ஒருங்குறி கிரந்தம் பரிந்துரையில் தமிழ் எழுத்துகள் பற்றிய கருத்தறியும் கூட்டம் - பின்னணி

91 views
Skip to first unread message

Mani Manivannan

unread,
Nov 4, 2010, 7:25:03 PM11/4/10
to tamilmanram, tamil_ulagam, மின்தமிழ்
”கிரந்தம் ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும் (லிபி)” என்று குறிப்பிடுகிறது தமிழ் விக்கிப்பீடியா [1].  முற்காலப் பல்லவர்கள் கி.பி. 4ம் நூற்றாண்டில் தோற்றுவித்ததாக அறிஞர்கள் கருதும் இந்த எழுத்துமுறை, பிற்காலச் சோழர்கள் காலத்தில் செந்தரப் படுத்தப் பட்டு இன்று வரை தொடர்கிறது.  பிற்காலச் சோழர்கள் பண்டைத் தமிழ் வட்டெழுத்துக்களை நீக்கி பல்லவர்கள் காலத்தில் தோன்றிய தமிழ் வரிவடிவத்தைப் பரப்பியபோது சில கிரந்த எழுத்துகளின் வரிவடிவங்களுக்கும் அதே ஒலிக்கான தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களுக்கும் ஒற்றுமை தோன்றியது.  தமிழகத்தில் உள்ள எண்ணற்ற பல கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் கிரந்த எழுத்துக்கள், தற்காலத் தமிழ் மற்றும் முற்காலத் தமிழ் வட்டெழுத்துகள் அவற்றை எழுதியவர்களுக்குத் தோன்றிய விதங்களில் பல்வேறு கலப்புமுறைகளில் காணப் படுகின்றன.  கிரந்தமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் எண்ணற்ற வைணவ உரைநூல்கள் உள்ளன. 20ம் நூற்றாண்டில் வடமொழியை எழுதத் தமிழகத்திலும் தேவநாகரியைப் புழங்கத் தொடங்கும் வரை கிரந்த எழுத்துகள் அச்சிலும் இருந்தன. இன்றும் கூடத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 10,000 வேத விற்பன்னர்களும், 15,000 இந்து அர்ச்சகர்களும் கிரந்தத்தில் எழுதிய சமய நூல்களைத்  தொடர்ந்து படித்து வருவதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
 
வரலாற்று நூல்களை ஆராயும் அறிஞர்களும், இந்து சமய ஆர்வலர்களும் கிரந்த எழுத்துக்களை ஒருங்குறி என்னும் யூனிக்கோடு குறியீட்டுமுறைக்குள் கொண்டு வரக் கடந்த சில ஆண்டுகளாக அரும்பாடு பட்டு  வந்திருக்கிறார்கள். இறுதியாகக் கடந்த செப்டம்பர் 6 அன்று புது தில்லியில் கூடிய அறிஞர் கூட்டம் பல வேறு அறிஞர்கள் கொடுத்த முன்மொழிகளை ஒருங்கிணைத்து எல்லோரையும் ஒன்று கூட்டி ஓர் இறுதி முன்மொழியை யூனிகோடு நுட்பக் குழுவின் முன்னர் வைக்க முடிவு செய்தது.  கிரந்த எழுத்துகள் தமிழோடு கலந்த பல கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு தமிழ்நாட்டில் தொடர்ந்தாலும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தமிழ்நாட்டிலிருந்து எந்தக் கல்வெட்டு ஆய்வாளரையும் அழைத்ததாகத் தெரியவில்லை.  தமிழக அரசின் சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.
 
இந்தப் பரிந்துரையில் 1700 ஆண்டுகளாக வடமொழியை மட்டும் எழுதத் தொடர்ந்து வந்திருக்கும் கிரந்த எழுத்துகளின் பேச்சொலி எழுத்து முறையின் (phonetic) கூட, வடமொழியில் இல்லாத ஆனால் தமிழிலும் மலையாளத்திலும் மட்டும் இன்றும் வழக்கிலிருக்கும் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்து ஒலியன்களைக் கூட்ட வேண்டும் என்ற முன்மொழிவும் இடம் பெற்றிருந்தது.  இந்த முன்மொழியை முதலில் மொழிந்து தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் நாக. கணேசன்.  சமஸ்கிருதத்தில் இல்லாத எழுத்துகளைக் கூட்டுவதற்குச் சில அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இது ஒருங்கிணைப்பு முன்மொழிவு என்பதாலோ என்னவோ, கிரந்த எழுத்து முறைக்குச் சற்றும் பொருந்தி வராத இந்த முன்மொழிவு எப்படியோ இறுதி முன்மொழிவிலும் இடம் பெற்று விட்டது.  இந்த முன்மொழிவை ஒருங்குறியின் தெற்காசியத் துணைக்குழுவும் ஏற்றுக் கொண்டு நவம்பர் 6 அன்று நடக்கவிருக்கும்  யூனிக்கோடு நுட்பக் குழுக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பரிந்துரைத்துள்ளது. இது யூனிகோடு ஏற்புப் பட்டியலிலும் அரங்கேறி விட்டது.
 
திரு கணேசனின் முன்மொழிவு பற்றித் தமிழ்த் தகவல் நுட்பவியலாளர்கள் சிலருக்குத் தெரிந்திருந்தாலும், போதிய சான்றுகளற்ற முரணான இந்த முன்மொழிவை வடமொழி வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று அசந்து இருந்து விட்டார்கள்.  இதற்கிடையில் தமிழ் எழுத்துகளிலேயே கிரந்த எழுத்துகளைக் குறிக்க நீட்டித்த தமிழ்க் குறியீட்டு முறையில் தனி இடம் வேண்டும் என்று ஸ்ரீரமணஷர்மா என்ற இளம் அறிஞர் வைத்த முன்மொழிவைப் பொது அரங்குக்குக் கொண்டு வந்து திரு கணேசன் கடுமையாக எதிர்க்க அணி திரட்டினார்.  ஸ்ரீரமணஷர்மா முன்மொழிவுக்குப் பலத்த எதிர்ப்பைத் திரட்டுவதில் கணேசன் வெற்றியும் பெற்றார்.  இது தொடர்பாக யூனிகோடு ஏற்புப் பட்டியலைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய சிலர் கிரந்த முன்மொழிவில் கணேசனின் கோரிக்கையும் இடம் பெற்றிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்கள். அது இந்திய அரசு பரிந்துரைத்த முன்மொழிவு என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.  இதனால் தமிழுக்கு என்னென தாக்கங்கள் நேரிடலாம் என்று பார்க்கத் தொடங்கினார்கள்.
 
தமிழில் புது கிரந்தம் வேண்டாம் என்று கணேசன் தொடங்கிய மறுப்பு அணி தமிழ் உணர்வின் உச்சக்  கட்டத்தில் இருந்தது. அதனால், கிரந்தத்திலும் தமிழ் எதற்கு என்று கேட்கத் தொடங்கினார்கள்.  கணேசன் முன்மொழிவு யூனிகோடு தரமாக ஆவதற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அவரது முன்மொழிவால் தமிழுக்கு என்ன தாக்கம் உண்டாகும், கிரந்தம் கலந்த தமிழ் ஆவணங்களை எண்ணிமப் படுத்தலில் என்னென்ன சிக்கல்கள் உண்டாகும் என்பதை ஆய்வதற்கு நேரம் தேவை என்று அவர்களுக்குப் புலப்பட்டது.  இந்த நேரம் வேண்டும் என்றால் யூனிகோடு நுட்பக் குழுவுக்கு எடுத்துச் செல்வதை விட இந்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் முறையிடுவதே சிறப்பு என்பது அவர்களுக்குத் தெரிந்தது.  ஆனால், கிரந்தத்தில் தமிழ் எழுத்துகளைக் கூட்டுவதால் என்ன பெரிய இடர்ப்பாடு வரப்போகிறது என்று இறுமாந்து இருந்த அரசியல் தலைவர்கள் இந்த முறையீட்டைப் பொருட்படுத்தவில்லை. இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்த உத்தமம் யூனிக்கோடு பணிக்குழுவுக்கும் நுட்பக் குழுக் கூட்டத்தின் கெடுவுக்கு முன்னால் இந்தக் கோரிக்கையால் என்ன சிக்கல்கள் எழும் என்பதை ஆராய்ந்து ஒரு பரிந்துரை எழுத நேரம் இருக்கும் என்று தோன்றவில்லை.
 
கணேசன் திரட்டிய எதிர்ப்பு அணியால் கணேசனே இப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலரின் கடும் முயற்சியால் கணேசனின் கோரிக்கையையும் இந்த எதிர்ப்பு அணி கூர்ந்து பார்க்கத் தொடங்கியது.  கனடா பேரா. செல்வகுமார் அவர்கள் கணேசனின் முன்மொழிவு தொடர்பான வாதங்களைப் படிக்கத் தொடங்கினார்.  தன்னுடைய முன்மொழிவில் கிரந்தத்தில் ”திராவிட” எழுத்துகளைத்தான் கூட்டியிருக்கிறேன் என்று வெளியில் சொல்லும் கணேசன் இவை ஏன் தேவை என்பதை வலியுறுத்தும் முகமாக யூனிகோடுக்கு எழுதிய கட்டுரையில் தன் வேறு முகத்தைக் காட்டி இருந்தார்.  அந்தக் கட்டுரையில் கணேசன் சொன்னது என்ன?
 
Grantha in Unicode will go a long way for the native user community and spread the knowledge and use among the Tamils. Other script communities of India do not need the Grantha script as their own scripts like Devanagari or Telugu can be used to write Sanskrit. But it is ONLY Tamils who will use the Grantha script. Unicode Consortium will be pleased in a few years’ time, many Tamil script e-mails, e-lists, blogs, newspapers will have words written in Grantha script. So, Tamils will use Grantha script mixing it with Tamil even though Tamil will be more compared to Grantha words/sentences in a Web page.
 
இதைப் படித்த பேரா. செல்வகுமார் அதிர்ந்து போனார்.  கணேசனின் முன்மொழிவு வெற்றி பெற்றால் இடைக்காலக் கேரளத்தில் மணிப்பிரவாளம் சேரர் தமிழின் தன்மையை மாற்றித் தமிழை விட்டுப் பிரிந்து மலையாளம் என்ற தனிமொழியாகப் பிரிந்தது போல இன்றைய தமிழும் இன்னொரு மணிப்பிரவாளத்தின் தாக்கத்தினால் தன் மரபையே இழந்து மலையாளம் 2.0 போல இன்னொரு மொழியாக மாறிவிடும் என்று அஞ்சினார்.  21ம் நூற்றாண்டில், கணினியிலும் வலையிலும் தமிழ் பரவிய பின்னால் கூடவா தமிழ் தன் தன்மையை இழந்து போய்விடும் என்று தொழில்நுட்பவாதிகளாகிய எங்களில் சிலர் செல்வாவின் அச்சத்தைப் பொருட்படுத்தவில்லை.  சரி, என் அச்சத்தைப் பொருட்படுத்தாதீர்கள், ஆனால், கணேசனின் முன்மொழிவால் தமிழுக்கு என்ன தாக்கம் நேரிடலாம் என்று இது வரை யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியை முன் வைத்தார் செல்வா.  அப்படி ஆராயவாவது யூனிகோடு நுட்பக் குழுவுக்கு நம் வேண்டுகோளைத் தெரிவிக்க வேண்டும் என்று மன்றாடினார் செல்வா.
 
இதற்கு இடையில் இந்திய அரசின் முன்மொழிவின் படி, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளரான தமிழ் இணையப் பல்கலையின் இயக்குநர் ப. நக்கீரனுக்கு வந்தது.  அதில் இந்திய அரசின் கிரந்த முன்மொழிவுக்குத் தமிழக அரசின் பின்னூட்டத்தைத் தருமாறு இருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து முனைவர் நக்கீரன் தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களோடு கலந்து பேசினார்.  தான் திரட்டிய கருத்துகளை இந்திய அரசுக்கு அனுப்பிய பின்னர் அவருக்கும் உத்தமத்தில் பேரா. செல்வகுமார் எழுப்பிய கேள்விகள் இதை மேலும் ஆராய்வதற்கான போதிய நேரம் இல்லை என்ற எண்ணம் வலுப்பட்டது.
 
செல்வா மற்றும் பலரின் வலியுறுத்தலின் பேரில் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்புக் கருத்துகளைத் திரட்டி செல்வா நடத்தி வரும் தமிழ் மன்றம் மடற்குழுவில் நல்ல பல கட்டுரைகளை எழுதிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் கவிஞருமான ரவிக்குமார் அவர்களுக்கு நான் சில கடிதங்களை அனுப்பினேன்.  அரசியல் மற்றும் எழுத்துப் பணிகளில் ஆழ்ந்திருக்கும் ரவிக்குமார் என்னுடைய கடிதங்களுக்கு விடையளிக்காமல் போகவே என் புலம்பெயர்ந்த நண்பர்களுக்கு என் அரசியல் முயற்சியின் தோல்வியைத் தெரிவித்து விட்டு, கணேசனின் முன்மொழிவில் தமிழ் தகவல் தொழில்நுட்பங்களுக்கு ஏதாவது சிக்கல் வருமா என்று பார்ப்பதில் கவனத்தைத் திருப்பினேன். 
 
அப்போதுதான், மின் தமிழ் குழுமத்தில் ஸ்ரீரமணஷர்மாவின் கிரந்த முன்மொழிவு பற்றிய கட்டுரை கிரந்தம் பற்றி ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு போன்றது என்று வினோத் ராஜன் எழுதிய கடிதம் என் கண்ணில் பட்டது.  ஷர்மாவின் முன் மொழிவைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும், வேலைப் பளுவாலும், கிரந்தம் பற்றி எனக்கு ஏதும் தொடர்பு இல்லாததாலும், நான் அதை ஆழ்ந்து படிக்கவில்லை. வினோத் ராஜனோடு விக்கிப்பீடியா, தனித்தமிழ் போன்றவற்றில் எனக்குச் சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், இந்த இளைஞரின் கிரந்தம், சமஸ்கிருதம், மற்றும் பழைய சமண பௌத்த சமயங்கள் பற்றிய ஆர்வமும் துடிப்பும், தொழில்நுட்பங்களில் அவர் காட்டிய திறமையும் என் கவனத்தை ஈர்த்திருந்தது.  தனி மடல்களில் பேரா. செவ்வியார் அவர்களும் வினோத் ராஜனை வெகுவாகப் பாராட்டியிருந்தார். 
 
விக்கிப்பீடியா பற்றிய கருத்துகளில் ”தமிழ் தாலிபான்” என்றூ வினோதின் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகி இருந்தாலும், அவரது தொழில்நுட்பத் திறன் பற்றிப் பேரா. செல்வா கொண்டிருந்த மதிப்பும் எனக்கு நினைவுக்கு வந்தது.  வினோத் தன் நண்பரைப் புகழ்ந்து எழுதியிருக்கிறாரா, அல்லது ஸ்ரீரமணஷர்மாவின் முன்மொழிவு உண்மையிலேயே ஒர் ஆய்வேடு போன்றதா என்று பார்க்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் ஸ்ரீரமணஷர்மாவின் இன்னொரு நீட்டித்த தமிழ் இடங்களில் கிரந்தக்  குறியீடுகள் பற்றிய முன்மொழிவை நான் தொழில்நுட்ப அடிப்படையில் எதிர்த்திருந்தேன்.  அதனால், அவருடன் எனக்குக் கருத்து வேற்றுமை இருந்தாலும், ஷர்மாவின் கிரந்த முன்மொழிவைப் படிக்கத் தொடங்கினேன்.
 
ஏற்கனவே கணேசனின் கிரந்த முன்மொழிவையும், இந்திய அரசின் கிரந்த முன்மொழிவையும் பார்த்து விட்டு அவற்றின் நீர்த்துப் போன வாதங்களால் ஈர்க்கப் படாத எனக்கு, ஷர்மாவின் கிரந்த முன்மொழிவு ஒரு தேர்ந்த ஆராய்ச்சி வல்லுநரின் ஆய்வேடு போல் தோன்றியது.  ஆங்காங்கே சிறுபிள்ளைத்தனமான வாதங்களையும் தேவையற்ற சொற்றொடர்களும் இருந்தாலும், அவை இள்ம்பருவத்தில் எல்லோரும் செய்யக்கூடிய பிழைகள்தாம்.  அவரது முன்மொழிவை ஏற்கனவே பல இடங்களில் நான் பாராட்டியது அவருக்கு மிகுந்த கூச்சத்தைக் கொடுத்திருப்பதால் மேலும் நான் ஏதும் சொல்லுவதற்கில்லை.  எப்படி தமிழ் மொழியிலும், தமிழ் எழுத்துகளிலும், தமிழ் தகவல் தொழில் நுட்பத்திலும், என்னுடைய  மொழி ஆர்வத்தினால் நான் நேரத்தை ஒதுக்கி ஈடுபடுகிறேனோ, அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் இந்த இளைஞர் இந்த முன்மொழிவை எழுதியிருந்தது என்னைக் கவர்ந்தது.  அது மட்டுமல்லாமல், தமிழ் நீட்சியில் கிரந்த எழுத்துக் குறியீடு பற்றிய அவரது முன்மொழிவு தொடர்பாகத் தனிமனிதப் பழிச்சொற்களுக்கு அவர் ஆளாகி இருந்ததும் நினைவுக்கு வந்தது.  வாய்ப்பு வரும்போது ஷர்மாவிடம் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்ட வேண்டும் என்று எண்ணினேன்.
 
அரசியல்வாதிகளுக்கு ஓரிரண்டு மின்னஞ்சல்கள் மட்டும் அனுப்பி வைத்துவிட்டு நம் வேலை முடிந்து விட்டது என்று இருந்தால் ஒன்றும் நடக்காது என்று எண்ணிய புலம்பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்காவிலிருந்து தோழர் ரவிக்குமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அனுப்பிய மின்னஞ்சல்களைப் பார்க்குமாறு நச்சரித்தனர்.  நான் அனுப்பிய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு இதைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர இயலாது என்று எண்ணினாலும், அமெரிக்கத் தமிழர்களின் வலியுறுத்தலால், இதைக் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்து தன் கட்சித் தலைவர் தொல் திருமா அவர்களுடன் தோழர் ரவிக்குமார் பேசியிருக்கிறார். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள பாண்டிச்சேரிக்குச் சென்று பிரெஞ்சு கீழை நாட்டியல் கழகத்தில் பேரா. ழான் லூக் செவ்வியார் மற்றும் பல இந்தியவியல் அறிஞர்களோடு கலந்து பேசியிருக்கிறார்.
 
இதற்கு முன்னர் கணேசனின் தலைமையில் ஸ்ரீரமணஷர்மாவின் கிரந்த முன்மொழிவுக்கு எழுந்த அரசியல் எதிர்ப்புகளின் வன்மையும், இனவெறுப்புத் தொனியும் பேரா. செவ்வியார் அவர்களை அதிரவைத்தன. தமிழ்த்தேசியவாதிகளுக்கு சமஸ்கிருதம், கிரந்தம் என்றாலே இனவெறி கலந்த ஆழ்ந்த வெறுப்பு மேலோங்கி எதையும் எதிர்ப்பார்கள் என்ற முடிவுக்கு வந்த செவ்வியார், கிரந்த முன்மொழிவு உடனே ஏற்கப்படாவிட்டால், கிரந்த எழுத்துமுறை பற்றி நன்கு தெரிந்த ஒரு சில மூதறிஞர்கள் தங்கள் வாழ்நாளுக்குள் இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்று தோழர் ரவிக்குமாரிடம் சொல்லி, கிரந்த எழுத்து முறை எதிர்ப்பை மட்டுப்படுத்தி இந்த முன்மொழிவை யூனிக்கோடு ஏற்றுக் கொள்ள வழி செய்யுமாறு ரவிக்குமாரிடம் வலியுறுத்தினார்.  பேரா. செவ்வியார் மற்றும் துணையிருந்த அறிஞர்களின் தமிழ்த்தொண்டைப் பற்றி வியந்த ரவிக்குமார், பேரா. செவ்வியாரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கத் தொடங்கினார்.
 
இருப்பினும், இதன் பின்புலத்தைப் பற்றி அரசிடம் சொல்லாவிட்டால், இது பிற்காலத்தில் பெரும்பூதமாகக் கிளம்பினால் கூட்டணி அரசுக்கும், நடுவணரசு அமைச்சர் ஆ. ராசாவுகும், தமிழக முதலவருக்கும் தீராப் பழி நேரிடலாம் என்றும், ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதில் மெத்தனமாக இருந்து தீராப்பழி ஏற்றது போல் இதிலும் கோட்டை விட்டுவிடாதீர்கள் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தமிழக அரசியல்வாதிகள் சிலர் இதைப் பற்றி மிகவும் குழம்பினார்கள். கணேசன் முன்மொழிவுக்கும், ஊடகங்களில் காரசாரமாகக் கண்டிக்கப்பட்ட ஸ்ரீரமணஷர்மாவின் வேறு முன்மொழிவுக்கும் வேறுபாடு தெரியாமல், ஊடகங்களில் வந்த அறிக்கைகளைப் பார்த்து அதிர்ந்து போன அமைச்சர்களும், அலுவலர்களும் விவரம் என்னவென்று புரிந்து கொள்ள முயன்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தி சொல்ல, தமிழக உயர்மட்டங்களில் இருந்த கணேசனின் ஆதரவாளர்கள் மாற்றுக் கருத்து சொல்ல, தமிழக அரசியல் தலைமை வெகுவாகக் குழம்பியிருந்தது.
 
இந்தக் குழப்பங்கள் பற்றிய தெளிவு வருவதற்காக இதைப் பற்றிய கருத்துகளைப் பல அறிஞர்களிடம் கேட்டுக் கருத்தறியும் பொறுப்பை அண்மையில் செம்மொழித் தமிழ் மாநாடு நடத்தி வெற்றி கண்டிருந்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைத் துணைவேந்தர் ராஜேந்திரன் அவர்களிடம் கேட்க முடிவு செய்தார்கள்.  துணைவேந்தர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வார் என்று காத்திருந்த ரவிக்குமார் அவரோடு தொடர்பு கொண்டார்.  புலம்பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்காவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் தொடர்ந்து அரசியல் தலைமையைத் தொடர்பு கொண்டு கணேசனின் கிரந்தத்தில் தமிழ் எழுத்துத் திணிப்பை எதிர்க்குமாறு வற்புறுத்தினர். இவர்களில் சிலரோடு கூடிப் பேசிய துணைவேந்தர் ராஜேந்திரன் மற்றும் இரவிக்குமார் நவம்பர் 2, செவ்வாய் இரவு எனக்கு மின்னஞ்சல் அனுப்பி மறுநாள் மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைத்தார்கள்.
 
அழைப்பை ஏற்று என்னுடைய தொலைபேசி எண்ணைத் துணைவேந்தருக்கு அனுப்பியவுடன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார் பேரா. ராஜேந்திரன். இந்தக் கூட்டத்துக்கு வேறு யாரையெல்லாம் அழைக்கலாம் என்று என் கருத்தையும் கேட்டார்.  நான் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பெயர்களைக் குறிப்பிட்டேன். எல்லோரும் தன் கருத்தை ஆதரிப்பவர்களை மட்டும் திரட்டினால் இது கருத்தறியும் கூட்டமாக இல்லாமல் கட்சிக்கூட்டம் போல் ஆகிவிடும் என்று கவலைப் பட்ட துணைவேந்தர் கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் வேண்டும் என்று ஆதரிப்பவர்கள் பெயர்களைக் கேட்டார்.  கணேசனைத் தவிர இதை ஆதரிப்பவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும்,  இந்திய அரசின் கிரந்த முன் மொழிவு பற்றி புது தில்லியில் கூடிய கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீரமணஷர்மாவுக்கும், அவரது நண்பர் வினோத் ராஜனுக்கும் இது பற்றித் தெரிந்திருக்கலாம் என்று அவர்கள் பெயரைப் பரிந்துரைத்தேன்.  அவர்கள் தொலைத்தொடர்பு பற்றிய விவரங்கள் கிடைக்குமா என்று துணைவேந்தர் கேட்டார். வலையுலகில் அவர்கள் தொடர்பு கிடைப்பதா அரிய செயல் என்று எண்ணி கண்டு பிடித்து விடுகிறேன் என்று உறுதி அளித்தேன்.
 
நள்ளிரவுக்குப் பின்னால் மின் தமிழ், தமிழ் மன்றம், தமிழ் உலகம், சி-தமிழ், உத்தமம் பொதுமன்றம் ஆகிய குழுமங்களுக்குத் துணைவேந்தரின் சிறப்புக் கூட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டேன். அவற்றில் ஸ்ரீரமணஷர்மா மற்றும் வினோத் ராஜன் தொடர்புத் தகவல்களைக் கேட்டிருந்தேன்.  பின்னர் வினோத் ராஜனின் வலைத்தளம் வழியாக அவரது மின்னஞ்சல் முகவரியையும், ஷர்மாவின் கிரந்த முன்மொழிவிலேயே அவரது மின்னஞ்சல் முகவரியையும் கண்டு பிடித்து அவர்களுக்குத் தனிக்கடிதமும் எழுதிக் கூட்டத்துக்கு வருமாறு அழைத்துத் துணைவேந்தருடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டினேன்.
 
பிறகு ஒரு குழுமத்தில் நான் இவ்வாறு ஷர்மாவைப் போற்றியதையும், வினோத் ராஜனை அழைத்ததையும் ஒரு பேராசிரியர் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு எழுதிய கடிதம் என்னை வெகுவாகப் புண்படுத்தியது.  மொழி, பண்பாடு, தொழில்நுட்பம் இவற்றைப் பற்றி மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் பண்புடன் கலந்து பேசி, சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தன்மை தமிழ்நாட்டில் வெகுவாக அருகிவிட்டது.  அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துகள் மோதினாலும், தனிவாழ்வில் மனிதர்களோடு அன்பாகப் பழகிய அரசியல் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்.  இந்தப் பண்பாடு, நான் அமெரிக்கா சென்ற பிறகு மேலும் வலுப்பெற்றது.  எதிர்க்கருத்து கொண்டவர்கள் எல்லோருமே எதிரிகள் இல்லை. தமிழக மொழி, இன அரசியல் பற்றி என் கருத்துகள் அனைத்திலுமே நானும் என் அருமை நண்பனும் கடுமையாகச் சாடிக்கொள்வோம். பார்ப்பவர்கள் ஏதோ கை கலப்பு நடக்குமோ என்று அஞ்சினாலும், இது அண்ணன் தம்பி சண்டைதான். இன்று அடித்துக் கொள்வோம், நாளை சேர்ந்து கொள்வோம். ஆனாலும், தற்கால அமெரிக்கா போலவே, தற்காலத் தமிழகத்திலும் கலாச்சாரப் போர்களில் நஞ்சு கலந்து கொண்டிருக்கிறது.  இதன் தாக்கத்தினால்தான் அந்தப் பேராசியரும் என் மீது பழி போட்டிருக்க வேண்டும்.  அதே நேரத்தில் அந்த இளைஞர் ஸ்ரீரமணஷர்மா இந்த இளம் வயதில் எப்படிப் பட்ட தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும் தோன்றியது.  தீதும் நன்றும் பிறர்தர வாரா.
 
வினோதும், ஸ்ரீரமணஷர்மாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்கள்.  அது ஏமாற்றம் அளித்தது.  துணைவேந்தர் அஞ்சியது போல இது ஒரு கட்சிப் பேரணியாக மாறிவிடுமோ என்று அஞ்சினேன். குறைந்தது ஷர்மாவின் கருத்து என்ன என்பதையாவது மின்னஞ்சல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என முயன்றேன்.  இதற்கு நடுவில் என்னோடு தொடர்பு கொள்ளும்படி வினோதுக்கும் ஷர்மாவுக்கும் பேரா. செவ்வியார் ஆதரவாகப் பரிந்துரைத்திருந்தார்.  அவரது கடிதத்தாலோ என்னவோ ஷர்மா எனது மின்னஞ்சலுக்கு விடையளித்தது மட்டுமல்லாமல, நல்ல பல அரிய தகவல்களை விவரமாகத் தெரிவித்தார்.  அவருக்கு என் மீது எப்படி நம்பிக்கை வந்ததோ தெரியவில்லை, ஆனால், இந்தக் கடிதத்தில் தனது தனித் தொலைபேசி எண்ணையும் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் தந்தார்.
 
கூட்டத்துக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த எனக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது அவரது மின்னஞ்சல் கிட்டியது.  உடனடியாக அவருடைய எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். நல்ல துடிப்பான இளைஞர்.  நான் பேசிய அந்த 40 நிமிடங்களில் கிரந்த/தமிழ்க் கல்வெட்டுகள், செப்பேடுகளைப் பெயர்த்து எழுதுவதில் உள்ள சிக்கல்கள் என்று தொழில்நுட்பம் தொடர்பானச் சிக்கல்களைப் பற்றிப் பேசினோம்.
 
தமிழ் எழுத்துகளைக் கிரந்தக் குறியீட்டில் இடத் தேவையில்லை என்பதுதான் ஷர்மாவின் கருத்தும். நல்ல வேளையாகக் கருத்து வேறுபாடு இல்லாததால், இந்த முதல் தொடர்பில் நுட்பச்சிக்கல்கள் பற்றி மட்டும் பேசினோம். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது பல தொழில்நுட்பச் சிக்கல்கள்.  குறியீட்டுச் சிக்கல்கள், ஆவணப்படுத்தலில் சிக்கல்கள் என்று தோன்றியது.  இதை முழுதும் ஆய்ந்து தெளிவு பெறக் கல்வெட்டியல், மொழியியல் புலமை உள்ளோர் உட்பட்ட துறை வல்லுநர்கள் குழுவொன்று தேவை என்பது மட்டும் புலப்பட்டது. ஷர்மாவும் இதைப் பற்றி மேலும் கொஞ்சம் ஆராய வேண்டும் என்று சொன்னார்.  முழுக்க முழுக்கத் தேவை இல்லை என்றும் சொல்ல முடியாது, ஆனால் தேவை என்று சொன்னால் வேறு சிக்கல்கள் வரலாம் என்றும் அவர் ஏற்றுக் கொண்டார்.
 
கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் பேராசியரும், உலக எழுத்துமுறைகள் பற்றிச் சென்னையில் கிழக்கு பதிப்பகத்தோடு இணைந்து தொடர்கூட்டத்தில் பேசிவரும் என் நண்பர் பேரா. சுவாமிநாதன் தொடர்பு கொண்டார்.
 
(தொடரும்)
 
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 
(தீபாவளி விடிகாலை)
 

[1] Bibliographic details for கிரந்த எழுத்துமுறை

[2] Proposal to Encode the Grantha script in Unicode, Shriramana Sharma
 

Palaniappan Arumugum

unread,
Nov 4, 2010, 10:07:28 PM11/4/10
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பர் மணி,
விரிவான விளக்கத்திற்கு நன்றி.
எல்லாக் கடமையையும் முடித்தவுடன் தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
பழனி

5 நவம்பர், 2010 7:25 am அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

Benjamin LE BEAU

unread,
Nov 5, 2010, 3:27:29 AM11/5/10
to tamil_...@googlegroups.com
நண்பர் முனைவர் மு. மணிவண்ணன் அவர்களுக்கு
அன்பு வணக்கம்
தங்கள் விரிவான மடல் தவறான கருத்துகளைக்  களைகிறது.
நல்ல வேலையாகத் தாங்கள் கிடைத்திருகிரீர்கள்
உண்மையை உலகுகுக் காட்ட.
தமிழ் மொழிககு உரிய  ஒருங்குறி இடங்களில்
கிரந்த எழுத்துகள் நுழைக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள் .

தொடர்ந்து செயல்படுக.
நலமே விளைக!
அன்புடன்
பெஞ்சமின் lebO

 

2010/11/5 Palaniappan Arumugum <singai...@gmail.com>

Mani Manivannan

unread,
Nov 6, 2010, 6:32:04 AM11/6/10
to tamilmanram, tamil_ulagam
தமிழக அரசின் யூனிகோடு தொடர்பான அறிக்கை:
 
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

2010/11/6 Mani Manivannan <mmani...@gmail.com>
திரு மயூரநாதன்,
 
செல்வாவின் பயத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு யூனிகோடிடம் செல்ல முடியாது.  இது போன்ற அச்சங்கள் வெட்டிக் கற்பனையாகவும், வீண் மிரட்சியாகவும் தெரிந்து நம்மை நகைப்புக்கு உள்ளாக்கும்.
 
கிரந்தத்தை யூனிகோடு குறியீட்டுக்குள் கொண்டு வர முயலும் அறிஞர்கள் அரும்பாடுபட்டு உழைத்து நல்ல முன்மொழிவைப் பதித்திருக்கிறார்கள். அவற்றைத் திருத்த வேண்டும் என்றால், நாமும் அதே அளவு உழைக்க வேண்டும்.  மக்களின் அச்சத்தை வைத்து மட்டும் எதிர்ப்புக் குரல் கொடுத்தால் அதை நுட்பக்குழு ஏற்பது கடினம்.
 
செல்வா குறிப்பிட்ட பயமும் கருத்தறியும் கூட்டத்தில் அலசப் பட்டது.  அதைப் பின்னர் பதிவு செய்கிறேன்.
 
தற்போது ஒரு நல்ல செய்தி:
 
சற்று முன் யூனிகோடு நுட்பக் குழுவின் தலைவி லிசா மோரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் படி, கிரந்தம் தொடர்பான இரு முன்மொழிவுகள் பற்றிய முடிவுகள் (இந்திய அரசின் கிரந்தம், ஷர்மாவின் நீட்சித் தமிழ்) இரண்டும் மேலும் தமிழகப் பயனர்கள் மற்றும் பன்னாட்டு மொழியறிஞர்கள் கருத்து அறிவதற்காக ஒத்தி வைக்கப் பட்டுள்ளன.  இவை பற்றிய விவாதங்கள் குழுவில் தொடர்கின்றன.  கருத்து வழங்க விரும்புபவர்கள் யூனிகோடுக்குத் தொடர்ந்து கருத்தளிக்கலாம்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

2010/11/6 Mayooranathan Ratnavelupillai <rmayoor...@gmail.com>


செல்வா, உங்களுடைய பயம் தான் எனக்கும் உள்ளது. ஆனால், அண்மையில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த நடவடிக்கைகளையும் பின்னணிகளையும் உள்ளடக்கித் திரு மணிவண்னன் அவர்கள் தொகுத்து இங்கே இட்ட இடுகையைப் பார்க்கும்போது என்ன நடக்கிறது என்பதே புரியாமல் உள்ளது. கிரந்த எழுத்துக்களைத் தமிழில் சேர்ப்பது அல்லது கிரந்தத்தில் தமிழைச் சேர்ப்பது போன்ற விடயங்கள் ஓரிருவரோ அல்லது ஒருங்குறி அமைப்போ தீர்மானம் எடுக்கவேண்டிய விடயங்கள் அல்ல. இவ்வாறான பொது நலன் தொடர்பான விடயத்தில் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எடுப்பவர்களைக் கண்டிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்களது நடவடிக்கைகளைப் பாராட்டிப் பட்டம் வழங்கவேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. தமிழைச் சீரழிப்பதற்கு இதுவரை சரியான திறமை உள்ள ஒருவர் இல்லாமல் இருந்தது போலவும் இப்போது ஒருவர் கிடைத்திருப்பதை அறிந்து அவரது திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டு செயல்பட ஆலோசனை வழங்குவது போலவும் அல்லவா தெரிகிறது. வரலாற்றில் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிராகச் செயற்பட்டவர்கள் பலரும் ஆதீதத் திறமைகள் கொண்டவர்கள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இ. மயூரநாதன்.

2010/11/5 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

//இன்றைய நிலையில் நாம் அறிய வேண்டுவது குறிப்பிட்ட முன்மொழிவுகள் தமிழருக்கு நன்மை விளைவிக்குமா அல்லது சில அறிஞர்கள் கருதுவதுபோல் தமிழைச் சீரழிக்குமா என்பதுதான் - மயூரநாதன்.//
 
//அருமை நண்பரே. பிரச்சினையின் விளைவுகளைத் தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் யாராவது சார்பின்றி எழுதினால் நலமாக இருக்கும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.//
 
தமிழ்மொழி சீரழிப்பெல்லாம் ஏதும் அல்ல முற்றுமாய் அழியும்.
சில தமிழ்ச்சொற்களும், சில பின்னொட்டுகளும் மிஞ்சும் (இதனை
தமிழை வெறுக்கும் பலர் வெளிப்படையாகவே சொல்லியும்
உள்ளனர்!!).
நாமறிந்த, 2500 ஆண்டுகளுக்கு மேலாக
இலக்கண இலக்கிய வளங்ககளுடன் வாழ்ந்திருந்த, மொழி முற்றுமாய் அழியும். புதிய மொழியின் தொடக்கம் 21 ஆவது நூற்றாண்டு. உலகில்
அண்மையில் தோன்றிய தமிழ்க்ருதம் என்னும் மொழியாகும். தமிழை அழிக்கத் துடிக்கும் மிகச்சிறுபான்மையர் புதிய மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவார்கள் (70 மில்லியன் மக்கள் தூங்கிக்கொண்டிருக்கையிலே!). எப்படியா? தமிழாக இருந்த சேரநாடு மலையாளம் ஆகியது.
மீதமுள்ள 2/3 தமிழ்நாடு மலையாளம் 2.0 ஆகும்.
ஆனால் இதையெல்லாம் இப்படியெல்லாம் ஆகவிடாமல் செய்ய
வேண்டுவது தமிழர் கடமை. இது விளையாட்டு அல்ல. 
 
செல்வா
 
 
2010/11/5 karuannam annam <karu...@gmail.com>



2010/11/5 Mayooranathan Ratnavelupillai rmayoor...@gmail.com

,

ஒருங்குறியில் தமிழ், கிரந்தக் கலப்பு முயற்சிகள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள விவாதங்கள் பலருக்கும் தலை சுற்ற வைப்பவையாக உள்ளன. நான் இந்த விடயத்தின் நுட்பங்களை அறிந்தவன் அல்ல. ஆனாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். என்னைப் போன்றவர்களுக்கு இந்த விடயத்தில் தெரியவேண்டியது குறித்த முன்மொழிவுகள் தமிழின் எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கப் போகிறது என்பதே. நுட்பவியலாளர்கள் தொழில்நுட்பம் என்னும் திரைமறைவில் நின்றுகொண்டு தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்களைக் கவனியாமல் விடப்போகிறார்கள் என்பதே எனது கவலையாக உள்ளது.

இன்றைய நிலையில் நாம் அறிய வேண்டுவது குறிப்பிட்ட முன்மொழிவுகள் தமிழருக்கு நன்மை விளைவிக்குமா அல்லது சில அறிஞர்கள் கருதுவதுபோல் தமிழைச் சீரழிக்குமா என்பதுதான். முன்மொழிவு ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையா அல்லவா என்று கண்டு பிடிக்கும் முயற்சிகள் உண்மையான பிரச்சினையைத் திசை திருப்புவதாகும். தமிழர்களின் வரலாற்றை ஆழ்ந்து நோக்கினால் மிகப் பழைய காலத்திலிருந்து மிக அண்மைக் காலம் வரை தமிழர்களில் அதிக திறமையும் அறிவும் கொண்டவர்கள் பலராலேயே நமக்கு அதிக துன்பங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனத்துக்கு எடுப்பது நல்லது. எனவே தனிப்பட்டவர்களின் திறமைகளுக்கும் அறிவுக்கும் அப்பால் பிரச்சினையின் விளைவுகளை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்விடயத்தில் தற்போதைய போக்கைப் பார்க்கும்போது வழக்கம்போலவே நாம் செய்யவேண்டியவற்றைக் கோட்டைவிட்டு விடுவோம் போல்தான் தெரிகிறது.

irai

unread,
Nov 6, 2010, 11:35:09 AM11/6/10
to tamil_ulagam
அன்புள்ள மணிவண்ணன் அவர்களுக்கு,

கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, ஒ, ற, ழ, ன என்ற 5
எழுத்துகளைச் சேருங்கள் என்று
திரு நாக.கணேசன் முயல்கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க
வேண்டியவர்கள்தானே கவலைப்பட வேண்டும்!
நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங்கு குறியில் - தமிழின்
ஒலிச்சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில்
தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் -
கிரந்த எழுத்துகள் 5 ( ஜ,ஷ, , ஹ, க்‌ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால்,
அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச்
சேர்த்தார்கள்!
இப்போது-
தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்பதல்லவா
இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால்
வெளியைடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார்.இவ்வொலிகள் தமிழுடன்
முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமணமதத்தினராலும்
ஈட்டுரையாசிரியர்களாலும் கொண்டுவரப்பட்ட மணிப்பவழ(பிரவாள) நடை தோற்றது.
தமிழில் கிரந்த எழுத்துகளைச்சேர்த்துத் தமிழின் தனித்தன்மையைக் கெடுத்து,
மேலும் கன்னடம் மலையாளம் போல் சிதைக்க முயலும்
இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க
வேண்டும் என்னும் எங்களின் கருத்து.
அன்பிலே,
முனைவர் பா.இறையரசன்

Elangovan N

unread,
Nov 6, 2010, 11:50:18 AM11/6/10
to tamil...@googlegroups.com, tamil_ulagam


2010/11/6 Mani Manivannan <mmani...@gmail.com>

தமிழக அரசின் யூனிகோடு தொடர்பான அறிக்கை:
 
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு



இந்தக் கடிதம் மிகவும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று. மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.
இதற்காக உழைத்த அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

காலத்தாழ்வாக இந்த விதயம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டாலும் தமிழக அரசு 
விரைந்து செயல்பட்டதற்காகப் பாராட்டவேண்டும்.

தமிழக அரசுக்கு இது பற்றிய செய்திகளை அறிந்து அதி விரைவில் செயலாற்றிய திராவிடர் கழகத்திற்கும்
அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்
பட்டிருக்கிறோம்.

இதற்காக உழைத்த உத்தமத்தின் உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஆர்வலர்கள், இந்தச் சரவலோடு தம்மை இணைத்துக் கொண்டிருக்கிற சட்டமன்ற உறுப்பினர் திரு.இரவிக்குமார், இதற்காக நீண்ட நாள்களாக குரல் கொடுத்து வரும் முனைவர் இராம.கி, திரு,மணிவண்ணன், பேரா.செல்வா, அருமையான கூட்டத்தை நடத்திய முனைவர் ம.இராசேந்திரன் மற்றும் பன்னாட்டு நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆனால், இதுவே இறுதியாகி விடாது.  தற்போது தமிழக அரசு பெற்றுத் தந்திருக்கிற இந்தக் கால இடைவெளியை 
செவ்வனே பயன்படுத்தி தமிழன்பர்கள் மிகத் தெளிவான, உறுதியான முடிவுகளைக் கடந்தகாலம், எதிர்காலம் என்ற இரு காலங்களையும் கருத்தில் வைத்து தமிழ் மொழிக்கு அரண் செய்ய வேண்டும்.

ஒன்று கூடி நன்று செய்வோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

 

DAVID SAGAYARAJ

unread,
Nov 6, 2010, 12:04:44 PM11/6/10
to tamil_...@googlegroups.com
இந்தக் கடிதம் மிகவும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று. இதற்காக உழைத்த அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

கடைசி நேரத்தில் கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு கூட்டத்தினை ஏற்பாடு செய்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்களுக்கும், கூட்டத்திற்குத் தலைமையேற்ற என்னுடைய ஆசிரியர் இறையரசன் ஐயா அவர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் தொலைபேசி வழி தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ஆல்பர்ட் ஐயா அவர்களுக்கும் அனைவர் சார்பிலும் நன்றி. நன்றி. நன்றி.
இத்துடன் இந்தச் சிக்கல் முடிந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டு அமைதியாகிவிடாமல் புலமைவாய்ந்தவர்கள் உடனடியாக உரியன செய்ய வேண்டும்.

அன்புடன்
இளங்குமரன்
நிறுவனர்
எழுத்தேணி அறக்கட்டளை 

 

! ! !

                   http://sites.google.com/site/ezhutheni/
 



From: Elangovan N <nela...@gmail.com>
To: tamil...@googlegroups.com
Cc: tamil_ulagam <tamil_...@googlegroups.com>
Sent: Sat, November 6, 2010 11:50:18 PM
Subject: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] ஒருங்குறி கிரந்தம் பரிந்துரையில் தமிழ் எழுத்துகள் பற்றிய கருத்தறியும் கூட்டம் - பின்னணி
--

Benjamin LE BEAU

unread,
Nov 6, 2010, 12:13:43 PM11/6/10
to tamil_...@googlegroups.com
சிக்கல் தீர்ந்துவிடவில்லை!
அக்கம் பக்கம் பார்த்து விழிப்பாக இருக்கவேண்டிய நேரம் இது!
விழிப்பாக  இருப்போம்
மொழிக்  கொலையைத் தடுப்போம்!

கிரந்த எழுத்து  நுழைப்பைத் தடுத்து நிறுத்த முயலும்
அனைவருக்கும் கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்துளி அரும்ப நன்றி கூறுகிறேன்.

மனத்தில் மண்டும் மட்டற்ற மகிழ்ச்சியுடன்
பெஞ்சமின் லெபோ



2010/11/6 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>

C.R. Selvakumar

unread,
Nov 6, 2010, 12:47:29 PM11/6/10
to tamil...@googlegroups.com, tamil_ulagam
//ஆனால், இதுவே இறுதியாகி விடாது.  தற்போது தமிழக அரசு பெற்றுத் தந்திருக்கிற இந்தக் கால இடைவெளியை 
செவ்வனே பயன்படுத்தி தமிழன்பர்கள் மிகத் தெளிவான, உறுதியான முடிவுகளைக் கடந்தகாலம், எதிர்காலம் என்ற இரு காலங்களையும் கருத்தில் வைத்து தமிழ் மொழிக்கு அரண் செய்ய வேண்டும்.//
 
தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது அதில் உருவாகும் பல்துறை
இலக்கியங்களையும் அதன் தரத்தையும், அதன்
பயனையும் பொருத்தது.
மொழியின் எழுத்துகளை மாற்ற வேண்டும் என்பது, பொன்னான
நேரத்தை நாம் வீணடிப்பதாகும். ஒரு காலத்தில் "எல்லா" இலக்கியமும்
கிரேக்கதில், பின்னர் அரபி, இலத்தீனில் இருந்தது (ஆங்கிலேயராகிய ஐசக் நியூட்டன் கூட இலத்தீனில் தன் ஆய்வை எழுதினார்), பைபிளை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக பலரைத் தீயியிலிட்டு கொளுத்தித்
தடுக்க முயன்றதை மீறி ஆங்கிலம் முன்னுக்கு வந்து இன்று "எல்லா"
இலக்கியமும் நிறைந்த தலைமை மொழியாக உள்ளது. நாளை மீண்டும்
அரபி வருமா, சீனம் வருமா. மீண்டும் இடாய்ச்சு மொழி பல துறைகளின்
முன்னிற்குமா என்று பார்த்துக்கொண்டு எல்லா ஒலியன்களையும்
தமிழில் நுழைத்துக்கொண்டு அது பற்றி சண்டையிட்டுக்கொண்டு நின்றால்
பின் தங்குவது தமிழர்களே. பிறமொழியில் வழங்கும்
அனைத்துக் கருத்துகளையும் தமிழில் அழகுற, தெளிவுற,
அறிவுதுளிர்க்குமாறு இப்பொழுது இருக்கும் 31 எழுத்துகள் அல்லது 247
எழுத்துகளை மட்டும் கொண்டு செய்ய முடியும். தமிழைக்
குறைகூறுவோர், பல மொழிகளை அறியாமையாலும் அல்லது அறிந்தும் திரிப்புவாதம் செய்வதாலும், அடிப்படைகளை அறியாமையாலுமே அகும்.
ஆங்கிலத்தில் ஒன்றைக் கற்க முனைவோர் எடுத்துக்கொள்ளும்
உழைப்பு, "அடக்கம்" (அறியாததை அறிய முற்படும் போது கொள்ளும்
திறந்த மனப்பான்மை, உளப்பாங்கு), புதியதை ஏற்கும் மனப்போக்கு ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதியுடன் தமிழை அணுகினாலும்
ஆங்கிலத்தின் வழி பெறும் அறிவைவிட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் தான் ஆழமாகவும் உள்ளியங்கும் மெய்யறிவாகவும் அவ்வறிவைப்
பெற முடியும்.  தமிழின் வளர்ச்சி தமிழர்கள் கையில். பலவகையான
மயக்குகளில் ஏமாந்து விட்டாலோ, அலைக்கழிக்க விட்டாலோ, கொன்றழிக்க
விட்டாலோ அதற்கும் தமிழர்களே காரணம்.
 
மீண்டும் கூறுகிறேன்,
 
தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது அதில் உருவாகும் பல்துறை
இலக்கியங்களையும் அதன் தரத்தையும், அதன்
பயனையும் பொருத்தது.
 
பயன் என்பதில் பொருள் வருவாய், வாழ்வின் கூறு, பண்பாட்டின் கூறு,
பல்நோக்கில் ஒவ்வொரு தமிழனின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய்
இருப்பது என்பதும் அடங்கும். இதில் பல இல்லாமல் இருப்பதும்
தமிழ் தாக்குறுவதற்கான காரணங்களில் சில.
 
அன்புடன்
செல்வா
 
 

---------- Forwarded message ----------
From: Elangovan N <nela...@gmail.com>
Date: 2010/11/6
Subject: Re: [தமிழ் மன்றம்] ஒருங்குறி கிரந்தம் பரிந்துரையில் தமிழ் எழுத்துகள் பற்றிய கருத்தறியும் கூட்டம் - பின்னணி
To: tamil...@googlegroups.com
Cc: tamil_ulagam <tamil_...@googlegroups.com>


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

maraimalai

unread,
Nov 6, 2010, 1:09:24 PM11/6/10
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil_ulagam
பேராசிரியர் செல்வா அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.இதே குரலில் செல்வா இரண்டாண்டுகளாகக் கருத்துரைத்துவருகிறார்.
ஆனால் உத்தம்ம் அமைப்புத்தான் இப்படி ஒரு பரிந்துரையை முதலில் முன்மொழிந்துள்ளது எனக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக உள்ளது.
இரண்டாண்டுகளாக இந்தப் பரிந்துரை காத்திருப்பில் இருந்தபோது ,(மைய அரசின் நடவடிக்கைக் குறிப்பில் உள்ளது எனத் தெரிந்தும்) கணிஞர்கள் உறங்கிக் கொண்டிருந்தனரா என அறிய ஆவல்.
இப்போது கிரந்த எழுத்துத் தொகுதியில் தமிழ் எழுத்து இடம்பெறுவதை எதிர்ப்பவர்கள் தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதற்கு முன்னோடிகளாக விளங்கினார்கள் எனக் கூறப்படுவதும் வருத்தமளிக்கிறது.
யூனிக்கோடு எழுத்துமுறையை  எதிர்த்தவர்கள் உத்தமம் அதற்கு அறிந்தேற்பு நல்கியபோது ஏன் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதும் புதிராக உள்ளது.
யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
நட்புணர்வுடன்,
மறைமலை

Please have a glance:
 

 


--- On Sat, 11/6/10, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at

Elangovan N

unread,
Nov 6, 2010, 1:52:38 PM11/6/10
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com
அன்பின் பேரா.மறைமலை ஐயா,
வணக்கம்.

உத்தமம் அமைப்பு ஒரு சில பேர்களால் மட்டுமே மருமக் குகையாக ஆகி இருக்கிறது.
(உத்தமத்தின் தமிழ்ப்பற்றுள்ளவர்களைக் கூற மாட்டேன். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்) 
இந்த ஒரு சில பேர்களால் பல நேரிய உத்தமம் உறுப்பினர்களின் பணிகளும் 
எண்னங்களும் முடங்கிப் போய்விட்டன.

இந்த ஒரு சில பேர்கள் தங்கள் திட்டங்களை வெளியே உருவாக்குகிறார்கள். 
அதனை உத்தமத்தில் செயல்படுத்துதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
அத்திட்டங்களுக்கு அணைவாக வேறொரு மின் குழுவும் இருக்கிறது. 
காலம் வரும்போது அத்தனையும் வெளிப்படும். இப்பொழுது பார்த்திருப்பது ஒரு சோறு மட்டுமே.
இன்னும் ஒரு பானை பாசறை போல இருக்கிறது.

வெள்ளைப் பேச்சும் மேனாட்டு மிடுக்கும்,  தமிழ்ப்பற்றுள்ள, தமிழகஅரசின் உயர்நிலைக் கல்வியாளர்கள்,
அறிஞர்கள் யாவரையும் ஏமாற்றியிருக்கிறது என்பதனை என்னால் தற்போது பூடகமாகவேச் சொல்லமுடிகிறது.

உத்தமத்தில் உறுப்பினராக இருந்து கொண்டே தமிழ் மொழிக்குச் சூடு போட்டுக் கொண்டிருக்கும்
சிலரை அறிவதற்கே இத்தனைக் காலம் ஆகியிருக்கிறது. பல காலம் ஏமாந்திருந்தவர்களில் நானும் ஒருவன்.

தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கும் இந்தக் கால இடைவெளி மொழி அரணுக்கு மட்டுமில்லை.
உத்தமம் அமைப்பைச் சீரமைப்பதற்காகவும்தான். 

கண்ணில் படும் இடங்களில் எல்லாம் கிரந்தத்தைப் பாய்ச்சுகின்றவர்களை யுனிகோடு சேர்த்தியத்துடனான
ஒருங்கிணைப்புக்குப் போட்டு எப்படி இந்த உத்தமம் தமிழைக் காப்பாற்றும்?

இதனை உணர்ந்தார் ஒருவரும் உத்தமத்தில் இல்லையா? அல்லது ஆரும் அது பற்றிக் கவலைப்படவில்லையா?
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று போய்க்கொண்டிருந்தால் என்ன போக்கு இது?

கிரந்தச் சேவையர்கள்தான் உத்தம உறுப்பினர்களிலேயே உயர்ந்த தமிழ்ப்பற்றும் தமிழறிவும் கொண்டவர்கள்
என்றால் உத்தமம் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல் என்பதே என்னைப்போன்ற பாமரர்களின்
கருத்து. 

”ஆகா எந்தமிழன் எந்நாடிருப்பினும் வளர்க்கிறான் பார் தமிழை” என்று வெள்ளேந்தியாக அரசும், அரசாங்கமும்,
அறிஞர் மன்றமும் எல்லாரையும் நம்புகையில் இப்படித்தான் ஆகும். அதற்காக வெளிநாட்டவரைக் குறை
சொல்கிறேன் என்பது பொருளல்ல. அந்த மிகச் சிலர், மிக மிகச் சிலரை ஆராயாமல் உள்ளே விட்டால்
விளைவது கேடுகளே என்பதற்கு இந்த சமற்கிருதமயமாக்கும் சதிச் செயல் கண் முன்னே நிகழ்ந்த எடுத்துக்காட்டு.

அன்புடன்
நாக.இளங்கோவன்


2010/11/6 maraimalai <marai...@yahoo.com>

V.Ramasami

unread,
Nov 7, 2010, 12:53:16 AM11/7/10
to Thamiz kUru nal-lulakam, tamil sangam nigeria, tamil mantram, golden tamil world, golden tamil, Thamiz kUru nal-lulakam, esuvadi
:
There can be a separate slot for grantha letters, not to called extended Tamil, in which they can do any thing. People like Dr.Ganesan & Dr. ManiManivannan & c, are trying to add unnecessay letters in the tamil slot, since they are encouraged by the silence of so called patrons, when U+0B82 & U+0BB6 were inserted in the Tamil slot. The earlier the vacant positions are occuppied by real Tamil letters like the earlier nA, NA, RA, elephant trunk like ai vowel mark, consonants with u vowel mark, consonants with U vowel mark and the like, Tamil slot will be safe from fifth column intruders !!
:

Mani Manivannan

unread,
Nov 7, 2010, 3:29:27 AM11/7/10
to tamil_ulagam, tamilmanram, மின்தமிழ்
Dear Mr. Ramasami,
 
I would like to make at least two corrections to your post and if you don't mind I would like you to forward my post to all the other mailing lists where I am not a subscriber.
 
One, I don't have a doctorate degree.  So, I am comfortable with a Thiru Mani Manivannan or Mr. Mani Manivannan and please don't address me with a Dr. title.  That would be misleading.  Please.
 
Two. You have made a statement that I along with Dr. Ganesan is trying to add unnecessary letters in the Tamil slot.  That is wrong.  Please verify your data before posting such mails.  These things take on lives of their own and inflammatory discussions erupt.
 
I have spent enormous hours in the past few days working with several equally hardworking people all over the world in trying to understand what is going on and trying to persuade the Tamil Nadu government, India government and the Unicode Technical committee and even INFITT working group members that the proposals to add Tamil letters to grantha need further review and a decision to accept it must be deferred.  I have, as a member of the INFITT WG02, before taking over as its chair this month, wrote a technical note recording my concern about adding new characters to Extended Tamil in the SMP space.  It is a matter of public record.
 
I would like to appeal to all those who want to comment on such emotional issues to first ascertain facts before accusing people of evil designs.  Most of the proposals are matter of public record and there is a lot of hard work that go behind these.
 
I have strong difference of opinion with Dr. Ganesan and his effort to add five uniquely Tamil characters as "Dravidian characters" in the Grantha proposal.  His stated reasons vary all over the place.  In the mailing list MinTamil he imagines that Grantha character set, with the addition of Tamil characters, will become popular with Tamils all over the world for writing anything with foreign sound.  Though that will have a major effect on Tamils, he has been insisting that INFITT has no locus standi in commenting on Grantha proposal as it has nothing to with Tamil.
 
If there is anyone "scheming" to create a trojan horse to "invade" Tamil, rather than color it with caste, race and linguistic politics, I'd suggest that one look at the various proposals.  It appears that Dr. N. Ganesan initiate this proposal and he asserts that he has solid support from several Tamil and international linguists.  It would be best to  ask Dr. Ganesan to justify the addition of the five Tamil characters (plus two Tamil vowel modifiers) in light of his contradictory statements all over the place.  I wish he would write a separate white paper with reasoned arguments, particularly in light of the strong opposition filed with the UTC by several scholars.
 
Unicode consortium and INFITT are technical bodies and if one were to have these technical bodies accept or reject proposals one needs to make sound technical arguments.  Emotional statements, accusations against "fifth column intruders" etc., don't impress the technical bodies.
 
In preparing for the arguments against these proposals, some of us recognized that we were in dire need of scholars with expertise in Grantha and Tamil, Linguistics, Grantha/Tamil epigraphy, solid knowledge of Grantha/Tamil inscriptional records, understanding of Sanskrit and Grantha etc.  While it is easy to caricature it as the neo-Aryan invasion of the pristine Tamil country, and unfortunately only such dire characterizations move the government machinery to action, these proposals require some rational minds sit and review the proposals carefully and judge them on technical merits.  The political and emotional attributes of these will not go away now that politicians are involved.  But since the Unicode Technical Committee has deferred its decision until its next meeting on February 26th or so, we have about 3 months to investigate this and make facts known.
 
Whoever gets appointed to these committees cannot do their job in a highly charged atmosphere if they worry that everyone of their scholarly decision is going to be judged and they may face hostile crowds baying for their heads for being a traitor to their cause.
 
I am fairly surprised that the process that the Government machinery in Tamil Nadu followed to investigate these proposals were fairly balanced and even the politicians involved in this have been far more open minded than some of the emotional outbursts that I have seen in the mailing lists.  I concede that the emotional outbursts were the reason why the authorities even got involved in such an arcane activity as a Unicode proposal to encode Grantha script.  Without that I doubt if an octogenarian CM would spend several hours on the eve of a major public holiday reviewing the impact of this proposal and bothering to send a note to the central ministry for urgent action.
 
But that is done.  Now, I hope that all the people that demanded government action would push for swift appointment of this high level committee and give scholarly space to this committee to make its recommendations in relative academic freedom.
 
Tamils belong to a great civilization.  We should have enough faith in the strength of the great Tamil language and the wisdom of Tamil people to handle any challenges.
 
We should also have the magnanimity to let others equally passionate about their language and culture to define their space in the world.
 
I hope that all these heightened attention and energy on Tamil unicode and unicode space can be harnessed for positive actions and promote Tamil computing in public spheres including that of eGovernance and archival of Tamil heritage records.
 
However, if the atmosphere is so charged, I am concerned that people who possess the knowledge to help us understand the issues better may not participate in the deliberations and we will all suffer as a result.
 
Please, I appeal to you, please don't make it so difficult to do this.  If you really want to help, read up the various proposals and the public comments from various players and judge for yourselves.
 
Until then, please don't add fuel to the fire.
 
Thank you,
 
Regards,
 
Mani M. Manivannan
(presently at) Singapore
 
P.S. If I don't respond to your e-mails in a timely manner, please bear with me.  I have other things to do to earn a living and sometimes I have to prioritize those.  While I am traveling on business, my access to the internet and my time to read and respond to your comments are limited.  And I need time to think before responding to your e-mails rather than react rashly.  And I hope that you would give me the same respect and think about what I have written here before reacting to it within minutes.  நன்றி.
2010/11/7 V.Ramasami <vee_ra...@yahoo.co.in>

philipae

unread,
Nov 7, 2010, 2:51:42 PM11/7/10
to tamil_ulagam
அன்பின் தமிழுலக நண்பர்களுக்கு,

உத்தமம் பற்றி நண்பர் நாக. இளங்கோ கூறியவை அனைத்தும் உண்மை. மிகை
ஏதுமில்லை. அவர்கள் பெயரில் இருப்பது செயலில் இல்லை. தமிழ் ஆர்வளர்கள்
தமிழுக்குப் பணிசெய்யப் போகிறோம் என்றார்கள் .உறுப்பினர் பட்டியல்
பெறும்பாலும் மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தது. ஆனால் நடந்தவை பெரும்பாலும்
தமிழுக்குத் தளர்வளிப்பதாகவே இருப்பதை அறிந்து அதிர்ந்து நிற்கின்றோம்.
இதில் மேலும் கவலை யளிப்பதென்ன வென்றால் இவையனைத்தும் தமிழ் அறிஞர்கள்,
தமிழ் ஆர்வலர்கள் அறியாவண்ணம் நடை பெற்றிருப்பதுதான்.
ஒருங்கு குறி ஆணையத்தின் செயற்பாடுகள் தொழில் நுட்பம் சார்ந்தவை. அது
பற்றி மொழியின் சொந்தக் காரர்கள் அறியத்தேவையல்லை, அதனால் பயனும்
ஏற்படாதென்று கூறுவது ஏற்புடையதாகவில்லை.இதுவரை நடந்த அனைத்துமே உத்தமம்
அறிந்தே நடந்திருக்கின்றன. நிகழ்வுகள் இவர்களின் கைமீறி நடந்திருக்கலாம்.
அப்பொழுது அதை மற்றவகள் அறியச் செய்வது இவர்கள் கடமையில்லையா?
ஒருங்கு குறி பற்றி இன்று பலர் அறியாமலிருக்கலாம். ஆனால் வருங்காலத்தில்
ஊடங்களிலும் மற்ற அச்சுப்பணிக்கும் பயன் படுத்த[ போவது ஒருங்கு குறி
முறையாகத்தானிருக்கும். அதனால் அதில் குறிவைத்து செயலிலிறங்கி
யிருக்கின்றார்கள். மக்கள் அறியாவண்ணம் செய்ய வேண்டிய ( கேடுகளை) எல்லாம்
செய்து முடித்துவிட்டால் பிறகு அவர்களை அசைக்க முடியாது இது முற்றிலும்
உண்மை. ஒருங்கு குறியில் ஒரு முறை ஒரு எழுத்துருவை சேர்த்துவிட்டால்
பிறகு அதை நீகமுடியாதென்ற விதி இருக்கின்றது.
அங்கு என்ன நடக்கிறது என்று இன்னும் குழப்பமாகவே இருக்கின்றது. ஆனால்
அண்மையில் திரு சர்மா முமொழிந்துள்ள மாற்றங்கள் “the extended tamil’
பற்றி ’தமிழ் இந்துவில்’ மிகவும்விளக்காமக இருக்கின்றது
கீழே உள்ள இணைய முகவரியில் அதைக் காணலாம்
http://www.tamilhindu.com/2010/11/extended-tamil/

அவர் முன்மொழிதலின் முகியப் பகுதி
“////இனி “விரிவாக்கப்பட்ட தமிழுக்கு” (Extended Tamil) வருவோம். மற்ற
இந்திய எழுத்துமுறைகளை போல் அல்லாது தமிழில் kha, gha, jha, dha, ba
போன்ற எழுத்துக்களுக்கு வடிவமில்லை. ஆகவே, தமிழில் சமஸ்கிருதம் உட்பட்ட
பிற இந்திய மொழிகளை மூல உச்சரிப்பு மாறாமல் அச்சிட விரும்பியவர்கள்,
தமிழ் எழுத்துக்களுடன் 2,3,4 முதலிய எழுத்துக்களை சேர்த்து க² க⁴ ஜ² த⁴
ப³ என்றவாறு தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்களை/////

அதாவது அவர் தமிழ் எழுத்துகளைத் தேவநாகிரி எழுத்துக்களாக மாற்றுவதற்கு
வழிவகுத்திருக்கின்றார். அவர் அதை செய்திருக்கும் முறைதான் இங்கு
கவனித்திற்கு உரியது. எழுத்துருவை மாற்றாமல் ஒலியைமற்றும் மாற்ற வழிகூறி
இருக்கின்றார். நேராக இனிமேல் தமிழை தேவநாகிரியில் எழுதுதென்று கூறினால்
எல்லொருக்கும் புரிந்துவிடும், அதையே மறைமுகமாக செய்துவிட்டால் பின்னால்
நாம் விழித்துகொள்ளும் பொழுது நம்மாலொன்றும் செய்ய முடியாது.
கிரந்த எழுத்துகளைத் தமிழில் புகுத்துவதை விட கொடியது இது. இதை மட்டும்
இவர்கள் செய்து முடித்துவிட்டால் இவர்கள் விருப்பம்போல் தமிழை எப்படி
வேண்டுமானாலும் எழுதலாம்., குலைக்கலாம். குதறலாம். தமிழ் மொழி அழிவை
பிறகு யாராலும் தடுக்க முடியாது. புது மொழிபிறந்து விடும்.. பழையத் தமிழ்
இறந்த மொழியாகிவிடும். மொழியை நம்மிடமிருந்து பறித்துவிட்டால் பிறகு
தமிழ் இனம் ஏது. ஈழத்தில் ஊயிரோடு அழிக்கிறார்கள் இங்கு மொழியை அழித்து
இனத்தை அழிக்க முயல்கிறார்கள் இதன் பிறகு இங்கு வழங்கப் புது மொழிக்கு
புதியப் பெயரும் இலக்கணமும் வகுக்க வேண்டியதுதான்
நான் கூறுவது சிலருக்கு மிகையாக தோன்றலாம். ஆனால் சிந்தித்துப்
பாருங்கள். அளவில்லாது பிறமொழி சொற்களைக் கலந்து அவற்றை எழுதுவதற்கும்
வழி வகுத்துவிட்டால் பின்னால் தமிழின் அழிவைத் தடுக்க முடியுமா? முன்னர்
கிரந்தம் கலந்து இதை செய்ய முனைந்தார்கள் அது முடியாமல்போகவே மறைமுகமாக
( பின் வாயல் வழியாக) நுழியை முயன்றிருக்கின்றார்கள்.
தமிழின் ஆணி வேரைப் பிடுங்க சதி செய்யப் பட்டிருக்கிறது ஆனால் இது
நடந்ததாகவே உத்தமம் காட்டிக்கொள்ளவில்லை. திடிரென்று செப்தம்பர் 30ம்
நாள் ஒரு மறுப்பு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அவ்வளவே. கடிதத்தின்
முகவரி
(http://www.infitt.org/pressrelease/
UTC_Unicode_Grantha_Letters_SMP.pdf)
அக்தோபர் இறுதியில் ஒருங்குழு இது பற்றி முடிவு செய்யவிருந்தது. செய்தி
கசிந்து கலைஞர் இதைத் தடுக்காமல் இருந்திருந்தால் சர்மாவின் முன்
மொழிவிற்கு அடிக்கல் நாட்டப் பட்டு பின்னர் கட்டமும்
எழுப்பபட்டிருக்கும். உத்தமும் வாய்மூடிக்கொண்டு இருந்திருக்கும்.
இன்னும் இன்னும் எத்தனை இது போல் நடந்திருகின்றனவோ? உத்தமம் தான்
அறியும்.
கலைஞரின் இந்த செயல் துவக்கம்தாம். இனிதான் தமிழக மெங்கும் இந்த சதி
திட்டம் வெளிப்படுத்தப் படவேண்டும். இந்த சதி தடுக்கப்படவேண்டும்.
இனியும் இது போன்ற சதிகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வகை
செய்யப் பட வேண்டும். உத்தமம் போன்ற அமைப்புகளை நம்பி மீண்டும்மோசம் போக
கூடாது.
இதில் அறியவேண்டியதுற்றொன்றும் உள்ளது. ஒஉருங்கு குறி ஆணையம் ஏதோ
தன்னிச்சையாக செயல் படு வது போல ஒரு கருத்து முன் வைக்கப்
பட்டிருக்கிறது. அது முற்றிலும் உண்மைஇல்லை. அந்த மொழி சார்ந்த ஏதாவது
தொழில் நுட்ப அமைப்பின் அறிவுறுத்துதல்பேரில் தான் செயல் படுகிறது. தமிழ்
ஒருங்கு குறியில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் இந்திய ஒருங்கு குறி தொழில்
நுட்ப குழுவின் அறிவுரை பேரிலேயே நடந்திருக்கின்றன. தமிழைப்பற்றி
மாறுதல்கள் வருமொழுது அது தமிழ் நாட்டு அரசிற்கு தெரியப் படுத்த
வேண்டும். அவ்வாறு செய்யப் படுவதாக தெரியவில்லை.

முனைந்து செயல் படவேண்டிய நேரமிது.
அன்புடன்,
பிலிப்

பிகு: உத்தமம் முழுமையும் குறை கூறவில்லை.)

> 2010/11/6 maraimalai <maraima...@yahoo.com>


>
> > பேராசிரியர் செல்வா அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.இதே குரலில் செல்வா
> > இரண்டாண்டுகளாகக் கருத்துரைத்துவருகிறார்.
> > ஆனால் உத்தம்ம் அமைப்புத்தான் இப்படி ஒரு பரிந்துரையை முதலில்
> > முன்மொழிந்துள்ளது எனக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக உள்ளது.
> > இரண்டாண்டுகளாக இந்தப் பரிந்துரை காத்திருப்பில் இருந்தபோது ,(மைய அரசின்
> > நடவடிக்கைக் குறிப்பில் உள்ளது எனத் தெரிந்தும்) கணிஞர்கள் உறங்கிக்
> > கொண்டிருந்தனரா என அறிய ஆவல்.
> > இப்போது கிரந்த எழுத்துத் தொகுதியில் தமிழ் எழுத்து இடம்பெறுவதை
> > எதிர்ப்பவர்கள் தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதற்கு முன்னோடிகளாக
> > விளங்கினார்கள் எனக் கூறப்படுவதும் வருத்தமளிக்கிறது.
> > யூனிக்கோடு எழுத்துமுறையை  எதிர்த்தவர்கள் உத்தமம் அதற்கு அறிந்தேற்பு
> > நல்கியபோது ஏன் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதும் புதிராக உள்ளது.
> > யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
> > நட்புணர்வுடன்,
> > மறைமலை
>
> > Please have a glance:
> >  www.ilakkuvanar.org
>

> > --- On *Sat, 11/6/10, C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>* wrote:


>
> > From: C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
> > Subject: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] ஒருங்குறி கிரந்தம் பரிந்துரையில்
> > தமிழ் எழுத்துகள் பற்றிய கருத்தறியும் கூட்டம் - பின்னணி
>
> > To: tamil...@googlegroups.com
> > Cc: "tamil_ulagam" <tamil_...@googlegroups.com>
> > Date: Saturday, November 6, 2010, 10:17 PM
>

> > *//ஆனால், இதுவே இறுதியாகி விடாது.  தற்போது தமிழக அரசு பெற்றுத்
> > தந்திருக்கிற இந்தக் கால இடைவெளியை *
> > *செவ்வனே பயன்படுத்தி தமிழன்பர்கள் மிகத் தெளிவான, உறுதியான முடிவுகளைக்


> > கடந்தகாலம், எதிர்காலம் என்ற இரு காலங்களையும் கருத்தில் வைத்து தமிழ் மொழிக்கு

> > அரண் செய்ய வேண்டும்.//*
> > **


> > தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது அதில் உருவாகும் பல்துறை
> > இலக்கியங்களையும் அதன் தரத்தையும், அதன்
> > பயனையும் பொருத்தது.
> > மொழியின் எழுத்துகளை மாற்ற வேண்டும் என்பது, பொன்னான
> > நேரத்தை நாம் வீணடிப்பதாகும். ஒரு காலத்தில் "எல்லா" இலக்கியமும்
> > கிரேக்கதில், பின்னர் அரபி, இலத்தீனில் இருந்தது (ஆங்கிலேயராகிய
> > ஐசக் நியூட்டன்
>

> ...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages