அன்றொருநாள்: ஃபெப்ரவரி 13 அரியணையும், சிலுவையும்

6 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
Feb 12, 2012, 1:51:33 PM2/12/12
to mintamil, thamizhvaasal, Innamburan Innamburan

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 13

அரியணையும், சிலுவையும்

லக்னெள

செப்டம்பர் 29, 1929

என்னருமை ஜவஹர்,

இந்தியா முழுவதில் உன் தந்தையின் செயலாற்றும் இதயம்/ உன்னுடைய கனத்துப்போன இதயம் போல் யாருக்காவது இருந்திருக்குமா என்பது ஐயமே. எனது இதயமோ அவருடைய பெருமையையும் உன்னுடைய மனவலியையும் ஒருசேர அனுபவிக்கிறது. உன்னுடைய அதியாச்சிரியமான பலியிடுதலை பற்றி அடிக்கடி நான் சொன்னதுண்டு. அதை நினைத்து நேற்றிரவு படுத்திருந்தேன். உன் தலைமைக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்பொழுது உன் முகத்தை பார்த்து நான், ‘இவனுக்கு பட்டாபிஷிகேமும் இது தான்; அறையப்படும் சிலுவையும் இது தான்’ என்று நினைத்துக்கொண்டேன். இரண்டும் இரட்டை; பிரிக்கமுடியாது; சில சமயங்களில், சில சூழ்நிலைகளில். இரண்டும் ஒன்றிப்போய் விடுகின்றன. நீயோ மென்மையானவன்; உன்னுடைய ஆன்மீகம் கட்டுக்கோப்பானது. உன்னை விட தரம் தாழ்ந்தோர், புரிதல் அற்றவர்கள்,பலவீனம், பொய், புறம் சொல்லுதல், வஞ்சகம் ஆகியவற்றை கண்டு மன அழுத்தம் அடையாதவர்களை விட, நீ மிகவும் இன்னலுக்குள்ளாவாய். எனக்கு என்னமோ உன்னுடைய அப்பழக்கற்ற வாய்மையிலும், விடுதலை பரவசத்திலும் அசையாத நம்பிக்கை இருக்கிறது. நீ தனக்கு மனோபலம் போதாதோ, தன்னுடைய இலக்ஷியங்களை இயற்ற ஆற்றல் போதாதோ என்று என்னிடம் கவலைப்பட்டது உண்டு. எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமோ? இது உனக்கு சவால்; இதுவே உனக்கு சடாரி மரியாதை. உன்னுடைய உன்னத குணாதிசயங்களை பாயும் சக்தியாக, தைரியலக்ஷ்மியாக, காணும் தெய்வமாக, புத்திமதியாக, இந்த சவால் மாற்றி, வரன் அளிக்கும். என் நம்பிக்கையில் எனக்கு அச்சமில்லை. ஏதாவது ஒரு வகையில் நான் உனக்கு உதவமுடியுமானால், உன் மகத்தான பணியில் தொண்டு செய்யமுடியுமானால், ஒரு வார்த்தை போதும்; ஓடோடி வருவேன். அப்படியில்லை என்றாலும், என் அன்பும், கனிவும் எப்போதும் உனக்கு உண்டு. “ஒருவனின் மனோசித்திரம் மற்றவனுக்கு சிறகடிக்காது.” என்று கஹ்லீல் கிப்ரான் சொல்லியிருந்தாலும், ‘ ஒருவனின் ஆத்ம நம்பிக்கை மற்றவனுக்கு ஒளியும், உலகுக்கு பிரகாசத்தையும் அளிக்க வல்லது.’ என்று கருதும்,

உன் சிநேகிதியும், அக்காவும் ஆன,

சரோஜினி நாயுடு.

*

அன்றாட வரலாறு நன்றாக பிடித்து ஆட்டுகிறது. நேற்று கீதாவின் வரவு. இன்று பவளாவின் வரிசை. சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள். அவரது வாழ்க்கை வரலாற்றை மின் தமிழர் பவளசங்கரி 11 02 2012 அன்று மின் தமிழில் ~ இந்தியாவின் கோகிலம், வானம்பாடி!~ பதிவு செய்திருக்கிறார். ஜவஹருக்கு சரோஜினி எழுதிய மடலின் தமிழாக்கம், ஒரு அனுபந்தமே. அது அந்தக்காலத்தை பிரதிபலிக்கிறது. கொசுறு: ‘tranquil’ என்ற சொல்லுக்கு எனக்கு உள்ளர்த்தம் சொல்லிக்கொடுத்தது சரோஜினி நாயுடுவின், ‘...On the tranquil brow of a woodland stream...’ in The Bangle Sellers.

இன்னம்பூரான்

13 02 2012

http://www.thehindu.com/multimedia/dynamic/00029/07SMLCJAIN_29734f.jpg

சரோஜினி நாயுடு & ஜவஹர்லால் நேரு.

சித்திரம் ஹிந்து காப்புரிமை. அதனால், லின்க் மட்டும். க்ளுக்கி பார்க்கவும்.

கி.காளைராசன்

unread,
Feb 12, 2012, 2:24:41 PM2/12/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/2/13 Innamburan Innamburan <innam...@gmail.com>

 ‘இவனுக்கு பட்டாபிஷிகேமும் இது தான்; அறையப்படும் சிலுவையும் இது தான்’ என்று நினைத்துக்கொண்டேன். இரண்டும் இரட்டை; பிரிக்கமுடியாது; சில சமயங்களில், சில சூழ்நிலைகளில். இரண்டும் ஒன்றிப்போய் விடுகின்றன.
உண்மையாகவே பொதுவாழ்வில் ஈடுபடுவர்கள் அனைவருக்கும் பொருந்தும் அற்புதமான வார்த்தைகள்.

-- 
அன்பன்
கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

s.bala subramani B+ve

unread,
Feb 12, 2012, 9:38:40 PM2/12/12
to mint...@googlegroups.com

நீயோ மென்மையானவன்;

 

உன்னுடைய ஆன்மீகம் கட்டுக்கோப்பானது.

 

உன்னை விட தரம் தாழ்ந்தோர், புரிதல் அற்றவர்கள்,பலவீனம், பொய், புறம் சொல்லுதல், வஞ்சகம் ஆகியவற்றை கண்டு மன அழுத்தம் அடையாதவர்களை விட, நீ மிகவும் இன்னலுக்குள்ளாவாய்.

 

எனக்கு என்னமோ உன்னுடைய அப்பழக்கற்ற வாய்மையிலும், விடுதலை பரவசத்திலும் அசையாத நம்பிக்கை இருக்கிறது.

 

நீ தனக்கு மனோபலம் போதாதோ, தன்னுடைய இலக்ஷியங்களை இயற்ற ஆற்றல் போதாதோ என்று என்னிடம் கவலைப்பட்டது உண்டு.

 

எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமோ? இது உனக்கு சவால்; இதுவே உனக்கு சடாரி மரியாதை. உன்னுடைய உன்னத குணாதிசயங்களை பாயும் சக்தியாக, தைரியலக்ஷ்மியாக, காணும் தெய்வமாக, புத்திமதியாக, இந்த சவால் மாற்றி, வரன் அளிக்கும். சரோஜினி நாயுடு.


அன்றாட வரலாறு நன்றாக பிடித்து ஆட்டுகிறது. 

இன்னம்பூரான்


இரவெல்லாம் படுக்கையில் என் ஆய்வால எனக்குஎற்பட்ட மன உளைச்சல்களை கண்டு 
இன்று எப்படி இருக்கும் என்று புரியாமல் 
இணைய மடலை பார்த்தால் 
என் பாட்டி பவுனாம்பால் சிறு வயதில் எனக்கு அடிக்கடி சொன்ன சரோஜினாரின் வார்த்தைகள் 
உங்கள் மூலம் 
அதுவும் எனக்கு தேவை பட்ட நேரத்தில் 

நன்றி 

அன்புடன் 
சிவ பாலசுப்ரமணி 
 

s.bala subramani B+ve

unread,
Feb 12, 2012, 9:59:55 PM2/12/12
to mint...@googlegroups.com

என் பாட்டி பவுனாம்பால் ,மிக  பெரிய  மேதை 
 
தான் ஒரு விடுதலை போராட்ட வீரரின் மனைவி , அதுவும் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில்என் தாத்தா வேங்கட கிருஷ்ண முதலியார் அவர்கள் ,
தேவராஜ் முதலி தெருவில் வைத்து இருந்த மிக பெரிய கடையான வேங்கடக்ருஷ்ண அண்ட் கோ வில் இருந்த அத்தனை துணிகளையும் மக்களுக்கு இலவசமாக கொடுத்து  அதனால் வந்த பிரச்சனையில் மனம் வருந்தி இறந்த ,

என் தாத்தா  சுதந்திரம் கிடைத்ததால் அவசரத்தில் சொத்தை இழந்தார்  என்பது என் பாட்டிக்கு துளி கூட வருத்தம் இல்லை 
அவர் சொல்லும் உண்மை கதைகள் என் நாடு என் மக்கள், நாம் அடிமைகளாக இருக்க கூடாது , முதலில் நம் நாட்டு தொழில் 
என்ற  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 
 என்ற உணர்வை எப்பொழுதும் ஏற்படுத்தும் 

இன்றும் சிந்தாதரி பேட்டை  மற்றும் கந்தசுவாமி கோயில் செல்லும் போது வாழ்ந்து கேட்ட குடும்பத்தை சேர்ந்தவன் என்ற மன உணர்வு இருந்து கொண்டே இருக்கும் 
என் அம்மா பக்தவச்சலம் அவர்களின் மகளுடன் தான் காரில் அன்றைய பிரெசிடென்சி பள்ளிக்கு செல்வார்,
தலைவர்கள் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்து பேசி கொண்டே இருப்பார்கள் 
என்று சொல்வதை 
நாங்கள் நெல்லிக்காய்  மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு  கேட்டு கொண்டு இருப்போம் 



பாட்டியிடம் இருந்து தான் 
இன்று எனக்கு இருக்கும் மனோ வலிமை கிடைத்தது 

இன்றைய குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தாத்தா ,பாட்டி கதைகள் தேவை இன்று 
 
 
 



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Innamburan Innamburan

unread,
Feb 12, 2012, 10:33:12 PM2/12/12
to mint...@googlegroups.com

அன்பின் பாலு,

உங்கள் பதிலை பாரி வள்ளல் தந்த பரிசிலென கருதுகிறேன். 

இங்கு இப்போது பிரம்மமுஹூர்த்தம். அதிகாளை 3.22. உங்கள் பின்னூட்டம் இரண்டும் எனக்கு மனோவலிமையை கூட்டுகின்றன. எழுதி விட்டேனே தவிர, நீங்கள் குறிப்பிடும் வாக்கியங்களும், காளை ராஜனின் கருத்தும் என்னை, 'இரவெல்லாம் படுக்கையில்' சிந்தித்த வண்ணம் வைத்திருந்தன. பார்க்கப்போனால், இது பவளசங்கரியின் கைங்கர்யம். அவரு சரோஜினியின் வாழ்க்கைச்சித்திரம் தரவே, நான், இதை கையில் எடுத்தேன்.

பாட்டி பவுணாம்பாள் பெரிய மேதை என்பதில் ஐயமே இல்லை. உமது அலைச்சலை பற்றி, சக - ஒடிஷியான எனக்கு நன்கு தெரியும். முடிந்த போது , நாம் இருவரும் பவுணாம்பாளின் பாமர கீர்த்தி பாட வேண்டும்.
அன்புடன்,
இன்னம்பூரான்
13 02 2012
2012/2/13 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

Thevan

unread,
Feb 12, 2012, 10:20:49 PM2/12/12
to mint...@googlegroups.com
//என் பாட்டி பவுனாம்பால் ,மிக  பெரிய  மேதை 
 
தான் ஒரு விடுதலை போராட்ட வீரரின் மனைவி , அதுவும் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில்என் தாத்தா வேங்கட கிருஷ்ண முதலியார் அவர்கள் ,
தேவராஜ் முதலி தெருவில் வைத்து இருந்த மிக பெரிய கடையான வேங்கடக்ருஷ்ண அண்ட் கோ வில் இருந்த அத்தனை துணிகளையும் மக்களுக்கு இலவசமாக கொடுத்து  அதனால் வந்த பிரச்சனையில் மனம் வருந்தி இறந்த ,

என் தாத்தா  சுதந்திரம் கிடைத்ததால் அவசரத்தில் சொத்தை இழந்தார்  என்பது என் பாட்டிக்கு துளி கூட வருத்தம் இல்லை 
அவர் சொல்லும் உண்மை கதைகள் என் நாடு என் மக்கள், நாம் அடிமைகளாக இருக்க கூடாது , முதலில் நம் நாட்டு தொழில் 
என்ற  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 
 என்ற உணர்வை எப்பொழுதும் ஏற்படுத்தும் 

இன்றும் சிந்தாதரி பேட்டை  மற்றும் கந்தசுவாமி கோயில் செல்லும் போது வாழ்ந்து கேட்ட குடும்பத்தை சேர்ந்தவன் என்ற மன உணர்வு இருந்து கொண்டே இருக்கும் //

:-((((((

2012/2/13 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--


செயலை அடிப்படை கொள்கையாகவும் பேச்சை பிரச்சார யுக்தியாகவும் கொண்டவர்கள் தங்கள் இலக்கை எளிதில் அடையலாம்.



Regards,

Thevan, 
Mumbai.

 


Geetha Sambasivam

unread,
Feb 13, 2012, 2:44:35 PM2/13/12
to thamiz...@googlegroups.com, mintamil, Innamburan Innamburan
பவளசங்கரி எழுதிய கவிக்குயிலின் சரிதையை நானும் படித்தேன்.  இந்த இழையைக் கவனிக்கவில்லை போலும்.  அவர் சும்மாவே பிசி. சரியாய்க் கவனித்திருக்க மாட்டார். 

அருமையானதொரு பகிர்வுக்கு நன்றி ஐயா. இங்கே இப்போத்தானே பெப்ரவரி 13. 

2012/2/12 Innamburan Innamburan <innam...@gmail.com>

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 13

அரியணையும், சிலுவையும்

லக்னெள

செப்டம்பர் 29, 1929

என்னருமை ஜவஹர்,


அன்றாட வரலாறு நன்றாக பிடித்து ஆட்டுகிறது. நேற்று கீதாவின் வரவு. இன்று பவளாவின் வரிசை. சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள். அவரது வாழ்க்கை வரலாற்றை மின் தமிழர் பவளசங்கரி 11 02 2012 அன்று மின் தமிழில் ~ இந்தியாவின் கோகிலம், வானம்பாடி!~ பதிவு செய்திருக்கிறார். ஜவஹருக்கு சரோஜினி எழுதிய மடலின் தமிழாக்கம், ஒரு அனுபந்தமே. அது அந்தக்காலத்தை பிரதிபலிக்கிறது. கொசுறு: ‘tranquil’ என்ற சொல்லுக்கு எனக்கு உள்ளர்த்தம் சொல்லிக்கொடுத்தது சரோஜினி நாயுடுவின், ‘...On the tranquil brow of a woodland stream...’ in The Bangle Sellers.

இன்னம்பூரான்

13 02 2012

http://www.thehindu.com/multimedia/dynamic/00029/07SMLCJAIN_29734f.jpg

சரோஜினி நாயுடு & ஜவஹர்லால் நேரு.

சித்திரம் ஹிந்து காப்புரிமை. அதனால், லின்க் மட்டும். க்ளுக்கி பார்க்கவும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

360.gif
Reply all
Reply to author
Forward
0 new messages