( Translated into Tamil by Dr. Sankarkumar, USA )
ஜெய் ஸாயிராம்.
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்.
பாபாவின் அருளாசியால், பல அன்பர்களின் அனுபவங்கள் நமக்குக் கிடைத்து வருகின்றன. அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு அமைதியை அளித்து, அவர்களது நம்பிக்கை மேலும் உறுதிப்படுகிறது. ஸாயி ஸத்சரிதத்தை திரு. ஹேமந்த்பந்த் எழுதத் துவங்கும்முன், பாபாவிடம் ஆசி பெறச் சென்றபோது, ஸாயிபாபா அவரை ஆசீர்வதித்து, எழுத அனுமதி
தந்தார்.
'என்னைப் பற்றியும், எனது உபதேசங்களையும் படிக்கும் மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகி, அவர்கள் மகிழ்ச்சியை அடைவர்' என அப்போது அவர் கூறினார். அதேபோல, இவற்றைப் படிப்பதாலும் நிகழும். உண்மையான அன்புடனும், நேசத்துடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் எழுதப்படும் இவ்வனுபவங்களைப் படிக்கும் வாசகர்கள், அவ்வாறு எழுதுவோரின் மெய்யுணர்வைப் புரிந்துகொள்ள
வேண்டும். அவர்கள் எழுதும் ஒவ்வொரு சொல்லும் நம்மை பாபாவின் அருகில் இட்டுச் செல்லும். ஜெய் ஸாயிராம். --
மனிஷா.
ஸாயிபாபாவின் பிரசாதம் ஆசியாகவும்,