பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா

10 views
Skip to first unread message

M.RISHAN SHAREEF

unread,
Nov 4, 2009, 9:31:48 AM11/4/09
to minTamil


 
 
 
 
A : 'This episode third round for thirty thousand. Readyயா இருக்கீங்களா?'

B : 'Yeah..lets go '

A : 'Almost உங்களுக்கு preparation time வேற..so I think u must have done some homework'

B : 'Brushed up some of songs. பார்ப்போம்.'

A : 'பார்க்கலாம். So can we have the third round? '

    3 ஆவது சுற்றுப் பாடல் தேர்வுகள் அவருக்குக் காட்டப்படுகிறது.

B : ' I've choice த்ரிஷாவா இல்ல P.B.? '

A : ' Why P.B.ஸ்ரீநிவாஸ்? Its a male play back singer இல்லையா I mean?'

B : 'Yeah..but ..mm..I just felt I know some of his best solos..I know because நிறைய கேட்ட பாடல்கள். His best I mean just scream of solos that is sung like காலங்களில் அவள் வசந்தம் or songs like that..'

A : ' நிலவே என்னிடம் நெருங்காதே'

B : 'Yeah..I know such songs. Just ஆனா ரெண்டு மூணுதான் தெரியும். Very apprehensive. But till இருக்கும்னு ஒரு நம்பிக்கை..I'll go for P.B ஸ்ரீநிவாஸ் hits'

    பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய இரு பாடல்களின் ஆரம்ப வரிகள் திரையில் காட்டப்படுகின்றன. போட்டியாளர் அதிலொன்றைத் தெரிவுசெய்து, திரையில் கொடுக்கப்படும் அப் பாடலின் வரிகளைப் பார்த்துப் பாடவேண்டும். பாடலின் இடையில் ஆறு அல்லது ஏழு சொற்கள் இடைவெளியாக இருக்கும். அச் சொற்களை மறவாது சரியான இடத்திலிட்டு போட்டியாளர் பாடவேண்டும். ஒவ்வொரு பாடலுக்குமான பரிசுத்தொகை இந்திய ரூபாய்கள் பத்தாயிரத்திலிருந்து ஆரம்பித்து எட்டுப் பாடல்களின் முடிவோடு இந்திய ரூபாய்கள் ஐந்து இலட்சத்தை எட்டும்.

A : 'இந்த இரண்டு பாடல்கள்ல ரெண்டுமே the beautiful songs..the evergreen classics '

B : ' Yeah..so just..Yeah..its looks nice..ok..I think ..'

A : 'looks nice ?'

B : 'looks nice. its sounds good. aah நிலவே என்னிடம் நெருங்காதே would be a nice choice. ஏன்னா மௌனமே வார்த்தையாய் எனக்கு பாதிதான் தெரியும். I don't know அங்கிங்க scattered ஆ I know.But Im not sure. So I guess நிலவே என்னிடம் நெருங்காதே எனக்கு ஓரளவுக்கு நான் கேட்டிருக்கேன்.'

    கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காணக் கிடைத்த கண்கொள்ளாக் காட்சியிது. ஆங்கிலத் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியா எனக் கேட்டுவிடாதீர்கள். சத்தியமாக இது தமிழ் பேசும் மக்களுக்கான விஜய் தொலைக்காட்சியின், பிரபலங்களைத் தமிழில் பேசவும், பாடவும் செய்வதற்காக நடத்தப்படும் 'பாட்டுப்பாட வா' நிகழ்ச்சியின் கடந்த வார அங்கம். மேற்சொன்ன அட்சர சுத்த ஆங்கில வார்த்தைகளை மொழிந்தவர்கள் இரு பிரபல பிண்ணனிப் பாடகிகள். சரி. இருவரும் வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டபவர்கள், தமிழில் பேசச் சிரமப்படுகிறார்களோ என நீங்கள் நினைத்தால், அது தவறு. இருவருமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மண்ணின் புதல்விகள் பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகி மதுமிதா.


    இதில் பாடகி அனுராதா ஸ்ரீராம்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஒவ்வொரு அங்கத்தினதும் ஆரம்பத்தில் அவர் சொல்வார். 'இப் போட்டி, நாம் அறிந்த பாடல்களின் அழகிய தமிழ் வரிகளை நினைவுபடுத்தச் செய்யும் போட்டி. நடிகர்கள், பாடகர்கள் என நாங்கள் எல்லோரும் அறிந்த பிரபலங்களின் தமிழறிவைச் சோதிக்கும் நிகழ்ச்சி'. ஆனால் உண்மையில் அவரும், போட்டியாளரும் சேர்ந்துகொண்டு  தமிழைச் சோதிக்கிறார்கள். எப்பொழுதாவது ஆங்கில உரையாடலிலிருந்து பாவமாக எட்டிப்பார்க்கிறது தமிழ். உதாரணத்துக்கு மேலே நான் சுட்டியிருக்கும் உரையாடலின் வரிகளைப் பார்க்கலாம். இதில் தமிழ் எங்கே வாழ்கிறது? இதுவே தொடர்ந்தால் தமிழ் எங்கே வாழப் போகிறது? இத்தனைக்கும் பரிசுத் தொகை ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்கள்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழ்ப்பாடகி, ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில், தமிழை வாழ வைப்பதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளரும் கூட ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சியை நடத்துகிறார். எத்தனையோ வேற்றுமொழி நடிகர்கள், பாடகர்கள் தமிழ் திரையுலகுக்கு வந்து, நல்ல தமிழில், உச்சரிப்பிலும் கூட அட்சர சுத்தமாக பேசி, பாடி வரும்போது, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் இப்படி தமிழைக் கொல்வது ஏற்கப்படக் கூடியதா? இதே நிகழ்ச்சியில் முன்பு போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பாடகர்கள் சத்யன், பிரசன்னா, முகேஷ், நடிகை அபிராமி ஆகியோர் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகள் கலக்காமல், தொகுப்பாளரை விடவும் அழகிய தமிழில்தான் உரையாடினார்கள். நடிகை அபிராமி, நடிகர் கமல்ஹாசனின் கதாநாயகியாக 'விருமாண்டி' உட்பட இன்னும் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கடந்த ஆறு ஆண்டுகாலமாக அமெரிக்காவில் கல்வி கற்பவர். ஆங்கிலச் சூழலில் இருந்துவிட்டு வந்த அவரே முழுக்க, முழுக்க தமிழில் பேசி, தமிழில் பாடி வெற்றிப்பணத்தோடு போனதைக் காண முடிந்தது. எனில், நமது ஒரு சில தமிழ் போட்டியாளர்கள் மட்டும் தமிழ் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தைக் காவித் திரிவது ஏன் எனப் புரியவில்லை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் உரையாடிக் கொள்ளட்டும். தமிழுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியிலுமா இந்தளவு ஆங்கிலம்? இதில் போட்டியின் விதிமுறைகளைத் தெரிவித்த தொகுப்பாளரே ஆங்கிலத்தை விட முடியாமல் அவதிப்படுவதைப் பார்க்கும் போது 'என்ன கொடுமையிது' என்றே எண்ணத் தோன்றுகிறது.

    அதிலும் முத்தாய்ப்பாக பாடகி மதுமிதா, போட்டியிலிருந்து பாதியிலேயே விடைபெறும்போது தமிழுக்காகச் சொன்ன வார்த்தைகள் இவை.

அனுராதா ஸ்ரீராம் : 'Its I think its கொஞ்சம் difficult. So Its a brilliant. I mean very lucky today and also the commitment is there. நீங்க listல இருந்து எந்தப் பாடல்கள் பிடிக்கிறதோ அதையாவது நீங்க வந்து..you know.. ரசிச்சு, உள்வாங்கி, அந்த lyrics எல்லாம் இவ்ளோ தூரம் மனசுல வச்சிருக்கிறது I think ever young expiring playback singer..and we totally enjoyed your show..Congratulations..and Good luck உங்களுடைய future projects எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். புதுப்பாடல்கள் release ஆகப்போகுது. We will pray that will be the big hit '

மதுமிதா : 'நான் என்ன சொல்ல விரும்புறேன்னா, ஒரு ஒரு பாடலுக்கும் வரிகள் வந்து ஒரு backbone மாதிரி. So பாடுற எல்லோருமே வந்து நீங்க ஒரு show பாடினாலோ இல்ல try by hearting the lyrics..that only takes ten minuts.அதுவும் நம்மல்லாம் we are from tamilnadu.  நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'

அனுராதா ஸ்ரீராம் : ' Lovely..can we have lot of applauds for that. Thank you so much Madhu. Can we have the cheque please?'

    நடிகர் வடிவேலு பாணியில் 'முடியல' என்று சொல்லத் தோன்றுகிறதா? இது தான் தமிழ் நிகழ்ச்சி. தமிழை வாழ வைக்கப்போகும் சுத்தமான தமிழ் நிகழ்ச்சி.

    விஜய் தொலைக்காட்சி, தமிழுக்காகப் பல போட்டிகளை அறிமுகப்படுத்தி தமிழ் மொழியை வாழ வைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அதனைப் பாராட்ட வேண்டும். சிறுவர், சிறுமிகளின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு', 'நீயா நானா?' போன்றவற்றில் அழகிய தமிழைக் கேட்க முடிகிறது. விஜய் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஒன்று செய்யலாம். இந்த 'பாட்டுப் பாட வா' நிகழ்ச்சியின் ஒரு வாரப் பரிசுத் தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு,  நல்ல தமிழை மட்டுமே பேசி நிகழ்ச்சியைத் தொகுக்கக்கூடிய ஒரு தொகுப்பாளரைத் தேடிப்பிடியுங்கள். அல்லது இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கண்டிப்பாக ஆங்கில வார்த்தைகள் கூடாதென்று விதிமுறையைச் சொல்லிவிடுங்கள். தமிழ் வாழும். அது தானாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. தயவுசெய்து இப்படிக் கொன்று விடாதீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி - உயிர்மை




 
 
 
 




Subashini Tremmel

unread,
Nov 4, 2009, 10:42:11 AM11/4/09
to mint...@googlegroups.com
ரிஷான்,
கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் இந்த உரைழயாடல் முழுவதைம் தட்டச்சு செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழக தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி என்ன சொல்வது?  ஆங்கிலம் கலந்த தமிழ் தான்  நடைமுறை என்ற நினைப்பு ஆழமாக பதிந்து விட்டதன் வெளிப்பாடு.. இல்லையா?
 
அன்புடன்
சுபா

N. Kannan

unread,
Nov 4, 2009, 5:51:40 PM11/4/09
to mint...@googlegroups.com
சுபா:
 
இதில் இன்னொரு வேடிக்கையும் கண்டேன்.
இரண்டு வரிகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. ஆங்கிலமும், தமிழும் கலக்கும் போது தலைவலி வருகிறது.
ஆனால்,
இந்நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால், கேட்டிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது!
 
கையில் உள்ளதும் தோல் தான்.
நாக்கில் உள்ளதும் தோல் தான்.
ஆனால் காப்பியை துண்டு வைத்து பத்திரமாகத்தூக்கி வாயில் ஊற்றுக் கொள்வார் இராஜாஜி.
 
இது என்ன விந்தை?
 
க.>

2009/11/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 4, 2009, 7:25:38 PM11/4/09
to mint...@googlegroups.com
ரிஷான் அவர்களே.
இது டங்க்லீஷ்! இது ஒழிக்க,இதை ஒலிப்பதிவு செய்து செல்லுமிடங்களெல்லாம் போட்டுக்காட்டுங்கள். சுபாஷிணியும், கண்ணனும் சொல்வது சரியே.


2009/11/5 N. Kannan <navan...@gmail.com>



--
இன்னம்பூரான்

Tirumurti Vasudevan

unread,
Nov 4, 2009, 11:00:00 PM11/4/09
to mint...@googlegroups.com
2009/11/5 N. Kannan <navan...@gmail.com>:

> கையில் உள்ளதும் தோல் தான்.
> நாக்கில் உள்ளதும் தோல் தான்.
> ஆனால் காப்பியை துண்டு வைத்து பத்திரமாகத்தூக்கி வாயில் ஊற்றுக் கொள்வார்
> இராஜாஜி.
>
> இது என்ன விந்தை?

உடலில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லை. முதுகில் உணர்ச்சி கூறுகளின்
(?sensory nerve endings) அடர்த்தி மிகவும் குறைவு. விரல் நுனிகளில் மிக
அதிகம்.
அதான்.
திவாஜி


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tthamizth Tthenee

unread,
Nov 4, 2009, 11:12:14 PM11/4/09
to mint...@googlegroups.com
அது மட்டுமல்ல  என் தாயார் குழம்பு கொதிக்கும் பாத்திரத்தை   வெறும் கையாலே  வெகு லாவகமாக
 
விரல்கள் சுடாவண்ணம் இறக்கிவிடுவார்
 
சிகரெட் பிடிப்பவர்கள்    அந்த நெருப்பின்  சூடு எவ்வளவோ  அந்த சூட்டின் அளவுக்குத் தகுந்தாற்போல்
 
அந்தப் புகையை உள்வாங்குகிறார்கள்
 
ஆனால்  பொண்டாட்டி காப்பி கொடுத்தால்  சூடா இருக்குன்னு  சொல்லக் கூடாதா
என்று எறிந்து விழுகிறார்
 
கடற்கரைக்கு சென்று  பஜ்ஜி வாங்கி அதன் சூடு ஆறுமுன்னர் உண்டால்தான் சுவை  என்று
கொதிக்கக் கொதிக்க  உண்ணுகிறார்
 
எல்லாம் மனோ வசியம் தான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
5-11-09 அன்று, Tirumurti Vasudevan <agni...@gmail.com> எழுதினார்:

வினோத் ராஜன்

unread,
Nov 4, 2009, 11:14:08 PM11/4/09
to மின்தமிழ்
ஆ... இது இங்க வேற இருக்கா..

இப்பத்தான் தமிழமுதத்துல ரிப்ளை பண்ணிட்டு வந்தேன் :-)

லிங்க் மட்டும் தாறன்...

http://groups.google.com/group/tamizhamutham/browse_thread/thread/e68bb62d8f4e6d3e

V

On Nov 5, 9:00 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2009/11/5 N. Kannan <navannak...@gmail.com>:


>
> > கையில் உள்ளதும் தோல் தான்.
> > நாக்கில் உள்ளதும் தோல் தான்.
> > ஆனால் காப்பியை துண்டு வைத்து பத்திரமாகத்தூக்கி வாயில் ஊற்றுக் கொள்வார்
> > இராஜாஜி.
>
> > இது என்ன விந்தை?
>
> உடலில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லை. முதுகில் உணர்ச்சி கூறுகளின்
> (?sensory nerve endings) அடர்த்தி மிகவும் குறைவு. விரல் நுனிகளில் மிக
> அதிகம்.
> அதான்.
> திவாஜி
>
> --

> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 5, 2009, 3:23:47 AM11/5/09
to mint...@googlegroups.com
மொழியின் மீது உண்மையான அக்கறையும் மரியாதையும் கொண்ட பதிவு இது.
 
திராவிட மொழி வீரர்கள் நடத்தும் ஊடகங்களில் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
 
கலைஞர் தொலைக்காட்சியிலும் என்ன வாழ்ந்தது?
 
பேச்சுக்கு ஒன்று காசுக்கு ஒன்றுதானே தமிழனின் நடைமுறை வாழ்க்கை?
 
பென்னேஸ்வரன்

2009/11/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

M.RISHAN SHAREEF

unread,
Nov 5, 2009, 10:59:26 AM11/5/09
to பண்புடன், thamizh...@googlegroups.com, தமிழமுதம், minTamil, முத்தமிழ், piravakam
இவ் இழையில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பு நன்றிகள் !

எனக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லையெனில் வேறு சானலுக்கு மாற்றி வேறு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாமே என்றும் இப்படி ஒரு விமர்சனம் எழுதிவிடுவதால் மட்டும் ஆகப் போவதென்ன என்றும் இன்னும் பலவாறும் இங்கு கேள்விகள் எழும்பியிருக்கின்றன.

நான் தொலைக்காட்சி, திரைப்படங்களுக்கு நேரம் விரயம் செய்வது குறைவு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க விரும்புகிறேனெனில், அவை நிச்சயமாகப் பாடல் சம்பந்தமானதாக இருக்கும் அல்லது கார்ட்டூனாக இருக்கும்.


//இதில் பாடகி அனுராதா ஸ்ரீராம்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஒவ்வொரு அங்கத்தினதும் ஆரம்பத்தில் அவர் சொல்வார். 'இப் போட்டி, நாம் அறிந்த பாடல்களின் அழகிய தமிழ் வரிகளை நினைவுபடுத்தச் செய்யும் போட்டி. நடிகர்கள், பாடகர்கள் என நாங்கள் எல்லோரும் அறிந்த பிரபலங்களின் தமிழறிவைச் சோதிக்கும் நிகழ்ச்சி'. ஆனால் உண்மையில் அவரும், போட்டியாளரும் சேர்ந்துகொண்டு  தமிழைச் சோதிக்கிறார்கள். எப்பொழுதாவது ஆங்கில உரையாடலிலிருந்து பாவமாக எட்டிப்பார்க்கிறது தமிழ். உதாரணத்துக்கு மேலே நான் சுட்டியிருக்கும் உரையாடலின் வரிகளைப் பார்க்கலாம்.//

ஒரு நிகழ்ச்சி, தமிழ் மொழியை வளர்க்கும் நிகழ்ச்சி எனச் சொல்லிக் கொண்டு தமிழை இரண்டாம்பட்சமாக உச்சரிப்பதைச் சாடியே இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறேன்.

உதாரணத்துக்கு நீங்கள் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவராக இருந்து, இது சைவ ஹோட்டல் என்று விளம்பரப்படுத்தியிருக்கும் ஒரு ஹோட்டலுக்குப் போய் பசியோடு காத்திருக்கையில் உங்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டால் எவ்வாறு அதனைக் கோபத்தோடு எதிர்கொள்வீர்களோ அதே போன்றதொரு கோபத்தோடுதான் இதனை எழுதியிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை விஜய் டீவி ஆங்கிலத்திலேயே நடத்தலாம். ஆனால் அதற்கு 'தமிழை வாழ வைக்கும் நிகழ்ச்சி' என விளம்பரப்'படுத்தி'யிருக்கக் கூடாது. தமிழுக்காக, தமிழில் ஒரு நிகழ்ச்சி எனச் சொல்லிவிட்டு இந்தளவு ஆங்கிலத்தைத் திணித்து ஏன் தமிழின் கழுத்தை நெரிக்கவேண்டும்?

சானலை மாற்றுவது பிரச்சினையில்லைதான். எனது வீட்டுக் கதவின் வாயிலாகப் பார்க்கையில் ஒருவரை அநீதமாக அடிப்பதைப் பார்க்கிறேன். ஜன்னலின் வாயிலாகப் பார்க்கையில் பூஞ்சோலை தெரிகிறது. நான் அநீதத்தை எதிர்த்து எனது உணர்வினை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஏன் அப்படி வெளிப்படுத்தினாய், ஜன்னலின் வழியாகப் பேசாமல் பூஞ்சோலையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே எனக் கேட்டீர்களானால் என்ன சொல்வது?

என் மனதுக்கு அநீதமெனத் தோன்றுவது எதுவாக இருப்பினும் உடனே அதற்கெதிரான உணர்வினை வெளிப்படுத்துவது எனது இயல்பு. கோபமோ துயரமோ எனது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த விடயத்தில் எனக்கு எழுத்துத்தான் உதவுகிறது. தமிழ் மொழிக்கான நிகழ்ச்சி எனச் சொல்லிக் கொண்டு சர்வசாதாரணமாக இங்கு ஆங்கிலம் உபயோகிக்கப்படுவது எனக்கு அநீதமாகப் படுகிறது. அதனால் இங்கு எழுத்தை உபயோகப்படுத்தியிருக்கிறேன். அவ்வளவே !

என் எழுத்தொன்றினால் மட்டும் இந்த அநீதங்கள் சீர்பெறப் போவதில்லைதான். ஆனாலும் இந்த அநீதத்துக்காக ஏதோ ஒரு வகையில் குரல் கொடுத்திருக்கிறேன் என்ற நிம்மதியொன்றே எனக்குப் போதும்.
இன்னும் இதுபோன்ற அநீதங்களைக் காண நேரின் எழுதத்தான் செய்வேன் !

என்றும் அன்புடன்,

எம்.ரிஷான் ஷெரீப்

karthi

unread,
Nov 5, 2009, 7:23:32 PM11/5/09
to mint...@googlegroups.com
ரிஷான்,
 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலைப்பொருள்களாகவும் கலாசாரப் பொருள்களாகவும் இருந்த
நிலை மாறி வர்த்தகப் பொருள்களாக மாறி நீண்ட காலமாகிவிட்டன. ஆகவே அதனை
அப்படித்தான் நீங்கள் பார்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் வெற்றி தோல்வி என்பது
உங்களைப் போன்ற கலாசார அக்கறையாளர்களின் கருத்தை விட மொத்ததில் எத்தனை மக்கள்
பார்த்தார்கள் (என்ன ரேட்டிங்) என்பதைப் பொறுத்தே அமையும்.
 
இந்த நிகழ்ச்சிக்கு ரேட்டிங் நல்ல முறையில் இருக்கிறது என்றே நான் யூகிக்கிறேன்.
அப்படி இல்லையானால் இந்நேரம் இதனைத் தூக்கிவிட்டு வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள்.
ஆகவே உங்கள் கோபம் இங்கு செல்லுபடியாகாது.
 
இந்த சந்தைப்படுத்துதல் முறையில் ஒரு கலாசார/சமுதாய அக்கறை கருதிய மேலாண்மை
இருக்க வேண்டும். சாதாரண வியாபாரப் பொருள்களுக்குக் கூட (சோப், சமையலெண்ணெய்)
தரக் கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தொலைக்காட்சியிலும் வானொலியிலும்
தரக் கட்டுப்பாடு என்பது முற்றாக இல்லாமல் போய்விட்டது என்றே தோன்றுகிறது. ஒரு
Broadcasting Monitoring Authority இருப்பதை தமிழ்நாட்டு அரசாங்கம்தான் உறுதி செய்ய வேண்டும்.
 
இப்படிச் சொல்லும்போது எங்கள் நாட்டில் கூட மொழி பற்றி இருந்த தரக் கட்டுப்பாடுகள்
(தேசிய மொழியான மலாய் உட்பட) இந்த நேயர்கள் என்ணிக்கை பெருக்கும் வேட்டைக்குப்
முன் தோற்றுப் போய்விட்டதைக் காணுகின்றேன்.
 
ஆனால் ஒரு மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் தேர்வுகள் (choices) இருக்கின்றன.
நீங்கள் உங்கள் விருப்பப் பாடல்களுக்கு தொலைக்காட்சியைச் சார்ந்திராமல்
ஒரு ஸ்டீரியோ செட் வாங்கி வைத்துக் கொண்டு குறுந்தட்டுகள் வாங்கி (இவை
இப்போது மானாவாரியாகக் கிடைக்கின்றன; சந்தைப் படுத்துதலின் ஒரு நன்மை இது)
கேட்டுக் கொள்ளுங்கள். உங்களைத் தடுப்பாரில்லை. நான் அப்படித்தான் செய்கிறேன்.
நான் மனத்தளவில் இது பற்றி எரிச்சல் அடைவதை இது குறைத்திருக்கிறது.
 
ரெ.கா.

Innamburan Innamburan

unread,
Nov 5, 2009, 8:33:37 PM11/5/09
to mint...@googlegroups.com
ரிஷானின் ஆதங்கம் புரிகிறது. ரெ.கா.வின் யதார்த்தம் புரிகிறது. என்ன சொன்னாலும், வாழும் நெறி இல்லையே என்று மனசு அடிச்சுக்கிறது.


2009/11/6 karthi <karth...@gmail.com>

jmms

unread,
Nov 5, 2009, 8:23:01 PM11/5/09
to mint...@googlegroups.com, பண்புடன், தமிழமுதம்


2009/11/5 M.RISHAN SHAREEF <mrishan...@gmail.com>



வரவேற்கிறேன் ரிஷான். நரி வலம்  போனால் என்ன இடம் போனால் என்ன என்ற போக்கை விட இப்படியான எண்ணம் மிக உயர்ந்தது .அதற்கொரு நல்ல மனமும் துணிவும் தேவை..

வாழ்த்துகின்றேன்..


--
சாந்தி

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு

http://punnagaithesam.blogspot.com/ =============================

விஜயராகவன்

unread,
Nov 6, 2009, 12:32:37 PM11/6/09
to மின்தமிழ்
On 6 Nov, 00:23, "karthi" <karthige...@gmail.com> wrote:
> இப்படிச் சொல்லும்போது எங்கள் நாட்டில் கூட மொழி பற்றி இருந்த தரக் கட்டுப்பாடுகள்
> (தேசிய மொழியான மலாய் உட்பட) இந்த நேயர்கள் என்ணிக்கை பெருக்கும் வேட்டைக்குப்
> முன் தோற்றுப் போய்விட்டதைக் காணுகின்றேன்.


மலேசியா டிவியில், தமிழ் சினிமாக்களை எல்லா இனத்தினரும் விரும்பிப்
பார்க்கின்றனர் என கேள்விப்பட்டென், அது உண்மையா? தமிழ் சினிமாக்களுக்கு
மலாய், சீன மொழிகளில் சப்டைடில் உண்டா?


விஜயராகவன்

karthi

unread,
Nov 8, 2009, 6:34:33 AM11/8/09
to mint...@googlegroups.com
ஒரு சிறுபான்மை மலாய்க்காரர்களும் அதனினும் சிறுபான்மைச்
சீனர்களும் தமிழ்ப் படங்களையும் சீரியல்களையும் பார்க்கிறார்கள்.
சில தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலத்திலும் மலாயிலும் சப்டைடல்ஸ்
போடுகிறார்கள். சிவாஜி, எம்ஜீஆர், ரஜனியை அவர்கள் நன்கு
அறிந்திருக்கிறார்கள். அவர்களுடைய iconic மலாய்க் கலைஞர் - நடிகர்,
பாடகர், இசையமைப்பாளார் - .P.Ramlee ஹிந்திப் பாணியை மலாய்த்
திரைக்குக் கொண்டுவந்து பெரும் புகழ் பெற்றார்.

இங்கு ஒலிபரப்பப்படும் Zee TVயை விரும்பிப் பார்ப்போர் மலாய்க்காரர்கள்.
அவர்களுக்கிடையே ஹிந்திப் பாடல்கள் மிகப் பிரபலம். போலிவூட்
ஆடல் பாடல்களை வைத்து dangdut என்ற புதிய நடனத்தை அவர்கள்
அமைத்து ஆடுகிறார்கள். இதுவும் மிகப் பிரபலம். மலாய்த் தேசியவாதிகளையும்
இஸ்லாமியத் தலவர்களையும் இது இப்போது மிகவும் தொந்திரவு
செய்து வருகிறது.

ரெ.கா.
----- Original Message -----
From: "விஜயராகவன்" <vij...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Saturday, November 07, 2009 1:32 AM
Subject: [MinTamil] Re: பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா

N. Kannan

unread,
Nov 8, 2009, 7:08:37 AM11/8/09
to mint...@googlegroups.com
இந்தியா தன் அறிவுத்திறத்தால் கவுக்கிறதோ இல்லையோ கேளிக்கையால்
எல்லோரையும் கவுத்துக்கொண்டு இருக்கிறது. இது மத்திய கிழக்கிற்கும்
பொருந்தும். எதுக்கு பட்வா கொடுத்தாலும் பாலிவுட்டிற்கு இவர்களால் பட்வா
கொடுக்க முடியாது ;-)

க.>

2009/11/8 karthi <karth...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages