நான் பல இடங்களிலும் வேலை பார்த்து வந்தேன். முதலில் பூனாவில் இருந்த போது சீரடிக்குச் செல்வது உண்டு. அங்கிருந்து பெங்களூருக்கு வந்த பின் அங்கும் சாயி
பாபா ஆலயம் இருந்தது. மன அமைதி பெற அங்கு சென்று தியானிப்பேன். ஆனால் நான் கல்கத்தாவுக்கு வந்த பின் நான் இருந்த இடத்தின் அருகில் சாயி பாபாவின் ஆலயம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு வருத்தமுற்றேன். இனி நான் இந்த ஆலயத்தில் சென்று மன அமைதி பெறுவேன்.