வேங்கடேஷ் ஐயா,
//அவர்க்கு தமிழில் ப்ரவேச்ம் இல்லை என்ற சிலர் வாதம் அடிபட்டுப் போகின்றது//
இந்தப் பகுதி புரியவில்லை.
இந்தப் பகுதி புரியவில்லை.>
எனது அமெரிக்க நண்பன் சொல்லுவான். நமக்கு தனியாக பகைத்துக்கொள்ள
வேண்டியது இல்லை. நாம் பிரபலமாகிவிட்டால் பகைவர்கள் தானாக உருவாவர்
என்று. ராஜராஜன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஒரு சந்நியாசியை
யாராவது 'யதி ராஜன்' என்று சொல்லக்கேள்விப்படிருக்கிறோமா? அது
எம்பெருமானார் கீர்த்தி.
க.>
ஒரு சின்ன விஷயம்: திருவாய்மொழி என்ற பெயர் இராமானுசர் காலத்திற்கு
முன்னமே வழங்கி வந்தது என்பது தெளிவு: ஸ்ரீமன் நாதமுனி அவர்கள் தம்
தனியனில் குறிப்பிடும் சொற்றொடர் 'ஸ்ரீ சடகோப வாங்மயம்' என்பது
சந்தேகமில்லாமல் சடகோபர் திருவாய்மொழி என்பதின் வடமொழியாக்கம் என்று
சொல்லலாம்.
இந்தத் தனியனில் கையாளப்பட்ட ஏறக்குறைய எல்லா சொற்றொடர்களும் ஆழ்வார்
தாமே தம் பிரபந்தத்தில் திருவாய்மலர்ந்தருளியது தான்.
1. பக்தாம்ருதம் - 'தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன்
(திருவாய்மொழி 9.4.9)
2. விச்வஜநாநுமோதநம் - 'எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்கும்' (7.9.11)
மற்றும் 'அடியார்க்கு இன்ப மாரியே' (4.5.10). அநுமோதநம் என்றால் இன்பம்.
anumodana n. pleasing , causing pleasure , applauding ; assent ,
acceptance ; sympathetic joy.
3. சர்வார்த்ததம் - 'மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடி
என் நெஞ்சுள் நிறுத்தினான்' (கண்ணி நுண் சிறுத்தாம்பு)
4. ஸ்ரீசடகோப வாங்மயம் - மேற்படி
5. ஸஹஸ்ர சாகோபனிஷத்சமாகமம் - 'சந்தங்கள் ஆயிரத்து' (10.9.11). சந்தம்
என்றால் வேதம்.
chandas n. the sacred text of the Vedic hymns
சாமவேதத்திற்கு 1000 கிளைகள் (சாகா - கிளை) உண்டென மரபு. திருவாய்மொழி
இசைப்பா என்றதால் சாமவேதத்தைச் சொல்லி சாமவேதமும் உபநிஷத்தும் கூடி வந்த
தமிழ் வேதக்கடல் என்றும் சாமவேதமும் உபநிஷத்தும் கூடிய ஆகமம் என்றும்
பொருள் காணலாம். ஆகமம் என்ற சொல்லினால் ஆகமம் சார்ந்த கோயிலில் ஓதவல்லது
என்று பறைசாற்றுகிறார்.
Agama mf(%{A})n. coming near , approaching AV. vi , 81 , 2 ; xix ,
35 , 3 ; m. (ifc. f. %{A}) arrival , coming , approach R. &c. ; origin
Mn. viii , 401 R. &c. ; appearance or reappearance MBh. ii , 547 ;
course (of a fluid) , issue (e.g. of blood) Mn. viii , 252 Sus3r. ;
income , lawful acquisition (of property , %{artha} , %{dhana} , %
{vitta} , %{draviNa}) Mn. MBh. &c. ; reading , studying Pat. ;
acquisition of knowledge , science MBh. Ya1jn5. &c. ; a traditional
doctrine or precept , collection of such doctrines , sacred work ,
Bra1hmana Mn. xii , 105 MBh. &c. ; anything handed down and fixed by
tradition (as the reading of a text or a record , title-deed , &c.)
6. த்ராவிடவேதஸாகரம் - தமிழ்வேதக்கடல்
என்று இவ்வாறு தமிழ் சொல்லை வடமொழியாக்கி தமிழ்புலவரை வணங்குகிறார்
ஸ்ரீமன் நாதமுனி.
LNS
On Feb 22, 3:44 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> திருவாய்மொழி என்று பெயரிட்டதைப் பார்த்தேலே அவருக்கு தமிழிலே பரிச்சியம்
> உண்டு என்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமோ
>
> வையகமெண் பொய்கைபூ தம்பே யாழ்வார்
> மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுர கவிகள்
> பொய்யில்புகழ்க் கோழியர் கோன்விட்டு சித்தன்
> பூங்கோதை தொண்டரடிப் பொடி பாணாழ்வார்
> ஐய்யனருட் கலியனெதிராஜர் தம்மோ
> டாறிருவர் ஓரொருவர் அவர்தாஞ் செய்த
> துய்ய தமிழிருபத்து நான்கிற் பாட்டின்
> தொகை நாலாயிரமுமடி யோங்கள் வாழ்கவே
>
> என்று ப்ரபந்த சாரம் பேசுகிறது
>
> 2009/2/22 Narayanan Kannan <nkan...@gmail.com>
>
>
>
> > 2009/2/22 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>:
> > > திருவாய்மொழிக்கு இதத்தாய் இராமானுஜர். திருப்பாவை ஜீயர் இராமானுஜர். இப்படி
> > > இன்னும் நிறைய சொல்லலாம். அப்படி இருக்க அவருக்குத் தமிழில் பரிச்சயமோ
> > ஈடுபாடோ
> > > இல்லை என்று சொல்பவர்கள் புரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
>
> > > 2009/2/21 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor_venkat...@yahoo.com>
>
> > >> ப்ரவேசம் என்றால் பரிச்சயம் என்று சொல்லலாம். அதாவது இராமனுசர் தமிழில்
> > >> எதுவும் இயற்றாததால் அவர் தமிழின் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லை
> > >> என்பது சிலர் கருத்து. இக்கருத்துடையோர் பலர் இருக்கின்றனர்.
>
> > எனது அமெரிக்க நண்பன் சொல்லுவான். நமக்கு தனியாக பகைத்துக்கொள்ள
> > வேண்டியது இல்லை. நாம் பிரபலமாகிவிட்டால் பகைவர்கள் தானாக உருவாவர்
> > என்று. ராஜராஜன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் ஒரு சந்நியாசியை
> > யாராவது 'யதி ராஜன்' என்று சொல்லக்கேள்விப்படிருக்கிறோமா? அது
> > எம்பெருமானார் கீர்த்தி.
>
> > க.>
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ
> peopleofindia....@gmail.comhttp://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com
LNS சார் காட்டியபடி, தமிழுக்கும், வடமொழிக்கும் நடந்த கொடுக்கல் வாங்கல்
அக்கா, தம்பிக்குள் நடக்கும் பரிமாற்றம் போல் மிகவும் அந்நியோந்நியமாக
இருந்திருக்கிறது!
ஸ்ரீபாஷ்யம் வாசித்தால்தான் புரியும் எம்பெருமானார் எவ்வளவு
தமிழ்ப்பாக்களை வடமொழி வடிவில் எடுத்தாண்டுள்ளார் என்று! நம்மவர் அதையும்
எழுதி வைத்திருப்பர்!
க.>
2009/2/23 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor...@yahoo.com>:
" ஆகையால் ஆகத்தியமும் அநாதி"
’பரமனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே’
என்னும் வரி பரம வ்யோமத்தில் ஸாம கானத்தோடு
திருப்பல்லாண்டும் இசைக்கப் படுவதைத் தெரிவிக்கிறது.
தேவ்