மின்தளங்களில் குறிப்பாக மடலாடலில் சமரசத்துக்கு இடம் இல்லையா

15 views
Skip to first unread message

ஆராய்ச்சிக் குஞ்சு

unread,
Jun 19, 2013, 1:38:09 PM6/19/13
to mint...@googlegroups.com
தஞ்சை ராமையாதாஸ் ரம்பையின் காதல் திரைப்படத்தில் சுடுகாட்டைச் சமரசம் உலாவும் இடம் என்று பாட்டெழுதினார்.


1970-ல் சமரசம் உலாவும் இடமாக இருந்த இடுகாடும் சுடுகாடும் சாதி வேறுபாட்டை வெளிக் காட்ட ஆரம்பித்தது

அரசியல் சாசனச் சிற்பிகள் இந்தியா சமதளமாக் மாறும் என்று கூறிய உறுதி மொழி இன்னும் ஏட்டளவில்

இணையம் வந்ததும் ஏற்றதாழ்வில்லாத மெய்நிகர் உலகம் தோன்றிவிட்டதாகக் கொண்டாடியோர் விரைவில் மெய்யுலகில் உள்ள முரண்பாடுகள் இணையத்தில் இன்னும் தீவிர முகம் காட்டும் தளமாக அமைந்துவிட்டதை எண்ணி வருந்துவர்

கடந்த மூன்றாண்டுகளாக மடலாடலில் மாறாமல் ஓயாமல் எழும் முரண் கருத்துக்கள் தமிழா சங்கதமா எதன் கையூட்டில் எந்தமொழி வளர்ந்தது என்ற தொடர் மடலாடல்தான்

தனித்தமிழா சங்கதமா மணிப்பிரவாளமா என்று கச்சை கட்டுவதைவிட ஏன் ஒரு சமரச உடன்பாட்டை ஏற்படுத்தக்கூடாது என்று சிலநேரங்களில் சிலமனிதர்கள் சிந்திக்கிறார்கள்

கி.பி 7-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இந்திய இறையாண்மைத் தத்துவங்கள் வேர்விட்டுப் பரவின.  ஆதிசங்கரர் என்ற பகுத்தறிவாளர் துணைக்கண்டம் முழுதும் நடந்து கருத்துப்பரலை சங்கத மிழியில் நிகழ்த்திக் காட்டினார்.  ஸ்ரீராமானுஜரும் சங்கதத்தையே கருத்துப்பரவலுக்குத் தேர்ந்தெடுத்தார்

ஏழாம் நூறாண்டுக்குமுன் 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்ற கால அடிப்படையைக் கருத்தில்கொண்டு 7-ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ் சங்கதத்திலிருந்து உள்வாங்கியதும் தமிழ் சங்கதத்துக்கு அளித்த கொடையும் பட்டியலிட்டால் அது தமிழுக்குச் சிறப்பாக அமையுமல்லவா

தமிழக வரலாற்றில் 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாறு இன்னும் நம்பகத்தன்மையுள்ள தகவலின் அடிப்படையில் அமையவில்லை.  அதில் உள்ள புனைவுகள் தவறுகள் ஆய்வின் அடிப்படையில் சரிசெய்யப்படல் வேண்டும்

சங்கதம் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றல்ல.  தமிழர்களில் சிலர் அதன் அழகில் மயங்கி தாய்மொழியைக்கைவிட்டுச் சங்கதத்தைத் தூக்கிப் பிடித்தனர். அதனால் தமிழின் வளர்ச்சி குன்றி அம்மொழியின் வளங்கள் எல்லாம் சங்கததீன் தொடர்பால் உருவானது என்ற கருத்தை ஓங்கி ஒலித்து அதையே ஆங்கிலேயர்களும் நம்பி இன்று உலகமே இந்த இடியாப்பச் சிக்கலில் இருந்து விடுபட இயலாமல் தவிக்கிறது

இணையதளத்தில் இரு மொழிகளீடையே சமரசம் உலவ அறிஞர்கள் உதவுவார்களா

ஆராய்ச்சிக் குஞ்சு

N. Kannan

unread,
Jun 21, 2013, 8:17:59 PM6/21/13
to மின்தமிழ்
காலை எழுந்தவுடன் ஓர் நற்சிந்தனை தரும் பாடல். நன்றி பேராசிரியரே!

சமகாலத் தமிழர்கள் கடந்த 200 ஆண்டுகளில் ஊட்டப்பட்ட சில நச்சுக்கருத்துகளின் வழி சுயசிந்தனை இல்லாமல் நடைபோடுவதால் வரும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

கடந்த 400 ஆண்டுகளில் நம் மீது ஏற்றப்பட்ட தாழ்வு மனப்பான்மை, அடிமை புத்தி இவையே இன்றளவும் நம்மை ஆட்டுவிக்கிறது.

13 நூற்றாண்டுவரை தமிழன் மிகப்பரந்த நோக்குடன், தன் பெருமை அறிந்து பீடுடன் நடை போட்டான் என்று சொல்லலாம். உதாரணமாக, ஸ்ரீஇராமானுஜர் வாழ்வைக் காட்டலாம். அவர் அடிப்படையில் தமிழர். தமிழைத் தாய்மொழியாக, முதல் மொழியாகக் கொண்டவர். எனவே தம் வாழ்வையே தமிழின் சிறப்பை நிரந்தரப்படுத்த உழைத்தார். ஆனால் அவர் தமிழில் ஆக்கம் செய்யவில்லை. காரணம் அம்மொழியின் சிறப்பு அப்போது இந்தியாவில் கோலோட்சிய சமிஸ்கிருதத்தில் அறியப்பட வேண்டும் என்று விரும்பினார். எனவே சங்கத்ததில் எழுதினார். இவர் காலத்திற்கு முன்வரை சங்கத சாஸ்திரங்களை மட்டுமே உயர் சிந்தனைக் களஞ்சியமாக மேற்கோள் காட்டி கற்பித்து வந்த ஒரு மூடமையை மாற்றி நாலாயிரம் தமிழ்ப் பாசுரங்களைக் கற்றல் நான்கு வேதங்களையும் கற்றலைவிட மேல் என்பதை தமிழர் மனதில் (குறிப்பாக பிராமணர்கள் மனதில்) பதித்தார் (உம். வேதாந்த தேசிகரின் கூற்று). அவர், ‘திருப்பாவை ஜீயராக’ திருநாடு எழுந்தருளும்வரை செயல்பட்டார்.

இப்போது இது போன்ற நோக்கில் நம்மில் பலரும் தமிழின் வளத்தை தமிழர்கள் அறிந்திருக்கும் மொழிகளில் எடுத்துச் சொன்னால் எப்படி இருக்கும்? யோசியுங்கள். தமிழர்கள் 22 நாடுகளில் வாழ்கின்றனராம். அப்படியெனில் 22 மொழிகளில் தமிழ்ப்பெருமையைச் சொல்லலாம். செய்கின்றோமா? சமிஸ்கிருத்ததை மட்டம் தட்டுவதிலேயே காலத்தைப் போக்குகிறோம்.

இணையம் ‘சமரசம் உலாவும் இடமில்லை’. பயித்தியத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டும் கண்ணாடி. தமிழனின் உளவியல் பிரச்சனைகள் என்னவென்று அறிய வேண்டுமெனில் நம் மடலாடற்குழுக்கள், வலைப்பூக்கள், முகநூல் இவைகளில் வலம் வந்தால் போதும்.

பயித்தியம் தெளிவதற்கும் இணையமே மருந்து!

நா.கண்ணன்


2013/6/20 ஆராய்ச்சிக் குஞ்சு <radius.co...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages