மன்னர் கால புலவர்களை ஞாபகப்படுத்தும் வகையில்
அருள்சத்தியநாதன்
சுமார் 350 கோடி ரூபா செலவில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதை தமிழர்கள் பொதுவான அடிப்படையில் வரவேற்றிருக்கின்ற போதிலும் இதைக் கடுமையாக விமர்சித்தவர்களும் இல்லாமலில்லை. நமது பேராசிரியர் கா. சிவத்தம்பியும் இவ்விமர்சனத்தில் இருந்து தப்ப வில்லை. ‘தீரா நதி’யில் அ. மார்க்ஸ் எழுதும் போது, இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்தபோது இடைக்கால அரசு ஒன்றை வடக்கில் அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட தாகவும் அதற்கு சிவத்தம்பியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாகவும் அதே சமயம் அவரை வெளி நாட்டுத் தூதுவராக அரசு நியமிக்க முன்வந்தபோது பேராசிரியர் அதை ஏற்கவில்லை என்றும் எழுதுகிறார். செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பிக்கு அளிக்கப்பட்ட இடம் குறித்து எழுதும் போது அவரைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.
கலைஞர் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரும் குற்றச் சாட்டு அவர் குடும்ப மாநாடு நடத்துகிறார் என்பதா கும். மாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக் கப்பட்டதற்கு ‘அரச குடும்பத்தின் மீதும் மாநாடு குறித்தும் விமர்சனங்கள் எதுவும் பதிவாகிவிடக் கூடாது என்பதில் ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்துள் ளார்கள்’ என்று காரணம் காட்டுகிறார் அ. மார்க்ஸ்.
கலைஞர் குடும்பம் மிகப் பெரியதுதான். இராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோர் தத்தமது குடும்பத்தை அரசியலில் புகுத்தாத கொள்கையை கொண்டிருந்தனர். பின்னர் பதவிக்கு வந்த காமராஜர் ஒரு பிரம்மச்சாரி. அண்ணாதுரைக்கு குழந்தைகள் கிடையாது. அப்படியே இருந்திருந்தாலும் அவர் அவர்களைத் தனது வாரிசாக அங்கீகரித்திருக்கமாட்டார். அவரிடம் அப்படி ஒரு நேர்மையும் நாணயமும் இருந்தது. எம். ஜி. ஆருக்கும் வாரிசு அரசியல் நடத்த வாரிசுகள் இருக்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது. இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் அரசியலைத் தமது தொழிலாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆக தமிழக முதலமைச்சர் வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஓமத்தூர் ரெட்டியாரில் இருந்து கலைஞர் வரையில் பெருங் குடும்பத்துக்காரராக விளங்குபவர் கலைஞர் மட்டுமே. இந்தக் கலைஞர் காலத்தில்தான் தமிழக அரசியல், தியாகம் - சேவை என்ற இடத்தில் இருந்து நழுவி பணம் கொழிக்கும் வியாபாரமாக உருமாறியது. தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான் என்ற புதுமொழி - அரசியலில் ஊழலையும் மோசடியையும் நியாயப்படுத்தும் துணிச்சல் - இக்காலத்தில் தான் உரம் பெற்றது.
தமிழக அரசியலில் மட்டுமின்றி அரசியலுக்கு மிக நெருக்கமான ஊடகத்துறையிலும் கலைஞர் குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கலைஞரின் மகன்களான ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோருடன் மாறன் மகன் தயாநிதி மாறன் ஆகியோர் அரசியலில் ஆதிக்கம் செலுத்திவர, கலாநிதி மாறன் இந்தியாவின் மிகப் பெரும் தொலைக்காட்சி வலையமைப்பை நடத்தி வருகிறார். அவர் திரைப்படங்களை வாங்கி திரையிட்டு வருவதோடு 150 கோடி ரூபா முதலீட்டில் எந்திரன் படத்தையும் தயாரித்துள்ளார். இன்று தமிழ்த் திரையுலகில் அவர் பெரும் புள்ளி. கலைஞர் காலில் எப்படிப் பிரபலங்கள் விழுந்து புரள்கின்றனரோ அதே அளவுக்கு தமிழ்த் திரையுலக பிரமுகர்களும் கலாநிதி மாறன் காலில் விழுந்து புரள்வதை கோலாலம்பூர் எந்திரன் இசைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் காணமுடிந்தமை, இங்கே குறிப்பிடத்தக்கது. கலாநிதி விரைவிலேயே தமிழ்ப் படங்களுக்கான ஐரோப்பிய, மலேசிய, சிங்கப்பூர் உரிமைகளை வென்றெடுத்து தனதாக்கிக் கொள்வார் என்று சென்னை வர்த்தக வட்டாரங்களில் உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தற்போது ஏகபோகம் செலுத்திவரும் ஐங்கரன் தன் செல்வாக்கை இழந்து விடலாம் என்றும் ஆரூடம் கூறப்படுகிறது.
