நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.
http://nanbanshaji.blogspot.com/
http://littleblossoms.blogspot.com/
http://alternatemovies.blogspot.com/
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================
என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?
திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)
2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..
On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?
திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)அதே பயம்தான் எனக்கும்.. எனக்குகூட புரியுதே கவிதைலாம்னு சந்தேகம் வந்துடுச்சு... ரொம்ப அறிவாளி ஆயிட்டேனோன்னு...
( பயம் வேற .. ஒரு வேளை அப்படி கிப்படி ஆயி, நானும் எழுத ஆரம்பிச்சா என்னாகும்.. ??? )
2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================
மக்கள்ஸ்
இது எது மாதிரியான கவிதையும் இல்ல..கவிதை இல்லனா கவுஜை எப்படி வேணா வச்சிகிடுங்க..நுட்பம், படிமம், உள்குத்து, வெளிகுத்து, வாசகன், படைப்பு, படைப்பாளி இப்படி எந்த சிக்கலுமில்லாம நேரடியா பேசும் எழுத்து அவ்ளோதான்... முடிஞ்ச வரை பூச்சு, மிகை, பம்மாத்து, கிளிட்சே, இவைகளை தவிர்க்க பார்க்கிறேன்
மக்கள்ஸ்
இது எது மாதிரியான கவிதையும் இல்ல..கவிதை இல்லனா கவுஜை எப்படி வேணா வச்சிகிடுங்க..நுட்பம், படிமம், உள்குத்து, வெளிகுத்து, வாசகன், படைப்பு, படைப்பாளி இப்படி எந்த சிக்கலுமில்லாம நேரடியா பேசும் எழுத்து அவ்ளோதான்... முடிஞ்ச வரை பூச்சு, மிகை, பம்மாத்து, கிளிட்சே, இவைகளை தவிர்க்க பார்க்கிறேன்
வந்த நாட்களில்
நாம் தவறவிட்டவைகளை
இந்த நாட்கள்
மாயக்கண்ணாடியின் லாவகத்தோடு
கண்முன் கொண்டுவருகிறது.
மின்னி மறையும் ஒவ்வொன்றும்
சொல்லிப்போகிறது நமக்கான
இதை
மேலும்
நமக்கான இதில்
மெளனங்களே மிகவும் வசதியானது
அதாம்பா :))
எதாம்பா.................................?அதாம்பா :))
வேண்டாம்..
சொல்லப்படாதவைகள்
இந்த பயணங்களை
கொஞ்சம் நீட்டிக்கச் செய்யலாம்
அறியத் தராதைவைகளை
பறிமாரிக்கொள்ளாதவைகளை
அறிய
துணிய
விழைய
சிறிது காலம் எடுக்கலாம்
அச்சிறு கால நீட்டிப்புகளுக்குள்
வாழ்ந்துவிட்டுப்போகட்டும் நமக்கான
'இது'
அனைத்துக் கவிதைகளும் மிக அருமையாக இருக்கின்றன;
அறுவைசிகிச்சை செய்யச்செய்து...
சோடாபுட்டி கண்ணாடி அணியச் செய்திடுவோம்
"சவத்து மூதி" நம்ம ஏரியா வழக்குச் சொல் போல் இருக்கிறதே...
அடகக்வே முடியாம வர்றதுக்கு இது என்ன ஊச்சாவா?
வெறும் கவுஜைதானலே சவத்ஹ்து மூதி?
கொஞ்சம் நிப்பாட்டுனாத்தான் என்னவாம்?
பாவம் பச்சப்புள்ள கதிரு பயப்படுதான்லா.
அவன் எழுதுறதைப் படிச்சு இப்படித்தான எல்லாரும் பயப்படுதாவன்னு
இப்பவாவது அந்த சவதது மூதிக்குப் புரிஞ்சா சரி
வந்துட்டே இருக்கே என்ன செய்ய :D
அதேதாம்பான்னா எதேதாம்பான்னு கேட்டா
அந்த அதேதாம்பாவை எப்படி இதேதாம்பானு சரியா சொல்றது?
எதாம்பா.................................?
அதாம்பா :))
பேச்சு என்ற ஒலிப்புலனுக்கு பூனைக்குட்டியின் முகங்கள் ஒத்துவரவில்லை.
அவள் முகம் வேண்டுமானால் பூனைக்குட்டியின் ஞாபகம் தரலாம் ஆனால் குரல்
எப்படி>? அது பூனையின் குரலை அல்லவா ஞாபகம் படுத்தவேண்டும்??
ஏதோ தெரிஞ்சது சொன்னேங்க...
நல்ல கவிதைங்க..
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:
முயல் மொழி அறியும் ஆவல் - காதல் பித்து தலைக்கேறிய நிலையோ?? (சும்மா!!!)
நல்ல கவிதை அய்யனார். (கத்தி வெச்சு மிரட்டுவியலா?)
காதலியின் மொழி உருவகம் நல்ல கற்பனை...
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:
> மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
> நீ உதிர்க்கும்
> ஒவ்வொரு சொல்லும்
> பதுங்குவதற்கு குழிகளற்ற
> பசுஞ்சமவெளியின்
> பிரம்மாண்டம் கண்டு மிரளும்
> முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
> முயல் மொழியறிந்தோர்
> யாராவது சொல்லுங்களேன்
> பசுஞ்சமவெளிகளில்
> பயங்களில்லையென..
>
> >
>
வாழ்த்துகள் அய்யனார்
ஆகா, அய்யனார்... இப்படி அடிச்சு ஆடுறீயேப்பா
//தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது//
எல்லாம் வயசுக் கோளாறு
//
இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
//
:)
//ஆழப் புகைக்கலாம் // ரொம்ப முக்கியம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.
நல்லா வருது வாயில,..
காதலாய் கசிந்துரும் நல்லதொரு கவிதை அய்யனார். எனினும் எழுதிய நம்ம அய்யனார் அப்படீன்னு நினைக்கையில ....
ரோஜாவினைக் கொடுத்து காதலைச் சொன்னேன்
இத்தனை நாளா இதுக்கென சலித்து
நடுரோட்டில் கட்டிக்கொண்டாள
யப்பா, மொத்த புதுவையையும் சுத்தி காட்டுடிவீங்க போல....
புதுவையில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு காட்சி அடிக்கடி காணக்கிடைக்கும்.
காதலி மிதிவண்டியில் போய் கொண்டிருப்பார். காதலன் பைக்கில் அவளது வேகத்துக்கே பக்கத்தில் போய் கொண்டிருப்பார். பேசிக் கொள்ளவும் மாட்டார்கள். பார்த்து கொள்ளவும் மாட்டர்கள் (எனக்கு தூரத்தில் இருந்து அப்படி தான் தெரிந்தது) எங்கோ போய் கொண்டே இருப்பார்கள்.
உங்கள் கவிதைகள் அந்த நாட்களை நினைவுப்படுத்தின அய்யனார் :)
//தினம் கடற்கரைக்கு போவோம்
அதே ரோமண்ட் ரோலன்ட் வளைவில் முத்தங்களோடு பிரிவோம்//
உங்கள மாதிரி ஆட்களாலே தான்யா புதுச்சேரியோட கலாச்சாரமே கெட்டுப்போயிடுச்சு ;)))))))))))))))
காதலி மிதிவண்டியில் போய் கொண்டிருப்பார். காதலன் பைக்கில் அவளது வேகத்துக்கே பக்கத்தில் போய் கொண்டிருப்பார். பேசிக் கொள்ளவும் மாட்டார்கள். பார்த்து கொள்ளவும் மாட்டர்கள் (எனக்கு தூரத்தில் இருந்து அப்படி தான் தெரிந்தது) எங்கோ போய் கொண்டே இருப்பார்கள்.
//செயின்ட் த்ரேஸ் தெருமுனையில்தான்
அந்த சிவப்பு நிற ரோஜாவினை வாங்கினேன்
வழக்கமாய் சந்திக்கும் ரூ டுமாஸ் சாலை முடிவில்
புன்னகைகளோடு காத்துக்கொண்டிருந்தாள்
நேரு வீதி நெரிசலென விரல் பிடித்துக் கொண்டாள்
வெகு நேரம் தாங்கவியலாது
ரோமன் ரோலன்ட் வளைவில் சினிமாத்தனமாய்
ரோஜாவினைக் கொடுத்து காதலைச் சொன்னேன்
இத்தனை நாளா இதுக்கென சலித்து
நடுரோட்டில் கட்டிக்கொண்டாள்//
செயிட்ன் தெரஸ் வீதியில் என்னைக்குய்யா ரோசாப்பூ வித்துருக்காங்க??? நான் அந்த தெருவில் இருக்குற பள்ளியில தான் 12 வருசம் படிச்சேன். ஆனால் அப்படி பூ வித்ததா நினைவேயில்லை. ஒருவேளை நான் அவ்வளவு வெகுளியா இருந்திருப்பேன்.....
சில காலங்களே வசித்தாலும் புதுவை உங்களை நிரம்ப பாதித்திருக்கிறது போலும் ;)
ம்ம்ம், ரோமன்ட் ரோலண்டு வீதியை கடக்க நேரிட்டாலே இனி உங்கள் கவிதையின் நினைவு வரக்கூடும் அய்யனார் :)
பிரேமு, பைகெல்லாம் சைக்கிள் வேகத்துல ஓட்டுவீங்களா???
சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவே யில்ல..
வீட்டுக்காவது தெரியுமா இப்படி ஓட்டுறது?
யோவ் அய்யனாரப்பா... உன் கவிதையை சிலாகிச்சு பேசினா என்னை இப்படி மடக்கி மடக்கி கலாய்க்கிறாங்க.
கலிகாலம்பா
அய்யனார் கிட்ட அரிவாள் வாங்கி பென்சில் சீவணும்
அதை விட்டுட்டு அவரு கவிதை எழுதுனாராம்
இவரு சிலாகிச்சாராம். பொறவு என்ன செய்வாங்க>
கவிதை எழுதுனவரையே என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டிருக்கோம்
இதுல் இவரு வேற?
நேத்து நம்ம 'கோ'வுக்கு போன போட்டு 'யோவ், நம்ம அய்யனார் ஒரே காதல் கவிதையா பொழியிராருன்னு' சொன்னேன்...
'அவர் கல்யாணத்துக்கு வாழ்த்து சொன்ன போதே, கேட்டேன். இனிமே காதல் கவிதை எழுதுவீங்க தானே'ன்னு... இப்போ அது நடந்திருச்சான்னு ரொம்ப சந்தோசப்பட்டாரு !!! ;-)))
ப்ரேம் பெடிட் ல படிச்சிட்டு அப்பாவின்னா நாங்க நம்பனுமாக்கும்... அண்ணாச்சி பேச்சிலர் ரூம் ன்னா அழுக்குத்துணிதான் சிம்பல் அடூர் கோபாலகிருஷ்ணன் சொன்னதுலாம் மறந்துபோச்சா....
ஆகா! அண்ணாச்சி, உங்களுக்கு புதுவை பத்தி இத்தனை விவரம் தெரியும்னு தெரியாம போச்சே!
ஆகா! அண்ணாச்சி, உங்களுக்கு புதுவை பத்தி இத்தனை விவரம் தெரியும்னு தெரியாம போச்சே!அண்ணாச்சி, பெத்தி செமினேர் பசங்க எல்லாம் ரொம்ப நல்ல பயலுவ அண்ணாச்சி.. நம்புங்க!!! :)
* cloud watching a medidation by osho
ஆம்,
உங்கள் கவிதை படிக்கும் போது ஏனோ அத்தகைய நெகிழ்வு ஏற்படுகிறது.
நன்றி ஆதவன்
யானையைப் பார்த்து மிரண்ட உன் விழிகள்
இன்றைய கலையா விழிப்பின் முதல் நினைவானது
தொடர்ச்சியாய்
இருளில் சொல்லப்படும் பேய்க்கதைகளுக்கு
இறுக மூடிக்கொள்ளும் விழிகளும்
கதை மிகவதிக பயங்களாக உருக்கொள்கையில்
தாங்கவியலாது
என் கதைகளைத் துண்டிக்கும்
உன் உதடுகளின்
மெல்லிய நடுக்கமும்
நினைவிலதிர்ந்தது
உதறி விழி திறக்கையில்
சன்னலருகில் சிறகுதிர்த்ததுப் பறந்திருந்தது
நிகழ் சிட்டுக்குருவி
வெறுமனே நல்லாருக்குனு சொல்ல அலுப்பா இருக்குங்க...வேறென்ன சொல்றதுன்னும்
தெரியல..