திரு.வி.க.

7 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
Nov 13, 2009, 7:38:11 AM11/13/09
to mintamil
18 11 09 தேதியிட்ட விகடனின் கால பெட்டக்த்தில் ஒரு பகுதி

நல்ல மனிதர்!

திரு.வி.க. - தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தனிப் பெருமையை அளித்த இந்த அறிஞருக்கு நாளை ஆகஸ்ட் 25-ந் தேதி அறுபதாம் ஆண்டு நிறைகிறது. அதை வெகு சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார், ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் முதலிய பிர முகர்களின் முயற்சியால் நடைபெற்று வருகின்றன என்பதையறிந்து நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.

திரு.வி.க-வின் தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் பிரசித்தி பெற்றவை.அவர் இயற்றியிருக்கும் 'பெண்களின் பெருமை', 'இந்தியாவும் விடுதலையும்', 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' முதலிய உயர்ந்த நூல்களும், திருக்குறளுக்கும் பெரிய புராணத்திற்கும் அவர் எழுதியிருக்கும் விளக்கமும் என்றும் அழியாத இலக்கியங்கள். தொழிலாளர் நன்மைக்காக அவர் செய்துள்ள சேவைகளும், அரசியல் துறையில் அவர் காண்பித்த ஆர்வமும் போற்றற் குரியவை.

அத்தகைய பெரியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை மிக்க விமரிசையாகக் கொண்டாடுவது பொருத்தமேயாகும். இறைவன் அவருக்கு ஆரோக்கியத்தையும் தீர்க்க ஆயுளையும் தந்து, இன்னும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் சேவை செய்வதற்குத் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அருளுமாறு பிரார்த்திக்கிறோம்


இன்னம்பூரான்

Thiruvengada Mani T K

unread,
Nov 14, 2009, 12:02:55 AM11/14/09
to mint...@googlegroups.com
இது எப்போது விகடனில் வெளியிடப்பட்டது?
 
18.11.09 ல் வந்த கால பெட்டக்த்தில் ஒரு பகுதி..... என்பது சரி...
என்றைய இதழில் original ஆக வெளிவந்தது என்பதும் இருந்தால்தான் செய்தி முழுமையடையுமோ?
 
மணி

From: Innamburan Innamburan <innam...@googlemail.com>
To: mintamil <minT...@googlegroups.com>
Sent: Fri, 13 November, 2009 6:08:11 PM
Subject: [MinTamil] திரு.வி.க.

18 11 09 தேதியிட்ட விகடனின் கால பெட்டக்த்தில் ஒரு பகுதி

நல்ல மனிதர்!

திரு.வி.க. - தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தனிப் பெருமையை அளித்த இந்த அறிஞருக்கு நாளை ஆகஸ்ட் 25-ந் தேதி அறுபதாம் ஆண்டு நிறைகிறது. அதை வெகு சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார், ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் முதலிய பிர முகர்களின் முயற்சியால் நடைபெற்று வருகின்றன என்பதையறிந்து நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

Sri Sritharan

unread,
Nov 14, 2009, 12:13:32 AM11/14/09
to mint...@googlegroups.com
1943 இல் வெளிவந்திருக்கலாம்.

திரு.வி.க. வின் காலம்: திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தனார் (திரு. வி. க., ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953)

http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95.&redirect=yes


அன்புடன்
சிறீதரன்

Tthamizth Tthenee

unread,
Nov 14, 2009, 9:59:15 AM11/14/09
to mint...@googlegroups.com
இந்டஅச் செய்தியைப் படித்தவுடன்  ஏதோ இன்றுதான் திரு வீ க  அவர்களுக்கு  அறுபது ஆண்டுகள்  முடிந்தாற்போல்  ஒரு  குதூகலம்  மனதுக்குள் வந்தது
 
வாழ்த்துக்கள்  சொல்லலாம்  என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்
 
பிறகுதான் உரைத்தது
 
இருந்தாலும்   இன்னும்   பல்லாயிரம் ஆண்டுகள்  நம் மனதில் வாசம் செய்யட்டும்  திரு வீ க அவர்கள்
 
அன்புடன்'
தமிழ்த்தேனீ

 
14-11-09 அன்று, Sri Sritharan <ksth...@bigpond.com> எழுதினார்:
Reply all
Reply to author
Forward
0 new messages