பரிசல் அவியலில் பாடல்கள் காப்பி அடிப்பதைப் பற்றி நாங்கள் பேசியதை குறிப்பிட்டிருந்தார்.எனக்கு இதில் பெரிய ஆர்வம். சிலப் பாடல்களை ராஜா தெரியாமலே இருமுறை போட்டதும் உண்டு. வேறு மொழியிலிருந்து அடிப்பதை விடுங்கள். தமிழிலே இது போன்று பலப் பாடல்கள் திருடப்பட்டுள்ளன.
1) தூங்காதே தம்பி தூங்காதேவில் வரும் "என்ன வேணும் தின்னுங்கடா டோய்" மெட்டும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் "வாழ வைக்கும் காதலுக்கு ஜே" மெட்டும் பல்லவியில் ஒன்றே.
2) அர்ஜுனர் வில்லு பாடலில் வரும் "தனியொரு மனிதனின் படை/ அதில் எழுவது விடுதலை விடை" என்ற வரியைக் கேட்கும் போது என் உதடுகள் முனுமுனுப்பது "அழகிய தமிழ் மகள் இவள்"
3) என்ன விலை அழகே என்ற அற்புதமான பாட்டின் மூலம் "தங்கப் பதக்கத்தின் மேலே..". ஆனால் இதைக் காப்பி என சொல்ல முடியாது.
4) தேவாவை எனக்கு ரொம்ப புடிக்கும். யார் யாரோ Fusion செய்கிறார்கள். தேவா செய்ததற்கு ஈடாக எவரும் செய்ததில்லை. குஷி படத்தில் வரும் மாக்கோரீனா பாடலின் பல்லவி ஒரு ஆங்கில ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி. ஆனால் சரணம் எங்கே இருந்து எடுத்தார் தெரியுமா? எம்.ஜி.ஆரின் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..
மாக்கோரீனா சரணம்:
தாகம் வந்து உதடு வறண்டால் அந்த மேகத்தின் நீர் குடிப்போம்..
விண்வெளியில் பசிதான் எடுத்தால் விண்மீன்களை கொத்தி தின்னுவோம்..
இதை பாடுங்கள்.
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்.. ஒரு மாசு மருவற்ற தலைவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்
5) சமீபத்தில் வந்த ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் ஒரு பாட்டு "இன்னுமொரு வானம் இன்னுமொரு பூமி வேண்டுமடி உன்னைக் காதலிக்க". நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு மொக்கைப் பாட்டு. இதன் மூலம். "செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே" என்ற பாடல். என்ன படம் எனத் தெரியவில்லை. ஹரிஹரன் பாடிய தேவாவின் பாடல்.
6) தாமிரபரணி என்ற படத்தில் ஒரு பாட்டு. இது சொல்லி விட்டே செய்தார்களா இல்லையா என்பது தெரியாது. "கருப்பாக இருக்காளே" என்ற பாடல், பக்தி பாடலான "கற்பூர நாயகியே கனகவல்லி" என்ற மெட்டில அட்சரம் பிசகாமல் இருக்கும்.
7) தமிழகத்தையே கலக்கிய வாள மீனுக்கும் பாட்டு கூட ஒரு பழைய பாடலின் அப்பட்டமான காப்பி. குட்டி பதிமினி சின்ன பெண்ணாக பாடிய ஒரு கருப்பு வெள்ளை பாடலின் காப்பி. வரிகள் நினைவலில்லை.
8) ஹாரிஸ் ஜெயராஜின் கிட்டதட்ட அனைத்துப் பாடல்களும் எங்கேயோ கேட்டதுண்டு என்றே நினைக்க வைக்கும். அஞ்சல பாடலில் வரும் "ஒன்னுக்குள்ள ஒன்னா என் நெஞ்சுக்குள்ள நின்னா. கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா" என்ற வரி பழைய பாடலில் இருந்து சுட்டதுதான். கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து விடுவேன்.
9) இந்த படங்களின் பெயர்கள் தெரியவில்லை. "பொன்மான தேடி நானும் பூவோடு வந்தேன்". இப்போது இதைப் பாடுங்கள். "பாட்டுக்கு பாட்டெடுத்து நானும் பாடுவதை கேட்டாயோ"
10) டீ.ஆரின் என் ஆசை மைதிலியேவும் சொன்னால்தான் காதலா சொல்லேன்டா வடிவேலாவும் ஒரே மெட்டு. இது ரீமிக்ஸ் இல்லை.
டிஸ்கி: தலைப்பு எனக்கு நானே சொல்லிக் கொன்டது. வேறு வேலையில்லாமல் இந்த ஆராய்ச்சி தேவைதானா?
நன்றி:
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
நைனா பர்ஸே ரிம்ஜிம் ரிம்ஜிம் - இது வந்து
நானே வருவேன் இங்கும் அங்கும் - இப்படி ஆச்சு.
அப்புறம், காயத்ரி படத்துல,
வாழ்வே மாயமா வெறுங்கதையா - வந்தப்ப ராஜாகிட்டயே இத்தக் கேட்டாங்க. அப்ப
அவரு ரெண்டு பாட்டோட ம்யூசிக் நோட்ஸையும் சொல்லி இது வேற - அது வேறன்னு
விளக்கினாருங்க.
ஆனா, அதே ராஜாதான் சண்டி ராணில எம்.எஸ்.வி. கம்போஸ் பண்ண ஓ வெண்ணிலாவ
உல்டா பண்ணி வா வெண்ணிலான்னு ரெண்டு பேரும் (எம்.எஸ்.வி. - ராஜா) சேந்து
போட்டதா மேடைலயே ஒத்துக்குனாரு.
இங்க எல்லா பாட்டுலயும் தத்தகாரம் ஒண்ணா இருந்துட்டா அத்த காப்பி
அடிச்சதுன்னு சொல்றாங்க. என்னோட பார்வை வேற, ட்யூன் இல்லாம சொல்ற
தத்தகாரம் ஒரே மாதிரி இருந்தாலும் வேற ட்யூனு கூட அதுக்கு இருக்கலாங்க.
அளவுல வர்த்தைங்க ஒண்ணா வந்துட்டதாலெயே அதுவும் இதுவும் ஒண்ணாகிரதுங்க.
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒருநாள் வரும் வரையில் நானிருப்பேன் நதிக்கரையில்
இதே வரிங்க ரெண்டு ட்யூன்ல அதே படத்துல வந்திருக்குல்ல, தத்தகாரம்
ஒண்ணுதான. (அநேகமா படம் மன்னிப்பு, ம்யூசிக் சுப்பையா நாயுடு)
சமயத்துல ட்யூனுக்கு இழுத்து கொறச்சு ஒரு மாத்திரைய ரெண்டாக்கி ஒண்ணரைய
ஒண்ணாக்கியெல்லாம் படுவாங்க, அப்ப ஒரே ட்யூனுக்கு வெவ்வேற சந்தமுள்ள
வார்த்தைங்க வந்துருங்க.
இப்ப பாருங்க,
தே1ரே2 சங்3கு4 ப்யா5ரு6 மை7 நஹீ8 தோ9டுனா10 - எத்தினி சிலபல்ஸு பத்து
இல்லீங்களா?
அதே ட்யூனுக்கு, இங்க பாருங்க,
ஒரே1 ஜீ2வன்3 ஒன்4றே5 உள்6ளம்7 வா8ராய்9 கண்10ணா11 - எத்தினி சிலபல்ஸு
இங்க என்னாச்சு பதினொண்ணாச்சு. தத்தகாரம் போட்டு ட்யூனு இல்லாம எழுதுனா
ரெண்டு பாட்டோட வார்த்தைகளும் எங்கெங்கயோ போயி நிக்கும்.
ஆக, நாம பாடுறதுக்கு வார்த்தைங்க பொருந்தலேன்னாலும் ட்யூனு ஒண்ணா
இருக்கும். வார்த்தைங்க பொருந்துனாலும் ட்யூனு வேறயா இருக்கலாம்.
கேக்கறத வெச்சு இந்தப் பாட்டு அது, அந்தப் பாட்டு இதுன்னு நாம
சொல்லிக்கலாம், அது நம்மோட ரசனையையும் கவனிக்ற திறனையும் காட்டும்.
ஆனா, டெக்னிக்கலா நாம சொல்றது சரிதானா அப்படீன்றத ம்யூசிக் நோட்ஸ்
எக்ஸ்பர்ட்தான் சொல்ல முடியும்.
இது என்னோட அபிப்ராயங்க, ஜஸ்ட் அபிப்ராயந்தான். நீங்க சொல்றதுன்னு
சரின்னு உங்களுக்குப் பட்டுச்சுன்னா சரிதான்.
சலோமியா சலோமியாசுண்டக்கஞ்சி சோறுடாசுரும்புக்கருவாடுடாஎன்ற கண்ணெதிரே தோன்றினாள் பாட்டும்மேகமாய் வந்து போகிறேன்மின்னலாய் உன்னைத்தேடினேன்பாடலும் கேளுங்கள் ஒரே ராகம்
2008/12/14, lucky shajahan luckys...@gmail.com:
--
அன்புடன்
சாபு
சூப்பர். எந்த பாட்டு அது?
மைதிலி
On Dec 14, 10:17 pm, "ezhil arasu" <nand...@gmail.com> wrote:
> ஒன்றிரண்டல்ல ஏகப்பட்ட பாட்டுக்கல் இப்படிதான்.
>
> இதில் எந்த இசையமைப்பாளரும் விதிவிலக்கல்ல.
>
> ஆனால் தேவா மாத்திரம் வித்தியாசமானவர். ஒரு தடவை குழம்பி போய் தன் பாட்டையே
> காப்பி அடித்து விட்டார்.
>
> 2008/12/14 lucky shajahan <luckyshaja...@gmail.com>
>
>
>
> > //கேக்கறத வெச்சு இந்தப் பாட்டு அது, அந்தப் பாட்டு இதுன்னு நாம
> > சொல்லிக்கலாம், அது நம்மோட ரசனையையும் கவனிக்ற திறனையும் காட்டும்.
> > //
>
> > அப்படி கவனிச்சதுதான் இந்த பாட்டெல்லாம் அண்ணா
>
> > 2008/12/14, ஆசாத் banua...@gmail.com:--
> > எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
> > நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
> > *
> > லக்கி ஷாஜஹான்.- Hide quoted text -
>
> - Show quoted text -
லக்கி,
நாம படிச்சது மணீஸ், கெல்லட்டுன்னு கிறித்துவ சார்புள்ள
பள்ளிக்கூடங்கதான, அங்க ஒரு ப்ரேயர் பாட்டு இருக்கும், 'செவ்வானத்தில்
ஒரு நட்சத்திரம் சிரித்தது எதைப் பார்த்து'ன்னு வர்ர பாட்டு மத்ரியே
இருக்கும். செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் முந்தியா, இந்த ப்ரேயர் பாட்டு
முந்தியான்னு நமக்கு தெரியாது. ஹார்மோனியம் வசிக்ற வாத்தியாரு, அந்தப்
பாட்ட எப்பவாச்சும் ப்ரேயர் இல்லாம தனியா பாடற ப்சங்களுக்கு மெட்டுக்கு
ப்ராக்டீஸ் பண்ணும்போது வாசிச்சருன்னா, அந்தக் கடைசி அடிய மட்டும் 'என்
சிவந்த உடலா இதழா மனமா - சிரித்தது எதைப் பார்த்து' மாதிரி ட்யூனக்
கொணாந்து புன்னகையோட முடிப்பாரு.
அதே சமயத்தில் பல கிறித்துவ பாடல்கள் சினிமா பாடல்களின் மெட்டுக்களை பயன்படுத்தியுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கடைசியா காதலில் விழுந்தேன்
//முதலில் காதலில் விழுந்தேன்
இடையில்காதலில் விழுந்தேன்னுலாம் படம் வந்திருக்கா?//
அதெல்லாம் தெரியாது அண்ணாச்சி
எனக்கு கடைசியா காதலில் விழுந்தேன் தான் தெரியும் :))
சரி.. முதல்ல விழுந்தது இருக்கட்டும்..அப்புறம் எந்திரிச்சீங்களா இல்லையா..? அதத்தான் அண்ணாச்சிகேக்குறாவ.. :-)
2008/12/16, குட்டி செல்வன் <kutty....@gmail.com>://முதலில் காதலில் விழுந்தேன்
இடையில்காதலில் விழுந்தேன்னுலாம் படம் வந்திருக்கா?//
அதெல்லாம் தெரியாது அண்ணாச்சி
எனக்கு கடைசியா காதலில் விழுந்தேன் தான் தெரியும் :))
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை.. :(
நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை.. :(
இப்படிச் சொல்லிட்டா எப்படி?
அப்புறம் நானெல்லம் என்ன செய்றதாம்?
நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை.. :(
அப்டி எல்லாம் கஷ்டப்பட ட்ரை பண்ணக்கூடாது.. அண்ணாச்சி கோவிச்சுக்குவாக
தெரியுமில்லை அக்கா :-)
அண்ணா தான் ஒரு இழையில் ரொம்ப நொந்து போய் எழுதினார்..மொக்கையாவே இருக்கு குழுமம்னு..அதான் முயற்சி பண்ணினேன்....
2008/12/16, Swathi Swamy <mswat...@gmail.com>:நானும் பண்புடனில் மொக்கை எழுதக் கூடாது என்று தான் நினைக்கிறேன்.. முடியேலை.. :(
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
சரி.. முதல்ல விழுந்தது இருக்கட்டும்..
--
அன்புடன்
குட்டி செல்வன்
http://selvakavithaigal.blogspot.com/
:) நீங்க தான் ஆணிவேராச்சே...
நாங்கள் என்ன வெறும் விழுதுகள் தானே...
--
சமீப காலமா பின்நவீனத்துவ மொக்கையாவே போய்க்கிட்டிருக்கு..
2008 டிசம்பர் 16 08:15 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:
சமீப காலமா பின்நவீனத்துவ மொக்கையாவே போய்க்கிட்டிருக்கு..
யாரோடது? உங்களோடதா?
என்ற கண்ணெதிரே தோன்றினாள் பாட்டும்
மேகமாய் வந்து போகிறேன்
மின்னலாய் உன்னைத்தேடினே//
இரண்டுமே சயோனி என்ற பாகிஸ்தான் ஆல்பத்திலிருந்து சுட்டதுதான்..
********************
/ஒத்த ரூவா தாரேன் ஒரு ஒனப்புத்தட்டும் தாரேன் -
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி..
ரெண்டும் ஒரே ராகம் தானே.//
மிகச்சரி.. இரண்டுமே ஒரு நாட்டுப்புற பாட்டின் காப்பி.
*************************
//அத்திந்தோம் திந்தாதி தந்தோம் சந்திரமுகி பாடல் கேட்கும்போது
மாங்குயிலே பூங்குயிலே பாடல் நினைவுக்கு வந்தா//
மெட்டு வேறு.. தாளம் ஒன்று.. அது பரவாயில்லை..
********************
/ஆச்சரியம்.. இரண்டும் ஒரே தாளலயம்... நந்தா முதலில்.. பின் மிகத்
தாமதமாய்
காக்க காக்க
முன்னதில் ராசா பின்னதில் ஹாரிஸ்//
அது ராசா இல்லைங்க.. அவரின் புதல்வர்..
இது கார்க்கி அனுப்பியது
/ஆச்சரியம்.. இரண்டும் ஒரே தாளலயம்... நந்தா முதலில்.. பின் மிகத்
தாமதமாய்முன்னதில் ராசா பின்னதில் ஹாரிஸ்//
காக்க காக்க
அது ராசா இல்லைங்க.. அவரின் புதல்வர்..
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
> > தங்கள் கண்களின் கோபக்கனல் அப்படியே வெண் திரையை கிழித்துக்கொண்டு, வாகனத்தின்
> > சிவப்பு விளக்காய் தோன்றியதால் அங்ஙனம் பகர்ந்தேன்..
லக்கி,
இது பின்நவீனத்துவம் கெடையாது, இது கழகத்தமிழுக்கும் கொஞ்சம் முன்னால
உள்ள காலகட்டம் மாதிர் தோணுது.
ஆனாலும், வெண்திரை + பகர்ந்தேன் + விளக்காய் இந்த கையாடல்கள்
ஒண்ணுக்கொண்ணு பொருந்தாததால இத கழகக்காலத்துக்கு முந்துனதுண்ணும் சொல்ல
முடியல.
மொத்தத்துல...முடியல...
சுயவேள்வியில் ஆடை எரிந்துவிட யாரோ அவிழ்த்துப்போட்டிருந்த *கந்தல்
துண்டை* அணிந்துகொண்டு சுற்றித்திரியும் புறத்தோற்ற அணிவகுப்புகள்
வீதியெங்கும்....வுடு ஜூட்...
குறிப்பு: 'கந்தல் துண்டை' அப்படீன்ற எடத்துல 'உள்ளாடை'ன்னு
போட்டுப்பாருங்க, அப்புறம் சொல்லுங்க எது பின்நவீனத்துவம்னு.
அன்புடையீர், இது கலாய்ப்பதற்குத்தானன்றி வேறெதற்கும் அல்ல.
பின்நவீனத்துவக் கவிதைகளை ஏற்காதவனல்லன் நான்.
சுயவேள்வியில் ஆடை எரிந்துவிட யாரோ அவிழ்த்துப்போட்டிருந்த *கந்தல்
துண்டை* அணிந்துகொண்டு சுற்றித்திரியும் புறத்தோற்ற அணிவகுப்புகள்
வீதியெங்கும்....வுடு ஜூட்...