(Translated into Tamil by Dr. Sankarkumar, USA)
அன்பான உங்களுக்கெல்லாம் இனிய பாபா நாளாக அமையட்டும்.
தமது பக்தர்களிடம் பாபா எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதே இன்றையப் பதிவின் முக்கியக் கருத்து. நமது ஷீர்டி ஸாயிபாபா கருணையின் இருப்பிடம். தமது அடியார்கள்பால் எல்லையற்ற அன்பு கொண்டிருக்கும் அவர் எப்போதும் அவர்களுடனேயே இருக்கிறார். அவர் இவ்வுலகின் அசையா, அசையும் பொருட்களின் ஒவ்வொரு அணுக்களிலும் வாசம் செய்கிறார். தீவிர நம்பிக்கை கொண்டோருக்கு அவர்
எப்போதும் தரிசனம் தருகிறார். தனது இனிய தரிசனத்தின் மூலமே பாபா அடியார்களின் துன்பங்களையெல்லாம் அகற்றி, அவர்களது பாதுகாவலராக இருக்கிறார். ஜெய் ஸாயிராம்.
மனிஷா.
--------------------------------
பாபாவின் ஆரத்தி
முறையான பிரார்த்தனைகளின் அவசியம் பற்றி பாபா எனக்குப் பாடம் சொல்லித் தந்தார். ஆரத்தியின் மஹிமை பற்றி சென்ற வாரம் அவர் எனக்குப் போதித்தார். கடந்த இரு ஆண்டுகளாக என் கணவர் ஒழுங்காக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவில்லை. வேலைப் பளு, நேரமின்மை எனக் காரணம் காட்டி அதைத் தவிர்த்திருந்தார். மேலும் தனது உடல்நிலை நன்றாகவே இருப்பதால், தேவையில்லை எனவும் கருதினார்.
இது எனக்கு மன உளைச்சலைத் தந்தது.