சீதம்மா மின்தமிழில் எட்டயபுரம் பற்றி எழுதப் போய் இப்போது சுபாவிற்கும்
எட்டயபுர ஆசை பிடித்துக்கொண்டுவிட்டது ;-)
சுபாவின் வழக்கப்படி, போகுமுன் படி, படியென்று படித்துக்கொண்டு
இருக்கிறார். அதில் சமீபத்தில் சீதம்மா மின் தமிழில் ஆரம்பித்து, சென்னை
ஆன்லைனுக்குக் (கடத்தப்பட்டு ;-) வெளியிடப்பட்ட "எட்டயபுர வரலாறு" எனும்
சிறு மின்னூல் அடங்கும். நேற்று சுபா அனுப்பி, படித்துவிட்டுத்தான் தூங்க
வேண்டும் என அன்புக் கட்டளை இட்ட படியால் ஒரே மூச்சில் வாசித்து
முடித்தேன்.
எளிய, அழகான நடை. படியை யாரோ திருத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.
இப்போது நடை ஆற்றொழுக்காகப் போகிறது. பொதுவாக நினைவுகளைக் கிளறும் போது
அது பாட்டுக்கு தறிகெட்டு ஓடும். எங்கே ஆரம்பித்தோம், எங்கே விட்டோம்
என்பது தெரியாமல் நாமும் குழம்பி வாசகர்களையும் குழப்புவதுண்டு.
அப்படியில்லாமல் இலக்கை விட்டு நகராமல், அதே சமயம் வேண்டிய வரலாற்றுச்
சேதிகளைச் சொல்லியுள்ளார்.
மின்தமிழ் மக்கா! இனியும் கட்டபொம்மன் படத்தில் உள்ளது போல் கட்டபொம்முவை
வீரபாண்டியனென்றும், எட்டப்பனை ஒற்றன், காட்டிக்கொடுப்பவன் என்று எண்ண
வேண்டாம். எட்டப்பன் நல்லவன். எட்டயபுரத்தை வேதபுரி என்று பாரதி
பேசுகிறான். இதுவே சீதம்மா நமக்கு சொல்லும் சேதி.
பாருங்களேன்! மிக சமீபத்தில் நடந்த வரலாறு. திரைப்படத்திற்கு ஏற்றவாறு
கதை எழுத உட்கார்ந்தால் வரலாறும் எப்படி மாறிப்போகுமென்று தெரிகிறது,
ஜாக்கிரதை!
நா.கண்ணன்
பிகு: சுபா அவர்கள் எட்டயபுரம் சென்று திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம்
;-) எதற்கும் பொறுத்திருப்போம்!!
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
பாருங்களேன்! மிக சமீபத்தில் நடந்த வரலாறு. திரைப்படத்திற்கு ஏற்றவாறு
கதை எழுத உட்கார்ந்தால் வரலாறும் எப்படி மாறிப்போகுமென்று தெரிகிறது,
ஜாக்கிரதை!
நா.கண்ணன்
அடடா! அண்ணா எதற்கோ கொக்கி போடறாரே!
இப்ப கதை கேட்காமல் தூக்கம் வராது ;-)
க.>
க.>
2009/11/4 V, Dhivakar <venkdh...@gmail.com>:
> நம் சுபா சென்னை செல்வது உறுதியாகிவிட்டது.
> சீதம்மா மின்தமிழில் எட்டயபுரம் பற்றி எழுதப் போய் இப்போது சுபாவிற்கும்
> எட்டயபுர ஆசை பிடித்துக்கொண்டுவிட்டது ;-)
> சுபாவின் வழக்கப்படி, போகுமுன் படி, படியென்று படித்துக்கொண்டு
> இருக்கிறார். அதில் சமீபத்தில் சீதம்மா மின் தமிழில் ஆரம்பித்து, சென்னை
> ஆன்லைனுக்குக் (கடத்தப்பட்டு ;-) வெளியிடப்பட்ட "எட்டயபுர வரலாறு" எனும்
> சிறு மின்னூல் அடங்கும். நேற்று சுபா அனுப்பி, படித்துவிட்டுத்தான் தூங்க
> வேண்டும் என அன்புக் கட்டளை இட்ட படியால் ஒரே மூச்சில் வாசித்து
> முடித்தேன்.
சோமசுந்தர மணியகாரரின் நூல் தொடுப்பும்,
சென்னை ஆன்லைன் கட்டுரையும் வேண்டும்.
யாராவது அனுப்புங்களேன்.
நா. கணேசன்
கண்ணதாசனாவது சிவகங்கைச் சீமை கதையைச் சரியாகச் சொன்னாரா?
அரு.இராமனாதன் ராஜ ராஜ சோழனைச் சரியாகச் சொன்னாரா?
எல்லாருமே சினிமாவுக்காக கொஞ்சம் உப்பை அதிகமாகச் சேர்த்துக்
கொள்ளுகிறார்களோ?
ரெ.கா.
On Nov 4, 3:44 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/4 N. Kannan <navannak...@gmail.com>
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று குறைப்பட்டுக் கொள்பவர்கள் உண்டு.(ஹரியண்ணா)
..
இப்படிச் சொன்னவர்களில் எங்கள் பெருமதிப்புக்குரிய சுராஜ் அவர்களும் உண்டு.
சரியா?
யோகியார் |
On Nov 4, 11:26 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> சௌபாக்கியவதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களே
>
> எப்போது இந்தியா வரப் போகிறீர்கள்
>
> எனக்கு தகவல் சொன்னால் நலம்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 4-11-09 அன்று, kaviyogi vedham <kaviyogi_ved...@yahoo.com> எழுதினார்:
>
>
>
> > வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று
> > குறைப்பட்டுக் கொள்பவர்கள் உண்டு.(ஹரியண்ணா)
> > ..
> > இப்படிச் சொன்னவர்களில் எங்கள் பெருமதிப்புக்குரிய சுராஜ் அவர்களும் உண்டு.
> > சரியா?
> > யோகியார்
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ
>
> http://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com
என்ன கீதம்மா! அவரைத்தானே இப்போது உலுப்பிக்கொண்டு இருக்கிறோம் ;-)
க.>
வெள்ளித்திரையில் மக்களைக் கவரபணம் பண்ண கதைக்கப்படும் கதைகளை உண்மை என்று நம்பியவர்கள் நாம்பாவம் அவர்கள் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்அவர்களை நோவதை விட இனிமேலாவது உண்மையை ஆராய்வோம்வெள்ளித்திரை நாயகர்களை நம்புவதை நிறுத்தினாலேநாடே வெளிச்சத்துக்கு வந்து மின்னும்






அவுனா ?
V
On Nov 5, 2:10 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> //ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எப்படி எல்லாம் எடுக்கக் கூடாது என்பதற்கு
> எடுத்துக் காட்டாக அமைந்தது வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படம் என்பது
> என்னுடைய தாழ்மையான கருத்து. //
>
> வேறே ஒரு குழுமத்தில் பல மாதங்களுக்கும் முன்னால் இதைச் சொல்லிட்டு
> கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. மொழி வெறினு.
> கிரந்தம் எழுதினா என்ன தப்புனு கேட்டா வடமொழிப் பிரியம் னு சொல்றாங்க.
> என்னத்தைச் சொல்றது??? [?][?][?][?][?][?][?]
>
> 2009/11/5 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
> > 2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> >> ஹிஹிஹி, பதில் கொடுத்துட்டுத் தான் மத்ததைப் படிச்சேன். அ.வ.சி.
>
> >> 2009/11/5 N. Kannan <navannak...@gmail.com>
>
> >>> 2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:
>
> >>> > //தமிழ்வாணன் போன்றோருக்கு வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு
> >>> தெரிந்திருந்தும்,
> >>> > சினிமா எனும் மாயக் கவர்ச்சியில் தமிழ்வாணனின் கவர்ச்சி எடுபடாமல்
> >>> போய்விட்டது
> >>> > வாஸ்தவமே.//
>
> >>> > மபொசியும் கூட வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றிய உண்மை வரலாற்றைக் கூறி
> >>> உள்ளார்.
> >>> > அவரை விட்டுட்டீங்களே!
>
> >>> என்ன கீதம்மா! அவரைத்தானே இப்போது உலுப்பிக்கொண்டு இருக்கிறோம் ;-)
>
> >>> க.>
>
> > --
> >http://www.vadakkuvaasal.com/
>
>
>
> 360.gif
> < 1KViewDownload
அவுனே!
2009/11/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>//கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.//
http://www.youtube.com/watch?v=qS6E_-AY5bQ&feature=related
----
இந்தியாவை பற்றி பாடினால், நியாயமாக காந்தாரம், தக்ஷசீலத்தில் இருந்து
வங்க தேசம் முழுக்க அகண்ட பாரதமாக காட்ட வேண்டும் :-(
ஏதோ காலம் வளர வளர இந்தியா சுருங்கிட்டே வருது :-
(((((((((((((((((((((((((((((((((((
V
On Nov 5, 2:39 pm, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> அவுனு விநோத்!
>
> நம்ம ஊர் பக்கம்தான் அவங்க பூர்வீகம். பொப்பிலி - ஒரிசா (ஒடிஷா) பார்டர்..
> கட்டபிரம்மண்ணா ன்னு இந்தப் பக்கம் சொல்லுவாங்க..
> பொப்பிலி பிரம்மண்ணா கதை இங்கே இன்னும் விசேஷம். சினிமா கூட எடுத்திருக்காங்க
>
> ஒரு நியூஸ்
> என் டி ஆர் கட்டபிரம்மண்ணா வாக தன் கடைசிப் படத்தில் (1993/94) ஒரு இரண்டு
> நிமிஷ பாட்டுக் காட்சியில் வேஷம் கட்டுவார். சிவாஜியின் இமிடேஷன் வசனத்தை
> (நாற்று நட்டாயா....) தெலுங்கில் செப்பி கரகோஷத்தை வாங்கிக் கொண்டு
>
> வீரபாண்டிய கட்டபொம்மனே தெலுங்கில் அந்தக் காலத்தில் வீரபாண்டிய
> கட்டபிரம்மண்ணா, என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இங்கு வந்த
> புதிதில் (1977/78) பார்த்துத் தொலைச்சேன்..
>
> திவாகர்
>
> --
> Dhivakarhttp://www.vamsadhara.blogspot.comhttp://aduththaveedu.blogspot.com







அப்போத் தான் பாரத வர்ஷம், பரத கண்டம்னு சொல்றது சரியா இருக்கும்.வெள்ளித்திரையில் மக்களைக் கவர
ஆனால் உண்மையில் கட்டபொம்மன் ஒரு சில வருடங்களுக்கு முறையாக வெள்ளையர்களுக்கு 'கிஸ்தி' கட்டியவன் என்பதும் மேலும் சில வருடங்களுக்கு கிஸ்தி கட்டமுடியாமல் போனதற்கு 'அந்த வானம் பொழியாமை' தான் காரணம் என்று விளக்கமாகவும் வினயமாகவும் வெள்ளையருக்குக் கடிதம் எழுதிவந்தான் என்பதையும், தமிழ்நாடு பழைய கும்பெனியார் ரெவின்யூ ஆவணங்களில் இன்னமும் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் ராஜாமுகம்மது. அந்தக் கடிதங்களின் முதல் வரிகளே மிக மிக வினயமாக, அடிமைத்தன உணர்வோடும் வெள்ளையரை நமஸ்கரித்திருக்கும் வீரபாண்டியரை நாம் காணலாம். பிற்காலத்தில் நிலைமை மோசமாகவே வெள்ளையரை எதிர்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் விவரணை இருக்கும்.
ஆனால் எட்டப்பரை மக்கள் மத்தியில் துரோகியாக்கிவிட்டதே.. இது போகவேண்டாமா, என்று கேட்டால் அதற்கும் சினிமா வழிதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல எட்டப்பரை (வமசத்தாரில் ஒருவர்) வைத்து ஒரு கதை செய்து அவரை (அந்தப் பாத்திரத்தை) ஹீரோவாக்கினால், அதுவும் பிரபல நடிகர்களை வைத்து பெரிய அளவில் சினிமா எடுத்து வெளியிட்டால் (அதுவும் வெற்றியடைந்தால் மட்டுமே) வருங்காலம் எட்டப்ப வம்சத்தாரைப் புகழும்.
ஆக இந்த கணவு உலகத்து தாக்கங்களில் இருந்து மக்கள் மீழ்வதற்கு அசல் ஆவணங்கள் பதிப்பிக்கப்பட வேண்டும். சரித்திர வரலாற்று உண்மை விஷயங்களை தமிழக தொலைகாட்சி நிறுவணங்கள் ஒலிபரப்பலாமே. ஆய்வுகள் டோக்குமெண்டரி வகை தகவல்கள் கூட வரலாற்று அறிவியல் உண்மைகளை மிகத்தெளிவாளதே சமயம் மிக விரைவில் மக்களிடம் தகவல்களை சேர்க்கக் கூடியவை.
ஆதித்த கரிகாலன் எப்படிப்பட்டவன்/ வீரபாண்டியனைக் கொன்று தலையை மட்டும்
வெட்டி எடுத்துக் கொண்டு தஞ்சை வரை போய் கம்பு
புதைத்து தலையை அதில் மாட்டி வைத்தான். அதே போல் பல்லவராயர்கள் மதுரையில்
பாண்டியர்களுக்கு உதவிக்கு வந்த சிங்களவர்கள் தலைகளை வெட்டி தெருவில்
கம்பில் பொறுத்தினர். மன்னர்கள் போருக்குச் சென்றால் அங்கே சூறையாடி
பொன்னும் பொருளும் மட்டுமா கொண்டு வந்தனர்?1 பெண்களை, ஆண்களைக் கொண்டு
வந்து அடிமையாக வைத்தனர். அரசனுக்குப் பிடித்த பெண்களுக்குத் தனி இடம்.
அது அந்தப் புரம் அல்ல. அதன் பெயர் வேளம். அங்கே பிறக்கும்
குழந்தைகளுக்கு முத்திரை கிடையாது. உரிமையும் கிடையாது. அடுத்த நாட்டு
மன்னனின் மனைவியானாலாலும் மற்றவனின் மனைவியானாலும் எல்லோருக்கும் இதே
கதி. நாம் கற்பு பற்றிப் பேசுகின்றவர்கள். உலக வரலாறே இப்படித்தான்
குருஷேத்திரத்திலும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட சட்ட திட்டங்கள் மாறி
முறையற்ற யுத்தமாக மாறியது. போர்க்களத்தில் சத்தியமாக நடந்தவன் இராமன்
ஒருவனே.
கட்டபொம்மன் சாகும் பொழுது 40 வயது கூடப் பூர்த்தியாகவில்லை. ஆண்டதும்
சொற்பகாலம். நேர் வாரிசும் அல்ல. அவனுக்கு மென்மை கலைகளில் ஆர்வம் இல்லை.
அவனுக்குப் பிடித்தது போர் ஒன்றுதான். அதனால் போர்க் குணம் கொண்டு
சூறையாடினான் என்றேன். அவன் கொள்ளைக் காரன் என்றால் எங்கிருந்தோ வந்தோ
வெள்ளையனை எப்படி கூப்பிடுவது? அவர்கள் செய்யாத குற்றங்களா?
தஞ்சைக் கோயிலின் கட்டுமானத்தை வியக்கின்றோம். கட்ட பொம்மன் கோட்டை
இருந்திருந்தால் அவன் அளவில் அதை எப்படி சிறப்பாகக் கட்டி யிருந்தான்
என்பது புரிந்திருக்கும். அவன் தன் படைப் பலத்தைப் பெருக்குவதிலும்,
கோட்டையைப் பாதுகாப்பதிலும், தன்மேல் எல்லோருக்கும் அச்சம் இருக்க
வேண்டுமென்பதிலும் கவனம் செலுத்தினான். சிவகங்கை அரசுக்கு கட்டபொம்மன்
மேல் ஈர்ப்பு. புதுகோட்டைக்கும் ஓரளவு உண்டு. சிவகங்கை அரசு கட்டபொம்
மனையொட்டிப் போக விழைந்தது. இராமானதபுரம் மட்டும் சம நிலையில் இருந்தது.
கட்டபொம்மனின் போர்த் தந்திரங்களைப் பற்றி வெள்ளையர் களுக்குக் கூறியது
எட்டயபுர அரசன். ஏனென்றால் கட்டபொம்மனால் பாதிக்கப்பட்ட ஜமீன்
எட்டயபுரம். ஆனால் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டது புதுக்கோட்டையில்
நாம் இருந்திருந்தாலும் அடிபட்டால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள உளரத்தான்
செய்வோம். அதற்குத் தான் மஹாராஜா பட்டம் புதுக்கோட்டைக்குக் கொடுக்கப்
பட்டது. எட்டய புரத்திற்குக் கிடைத்தது அப்பொழுதல்ல. அதற்குப்பின் வந்த
ஜெஜ்ஜை மஹாராஜா காலத்தில் பட்டம் கிடைத்தது. அவர் சென்னையில்
வெள்ளைக்காரர்களுடன் படித்தார். நட்பு கருதி டில்லிக்கு விருந்துக்கு
அழைக்கப்பட்டார். அப்பொழுது ராஜா பட்டம் கிடைத்திருக்கின்றது. காலம்
பார்க்க வேண்டும்.
கட்டபொம்மன் இயற்கையன குணம் முரட்டுத்தனம். முதலில் வளைந்து கொடுத்தவனால்
அப்படியே இருக்க முடியவில்லை. தன்னால் தாக்கு பிடிக்க முடியும் என்று
நினைத்தான். அவனுக்கு ஒப்பாக சதாம் ஹுசேனைக் கூறலாம். அவர் மாறுதலான
வாழ்க்கையைக் காட்டவும் அவர் பெயர் பிரபலமாகி தங்கள் பிள்ளைகளுக்கு அவர்
பெயரை வைக்கும் அளவு போயினர். அது ஹுசேனுக்கு செருக்கை
ஏற்படுத்திவிட்டது. குவைத் போரில் ஈடுபடும் பொழுதே லிபியா அதிபர் கடாபி
எச்சரித்தார். வான் வெளிச்சண்டையில் அமெரிக்காவை ஜெயிக்க முடியாதென்றார்.
ஆனால் தன்னிச்சையாக முடிவெடுத்து போரிட்டு மாண்டார். கட்ட பொம்மனும் ஓடி
ஒளிந்தும் முடியாமல் மாண்டான்.
அவன் ஒரு சுதந்திரப் பிரியன் என்று சொன்னதில் தவறில்லை. . வரலாற்று
ஆர்வலரின் அலசலில் நியாயமான முடிவு
புதுக்கோட்டை மன்னர் தேவர் வகுப்பினர், தமிழர், எனவே அவர் பெயர்
வேண்டாம், எட்டயபுர மன்னரின் மேல் குற்றம் சாட்டலாம் என்று முடிவு
எடுத்து வசனங்கள் எழுதப் பட்டன.
நம்மிடம் இருக்கும் குறைகளில் பெரிய குறை. தயவு செய்து எல்லோரும் என்னை
மன்னிக்க வேண்டும். எல்லாவற்றிலும் தமிழன் முதல், தமிழ் முதல் என்ற
உணர்வு ஓர் நூற்றண்டு காலமாக நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தது. பற்று வெறி
யாயிற்று. பின் அரசியலும் ஆயிற்று. அதன் வெளிப்பாட்டில் ஒன்று
கட்டபொம்மன் முதல் வீரனாகக் காட்டப் பட்டான். அவன் தமிழனல்ல. தெலுங்கன்.
அப்படி பெருமைப் பட வேண்டுமானால் தெலுங்கர்கள் கூற வேண்டும். இது
தொடர்கதை. பிடித்தால் அவன் தமிழன் அல்லது வேற்று மொழிக்காரன் என்று சொல்ல
ஆரம்பித்திருக் கின்றோம். உணர்ச்சி வசத்தில் இருப்பவன் உண்மைகளை
மறக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்குத் தெரிகின்றது. மனித நேயம்
எல்லோருக்கும் பொது. சாதி, மதம், மொழி இவைகளுக்கு அப்பால்பட்டது. அப்படி
ஏன் எண்ண முடியவில்லை?
எதையும் அரசியல் ஆக்கினால் நோக்கம் வெல்லாது. இதை நான் சொல்லவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் கூறியது. அவர் தாய் மொழி
கன்னடம். ஆனால் அவர் இந்த சமுதாயத்தின் சாதிக் கொடுமைக்கு எதிராகப்
போர்க்கொடி உயர்த்தியவர். இங்கு மனம் தான் பெரிது
தந்தை பெரியார். தாய் மொழி கன்னடம்
கலைஞர் -தெலுங்கு என்று சொல்கின்றார்கள். எனக்கு விபரம் தெரியாது
வை. கோ. தெலுங்கு
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் மலையாளம் மனைவி பிராமண வகுப்பு
செல்வி ஜெயலலிதா கன்னடம் பிராமண வகுப்பு
விஜயகாந்த் தெலுங்கு
ரஜனிகாந்த் கன்னடம் மனைவி பிராமணர்
கலைஞர் அவர்களின் குடும்பம், வீரமணி அவர்களின் குடும்பம்
இவைகளில் திருமண முறையில் பிராமணர் சம்பந்தம் உண்டு.
இவர்கள் எல்லோரும் சமுதாயத்தின் அன்பைப் பெற்றவர்கள்.சமுதாயத்தை
நேசிக்கின்றவர்கள். அவர்களின் அரசியல் கொள்கைகளை நான் விமர்சிக்க
வில்லை. அவர்களின் நல்லெண்ணம்பற்றி மட்டும் பேசுகின்றேன். ஏன் இந்த
காழ்ப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும். நிறைய தொண்டர்களுக்கு உண்மை
அறியாமல் தெரியாது. உணர்ச்சிப் பேச்சால் உந்தப்பட்டு தீங்கு நேர்கின்றதே!
கொள்கையளவில் மோதிக் கொள்ளட்டும். மனிதை மனிதன் வெறுக்கும் படி
வெறுப்புணர்வை வளர்க்கவேண்டாம்.
நன்றி காட்டப் படவேண்டிய ஒரு பரம்பரைப் பெயரை நாசப் படுத்தியது இந்த
உணர்வுதான். வரலாற்றை மாற்றி கட்ட பொம்மனை சுதந்திரப் போராட்ட
வீரனாக்கியதும் இந்த உணர்வுதான்
திவாகர், எதையும் நயமாகச் சொல்ல விரும்புகின்றேன். அவ்வளவுதான்.
மனித நேயம் வாழ வேண்டும்.. சுபாவிற்கு ஒரு வேண்டுகோள். இதனை வரலாற்றுடன்
சேர்க்க வேண்டாம். என் உணர்ச்சியைக் கொட்டியிருக் கின்றேன். அவ்வளவுதான்.
இது அறிஞர்களின், பெரியவர்களின் அரங்கம்
On Nov 5, 4:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > அவுனே! [?][?][?]
>
> > 2009/11/5 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
>
> > //கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.//
>
> பொம்மு நாயகன். பாளையக்காரன். கோவையில் தெலுங்குப் பாளையம் என்றொரு பாளையமே
> இருக்கிறது. (எல்லாம் தமிழ்வாணன் எழுதிப் படித்ததாக நினைவு. எனக்கொரு 13-15
> வயதில் அந்தத் தொடர் வந்துகொண்டிருந்தது.)
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> 360.gif
> < 1KViewDownload
> வயதில் அந்தத் தொடர் வந்துகொண்டிருந்தது..)
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> 360.gif
> < 1KViewDownload
http://aduththaveedu.blogspot.com