்று நான் பல முறை கூறியுள்ளேன்.
அவரை, அவர் ஆற்றும் அறிவியல் பணியைப்
போற்றுவோரில் நானும் ஒருவனே.
 
அன்புடன்
செல்வா
 
2010/12/20 Mani Manivannan <mmani...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 5:08:19 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
////சுப்பிரமணிய பாரதியார் தாலிபானா? வீமன் என்றானே.?!

அருச்சுனன் என்றானே? பாரதியைத் தாலிபான் என்பீரா?
எழுதும் மொழியின் எழுத்துகளில் எழுதுவது தவறா?////
 
பாரதியார் உங்கள் கட்சிக்காரர் அல்லர்.   வட சொற்களும், கிரந்தமும் கலந்தவர்.   அவர் எமது கட்சிக்காரர்.
ஆங்கிலக் கணிதச் சமன்பாடுகளில் கிரேக்க எழுத்துக்கள் பல சேர்ந்துள்ளன.  
 
ஆயிரக் கணக்கான தமிழ்த் திரைப் படங்களைப் பாருங்கள்.   பலரது இனிஷியல் எழுத்துக்கள் எல்லாம் 'எம்ஜியார்'  போல்  ஆங்கிலத்தில் நிரந்தரமாய்ப்  பட அச்சாகி விட்டன.   படத்தில் முழுமையாக ஆங்கிலப் பெயர்களும் காணலாம்.
 
பிற எழுத்துக்கள் சேர்ப்பைத் தமிழில் முழுவதும் நீக்க முடியாது.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++

C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 6:14:31 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////சுப்பிரமணிய பாரதியார் தாலிபானா? வீமன் என்றானே.?!

அருச்சுனன் என்றானே? பாரதியைத் தாலிபான் என்பீரா?
எழுதும் மொழியின் எழுத்துகளில் எழுதுவது தவறா?////
 
பாரதியார் உங்கள் கட்சிக்காரர் அல்லர்.   வட சொற்களும், கிரந்தமும் கலந்தவர்.   அவர் எமது கட்சிக்காரர்.
ஆங்கிலக் கணிதச் சமன்பாடுகளில் கிரேக்க எழுத்துக்கள் பல சேர்ந்துள்ளன.  
 
ஆயிரக் கணக்கான தமிழ்த் திரைப் படங்களைப் பாருங்கள்.   பலரது இனிஷியல் எழுத்துக்கள் எல்லாம் 'எம்ஜியார்'  போல்  ஆங்கிலத்தில் நிரந்தரமாய்ப்  பட அச்சாகி விட்டன.   படத்தில் முழுமையாக ஆங்கிலப் பெயர்களும் காணலாம்.
 
 
தவறுகளைத் திருத்திக்கொள்வது நல்லதுதானே!
 
 
பிற எழுத்துக்கள் சேர்ப்பைத் தமிழில் முழுவதும் நீக்க முடியாது.
 
 
என்ன இன்னும் 26 கிரந்த எழுத்துகளையும் சேர்த்து அதற்கான உயிர்மெய்
வடிவங்களையும் தமிழில் சேர்க்க வேண்டும் என்கின்றீர்களா?
(முன்பொரு முறை யார் அப்படிச் செய்கிறார்கள் என்று இங்கே
என்னைக் கேட்டீர்களே....இப்பொழுது
பாருங்கள்! )
 
தமிழில் எந்தப் புதிய எழுத்தையும் சேர்க்காமல் எழுதுவது
மிகவும் எளிது.  அப்படியே அவ்வொலிகள் வேண்டும் என்றாலும்,
மிக எளிதாக கா'ந்தி, டே'விட்', பா'ரதி, சா'னகி, தே'வகி, வெ'ர்மி,
என்று  எழுதிக்கொள்ளலாம்.
இந்த ஒட்டுக்குறிகள் இல்லாமல் தமிழ் முறைப்படி
எழுதினால் வரும் எளிமையை மக்கள் உணர்ந்தால் இன்னும் உயர்வர்.

வேந்தன் அரசு

unread,
Dec 20, 2010, 9:03:33 PM12/20/10
to tamil...@googlegroups.com
ஜெயபாரதன் ஐயா அறிவியலை தமிழில் எழுதும் முயற்சிக்கு என் முழு ஆதரவு உண்டு
அண்மைக்காலங்களில் அவரது மொழியாக்கம் தனித்தமிழ் பாங்கில்தான் செல்லுகிறது. நமக்கும் பேராசை கூடாது.
 
