முசு (Hanuman Langur)

88 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 16, 2011, 4:14:24 PM7/16/11
to மின்தமிழ்
முசு = Hanuman Langur
http://scprf.ucsd.edu/sommer.html

Nilgiri langur: = ஊகம்.

NG

N. Ganesan

unread,
Jul 16, 2011, 5:54:00 PM7/16/11
to மின்தமிழ்

Rhesus monkey
Rhesus macaque (Macaca mulatta)
http://www.arkive.org/rhesus-macaque/macaca-mulatta/image-G13876.html
http://www.hedweb.com/animimag/macaque.htm

செம்முகம், செங்குரங்கு:

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
(புறநானூறு பாடல் 378)

On Jul 16, 3:14 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> முசு = Hanuman Langurhttp://scprf.ucsd.edu/sommer.html

Hari Krishnan

unread,
Jul 16, 2011, 9:07:58 PM7/16/11
to mint...@googlegroups.com


2011/7/17 N. Ganesan <naa.g...@gmail.com>

முசு = Hanuman Langur
http://scprf.ucsd.edu/sommer.html

Nilgiri langur: = ஊகம்.

இதனால் பெறப்படும் ஊகம் யாதோ?

--
அன்புடன்,
ஹரிகி.
Message has been deleted

N. Ganesan

unread,
Jul 17, 2011, 8:44:03 AM7/17/11
to மின்தமிழ்

On Jul 16, 8:07 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> 2011/7/17 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > முசு = Hanuman Langur
> >http://scprf.ucsd.edu/sommer.html

> > Nilgiri langur: = ஊகம்.

> இதனால் பெறப்படும் ஊகம் யாதோ?

> --
> அன்புடன்,
> ஹரிகி.

தமிழ் இலக்கியங்களில் வரும் ஊகம்:
http://www.flickr.com/photos/pandiyan/24486541/

(சங்க இலக்கியத்தில் கணவன் மாள
தானும் பாய்ந்து இறக்கும் சதி பற்றி உள்ளது.)

--------

லங்கூலம் இராவணன் இட்ட நெருப்பினால் கருமுகம் ஆனது என்பார்கள். தமிழில்
(மற்ற திராவிட மொழிகளிலும்) முசு, மொச்சு, ...
முசுகுந்தன் சோழர்களின் முதல்வன்.
இமாலயக் காடுகளில் யெட்டி (Yeti)  என்பதும் இந்த
லங்கூர என்கின்றனர் விஞ்ஞானிகள். மனிதனைப் போன்றவை.
ஆனால் நீந்தா. வால் உடலை விட நீளம். கருமுகம் = முசு.
(உடல் சாம்பல் நிறம்)

வாலி, சுக்ரீவன் செம்முகக் குரங்குகள் (rhesus monkey, macaca mulatta).
செம்முகம் என்றே இலக்கியங்களில் வரும்.
மந்திக்கு செம்முகத்தில் செம்மை அதிகம்.
கடுவனுக்குக் கருவிரல். (உடல் மணல் நிறம்)

செங்குரங்கு - நீலகிரியில் உண்டு. ஒருவலை எபனி லங்கூர்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jul 17, 2011, 8:52:37 AM7/17/11
to mint...@googlegroups.com


2011/7/17 N. Ganesan <naa.g...@gmail.com>
லங்கூலம் இராவணன் இட்ட நெருப்பினால் கருப்பி ஆனது என்பார்கள்.


ஓகோ அந்த ஊகமா?  ஊகமோ டாய்கவென்றான் என்று அண்மையில் சீவக சிந்தாமணி பாடல் ஒன்று நினைவுக்கு வந்து கேட்டிருந்தேன். அதன் விளைவா?

லங்கூலம்?  அது தெரியாது.  ஆனால் கூலம் என்றால் வால் என்பது தெரியும்.

குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும். 

கும்பகர்ணன் வானரங்கள்மேல் குன்றுகளை எறிவான்; பூமியின்மேல் குதித்து (நசுக்குவான்); ஒன்றின் வாலைப் பற்றித் தூக்கி, அதையே சுழற்றி, இன்னொரு குரங்கை அடிப்பான்.....

கூலம் என்றால் குப்பை மட்டும் இல்லை.  தலையிருக்க என்னவோ ஆடக்கூடாதாமே... அதுவுந்தேன்....

விஜயராகவன்

unread,
Jul 17, 2011, 9:10:31 AM7/17/11
to மின்தமிழ்
On Jul 17, 2:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> கூலம் என்றால் குப்பை மட்டும் இல்லை.  தலையிருக்க என்னவோ ஆடக்கூடாதாமே...
> அதுவுந்தேன்....
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

கூலம் என்றால் குப்பையா? கூளம் என நினைக்கின்றேண் (உ: குப்பைக்கூளம்)

லெக்சிகான் படி
கூலம்
கூலம்¹ kūlam
, n. < kula. 1. Grains, especially of 18 kinds, viz., நெல், புல்,
வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு


கூலம்² kūlam
, n. < kūla. 1. Bank of a river or tank, seashore; நீர்க்கரை. (திவா.)
2. Ridge in a paddy field; வரம்பு. (பிங்.) 3. Regulation, rule; முறை.
கூல

கூலம் kūlam : (page 1077)

field; வரம்பு. (பிங்.) 3. Regulation, rule; முறை. கூல நீங்கிய
விராக்கதப் பூசுரர் (கம்பரா. பிரமாத். 164).

கூலம்³ kūlam
, n. < lāṅgūla. 1. Tail of a quadruped; விலங்கின் வால். (திவா.) 2.
Monkey; குரங்கு. (பிங்.)

கூலம்&sup4; kūlam
, n. prob. kula. 1. Cow; பசு. (பிங்.) 2. Elk; மரை. (W.)

கூலவாணிகன்சாத்தனார் kūla-vāṇikaṉ- cāttaṉār, n. < கூலம்¹

======================

கூளம்:

கஞ்சல் kañcal
, n. prob. கஞல்-. (J.) 1. Sweepings, rubbish heap; கூளம். 2. Refuse,
litter; குப்பை.

கூளம் kūḷam
, n. < கூள்-. [M. kūḷam.] 1. Broken pieces of straw, of hemp; chaff;
சண்டு. கூளம்பிடித் தெள்ளின் கோதுவைப்பான் (தமிழ் நா. 83). 2. Sediment,
lees,

விஜயராகவன்


N. Ganesan

unread,
Jul 17, 2011, 10:14:18 AM7/17/11
to மின்தமிழ், santhav...@googlegroups.com, thami...@googlegroups.com

On Jul 17, 7:52 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

கூலம் (= வால்) தமிழ்ச்சொல் தான். பிங்கலந்தை,
திவாகர நிகண்டுகளில் இருக்கிறது. மிகப் பழைய
காலத்தில் கூழை என்பதாக இக் “கூலம்” இருந்திருக்க
வேண்டும் எனக் கருதுகிறேன். வடக்கே “ழ” இல்லாததால்
கூலம் ஆகிவிட்டது. சம்ஸ்க்ருதத்தில் லாங்-கூலின்
என்றால் முசு (Hanuman langur) என்று பொருள்.
நாங்கூழை > நாங்கூழம் > லாங்கூலம் ஆகியிருக்கும்.

நா - என்றால் தொங்குதல். (1) நாக்கு (2) நாஇ (நாய்) (தொல். எழுத். 58,
உரை.). “தாங்கி நாங்கிப் போக” = தணிந்து தொங்கிப் போக.

நா + கூழை (= வால்) > நாங்கூழம் > லாங்கூலின்.

குழைத்தல் = அசைத்தல். நாய் வாலைக் குழைக்கிறது.
காற்றில் அலையும் மர இலையைக் குழை என்கிறோம்.
”குழைக்கின்ற கவரி யின்றி” - கம்பன், கவரிமா (யாக்) வாலை
அசைத்தாட்டுதலைக் கம்பன் காட்டுகிறான்.

கூழை/கூலம் (“வால்”) < குழை-
கூழை¹ kūḻai
, n. < குழை-. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். கூழை விரித்தல்
(தொல். பொ. 262). 2. Feathers, plumage; இறகு. (திவா.) 3. Peacock's
tail; மயிற்றோகை. (பிங்.) 4. Tail; வால். புன்கூழையங் குறுநரி (கல்லா.
89, 18).

தோகை < தோகு- (தொங்கு-)

------------

ஒப்புமைக்கு மேலும் சில சொற்கள்:

குழு- என்றால் குடைதல் என்ற பொருள். குழு > உழுதல் (Cf. கொழு).
நாங்குழு = நாங்கூழ் = மண்ணைக் குடையும் மண்புழு.

நாங்குழு, நாங்கூழ் = கலப்பை. இதில் இருந்து பிறக்கும்
தமிழ்ச் சொல் நாஞ்சில் ‘கலப்பை’. வடக்கே, நாங்குழு ‘கலப்பை’
நாங்கல், லாங்கல, லாஞ்சல என்றெல்லாம் சிதைவதை நோக்குக.

நாங்கூழம் > இதுமாதிரி இருப்பது நாங்கூரம்/நங்கூரம் ஆகிறது.
ழ > ர/ல உதாரணங்கள்: நாங்கூரம்/நங்கூரம் “anchor of a ship" (கலப்பை
உருவில் இருப்பதால்). நாங்குதல் - தொங்குதல், கப்பலின் அடியே.
அதுபோல, நாங்கூழை > நாங்கூலி > லாங்கூலி (ஸம்ஸ்க்ருதம்).
இந்த த்ராவிட, வடமொழி சொற்களில் இருந்து பிறந்த
ஆங்கிலச் சொல்: Langur.

3 வகை லாங்கூலி/நாங்கூழை உள்ளன. அவை யாவுக்கும்
வால் உடலை விட நீளமானது.
http://en.wikipedia.org/wiki/Langurs
Langur (leaf monkey) group Genus Trachypithecus - lutungs
Genus Presbytis - surilis
Genus Semnopithecus - gray langurs

அன்புடன்,
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jul 17, 2011, 10:29:21 AM7/17/11
to mint...@googlegroups.com


2011/7/17 விஜயராகவன் <vij...@gmail.com>

கூலம் என்றால் குப்பையா? கூளம் என நினைக்கின்றேண் (உ: குப்பைக்கூளம்)

லெக்சிகான் படி
கூலம்
கூலம்¹ kūlam
, n. < kula. 1. Grains, especially of 18 kinds, viz., நெல், புல்,
வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு

ம்கூம்? அப்படியா!  அப்ப

தூசும் துகிரும் ஆரமும் அகிலும் 
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் 
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20 
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும், 
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு 
கூலம் குவித்த கூல வீதியும்

(சிலப்பதிகாரம், இந்திர விழவூர் எடுத்த காதை)

இந்த எடத்துல கூலம்னா என்னன்னு கொஞ்சம் விளக்கிப் போடுங்களேன்... எங்கிட்ட இருக்கற லெக்சிகான் அச்சிலதான் இருக்கு...

(குப்பை என்றால் waste, rubbish என்று மட்டும் பொருளன்று.  குப்பை என்றால் குவியல் என்றும் பொருள்.  முத்தின் குப்பை, முத்தின் கூலம்.... என்றெல்லாம் பற்பல மேற்கோள்கள் உண்டு.  எங்கிட்ட வந்து கொம்ப நிமித்துறீங்களே!  நியாயமா இது? :)) )

Innamburan Innamburan

unread,
Jul 17, 2011, 10:30:46 AM7/17/11
to mint...@googlegroups.com
long +கூலம் = லாங்கூலம். அதன் காரணப்பெயர் திரிபு ஆகி, ஹெப்ஸன்~ஜெப்சன் வழி ஆங்கிலம் புகுந்த வாலாட்டியபடியே langur ஆகியதாமே?
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்




Hari Krishnan

unread,
Jul 17, 2011, 10:34:19 AM7/17/11
to mint...@googlegroups.com


2011/7/17 Innamburan Innamburan <innam...@gmail.com>

long +கூலம் = லாங்கூலம். அதன் காரணப்பெயர் திரிபு ஆகி, ஹெப்ஸன்~ஜெப்சன் வழி ஆங்கிலம் புகுந்த வாலாட்டியபடியே langur ஆகியதாமே?

இலக்கணப்படி லகரம் மொழிமுதல் வாரா.  ஆகவே, அது உலாங்கூலம் என்பதறிக.  உலாம்+கூலம்.  மரத்திலிருந்து மரத்துக்கு, கிளையிலிருந்து கிளைக்கு உலவுகின்ற வால்.  னா?  லாங்கூர்னா long+ஊர்னுதான பிரிக்கணும்?  அத்த உட்டுட்டு வேற என்னென்னவோ சொல்றீங்களே!  அய்ய....

:P
Message has been deleted

N. Ganesan

unread,
Jul 17, 2011, 10:36:15 AM7/17/11
to mint...@googlegroups.com
On Jul 17, 9:30 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

இல்லை. வெள்ளையர் சொல்லும் கதை அது.

