( Narrations slightly condensed and Translated into Tamil by Sankarkumar )
ஸாயிராம்.
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள். இன்றளிக்கும் பதிவு தனித்துவமானது. "சிவம்மா தாயீ" என்னும் ஸாதுவினால் நிர்மாணிக்கப்பட்டு, பங்களூருவில் இருக்கும் 'ரூபன் அக்ரஹார ஷீர்டி
ஸாயிபாபா ஆலயத்தைப்' பற்றிய அடியார்களின் அனுபவங்களைத் தாங்கிவரும் பதிவு
இது. இதனைப் படிக்கும் முன், அன்பர்களின் கவனத்துக்கு ......
சிவம்மா
தாயீ என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட ரூபன் அக்ரஹார ஷீர்டி ஸாயிபாபா ஆலயம்
சென்ற மே மாதம் 22-ம் நாளன்று தனது 42-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. மே
29-ம் தேதி சிவம்மா தாயீ அவர்களின் பிறந்த நாள். இந்த ஆலயத்தைப் பற்றிய
விவரங்களையோ, ஆலயத்துக்குச் செல்ல விரும்புவோரோ இந்தப் பதிவின் இறுதியில்
கொடுக்கப்பட்டிருக்கும் ஆலய அர்ச்சகரின் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு
விவரங்களைப் பெறலாம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆலயத்துக்குச்
சென்று வந்தவர்களின் அனுபவங்களைப் படிப்பது நமக்கெல்லாம் பெரிய ஆசீர்வாதம். ஜெய் ஸாயி ராம்.
மனிஷா
************
ஸாயிராம் தீதி.
ஓராண்டுக்கு முன்னம் நிகழ்ந்த இன்னொரு அதிசயத்தைப் பகிர விழைகிறேன்.
'சிவம்மா தாயீ ஆலயம், பங்களூரு' என்னும் தலைப்பில் தங்களது ஆலய வலைதளத்தில்
நீங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த ஆலயம் பற்றிய அதிசயமே இது. அத்துடன்
மேலும் சிலரின் அனுபவங்களையும் இணைத்திருக்கிறென். 2011, மே மாதம் எனது
குடும்பத்தாருடன் காரில் தெற்குப் பக்கம் பயணித்துக் கொண்டிருந்தேன்.
பங்களூரு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, ஏதோ ஒரு உந்துதலால், அங்கிருந்து
நான் மட்டும் நேராக பங்களூரு செல்லவேண்டும் எனத் தோன்றியது. இத்திட்டத்தை
நான் சொன்னதும் என்னுடன் வந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.