 நாம் ஏன் வாதிட்டு அவரது நேரத்தை வவ்வ வேண்டும்

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 9:10:50 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் செல்வா,
 
/////என்ன இன்னும் 26 கிரந்த எழுத்துகளையும் சேர்த்து அதற்கான உயிர்மெய்
வடிவங்களையும் தமிழில் சேர்க்க வேண்டும் என்கின்றீர்களா?////
 
இது முழுக்க முழுக்க, ஒவ்வாத உங்கள் கேலிக் கருத்து.  இப்படி முரண்பட்ட கருத்தைத் தூக்கிப் போட்டு வேடிக்கை பார்ப்பது உங்கள் திருவிளையாடல் !!!!

 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 9:20:33 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
ஆதரவுக்கு மிக்க நன்றி வேந்தரே.  
 
 
கடந்த எட்டு ஆண்டுகளாக வாரம் ஒரு முறையாக விஞ்ஞானக் கட்டுரையை ஒன்றைத்  தவறாமல்  திண்ணையில் (www.thinnai.com) எழுதி வருகிறேன்.   நான்கு ஆண்டுகளின் படைப்புகள் என் வலையில் (http://jayabarathan.wordpress.com) உள்ளன. 
 
இறைவன் என் ஆயுளை நீடிக்க வைத்து இன்னும் 500 கட்டுரைகள் எழுத உடல் நலமும் அளிக்க வேண்டுகிறேன்.
 
என் வயது 77 ஆகப் போகிறது. 
 
 
ஜெயபாரதன்.

+++++++++++++++++++++++++++
 
 
2010/12/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 20, 2010, 9:39:55 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


20 டிசம்பர், 2010 9:20 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

ஆதரவுக்கு மிக்க நன்றி வேந்தரே.  
 
 
கடந்த எட்டு ஆண்டுகளாக வாரம் ஒரு முறையாக விஞ்ஞானக் கட்டுரையை ஒன்றைத்  தவறாமல்  திண்ணையில் (www.thinnai.com) எழுதி வருகிறேன்.   நான்கு ஆண்டுகளின் படைப்புகள் என் வலையில் (http://jayabarathan.wordpress.com) உள்ளன. 
 
இறைவன் என் ஆயுளை நீடிக்க வைத்து இன்னும் 500 கட்டுரைகள் எழுத உடல் நலமும் அளிக்க வேண்டுகிறேன்.
 
என் வயது 77 ஆகப் போகிறது. 
 
பல்லாண்டு வாழ்க ஐயா
 
நோக்கம் இருக்கும் வரை ஆயுள் நீடிக்கும்
 
 கலைஞரை நினைவில் நிறுத்தினால் நமக்கு நம்பிக்கை பிறக்கும்.
 
--

C.R. Selvakumar

unread,
Dec 20, 2010, 9:53:14 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
ஆதரவுக்கு மிக்க நன்றி வேந்தரே.  
 
 
கடந்த எட்டு ஆண்டுகளாக வாரம் ஒரு முறையாக விஞ்ஞானக் கட்டுரையை ஒன்றைத்  தவறாமல்  திண்ணையில் (www.thinnai.com) எழுதி வருகிறேன்.   நான்கு ஆண்டுகளின் படைப்புகள் என் வலையில் (http://jayabarathan.wordpress.com) உள்ளன. 
 
இறைவன் என் ஆயுளை நீடிக்க வைத்து இன்னும் 500 கட்டுரைகள் எழுத உடல் நலமும் அளிக்க வேண்டுகிறேன்.
 
என் வயது 77 ஆகப் போகிறது. 
 
ஐயா,
எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் நீங்கள்
100 ஆண்டும் தாண்டி இளமையுடன்
நல்லாக்கங்களை தாங்கள் விரும்புமாறு செய்தளிக்க
இறைஞ்சுகிறேன்.
நானும் உயிரோடு இருந்தால் 100 ஆண்டு தாண்டியிருந்தாலும்
கருத்துப்போர் நிகழ்த்துவேன், அனைத்தும் நலம் கருதியே :)
நாம் இரண்டு பேரும் ஒரே கட்சிதான் ஐயா.
நீங்கள் எத்தனையோ பேருக்கு வழிகாட்டி.
எனினும் இன்னும் உயர்ந்த நல்வழிகாட்டியாய்
உயர நல்வாழ்த்துகள்!
 
