தினம் ஒரு பாடல்

38 views
Skip to first unread message

AKR

unread,
Nov 4, 2009, 3:25:23 PM11/4/09
to muthami...@googlegroups.com
நமது நாட்டின் பல பகுதிகளை பண்டைக் காலத்திலிருந்து ஆண்ட மன்னர்கள் அனைவரும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாதிருக்கவும், நிலத்தடி நீர் குறையாமல் இருக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவுமென்றே பல்வேறு இடங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேமித்தனர். அந்தக் காலததில் மக்களின் முக்கியமான தொழில்களாகப் பெரும்பாலும் விவசாயம், நெசவு, வாணிகம், கைவினைப் பொருட்கள் செய்தல், சிற்பம் வடித்தல், ஓவியம் வரைதல் போன்றவையே விளங்கின. தற்காலம் போல அடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் முதலியவை மிகவும் குறைந்த அளவிலேயே செயல் படுத்தப்பட்டன.
 
அவ்வாறு நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மண்மேடாக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும். இத்தகைய போக்கை மாற்றி மத்திய மாநில அரசுகள் தரிசு நிலங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேகரிக்கும் திட்டத்தைப் பரவலாக அமுல்படுத்த வேண்டும். இல்லாவிடில் இன்னும் சிறிது காலத்தில் நிலத்தடி நீர் குன்றி உயிர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.
 
ஏரிகள் நிறைய வெட்டப்பட்டால் அவற்றின் கரையில் சோலைகளும் பூங்காக்களும் ஏற்படுத்தி சுற்றுலாத் தலங்களாக அமைத்து அதன்மூலம் வருவாய் ஈட்டவும் வழி செய்யலாம். அது மட்டுமா? காதலர்கள் தங்களது வாழ்வை மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் அமைத்துக் கொள்ளவும் பூங்காற்று வீசும் ஏரிக் கரைகள் உதவும்.
 
 
படம்: முதலாளி
இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்
 
ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
 
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
 
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 5, 2009, 10:43:07 AM11/5/09
to muthami...@googlegroups.com
ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஓர் இளைஞனுக்கு அவளது முகம் எப்பொழுதும் மனக்கண்ணில் தோன்றியவாறு இருப்பதும். அவன் காணுகின்ற பொருளிலெல்லாம் அவள் உருவம் தெரிவதும் காதல் படுத்தும் பாடு. காதல் கொண்டவன் மனதில் கவிதைகள் தோன்றும். அக்கவிதைகளிலும் அவள் கருவிழிகளும் அவ்விழிகள் அவன் மேல் தொடுத்த மலர்க் கணைகளுமே தோன்றும்
 
 
திரைப்படம்: பாஞ்சாலி
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1959
 
ஒரு முறை பார்த்தாலே போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்
 
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலையழகே உன்னை வாழ்நாளில்
 
ஒரு முறை பார்த்தாலே போதும்
 
கன்னங்களை ரோஜா மலர் என்பதா?
கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை
கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?
கண்களை மீனென்று சொல்வதா? ஆஆ
கண்களை மீனென்று சொல்வதா? இல்லை
கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?
 
ஒரு முறை பார்த்தாலே போதும்
 
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது - உன்
வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு
புதிய உலகமும் தோணுதே..
 
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 6, 2009, 9:26:14 AM11/6/09
to muthami...@googlegroups.com
தமிழன் இதயம்
 
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்.
 
அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.
 
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.
 
'பத்தினி சாபம் பலித்துவிடும்'
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.
 
சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.
 
தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.
 
தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.
 
நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.
 
கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.
 
சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.
 
உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை ; சரித்திரம் அசைபோடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.
 
யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.
 
'கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும்;
எல்லாப் புகழும் இவைநல்கும்;'
என்றே தமிழன் புவிசொல்லும்.
 
மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
'தருவது மேல்' எனப் பேசிடுவான்.
 
ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.
 
உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்;
சாந்தம் தவறா துடனிருந்தான்.

 
- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
 
 
படம்: மரகதம்
இயற்றியவர்: ஆர். பாலு
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1959
 
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
 
காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு
 
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
 
விண்ணை மறைத்திடும் கோபுரமே - நம்
வித்தையைக் காட்டிடும் ஓவியமே
விண்ணை மறைத்திடும் கோபுரமே - நம்
வித்தையைக் காட்டிடும் ஓவியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
இயல் இசை நாடக இலக் கணமே
 
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
 
கொல்லாமை பொய்யாமை நெறி கண்டே
குறளெனும் அமுதாம் தேனுண்டே
சொல்லும் செயலும் ஒன்றெனவே
வாழ்வது உலகில் தமிழினமே
வாழ்வது உலகில் தமிழினமே
 
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தமிழ் நாடு
தமிழ் நாடு தமிழ் நாடு
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 7, 2009, 12:26:36 PM11/7/09
to muthami...@googlegroups.com
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
 
எனும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாட்டில் கூறியுள்ளது போல் இறைவனை வழிபடுகையில் உள்ளம் உருகி அவன் மேல் காதலுடன் வணங்க வேண்டும். இறை வழிபாட்டில் உண்டாகும் காதல் உணர்வுக்கும் ஒரு பெண் தான் நேசிக்கும் ஒரு ஆணின் மேல் அல்லது ஒரு ஆண் தான் நேசிக்கும் ஒரு பெண்ணின் மேல் கொள்ளும் காதலுக்கும் அடிப்படை அன்பில் வேறுபாடு கிடையாது. காதல் என்றாலே தூய்மையான மரியாதைக்குரிய அன்பு என்பது பொருளாகும்.
 
ஆண் பெண் காதலில் இயல்பாக எழும் பாலுணர்ச்சியைப் புறந்தள்ளி இத்தகைய தெய்வீக உணர்வுடன்  கொள்ளும் காதல் தெய்வ வழிபாட்டில் கிடைப்பது போன்ற பேரின்பத்தைத் தர வல்லதாகும்.
 
இதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாதேவி அம்மையாரும் ஆவர்.
 
தெய்வத்தை வழிபடுவோர் அத்தெய்வத்தைத் தேரில் அமர்த்தி அத்தேரை வடம் பிடித்து இழுத்து ஊரெங்கும் உலாவருதல் விழாக்கோலமாய் அமைந்த வழிபாடாகும். ஆலயங்களில் இத்தகைய வழிபாட்டுக்கெனத் தங்கரதம் ஏற்படுத்தி அதனை விசேஷமாகத் துதிக்க விரும்பும் பக்தர்கள் இழுக்க வகை செய்வது வழக்கத்தில் உள்ளது.
 
அத்தகையதொரு நிலையில் தங்களது தெய்வீகக் காதலை வெளியிடுகின்றனர் கலைக்கோவில் காதலர்கள்.
 
 
திரைப் படம்: கலைக்கோவில்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா
 
ஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
 
தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
 
செவ்விளநீரின் கண் திறந்து செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில் கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே
 
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
 
மாங்கனிக் கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் போதைகள் போராட தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட
 
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 9, 2009, 2:20:49 PM11/9/09
to muthami...@googlegroups.com
கழுதை குட்டியாக இருக்கையில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும் அடர்ந்த ரோமத்துடன் திகழும். ஓடுகையில் ஒரு குதிரைக் குட்டி ஓடுவதைப் போல் இருக்கும். அதே கழுதை வயது ஏற ஏற அதன் பின்னங்கால்கள் இரண்டும் கோணிக்கொண்டு, ரோமம் உதிர்ந்து, உடலெங்கும் மண் படிந்து பார்க்க சகிக்காத அளவுக்கு அருவெறுப்பான தோற்றத்தை அடையும். இதனாலேயே "வர வ்ர மாமியார் கழுதைப் போலானாளாம்" என்று தனது மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார்களைக் கழுதைக்கு உதாரணமாகக் கூறுவதுண்டு.
 
குழந்தைகளாக இருந்தபோது நமது உள்ளங்களில் பெரிதும் குதூகலமே குடியிருந்தது. அவ்வப்போது பிற குழந்தைகளுடனும், பெற்றோருடனும், பிற வயதில் மூத்த நண்பர்களுடன் ஏதேனும் சில காரணங்களினால் ஏற்படும் மன வருத்தங்கள் அனைத்தையும் அக்காரணங்கள் நீங்கியதும் நொடிப்பொழுதில் மறந்து விட்டு அனைவருடனும் மனம் விட்டுக் கலந்து பேசி, விளையாடி மகிழும் மனம் அப்போது நமக்கு இருந்தது.
 
குழந்தைப் பருவத்தைக் கடந்து வயது வந்த பின்னர் கழுதையைப் போலவே நம் மனதில் கள்ளமும் கபடமும் குடிபுகுந்து போலி கௌரவம் கொண்டு, பொறுமை இழந்து அவதிப் படுகிறோம். பிறருடன் அற்பக் காரணங்களுக்காகவும் காரணமே இல்லாமலும் கோபம் கொண்டு அவரது மகிழ்ச்சியைக் குலைப்பதோடல்லாமல் நமது உள்ளங்களையும் நாமே புண்படுத்திக் கொள்கிறோம். நாம் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா?
 
 
படம்: குழந்தையும் தெய்வமும்
இயற்றியவர்: கவிஞர் வாலி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965
 
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
 
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
 
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
 
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது
 
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
 
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
 
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 10, 2009, 1:41:30 PM11/10/09
to muthami...@googlegroups.com
"புல்லினும் அற்பமானது எது?" என்று தரும தேவதை கேட்டதற்குப் பாண்டவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரன் சொன்ன பதிலாவது, "கவலை" என்பதாகும். ஆனாலும் அவனும் தன் வாழ்நாளெல்லாம் கவலையிலேயே கழித்ததாக மஹாபாரதக் கதையின் வாயிலாக அறிகிறோம். நாமெல்லோரும் இவ்வுலகில் அனுதினமும் கவலைப் பட்டு வருந்தி மடிவதற்காகவே அவதரித்தோமோ?
 
பிறந்த குழந்தைக்குத் தன் தாயை ஒரு கணம் காணவில்லையெனில் கவலை, குறித்த நேரத்தில் பசியாறப் பாலும் உணவும் தரவில்லையெனில் கவலை. தூக்கம் வரத் தாலாட்டவில்லையெனில் கவலை. குழந்தைப் பருவம் விளையாட்டில் ஒரு வழியாகக் கழிந்ததும் தாயையும், விளையாட்டுத் தோழர்களையும் விட்டுப் பள்ளி செல்ல வேண்டுமென்ற கவலை. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டுப் பாடங்களைப் படிக்க வேண்டுமென்ற கவலை. ஆண்டு நிறைவடைந்த நிலையில் தேர்வு எழத வேண்டுமெனும் கவலை. கல்வி முடிந்து தேராவிடில் தேரவில்லையெனும் கவலை, தேர்வுபெற்றால் உத்தியோகம் கிடைக்க வேண்டுமெனும் கவலை, காதலினால் கவலை, காதல் தோல்வியுற்றாலும் வெற்றியுற்றாலும் கல்யாணக் கவலை, கல்யாணம் செய்தபின்னர் பிள்ளைப் பேற்றைப் பற்றிய கவலை. கவலையோ கவலை.
 
முற்காலத்தில் (1960களில்) அப்பா அலுவலுக்குச் செல்ல அம்மா வீட்டிலிருப்பாள் வேளாவேளைக்கு சோறும்  பிற  பதார்த்தங்களும் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடுவாள். மாலை தந்தை பணி முடிந்து வீடு திரும்புகையில் தின்பண்டங்கள் வாங்கி வருவார். அதனை சுவைத்த பின்னர் ஏதோ சில பாடம் படித்துவிட்டுப் படுத்துறங்கி வாழ்வை எளிதாகக் கழிக்கும் நிலை இருந்தது. ஐந்து வயது வரையில் பள்ளிக்கூடம் கிடையாது. ஐந்து வயதில் நேரடியாக ஒண்ணங்கிளாஸ் சேர வேண்டும். அதன் பின்னர் 10 வருடங்கள் படித்தாலே போதும் நல்ல உத்தியோகம் பெற்று விரைவில் திருமணம் செய்து வாழ்வை சுகமாகக் கழிக்கலாம்.
 
காலம் செல்லச் செல்ல எல்.கே.ஜி., யு.கே.ஜி., கிரீச் என்று பிறந்து இரண்டு வயது நிறைவடையும் முன்னரே பிள்ளையை எங்காவது கொண்டு தள்ளிவிட்டுக் கணவனும் மனைவியும் இருவருமே பணி செய்து சம்பாத்திக்க வேண்டிய சூழ்நிலை (ஏழையை வாழ வைப்பதாகச் சொல்லி ஏலம் போட்டு, ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, விலைவாசியை ஏற்றி, தான் மட்டும் சொத்து சேர்த்த அரசியல்வாதிகளுக்கு நன்றி! "ஏழையாய் வாழ வைப்பதாக அவர்கள் சொன்னதை நாம் சரியாகக் கேட்கவில்லையோ?" என ஓட்டுப் போட்டு ஆட்சியை ஒப்படைத்தபின்னர் கவலைப்பட்டு என்ன பயன்?)
 
 
படம்: நிச்சய தாம்பூலம்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961
 
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
 
கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
 
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
 
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
 
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
 
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா?
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
 
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 11, 2009, 4:01:45 PM11/11/09
to muthami...@googlegroups.com
ஒரு பெண் திருமணம் முடித்துப் புகுந்த வீடு செல்கையில் தன் கணவனின் பெற்றோரைத் தன் பெற்றோராக அடைகிறாள், அவர்களுக்கு ஒரு மகளாகவும் ஆகிறாள். அதனாலேயே அவள் மருமகள் என அழைக்கப்படுகிறாள். மருமகள் என்றால் மருவி வந்த மகள் என்று பொருள் கொள்ளலாம். என் வீட்டுக்கு விளக்கேற்ற மருமகள் வந்து விட்டாள் என அவளது மாமனாரும் மாமியாரும் பிற உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறி அகமகிழ்வது மரபு. விளக்கேற்றுவதென்றால் அதுவரை அவர்களது வீட்டில் இருந்த சிறு சிறு துன்பங்களாகிய இருளை நீக்கி ஒளிகொடுப்பதென்று பொருள் கொள்ளலாம்.
 
தன் கணவனும் தான் புகுந்த வீடும் செழிப்பாக விளங்குவதற்குப் பாடுபடுவதும், அவ்வீட்டிலுள்ள அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை வளமாக்குதலும் ஒரு பெண்ணின் இன்றியமையாத கடமைகளாகும். அக்கடமைகளை முறையாக ஒரு பெண் நிறைவாற்றுவாளேயானால் அவளது வாழ்வும் வளம் பெற்று அவள் மிகவும் பெறுமை பெறுவாள்.
 
 
திரைப்படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்.
இசை.  எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வரராவ்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
ஆண்டு: 1958
 
புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
 
அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
 
புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
 
மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் - குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்
 
புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
 
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
 
புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
 
புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
 
புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே
 
புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழப்போற தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 12, 2009, 3:24:20 PM11/12/09
to muthami...@googlegroups.com
உலகில் உயிர் வாழ்க்கை உறவுகளாலும், நட்பாலும் காதலாலும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் அன்பினாலும் பாசத்தினாலும் நிலைத்திருக்கிறது. பரஸ்பரம் அன்பு கொண்டவர்கள் சேர்ந்திருக்கும் போது சந்தோஷம் விளைவது போலவே ஒருவரையொருவர் பிரிந்திருக்கையில் துக்கமும் விளைவது இயற்கை. துன்பம் தரும் அத்தகைய பிரிவு முடிந்து அன்புக்குரிய்வரை மீண்டும் சந்திக்க மாட்டோமா என மனம் ஏங்குவதும் இயற்கை.
 
 
திரைப்படம்: சதாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. ராமனாதன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1956
 
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
 
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே
 
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
 
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?
 
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Nov 13, 2009, 3:09:17 PM11/13/09
to muthami...@googlegroups.com
"தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நி்ல்லடா" என்று வெறும் முழக்கமிட்டால் போதாது, உண்மையாகவே தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்து செல்லும் தகுதியை ஒவ்வொரு தமிழனும் அடைய வேண்டும். பண்டைக்காலத்தில் தமிழ் நாடு சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு என்றிவ்வாறாகப் பல கூறுகளாகப் பிரிந்திருந்தது. அவை தவிர சிறு சிறு நாடுகள் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
 
பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது இந்நாடுகள் ஒன்றன் மேல் ஒன்று படையெடுத்ததன் விளைவு தமிழர்கள் ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டி, ஒருவ்ரை மற்றவர் வெட்டிக் கொன்ற கொடுமை தொடர்ந்து நிறைவேறியது. இக்கொடுமையை சிந்தித்துப் பாராமல் பொருளுக்காகத் தம் தமிழறிவை விற்று இத்தகைய கொலைபாதகங்களுக்குக் காரணமான அரசர்களின் மேல் கவிஞர்கள் பலர் பரணி என்ற பெயரில் பாடி வைத்த பிதற்றல்களைப் பெரிதென எண்ணி நாம் அறியாமையால் பெருமை கொள்கிறோம்.
 
இன்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பெரும்பாலோர் சொல்லொணாத் துயரில் மூழ்கி வருந்துகின்றனர். இவர்களின் துயரை யாராலும் விரைவில் நீக்க இயலாத சூழ்நிலை நிலவுவது மிகவும் வேதனை தருகிறது. இந்நிலைமைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகள் ஒருவரை மற்றவர் குற்றஞ்சாட்டி அவர்கள் தமிழரின் இன்னல்களைத் தீர்க்க வழி காணது தாங்கள் பதவிகளைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்கள் உண்மையிலே தமிழர்களின் துயர் துடைக்கப் பாடுபடுபவர்களா எனில் இல்லை எனும் பதிலே கிடைக்கிறது.
 
தமிழர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்னவெனில், தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்படாது, உணர்ச்சிபூர்வமாக முடிவெடுத்ததே ஆகும். அத்துடன் தம்முள் ஒற்றுமை குறைய விடுவதும் இத்தகைய இன்னல்களுக்கு முக்கியக் காரணமாகும்.
 
தமிழர்கள் ஒருவரோடொருவர் நட்புக்கொண்டு, தன்னலம் கருதாது உண்மையாய்ச் சேவை செய்யும் மனப் பக்குவமும், அறிவும் திறமையும் கொண்ட தலைவர்களைத் தேர்வு செய்வார்களேயானால் தமிழரை யாரும் இன்னல்களுகுள்ளாக்க இயலாதென்ற சூழ்நிலை விரைவிலேயே உருவாகும்.
 
உலகத் தமிழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.
 
 
திரைப்படம்: கலங்கரை விளக்கம்
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1965
 
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
 
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
 
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
 
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே
 
சங்கே முழங்கு ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
 
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள் ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages