Account Options

  1. Sign in
Google Groups Home
« Groups Home
அடிமை நாடும், போலி சுதந்திரமும்
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  Messages 26 - 50 of 55 - Collapse all  -  Translate all to Translated (View all originals) < Older  Newer >
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
CAPital Z  
View profile  
 More options Sep 9 2006, 6:43 pm
From: "CAPital Z" <capit...@gmail.com>
Date: Sat, 9 Sep 2006 18:43:03 -0400
Local: Sat, Sep 9 2006 6:43 pm
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

என்னது.. சின்னப்புள்ளத் தனமால்ல இருக்குது..
--
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 11 2006, 6:03 am
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 03:03:58 -0700
Local: Mon, Sep 11 2006 6:03 am
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
 //மகிழ்சிங்கறது ஆளாலுக்கு
வேறுபடுது சிலருக்கு
அமெரிக்காவை புகழ்ரது
மகிழ்வானதுதான் அசுரன்
//

சரியா சொன்னீங்க தியாகு

*******

CAPital Z,

//சரி புரட்சி அமைப்பு ஒன்று
இல்லை என்று சொன்னால்
சரியாகுமா?  புரட்சி
அமைப்பு
என்பது ஒரு சட்ட பூர்வமாக
உருவாவது இல்லை. //

அப்படி ஒரு மாயை எனக்கும்
இல்லை :-)..

//புரட்சி அமைப்பை வெளியில்
இருப்பவர்கள் உருவாக்க
இயலாது.  அது உள்ளிருந்து
[இந்தியாவில்] தான் உருவாக
வேண்டும். //

மிகச் சரி....

//ஆகவே எந்த ஒரு
அரசியல் கட்சியாலும் இதை
செய்ய இயலாது.  வாக்கு
கேட்டு தேர்தலில் நிற்கும்

கட்சி உதவி செய்யலாம்,
ஆனால் அது அந்த அரசியல்
நோக்கத்திற்காகவே
இருக்கும்.
ஆகவே, அரசியலில் இல்லாத
அமைப்பு தான் புரட்சியை
செய்து முடிக்கலாம். //

நீங்கள் தேர்தல்
அரசியலையும் புரட்சிகர
அரசியலையும்
குழப்புகிறீர்கள் என்று
அஞ்சுகிறேன். வோட்டுப்
பொறுக்கி கட்சிகளால்
மக்களுக்கு எந்த
காலத்திலும் விடிவு இல்லை
என்று சொல்லுமிடத்து
நீங்கள் சரியாகவே
உள்ளீர்கள். ஆனால் அரசியல்
என்பது தேர்தல்
சம்பந்தப்பட்டது என்ற
புரிதலில் நிற்க்கும் போது
தவறு செய்கிறீர்கள்.
அரசியல் என்பது அரசு
பற்றிய இயல்... அவ்வளவுதான்.
அரசு என்பது - ராணுவம்,
போலிசு, நீதிமன்றம்,
சிறைச்சாலை,
அதிகாரவர்க்கம் இணைந்த ஒரு
அமைப்பு. இது மனித
சமூகத்தின் புராதான வடிவ
அரசுக்கும் பொருந்தும்.

//கஷ்டம் வந்த பின் தானே ஐயா
புரட்சி செய்வார்கள்.
கஷ்டம் இல்லாத போது ஏன்
புரட்சி செய்ய வேண்டும்? //

கஸ்டம் ஒரு முக்கியமான
காரணி என்பதை நான்
மறுக்கவில்லை. அது மட்டுமே
ஒரு காரணியல்ல
என்பதைத்தான்
வலியுறூத்தினேன். அதைவிட
முக்கியமான காரணியாக ஒரு
புரட்சிகர அமைப்பே உள்ளது.
ஒரு புரட்சிகர அமைப்பு
இல்லையெனில் எந்த
காலத்திலும் புரட்சி
இல்லை. சில பல கலகங்களுடன
அமுங்கிப் போகும்.

இந்தியாவில்
கஸ்டத்திற்க்குப் பஞ்சம்
கிடையாது என்பதை, அதாவது
புரட்சிக்கான ஒரு காரணி
வலுவாக உள்ளதை இங்கு பதிவு
செய்து கொள்கிறேன்.
இன்னொரு காரணியான
புரட்சிகர அமைப்பு இல்லை
என்பதுதான் பிரச்சனை.

 கஸ்டம் என்பதான் விளக்கம்
ஆளூக்காள்,
வர்க்கத்திற்க்கு
வர்க்கம் மாறுபடுகிறது.
ஒரு சின்ன உரிமை
பிரச்சனையே ஒரு தொழிலாளியை
போராடச் செய்ய போதுமானது
ஆனால் அதே ஒரு
தாழ்த்தப்பட்ட சாதியை
சேர்ந்த விவசாயியோ சாவே
வந்தால் கூட தன்னைத் தானே
குற்றம் சொல்லிக் கொண்டு
சும்மா இருப்பதுதான்
இந்திய மரபு. மேலும் கஸ்டம்
என்பதை மக்கள் முதல் முறை
குற்றம் சொல்வார்கள்
அடுத்தடுத்து பழகிப் போய்
அதை வெறும் கிசு கிசு,
காமெடி செய்யும் அளவில்
விமர்சிப்பார்கள். இதை
'இந்தியாவில் மட்டுமே
சாத்தியம்' என்ற பெயரில்
வரும் விளம்பரங்கள்,
புகைப்பட
காமேடிகளிலிருந்து
புரிந்து கொள்ளலாம்.

//புரட்சிக்கு முதலாவது
மக்கள் பலம். ///
முதலாவது என்ன.. முற்று
முதலாக இதுதான் ஒரே பலம்....
மக்கள்தான் எல்லாம் என்றூ
சொல்கிறார் மாவோ. அவர்
மேலும் சொல்கிறார்:
"நாம்தான் பல நேரங்களில்
சிறுபிள்ளைத்தனமாக
இருக்கிறோம்..." என்று.

//இருக்க முடியும்?
வேலையில்லாப் பட்டதாரிகள்!
//

இது முதல் தவறு. புரட்சி
செய்யக் கூடியவர்கள் -
உழவர்களும்,
தொழிலாளர்களூம்
நடுத்தர வர்க
அறிவுஜீவிகளின் சித்தாந்த
பலம் என்பது ஒரு புரட்சிகர
அமைப்பின் முக்கிய பலம்
என்பதும் மறுக்கவியலாத
உண்மை.

வேலை உத்திரவாதமில்ல,
உரிமைகள் மறூக்கப்பட்ட
தொழிலாளர்கள்,
எதிர்காலத்தில் இதே நிலையை
அடைய உள்ளா நிகழ்காலத்தில்
சில அடிப்படை உரிமைகளை
பறிகொடுத்த தகவல் தொழில்
நுட்ப தொழிலாளர்கள்,
தொழில் நசிவடைந்து
தொழிலாளாயாக தள்ளப்படும்
சிறூ முதலாளீகள்,
இவர்கள்தான் அமைப்பின்
சித்தாந்த வாய்ப்புள்ள்
பலம். ஏனைய
வர்க்கத்திலிருந்தும்
ஆட்கள் அரிதாக வருவார்கள்

//நல்ல கல்வி
கற்றவர்கள்.  நற்சிந்தனை
உதிக்கக்கூடியவர்கள். //

இதுவும் மிகச் சரி.

//பலர் இன்றும்
பொருளாதாரத்தில் மிகவும்
ஏழ்மை நிலையில் இருப்பது.
அன்றாட
அடிப்படைத் தேவைக்கே
யோசிக்க வேண்டி
இருக்கும்போது நாட்டைப்
பற்றி யோசிக்க
முடியுமா?  ஆகவே புரட்சியை
நகரத்தில் உள்ளவர்கள் தான்
செய்ய வேண்டும். //

நகரத்தில் உள்ளவர்கள்.
அதாவது ஜன நாயகமான
சிந்தனைக்கு
அறீமுகமானவர்கள்.
சிந்திக்க, படிக்க, அறிவை
வளர்க்க வாய்ப்பு
பெற்றவர்கள்தான்
புரட்சிக்கான
தயாரிப்புகளை செய்ய
முடியும் என்பது சரிதான்.

ஆனால் புரட்சி என்பதை
பிரதானமாக விவசாயிகளும்,
அடுத்து தொழிலாளர்களுமே
செய்ய முடியும்.

//தீவிரவாதம் இன்னும்
நாட்டில் இருப்பதால்,
யாராவது புரட்சிகரமான
சிந்தனையோடு
வெளிக்கிட்டால், சந்தேகக்
கண்
...

read more »


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
மஞ்சூர் ராசா  
View profile  
 More options Sep 11 2006, 6:11 am
From: "மஞ்சூர் ராசா" <manjoorr...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 13:11:56 +0300
Local: Mon, Sep 11 2006 6:11 am
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

அன்பு நண்பரே, உங்கள் மடல்களை ஜிமெயில் மோடில் அனுப்பவும் www.gmail.com.
அப்பொழுது இப்படி வெட்டி வெட்டி வராது.


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
thiagu rajan  
View profile  
 More options Sep 11 2006, 6:24 am
From: "thiagu rajan" <seewtypie2...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 15:54:07 +0530
Local: Mon, Sep 11 2006 6:24 am
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

வேலை உத்திரவாதமில்ல,
உரிமைகள் மறூக்கப்பட்ட
தொழிலாளர்கள்,
எதிர்காலத்தில் இதே நிலையை
அடைய உள்ளா நிகழ்காலத்தில்
சில அடிப்படை உரிமைகளை
பறிகொடுத்த தகவல் தொழில்
நுட்ப தொழிலாளர்கள்,
தொழில் நசிவடைந்து
தொழிலாளாயாக தள்ளப்படும்
சிறூ முதலாளீகள்,
இவர்கள்தான் அமைப்பின்
சித்தாந்த வாய்ப்புள்ள்
பலம். ஏனைய
வர்க்கத்திலிருந்தும்
ஆட்கள் அரிதாக வருவார்கள்

-அசுரன் இந்த வேலை உத்திரவாதம் தரப்படாத தனியார் வேலைகளில்தான் அந்த நிறுவன
முன்னேற்றத்தில் அக்கரை காட்டப்படுகிறது அதனால்எல்லா துரைகளையும் தனியாருக்கு
கொடுக்கவேண்டும்என்ற வாதம் பற்றி தங்கள் கருத்து என்ன

தியாகு


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 11 2006, 7:06 am
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 04:06:41 -0700
Local: Mon, Sep 11 2006 7:06 am
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
தியாகு,

அப்படி யாரும் வாதட மாதிரி
தெரியல....

சமீபகாலத்தில் பொதுத் துறை
தனியார் மயமாக்கம் பல
கெட்ட விளைவுகளை
உள்ளடக்கியதை பலர்
பார்த்திருக்குறனால சில
அரைகுறைகள் மட்டுமே
புதிதாக விசயங்கள
பாத்துட்டு தனியார் மயம்
சரின்னு வெள்ளேந்தியா
பேசிக்கிட்டிருக்காங்க.

இன்னும் சொன்னா நம்ம
பொதுத் துறை நிறுவனங்களின்
அசுர வளர்ச்சி, இன்றைய
உலகமயச் சூழலிலும்
ஏகாதிபத்திய
நிறுவனங்களுக்கு போட்டி
கொடுக்கும் பலம், இவை
அத்தனையும் போதிய அளவு
மக்களுக்கு சேவை செய்த
பிற்ப்பாடு....

ஆனால் தனியார்
நிறுவனங்களால் இவற்றை
கற்பனை செய்து கூட பார்க்க
முடியாது.

தனியார் மயத்தின் இழி
நிலையை பார்க்க வேண்டுமா?...
கேத்ரீனா புயல் அடித்த
பொழுது பக்கத்து டெக்ஸாஸ்
கவர்னர் உதவி செய்ய
வழியின்றி கைவிரித்தா,
காரணம் அங்கு எல்லாம்
தனியார் மயம் துட்டுக்
கொடுத்து வாங்கும்
நிலைமையில் அரசு இல்லை.

மக்களுக்கு ஆத்திர
அவசரத்துக்கு உதவ
வக்கில்லன்னா அப்புறம்
என்ன மயித்துக்கு வரி
வசுல், ராணுவம், போலிசு
மட்டை பூட்ஸ் எல்லாம்..

*********

மத்தபடி தொழில் நுட்பங்கற
ஈத்தரத்தன்மான வாதமொன்னு
வைப்பாங்க....

உண்மை என்னென்னா... இந்தியா
போன்ற நாடுகளில் தேசிய
முதலாளிகள் சுதந்திரமாக
செயல் பட அனுமதிச்சா
அங்கங்க அவனவன் தன்கிட்ட
இருக்கீற முதலீட்ட
வைச்சிகிட்டு புதுசு
புதுசா கண்டுபிடிச்சு
தொழில் நுட்ப புரட்சி
அத்துக்கிட்டு ஓடும்... அத
தடுத்து, சந்தையை MNC
கைப்பற்றுவதற்க்கு மாமா
வேலை பாக்குது அரசு....

உண்மையில் இது தனியார்
மயம் இல்லை... உலகமயம்... இது
உள்ளூர் முதலாளிக்கு ஆப்பு
வைக்கிறனாலதான்
வியாபாரிகள் சங்கத் தலைவர்
வெள்ளையன், ம.க.இ.க. ங்கற
நக்சல்பாரி அமைப்போடு
சேர்ந்து போராடுறாரு,
இந்திய சில்லறை
உற்பத்தியாளர்கள்,
கம்யுனிஸ்டுகள்தான்
உண்மையான தேசப்பற்று
உள்ளவங்கன்னு அறிக்கை
விடுறாங்க, TVS, TATA போன்ற தரகு
முதலாளிகள், MNCக்களிடம்
காண்டிராக்ட் எடுத்துள்ள
திருப்பூர், ஓசூர்
முதலாளிகள் தான் தயாரிக்கற
பொருளுக்கு தானே விலை
வைக்க முடியாமே வெறுமனே
ஸ்டிக்கர் ஒட்டிட்டி அவன்
விக்கிறத பாத்து
வயிறெரிஞ்சு கிடக்குறாங்க.

இத உடச்சி, ஏகாதிபத்தியத்த,
நிலபிரபுத்துவத்த இந்தியா
விட்டு விரட்டிட்டு, சிறு
அளவிலான தனியார்
முதலீடுகளை காட்டாற்று
வெள்ளம் போல திறந்து
விடுவது, பெரு முதலீடுகளை
அரசும், உள்ளூர்
முதலாளிகளும் சேர்ந்து
செய்வது அப்படிங்கற ஒரு
நல்ல முதலாளித்துவ
வளர்ச்சிக்கு வித்திடுவது
கம்யுனிஸ்டுகள் செய்யும்
புதிய ஜன நாயக
புரட்சியில்தான்
சாத்தியம்.

அதனால இன்னைய உள் நாட்டு
முதலாளிகளும்(அதாவது நாளைய
தொழிலாளீகளூம்)
கம்யுனிஸ்டுகளோட இணைஞ்சு
போராட வேண்டிய
நிர்பந்தத்துக்கு
தள்ளப்பட்டிருக்காங்க.

மத்த எல்லாமே,(தனியார்மயம்
என்ற பெயரில் செய்யப்படும்
போர்ஜரியும் சேர்த்து)
ஏகாதிபத்திய சேவைதான்.

Please read this:

http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html

அசுரன்.


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 11 2006, 7:11 am
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 04:11:26 -0700
Local: Mon, Sep 11 2006 7:11 am
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
மாஞ்சூர் ராசா,

நீங்கள் சொல்லிய விசயம்
புரிபடவில்லை. சோதித்து
பார்க்கும் அவகாசம்
தற்போது இல்லை. அதனால்
தற்காலிகமாக பொறுத்துக்
கொள்ளூம் மாறு கேட்டுக்
கொள்கிறேன். தங்களது
அக்கறையான உதவிக்கு மிக்க
நன்றி.


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
thiagu rajan  
View profile  
 More options Sep 11 2006, 7:35 am
From: "thiagu rajan" <seewtypie2...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 17:05:43 +0530
Local: Mon, Sep 11 2006 7:35 am
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

நன்றி அசுரன்

ஆனால் குழுமங்களில் பேசும்போது நமது கருத்து எவ்வளவு சரியானதாக இருந்தாலும்
நாம் நமது சொந்தபேரை சொல்லவில்லை அல்லது வெளியிட விரும்பலன்னு சொன்ன அதை
தங்களுக்கு சாதகமான ஒரு விசயமா அவங்கஎடுத்துகொள்வார்கள்என்ற விசயம் தங்களுக்கு
தெரியும்என நினைக்கிறேன் .அது குறித்து யோசிக்கவும்

தியாகு

On 9/11/06, அசுரன் <asura...@gmail.com> wrote:


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Viji  
View profile  
 More options Sep 11 2006, 1:02 pm
From: Viji <vselvarat...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 13:02:21 -0400
Local: Mon, Sep 11 2006 1:02 pm
Subject: [muththamiz] அடிமை நாடும், போலி சுதந்திரமும்

On 9/11/06, thiagu rajan <seewtypie2...@gmail.com> wrote:

>  நன்றி அசுரன்

> ஆனால் குழுமங்களில் பேசும்போது நமது கருத்து எவ்வளவு சரியானதாக இருந்தாலும்
> நாம் நமது சொந்தபேரை சொல்லவில்லை அல்லது வெளியிட விரும்பலன்னு சொன்ன அதை
> தங்களுக்கு சாதகமான ஒரு விசயமா அவங்கஎடுத்துகொள்வார்கள்என்ற விசயம் தங்களுக்கு
> தெரியும்என நினைக்கிறேன் .அது குறித்து யோசிக்கவும்<<<

உண்மைதான் அவ‌ரவ‌ர் சொந்தப்பெய‌ர்களில் எழுதுவதும் க‌ருத்து தெரிவிப்பதும்
வ‌ரவேற்கத்தக்கது.

--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி

 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வேந்தன் அரசு  
View profile  
 More options Sep 11 2006, 1:12 pm
From: "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 13:12:59 -0400
Local: Mon, Sep 11 2006 1:12 pm
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

அன்பின் தியாகு,

கடல் பின் வாங்கினா கடல் வற்றுது க‌ருவாடு தின்னலாம் என்று நினைக்கக்கூடாது.

விரைவில் ஆழிபேரலை எழ இருக்கிறது என்று அருத்தம்.

காதலை பேசிகிட்டு இருக்கேன் இல்லையா. அது முடியட்டும். நமக்கு எல்லா
மடல்களையும் வாசிக்கணும். பின்னூட்டம் இடணும். அசுரன் போல அவ‌ர் இழையில்
மட்டும் வீசுகிற புயலாக நாம் இல்லையே! ப‌ல‌ர் வீட்டு வாசலில் தென்றலாக‌வும்
இருப்போம்.

On 9/9/06, thiagu rajan <seewtypie2...@gmail.com> wrote:

> வேந்தருக்கு வேண்டப்படுவது சாணாக்கியத் தந்திரம். வேந்தருக்கு நிறையவே
> இருக்கிறது என்று நினைக்கிறேன்.

> யப்பா இது ஒரு தந்திரமும் இல்லை பதில் இல்லை அவரிடம் அதான் உண்மை  ;)

> தியாகு

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Viji  
View profile  
 More options Sep 11 2006, 1:50 pm
From: Viji <vselvarat...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 13:50:55 -0400
Local: Mon, Sep 11 2006 1:50 pm
Subject: [muththamiz] அடிமை நாடும், போலி சுதந்திரமும்

On 9/11/06, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

>  அன்பின் தியாகு,

> காதலை பேசிகிட்டு இருக்கேன் இல்லையா. அது முடியட்டும். நமக்கு எல்லா
> மடல்களையும் வாசிக்கணும். பின்னூட்டம் இடணும். அசுரன் போல அவ‌ர் இழையில்
> மட்டும் வீசுகிற புயலாக நாம் இல்லையே! ப‌ல‌ர் வீட்டு வாசலில் தென்றலாக‌வும்
> இருப்போம். <<<

அண்ணன் எவ்வழி தங்கை அவ்வழி
வேந்தன் எவ்வழி மக்கள்(நம்மைப்போல்) அவ்வழி

 முத்தமிழ் குழுமம்

> "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." --
> பாவேந்தர்.
> -~----------~----~----~----~------~----~------~--~---

--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி

 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
CAPital Z  
View profile  
 More options Sep 11 2006, 2:41 pm
From: "CAPital Z" <capit...@gmail.com>
Date: Mon, 11 Sep 2006 14:41:08 -0400
Local: Mon, Sep 11 2006 2:41 pm
Subject: Re: [muththamiz] அடிமை நாடும், போலி சுதந்திரமும்

///இது முதல் தவறு. புரட்சி
செய்யக் கூடியவர்கள் -
உழவர்களும்,
தொழிலாளர்களூம்
நடுத்தர வர்க
அறிவுஜீவிகளின் சித்தாந்த
பலம் என்பது ஒரு புரட்சிகர
அமைப்பின் முக்கிய பலம்
என்பதும் மறுக்கவியலாத
உண்மை.///

உழவர்கள் புரட்சி செய்யக் கூடியவர்கள் என்பதை என்னால் ஏற்ற முடியவில்லை.
உழவர்கள் படிப்பறிவில்லை (அ) பந்தம், பாசம், கட்டுப்பாடு என்ற உணர்ச்சிகளில்
இருப்பவர்கள்.  ஒரு அடிமை உணர்வு தான் அவர்களிடம் இருக்கிறது.

மற்றபடி வேலையில்லாப் பட்டதாரிகள், படிப்புக்கு உகந்த வேலை கிடைக்காதவர்கள்,
வேலையை தேடிக்கொண்டிருப்பவர்கள், நீங்கள் சொன்னது போல் சிறு தொழில் முதலாளிகள்,
எதிர்காலத்தில் தொழிலை இழக்கப்போகும் முதலாளிகள், எதிர்கால பட்டதாரிகள் என்று
தான் ஒண்டு சேர வேண்டும்.

--
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 12 2006, 4:17 am
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 01:17:55 -0700
Local: Tues, Sep 12 2006 4:17 am
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
CAPital,

சீனாவில் யார் புரட்சி
செய்தார்கள் என்று
நினைக்கிறேர்கள்?

ரஸ்யாவில் யார் புரட்சி
செய்தார்கள் என்று
நினைக்கிறேர்கள்?

பிரெஞ்சு பாட்டாளி வர்க்க
புரட்சியின் தோல்விக்கு
காரணமாக ஏங்கெல்ஸும்,
மார்க்ஸும் எதை
சொல்கிறார்கள் தெரியுமா?

விவசாயி தொழிலாளி இடையே
ஒரு நேச அணி இல்லையெனில்,
ஒற்றுமை இல்லையெனில் எந்த
காலத்திலும் புரட்சி
சாத்தியமில்லை.

அதுவும் இந்தியா போன்ற
முதலாளித்துவ வளர்ச்சி
பரவலாக்கப்படாத நாடுகளில்,
இன்னும் மறைமுகமான
காலனிகளாக இருக்கும் அடிமை
நாடுகளில், விவசாயிகள்
அருதிப் பெரும்பான்மையாக
இருக்கும் நாடுகளில் -
விவசாயிகளை நிராகரித்து
விட்டு ஒரு அடி கூட எடுத்து
வைக்க முடியாது.

புரட்சியில் விவசாயிகளின்
பங்கு என்பது ஆக
முக்கியமானது என்பதை
கம்யுனிஸ்டு கட்சி
அனுபவமும் காட்டுகிறது,
மார்க்ஸிய முன்னோர்களின்
கூற்றும்
எடுத்தியம்புகிறது.

இன்னும் சொன்னால்
விசயங்களை அவர்களுக்கு
புரியும் வகையில்
எளீமைப்படுத்தி எடுத்துச்
சென்றால் விவசாயிகளை விட
நம்பகமான, போர்குணமிக்க,
சந்தேகத்திற்க்குஇடமற்ற
ஒரு அணியை வேறு எந்த
வர்க்கத்திடமும் பார்க்க
முடியாது என்பது
கம்யுனிஸ்டு கட்சியின்
அனுபவம்

ஜன நாயக தன்மைபற்றிய
அறிமுகமின்மை, உலக விசயம்
பற்றிய அறிவில்லாமை,
நிலப்பிரபுத்துவ
உணர்வுகள், மூட
நம்பிக்கைகள் -
இவையெல்லாம் மைனஸ்
பாயிண்டுகள் என்பது
உண்மையே. இதை மீறி
நகரத்துக்கும்,
கிராமத்துக்கும்
அலைக்கழிக்கப்படும்
விவசாயினது வாழ் நிலை, அவனை
புரட்சியின் இயல்பான ஒரு
இயங்கு சக்தியாக
மாற்றுகிறது.

அசுரன்.


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வேந்தன் அரசு  
View profile  
 More options Sep 12 2006, 7:28 am
From: "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 07:28:13 -0400
Local: Tues, Sep 12 2006 7:28 am
Subject: Re: [muththamiz] அடிமை நாடும், போலி சுதந்திரமும்

முதல் குத்து:

அபத்தம் என்பதற்கு இணையான தமிழ் சொல்லை தேடினேன். கிடைக்கவில்லை. அதனால்
அபத்தம் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றை சொன்னால் நம் மக்கள் புரிந்து
கொள்வீர்கள். ஆம் மக்களே,  அபத்தம் என்பதற்கு பொருத்தமான கட்டுரை அசுரன் தேடி
இட்ட இந்த கட்டுரைதான்.

அன்று நான்  வாயை மூடிகொண்டு சும்மா இருந்தேனானால் அபத்தத்துக்கு எல்லாம்
மறுமொழி சொல்லிகொண்டிருக்க தேவை எற்பட்டிருக்காது. என்ன செய்வது, திறந்து
விட்டேன். சொல்லிதான் ஆக வேண்டும்.

முதலில் கட்டுரை ஆசிரியர் நம் நாடு விடுதலை பெற வில்லை என்கிறார்.  சிரிக்க
கூடாது! நாம் பெற்றது விடுதலை அல்ல. நுகம் மாற்றிக்கொண்டுள்ளோம் என்கிறார்.
விடுதலை என்பதற்கு விளக்கம் அளிக்க  அவர்கள் தனி அகராதியை அச்சிட்டு
கொண்டுள்ளார்கள். அதுவும் அவர்கள் மட்டும் அறிந்த (சீன ருசிய?)  மொழியில்.
..........ம்.

நமக்கு தெரிந்த விடுதலை   என் ஊரின், மாநிலத்தின், நாட்டின் ஆட்சி பொறுப்பில்,
பொதுவுடைமை தோழர்கள் உட்பட, யார் இருக்க வேண்டும், நான் எங்கு சென்று
குடியிருக்க வேண்டும், நான் என்ன படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும்,
நான் சேர்த்த காசை எப்படி செலவிட வேண்டும், நான் யாருடன்  இன்றைய பொழுதை கழிக்க
வேண்டும், நான் எந்த மதத்தை தழுவ வேண்டும், எந்த சாமியை கும்பிட வேண்டும்.
எனக்கு தோன்றிய கருத்தை  அச்சமின்றி சொல்ல வேண்டும் என பலவாக, நாம் பெற்ற
உரிமைகளே. அவை இன்று இந்தியாவில் இல்லையா? அவர்களுக்கே வெளிச்சம்.

(அதனால் சிவா, கலாமை இழிவு செய்தாலும் அந்த உரிமையை நாம் மறுக்க கூடாது.
பண்பாடு அவர்களுக்கு வரட்டும் என்று  மட்டும் நம்புவோம்)

ஆனால் அசுரர்கள் சொல்லும் சுதந்திரமோ, நம்மை ருசியாவையும் சீனாவையும்
வழிநடத்தும் நாடுகளாகவும், ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ற்றோ, குரோசாவோ போன்றவர்களை
கண்கண்ட தெய்வமாகவும் ஏற்று,  ஒரு சிறிய கொள்ளையர் கூட்டம் ஆயுதம் ஏந்தி
பெரும்பாண்மை மக்களை அடிமை படுததி சவுக்கடி கொண்டு ஆளும்் ஒரு ஆட்சி முறையை.
அது நடைமுறை சாத்தியம் அற்றது என்று உலகம்  நிறுவியும் அதிலேயே
தொங்கிகொண்ண்டிருக்கும் திறம் வியக்காமல் இருக்க முடியாது.

இந்த ஆட்சிமுறை செல்லுபடியாது என்று உலகத்துக்கு சொல்லி அதை தவிடு படி ஆக்கிய
காரணத்தால் அமெரிக்காவை எதிர்ப்பது இவர்களது தாரக மந்திரம்.  ருசியாவை பார்
என்றார்கள். ஆஃஆ என எழுந்த  யுக புரட்சி மண்னை கவ்வியதை  கண்டோம். நாம்
அமெரிக்காவை பார் என்கிறோம். அது விழுமா என்று நப்பாசை கொண்டுள்ளார்கள்.

ஒரு காலத்தில் தமிழன் சேரன், சோழன், பாண்டியன் என்று பிரிந்து கிடந்தான்
பின்னர் தமிழகம் ஆனோம். அதை எந்த பாண்டியனோ, சோழனோ எதிர்க்க வில்லை. அசோகர்
போன்ற பேரரசர்களுக்குகூட தமிழகம் அடிபணியாமல் இருந்தது. ஆனால் இன்று இந்திய
கூட்டாட்சியில் உள்ளோம். அதை நாம் ஏற்றுகொண்டோம். இன்று சார்க், என்ற பன்னாட்டு
கூட்டணிக்கு அடிகோலிகொண்டு உள்ளோம். நாளை உலக நாடுகள் என்ற கூட்டணி வந்தாலும்
அதில் இணையலாம்.   இவை எல்லாம் மனித நாகரத்தின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியை
ஏற்றுகொள்ளாமல் நாம் மேலை நாடுகளுக்கு அடி பணிகிறோம் என்பதெல்லாம் பூச்சாண்டி.
பகத் சிக்,  சின்ன மலை எல்லாம் போராடி பெற்ற சுதந்திரம் இன்னமும் எம்
கையில்தான் உள்ள்து,. அதை  உங்கள் புலம்பலுக்கு கரைந்து, அச்சுறுத்தலுக்கு
அஞ்சி உங்கள் கையில் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.

விடுதலை பெற்றபின் ஐம்பது ஆண்டுகளாக்  சிவப்பு திசையில் சென்று இந்தியாவை ஆட்சி
செய்தவர்களால இரண்டு தலைமுறை வீணாகி விட்டது. படித்த மாணவர்கள் வெளி
நாடுகளுக்கு சென்று வேலை தேடும் நிலைமையை அவர்கள்தான் உண்டாக்கினார்கள். கடந்த
பத்து ஆண்டுகளாக மன்மோகன், சிதம்பரம் போன்ற தொலை நோக்குகொண்ட தலைவர்களால்
விழித்து கொண்டு மேற்கு திசையில் செல்கிறோம். அதனால் இன்றைய கல்லூரி மாணவர்கள்
முன் எப்போது இல்லாத  நல்ல நம்பிக்கையை எதிர்காலததின் மேல் கொண்டுள்ளார்கள்.
வெளி நாடுகளில் வாழ்வோரும் தாய்கம் திரும்புகிறார்கள். இவர்கள் எல்லோரும் நல்ல
வேலை பெற்று நல்ல ஊதியம் பெற்று அரசுக்கு நிறைய வரி செலுத்துகிறார்கள். அந்த
வரிபணத்தைகொண்டுதான் கலைஞர் அரசு உழவர்கடன், இரண்டு ஏக்கர் நிலம், அதையும்
பண்படுத்தி, என்ற பல சமூக திட்டங்களை நிறைவேற்றுகிறது.

பத்து ஆண்டுகளில் இத்தகைய  மாற்றம் நிகழ்ந்துள்ளது இன்னும் நாற்பது ஆண்டுகளில்
என்ன நிகழும் என்பதற்கு இது முன்னோடி. அன்று உழவர்கள் உட்பட எல்லோரும் அடிப்படை
வசதிகள் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். உழவை அடிப்படையாக வாழ்க்கையை
கொண்டவர்களின்
...

read more »


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
thiagu rajan  
View profile  
 More options Sep 12 2006, 8:39 am
From: "thiagu rajan" <seewtypie2...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 18:09:38 +0530
Local: Tues, Sep 12 2006 8:39 am
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

வயிறு முட்ட தின்னுவிட்டு
வாந்தி வரும் வேளையில்
வர்க்க சிந்தனை வருமா -பாட்டாளி
பாடுதான் வருமா -

தியாகு


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
CAPital Z  
View profile  
 More options Sep 12 2006, 9:27 am
From: "CAPital Z" <capit...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 09:27:14 -0400
Local: Tues, Sep 12 2006 9:27 am
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று எல்லோரும் வெறி கொண்டுள்ளார்கள்.  ஆனால்,
லஞ்சத்தையும் கூடவே முன்னேற்றுகிறார்கள்.

படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று இந்தியாவில் அன்று தொட்டு எல்லோரும்
முயற்சிக்கிறார்கள்.  படித்தவர்களுக்கு வேலை லஞ்சத்தால் இல்லாமல் போக மூளை
வெளிநாட்டுக்கு கடத்தப்படுகிறது.

இருப்பவன் தன்னை காத்துக்கொள்ள ஊழல் செய்ய ஆரம்பிக்கிறான்.  லஞ்சம் கொடுத்து
முன்னேறியவன் லஞ்சம் வாங்கி கடனை அடைக்க வேண்டிய கட்டாயம்.

அரசியல் சாக்கடை, சாக்கடை என்று சொல்பவர்கள் எவரும் திருத்த முயற்சிப்பதில்லை;
திருத்தவும் முடிவதில்லை.  ஏனெனில், நாட்டில் எங்குமே ஊழல் இல்லாமல் இல்லை.
அப்படியாயின் எங்கேயாவது முயற்சி முறியடிக்கப்பட்டு விடும்.

பாதிக்கப்பட்டவன், (அ) பாதிக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில் நாட்டை விட்டு
வெளியேறியவன் நாட்டை திருத்த முயற்சிப்பதில்லை.  நான் தப்பினால் போதும் சாமி.

--
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
thiagu rajan  
View profile  
 More options Sep 12 2006, 9:39 am
From: "thiagu rajan" <seewtypie2...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 19:09:36 +0530
Local: Tues, Sep 12 2006 9:39 am
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

ஓமோம் நீங்கள் சொல்வது சரியெ

தியாகு


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
செல்வன்  
View profile  
 More options Sep 12 2006, 11:46 am
From: "செல்வன்" <holy...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 15:46:12 -0000
Local: Tues, Sep 12 2006 11:46 am
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
பொங்கி எழுந்து தாய்த்தேச
நலன் காக்கும் வேந்தன்
அரசின் பணி வாழ்க.முழு
கட்டுரையையும் ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்.பரிட்சை
முடிந்து வந்து தம்பி
விழியன் கேட்ட
கேள்விக்கும்,அசுரனின்
கட்டுரைக்கும் பதில்
அளிக்கிறேன்.

 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 12 2006, 8:36 am
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 05:36:23 -0700
Local: Tues, Sep 12 2006 8:36 am
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
அபத்தம் பற்றி வேந்தன்
சொல்லியிருந்தார் அதன்
பொருள் குறித்து வேறு
யாரையும் விட வேந்தனுக்கு
நன்கு தெரியும் போல்
இருக்கிறது... விளையாட்டு
இருக்கட்டும்...

1947லிருந்து இந்தியாவில்
கம்யுனிசம்
நடைமுறைப்படுத்தப்படுகீறது
என்பது ஆளும் வர்க்கம்
பரப்பு ஒரு அருமையான
வதந்தி. இது குறித்து
மேலதிகமாக தெரிய
விரும்புகிறாவர்கள் பின்
வரும் எனது கட்டுரையை
படிக்கவும்(1947 களிலேயே
கோகோகோலா அதிக்கம்
செலுத்தத் தொடங்கிவிட்டது
-
http://kaipulla.blogspot.com/2006/06/life-line-of-expired-capitalism_...).

ஏகாதிபத்தியம், சுரண்டலை
விட்டால் வாழ முடியாது
என்பது பாவம் சமூகத்தின்
இயங்கியல் புரியா டாலர்
பாண்டியர்களுக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
*********

வேந்தனின் இந்த
வாதத்துக்கு மட்டுமே எனது
பதில் தேவைப்படுகிறது.

//நமக்கு தெரிந்த விடுதலை
என் ஊரின், மாநிலத்தின்,
நாட்டின் ஆட்சி
பொறுப்பில்,
பொதுவுடைமை தோழர்கள்
உட்பட, யார் இருக்க
வேண்டும், நான் எங்கு
சென்று
குடியிருக்க வேண்டும்,
நான் என்ன படிக்க வேண்டும்,
என்ன தொழில் செய்ய
வேண்டும்,
நான் சேர்த்த காசை எப்படி
செலவிட வேண்டும், நான்
யாருடன்  இன்றைய பொழுதை
கழிக்க
வேண்டும், நான் எந்த மதத்தை
தழுவ வேண்டும், எந்த சாமியை
கும்பிட வேண்டும்.
எனக்கு தோன்றிய கருத்தை
அச்சமின்றி சொல்ல வேண்டும்
என பலவாக, நாம் பெற்ற
உரிமைகளே. அவை இன்று
இந்தியாவில் இல்லையா?
அவர்களுக்கே வெளிச்சம்.
//

இது அத்தனையும் இன்றைய
அமைப்பை
கேள்விக்குள்ளாக்காமல்
செய்யலாம். இதே சுதந்திரம்
ஆங்கிலேயன் காலத்திலும்
இருந்தது. அன்றும் தேர்தல்
நடந்தது, மதம் இருந்தது,
தொழில் செய்யலாம்(இன்றைய
நிலை போலவே), படிக்கலாம்
சிற்சில வேறுபாடுகள்
இருக்கின்றன. இல்லையென்று
சொல்லவில்லை. அந்த பாரிய
வேறுபாடுகள்
இருப்பதனால்தான் இன்னும்
விடுதலை பெறவில்லை என்ப்தை
புரிய வைப்பதற்க்கு
பதிவுகளில் வாதாட
வேண்டியுள்ளது. கவலைப்பட
வேண்டாம் கூடிய விரைவில்
அந்த சிற்சில ஜன நாயக போலி
வெளி முகமூடிகளும் களைந்து
விடும்.

கோக் ஒரு ஆலை... அதுவும் சோடா
தயாரிக்கும் ஆலை. அந்த ஆலை
வருவதால் தண்ணீர்
மாசுபடும் அதை வரவிடாதே
என்று சொல்லி சுவரொட்டி
ஒட்டியவருக்கு(மக்கள் கலை
இலக்கிய கழகம்) சதி
வேலையில் ஈடுபட்டதாக் 3
மாதம் சிறை(இதே போல
தர்மபுரியில், வேலூரில்
சிலர் சிறை
வைக்கப்பட்டனர்). அந்த
சுவரொட்டியில் இருந்த
வாசகங்கள்:
"அமெரிக்க கோக்கே வெளியேறு,
--- ல் கோக் மற்றும்
பன்னாட்டு பொருட்கள்
எதிர்ப்பு போராட்டம்"

இதே கோக்கின் ஆபத்துக்களை
அம்பல்ப்படுத்தி படம்
எடுத்தார்கள்
த.மு.எ.ச(தேர்தல்
கம்யுனிஸ்டுகள்). மூழ்கும்
நதி என்று பெயர். இந்த
திரைப்படத்தை திரையிட தடை
போட்டது போலிசு.

கங்கை கொண்டான் கிராம
பஞ்சாயத்தில் கோக் ஆலையை
எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்ற முடிவு
செய்தார்கள். இதை உளவுத்
துறை மூலம் மோப்பம்
பிடித்த கோக் Factory full time
வாட்ச்மேன் 'கலெக்டர்',
இந்திய ஜன நாயகத்தீன்
அடையாளம் என இராஜீவ்
காந்தி தூக்கிப் பிடித்த
கிராம சபை கூடுவதற்க்கே
தடை போட்டு விட்டார்...
சூப்பர் ஜன நாயகம் போங்க்....

இதை மீறி குடியரசு
தினமன்று கூட்டத்தை
கூட்டியே தீரவேண்டிய
சூழலில் மக்கள் கோக்கை
எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்றினார்கள். கோக்
அந்த கவுன்சிலர்களை
அடுத்த் வாரம் கடத்தி
சென்று வேறு இடத்தில்
இன்னொரு தீர்மானம்
நிறைவேற்றியது.

இந்த ஜன நாயகத்தில் அதிக
பட்சம் உங்களால் கிசு
கிசுக்கள் மட்டுமே எழுத
முடியும்.

சரி கீழ்மட்டத்தில் இப்படி
என்றால் மேல்மட்டத்தில்
எப்படியுள்ளது?

ஊழலை அம்பலப்படுத்திய
தெகல்கா மீது போலிசு கேசு.
பாராளுமன்றத்தில் விவாதம்
இது பற்றி. மாட்டிக்கிட்ட
மக்கள்(??) பிரதி நிதிகளை
பற்றியல்ல விவாதம். மாறாக
இனி இது போல கேமார வைச்சி
படம் பிடிச்சு மக்கள்ட்டா
மாட்டி வுடுறது தடுக்க
கிரிமினல் சட்டம் கொண்டு
வரனும்னு விவாதம்.

இதே கேப்புல இரண்டு முறை
சம்பள உயர்வு. ஆனா இதே
கேப்புல குரல்
வாக்கெடுப்பு மூலமா
நிறைவேறிய சட்டங்கள்:

விதை நெல் சீர்திருத்த
சட்டம், மகாராட்டிர
தண்ணீர் ஒழுங்குமுறை ஆணயச்
சட்டம்(இரு குழந்தைக்கு
மேல இருந்தா ட்புள் சார்ஜ்
வேற), சூப்பர் டூப்பர் அணூ
அயுத ஒப்பந்தம்(இப்ப
ரிசண்டாத்தான் சட்டி
கிழிஞ்சு அம்மனாமா
தொங்கிச்சு), இந்திய
ராணுவத்த அமெரிக்க கூலிப்
படையாக்கும் ராணுவ
ஒப்பந்தம், நதிகளை தனியார்
நிறுவணங்களுக்கு எழுதி
வைப்பது(தமிழ் நாட்டில்
தஞ்சையில் ஒரு நதி, யமுனா to
தேம்ஸ் டெடொரண்ட் etc),
முக்கியமா பேடட்ண்ட்
ரைட்ஸ்(இத போட்டவுடனே
கான்சர் மருந்து 250 ரூ
லிருந்து 750 ரூவாய்க்கு
போனது) இன்னும் இது மாதிரி
இன்னும் சில ஆப்புச்
...

read more »


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 12 2006, 1:10 pm
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 10:10:38 -0700
Local: Tues, Sep 12 2006 1:10 pm
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
Small correction:

1947லிருந்து இந்தியாவில்
கம்யுனிசம்
நடைமுறைப்படுத்தப்படுகீறது

என்பது ஆளும் வர்க்கம்
பரப்பு ஒரு அருமையான
வதந்தி. இது குறித்து
மேலதிகமாக தெரிய
விரும்புகிறாவர்கள் பின்
வரும் எனது கட்டுரையை
படிக்கவும்(1947 களிலேயே
கோகோகோலா அதிக்கம்
செலுத்தத் தொடங்கிவிட்டது
-
http://kaipulla.blogspot.com/2006/06/life-line-of-expired-capitalism_...).

URL is wrong:

Correct URL:
http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வேந்தன் அரசு  
View profile  
 More options Sep 12 2006, 2:27 pm
From: "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 14:27:23 -0400
Local: Tues, Sep 12 2006 2:27 pm
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

On 9/12/06, thiagu rajan <seewtypie2...@gmail.com> wrote:

> வயிறு முட்ட தின்னுவிட்டு
> வாந்தி வரும் வேளையில்
> வர்க்க சிந்தனை வருமா -பாட்டாளி
> பாடுதான் வருமா -

பாட்டாளின் பேரை சொல்லி தன் வயிறு நிரப்பிகொண்டால்
பாட்டாளி வயிறு நிரம்புமா தியாகு?

 தியாகு


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வேந்தன் அரசு  
View profile  
 More options Sep 12 2006, 2:33 pm
From: "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 14:33:30 -0400
Local: Tues, Sep 12 2006 2:33 pm
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

On 9/12/06, அசுரன் <asura...@gmail.com> wrote:

> அபத்தம் பற்றி வேந்தன்
> சொல்லியிருந்தார் அதன்
> பொருள் குறித்து வேறு
> யாரையும் விட வேந்தனுக்கு
> நன்கு தெரியும் போல்
> இருக்கிறது... விளையாட்டு
> இருக்கட்டும்...

1947லிருந்து இந்தியாவில்

> கம்யுனிசம்
> நடைமுறைப்படுத்தப்படுகீறது
> என்பது ஆளும் வர்க்கம்
> பரப்பு ஒரு அருமையான
> வதந்தி. இது குறித்து
> மேலதிகமாக தெரிய
> விரும்புகிறாவர்கள் பின்
> வரும் எனது கட்டுரையை
> படிக்கவும்(1947 களிலேயே
> கோகோகோலா அதிக்கம்
> செலுத்தத் தொடங்கிவிட்டது

தொடங்கி இந்தியா அழிஞ்சிருச்சு. ஐய‌கோ! இனி என் செய்வேன்!
காப்பாத்துங்க அசுரன்!!!

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வேந்தன் அரசு  
View profile  
 More options Sep 12 2006, 2:44 pm
From: "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 14:44:49 -0400
Local: Tues, Sep 12 2006 2:44 pm
Subject: Re: [muththamiz] Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்

அப்படீங்களா? கப்பல் ஓட்டிய‌ தமிழன் க‌ஞ்சா கடத்தியதால் 40 ஆண்டுகள் சிறைவாசம்
போட்டிருப்பார்களோ?. .

''ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டான் வெள்ளக்காரன்''


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 12 2006, 2:44 pm
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 11:44:04 -0700
Local: Tues, Sep 12 2006 2:44 pm
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
வேந்தன் அரசு தனது வலுவை
கடுமையா காட்டுகிறார்....
நான் கூட ஒரு இரண்டு மூனு
ரவுண்டு தாங்குவாருன்னு
பாத்தேன்

இம்புட்டுத்தானா?... அய்ய....

அசுரன்


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 12 2006, 3:16 pm
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 12:16:18 -0700
Local: Tues, Sep 12 2006 3:16 pm
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
//அப்படீங்களா? கப்பல்
ஓட்டிய‌ தமிழன் க‌ஞ்சா
கடத்தியதால் 40 ஆண்டுகள்
சிறைவாசம்
போட்டிருப்பார்களோ?. . //

கப்பல் ஓட்டிய தமிழன்
மட்டுமல்ல பகத்சிங்,
வீரபாண்டிய கட்ட பொம்மன்
போன்ற எண்ணற்ற தலைவர்களின்
மக்களின் தியாகத்தால்
சிவந்த சுதந்திர போராட்டம்
அதன் உண்மையான நோக்கத்தை
அடைய விடாமல்
ஏகாதிபத்தியத்தால் வெகு
கவனமாக சிதைக்கப்பட்டது.

தலைவர்களை
அவமானப்படுத்துவதாக கூறி
திசை திருப்பும் நடவடிக்கை
இங்கே பலிக்காது வேந்தன்
அரசு அவர்களே

அசுரன்


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அசுரன்  
View profile  
 More options Sep 12 2006, 4:26 pm
From: "அசுரன்" <asura...@gmail.com>
Date: Tue, 12 Sep 2006 13:26:42 -0700
Local: Tues, Sep 12 2006 4:26 pm
Subject: Re: அடிமை நாடும், போலி சுதந்திரமும்
வேந்தன்,

//''ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான்
வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விக்கச்
சொல்லி
காயிதம் போட்டான்
வெள்ளக்காரன்''//

what is happening now.... ???

the same thing....

instead of ஊரான், Now organaized imperialism, that is WTO and
World Bank, is dictating us.

did you read my reply fully????


 
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Messages 26 - 50 of 55 < Older  Newer >
« Back to Discussions « Newer topic     Older topic »