அன்புடன்
செல்வா
 
ஜெயபாரதன்.

+++++++++++++++++++++++++++
 
 
2010/12/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஜெயபாரதன் ஐயா அறிவியலை தமிழில் எழுதும் முயற்சிக்கு என் முழு ஆதரவு உண்டு
அண்மைக்காலங்களில் அவரது மொழியாக்கம் தனித்தமிழ் பாங்கில்தான் செல்லுகிறது. நமக்கும் பேராசை கூடாது.
 
 நாம் ஏன் வாதிட்டு அவரது நேரத்தை வவ்வ வேண்டும்
 

--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Dec 20, 2010, 10:32:23 PM12/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நல்வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பர் செல்வா.
 
நம்முள் சண்டை செய்தாலும்
நாம் சகோதரர் அன்றோ ?

அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
 
+++++++++++++++
 
 
2010/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 21, 2010, 8:34:33 AM12/21/10
to tamil...@googlegroups.com


20 டிசம்பர், 2010 10:32 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

நல்வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பர் செல்வா.
 
நம்முள் சண்டை செய்தாலும்
நாம் சகோதரர் அன்றோ ?
 
ஆஃஆ
 
கனடாக்காரர்கள் ஒன்னு கூட்டிட்டாங்க் டோய்
 
 
 
ஜெயபாரதன் ஐயாவின் கட்டுரைகளை திருடி
 எனக்கு நச்சாத சொற்களை களைந்து
எனக்கு உவந்த சொற்களை பெய்து
என் வலையுள் ஏற்றிக்கொண்டு
 நல்ல பேரை தட்டி செல்ல திட்டம்
 
பாட்டி இடம் இருந்து நான் ஏன் வடை திருடவேண்டும்
காக்கையை ஏமாற்ற அறிவேனே
 

Elangovan N

unread,
Dec 21, 2010, 8:43:41 AM12/21/10
to tamil...@googlegroups.com


2010/12/21 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

ஆதரவுக்கு மிக்க நன்றி வேந்தரே.  
 
 
கடந்த எட்டு ஆண்டுகளாக வாரம் ஒரு முறையாக விஞ்ஞானக் கட்டுரையை ஒன்றைத்  தவறாமல்  திண்ணையில் (www.thinnai.com) எழுதி வருகிறேன்.   நான்கு ஆண்டுகளின் படைப்புகள் என் வலையில் (http://jayabarathan.wordpress.com) உள்ளன. 
 
இறைவன் என் ஆயுளை நீடிக்க வைத்து இன்னும் 500 கட்டுரைகள் எழுத உடல் நலமும் அளிக்க வேண்டுகிறேன்.
 
என் வயது 77 ஆகப் போகிறது. 
 
 
ஜெயபாரதன்.


ஐயா, வாழ்க பல்லாண்டு பல்லாண்டு. நீடு வாழ்க. 
500 என்ன 5000த்தையும் தாண்டி பெருகட்டும்.

தமிழ் பற்றிய கருத்துக்களில் அடியேன் செல்வாவின் கட்சியே என்றபோதிலும்
நீங்கள் அடிக்கடி சினப்பட்டு தாலிபான்கள் என்று விளிப்பதை வருத்தத்துடன் பார்க்கும் போதிலும் :-)
உங்கள் பணி சிறக்கட்டும்.
 
அன்புடன்
நாக.இளங்கோவன்

சி. ஜெயபாரதன்

unread,
Dec 21, 2010, 10:59:10 AM12/21/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர் நாக. இளங்கோவன்,
 
 
நாமும் ஓரிரு முறைகள் நண்பராய்த் தர்க்கத்தில் இறங்கி இருக்கிறோம்.   தமிழ் மொழி நமது பொதுச் சொத்து.   ஒருவரது தனிச் சொத்தில்லை.  வளரும் விஞ்ஞான யுகத்தில் தமிழ் மொழி அடையும் சில நல்ல மாறுபாடுகள் ஏற்க உகந்தவை என்றும் அவற்றைச்  சிலர்  தடுக்க வேண்டாம் என்பதும்  என் ஆழ்ந்த கருத்து.   அவ்வளவுதான்.
நீங்கள் 'பதிவுகள்' வலையிதழில் முன்பு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெளிவாக எழுதியதைப்  படித்து வந்திருக்கிறேன்.   "சிலம்புச் செல்வர்" வாரிசு நீங்கள் என்று பலர் தமிழகத்தில் அறியமாட்டார்.
 
உங்கள் இனிய நல்வாழ்த்துக்கு உனது உளங்கனிந்த நன்றி.   
 
 
நட்புடன்,
சி. ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++
2010/12/21 Elangovan N <nela...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Dec 21, 2010, 11:25:28 AM12/21/10
to tamil...@googlegroups.com
இது வேந்தரின் திருவிளையாடல் புராணம்.
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++

2010/12/21 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ADISIL Bala

unread,
Dec 21, 2010, 11:46:36 AM12/21/10
to tamil...@googlegroups.com
ஐயா Helium என்பது தமிழ் சொல்லான எல் (சூரியன்) என்ற சொல்லின் வழி பிறந்தது. எல்லியம் என்பது இதன் சரியான சொல் 
பாமயன் 

2010/12/20 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
ஏன் செயபாரதன் ஐயா, நீங்கள் எளிய ஒரு செய்தியைச் சுட்டிக்காட்டினாலும்
எதிர்கொள்ளாமல், தூய தமிழ் என்கிறீர்?  Helium என்பதை ஈலியம் என்றால்
"தூய" தமிழா? இத்தாலியன் Elio என்கிறான். ஐதரான் என்றால் தூய
தமிழா (உலக மொழிகளில் ஐதரசன் என்பதை எப்படி எழுதியுள்ளார்கள்
என்று முன்பொருமுறை எடுத்துக்காட்டியுள்ளேன்).
ஐதரசக் குளோரைடு என்றால் அறிவியல் குறைந்துவிடுமா?
ஐசக் நியூட்டன் என்றால் "தூய" தமிழா?
ஈலியம், ஐதரசன், குளோரின் என்றால் தூய தமிழா?
கூடிய மட்டிலும் எளிய தமிழில் எழுதலாமே என்றால்
ஏன் இப்படிக் கூறுகின்றீர்கள்?
தூய தமிழ் என்று நீங்களாகக் கற்பனை செய்கின்றீர்கள்.
நான் கூறிய காரணங்களை எதிர்கொள்ளுங்கள்.
அறிவியல் என்று எழுத மாட்டேன்,
வெப்பநிலை என்று எழுத மாட்டேன் என்று அடம் பிடிப்பது
நீங்கள்தான் :) எப்படி எழுதினாலும் எழுதுங்கள், ஆனால்
கலைச்சொர்கலில் சீர்மை இருந்தால் நல்லது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.
 
அன்புடன்
செல்வா

 
2010/12/19 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
வாழ்நாள் முழுவதும் தனித்தமிழைத் துருவித் துருவித் தேடும் தூய தமிழர், உருப்படியாக இதுவரை விஞ்ஞானப் படைப்பு நூல்களை ஆக்கிய தில்லை.  ஆக்கப்  போவது மில்லை.   
 
நண்பர் செல்வா, தூய தனித் தமிழில் யார் இதுவரை ஒரு விஞ்ஞான நூலை முழுவதாக எழுதியுள்ளார் என்று கூறுங்கள் !!!! 
 
 
சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++++++++++
 
 
2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
அன்புடன்
செல்வா


 
 
+++++++
2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
அன்புடன்
செல்வா
 

2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
 
செல்வா
 
 


 
எனக்குப் புரியவில்லை இது:  http://tinyurl.com/visaiyiyal   புரிந்தவர் விளக்கலாம்.
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++

2010/12/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

அன்புடன்
செல்வா
 


 
2010/12/19 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
வேந்தரே,
 
ஆக்ஸலரேசன் என்பது வேக மாற்றம் என்பது 100% சரியே.   நான் அதை வளர்வேகம் என்று வேக வளர்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.   அது போல் வேகத் தளர்ச்சி டிசெல்ரேசன்.
 
ஆனால் முடுக்குவிசை ஆக்ஸலரேசன் ஆகாது. விசை வேறு வேக வளர்ச்சி வேறு.  
 
விசை என்பது  வேக வளர்ச்சி, வேகத் தளர்ச்சிக்கு நேரிய வீதத்தில் மாறுகிறது.
 
 
ஜெயபாரதன்.
 

 
2010/12/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
19 டிசம்பர், 2010 10:28 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
வேந்தரே,
 
 
விசையும் அதன் விளைவும் ஒன்றா ?  காரணி வேறு அதன் கைவினை வேறு.   கடவுள் வேறு அதன் படைப்பு வேறு. 
 
 
ஐயா நானும் அதே சொல்லுகிறேன்
 
ஏக்சலேரேசன் வேகம் அல்ல. வேகத்தின் மாற்றம்
 
அந்த மாற்றத்துக்கு காரணம் விசை
முடுக்குவிசை என்பதே பொருத்தமான சொல்
 
 
 
 
 
எல்லாம் ஒன்று எனச் சொல்லாதீர்.  நாமிங்கு விஞ்ஞானம் பேசுகிறோம்.   கவிதை இல்லை.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++

2010/12/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
18 டிசம்பர், 2010 7:03 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,
 
 
(Force) = (mass) x (acceleration)
 
சரியே ஐயா
 
ஆனால் மாஸ் என்பது மாறிலி.
 
அதனால் Force) = (acceleration)   எனலாமே
acceleration என்பது விளைவு. அதற்கு காரணம் விசைதானே
 
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
ADISIL
15/B Pioneer Colony
Thirumangalam
Madurai-625706
Tamilnadu, India
Ph: 0919842048317
http://adisiltrust.blogspot.com

ADISIL Bala

unread,
Dec 21, 2010, 11:57:15 AM12/21/10
to tamil...@googlegroups.com


2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////Dynamics, Kinetics,Mechanics, Kinematics போன்ற சொற்களுக்கு நீங்கள்

உகந்ததாக நினைக்கும் சொற்கள் யாவை? thermodynamics,
fluid dynamics, quantum mechanics, biomechanics ஆகியவற்றை எப்படிக்
கூறுவது நல்லது என்று ந்இனைக்கின்றீர்கள்? ////
 
 
Dynamics  :   நகர்ச்சியியல் - துனைமவியல் 
 
Kinetics :  அண்ட இயக்கவியல் - இயக்கவியல் 
 
Mechanics : யந்திரவியல் - எந்திரவியல் 
 
Kinematics :  வெறுமை இயக்கவியல் 
 
Thermodynamics : வெப்ப இயக்கவியல் - தெறுமதுனைமவியல்  
 
Fluid Dynamics : திரவ இயக்கவியல் - நீர்ம துனைமவியல் 
 
Quantum Mechanics :  குவாண்டம் யந்திரவியல் - கொத்த எந்திரவியல் 
 
Biomechanics : உயிரங்க யந்திரவியல். - உயிரி எந்திரவியல் 
 
 
ஜெயபாரதன்



--

ADISIL Bala

unread,
Dec 21, 2010, 12:12:26 PM12/21/10
to tamil...@googlegroups.com


2010/12/21 ADISIL Bala <adisi...@gmail.com>


2010/12/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
////Dynamics, Kinetics,Mechanics, Kinematics போன்ற சொற்களுக்கு நீங்கள்

உகந்ததாக நினைக்கும் சொற்கள் யாவை? thermodynamics,
fluid dynamics, quantum mechanics, biomechanics ஆகியவற்றை எப்படிக்
கூறுவது நல்லது என்று ந்இனைக்கின்றீர்கள்? ////
 
 
Dynamics  :    துனைமவியல் 
 
Kinetics :  இயக்கவியல் 
 
Mechanics : எந்திரவியல் 
 
Thermodynamics : தெறுமதுனைமவியல் (வெப்பத்திற்கு Heat என்ற சொல் உள்ளது )  
 
Fluid Dynamics :  நீர்ம துனைமவியல் 
 
Quantum Mechanics :  கொத்த எந்திரவியல் 
 
Biomechanics : உயிரி எந்திரவியல் 
இவை தூய தமிழ் சொற்கள்  

C.R. Selvakumar

unread,
Dec 21, 2010, 5:30:00 PM12/21/10
to tamil...@googlegroups.com
அன்புள்ள பாமயன்,
 
இராம.கி ஐயா இம்மன்றத்தில் உள்ளார். அவர் ஆக்கிய
சொற்கள்தாம் தெறுமவியல், துனைமவியல் என்பன
என்று நினைக்கின்றேன். இவற்றைவிட
முன்பு மொழிந்த சொற்கள் எளிமையாகவும் பொருளை
நன்கு விளக்குவனவாகவும் உள்ளன என்று கருதுகின்றேன்.
அவையும் தூய தமிழ்ச்சொற்களே.
 
அன்புடன்
செல்வா
 
2010/12/21 ADISIL Bala <adisi...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Dec 21, 2010, 6:45:44 PM12/21/10
to tamil...@googlegroups.com


2010/12/21 ADISIL Bala <adisi...@gmail.com>

ஐயா Helium என்பது தமிழ் சொல்லான எல் (சூரியன்) என்ற சொல்லின் வழி பிறந்தது. எல்லியம் என்பது இதன் சரியான சொல் 
பாமயன் 
 
Helium என்பது தமிழ் எல் (எல்லி) என்பதில் இருந்து
பிறந்ததா என அறியேன்.  இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம்.
ஆனால் இப்படியான தமிழ்ப் பெயர்களை அறிவேன்.
1968-1972 காலப்பகுதியில்
எல்லாத் தனிமங்களுக்கும் தமிழில் பெயர்களை உருவாக்கினோம்
(கிண்டி பொறியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் கிழமைதோரும்
கூடும்  மொழியாக்கக் கூட்டத்தில்)
ஆனால் தனிமங்களின் பெயர்களையும் வேதியியல் சேர்மங்களின்
பெயர்களையும் அப்படியே ஆளலாம் (மற்ற மொழிகளைப் போலவே
நம் மொழிக்கு உகந்தவாறு சிறிது மார்ரி எழுதி ஆளலாம்)
என்பது இப்பொழுது நிலவும் கருத்து.
பொட்டாசியம் குளோரைடு, சோடியம் ஐதராக்சைடு
என்பது போல. எல்லோரும் எல்லியம் என்பதையே விரும்பினால்
அப்படியே ஆள்வதின் சிக்கல் இல்லை (ஈலியம், எல்லியம்
நெருக்கமானவை - ஆனால் நினைத்து நினைத்து மாற்றக் கூடாது
அலல்வா? முறைப்படி தேர்ந்து கலைச்சொல் சீர்மை காண
வேண்டும். . இத்தாலியர் Elio என்றுதான்
அழைக்கின்றனர்.

வேந்தன் அரசு

unread,
Dec 21, 2010, 7:52:53 PM12/21/10
to tamil...@googlegroups.com


21 டிசம்பர், 2010 5:30 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள பாமயன்,
 
இராம.கி ஐயா இம்மன்றத்தில் உள்ளார். அவர் ஆக்கிய
சொற்கள்தாம் தெறுமவியல், துனைமவியல் என்பன
என்று நினைக்கின்றேன். இவற்றைவிட
முன்பு மொழிந்த சொற்கள் எளிமையாகவும் பொருளை
நன்கு விளக்குவனவாகவும் உள்ளன என்று கருதுகின்றேன்.
அவையும் தூய தமிழ்ச்சொற்களே.
 
தெறுமதுனவியல் என்றே அவர் சொல்லியதாக நினைவு
ஐயாவுக்கு தமிழ் சொற்கள் ஆங்கிலம் போல் ஒலிக்க வேண்டும் என்ற ஆசை
 

ADISIL Bala

unread,
Dec 22, 2010, 5:03:11 AM12/22/10
to tamil...@googlegroups.com
ஐயா தெறுமவியல் என்ற சொல்லை பாவாணர் பயன்படுத்தியுள்ளார் (பார்க்க ஒப்பியன் மொழிநூல் , முதல் தாய் மொழி துனமவியல் அருளி ஐயா உருவாக்கியது (பார்க்க அயற்சொல் அகரமுதலி )
அன்புடன் 
பாமயன் 

2010/12/22 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages