சிலேடை

415 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jul 3, 2008, 5:38:15 PM7/3/08
to santhavasantham
2008-07-03
கொசு - அரசன் - சிலேடை
-----------------------------------
இரியு மாற்றார் இரத்தம் மிகவும்
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.

அன்புடன்
,
வி. சுப்பிரமணியன்


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 4, 2008, 8:13:53 AM7/4/08
to santhavasantham
முதல் அடியில் முதலிரு சீர்களைச் சற்று மாற்றி :
 

இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்


பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2008/7/3 Siva Siva <naya...@gmail.com>:

kavimamani

unread,
Jul 5, 2008, 6:19:16 AM7/5/08
to Santhavasantham

அருமை
இலந்தை
On Jul 4, 5:13 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> முதல் அடியில் முதலிரு சீர்களைச் சற்று மாற்றி :
>
> இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
> பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2008/7/3 Siva Siva <nayanm...@gmail.com>:
>
> > 2008-07-03
> > கொசு - அரசன் - சிலேடை
> > -----------------------------------
> > இரியு மாற்றார் இரத்தம் மிகவும்
> > பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> > தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> > ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jul 5, 2008, 1:03:37 PM7/5/08
to santhav...@googlegroups.com

படிப்பவர்கள் வசதிக்காகப் பதம் பிரித்து:

கொசு - அரசன் - சிலேடை
-----------------------------------

இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.

அரசன்:
இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)

ஈடு கொசுவென்(று) இயம்பு.

கொசு:
இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)

ஈடு கொசுவென்(று) இயம்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/7/5 kavimamani <ELAN...@gmail.com>:



--

ananth

unread,
Jul 5, 2008, 8:34:19 PM7/5/08
to Santhavasantham
மேலும் ஒரு சிறு குறிப்பு: இரிதல் - ஓடுதல்; பறத்தல்.

அழகிய இருபொருள் சொல்லாட்சி கொண்ட சிலேடை.

அனந்த்

On Jul 5, 1:03 pm, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> படிப்பவர்கள் வசதிக்காகப் பதம் பிரித்து:
>
> கொசு - அரசன் - சிலேடை
> -----------------------------------
> இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
> பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> அரசன்:
> இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
> பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
> பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> கொசு:
> இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
> பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
> பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2008/7/5 kavimamani <ELAND...@gmail.com>:
>
>
>
>
>
>
>
> > அருமை
> > இலந்தை
> > On Jul 4, 5:13 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> > > முதல் அடியில் முதலிரு சீர்களைச் சற்று மாற்றி :
>
> > > இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
> > > பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> > > தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> > > ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> > > அன்புடன்,
> > > வி. சுப்பிரமணியன்
>
> > > 2008/7/3 Siva Siva <nayanm...@gmail.com>:
>
> > > > 2008-07-03
> > > > கொசு - அரசன் - சிலேடை
> > > > -----------------------------------
> > > > இரியு மாற்றார் இரத்தம் மிகவும்
> > > > பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> > > > தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> > > > ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> > > > அன்புடன்,
> > > > வி. சுப்பிரமணியன்
>
> > > --http://www.geocities.com/nayanmars
> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
Message has been deleted

ananth

unread,
Jul 5, 2008, 8:40:48 PM7/5/08
to Santhavasantham
<> காரும் கொண்டையும் <>

வாரிவிட்டு மேலமரும் வட்டமிட் டுச்சுற்றிச்
சேரும் கலையும் சிறப்பென - ஊர்புகழ்
மாரிதரும் வண்ணம் கருப்பு வடிவழகு
காரிகையின் கொண்டைகார் காண்.

மேகம்: கடலிலிருந்து கிளம்பி வானத்தில் சுற்றி வட்டமிட்டுப் பிற
மேகங்களுடன் சேரும் பின் கலைந்து போகும். அருமையென்று மாந்தர் புகழுமாறு
மழையைக் கொடுக்கும். கருப்பு நிறமும் அழகான வடிவமும் கொண்டது.

பெண்ணின் கொண்டை: கூந்தலை வாரியபின் தலையின் மேல்பாகத்தில் அமையும். வட்ட
வடிவத்தில் சுற்றிப் பிணையும். அதன் அமைப்பைச் சிறந்த கலை என்று கூறி
ஊரார் புகழ்மாரி பெய்வார். கருப்பு நிறமும் அழகான வடிவமும் கொண்டது.

..அனந்த்
5-7-2008

kavimamani

unread,
Jul 6, 2008, 12:38:56 AM7/6/08
to Santhavasantham
கொண்டலும் கொண்டையும் சிறப்பு
இலந்தை

Siva Siva

unread,
Jul 6, 2008, 8:54:18 AM7/6/08
to santhav...@googlegroups.com
கொண்டையில் ரிப்பன் போன்றன கட்டுவது உண்டோ? அப்படி ஆயின், கலை என்பதைத் துணி என்றும் கொள்ளலாமோ?

2008/7/5 ananth <gan...@gmail.com>:

devoo

unread,
Jul 8, 2008, 7:24:24 AM7/8/08
to Santhavasantham


On Jul 4, 2:38 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2008-07-03
> கொசு - அரசன் - சிலேடை
> -----------------------------------
> இரியு மாற்றார் இரத்தம் மிகவும்
> பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/

‘சிலேடை’யின் இலக்கணம் யாது?
‘சிலேடை’, ‘இரட்டுற மொழிதல்’ இரண்டும் ஒன்றா?
சிலேடையை மிகுதியாகக் கையாண்ட புலவர் யார்?
சங்க நூல்களில் சிலேடை உள்ளதா?
அன்பர்களின் விளக்கம் வேண்டுகிறேன்.
தேவ்

Hari Krishnan

unread,
Jul 8, 2008, 11:54:19 PM7/8/08
to santhav...@googlegroups.com


2008/7/8 devoo <rde...@gmail.com>:
 

'சிலேடை'யின் இலக்கணம் யாது?
 
நானறிந்து தண்டியலங்காரத்துக்கு முந்தைய நூல்களில் இதற்காக இலக்கணம் இல்லை.  தண்டியலங்காரத்தில் சொல்லப்படும் சூத்திரங்கள்:
 

சிலேடையணி

76. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்.

77. அதுவே,
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.

78. ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோத மவிரோதம்
எனவெழு வகையினு மியலு மென்ப.

 


'சிலேடை', 'இரட்டுற மொழிதல்' இரண்டும் ஒன்றா?
 
இரண்டும் ஒன்றுதான்.  ஸ்லேஷை என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் சிலேடை.  இரட்டுற மொழிதல் என்பது தமிழ்ப் பெயர்.
 

சிலேடையை மிகுதியாகக் கையாண்ட புலவர் யார்?
 
வடமொழியில் மோதிரவிரலுக்கு அநாமிகா (பெயரில்லாதது) என்று பெயர்.  காளிதாசனுக்குப் பிறகு கவிஞன் யார் என்று விரல்விட்டு எண்ணத் தொடங்கினால், சுண்டுவிரல் பிரித்து, 'காளிதாசன்' என்று தொடங்கி, அடுத்தது அநாமிகா என்று முடித்தானம் ஒரு கவிஞன்.  காளிதாசனுக்குப் பிறகு எவனும் கவியே இல்லை என்ற பொருளில் ஒரு ஸ்லோகம் உண்டு.
 
அந்த மாதிரி, தமிழில் சிலேடைக்கு ஒரேஒருவன்.  காள-மேகம். After him, nobody else may come

சங்க நூல்களில் சிலேடை உள்ளதா?
 
ம்கூம்.  சிலேஷை என்ற பெயரிலிருந்து ஏதாவது க்ளூ கிடைக்கிறதோ?  தண்டியலங்காரத்தில்தான் சிலேடைக்கு இலக்கணம் முதன்முதலாகக் காணப்படுகிறது என்பதும் இன்னொரு க்ளூ அல்லவா.
 

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jul 9, 2008, 12:08:36 AM7/9/08
to santhav...@googlegroups.com


2008/7/9 Hari Krishnan <hari.har...@gmail.com>:


78. ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோத மவிரோதம்
எனவெழு வகையினு மியலு மென்ப.

இந்த அவிரோதம் பேரா பசுபதிக்குப் பிடித்த சொல். 
 
செந்தில் வேலனுக்குத்
தொண்டா கியஎன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாய டாஅந்த கா!வந்து பார்சற்றென் கைக்கெட்டவே.
என்ற கந்தர் அலங்காரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒருகுழுவில் காட்டி, அவிரோதம் என்ற சொல்லைப் பற்றி எழுதியிருந்தார்.
 
அன்றுமுதல் எங்கே அவிரோதத்தைப் பார்த்தாலும் பசுபதி நினைவுக்கு வந்துவிடுகிறார்.  அவிரோதம் தண்டியலங்காரத்தில் மட்டுமில்லை; பிரம்ம சூத்திரத்திலும் வருகிறது.  பிரம்ம சூத்திரத்தின் இரண்டாவது பிரிவுக்கே அவிரோத என்று பெயர்.
 
ஞாபகம் வந்துடிச்சி..ஆஹஹாங் ஓடி வந்தேன்....:D

devoo

unread,
Jul 10, 2008, 12:35:09 PM7/10/08
to Santhavasantham


On Jul 9, 8:54 am, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/7/8 devoo <rde...@gmail.com>:
>
>
>
> > 'சிலேடை'யின் இலக்கணம் யாது?
>
> நானறிந்து தண்டியலங்காரத்துக்கு முந்தைய நூல்களில் இதற்காக இலக்கணம் இல்லை.
> தண்டியலங்காரத்தில் சொல்லப்படும் சூத்திரங்கள்:
>
> சிலேடையணி
>
> 76. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
> தெரிதர வருவது சிலேடை யாகும்.
>
> 77. அதுவே,
> செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.
>
> 78. ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
> நியம விலக்கு விரோத மவிரோதம்
> எனவெழு வகையினு மியலு மென்ப.
>
>
>
> > 'சிலேடை', 'இரட்டுற மொழிதல்' இரண்டும் ஒன்றா?
>
> இரண்டும் ஒன்றுதான்.  ஸ்லேஷை என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் சிலேடை.
> இரட்டுற மொழிதல் என்பது தமிழ்ப் பெயர்.
>
>
>
> > சிலேடையை மிகுதியாகக் கையாண்ட புலவர் யார்?
>
> வடமொழியில் மோதிரவிரலுக்கு அநாமிகா (பெயரில்லாதது) என்று பெயர்.
> காளிதாசனுக்குப் பிறகு கவிஞன் யார் என்று விரல்விட்டு எண்ணத் தொடங்கினால்,
> சுண்டுவிரல் பிரித்து, 'காளிதாசன்' என்று தொடங்கி, அடுத்தது அநாமிகா என்று
> முடித்தானம் ஒரு கவிஞன்.  காளிதாசனுக்குப் பிறகு எவனும் கவியே இல்லை என்ற
> பொருளில் ஒரு ஸ்லோகம் உண்டு.
>
> அந்த மாதிரி, தமிழில் சிலேடைக்கு ஒரேஒருவன்.  காள-*மேகம்*. After him, nobody
> else *may come*.
>
>
>
> > சங்க நூல்களில் சிலேடை உள்ளதா?
>
> ம்கூம்.  சிலேஷை என்ற பெயரிலிருந்து ஏதாவது க்ளூ கிடைக்கிறதோ?
> தண்டியலங்காரத்தில்தான் சிலேடைக்கு இலக்கணம் முதன்முதலாகக் காணப்படுகிறது
> என்பதும் இன்னொரு க்ளூ அல்லவா.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

ஹரி க்ருஷ்ணண் ஐயா,

உங்களிடம் தமிழ் கற்க வேண்டுமே ?
மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா ?
‘வலைப்பூ’ ஏதேனும் உண்டா ?

தேவ்







































































































Siva Siva

unread,
Jul 10, 2008, 1:22:10 PM7/10/08
to santhav...@googlegroups.com

இன்னொன்று!

2008-07-10
கொசு - குளிர்பானம் (carbonated soft drinks) - சிலேடை
-------------------------------------------------------------------------
காணுமிடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணு மகளிரு டன்மிக வேவருந்தும்
பாணிசைக்கும் பன்னோய் பரப்பும் கொசுபல்பேர்
பூணும் குளிர்பானம் போல்!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/7/5 Siva Siva <naya...@gmail.com>:

படிப்பவர்கள் வசதிக்காகப் பதம் பிரித்து:

கொசு - அரசன் - சிலேடை
-----------------------------------
இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.

அரசன்:
இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.

கொசு:
இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
ஈடு கொசுவென்(று) இயம்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

ananth

unread,
Jul 10, 2008, 3:05:55 PM7/10/08
to Santhavasantham
<> கொசுவும் கோதையரும் <>

கண்ணயரும் போதினிலே காதல் புரியவரும்
பண்ணிசையில் மேனி பரபரக்கும் - நண்ணுபுகை
வத்தி நடுவே செயலாற்றும் கோதைகொசு
ஒத்திருப்பள் என்றே உணர்.

(பரபரப்பு = சுறுசுறுப்பு, தினவு, விரைவு)

..அனந்த்
10-7-2008


On Jul 10, 1:22 pm, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> இன்னொன்று!
>
> 2008-07-10
> கொசு - குளிர்பானம் (carbonated soft drinks) - சிலேடை
> -------------------------------------------------------------------------
> காணுமிடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
> பேணு மகளிரு டன்மிக வேவருந்தும்
> பாணிசைக்கும் பன்னோய் பரப்பும் கொசுபல்பேர்
> பூணும் குளிர்பானம் போல்!
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2008/7/5 Siva Siva <nayanm...@gmail.com>:
>
>
>
>
>
> > படிப்பவர்கள் வசதிக்காகப் பதம் பிரித்து:
>
> > கொசு - அரசன் - சிலேடை
> > -----------------------------------
> > இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
> > பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> > தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> > ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> > அரசன்:
> > இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
> > பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
> > பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
> > ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> > கொசு:
> > இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
> > பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
> > பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
> > ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

ananth

unread,
Jul 10, 2008, 3:08:12 PM7/10/08
to Santhavasantham
3-ஆவது அடியில் மோனை கருதி 'மங்கைகொசு' என்று மாற்றிப்/க் ப/கடிக்கவும்
.அனந்த்
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

Siva Siva

unread,
Jul 10, 2008, 4:16:31 PM7/10/08
to santhav...@googlegroups.com
கொசுவென்றால் எல்லார்க்கும் அச்சமே :)

2008/7/10 ananth <gan...@gmail.com>:

Siva Siva

unread,
Jul 10, 2008, 4:18:59 PM7/10/08
to santhav...@googlegroups.com

2008-07-10
கொசு - பெண் - சிலேடை
-----------------------------------
தலையணை மந்திரம் தானோதும் அந்த
வலையில் மகிழ்ந்திருக்கும் போது - விலங்கே
எனினும் குடித்தனம் பண்பென் றிருக்கும்
இனியபெண்ணிற் கோர்கொசு ஈடு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/7/10 ananth <gan...@gmail.com>:

Siva Siva

unread,
Jul 11, 2008, 8:32:51 AM7/11/08
to santhav...@googlegroups.com

படிப்போர் வசதிக்காகப் பதம் பிரித்து:
2008-07-10

கொசு - குளிர்பானம் (carbonated soft drinks) - சிலேடை
-------------------------------------------------------------------------
காணுமிடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணு மகளிரு டன்மிக வேவருந்தும்
பாணிசைக்கும் பன்னோய் பரப்பும் கொசுபல்பேர்
பூணும் குளிர்பானம் போல்!

குளிர்பானம்:
காணும் இடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணும் மகளிருடன் மிகவே அருந்தும்,
பாண் இசைக்கும், பல் நோய் பரப்பும், கொசு பல் பேர்


பூணும் குளிர்பானம் போல்!

கொசு:
காணும் இடம் எல்லாம் களிப்பாய்க் குழாய்கொண்டு
பேணும், மகளிர் உடல் மிகவே வருந்தும்,
பாண் இசைக்கும், பல் நோய் பரப்பும், கொசு பல் பேர்


பூணும் குளிர்பானம் போல்

!
---

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/7/10 Siva Siva <naya...@gmail.com>:

Siva Siva

unread,
Jul 12, 2008, 12:45:48 PM7/12/08
to santhav...@googlegroups.com

இரண்டாம் அடியைச் சற்று மாற்றி:

2008-07-10

கொசு - பெண் - சிலேடை
-----------------------------------
தலையணை மந்திரம் தானோதும் அந்த

வலைகட்டி உள்ளார் அவரோர் - விலங்கே


எனினும் குடித்தனம் பண்பென் றிருக்கும்
இனியபெண்ணிற் கோர்கொசு ஈடு.

பெண்:
தலையணை மந்திரம்தான் ஓதும், அந்த
வலை கட்டி; உள்ளார், அவர் ஓர் விலங்கே
எனினும், குடித்தனம் பண்பு என்று இருக்கும்
இனிய பெண்ணிற்கு, ஓர் கொசு ஈடு.

கொசு:
தலையணை மந்திரம் தான் ஓதும்; அந்த
வலை கட்டி உள்ளார் அவர்; ஓர் விலங்கே
எனினும் குடித்தல் நம் பண்பு என்று இருக்கும்;
இனிய பெண்ணிற்கு ஓர் கொசு ஈடு.

தான் - தேற்றம்; / அது;
ஓதுதல் - இரகசியத்தில் போதித்தல் / பாடுதல் ;
அந்த வலை - அழகு என்ற வலை; / கொசுவலை;
உள்ளார் - நினைக்கமாட்டார்; / இருக்கிறார்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/7/10 Siva Siva <naya...@gmail.com>:

2008-07-10
கொசு - பெண் - சிலேடை
-----------------------------------
தலையணை மந்திரம் தானோதும் அந்த
வலையில் மகிழ்ந்திருக்கும் போது - விலங்கே
எனினும் குடித்தனம் பண்பென் றிருக்கும்
இனியபெண்ணிற் கோர்கொசு ஈடு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


--

http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Aug 21, 2008, 10:14:36 PM8/21/08
to santhav...@googlegroups.com

2008-08-20
செய்யுள் - மாடு
----------------------
அசையு மணியு மதுகாட்டும் ஏர்கொண்(டு)
அசையும் அடிநான்கும் ஆகும் - விசைகொண்டும்
செல்லுமாங் காங்கே திரிதலும் காணலால்
சொல்லிழைபா மாடு துணை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

ananth

unread,
Aug 22, 2008, 10:06:01 PM8/22/08
to Santhavasantham
<> பாவும் பாவையும் <>

அசையும் அழகுமலி சீருமுடன் சேர

இசையும் தொடைஎழிலும் ஏந்தி - நசையெழுப்ப

மேவும் அணியும்கொள் மெல்லியள்பா வாடையிலே

பாவாடை வீசுதய்யா பார்!


..அனந்த்
22-8-2008



On Aug 21, 10:14 pm, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2008-08-20
> செய்யுள் - மாடு
> ----------------------
> அசையு மணியு மதுகாட்டும் ஏர்கொண்(டு)
> அசையும் அடிநான்கும் ஆகும் - விசைகொண்டும்
> செல்லுமாங் காங்கே திரிதலும் காணலால்
> சொல்லிழைபா மாடு துணை.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
>
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars

agramamutha

unread,
Aug 22, 2008, 11:08:56 PM8/22/08
to Santhavasantham
இரட்டுர மொழிதல் வெண்பாவை எத்தனை அழகாகவும் பொருட்செறிவாகவும்
எழுதிவருகிறீர்கள்.! வாழ்த்துகள். எனக்குத் தெரிந்தவரை நானும் எழுத
முயன்றிருக்கிறேன். இதோ:-

யானையும், நெற்றாளும்!

கலத்திடை மேவுதலால்; கண்டவர் பற்றித்
தலைக்குமேல் தூக்கி அடித்தலால்; -நிலைத்தநற்
போரிடுதலால்; ஆள்சுமக்கும் போக்கதனால்; யானைக்கு
நேரென்பேன் நெற்றாளை நான்!

அகரம்.அமுதா

K.R. Kumar

unread,
Aug 23, 2008, 4:51:14 AM8/23/08
to santhav...@googlegroups.com
அன்புள்ள சகோதரி அமுதா,
 
சபாஷ்! தொடருங்கள்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை) 

2008/8/23 agramamutha <agrama...@gmail.com>

ananth

unread,
Aug 23, 2008, 10:10:34 AM8/23/08
to Santhavasantham
அழகான சிலேடை.

களத்திடை என்பது கலத்திடை என்று தட்டச்சாகியிருக்கிறது. (இதுபோலவே
இரட்டுர/இரட்டுற மொழிதலும்)
அடித்தலால்/நிலைத்த - தளை தட்டல்
போரிடுதலால் - கனிச்சீர் (போர்புகலால்?).
தொடக்கத்தில் களம் (போர்க்களம், நெற்களம்) என்பதில் (யானை தொடர்பான) போர்
குறிப்பிடப்படுவதால், மூன்றாம் அடியில் வேறு கருத்தைச் சொல்லலாம்;
காட்டாக,
"-வலியபல
பேர்மிதியால் ஆள்சுமக்கும் பெற்றியால் யானைக்கு" என்று சொல்லலாம்.

அனந்த்
> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

agramamutha

unread,
Aug 24, 2008, 1:18:25 AM8/24/08
to Santhavasantham
தவறுகளைச் சுட்டியமைக்கு மிக்க நன்றி உயர்திரு அனந்த் அவர்களே


உயர்திரு குமார் அவர்களுக்கும் நன்றிகள், நான் பெண்ணில்லை ஆண், இயற்பெயர்
சுதாகர், தோழன் என்றே அழைக்கலாம்,

அகரம் அமுதா
> > > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hidequoted text -

K.R. Kumar

unread,
Aug 24, 2008, 2:01:24 AM8/24/08
to santhav...@googlegroups.com
அன்புள்ள சுதாகர்,
 
தவறாக விளித்தமைக்கு மன்னிக்கவும்.
 
தவறுகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். மேலும் தொடர்ந்து வெண்பா புனையுங்கள். நாளடைவில் எல்லாம் தானாகவே சரியாகிவிடும். பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தில் ஞானம் உள்ளவர்கள், ராக ஆலாபனையின் போதே இது இன்ன ராகம் என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் மூளையைக் காட்டிலும் காதுதான் அந்தச் செயலைச் செய்கிறது. அனந்த் ஐயா இதில் கை தேர்ந்தவர். அவர் வெண்பா படிக்கும் போதே அதன் ஒலியைக் கேட்டே இலக்கணப் பிழையை கண்டு பிடித்து விடுவார். பிழை சொல்லவேண்டும் என்பதற்காக அல்ல. செய்வன திருந்தச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். 
மேலும் தொடர்ந்து ஆர்வத்தோடு வெண்பாக்கள் எழுதி வந்தால், ராகம் கண்டுபிடிப்பது போல தளை தட்டல், நயம் போன்றவற்றை ன்நீங்கள் உரக்கப் படிக்கும்போது நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.
 
விடாமல் தொடருங்கள்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)  

2008/8/24 agramamutha <agrama...@gmail.com>

agramamutha

unread,
Aug 24, 2008, 5:59:35 AM8/24/08
to Santhavasantham
தங்கள் அறிவுரைக்குச் செவி மடுக்கிறேன் அய்யா, ஈராண்டுகளுக்கு முன்
வெண்பா பயிலத் துவங்கியபோது எழுதிய வெண்பா அது. அப்பொழுது ஆர்வத்தில்
தளைகளைப் பார்க்காமல் செய்திருக்கிறேன். அத்தவறுடன் கூடிய வெண்பாவையே
கவனக் குறைவாக இங்குப் பதித்துவிட்டேன்.

On Aug 24, 2:01 pm, "K.R. Kumar" <krishra...@gmail.com> wrote:
> அன்புள்ள சுதாகர்,
>
> தவறாக விளித்தமைக்கு மன்னிக்கவும்.
>
> தவறுகளைக் கண்டு துவண்டு
> விடாதீர்கள். மேலும் தொடர்ந்து வெண்பா புனையுங்கள். நாளடைவில்
> எல்லாம் தானாகவே சரியாகிவிடும். பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தில் ஞானம்
> உள்ளவர்கள், ராக ஆலாபனையின் போதே இது இன்ன ராகம் என்று சொல்லிவிடுவார்கள்.
> அவர்கள் மூளையைக் காட்டிலும் காதுதான் அந்தச் செயலைச் செய்கிறது. அனந்த் ஐயா
> இதில் கை தேர்ந்தவர். அவர் வெண்பா படிக்கும் போதே அதன் ஒலியைக் கேட்டே
> இலக்கணப் பிழையை கண்டு பிடித்து விடுவார். பிழை சொல்லவேண்டும் என்பதற்காக
> அல்ல. செய்வன திருந்தச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
> மேலும் தொடர்ந்து ஆர்வத்தோடு வெண்பாக்கள்
> எழுதி வந்தால், ராகம் கண்டுபிடிப்பது போல தளை தட்டல், நயம் போன்றவற்றை ன்நீங்கள்
> உரக்கப் படிக்கும்போது நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.
>
> விடாமல் தொடருங்கள்.
>
> அன்புடன்,
> குமார்(சிங்கை)
>
> 2008/8/24 agramamutha <agramamuth...@gmail.com>
> > > > > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hidequotedtext -

Siva Siva

unread,
Sep 3, 2008, 4:14:32 PM9/3/08
to santhav...@googlegroups.com
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.

2008-09-03
பிள்ளையார் - சிவன் - சிலேடை
-------------------------------------------
என்னானை நல்வடிவத் தானை இனியமறை
சொன்னவனை மூத்தவனைத் தோத்திரிப்பார்க்(கு) - இன்னமுதைத்
தந்தஇறை யைக்கொம்பை ஓர்பால் உடையானை
வந்திமுக்கண் ணன்மைந்தன் என்று.

பிள்ளையார்:
என் ஆனை நல் வடிவத்தானை, இனிய மறை
சொன்னவனை, மூத்தவனைத், தோத்திரிப்பார்க்(கு) - இன் அமுதைத்,
தந்த இறையைக், கொம்பை ஓர்பால் உடையானை,
வந்தி முக்கண்ணன் மைந்தன் என்று.

சிவன்:
என்னானை, நல் வடிவத்தானை, இனிய மறை
சொல் நவனை, மூத்தவனைத், தோத்திரிப்பார்க்(கு) - இன் அமுதைத்
தந்த இறையைக், கொம்பை ஓர்பால் உடையானை,
வந்தி, "முக்கண்ணன், மைந்தன்" என்று.

Siva Siva

unread,
Sep 4, 2008, 7:27:34 PM9/4/08
to santhav...@googlegroups.com

2008-09-04
பிள்ளையார் - சிவன் - சிலேடை - 2
-------------------------------------------
இருநாலு கையன் பிறைஎயிறு தாங்கி
பெருமா உரியன் பெரிதும் - அருள்வான்
அறுகால் மகிழ்மலரால் அன்பாய்த்தாள் போற்ற
கறுத்தகண்டன் பிள்ளையார் காண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/9/3 Siva Siva <naya...@gmail.com>

ananth

unread,
Sep 10, 2008, 12:56:22 PM9/10/08
to Santhavasantham
இன்னொரு இழையில் (-பிட்டுக்கு மண் சுமப்பது) மாணவர்

பற்றி, சிவசிவா மணி தந்த கருத்தொன்றை வைத்து:


<> சிவன் - மாணவர் சிலேடை <>

பொதுவில் நடமிடுவார் போதெல்லாம் ஊர்திரிவார்

எதையும் இரந்துண்பார் எவ்விடத்தும் - குதுகலித்துப்

பெண்ணுக் கிடங்கொடுப்பார் பித்தாவார் தம்தலையில்

மண்ணும் சுமப்பார் மகிழ்ந்து!

(பொது = அம்பலம் (சிவன்); டிஸ்கோ, டூரிஸ்ட் பஸ் போன்ற பொதுவிடங்கள்
(மாணவர்)

..அனந்த்
10-9-2008

ananth

unread,
Sep 11, 2008, 9:14:32 AM9/11/08
to Santhavasantham
தளை தட்டலைச் சரிசெய்து:
<> சிவன் - மாணவர் சிலேடை <>

பொதுவில் நடமிடுவார் போதெலாம்ஊர் சுற்றி

எதையும் இரந்துண்பார் எங்கும் - குதுகலித்துப்

பெண்ணுக் கிடங்கொடுப்பார் பித்தாவார் தம்தலையில்

மண்ணும் சுமப்பார் மகிழ்ந்து!
..அனந்த்
11-9-2008
> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 11, 2008, 9:17:26 AM9/11/08
to Santhavasantham

மீண்டும் சரிசெய்து (!):

 

<> சிவன் - மாணவர் சிலேடை <>

பொதுவில் நடமிடுவார் போதும்ஊர் சுற்றி

எதையும் இரந்துண்பார் எங்கும் - குதுகலித்துப்

பெண்ணுக் கிடங்கொடுப்பார் பித்தாவார் தம்தலையில்

மண்ணும் சுமப்பார் மகிழ்ந்து!  

(போதும்= எப்பொழுதும்)

..அனந்த்
11-9-2008

 
2008/9/11 ananth <gan...@gmail.com>

Siva Siva

unread,
Sep 11, 2008, 9:49:45 AM9/11/08
to santhav...@googlegroups.com
// எதையும் இரந்துண்பார் //
 
இது மாணவர்க்குப் பொருந்துமா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2008/9/11 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 11, 2008, 5:23:46 PM9/11/08
to santhav...@googlegroups.com

அன்புள்ள மணி,

 

முதலிலிருந்தே இந்தச் சிலேடை சரியாக அமைந்தாற்போல எனக்கும் தோன்றவில்லை. ஆகவே, இதைக் கவனியாது ஒதுக்கிவிடலாம் (முடிந்தால் மட்டுறுத்துநர் இது பற்றிய இடுகைகளை நீக்கிவிடலாம்).

 

அனந்த்

11-9-2008

 

பி.கு. இந்தச் சிலேடையின் முதலடியில் இருந்த விளாங்காய்ச் சீரைச் சரிசெய்த சில நிமிடங்களுக்குப் பின், உ.வே.சா.வின் நூலில் புளித்த விளாங்காய் பற்றிய ஒரு நாலடியார் வெண்பா எதேச்சையாகத் தென்பட்டது விளாங்காய்ச் சீருடன! :

 

சிறுகாலை யேதமக்குச்  செல்வுழி வல்சி

இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்

பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்

பொன்னும் *புளிவிளாங்காய்* ஆம்

 

(வல்சி= ஆகாரம்; தோள்கோப்பு = தோளில் மாட்டிக்கொள்ளும் உணவு மூட்டை)

இப்பாடலின் பொருளை ஒரு கதை மூலமாக உவேசா தமது மாணவர்களுக்குச் சொன்ன அழகை 'என் சரித்திர'த்தில் காணலாம்.
அனந்த்
11-9-2008


2008/9/11 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Sep 11, 2008, 6:39:42 PM9/11/08
to santhav...@googlegroups.com
நல்ல பாடல்.
செல்வுழி, வல்சி, தோட்கோப்பு - 'புதிய' சொற்கள்.
 
இந்த நாலடியார் பாட்டில் பாட பேதம் / அச்சுப்பிழை உண்டோ?
 
கூகிள் வழியே கண்டது:
 
 
சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோட்புக் கொள்ளார் - இறுகிறுகிப்

பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம். - நாலடியார் 328

ananth

unread,
Sep 11, 2008, 8:20:59 PM9/11/08
to Santhavasantham
என்னிடமிருந்த நாலடியார் பதிப்பை முன்பே தேடினேன். கண்டுபிடிக்க
முடியவில்லை. 'மதுரைத் திட்ட'த்தில் கண்டதில் ( ) 'தோட்கோப்பு' என்றும்
'விளங்காய்' என்றும் உள்்ளது. கோப்பை விட, கோட்பு என்பது கொûவதைக்
குறிப்பதால் தோட்பு சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. பிறர் பார்த்துச்
சொல்லலாம். சாமிநாதய்யர் நூலில்்விளங்காய் விளாங்காய் ஆனதாகத் தெரிகிறது!

அனந்த்


On Sep 11, 6:39 pm, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> நல்ல பாடல்.
> செல்வுழி, வல்சி, தோட்கோப்பு - 'புதிய' சொற்கள்.
>
> இந்த நாலடியார் பாட்டில் பாட பேதம் / அச்சுப்பிழை உண்டோ?
>
> கூகிள் வழியே கண்டது:
>
> http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?Song_idField=10...
> > 2008/9/11 Siva Siva <nayanm...@gmail.com>
>
> >  // எதையும் இரந்துண்பார் //
>
> >> இது மாணவர்க்குப் பொருந்துமா?
> >> அன்புடன்,
> >> வி. சுப்பிரமணியன்
>
> >> 2008/9/11 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
> >>>  மீண்டும் சரிசெய்து (!):
>
> >>> <> சிவன் - மாணவர் சிலேடை <>
>
> >>> பொதுவில் நடமிடுவார் போதும்ஊர் சுற்றி
>
> >>> எதையும் இரந்துண்பார் எங்கும் - குதுகலித்துப்
>
> >>> பெண்ணுக் கிடங்கொடுப்பார் பித்தாவார் தம்தலையில்
>
> >>> மண்ணும் சுமப்பார் மகிழ்ந்து!
>
> >>> (போதும்= எப்பொழுதும்)
> >>>  ..அனந்த்
> >>> 11-9-2008
>
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

Siva Siva

unread,
Sep 11, 2008, 10:54:30 PM9/11/08
to santhav...@googlegroups.com
2009-09-11
சிவன் - மாணவர் - சிலேடை
--------------------------------------
பைந்தமிழ்ப் பாமாலை ஓதுவார் பாடுவார்
நைந்துபெருங் காதலுடன் நாரியரை - மைந்தர்
பயில்வார் பலபள்ளி தாள்தூக்கு கின்ற
கயிலாயர் மாணவர் காண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
 

--

Siva Siva

unread,
Oct 31, 2008, 11:03:18 AM10/31/08
to santhav...@googlegroups.com

2008-10-31
சிவன் - செங்கல் - சிலேடை
--------------------------------------
மண்ணாதி ஆவதால் தீக்கண் சுடுவதால்
பெண்ணாண் சிரம்தாங்கும் பெற்றியினால் - மண்ணோர்கள்
வீடுபெற வேண்டுவதால் செம்மை மிகுவதால்
காடுநடம் செய்சிவன்செங் கல்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/9/11 Siva Siva <naya...@gmail.com>
 

Siva Siva

unread,
Nov 7, 2008, 11:24:04 PM11/7/08
to santhav...@googlegroups.com
2008-11-07
சிவன் - கப்பல் - சிலேடை
------------------------------------
நீர்மேல் இருக்கும் நிரம்பப்பேர் ஏறும்ஓர்
ஊர்தி துறைகளில் உள்ளதே - சேர்விடம்
காணலாம் கண்டங்கண் ணீர்வழிஅன் பர்புகழ்தீத்
தூணரன் கப்பல் துணை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2008/10/31 Siva Siva <naya...@gmail.com>

2008-10-31
சிவன் - செங்கல் - சிலேடை
--------------------------------------
மண்ணாதி ஆவதால் தீக்கண் சுடுவதால்
பெண்ணாண் சிரம்தாங்கும் பெற்றியினால் - மண்ணோர்கள்
வீடுபெற வேண்டுவதால் செம்மை மிகுவதால்
காடுநடம் செய்சிவன்செங் கல்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

 

Siva Siva

unread,
Nov 10, 2008, 9:51:00 AM11/10/08
to santhav...@googlegroups.com

விளக்கத்துடன்:

2008-11-07

சிவன் - கப்பல் - சிலேடை
------------------------------------
நீர்மேல் இருக்கும் நிரம்பப்பேர் ஏறும்ஓர்
ஊர்தி துறைகளில் உள்ளதே - சேர்விடம்
காணலாம் கண்டங்கண் ணீர்வழிஅன் பர்புகழ்தீத்
தூணரன் கப்பல் துணை.

கப்பல்:

நீர்மேல் இருக்கும்;
நிரம்பப் பேர் ஏறும் ஓர் ஊர்தி;

துறைகளில் உள்ளதே சேர்விடம் - அது அடையுமிடம் துறைகளில் (ports) உள்ளது;
காணலாம் கண்டங்கள் நீர் வழி - நீரில் உள்ள வழி மூலம் (அதில் சென்று) பல கண்டங்களைக் காணலாம்.

சிவன்:
நீர் மேல் இருக்கும் - முடிமீது கங்கை உடையவர்;
நிரம்பப் பேர் - பல பெயர்கள் உடையவர்;
ஏறும் ஓர் ஊர்தி - அவருக்கு எருதும் ஒரு வாகனம்;
("
நீர்மேல் இருக்கும் நிரம்பப்; பேர் ஏறும் ஓர் ஊர்தி" என்றும் பிரிக்கலாம். "முடிமேல் மிகுந்த நீர் இருக்கும்; பெரிய எருதும் ஒரு வாகனம்;)
துறைகளில் உள்ள தே - (பராய்த்துறை, ஆவடுதுறை, பெருந்துறை, சோற்றுத்துறை, அன்பிலாலந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, எனப்) பல துறைகளிலும் உறைகிற தெய்வம்;
சேர் விடம் காணலாம் கண்டம் - சேர்கிற விடத்தைக் கழுத்தில் காணலாம்;
கண்ணீர் வழி அன்பர் புகழ் தீத் தூண் அரன் - (உள்ளம் உருகிக்) கண்ணீர் வழிகிற பக்தர்கள் புகழ்கிற, பெரிய நெருப்புத் தூணாக நின்ற சிவபெருமான்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/11/7 Siva Siva <naya...@gmail.com>
2008-11-07
சிவன் - கப்பல் - சிலேடை
------------------------------------
நீர்மேல் இருக்கும் நிரம்பப்பேர் ஏறும்ஓர்
ஊர்தி துறைகளில் உள்ளதே - சேர்விடம்
காணலாம் கண்டங்கண் ணீர்வழிஅன் பர்புகழ்தீத்
தூணரன் கப்பல் துணை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

unread,
Nov 10, 2008, 7:23:37 PM11/10/08
to santhav...@googlegroups.com
சிலேடை நல்ல பொருள் தாக்கத்துடன் அமைந்திருக்கிறது  Wஅல்ல சமத்காரம்

2008/11/10 Siva Siva <naya...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Nov 10, 2008, 7:24:28 PM11/10/08
to santhav...@googlegroups.com
சிலேடை நல்ல பொருள் தாக்கத்துடன் அமைந்திருக்கிறது  நல்ல சமத்காரம்


2008/11/11 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

K.R. Kumar

unread,
Nov 11, 2008, 12:44:50 AM11/11/08
to santhav...@googlegroups.com
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி!!
 
வாழ்த்துகள்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

Siva Siva

unread,
Nov 14, 2008, 12:14:54 AM11/14/08
to santhav...@googlegroups.com
கார்த்திகை பிறக்குமுன்னே மார்கழிக்கு வரவேற்பு !

2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2008/11/10 Siva Siva <naya...@gmail.com>

விளக்கத்துடன்:

2008-11-07

சிவன் - கப்பல் - சிலேடை
------------------------------------

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 18, 2008, 10:09:39 PM11/18/08
to santhav...@googlegroups.com

விளக்கத்துடன்

:

2008-11-13

சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.

கோலம்:
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும் - வெள்ளைப் பொடி எங்கும் திகழும் வடிவம் இருக்கும்;
மண்மிசை தோன்றும் - தரை மீது இருக்கும்;
நன் மாவு இழையும் பண்பு இருக்கும் - நல்ல மாவு இழையும் தன்மை இருக்கும் - (இழைகோலம்);
கோடா நிற்கும் - கோடாக இருக்கும்;
பல்லோர் நாளும் குனிந்து இடும் - தினமும் பலர் குனிந்து இடுகிற;

சிவன்:
வெண் பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும் - திருநீறு திருமேனியில் எங்கும் விளங்கும் வடிவம் இருக்கும்;
மண்மிசை தோன்றும் - பூமியில் காட்சிகொடுக்கும்;
நன் மா விழையும் பண்பு இருக்கும் - நல்ல எருதை (வாகனமாக) விரும்பும் குணம் இருக்கும்;
கோடா நிற்கும் - பாரபட்சமின்றி இருக்கும்;
பல்லோர் நாளும் குனிந்திடும் - பலரும் தினமும் வணங்கும்;
காடு ஆடு அரன் - சுடுகாட்டில் நடம் செய்யும் சிவபெருமான்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/11/14 Siva Siva <naya...@gmail.com>
கார்த்திகை பிறக்குமுன்னே மார்கழிக்கு வரவேற்பு !

2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Nov 18, 2008, 10:09:39 PM11/18/08
to santhav...@googlegroups.com

விளக்கத்துடன்

:

2008-11-13

சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.

கோலம்:
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும் - வெள்ளைப் பொடி எங்கும் திகழும் வடிவம் இருக்கும்;
மண்மிசை தோன்றும் - தரை மீது இருக்கும்;
நன் மாவு இழையும் பண்பு இருக்கும் - நல்ல மாவு இழையும் தன்மை இருக்கும் - (இழைகோலம்);
கோடா நிற்கும் - கோடாக இருக்கும்;
பல்லோர் நாளும் குனிந்து இடும் - தினமும் பலர் குனிந்து இடுகிற;

சிவன்:
வெண் பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும் - திருநீறு திருமேனியில் எங்கும் விளங்கும் வடிவம் இருக்கும்;
மண்மிசை தோன்றும் - பூமியில் காட்சிகொடுக்கும்;
நன் மா விழையும் பண்பு இருக்கும் - நல்ல எருதை (வாகனமாக) விரும்பும் குணம் இருக்கும்;
கோடா நிற்கும் - பாரபட்சமின்றி இருக்கும்;
பல்லோர் நாளும் குனிந்திடும் - பலரும் தினமும் வணங்கும்;

காடு ஆடு அரன் - சுடுகாட்டில் நடம் செய்யும் சிவபெருமான்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/11/14 Siva Siva <naya...@gmail.com>
கார்த்திகை பிறக்குமுன்னே மார்கழிக்கு வரவேற்பு !

2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை
--------------------------------------
வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்
மண்மிசை தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்
கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்
காடாட ரன்கோலம் காண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Dec 9, 2008, 11:59:32 PM12/9/08
to santhav...@googlegroups.com

2008-12-09
சிவன் - கயிறு - சிலேடை
----------------------------------
சென்னிசே ரப்புரியும் நாரியையும் நற்பொருள்
பன்னலம் ஈயும் பலபிணி - இன்னிலை
ஆக்கும் அரவமென்றும் தோன்றுமிருள் கண்டவிடம்
காக்கும் பெருமான் கயிறு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/11/18 Siva Siva <naya...@gmail.com>

விளக்கத்துடன்
:

2008-11-13
சிவன் - கோலம் - சிலேடை

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 1, 2009, 11:39:04 AM1/1/09
to santhav...@googlegroups.com

2008-12-09
சிவன் - கயிறு - சிலேடை
----------------------------------
சென்னிசே ரப்புரியும் நாரியையும் நற்பொருள்
பன்னலம் ஈயும் பலபிணி - இன்னிலை
ஆக்கும் அரவமென்றும் தோன்றுமிருள் கண்டவிடம்
காக்கும் பெருமான் கயிறு.

பதம் பிரித்து:
கயிறு:
சென்னி சேர் அப் புரியும் நார் இயையும் நற்பொருள்;
பல் நலம் ஈயும்; பல பிணி இன் நிலை ஆக்கும்;
அரவம் என்றும் தோன்றும் இருள் கண்ட இடம் :
காக்கும் பெருமான், கயிறு.

சிவன்:

சென்னி சேரப் புரியும் நாரியையும்; நற்பொருள்

பல் நலம் ஈயும்; பல பிணி இல் நிலை ஆக்கும்;
அரவம், என்றும் தோன்றும், இருள் கண்ட இடம்/விடம்;
காக்கும் பெருமான், கயிறு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/12/9 Siva Siva <naya...@gmail.com>

2008-12-09
சிவன் - கயிறு - சிலேடை
----------------------------------
சென்னிசே ரப்புரியும் நாரியையும் நற்பொருள்
பன்னலம் ஈயும் பலபிணி - இன்னிலை
ஆக்கும் அரவமென்றும் தோன்றுமிருள் கண்டவிடம்
காக்கும் பெருமான் கயிறு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Mar 3, 2009, 10:03:09 PM3/3/09
to santhav...@googlegroups.com

2009-03-03
சிவன் - காவலர் - சிலேடை
--------------------------------------
அரவமிக அல்லில் நடமாடி வீடு
புரத்துக்கோ லோச்சுவார் தீயார் - வரமருள்வார்
நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் காவலர்
நெற்றி விழிஈசர் நேர்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/1 Siva Siva <naya...@gmail.com>
2008-12-09
சிவன் - கயிறு - சிலேடை
----------------------------------
சென்னிசே ரப்புரியும் நாரியையும் நற்பொருள்
பன்னலம் ஈயும் பலபிணி - இன்னிலை
ஆக்கும் அரவமென்றும் தோன்றுமிருள் கண்டவிடம்
காக்கும் பெருமான் கயிறு.

பதம் பிரித்து:
கயிறு:
சென்னி சேர் அப் புரியும் நார் இயையும் நற்பொருள்;
பல் நலம் ஈயும்; பல பிணி இன் நிலை ஆக்கும்;
அரவம் என்றும் தோன்றும் இருள் கண்ட இடம் :
காக்கும் பெருமான், கயிறு.

சிவன்:
சென்னி சேரப் புரியும் நாரியையும்; நற்பொருள்
பல் நலம் ஈயும்; பல பிணி இல் நிலை ஆக்கும்;
அரவம், என்றும் தோன்றும், இருள் கண்ட இடம்/விடம்;
காக்கும் பெருமான், கயிறு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Mar 5, 2009, 12:20:17 PM3/5/09
to santhav...@googlegroups.com
பதம் பிரித்து:

2009-03-03
சிவன் - காவலர் - சிலேடை
--------------------------------------
அரவமிக அல்லில் நடமாடி வீடு
புரத்துக்கோ லோச்சுவார் தீயார் - வரமருள்வார்
நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் காவலர்
நெற்றி விழிஈசர் நேர்.

காவலர்:
அரவ[ம்] மிக அல்லில் நடமாடி,
வீடு புரத்துக், கோல் ஓச்சுவார்; தீயார் வர மருள்வார்;

நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் காவலர்
நெற்றிவிழி ஈசர் நேர்.

சிவன்:
அரவ[ம்] மிக அல்லில் நடம் ஆடி;
வீடு புரத்துக் கோலோச்சுவார்; தீயார்; வரம் அருள்வார்;

நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் காவலர்
நெற்றிவிழி ஈசர் நேர்.

அரவம் - பாம்பு; / ஓசை;
வீடு - வீடு பேறு; / இல்லம்;
புரத்தல் - அனுக்கிரகித்தல்.; / காத்தல்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/3 Siva Siva <naya...@gmail.com>

2009-03-03
சிவன் - காவலர் - சிலேடை
--------------------------------------
அரவமிக அல்லில் நடமாடி வீடு
புரத்துக்கோ லோச்சுவார் தீயார் - வரமருள்வார்
நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் காவலர்
நெற்றி விழிஈசர் நேர்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

nahupoliyan

unread,
Mar 6, 2009, 3:47:10 PM3/6/09
to சந்தவசந்தம்
சிலேட்டை எடுத்தெழுதி இட்டதை அழித்தாலே
சிலேடை என்பானும் உளனே!

Siva Siva

unread,
Mar 6, 2009, 9:13:37 PM3/6/09
to santhav...@googlegroups.com
ஆஹா!

2009/3/6 nahupoliyan <n.balasu...@gmail.com>

சிலேட்டை எடுத்தெழுதி இட்டதை அழித்தாலே
சிலேடை என்பானும் உளனே!


Siva Siva

unread,
Mar 6, 2009, 9:32:03 PM3/6/09
to santhav...@googlegroups.com

2009-03-06
சிவன் - கூடை - சிலேடை
------------------------------------
பண்டம்பெய் பாங்கிருக்கும் பாரித் திருக்கும்தீக்
கண்ணீறாம் பெற்றியும் காட்டும்பூ - வுண்ணிறைய
மாந்தருச்சி மேல்கொள் முடைதலையும் பெற்றவிடை
ஊர்ந்தசிவன் ஓர்கூடை ஒப்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/5 Siva Siva <naya...@gmail.com>


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 6, 2009, 9:34:50 PM3/6/09
to santhav...@googlegroups.com
ஆஹாஹா!

2009/3/7 nahupoliyan <n.balasu...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 6, 2009, 9:43:07 PM3/6/09
to Siva Siva, Santhavasantham

On Jul 5 2008, 11:03 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> படிப்பவர்கள் வசதிக்காகப் பதம் பிரித்து:
>
> கொசு - அரசன் - சிலேடை
> -----------------------------------
> இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
> பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> அரசன்:
> இரியு[ம்] மாற்றார்தம் இரத்தம் மிகவும்
> பிரிய, மரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
> பறந்துசென்று அங்கு அங்கு அடிக்கும் சூர மன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.
>
> கொசு:
> இரியும் ஆற்றார்தம் இரத்தம் மிகவும்
> பிரியம்; அரிப்பு ஆகும் அங்கே பின்னர்; - பரிவாரத்தோடு
> பறந்து சென்று அங்கம் கடிக்கும்; சூர மன்னர்க்(கு)
> ஈடு கொசுவென்(று) இயம்பு.


>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2008/7/5 kavimamani <ELAND...@gmail.com>:
>
>


உலங்கு என்றால் கொசுவுக்கு ஒரு பெயர்.
இலங்கையில் ஹெலிகாப்டரை உலங்கு வானூர்தி
என்கிறார்கள். உலகு/உலங்கு - அசைதல் என்ற
பொருள். அங்கங்கு போய் ஒரே இடத்தில்
நின்று பின் நகர்வது. உலவுதல் = உலகுதல் தொடர்புடைய
வினைச்சொற்கள். மற்ற கோள்களைப் போல் உலகும்
அண்டவெளியில் அசைவது. உலகு என்னும் சொல்லின் வேர்
இதுவாய் இருக்கலாம். விலகு/விலங்கு,
அழுகு/அழுங்கு, குணுகு/குணுங்கு, பகு/பங்கு, இசகு/இசங்கு,
நுணுகு/நுணுங்கு .... போல உலகு/உலங்கு.
உலங்கு - தன்வினை; உலக்கு - பிறவினை
(உலக்கை - மேலும் கீழும் அசைக்கப்படுவது/உலக்கப்படுவது).

உலங்கு வானூர்திக்கும், கொசு(உலங்கு)க்கும்
சிலேடை மரபுக்கவியில் தாருங்களேன்.

நா. கணேசன்

கொசுக்களில் ஆணும், பெண்ணும் காதற்கீதம்
ஒரே அதிர்வெண்ணில் தம் சிறகுகளால் எழுப்புகின்றன.
1200 Hz is divisible either by 400 Hz
or 300 Hz. Ie., 1200 is lowest common denominator
for 300 and 400.

http://news.bbc.co.uk/2/hi/science/nature/7814404.stm
"The amorous couple began to beat their wings together
at a matching frequency - 1,200 hertz.

This love song is a "harmonic", or multiple, of their
individual frequencies - 400 Hz for the female and
600 Hz for the male. "


>
>
>
> > அருமை
> > இலந்தை
> > On Jul 4, 5:13 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> > > முதல் அடியில் முதலிரு சீர்களைச் சற்று மாற்றி :
>
> > > இரியுமாற் றார்தம் இரத்தம் மிகவும்
> > > பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> > > தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> > > ஈடு கொசுவென்(று) இயம்பு.


>
> > > அன்புடன்,
> > > வி. சுப்பிரமணியன்
>

> > > 2008/7/3 Siva Siva <nayanm...@gmail.com>:
>
> > > > 2008-07-03
> > > > கொசு - அரசன் - சிலேடை
> > > > -----------------------------------
> > > > இரியு மாற்றார் இரத்தம் மிகவும்
> > > > பிரியமரிப் பாகுமங்கே பின்னர்; - பரிவாரத்
> > > > தோடு பறந்துசென்றங் கங்கடிக்கும் சூரமன்னர்க்(கு)
> > > > ஈடு கொசுவென்(று) இயம்பு.


>
> > > > அன்புடன்,
> > > > வி. சுப்பிரமணியன்
>

> > > --http://www.geocities.com/nayanmars


> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Mar 6, 2009, 10:58:26 PM3/6/09
to Santhavasantham, N. Ganesan

2009-03-06
உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) - கொசு - சிலேடை
--------------------------------------------------------------
வான்படையாய் வந்து வலிசேர்க்கும் எப்போதும்
தான்விரும்பும் தானம் தனிலிறங்கும் - கான்வழியே
காணாமல் போனாலும் தேடிவரும் காண்கொசு
சேணார் உலங்கூர்தி செப்பு.

பதம் பிரித்து:

வான் படையாய் வந்து வலி சேர்க்கும்; எப்போதும்
தான் விரும்பும் தானம்தனில் இறங்கும்; - கான் வழியே
காணாமல் போனாலும் தேடி வரும் காண்; கொசு
சேண் ஆர் உலங்(கு)ஊர்தி செப்பு.

வான் படை - ஆகாயப் படை; / பெரிய படை;
வலி - வலிமை; / நோவு;
தானம் - இடம்;
கான் - காடு;
காணாமல் போனாலும் - தொலைந்து போனாலும்; / பிறர் அறியாமல் சென்றாலும்;
சேண் ஆர் - உயர்ச்சி மிகுந்த;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/6 N. Ganesan <naa.g...@gmail.com>



--

K.R. Kumar

unread,
Mar 7, 2009, 6:24:29 AM3/7/09
to santhav...@googlegroups.com
இது!!!
 
அன்புடன்,
 
குமார்(சிங்கை)

2009/3/7 nahupoliyan <n.balasu...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 7, 2009, 6:31:51 AM3/7/09
to Siva Siva, Santhavasantham
அருமை!

நன்றி,
நா. கணேசன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 7, 2009, 8:25:38 AM3/7/09
to santhav...@googlegroups.com
உடனடிச் சிலேடை மிக அழகு!
அனந்த்

2009/3/7 Siva Siva <naya...@gmail.com>

K.R. Kumar

unread,
Mar 7, 2009, 8:38:15 AM3/7/09
to santhav...@googlegroups.com
ஆசுகவிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/3/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 9, 2009, 1:07:33 PM3/9/09
to santhav...@googlegroups.com
மிக அருமை!

2009/3/7 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Mar 10, 2009, 11:25:59 AM3/10/09
to santhav...@googlegroups.com

விளக்கத்தோடு:

2009-03-06

சிவன் - கூடை - சிலேடை
------------------------------------
பண்டம்பெய் பாங்கிருக்கும் பாரித் திருக்கும்தீக்
கண்ணீறாம் பெற்றியும் காட்டும்பூ - வுண்ணிறைய
மாந்தருச்சி மேல்கொள் முடைதலையும் பெற்றவிடை
ஊர்ந்தசிவன் ஓர்கூடை ஒப்பு.

கூடை:
பண்டம் பெய் பாங்(கு) இருக்கும் - பொருள்களை இடுமாறு இருக்கும்;
பாரித்(து) இருக்கும் - (பொருளை உள்ளே இட்டபின்) கனமாக இருக்கும்;
தீக்கண் நீ(று) ஆம் பெற்றியும் காட்டும் - தீயிடம் சாம்பல் ஆகும் தன்மையும் கொண்டிருக்கும்;
பூ உள் நிறைய, மாந்தர் உச்சிமேல் கொள் - (அதன்) உள்ளே பூக்களை நிரப்பி, மக்கள் தலைமேல் சுமக்கும்;
முடைதலையும் பெற்ற - (பிரம்பு முதலியவற்றைக்கொண்டு) பின்னுதலையும் பெறும்
ஓர் கூடை - ஒரு கூடை.

சிவன்:
பண்(டு) அம்(பு) எய் பாங்(கு) இருக்கும் - முன்னொரு சமயம், (முப்புரங்கள் மேல், பன்றி மேல்) அம்பு எய்த நன்மை இருக்கும்; ('பாங்கு - பக்கம்' எனக்கொண்டால் அர்த்தநாரிக்கோலத்தையும் சுட்டும்).
பாரித்(து) இருக்கும் - காத்து அருளும்;
தீக்கண், (று) ஆம் பெற்றியும் காட்டும் - நெருப்பை உமிழும் கண்ணும், அனைத்திற்கும் முடிவாக இருக்கும் தன்மையையும் காட்டும்;
பூவுள் நிறைய மாந்தர் உச்சிமேல் கொள் - பூமியில் பலரும் மிகவும் போற்றும்;
முடை தலையும் பெற்ற - (பிரமனது) புலால் நாறும் தலையைக் கையில் ஏந்தும்;
விடை ஊர்ந்த சிவன் - இடபத்தின் மேல் ஏறிவரும் சிவபெருமான்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/6 Siva Siva <naya...@gmail.com>

2009-03-06
சிவன் - கூடை - சிலேடை
------------------------------------
பண்டம்பெய் பாங்கிருக்கும் பாரித் திருக்கும்தீக்
கண்ணீறாம் பெற்றியும் காட்டும்பூ - வுண்ணிறைய
மாந்தருச்சி மேல்கொள் முடைதலையும் பெற்றவிடை
ஊர்ந்தசிவன் ஓர்கூடை ஒப்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Mar 13, 2009, 8:52:09 PM3/13/09
to santhav...@googlegroups.com

2009-03-13
சிவன் - நீள்தொடர் (mega serial) - சிலேடை
-------------------------------------------------------------
தொல்லை மிகுத்திருக்கும் மேலும் சலமிருக்கும்
எல்லை இலாதிருக்கும் ஏசுதலை - அல்லதொரு
பாத்திரம் இல்லாத பாங்கிருக்கும் ஈசன்தீ
நேத்திரன் நீள்தொடர் நேர்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/10 Siva Siva <naya...@gmail.com>

விளக்கத்தோடு:

2009-03-06

சிவன் - கூடை - சிலேடை
------------------------------------
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Mar 15, 2009, 3:10:31 PM3/15/09
to santhav...@googlegroups.com

விளக்கத்துடன்

:

2009-03-13

சிவன் - நீள்தொடர் (mega serial) - சிலேடை
-------------------------------------------------------------

தொல்லை மிகுந்திருக்கும் மேலும் சலமிருக்கும்


எல்லை இலாதிருக்கும் ஏசுதலை - அல்லதொரு
பாத்திரம் இல்லாத பாங்கிருக்கும் ஈசன்தீ
நேத்திரன் நீள்தொடர் நேர்.

சிவன் / நீள்தொடர்:
தொல்லை - பழமை; / துன்பம்;
சலம் - நீர் (கங்கை); / வஞ்சனை; பொய்ம்மை; கோபம்; தீயசெயல்;
எல்லை - அளவு; முடிவு;
ஏசுதலை - (ஏசு + தலை) இகழப்படும் மண்டையோடு; / (ஏசுதல்+) திட்டுவதை;
பாத்திரம் - கொள்கலம்; / நாடகத்தில் வேடம்பூண்டு நடிப்பவ-ன்-ள்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/13 Siva Siva <naya...@gmail.com>

2009-03-13
சிவன் - நீள்தொடர் (mega serial) - சிலேடை
-------------------------------------------------------------
தொல்லை மிகுத்திருக்கும் மேலும் சலமிருக்கும்
எல்லை இலாதிருக்கும் ஏசுதலை - அல்லதொரு
பாத்திரம் இல்லாத பாங்கிருக்கும் ஈசன்தீ
நேத்திரன் நீள்தொடர் நேர்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

unread,
Mar 15, 2009, 4:58:16 PM3/15/09
to santhav...@googlegroups.com
சிலேடை சிறப்ப்பகவும் தெளிவாகவும் அமைந்திருக்கிறது
 
இலந்தை
09/3/5 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Apr 3, 2009, 11:58:11 AM4/3/09
to santhav...@googlegroups.com

2009-04-03 (இராமநவமியை ஒட்டி)
சிவன் - இராமன் - சிலேடை
-------------------------------------
கோதண்ட பாணிதந்தை சொற்கடந்தா னல்லனே
மாதரையாள் வான்புகழ் மன்னியவன் - வேதனை
தீர இராவணனை அன்றடர்த்தான் சேவின்மேல்
ஊரரன் தாசரதி ஒப்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்




2009/3/15 Siva Siva <naya...@gmail.com>
விளக்கத்துடன்
:

2009-03-13
சிவன் - நீள்தொடர் (mega serial) - சிலேடை
-------------------------------------------------------------
தொல்லை மிகுந்திருக்கும் மேலும் சலமிருக்கும்

எல்லை இலாதிருக்கும் ஏசுதலை - அல்லதொரு
பாத்திரம் இல்லாத பாங்கிருக்கும் ஈசன்தீ
நேத்திரன் நீள்தொடர் நேர்.

சிவன் / நீள்தொடர்:
தொல்லை - பழமை; / துன்பம்;
சலம் - நீர் (கங்கை); / வஞ்சனை; பொய்ம்மை; கோபம்; தீயசெயல்;
எல்லை - அளவு; முடிவு;
ஏசுதலை - (ஏசு + தலை) இகழப்படும் மண்டையோடு; / (ஏசுதல்+) திட்டுவதை;
பாத்திரம் - கொள்கலம்; / நாடகத்தில் வேடம்பூண்டு நடிப்பவ-ன்-ள்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Apr 4, 2009, 11:28:25 PM4/4/09
to santhav...@googlegroups.com

பதம் பிரித்து

:

2009-04-03 (
இராமநவமியை ஒட்டி)

சிவன் - இராமன் - சிலேடை
-------------------------------------
கோதண்ட பாணிதந்தை சொற்கடந்தா னல்லனே
மாதரையாள் வான்புகழ் மன்னியவன் - வேதனை
தீர இராவணனை அன்றடர்த்தான் சேவின்மேல்
ஊரரன் தாசரதி ஒப்பு.

இராமன்:
கோதண்டபாணி; தந்தை சொல் கடந்தான் அல்லனே;
மா தரை ஆள்வான்; புகழ் மன்னியவன்; வேதனை
தீர இராவணனை அன்று அடர்த்தான்;
தாசரதி;

சிவன்:
கோ; தண்டபாணி தந்தை; சொல் கடந்தான்; நல்லனே;
மாதரை ஆள், வான் புகழ் மன்னியவன்; வேதன்; ;
தீர இராவணனை அன்று அடர்த்தான்; சேவின்மேல்
ஊர் அரன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/3 Siva Siva <naya...@gmail.com>

2009-04-03 (இராமநவமியை ஒட்டி)
சிவன் - இராமன் - சிலேடை
-------------------------------------
கோதண்ட பாணிதந்தை சொற்கடந்தா னல்லனே
மாதரையாள் வான்புகழ் மன்னியவன் - வேதனை
தீர இராவணனை அன்றடர்த்தான் சேவின்மேல்
ஊரரன் தாசரதி ஒப்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


SUBBAIER RAMASAMI

unread,
Apr 5, 2009, 7:27:17 PM4/5/09
to சந்தவசந்தம்
இரண்டு சிலேடைகளும் ஏற்புடைத்தே அங்கே
திரண்ட கருத்து செழிப்பு.
 
இலந்தை

 

Siva Siva

unread,
Apr 10, 2009, 10:49:36 AM4/10/09
to santhav...@googlegroups.com

2009-04-10
சிவன் - காப்பி - சிலேடை
------------------------------------
பொடியாக மேல்நீர் பொழியும் கசிந்தே
அடிசேர்ந் தகமணக்கும் அன்பர் - குடிக்கும்
பொருளாகும் வாய்மணக்கப் போற்றிப் புகழ்வார்
எருதேறி காப்பி இணை.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/4 Siva Siva <naya...@gmail.com>
பதம் பிரித்து:

2009-04-03 (
இராமநவமியை ஒட்டி)
சிவன் - இராமன் - சிலேடை
-------------------------------------
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Apr 12, 2009, 9:36:39 PM4/12/09
to santhav...@googlegroups.com

விளக்கத்தோடு:

காப்பி:
பொடி ஆக, மேல் நீர் பொழியும் கசிந்தே அடி சேர்ந்(து) அக[ம்] மணக்கும் - பொடி செய்யும்பொழுதும், அதன் மேல் ஊற்றும் வெந்நீர் வடிந்து கீழே பாத்திரத்தில் சேரும்பொழுதும், வீடே கமகமக்கும்;
அன்பர் குடிக்கும் பொருள் ஆகும் - காப்பிப் பிரியர்கள் குடிக்கிற பொருளாகும்;
வாய் மணக்கப், போற்றிப் புகழ்வார் - (அவர்கள் அதைக் குடித்துத் தங்கள்) வாய் மணம் பெற, அதைச் சிலாகித்துப் பேசுவார்கள்;

சிவன்:
பொடி ஆக[ம்] - திருமேனியில் திருநீறு;
மேல் நீர் பொழியும் - முடிமேல் கங்கை பாயும்;
கசிந்தே அடி சேர்ந்(து) அக[ம்] மணக்கும் அன்பர் குடிக்கும் பொருள் ஆகும் - நெகிழ்ந்து திருவடியை அடைந்து மணக்கின்ற உள்ளத்தை உடைய பக்தர்கள் குடும்பத்திற்கும் நன்மை உண்டாகும்; (அன்பர்கள் அருந்தும் இன்பத் தேன் ஆவான் என்றும் கொள்ளலாம்);
வாய் மணக்கப் போற்றிப் புகழ்வார் - (பக்தர்கள் தங்கள்) வாய் மணக்க ஈசன் புகழைப் பாடுவார்கள்/பேசுவார்கள்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/10 Siva Siva <naya...@gmail.com>

2009-04-10
சிவன் - காப்பி - சிலேடை
------------------------------------
பொடியாக மேல்நீர் பொழியும் கசிந்தே
அடிசேர்ந் தகமணக்கும் அன்பர் - குடிக்கும்
பொருளாகும் வாய்மணக்கப் போற்றிப் புகழ்வார்
எருதேறி காப்பி இணை.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
May 20, 2009, 8:57:21 PM5/20/09
to santhav...@googlegroups.com

2009-05-19
சிவன் - கரும்பு - சிலேடை
------------------------------------
பல்லோர்கை யேந்திப் பரவசம் கொள்ளஅங்கே
மெல்ல விளையும் மிகஇனிமை - நல்லஒரு
தோகையுண்(டு) உச்சியில் பாகங் களிக்கின்ற
ஏகன் கரும்பென்(று) இயம்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/10 Siva Siva <naya...@gmail.com>

2009-04-10
சிவன் - காப்பி - சிலேடை
------------------------------------

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
May 24, 2009, 11:44:15 AM5/24/09
to santhav...@googlegroups.com

விளக்கத்தோடு

:

2009-05-19

சிவன் - கரும்பு - சிலேடை
------------------------------------
பல்லோர்கை யேந்திப் பரவசம் கொள்ளஅங்கே
மெல்ல விளையும் மிகஇனிமை - நல்லஒரு
தோகையுண்(டு) உச்சியில் பாகங் களிக்கின்ற
ஏகன் கரும்பென்(று) இயம்பு.

பல்லோர் - 1) பல் உடையவர்கள்; 2) பலர்;
கையேந்தி - 1) கையில் ஏந்தி; 2) கையை ஏந்தி;
மெல்ல - 1) கடித்து மெல்லும்பொழுது; 2) மெதுவாக;
இனிமை - 1) தித்திப்பு; 2) இன்பம்;
தோகை - 1) நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள் (Sheath, as of sugarcane); 2) பெண்;
உச்சி - 1) மேல் பகுதி; 2) தலை;
பாகங்களிக்கின்ற - 1) பாகு அங்கு அளிக்கின்ற; 2) பாகம் களிக்கின்ற;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/5/20 Siva Siva <naya...@gmail.com>

2009-05-19
சிவன் - கரும்பு - சிலேடை
------------------------------------
பல்லோர்கை யேந்திப் பரவசம் கொள்ளஅங்கே
மெல்ல விளையும் மிகஇனிமை - நல்லஒரு
தோகையுண்(டு) உச்சியில் பாகங் களிக்கின்ற
ஏகன் கரும்பென்(று) இயம்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

unread,
May 26, 2009, 8:17:22 AM5/26/09
to santhav...@googlegroups.com
kudikkum poruLaakum-  A good explanation

Siva Siva

unread,
Jul 3, 2009, 8:41:44 PM7/3/09
to santhav...@googlegroups.com

2009-07-03
சிவன் - தேனீ - சிலேடை
------------------------------------
மலரகத்துத் தங்கி மகிழும்தே னாடி
நலம்செய்யு மாறடிகள் காட்டும் - வலங்கொண்டோர்
கூடடையா வண்ணம் கொடுக்கு மிருக்குமறை
பாடரன் தேனீயென் பார்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/5/24 Siva Siva <naya...@gmail.com>
விளக்கத்தோடு:

2009-05-19
சிவன் - கரும்பு - சிலேடை
------------------------------------
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 3, 2009, 9:32:14 PM7/3/09
to santhav...@googlegroups.com

அழகு, அருமை; மிகவும் இரசித்தேன்.

அனந்த்

2009/7/3 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jul 6, 2009, 9:52:49 AM7/6/09
to santhav...@googlegroups.com

விளக்கத்தோடு

:

2009-07-03

சிவன் - தேனீ - சிலேடை
------------------------------------
மலரகத்துத் தங்கி மகிழும்தே னாடி
நலம்செய்யு மாறடிகள் காட்டும் - வலங்கொண்டோர்
கூடடையா வண்ணம் கொடுக்கு மிருக்குமறை
பாடரன் தேனீயென் பார்.

தேனீ:
மலரகத்துத் தங்கி மகிழும் தேன் நாடி - மதுவை விரும்பி மலர்களுள் சென்றிருந்து களிக்கும்;
நலம் செய்யும் - (மகரந்தச் சேர்க்கைக்கு உதவி) நன்மை செய்யும்;
ஆறு அடிகள் காட்டும் - ஆறு கால்கள் இருக்கும்;
வலங்கொண்டோர் கூடு அடையா வண்ணம் கொடுக்கும் இருக்கும் - வலியவர்கள் (தன்) கூட்டை நெருங்காதபடித் தாக்கக் கொடுக்கும் இருக்கும்;
அறை பாடு தேனீ - ரீங்காரம் செய்யும் தேனீ.

சிவன்:
மலர்அகத்துத் தங்கி மகிழும் தேன் ஆடி - (அடியவர்களின்) மலர்ந்த மனத்துள் (அகத்தாமரையில்) உறைந்து மகிழ்பவன்; தேன் அபிஷேகம் உடையவன்;
நலம் செய்யும் மாறு [/செய்யுமாறு] அடிகள் காட்டும் - நன்மை செய்பவனாக, அர்த்தநாரீஸ்வரனாக (ஆண் பெண் என) வேறுபட்ட பாதங்களை உடையவன்; [/திருவடிகளைக் காட்டி நன்மை செய்பவன்];
வலங்கொண்டோர் கூடு அடையா வண்ணம் கொடுக்கும் - (தன்னைப்) பிரதட்சிணம் செய்யும் அடியவர்கள் மீண்டும் ஓர் உடலை அடையாமல் (பிறப்பை அறுத்து) அருள்செய்பவன்;
இருக்கு மறை பாடு அரன் - ரிக்வேதம் போற்றும் சிவன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/3 Siva Siva <naya...@gmail.com>

2009-07-03
சிவன் - தேனீ - சிலேடை
------------------------------------
மலரகத்துத் தங்கி மகிழும்தே னாடி
நலம்செய்யு மாறடிகள் காட்டும் - வலங்கொண்டோர்
கூடடையா வண்ணம் கொடுக்கு மிருக்குமறை
பாடரன் தேனீயென் பார்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 10, 2009, 11:54:59 AM7/10/09
to santhav...@googlegroups.com
வேறொரு இழையில் இன்று இட்டது. தொடர்ச்சிக்காக இவ்விழையிலும் இடுகிறேன்.

2009-07-10
சிவன் - பழையது - சிலேடை
------------------------------------
நீர்மேல் பொருந்த இரவெல்லாம் நின்றாடும்
பார்மகிழு மோர்அன்னம் நல்குமிகப் - பேருண்டு
வாழ்த்துகிற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்
ஏத்தரன் இப்பழைய தொப்பு.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/6 Siva Siva <naya...@gmail.com>
விளக்கத்தோடு:

2009-07-03
சிவன் - தேனீ - சிலேடை
------------------------------------
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 11, 2009, 12:41:27 AM7/11/09
to santhav...@googlegroups.com
வேறொரு இழையில் இன்று இட்டது. தொடர்ச்சிக்காக இவ்விழையிலும் இடுகிறேன்.

2009-07-10
அரி - பழையது - சிலேடை
------------------------------------
நீரில் துயில்கொள்ளும் காலை நினைப்பரன்பர்
பேரில் பெரும்தொன்மை கொண்டிருக்கும் - பார்பிசைந்(து)
உண்ணலுண்(டு) உள்ளியோர் பக்கமிருக் கும்காக்கும்
கண்ணன் பழையது காண்.



2009/7/10 Siva Siva <naya...@gmail.com>
வேறொரு இழையில் இன்று இட்டது. தொடர்ச்சிக்காக இவ்விழையிலும் இடுகிறேன்.

2009-07-10
சிவன் - பழையது - சிலேடை
------------------------------------

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 13, 2009, 9:13:53 AM7/13/09
to santhav...@googlegroups.com


2009/7/10 Siva Siva <naya...@gmail.com>
வேறொரு இழையில் இன்று இட்டது. தொடர்ச்சிக்காக இவ்விழையிலும் இடுகிறேன்.

2009-07-10
சிவன் - பழையது - சிலேடை
------------------------------------
நீர்மேல் பொருந்த இரவெல்லாம் நின்றாடும்
பார்மகிழு மோர்அன்னம் நல்குமிகப் - பேருண்டு
வாழ்த்துகிற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்
ஏத்தரன் இப்பழைய தொப்பு.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


விளக்கக்குறிப்புகளோடு:

2009-07-10

சிவன் - பழையது - சிலேடை
------------------------------------
நீர்மேல் பொருந்த இரவெல்லாம் நின்றாடும்
பார்மகிழு மோர்அன்னம் நல்குமிகப் - பேருண்டு
வாழ்த்துகிற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்
ஏத்தரன் இப்பழைய தொப்பு.

நின்று ஆடும் - 1) தங்கியிருந்து குளிக்கும்; 2) காலில் நின்று நாட்டியம் செய்தல்;
பார்மகிழுமோர் - 1) பார் மகிழு[ம்] மோர்; 2) பார் மகிழும் ஓர்;
ஓர் - 1) ஒரு; 2) ஒப்பற்ற;
அன்னம் - 1) சாதம்/சோறு; 2) வீட்டின்பம்.
பேர் - 1) மனிதர்; 2) பெயர்; நாமம்;
உண்டு - 1) சாப்பிட்டு; 2) உள்ளது;
மாவடு - 1) மாம்பிஞ்சு; 2) மா வடு - சிறந்த பிரமச்சாரி;
நற்றுணையாம் - 1) நற்றுணை ஆம்; 2) நற்றுணை, யாம்;
(
அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" - பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம்);

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 19, 2009, 10:37:45 AM7/19/09
to santhav...@googlegroups.com

சென்னை ஸ்பெஷல்!

2009-07-19
சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை
--------------------------------------------------------------
தண்ணீரைத் தாங்கிவரும் காணத் தவமிருப்போர்
உண்ணீர் எனவாகும் உண்மைதான் - பெண்ணாணாய்ச்
சேர்ந்துநிற்கக் கண்டதும் என்னண்டா என்றுரைக்கும்
நீர்வண்டி முக்கண்ணன் நேர்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/13 Siva Siva <naya...@gmail.com>

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 19, 2009, 8:57:41 PM7/19/09
to santhav...@googlegroups.com

:-)) ஏ ஒன்!

அனந்த்
2009/7/19 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jul 21, 2009, 9:35:45 PM7/21/09
to santhav...@googlegroups.com

விளக்கத்தோடு

:

2009-07-19

சென்னை ஸ்பெஷல்!

சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை
--------------------------------------------------------------
தண்ணீரைத் தாங்கிவரும் காணத் தவமிருப்போர்
உண்ணீர் எனவாகும் உண்மைதான் - பெண்ணாணாய்ச்
சேர்ந்துநிற்கக் கண்டதும் என்னண்டா என்றுரைக்கும்
நீர்வண்டி முக்கண்ணன் நேர்.

உண்ணீர் - 1) உண் நீர்; 2) உள் நீர்;
உள் - மனம்;
தான் - 1) தேற்றச் சொல்; 2) படர்க்கை ஒருமைப்பெயர் (He, she or it) - இங்கே, அவன்;
உண்மைதான் - 1) மெய்யே; 2) மெய்ப்பொருள் அவன்;
அண்டா - 1) ஒரு பெரிய பாத்திரம்; (இங்கே ஆகுபெயராய் இனப்பொதுமையால் குடம், தோண்டி, முதலியவற்றையும் குறித்தது); 2) அண்டனே; (அண்டன் - கடவுள் (God, as Lord of the universe) );

(
திருவாசகம் - சிவபுராணம் - "நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே" - என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிராய் நின்றவனே!)

நீர் வண்டி (தண்ணீர் லாரி):
தண்ணீரைத் தாங்கி வரும் - காணத் தவம் இருப்போர் உண் நீர் என ஆகும் உண்மைதான் -
பெண் ஆணாய்ச் சேர்ந்து, நிற்கக் கண்டதும் "என் அண்டா" என்(று) உரைக்கும் - நீர்வண்டி.

சிவன்:
தண்ணீரைத் தாங்கி வரும் - காணத் தவம் இருப்போர் உள் நீர் என ஆகும் - உண்மை தான் பெண் ஆணாய்ச் சேர்ந்து நிற்கக் கண்டதும், "என் அண்டா" என்(று) உரைக்கும் - முக்கண்ணன்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/19 Siva Siva <naya...@gmail.com>

சென்னை ஸ்பெஷல்!

2009-07-19
சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை
--------------------------------------------------------------

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 23, 2009, 10:17:37 PM7/23/09
to santhav...@googlegroups.com

Double Feature !!

2009-05-19
சிவன் - கடல் - சிலேடை
------------------------------------
அலைவீசும் மேலே அடியார் அறிவார்
உலகுசுற்றும் உண்ணீலம் தோன்றும் - நிலைபெறும்
ஆறெல்லாம் சென்றடையும் நன்மை அளிக்குமே(று)
ஏறெம்மான் ஆழி இணை.

===============


சூரியகிரகண ஸ்பெஷல்!
2009-07-23
சிவன் - சூரியகிரகணம் - சிலேடை
---------------------------------------------
ஒளிஎங்கும் வீச இருள்கண்டத் தோடும்
களிபொங்க அன்பர்கள் காண்பர் - ஒளிநிலா
நேர்படும்க ணங்கள் விளக்கேந்தும் நீர்ச்சடையன்
நேர்சூ ரியகிரக ணம்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/21 Siva Siva <naya...@gmail.com>
விளக்கத்தோடு:

2009-07-19
சென்னை ஸ்பெஷல்!
சிவன் - நீர்வண்டி (தண்ணீர் லாரி) - சிலேடை
--------------------------------------------------------------
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 27, 2009, 6:00:34 PM7/27/09
to santhav...@googlegroups.com

விளக்கத்தோடு

:

2009-05-19

சிவன் - கடல் - சிலேடை
------------------------------------
அலைவீசும் மேலே அடியார் அறிவார்
உலகுசுற்றும் உண்ணீலம் தோன்றும் - நிலைபெறும்
ஆறெல்லாம் சென்றடையும் நன்மை அளிக்குமே(று)
ஏறெம்மான் ஆழி இணை.

நீலம் - 1) நீலநிறம்; 2) விஷம்;
உண்ணீலம் - 1) உள் நீலம்; 2) உண் நீலம்;
நிலைபெறுதல் - 1) தன்மையைப் பெறுதல்; 2) துன்பமற்ற நிலையை அடைதல்;
ஆறு - 1) நதி; 2) மார்க்கம்; வழி; சமயம் (Religion);

கடல்:
அலை வீசும் மேலே - அதன் மேல் அலை மோதும்;
அடி யார் அறிவார் - (மிக ஆழமாக இருப்பதால்) அதன் கீழ்ப்பாகத்தை யாரும் அறியமாட்டார்கள்;
உலகு சுற்றும் - உலகைச் சுற்றி இருக்கும்;
உள் நீலம் தோன்றும் நிலை பெறும் - உள்ளே நீலமாகத் தென்படும் தன்மையைக் கொண்டிருக்கும்;
ஆறு எல்லாம் சென்று அடையும் - நதிகள் எல்லாம் சென்று சேரும்;
நன்மை அளிக்கும் - உயிர்கள் வாழ இன்றியமையாதது;
ஆழி - கடல்;

சிவன்:
அலை வீசும் மேலே - திருமுடிமேல் (கங்கை நதி) அலை வீசும்;
அடியார் அறிவார் - அடியார்கள் அறிவார்கள்; / அடியார்களை அவர் அறிவார்;
உலகு சுற்றும் - மக்கள் வலம்வருவார்கள்;
உண் நீலம் தோன்றும் - உண்ட விஷம் (திருக்கழுத்தில்) காணப்படும்;
நிலைபெறும் ஆறு எல்லாம் சென்று அடையும் - (பக்தர்கள்) நற்கதி அடையும் சமயங்களில் எல்லாம் சென்று சரண் புகும்;
நன்மை அளிக்கும் - நலம் செய்யும்;
ஏறு ஏறு எம்மான் - காளையின்மேல் ஏறி வரும் எம் பெருமான் - சிவன்;

(
அலை வீசும் மேலே அடி யார் அறிவார் - 'மேலே' என்பதில் '' என்பதை அசையாகக் கொண்டு, "(கங்கை நதி) அலை வீசும் உச்சியையும் திருவடியையும் யார் அறிவார்" என்றும் பொருள்கொள்ளலாம்.

உண் நீலம் தோன்றும் நிலைபெறும் ஆறு எல்லாம் சென்று அடையும் நன்மை அளிக்கும் - இதை, "உண்ட விஷம் (கழுத்தில்) தோன்றும்; அங்கு நிலையாக இருக்கும்; (அன்பர்கள் தம்) ஆறு உட்பகைகளும் போய்ப் பெறும் நன்மையைக் கொடுக்கும்" என்றும் பொருள்கொள்ளலாம்.

ஆறு சிறுமைக் குணங்கள் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்; (= ஆசை, கோபம், miserliness, infatuation, செருக்கு (arrogance), பொறாமை (Envy) );
)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/23 Siva Siva <naya...@gmail.com>

Double Feature !!


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 27, 2009, 6:06:11 PM7/27/09
to santhav...@googlegroups.com

விளக்கத்தோடு :

சூரியகிரகண ஸ்பெஷல்!
2009-07-23
சிவன் - சூரியகிரகணம் - சிலேடை
---------------------------------------------
ஒளிஎங்கும் வீச இருள்கண்டத் தோடும்
களிபொங்க அன்பர்கள் காண்பர் - ஒளிநிலா
நேர்படும்க ணங்கள் விளக்கேந்தும் நீர்ச்சடையன்
நேர்சூ ரியகிரக ணம்.

கண்டம் - 1) பெரும் நிலப்பரப்பு; 2) கழுத்து;
ஓடுதல் - 1) விரைந்து செல்லுதல்; 2) பரத்தல்;
காணுதல் - 1) பார்த்தல்; 2) ஆராய்தல்; வணங்குதல்;
ஒளிநிலா - 1) வினைத்தொகை - ஒளிக்கும் நிலா; 2) ஒளிவீசும் நிலா; நிலாஒளி;
நேர்படுதல் - 1) சந்தித்தல் (To meet; to be in conjunction with, as planets); எதிர்ப்படுதல் (To come in front); சம்பவித்தல்; 2) காணப்படுதல் (To appear);
கணங்கள் - 1) காலநுட்பம் - க்ஷணங்கள்; 2) பூதகணங்கள்;

(
அப்பர் தேவாரம் - 4.22.6 -
"
ஓருடம் பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னி" - ஒரே உடம்பில் தாமும் பார்வதியுமாக இருவராகி, ஒளிவீசும் பிறையின் ஒளி பரவிய சென்னியராய்..);

சூரிய கிரகணம்:
ஒளி எங்கும் வீச, இருள் கண்டத்(து) ஓடும் - (பகல் ஆனபடியால்) எங்கும் வெயில் அடிக்க, கண்டத்தில் (சில இடங்களில் மட்டும்) இருள் விரைந்து செல்லும்;
களி பொங்க அன்பர்கள் காண்பர் - மகிழ்ச்சியோடு மக்கள் இதைப் பார்ப்பார்கள்;
ஒளிநிலா நேர்படும் கணங்கள் விளக்(கு) ஏந்தும் - (சூரியனை) மறைக்கும் சந்திரன் சம்பவிக்கும் அந்தச் சிறிது நேரத்தில் (எங்கும் இருள் ஆகிவிட்டதால்) விளக்கை ஏந்துவார்கள்;

சூரிய கிரகணம்.

சிவன்:
ஒளி எங்கும் வீச இருள் கண்டத்(து) ஓடும் - சிவந்த மேனியும் திருநீறும் ஒளி வீசக், கருமை கழுத்தில் பரவி இருக்கும்;
களி பொங்க அன்பர்கள் காண்பர் - இன்பம் பொங்கப் பக்தர்கள் தியானிப்பார்கள் / தொழுவார்கள்;
ஒளிநிலா நேர்படும் - (முடிமேல்) சந்திரனின் ஒளியும் காணப்படும்;
கணங்கள் விளக்(கு) ஏந்தும் - (இருளில் ஆடும்போது) பூதகணங்கள் விளக்கு ஏந்தி இருப்பன.
நீர்ச்சடையன் - கங்கையைச் சடையுள் வைத்த சிவன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/23 Siva Siva <naya...@gmail.com>

Double Feature !!

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Aug 9, 2009, 8:49:34 AM8/9/09
to santhav...@googlegroups.com

2009-08-09
சிவன் - மழை - சிலேடை
----------------------------------
வானீரை ஏந்தி வருமே அமுதத்தைத்
தானீய வந்துநஞ்சு கந்தருந் - தானூரும்
போற்றும் பொருளாய்ச் சிலசமயம் தூற்றலுமாம்
நீற்றன் சிவன்மழை நேர்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/27 Siva Siva <naya...@gmail.com>
விளக்கத்தோடு :

சூரியகிரகண ஸ்பெஷல்!
2009-07-23
சிவன் - சூரியகிரகணம் - சிலேடை
---------------------------------------------
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/



--
http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Aug 10, 2009, 11:05:07 AM8/10/09
to santhav...@googlegroups.com

விளக்கத்தோடு.

2009-08-09

சிவன் - மழை - சிலேடை
----------------------------------
வானீரை ஏந்தி வருமே அமுதத்தைத்
தானீய வந்துநஞ்சு கந்தருந் - தானூரும்
போற்றும் பொருளாய்ச் சிலசமயம் தூற்றலுமாம்
நீற்றன் சிவன்மழை நேர்.

வானீரை - வான் நீரை;
வான் - 1) மேகம்; / 2) ஆகாயம்;
அமுதம் - 1) நீர்; / 2) அமிர்தம்;
தான் - 1) அது; / 2) அவன்; தேற்றச் சொல்;
நஞ்சுகந்தருந்தானூரும் - 1) நம் சுகம் தரும்தான்; ஊரும் / 2) நஞ்சு உகந்து அருந்து ஆன் ஊரும்;
ஆன் ஊர்தல் - எருதில் செல்லுதல்;
சமயம் - 1) வேளை/பொழுது; / 2) மதங்கள்;
தூற்றல் - தூறல் - 1) சிறுமழை; 2) பழித்துப் பேசுதல்;

குறிப்பு: "வருமே அமுதத்தை" - புணர்ச்சியில் "வருமே வமுதத்தை" - அதை "வரு[ம்]; மேவு அமுதத்தை" (விரும்புகிற அமுதத்தை) என்றும் பிரிக்கலாம்.

மழை:
வான் நீரை ஏந்தி வருமே -
அமுதத்தைத் தான் ஈய வந்து நம் சுகம் தரும்தான்;
ஊரும் போற்றும் பொருளாய்ச் -
சில சமயம் தூற்றலும் ஆம் - சில வேளைகளில் சிறுமழையாகவும் வரும்; (--அல்லது - பெருமழையாக வெள்ளம் ஆகுமாறோ, நமக்கு இடைஞ்சல் விளைக்கும்படியோ பெய்தால் பலரும் ஏசுவர்);

சிவன்:
வான் நீரை ஏந்தி வருமே - ஆகாய கங்கையைத் தலையில் தாங்கி வரும்;
அமுதத்தைத்தான் ஈய வந்து நஞ்சு உகந்து அருந்து -
ஆன் ஊரும் -
போற்றும் பொருளாய்ச் -
சில சமயம் தூற்றலும் ஆம் -
நீற்றன் சிவன் -

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/8/9 Siva Siva <naya...@gmail.com>

2009-08-09
சிவன் - மழை - சிலேடை
----------------------------------
வானீரை ஏந்தி வருமே அமுதத்தைத்
தானீய வந்துநஞ்சு கந்தருந் - தானூரும்
போற்றும் பொருளாய்ச் சிலசமயம் தூற்றலுமாம்
நீற்றன் சிவன்மழை நேர்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://nayanmars.netne.net/

12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Kaviyogi Vedham

unread,
Aug 10, 2009, 11:33:00 AM8/10/09
to santhav...@googlegroups.com
ரொம்ப அழகு ரொம்ப அழகு
யோகியார்

2009/8/10 Siva Siva <naya...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 10, 2009, 10:15:52 PM8/10/09
to santhav...@googlegroups.com

மிகவும் அருமையான சிலேடை!

அனந்த்

2009/8/9 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Sep 2, 2009, 1:03:05 PM9/2/09
to santhav...@googlegroups.com
இரண்டு ஆண்டுகளுக்கு முன் யாஹூ ச.வ. குழுவில் இட்ட பாடல்.
மறுபடியும் இங்கே:

2007-07-27
அகத்துறைப் பாடல் - சிலேடை
------------------------------------------------------
(கலி விருத்தம்? - "மா விளம் காய் காய்" என்ற வாய்பாடு)

நீரார் சடையரே என்றால்ஆம் என்றாரே!
வாரார் மங்கையோர் பாலென்றார் வந்தாரே!
தாரார் செல்வரே என்றேநான் எண்ணுங்கால்
ஊரா அமர்ந்திருந்(து) உள்ளத்தைக் கொண்டாரே !



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்





2009/8/10 Siva Siva <naya...@gmail.com>


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

unread,
Sep 3, 2009, 1:37:52 PM9/3/09
to santhav...@googlegroups.com

தமிழ் மரபு அறக்கட்டளை விழாவுக்குச் சென்றுவிட்டு நானும் திருப்பூர் கிருஷ்ணனும் வேறு சில நண்பர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தோம்.

 

பின் இருக்கையில் நான், இன்னொரு நண்பர் கிருஷ்ணன் மூவரும் அமர்ந்திருந்தோம்.

 

பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பரிடம் ‘நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்றேன்

 

“கிருஷ்ணாநகர் “என்றார் அவர். உடனே கிருஷ்ணன் சற்றுத்தள்லி உட்கார்ந்தார்.

“நீங்கள் ஏன் நகர்கிறீர்கள். வசதியாக உட்கார்ந்துகொள்ளுங்கள்” என்றார் நண்பர்

உடனே திருப்பூர் கிருஷ்ணன்

“நீங்கள் தானே கிருஷ்ணா நகர் என்று சொன்னீர்கள்!” என்றாரே பார்க்கலாம்.

 

உடனே பேச்சு சிலேடையைப் பற்றித் திரும்பியது.

 

கிவாஜ ஒருமுறை கிருஷ்ணன் வீட்டுக்குப் போயிருக்கிறார். வழியில் வாசலில் காயப்போட்டிருந்த புடவை அவர் மேல் பட்டது.

“கிருஷ்ணா இது என்ன புடவை தெரியுமா?” என்று கிவாஜ கேட்டாராம்.

“தேரியவில்லையே” என்றார்கிருஷ்ணன். உடனே கிவாஜ “இது வாயில் புடவை “ என்றாராம். வாயிலில் தொங்கிய புடவை வாயில் புடவை தானே!. வீட்டுக்குள் சென்றதும் டிபன் சாப்பிட அழைத்திருக்கிறார்கள். கிருஷ்ணனின் அக்கா கிவாஜவைப் பார்த்து

“நீங்கள் வருகிறீர்கள் என்று தெரியாது. தெரிந்தால் இட்டிலி பண்ணியிருப்பேன்.இப்பொழுது பூரி பண்ணியிருக்கிறேன். உங்களுக்குப் பூரி பிடிக்குமா? “ என்று கேட்டாராம். உடனே கிவாஜ

“என்ன இப்படிக்கேட்கிறீர்கள்?. ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காதா?” என்றாராம்.

 

பூரி ஜகந்நாதன் பிரசித்தமாயிற்றே!

 

இலந்தை



2009/7/4 Siva Siva <naya...@gmail.com>

Pas Pasupathy

unread,
Sep 3, 2009, 5:23:00 PM9/3/09
to santhav...@googlegroups.com
'சிலேடைச் செல்வம்' என்ற தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன் 'அம்பலம்'
இதழில் 26 அருமைக் கட்டுரைகள் எழுதினார். (இப்போது தான் 'அம்பலம்' ஆர்கைவ்ஸ் அம்போ ஆச்சே! ) 
 
 அவருடைய  அந்தக் கட்டுரைகளை அகத்தியர் போன்ற சில மடற்
குழுக்களில் மீண்டும் நான் வெளியிட்டேன். தேடினால் யாவும் கிடைக்கும் .
 
இதோ ஒரு கி்.வா.ஜ தொகுப்பு:
 


 
2009/9/3 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>



--

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 3, 2009, 10:50:31 PM9/3/09
to santhav...@googlegroups.com
பசுபதி,

திருப்பூர் கிருஷ்ணனின் 'சிலேடைச் செல்வம்' கட்டுரைகளில் மேலும் ஒன்று கீழே காணவும். என் கணினிக் கோப்புகளில் தேடிக் கண்ட இது
அநேகமாக நீங்கள் அகத்தியரில் இட்ட தொகுப்பிலிருந்து நான் எடுத்ததாக இருக்கும். இக்கட்டுரையின் பின் பகுதியில் துணுக்கு எழுத்தாளர்களின்
சிலேடைகள் சுவாரசியமானவை!
பழைய எழுத்துருவிலிருந்து யூனிகோடுக்கு மாற்றுகையில் சில எழுத்துக்கள் (குறிப்பாக ‘ரி’) தவறாகவோ இல்லாமலோ காணலாம்.
 
அனந்த் 2-9-2009
-------------
சிலேடைச் செல்வம் திருப்பூர் கிருஷ்ணன்

இலக்கிய அலங்காரங்களில் தனி அழகு கொண்டது, சிலேடை. நகைச்சுவையின் ஓர் அம்சம், அது. மற்ற நகைச் சுவைக்கும் சிலேடைக்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்றவற்றைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்கலாம். சிலேடையை மொழிபெயர்க்க இயலாது.
"கயா கயா கயா' என்று இந்தியில் ஒரு வாக்கியம். "கயா என்ற பெயருடைய நபர் புத்த கயா என்கிற ஊருக்குப் போனார்' என்பது அந்த வாக்கியத்தின் பொருள். இதைச் சிலேடை நயம் கெடாமல் அப்படியே தமிழில் மொழி பெயர்ப்பது எப்படி? அது போலவே தமிழ் மொழிச் சிலேடைகளை வேற்று மொழிக்குக் கொண்டு போக முடியாது. தாய்மொழி தவிர அன்னிய மொழிக்குக் கொண்டு செல்ல இயலாத தன்மைதான் சிலேடையின் தனிச்சிறப்பு.

இடைக்கால இலக்கியத்தில் காளமேகமும் தற்கால இலக்கியத்தில் நவீன காளமேகமாகக் கருதப்பட்ட கி.வா. ஜகந்நாதனும் சிலேடைத் துறைக்கு நி
றையத் தொண்டு செய்திருக்கிறார்கள். ஏராளமான சிலேடைகளைத் தன்னிடத்தே கொண்ட நூல்களின் வசையில் மிக முக்கியமான இடத்தைப்
பிடிப்பது பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எழுதிய திருவேங் கடத்து அந்தாதி. படிப்பவர் களை பிரமிக்கச் செய்யும் அபாரமான சாதனைப் படைப்பு.
வகையாலும் இலக்கணத்தாலும் இரண்டு கட்டுப்பாடுகளைக் கொண்ட நூல். அந்தாதி என்பதால் ஒரு செய்யுளின் கடைசிச் சீர் அடுத்த செய்யுளின் முதல் சீராக வரவேண்டும். இது ஒரு கட்டுப்பாடு.
இலக்கண வகைப்படி கட்டளைக் கலித்துறையில் எழுதப்பட்டிருப்பதால் (ஒற்றெழுத்து நீக்கி எண்ணும் போது) ஓர் அடி நேரசையில் தொடங்கினால் பதினாறு, நிரையசையில் தொடங்கினால் பதினேழு என எழுத்துகளின் எண்ணிக்கையை எண்ணிப் பாட வேண்டும். இந்த இரு கட்டுப்பாடுகளைத்
தவிர மூன்றாவது கட்டுப்பாட்டைத் தாமே விதித்துக் கொள்கிறார், அந்த மாபெரும் புலவர்.

ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வோர் அடியிலும் இரண்டாம் சீர் மறுபடி மறுபடி ஒரே வார்த்தையாக வருமாறு அமைக்கிறார். ஆனால் அந்த வார்த்
தை, சிலேடை நயத்தால் இரண்டு பொருள்களை அல்ல, நான்கு பொருள்களைக் கொண்ட நுட்பத்தோடு திகழ்வது தான் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார?ன் அபார ஆற்றல்.
இப்படி நூற்றுக்கணக் கான சொற்களை நான்கு பொருள் தரும் வகையில் அவர் கையாள்கிறார் என்பது படிக்கப் படிக்க மலைக்க வைக்கும் அவன்
மொழித் திறன். எடுத்துக் காட்டாக ஒரே ஒரு பாடல் இங்கே:
"மாயவன் கண்ணன் மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
தாயவன் கண்ணன் கமலமொப்பான் சரத்தால் இலங்கைத்
தீயவன் கண்ணன் சிரமறுத்தான் திருவேங்கடத்துத்
தூயவன் கண்ணன் புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே.'?

இந்தப் பாடலில் இரண்டாம் சீராக வரும் "கண்ணன்' என்ற சொல் எப்படி நான்கு பொரு ளைத் தருவதாக சிலேடை அமைப்பில் மாறுகிறது என்ப
தைப் பதம் பித்து எழுதினால் புந்துவிடும். பதம் பித்த பாடல் இதோ:

"மாயவன் கண்ணன் மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
தாயவன் கண் நன் கமலமொப்பான் சரத்தால் இலங்கைத்
தீய வன்கண்ணன் சிரமறுத்தான் திருவேங்கடத்துத்
தூயவன் கண் அன்பு உடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே.'

தமிழ்ப் படைப்பாளர்களில் டாக்டர் மு. வரதராசன், தீபம் நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி போன்ற சிலர், முறையாகத் தமிழ் கற்றவர்கள்.
இவர்கள் மூவர் படைப்புக ளிலும் இலக்கண அமைதிக்கு ஒரு குந்தகமும் நேராத சிடுக்குகளற்ற அழகிய வாக்கிய அமைப்புகளைக் காண முடியும்.
சொல்லவந்த கருத்தால் மு.வ.வும், அழகிய நடையால் நா.பா.வும், பாத்திரங்களுக்கு இடையேயான உரையாடலால் இ.பா.வும் தற்கால இலக்கியத்தில் முத்திரை பதித்தவர்கள். நா.பா.வின் நடையில் ஆங்காங்கே ஜிலுஜிலுவென்று ஓடும் சிலேடை நயத்தை நிறையப் பார்க்க முடியும்.
"அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்ததென்றால் அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது' என்பது போன்ற அவன் இரட்டுற மொழியும் சொ
ற்றொடர்களை இன்னொரு மொழியில் அதே நயம் தோன்றக் கொண்டு போவது எப்படி?
அவரது படைப்புகள் பலவற்றை ஆங்கிலத்தில் நா.பா.வே மெச்சும்படி மொழி பெயர்த்த ஆர். நடராஜன், மற்றவர்கள் இலக்கியத்தை மொழிபெயர்க்
கப் பட்ட சிரமத்தை விடவும் நா.பா. இலக்கியத்தை மொழிபெயர்க்க எத்தனை சிரமப் பட்டிருப்பார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
அண்மைக்காலத் தமிழ்க் கவிஞர்களில் சிலேடையை நயமாகக் கையாண்டவர்கள் வசையில் குறிப்பிடத்தக்கவர், நா. காமராசன். அவரது "சூர்யகாந்தி'
தொகுதியில் "வஞ்சிக் கோமான் விழிகள் சந்திக்கின்ற வஞ்சிக்கோ மான்விழிகள்' என்றும் "அவரைப்பூப் போல்சிவந்த மேனியுள்ள அவரைப் பூ விழயாலே பார்த்தேன்' என்றும் வரும் இடங்கள் மிக நயமானவை.
கண்ணதாசன், "பார்த்தேன் சிர?த்தேன், அத்திக்காய் காய் காய்' போன்ற பாடல்களை சிலேடையின் பலத்தில் தான் முன்நிறுத்துகிறார். "உள்ள மெலா ?மிளகாயோ ஒவ் வொருபேச் சுரைக்காயோ' என்ற வகள், "உள்ளமெல்லாம் இளகாயோ ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ' எனப் பொருள் புரியும்பே
¡து பாடல், தமிழ??பர்களின் நெஞ்சில் நிரந்தரமாய்த் தங்கிவிடுகிறது.
கால் ஊனமான பெண் பாடுவதாக வரும் "மலரும் மங்கையும் ஒருஜாதி, தன் மனதை மறைப்பதில் சரிபாதி' என்ற பாடல் "ஒருக் காலும் இல்லை,
ஒரு காலும் இல்லை' என்ற முத்தாய்ப்பு வகள் நெஞ்சை உருக்கிவிடுகின்றன.
"தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப்பாக்கு, உன்னைத் தாய் போல் அணைத்துக் காத்திருப்பாள் அவள் உள்ளத்தைக்களிப் பாக்கு'
என்பன போன்றவைகள், நம் மனத்தில் நிரந்தர இடம்பிடித்து நம்மைக் களிப்பாக்குகின்றன.

****
துணுக்கு எழுத்தாளர்கள் சிலர், சிலேடை நயத்தோடு எழுதி வெளுத்துக் கட்டுகிறார்கள். நம் மனத்தில் நீண்ட நாள் தங்கியிருக்கும் நகைச்சுவைத்
துணுக்குகள் பெரும் பாலும் சிலேடை நயம் கொண் டவையாகத்தான் இருக்கும். ஆனால் நாவல், சிறுகதை ஆசியர்களின் பெயர்கள் மனத்தில் நி
ற்பது மாதி துணுக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் நிற்பதில்லை. அவர்கள் சிற்பிகள் மாதி. தங்கள் படைப்பை மட்டும் நிறுத்தி வைத்து விட்டு தங்கள் பெயரைக் காலக் காற்றில் உதிர்த்து விடுகிறார்கள். ஆனால் நல்ல நாவலும் சிறுகதையும் கூட மனத்தின்ருந்து நழுவ வாய்ப் புண்டு. நல்ல துணுக்கு ஒரு போதும் நெஞ்சை விட்டு நீங்கு வதில்லை. அப்படிச் சில சிலேடைத் துணுக்குகள் இங்கே:
* "அடுக்குமாடிக் குடியிருப்போட எட்டாவது மாடீலருந்து மாமியார் மருமகளைத் தள்ளி விட்டுட்டாங்களா! இது அடுக்குமாடீ?'

* "என்னப்பா இது? கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னே! இப்பப் பாத்தா கல்லறைக்குக் கூட்டிட்டு வந்திருக்க?'
"நீங்கதானே ஐயா அடக்கமான பொண்ணா இருக்கணும்னு சொன்னீங்க?'

* "உங்க கடைல ரவா வாங்கணும்ங்கறது தான் என் பேரவா. நானே வரவா, இல்லை என் பையனை அனுப்பித் தரவா?'
"இதென்னய்யா தொந்தரவாப் போச்சு!'

* "வெங்காய வேனும் பெருங்காய வேனும் மோதினதுல வெங்காய வண்டி வெங்கய் யாவுக்குப் பெருங்காயம் சார்!'

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, வட்டார வழக்குச் சொற்களையும் அட்டகாசமாகக் கலந்து சிலேடை நயத்தைச் சிலர் தோற்றுவிக்கும் அழகே தனி.
* "மகனே! உன்னை உளுந்தும் பெருங்காயமும் வாங்கிட்டு வான்னா நீ கீள உளுந்து பெருங்காயத்தோட வந்திருக்கியே!'

* "எதிர்வீட்டுப் பொண்ணு திலகத்தை எங்கே காணோம்?'
"அவளை எவனோ இட்டுகினு பூட்டான்!'

இந்தத் துணுக்குகளை எழுதியவர்கள் தமிழ் மொழியை எவ்வளவு நேசித்திருக் கிறார்கள்! இல்லாவிட்டால் இத்தனை அழகாக பேச்சு வழக்கு வார்த்தைகளைக் கூட வளைத்து நயமான துணுக்குகளை உருவாக்க முடியுமா என்ன?
தமிழ்த் துணுக்காளர்கள், ஆங்கிலச் சொற்களையும் தங்கள் சமத்காரத்திற்குத் துணைக்கு அழைத்துக் கொள்வதுண்டு. அப்படி ஒரு துணுக்கு இதோ:
* "உங்க கிராமத்துல அருவி இருக்கு, நீர்வீழ்ச்சி இருக்குன்னு சொன்னாங்க. தேடித் தேடிப் பாத்தோம். ஒண்ணையுமே காணுமே?'
"யாரோ உங்களுக்கு ஃபால்ஸ் இன்பர்மேஷன் குடுத்திட்டாங்க!'

சில நேரங்களில் வாழ்க்கையிலும் இயல்பாக சிலேடை பிறப்பதைப் பார்க்க முடிகிறது. அத்தகைய சந்தர்ப்பங்கள் என்றும் மறக்க முடியாத நகைச்சுவைத் தருணங்கள்.

சுடிதார், துப்பட்டா அணிந்த ஓர் இளம்பெண் ரயின்ல் பயணம் செய்து கொண்டிருந்தாள். எதிரே வெற்றிலை பாக்கு போட்டு வாயில் குதப்பியவாறே ஒரு கிராமத்துப் பெண்மணி அமர்ந்திருந்தாள். இளம்பெண் இலேசாய்க் கண்ணுறங்க அவளது துப்பட்டா ஜன்னல் வழியே காற்றில் பறந்தது. இதைக் கண்டு பதறிய வெற்றிலைக் கா அவளைத் தொட்டு உலுக்கி "துப்பட்டா துப்பட்டா' எனப் பதறினாளாம். விலுக் கென்று கண்விழித்த நாகர?க இளம்பெண், எச்சலோடு, "வெற்றிலையைத் துப்ப வேண்டுமானால் துப்பித் தொலையேன். ஏன் என்னைத் தூக்கத்தின்ருந்து எழுப்பி துப்பட்டா ?துப்பட்டா என்று அனுமதி கேட்கிறாய்?' என்று கடுகடுத்தாளாம். அதற்குள் துப்பட்டா பறந்து போயே போய்விட்டது!

எனக்கும் தற்செயலாய் வாழ்வில் நேர்ந்த சில சிலேடை அனுபவங்கள் உண்டு. வேட்டி வாங்கக் கதர்க் கடைக்குப் போனேன். கரைபார்த்துத் தேர்வு
செய்து ஐந்து வேட்டி வாங்கினேன். வேட்டியணிந்த இன்னொருவர் அதே கடைக்கு வேட்டி வாங்க வந்தார். அவரும் அவர் தேர்வில் ஐந்து வேட்டி
களை வாங்கினார். பார்சலாய்க் கட்டிய பிறகு இருவர் வாங்கிய வேட்டிக் கட்டும் பார்க்க ஒரே கன பமாணத்தில் இருந்தது. வேட்டிக் கான தொ¨
கயைக் கொடுத்த அவர், தன் கட்டுக்கு பதிலாகத் தவறுதலாக என் கட்டை எடுக்கப் போனார். இதென்ன இக்கட்டு என நான் திகைத்தபோது க¨
டச் சிப்பந்தி உதவிக்கு வந்தார். மாற்றி எடுக்கப் போனவரிடம் "வேட்டி அவுருதுங்க!' என்று அறிவுறுத் தினார். அந்தச் சொற்றொடரை தவறாய்ப்
புந்து கொண்ட அவர், "மன்னிக்கவும், பெல்ட் போடாமல் வந்து விட்டேன். அதுதான் வேட்டி அவிழ்கிறது!' என்றவாறே தன் இடுப்பு வேட்டியை
இறுகக் கட்டிக்கொண்டார்! சிரித்தவாறே விஷயத்தை விளக்கியதும் எங்களோடு சேர்ந்து அவரும் சிரித்தார்!
நம் வாழ்வை ரசமாக்குவது நகைச் சுவைதான். இலக்கியவாதிகளை ஈர்க்கும் கண்ணியமான நகைச்சுவை வகை சிலேடை தான். ஆனால் கி.வா.ஜ.வு க்குப் பிறகு இனி அதை வளர்க்கப் போவது யார்?


2009/9/3 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Sep 4, 2009, 9:00:53 AM9/4/09
to santhav...@googlegroups.com
ஆகா! ரொம்ப அழகுற நயமான சிலேடைத் ‘தனம்’ வழங்கிஎம்மை மனத்தளவில் பெருந்’தனக்’ காரராக்கிவிட்டீர் அநந்த்!..ரொம்பப் பெருந்தன்மை உமது...
 இன்னமும் கெட்டுப்போய்விடவில்லை.சன் டிவி மூலம் நாங்கள் வாராவாரம் சென்னையில்(ஏன் உலகமுழுதும்!) அசத்தப்போவது யாரு? மூலமும், கலக்கப்போவது யாரு(விஜய்) மூலமும் இத்தகை சிலேடை
,மற்றும் நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டுச் சிரிசிரி ‘முவ்வா’க்களாக மாறிக்கொண்டுதான் இருக்கிறோம் அய்யா!
யோகியார்
2009/9/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 4, 2009, 11:31:39 AM9/4/09
to santhav...@googlegroups.com


2009/9/4 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

ஆகா! ரொம்ப அழகுற நயமான சிலேடைத் ‘தனம்’ வழங்கிஎம்மை மனத்தளவில் பெருந்’தனக்’ காரராக்கிவிட்டீர் அநந்த்!..
 
ஒரு குறிப்பிட்ட பழம்பாடலை ரொம்ப நாளாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன்.  (எதைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பது இப்போது நினைவுக்கு வரவில்லை.)  இப்படி, ஏதோ ஒரு குழுவில் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஓரன்பர் அந்தப் பாடல் அழகிய சொக்கநாத பிள்ளையின் பாடலாக்கும் என்று அடித்து, சத்தியமே செய்தார்.  அந்தத் தொகுப்பையெல்லாம் முன்னமேயே புரட்டியிருக்கிறேன்; இருப்பினும் நான் சொல்லும் அந்தப் பாடலைப் பார்த்ததில்லையே, ஒருவேளை தவறகிவற விட்டுவிட்டோமா என்று (சுமார் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால்) புத்தகத்தைப் புரட்டி, அழகிய சொக்கநாத பிள்ளையின் தனிப்பாடல்களைத் தேடினால்.......
 
 
கோமகனே இங்குன் கொடைக்கென் கொடையதிகம்
வாமமுமத்து சாமிமகி பாலா - நீமுன்
ஒருகை தனம்கொடுத்தால் உண்மைவைத் திப்போதே
இருகை தனம்கொடுப்பேன் யான்.
 
நீர் வேற கவிபோகியாரா மாறி பெருந்‘தனம் பண்ணினீரா...உடனே அழகிய சொக்கநாதரின் இந்த வெண்பா நினைவுக்கு வந்தது.  போடு ஒரு கவிபோகி பெஸ்ஸேஏஏல்.....  போட்டாச்சு.
--
அன்புடன்,
ஹரிகி.

Pas Pasupathy

unread,
Sep 4, 2009, 11:36:16 AM9/4/09
to santhav...@googlegroups.com
அனந்த்,
 
இது அந்தத் தொடரில் வந்ததன்று. தனிக் கட்டுரையாக அவர் அமுதசுரபியில் 2006- வாக்கில் எழுதியது என்பது என் நினைவு.
 
சிலேடைச் செல்வம் தொடர் மிகச் சிறியதுதான்; என்னிடம் இருந்தால் எழுத்துரு மாற்றி இங்கிடுகிறேன் 


 
2009/9/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Sep 4, 2009, 1:33:03 PM9/4/09
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com
நல்ல போகியார் ஸ்பெஷல் போட்டீர் போம்..
எமக்கு ஒரு அழகான வெண்பா ருசிக்கக் கிடைத்தது..சுவைத்தேன்.
 ஆமாம்..அந்த வெண்பா மூன்றாம் அடியில் தளை தட்டுகிறதே..
கவனிக்க விலையா?
..ஒருகை தனம்கொடுத்தால்,..உம்மைவைத் திப்போ
..திருகை தனம்கொடுப்பேன் யான்....

..என்றிருக்க வேணுமோ?..?)
..

(ஒருகை தனம்கொடுத்தால் உண்மைவைத் திப்போதே--?
இருகை தனம்கொடுப்பேன் யான்.--ஹரி
 யோகியார்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 Hari wrote;-
நீர் வேற கவிபோகியாரா மாறி பெருந்‘தனம் பண்ணினீரா...உடனே அழகிய சொக்கநாதரின் இந்த வெண்பா நினைவுக்கு வந்தது.  போடு ஒரு கவிபோகி பெஸ்ஸேஏஏல்.....  போட்டாச்சு.
--
அன்புடன்,
ஹரிகி.

 2009/9/4 Hari Krishnan <hari.har...@gmail.com>
----~----~------~----~------~--~---




--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Hari Krishnan

unread,
Sep 5, 2009, 12:24:16 AM9/5/09
to santhav...@googlegroups.com


2009/9/4 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

நல்ல போகியார் ஸ்பெஷல் போட்டீர் போம்..
எமக்கு ஒரு அழகான வெண்பா ருசிக்கக் கிடைத்தது..சுவைத்தேன்.
 ஆமாம்..அந்த வெண்பா மூன்றாம் அடியில் தளை தட்டுகிறதே..
கவனிக்க விலையா?
..ஒருகை தனம்கொடுத்தால்,..உம்மைவைத் திப்போ
..திருகை தனம்கொடுப்பேன் யான்....

 
வெண்பாக்கள் பொதுவாக இரண்டுமுறை படிப்பதற்குள் மனப்பாடம் ஆகவேண்டும்.  எனக்கு மூன்று நான்குமுறை படிக்கவேண்டிவரும்.  அப்படித்தான் இந்த வெண்பாவை மனத்திலிருந்து எழுதினேன்.  யோகியார் குறிப்பிட்ட பிறகுதான், ‘நாம்தான் தவறிவிட்டோம் போலிருக்கிறது’ என்று புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன்.  புத்தகத்தில் எப்படி இருக்கிறது தெரியுமா?  அப்படியே, அவர்கள் சீர் பிரி்த்திருப்பதைப் போலவே தருகிறேன்:
 
கோமகனே இங்குஉன் கொடைக்கு என்கொடை அதிகம்
வாமமுத்து சாமிமகி பாலா - நீமுன்
ஒருகைதனம் கொடுத்தால் உண்மைவைத் திப்போதே
இருகைதனம் கொடுப்பேன் யான்.
 
(தனிப்பாடல் திரட்டு, இரண்டாம் பாகம், பூம்புகார் பதிப்பகம்--பக்கம் 253/254)
 
இந்தப் புத்தகத்துக்கு உரையாசிரியரான புலவர் அ மாணிக்கம் எனக்கு யாப்பிலக்கணம் கற்பித்தவர்களில் ஒருவர் (நான் ஜெயின் கல்லூரியில் படிக்கும்போது.)  அவர் (தமிழ் இலக்கிய வரலாறு, யாப்பிலக்கணம் எல்லாம் சேர்த்து ஒரு வகுப்பாக நடக்கும்) வெண்பா இலக்கணம் நடத்திக் கொண்டிருந்தார்.  நான் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  கல்லூரிக் கவியரங்கங்களில் நான் பங்கேற்றிருந்தபடியால், ‘கவிஞரே, என்னய்யா அங்கே பாக்கறீர்!  புலவர்க்கு வெண்பா புலி, தெரியுமா... பாடத்தை கவனியும்’ என்றார்.  அவர் அப்படிச் சொன்ன ஐந்து நிமிடங்களில் ‘மாணிக்கம் போலாரே மன்’ என்ற ஈற்றடியில் (ஈற்றடி மட்டும்தான் நினைவிருக்கிறது) ஒரு வெண்பா எழுதி அவருடைய மேசைமேல் கொண்டுபோய் வைத்தேன். 
 
மற்றதெல்லாம் இருக்கட்டும்.  இப்படி எனக்குக் கற்பி்த்தவர் உரையாசிரியராக செயல்பட்ட பதிப்பில் இவ்வளவு ‘அழகாக’ பாடல் வெளியிடப்பட்டிருக்கிறதே என்று நொந்துகொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது. 
 
தளைதட்டுவது, களைகட்டுவது, என்னவோ முட்டுவது எல்லாம் போகியாருக்கு டக்குடக்குன்னு கண்ணுல பட்டுடும்.  நன்றி யோகியாரே!  நீர் சொல்வதுபோல்தான் பாடம் இருந்திருக்கும்.  ‘உண்மைவைத் திப்போ திருகை’ என்று இருந்திருக்கலாம்.  அவங்க உண்மையாகவே இப்போது என்ற அர்த்தத்தில் சொன்னா, ‘உம்மை வைத்து’ அப்படின்னு வெசமம் பண்றாருங்க பாருங்க அய்யாவாள்...அதான் போகியார்ங்கறது...:-))

Kaviyogi Vedham

unread,
Sep 5, 2009, 10:07:17 AM9/5/09
to santhav...@googlegroups.com
பேஷ் பேஷ்..விளக்கம் அருமை..எனினும் குற்றம் குற்றம்தான்..னேன்!
யோகியார்

2009/9/4 Hari Krishnan <hari.har...@gmail.com>
It is loading more messages.
0 new messages