ennaku piditha MP3

24 பார்வைகள்
படிக்கப்படாத முதல் மெசேஜுக்குச் செல்

Kathir

படிக்கப்படவில்லை,
12 செப்., 2007, 8:55:06 AM12/9/07
பெறுநர் panb...@googlegroups.com
மக்கா...

மனசுக்குள்ள ஹம் பண்ணிகிட்டே இந்த பாட்டை படிச்சி பாருங்க.
ஒரு இதமா உணர்விங்க.

சாமிகிட்ட சொல்லிவச்சு சேர்ந்ததின்ன செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே


சாமிகிட்ட சொல்லிவச்சு சேர்ந்ததின்ன செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே.

கூவாதகுயில் ஆடாதமயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேர தெளிந்தேனே

ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவாற ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே

வந்த துணையே வந்து அணையே அங்கமுள்ள
சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிகிட்ட சொல்லிவச்சு சேர்ந்ததின்ன செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே.

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் நேரம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகந்தானிது போலும் வாழும் வழி கேட்டேன்
வண்ணக்கனவே வட்டநிலவே
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையோ..

சாமிகிட்ட சொல்லிவச்சு சேர்ந்ததின்ன செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே






--
kathir

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
12 செப்., 2007, 9:24:37 AM12/9/07
பெறுநர் panb...@googlegroups.com
லே மக்கா
உன் காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்த :-)




சாமிகிட்ட சொல்லிவச்சு சேர்ந்ததின்ன

சேர்ந்ததிந்த செல்லக் கிளீயே
திங்குறதுலயே இருலே! :-)
 

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் நேரம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகந்தானிது போலும் வாழும் வழி கேட்டேன்
வண்ணக்கனவே வட்டநிலவே
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையோ..

செம பாட்டு. பரதன் இயக்கத்துல வந்த படம். ஆவாரம்பூ. இளையராஜாதான்
இசை. நம்மாளுதான் பாடியிருப்பாரு. அந்த கடலும் கடல் பின்னணியும்..ஆஹா!
இந்தப் படம் மலையாளத்துல 'தகர'ன்னு வந்தது.அந்தக் காலத்து அவளோட ராவுகள் அளவுக்குப் பேசப்பட்டது இந்தப் படம். பத்மராஜன திரைக்கதை - பரதன் இயக்கம் என்ற கூட்டுக்கெட்டில் வந்த ப்டங்கள் எல்லாமே பாலுணர்வைத் தொட்டுச் செல்லும் படங்களாக இருந்தபோதும் மனித மனங்களின் சிக்கலான முடிச்சுகளை எங்கேனும் ஸ்பரிசுக்கும் வகையிலேயே அமைந்திருந்தன என்பதால் பத்மராஜன்-பரதன் கூட்டணி வெகுவாக சிலாகிக்கப்பட்டது. இப்போது இருவருமே இல்லை என்பது மலையாள திரையுலகுக்குப் பெரும் இழப்புதான்
 


பிரேம்குமார் சண்முகமணி

படிக்கப்படவில்லை,
13 செப்., 2007, 1:07:47 AM13/9/07
பெறுநர் panb...@googlegroups.com
மனதை கொள்ளைக் கொள்ளும் பாடல்.  நன்றி கதிர்

Ahamed Zubair A

படிக்கப்படவில்லை,
15 செப்., 2007, 4:12:23 AM15/9/07
பெறுநர் panb...@googlegroups.com
"அழகிய தீயே"ன்னு ஒரு படம் வந்தது..பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த படம்.
 
இசை: ரமேஷ் வினாயகம்.
 
ஆண்டு: 2004
 
 
நேற்று எனக்கு இந்த படத்தின் டிவிடி (தமிழ்ல இன்னாபா???)  கிடைத்தது. இந்த படத்தின் கதையோடு இழையோடும் நட்பின் கைங்கர்யம் என்னை சென்னையின் நந்தம்பாக்கம் அருகில் நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுபடுத்தினாலும், இந்த படத்தில் நிகழ்ந்ததுபோல் காதல், கத்திரிக்காயெல்லம் நமக்கு கொடுத்துவைக்கவில்லை, :-)
 
இந்த படத்தின் அத்தனை பாடல்களும் நம்மை முணுமுணுக்க வைத்தாலும், எனக்கு மிக பிடித்த பாடல் இதோ...
 
 
விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
விழிகளுக்கு அருகிலே வானம் இருப்பதாக கற்பனை கொள்வதும், தூக்கம் தூரச்செல்வதும் காதலின் இயல்பு. காதலின்போது எப்படி இருக்கும் என்ற அதீத கற்பனையாகத்தான் படுகிறது முதல் இரு வரிகள். ஆனால் அடுத்த வரியில் அது ஈடுகட்டப்படுகிறது.
 
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
இங்கே கதாநாயகனின் அறிவின் வெளிப்பாடாகத்தான் "இது ஐந்து புலன்களின் ஏக்கம்" என்ற வரியை எடுத்துக்கொள்ளலாம். காதல் என்பது மனதை மயக்கும் ஒரு மாய வலை. வீழ்ந்தவர்கள் விடுபட துடிக்கிறார்கள், தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அது ரம்மியமாக தெரிந்தாலும் அதன் அபாயம் விழுந்துகிடக்கும் விட்டில் பூச்சிகளுக்குத்தான் தெரியும்...
 
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
 
எப்படித்தான் இப்படிலாம் யோசிக்க முடிகிறதோ, கவிஞர்களால்.
 
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
 
இப்போ ஆரம்பிக்கிறது தான் சரணம்.
 
பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதலியின் பெயர் சொல்வது கூட ஒரு சில கணங்களில் மனம் சொல்லத்துடிக்கும் வார்த்தைகளின் மொத்தப் பிரவாகம் போல் வெளிப்படும். அவள் பேர் சொல்வதால் தித்தித்தேன் என்று நாயகன் சொல்கையில் வயிறு எரியத்தான் செய்கிறது (அப்படி பேர் சொல்லிப்பார்க்க நமக்கு ஆள் இல்லையே)
 
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!

 
தற்போது, எனக்கு மிகப் பிடித்தவரிகளில் மூன்றாமிடம் இதற்கு கொடுப்பேன். அலைகடல் என்று சொல்லும்போது ஒரு பிரம்மாண்டம், அழகு, வசீகரம் என்று பல நம் மனதில் எழும். அதுபோன்ற மனம் துளித்துளியாய் சிதறுதல் என்பது காதலால் எனும்போது வார்த்தைகளின் மீது ஒரு மரியாதை பிறக்கின்றது.
 
 
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
 
என்ன வரிகள்.. ஒருமுறை கண்மூடி இந்த பாடலைக்கேட்கும்போது உள்ளுக்குள் ஒரு உற்சாகம் புகுவதை தடுக்கமுடியாது..
 
 
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
எனக்குப்பிடித்த பாடல் வரிகளில் முதலாவது "ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்" - பாய்ஸ் படத்தின் பாடல்..
இரண்டாவது பிடித்த வரியாக - "இருதயமே துடிக்கிறதா? துடிப்பது போல் நடிக்கிறதா?".
 
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
 
 
மீள வழி இருப்பினும், மனம் விரும்பாது!!!! -- இது தானோ காதல்???
 
 
 
அன்புடன்,
 
சுபைர்

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
15 செப்., 2007, 11:36:04 AM15/9/07
பெறுநர் panb...@googlegroups.com

 
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
 
 
 
அழகான பாடல் அருமையான வரிகள்
நான் மிக ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
 
மீள வழி இருந்தும் மனமின்றி மாட்டிக் கொள்வதுதானே காதல்?
 
ஒரு பெண்ணின் நினைவு கத்தி இல்லாமல் கொய்யும்போது
எப்படி சாமி மீள முடியும்?
 
போச்சு.போச்சு. இன்னைக்கு தூங்குன மாதிரிதான் :-)
 

 

Jazeela Banu

படிக்கப்படவில்லை,
16 செப்., 2007, 2:51:40 AM16/9/07
பெறுநர் panb...@googlegroups.com
 
இந்த படத்தின் அத்தனை பாடல்களும் நம்மை முணுமுணுக்க வைத்தாலும், எனக்கு மிக பிடித்த பாடல் இதோ...
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!

 
உண்மைதான் அத்தனை பாடல்களும் இனிமைதான். இந்த பாடல் எனக்கும் ரொம்ப்ப்ப்ப பிடிக்கும். வரிகள், இசை, குரல், காட்சியமைப்பு எல்லாமே ரொம்ப பொருந்தி அமைந்த பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி ஜுபைர்.

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
28 ஜூன், 2008, 3:39:37 AM28/6/08
பெறுநர் panb...@googlegroups.com
ஒரு காலத்தில் கதிரால் துவங்கப்பட்டு அபப்டியே உறங்கைப் போன இழை
இப்போது இந்த இழையை உங்கள் அபிமான, விருப்ப பாடல்களால் நிரப்புங்கள்.

"அழகிய தீயே"ன்னு ஒரு படம் வந்தது..பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த படம்.
 
இசை: ரமேஷ் வினாயகம்.
 
ஆண்டு: 2004

காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!

 
தற்போது, எனக்கு மிகப் பிடித்தவரிகளில் மூன்றாமிடம் இதற்கு கொடுப்பேன். அலைகடல் என்று சொல்லும்போது ஒரு பிரம்மாண்டம், அழகு, வசீகரம் என்று பல நம் மனதில் எழும். அதுபோன்ற மனம் துளித்துளியாய் சிதறுதல் என்பது காதலால் எனும்போது வார்த்தைகளின் மீது ஒரு மரியாதை பிறக்கின்றது.
 

M.RISHAN SHAREEF

படிக்கப்படவில்லை,
28 ஜூன், 2008, 3:43:17 AM28/6/08
பெறுநர் panb...@googlegroups.com
என்னை எப்பொழுதும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல் என்றால் இதுதான்.
ரமேஷ்விநாயகத்தின் மென்மையான குரல் பாடலை மேலும் அழகூட்டுகிறது.இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.
அடுத்து வரிகள்..
 
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
 
காதல் கொண்ட ஒரு இளைஞனின் அத்தனை மன உணர்வுகளையும் மிக அழகாகச் சிலவரிகளில் எடுத்துரைக்கிறது வரிகள்.வரிகளுக்குச் சொந்தக்காரர் யாரெனத் தெரியவில்லை.அவருக்கும் ஒரு கை குலுக்கல்.
--
http://mrishanshareef.blogspot.com/
http://rishanshareef.blogspot.com/
http://mrishansharif.blogspot.com/
http://mrishaanshareef.blogspot.com/
http://msmrishan.blogspot.com/
http://rishansharif.blogspot.com/
http://mrishan.blogspot.com/
http://mrishans.blogspot.com/

பிரேம்குமார்

படிக்கப்படவில்லை,
1 ஜூலை, 2008, 1:07:50 AM1/7/08
பெறுநர் panb...@googlegroups.com

தூங்கிய இழையொன்றை மீண்டும் உயிர்ப்பித்தமைக்கு நன்றி அண்ணாச்சி. எனக்கு ரொம்ப நாளாக இருந்த வினாவை இந்த இடத்தில் எழுப்புகிறேன்

'ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்' என்பது இலக்கணப்படி சரியா?

ஒவ்வொரு பல்லிலுமே சிரித்தேன் என்றல்லவா வர வேண்டும்?

lucky shajahan

படிக்கப்படவில்லை,
1 ஜூலை, 2008, 2:14:07 AM1/7/08
பெறுநர் panb...@googlegroups.com
நியாயம்தான்.. ஆனால் இந்த தப்புக்கு முன்னரே பல்பேர் இதை செய்திருக்கிறார்கள்..
 
வள்ளுவர் கூட
 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு..
 
எல்லா விளக்கும் என்று எப்படி வரும்.. எல்லா விளக்குகளும் என்பதுதானே சரி?
 
கவிஞர் வைரமுத்து எல்லா நதியிலும் என் ஓடம் என்று எழுதியிருக்கிறார்..
எல்லா நதிகளிலும் என்பது தானே சரி..
 
பாட்டன் செய்த தப்பை - அப்பன் செய்த தப்பை - இன்று கபிலனும் செய்திருக்கிறார்.. (தலைமுறை தொடர்ச்சி.. ?)
 
கவிதைதானே இரசிச்சிட்டுப் போங்க பிரேம்ஜி.. அனுபவிக்கனும் ஆனா
ஆராயப்படாது.. :-)

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
1 ஜூலை, 2008, 10:50:00 PM1/7/08
பெறுநர் panb...@googlegroups.com

கவிதைதானே இரசிச்சிட்டுப் போங்க பிரேம்ஜி.. அனுபவிக்கனும் ஆனா
ஆராயப்படாது.. :-)

அதெல்ல்லாம் சரிதான் லக்கி ஷாஜஹான்
அனா நீங்க ரொம்ப அனுபவிசுக்கிட்டே இருக்காம நீங்க அனுபவிச்சதை எங்களோடயும்  பகிர்ந்துக்கணும். ஆராய்ச்சி செய்ய மாட்டோம்கறதுக்கு நான் உத்தரவாதம் :-)

Ahamed Zubair A

படிக்கப்படவில்லை,
21 ஜூலை, 2008, 11:23:05 AM21/7/08
பெறுநர் panb...@googlegroups.com

பாடல் : காதல் வைத்து காதல் வைத்து
படம் : தீபாவளி
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : விஜய் யேசுதாஸ்
வரிகள் : நா.முத்துக்குமார்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

//காதல் என்பதை எப்படி வைத்திருக்க இயலும்??? அது பரிமாறப்பட வேண்டும்.. ஆனால் பரிமாறுதல் என்பதும் வாங்குபவர் இருந்தால் தானே சாத்தியம்..அதற்காக காத்திருக்கிறான் காதலன். காற்று, அனைத்து ஒலியையும் கடத்தும் ஊடகம். அதில் அவள் கூரல் மட்டும் எப்படிக் கேட்கிறது.. வேறு எந்த சத்தமும் கேட்காமல்//
 
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
 
//காதலி சிரிக்கும் ஓசை காதலனுக்கு இசையை கற்றுக்கொடுக்கிறதோ?? அவள் நடக்கும் பாதை பார்ப்பதே அவனுக்கு திசையாகிறது. பள்ளியில் கிழியக்கூடாத இடத்தில் கிழிந்திருக்கும் டவுசரை ஊக்கு போட்டு மாட்டிவிட்டு, திசை பற்றி கையைக்கட்டிக்கொண்டு படித்த பாடம் மனநிழலில்.
 
"கதிர் முளைப்பது கிழக்கு
அதன் எதிர் இருப்பது மேற்கு" என்று.. இங்கே திசை காட்டும் காரணி சூரியன்.. அதுபோல் இந்த பாடலில் காதலனுக்கு காதலி...// 
 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
( காதல் வைத்து )

தேவதை கதை கேட்ட போதெல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

//இந்த பாடலில் இந்த சந்தம் வரும் போது பாவனாவை அத்தனை அழகாக காட்டுவார்கள். ஆரஞ்சு நிற தாவணியில், தலைசூடிய மல்லிகையில் தேவதைதான்..//
 
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்
( காதல் வைத்து )
 
உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்,
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்,
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
( காதல் வைத்து )
 
//இந்த பாடலை கேட்கும் பொதெல்லாம் உள்ளுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதை உணர்கிறேன்.//

lucky shajahan

படிக்கப்படவில்லை,
21 ஜூலை, 2008, 11:28:39 AM21/7/08
பெறுநர் panb...@googlegroups.com
இன்னும் நீ தீபாவளியை விட்டு வெளியே வரலையா..?
மறு தீபாவளி வரப்போகுது....
 
தம்பி பாட்டு நல்லா இருக்குன்னு சொல்லிட்டு திருப்பி பாவனா பத்தியே பேசுறியே..
எப்பப்பா திருந்துவ நீ....?
 
///இந்த பாடலை கேட்கும் பொதெல்லாம் உள்ளுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதை உணர்கிறேன்.//
 
ஆஹா வந்திருச்சி... அப்பா கிட்டே சொல்லி வைக்கிறேன்..
 
2008/7/21, Ahamed Zubair A <ahamed...@gmail.com>:

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 2:56:31 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com
எனக்கும் தீபாவளி பாட்டு ரொம்பப் பிடிக்கும் சுபைர்

'ஏ தீபாவளி
தீபாவளி
தீபாவளி நீதாண்டி'

'ஏ சூறாவளி
சூறாவளி
சூறாவளி நீதாண்டா'

என்ன் அற்புதமான பாடல் தெரியுமா?
ங்கொய்யால... பேரரசுவுக்கு ஏன் இன்னமும் கவிப்பேர்பேரரசுன்னு பட்டம் கொடுக்காம
இருக்காங்க்கன்னு புரியலை.

என்னோட ஆசை இதுதான்

பேரரசு இயக்கத்தில் அகிலாண்ட நாயகன் ரித்தீஷ் நாயகனாகவும்
டி.ஆர் வில்லனாகவும் நடிக்கணும். அதை பண்புடன் மக்களையெல்லாம் கட்டிப் போட்டு
பார்க்க வைக்கணும்.எப்படி நம்ம நல்லெண்ணம்? (இழை திசை மாறிடுமோ?)

2

M.Rishan Shareef

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 3:00:29 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com




//என்னோட ஆசை இதுதான்


பேரரசு இயக்கத்தில் அகிலாண்ட நாயகன் ரித்தீஷ் நாயகனாகவும்
டி.ஆர் வில்லனாகவும் நடிக்கணும். அதை பண்புடன் மக்களையெல்லாம் கட்டிப் போட்டு
பார்க்க வைக்கணும்.எப்படி நம்ம நல்லெண்ணம்? (இழை திசை மாறிடுமோ?) //
 
சூப்பர் நல்லெண்ணம் அண்ணாச்சி...ரித்தீஷ் எல்லாம் தேவையில்லைங்க..பேரரசுவே ஹீரோவா பண்ணட்டுமே ?
 

2

 

எழில்

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 3:06:39 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com
அண்ணாச்சி இருந்தாலும் உங்களுக்கு எங்க மேல எவ்வளவு பாசம்!!!
 
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!


--
நட்புடன்,
எழில்

http://ezhilbharathi.blogspot.com/

எழில்

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 3:18:42 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com


சமிபத்தில் நம்மை அனைவரையும் தன் இசையாலும் வார்தைகளாலும் கைது செய்த பாடல்...
 
கண்கள் இரண்டால்!!!!
 
திரைப்படம்:சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை
 
 
 
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லயே இதில் ஓசை இல்லயே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌

மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌

கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறோர் நினைவில்லை

இனி இந்த ஊணுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வாழ‌

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
எனை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லயே இதில் ஓசை இல்லயே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 3:23:30 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com
அழகான பாடல் எழில்
இந்த்ப்பாடலை தரவிறக்கம் செய்ய வழியிருக்கிறதா?
சென்னையில் இதன் ஒலித்தகடு கிடைக்கவில்லை :-(
நான் இருந்த போது

NilaRaseegan

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 3:24:59 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com
இந்தப்பாடலை பாடியவர் மஞ்சூர் அண்ணாவின் உறவினர். இவரும் இணைய குழும சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தப்பாடலையும் பாடினார் :)

2008/7/22 Asif Meeran AJ <asifm...@gmail.com>:



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://www.nilaraseeganonline.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

M.Rishan Shareef

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 3:30:55 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com
இந்தப்பாடலைப் பாடிய பாடகர்,பாடகி பெயர் என்ன ?

எழில்

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 3:40:41 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com
பாடகர்: பெல்லி ராஜ்
பாடகி:  தீபா மரியம்



 
--

M.Rishan Shareef

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 3:43:34 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com
நன்றி எழில்..
 
பெல்லி ராஜ் ? இவர் சிவாஜியிலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் தானே?

 
--
WWW.MRISHANSHAREEF.TK
WWW.RISHANSHAREEFPOEMS.TK

கார்த்திக்

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 8:27:43 AM22/7/08
பெறுநர் பண்புடன்
// இந்த்ப்பாடலை தரவிறக்கம் செய்ய வழியிருக்கிறதா?
சென்னையில் இதன் ஒலித்தகடு கிடைக்கவில்லை :-( //

http://www.123musiq.com/Subramaniapuram.htm

Tamizh Raseegai M

படிக்கப்படவில்லை,
22 ஜூலை, 2008, 11:32:36 AM22/7/08
பெறுநர் panb...@googlegroups.com
இந்த பாடலை
www.minnalstar.com -ல் இருந்து தரவிறக்கம்
செய்து கொள்ளலாம்....

 

Asif Meeran AJ

படிக்கப்படவில்லை,
23 ஜூலை, 2008, 1:03:22 AM23/7/08
பெறுநர் panb...@googlegroups.com
நன்றி நண்பர்களே!!
வயிற்றில் மோர் வார்த்ததுக்கு.
(இங்கே வெயில் அதிகம். அதனாலதான் :-)


இந்த பாடலை
www.minnalstar.com -ல் இருந்து தரவிறக்கம்
செய்து கொள்ளலாம்....

 
எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு
0 புதிய மெசேஜ்கள்