கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்பார்ப்பாரும் திண்பர் உடும்புபொருள்: அருவி உடைய மலைநாடனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை அதன் உயர்வை எண்ணித் தின்பர். அதுபோல கள்ளியிடம் தோன்றும் அகிலையும் கரிய காக்கையின் சொல்லையும் அவை தோன்றிய இடத்தை எண்ணி இகழாது உயர்வாய்க் கருத வேண்டும்.உடும்பு என்னும் பல்லி இனப் பிராணியை எந்த எந்த இனத்தினர் சாப்பிடுவர்? உடும்புக் கறிக்கு ஏதேனும் மருத்துவ சக்தி இருப்பதால் இப்படிச் சொன்னார்களா? அல்லது இதை அப்படியே பொருள் கொள்ளாது வேறு வகையில் பொருள் கொள்ள வேண்டுமா?இது நீண்ட காலமாக என் மனதை உறுத்தும் ஒரு கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள்.Swami
020 8904 2879
07951 370 697
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பத்துப் பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் பார்ப்பார் வீட்டை கோழியும் நாயும் கூட நெருங்காது
என்று அவர்கள் தூய்மை பெரிதும் போற்றப்படுகிறது. அதே நூல் வரிகள் 302-310 ஐயர் வீட்டில் என்ன என்ன கிடைக்கும் என்ற “மெனு” வையும் கொடுக்கிறது:இராசன்னம் (அரிசிச் சோறு)வெண்ணெயில் வெந்த கொம்மட்டி மாதுளைத் துண்டு(மிளகு பொடியும் கருவேப்பிலையும் கலந்தது)மாவடு
நீண்ட நாட்களாக எல்லா உரைகளிலும் வரும் ஒரு வரி புதிராகவே இருக்கிறது:கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்பார்ப்பாரும் திண்பர் உடும்புபொருள்: அருவி உடைய மலைநாடனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை அதன் உயர்வை எண்ணித் தின்பர்.
உடும்பு என்னும் பல்லி இனப் பிராணியை எந்த எந்த இனத்தினர் சாப்பிடுவர்? உடும்புக் கறிக்கு ஏதேனும் மருத்துவ சக்தி இருப்பதால் இப்படிச் சொன்னார்களா?
கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்பார்ப்பாரும் திண்பர் உடும்பு
பொருளுக்குச் சின்ன க்ளூ கொடுக்கிறேன்.பாப்பாரப் புள்ள நண்டு புடிச்ச மாதிரி அப்படின்னும் பழமொழி இருக்கு. நாம என்ன சொல்வோம்னா, ‘நண்டு பிடிக்கத் தெரியாத பாப்பாரப் பிள்ளை போய், நண்டைப் பிடிக்க முயன்றால், அது எவ்வளவு முடியாதோ அவ்வளவு இவனுக்கும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது. He is unfit, inefficient for this work. As inefficient as a Brahmin boy trying to catch a crab.சேசாத்திரி என்ன சொல்வார்னா,‘பாப்பாரப் பசங்க நண்டு தின்னுவாங்க’ அப்படின்னு பழமொழியே இருக்கு. :))
கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத்—தெள்ளிதின்ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்பார்ப்பாரும் தின்பர் உடும்பு
2012/5/23 Karuannam Annam <karu...@gmail.com>கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்பார்ப்பாரும் திண்பர் உடும்பு
வணக்கம்,
இங்கு முதலில் பார்ப்பனன் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
நன்றி
அனபானந்தன் ரெங்கா
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Geetha Sambasivam
Sent: Wednesday, May 23, 2012 4:00 PM
To: mint...@googlegroups.com
Subject: Re: [MinTamil] பார்ப்பனர் மாமிசம் சாப்பிடுவார்களா?
அருமையான சந்தேகம். ஹரிகி, தேவ், மோகனரங்கன் போன்றவர்கள் தெளிவிப்பார்கள் என எண்ணுகிறேன். ஆவலுடன் காத்திருக்கேன்.
புலவர் என்ன சொல்றாரு?கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத்—தெள்ளிதின்ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்பார்ப்பாரும் தின்பர் உடும்பு
பழமொழி நானூற்றில் வரும் பாடல் இது. ஈற்றடி ஒரு பழமொழி.
சந்தனம் மாதிரி இல்லாம, அகில் மாதிரி கொஞ்சம் (சந்தனத்துக்கு) இரண்டாந்தரமாக இருந்தாலும்
கன்னங் கருக்க ஒரு காக்கா வந்து கத்தின மாதிரி அவர் குரல் இனிமையாக இல்லாமலும் உருவம் அழகற்றதாகவும் இருந்தாலும் சரி. அவர் சொல்கிற நல்லுரையை மனத்தில் வாங்கிக்கொள்.
இந்த உடும்பு இருக்கிறதே உடும்பு, அதைக் கையால பிடிக்கிறதே முடியாத காரியம். திமிறும். உடும்பு ஏமாந்த சமயத்துல ஒரு நாய் அதைக் கடிச்சுப் போட்டதுன்னு வையி அசைய முடியாமல் கிடக்கும் உடும்பைக் கொல்லவோ தின்னவோ மறவனும் வேடுவனும் வேணாப்பு. தோ இல்ல, மாமிசம்னா என்னன்னே தெரியாத பாப்பாரப் புள்ள, அதுகூட அவ்வளவு வலிமையான உடும்பைத் தின்னுடும். (எளியார்கூட வெல்லக்கூடியதாக, எவ்வளவு வலியதாக இருக்கும் நாடும் மாறிப்போகும்.)
இப்படிப்பட்ட நாய் உடும்பைக் கடிச்சுப் போட்டா, கௌவ வேற கௌவிக்கிட்டு வந்துட்டா, அப்படிப்பட்ட பலவீனமான தருணத்தில் அதைக் கொல்ல வீராதி வீரன் வேணுமா என்ன? பச்சப் புள்ள போதாது?
முதல் கருத்தையும் பழமொழிக் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளீர்கள். ஆனால் பழ்மொழிக்கருத்து முதல் கருத்துடன் பொருத்துதல் எளிதாக இல்லை என்பது என் எண்ணம்.பார்ப்பாரும் என்பதில் வருகிற உம் அவர்கள் மாமிசம் உண்பதில்லை என்பதையே குறிக்கிறது. தன் முயற்சி இன்றி வரும்போது உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் வேண்டாததைக் கொள்ளக் கூடும் என்பதைப் பழ்மொழி குறிக்கிறது. பார்ப்பனர் மாமிசம் உண்பது என்பது பாடல் கருத்தல்ல. அறிஞ்ர்கள் விளக்க வேண்டும்.