இந்த நேரத்தில் தலைமையாசிரியர் திரு.கவி. செங்குட்டுவன் அவர்கள் இணையம்
வழி அறிமுகம் ஆனார்கள். அவர்களிடம் என் வருகையை எடுத்துரைத்தபொழுது
மகிழ்ந்து அவர் பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும்
கணிப்பொறித்துறை மாணவர்களுக்கு என் தமிழ் இணையம் குறித்த உரை கிடைத்தால்
பயனாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
நானும் திட்டமிட்டவாறு 18.12.2009 பகல் 1 மணிக்கு ஊத்தங்கரை
அடைந்தேன்.பகலுணவுக்குப் பிறகு பள்ளிக்கு இருவரும் சென்றோம்.
தலைமையாசிரியர் அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி உருவா
திரட்டி உயரிய மின்னணு நூலகம் உருவாக்கி அன்பளிப்பாகப் பள்ளிக்கு
வழங்கியுள்ளனர்.மிகச்சிறந்த கூண்டு வடிவ நூலகமாக அது உள்ளது.
அரசுப்பள்ளியில் இத்தகு நூலக வசதி யான் அறிந்தவரை இல்லை. அனைவருக்கும்
இது முன்மாதிரிப் பள்ளியாகத் திகழ்கிறது.இதில் பயின்ற முன்னாள் மாணவர்
ஒருவர் 20 இலட்ச உருவா நன்கொடை வழங்கியுள்ளார். அவர் பெயரில் ஒரு வளாகம்
உள்ளது.இச்செயல்கண்டு அவரை உள்ளம் குளிர்ந்து மனத்துள்
வாழ்த்தினேன்.வித்யா மந்திர் கல்லூரியின் தாளாளர் திரு.சந்திரசகரன்
அவர்கள் 40 இலட்சம் உருவா திரட்டித்தந்துளதாகவும் அறிந்தேன்.
2.30 மணியளவில் பயிலரங்கம் தொடங்கியது.கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும்
சிற்றூர்ப்புற மாணவர்கள் என்பதால் ஆர்வமுடன் பயிற்றுவித்தேன்.அனைவரும்
சுவடிகளை வைத்துக்கொண்டு குறிப்புகளை எடுத்துக்கொண்டனர்.அவர்கள்
பயன்பெறும்படி தமிழில் தட்டச்சிடுவது
தொடங்கி,மின்னஞ்சல்,உரையாடல்,மதுரைத் திட்டம்,தமிழ் மரபு
அறக்கட்டளை,மின்னிதழ்கள்,சுரதா தளம்,தட்சு தமிழ் பற்றியெல்லாம்
காட்சிப்படுத்தலுடன் எடுத்துரைத்தேன்.
ஐயம் போக்கிக்கொள்ள மாணவர்களை வேண்டினேன்.
ஒரு மாணவன் அருகே வந்து மட்டைப்பந்து ஓட்டம் இப்பொழுது எவ்வளவு என்று
வினவிச்சென்றான்.
அனைவரிடமும் விடைபெற்று திரு.செங்குட்டுவன் ஐயா அவர்களின் உதவியுடன்
வித்யா மந்திர் கல்லூரிக்குப் புறப்பட்டேன்.
--
==================================================
"தமிழ் இணையப் பயிலரங்கக் குழு" வில் இருந்து இக்கடிதம் பெறப்பட்டுள்ளது.
மடல்களை அனுப்புவதற்கு tamil-inaiya...@googlegroups.com என்னும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தவும்.
நன்றி..
ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டுக்
>>அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு கோடி உருவாதிரட்டி உயரிய மின்னணு நூலகம் உருவாக்கி அன்பளிப்பாகப் பள்ளிக்கு
வழங்கியுள்ளனர்.மிகச்சிறந்த கூண்டு வடிவ நூலகமாக அது உள்ளது.
அரசுப்பள்ளியில் இத்தகு நூலக வசதி யான் அறிந்தவரை இல்லை.<<
திரு கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டுக்