அபத்தம் பற்றி வேந்தன்
சொல்லியிருந்தார் அதன்
பொருள் குறித்து வேறு
யாரையும் விட வேந்தனுக்கு
நன்கு தெரியும் போல்
இருக்கிறது... விளையாட்டு
இருக்கட்டும்...
1947லிருந்து இந்தியாவில்
கம்யுனிசம்
நடைமுறைப்படுத்தப்படுகீறது
என்பது ஆளும் வர்க்கம்
பரப்பு ஒரு அருமையான
வதந்தி. இது குறித்து
மேலதிகமாக தெரிய
விரும்புகிறாவர்கள் பின்
வரும் எனது கட்டுரையை
படிக்கவும்(1947 களிலேயே
கோகோகோலா அதிக்கம்
செலுத்தத் தொடங்கிவிட்டது
-
http://kaipulla.blogspot.com/2006/06/life-line-of-expired-capitalism_...).
ஏகாதிபத்தியம், சுரண்டலை
விட்டால் வாழ முடியாது
என்பது பாவம் சமூகத்தின்
இயங்கியல் புரியா டாலர்
பாண்டியர்களுக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
*********
வேந்தனின் இந்த
வாதத்துக்கு மட்டுமே எனது
பதில் தேவைப்படுகிறது.
//நமக்கு தெரிந்த விடுதலை
என் ஊரின், மாநிலத்தின்,
நாட்டின் ஆட்சி
பொறுப்பில்,
பொதுவுடைமை தோழர்கள்
உட்பட, யார் இருக்க
வேண்டும், நான் எங்கு
சென்று
குடியிருக்க வேண்டும்,
நான் என்ன படிக்க வேண்டும்,
என்ன தொழில் செய்ய
வேண்டும்,
நான் சேர்த்த காசை எப்படி
செலவிட வேண்டும், நான்
யாருடன் இன்றைய பொழுதை
கழிக்க
வேண்டும், நான் எந்த மதத்தை
தழுவ வேண்டும், எந்த சாமியை
கும்பிட வேண்டும்.
எனக்கு தோன்றிய கருத்தை
அச்சமின்றி சொல்ல வேண்டும்
என பலவாக, நாம் பெற்ற
உரிமைகளே. அவை இன்று
இந்தியாவில் இல்லையா?
அவர்களுக்கே வெளிச்சம்.
//
இது அத்தனையும் இன்றைய
அமைப்பை
கேள்விக்குள்ளாக்காமல்
செய்யலாம். இதே சுதந்திரம்
ஆங்கிலேயன் காலத்திலும்
இருந்தது. அன்றும் தேர்தல்
நடந்தது, மதம் இருந்தது,
தொழில் செய்யலாம்(இன்றைய
நிலை போலவே), படிக்கலாம்
சிற்சில வேறுபாடுகள்
இருக்கின்றன. இல்லையென்று
சொல்லவில்லை. அந்த பாரிய
வேறுபாடுகள்
இருப்பதனால்தான் இன்னும்
விடுதலை பெறவில்லை என்ப்தை
புரிய வைப்பதற்க்கு
பதிவுகளில் வாதாட
வேண்டியுள்ளது. கவலைப்பட
வேண்டாம் கூடிய விரைவில்
அந்த சிற்சில ஜன நாயக போலி
வெளி முகமூடிகளும் களைந்து
விடும்.
கோக் ஒரு ஆலை... அதுவும் சோடா
தயாரிக்கும் ஆலை. அந்த ஆலை
வருவதால் தண்ணீர்
மாசுபடும் அதை வரவிடாதே
என்று சொல்லி சுவரொட்டி
ஒட்டியவருக்கு(மக்கள் கலை
இலக்கிய கழகம்) சதி
வேலையில் ஈடுபட்டதாக் 3
மாதம் சிறை(இதே போல
தர்மபுரியில், வேலூரில்
சிலர் சிறை
வைக்கப்பட்டனர்). அந்த
சுவரொட்டியில் இருந்த
வாசகங்கள்:
"அமெரிக்க கோக்கே வெளியேறு,
--- ல் கோக் மற்றும்
பன்னாட்டு பொருட்கள்
எதிர்ப்பு போராட்டம்"
இதே கோக்கின் ஆபத்துக்களை
அம்பல்ப்படுத்தி படம்
எடுத்தார்கள்
த.மு.எ.ச(தேர்தல்
கம்யுனிஸ்டுகள்). மூழ்கும்
நதி என்று பெயர். இந்த
திரைப்படத்தை திரையிட தடை
போட்டது போலிசு.
கங்கை கொண்டான் கிராம
பஞ்சாயத்தில் கோக் ஆலையை
எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்ற முடிவு
செய்தார்கள். இதை உளவுத்
துறை மூலம் மோப்பம்
பிடித்த கோக் Factory full time
வாட்ச்மேன் 'கலெக்டர்',
இந்திய ஜன நாயகத்தீன்
அடையாளம் என இராஜீவ்
காந்தி தூக்கிப் பிடித்த
கிராம சபை கூடுவதற்க்கே
தடை போட்டு விட்டார்...
சூப்பர் ஜன நாயகம் போங்க்....
இதை மீறி குடியரசு
தினமன்று கூட்டத்தை
கூட்டியே தீரவேண்டிய
சூழலில் மக்கள் கோக்கை
எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்றினார்கள். கோக்
அந்த கவுன்சிலர்களை
அடுத்த் வாரம் கடத்தி
சென்று வேறு இடத்தில்
இன்னொரு தீர்மானம்
நிறைவேற்றியது.
இந்த ஜன நாயகத்தில் அதிக
பட்சம் உங்களால் கிசு
கிசுக்கள் மட்டுமே எழுத
முடியும்.
சரி கீழ்மட்டத்தில் இப்படி
என்றால் மேல்மட்டத்தில்
எப்படியுள்ளது?
ஊழலை அம்பலப்படுத்திய
தெகல்கா மீது போலிசு கேசு.
பாராளுமன்றத்தில் விவாதம்
இது பற்றி. மாட்டிக்கிட்ட
மக்கள்(??) பிரதி நிதிகளை
பற்றியல்ல விவாதம். மாறாக
இனி இது போல கேமார வைச்சி
படம் பிடிச்சு மக்கள்ட்டா
மாட்டி வுடுறது தடுக்க
கிரிமினல் சட்டம் கொண்டு
வரனும்னு விவாதம்.
இதே கேப்புல இரண்டு முறை
சம்பள உயர்வு. ஆனா இதே
கேப்புல குரல்
வாக்கெடுப்பு மூலமா
நிறைவேறிய சட்டங்கள்:
விதை நெல் சீர்திருத்த
சட்டம், மகாராட்டிர
தண்ணீர் ஒழுங்குமுறை ஆணயச்
சட்டம்(இரு குழந்தைக்கு
மேல இருந்தா ட்புள் சார்ஜ்
வேற), சூப்பர் டூப்பர் அணூ
அயுத ஒப்பந்தம்(இப்ப
ரிசண்டாத்தான் சட்டி
கிழிஞ்சு அம்மனாமா
தொங்கிச்சு), இந்திய
ராணுவத்த அமெரிக்க கூலிப்
படையாக்கும் ராணுவ
ஒப்பந்தம், நதிகளை தனியார்
நிறுவணங்களுக்கு எழுதி
வைப்பது(தமிழ் நாட்டில்
தஞ்சையில் ஒரு நதி, யமுனா to
தேம்ஸ் டெடொரண்ட் etc),
முக்கியமா பேடட்ண்ட்
ரைட்ஸ்(இத போட்டவுடனே
கான்சர் மருந்து 250 ரூ
லிருந்து 750 ரூவாய்க்கு
போனது) இன்னும் இது மாதிரி
இன்னும் சில ஆப்புச்
சட்டங்கள் இது எல்லாமே
பாரளுமன்றத்தில்
/சட்டமன்றத்தில் விவாதம்
செஞ்சி போட்ட பட்டவை அல்ல...
இவை எல்லாவற்றிலும் முன்பே
அதிகாரிகள் சுற்றுலா
செல்கிறோம் என்பது போல பல
பொய் காரணங்களை சொல்லி
வெளி நாடு சென்று
கையெழுத்திட்டு பிறகு
பாரளுமன்றம்,
சட்டமன்றத்தில் ரப்பர்
ஸ்டாம்பு குத்தி
செயல்படுத்தப்பட்டவை.
வேந்தனும் அவரது சகலப்
பாடிகளூம் ஏதேனும் ஸ்பெஷல்
தேர்தலில் வாக்கு குத்தி
இந்த அதிகாரிகளை
தேர்ந்தெடுக்கிறார்களா
என்று தெரியவில்லை. நான்
கேள்விப்பட்டவரை இவர்கள்
வெறும் கல்வித் தகுதியின்
அடிப்படையில் வரும்
மெக்காலேயின் productகள்.
இதைத்தான் இவர் ஜன நாயகம்
என்று சொல்கிறாரா?
அம்மாவோட எடுப்பு ஓ.பி.
பன்னீர் செல்வன் ஆட்சி
செய்த போது விவசாயிகள்
இலவச மின்சாரம் கேட்டாங்க.
அப்ப பொன்னுச்சாமிதான்
மின்சார அமைச்சர். அவர்
சொன்னார்- "உலக வங்கி இலவசமா
மின்சாரம்
கொடுக்ககூடாதுங்கிது ,
நான் என்ன செய்ய?"
இப்படி சோக்காளிகளையே
அப்பாவிய வாய்விட்டு
காட்டிக் கொடுத்தார் அந்த
அனுபவ குறைவான அமைச்சர்.
அவர் அப்பாவியான்
மொள்ளமாறி. இவை அனைத்தும்
தெரிந்தும்,
பத்திரிக்கைகளில், பல
ஊடகங்களில் இது பற்றி
தொடர்ந்து படித்தும் இதனை
மறைத்து பேசும் அல்ப
ஜீவன்களை என்னவென்று
பெயரிட்டு அழைப்பது??
அல்லது உலக வங்கி கூட
அடுத்த தேர்தலில் போடியிட
செய்யலாமா? இதத்தான்
அவிங்க யோசிச்சிகிட்டு
இருக்காங்க. சமீபத்தில்
வால்ஸ்டிரிட் ஜெர்னலில்
ஒரு கட்டுரை வந்தது: இந்திய
தேர்தல் தேவையில்லாம
பிசினஸ கெடுக்குது அதனால்
அத்த சட்டுபுட்டுன்னு
முடிக்கிற
வழியப்பாருங்கப்பான்னு
சொல்லி...
அடுத்த ஒரிரு மாதங்களில்
இங்கு நடந்த தேர்தல் ஒரே
மாதத்தில் நடத்தப்பட்டன.
இப்போ அந்த பத்திரிக்கை,
இந்திய அரசின் முடிவுகளை
தீர்மானிக்கும் உரிமை அந்த
மக்களுக்கு மட்டுமே
உரியது? இந்தியாவில்
முதலீடு செய்யும்
கம்பேனிகளும் கூட
பாதிக்கப்படுவார்கள், எனவே
அவர்களுக்கும் பிரதி
நிதித்துவம் வேண்டும்
என்று எழுதியுள்ளது. இது
நடக்கும் நடக்காதது
ஒன்றுமில்லை....
ஏனெனில் ஒரு பக்கம்
மருந்து கிடைக்க விடாமல்
மக்களை அவதிபடுத்திய
பேடண்ட் ரைட்ஸ் சட்டத்தை
இயற்றிய அரசு அதே கையோட
அந்த ஏழை சிக்காலிகள(
நோயாளிகள்) அமெரிக்க
கம்பேனிகள் தங்களது புது
மருந்துகள போட்டு
ப்ரிசொதிக்கும் சோதனச்
சாலை எலிகளா பயன்படுத்தும்
சட்டமும்
இயற்றியிருக்கிறார்கள்.
இந்த போலி ஜன நாயக
விசயங்களைத்தான் 'அடிமை
நாடும் போலி சுதந்திரமும்'
கிற இந்த கட்டுரையிலும்
பேசியிருக்கிறது. அதில்
ஒன்றைக் கூட பதில்
சொல்லாமல் தலைப்புக்கு
மட்டும் பதில் சொல்லும்
வேந்தனின் திறமை.... சும்மா
சொல்லக் கூடாது சூப்பர்....
அப்பு... எதிராளிக்கு நாங்க
ஆப்பு வைக்கிறதுல பழைய
அப்பாவி கம்யுனிஸுடுகள்
கிடையாது.... சும்மா சுழட்டி
சுழட்டி சொருகும் புதிய
கம்யுனிஸ்டுகள்...
அசுரன்.
இது பற்றிய விலாவாரியா
இங்கன எழுதிருக்கேன்
படிச்சு புன்னியம்
தேடிக்கோங்க:
India become Supper Power - Indians become Super Poor ==>
http://kaipulla.blogspot.com/2006/08/india-become-supper-power-indian...
Indian Freedom and Imperialism - Immediately after August 15 ==>
http://kaipulla.blogspot.com/2006/06/life-line-of-expired-capitalism_...
Dog-bite-rabies-vaccine-in-ghbeware ==>
http://kaipulla.blogspot.com/2006/05/dog-bite-rabies-vaccine-in-ghbew...
I-am-exposedheeehhehe-dont-seex-rated
http://kaipulla.blogspot.com/2006/04/i-am-exposedheeehhehe-dont-seex-...
milesstones-of-this-week-focus-great
http://kaipulla.blogspot.com/2006/04/milesstones-of-this-week-focus-g...
mncs-again-they-are-fishing-indians
http://kaipulla.blogspot.com/2006/03/mncs-again-they-are-fishing-indi...
parliament-mp-are-for-sale-summer
http://kaipulla.blogspot.com/2006/03/parliament-mp-are-for-sale-summe...
***********
//அதனால் இன்றைய கல்லூரி
மாணவர்கள்
முன் எப்போது இல்லாத நல்ல
நம்பிக்கையை
எதிர்காலததின் மேல்
கொண்டுள்ளார்கள்.
//
ஆமாம் ரயில்வே காலசி
போஸ்டுக்கு சில ஆயிரம்
இஞ்னியர்களும், சில நூறு mba
க்களும் விண்ணப்பிச்சு
மக்கள் மேற்காமே நகர
ஆரம்பிச்சுட்டாங்க.... அய்யா
கொஞ்சம் செய்திகள படிக்க
நேரம் ஒதுக்குங்க...
இல்லயின்னா என்னோட
ஆங்கிலப் பதிவுகள படிங்க.
கலைஞ்ர்தான் அந்த திட்டத்த
சமுத்துவ புரம் சமாதான்
புரம்னு சுருக்கி குறுக்கி
பே... பெப்பேன்னு கையை
விரிச்சுட்டாரே... அது உங்க
கண்ணூல படலையா?
பத்து ஆண்டுகளில் என்ன
மாற்றம் நிகழ்ந்துள்ளது
என்பதைத்தான் செல்வனின்
அவதூறு பதிவுக்கு பதிலாக
போட்டுள்ளேன். இந்த
தளத்தில்தான் அதுவும்
உள்ளது உங்கள் வலுவை
அங்கேயும் வந்து
காட்டவும்.
இந்த 10 வருசத்தில இந்தியா
அடைஞ்ச வளர்ச்சில ஓவரா
அனுபவிச்சுட்டு இனிமே
அனுபவிக்க ஒன்னுமில்லன்னு
தெரிஞ்சுக்கிட்டுத்தான்
விவசாயிகள் கொத்து கொத்தா
சாவுறாங்க..... ஹா ஹாஅ......
அய்யோ.... அய்யோ....
அசுரன்