அய்யனாரா? ஐயனாரா?
பாரிவார தெய்வங்கள்
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஈசானியன் ஆகிய எட்டு திசைதெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
ஐயனாhpன் பாpவார தெய்வங்களாக கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,
காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த(ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.
உணவு
ஐயனார் சுத்தசைவமாகும். சர்க்கரைப்பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
கோயில் பூசாரி
பூணு}ல் அணிந்தும் அசைவம்(மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாhpகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.
திருவிழாக்கள்
சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
தைப்பொங்கலை அடுத்து வரும் மஸ்ரீ;சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளைமாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.
புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.
பிரசாதம்
சிவன்கோயிலில் விபூதியும், அம்மன்கோயிலில் குங்குமமும், விஷ்ணு கோயிலில் துளசித் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படும். ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமானநீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.
காவலுக்குக் கருப்பர்
ஐயனாhpன் பரிவார தெய்வங்களில் ஒன்றhன கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.
அகிலமே வணங்கும் ஐயனார்
ஐயனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து சமூகத்தினரும் சாதிவேறுபாடு இல்லாமல் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். இவ்வுலகம் முழுமையும் இவரது தலைமைக்குக் கட்டுப்பட்டே நடக்கிறது.
வழிபடுவதால் பயன்
ஐயனாரை வழிபடுபவர்கள், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதற்கு உதாரணமாய் இருப்பர். பிறருடன் உறவுமுறை கொண்டு பழகுவர். பிறரிடம் கேலி கிண்டல் பேசி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வர்.
ஐயனாரை வழிபடுவதால், பில்லி சூனியம் விலகும், நல்லபுத்தி கிடைக்கும். எதையும் ஆராய்ந்தறிந்து செய்வர். தவறு செய்தவர்களிடமும் அன்பாக இருப்பர். நல்ல தீர்ப்பு வழங்குவர். வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் நிறைந்திருக்கும். தண்ணீரும் விவசாயமும் பெருகும். தானியம் சேரும். நற் சுகத்தை அடைவர்.
ஐயனாரை வணங்குவோம்
அனைத்து நலன்களையும் பெறுவோம்
*****
முனைவர் கி, காளைராசன்
உதவிப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
தமிழ்நாடு, India.
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003
புஷ்கலா தேவி ஒரு சௌராஷ்டிர பெண். மதுரை பட்டுப்புடவை விற்பனையாளரின்
மகள். அவர் ஆரியன்காவு காட்டு வழியே மகளுடன் போகும்போது ஐயனார் அவளை
ஆட்கொண்டு மணந்தார்.
ஆண்டுதோறும் மதுரை சௌராஷ்டிரர்கள் சீர் வரிசைகளுடன் சென்று
கேரள மக்கள், அரச குலத்தார் ஆகியோருடன் சேர்ந்து திருமண வைபவம்
நடத்துகின்றனர். மொழி, இன வேறுபாடுகளின்றி . பெரு விழா நடக்கிறது.
கி. வெ. பதி.
On 20 Aug, 14:04, kalairajan krishnan <kalairaja...@gmail.com> wrote:
> உ
> பகவன் முதற்றே உலகு
> புலிக்கரை ஐயனார் துணை
>
> அய்யனாரா? ஐயனாரா?
>
> அன்னை பார்வதிதேவியின் புதல்வரானவர் விநாயகப் பெருமான். பரமேசுவரருக்குப்
> புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் உள்ளனர். பரமேசுவரருக்கும்
> மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார். இவ்வாறாகத்
> தெய்வங்களின் தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும் தன்மை ஆகியவற்றை அறிந்த
> நமது முன்னோர்கள் அவர்களை வணங்கி வழிபட்டுப் பலனடைந்துள்ளனர்.
>
> கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் கூறியுள்ளார்.
> ஆனால் ஐயனார் கோயில் இல்லாத கிராமமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.
>
> காரணகாரியம் கருதி, ஒவ்வொரு ஐயனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.
> இருப்பினும் பொதுவாக ஐயனாரின் பெயருக்கான காரணம், தோற்றம், உருவம், தேவியர்,
> பரிவார தெய்வங்கள் அவரது கீர்த்தி மற்றும் அவரை வணங்குவோர் அடையும் பலன்கள்
> இவற்றைக் காண்போம்.
>
> *அய்யனாரா? ஐயனாரா?*
> *"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய
> மூத்தகுடி"*தமிழ்க்குடியாகும். உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய
> தமிழர் தாம் பேசும்
> தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத
> எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை
> வளர்த்துள்ளனர்,
>
> தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும்
> ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை
> அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம்
> ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில்
> ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. உதாரணமாக "ம*க*
> ன்" என்று சொல்லுக்கும் "ம*கா*ன்" என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு
> உண்டு. பக*வ*னுக்கும் பக*வா*னுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வாறாகப் பல
> உதாரணங்களைக் கூறலாம், எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ
> அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்.
>
> "சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம்
> தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும்
> எழுதுகின்றனர்.
>
> ஐயனார் என்ற சொல்லில் "*ஐ*" என்பது நெடில் எழுத் தாகும் இரண்டு மாத்திரை அளவு
> உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ள தாகும். "ய்"
> என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று
> எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.
>
> ஐ நெடில் = 2 அளவு
> அ குறில் = 1 அளவு
> ய் ஒற்று = ½ அளவு
> அய் = 1+½ = 1 ½ அளவு
>
> "ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று
> பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. எனவே நாம் வணங்கும்
> தெய்வத்தின் பெயரை நாமே குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்.
> எனவே "ஐயனார்" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். இதேபோல்
> "ஐயா" என்றுதான் எழுதவேண்டும். "அய்யா" என்று எழுதக்கூடாது. "ஐயா" என்றால்
> தலைவர் என்று பொருள். அய்யா என்றால் பொருள் ஏதும் இல்லை.
> **
> **
> *ஐயனை அறிந்து கொள்வோம்*
>
> *தோற்றம்
> *தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க
> வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி
> உருவமும் கொண்டனர்.
>
> பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை
> கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
>
> மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை
> அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.
>
> ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச்
> சென்றார்.
>
> அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா
> ஆவார்.
>
> ஐயனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று
> பிறந்தார்.
>
> *வடிவம்
> *ஐயனார் சர்வேசுவரனைப் போன்ற தோற்றம் உடையவராய் இருப்பார்.
> கிழக்குத்திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணு}ல் அணிந்திருப்பார்.
> இளைஞரைப்போன்றவர்.
> விரிந்து பரந்த முகத்தையும் மார்பையும் உடையவர்.
> தங்கநிறம் அல்லது சிவப்பு நிறமானவர்.
> கீரீடம் அணிந்திருப்பார்.
> கருத்த அடர்த்தியான சுருண்ட முடியை உடையவர்.
> வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார்,
> மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார்.
> சந்தனம் பூசியிருப்பார்.
> பீடத்தின் மீது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்.
> வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார்.
> இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார்,
> இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே
> தொங்கவிட்டிருப்பார்.
>
> கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார்.
> ஐயனார் நிற்கும் கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.
>
> சாந்த குணமுடையவர். நாய், கோழி, யானை, குதிரை இவற்றுடன் விளையாடும் குணம்
> உடையவர். பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் பாடிக்கொண்டிருப்பவர். யானை
> வாகனம் உடையவர். யானைக்கொடிமரத்தை உடையவர். வெள்ளைக்குதிரையை உடையவர்.
> **
> *தேவியர் இருவர்*
> சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல்,
> ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை *
> பாலசாஸ்தா* என்று அழைக்கின்றனர்.
>
> பாலசாஸ்தா ஐயனார் மிகவும் துடுக்கானவராகவும் துடியானவராகவும் விளங்குகின்றார்.
>
> பொதுவாக, ஐயனாருக்குப் *பூர்ணாதேவி, புஸ்கலாதேவி* என இரண்டு தேவியர் உள்ளனர்,
> ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச்
> சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக
> உள்ளனர்.
>
> இவர்களது தலையானது ஐயனாரின் தோள்ப்பட்டை உயரத்தில் இருக்கும். ஐயனாரின்
> அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை
> மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே
> தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
>
> புஷ்கலை என்றால் பூவைப்போன்ற பண்புடையவள் என்று பொருள். பூ என்று பொதுவில்
> சொன்னால் அது தாமரையைக் குறிக்கும். எனவே புஷ்கலை என்றால் தாமரை
> மலரைப்போன்றவள். மலர்ந்த முகமுடையவள், பரந்த எண்ணமுடையவள், மணம் நிறைந்தவள்.
> தங்க நிறமானவள்.
> பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள்
> முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.
>
> *பாரிவார தெய்வங்கள்*
> இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஈசானியன் ஆகிய எட்டு
> திசைதெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர்
> ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
> ஐயனாhpன் பாpவார தெய்வங்களாக கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன்,
> நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன்
> மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,
> காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி,
> மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த(ஏழு) கன்னியர்கள் முதலிய
> பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
> நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.
>
> *உணவு*
> ஐயனார் சுத்தசைவமாகும். சர்க்கரைப்பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார
> தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது
> ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள்.
> கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
> *கோயில்*
> ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள்
> கண்மாய்க் கரையில் மடை அல்லது களுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே
> நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும்.
>
> கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே சுப்பிரமணியரும் உள்ளனர்.
>
> *மடப்புரம் காளியம்மன்*
> ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றhக இரண்டு பொpய
> குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள்
> முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள்
> களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும்.
> இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.
>
> *கோயில் பூசாரி*
> பூணு}ல் அணிந்தும் அசைவம்(மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற
> குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாhpகளாக
> உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு
> செய்ய அனுமதியில்லை.
>
> *திருவிழாக்கள்*
> சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக
> நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும்
> அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
> எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு
> காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
> தைப்பொங்கலை அடுத்து வரும் மஸ்ரீ;சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில்
> காளைமாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து
> விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.
> புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய
> மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று
> கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
> முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து,
> அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து
> விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில
> ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.
>
> *பிரசாதம்*
> சிவன்கோயிலில் விபூதியும், அம்மன்கோயிலில் குங்குமமும், விஷ்ணு கோயிலில்
> துளசித் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படும். ஐயனார் கோயிலில் சந்தனமும்
> சுத்தமானநீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும்
> வழங்கப்படும்.
>
> காவலுக்குக் கருப்பர்
> ஐயனாhpன் பரிவார தெய்வங்களில் ஒன்றhன கருப்பர் காவல் தெய்வமாவார். இவர்
> கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து
> காவல் செய்வார்.
>
> *அகிலமே வணங்கும் ஐயனார்*
> ஐயனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து சமூகத்தினரும்
> சாதிவேறுபாடு இல்லாமல் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். இவ்வுலகம்
> முழுமையும் இவரது தலைமைக்குக் கட்டுப்பட்டே நடக்கிறது.
>
> *வழிபடுவதால் பயன்*
> ஐயனாரை வழிபடுபவர்கள், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதற்கு உதாரணமாய்
> இருப்பர். பிறருடன் உறவுமுறை கொண்டு பழகுவர். பிறரிடம் கேலி கிண்டல் பேசி
> அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வர்.
> ஐயனாரை வழிபடுவதால், பில்லி சூனியம் விலகும், நல்லபுத்தி கிடைக்கும். எதையும்
> ஆராய்ந்தறிந்து செய்வர். தவறு செய்தவர்களிடமும் அன்பாக இருப்பர். நல்ல தீர்ப்பு
> வழங்குவர். வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் நிறைந்திருக்கும். தண்ணீரும்
> விவசாயமும் பெருகும். தானியம் சேரும். நற் சுகத்தை அடைவர்.
> *ஐயனாரும் ஐயப்பனும்*
> சிவபெருமானுக்கும் மோகினி(பெண்வடிவில் இருந்த மகாவிஷ்ணு)க்கும் பிறந்தவர்கள்
> என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்.
> இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே
> பொருந்தும். ஆனால் தம்பதிசமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும்
> ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்.
>
> ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப்
> பிறந்தவர்.
> ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப்
> பெற்றவர். ஆனால்,
>
> ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப்
> பெற்றவர்.
> ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பாpவார தெய்வங்களுடனும் ஆட்சி
> செய்பவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும்
> இருப்பவர்.
>
> ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால்,
> ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு
> இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
> இதனால் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பது விளங்கும்.
> ஐயனாரை வணங்கி வழிபட்டு வாழ்பவர்களின் வாழ்க்கையானது பிறருக்குத்
> துன்பமில்லாமல் மகிழ்ச்சி யைக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
>
> *இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
> வோளண்மை செய்தல் பொருட்டு (குறள் -81)*
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
நாகரிகத் துவக்க காலத்தில், கூடி வாழ்தலின் தேவையை உணர்ந்து கொண்ட
புதிதில், மக்கள் கூட்டம் கூட்டமாகப் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்தனர்.
கிராமம் தான் அவர்களுடைய நாடு. ஒரு கிராமத்து மக்கள் ஒரு குலத்தவராகத்
தங்களைக் கருதிக் கொண்டனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவன்
இருந்தான். அவன் ஐயன் எனப்பட்டான். குலங்களுக்கிடையில் மோதல்கள்
நடைபெறும்போது அவன் தன் உதவியாளர்களுடன் ஊர் எல்லையில் நின்று ஆயுதம்
ஏந்தி மக்களைக் காத்து வந்தான்.
ஐயன் இறந்த பிறகு ஊருக்கு வெளியே அவனுக்குச் சமாதி அமைத்து மக்கள்
வழிபட்டனர். அடுத்தடுத்து வந்த ஐயன்களுக்கும் அதே இடத்தில் சமாதி
அமைக்கப்பட்டிருக்கலாம். ஆர் விகுதி பெற்று ஐயனார் என்று அழைக்கப்பட்ட
இத்தகைய தொல் பழம் தெய்வக் கோவில்களில் யானை, குதிரை மற்றும்
படைவீரர்களது சுடுமண் பொம்மைகள் அமைக்கப்பட்டு இருப்பது ஐயனின் ஊர்காவல்
வேலையைச் சுட்டுகிறது.
குலத்தைக் காக்கும் தெய்வமாக, இந்த ஐயனார்கள் ஒவ்வொரு ஊரிலும்
வழிபடப்பட்டனர். பிற்காலத்தில் மக்கள் பிற கிராம மக்களுடன் வணிகத்
தொடர்பும், கலாசாரத் தொடர்பும், திருமண உறவும் கொள்ளத் தொடங்கினர். நாடு
என்ற சொல் இப்பொழுது பல கிராமங்களின் தொகுதியைக் குறிப்பதாக ஆயிற்று.
அரசர்களின் வலிமை பெருகப் பெருக, அது மேலும் விரிவடைந்து சேர நாடு, சோழ
நாடு, பாண்டிய நாடு என்று ஆகியது. அந்த விரிவாக்கத்தின் தொடர்ச்சியாகத்
தான் நாம் இன்று இந்தியத் துணைக் கண்டத்தை நாடு என்று அழைக்கிறோம்.
ஆயினும் இன்றும் குல தெய்வம் என்ற கருத்துரு மறையவில்லை.
On Aug 21, 6:23 am, aruran visu <visuaru...@gmail.com> wrote:
> ஐயா, இந்த கதைக்கு மூலம் ஏதாவது இருக்கிறதா? எதன் அடிப்படையில் இது புனையப்
> பட்டிருக்கிறது என்பதை சொல்ல முடியுமா? சேமக் குதிரைகள் ஐயனார் கோவில்களில்
> அமைந்திருப்பதற்கு ஏதாவது விசேட காரணங்கள் இருக்கிறதா?
>
> 20 ஆகஸ்ட், 2010 2:34 pm அன்று, kalairajan krishnan
> <kalairaja...@gmail.com>எழுதியது:
>
>
>
>
>
> > உ
> > பகவன் முதற்றே உலகு
> > புலிக்கரை ஐயனார் துணை
>
> > அய்யனாரா? ஐயனாரா?
>
> > அன்னை பார்வதிதேவியின் புதல்வரானவர் விநாயகப் பெருமான். பரமேசுவரருக்குப்
> > புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் உள்ளனர். பரமேசுவரருக்கும்
> > மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார். இவ்வாறாகத்
> > தெய்வங்களின் தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும் தன்மை ஆகியவற்றை அறிந்த
> > நமது முன்னோர்கள் அவர்களை வணங்கி வழிபட்டுப் பலனடைந்துள்ளனர்.
>
> > கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் கூறியுள்ளார்.
> > ஆனால் ஐயனார் கோயில் இல்லாத கிராமமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.
>
> > காரணகாரியம் கருதி, ஒவ்வொரு ஐயனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.
> > இருப்பினும் பொதுவாக ஐயனாரின் பெயருக்கான காரணம், தோற்றம், உருவம், தேவியர்,
> > பரிவார தெய்வங்கள் அவரது கீர்த்தி மற்றும் அவரை வணங்குவோர் அடையும் பலன்கள்
> > இவற்றைக் காண்போம்.
>
> > *அய்யனாரா? ஐயனாரா?*
> > *"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி"*தமிழ்க்குடியாகும். உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர் தாம் பேசும்
> > தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத
> > எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை
> > வளர்த்துள்ளனர்,
>
> > தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள்
> > என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு
> > மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு
> > நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே
> > தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன.
> > உதாரணமாக "ம*க*ன்" என்று சொல்லுக்கும் "ம*கா*ன்" என்ற சொல்லுக்கும் மிகப்
> > பெரிய வேறுபாடு உண்டு. பக*வ*னுக்கும் பக*வா*னுக்கும் வேறுபாடு உண்டு.
> > இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம், எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின்
> > ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்.
>
> > "சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம்
> > தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும்
> > எழுதுகின்றனர்.
>
> > ஐயனார் என்ற சொல்லில் "*ஐ*" என்பது நெடில் எழுத் தாகும் இரண்டு மாத்திரை
> > அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ள தாகும். "ய்"
> > என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று
> > எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.
>
> > ஐ நெடில் = 2 அளவு
> > அ குறில் = 1 அளவு
> > ய் ஒற்று = ½ அளவு
> > அய் = 1+½ = 1 ½ அளவு
>
> > "ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று
> > பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. எனவே நாம் வணங்கும்
> > தெய்வத்தின் பெயரை நாமே குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்.
> > எனவே "ஐயனார்" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். இதேபோல்
> > "ஐயா" என்றுதான் எழுதவேண்டும். "அய்யா" என்று எழுதக்கூடாது. "ஐயா" என்றால்
> > தலைவர் என்று பொருள். அய்யா என்றால் பொருள் ஏதும் இல்லை.
> > **
> > **
> > *ஐயனை அறிந்து கொள்வோம்*
>
> > *தோற்றம்
> > *தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க
> > வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி
> > உருவமும் கொண்டனர்.
>
> > பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை
> > கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
>
> > மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின்
> > மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.
>
> > ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச்
> > சென்றார்.
>
> > அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா
> > ஆவார்.
>
> > ஐயனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று
> > பிறந்தார்.
>
> > *வடிவம்
> > *ஐயனார் சர்வேசுவரனைப் போன்ற தோற்றம் உடையவராய்
>
> ...
>
> read more »
--
முன்பு ஜைன மதத்தில் ஐயனார் வழிபாட்டினை பற்றி எழுதி, சிரசில்
ஜினபிம்பத்துடன் கூடிய ஜைன ஐயனார் விக்கிரஹங்களின் படங்களை பானுகுமார்
மின் தமிழில் இட்டார்.
V
> > > நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள்...
>
> read more »
ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரா இருவரா என்பது ஒருபுறம் இருக்க,
தேவியர் பூர்ணிமை, புஷ்கலை என்போர் .
ஆரியன்காவு கோவிலில் ஐயப்பன் புஷ்கலா தேவியுடன் இருக்கிறார்.
ஆண்டுதோறும் திருமண விழா நடைபெறுகிறது.
புஷ்கலா தேவி ஒரு சௌராஷ்டிர பெண். மதுரை பட்டுப்புடவை விற்பனையாளரின்
மகள். அவர் ஆரியன்காவு காட்டு வழியே மகளுடன் போகும்போது ஐயனார் அவளை
ஆட்கொண்டு மணந்தார்.
ஆண்டுதோறும் மதுரை சௌராஷ்டிரர்கள் சீர் வரிசைகளுடன் சென்று
கேரள மக்கள், அரச குலத்தார் ஆகியோருடன் சேர்ந்து திருமண வைபவம்
நடத்துகின்றனர். மொழி, இன வேறுபாடுகளின்றி . பெரு விழா நடக்கிறது.
if we use i in words ,the value of i isonly one and half. i gettwo if
we use it alone.therefore no difference i and ay.
ஐயா, இந்த கதைக்கு மூலம் ஏதாவது இருக்கிறதா? எதன் அடிப்படையில் இது புனையப் பட்டிருக்கிறது என்பதை சொல்ல முடியுமா?
சேமக் குதிரைகள் ஐயனார் கோவில்களில் அமைந்திருப்பதற்கு ஏதாவது விசேட காரணங்கள் இருக்கிறதா?
நாகரிகத் துவக்க காலத்தில், கூடி வாழ்தலின் தேவையை உணர்ந்து கொண்ட
புதிதில், மக்கள் கூட்டம் கூட்டமாகப் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்தனர்.
கிராமம் தான் அவர்களுடைய நாடு. ஒரு கிராமத்து மக்கள் ஒரு குலத்தவராகத்
தங்களைக் கருதிக் கொண்டனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவன்
இருந்தான். அவன் ஐயன் எனப்பட்டான். குலங்களுக்கிடையில் மோதல்கள்
நடைபெறும்போது அவன் தன் உதவியாளர்களுடன் ஊர் எல்லையில் நின்று ஆயுதம்
ஏந்தி மக்களைக் காத்து வந்தான்.
அருமையாக இருக்கிறது ஐயா. இது குறித்து முன்னர் நான் எழுதிய பதிவொன்றின் சுட்டியும் கொடுத்திருக்கேன். நேரம் இருந்தால் பார்க்கவும். நன்றி.
http://sivamgss.blogspot.com/2007/11/3.html
ஐயனார் ஆஜீவக மதத்தின் தெய்வம் என்று சிலர் கூறுகின்றனர் என்று
நினைக்கிறேன். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அவர் அஜீவக மத
ஸ்தாபகரான மற்கலி கோசராக இருக்கலாம் என்றும் எங்கோ படித்த நினைவு.
முன்பு ஜைன மதத்தில் ஐயனார் வழிபாட்டினை பற்றி எழுதி, சிரசில்
ஜினபிம்பத்துடன் கூடிய ஜைன ஐயனார் விக்கிரஹங்களின் படங்களை பானுகுமார்
மின் தமிழில் இட்டார்.
இந்த இழையில் ஐயப்பன் - ஐயனார் குறித்த விவாதம் முன்னர் நடைபெற்றது.
பானுகுமார் ஜைன ஐயனார்களின் புகைப்படங்களை இணைத்துள்ளார். ஜைன
ஐயனார்களின் மகுடம் அனைத்திலும் அர்ஹத் பரமேஷ்டியின் திருவுருவம்
பொறிக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.
புத்த மதத்திலும் சில மூர்த்தங்களின் மகுடங்களில் புத்தரூபத்தை காணலாம்.
V
On Aug 21, 1:21 pm, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றனாரே
அடியார்க்கு நல்லார் பாசண்டச் சாத்தர் பற்றிக் கூறுகிறார்.
ஐயனாரின் கையில் இருந்த செண்டு என்னும் ஆயுதத்தினால் கரிகாலன் மேருமலையை
அடித்தான் என்று ஒரு செவிவழிச் செய்தி -
கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு
கச்சியப்பரின் கந்த புராணம் சாஸ்தாவைப் பற்றிக்கூறும்.
பெண் தெய்வவழிபாடு இந்திய மதங்களிடையே பொதுவாக இருப்பது போல் சாத்தன்
வழிபாடும் பொதுமையானது
தேவ்
அக்கரசுதகம் என்னும் சொல்லணிக்கு மேற்கோளாக ஒரு செய்யுள் காட்டப்படுகிறது. (ஒரு சொல்லில் ஒவ்வொரு எழுத்தாக நீக்க வேறு வேறு பொருள் பயப்பதாக அமையுமாறு ஒரு சொல்லை வைத்துப் பாடுவது சொல்லணியாகும்).
பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல்
சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல்
மற்றியார்கொ லென்னின் மலர்தூவி வணங்கி நாளும்
கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி.
இப்பாடலில் 'சிற்றாயன் முன் வனிதையாகி அளித்த செம்மல்' என்பது, திருமால் மோஹினி வடிவாகிப்பெற்ற ஐயனார் என்று காணப்படுகிறது. காரி என்பது ஐயனாரைக் குறித்த சொல் போலும்.
--
On Aug 22, 11:12 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:
> அக்கரசுதகம் என்னும் சொல்லணிக்கு மேற்கோளாக ஒரு செய்யுள் காட்டப்படுகிறது.
> (ஒரு சொல்லில் ஒவ்வொரு எழுத்தாக நீக்க வேறு வேறு பொருள் பயப்பதாக அமையுமாறு ஒரு
> சொல்லை வைத்துப் பாடுவது சொல்லணியாகும்).
>
> பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல்
> சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல்
> மற்றியார்கொ லென்னின் மலர்தூவி வணங்கி நாளும்
> கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி.
>
> இப்பாடலில் 'சிற்றாயன் முன் வனிதையாகி அளித்த செம்மல்' என்பது, திருமால் மோஹினி
> வடிவாகிப்பெற்ற ஐயனார் என்று காணப்படுகிறது.
> காரி என்பது ஐயனாரைக் குறித்த சொல்
> போலும்.
திவாகரத்தில் காரி என்ற பெயர் ஐயனாருக்கு வருகிறது.
தாயினால் பெற்றது போலும்.
கணேசன்
> அ.ரா
>
> Visit arajagopalan.blogspot.com
>
> 2010/8/21 kalairajan krishnan <kalairaja...@gmail.com>
>
>
>
>
>
> > On 8/20/10, aruran visu <visuaru...@gmail.com> wrote:
>
> >> ஐயா, இந்த கதைக்கு மூலம் ஏதாவது இருக்கிறதா? எதன் அடிப்படையில் இது புனையப்
> >> பட்டிருக்கிறது என்பதை சொல்ல முடியுமா?
>
> > ஐயா வணக்கம்
> > எனது கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் *ஐயனார் புராண*த்தை
> > அடிப்படையாகக் கொண்டன, ஆனால் என்னிடம் தற்போது இப்புராணம் இல்லை,
> > இப்புராணத்தை வைத்திருப்போர் அல்லது படித்தோர் உதவி செய்தால் நலம்
> > பயக்கும்,
>
> > ஐயனாரின் திருமேனியின் வடிவமைப்பை கூறும் வடமொழிச் சுலோகம் ஒன்று இதைப்பற்றி
> > விரிவாகக் கூறுகிறது, அதுபற்றிய எனது குறிப்பேட்டைத் தேடி வருகிறேன்,
> > கிடைத்தவுடன் வெளியிடுகிறேன், அன்புள்ளம் கொண்டு காத்திருக்கவும்.
>
> > சேமக் குதிரைகள் ஐயனார் கோவில்களில் அமைந்திருப்பதற்கு ஏதாவது விசேட
> >> காரணங்கள் இருக்கிறதா?
>
> > இதுபற்றி எனக்குப் போதுமான அறிவு இல்லை, நான் அறிந்தவரையில் ஐயனாரின்
> > பரிவார தெய்வமாக விளங்கும் கருப்பணசாமியே காவல் தெய்வம், குதிரை
> > கருப்பணசாமிக்கு உரியது, யானையே ஐயனாருக்கு உரியது, உங்களது வீட்டு
> > வாயிலில் உங்களது வாகனமும் (car) உங்களது பணியாளின் வாகனமும் நிற்கும் அல்லவா?
> > அது போன்றது தான் இதுவும், யானையும் குதிரையும் ஒன்றாக நிற்கின்றன,
> > மீண்டும் கூறுகிறேன் - இது என்னுடைய கருத்துத்தான், இதற்கு என்னிடம்
> > சான்றுகள் ஏதும் கிடையாது, *ஐயனார் புராணம் *முழுமையும் கிடைத்தால்தான்
> > இதற்கான விளக்கங்கள் கிடைக்கும்,.
>
> > அன்பன்
> > கி. காளைராசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
முனைவர்.காளைராஜன் தொடங்கி பலரும் நல்ல பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். இவற்றை தொகுத்து த.ம.அறக்கட்டளை வலைப்பக்கத்தில் உள்ள கிராம தெய்வங்கள் பகுதியில் இணைத்து விடுகிறேன்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/c43b64721e43a268/ac537c0a41d6dd80
இந்த இழையில் ஐயப்பன் - ஐயனார் குறித்த விவாதம் முன்னர் நடைபெற்றது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 22, 11:12 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:
> அக்கரசுதகம் என்னும் சொல்லணிக்கு மேற்கோளாக ஒரு செய்யுள் காட்டப்படுகிறது.
> (ஒரு சொல்லில் ஒவ்வொரு எழுத்தாக நீக்க வேறு வேறு பொருள் பயப்பதாக அமையுமாறு ஒரு
> சொல்லை வைத்துப் பாடுவது சொல்லணியாகும்).
>
> பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல்
> சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல்
> மற்றியார்கொ லென்னின் மலர்தூவி வணங்கி நாளும்
> கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி.
>
> இப்பாடலில் 'சிற்றாயன் முன் வனிதையாகி அளித்த செம்மல்' என்பது, திருமால் மோஹினி
> வடிவாகிப்பெற்ற ஐயனார் என்று காணப்படுகிறது.
> காரி என்பது ஐயனாரைக் குறித்த சொல்
> போலும்.
திவாகரத்தில் காரி என்ற பெயர் ஐயனாருக்கு வருகிறது.
தாயினால் பெற்றது போலும்.
உவெசாமிநாதய்யர் எழுதியுள்ள 'நல்லுரைக் கோவை'யில் இந்தக் கட்டுரை காணப்படுகிறது.
தடி கொண்ட ஐயனார்.
புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற
பெரிய தெரு ஒன்று இருக்கிறது. அது சேஷையா சாஸ்திரிகளால்
உண்டாக்கப்பட்டது. (சேஷையா சாஸ்திரிகள் பற்றிய இழை
அகத்தியத்தில் இருக்கின்றது. கொஞ்சம் தேடிப் பார்த்தால்
அம்புடும். சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின்
திவானாக இருந்தவர்.)
அங்கே, முன்பு ஓர் ஆலமரமும் அதன்கீழே ஐயனார்
கோயிலொன்றும் இருந்தன. அவ்வையனாருடைய பெயர்
'தடிகொண்ட ஐயனார்' என்பது. மார்த்தாண்ட பைரவபுரத்தை
உண்டாக்குவதற்கு முன் அங்கே சாலையை அமைக்கவேண்டியிருந்தது.
சாலைக்கு முற்கூறிய ஆலமரமும் கோயிலும் தடையாக இருந்தன.
ஆலமரத்தை வெட்டிவிட்டு, தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக்
கொண்டுசென்று பிரதிஷ்டை செய்துவிட்டால் தாம் உத்தேசித்த
காரியம் நன்றாக நிறைவேறுமென்று சாஸ்திரியார் எண்ணினார்.
உடனே வேறிடத்தில் அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.
ஐயனாரை அங்கே எழுந்தருளச் செய்விப்பதற்கு வேண்டிய
முயற்சிகளைச் செய்தார். சிலர் அங்ஙனம் செய்தல் தகாதென்று
தடுத்தனர்.
சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான்
இதைச் செய்கிறேன். ஐயனாரிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும்
பக்திக்கு என்பக்தி சிறிதேனும் குறைந்ததல்ல. என்னுடைய
முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி
எனக்குண்டு", என்று அவர்களைப் பார்த்துக்கூறினார். பிறகு
ஐயனாருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி அவர் முன்பு வைக்கச்செய்து
நமஸ்காரம் செய்தார்.
அதன் சாரம் வருமாறு:
'கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய
பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி
நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.
நகரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு எழுந்தருளியிருக்கும்
தேவரீர் இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும்
அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள்
செய்துவருகிறேன். இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும்
உண்டாக்க எண்ணியுள்ளேன். அந்தச் சாலை நேராகச் செல்வதற்கு
இந்த ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர்
அழகிய கோயிலைக் கட்டச்செய்திருக்கிறேன். நெடுங்காலமாக
இந்தப் பழைய கோயிலில் மழையால் நனைந்தும் வெயிலால் உலர்ந்தும்
எழுந்தருளியிருக்கும் சிரமம் நீங்கி அக்கோயிலில் எழுந்தருள வேண்டும்.
இந்த ஆலமரத்தையும் வெட்டுவதையும் அங்கிகரித்து அருளி
வழிவிடல் வேண்டும்.'
இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில்
ஐயனாரை அவ்விடம் விட்டு எழுந்தருளச் செய்து புதுக்கோயிலில்
பிரதிஷ்டை செய்வித்து சிறப்பாகக் கும்பாபிஷேகமும் நடத்திப்
பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார். அப்பால் ஆலமரத்தை
வெட்டுவதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார். அதை
வெட்டினால் ஐயனாரின் கோபம் ஏற்படுமென்று பயந்து கூலியாள்
யாரும் அதனை வெட்டத் துணியவில்லை.
"ஐயனாருடைய அருளை எதிர்பார்த்துத்தான் நான் இதைச்
செய்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில்
வெட்ட ஆரம்பிக்கிறேன்", என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம்
கையில் கோடரியை எடுத்துக்கொண்டார். அவர் மிகப்பருத்த
தேகமுடையவர். அவர் வெட்டும் காட்சியைப் பார்ப்பதற்காக
அளவற்ற ஜனங்கள் வந்து கூனி நின்றனர்.
சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை", என்று
சொல்லிக்கொண்டு கோடரியை ஓங்கினார்.
ஐயனாரிடத்தில் பயங்கொண்ட பல ஜனங்களும்
சாஸ்திரியாருக்கு ஏதேனும் அபாயம் நேரிடுமென்றே எண்ணினார்கள்.
சிலர், அவர் ஓங்கிய கோடரி அவர் காலிலேயே விழுந்து துன்பத்தை
விளைவிக்கும் என்று நினைத்தார்கள். வேறு சிலரோ ஆலமரத்திலிருந்து
குபீரென்று இரத்தம் சாஸ்திரிகளின் முகத்தில் பீரிட்டு அடிக்கும்
என்று கருதினர். கூட்டத்தினர் கண்கள் அத்தனையும் சாஸ்திரியார்
ஓங்கிய கோடரியின் பால் இருந்தன.
சொத்தென்று பச்சை ஆலமரத்தின்மீது கோடரி பாய்ந்தது.
அபாயமான நிகழ்ச்சி ஒன்றும் நேரவில்லை. சாஸ்திரியாருக்குப்
பின்னும் உற்சாகம் உண்டாயிற்றேயன்றிச் சிறிதும் சோர்வு
உண்டாகவில்லை.
'பெரிய பக்திமானும் குணவானுமாகிய சாஸ்திரிகளிடத்தில்
ஐயனாருக்குக் கோபம் வர நியாயம் இல்லை. சாஸ்திரிகள் தெய்வ
சம்மதமான காரியத்தையே செய்கிறார்', என்று தம்முள்ளே கூறிக்
கொண்டனர். 'இவர் வெட்டிவிட்டார். ஐயனார் இவருக்கு உத்தரவு
கொடுத்திருப்பதால்தான் கோடரி மரத்தில் பாய்ந்தது. இனிமேல்
இந்த மரத்தை வெட்டத்துணியலாம்.', என்று சிலர் கூறினர். உடனே
அருகிலிருந்த வேலையாட்கள் சிறிதும் அச்சமின்றி ஆலமரத்தை
வெட்டிச் சாய்த்தனர்.
ஆலமரம் வெட்டப்பட்டது. அதனால் உத்தேசித்திருந்த
சாலை ஒழுங்காக அமைந்தது. ஐயனார், புதுக் கோயிலில் பின்னும்
சிறப்பாக வீற்றிருக்கிறார். அவர் முன்பு இருந்த இடத்தில் ஒரு
பீடம் மட்டும் இருக்கிறது. அதையும் இப்பொழ்து நகர்வாசிகள்
பயபக்தியோடு பூசித்து வருகிறார்கள்.
Thanks : treasurehouseofagathiyar
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
இத்தொடுப்பில் இருக்கும் படத்தில் கருவறைக்குள் சூரிய வெளிச்சம்
விழுவதைக் காணலாம் -
http://temple.dinamalar.com/New.aspx?id=892
தேவ்
On Aug 24, 5:47 am, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> எனது குலதெய்வம் கொழுமடை சாஸ்தா. பாய்க்குப் பிரபலமான பத்தமடை அருகில் உள்ளார்.
>
> அவரும் கூரையில்லாமல்தான் இருக்கிறார். கோவில் கட்டப் பலர் ஆசைப்பட்டனர்.
> அப்படி முயற்சி செய்யும் மூலகர்த்தாவின் கனவில் வந்து வேண்டாம் என்று சொல்வார்.
> அதையும் மீறிக் கட்ட முயன்றவர்கள் மரணம் அடைகின்றனர்.
>
> இப்போதும் சுற்றுச் சுவர் உண்டு, ஆனால் உச்சியில் சூரியக்குடைதான் :-)
>
> அவரது விருப்பம் அதுதான் போலும்.
> அன்புடன்
> மதுரபாரதி
> 2010/8/24 venkatachalam Dotthathri <v.dotthat...@gmail.com>
>
> > ஓம்.
> > அன்பார்ந்த ஐயா காளைராசன், வணக்கம்.
> > பழனி அருகில் பாலாறு பொருந்தலாறு அணைத் திட்டம் கட்டுமானப் பணியின் போது
> > ஆஞ்சனேயர் வடிவத்திலிருந்த ஒரு பாறாங்கல்லை நகர்த்த எடுத்த பெரும் முயற்சியில்
> > பதின்மர் இறந்துபட்டனர். எனவே அதனை நகர்த்தாமல் நீர்ப்பிடியிலேயே வைத்துள்ளனர்.
>
> > திண்டுக்கல் வட்டம் சாணார்பட்டி அருகில், அய்யாபட்டிக் கிராமத்தின் காட்டுப்
> > பகுதிக்குள் கோயில் கொண்டிருக்கும் வெங்கலமுடி ஐயனார் ஒரு அபூர்வத் தலம்.
> > அப்பகுதியில் தொடர்புடைய நண்பர்கள் இருந்தால் சிறப்பான ஒளிப்படங்களும்
> > தகவலும் தரலாம்.
>
> > அன்புடன் வெ.சுப்ப்ரமணியன், ஓம்.
>
> > 2010/8/23 kalairajan krishnan <kalairaja...@gmail.com>
>
> >> உ
> >> புலிக்கரை ஐயனார் துணை
>
> >> ஐயா வெங்கடாச்சலம் தோத்தாத்ரி அவர்களுக்கும் மற்றும் மின்தமிழ் அன்பர்கள்
> >> அனைவருக்கும் வணக்கம்
>
> >> ஐயா தோத்தாத்ரி அவர்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன, என்னை
> >> மெய்சிலிரிக்க வைத்தன,
>
> >> கடந்த மாதம் இதே அனுபவம் எங்களது குலதெய்வ வழிபாட்டிலும் நடந்துள்ளது,
>
> >> எங்களது குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ புலிக்கரை ஐயனார் ஆவார்,
>
> >> எத்தனையோ தலைமுறையாக நாங்கள் வழிபட்டு வருகிறோம், ஐயானாருக்கு என கோயில்
> >> இல்லை, கண்மாய்க்கரையில் உள்ள ஆலமரமே குடைபோன்று இருந்தது,
>
> >> கண்மாய்க் கரையில் உள்ள மண் அரித்து *குலசாமியின் தலைவரை மண் மூடியே
> >> இருக்கும், தேவியர்களின் கிரீடம் மட்டுமே வெளியில் தெரியும்.*
> >> எங்களுக்கு விபரம் தெரிந்த நாள் முதல், எங்களது முன்னோர்களுக்கு அவர்களது
> >> முன்னோர்கள் விபரம் கூறியநாள் முதல் இவ்வாறே இருந்து வந்துள்ளது.
>
> >> எங்களது முன்னோர்கள் எங்களிடம் நாங்கள் சிறுவதிலிருந்தே எவ்வளவோ முயற்சி
> >> செய்து பார்த்துவிட்டோம், ஐயனார் கோயில் கட்டுவதற்கு அனுமதி
> >> கொடுக்கவில்லை, அதனால்தான் கோயில் கட்டவில்லை என்று கூறுவர்,
>
> >> இப்போது நாங்களும் எத்தனையோ முறை முயன்றோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை,
>
> >> கடந்த மாதம் எங்களது *முதல்கரை அம்பலம்* என்பவர் வழிபாடு செய்து
> >> அழுதுபுலம்பி வேண்டிக் கேட்டுள்ளார், அப்போது சாமி ஆடிய ஒருவர், "உங்களது
> >> வகையறாக்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து வழிபடுங்கள், அப்போது கூறுகிறேன்"என்று திருவாக்கு அருளியுள்ளார், (ஒவ்வொரு
> >> வகையறாவினரும் அவரவரது தலைமையின் கீழ் தனித்தனியாகத்தான் வழிபாடு செய்து
> >> வந்தனர்,) அதன்படி நாங்கள் மொத்தம் 14 வகையாறாக்கள் (173 குடும்பங்கள்)முதன்முறையாக ஒன்று கூடிகடந்த மாதம் 27-07-2010 வெள்ளிக்கிழமை அன்று ஒன்றுகூடி அதிகாலை 3-00 மணிக்கு
> >> வழிபாடு செய்து சாமியின் உத்தரவிற்காகக் காத்திருந்தோம், மிகச்சரியாக
> >> சூரியனின் கதிர்கள் தெரியும் நேரத்தில், காத்துக் கிடந்தது போதும் என
> >> நினைத்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டி வேளார் (பூசாரி) தீபம்
> >> காட்டினார், அப்போது மிகச் சரியான உத்தரவு கிடைத்தது,
>
> >> எனவே அனைவரும் ஒன்று கூடி இப்போது கோயிலைக் கட்டுவதற்கான முயற்சிகளை
> >> மேற்கொண்டோம், அப்போது சாமியின் அருகே உள்ள ஆல விழுதுகளை யாரும் வெட்ட
> >> முன் வரவில்லை, "முன்பு இதுபோல் நாங்கள் அப்போது எங்களைக் கதம்ப
> >> வண்டுகள் தாக்கி ஊர் எல்லைவரை விரட்சிச் சென்றன, மேலும் எங்களில் ஒருவருக்கு
> >> உயிர் பலியானது, இது போன்ற தடங்கல்கள் முன்பு நிறையவே நடந்துள்ளன. அதனால்
> >> எங்களால் வெட்டமுடியாது" என்று கூறிவிட்டனர், இதைக் கேட்ட எங்களது
> >> பங்காளிகளே முன்வந்து கோயில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திற்குள் உள்ள
> >> மர விழுதுகளை வெட்டினர், பின்னர்தான் வேலையாட்கள் வெட்டி முடித்தனர்,
>
> >> பூமிபூசை செய்வதற்காக JCP இயந்திரத்தைக் கொண்டு பூமியைத் தோண்டிய
> >> போது சுமார் 6அடிக்குக் கீழே மிகப்பழமையான ஆலயச் சுவர் இருந்தது, *மிகவும்
> >> பழமையான மண்பொம்மைகளும் ஓடுகளும் கிடைத்தன, (கல்வெட்டுக்கள் ஏதும்
> >> கிடைக்கவில்லை).* அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து வழிபாட்டிற்காக
> >> வைத்துள்ளோம்,
>
> >> நேற்று
>
> ...
>
> read more »
முஸ்லீம் படையெடுப்பின் போது பல கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகிக்
கொள்ளை அடிக்கப்பட்டன. இந்தச் செய்தி பரவியதும் அந்தந்த ஊர் மக்களும்
தங்களுக்குத் தோன்றிய வகையில் தங்கள் தெய்வ உருவங்களைப் பாதுகாக்க
முயற்சி மேற்கொண்டனர். சிதம்பரம் நடராஜர் சில காலம் புதுக்கோட்டை அருகே
ஒரு புளியமரத்தில் ஒளித்து வைக்கப்பட்டுப் பின்னர்த் திரும்பியதும்,
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் விக்கிரகம் தஞ்சாவூரில் கொண்டு
வைக்கப்பட்டுப் பூசிக்கப்பட்டதும், பாதுகாப்பான சமூக நிலை தோன்றிய
பின்னும் அவ் விக்கிரகம் காஞ்சிபுரம் திரும்பாமல் தஞ்சாவூரிலேயே பங்காரு
காமாட்சி என்ற பெயரில் இன்றும் வழிபடப் பெறுவதும் உ.வே. சாமிநாதையரின்
பயண அனுபவங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மதுரை
அருகே குகையில் பாதுகாக்கப்பட்டது வைணவ வரலாற்றில் இடம் பெறும் செய்தி.
மதுரை தென்காசிப் பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத்தில் வழிபடப்பட்ட ஐயனார்
தான் இன்று சபரி மலை ஐயப்பனாக உயர்ந்துள்ளார் என்று நம்புவதற்கு
இடமுண்டு. பிற மதக் கொள்ளையர்களிடமிருந்து தங்கள் ஐயனாரின் பொன்
விக்கிரகத்தைக் காப்பாற்ற எண்ணிய அம் மக்கள் அதை எடுத்துக் கொண்டு
மேற்குத் தொடர்ச்சி மலையில் யாரும் எளிதில் அணுக முடியாத ஒரிடத்தில்
வைத்து மறைத்தனர். தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் பெரும்பாலான ஐயனார்
கோவில்களில் கருங்கல் அல்லது சுதை விக்கிரகமே வழிபடப்படுகிறது. இந்தக்
குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் பொன்னாலும் விக்கிரகம் செய்திருந்தனர்
போலும். ஐயப்பன் கோவிலில் பெரிய கறுப்பன், சிறிய கருப்பன்,
மாளிகைப்புரத்து அம்மாள் ஆகியோருக்கும் வழிபாட்டு முக்கியத்துவம்
கொடுக்கப்படுவதிலிருந்து அவர்களே இச் சமய வீரச் செயலைச் செய்திருக்க
வேண்டுமென ஊகிக்கலாம்.
விக்கிரகத்தை ஒளித்து வைத்த போதிலும் ஊர் மக்கள் அதற்கு ஆண்டு தோறும்
பொங்கலன்று படையல் வைப்பதை விடாமல் செய்து வந்திருக்க வேண்டும். அந்த
மறைவிடத்திற்கு வழி தெரிந்த மூத்தவர்கள் சிலர் முன்னே செல்ல மற்றவர்கள்
சிறு சிறு குழுக்களாக அவர்களைப் பின் தொடர்ந்திருப்பர். காட்டுப்
பாதையில் வழி தவறாமல் இருப்பதற்காக அவர்கள் பெருங் குரலில் கோஷம்
எழுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம். ஆண்டு தோறும் நடை பெற்ற இந்தக்
கடும் பயணத்துக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்காகத் தான் பல
நாட்கள் முன்னதாகவே தொடங்கி விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கக்
கூடும்.
வழி தவறாமல் இருப்பதற்கு மட்டுமன்றிக் காட்டுப் பாதையில் உள்ள
விலங்குகளை விரட்டவும் இந்தப் பெருங்குரல் கோஷம் அவர்களுக்கு உதவியிருக்க
வேண்டும். பொங்கலன்றுப் படையலளித்துப் பெருங் கூட்டமான மக்கள் அங்கு
தங்கும்போது காட்டு விலங்குகளை நெருங்கவிடாமல் தடுக்கத் தீ
மூட்டியிருப்பர். இந்தத் தீ வேறொரு வகையிலும் அவர்களுக்கு உதவி இருக்கக்
கூடும். நடக்க முடியாமல் மெதுவாக நடந்து பொங்கலன்று பகற் பொழுதுக்குள்
கோவிலை அடைய முடியாத குழுக்களுக்குத் தங்கள் இருப்பிடத்தைக்
காட்டுவதற்காகக் கூட முதலில் சென்றவர்கள் தீயை மூட்டி இருக்கக் கூடும்.
மகர ஜோதியின் பரிணாம வளர்ச்சி இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம்.
வாவர் என்னும் இஸ்லாமியர் ஐயப்பனின் தோழராகக் கருதப்படுவதிலிருந்து
சபரிமலை வழிபாடு முஸ்லீம் வருகைக்குப் பிந்தியது என அறியலாம். ஆரம்ப கால
முஸ்லீம்கள் படையெடுப்பாளர்களாக, கொள்ளையர்களாக வந்த போதிலும் இங்கேயே
தங்கி விட்டவர்கள் பிற்காலத்தில் இந்துக்களோடு இணங்கி வாழத்
தலைப்பட்டனர். அத்தகையோரில் ஒருவரே வாவர்.
சாத்தனும் ஐயப்பனும்
பழந்தமிழ் நாட்டில் சாத்தன் என்ற ஒரு தெய்வம் வணங்கப்பட்டதைப் பண்டைய
இலக்கியங்கள் மூலமாக அறிகிறோம். புத்தருக்குச் சாஸ்திரங்களை அறிந்தவர்
என்ற பொருளில் வழங்கப்பட்ட சாஸ்தா என்ற ஸம்ஸ்கிருதப் பெயரே தமிழில்
சாத்தன் என வழங்கலாயிற்று. சிலப்பதிகாரம் பாசண்ட சாத்தன் பற்றிக்
கூறுகிறது. பாஷண்ட என்ற சொல் வேத வழக்கை மீறி நடப்பவரைக் குறிக்கப்
பயன்படுவது. எனவே இது வேதத்திற்குப் புறம்பான கடவுளான புத்தரையே
குறித்ததை அறிகிறோம். மகாயான புத்த மதம் தமிழ்நாட்டில் பரவிய போது
இங்குப் புத்தருக்குச் சிலைகள் அமைத்து வழிபட்டனர். பௌத்தப் பள்ளிகள்
பொதுவாக ஊரின் வெளிப் புறத்திலேயே அமைந்திருந்ததால் இச்சிலைகளும் ஊர்
எல்லையிலேயே அமைக்கப்பட்டன. தமிழ் நாட்டில் புத்த சமயம் மங்கிய காலத்தில்
இச்சாத்தன் சிலைகள் தொல் பழம் தெய்வமான ஐயனாருடன் ஒன்றுபடுத்தப்பட்டன.
இதனால் சாஸ்தா என்பது ஐயனாருக்கு உரிய பெயர்களில் ஒன்றாக ஆயிற்று.
அவ்வாறே இன்று ஐயப்பனும் சாஸ்தா என்றே அழைக்கப்படுகிறார். புதிதாக
ஏற்பட்ட தெய்வங்களைப் பழைய தெய்வங்களுடன் உறவு முறை மூலம் இணைக்கும்
வழக்கப்படி சாத்தனைச் சிவனாரின் மகனாகக் கருதத் தொடங்கினர். அதனால் தான்
அப்பர் சாத்தனை மகனாக வைத்தார் என்று சிவனைக் குறித்துச் சொல்கிறார்.
சிவன், விஷ்ணு வழிபாடு தோன்றிய பின் அவர்களைப் பற்றிய புராணங்கள்
எழுந்தது போல ஐயப்பன் வழிபாடு தோன்றிய பின்னர் ஐயப்பன் பிறப்பு பற்றிய
கதைகளும் தோன்றி இருக்க வேண்டும். சைவர்களையும் வைணவர்களையும் இணைக்கச்
செய்த முயற்சியும் இக்கதையில் அடங்கியுள்ளது. வழக்கம்போல இதற்கும் வேத
ஒப்புதல் கிடைத்தது. இன்று வேத மந்திரங்களுடன் சபரி மலை ஐயப்பன் பூசை
செய்யப் படுகிறார்.
On Aug 21, 1:16 pm, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
--
On Aug 20, 8:40 am, pathykv <path...@gmail.com> wrote:
> ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரா இருவரா என்பது ஒருபுறம் இருக்க,
> தேவியர் பூர்ணிமை, புஷ்கலை என்போர் .
> ஆரியன்காவு கோவிலில் ஐயப்பன் புஷ்கலா தேவியுடன் இருக்கிறார்.
> ஆண்டுதோறும் திருமண விழா நடைபெறுகிறது.
>
> புஷ்கலா தேவி ஒரு சௌராஷ்டிர பெண். மதுரை பட்டுப்புடவை விற்பனையாளரின்
> மகள். அவர் ஆரியன்காவு காட்டு வழியே மகளுடன் போகும்போது ஐயனார் அவளை
> ஆட்கொண்டு மணந்தார்.
> ஆண்டுதோறும் மதுரை சௌராஷ்டிரர்கள் சீர் வரிசைகளுடன் சென்று
> கேரள மக்கள், அரச குலத்தார் ஆகியோருடன் சேர்ந்து திருமண வைபவம்
> நடத்துகின்றனர். மொழி, இன வேறுபாடுகளின்றி . பெரு விழா நடக்கிறது.
> கி. வெ. பதி.
>
திரு. பதி,
இந்த விழாவுக்குச் சென்று படங்கள் எடுத்து, அறிந்தோர்
பலரிடமும் கலந்தாய்ந்து விரிவான கட்டுரை எழுதுங்களேன்.
இரும்பையும், குதிரையையும் சிந்து துவாரகை (கூர்ச்சுரம்)
தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அறிமுகம்
செய்த மக்களின் சின்னம் ஐயனார். வேளிர் குலதெய்வம்.
பின்னாளில் (உ-ம்: மதுரை நாயக்கர்கள்) குஜராத், மராட்டம், ...
மதுரை, ... வந்து வாழும் சௌராஷ்ட்ர இன மக்கள்
ஐயனாருடன் சம்பந்திகள் என்னும் புராணம் அறிய சந்தோஷம்.
அன்புடன்,
நா. கணேசன்
> On 20 Aug, 14:04, kalairajan krishnan <kalairaja...@gmail.com> wrote:
>
>
>
> > உ
> > பகவன் முதற்றே உலகு
> > புலிக்கரை ஐயனார் துணை
>
> > அய்யனாரா? ஐயனாரா?
>
> > அன்னை பார்வதிதேவியின் புதல்வரானவர் விநாயகப் பெருமான். பரமேசுவரருக்குப்
> > புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் உள்ளனர். பரமேசுவரருக்கும்
> > மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார். இவ்வாறாகத்
> > தெய்வங்களின் தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும் தன்மை ஆகியவற்றை அறிந்த
> > நமது முன்னோர்கள் அவர்களை வணங்கி வழிபட்டுப் பலனடைந்துள்ளனர்.
>
> > கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் கூறியுள்ளார்.
> > ஆனால் ஐயனார் கோயில் இல்லாத கிராமமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.
>
> > காரணகாரியம் கருதி, ஒவ்வொரு ஐயனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.
> > இருப்பினும் பொதுவாக ஐயனாரின் பெயருக்கான காரணம், தோற்றம், உருவம், தேவியர்,
> > பரிவார தெய்வங்கள் அவரது கீர்த்தி மற்றும் அவரை வணங்குவோர் அடையும் பலன்கள்
> > இவற்றைக் காண்போம்.
>
> > *அய்யனாரா? ஐயனாரா?*
> > *"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய
> > மூத்தகுடி"*தமிழ்க்குடியாகும். உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய
> > தமிழர் தாம் பேசும்
> > தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத
> > எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை
> > வளர்த்துள்ளனர்,
>
> > தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும்
> > ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை
> > அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம்
> > ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில்
> > ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. உதாரணமாக "ம*க*
> > ன்" என்று சொல்லுக்கும் "ம*கா*ன்" என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு
> > உண்டு. பக*வ*னுக்கும் பக*வா*னுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வாறாகப் பல
> > உதாரணங்களைக் கூறலாம், எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ
> > அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »
> > > தலைவர் என்று பொருள். அய்யா- Hide quoted text -
Gujarat is one of the pancha DramiDa countries, and Sindhu
has many names from Dravidian substratum. The families from
the south Indus area could have formed the ruling elites
of the entire Sindhu region (Harappa in Punjab)
& then IVC succumbed to weather changes.
Here are two talks in Badri's blogs:
by Asko Parpola and R. Balakrishnan, IAS
http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_18.html
You can download the audio files if you want.
N. Ganesan
> ...
>
> read more »- Hide quoted text -
அன்பின் தம்பி ஆரூரன்,
அருமையான கருத்து. இவ்வழியில் சுந்தரரை
ஐயனாரின் அவதாரமாய்ப் பார்த்துள்ளனர்
என்று நானும் நினைப்பதுண்டு. சம்பந்தரை
சிவனாரின் இன்னொரு மகனான முருக
அவதாராமாய் ஒட்டக்கூத்தர் முதல் சொல்வதும்
ஈண்டு நினைக்கலாம்.
ஐயனார் அண்மைக் காலத்தர் அல்லர்.
ஆர்க்கியாலஜி படி பார்த்தால்
பெருங்கல்கால (மெகாலித்திக் ஏஜ்)
தென்னினிதியா, இலங்கையில் பரவலாகிய
வேளிர் நாகரிகத்தை முதலி்ல் பரப்பியதன்
ஒரு கூறு ஐயனார். பெருங்கோயில்
நாகரிகமும், பக்தி இயக்கமும்
தமிழரிடையே பல்லவரால் பெரிதாகும்போது
பழைய ஐயனார் வழிபாடு சிவபிரானின்
ஒரு மகனாக இயைக்கப்பட்டிருக்கிறார்.
வேளிருக்கு ஒரு குடிப் பெயர்: காரி.
அக்குலத்தில் பிறந்தவருள் ஒருவர் நம்மாழ்வார்.
காரிக் கோவை என்ற அழிந்துபட்ட
தமிழ் நூல் முன்பு இருந்துள்ளது.
கண்ணபிரான் வேளிரை துவரையில்
இருந்து வழிநடத்தி தென்னகம் வந்தார்
என்னும் பழைய மரபுண்டு. துவரைமங்கலம்
கொங்குநாட்டிலே உண்டு. பறம்பு மலைக்
கல்வெட்டில் துவராபதி வேள் இருக்கிறான்.
துவாரசமுத்திரம் கர்னாடகாவில்.
சளுக்கரை (சாளுக்யர்) வேளிர் என்கிறது
நிகண்டு. சளுக்கர் துவரை சென்று மீண்டும்
சோலாங்கி என்ற அரசாளும் வம்சமாய்
வடக்கே வாழ்ந்துள்னர். காரி என்று
அய்யனாரைச் சொல்லுதல் கொடுமணல் (ஈரோடு),
ஆதிச்சனல்லூர், .... என்று குறிப்பிடப்படும்
மெகாலித்திக் நாகரீகத்தின் ஒரு குறியீடு
என்று கருதுகிறேன். குதிரை, இரும்பு இரண்டையும்
தென்னாட்டில் அறிமுகப்படுத்தி காடுவெட்டி
வேளாண்மை பெருக்கிய மெகாலித்திக்
நாகரிகத்தின் குறியீடு ஐயனார்.
அவரை பௌத்தர் கொண்டாடியுள்ளனர்,
சமணர் கொண்டாடியுள்ளனர், சைவர்கள்
தட்சிணாமூர்த்தி ஆக்கினர். பௌத்த
அவலோகிதன் (பொதியில்) - தக்கிணாமூர்த்தி
சிலாமூர்த்தங்கள் பற்றிக் கட்டுரை 10+ வருடம்
முன்பு எழுதியுள்ளேன். அதனை ஸ்ரீ விஜயகுமாரின்
தளத்தில் நீங்கள் காணலாம்.
பின்னர் சமணர், பிராமணர் தமிழருடையதாக்கியது
ஐயனார் வழிபாடே. அவரது கிராம வழிபாடு
பின்னர் பெருங்கோயில், பக்தி இயக்கம்
இவற்றால் ஐயனார் சைவத்துடன் இயைக்கப்பட்டுள்ளார்
---------
ஆரியமகன், ஆர்யபுத்ரன் என்று ஐயனாருக்கு
ஒரு பெயர் உண்டா? யாராவது தெரிந்து சொல்ல
முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால்
‘அரியமான்’ என்று கரூரில் தங்கனாணயம்
கிடைத்துள்ளது. அதனை அதியமான் என்பதன்ெழுத்துபீழை என்று விளக்கம் முனைவர்
ரா. கிருஷ்ணமூர்த்தி
கொடுக்கிறார். அதனைவிட அய்யனாரின்
ஒரு பெயராகக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.
ஆர்யங்காவு என்று சாஸ்தாமலை.
பிராகிருதத்தில் ஆர்ய அன்பது அரியன்/அய்யன் என்றாகும்.
(குறிப்பு: கூர்மம் > கும்மம் ...)
புதுச்சேரியில் அரியாங்குப்பம் ஆர்யன்குப்பமா?
யவனரும், சிங்களரும் இன்னும் பல இனங்களும்
கடல் வணிகத்தால் வந்து வாழ்ந்த இடம் அரிக்கமேடு
எவ்வளவு தூரத்தில்.
சாதகர்ணி/சாதவாகனன் என்பதில் இருந்து சதியன்
என்று குறுகியுள்ளது. ஸதியபுதோ - சதியமான்
தமிழின் அதியமான் என்று சங்க இலக்கியம்
ஔவை விறலியின் நண்பன் அதியமான்.
சம்பைக் கல்வெட்டு காண்க.
பிற பின்,
நா. கணேசன்
On Aug 25, 12:10 am, aruran visu <visuaru...@gmail.com> wrote:
> அன்பிற்குரியீர்,...
>
> read more »
>
> //பழைய தெய்வங்களுடன் உறவு முறை மூலம் இணைக்கும்
> வழக்கப்படி சாத்தனைச் சிவனாரின் மகனாகக் கருதத் தொடங்கினர். அதனால் தான்
> அப்பர் சாத்தனை மகனாக வைத்தார் என்று சிவனைக் குறித்துச் சொல்கிறார்/
>
> சுந்தரரும் சேரமான் பெருமானும் வெள்ளையானை மீதேறி வானுலகம் சென்றதாக ஒரு
> சேக்கிழார் சொல்கிறார். தற்போதைய கேரளத்தில் உள்ள திருக்கோகர்கணம் கோவிலில்
> யானை மீது சுந்தரரும், குதிரை மீது சேரமானும் ஏறி வானுலகம் செல்வதாக சிற்பங்கள்
> இன்றும் உள்ளன. (*நபிகள் நாயகம் தான் அது, அவரோடு இணைந்து மெக்கா
> சென்றுவிட்டார் சேரமான் என்ற கதையைச் சொல்பவர்களும் உண்டு)*
> இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளையானையில் சுந்தரர் செல்ல, ஒரு
> வெள்ளைக் குதிரை மீது ஏறிச் சென்ற சேரமான் இறைவனிடத்தே சேர்கிறார். இதன்
> பின்னர் இறைவனை கண்டு மகிழ்ந்து பாடுகிறார். அப்படி அங்கே இறைவன் முன்னிலையில்
> சேரமான் அரங்கேற்றிய பாடல்களை சாத்தனாரிடம் கொடுத்து பூவுலகில் வெளியிடுமாறு
> அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்..
>
> இதுவே ..*.திருக்கயிலாய ஞான உலா.....*எனப்படுகிறது. இறைவனைன் ஆணையை ஏற்று
> சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல்
> தொகுப்பை எழுதி வெளியிட்டார் என்பது சேக்கிழார் வாக்கு....
>
> எனவே தான் எழுதும் ஏடுகளை கைகளி வைத்திருக்கும் படியான ஒரு உருவச்சிலையும்,
> அவர் இருக்கும் இடங்களிலெல்லாம் வெள்ளைக் குதிரை இருப்பதும் காரணமாக
> இருக்கலாம்.
>
> அந்த சாத்தன் பின்னர் சாஸ்தாவாகியும், சிவனின் மகனாகவும், ஐயப்பனாகவும் திரிபு
> பெற்றிருக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை...
>
> அன்புடன்
> ஆரூரன்
>
> 24 ஆகஸ்ட், 2010 6:34 pm அன்று, விக்ரமன் <ekams...@gmail.com> எழுதியது:
> > கூடும்.- Hide quoted text -
>
> - Show quoted text -
--
--
கட்டுரையை இங்கு இணைத்திருக்கின்றேன். அதோடு விக்ரமன், பதி, ஓம் சுப்ரமணியம் அவர்களது கருத்துக்களும் ட்டவே இணைந்திருக்கின்றன.
அருமையான கருத்து. இவ்வழியில் சுந்தரரை
ஐயனாரின் அவதாரமாய்ப் பார்த்துள்ளனர்
என்று நானும் நினைப்பதுண்டு. சம்பந்தரை
சிவனாரின் இன்னொரு மகனான முருக
அவதாராமாய் ஒட்டக்கூத்தர் முதல் சொல்வதும்
ஈண்டு நினைக்கலாம். ஐயனார் திருக்கைலாய
உலாவை கைலாயத்தில் வாங்கி உலகுக்குக்
கொணர்ந்தவர். சேரர் தம்பிரான் இந்திரன்
போன்ற மன்னர் ஐராவதம் ஊர்கையில்,
ஆடு வெம்பரி ஏறி கைலாயம் சென்ற சுந்தரருக்கு
அவர் திருமணத்தில் ஏடு கொண்டுவந்து
ஆவணம் காட்டியவர் ஈசன்.
ஐயனார் அண்மைக் காலத்தர் அல்லர்.
ஆர்க்கியாலஜி படி பார்த்தால்
பெருங்கல்கால (மெகாலித்திக் ஏஜ்)
தென்னிந்தியா, இலங்கையில் பரவலாகிய
வேளிர் நாகரிகத்தை முதலி்ல் பரப்பியதன்
ஒரு கூறு ஐயனார். பெருங்கோயில்
நாகரிகமும், பக்தி இயக்கமும்
தமிழரிடையே பல்லவரால் பெரிதாகும்போது
பழைய ஐயனார் வழிபாடு சிவபிரானின்
ஒரு மகனாக இயைக்கப்பட்டிருக்கிறார்.
வேளிருக்கு ஒரு குடிப் பெயர்: காரி.
அக்குலத்தில் பிறந்தவருள் ஒருவர் நம்மாழ்வார்.
காரிக் கோவை என்ற அழிந்துபட்ட
தமிழ் நூல் முன்பு இருந்துள்ளது.
கண்ணபிரான் வேளிரை துவரையில்
இருந்து வழிநடத்தி தென்னகம் வந்தார்
என்னும் பழைய மரபுண்டு. துவரைமங்கலம்
கொங்குநாட்டிலே உண்டு. பறம்பு மலைக்
கல்வெட்டில் துவராபதி வேள் இருக்கிறான்.
துவாரசமுத்திரம் கர்னாடகாவில்.
சளுக்கரை (சாளுக்யர்) வேளிர் என்கிறது
நிகண்டு. சளுக்கர் துவரை சென்று மீண்டும்
சோலாங்கி என்ற அரசாளும் வம்சமாய்
வடக்கே வாழ்ந்துள்னர். காரி என்று
அய்யனாரைச் சொல்லுதல் கொடுமணல் (ஈரோடு),
ஆதிச்சநல்லூர், .... என்று குறிப்பிடப்படும்
மெகாலித்திக் நாகரீகத்தின் ஒரு குறியீடு
என்று கருதுகிறேன். குதிரை, இரும்பு இரண்டையும்
தென்னாட்டில் அறிமுகப்படுத்தி காடுவெட்டி
வேளாண்மை பெருக்கிய மெகாலித்திக்
நாகரிகத்தின் குறியீடு ஐயனார்.
அவரை பௌத்தர் கொண்டாடியுள்ளனர்,
சமணர் கொண்டாடியுள்ளனர், சைவர்கள்
தட்சிணாமூர்த்தி ஆக்கினர். பௌத்த
அவலோகிதன் (பொதியில்) - தக்கிணாமூர்த்தி
சிலாமூர்த்தங்கள் பற்றிக் கட்டுரை 10+ வருடம்
முன்பு எழுதியுள்ளேன். அதனை ஸ்ரீ விஜயகுமாரின்
தளத்தில் நீங்கள் காணலாம்.
பின்னர் சமணர், பிராமணர் தமிழருடையதாக்கியது
ஐயனார் வழிபாடே. அவரது கிராம வழிபாடு
பின்னர் பெருங்கோயில், பக்தி இயக்கம்
இவற்றால் ஐயனார் சைவத்துடன் இயைக்கப்பட்டுள்ளார்
---------
ஆரியமகன், ஆர்யபுத்ரன் என்று ஐயனாருக்கு
ஒரு பெயர் உண்டா? யாராவது தெரிந்து சொல்ல
முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால்
‘அரியமான்’ என்று கரூரில் தங்கநாணயம்
கிடைத்துள்ளது. அதனை அதியமான் என்பதன் எழுத்துப்பிழை என்று விளக்கம்
முனைவர்
ரா. கிருஷ்ணமூர்த்தி கொடுக்கிறார்.
எனக்கு அது பொருத்தமாய்ப் படவில்லை.
அதனைவிட அய்யனாரின்
ஒரு பெயராகக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.
ஆர்யங்காவு என்று சாஸ்தாமலை.
பிராகிருதத்தில் ஆர்ய அன்பது அரியன்/அய்யன் என்றாகும்.
(குறிப்பு: கூர்மம் > கும்மம் ...)
புதுச்சேரியில் அரியாங்குப்பம் ஆர்யன்குப்பமா?
யவனரும், சிங்களரும் இன்னும் பல இனங்களும்
கடல் வணிகத்தால் வந்து வாழ்ந்த இடம் அரிக்கமேடு
எவ்வளவு தூரத்தில்.
சாதகர்ணி/சாதவாகனன் என்பதில் இருந்து சதியன்
என்று குறுகியுள்ளது. ஸதியபுதோ - சதியமான்
தமிழின் அதியமான் என்று சங்க இலக்கியம்
ஔவை விறலியின் நண்பன் அதியமான்.
சம்பைக் கல்வெட்டு காண்க.
பிற பின்,
நா. கணேசன்
On Aug 25, 12:10 am, aruran visu <visuaru...@gmail.com> wrote:
> அன்பிற்குரியீர்,...
> read more »
> //பழைய தெய்வங்களுடன் உறவு முறை மூலம் இணைக்கும்
> வழக்கப்படி சாத்தனைச் சிவனாரின் மகனாகக் கருதத் தொடங்கினர். அதனால் தான்
> அப்பர் சாத்தனை மகனாக வைத்தார் என்று சிவனைக் குறித்துச் சொல்கிறார்/
> சுந்தரரும் சேரமான் பெருமானும் வெள்ளையானை மீதேறி வானுலகம் சென்றதாக ஒரு
> சேக்கிழார் சொல்கிறார். தற்போதைய கேரளத்தில் உள்ள திருக்கோகர்கணம் கோவிலில்
> யானை மீது சுந்தரரும், குதிரை மீது சேரமானும் ஏறி வானுலகம் செல்வதாக சிற்பங்கள்
> இன்றும் உள்ளன. (*நபிகள் நாயகம் தான் அது, அவரோடு இணைந்து மெக்கா
> சென்றுவிட்டார் சேரமான் என்ற கதையைச் சொல்பவர்களும் உண்டு)*
> இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளையானையில் சுந்தரர் செல்ல, ஒரு
> வெள்ளைக் குதிரை மீது ஏறிச் சென்ற சேரமான் இறைவனிடத்தே சேர்கிறார். இதன்
> பின்னர் இறைவனை கண்டு மகிழ்ந்து பாடுகிறார். அப்படி அங்கே இறைவன் முன்னிலையில்
> சேரமான் அரங்கேற்றிய பாடல்களை சாத்தனாரிடம் கொடுத்து பூவுலகில் வெளியிடுமாறு
> அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்..
> இதுவே ..*.திருக்கயிலாய ஞான உலா.....*எனப்படுகிறது. இறைவனைன் ஆணையை ஏற்று
> சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல்
> தொகுப்பை எழுதி வெளியிட்டார் என்பது சேக்கிழார் வாக்கு....
> எனவே தான்
...
read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 26, 6:39 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> This research article will be of some helphttp://muse.jhu.edu/journals/future_anterior/v006/6.1.jarzombek.html...
>
Thank you.
I am aware of this article.
Anbudan
NG
> read more »
>
> 2010/8/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > பின்னர் இறைவனை கண்டு மகிழ்ந்து- Hide quoted text -
--
பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது அசுரர்களுக்கு அமுதம் கிடைக்காமலிருக்க மோகினி வேடம் தரித்து வந்த மகாவிஷ்ணுவுடன் கூடி சாத்தனை இறைவன் பெற்றதாக கந்த புராணம் கூறுகிறது. தாருகாவனத்தில் பிச்சாடனாராக இருந்தபோது பிறந்ததாக ஏதும் பாடல்கள் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. விவரங்கள் இருப்பின் தந்தால் நானும் அறிந்து கொள்வேன்.
2010/9/3 kalairajan krishnan <kalair...@gmail.com>:
இப்படி அல்லவா உசாத்துணை குறிப்பிடவேண்டும். நன்றி, திரு.காளைராஜன்.
இன்னம்பூரான்
--
சேக்கிழார் தான் முதன்முதலில் ஐயனார் பற்றி கூறியிருப்பதை முன்னமே தெரிவித்திருக்கின்றேன்.
கந்தபுராணம் கூட பிற்கால இலக்கியந்தான். ஸ்காந்தத்தில் என்ன இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் எழுதினால் அனைவருக்கும் பயனாயிருக்கும்
வணக்கம் .
வேறொரு இலையில் சகோதரி சுபா அவர்கள் கேட்டிருந்த ஐயத்திற்கு இந்தப்பதிவு விடையாக அமையும் .
உ
பகவன் முதற்றே உலகுபுலிக்கரை ஐயனார் துணை
அய்யனாரா? ஐயனாரா?
அன்னை பார்வதிதேவியின் புதல்வரானவர் விநாயகப் பெருமான். பரமேசுவரருக்குப் புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் உள்ளனர். பரமேசுவரருக்கும் மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார். இவ்வாறாகத் தெய்வங்களின் தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும் தன்மை ஆகியவற்றை அறிந்த நமது முன்னோர்கள் அவர்களை வணங்கி வழிபட்டுப் பலனடைந்துள்ளனர்.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் கூறியுள்ளார். ஆனால் ஐயனார் கோயில் இல்லாத கிராமமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.காரணகாரியம் கருதி, ஒவ்வொரு ஐயனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இருப்பினும் பொதுவாக ஐயனாரின் பெயருக்கான காரணம், தோற்றம், உருவம், தேவியர், பரிவார தெய்வங்கள் அவரது கீர்த்தி மற்றும் அவரை வணங்குவோர் அடையும் பலன்கள் இவற்றைக் காண்போம்.
அய்யனாரா? ஐயனாரா?
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" தமிழ்க்குடியாகும். உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர் தாம் பேசும் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்,தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. உதாரணமாக "மகன்" என்று சொல்லுக்கும் "மகான்" என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம், எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்.
"சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம் தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்.ஐயனார் என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத் தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ள தாகும். "ய்" என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.
ஐ நெடில் = 2 அளவு
அ குறில் = 1 அளவு
ய் ஒற்று = ½ அளவு
அய் = 1+½ = 1 ½ அளவு
"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. எனவே நாம் வணங்கும் தெய்வத்தின் பெயரை நாமே குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். எனவே "ஐயனார்" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். இதேபோல் "ஐயா" என்றுதான் எழுதவேண்டும். "அய்யா" என்று எழுதக்கூடாது. "ஐயா" என்றால் தலைவர் என்று பொருள். அய்யா என்றால் பொருள் ஏதும் இல்லை.ஐயனை அறிந்து கொள்வோம்
தோற்றம்
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர்.
பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார்.அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.
ஐயனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.
வடிவம்
ஐயனார் சர்வேசுவரனைப் போன்ற தோற்றம் உடையவராய் இருப்பார்.கிழக்குத்திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணு}ல் அணிந்திருப்பார்.இளைஞரைப்போன்றவர்.விரிந்து பரந்த முகத்தையும் மார்பையும் உடையவர்.தங்கநிறம் அல்லது சிவப்பு நிறமானவர்.கீரீடம் அணிந்திருப்பார்.கருத்த அடர்த்தியான சுருண்ட முடியை உடையவர்.வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார்,மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார்.சந்தனம் பூசியிருப்பார்.பீடத்தின் மீது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்.வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார்.இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார்,இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார்.
கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார்.ஐயனார் நிற்கும் கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.
சாந்த குணமுடையவர். நாய், கோழி, யானை, குதிரை இவற்றுடன் விளையாடும் குணம் உடையவர். பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் பாடிக்கொண்டிருப்பவர். யானை வாகனம் உடையவர். யானைக்கொடிமரத்தை உடையவர். வெள்ளைக்குதிரையை உடையவர்.தேவியர் இருவர்
சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.பாலசாஸ்தா ஐயனார் மிகவும் துடுக்கானவராகவும் துடியானவராகவும் விளங்குகின்றார்.
பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.
இவர்களது தலையானது ஐயனாரின் தோள்ப்பட்டை உயரத்தில் இருக்கும். ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
புஷ்கலை என்றால் பூவைப்போன்ற பண்புடையவள் என்று பொருள். பூ என்று பொதுவில் சொன்னால் அது தாமரையைக் குறிக்கும். எனவே புஷ்கலை என்றால் தாமரை மலரைப்போன்றவள். மலர்ந்த முகமுடையவள், பரந்த எண்ணமுடையவள், மணம் நிறைந்தவள். தங்க நிறமானவள்.
பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.பாரிவார தெய்வங்கள்
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஈசானியன் ஆகிய எட்டு திசைதெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
ஐயனாhpன் பாpவார தெய்வங்களாக கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,
காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த(ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.உணவு
ஐயனார் சுத்தசைவமாகும். சர்க்கரைப்பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.கோயில்
ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் மடை அல்லது களுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும்.கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே சுப்பிரமணியரும் உள்ளனர்.
மடப்புரம் காளியம்மன்ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றhக இரண்டு பொpய குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள் களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.கோயில் பூசாரி
பூணு}ல் அணிந்தும் அசைவம்(மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாhpகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.
திருவிழாக்கள்
சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
தைப்பொங்கலை அடுத்து வரும் மஸ்ரீ;சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளைமாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.
புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.பிரசாதம்
சிவன்கோயிலில் விபூதியும், அம்மன்கோயிலில் குங்குமமும், விஷ்ணு கோயிலில் துளசித் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படும். ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமானநீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.காவலுக்குக் கருப்பர்
ஐயனாhpன் பரிவார தெய்வங்களில் ஒன்றhன கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.அகிலமே வணங்கும் ஐயனார்
ஐயனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து சமூகத்தினரும் சாதிவேறுபாடு இல்லாமல் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். இவ்வுலகம் முழுமையும் இவரது தலைமைக்குக் கட்டுப்பட்டே நடக்கிறது.வழிபடுவதால் பயன்
ஐயனாரை வழிபடுபவர்கள், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதற்கு உதாரணமாய் இருப்பர். பிறருடன் உறவுமுறை கொண்டு பழகுவர். பிறரிடம் கேலி கிண்டல் பேசி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வர்.
ஐயனாரை வழிபடுவதால், பில்லி சூனியம் விலகும், நல்லபுத்தி கிடைக்கும். எதையும் ஆராய்ந்தறிந்து செய்வர். தவறு செய்தவர்களிடமும் அன்பாக இருப்பர். நல்ல தீர்ப்பு வழங்குவர். வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் நிறைந்திருக்கும். தண்ணீரும் விவசாயமும் பெருகும். தானியம் சேரும். நற் சுகத்தை அடைவர்.ஐயனாரும் ஐயப்பனும்
சிவபெருமானுக்கும் மோகினி(பெண்வடிவில் இருந்த மகாவிஷ்ணு)க்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர். இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும். ஆனால் தம்பதிசமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்.
ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர்.
ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால்,ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர்.
ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பாpவார தெய்வங்களுடனும் ஆட்சி செய்பவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.
ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
இதனால் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பது விளங்கும்.
ஐயனாரை வணங்கி வழிபட்டு வாழ்பவர்களின் வாழ்க்கையானது பிறருக்குத் துன்பமில்லாமல் மகிழ்ச்சி யைக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வோளண்மை செய்தல் பொருட்டு (குறள் -81)
என்ற குறளுக்கு இலக்கணமாக அனைத்து நலன்களையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் என்பது உறுதி.ஐயனாரை வணங்குவோம்
அனைத்து நலன்களையும் பெறுவோம்
*****முனைவர் கி, காளைராசன்
உதவிப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
தமிழ்நாடு, India.
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003