


உங்க விமரிசனம் ஏற்கெனவே படிச்சாச்சு. :Dதேவ்
On Nov 25, 11:01 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> இதோ இன்னொருவனும் இங்கே.
>
> பென்னேஸ்வரன்
Me too. started reading Devan in early teens (70s).
But I was never interested in fiction
(too mathematically oriented - do engineers make good fiction writers
in Tamil or English).
Hope some team puts his writings & many others
- first as PDF/DjVu in the web & later as plain-text html page.
N. Ganesan
>
> 2009/11/25 Tirumurti Vasudevan <agnih...@gmail.com>
>
>
>
> > இன்னொரு தேவன் விசிறி இங்கே!
> > வாசுதேவன்
>
> > 2009/11/25 devoo <rde...@gmail.com>
>
> > --
> > My blogs: [all in Tamil]
> >http://anmikam4dumbme.blogspot.com/
> >http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text
> > too!
> >http://kathaikathaiyaam.blogspot.com/
>
> > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
சாட்சிகளை விசாரணை செய்யும் அழகு; அவர்கள் அப்பாவித்தனமாக மாட்டிக்
கொண்டு முழிக்கும்
நகைச்சுவை, ஜூரர்களின் பின்னணி, அவர்களின் மனநிலை,கோபுலுவின் கைவண்ணம்,
ஜகன்னாதனின் கூரிய நாசி, அதில் கை வைத்துக் கொண்டு அவர் குறுக்கு
விசாரணையை
ஆழ்ந்து கவனிக்கும் விதம். எல்லாமே காவியம், தேவனின் எழுத்து அற்புத
அனுபவம் !
தேவ்
2009/11/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>







கீதாம்மா
2009/11/26 V, Dhivakar <venkdh...@gmail.com>:
கீதாம்மா
கிருஷ்ணகிரியில் என்னுடைய நண்பன் - சலவைத் தொழிலாளியின் மகன். என்னுடன் படித்தவன்.
அவன் சொன்ன கணக்கு ஒரு கழுதைக்கு பத்து வருஷங்கள்.
என் பக்கத்து் வீட்டு அக்காவுக்கு அந்தப் படத்தைக் காண்பித்து இது மாதிரி ஒரு பாவா (அத்திம்பேர்) வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி அவள் விட்ட அறையில் பல நாட்கள் இடது காதின் பக்கம் ஙொய்ய்ய் என்று ஒருவித வலி வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது.
எனவே தேவன் சாரையும் கோபுலுவையும் மிஸ்டர் வேதாந்தத்தையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது.
கிருஷ்ணகிரி தெலுங்கு பிராமணாள் வீதியில் ஒரு அய்யங்கார் மாமாவுக்கு துப்பறியும் சாம்பு மாதிரியே மூக்கு இருக்கும். ராஜாஜியின் கிராமம் என்றும் அவருக்கு நெருங்கிய உறவினர் என்றும் சொல்லிக் கொள்வார். எங்கள் ஊரில் யாருக்கும் ராஜாஜியிடம் இதைப்போய்க் கேட்க தைரியம் இல்லாததால் அவர் ராஜாஜியின் உறவினராகவே பல ஆண்டுகள் தொடர்ந்து வந்தார்.
அந்த அய்யங்கார் மாமா தன்னை ஒரு டாக்டர் என்று அறிவித்துக் கொண்டு எங்கள் ஊரில் பெரிய டாக்டர்களுக்குப் பணம் தரக் கஞ்சத்தனம் பண்ணிக் கொண்டிருந்த பல கோமுட்டி செட்டியார்களை பரலோகம் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்பாவைப் பார்க்க அந்த மாமா வரும்போதெல்லாம் சாம்பு மாமா வர்றார் என்று சொல்லி அம்மாவைக் குழம்ப வைப்பேன். சாம்பு மாமாவிடமே துப்பறியும் சாம்பு கதை பற்றி ஏதாவது பேச்சுக் கொடுத்து நானும் என் மருமானும் ரகசியமாக சிரித்துக் கொள்வோம்.
அவருடைய மகன் இப்போது பெங்களூருவில் அதே மூக்குடன் ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறான்.
காத்து கீதம்மா பக்கம்தான் வேகமா வீசுது!
Q: How long can a donkey live?
25 to 30 years, depends on how much you love it and care for it.
Wiki Answers: http://wiki.answers.com/Q/How_long_can_a_donkey_live
அப்ப 5 கழுதை வயசென்றால் 5 x 30 = 150
போனாபோறது நீங்க சொல்லற கழுதை அல்ப ஆயுசிலே போற கழுதைன்னு வச்சுப்போம் ;-)
க.>
2009/11/27 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:




2009/11/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஆமாம் திவாகர்.
சரியான ஒரு படத்தையும் கலைஞனையும் நினைவு படுத்தினீர்கள்.
அதே போல கொடியேற்றம் என்று ஒரு மலையாளப் படம். அரவிந்தன் இயக்குநர் என்று ஞாபகம். கோபி என்ற நடிகன். பிளந்து கட்டியிருப்பார். ஞாபகங்களைப் புளி போட்டுத் தேய்க்க வேண்டியிருக்கிறது. அதுவும் (என்னைப் போலக் கொஞசம்) அசட்டுப் பாத்திரம். (ஒரு காட்சி நினைவில் இருக்கிறது - கோவில் வளாகத்தில் பஞ்ச வாத்தியம் ஜமாய்த்துக் கொண்டிருப்பார்கள். இவர் அங்கே நின்று தப்புத் தாளத்தை கைகொட்டிப் போட்டுக் கொண்டிருப்பார். ஜெண்டை வாசிக்கிற ஆள் மஹா எரிச்சலில் அந்தக் குச்சியாலேயே இவரை அடிக்க வருவார். அந்தப் படம் முழுக்க அசட்டுத் தனமாகவே நடந்து கொள்ளும் பாத்திரம். அவரை அறியாமலேயே பலமுறை அதிருஷ்டம் அடிக்கும்.
பல வருடங்கள் முன்பு ஒரு திரைப்பட விழாவில் அந்தப் படம் பார்த்தபோது ஏனோ என்னை அறியாமல் தேவன் கதாபாத்திரங்களின் நினைவு வந்தது.
எங்கள் ஊர்ப்பக்கம் தெருக்கூத்தில் பபூன் என்று அழைக்கப்படும் கோமாளிகள் இதுபோன்ற அசட்டுத்தனங்களின் ஊடே ஏதோ ஒரு அதிருஷ்டம் அவர்களுக்கு அடிக்கும்.
காண்டவ வனதகனம் என்கிற மிக அரிதான ஒரு கூத்து சில வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன். அந்தக் கூத்தில் இந்திரன் மனைவிக்கும் எமதர்மனுக்கும் உறவு இருக்கும். அதை இந்த பபூன் எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்துவிடுவான். ஆனால் புரியாது. எமதர்மனும் இந்திரனின் மனைவியும் அவனுக்கு மாறி மாறி ரெண்டு ஏக்கரா நிலம், தையல் மிஷின், சைக்கிள் எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். அவன் சரியான சந்தர்ப்பத்தில் போகும்போதெல்லாம் அவனுக்கு பெரிய பரிசுகளாகக் கிடைக்கும். அப்போது அந்தக் கதாபாத்திரம் மிக அருமையாக முகத்தை வைத்துக் கொள்ளும்.
செல்லம் வாத்தியார் என்று நல்ல கலைஞர் இந்தக் கூத்தில் நடித்துப் பார்த்து இருக்கிறேன்.
நம்முடைய பல கதைகளும் இவை போன்ற பொக்கிஷங்களில் இருந்து பெறும் உத்வேகத்தில் பிறப்பவைதானே. தேவன் எத்தனை நாடகங்கள் அந்தக் காலத்தில் பார்த்து இருப்பார்?
பென்னேஸ்வரன்
இன்னம்பூர் ஐயா
அப்போ யாரைக் கழுதை என்று சொல்ல வருகிறீர்கள்?
நான் ஏதும் அழிச்சாட்டியம் பண்ண மாதிரி ஞாபகம் இல்லையே.
அன்புடன்
பென்னேஸ்வரன்
இன்னம்பூரான் ஐயா
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஒரு பிரபல எழுத்தாளர் - அவர் ஒரு நூல் எழுதினார். தலைப்பு - நான் கழுதையாக இருந்த போது.
எங்கள் ஊரில் (அதாவது டெல்லியில்) இருந்த ஒரு விமர்சனப் பெரியவர் நேர்ப்பேச்சில் நண்பர்களிடம் கிண்டலாகக் கேட்டது -
இவர் எப்போது மனிதனாக இருந்தார்?
அன்புடன்
பென்னேஸ்வரன்
மதிப்புக்குரிய சுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு
காட்சி ஊடகமான திரைப்படத்தை தமிழில் நாம் கதைகள் சொல்லியே பாழ்படுத்தி விட்டோம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நாடகங்களின் நீட்சியாக திரைப்படங்கள் இங்கே அமைந்ததால் அப்படி இருக்கலாம் என்று திரைப்பட ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வங்காளம், கேரளா போன்ற இடங்களி்ல் கலைஞர்களிடம் சினிமா சென்றது. தமிழகத்தில் அரசியல்வாதிகளிடம் சற்று ஆபத்தான ஆயுதமாக சினிமா மாட்டிக் கொண்டது.
புதினங்களையும் புத்திசாலித்தனமாக திரைப்படம் ஆக்கும் கலையை நாம் மேற்கில் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. மேற்கு என்னத்துக்கு நம்முடைய ஊரிலேயே ரே அல்லது ரித்விக் கட்டக் அளவுக்கு புதினங்களை அதன் மூலத்தை சிதைக்காமல் திரைப்படம் செய்யும் வித்தையை நாம் கற்றுக் கொள்ளவி்ல்லை.
திரைப்படங்களை விடுங்கள். நடனத்திலும் அதே பிரச்னைதான் தொடர்ந்தது. நல்ல சில பாடல்களை அதன் உயிரை அழித்து நடன வடிவமைத்தோம் தமிழில். உதாரணத்துக்கு பாரதியின் பாடல்கள்.
அவருடைய பாடல்களுக்கு நம்முடைய நடனமணிகள் அமைத்துள்ள நடன அமைப்புக்களை பார்க்க பாரதிக்கு வாய்ப்பு இருந்திருந்தால் இவர்களை விட திருவல்லிக்கேணி யானையே எத்தனையோ தேவலை என்று அவர் நினைத்திருப்பார்.
இன்னம்பூர் ஐயா - இவ்வளவு பூடகமாகப் பேசினீர்கள் என்றால் சில சமயம் புரிவதில்லை. எனக்குப் பல நேரங்களில் கற்பூர வாசனை தெரிவதில்லை.
அன்புடன்
பென்னேஸ்வரன்
எனவே, கழுதையும் எனக்கு பிரியமான விலங்கு. அதற்கு கற்பூரவாசனை தெரியும். கழுதைக்குட்டிக்கு இணையான அழகு, குரங்குக்குட்டிக்கும், யானைக்குட்டிக்கும் தான்.இன்னம்பூரான்