மகளிர் மட்டும் என்ற சிறப்புக் கேள்விக்கு நன்றி பேராசிரியரே
On Friday, June 14, 2013 2:36:21 AM UTC-7, Vallavanukku Vallavan wrote:
இயற்கை அன்னையின் அன்பான மிரட்டல்களுக்கு அஞ்சி இயற்கையின் சக்திகளை வணங்க ஆரம்பித்த தொன்மாந்தன் தன் கற்பனையில் தன்னுருவில் அவற்றை இறைவனாகப் படைத்து வணங்க ஆரம்பித்தான்
அன்பான மிரட்டல்???!!! :D
மதத்தையோ, அரசியலையோ பரப்ப அதுதான் அடிப்படை ஆதாரம்
பழந்தமிழகத்தில் கிராம தேவதைகளின் கை ஓங்கி ஆண் தேவர்கள் சான்டோ சின்னப்பா தேவர்போல் காவல் பதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்
வடபுலத்தில் இருந்து வந்த உயர் கடவுளர் இந்த நீண்டநாள் ஆண் தேவ்ர்களின் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பெண்தெய்வங்களைத் தேவியர்களாக்கித் தங்கள் பக்கத்தில் சின்ன சைஸில் அடக்கிவாசிக்கும் பாவனையில் நிறுத்திவைத்தனர்
உடல் அளவை உத்தேசித்து சிறிய உருவாகப் படைதிருக்கக்கூடும் ... but every rule there is always an exception :-))
இறைவனுக்குப் பலதாரம் என்று வரையறுத்து பெண் தேவிய்ர்களுக்கு மட்டும் ஒருத்திக்கு ஒருவன் என்று ஒரு கொக்கோகோலா ஃபார்முலாவைப் படைத்துவிட்டார்கள்
இந்த சமனில்லாத இறையுலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒரு சாராருக்கு மட்டும் வைத்ததில் ஏதேனும் உள்குத்து உண்டா
ஆமாம் உண்டு, இல்லாவிட்டால் மரபணு சோதனைகள் இல்லாத காலத்தில் இது தனது வாரிசு என எப்படி நிரூபிப்பதாம்? எல்லாம் சுயநல நோக்கமே. இந்தக் காலத்திலும் ஒருவரைக் கேவலமாகத் திட்ட அவர்கள் பிறப்பையையும், தாயையும்தானே அவமானப் படுத்துகிறார்கள். ஆண்கள் தங்கள் சுயநல நோக்கத்தை subliminal messages ஆக மக்களுக்கு பரப்ப கடவுள்களுக்கும் அதுதான் சட்டம் என்று சட்டம் இயற்றி, கதைகள் பல புனைந்து, கோவில்களில் சிலைகள் செய்து வைத்துவிட்டார்கள்.
ஆனால் பார்க்க வேண்டிய இடத்தில் பார்க்க வேண்டும். நான் பெண்களுக்கு வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகன் என்பது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட தாரமுள்ள கடவுள் கோயில்களுக்குப் போவதை தவிர்த்துவிட்டு, காளி கோயில்களுக்குப் போக "பரிந்துரைக்கிறேன்". அப்படி செய்தால் அவர்களுக்குத் தன்னம்பிக்கை வளரக்கூடும். எதையும், யாரையும் ஒருகை பார்க்கும் (சோனியா, ஜெயலலிதாவின் கை முத்திரைகள் அல்ல) துணிவு வரும் >>> இங்கே பார்க்க

இந்த அநீதியை எதிர்த்து ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் வணங்கும் தாய்க்குலங்கள் ஏன் இப்புடி என்று தன்னிலை விளக்கம் வைத்துள்ளனரா
எதிர்ப்பினை அடக்க... பெண்களை திட்டமிட்டு வாயில்லாப் பூச்சிகளாக வளர்க்க சிறுவயதில் இருந்து [1] மூளைச் சலவை செய்து வளர்த்து (ஒரு பொண்ணு இப்படி செய்யலாமா?) ...
[2] துணிவும் தன்னம்பிக்கையும் தரும் கல்வி, செல்வம் (அதாவது SES - socioeconomic status என்று பொருள் கொள்க) போன்றவற்றையும் பறித்து விட்டால் ...
பிறகு பெண்கள் வளர்ப்பு முறையினால் கூண்டில் வளர்க்கப் பட்ட சர்க்கஸ் புலி போல தேமே என்று வளர்வார்கள். பின் முணுமுனுப்பாவது ஒன்றாவது. அதற்கும் அனுமதி கேட்டுதான் நிற்பார்கள்.
இது என்னைப் பொறுத்தவரை தன்னிலை விளக்கம் (பொதுவாக என் கருத்தைச் சொல்லி பிறருக்கு எரிச்சல் ஊட்டுவதைத் தவிர்க்கிறேன்)
ஆனால் இதில் வடநாட்டு பாதிப்பு????
இல்லை என்று தோன்றுகிறது. நமது தொல் தமிழ் இலக்கியங்கள் அகம் புறம் குறள் எதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கணவன் உள்ள பெண் இருந்ததில்லையே. சரியான உணவும் கிடைக்காமல் போகும் கைம்பெண் நிலையைப் பற்றிய புலம்பல் பாடல் உண்டே!!! சிற்றன்னைக் கொடுமை போல சிற்றப்பன் கொடுமை தமிழ் கதைகளில் அன்றும் இன்றும் கேள்விப் பட்டதில்லை. இருந்திருந்தால் கணவன் இருக்கும் பொழுதே இன்னொன்று வேண்டாம், இறந்த பிறகாவது மற்றொரு கணவன் வந்தகதை தெரியுமே.
சுயமாக வாழ வழி அவர்களுக்கு வகுத்துக் கொடுக்கப் படாமல் உறவினர் வீட்டில் கூலியில்லா வேலைக்காரிகளாகத்தானே வாழ்ந்து கைம்பெண் வாழ்வை முடித்தார்கள். ஆண்கள் பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைகளாகி விட, பெண்களுக்கு மட்டும் மொட்டை மற்றும் சீருடைகள் வேறு. பெண்களை அலங்கோலப் படுத்தியதைக் கேட்க யாருக்கும் துப்பிருந்ததாகத் தெரியவில்லை.
ஏன் ஜாதிக் கொடுமை என்று கேட்டால், முன்பு நன்றாக இருந்தது வெளிநாட்டுக் காரர்கள் வந்து செய்த சதி என்று நொண்டிச் சாக்கு சொல்வது போல இருக்கிறது பழந்தமிழர்கள் பெண்களை ஓவியம் போல வைத்திருந்தார்கள் எல்லாம் வடநாட்டினர் செய்த பழி என்று சொல்வதும்.
ஊகும் ...இதையெல்லாம் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன், அழுவிணி ஆட்டம் மாதிரி இருக்கிறது.