லாங்கூலின் சம்ஸ்க்ருதத்தில் வெள்ளையர் ஆரியர் ஆவதற்கு
1000+ ஆண்டுமுன்னமே  உள்ளது (உ-ம்: பஞ்சதந்திரம்).

/க/

Innamburan Innamburan

unread,
Jul 17, 2011, 10:39:44 AM7/17/11
to mint...@googlegroups.com
ஐயோடா சாமி! ஆளை விடுங்கோ. தத்க்ஷணம் இட்டுக்கட்டி, ஹரிகி அறியாதபடி, நெடிலை, குறிலாக, திரிபு செய்த விஷமமமையா இது. ஒத்துக்கினேன்.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



2011/7/17 N. Ganesan <naa.g...@gmail.com>

/க/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

814.gif

விஜயராகவன்

unread,
Jul 17, 2011, 10:44:17 AM7/17/11
to மின்தமிழ்
On Jul 17, 4:29 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
> மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
> அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20
> வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
> பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
> *கூலம் குவித்த கூல வீதியும்*,

>
> (சிலப்பதிகாரம், இந்திர விழவூர் எடுத்த காதை)
>
> இந்த எடத்துல கூலம்னா என்னன்னு கொஞ்சம் விளக்கிப் போடுங்களேன்... எங்கிட்ட
> இருக்கற லெக்சிகான் அச்சிலதான் இருக்கு...


ஒரு விளக்கம் - இது அறுதியிட்டு உறுதியாக இல்லை

“தானியங்கள் குவிக்கப்பட்ட தானிய வணிக வீதி”


> (குப்பை என்றால் waste, rubbish என்று மட்டும் பொருளன்று.  குப்பை என்றால்
> குவியல் என்றும் பொருள்.  முத்தின் குப்பை, முத்தின் கூலம்.... என்றெல்லாம்
> பற்பல மேற்கோள்கள் உண்டு.  எங்கிட்ட வந்து கொம்ப நிமித்துறீங்களே!  நியாயமா
> இது? :)) )
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

அப்படீனா , குப்பைன்ன நாம் நினைக்கிற குப்பை இல்லை, மூக்கை மூடிக்கொள்ள
வேண்டாம், முகத்தை சுளிக்க வேண்டாம், முத்து எனவும் நினைக்கலாம், சரி,
அப்படியே .

விஜயராகவன்

Hari Krishnan

unread,
Jul 17, 2011, 10:46:58 AM7/17/11
to mint...@googlegroups.com
2011/7/17 விஜயராகவன் <vij...@gmail.com>
அப்படீனா , குப்பைன்ன நாம் நினைக்கிற குப்பை இல்லை, மூக்கை மூடிக்கொள்ள

வேண்டாம், முகத்தை சுளிக்க வேண்டாம்,  முத்து எனவும் நினைக்கலாம், சரி,

முத்தாகவும் இருக்கலாம்; நெத்தாகவும் இருக்கலாம்; குவிக்கப்பட்ட எதுவாகவும் இருக்கலாம்.  கூலம்.

தேருஃபோரு, கூலம் ஜீகொல்டு குப்பை ஜீகொல்டு குவியல்.  அர்த்தா ஆயித்தா?

விஜயராகவன்

unread,
Jul 17, 2011, 10:48:15 AM7/17/11
to மின்தமிழ்
On Jul 17, 4:36 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> லாங்கூலின் சம்ஸ்க்ருதத்தில் வெள்ளையர் ஆரியர் ஆவதற்கு
> 1000+ ஆண்டுமுன்னமே  உள்ளது (உ-ம்: பஞ்சதந்திரம்).

வெள்ளையர் ஆரியர்கள் என யார் சொன்னது??


விஜயராகவன்

Hari Krishnan

unread,
Jul 17, 2011, 11:02:45 AM7/17/11
to mint...@googlegroups.com
2011/7/17 விஜயராகவன் <vij...@gmail.com>
வெள்ளையர் ஆரியர்கள் என யார் சொன்னது??


விஜயராகவன்

அது ஒண்ணியுமில்ல.  ஆறியர்னு சொல்ல வந்தாரு.  டைப்படிக்க சொல்லோ தப்பா உளுந்திருச்சு.  வெள்ளையர் ஆரம்ப காலத்துல ரொம்ப ஜூடா இருந்தாங்கன்னு கவான் புவான், மாகியான் எல்லாரும் எழுதி வச்சிருக்காங்க.  சூடா இருந்தவங்க, ஆறிப் போயிட்டாங்கன்னு கணேசரு சொல்றாரு. அம்ட்டுதேங்.... நீங்க எதிராறியர் ஆய்டாதீங்க ஸாம்யோவ்!

செல்வன்

unread,
Jul 17, 2011, 11:09:45 AM7/17/11
to mint...@googlegroups.com


2011/7/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

அது ஒண்ணியுமில்ல.  ஆறியர்னு சொல்ல வந்தாரு.  டைப்படிக்க சொல்லோ தப்பா உளுந்திருச்சு.  வெள்ளையர் ஆரம்ப காலத்துல ரொம்ப ஜூடா இருந்தாங்கன்னு கவான் புவான், மாகியான் எல்லாரும் எழுதி வச்சிருக்காங்க.  சூடா இருந்தவங்க, ஆறிப் போயிட்டாங்கன்னு கணேசரு சொல்றாரு. அம்ட்டுதேங்.... நீங்க எதிராறியர் ஆய்டாதீங்க ஸாம்யோவ்!


ஆரியர்ன்னா ஐரோப்பாவை பொறுத்தவரை வெள்ளை தோல், நீலவிழிகள், பொன்நிற முடி. ப்ரிட்டிஷாருக்கு கருப்பு/பழுப்பு முடி. அதனால் அவர்கள் ஆரியர்கள் இல்லை. டேனியல் கிரெய்க் தான் முதல்முதலில் பொன்நிற முடியுடன் வந்த ஜேம்ஸ்பாண்ட். இதுக்கு அப்ப சற்று சர்ச்சை எழுந்து அடங்கியது.

--
செல்வன்

"வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்



www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

N. Ganesan

unread,
Jul 17, 2011, 11:26:50 AM7/17/11
to மின்தமிழ்

On Jul 17, 10:09 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/7/17 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>


>
> > அது ஒண்ணியுமில்ல.  ஆறியர்னு சொல்ல வந்தாரு.  டைப்படிக்க சொல்லோ தப்பா
> > உளுந்திருச்சு.  வெள்ளையர் ஆரம்ப காலத்துல ரொம்ப ஜூடா இருந்தாங்கன்னு கவான்
> > புவான், மாகியான் எல்லாரும் எழுதி வச்சிருக்காங்க.  சூடா இருந்தவங்க, ஆறிப்
> > போயிட்டாங்கன்னு கணேசரு சொல்றாரு. அம்ட்டுதேங்.... நீங்க எதிராறியர் ஆய்டாதீங்க
> > ஸாம்யோவ்!
>
> ஆரியர்ன்னா ஐரோப்பாவை பொறுத்தவரை வெள்ளை தோல், நீலவிழிகள், பொன்நிற முடி.
> ப்ரிட்டிஷாருக்கு கருப்பு/பழுப்பு முடி. அதனால் அவர்கள் ஆரியர்கள் இல்லை.
> டேனியல் கிரெய்க் தான் முதல்முதலில் பொன்நிற முடியுடன் வந்த ஜேம்ஸ்பாண்ட்.
> இதுக்கு அப்ப சற்று சர்ச்சை எழுந்து அடங்கியது.
>

எத்தனை இந்தாலஜிஸ்ட்கள் ஆர்யர்கள் என்று பார்க்கணும்.

http://en.wikipedia.org/wiki/Aryanism#Aryanism

> --
> செல்வன்
>
> "வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
>

> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>

Dhivakar

unread,
Jul 17, 2011, 11:36:51 AM7/17/11
to mint...@googlegroups.com

செல்வன்,
இந்த ஆரிய திராவிட கதைகள் எல்லாம் சீரியஸான சினிமாவில் சைட் காமெடி போல. நான் இப்போதெல்லாம் இவைகளை எஞ்சாய் பண்ணக் கற்றுக் கொண்டுவிட்டேன். ஒவ்வொரு சமயம் யாராவது இதைக் கிளப்பாவிட்டால் தலை வெடித்துவிடுமோ என்னவோ.. நம் மின் தமிழில் டாப் மாமெடி வரிசையில் இதுதான் நம்பர் ஒன். நெக்ஸ்ட் திருவள்ளுவர் சமணர். 

வருடக் கடைசியில் சுபாவும் கண்ணனும் அனுமதி கொடுத்தால் டாப் 10 போட்டுடலாம். lol
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jul 17, 2011, 11:40:47 AM7/17/11
to மின்தமிழ்
ஹரிகி,

கூலம் (= வால்) என்னும் சொல்லில் ழகரம் ஒளிந்திருக்கிறது
என்றேன் அல்லவா? அதற்கு இன்னொரு சான்றும் தரமுடியும்.

ழகரம் வடக்கே டகரமாகவோ, லகரமாகவோ திரியும்.
சோழ சக்கிரவர்த்திபேரன் அனந்தவர்மன் பூரி ஜெகன்னாதர் கோவில்கட்டினான்.
உபயகுலத் தோன்றல் அவன். ஆதலால்,
சோடகங்க தேவன் எனக் கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகிறான்.
சோழ > சோட. ப்ராகிருதத்தில் நெடில் குறுகும்போது
டகரம் இரட்டிக்கும். உ-ம்: சம்மட்டி (ஹேமர்) என்பதற்கான
தொல்-த்ராவிடச் சொல் கூடம்:குட்டம் (கூடு-/குட்டு-) ஆகிறது
அதுபோல், நாங்கூழ- > நாங்கூட > நாங்குட்ட/லாங்குட்ட ஆதலைப்
பல வடமொழிகளில் காண முடிகிறது.

நா. கணேசன்

Comp. Dictionary of Indo-Aryan Languages (CDIAL, prof. Ralph L.
Turner)

lāṅgūlá 11009 lāṅgūlá (lāṅgula -- Pañcat., laṅgula -- lex.) n. ʻ tail
ʼ ŚāṅkhŚr., adj. ʻ having a tail ʼ MBh., ʻ penis ʼ lex. 2. *lāṅguṭa
-- . 3. *lāṅguṭṭa -- . 4. *lāṅguṭṭha -- . 5. *lēṅgula -- . 6.
*lēṅguṭṭa -- . [Cf. lañja -- 2. -- Variety of form attests non --
Aryan origin: PMWS 112 (with lakuṭa -- ) ← Mu., J. Przyluski BSL 73,
119 ← Austro<-> as.]
1. Pa. laṅgula -- , na° n. ʻ tail ʼ, Pk. laṁgūla -- , °gōla -- ,
ṇaṁgūla -- , °gōla -- n.; Paš. laṅgūn n. ʻ penis ʼ; K. laṅgūr m. ʻ the
langur monkey Semnopithecus schistaceus ʼ; P. lãgur, lag° m. ʻ monkey
ʼ; Ku. lãgūr ʻ long -- tailed monkey ʼ; N. laṅgur ʻ monkey ʼ; B.
lāṅgul ʻ tail ʼ, Or. laṅgūḷa, lāṅguḷa; H. lagūl, °ūr m. ʻ tail ʼ,
laṅgūr m. ʻ longtailed black -- faced monkey ʼ; Marw. lagul ʻ penis ʼ;
G. lãgur, °ul (l?) m. ʻ tail, monkey ʼ, lãguriyũ n. ʻ tail ʼ; Ko.
māṅguli ʻ penis ʼ (m -- from māṅgo ʻ id. ʼ < mātaṅga -- ?); Si. nagula
ʻ tail ʼ, Md. nagū.
2. Or. lāṅguṛa, nā° ʻ tail ʼ, nāuṛa ʻ sting of bee or scorpion ʼ (<
*nāṅuṛa?); Mth. lã̄gaṛ, nāgṛi ʻ tail ʼ; M. nã̄goḍā, nã̄gāḍā, nã̄gḍā,
nã̄gā m. ʻ scorpion's tail ʼ.
3. Sh.jij. laṅuṭi ʻ tail ʼ, Si. nan̆guṭa, nag°, nakuṭa. -<-> X lamba
-- 1: Phal. lamḗṭi, Sh.koh. lamŭṭo m., gur. lamōṭṷ m.
4. Pa. naṅguṭṭha -- n. ʻ tail ʼ.
5. A. negur ʻ tail ʼ, B. leṅguṛ.
6. Aw.lakh. nẽgulā ʻ the only boy amongst the girls fed on 9th day of
Āśvin in honour of Devī ʼ.
Addenda: lāṅgūlá -- [T. Burrow BSOAS xxxviii 65, comparing lāṅgula --
~ Pa. nȧguṭṭha -- with similar aṅgúli -- ~ aṅgúṣṭha -- , derives <
IE. *loṅgulo -- (√leṅg ʻ bend, swing ʼ IEW 676)]
1. Md. nagū (nagulek) ʻ tail ʼ (negili ʻ anchor ʼ?).
†*lāṭyatē ʻ is shaken ʼ see laṭati.

> வால் உடலை விட நீளமானது.http://en.wikipedia.org/wiki/Langurs


> Langur (leaf monkey) group Genus Trachypithecus - lutungs
>  Genus Presbytis - surilis
>  Genus Semnopithecus - gray langurs
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
>
> > --
> > அன்புடன்,

> > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -

விஜயராகவன்

unread,
Jul 17, 2011, 11:43:03 AM7/17/11
to மின்தமிழ்
On Jul 17, 5:26 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> எத்தனை இந்தாலஜிஸ்ட்கள் ஆர்யர்கள் என்று பார்க்கணும்.

கணேசனாரே

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என சொன்னால் போதும்.

இந்தாலஜிஸ்டுகளையும், மற்றவர்களையும் விட்டுத் தள்ளுங்கள்.


விஜயராகவன்

N. Ganesan

unread,
Jul 17, 2011, 11:50:55 AM7/17/11
to மின்தமிழ்

On Jul 17, 10:36 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> செல்வன்,
> இந்த ஆரிய திராவிட கதைகள் எல்லாம் சீரியஸான சினிமாவில் சைட் காமெடி போல. நான்
> இப்போதெல்லாம் இவைகளை எஞ்சாய் பண்ணக் கற்றுக் கொண்டுவிட்டேன். ஒவ்வொரு சமயம்
> யாராவது இதைக் கிளப்பாவிட்டால் தலை வெடித்துவிடுமோ என்னவோ.. நம் மின் தமிழில்
> டாப் மாமெடி வரிசையில் இதுதான் நம்பர் ஒன். நெக்ஸ்ட் திருவள்ளுவர் சமணர்.
>
> வருடக் கடைசியில் சுபாவும் கண்ணனும் அனுமதி கொடுத்தால் டாப் 10 போட்டுடலாம்.
> lol
>

> ்
அன்பின் திவாகர்,

நான் நாவல்கள் (சரித்திர, ...) படித்ததில்லை.

திருவள்ளுவர் சமணர் என்று தமிழின் பேராசிரியர்கள்
எழுதிவருகின்றனர். திராவிட, ஆர்ய பாஷைகளின்
மொழியியல் பல பேராசிரியர்கள் உழைக்கின்றனர்.

காப்பி குழம்பி அல்ல, குளம்பி என்று தெரிய
திராவிட சொல்லாய்வு வேண்டியுள்ளது.

நா. கணேசன்

Dhivakar

unread,
Jul 17, 2011, 12:14:03 PM7/17/11
to mint...@googlegroups.com
>>திருவள்ளுவர் சமணர் என்று தமிழின் பேராசிரியர்கள்
எழுதிவருகின்றனர்.  திராவிட, ஆர்ய பாஷைகளின்
மொழியியல் பல பேராசிரியர்கள் உழைக்கின்றனர்.

காப்பி குழம்பி அல்ல, குளம்பி என்று தெரிய
திராவிட சொல்லாய்வு வேண்டியுள்ளது.<<

ரொம்ப சந்தோஷம் சார்.. இதைப் பத்தியெல்லாம் நிறைய எழுதுங்க சார்.. ஆனா இளைய சமுதாயத்துக்கும் எதிர்காலத்துக்கும் இதனால் பலன் உண்டா ந்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. 

ஒருசமயம் ஜே பி அய்யாகிட்டே ஒரு கேள்வி கேட்டேன். திருமந்திரம் தமிழை வைத்துப் பார்க்கும்போது எந்த வருடத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும், என்று. அவர் ‘நச்’ ந்னு பதில் சொன்னார். - திருமந்திரம் எந்தக் காலத்துக்கும் பொருத்தமான தமிழில் எழுதப்பட்டது.. இதற்கு காலம் நேரம் வர்த்தமானம் எல்லாம் பார்க்கக்கூடாது’ என்றார். மிகச் சரியான பதில் அது.

காலம் போகும் போக்கைப் பார்த்தால் மதமே எதிர்காலத்தில் இருக்காது. திருவள்ளுவர் பற்றிய ‘பெர்சனல்’ விஷயங்கள் எதிர்காலத்தில் யாரும் அலசப் போவதில்லை. ஆனால் திருக்குற்ள் நிற்கும். அதைப் பற்றி எழுதுங்கள்.

அப்படியே திருவள்ளுவர் என்ன மதம், எந்த ஊர்க்காரர் நு எழுதி அதை எதிர்காலம் படிக்கணும்னா அதை நீங்க ‘நாவல்’ வாயிலாகத்தான் சொல்லமுடியும். அப்பத்தான் ஜனங்களுக்கு விளங்கும். கற்பனையா நிஜமா என்ற மாயையில் இருந்து எதையும் பார்க்கவே மக்கள் விரும்புவார்கள்.

முடிந்தால் அடியேன் எழுதிய ’விசித்திரசித்தன்’ நாவலைப் படிக்க ’முயலுங்கள்’ (கம்பல்ஷன் எல்லாம் கிடையவே கிடையாது). சமணர்கள் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதியுள்ளேன். கற்பனையா நிஜமா என்பது உங்கள் முடிவுதான். பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். 


2011/7/17 N. Ganesan <naa.g...@gmail.com>


On Jul 17, 10:36 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> செல்வன்,
> இந்த ஆரிய திராவிட கதைகள் எல்லாம் சீரியஸான சினிமாவில் சைட் காமெடி போல. நான்
> இப்போதெல்லாம் இவைகளை எஞ்சாய் பண்ணக் கற்றுக் கொண்டுவிட்டேன். ஒவ்வொரு சமயம்
> யாராவது இதைக் கிளப்பாவிட்டால் தலை வெடித்துவிடுமோ என்னவோ.. நம் மின் தமிழில்
> டாப் மாமெடி வரிசையில் இதுதான் நம்பர் ஒன். நெக்ஸ்ட் திருவள்ளுவர் சமணர்.
>
> வருடக் கடைசியில் சுபாவும் கண்ணனும் அனுமதி கொடுத்தால் டாப் 10 போட்டுடலாம்.
> lol
>
> ்
அன்பின் திவாகர்,

நான் நாவல்கள் (சரித்திர, ...) படித்ததில்லை.



நா. கணேசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jul 17, 2011, 12:25:01 PM7/17/11
to மின்தமிழ்

திவாகர்,

நிச்சயம் பணியோய்வு பெற்றபின் தமிழ் நாவல்கள், சிறுகதைகள்
படிப்பேன். முதலில் கல்கியில் இருந்து தொடங்கணும்.
உங்களின் விசித்திரசித்தனும் படிப்பேன்.

அன்புடன்,
நா. கணேசன்

On Jul 17, 11:14 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> >>திருவள்ளுவர் சமணர் என்று தமிழின் பேராசிரியர்கள்
>
> எழுதிவருகின்றனர்.  திராவிட, ஆர்ய பாஷைகளின்
> மொழியியல் பல பேராசிரியர்கள் உழைக்கின்றனர்.
>
> காப்பி குழம்பி அல்ல, குளம்பி என்று தெரிய
> திராவிட சொல்லாய்வு வேண்டியுள்ளது.<<
>
> ரொம்ப சந்தோஷம் சார்.. இதைப் பத்தியெல்லாம் நிறைய எழுதுங்க சார்.. ஆனா இளைய
> சமுதாயத்துக்கும் எதிர்காலத்துக்கும் இதனால் பலன் உண்டா ந்னு கொஞ்சம்
> நினைச்சுப் பாருங்க.
>
> ஒருசமயம் ஜே பி அய்யாகிட்டே ஒரு கேள்வி கேட்டேன். திருமந்திரம் தமிழை வைத்துப்
> பார்க்கும்போது எந்த வருடத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும், என்று. அவர் ‘நச்’
> ந்னு பதில் சொன்னார். - திருமந்திரம் எந்தக் காலத்துக்கும் பொருத்தமான தமிழில்
> எழுதப்பட்டது.. இதற்கு காலம் நேரம் வர்த்தமானம் எல்லாம் பார்க்கக்கூடாது’
> என்றார். மிகச் சரியான பதில் அது.
>
> காலம் போகும் போக்கைப் பார்த்தால் மதமே எதிர்காலத்தில் இருக்காது. திருவள்ளுவர்
> பற்றிய ‘பெர்சனல்’ விஷயங்கள் எதிர்காலத்தில் யாரும் அலசப் போவதில்லை. ஆனால்
> திருக்குற்ள் நிற்கும். அதைப் பற்றி எழுதுங்கள்.
>

> *அப்படியே திருவள்ளுவர் என்ன மதம், எந்த ஊர்க்காரர் நு எழுதி அதை எதிர்காலம்


> படிக்கணும்னா அதை நீங்க ‘நாவல்’ வாயிலாகத்தான் சொல்லமுடியும். அப்பத்தான்
> ஜனங்களுக்கு விளங்கும். கற்பனையா நிஜமா என்ற மாயையில் இருந்து எதையும்

> பார்க்கவே மக்கள் விரும்புவார்கள்.*
> *
> *
> *முடிந்தால் அடியேன் எழுதிய ’விசித்திரசித்தன்’ நாவலைப் படிக்க ’முயலுங்கள்’


> (கம்பல்ஷன் எல்லாம் கிடையவே கிடையாது). சமணர்கள் பற்றி நிறைய ஆராய்ந்து
> எழுதியுள்ளேன். கற்பனையா நிஜமா என்பது உங்கள் முடிவுதான். பழனியப்பா பிரதர்ஸ்

> வெளியிட்டுள்ளார்கள். *
>
> 2011/7/17 N. Ganesan <naa.gane...@gmail.com>

Dhivakar

unread,
Jul 17, 2011, 12:35:33 PM7/17/11
to mint...@googlegroups.com
உங்களின் விசித்திரசித்தனும் படிப்பேன்

நன்றி! சாகித்ய அகடமி விருது பெற்ற மேல்நாள் தமிழ்த்துறைத் தலைவர் (பாரதிதாசன் பல்கலைகழகம்)
முனைவர் எழில்முதல்வன் தான் முன்னுரை எழுதியுள்ளார். தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுந்தரவேலு அவர்கள் திருச்சியில் (தமிழ்ச்சங்கத்தில்) இப்புத்தகம் பற்றி ஒருமணிநேரத்துக்கும் மேலாகப் பேசினார். திரு நரசய்யா அவர்கள் பாராட்டி எழுதினார்கள். திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் புத்தகத்தை ’விமரிசித்து’ எழுதியுள்ளார். இன்னும் நிறைய..

தி





2011/7/17 N. Ganesan <naa.g...@gmail.com>

திவாகர்,

நிச்சயம் பணியோய்வு பெற்றபின் தமிழ் நாவல்கள், சிறுகதைகள்
படிப்பேன். முதலில் கல்கியில் இருந்து தொடங்கணும்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Jul 17, 2011, 12:42:59 PM7/17/11
to mint...@googlegroups.com
திவாகர் ஐயா
தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுந்தரவேலு அவர்கள் திருச்சியில் (தமிழ்ச்சங்கத்தில்) இப்புத்தகம் பற்றி ஒருமணிநேரத்துக்கும் மேலாகப் பேசினார் என்று குறிப்பிடும்போது சுந்தரமூர்த்தி என்பதற்குப் பதிலாக சுந்தரவேலு என்று கூறிய்ள்ளீர்களோ
முனைவர் கி.சுந்தரமூர்த்தி சென்னைப் பல்கலையில் தமிழ்த்துறையில் பணியாற்றி தமிழ் பல்கலைக்கத்தின் துணைவேந்தர் ஆனார் என்று நினைக்கிறேன்
நாகராசன்

2011/7/17 Dhivakar <venkdh...@gmail.com>

N. Ganesan

unread,
Jul 17, 2011, 12:56:43 PM7/17/11
to மின்தமிழ்

On Jul 17, 11:42 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> திவாகர் ஐயா
> தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுந்தரவேலு அவர்கள்
> திருச்சியில் (தமிழ்ச்சங்கத்தில்) இப்புத்தகம் பற்றி ஒருமணிநேரத்துக்கும்
> மேலாகப் பேசினார் என்று குறிப்பிடும்போது சுந்தரமூர்த்தி என்பதற்குப் பதிலாக
> சுந்தரவேலு என்று கூறிய்ள்ளீர்களோ
> முனைவர் கி.சுந்தரமூர்த்தி சென்னைப் பல்கலையில் தமிழ்த்துறையில் பணியாற்றி

இ. சுந்தரமூர்த்தி, கொங்குநாடு

> தமிழ் பல்கலைக்கத்தின் துணைவேந்தர் ஆனார் என்று நினைக்கிறேன்
> நாகராசன்
>

> 2011/7/17 Dhivakar <venkdhiva...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > உங்களின் விசித்திரசித்தனும் படிப்பேன்
>
> > நன்றி! சாகித்ய அகடமி விருது பெற்ற மேல்நாள் தமிழ்த்துறைத் தலைவர் (பாரதிதாசன்
> > பல்கலைகழகம்)
> > முனைவர் எழில்முதல்வன் தான் முன்னுரை எழுதியுள்ளார். தமிழ்ப்பல்கலைக்கழக
> > முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுந்தரவேலு அவர்கள் திருச்சியில்
> > (தமிழ்ச்சங்கத்தில்) இப்புத்தகம் பற்றி ஒருமணிநேரத்துக்கும் மேலாகப் பேசினார்.
> > திரு நரசய்யா அவர்கள் பாராட்டி எழுதினார்கள். திருமதி பிரேமா நந்தகுமார்
> > அவர்கள் புத்தகத்தை ’விமரிசித்து’ எழுதியுள்ளார். இன்னும் நிறைய..
>
> > தி
>

> > 2011/7/17 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> >> our
> >> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> >> > > post to this group, send email to minT...@googlegroups.com
> >> > > To unsubscribe from this group, send email to
> >> > > minTamil-u...@googlegroups.com
> >> > > For more options, visit this group at
> >> > >http://groups.google.com/group/minTamil
>
> >> > --
> >> > Dhivakarwww.vamsadhara.blogspot.comwww.aduththaveedu.blogspot.com
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --

> > Dhivakar
> >www.vamsadhara.blogspot.com
> >www.aduththaveedu.blogspot.com
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send
>

> ...
>
> read more »

Mohanarangan V Srirangam

unread,
Jul 17, 2011, 1:32:49 PM7/17/11
to mint...@googlegroups.com


2011/7/17 Hari Krishnan <hari.har...@gmail.com>
--



:-))) 

Thanks for these puffs of laughs now and then. 

N. Ganesan

unread,
Jul 17, 2011, 5:41:12 PM7/17/11
to மின்தமிழ்

On Jul 16, 8:07 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > முசு = Hanuman Langur
> >http://scprf.ucsd.edu/sommer.html
>
> > Nilgiri langur: = ஊகம்.
>
> இதனால் பெறப்படும் ஊகம் யாதோ?
>

நீலகிரி லங்கூலி படங்கள் பாருங்க.
யூகமொடு மாமுக முசுக்கலை (திருமுரு. 302).
இதன் தலை மயிர் ஊகைப் புல் மாதிரி இருக்கும்.

யூகை/ஊகை = ஊகம்/யூகம் = தாவரவியற்பெயர்: Aristida setacca (called as
broomstick grass)
ஊகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் (பெரும்பாண். 122).

யூகை/ஊகைப் புல்பற்றி:
http://books.google.com/books?id=e7pLAAAAYAAJ&pg=PA91&lpg=PA91&dq=Aristida+setacca&source=bl&ots=XMsr-rD3Yy&sig=fupkd770vbDeTBL663WMI8qTh8Q&hl=en&ei=dFQjTpKwEIivsALZ6cyXAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBcQ6AEwAA#v=onepage&q=Aristida%20setacca&f=false

Aristida setacca Retz. Acc. to Roxburgh, the culms are used in South
India
as tooth-picks

ஊகம் புல் தமிழ்ப் பெயர் ஸம்ஸ்க்ருதத்திலும் உண்டு.
ஊஹானீ - என்றால் சீமாறு(=துடைப்பம்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 17, 2011, 5:45:03 PM7/17/11
to மின்தமிழ்

On Jul 17, 4:41 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jul 16, 8:07 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
> > 2011/7/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > > முசு = Hanuman Langur
> > >http://scprf.ucsd.edu/sommer.html
>
> > > Nilgiri langur: = ஊகம்.
>
> > இதனால் பெறப்படும் ஊகம் யாதோ?
>
> நீலகிரி லங்கூலி படங்கள் பாருங்க.
> யூகமொடு மாமுக முசுக்கலை (திருமுரு. 302).

யூகம் - நீலகிரி லாங்கூலி/நாங்கூழை.

மா முக முசுக் கலை = கரிய முகத்தைக் கொண்ட முசுவின் (Hanumar langur)
ஆண்.

It's observed in the forests Nilgiri and Hanuman langurs hybridize.

> இதன் தலை மயிர் ஊகைப் புல் மாதிரி இருக்கும்.
>
> யூகை/ஊகை = ஊகம்/யூகம் =  தாவரவியற்பெயர்: Aristida setacca (called as
> broomstick grass)
> ஊகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் (பெரும்பாண். 122).
>

> யூகை/ஊகைப் புல்பற்றி:http://books.google.com/books?id=e7pLAAAAYAAJ&pg=PA91&lpg=PA91&dq=Ari...


>
> Aristida setacca Retz. Acc. to Roxburgh, the culms are used in South
> India
>  as tooth-picks
>
> ஊகம் புல் தமிழ்ப் பெயர் ஸம்ஸ்க்ருதத்திலும் உண்டு.
> ஊஹானீ - என்றால் சீமாறு(=துடைப்பம்).
>

Typo correction:
uuhanii = broom

NG

N. Ganesan

unread,
Jul 17, 2011, 7:33:29 PM7/17/11
to மின்தமிழ்

On Jul 17, 9:29 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/17 விஜயராகவன் <viji...@gmail.com>


>
> > கூலம் என்றால் குப்பையா? கூளம் என நினைக்கின்றேண் (உ: குப்பைக்கூளம்)
>
> > லெக்சிகான் படி
> > கூலம்
> > கூலம்¹ kūlam
> > , n. < kula. 1. Grains, especially of 18 kinds, viz., நெல், புல்,
> > வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு
>
> ம்கூம்? அப்படியா!  அப்ப
>
> தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
> மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
> அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20
> வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
> பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

> *கூலம் குவித்த கூல வீதியும்*,
>

You're mentioning the root word for English Cooly/Coolie.

Hari Krishnan

unread,
Jul 17, 2011, 9:16:01 PM7/17/11
to mint...@googlegroups.com


2011/7/18 N. Ganesan <naa.g...@gmail.com>

You're mentioning the root word for English Cooly/Coolie.

அடடட டட!  கூலி இங்கிலிபீஸ் வார்த்தயா!  தெர்யாம பூட்ச்சே!  அப்டீன்னா

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

அப்டின்னு எய்தினவரு இங்கிலாந்தில் கேம்பாலம் அல்லது எருதுத்துறை பல்கலைலதான் படிச்சிருக்கணும்னு சொல்லுங்கோவ்!

N. Ganesan

unread,
Jul 17, 2011, 9:23:11 PM7/17/11
to மின்தமிழ்

On Jul 17, 8:16 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/18 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > You're mentioning the root word for English Cooly/Coolie.
>
> அடடட டட!  கூலி இங்கிலிபீஸ் வார்த்தயா!  தெர்யாம பூட்ச்சே!  அப்டீன்னா
>
> தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்

> மெய்வருத்தக் *கூலி* தரும்


>
> அப்டின்னு எய்தினவரு இங்கிலாந்தில் கேம்பாலம் அல்லது எருதுத்துறை பல்கலைலதான்
> படிச்சிருக்கணும்னு சொல்லுங்கோவ்!
>

காமசேது - கேம்ப்ரிஜ், எருதந்துறை - ஆக்ஸ்போர்ட் பல்கலைகள்.

Hari Krishnan

unread,
Jul 17, 2011, 9:56:18 PM7/17/11
to mint...@googlegroups.com


2011/7/18 N. Ganesan <naa.g...@gmail.com>


காமசேது - கேம்ப்ரிஜ், எருதந்துறை - ஆக்ஸ்போர்ட் பல்கலைகள்.

அதுக்குத்தான் கணேசர் கிட்ட சொல்றது.  பாருங்க... கேம்பாலம்னு நான் முளிபெயர்த்ததை எவ்ளோ அழக காமசேது ஆக்கிட்டாரு!  ஏங்கணேசர் சார்.... இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்துல

     ஹரநேத்ராக்னி-ஸந்தக்த-காமஸஞ்ஜீவ-னௌஷத்யை

காம-ஸஞ்ஜீவ ஔஷதம்னு சொல்றாங்களே, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமனைப் பிழைப்பித்த ஸஞ்சீவி மருந்து, அதே அர்த்தம் வருது இல்ல, காமசேதுல?  அப்டீன்னா, காமாச்சியம்மா பேர்லதான் அந்தப் பல்கலை கட்டினாங்கன்னு சொல்ங்க!  இப்ப இல்ல புரீது!

Mohanarangan V Srirangam

unread,
Jul 17, 2011, 9:59:17 PM7/17/11
to mint...@googlegroups.com
கொஞ்சம் இடைவெளி விட்டு சிரிப்பைக் கிளப்புங்கப்பு ! வயிறு வலிக்குது....:-))))))) 


2011/7/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jul 17, 2011, 10:02:18 PM7/17/11
to மின்தமிழ்

On Jul 17, 8:56 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/18 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>

> > காமசேது - கேம்ப்ரிஜ், எருதந்துறை - ஆக்ஸ்போர்ட் பல்கலைகள்.
>
> அதுக்குத்தான் கணேசர் கிட்ட சொல்றது.  பாருங்க... கேம்பாலம்னு நான்
> முளிபெயர்த்ததை எவ்ளோ அழக காமசேது ஆக்கிட்டாரு!  ஏங்கணேசர் சார்.... இந்த லலிதா
> ஸஹஸ்ரநாமத்துல
>

>      ஹரநேத்ரா*க்*னி-ஸந்*தக்த*-காமஸஞ்ஜீவ-னௌஷ*த்*யை


> காம-ஸஞ்ஜீவ ஔஷதம்னு சொல்றாங்களே, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமனைப்
> பிழைப்பித்த ஸஞ்சீவி மருந்து, அதே அர்த்தம் வருது இல்ல, காமசேதுல?  அப்டீன்னா,
> காமாச்சியம்மா பேர்லதான் அந்தப் பல்கலை கட்டினாங்கன்னு சொல்ங்க!  இப்ப இல்ல
> புரீது!
>

மறைந்த பெரியவர் காமாகோடி பீடம் சந்திரசேகர சரசுவதி
ஸ்வாமிகள் கலிபோர்னியா விளக்கம் கேட்டிருக்கீங்களா?
கபிலாரண்யம் தான் கலிபோர்னியா ஆனதாம். யாழ்ப்பாணப்
புலவர் ஒருவர் கலிபோர்னியா/கபிலாரண்ய சிவன் பேரில்
பதிகம் எழுதினார். பார்த்திருப்பீங்க.

இல்லைன்னா, தேடி தரலாம்.

/க/

coral shree

unread,
Jul 17, 2011, 10:50:48 PM7/17/11
to mint...@googlegroups.com
அன்பின் திவாகர் ஜி,

//அப்படியே திருவள்ளுவர் என்ன மதம், எந்த ஊர்க்காரர் நு எழுதி அதை எதிர்காலம் படிக்கணும்னா அதை நீங்க ‘நாவல்’ வாயிலாகத்தான் சொல்லமுடியும். அப்பத்தான் ஜனங்களுக்கு விளங்கும். கற்பனையா நிஜமா என்ற மாயையில் இருந்து எதையும் பார்க்கவே மக்கள் விரும்புவார்கள்.//

அருமை ஐயா. கற்பனையில் வாதம் செய்வதில் அர்த்தமே இல்லை.....படைப்பை வைத்து படைப்பாளியின் சரித்திரத்தையே பங்கப்படுத்துவது நியாயமாகாது என்று அனைத்து ஆன்றோரும் அறிவர். இருப்பினும் பொழுது போக்கிற்காகவோ வமபிற்காகவோ ஆதாரமற்ற தகவல்கள் வைத்து வார்த்தை விளையாட்டு விளையாடுவது நல்லதா? அந்த நேரத்தில் ஏதும் நல்ல விசயங்கள் சொன்னால் எங்களைப் போன்ற தற்குறிகளும் புரிந்து கொள்வோமே...... நன்றி ஐயா.

2011/7/17 Dhivakar <venkdh...@gmail.com>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Hari Krishnan

unread,
Jul 17, 2011, 11:11:51 PM7/17/11
to mint...@googlegroups.com


2011/7/18 coral shree <cor...@gmail.com>

அருமை ஐயா. கற்பனையில் வாதம் செய்வதில் அர்த்தமே இல்லை.....படைப்பை வைத்து படைப்பாளியின் சரித்திரத்தையே பங்கப்படுத்துவது நியாயமாகாது என்று அனைத்து ஆன்றோரும் அறிவர். இருப்பினும் பொழுது போக்கிற்காகவோ வமபிற்காகவோ ஆதாரமற்ற தகவல்கள் வைத்து வார்த்தை விளையாட்டு விளையாடுவது நல்லதா? அந்த நேரத்தில் ஏதும் நல்ல விசயங்கள் சொன்னால் எங்களைப் போன்ற தற்குறிகளும் புரிந்து கொள்வோமே...... நன்றி ஐயா.

தினம் அஞ்சு திருக்குறள்--பத்தே பத்து லைன்--மனப்பாடம் பண்ணினா, ஒன்பது மாதத்துக்குள் மொத்தக் குறளும் மனப்பாடம் ஆகிவிடும்.  அதுதான் நாம் அந்தத் தெய்வப் புலவனுக்குக் காட்டும் முதல் மரியாதையாக இருக்க முடியும்.

அதுக்கெல்லாம் நமக்கெங்கே பொழுது?  அவர் என்ன ஜாதி, என்ன மதம், அவங்க அப்பா பேரு என்ன, அவரு தாடி வச்சிருந்தாரா இல்ல, தலயச் சிரைச்சிருந்தாரா.... எல்லாம் பேசி முடிச்சப்புறம் போதிருந்தா புத்தகத்தை மோந்து பாக்கலாமான்னு யோசிக்கலாம்.  அதுவரைக்கும் நமக்கும் போது போணமில்ல?  எரிஞ்ச கட்சி எரியாத கட்சி பேசவேணாம்?  அத்த தீத்ததுக்கு அப்பால அத்த படிக்கிறதா வாணாவான்னு ரோசிக்கலாம்.  அய்ய. புர்தா?

s.bala subramani B+ve

unread,
Jul 17, 2011, 11:27:37 PM7/17/11
to mint...@googlegroups.com

கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவ நாட்டை பற்றி 10 ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டுகள் பேசுகிறது .
 
முட்டத்தில் இருந்து பாலக்காடு வரை உள்ள பகுதிகள் வள்ளுவ நாடு என்று வழங்கியதால் அந்த பகுதியை சேர்ந்தவர் எழுதிய குறள் என்பதால் வள்ளுவன் என்ற வந்து இருக்கலாம்
 
சங்க இலக்கியத்தில் உள்ள பலர் ஊர் பெயரை தான் அடையாளம் கொண்டு இருக்கிறார்கள்
கலிங்கத்து கருவுரார்
கணியன் பூங்குன்றனார்
பிற்காலத்தில் அந்த பகுதிக்கு வேணாடு என்ற பெயர் வந்தது
வள்ளுவ  நாட்டை  சேர்ந்தவர் என்பதால்  வள்ளுவன்   என்று  வந்து பின்னர் திருவள்ளுவர் ஆகி விட்டது என்று நினைக்கிறேன் 
அவரின் கடல் பற்றிய குறிப்புகள் மிகவும் தெளிவானவை அனுபவ அறிவு இருந்தால் தான் எழுத முடியும் 
 
 
2011/7/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Geetha Sambasivam

unread,
Jul 18, 2011, 12:02:07 AM7/18/11
to mint...@googlegroups.com
அப்பாடா, நானும் சிரிச்சுக்கறேன், வயித்து வலியோட

2011/7/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 18, 2011, 12:07:25 AM7/18/11
to mint...@googlegroups.com
தென் மாவட்டங்களில் வள்ளுவர்கள் பல தொழில்களைச் செய்ததாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.  முக்கியமாய் ஜோதிடம், மருத்துவம் போன்றவை.  ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்து அவருடைய அப்போதைய கிரஹநிலவரத்துக்கு ஏற்றாற்போல் மருந்து கொடுப்பார்களாம்.  வள்ளுவன் ஒருவருக்கு மருத்துவம் செய்ய மறுத்துவிட்டால் அவர் பிழைப்பது அரிது என்றும் கூறிக் கேட்டிருக்கிறேன்.  நாடியைப் பிடித்துப் பார்த்து இன்னும் எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம் எனத் துல்லியமாய்ச் சொன்ன வள்ளுவர்களும் உண்டு.  வள்ளுவர் ஜோதிடம் மிகச் சரியாக இருக்கும் என்பார்கள்.

இந்த நாடி பார்த்துச் சொல்லும் முறை பிராமணர்களிலேயே பல பெண்மணிகளும், ஆண்களும் செய்து வந்தது.  என் அம்மாவுக்கு நாள், கிழமை, திதி முதலியன கூட குழுமணி என்னும் ஊரில் இருந்த ஒரு பாட்டி கூறி இருக்கிறார்.  என் அப்பாவுக்கும் இப்படியே பார்த்துவிட்டுக் கூறினார். 

2011/7/18 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவ நாட்டை பற்றி 10 ஆம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டுகள் பேசுகிறது .
 
முட்டத்தில் இருந்து பாலக்காடு வரை உள்ள பகுதிகள் வள்ளுவ நாடு என்று வழங்கியதால் அந்த பகுதியை சேர்ந்தவர் எழுதிய குறள் என்பதால் வள்ளுவன் என்ற வந்து இருக்கலாம்
 
சங்க இலக்கியத்தில் உள்ள பலர் ஊர் பெயரை தான் அடையாளம் கொண்டு இருக்கிறார்கள்
கலிங்கத்து கருவுரார்
கணியன் பூங்குன்றனார்
பிற்காலத்தில் அந்த பகுதிக்கு வேணாடு என்ற பெயர் வந்தது
வள்ளுவ  நாட்டை  சேர்ந்தவர் என்பதால்  வள்ளுவன்   என்று  வந்து பின்னர் திருவள்ளுவர் ஆகி விட்டது என்று நினைக்கிறேன் 
அவரின் கடல் பற்றிய குறிப்புகள் மிகவும் தெளிவானவை அனுபவ அறிவு இருந்தால் தான் எழுத முடியும் 
 
 

Dhivakar

unread,
Jul 18, 2011, 12:41:04 AM7/18/11
to mint...@googlegroups.com
மன்னிக்கவும். பேரா சுந்தரமூர்த்தி என்பதுதான் சரி. தவறுக்கு வருந்துகிறேன்.
திவாகர்

2011/7/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

N. Ganesan

unread,
Jul 18, 2011, 8:56:59 PM7/18/11
to மின்தமிழ்

On Jul 17, 7:52 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > லங்கூலம் இராவணன் இட்ட நெருப்பினால் கருப்பி ஆனது என்பார்கள்.
>
> ஓகோ அந்த ஊகமா?  ஊகமோ டாய்கவென்றான் என்று அண்மையில் சீவக சிந்தாமணி பாடல்
> ஒன்று நினைவுக்கு வந்து கேட்டிருந்தேன். அதன் விளைவா?
>
> லங்கூலம்?  அது தெரியாது.  ஆனால் கூலம் என்றால் வால் என்பது தெரியும்.
>
> குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
> ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
> தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
> மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும்.
>
> கும்பகர்ணன் வானரங்கள்மேல் குன்றுகளை எறிவான்; பூமியின்மேல் குதித்து
> (நசுக்குவான்); ஒன்றின் வாலைப் பற்றித் தூக்கி, அதையே சுழற்றி, இன்னொரு குரங்கை
> அடிப்பான்.....
>

கம்பனுக்கு இச்சொல் மிக விருப்பம் போல் தெரிகிறது.
இந்த 5 பாடல்களில் எந்த இடத்தில் வால், குரங்கு அல்லது
தவசம் (தானியம்) என்று பார்த்துச் சொல்லுங்கள்.

நன்றி,
நா. கணேசன்

(1)
6x3x86x1=6401: 'கால வெங்கனல் கதுவிய காலையில் கற்புடையவள் சொற்ற
6x3x86x2=6401: சீல நல் உரைச் சீதம் மிக்கு அடுத்தலின், கிழியொடு
நெய்தீற்றி,
6x3x86x3=6401: ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் �
அனுமன்தன்
6x3x86x4=6401: கூலம் ஆம் என, என்பு உறக் குளிர்ந்தது, அக் குருமணித்
திருமேனி.'

(2)
6x7x38x1=6840: நீலன் இட்ட நெடுவரை நீள் நில
6x7x38x2=6840: மூலம் முட்டலின், மொய்புனல் கைம்மிக,
6x7x38x3=6840: கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால்
6x7x38x4=6840: ஓலமிட்டு எழுந்து ஓடி, உலகு எலாம்.

(3)
6x12x19x1=7091: 'காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதரக் காளையே! போய்,
6x12x19x2=7091: மால் ஒன்றும் மனத்து வீர மாபெரும் பக்கனோடுங்
6x12x19x3=7091: கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன
6x12x19x4=7091: நால் ஐம்பதோடும் சென்று நமன்திசை வாயில் நண்ணி.

(4)

6x21x164x1=8736: 'காலம் ஈது'எனக் கருதிய இராவணன் காதல்,
6x21x164x2=8736: ஆல மாமரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
6x21x164x3=8736: மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
6x21x164x4=8736: கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்

(5)
6x30x41x1=9476: 'நாயகன் தலை பத்து உள; கையும் நால் ஐந்து' என்று
6x30x41x2=9476: ஓயும் உள்ளத்தேம்; ஒருவன், மற்று அவன்; வந்து, இங்கு
உற்றார்
6x30x41x3=9476: ஆயிரம் தலை; அதற்கு இரட்டிக் கையர்; ஐயா!
6x30x41x4=9476: பாயும் வேலையின் கூலம் அத்து மணலினும் பலரால்.

(6)

6x30x144x1=9579: மூல முதல் ஆய், இடையும் ஆய், இறுதி ஆய், எவையும்
முற்றும் முயலும்
6x30x144x2=9579: காலம் எனல் ஆயினன் இராமன்; அவ் அரக்கர் கடை நாளில்
விளியும்
6x30x144x3=9579: கூலம் இல் சர அசரம் அனைத்தினையும் ஒத்தனர்; குரைகடல்
எழும்
6x30x144x4=9579: ஆலம் எனல் ஆயினன் இராமன்; அவர் மீனம் எனல் ஆயினர்கள்
ஆல்.

coral shree

unread,
Jul 18, 2011, 9:06:31 PM7/18/11
to mint...@googlegroups.com
ஆகா....அருமை. பகிர்விற்கு நன்றி ஐயா. தொடருங்கள்.காத்திருக்கிறோம்.

2011/7/18 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

N. Ganesan

unread,
Jul 18, 2011, 9:14:01 PM7/18/11
to மின்தமிழ்

On Jul 18, 8:06 pm, coral shree <cora...@gmail.com> wrote:
> ஆகா....அருமை. பகிர்விற்கு நன்றி ஐயா. தொடருங்கள்.காத்திருக்கிறோம்.
>

அடுத்து, நற்றிணை 93 (வரைவு கடாயது) விளங்குகிறது.

> 2011/7/18 N. Ganesan <naa.gane...@gmail.com>

coral shree

unread,
Jul 18, 2011, 9:24:07 PM7/18/11
to mint...@googlegroups.com
நன்றி ஐயா.

2011/7/18 N. Ganesan <naa.g...@gmail.com>


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jul 18, 2011, 9:38:39 PM7/18/11
to மின்தமிழ், santhav...@googlegroups.com

ஹரிகி,


கம்பன் கூலம் என்பதை வால், குரங்குக்குப் பண்பாகுபெயர்
பயன்படுத்துகிறார்:
http://groups.google.com/group/mintamil/msg/4d930155f01856ea

அனுமன் வானில்சென்ற காட்சி 4772:
நாலினோடுஉலகம் மூன்றும் நடுக்குற,அடுக்கு நாகர்
மேலின்மேல் நின்றகாறும் சென்றகூலத்தன், 'விண்டு
காலினால் அளந்தவான முகட்டையும்கடக்கக் கால
வாலினால் அளந்தான்' என்று வானவர்மருள, சென்றான்.

இவற்றைப் பார்க்கிறபோது, நற்றிணைப் பாடலின் கூலம் = முசுக்களுக்கு ஒரு
பெயர் (வாலால் வந்த பண்பாகுபெயர்)
என்று கொண்டால் பாடலின் பொருள் சிறக்கும் என்று தோன்றுகிறது.

நற்றிணை 93 - திணை குறிஞ்சி
தோழி கூற்று:

093x01: பிரசம் தூங்க பெரு பழம் துணர
093x02: வரை வெள் அருவி மாலையின் இழிதர
093x03: கூலம் எல்லாம் புலம் புக நாள் உம்
093x04: மல்லற்று அம்ம இ மலை கெழு வெற்பு என
093x05: பிரிந்தோர் இரங்கும் பெரு கல் நாட
093x06: செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி
093x07: மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள்
093x08: நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள்
093x09: பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
093x10: பழங்கண் மாமை உம் உடைய தழங்கு குரல்
093x11: மயிர் கண் முரசினோர் உம் முன்
093x12: உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரு குரைத்து ஏ

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சென்ற நூற்றாண்டில்
உரை எழுதும்போது, கூலம் = தவசம் என்றெழுதிச்
செல்கிறார். அப்படி உரைசெய்தால் குறிஞ்சித்திணைப்
பாடலுக்குப் பொருள் சிறக்கவில்லை. தலைவன்
தலைவியை வரையாது பலகாலமாக களவொழுக்கத்தில்
பகற்குறி வந்தொழுகுதலைக் கண்டித்து அவளை
வரைந்துகொள்ள வலியுறுத்தும் பாடலிது.

உவேசா: “கருத்து: தலைவ! இனிப் பகற்குறிக்கண் வாரலை.
யாம் எம் இருப்பிடம் செல்கின்றோம். மணமுரசொலி கேட்குமுன்
தலைவி இறந்துபடினும் படும் ஆகலின் விரைந்து வந்து
வரைந்துகொள் என்று வரைவு கடாயினாள்.”

கூலம் = முசுக் குரங்கு (லாங்-கூலம், :Langur) என்று எடுத்துப்
பொருளைக் காண்போம்.

பிரசம் தூங்க = மரங்களின் கிளையெலாம் தேன்கூடுகள்
தொங்கி நிற்ப
பெரும்பழம் துணர = பெரிய பெரிய பலா போன்ற பழங்கள்
குலைகுலையாய்ப் பழுக்க
அருவிகள் இடையறா ஓசை எழுப்ப (மண முரசுடன் ஒப்பிடலாம்).

கூலம் எல்லாம் புலம்புக - பலா போன்ற பழங்களையும்,
தேனிறால்களையும் துய்த்த கூலம் (முசுக்கள்) மலையிறங்கி
சமவெளிகளுக்குச் சென்றுவிட (தலைவன் களவொழுக்கத்தில்
துய்த்து நீங்குதலைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.)

கூலம் எல்லாம் புலம் புக - தானியம் எல்லாம் நிலத்தில் புக
(விளைய) என்பதைவிட கூலம் = குரங்கு என்றால் பொருள்
சிறக்கிறது.

நாளும் வளம்கொழிப்பதாக இருக்கிறது எனக் கண்டார்
வியப்ப (பகற்குறிக்கு தலைவன் அடிக்கடி வருதலைக் குறிப்பால்
சொல்கிறாள் தோழி)

பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட - களவொழிகிப் பிரிந்தவர்
வருந்துகிற மலை நாடனே!

மணமுரசு கொட்டி தலைவியை வரைய வா என்று
தலைவனை அறிவுறுத்துகிறாள் அவளின் தோழி.

உவேசா: “முடிபு: பெருங்கல் நாட, உயிர்க் குறியெதிர்ப்பை
பெறலருங்குரைத்து, செல்கம் -எழுமோ என முடிக்க.


நா. கணேசன்


பின்னத்தூரார்:
". மலையனார்
திணை : குறிஞ்சி.

துறை : இது, வரைவுகடாயது.
(து - ம்,) என்பது, தலைவன் வரையாது களவொழுக்கத்துப் பலகாலும்
பகற்குறி வந்தொழுகுதலை விலக்கித் 'தோழி யாம் சேரியின் கண்ணே
செல்லுகின்றேம்; நீ வாழ்க; நின்னைப் பிரிதலினாலாற்றாளாய தலைவியின்
மெய்முன்னமே மாமையுடையதாதலின், இனிநின் மணமுரசொலி கேட்குமுன்
இறந்துபடுமதுகா'ணென அவன் வரையுமாற்றானே வெளிப்படையாக அவலித்துக்
கூறாநிற்பது.

(இ - ம்.) இதனை “நாற்றமுந் தோற்றமும்” (தொல்-கள- 23) என்னும்
நூற்பாவின்கண் “அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்” என்பதனால்
அமைத்துக்கொள்க.

பிரசந் தூங்கப் பெரும்பழந் துணர

வரைவெள் ளருவி மாலையின் இழிதரக்

கூலம் எல்லாம் புலம்புக நாளும்

மல்லற்று அம்மஇம் மலைகெழு வெற்பெனப்
5
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட!

செல்கம் எழுமோ சிறக்கநின் ஊழி

மருங்கு மறைத்த திருந்திழைப் பணைத்தோள்

நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்

பூண்தாழ் ஆகம் நாணட வருந்திய
10
பழங்கண் மாமையும் உடைய தழங்குகுரல்

மயிர்க்கண் முரசின் ஒருமுன்

உயிர்க்குறி எதிர்ப்பை பெறலருங் குரைத்தே.

(சொ - ள்.) பிரசம் தூங்க பெரும்பழம் துணர வரை வெள்அருவி மாலையின்
இழிதர - கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள்
குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர;
புலம் கூலம் எல்லாம் புக - சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய
பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாளும் இம் மலைகெழு வெற்பு
மல்லற்று எனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் - நாட - எக்காலத்தும்
சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப்
பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; செல்கம் எழுமோ
சிறக்க நின் ஊழி - யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள்
நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர்
நுசுப்பின் மெல்லியல் குறுமகள் - பக்கங்கள் மறையப் பூண்ட திருந்திய
கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய
சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய பழங்கண்
மாமையும் உடைய-பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற
பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; தழங்கு குரல் மயிர்க்கண் முரசின்
ஓரும் முன் - ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற
நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று
கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; உயிர் குறிஎதிர்ப்பை பெறல்
அருங்குரைத்து - இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப்
பெறுதற்கரிய தொன்றாகுங்காண்; எ - று.

(வி - ம்.) கூலம் 16. :- நெல்லு, புல்லு, வரகு, சாமை, தினை, இறுங்கு,
தோரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, துவரை, கடலை,
மொச்சையென்ப; சோளமும் கம்பும் சேரப்பதினெட்டெனவுமுரைப்ப; "பதினெண் கூலமு
முழவர்க்கு மிகுக" என்றார் பிறரும். மயிர்க்கண்முரசம் - மயிர்சீவாத
தோலாற்கட்டிய முரசம்.

பணைத்தோள் - முன்பு பருத்ததோ ளென்றவாறு. தோள் நெகிழ்ச்சி நீயறியாவாறு
கலன்கள் மறைப்பனவென்பாள் மருங்கு மறைத்த இழைத்தோளென்றாள். தான்கொண்ட
காதலை நின்பாற் கூறுதற்கு நாண் தன்னை வருத்துதலாலே பழங்கண்கொண்டன
குறுமகளாக மெனவுமாம்.

நின்னைப் புகல்புக்கேமைக் கைவிடுகின்ற நினது மலையாயிருந்தும்
பிரிந்தோரிரங்குமாறு இன்னும் இங்ஙனம் வளனுடைத்தா யிரா நின்றது; இஃதென்ன
வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது காண்க. மெய்ப்பாடு -
அவலத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

(பெரு - ரை.) துணர: செயவெனெச்சம். மாலையின் - மாலைபோல. புலம் -
நிலம். மல்லற்று - மல்லலையுடையது. மலை - பக்கமலை. பழங்கண் - துன்பம்.
முரசின் - முரசினால்.

Mohanarangan V Srirangam

unread,
Jul 18, 2011, 9:50:45 PM7/18/11
to santhav...@googlegroups.com, மின்தமிழ்


2011/7/19 N. Ganesan <naa.g...@gmail.com>


ஹரிகி,


கம்பன் கூலம் என்பதை வால், குரங்குக்குப் பண்பாகுபெயர்
பயன்படுத்துகிறார்:


 
பண்பாகுபெயரா? :-( 



 

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

N. Ganesan

unread,
Jul 18, 2011, 9:58:53 PM7/18/11
to மின்தமிழ்

On Jul 18, 8:50 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/7/19 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
> > ஹரிகி,
>
> > கம்பன் கூலம் என்பதை வால், குரங்குக்குப் பண்பாகுபெயர்
> > பயன்படுத்துகிறார்:
>
> பண்பாகுபெயரா? :-(
>
>

ஸாரி, ரங்கன். என்பிழை.

கூலம் = சினையாகுபெயர்.

அன்புடன்
நா. கணேசன்

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Jul 18, 2011, 10:35:29 PM7/18/11
to mint...@googlegroups.com


2011/7/19 N. Ganesan <naa.g...@gmail.com>

கம்பனுக்கு இச்சொல் மிக விருப்பம் போல் தெரிகிறது.
இந்த 5 பாடல்களில் எந்த இடத்தில் வால், குரங்கு அல்லது
தவசம் (தானியம்)  என்று பார்த்துச் சொல்லுங்கள்.

நன்றி,
நா. கணேசன்

(1)
6x3x86x1=6401: 'கால வெங்கனல் கதுவிய காலையில் கற்புடையவள் சொற்ற
6x3x86x2=6401: சீல நல் உரைச் சீதம் மிக்கு அடுத்தலின், கிழியொடு
நெய்தீற்றி,
6x3x86x3=6401: ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் �
அனுமன்தன்
6x3x86x4=6401: கூலம் ஆம் என, என்பு உறக் குளிர்ந்தது, அக் குருமணித்
திருமேனி.'
 
இரணியன் வதைப் படலப் பாடல்.  பெரிய குழியை வெட்டி, முழுக்க விறகால் நிறைத்து, எரிமூட்டி, பிரஹலாதனை  அந்தத் தீயில் அமிழ்த்தினார்கள்.  தீ, பிரஹலாதனைச் சுடவில்லை.  குளிர்ந்திருந்தது.  எப்படித் தெரியுமா?  அனுமனுடைய வாலுக்கு நெய்யில் தோய்த்த துணிச் சுருள்களைச் சுற்றி, காலக்னியையே மூட்டினீர்களே, அந்தச் சமயத்தில் சீதையின் நல்லாசியால் அனுமனுடைய வால் எப்படிக் குளிர்ந்திருந்ததோ, அப்படிக் குளிர்ந்திருந்தது பிரஹலாதனுடைய மேனி.
 
கம்பன் இரணியன் வதைப் படலத்தைதான் முதலில் இயற்றினான்.  பிறகு, அதை ராமாயணத்தில் எங்காகிலும் ஒருபகுதியில் சேர்க்க நினைத்திருக்கிறான்.  வெகு நேர்த்தியாக ‘உன்னை விடப் பெரிய மூர்க்கன், முரடன், முட்டாள் எல்லாம் பொசுங்கிப் போயிருக்கிறார்கள் அப்பா!  நான் சொல்வதைக் கேள்.  இரணியன் என்றொருவன் இப்படித்தான் இருந்தான்.  உன்னைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தவன்.  அவனே அவனுடைய ஆணவத்தால் அழிந்தான் என்றால், நீ எம்மாத்திரம்’ என்று விபீஷணன் கேட்டு அறிவுரை சொல்லும் இடத்தில் நரசிம்மாவதாரத்தைப் பற்றி தான் இயற்றிய தனிப் பகுதியைக் கொண்டு வந்து இணைத்தான்.  இந்த இணைப்பு seamless ஆக இருக்க வேண்டுமல்லவா?  அதற்காக, அப்படிச் சேர்க்கும் சமயத்தில் சமயோசிதமாக இணைத்திருக்கும் பாடல் இது என்பது என் தனிப்பட்ட கருத்து.  இரணியன் வதைப் படலம் முழுக்க, ராமாயணத்துக்குத் தொடர்பான செய்தியை அடக்கிய ஒரே பாடல்.

(2)
6x7x38x1=6840: நீலன் இட்ட நெடுவரை நீள் நில
6x7x38x2=6840: மூலம் முட்டலின், மொய்புனல் கைம்மிக,
6x7x38x3=6840: கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால்
6x7x38x4=6840: ஓலமிட்டு எழுந்து ஓடி, உலகு எலாம்.


சேதுபந்தனப் படலம்.  நீலன் கடலில் வீசிய பெரிய மலையானது, கடலின் அடித்தளத்துக்குப் போய் அமுங்கும்படி வீழ்ந்து, கடலின் தரைப் பகுதியான அதன் மூலத்தைப் போய் முட்டிய காரணத்தால், (மலை கடலில் வீழ்ந்த காரணத்தால் the quantum of water displaced by the hill falling with such force in the ocean rolled up over the shores) கடல் பொங்கிக் கரையைக் கடந்து வந்தது.  (கம்பன் யுரேகா என்று கத்தினானா, தெரியாது!) அப்படி, திடீரென்று கடல் பொங்கியதால், உலகத்திலுள்ள மற்ற பிராணிகளெல்லாம் ஓலமிட்டபடி, உலகின் மற்ற பாதுகாப்பான பகுதிகளுக்கு ஓடின.  (வைமுகோ, கூலம் என்பதற்கு ‘மற்ற பிராணிகள்’ என்று உரையெழுதுகிறார்.  அங்கேயே இருந்த மற்ற குரங்குகள் ஓலமிட்டுத் தாண்டிக் குதித்து மீண்டன என்றும் பொருள்கொள்ள ஏது உண்டு.)
 
 

(3)
6x12x19x1=7091: 'காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதரக் காளையே! போய்,
6x12x19x2=7091: மால் ஒன்றும் மனத்து வீர மாபெரும் பக்கனோடுங்
6x12x19x3=7091: கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன
6x12x19x4=7091: நால் ஐம்பதோடும் சென்று நமன்திசை வாயில் நண்ணி.


அணிவகுப்புப் படலப் பாடல்.

யார்யார் எங்கெங்கே நிற்க வேண்டும் என்று வியூகம் வகுக்கும் ராவணன், மகோதரனிடத்தில் சொல்வது.

காலனுடைய மகிழ்ச்சியை அடக்கிய மகோதரா!  போராகிய பித்து தலைக்கு ஏறியவனான மஹாபார்ஸ்வான் (மாபெரும்பக்கன்) துணையிருக்க, வாலுடன் கூடிய இருநூறு வெள்ளம் குரங்ககளைக் காலன் திசையை நோக்கிச் செலுத்துவாய்.

கூலம் என்பது லாங்கூலம் என்பதன் முதற்குறை என்று வைமுகோ குறிப்பிடுகிறார்.  குலம் என்பதன் நீட்டல் விகாரமாகக் கருதவும் இடமுண்டு என்பது அவர் கருத்து.
 
(4)

 

6x21x164x1=8736: 'காலம் ஈது'எனக் கருதிய இராவணன் காதல்,
6x21x164x2=8736: ஆல மாமரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
6x21x164x3=8736: மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
6x21x164x4=8736: கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்

பிரமாத்திரப் படலம்.

இராவணன் காதலாகிய இந்திரஜித், விரைவாக ஆலமரத்தடியை அடைந்தான்.   அந்தச் சமயத்தில் விபீஷணனும் ராமனும் களத்தில் இல்லாததால், பிரமாஸ்திரத்தை விட இதுவே நல்ல காலம் என்று நினைத்தான்.  ஒழுக்க வரம்பை   மீறியவர்களான அரக்கப் பார்ப்பனர்கள், பிரமாஸ்திரத்தைச் செலுத்தும் முன்னர்ச் செய்யவேண்டிய மூலவேள்விக்கு உரிய பொருள்களைக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

(இப்படிப்பட்ட காரியங்களை ஆலமரத்தடியில் செய்யவேண்டும்.  நிகும்பியைல யாகமும் ஆலமரத்தடியில் நடந்தது.  மஹாபாரதத்தில் கடைசியில், பாண்டவர்களைக் கொல்வதற்காக அஸ்வத்தாமன் பூசனை செய்த இடமும் ஆலமரத்தடியே.)

அப்பறம் இன்னொண்ணு.  இந்தப் பாப்பானுவ ராச்சசப் பாப்பானுவ.  ராவணப் பாப்பான் தமிழன்.  ஆகையால், ராச்சசப் பாப்பான்களுக்கு இருந்தது செங்கிருத வெறியா அல்லது செந்தமிழ்ப் பற்றா என்பது எனக்குத் தெரியாது. :))

(5)
6x30x41x1=9476: 'நாயகன் தலை பத்து உள; கையும் நால் ஐந்து' என்று
6x30x41x2=9476: ஓயும் உள்ளத்தேம்; ஒருவன், மற்று அவன்; வந்து, இங்கு
உற்றார்
6x30x41x3=9476: ஆயிரம் தலை; அதற்கு இரட்டிக் கையர்; ஐயா!
6x30x41x4=9476: பாயும் வேலையின் கூலம் அத்து மணலினும் பலரால்.

மூலபல வதைப் படலம்,

ராவணனுக்கு ஏதோ பத்துத் தலைகள் இருப்பதாக அல்லவோ கருதிக் கொண்டிருந்தோம்!  இதோ இப்போது வந்திருக்கின்ற அரக்கக் கூட்டத்துக்கோ, ஆயிரந் தலைகளும் ஈராயிரம் கரங்களும் உள்ளனவே!  (இப்படிப்பட்டவர்கள் ஒன்றா இரண்டா?)  விரிந்து கிடக்கும் கடற்கரையில் அலைகள் பாய்ந்து நனைக்கப்பெற்ற மணல் குவியலில் உள்ள மணல்துகள்களின் எண்ணிகையைக் காட்டிலும் அதிகமானவர்கள்.  

கூலம்: குவியல். 

 

(6)

6x30x144x1=9579: மூல முதல் ஆய், இடையும் ஆய், இறுதி ஆய், எவையும்
முற்றும் முயலும்
6x30x144x2=9579: காலம் எனல் ஆயினன் இராமன்; அவ் அரக்கர் கடை நாளில்
விளியும்
6x30x144x3=9579: கூலம் இல் சர அசரம் அனைத்தினையும் ஒத்தனர்; குரைகடல்
எழும்
6x30x144x4=9579: ஆலம் எனல் ஆயினன் இராமன்; அவர் மீனம் எனல் ஆயினர்கள்
ஆல்.

மூலபல வதைப் படலம்.

முதுறு் காரணமும், இடையும் இறுதியுமான எல்லாப் பொருளும் முற்றுவதற்கு (சூழ்வதற்கு) உரிய இடம் ஆகி, யுகத்தின் அந்தமான காலமாக விளங்கினான்.  அந்த அரக்கர் படையோ, கணக்கில்லாத (வரம்பில்லாத) அண்ட சர, அசரங்களை ஒத்தனர்.  ராமனோ, கடலிலிருந்து எழுந்த ஆலகால விஷமாக மாறினான்.  கடலில் விஷம் பரவும்போது, கடலை விட்டு வெளியேறித் தப்பித்துக்கொள்ள முடியாத மீன்களைப் போல் ஆயினர் அரக்கர்கள்.

கூலம்: வரம்பு, கணக்கு, எல்லை, அளவு.

கூலம் பண்பாகு பெயர் என்றால் எவ்வாறு என்பது எனக்குப் புரியவில்லை.  விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Hari Krishnan

unread,
Jul 18, 2011, 10:50:11 PM7/18/11
to mint...@googlegroups.com


2011/7/19 coral shree <cor...@gmail.com>

ஆகா....அருமை. பகிர்விற்கு நன்றி ஐயா. தொடருங்கள்.காத்திருக்கிறோம்.

எங்கூர்ல ஒருத்தர் உண்டு.  காரண காரியம் இல்லாம கவிதை படிக்கிற சமயத்திலெல்லாம் சூசூசூ என்று உருகி உருகி, பல்லியாட்டம் சத்தம் கிளப்புவார்.  ஒருமுறை ‘மண்ணுலகத்து நல்லோசைகள்’ என்ற தலைப்பில் கவியரங்கு.  எங்களுக்கு இருபதுகளின் தொடக்கப் பருவம்.  இசைக்கவி ரமணன் கவிதை படிக்க வந்து உட்கார்ந்திருக்கிறான்.  ஒரு சின்ன முன்னுரை சொல்லிவிட்டு, ‘மண்ணுலகத்து நல்லோசைகள்’ என்று தலைப்பைப் படித்தான்.  உடனே சூசூசூ!

கையிலிருந்த காகிதத்தை மடக்கிக் கொண்டு ஒரு நிமிஷம் அவரையே உற்றுப் பார்த்த ரமணன் கேட்டான்: ‘ஓய்!  இப்பத்தான் தலைப்பையே படிக்கிறேன்.  அதுல என்னத்தங்காணும் கண்டீரு... இப்புடிப் போட்டு ரசிக்கிறீரே!’:))

(ரங்கா!  சூசூசூ பல்லி யாருன்னு தெரிதா?)

N. Ganesan

unread,
Jul 18, 2011, 10:51:28 PM7/18/11
to மின்தமிழ், santhav...@googlegroups.com

On Jul 18, 9:35 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> கூலம் பண்பாகு பெயர் என்றால் எவ்வாறு என்பது எனக்குப் புரியவில்லை.
>  விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>

தவறாகச் சொல்லியுள்ளேன். ரங்கன் சுட்டிக்காட்டினார்.
கூலம் = குரங்கு (முக்கியமாக, அனுமன் குரங்கு: நாங்கூலம்/லாங்கூலம்)
- உடலை விட நீண்ட வால் நாங்கூழை/லாங்கூலத்துக்கு.
எனவே, அந்த அங்கத்தைக் கொண்டு இந்த இனத்தைக் குறிப்பது சினையாகுபெயர்.

*நாங்கூழை - நாங்கூலம்/நாங்கூடம்/நாங்குட்டம் என்று வடமொழிகள் பலவற்றில்
என்று இவ்விழையில் சொன்னேன். ஒப்பு: தாழ்- என்னும் வேரின் அடிப்பிறந்த
தாழை, தாட (தாடங்கம், தாடி (toddy) - கள்ளு), தால என்றாதல் போல [1]
கூழை ‘வால்’, கூட/குட்ட (நாங்கூட, நாங்குட்ட), கூலம் என்றானது.

--------

ஒரு கேள்வி: யாராவது விளக்குங்கள்:
காப்பியை தனித்தமிழில் குளம்பி என்கிறார்கள்.
மாடு போன்ற பிராணிகளின் குளம்பு போலிருப்பதால்:
http://www.wisdomcoffee.com/images/coffeebean.jpg

இப்படிப் பெயரிடுதலுக்கு இலக்கணப்பெயர் என்ன?


நன்றி,
நா. கணேசன்

உசாத்துணை [1] :
கூழை, கூடம், கூலம் என்பதற்கு ஒப்பிட,
தாழை, தாட, தாலம் (பனை பேர்கள்)
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html

coral shree

unread,
Jul 18, 2011, 11:11:06 PM7/18/11
to mint...@googlegroups.com
ஐயா......இந்த தொடருதலுக்குத்தான் அந்த பதில்.......நன்றி ஐயா.

2011/7/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jul 18, 2011, 11:12:27 PM7/18/11
to மின்தமிழ்

> காப்பியை தனித்தமிழில் குளம்பி என்கிறார்கள்.
> மாடு போன்ற பிராணிகளின் குளம்பு போலிருப்பதால்:
http://www.wisdomcoffee.com/images/coffeebean.jpg
>
> இப்படிப் பெயரிடுதலுக்கு இலக்கணப்பெயர் என்ன?
>

உவமையாகுபெயர்.

சரியா?

coral shree

unread,
Jul 18, 2011, 11:14:27 PM7/18/11
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,

தெளிவான விளக்கங்களுக்கு நன்றி. தங்களுடைய முழு உரையும் வாசிக்க சுட்டி அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

2011/7/18 Hari Krishnan <hari.har...@gmail.com>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Mohanarangan V Srirangam

unread,
Jul 19, 2011, 8:47:27 AM7/19/11
to mint...@googlegroups.com


2011/7/19 Hari Krishnan <hari.har...@gmail.com>
--


சூ சூ சூ சூ 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 20, 2011, 6:18:06 AM7/20/11
to mint...@googlegroups.com
அண்ணா,

வணக்கம்ணா.

செம காமெடியாச் சொன்னீங்ணா

அன்புடன்,

தி.பொ.ச.



2011/7/17 Hari Krishnan <hari.har...@gmail.com>


2011/7/17 விஜயராகவன் <vij...@gmail.com>
வெள்ளையர் ஆரியர்கள் என யார் சொன்னது??


விஜயராகவன்

அது ஒண்ணியுமில்ல.  ஆறியர்னு சொல்ல வந்தாரு.  டைப்படிக்க சொல்லோ தப்பா உளுந்திருச்சு.  வெள்ளையர் ஆரம்ப காலத்துல ரொம்ப ஜூடா இருந்தாங்கன்னு கவான் புவான், மாகியான் எல்லாரும் எழுதி வச்சிருக்காங்க.  சூடா இருந்தவங்க, ஆறிப் போயிட்டாங்கன்னு கணேசரு சொல்றாரு. அம்ட்டுதேங்.... நீங்க எதிராறியர் ஆய்டாதீங்க ஸாம்யோவ்!



--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 20, 2011, 6:22:08 AM7/20/11
to mint...@googlegroups.com
// கூலம் (= வால்) என்னும் சொல்லில் ழகரம் ஒளிந்திருக்கிறது
என்றேன் அல்லவா? அதற்கு இன்னொரு சான்றும் தரமுடியும்.//

ஒளிந்திருக்கிறது என்றால் எப்போ அது வேலிய விட்டு வெளியே வரும் என்று சொல்லுங்கள்.

ஒருவேளை அதுக்கும் நல்ல நேரம் இருக்கிறதோ? 

2011/7/17 N. Ganesan <naa.g...@gmail.com>
ஹரிகி,

கூலம் (= வால்) என்னும் சொல்லில் ழகரம் ஒளிந்திருக்கிறது
என்றேன் அல்லவா? அதற்கு இன்னொரு சான்றும் தரமுடியும்.

ழகரம் வடக்கே டகரமாகவோ, லகரமாகவோ திரியும்.
சோழ சக்கிரவர்த்திபேரன் அனந்தவர்மன் பூரி ஜெகன்னாதர் கோவில்கட்டினான்.
உபயகுலத் தோன்றல் அவன். ஆதலால்,
சோடகங்க தேவன் எனக் கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகிறான்.
சோழ > சோட.  ப்ராகிருதத்தில் நெடில் குறுகும்போது
டகரம் இரட்டிக்கும். உ-ம்: சம்மட்டி (ஹேமர்) என்பதற்கான
தொல்-த்ராவிடச் சொல் கூடம்:குட்டம் (கூடு-/குட்டு-) ஆகிறது
அதுபோல், நாங்கூழ- > நாங்கூட > நாங்குட்ட/லாங்குட்ட ஆதலைப்
பல வடமொழிகளில் காண முடிகிறது.

நா. கணேசன்

Comp. Dictionary of Indo-Aryan Languages (CDIAL, prof. Ralph L.
Turner)

lāṅgūlá 11009 lāṅgūlá (lāṅgula -- Pañcat., laṅgula -- lex.) n. ʻ tail
ʼ ŚāṅkhŚr., adj. ʻ having a tail ʼ MBh., ʻ penis ʼ lex. 2. *lāṅguṭa
-- . 3. *lāṅguṭṭa -- . 4. *lāṅguṭṭha -- . 5. *lēṅgula -- . 6.
*lēṅguṭṭa -- . [Cf. lañja -- 2. -- Variety of form attests non --
Aryan origin: PMWS 112 (with lakuṭa -- ) ← Mu., J. Przyluski BSL 73,
119 ← Austro<-> as.]
1. Pa. laṅgula -- , na° n. ʻ tail ʼ, Pk. laṁgūla -- , °gōla -- ,
ṇaṁgūla -- , °gōla -- n.; Paš. laṅgūn n. ʻ penis ʼ; K. laṅgūr m. ʻ the
langur monkey Semnopithecus schistaceus ʼ; P. lãgur, lag° m. ʻ monkey
ʼ; Ku. lãgūr ʻ long -- tailed monkey ʼ; N. laṅgur ʻ monkey ʼ; B.
lāṅgul ʻ tail ʼ, Or. laṅgūḷa, lāṅguḷa; H. lagūl, °ūr m. ʻ tail ʼ,
laṅgūr m. ʻ longtailed black -- faced monkey ʼ; Marw. lagul ʻ penis ʼ;
G. lãgur, °ul (l?) m. ʻ tail, monkey ʼ, lãguriyũ n. ʻ tail ʼ; Ko.
māṅguli ʻ penis ʼ (m -- from māṅgo ʻ id. ʼ < mātaṅga -- ?); Si. nagula
ʻ tail ʼ, Md. nagū.
2. Or. lāṅguṛa, nā° ʻ tail ʼ, nāuṛa ʻ sting of bee or scorpion ʼ (<
*nāṅuṛa?); Mth. lã̄gaṛ, nāgṛi ʻ tail ʼ; M. nã̄goḍā, nã̄gāḍā, nã̄gḍā,
nã̄gā m. ʻ scorpion's tail ʼ.
3. Sh.jij. laṅuṭi ʻ tail ʼ, Si. nan̆guṭa, nag°, nakuṭa. -<-> X lamba
-- 1: Phal. lamḗṭi, Sh.koh. lamŭṭo m., gur. lamōṭṷ m.
4. Pa. naṅguṭṭha -- n. ʻ tail ʼ.
5. A. negur ʻ tail ʼ, B. leṅguṛ.
6. Aw.lakh. nẽgulā ʻ the only boy amongst the girls fed on 9th day of
Āśvin in honour of Devī ʼ.
Addenda: lāṅgūlá -- [T. Burrow BSOAS xxxviii 65, comparing lāṅgula --
~ Pa. nȧguṭṭha -- with similar aṅgúli -- ~ aṅgúṣṭha -- , derives <
IE. *loṅgulo -- (√leṅg ʻ bend, swing ʼ IEW 676)]
1. Md. nagū (nagulek) ʻ tail ʼ (negili ʻ anchor ʼ?).
†*lāṭyatē ʻ is shaken ʼ see laṭati.


On Jul 17, 9:14 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> கூலம் (= வால்) தமிழ்ச்சொல் தான். பிங்கலந்தை,
> திவாகர நிகண்டுகளில் இருக்கிறது. மிகப் பழைய
> காலத்தில் கூழை என்பதாக இக் “கூலம்” இருந்திருக்க
> வேண்டும் எனக் கருதுகிறேன். வடக்கே “ழ” இல்லாததால்
> கூலம் ஆகிவிட்டது. சம்ஸ்க்ருதத்தில் லாங்-கூலின்
> என்றால் முசு (Hanuman langur) என்று பொருள்.
> நாங்கூழை > நாங்கூழம் > லாங்கூலம் ஆகியிருக்கும்.
>
> நா - என்றால் தொங்குதல். (1) நாக்கு (2) நாஇ (நாய்)  (தொல். எழுத். 58,
> உரை.). “தாங்கி நாங்கிப் போக” = தணிந்து தொங்கிப் போக.
>
>  நா + கூழை (= வால்) > நாங்கூழம் > லாங்கூலின்.
>
> குழைத்தல் = அசைத்தல். நாய் வாலைக் குழைக்கிறது.
> காற்றில் அலையும் மர இலையைக் குழை என்கிறோம்.
> ”குழைக்கின்ற கவரி யின்றி” - கம்பன், கவரிமா (யாக்) வாலை
> அசைத்தாட்டுதலைக் கம்பன் காட்டுகிறான்.
>
> கூழை/கூலம் (“வால்”) <  குழை-
> கூழை¹ kūḻai
> , n. < குழை-. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். கூழை விரித்தல்
> (தொல். பொ. 262). 2. Feathers, plumage; இறகு. (திவா.) 3. Peacock's
> tail; மயிற்றோகை. (பிங்.) 4. Tail; வால். புன்கூழையங் குறுநரி (கல்லா.
> 89, 18).
>
> தோகை < தோகு- (தொங்கு-)
>
> ------------
>
> ஒப்புமைக்கு மேலும் சில சொற்கள்:
>
> குழு- என்றால் குடைதல் என்ற பொருள். குழு > உழுதல் (Cf. கொழு).
> நாங்குழு = நாங்கூழ் = மண்ணைக் குடையும் மண்புழு.
>
> நாங்குழு, நாங்கூழ் = கலப்பை. இதில் இருந்து பிறக்கும்
> தமிழ்ச் சொல் நாஞ்சில் ‘கலப்பை’. வடக்கே, நாங்குழு ‘கலப்பை’
> நாங்கல், லாங்கல, லாஞ்சல என்றெல்லாம் சிதைவதை நோக்குக.
>
> நாங்கூழம் > இதுமாதிரி இருப்பது நாங்கூரம்/நங்கூரம் ஆகிறது.
> ழ > ர/ல உதாரணங்கள்: நாங்கூரம்/நங்கூரம் “anchor of a ship" (கலப்பை
> உருவில் இருப்பதால்). நாங்குதல் - தொங்குதல், கப்பலின் அடியே.
> அதுபோல, நாங்கூழை > நாங்கூலி > லாங்கூலி (ஸம்ஸ்க்ருதம்).
> இந்த த்ராவிட, வடமொழி சொற்களில் இருந்து பிறந்த
> ஆங்கிலச் சொல்: Langur.
>
> 3 வகை லாங்கூலி/நாங்கூழை உள்ளன. அவை யாவுக்கும்
> வால் உடலை விட நீளமானது.http://en.wikipedia.org/wiki/Langurs
> Langur (leaf monkey) group Genus Trachypithecus - lutungs
>  Genus Presbytis - surilis
>  Genus Semnopithecus - gray langurs
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
>

> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
361.gif

N. Ganesan

unread,
Aug 19, 2011, 10:18:48 PM8/19/11
to மின்தமிழ்

On Jul 17, 9:14 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> On Jul 17, 7:52 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
>
> > 2011/7/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > > லங்கூலம் இராவணன் இட்ட நெருப்பினால் கருப்பி ஆனது என்பார்கள்.
>
> > ஓகோ அந்த ஊகமா?  ஊகமோ டாய்கவென்றான் என்று அண்மையில் சீவக சிந்தாமணி பாடல்
> > ஒன்று நினைவுக்கு வந்து கேட்டிருந்தேன். அதன் விளைவா?
>
> > லங்கூலம்?  அது தெரியாது.  ஆனால் கூலம் என்றால் வால் என்பது தெரியும்.
>
> > குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
> > ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
> > தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
> > மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும்.
>
> > கும்பகர்ணன் வானரங்கள்மேல் குன்றுகளை எறிவான்; பூமியின்மேல் குதித்து
> > (நசுக்குவான்); ஒன்றின் வாலைப் பற்றித் தூக்கி, அதையே சுழற்றி, இன்னொரு குரங்கை
> > அடிப்பான்.....
>

> > கூலம் என்றால் குப்பை மட்டும் இல்லை.  தலையிருக்க என்னவோ ஆடக்கூடாதாமே...
> > அதுவுந்தேன்....


>
> கூலம் (= வால்) தமிழ்ச்சொல் தான். பிங்கலந்தை,
> திவாகர நிகண்டுகளில் இருக்கிறது. மிகப் பழைய
> காலத்தில் கூழை என்பதாக இக் “கூலம்” இருந்திருக்க
> வேண்டும் எனக் கருதுகிறேன். வடக்கே “ழ” இல்லாததால்
> கூலம் ஆகிவிட்டது. சம்ஸ்க்ருதத்தில் லாங்-கூலின்

> என்றால் முசு (Hanuman langur) என்று பொருள்.நாங்கூழை> நாங்கூழம் > லாங்கூலம் ஆகியிருக்கும்.


>
> நா - என்றால் தொங்குதல். (1) நாக்கு (2) நாஇ (நாய்)  (தொல். எழுத். 58,
> உரை.). “தாங்கி நாங்கிப் போக” = தணிந்து தொங்கிப் போக.
>
>  நா + கூழை (= வால்) > நாங்கூழம் > லாங்கூலின்.
>
> குழைத்தல் = அசைத்தல். நாய் வாலைக் குழைக்கிறது.
> காற்றில் அலையும் மர இலையைக் குழை என்கிறோம்.
> ”குழைக்கின்ற கவரி யின்றி” - கம்பன், கவரிமா (யாக்) வாலை
> அசைத்தாட்டுதலைக் கம்பன் காட்டுகிறான்.
>
> கூழை/கூலம் (“வால்”) <  குழை-
> கூழை¹ kūḻai
> , n. < குழை-. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். கூழை விரித்தல்
> (தொல். பொ. 262). 2. Feathers, plumage; இறகு. (திவா.) 3. Peacock's
> tail; மயிற்றோகை. (பிங்.) 4. Tail; வால். புன்கூழையங் குறுநரி (கல்லா.
> 89, 18).
>
> தோகை < தோகு- (தொங்கு-)
>
> ------------
>
> ஒப்புமைக்கு மேலும் சில சொற்கள்:
>
> குழு- என்றால் குடைதல் என்ற பொருள். குழு > உழுதல் (Cf. கொழு).
> நாங்குழு = நாங்கூழ் = மண்ணைக் குடையும் மண்புழு.
>
> நாங்குழு, நாங்கூழ் = கலப்பை. இதில் இருந்து பிறக்கும்
> தமிழ்ச் சொல் நாஞ்சில் ‘கலப்பை’. வடக்கே, நாங்குழு ‘கலப்பை’
> நாங்கல், லாங்கல, லாஞ்சல என்றெல்லாம் சிதைவதை நோக்குக.
>
> நாங்கூழம் > இதுமாதிரி இருப்பது நாங்கூரம்/நங்கூரம் ஆகிறது.
> ழ > ர/ல உதாரணங்கள்: நாங்கூரம்/நங்கூரம் “anchor of a ship" (கலப்பை
> உருவில் இருப்பதால்). நாங்குதல் - தொங்குதல், கப்பலின் அடியே.

> அதுபோல,நாங்கூழை> நாங்கூலி > லாங்கூலி (ஸம்ஸ்க்ருதம்).


> இந்த த்ராவிட, வடமொழி சொற்களில் இருந்து பிறந்த
> ஆங்கிலச் சொல்: Langur.
>
> 3 வகை லாங்கூலி/நாங்கூழைஉள்ளன. அவை யாவுக்கும்
> வால் உடலை விட நீளமானது.http://en.wikipedia.org/wiki/Langurs
> Langur (leaf monkey) group Genus Trachypithecus - lutungs
>  Genus Presbytis - surilis
>  Genus Semnopithecus - gray langurs
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>

நாங்கூழை/லாங்கூரம் - இந்த வகைக் அனுமார் குரங்குகள்
தப்பிப் பிழைத்து தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்றைக்கும்
காணக் கிடைக்கின்றன.

நா. கணேசன்

http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=333965&ln=ta

அரிய வகை குரங்குகள் கண்டுபிடிப்பு - படம் .

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலையின் மேல் இருக்கிறது திருமலைநம்பி
கோயில். அங்கே சில நாட்களுக்கு முன்பு குரங்குகள் கூட்டம் கூட்டமாக
திரிந்தன. இந்த குரங்குகளின் முகம் கருப்பாகவும், வால் மிகவும்
நீளமாகவும் காணப்பட்டது. சாதாரண குரங்குகளைவிட இதன் உருவம் நீளமாகவும்
உள்ளது.

இதனை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அதிசயத்துடன் பார்த்தனர். இதுதொடர்பாக
வனத்துறையினர் சொல்லுவது அரிய வகையான இந்த குரங்குகள் மலையின் மீது உள்ள
அடர்ந்த காட்டில் மட்டுமே வசிக்கும். தற்போது ஒரு சில குரங்குகள் திசை
மாறி மலையடிவாரத்தில் சுற்றித்திரந்தன. இப்போது அந்த இனத்தில் எண்ணிக்கை
அதிகரித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த
குரங்கு தொடர்பாக ஆய்வு நடத்தினர். இந்த வகை குரங்குகள் களக்காடு புலிகள்
காப்பகத்தின் வனப்பகுதியில்தான் அரிதாக வசிக்கின்றன என தெரிவித்துவிட்டு
போனார்கள்.

Reply all
Reply to author
Forward
0 new messages