லக்னோ: துளசிதாசர் ராமாயணத்தை திருத்திய மடாதிபதி மீது துறவியர்கள் கூட்டமைப்பு கடும் கோபத்தில் இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம், சித்ரகூடம் என்ற இடத்தில் உள்ள "துளசிபீடம்' என்ற மடத்தின் மடாதிபதி ஜகத்குரு ராமநாதாசார்ய சுவாமி ராமபத்ரசயா (60) என்பவர். பார்வையற்ற இவர் வாரணாசியிலுள்ள சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலையில் படித்து தங்கப் பதக்கம் பெற்றவர்.
பிஎச்.டி., மற்றும் டி.லிட்., முடித்தவர். சித்ரகூடத்திலுள்ள, ஊனமுற்றோருக்கான பல்கலையின் துணைவேந்தர்; அங்குள்ள பார்வையற்றோர் கல்லூரிகளோடு நெருங்கிய தொடர்புடையவர்; அந்தப் பகுதியில் மிகப் பிரபலமானவர்; 80 புத்தகங்கள் எழுதியவர். சுவாமி ராமநாதர், 387 ஆண்டுகளுக்கு முன் மறைந்த கோஸ்வாமி துளசிதாசரின் புகழ்பெற்ற "ராமசரித மானஸ்' என்ற ராமாயணத்தைத் திருத்திய பதிப்பாக கோரக்பூர் கீதா பிரஸ் மூலம் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிப்புதான் சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. ராமசரித மானசில் பெரும்பகுதியை இவர் திருத்தியிருக்கிறார்;
பல முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டார் என்றும் இவர் மீது குற்றப்பத்திரிகை சுமத்தியிருக்கிறது "அனைத்திந்திய அகாடா பரிஷத்!' "சுவாமி ராமநாதர், ராமசரித மானசில் மூவாயிரம் பிழைகளைக் கண்டுபிடித்துள்ளார். "அவருக்கு எவ்வளவு துணிவிருந்தால், ராமதாசரின் படைப்பிலேயே குறை கண் டிருப்பார்? இந்தக் குற்றத் துக்குப் பரிகாரமாக, அவர் நவம்பர் 8ம் தேதி, அயோத்யாவில் கூடும் துறவியர்கள் கூட்டத்தில் நிபந் தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். "இல்லையெனில், அவர் தனது மடாதிபதி பதவியைத் துறக்க வேண்டும்' என்று அறிக்கை விட்டிருக்கிறது அகாடா பரிஷத்.
நடந்தது என்ன? கீதா பிரஸ்ஸின் ஆலோசகரும், புராண நிபுணருமான சுனிதா சாஸ்திரி, அந்தப் பதிப்பில் அயோத்யா காண்டமே இல்லை என்கிறார். "கதாவாசக' பிரேம் பூஷண்ஜி என்பவர், சில நிறுத்தக் குறியீடுகளையும், எழுத்துக்களின் மாத்திரைகளையும் மட்டுமே சுவாமி மாற்றியிருப்பதாக கூறுகிறார். சுவாமி ராமநாதர்,"இந்தப் பதிப்புக்காக நான் 50 ராமாயணப் பதிப்புக்களை ஆராய்ந்துள்ளேன். எவ்வித நிர்பந்தமும் இல்லாத நிலையில்தான் ஒரு பதிப்பாசிரியன் தான் உணர்ந்த வகையில், அந்த நூலைத் திருத்த உரிமை பெற்றிருக்கிறான். இந்த மிரட்டல்களுக்கு நான் அடிபணியப் போவதில்லை. இவர்கள் என்னிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். நான் ஒன்றும் இவர்கள் அடிமையல்ல' என்று பதிலளித்திருக்கிறார்.
மிகவும் அருமை. இதோ, பிழைகள் எப்படி ஏற்படுகின்றன என்று பார்ப்போம்:
1. "துளசிதாசரின் ராமாயனத்தில் பிழையா ?" என்ற கேள்விலேயே பிழை உள்ளது -
"ராமாயனத்தில்" இல்லை "ராமாயணத்தில்"!
2. இவ்வாறுதான், அக்காலத்தில் ஏடுகளைப் பார்த்து பிரதியெடுப்பவர்கள்,
பாவம் பிழை செய்வார்கள்.
3. இன்று நாம் பல வசதிகளைப் பெற்றிருக்கிறோம் - இருப்பினும் பிழைகள்
ஏற்படுகின்றன- ஆனால் அப்பொழுது என்ன இருந்தது? [இருட்டுதானா?] ஆனாலும்
கோடிக்கணக்கான நூல்கள் எழுதப் பட்டனவே?
இந்தியாவில் முகமதியர்களால் கோவில் நூல்நிலையங்கள் தாக்கப்பட்டு
எரியூட்டியபோது, பல நாட்கள் எரிந்தன என்று குறிப்புகள் உள்ளன.
அப்படியென்றால், எத்தனை நூல்கள் அழிந்திருக்கவேண்டும்?
கைகள் பட்ட கஷ்டம் விரயமாயிற்றே?
4. ஆகவே, 400 ஆண்டுகள் முந்தைய பிரதிகளில் பிழையுள்ளன என்பதில் ஆச்சரியம்
இல்லை.
ஆனால்.அது "ராமாயணத்தில்" பிழை, "துளசிதாசரின் ராமாயணத்தில்" பிழை,
என்றெல்லாம் விவாதிப்பது அழகாகத்தெரியவில்லை.
ஏனெனில் அத்தகைய விவாதம் "வீரமணி / திக / மார்க்ஸிஸ்ட்" போல
சென்றுவிடும்.
5. இன்னொரு முக்கியமான விஷயம் -
* இந்திய மத இலக்கியங்கள் மற்றவற்றைப் போல
"அங்கீகரிக்கப் பட்ட பதிப்பு",
* "ஏற்றுக் கொள்ளப்பட்டப் பதிப்பு",
* "ஒரு தேவதை" நேரிடையாக வந்து என்னிடம் சொல்லிய
பதிப்பு" [அது எக்காலத்தில் யாரால், எத்தனை பேரால் எழுதப் பட்டாலும்
கவலை இல்லை]
* "ஜேம்ஸ் அதிகாரத்தின்படி வெளியிட்டப் பதிப்பு",
* "மறைத்து வைக்கப் பட்ட ஆகமங்கள்" [அதாவது ஏற்றுக்
கொள்ளப் படாதது]
என்றெல்லாம் இல்லை.
*
ஆயிரக் கணக்கான தூரங்களில், நாடுகளில் (இன்றைய நிலையில்) அத்தகைய
இலக்கியங்கள் (கையெழுத்துப் பிரதிகள் / ஓலைச் சுவடிகள்) கண்டெடுக்கப்
பட்டுள்ளன.
* எல்லாமே 90% ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.
6. அந்த 10% வேறுபாட்டில் உள்ளவை -
அ, மனிதப் பிழைகள் / பிரதியெடுப்புப் பிழைகள்
ஆ. விளக்க உரையாக சேர்க்கப் பட்ட பாடல்களை, மூலப்பிரதியின்
பாடல்களாகக் கொள்வது.
இ. அத்தகைய பாடல்களிலுள்ள பாட பேதங்களை காலபேதங்களால்
பிற்பாடு படிப்பவர்கள், தவறாக இடைச் செருகல்கள் எனப் பொருள் கொள்வது
ஈ. மொழிமாற்றங்கள், அதன் பொருளைக் கொள்ளும் விதம் முதலியன
இவற்றிற்கெல்லாம் மேலாக, இக்காலத்தைல் உள்ள சில வல்லுனர்களின் அகம்பாவம்.
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஒரு துறையில் வல்லுனராக இருப்பவர்
மற்றத் துறைகளைப் பற்றி கவலைப் படாமக் முடிவிற்கு வருவது. உதாரணம்:
வானவியல் படிக்கும் இக்கால விஞ்ஞானி டெலஸ்கோப் இல்லாமல் கிரகங்களைப்
பர்த்திருக்க முடியாது என்தெல்லம் எழுதுவது, சொல்லுவது.
.............................உம். இதில் நிறைய விஷயங்கள் உள்ளன.
தனியாகவே எழுதலாம் போலிருக்கிறது!
இருப்பினும் நண்பரே, இவ்விஷயத்தில் சற்றே பொறும், "Meanwhile, the fate
of the Swami hangs in balance till November 10 when the seers
reassemble in Ayodhya. Not that he is bothered. It is just a ploy to
malign me and extort money, he told TOI and added he was not the one
to be cowed down by such threats." என்று கூறுகிறது:
http://timesofindia.indiatimes.com/city/lucknow/Ramayana-editor-invites-holy-fury-in-Ayodhya/articleshow/5185064.cms
நிச்சயமாக, எல்லா சொற்பொழிவுகள், பேச்சுகளில் சொல்லுவார்கள்,
தனிப்பாடல் திரட்டில் வருகிறது [திருநெல்வேலி சைவ சித்தாந்தப் பதிப்பகம்]
நிச்சயமாக, எல்லா சொற்பொழிவுகள், பேச்சுகளில் சொல்லுவார்கள்,
"கடன்பட்டான் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கைவேந்தன்" என்று! சொல்லுங்கள்
பார்ப்போம், இந்த பாடலுக்கு சொந்தக்காரர் யார் என்று?
ஜெயபாரதி சொல்வது தவறு.
தனிப்பாடல் திரட்டில் வருகிறது [திருநெல்வேலி சைவ சித்தாந்தப் பதிப்பகம்]
விடம்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகு போலும்
படம்கொண்ட பாந்தள் வாயிற்பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத்துற்றபோதுகடன்கொண்டார் நெஞ்சார்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.மேற்கண்ட பாடல் கம்பராமயணப் பாடல்தனே? ? ?சந்திரா
மு.வரதராசன், இது கம்பராமாயண்த்தில் இல்லை என்று என்றோ சொல்லிவிட்டார்.இன்னம்பூரான்
2009/11/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>
மு.வரதராசன், இது கம்பராமாயண்த்தில் இல்லை என்று என்றோ சொல்லிவிட்டார்.இன்னம்பூரான்
அன்னிக்கே கேட்டிருந்தா அன்னிக்கே சொல்லியிருப்பேன்.... மூவா முதல்வர் சொல்ட்டாக்க? நாஞ் சொல்கூடாதக்கு?
:-))))
| http://sivamgss.blogspot.com/2008/08/blog-post.html |
துளசியின் ராமாயணம், கம்பராமாயணத்தைப் போலவே, ராமரை ஒரு அவதாரம்
எனவும், சீதையை சாட்சாத அந்த மகாலட்சுமியே எனவும் கூறி வந்திருக்கின்றது ஆரம்பம்
முதலிலேயே. ஆகவே ராவணன் கடத்தியதும், உண்மையான சீதை அல்ல, துளசியின் கருத்துப் படி.
மாய சீதை தான் ராவணனால் கடத்தப் படுகின்றாள். அசோகவனத்தில் சிறையும் இருக்கின்றாள்.
பின்னர் அவள் தான் அக்னிப்ரவேசமும் செய்கின்றாள். உண்மையான சீதை பூமியிலே
மறைந்திருந்து வாழ்வதாயும் அக்னிப்ரவேசத்தின் போது பூமித் தாய் உண்மை சீதையை வெளியே
கொண்டுவருவதாயும் துளசி சொல்கின்றார். கிட்டத் தட்ட அதே தான் இப்போவும் சீதை நாடு
கடத்தப் பட்டபோதும் துளசி சொல்கின்றார். ஆனால் அவதூறு பேசுவது அனைத்து மக்களும்
என்றும் துளசி சொல்லவில்லை.
அதற்குள் அங்கே வால்மீகி வந்து தூங்கும் ராமரை எழுப்பி, லவ,
குசர்களைக் காட்டி ராமரின் மகன்கள் எனச் சொல்வதாயும், மகன்களை ஏற்ற ராமர், சீதையை
மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்ல, சீதை,பூமிக்குள் செல்வதாயும்,
அதன்பின்னர், ராமரின் மறைவு பற்றிய விபரங்கள் வால்மீகி சொல்லி இருப்பதை ஒட்டியே
வருகின்றது. லவ, குசர்கள் குதிரையைப் பிடிப்பது, கட்டுவது, தங்கள்
சித்தப்பன்மார்களிடமும், தந்தையின் நண்பர்களுடனும் போர் புரிந்து அனைவரையும்
தோற்கடிப்பது போன்ற விபரங்கள் வால்மீகியில் இல்லை. ஆனால் துளசி ராமாயணத்தை ஒட்டிப்
பல திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்திருக்கும் காரணத்தால்
அனைவருக்கும் மேற்கண்ட நிகழ்ச்சிகளே நடந்தவை என நினைக்கும்படியாக மனதில் பதிந்து
விட்டிருக்கிறது. இது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.//// துளசி ராமாயணத்தில் பிழை என்ற பொதுவான தலைப்பாக இருக்கிறது. ‘மாற்றி
எழுதியிருக்கிறார்’ என்று மிகவும் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது.
என்ன பிழை எந்த மாதிரியான பிழை, சொல்லியிருக்கும் செய்தியில் பிழையா
இல்லை, பாடல்களில் உள்ள கருத்தில் பிழையா.... கொஞ்சம் விரிவான விவரங்கள்
கிடைத்தால் பிழைகளைப் பற்றியும் பேச முடியும்.//
ஸ்ரீ ராமசரித மானஸம்
இது பாமரர்களுக்கு எளிய முறையில் ஞானத்தை ஊட்டும் நோக்கத்தில்
எழுதப்பட்டது. ஸந்த் துளஸீதாஸர் பல பண்டிதர்கள், ஞானிகளுடன் பழகியவர்.
வைராக்யம் மிக்க அடியார்களின் இணக்கம் இவரிடம் பற்றற்ற தன்மையை
வளர்த்திருந்தது; புகழ் பெறுவதிலும் இவர் பற்று நீங்கியவராக இருந்தார்
என்பதை வலியுறுத்துவதற்காக இதைக் கூற நேர்கிறது.
வால்மீகி: துளஸீதாஸ: கலௌ தேவீ பவிஷ்யதி |
ராமசந்த்ர கதாம் ஏதாம் பாஷாபத்தம் கரிஷ்யதி ||
- பவிஷ்ய உத்தர
புராணம்
’கலி யுகத்தில் வால்மீகி முனிவர் மீண்டும் தோன்றுவார்; ஸ்ரீராம கதையை
மக்களின் மொழியில் எழுதுவார்’என்று ஈசன் உமைக்குச் சொல்வதாக அமைந்த
ச்லோகம்.
துளஸீதாஸர், கால வழக்கப்படி முதலில் வடமொழியில்தான் ராமாயணம் எழுதினார்.
தைவ ஸம்மதம் இன்மையால் அதை மறைத்து விட்டார். மாந்தரின் அறியாமை,
காலத்தின் தேவை, அற நூல்களின்பால் சமூகம் காட்டிய அசட்டை, முகமதியரின் மத
வெறி ஆகியவற்றை இவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். ஏனெனில் ராம
காதையை மட்டும் இவர் சொல்லவில்லை; நன்னெறி, நம்பிக்கை, அறத்தில்
உறுதிப்பாடு இவற்றைக் கதை என்னும் ஊடகம் வழியே மாந்தருக்குப்
புகட்டுவதில் இவர் காட்டும் தீவிரம் இவ்வாறு முடிவுகட்டத் தூண்டுகிறது.
பெரும்பாலும் அத்யாத்ம ராமாயணத்தின் போக்கில் அமைந்துள்ளதால் மானஸத்தை
வால்மீகி ராமாயணத்தோடு ஒப்பிடுவது தவறு. மானஸத்தில் இராமபிரான்
பிறப்பிலிருந்தே பரம்பொருளாகக் காட்டப்படுகிறார். சில தோஹாக்கள் பாகவதம்
கூறும் கருத்தை ஒட்டியதாக அமைந்துள்ளன.
இவர் இராமானுச நெறியின் ஒரு பிரிவான ராமாநந்த ஸம்ப்ரதாயத்தைச்
சேர்ந்தவராயினும் சைவ – வைணவ, ஸகுண - நிர்குண, த்வைத – அத்வைதப்
பாகுபாடுகளுக்கு இடமளிக்காமல் பேசுகிறார். ஸ்ரீ ராம நாமமும், ராம
பக்தியும் மட்டுமே போதும் என்று வாசிப்பவர் மனம் ஒப்பும் வகையில்
ஸித்தாந்தம் செய்கிறார். ஸ்ரீராம பரத்வத்தை ஈசனார்தம் வாய்மொழியாகச்
சொல்வதாகவும் அமைத்துள்ளார்.எல்லாத் தரப்பினரும் மானஸத்தைப் புகழ்வதற்கு
இதுவே காரணம்.
அத்யாயங்களின் ஆரம்பத்தில் வடமொழியில் அருமையான துதிகளை அமைக்கவும் இவர்
தவறவில்லை; இவர்தம் புலமைக்கு அகச்சான்று காட்டவே இதைக் கூற நேர்கிறது.
’ஸ்வாந்த: ஸுகாய துலஸீ ரகுநாத காதாம்’ என்று கூறுவது ஸ்ரீ ராமகுணங்களை
அனுபவிப்பதில் இவருக்கிருக்கும் ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது.
கோஸ்வாமியின் தேடல் முதிய பிராயம்வரை தொடர்ந்தது. ஆன்மிகத்தின் ஆழம்
கண்டபின் ஆயுளின் இறுதிப் பகுதியில்தான் இவர் நூல்களை இயற்றினார். துளஸீ
தாஸருக்கு அரசியல் செல்வாக்கோ, அறிஞர் குழாத்தின் ஆதரவோ கிடையாது;
வடமொழியைப் புறக்கணித்ததால் நிந்தனைக்கு ஆளானவர்; இவரைச் சுற்றியிருந்தது
பஜனை பாடும் எளிய அடியார்கள்தான்.
மானஸத்தை எழுதியது ’அவத’ மொழியில் எனினும் மைதிலி, போஜ்புரி மொழிகள்
கலந்ததாக மிக எளிமையும், கருத்தாழமும் மிக்கதாக இருக்கிறது. உவமைகள் பாமர
ரஞ்ஜகமாக அமைந்துள்ளன. மானஸத்தின் வரிகள் உத்தர பாரதத்தின் ஊரகப்
பகுதியில் சொலவடைகளாகவே மாறியுள்ளன.
உலகில் இதுபோல் குறுகிய காலத்தில் இனப் பன்முகம் கொண்ட ஒரு
சமுதாயத்தின்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு நூல்
இருந்திருக்குமா தெரியவில்லை. கோஸ்வாமி கைப்பட எழுதிய பிரதிகளும் தற்போது
ஒன்றிரண்டு இருப்பதாக அறிகிறோம்.
இப்போது விஷயத்துக்கு வருவோம் –
ஸ்ரீராமபத்ராசார்யர் துறவி, மஹாபண்டிதர்; இவருக்கு அறுபது வயதாகிறது. கண்
பார்வையற்றவர்; இனிய குரலில் இவர் பாடுவது பரவச உணர்ச்சியூட்டுகிறது.
ஸம்ஸ்கார் சானலில் இவர் சொற்பொழிவு செய்வதைக் காணலாம். 2,100 சுலோகங்கள்
கொண்ட ‘பார்கவ ராகவீயம்’ என்னும் மிகப்பெரிய நூலை இவர் இயற்றியுள்ளார்;
அதில் 33 வகையான சந்தங்கள்.இது தவிர வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார்.
ஊனமுற்றவர்களுக்கான கல்வி நிறுவனங்களையும் இவர் நடத்தி வருகிறார்.
இவர் மானஸத்தில் 3,000 தவறுகள் இருப்பதாக எடுத்துக்காட்டி அவற்றைத்
திருத்தியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இவற்றில்
பெரும்பாலானவை சொற்பிழைகள்.
ஞான தாஸ், ந்ருத்ய கோபால் தாஸ் (அயோத்தி) இருவரும் எதிரணியில்.
இலக்கியப் பார்வையுடன் எழுதப்படாத துளஸீ ராமாயணத்தில் பிழை காண்பது
கோஸ்வாமியின் நோக்கத்தைப் பாழ் செய்வதாகும்.
தேவ்
தாங்கள் கூறும் பின்னணி ஒரு வகையில் கம்பராமாயணத்திற்கும் பொருந்தும்
இல்லையா? கம்பனும் ஸ்ரீராமன் விஷ்ணுவின் அவதாரமெனவும், சீதை
மகாலட்சுமியின் அம்சமென்றும் தெளிவாகக் கூறித்தானே செல்கிறார். வடக்கே
நடந்தது போல் நன்னெறிகள் தமிழகத்தில் தாழ்வுற்றுப்போக கம்பனும்
நன்னெறிகளைப் புகட்ட இராமனை ஒரு ஊடகமாகக் கொள்கிறார் என்றும் சொல்லலாம்
அல்லவா? கம்பராமாயணம் தோன்றிய காலமெது? எம்பெருமானார் காலமோ? அல்லது
அதற்கு சற்று முந்தி/பிந்தி?
க.>
2009/11/14 devoo <rde...@gmail.com>:





துளசிதாசரைக் குறை சொல்லும் நோக்கம் எதுவும் இல்லை. பிழையா எனக் கேள்வி வந்ததால் மூலமான வால்மீகியில் இருந்து துளசிதாசர் மாறுபடும் இடங்களை மட்டும் சுட்டி உள்ளேன். அக்காலத்தில் வடமொழியில் எழுதினால்தான் இலக்கிய அந்தஸ்து;அறிஞர்கள்
அதனால் வடமொழியில் புலமையை வெளியிடுவது மரபு.இம்மரபை மீறினார்
கோஸ்வாமி.காசி விசுவநாதர் அவரிடம் ராம சரிதத்தைப் பேச்சுமொழியில்
இயற்றுமாறு ஆணையிட்டதாகக் கூறுவர்.காப்பியங்களுக்கு இலக்கணம் நவரச
வெளிப்பாடு;அதற்கு முதன்மை தரவில்லை தாஸர்.சிருங்கார,வீர ரசங்களை
மானஸத்தில் அதிகம் காணமுடிவதில்லை.கடுமையான சொற்பிரயோகமும் அதிகம்
இல்லை.சமுதாயம் சமநிலை பெற பக்தி பாவமே தேவையானது என்பதை உணர்ந்ததால்
மக்கள் மொழியில் மென்மையான நடையில் இராமகாதையை அமைத்தார்; வெற்றி
கண்டார்.கீழ்மட்டம்வரை காகுத்தன் புகழ் பரவியது.
‘ஜய் ஸ்ரீராம்ஜீ கீ’
Nov 14, 5:05 am, "N. Kannan"
//தாங்கள் கூறும் பின்னணி ஒரு வகையில் கம்பராமாயணத்திற்கும் பொருந்தும்
இல்லையா?//
இரு இராமாயணங்களையும் ஒப்பிட இயலாது; இரண்டிற்கும் பின்னணி வேறு.
கம்பநாடர் முழு ஆன்மிகவாதி அல்லர்;ஒரு வள்ளலின் ஆதரவு இருந்தது.
பின்னரும் அவர் பிரபுக்களை அண்டியிருந்தமை தெரிகிறது.
தமிழ் கோலோச்சிய காலகட்டம்.அச்சூழலில் பண்பாட்டொழுக்கம் மிக உயர்ந்த
நிலையில் இருந்தது; வெளித்தூண்டுதலுக்கான தேவை இருக்கவில்லை.
ஒரு பேரிலக்கியம் படைக்கும் நோக்கம் கம்பரிடம் தெளிவாகவே தெரிகிறது.
தேவ்
அடேங்கப்பா! இது எவ்வளவோ சொல்கிறது. புரியாத பழம் புதிர்கள்
விடுபடுகின்றன. நன்றி தேவ்!
கண்ணன்
போலா என்றால் அப்பாவி; ஆம், துளஸீ தாஸரின் இயற்பெயர் அதுதான்.
ஸ்ரீராம நாம ஜபம் தவிர வேறு எதுவும் தெரியாத அப்பாவி;
காசியில் உறையும் ஈசன் - இவருக்கும் ராம மந்த்ரம் தவிர வேறு எதுவும்
தெரியாது:
‘ஜிஹ்வாக்ர பாகே வர ராம மந்த்ரம்...’
பாற்கடலிலிருந்து வெளிவந்த உயர்ந்த வஸ்துக்களை ஒன்றுவிடாமல் பிறர்
எடுத்துக் கொள்ள
எஞ்சிய நஞ்சை அருந்திய அப்பாவி; அம்பிகையின் ஸௌமங்கல்யம் துணை செய்தது.
‘வைஷ்ணவாநாம் யதா சம்பு:’ என்கிறது பாகவதம்.
இவர் துணையால் ஏதுமறியாத ராம்போலா பாரதத்தின் சூழ்நிலையை
நன்கு அறிந்து கொண்டார்.நாமச் சுவை அறிந்த இருவரும் ஒத்திசைந்து
உலகை உய்விக்க முடிவு செய்தனர்.விளைவு ’மானஸம்’
சிவபிரானுக்கான துதியுடன்தான் மானஸம் தொடங்குகிறது;
கௌரீ விவாஹத்தை முதலில் சொல்கிறார்.
ஸ்ரீராமசரிதம் எனும் மானஸப் பொய்கையில் மூழ்குபவர்
உலகியல் தரும் வெம்மையை உணரார்.
(மானஸத்தின் இறுதியில் அமைந்த ச்லோகம்)
தேவ்
அருணாசலக் கவிராயர் வரிகளோ?
ராமநாடகக் கீர்த்தனையில் வரும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாகக் கம்பன் இல்லை.
பென்னேஸ்வரன்
க.>
2009/11/15 devoo <rde...@gmail.com>:
இப்பெரியவர் ’மணிக்கொடி’ எழுத்தாளர்களின் நெருங்கிய நண்பர்.
காஞ்சி பீடாதிபதி ஜயேந்த்ர ஸரஸ்வதி அவர்களின் வடபுல யாத்திரையில்
கூட இருந்தவர்.அப்படியே துளஸீ தாஸரின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள
ஸூகர க்ஷேத்ரம் (ஸூஅர்),சித்ரகூடம்,திரு அயோத்தி போன்ற இடங்களுக்கும்
சென்று தகவல் சேகரித்தவர்.இதுபோலவே ஸமர்த்த ராமதாஸரின் சரித ஆவணங்களையும்
தகுதி வாய்ந்த
நபர்களின் துணையோடு திரட்டியுள்ளார்.பரனூர்ப் பெரியவரின் பெயர் சொன்னால்
மனம் நெகிழ்வார்.
தேவ்
கீதாம்மா, தகவலுக்கு நன்றி. எனக்கு ஸ்வாமினாத ஆத்ரேயன் தந்துள்ள துளஸியின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தவுடன் அழுகையும், ஆற்றாமையும் போட்டு ஆளை அமுத்த ஆரம்பித்துவிட்டது. தப்பிக்க வழி தெரியாமல்தான் இந்தக் கவிதையை எழுதினேன். எழுதியது பெரிய தவறு என்பதுபோல் ஆகிவிட்டது. ஏனெனில் துளஸி இப்பொழுது என் உள்ளத்தில் பேராக் குடியாக வாசம். ‘சம்பந்தம்’ கணக்காக ‘ஏதோ அருள் வந்திட்டதே’ போல சும்மா ராம ராம என்று ஓயாது தொணப்புகிறார். ஏண்டா படித்தோம் என்று ஆகிவிட்டது.
அருணாசலக் கவிராயர் வரிகளோ?
ராமநாடகக் கீர்த்தனையில் வரும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாகக் கம்பன் இல்லை.
பென்னேஸ்வரன்
>> முன்னிற்கும் பொருளை இனம் கண்டு கொண்டால் மூலப்பொருளை இனம் கண்டு
கொள்ளலாம் <<
இது மெய்யியல் கூறும் அரிய கருத்து.ஆனால் நூலாராய்ச்சி சற்று மாறானது.
மூலப் பொருளை இனம் கண்டு கொண்டால்தான் முன்னிற்கும் பொருளை இனம் காண
முடிகிறது.
தொன்மை வாய்ந்த ஒரு நூலை விமர்சிக்குமுன் அதன் ஆசிரியரின் உள்ளக்
கருத்தையும், நூல் எழுந்த சூழலையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பார்
ஆத்ரேயர்;அது நூலை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். ஆனால் எல்லா
நூல்களுக்கும் இம்முறை சாத்தியப் படாது; ஆகவே முழுமையாகப் புரிந்து
கொள்ளும் வாய்ப்பில்லாத சூழ்நிலையில் நூல் திறனாய்வில் மிகவும் கவனமாக
இருக்க வேண்டும் என்றும் கூறுவார்.வெறும் மொழிப்புலமை மட்டும் போதாது.
>> அது ஒரு விழாக்காலம் <<
திருலோக சீதாராம் அவர்களின் ’இலக்கியப் படகுகள்’ தொடரைப் பற்றியும்
நீங்கள் எழுதலாம்; ப்லவோத்ஸவம் தொடங்கினால் மின்னரங்கம் விழாக்கோலம்
பூணும்.இது பற்றியும் ஆத்ரேயர் ஒருமுறை கூறிய நினைவு.
தேவ்