கலாநிதிக்கென ஒரு எப். எம். ரேடியோ நிலையம் உள்ளது. ‘சன் டிரெக்ட்’ என்ற செய்மதித் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. தினத்தந்தி நாளிதழுடன் மோதும் அளவுக்கு விற்பனையும் செல்வாக்கும் கொண்ட தினகரன் நாளிதழ், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்கள் அவருக்குச் சொந்தம். திரைப்படம், அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி என அனைத்திலும் ஆதிக்கம் கொண்டிருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்திலும் ஈடுபடப் போகிறார். ‘சன் எயார்’ விமானங்கள் விரைவிலேயே வானில் உதயசூரியனை ஞாபகப்படுத்திக் கொண்டு பறக்கப் போகின்றன.
இத்தகைய அசுர அரசியல், வர்த்தக வளர்ச்சிக்கு கால் கோள் நாட்டியவர், ஒரு சாதாரண இசைவேளாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பெரியார். அண்ணா வழிவந்த கலைஞர் கருணாநிதி தான். இதானல்தான் கலைஞருடன் சில வருடங்களுக்கு முன்னர் மோதிப் பார்த்த மாறன் குடும்பத்தார் தாம் தவறு செய்துவிட்டதாக உணர்ந்து கலைஞரிடமே வந்து கலந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்வலத்தைப் பார்வையிட வந்த கலைஞர் குடும்பம். நின்று கொண்டிருப்பவர் (வட்டம்) இலக்கியவாதி வ. சேதுராமன் |
செம்மொழி மாநாட்டில் தமிழர் தம் வீர பாரம்பரியம் பற்றி பேசப்பட்டது. அதை ஊர்வலத் திலும் கட்சிப்படுத்தினார்கள். முறத்தால் புலியை அடித்து விரட்டும், கணவன் போரில் வீழ்ந்ததும் தன் மகனை உச்சி மோந்து களம் அனுப்பும், மகன் வீர சொர்க்கம் அடைந்ததைக் கேள்விப்பட்டதும் அவள் மாண்டது முதுகில் பட்ட காயத்திலா அல்லது நெஞ்சில் பட்ட காயத்திலா என்பதை ருசுப்படுத்திக் கொள்ள முயலும் வீரம் செறிந்த புற நானூற்றுத் தாய்மார்களைப் பற்றி எல்லாம் நாம் நிறையவே கேள்விப்பட்டு விட்டோம்.
இது ஒரு பக்கமென்றால் மறுபுறத்தில் அரசர்களை துதிபாடி பொருள் பெற்றுச் செல்லும் தமிழ்ப் புலவர்களைச் சாரி சாரியாகப் பார்க்கிறோம், இதே தமிழ் இலக்கிய ஏடுகளில், விவேகானந்தர் மகாத்மா காந்திக்குப் பின்னரும் கூட, வீரம் என்பதன் பொருள் தமிழர் மத்தியில் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகின்றது. வீரத்துக்குள் இராஜதந்திரமும் அடக்கம் என்பதை புரிந்து கொள்ளாததால் இலங்கையில் நிகழ்ந்த மிகப் பெரும் மனித அவலத்தையும் நாம் பார்த்து விட்டோம்.
தமிழர்கள் இனியாவது தமது போலியான மதம், கலாசாரம், பாரம்பரியம் என்பன தொடர்பான நம்பிக்கைகளைக் கைவிட்டுவிட வேண்டும் என்பதற்காக உண்மையாகவே போராடியவர் இ. வெ. ரா. ஆனால் கலைஞர் காலில் விழும் கலாசாரத்தில் இருந்து எல்லாவற்றையும் மீண்டும் வளர்த்தார். கலைஞர் மாத்திரமின்றி வை. கோ., பழ. நெடுமாறன், விடுதலைப் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சீமான் ஆகியோரின் உரைகளைக் கேட்கும் போது சங்க காலத்தைக் கடந்து அவர்கள் இன்னும் வரவில்லை, அங்கே இருந்து கொக்கரிப்பதுதான் தமிழர்களை வலுப்படுத்த உதவும் என்பதை வியாபார ரீதியாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகவே காணமுடிகிறது.
சங்க காலத்தின் இரந்து வாழும் புலவர்களை எடுத்துக் கொண்டாலும் அது இன்றும் தொடர்கிறது என்பதையும் இந்த பாரம்பரியத்தில் இருந்து கவிப்பேரரசு வைரமுத்துவோ, கவிக்கோவோ விதிவிலக்கு அல்ல என்பதையும் உன்னிப்பாகக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இதே பழந்தமிழ் இலக்கியத்தில் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. சிலப்பதிகாரத்தில் கோவலன் - கண்ணகிக்கு அடைக்கலம் தருகிறாள் ஆயர்குலப் பெண் மாதரி, கோவலன் கொலையுண்டதும் தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனைக் காப்பாற்ற முடியாமல் போனதே என மனம் பதைக்கிறாள் மாதரி. ‘அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்கள்’ எனக் கதறி உயிர் துறக்கிறான். மற்றொரு இடத்தில் குலோத்துங்க சோழனின் அதிகாரத்துக்கு அடிபணிய மறுக்கிறான் கம்பன், ‘உன்னை நம்பியா தமிழை ஓதினேன்?’ எனக் குரல் எழுப்புகிறான் கம்பன். ஆனால் இவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டால் துட்டு கிடைக்குமா என்ன? எனவே இந்த அரசியல்வாதிகளும் அடிவருடிகளும் இந்த விதிவிலக்குகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தயாரில்லை.
எனவே இரந்து பிழைப்போர் கூட்டம் செம்மொழி மாநாட்டில் அடித்துப் புரண்டதில் ஆச்சரியம் இல்லை. முதல் நாள் பொது மாநாட்டில் சமுகமளித்திருந்த கரைவேட்டிகள் ஆடு மாடுகளைப் போல அங்குமிங்குமாகத் திரிந்து சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். பலர் அணிந்திருந்த ஷர்ட்டுகளில் முன்பக்கமாக கலைஞர் படமும் முதுகு பக்கமாக ஸ்டாலின் படமும் காணப்பட்டன. எனவே பொலிஸாரும் வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டனர். இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களுக்கு மேடையில் என்ன நடக்கிறது. என்ன பேசுகிறார்கள் என்பதை எலக்ட்ரானிக் திரைகள் மூலமாகவும் பார்த்துத் தெரிவித்து கொள்ள கரை வேட்டிகள் கூட்டம் விடவில்லை.
மேடையில், கருத்தரங்குகளில் ஆய்வரங்குகளில் பேசியவர்களில் பெரும் பாலானோர் கலைஞரே நாணும் அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்கள். ஒரு முறை தன்னைப் புகழ வேண்டாம் என இடைமறித்து சொல்லும் அளவுக்கு புகழ்ச்சி விண்ணைத் தொட்டபோது செம்மொழிக்கு சொந்தக்காரர்கள் என்ற மிதப்பில் இருந்தவர்களுக்கு இந்தக் கேடு கட்டத்தனம் கூடவே வருகிறதே என்ற கவலையும் எழத்தான் செய்தது. அதிகாரத்துக்கு எதிரான தம் அழிவுத் தகுதியை நிறுவ வேண்டிய தருணம் வாய்ந்திருக்கும் போது அதிகாரத்துக்கு அடிபணியும், அடியொற்றிப் போகும் இந்த இழிநிலையை ஒருவர் வர்ணிக்கிறார் இப்படி:
‘கும்பிடுகின்ற என் கைகள் ஒரே கைகள்தான்
கால்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன’
இது, அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கும் ஒரு கவிஞர் பற்றிய பார்வை:
‘மற்றவர்களை விமர்சிக்கையில்
அவருடைய நாக்கில் வாளிருந்தது
கலைஞர் கருணாநிதிக்கு அவருடைய
நாக்கில் மயில் தோகை இருந்தது’
கலைஞரைப் புகழ்ந்தவர்கள் ஸ்டாலினைப் புகழ்ந்தார்கள். கனிமொழியைப் புகழ்ந்தார்கள். செம்மொழி வளாகத்தில் கலைஞர் படம். கோவை எங்கும் கலைஞர், ஸ்டாலின், கனிமொழி படங்கள். மேடைகளின் முன்வரிசை இருக்கைகளில் அரச குடும்பத்துப் பெண்கள்... இனி விமர்சகர்கள் குடும்ப மாநாடு எனச் சொல்லாமல் இருப்பார்களா?
மூன்றாம் தினம் மாலை பிரதான மாநாட்டில் ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்தது. தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பை வெள்ளித் திரைக்கே சின்னத் திரைக்கே, அச்சுத் துறைக்கே என்பது கொடுக்கப்பட்டிருந்த சிறுபிள்ளைத்தனமான தலைப்பு. லியோனி, நக்கீரன் கோபல், பாரதிராஜா, எஸ். வி. சேகர், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். சாலமன் பாப்பையாதான் நடுவர். பேச வந்தவர்கள் தமது இருபது நிமிடங்களில் 15 நிமிடங்களை கூச்ச நாச்சம் பாராமல் கலைஞரைப் புகழ்வதிலேயே காலம் கடத்தினார்கள். திருப்பூர் கிருஷ்ணன் மாத்திரமே தமது வாதத்தை செம்மொழியில் முன்வைத்தார். இந்தப் பட்டி மன்றம் முதலில் எதிர்பார்ப்பையும் பின்னர் எரிச்சலையும் ஏற்படுத்தியது. முக்கால்வாசியில் ஏராளமானோர் பந்தலைவிட்டு எழும்பிச் செல்லத் தொடங்கினார்கள். இதைக் கவனித்த சொலமன் பாப்பையா பார்வையாளர்கள் எழுந்து செல்வதை குறிப்பிட்டுச் சொல்லவும் செய்தார்.
அரச குடும்பத்து கால்களில் பிரபலங்கள் கூச்சமில்லாமல் விழுந்து புரண்டு தமது ‘பாரம்பரிய’த்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது தமிழனின் உண்மையான வீரத்தையும், எழுச்சியையும், தொன்மையையும் சிலர் வெளிப்படுத்தி மானம் காத்தார்கள். செம்மொழியும் பெருமை பெற்றது. ஆனால் அவர்களில் எவருமே தமிழர்களாக இருக்கவில்லை. அங்கோ பர்போலா, அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி, ஜோர்ஜ் ஹார்ட் .....
(தொடரும்)
நன்றி: தினகரன் வாரமஞ்சரி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஸ்ரீதரன், இதிலொன்று கவனித்தீர்களா? செம்மொழி மாநாட்டிற்கு விமர்சனம்
வைப்பவர்களும் பொதுபந்தல் மாநாட்டை வைத்தே விமர்சிக்கின்றனர். அவர்களது
விமர்சனத்திற்கும் ஆதாரமாக கழகக்குடும்பம் நடத்தும் ஊடகமே அமைகிறது. இது
ஒருவகையில் அவர்களின் வெற்றி. இந்த விமர்சகர் உண்மையான தமிழாய்வு பற்றி
வெளிநாட்டார் மட்டுமே பேசினார்கள் என்று சொல்வது பொதுபந்தல் மாநாடு
(முதல் நாள் நிகழ்ச்சி). ஆயின் யாருமே உண்மையான செம்மொழி மாநாடு பற்றி
இதுவரை பேசவில்லை. திவாகர் சொல்வது போல் தமிழனின் சிந்தனைப் போக்கை
ஊடகங்கள் எப்படி வழி நடத்துகின்றன என்பதற்கு விமர்சன ரீதியான
இத்தாக்குதல் கூட துணை போவது யாருடைய வெற்றி? ;-)
எல்லா வெளிநாட்டு ஆய்வாளர்களும் தமிழ்ப் பெரியவர்கள் தலைமையேற்று நடத்திய
அமர்வுகளில்தான் கட்டுரை வாசித்தனர். அஸ்கோ பர்ப்போலா அமர்விற்குத் தலைமை
திரு.ஐராவதம் மகாதேவன்.
உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு பட்டமளிக்கக் காத்திருக்கிறார்கள். எனவே
ஊடகக்காட்சியே உண்மை!! நூற்றுக்கு நூறு உண்மை :-))
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆனால் ஊடகத்தால் முடியாதது இல்லை என சாதித்துக் காட்டிவிட்டார்கள் என்பது என்னவோ உண்மைதான்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/8/22 Sri Sritharan <ksth...@hotmail.com>
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
You have reacted to only one sentence. what about the rest? periyaar,
kalaingnar and even anna.?
நாகராஜன் இந்த சர்ச்சையில் ஒரு புதிய வேண்டாத விஷ்யத்தைப்
புகுத்துகிறார். கம்யூனிட்டி என்ற பார்வை இந்த சர்ச்சையில் எங்கிருந்து
வந்தது? இது தான் டிபிகல் தமிழ் அரசியல் எதிர்வினை. இந்த் பார்வையே
எனக்கு நாகராஜனைப் பற்றி நிறைய சொல்கின்றது. இவரோடும் இவர போன்றவரோடும்
வாதிடுவது வியர்த்தமான காரியம்.
இந்த பார்வையை வளர்த்துக்கொண்டிருப்பவர் (அறுபது வருட்ங்களுக்கும் மேலாக)
பெரியாரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார். இதை யார் நம்புவது?
சங்கடமான விஷயங்கள் எதிர்ப்படும்போது, ”அது பற்றி எனக்குத் தெரியாது”
என்று சொல்வது
ந்ழுவுகிற சமாசாரம்.
நாகராஜன் குறிப்பாக ஹைலைட் செய்து காட்டியிருக்கும் “பார்பனீய விஷ
நாக்குகள்” என்ற வார்த்தைகள் நான் இங்கு பயன்படுத்தியிருந்தாலும் அவை
என் வார்த்தைகள் அல்ல. உலகத் தமிழினத் தலைவர், சங்கத் தமிழ் காவலர்,
டாக்டர் கலைஞர், இன்ன் பிற எண்ணற்ற பட்டங்களை சொந்தமாக்கிக்
கொண்டுள்ளவர் (அவர் பெயரைச் சொல்வது பண்பற்ற செயல் என்று பலமுறை மிகவும்
வேதனைப் பட்டிருக்கிறார்) அடிக்கடி பயன்படுத்தும் சொல். ஆகவே
அப்னாக்ஷ்யஸ் என்று நாகராஜன் சொல்லும் வார்த்தைகள் ரொம்ப பெரிய
இடத்திலிருந்து வந்த் அவருடைய் ப்ராண்ட் “வாதம்”. நாகராஜன் மிகப் பெரிய
இடத்தில் தான் வீற்றிருக்கிறார்.
(நாகராஜன் அவர்களை என்ன பட்டம் சூட்டி விளிப்பது என்று தெரியவில்லை. அவர்
எனக்குத் தெரிவித்தால் அதன் படி இங்கு எல்லோரும் நடந்து கொள்வார்கள்) ஆக,
இப்பொதைக்கு, நாகராஜன்,
உங்கள் எதிர்வினை எனக்குப் புதிதல்ல. மின் தம்ழில் இருக்கும்
ஒருவ்ரிடமிருந்து வருவது தான் புதிது.
நான் வெளிப்படுத்திய சில கருத்துக்களுக்காக் பேராசிரியர்கள், எழுத்தாளர்
பெருமக்கள் கூடிய ஒரு கூட்டம் “இந்த ஆள் எழுதும் எழுத்துக்கள் மலம்
துடைக்கத்தான் லாயக்கு” என்று தீர்மானம் நிறைவேற்றி, என் எழுத்தின்
பக்கங்களைக் கிழித்து மலம் துடைத்து இந்தியா டுடே அலுவலகத்துக்கு
அனுப்பினார்கள். அவர்கள் இன்றைய தமிழ்கத்தின் அறிஞர் எழுத்தாளர்
பெருமக்கள்.
கலைஞர், தம்ழினத் தலைவர் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய
பேச்சுக்கள் பற்றிய பத்திரிகைத் துணுக்கு வேண்டுமானால் யாருடைய தயவிலாவது
அதை ஸ்கான் செய்து தரமுடியும். என்னிடம் அந்த வசதி இல்லை. அதில் பேசிய
மந்திரி ஒருவர் அவர் பெயர் இப்போது நினைவுக்கு வர மறுக்கிறது.
பொதுத்துறையும் சட்டமும் அவரிடம் இருந்தது இப்போது அவரிடமிருந்து
இரண்டும் பறிக்கப்பட்டுள்ளன. அடையாளம் காண்பதற்காக இதைச் சொல்கிறேன்.
பெர்யர் நினைவுக்கு வந்ததும் சொல்கிறேன்.
நக்கீரன் என்று ஒரு பத்திரிகை இருக்கிறது தெரியுமா? அவர்கள் என் வீடு
தேடி வந்து, ஒரு புகைப்படக் காரரையும் அனுப்பி, என்னை எழுதச்
சொன்னார்கள். எழுதினேன். கலைஞர் மிக கோபம் கொண்டு நக்கீரன உதவி ஆசிரியர்
அகப்பட்டார் திட்டு வாங்குவதற்கு. இதை எனக்குச் சொன்னது, பெரியார்
திராவிட கழகத்தின் தலைவருடைய மாப்பிள்ளை. எனது நண்பர். அவர் எனக்கு
சொன்னது “ உங்க ஆளை (அதாவது என்னை) கொஞ்ச நாளைக்கு வெளியே எங்கேயும்
போகவேண்டாம்னு சொல்லி வை. ரொம்ப கோபத்திலே இருக்காங்க” என்று என்
மாமனார் சொல்லச் சொன்னார். நீங்க ஏன் இந்த நக்கீரன் மாதிரி
பத்திரிகைகெல்லாம் எழுதறீங்க” என்று என்னை எச்சரித்தார் அந்த நண்பர்.
அவர் என் கம்யூனிட்டியை ( நாகராஜன் அவர்கள் ப்ராண்ட் வாதம்) சேர்ந்தவர்
இல்லை. ப்க்கா திராவிட கழக அனுதாபி. ஆயினும் என் நண்பர்.
ஆமாம், நாகராஜன், இந்த மாதிரி பார்வை கொண்டவர்கள் தமிழ் நாட்டில்
பக்கத்தில் இருந்தால் தோளைத் தடவி மிக அன்னியோன்ய பாவத்துடன், பூணூல
இருக்கிறதா என்று பார்ப்பார்கள். நீங்கள் எப்படி இங்கிருப்பவர்கள் எந்த
கம்யூனிட்டி என்று முத்லில் கண்டுபிடித்துக் கொள்கிறீர்கள்? ரொம்ப
அவசியமாக இருக்கிறதல்லவா உங்கள் வாதங்களுக்கு இதெல்லாம்?
தமிழ் நாடும் தமிழும் உருப்பட்டுவிடும். .
நாகராஜன் - உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது இங்கே யாருக்கும் எதுவும் கிடையாது. கற்றுக் கொள்ளத்தேவையற்றவை பலவும் உங்களிடம் இருக்கின்றன.
தயவு செய்து Decency பற்றி எங்காவது பேசும்போது கொஞ்சம் கூச்சப்படுங்கள்.
இப்படிப்பேசும் ஒருவருடைய வயதுக்கு மரியாதை அளிக்கத் தேவை இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
நாகராஜன், வெசா பற்றி ஒன்று தெரியாது என்கிறீர்கள். இதில் இருந்தே உங்களுடைய சமூக அறிவும் இலக்கியப் பரிச்சயமும் தமிழ்ச் சமூகத்தின் கடந்த 30 ஆண்டுகளின் செயல்பாடுகளையும் பற்றியும் ஒன்றும் அறியாதவர் என்று தெரிகிறது.
நீங்கள் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றிருந்தால் உங்களிடம் படித்தவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.
உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது இங்கே யாருக்கும் எதுவும் கிடையாது. கற்றுக் கொள்ளத்தேவையற்றவை பலவும் உங்களிடம் இருக்கின்றன.
இப்படிப்பேசும் ஒருவருடைய வயதுக்கு மரியாதை அளிக்கத் தேவை இல்லை.
உங்களுடைய சமூக அறிவும் இலக்கியப் பரிச்சயமும் தமிழ்ச் சமூகத்தின் கடந்த 30 ஆண்டுகளின் செயல்பாடுகளையும் பற்றியும் ஒன்றும் அறியாதவர் என்று தெரிகிறது.
நீங்கள் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றிருந்தால் உங்களிடம் படித்தவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.
இத்துடன் இந்த சச்சரவை நிறுத்திக்கொள்ள்லாம். உங்கள் பதிலில் நெருடலான பல
விஷ்யங்கள் இருந்த போதிலும், நான் அவற்றைத் தொடர விரும்பவில்லை.
இரண்டே இரண்டு விஷ்யங்கள். இந்த்ப் பழம் சச்சர்வைத் தாண்டி.
1) நாகராஜன் என்பது அழகான பெயர். பெற்றோர் வைத்த பெயர்.என்னளவில்
ஒலிவடிவில் கேட்க இனிமையான பெயர். அதை கிங் கோப்ரா என்று மாற்றாமல்
இருந்திருக்கலாம். இனி இது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.
தில்லியில் என் அறிமுகக் வட்டத்தில், மகாலிஙகம் என்ற் இயற்பெயரும்
அதிகார பூர்வமான பெயரும் கொண்ட ஒரு தீவிர தமிழ்ப் பற்றாளர் ’கவிஞர்’
இருந்தார். த்மிழ்ப் பற்றாளர் என்றால் மொழியோடு வரம்பிட்ட பற்று அல்ல.
தமிழ் அரசியல் தளத்தில் தமிழ்ப் பற்று நிறைய அர்த்தங்களைக் கொண்டது அந்த
விரிந்த அர்த்தத்தில் அவர் தமிழ்ப் பற்றாளர். அந்த வளமுறைப்படி அவர் தன்
பெயரை தம்ழில் நேரடியாக மொழிபெயர்த்து வைத்துக்கொள்ளவில்லை. அந்த
அர்த்தம் அவருக்கும் திருமதி மகாலிங்கத்துக்கும் பெருத்த சங்கடமாக
இருந்திருக்கிறது. பின் இதற்கெல்லாம் சம்பந்தமில்லாது, சாலை இளந்திரையன்
என்று ஒரு புதிய பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். என்னவோ இதெல்லாம்
நினைவுக்கு வந்தது.
2) மின் தமிழ் அன்பர்களைக் குறிக்க என்ற குடும்பம் என்று சொல்லலாம்.
fraternity என்றும் சொல்லலாம். brotherhood என்றும் சொல்லியிருக்கலாம்.
Community என்ற சொல்லுக்கு அகராதி அர்த்தம் என்னவாக இருந்தாலும், இன்றைய
வரலாற்று நீட்சியில் க்கு ஒரே ஒரு பொருள் தான் உண்டு. அது சாதி/ஜாதி.
அது தான் பல குழ்ப்பங்களுக்கு வழி செய்துள்ளது.
> படித்தவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.இவை அனைத்தும் உண்மைக்கு மாறானது
1. பார்ப்பனர்களைப் பற்றிய நேரடியான வர்ணனையை முதலில் வைத்தவர் வெ.சா.
அதை அவர் அரசியல் நையாண்டி என்ற தோரணையில் வைத்ததாக எனக்குப் பட்டதால்
சிரிப்புக் குறி போட்டு பின்னூட்டம் தந்தேன். பின்னால்தான் தெரிந்தது
அவ்வரிகள் இன்றைய முதல்வர் முன்னாள் சொன்னது என்று.
2. பேரா.நாகராஜன் இதில் வருவதற்குக் காரணம் அவர் முன்பு சொன்ன ஒரு
கருத்தை நான் மேற்கோள் காட்டி என் கருத்தைச் சொன்னேன்.
3. பேரா.நாகராஜன் தமிழ்ப் பேராசியர் அல்ல. அவர் தொழில்துறைப்
பேராசிரியர். எனவே அவர் இலக்கியத் திறனாய்வாளரான வெ.சாவை அறிந்திருக்க
நியாயமில்லை.
4. அவரிடம் தனியாக விசாரித்த போது தெரிந்தது, அவர் 'community' என்று
சொன்னது பிராமண சமூகத்தை அல்ல. மின்தமிழ் குழுமத்தை என்று.
5. வெ.சாவின் வரிகளை அவரது கூர்மையான விமர்சனப் பாங்கை அறியாதோர் கண்டு
திக்குறுவது அதிசயமில்லை. அப்படித்தான் பேரா.நாகராஜன் துக்குற்று தன்
கருத்தை வைத்தார்.
6. இந்த விஷயத்தில் பலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டது போல்
படுகிறது. ஜாதி என்பது இன்னும் உயிருள்ள மின்சாரக் கம்பி என்பதையே அது
காட்டுகிறது. எவ்வளவுதான் வள்ளுவரையும், பாரதியையும் இன்ன பிறரையும்
மேற்கோள் காட்டினாலும் அவரவர் பதப்படுத்தலை அவரவர்தான் களைதல் வேண்டும்
என்று தோன்றுகிறது.
7. பெரியவர்கள் வெ.சாவும், நாகராஜனும் இது சம்மந்தமாக நாம் இனி அதிகம்
பேச வேண்டாம் என்று இவ்விழையை முடித்து வைத்து விட்டதால், இதை இத்தோடு
விடுவோம்.
நன்றி,
கண்ணன்
2010/8/27 Chandrasekaran <plastic...@gmail.com>:
2010/8/27 N. Kannan <navan...@gmail.com>:
இவ்விழை முழுவதும் வாசித்தீர்களா? அதில் தாங்கள் காணவிட்ட சில முக்கிய
தடயங்கள் உள்ளன.
1. பார்ப்பனர்களைப் பற்றிய நேரடியான வர்ணனையை முதலில் வைத்தவர் வெ.சா.
அதை அவர் அரசியல் நையாண்டி என்ற தோரணையில் வைத்ததாக எனக்குப் பட்டதால்
சிரிப்புக் குறி போட்டு பின்னூட்டம் தந்தேன். பின்னால்தான் தெரிந்தது
அவ்வரிகள் இன்றைய முதல்வர் முன்னாள் சொன்னது என்று.
மனோ நிலை, ப்ரச்ணம், இலச்சிணை ,விளையாண்டு, விளையாண்டான் என்பனவெல்லாம்
இங்கு சகஜமாக விளையாடும் சொற்கள். ”வேத இலக்கியத்தில் வ்யாகரணம்
பார்க்கக் கூடாது” . அப்படியே ஓட்ட வேண்டியதுதான்.
நகையுணர்வு மிகுந்த நம் முனைவர் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்
தேவ்
On Aug 27, 11:12 pm, Madhurabharathi <madhurabhar...@gmail.com> wrote:
> 2010/8/27 N. Kannan <navannak...@gmail.com>
ரெ.கா அப்படியொரு மடல் முன்பு எழுதியிருந்தார். எல்லாம் தப்பு, தப்பாக
இருக்கும் (ஆங்கிலத்தில்). ஆனால் என்ன சொல்றான் என்பது புரியும் :-))
க.>

நாகராஜன் அவர்களே
சில நாள் முன் வந்த சச்சரவு ஃபைல் க்ளோஸ், அது அதைப் பத்தி அல்ல.
"சைவப் பெயரை எல்லாம் தமிழ்ப் பெயராக " என்கிறீர்கள், சைவம் என்றால்
தமிழ் இல்லை , "தமிழ்" என்றால் நமக்கு வழக்கமாக தெரிந்தது இல்லை என
பெரிய பிரச்சாரமே நடந்தது, அந்த பிரச்சாரத்தின் அடிமை ஆகி விட்டீர்கள்
இதைப் போல் உள்ள தீய பிரச்சாரங்கள் யாருக்கும் நல்லதல்ல, தமிழுக்கும்
நல்லதல்ல. இது உங்களை தனிமனிதாக செய்யும் விமர்சனம் அல்ல, ஒரு கலாசாரப்
போக்கின் விமர்சனம். இதை ஆங்கிலத்தில் சொன்னால் cultural perversion
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எவ்ருக்கும் அவர்கள் பெயரை மாற்றுவது உரிமை. நான் சொன்னது பேர் மாற்றியது
பற்றி அல்ல. பெயர் மாற்றிய "காரணம்" . நீங்கள் சொல்லிய காரணத்தில்
"சைவம்" என்பது "தமிழ்" என்பதின் எதிராக இருந்தது, அதைத்தான்
சுட்டிக்கட்டினேன். அதற்கு நீங்கள் - அதாவது "நாகராஜன்" பொறுப்பு என
சொல்லவில்லை.
யார் என்ன பெயர் வைத்திருந்தாலும், எழுதினாலும் நான் எல்லோரையும்
மதிக்கின்றவன்.
நான் உங்களை தனி மனிதனாக தாக்கினேன் என நினைத்தால், மன்னிக்கவும், அது
நோக்கம் அல்ல.
விஜயராகவன்
On 31 Aug, 11:26, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> அன்புடையீர்
> ஒரு காலகட்டத்தில் பெற்றோர் இட்ட பெயரை மாற்றி புதுப்பெயரில் அழைத்துக்கொள்ளும்
> வழக்கம் தோன்றியபோது பல குடும்பங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தது என்பது
> உண்மை.
> என்னைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் கூறுவது ஒன்றே. நீங்களாக என்னைப்பற்றி
> ஒரு உருவகப்படுத்திக் கொண்டு தாக்குதல் தொடுப்பது முறையல்ல
> நடந்த சம்பவங்களைத் தொட்டுக்காட்டுவத்ற்காக என்னை ஒரு கல்சுரல் பொவர்ட் என்று
> கூறுவது பொருத்தமற்றது பகுத்தறிவு வாதிகளிடம் எவ்வளவு தொடர்பு இருந்ததோ அதே
> அளவு தொடர்பு ஆன்மீக வாதிகளிடமும் இருந்தது.
> அருள்கூர்ந்து கருத்துப்பிழையை எடுத்துக் கூறுங்கள்
> எனனை எடைபொடும் எடை மேடையல்ல இது
> நட்புடன்
> நாகராசன்
>
> 2010/8/31 விஜயராகவன் <viji...@gmail.com>
> visit :www.elearning.eduwww.radiusconsultancy.comwww.elearninglive.tv- Hide quoted text -
>
> - Show quoted text -
2010/8/31 விஜயராகவன் <vij...@gmail.com>:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நீங்கள் சொல்வது சரியாகத்தான் உள்ளது, நாம் அவசரத்தில் எழுதும் போது நம்
எண்ணத்தில் இல்லாதது வர வாய்ப்புண்டு
தமிழ்மொழி சைவம், வைணவம், கிருத்துவம், இஸ்லாம் அல்லது நாத்திகம்,
கம்யூனிசம், முதலாளித்துவம் எதற்க்கும் "எதிரி" அல்ல, நம் மனத்தில்
உள்ளதை சொல்லுவதுதான் தமிழ்
விஜயராகவன்
On 31 Aug, 12:08, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> அன்புடையீர்,
> என் தமிழில் உள்ள தடுமாறத்தினால் நான் சொல்லவந்தது தவறாகப் புரிந்துகொள்ளும்
> வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். எனது குடும்பத்தில் நான்கு தலைமுறையாக சைவமும்
> கிறித்துவமும் இழைந்தே நின்றிருக்கிறது. நான் வளர்ந்த பின்புலமும் வாழ்வும்
> என்னை ஒரு பொதுமனிதனாகவே நிலைக்க வைத்திருக்கிறது
> எனது முயற்சியெல்லாம் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்வதே. அதில் எந்த
> உள்நோக்கமும் எனக்கு இல்லை என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்
> நாகராசன்
>
> 2010/8/31 விஜயராகவன் <viji...@gmail.com>
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
ஒரு முக்கியமான வேண்டுகோள்.
மிகவும் சென்ஸிடிவ்வான சப்ஜெக்ட் பேசும் போது சிறிய எழுத்துப் பிழைகள்,
மொழித்தடுமாற்றம் இவைகளை நாம் பொருட்படுத்தாது, ஒருவர் என்ன சொல்ல
வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளப் பார்ப்போம். ராகவன் சார் சொல்வது லா
பாயிண்ட். என் முதல் வாசிப்பில் நாகராஜன் சார் சொல்வதை என்னால் அப்படியே
உள்வாங்க முடிந்தது. ஆயினும் ராகவன் சொல்வது மிகவும் subtle social
conditioning பற்றியது. எனவே எல்லோரும் Mind our language :-))
க.>