கல்வெட்டுகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

51 views
Skip to first unread message

Nakinam sivam

unread,
Dec 14, 2010, 10:33:11 AM12/14/10
to tamil_...@googlegroups.com
கல்வெட்டுகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

பல்லவர்கள் காலத்தில் சமசுகிருதமே மேலோங்கி இருந்தது மற்றும் பல தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழி நடைமுறையிலேயே இல்லை என்று கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் உள்ள சமசுகிருத கிரந்த எழுத்துக்களை வைத்து ஒரு சில அறிவு சீவிகள் கிரந்த எழுத்துக்கள் ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்டது போல தங்களது கற்பனைக்கு உயிரோட்டம் அளிக்க முயல்கின்றார்கள்.

இந்த விதமான அறிவு சீவிகள் கல்வெட்டுகளில் உள்ள கிரந்த எழுத்துக்களை வைத்து மட்டும் அம்மொழியே தமிழகத்தை ஒரு காலத்தில் ஆண்டது என்ற ஒரு கருத்தை முன் வைக்கின்றார்கள்.

அவர்கள் பழங்காலத்தில் இருந்து இன்று வரை ஆலயங்கள் யாருடைய கைப்பாவையாக இருந்து வருகின்றன என்பதை கருத்தில் கொள்ளாமல் கல்வெட்டுகளில் காணப்படும் கிரந்தத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கிரந்தமே தமிழகத்தை ஆண்டது என்று ஒரு குறுக்கு சால் ஓட்டுகின்றார்கள்.

ஒரு உண்மை ஒரு சிலரை சுட்டாலும் அதுதான் உண்மை 

அந்த உண்மை

இந்த இருபத்து ஒன்றாம் நுாற்றாண்டிலும் நமது தமிழக ஆலயங்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன என்றால் பல நுாறு, அயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்பழ தமிழ் மொழியை ஆலயத்தினுள் உள்ள கல்வெட்டுகளில் எழுத விட்டிருப்பார்கள். ஆகம விதி என்ற ஒரு புரட்டை வைத்துக்கொண்டு அதனை சாக்காக வைத்துக்கொண்டு தமிழ் பொன்ற நீச மொழி ஆலயத்தில் எழுதப்பட்டால் ஆலயத்தில் இறைவன் குடி கொள்ள மாட்டார் என்று ஏன் கூறி இருக்க மாட்டார்கள்.

மேலும் கல்வெட்டுகளை பொறிப்பவர்கள் யார் என்று பார்த்தால்
அவர்கள் ஆலயங்களை உருவாக்கும் கல்தச்சர்கள் எனப்படும் சிற்பிகளாகும்.

சிற்பிகள் ஆலயத்தை நிர்மானிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆகம விதிகள் தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.

ஆகம விதிகள் அனைத்துமே சமசுகிருதத்தில் ஒருசிலர் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.
இருப்பினும் 
ஆலயத்தை ஆகமப்படி நிர்மாணிக்க வேண்டுமே என்பதற்காக அந்நாளையிலிருந்தே சிற்பிகளுக்கு கிரந்தம் கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளது.

அப்படி 
தெரிந்த கொண்ட மொழி - மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழி தனக்கு தெரிந்துள்ளது என்பதனால் - அதன் மூலம் வேதத்தின் பொருளையும் பரிந்து கொள்ள முடிந்ததனால் அவர்கள் தங்களை ஆச்சாரியர்கள் என்றும் பிற்காலத்தில் ஆசாரிகள் என்றும் மறுவி அழைத்துக்கொண்டனர்.

இன்றைக்கும் ஆசாரிகள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர்
வேதத்தின் உட்பொருளான பிரம்மமே தெய்வம் என்னும் பொருளில்
விராட்விஸ்வ பிரம்மனே நம 
என்று எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு கூறுவதை காணலாம்.

தமிழ் நீச மொழி என்று ஆலயத்தில் நுழையக்கூடாது என்று இன்றைய நாளிலேயே சமசுகிருதத்திற்கு வக்காலத்து வாங்கும் மனிதர்கள் இருக்கும் போது அன்றைய காலக்கட்டத்தில் எப்படி தமிழை ஆலய கல்வெட்டுகளில் பொறிக்க ஒப்புக்கொண்டு இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

ஆகவே கல்வெட்டுகளில் கிரந்த எழுத்துக்கள் இருக்கின்ற என்பதற்காக கிரந்தம் ஒரு காலத்தில் ஆட்சி செய்தது என்று வாதிடுவது குறுக்கு சால் ஓட்டும் அறிவு சீவிகளுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.

பயணம் தொடரும்

சிவம்


--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

Mani Manivannan

unread,
Dec 14, 2010, 12:33:15 PM12/14/10
to tamil_ulagam, tamilmanram
திரு நக்கினம் சிவம்,
 
கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள மிக இன்றியமையாத ஒரு தரவு.  கிரந்த எழுத்துகள் பல்லவர் வருகைக்குப் பின்னரே தலைதூக்குகின்றன.  அதற்கு முன்னர் இருந்த கல்வெட்டுகளால் தமிழ் வரலாற்று நிகழ்வுகள் பல உறுதியாகின்றன.  அவை எவையும் கிரந்தத்தில் இல்லை.  கல்வெட்டுகள் மட்டுமல்லாமல் செப்பேடுகளும் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அறிய இன்றியமையாதவை.
 
பல்லவப் பேரரசர்கள், சோழப் பெருவேந்தர்கள், பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் குறிப்புகள் பலவற்றைப் பற்றி அறியக் கல்வெட்டுகள் உறுதியாகத் தேவை.  கல்வெட்டுகளைச் செதுக்கிய குடியினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத குடிகளாக இருந்திருக்கக் கூடும்.  கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளில் இருக்கும் பிழைகள், எழுத்துகளைக் கலந்திருக்கும் முறை, வரிவடிவங்களின் அழகியல் தன்மை, என்று பல கோணங்களில் இவற்றைப் பார்க்கும் போது கல்வெட்டுகளைச் செதுக்கியவர்களுக்குத் தாம் செதுக்கிய மொழி புரிந்திருக்கிறதா என்று சில நேரங்களில் ஐயப் பட வேண்டியிருக்கும்.  ஆனால், எண்ணற்ற பல கல்வெட்டுகளில் பிழைகள் குறைவு.  செதுக்கியதைத் திருத்த முடியாத நிலையில், சிற்பியைக் குறை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.
 
கல்வெட்டுகள் பலவற்றில் கிரந்தம் மட்டுமல்ல, தமிழ் வட்டெழுத்தும், பிற்காலத் தமிழ் வரிவடிவமும் உள்ளன.  கல்வெட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சில கல்வெட்டுகளையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும்.  மசிப்படிகள், மற்றும் எழுத்து வடிவங்களில் வந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும்.
 
சோழர்களுக்குக் கீழ் இருந்த தெலுங்கு, கன்னட நாடுகளில் கல்வெட்டுகள் கிரந்தத்தில் மட்டுமல்ல, தமிழிலும், ஏன் கிரந்த எழுத்துகளில் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உள்ளன.  கிரந்த எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கும் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கும் கல்வெட்டுகளில் கணேசன் சொல்வது போல “திராவிட எழுத்துகள்” இல்லை.  தெலுங்கு, கன்னட மொழிகளில் எகரம், ஒகரம் இருப்பினும், அந்த எழுத்துகள் கொண்ட பெயர்கள் இக்கல்வெட்டுகளில் இருப்பினும், கிரந்த எழுத்து முறையை மாற்றிக் கொள்ளாமல், அவர்கள் வழக்கப்படி ஏகார ஓகார எழுத்துகளில் தான் தெலுங்கு/கன்னட எகர, ஒகரத்தைக் குறித்திருக்கிறார்கள்.  இது குறிப்பிடத் தக்க தரவு.  இதைச் சான்றாகக் கொண்டே கணேசனின் கூற்றை மறுக்க இயலும்.
 
அரசர்களின் ஆணைப்படி எழுதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் இவற்றை எவ்வாறு சமைப்பது என்பதற்கு ஒரு முறைமை இருந்திருக்கிறது.  இந்த முறைமையைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.  கல்வெட்டுகள், செப்பேடுகளின் மசிப்படிகள் 1908 வரை திரட்டியவை மட்டுமே நூறாயிரத்தையும் கடந்திருக்கிறது.  இந்தியாவிலேயே எண்ணிக்கையில் கூடுதலான கல்வெட்டுகள், மற்றும் செப்பேடுகள் தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.  இவற்றில் பெரும்பான்மையானவை தமிழ் எழுத்துகளிலும், வட்டெழுத்துகளிலும் இருக்கின்றன.  ஆயினும் மெய்க்கீர்த்தி என்ற அரசப் பெருமைகளைப் பறைசாற்றும் செய்திகளைக் கிரந்த எழுத்துகளில், வடமொழியில் எழுதியிருக்கிறார்கள்.  இது, இன்றைக்கு நடக்கும் திறப்பு விழாக்களில் ஆங்கிலத்தில் கல்வெட்டுகளைப் பொறிப்பது போன்றது.  தம் அரசர் பெருமையை தமிழரல்லாதவர்களுக்கும் தெரிவிக்க கிரந்த எழுத்துகளில் வடமொழியில் எழுதியிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஆனால், கல்வெட்டுகளின் முக்கிய நோக்கங்களை, அதாவது யார் எதற்கு என்ன கொடை வழங்குகிறார்கள் போன்ற உள்ளூர்ச் செய்திகளைப் பெரும்பாலும் தமிழில், தமிழ் எழுத்துகளில் பொறித்திருக்கிறார்கள்.
 
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, உண்மை சுட்டாலும், (தமிழகத்தில் உள்ள கல்வெட்டுப் பகுதிகள் தமிழில் இல்லாமல் இருப்பது சுடுகிறது என்றாலும்), உண்மை உண்மைதான்.
 
அது இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் பொருள் இல்லை.
 
தமிழ்ப் பெருவேந்தர்கள் கடல் கடந்தும் படை எடுத்துச் சென்று பல்வேறு நாடுகளை வென்றார்கள்.  இமயத்தில் சேரன் வில்லைப் பொறித்திருக்கலாம். ஆனால், கடாரத்திலும், சாவகத்திலும், சோழன் தமிழைப் பொறிக்கவில்லை.  வடமொழியைத்தான் பொறித்திருக்கிறான்.
 
இன்றைய நிலையிலும், பல அரசாணைகள், நீதி மன்றத் தீர்ப்புகள், அரசுக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழகத்தின் தலைநகரத்தில், கடைகள், பொது நிறுவனங்களின் பெயர்களைத் தமிழிலும் (நோக்குக, தமிழில் மட்டுமல்ல, தமிழிலும்) எழுதுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கவே 2010 வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.  அப்படியும், முற்றிலும் எல்லோரும் மாறவில்லை.  பெங்களூரில் தெருப்பெயர்கள், பேருந்துகள், கடைப் பெயர்கள் எல்லாமே கன்னடத்தில் மட்டுமே இருக்கிறது.  அங்கே முணுமுணுக்காமல் சட்டத்தின் கீழ்ப்படிந்த அதே வணிகர்கள், தமிழகத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.
 
தமிழ்நாட்டில் தமிழையும் ஒரு பாடமாகப் படிக்கச் சொல்வதற்கே நீதிமன்றம் வரை எதிர்க்கப் போகிறார்கள்.  இங்கிருக்கும் சிறுபான்மையர் உரிமைகளைப் பறிப்பது போல் இல்லையா என்ற கூக்குரல் கேட்கிறது.  தனிமனித உரிமைகளைப் பறிப்பது போன்றது இத்தகைய ஆணை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன.  ஆனால், கருநாடகத்தில் கன்னடம் படிக்க வேண்டும் என்பதை முணுமுணுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.
 
ஆனால், தமிழர்களுக்கு மட்டுமே தமிழ் வெறியர்கள் என்ற பழிச்சொல்.
 
இன்னும் மொழி ஆளுமை பற்றிய செயல்களில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குள்ளேயே ஒரு சரியான புரிதல் இல்லை.  வடமொழி வெறுப்பும், ஆங்கிலத்தின் மீது ஈர்ப்பும், தமிழ்ப் புறக்கணிப்புமே திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலையெடுத்திருக்கின்றன.
 
நம் வரலாறு பற்றியும் உண்மையை அறிந்து கொள்ளும் அடிப்படையில் இல்லாமல், தொன்மங்களின் அடிப்படையில் நாம் விரும்பும் செய்திகளை வரலாற்றின் மீது மேற்பூச்சு பூசிக் கற்பனை செய்வதில் நமக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி வருகிறது.  இந்தத் தாழ்வு உளப்பாங்கு தேவையற்றது. 
 
களப்பிரர்களும், பல்லவர்களும் வந்தேறிகள்தாம்.  அவர்கள் தம்முடன் தம் சமயங்களையும், தம் மொழிகளையும், கொண்டு வந்தனர்.  தமிழ் அரசர்களை முறியடித்து வேற்று அரசுகளை நிறுவினர்.  இது வரலாறு.  ஆனாலும், களப்பிரர்களும், பல்லவர்களும், நம்முள் கலந்து விட்டார்கள்.  தமிழர்களாகி விட்டார்கள்.  காலப்போக்கில் தமிழ் மீண்டும் தலை எடுத்தது. பின்னர், மீண்டும் தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிறமொழிகளும், பிறர் ஆட்சிகளும் தலையெடுத்திருந்தாலும், தமிழர்களின் விடாமுயற்சியால் தமிழ் இம்மண்ணில் வேரூன்றியிருக்கிறது.  ஆங்கிலத்தின் மாபெரும் தாக்கத்தின் கீழும், அரசு ஆதரவு கொண்டு இந்தியின் ஆட்சியின் கீழும், தமிழ் தளரவில்லை. 
 
இணையம் என்ற ஒரு களம் உருவானவுடனேயே, எந்த அரசின் ஆதரவும் இல்லாமல், தமிழர்கள் தாமே உருவாக்கிய குறியீட்டு முறையில் தமிழை வலையேற்றி உலகெங்கும் பரப்பினார்கள்.  இந்தத் தனித்தன்மை இருக்கும் மட்டும், தமிழ் என்றும் வாழும்.  அதற்காகத் தமிழகத்தில் வேற்று மன்னர்கள், வேற்றுக் குடிகள், வேற்று மொழிகள், மேலோங்கவே இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
 
ஏனைய நாடுகளைப் போலவே, தமிழ் மண்ணிலும், பல பண்பாடுகள், மொழிகள், கருத்துகள், கலந்து ஊடாடின.  எண்ணற்ற பல குடிகள் இங்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் இன்று தம்மைத் தமிழராகத்தான் அடையாளம் காணுகின்றனர். இங்கு வந்து சேர்ந்த குடிகள் கொண்டுவந்த கலைச்செல்வங்கள் யாவும் தமிழுக்கு உரம் சேர்த்திருக்கின்றன.  தமிழன்னை தனக்கே உரிய வகையில் இவற்றை எடுத்துக் கொண்டு இன்றும் நம் உள்ளங்களை ஆளுகின்றாள்.
 
நாம் இந்த உண்மையைக் கொண்டாடலாமே!
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 


 
2010/12/14 Nakinam sivam <nak...@gmail.com>

Nakinam sivam

unread,
Dec 16, 2010, 7:18:00 AM12/16/10
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பர் மணி மணிவண்ணன் அவர்களுக்கு

நன்றி கலந்த வணக்கங்கள்.

பல்லவப் பேரரசர்கள், சோழப் பெருவேந்தர்கள், பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் குறிப்புகள் பலவற்றைப் பற்றி அறியக் கல்வெட்டுகள் உறுதியாகத் தேவை.  கல்வெட்டுகளைச் செதுக்கிய குடியினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத குடிகளாக இருந்திருக்கக் கூடும்.  கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளில் இருக்கும் பிழைகள், எழுத்துகளைக் கலந்திருக்கும் முறை, வரிவடிவங்களின் அழகியல் தன்மை, என்று பல கோணங்களில் இவற்றைப் பார்க்கும் போது கல்வெட்டுகளைச் செதுக்கியவர்களுக்குத் தாம் செதுக்கிய மொழி புரிந்திருக்கிறதா என்று சில நேரங்களில் ஐயப் பட வேண்டியிருக்கும்.  ஆனால், எண்ணற்ற பல கல்வெட்டுகளில் பிழைகள் குறைவு.  செதுக்கியதைத் திருத்த முடியாத நிலையில், சிற்பியைக் குறை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

ஒரே காலத்தை சார்ந்த பல்வேறு கல்வெட்டுகள் இருப்பினும் அனைத்து கல்வெட்டுகளுமே ஒரே மாதிரி எழுத்து வடிவம் இல்லாததற்கு காரணம் பெரிய ஆலயங்களை நிர்மாணித்த சிற்பிகள் மன்னர்களின் பார்வையில் படும் கல்வெட்டுகளை மட்டுமே அவர்களே வடித்திருப்பார்கள். தொலைதுாரத்தில் உள்ள பகுதிகளில் வடிப்பதற்கு அவருடைய உதவியாளர்களை அவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை பயன்படுத்தி வடித்திருப்பார்கள். ஆகவேதான் ஒரே கால கல்வெட்டுகளில் எழுத்து வேறுபாடு வருகின்றது.


 கல்வெட்டுகள் பலவற்றில் கிரந்தம் மட்டுமல்ல, தமிழ் வட்டெழுத்தும், பிற்காலத் தமிழ் வரிவடிவமும் உள்ளன.  கல்வெட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சில கல்வெட்டுகளையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும்.  மசிப்படிகள், மற்றும் எழுத்து வடிவங்களில் வந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும்.


ஆமாம் நீங்கள் கூறுவது உண்மை. 
கூடுமானவரை இன்றைய கேரள பகுதிகளில் கிடைக்கும் வட்டெழுத்துக்கள் அதிகம் கிடைத்திருக்கின்றன என நினைக்கிறேன்.
வட்டெழுத்து முறையிலிருந்து இன்றைய தமிழ் வரிவடிவம் பெற்றது என்ற கூற்று உள்ளது போல் இன்றைய வரி வடிவ எழுத்துக்கள் எழுதுவதற்கு சுலபமாக வட்டெழுத்தாக மாற்றம் பெற்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஏன் இதை கூறுகிறேன் என்றால் சித்தர்களால் எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என்று வள்ளல் பெருமான் கூறி இருக்கின்றார்கள். 
ஒவ்வொரு எழுத்துமே ஒரு காரணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக, இறை நிலையை உணர்த்துவதாக அமைக்கப்பட்டது.

சோழர்களுக்குக் கீழ் இருந்த தெலுங்கு, கன்னட நாடுகளில் கல்வெட்டுகள் கிரந்தத்தில் மட்டுமல்ல, தமிழிலும், ஏன் கிரந்த எழுத்துகளில் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உள்ளன.  கிரந்த எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கும் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கும் கல்வெட்டுகளில் கணேசன் சொல்வது போல “திராவிட எழுத்துகள்” இல்லை.  தெலுங்கு, கன்னட மொழிகளில் எகரம், ஒகரம் இருப்பினும், அந்த எழுத்துகள் கொண்ட பெயர்கள் இக்கல்வெட்டுகளில் இருப்பினும், கிரந்த எழுத்து முறையை மாற்றிக் கொள்ளாமல், அவர்கள் வழக்கப்படி ஏகார ஓகார எழுத்துகளில் தான் தெலுங்கு/கன்னட எகர, ஒகரத்தைக் குறித்திருக்கிறார்கள்.  இது குறிப்பிடத் தக்க தரவு.  இதைச் சான்றாகக் கொண்டே கணேசனின் கூற்றை மறுக்க இயலும்.
 
அரசர்களின் ஆணைப்படி எழுதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் இவற்றை எவ்வாறு சமைப்பது என்பதற்கு ஒரு முறைமை இருந்திருக்கிறது.  இந்த முறைமையைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.  கல்வெட்டுகள், செப்பேடுகளின் மசிப்படிகள் 1908 வரை திரட்டியவை மட்டுமே நூறாயிரத்தையும் கடந்திருக்கிறது.  இந்தியாவிலேயே எண்ணிக்கையில் கூடுதலான கல்வெட்டுகள், மற்றும் செப்பேடுகள் தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.  இவற்றில் பெரும்பான்மையானவை தமிழ் எழுத்துகளிலும், வட்டெழுத்துகளிலும் இருக்கின்றன.  ஆயினும் மெய்க்கீர்த்தி என்ற அரசப் பெருமைகளைப் பறைசாற்றும் செய்திகளைக் கிரந்த எழுத்துகளில், வடமொழியில் எழுதியிருக்கிறார்கள்.  இது, இன்றைக்கு நடக்கும் திறப்பு விழாக்களில் ஆங்கிலத்தில் கல்வெட்டுகளைப் பொறிப்பது போன்றது.  தம் அரசர் பெருமையை தமிழரல்லாதவர்களுக்கும் தெரிவிக்க கிரந்த எழுத்துகளில் வடமொழியில் எழுதியிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஆனால், கல்வெட்டுகளின் முக்கிய நோக்கங்களை, அதாவது யார் எதற்கு என்ன கொடை வழங்குகிறார்கள் போன்ற உள்ளூர்ச் செய்திகளைப் பெரும்பாலும் தமிழில், தமிழ் எழுத்துகளில் பொறித்திருக்கிறார்கள்.

இதில் மிகவும் கவனி்க்க வேண்டிய ஒன்று 

1. ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ள கொயில்களில் உள்ள கல்வெட்டுகள்

2. அரசர்களின் கண்களில் படாத ஆகம விதிகளை பயன்படுத்தாமல் கட்டப்பட்ட கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள்

3. நகர் சாராத புறப்பகுதியில் அரசர்களின் கண்களில் படாத மன்னரின் புகழ்பாடும், உள்ளுர் கொயில்களுக்கு கொடை அளித்தவர்கள் விவரம் போன்றவை 

என கல்வெட்டுகளை பிரித்து பார்க்க வேண்டும் ஏனெனில்
ஆகம விதிப்படி கட்டப்பட்ட கொயில்களில் நிச்சயமாக தமிழை கல்வெட்டுகளில் பொறிக்க வேதியர்கள் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள்.

புற நகர் பகுதிகளில் காணப்படும் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் மற்றும் உள்ளுர்களில் உள்ள கல்வெட்டுகளில் கூடுமானவரை தமிழ் மொழியே பயன்படுத்தப்பட்டிருக்கும்.


தமிழ்ப் பெருவேந்தர்கள் கடல் கடந்தும் படை எடுத்துச் சென்று பல்வேறு நாடுகளை வென்றார்கள்.  இமயத்தில் சேரன் வில்லைப் பொறித்திருக்கலாம். ஆனால், கடாரத்திலும், சாவகத்திலும், சோழன் தமிழைப் பொறிக்கவில்லை.  வடமொழியைத்தான் பொறித்திருக்கிறான்.

ஆமாம் உண்மை இரு்நதாலும் இதிலும் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டியது மன்னர்கள் தங்களுடன் அழைத்துச்சென்றது கைதேர்ந்த சிற்பிகளை என்பதைதான். அவர்கள் அவர்களை கொண்டே ஆலயங்களையும், கல்வெட்டுகளையும் பொறித்திருக்க வேண்டும். ஆகவேதான் கிரந்த எழுத்துக்கள் அங்லெ்லாம் காணக்கிடைக்கின்றன.

 
இன்றைய நிலையிலும், பல அரசாணைகள், நீதி மன்றத் தீர்ப்புகள், அரசுக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழகத்தின் தலைநகரத்தில், கடைகள், பொது நிறுவனங்களின் பெயர்களைத் தமிழிலும் (நோக்குக, தமிழில் மட்டுமல்ல, தமிழிலும்) எழுதுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கவே 2010 வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.  அப்படியும், முற்றிலும் எல்லோரும் மாறவில்லை.  பெங்களூரில் தெருப்பெயர்கள், பேருந்துகள், கடைப் பெயர்கள் எல்லாமே கன்னடத்தில் மட்டுமே இருக்கிறது.  அங்கே முணுமுணுக்காமல் சட்டத்தின் கீழ்ப்படிந்த அதே வணிகர்கள், தமிழகத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.

ஆமாம் தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
என் செய்வது நமது தமிழருக்குள்ளேயே ஒற்றுமையின்மையும்,
கிரந்த கூட்டத்திற்கு வக்காலத்து வாங்குவதும்,
தமிழ் வளர்க்கின்றேன் என கிரந்தத்தை தமிழில் நுழைத்து தமிழின் தனித்தன்மையை கெடுப்பதற்கு ஒரு கிரந்த கூட்டம் அலைவதும்
என 
பல்வேறு காரணங்களால் தமிழ் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது. 
ஆனால் இது இன்று நேற்றல்ல பல நுாறு ஆண்டுகளாக
சித்தர்களின் காலத்திலும் இருந்திருக்கின்றது.
சித்தர்கள் தமிழை வளர்க்கின்றார்கள் என்பதற்காகவே
சித்தர் இலக்கியங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்திருக்கின்றது.


தமிழ்நாட்டில் தமிழையும் ஒரு பாடமாகப் படிக்கச் சொல்வதற்கே நீதிமன்றம் வரை எதிர்க்கப் போகிறார்கள்.  இங்கிருக்கும் சிறுபான்மையர் உரிமைகளைப் பறிப்பது போல் இல்லையா என்ற கூக்குரல் கேட்கிறது.  தனிமனித உரிமைகளைப் பறிப்பது போன்றது இத்தகைய ஆணை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன.  ஆனால், கருநாடகத்தில் கன்னடம் படிக்க வேண்டும் என்பதை முணுமுணுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.
 
ஆனால், தமிழர்களுக்கு மட்டுமே தமிழ் வெறியர்கள் என்ற பழிச்சொல்.

உண்மைதான். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு நம்முடன் தமிழ் மீது வெறுப்பு கொண்ட ஒரு கூட்டம் தமிழ் தனித்தியங்க முடியாதபடி செய்ய பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகின்றன.

தமிழை கொண்டாடுவதனால் நம்மை தமிழ் வெறியர்கள் என்று சொல்வது ஏனென்றால் அவர்களால் தமிழை உயர்ந்த மொழி என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடையாது. அதே சமயம் தங்களது தாயாதி மொழி உயர்ந்தது என்றும் சொல்ல திராணி கிடையாது. ஆகவே மொழி வெறியன் என்று பட்டம் கொடுத்தால் யார்தான் வருவார்கள் வெறியன் பட்டம் வாங்க ? 

இன்னும் மொழி ஆளுமை பற்றிய செயல்களில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குள்ளேயே ஒரு சரியான புரிதல் இல்லை.  வடமொழி வெறுப்பும், ஆங்கிலத்தின் மீது ஈர்ப்பும், தமிழ்ப் புறக்கணிப்புமே திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலையெடுத்திருக்கின்றன.

வடமொழி வெறுப்பை கொண்டே திராவிட கட்சிகள் ஆட்சியை பிடித்து பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன. அதுவேதான் ஒரு சிலருக்கு தமிழை பிடிக்காமல் போனதற்கு காரணமாகவும் அமைந்து விட்டது.
 
நம் வரலாறு பற்றியும் உண்மையை அறிந்து கொள்ளும் அடிப்படையில் இல்லாமல், தொன்மங்களின் அடிப்படையில் நாம் விரும்பும் செய்திகளை வரலாற்றின் மீது மேற்பூச்சு பூசிக் கற்பனை செய்வதில் நமக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி வருகிறது.  இந்தத் தாழ்வு உளப்பாங்கு தேவையற்றது. 

இல்லை நண்பரே வரலாற்றின் மீது வண்ணம் தீட்டாவிட்டாலும் நமது ஆய்வினை பல்வேறு கோணங்களில் எடுத்து செல்ல வேண்டியது கட்டாயம்.
இல்லையென்றால் தமிழ் ஒரு லாயக்கற்ற மொழி என்று கூறுவதற்கு தயாராக ஒரு கூட்டம் உள்ளது. இதை தாழ்வு உளப்பாங்கு என எண்ணுவதை விட தன்னை உயர்ந்தவனாக என்னுவது தவறில்லை என்னும் கண்ணோட்டத்தில் அனுகலாம்.
 
களப்பிரர்களும், பல்லவர்களும் வந்தேறிகள்தாம்.  அவர்கள் தம்முடன் தம் சமயங்களையும், தம் மொழிகளையும், கொண்டு வந்தனர்.  தமிழ் அரசர்களை முறியடித்து வேற்று அரசுகளை நிறுவினர்.  இது வரலாறு.  ஆனாலும், களப்பிரர்களும், பல்லவர்களும், நம்முள் கலந்து விட்டார்கள்.  தமிழர்களாகி விட்டார்கள்.  காலப்போக்கில் தமிழ் மீண்டும் தலை எடுத்தது. பின்னர், மீண்டும் தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிறமொழிகளும், பிறர் ஆட்சிகளும் தலையெடுத்திருந்தாலும், தமிழர்களின் விடாமுயற்சியால் தமிழ் இம்மண்ணில் வேரூன்றியிருக்கிறது.  ஆங்கிலத்தின் மாபெரும் தாக்கத்தின் கீழும், அரசு ஆதரவு கொண்டு இந்தியின் ஆட்சியின் கீழும், தமிழ் தளரவில்லை. 

ஆமாம் உண்மை. தமிழை எந்த நாளிலும் யாராலும் அழித்தொழிக்க முடியாது. காரணம் தமிழ் நம் உணர்வோடு ஒன்றியது. எந்த மொழியின் தாக்கமும் தமிழின் முன்னால் நீண்ட காலத்திற்கு தாக்குபிடிக்க முடியாது.
 

இணையம் என்ற ஒரு களம் உருவானவுடனேயே, எந்த அரசின் ஆதரவும் இல்லாமல், தமிழர்கள் தாமே உருவாக்கிய குறியீட்டு முறையில் தமிழை வலையேற்றி உலகெங்கும் பரப்பினார்கள்.  இந்தத் தனித்தன்மை இருக்கும் மட்டும், தமிழ் என்றும் வாழும்.  அதற்காகத் தமிழகத்தில் வேற்று மன்னர்கள், வேற்றுக் குடிகள், வேற்று மொழிகள், மேலோங்கவே இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

தமிழர்கள் என்றைக்கும் வேற்று இனத்தவர் என்ற பாகுபாடு பார்த்தது கிடையாது. இது காலம் காலமாக வரும் ஒரு சமூக பழக்கம்.
அதே போல சமயங்களில் வேற்றுமை பார்க்கும் பழக்கமும் தமிழ் சமூகத்தில் இருக்கவில்லை. ஆகவேதான் நமது தமிழ் இனம் வந்தாரை வாழவைப்பதும் இதுநாள் வரை நடைபெற்று வருகிறது. 
 
ஏனைய நாடுகளைப் போலவே, தமிழ் மண்ணிலும், பல பண்பாடுகள், மொழிகள், கருத்துகள், கலந்து ஊடாடின.  எண்ணற்ற பல குடிகள் இங்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் இன்று தம்மைத் தமிழராகத்தான் அடையாளம் காணுகின்றனர். இங்கு வந்து சேர்ந்த குடிகள் கொண்டுவந்த கலைச்செல்வங்கள் யாவும் தமிழுக்கு உரம் சேர்த்திருக்கின்றன.  தமிழன்னை தனக்கே உரிய வகையில் இவற்றை எடுத்துக் கொண்டு இன்றும் நம் உள்ளங்களை ஆளுகின்றாள்.
 
நாம் இந்த உண்மையைக் கொண்டாடலாமே!

தமிழரின் முக்கிய பண்பாடே வேற்றுமை பாராட்டாத குணம்தான்.
இருப்பினும் தமிழை அழிக்க முயல்பவர்களை கண்டும் காணாமல் இருந்தால் தமிழர்கள் சொரணை இல்லாதவர்கள் என நினைத்து மொழியினை அழிப்பதை சுலபமாக செய்து முடித்து விடுவார்கள்.
ஆகவே நாம் விழிப்புடன் இருப்போம்.

நமது மொழியின் சிறப்பை உணர்ந்து அனைவருக்கும் உணர்த்துவோம்.

அன்புடன்

Mani Manivannan

unread,
Dec 16, 2010, 3:30:30 PM12/16/10
to tamil_ulagam
அன்பு நண்பர் நக்கினம் சிவம் அவர்களுக்கு,
 
வணக்கங்கள்.

2010/12/16 Nakinam sivam nak...@gmail.com

 
ஒரே காலத்தை சார்ந்த பல்வேறு கல்வெட்டுகள் இருப்பினும் அனைத்து கல்வெட்டுகளுமே ஒரே மாதிரி எழுத்து வடிவம் இல்லாததற்கு காரணம் பெரிய ஆலயங்களை நிர்மாணித்த சிற்பிகள் மன்னர்களின் பார்வையில் படும் கல்வெட்டுகளை மட்டுமே அவர்களே வடித்திருப்பார்கள். தொலைதுாரத்தில் உள்ள பகுதிகளில் வடிப்பதற்கு அவருடைய உதவியாளர்களை அவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை பயன்படுத்தி வடித்திருப்பார்கள். ஆகவேதான் ஒரே கால கல்வெட்டுகளில் எழுத்து வேறுபாடு வருகின்றது.
 
இப்படிச் சொல்வதற்குத் தக்க சான்றுகள் இல்லை என நினைக்கிறேன்.
 
வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பெரும்பாலும், பாண்டிய, சேர நாடுகளிலும், பல்லவருக்கு முற்பட்ட காலத்தில் தமிழகம் எங்கும் கிடைக்கின்றன.  வட்டெழுத்துக் கல்வெட்டுகளுக்குள்ளும், வடமொழிச் சொற்களுக்கும் எழுத்துகளுக்கும் கிரந்த எழுத்துகளைப் புழங்கியிருக்கிறார்கள். 
 
இது கிட்டத்தட்ட தமிழகத்தில் ஆங்கிலத்தின் தாக்கத்தை ஒத்திருக்கிறது.  ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் தமிழகத்தில் ஆங்கிலத் தாக்கம் அறவே இல்லாமல் இருந்து, அவர்கள் ஆட்சி ஏற்பட்ட பின்பு ஆங்கில எழுத்துகளில் ஆவணங்களும் கல்வெட்டுகளும் பெருகி இருப்பது ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னும் தொடர்வது போலத்தான் கிரந்தத்தின் தாக்கமும்.  பல்லவர் காலத்தில் மேலோங்கிய கிரந்த எழுத்துகள், பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னரும் தொடர்ந்தது இதை ஒத்திருக்கிறது எனலாம்.
 
 
ஆமாம் நீங்கள் கூறுவது உண்மை. 
கூடுமானவரை இன்றைய கேரள பகுதிகளில் கிடைக்கும் வட்டெழுத்துக்கள் அதிகம் கிடைத்திருக்கின்றன என நினைக்கிறேன்.
வட்டெழுத்து முறையிலிருந்து இன்றைய தமிழ் வரிவடிவம் பெற்றது என்ற கூற்று உள்ளது போல் இன்றைய வரி வடிவ எழுத்துக்கள் எழுதுவதற்கு சுலபமாக வட்டெழுத்தாக மாற்றம் பெற்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஏன் இதை கூறுகிறேன் என்றால் சித்தர்களால் எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என்று வள்ளல் பெருமான் கூறி இருக்கின்றார்கள். 
ஒவ்வொரு எழுத்துமே ஒரு காரணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக, இறை நிலையை உணர்த்துவதாக அமைக்கப்பட்டது.
 
வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இன்றைய தமிழ்க் கல்வெட்டுகளுக்கு முற்பட்டவை.  இன்றைய தமிழ் எழுத்துகள் கிரந்த எழுத்துகள் மற்றும் வட்டெழுத்துகள் இரண்டையும் கலந்து வளர்ச்சியுற்றுப் பிற்காலச் சோழர் காலத்தில் நிலை பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பல்லவர் வருகைக்கு முன்னர் இன்றைய தமிழ் எழுத்திலோ, கிரந்தத்திலோ உள்ள கல்வெட்டுகள் ஏதும் கிடைத்தில.
 
முதலில் ஒரு கிரந்தக் கல்வெட்டுப் பகுதியைப் பாருங்கள்:
 
 
 
 
 
பின்னர் ஒரு தமிழ்க் கல்வெட்டைப் பாருங்கள்:
 
 
 
இவ்விரண்டிலும் ‘க’ எழுத்தையும், புள்ளியையும் பாருங்கள்.  இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை ஓரளவு புலப்படலாம்.
 
கிரந்த எழுத்துகளும், இன்றைய தமிழ்எழுத்துகளும் பல்லவர்காலத்துக்குப் பின்னர் எழுந்தன.  அவற்றைச் சித்தர்கள் உருவாக்கினார்கள் என்பதும், இறை நிலையை உணர்த்துவதற்காக வரையப்பட்டன என்பதும் சமய நம்பிக்கைகள்.  நம்பிக்கைகளை அறிவியல் நோக்கில் அலச இயலாது. 
 
இதில் மிகவும் கவனி்க்க வேண்டிய ஒன்று 

1. ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ள கொயில்களில் உள்ள கல்வெட்டுகள்

2. அரசர்களின் கண்களில் படாத ஆகம விதிகளை பயன்படுத்தாமல் கட்டப்பட்ட கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள்

3. நகர் சாராத புறப்பகுதியில் அரசர்களின் கண்களில் படாத மன்னரின் புகழ்பாடும், உள்ளுர் கொயில்களுக்கு கொடை அளித்தவர்கள் விவரம் போன்றவை 

என கல்வெட்டுகளை பிரித்து பார்க்க வேண்டும் ஏனெனில்
ஆகம விதிப்படி கட்டப்பட்ட கொயில்களில் நிச்சயமாக தமிழை கல்வெட்டுகளில் பொறிக்க வேதியர்கள் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள்.

புற நகர் பகுதிகளில் காணப்படும் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் மற்றும் உள்ளுர்களில் உள்ள கல்வெட்டுகளில் கூடுமானவரை தமிழ் மொழியே பயன்படுத்தப்பட்டிருக்கும்.
 
 
இதுவும் உங்கள் நம்பிக்கை மட்டுமே.  உணர்வின் பால் சாயாமல், சமய நம்பிக்கையைச் சாராமல், அறிவியல் கோணத்தில் அணுகுவதையே நான் விரும்புகிறேன்.  ஏனென்றால், அதில் மட்டுமே நாம் நம் பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும்.

 
இல்லை நண்பரே வரலாற்றின் மீது வண்ணம் தீட்டாவிட்டாலும் நமது ஆய்வினை பல்வேறு கோணங்களில் எடுத்து செல்ல வேண்டியது கட்டாயம்.
இல்லையென்றால் தமிழ் ஒரு லாயக்கற்ற மொழி என்று கூறுவதற்கு தயாராக ஒரு கூட்டம் உள்ளது. இதை தாழ்வு உளப்பாங்கு என எண்ணுவதை விட தன்னை உயர்ந்தவனாக என்னுவது தவறில்லை என்னும் கண்ணோட்டத்தில் அனுகலாம்.
 
ஆய்வு வேறு. நம்பிக்கை வேறு. 
 
தமிழோடு ஒப்பிடும்போது ஆங்கிலம் அண்மையில் எழுந்த மொழி.  தமிழ் செம்மொழி.  ஆங்கிலம் உலகை ஆளும் மொழி.  ஆனால், அதற்கு என்று எழுத்துகள் இல்லை.  அது லத்தீன எழுத்தைக் கடன் வாங்கி இருக்கிறது.  அதனால் லாயக்கு அற்றது என்று சொல்ல முடியுமா?  லாயக்கு அற்றதா இல்லையா என்பதற்கு அளவுகோல்கள் வேறு.
 
தமிழ்தான் உலக மொழிகள் அனைத்துக்கும் தாய் என்பது நம்பிக்கை.  அதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை.  ஏன், உலக மொழிகள் அனைத்துமே ஒரு தாய் மொழியில் இருந்து கிளைத்தவை என்பதே விவிலியத்திலிருந்து எழுந்த நம்பிக்கை மட்டுமே.  அதற்குச் சான்றுகள் இல்லை.
 
தமிழை வேறு எந்த மொழியோடும் ஒப்பிட்டுப் பார்த்து அது உயர்ந்ததா தாழ்ந்ததா என்று எடைப் பார்க்கும் மனப்பான்மையே தேவையற்றது.  நம் தாயை இன்னொரு தாயோடு ஒப்பிட்டுப் பார்ப்பதைப் போலத்தான் அது.  நம் தாய், நமக்கு என்றுமே உயர்ந்தவர்.  நமக்கு அது போதும்.
 
 
தமிழர்கள் என்றைக்கும் வேற்று இனத்தவர் என்ற பாகுபாடு பார்த்தது கிடையாது. இது காலம் காலமாக வரும் ஒரு சமூக பழக்கம்.
அதே போல சமயங்களில் வேற்றுமை பார்க்கும் பழக்கமும் தமிழ் சமூகத்தில் இருக்கவில்லை. ஆகவேதான் நமது தமிழ் இனம் வந்தாரை வாழவைப்பதும் இதுநாள் வரை நடைபெற்று வருகிறது. 
 
இருக்கலாம்.
 
ஆனால், தற்போது இருப்பது போலத் தமிழர்களிடையே கோழைத்தனமும் நிலவுவதையும் வரலாற்றில் காணலாம்.
 
மூவேந்தர்கள் முற்றுகையிட்டு வள்ளல் பாரியைக் கொன்ற பின்னர் பாரியின் பெண்களைக் காப்பாற்ற முன் வந்தவர் “புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று போற்றப்பட்ட புலவர் கபிலர் மட்டுமே.  பாரி மகளிரைத் திருமணம் புரிந்து கொள்ளும் துணிச்சல் மறத்தமிழ் மன்னன் இருங்கோவேளுக்கே இல்லை.  பாரி - கபிலர் நட்பைத் தமிழிலக்கியம் கொண்டாடுகிறது.  தமிழர்கள் கொண்டாடுவதில்லை.
 
இன்று தமிழர்கள் பழம்பெருமை பேச முடிகிறது என்றால், தமிழுக்குச் செம்மொழிப் பட்டத்தை வாங்கிக் கொடுத்த சங்க இலக்கியங்களைத்தான் சுட்டிக் காட்ட முடியும்.  இவற்றில் பெரும்பாலானவற்றைத் தமிழகமெங்கும் தேடிப் பிடித்துப் பதிப்பித்த பெருமகன் பேராசான் உ. வே. சாமிநாதையர்.  அவர் தமிழுக்குச் செய்த தொண்டுக்கு நாம் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறோம்.  ஆனால் உ. வே. சா. அவர்களையே பழித்துப் பேசும் கட்டுரைகள் இணையத்தில் வலம் வருவதைப் பார்த்திருக்கிறோம்.  “உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”
 
 
தமிழரின் முக்கிய பண்பாடே வேற்றுமை பாராட்டாத குணம்தான்.
இருப்பினும் தமிழை அழிக்க முயல்பவர்களை கண்டும் காணாமல் இருந்தால் தமிழர்கள் சொரணை இல்லாதவர்கள் என நினைத்து மொழியினை அழிப்பதை சுலபமாக செய்து முடித்து விடுவார்கள்.
ஆகவே நாம் விழிப்புடன் இருப்போம்.

நமது மொழியின் சிறப்பை உணர்ந்து அனைவருக்கும் உணர்த்துவோம்.
 
இதில்தான் கருத்து வேறுபாடே வருகிறது.  திருமுறைகளும், நாலாயிரமும், கம்பனும், திருப்புகழும் தமிழல்ல என்று வடிகட்டுவோர் ஒரு புறம்.  சைவ வைணவப் போராட்டங்கள் மறுபுறம்.  தமிழ் இலக்கியமாக இருக்கலாம், தமிழர் இலக்கியமா என்று போர்க்கொடி தூக்குவோர் இன்னொரு புறம்.  தமிழை அழிக்க வெளியார் தேவையில்லை. நாமே அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.
 
அறிவின் அடிப்படையில் ஆய்வதை விட்டு விட்டு உணர்வின் அடிப்படையில் மேடை முழக்கங்களுக்குச் சொற்குவியல் திரட்டிக் கொண்டிருக்கிறோம்.
 
எதிர்ப்பது எளிது.  ஆக்க வேலைகளைச் செய்வது கடினம்.
Reply all
Reply to author
Forward
0 new messages