2012/8/23 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
மாலைமுரசு நாளிதழில் வந்த செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன். - முனைவர் தி.நெ.
மடலாடற்குழு என்பதைப் பற்றிய சரியான புரிதல் இன்னும் தமிழரிடம்
உருவாகவில்லை என்பதையே இது காட்டுகிறது. மடலாடற்குழுக்களின் இயக்கம்
என்பது எழுதுவோரின் எண்ணவோட்டத்தைச் சாந்துள்ளது. இங்கு வெளிவரும்
ஒவ்வொரு கருத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்து என்று சிறுகுழந்தை
கூட எண்ணாது. இதே மாலைமுரசு பல்வேறு வகையான சேதிகளை வெளியிடுகிறது.
அவையெல்லாம் மாலைமுரசு நிர்வாகத்தின் நோக்கமென்று யாரேனும் கொள்வாருண்டோ?
வ.கொ.விக்கு நான் பரிவு காட்டுகிறேன் என்றொரு குற்றச்சாட்டு. நான்
வ.கொ.வியை பார்த்தது இல்லை, பழகியதில்லை. என் எண்ணப்போக்கோடு அவர்
என்றும் ஒத்துப்போனதுமில்லை. அதற்காக அவரை நான் குழுமத்திலிருந்து விலக்க
வேண்டுமென்ற அவசியமில்லை. கருத்துக்களமாகிய ஒரு மடலாடகுழுவில் வகொவி ஒரு
கருத்து, அவ்வளவுதான்.
அவரை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள்? என்றொரு கேள்வி. குடியாட்சி முறையில்
மாற்றுக்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் வரவேண்டும். விமர்சனங்களை
இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி வேண்டும். அவர் தமிழகத்தில்
வாழவில்லை. வெளிநாட்டிலிருந்து அவர் தமிழ் உலகைக் கண்டு சில மாற்றங்கள்
அவசியம் என்கிறார். உதாரணமாக, தமிழர்களுக்கு அடைமொழியிலேயே பேசும்
வழக்கமுள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்பெயரால் அழைப்பது அவமானப்படுத்துதல் ஆகாது. நாம் அறிஞர் அண்ணா என்று
அன்புடன் அழைத்தாலும் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு டாக்டர்
பட்டம் பெறும் போது அவரை வெறுமே திரு.அண்ணாதுரை என்றே அழைத்து
பட்டாளித்திருப்பர். அது அவமானமாகாது.
வகொவி தன் கருத்து நிலைப்பாட்டை விளக்கியுள்ளார், அதற்கு பதிலளிக்கும்
பொறுமை நமக்கு உண்டு, அதை விடுத்து அவர் வாயை மூடுங்கள் என்பது என்ன
நாகரீகமென்று புரியவில்லை.
பாவாணர் பற்றிய மிக உயர்ந்த கருத்துக்களும் மின்தமிழில் வந்துள்ளது.
அதைக் காணாமல் வேண்டுமென்றே இப்படியொரு வதந்தியைப் பரப்புவது
இச்செயலுக்குப் பின் எம் மீது காழ்ப்புக் கொண்டு சிலர் செயல்படுகின்றனர்
என்பதையே காட்டுகிறது.
டெக்கினிகலாக சில விசயங்கள்.
மின்தமிழில் வரும் ஒவ்வொரு கருத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின்
கருத்தென்று கொள்ளுதல் தவறு. தமிழ் மரபு அறக்கட்டளை என்பது சர்வதேச
இயக்கம். அது அரசு சாரா, கட்சி சாரா தொண்டூழிய இயக்கம். 11 ஆண்டுகளாக
எவ்வித சுயநலமும் இல்லாது செயல்பட்டு வரும் ஒரு நல்லியக்கமாகும். யாரோ
ஒரு வகொவி சொல்கிறார் என்பதற்காக தமிழ் மரபு அறக்கட்டளையின் இயக்கத்தை
முடக்க வேண்டுமென அறிஞர்கள் ஒரு அரசிடம் முறையிடுவது தமிழ் வளர்ச்சியைத்
தடைசெய்யக் கோருவதற்குச் சமம்.
மேலும் மின்தமிழ் தளம் என்பது கூகுள் தளம். அதைத்தடை செய்ய ஒரு அரசிடம்
கூறமுடியாது. அது நமது அடிப்படை உரிமையான பேச்சு, எழுத்து சுதந்திரத்தை
தடை செய் என்று சொல்வது போன்றது. நாளை மின்தமிழ் மூடப்பட்டால் வேறொரு
தளத்தில் வகொவி எழுதுவார். யாரால் தடை செய்யவியலும்? தமிழில் எழுதாதே
என்றால் ஆங்கிலத்தில் எழுதுவார், இல்லை ஜெர்மனில் எழுதுவார். யார் தடை
செய்யவியலும்? நமக்கு கருத்தைக் கருத்தாகக் கொண்டு ஆரோக்கியமாக வாதாடத்
தெரிய வேண்டும். தெரியவில்லை எனில் இதையொரு வாய்ப்பாகக் கொண்டு
கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு இயையாத கருத்துக்கள் வந்தால் வாயைமூடு
என்று சொல்வது வன்முறையாகும். இதைக் கற்றறிந்தோர் செய்யலாகுமா?
ஒருவகையில் நாம் இவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம். தமிழ் மரபு
அறக்கட்டளை பற்றி யாரும் இவான்சலிசம் செய்வதில்லை என்ற வருத்தமுண்டு.
இப்போது தமிழக அளவில் எம் இயக்கம் பற்றிய கவன ஈர்ப்பு செய்துள்ளனர்.
நன்றி. முகநூலில் பலர் மின் தமிழை பகீஷ்கரிக்குமாறு விளம்பரம்
செய்துவருகின்றனர். அவர்களுக்கும் நன்றி. மின்தமிழ் என்றொரு குழு
இருப்பதை இதுவரை அறியாதோர் இனி அறிந்து கொள்ள ஒரு
வாய்ப்பளித்துள்ளீர்கள்.
நாம் தனியாக இல்லை என்ற நல்ல உணர்வைத்தந்துள்ளார்கள். மின்தமிழ் கவனமாக
படிக்கப்படுகிறது என்ற் தெரிகிறது, இப்பதிலையும் சேர்த்து. அதற்கும்
நன்றி.
//
சமீபத்தில் (22.08.2012) மாலைமுரசு சென்னைப்பதிப்பில் வெளிவந்த
“தமிழறிஞர்களை இழிவுபடுத்தும் வலைத்தளத்தை தடை செய்ய வேண்டும்” எனும்
சேதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச
கழகம், வேண்டுமென்றே தங்களது சேவையைக் கொச்சபடுத்தும் நோக்கில் இச்செய்தி
வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளாக
அமைதியாக தமிழ்ப்பணி ஆற்றிவரும் தன்னார்வக்குழு தமிழ் மரபு
அறக்கட்டளையாகும். அதன் முக்கிய நோக்கம் மறைந்து வரும் தமிழ் வளங்களை
மின்னாக்கம் செய்து இனி வரும் சந்ததியினருக்காக நிரந்தரப்படுத்துவதாகும்.
இப்பணியின் துணைச்சேவையாக ‘மின்தமிழ்’ எனும் மடலாடற்குழு கூகுள் தளத்தில்
இயங்கி வருகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆக்கங்களை வெளியிடும்
முகப்பாக இம்மடலாற்குழு செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இயங்கும்
தமிழறிஞர்கள் தொடர்ந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டுவரும் குழுவாக இது
இயங்கி வருகிறது. இன்று 22 நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களின்
தேவைகளையொட்டி இக்குழு செயல்படுகிறது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும்
சேதி முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக இதன் சர்வதேச
இயக்குநர்கள் கருதுகின்றனர். மின்தமிழ் எனும் குழு தமிழர்களின்
பேச்சு,எழுத்து சுதந்திரத்தை மதித்து, மிகக்குறைவாக மட்டுறுத்தப்பட்டு
செயல்பட்டு வரும் குழுவாகும். உலக அளவில் தமிழ் மதிக்கப்பட வேண்டுமெனில்
உலகின் தரத்திற்கு இருக்க வேண்டும் எனும் நல்ல எண்ணத்தில்
செயல்பட்டுவருகிறது. வடவேங்கடம், தென்குமரிக்கு இடைப்பட்ட பரப்பு மட்டும்
தமிழ் உலகமல்ல, அதன் சமகால இருப்பு உலகளவில் இருக்கிறது. மின்தமிழில்
பேசப்படும் கருத்துக்கள் முழுக்க, முழுக்க எழுதியவரையே சேரும். மாலைமுரசு
குறிப்பிடும்படி தமிழ் மரபு அறக்கட்டளைக்கு எந்தத்தமிழ் அறிஞரையும்
இழிவுபடுத்தும் நோக்கம்கிடையாது. பாவாணரின் இலக்கண, வேர்ச்சொல் ஆய்வின்
சிறப்பு பற்றி இதே குழுவில் உயர்வாக பேசப்பட்ட விஷயங்களை மறைத்து,
விமர்சனம் செய்த ஒருவரின் கருத்தையே தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்து
என்பது போல் திரித்துக்காட்டுவதை இக்குழு வன்மையாகக் கண்டிருக்கிறது.
மேலும் இச்சேதி கூறுவதுபோல் எவ்வித சர்வதேச சதியும் இதன் பின்னால் இல்லை.
இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நன்மதிப்பைப்
பெற்றதும், தமிழ் செம்மொழி ஆவதற்குப் பாடுபட்ட பேராசிரியர் ஜியார்ஜ்
ஹார்ட் போன்ற அயல்நாட்டு அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றும்
இயங்கிவரும் தொண்டூழிய இயக்கமாகும் இது. பேரா.ழான் லூக் போன்ற பல
வெளிநாட்டு ஆய்வாளர்கள் மின்தமிழின் தரம் கண்டு பாராட்டுத் தெரிவித்து
உள்ளனர்.
மடலாடற்குழுவின் செயல்பாடு என்பது ஒரு பத்திரிக்கை போன்றோ, அல்லது
வலைத்தளம் போன்றோ, வலைப்பக்கங்கள் போன்றோ இயங்குவது அல்ல. மடலாடற்குழு
என்பதன் நடை அதில் சிந்தனை பகிர்வோரின் பங்களிப்பைப்பொறுத்தே அமையும்.
அவ்வகையில், பாவாணர் குறித்து அக்கறை கொள்ளும் பெரியவர்கள், அச்சேதியில்
குறிப்பிடப்பட்டிருக்கும் தனிமனிதரிடம் கேள்வி கேட்டு தம் குறைகளை
நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமே ஒழிய, ஒரு மின்னாடற்குழுவையே தடை செய்ய
வேண்டும் என்று கோருவது முறையல்ல.
ஏனெனில் 11 வருட கடின உழைப்பில் நிற்கும் இச்சர்வதேச இயக்கத்தின் பிற
ஆக்கபூர்வமான செயல்களைத் தடை செய்யக்கோருவது தற்கொலைக்குச் சமமாகும்
என்று தமிழ் கூறும் நல்லுலகின் அறிஞர்கள் கருதுகின்றனர். இப்படிக்கோருவது
தமிழரின் அடிப்படை
சுதந்திரத்தை பறிப்பதற்கு ஒப்பாகும். மாலைமுரசு சேதியில்
குறிப்பிடப்படும் நபரின் கருத்து, அவரின் தனிப்பட்ட கருத்தாகும்.
இதற்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
குழந்தை அழுவதற்காக யாரும் தொட்டிலோடு குழந்தையை எறிவதில்லை என்று இந்த
சர்வதேச இயக்கம் கருதுகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் சீரிய சேவை
உலகத்தமிழர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இதன் சேவையை அறிய,
கீழேயுள்ள தொடுப்பு உதவும். www.tamilheritage.org
மின்தமிழ் மடலாடற்குழு பொறுப்பாளர்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இச்சேதியை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் சில சிக்கல்கள் உள்ளன.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி. வகொவி அவர்களுக்கு பலர் இம்மன்றத்தில் எதிர்வினை செய்துள்ளனர்.
நானும் சொல்லியிருக்கிறேன். சுபாவைப் பேசச்சொல்லியிருக்கிறேன். தமிழர்கள்
மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். என்ன செய்ய? அவரும் தமிழர்களின்
மனமறிந்து இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உப்பிட்டவருக்கு
துரோகம் செய்தல் பாவம் என்பது நம் மரபு.
ஆவண விரைவில் நடக்கும்.
> இப்போது மின் தமிழ் வாங்கியிருப்பது நற்பெயரல்ல. அவப்பெயர். மின் தமிழில்
> தமிழர்களைப் பற்றி அவதூறு செய்கிறார்கள் என்ற செய்தியை பல லட்சம்பேர்
> படித்திருப்பர். இதன் விளைவு என்னவாகும்?
>
> கற்றறிந்த தமிழறிஞர்கள் புதிதாய் சேர கூசுவார்கள்.
>
அப்படிச் சொல்லிவிட முடியாது. நடுநிலையோடு தமிழ் மீது ஆர்வமுள்ளவர்கள்
இங்கு வந்து பார்த்தால் நாம் எவ்வளவு பொறுமையுடன் விஷயங்களை
எடுத்தாள்கிறோம் என்பது புரியும்.
தனித்தமிழ் பற்றாளர்களின் குமுறல் இது என்று நான் புரிந்து கொள்கிறேன்.
தனித்தமிழுக்கு எதிரியல்ல நாம். சேசாத்திரி அவர்கள் முன்வைக்காத
கருத்துக்களா? அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்று அவதானிக்க
வேண்டும். தமிழ் மொழியும், தமிழரும் அறிவுசார் உலகில் வாழ வேண்டுமெனில்
நாம் அறிவியல் முறைக்கு பரிட்சியமாக வேண்டும். கேள்வியே கேட்கக்கூடாது
என்பது பகுத்தறிவாகாது. அறிவியல் தளிர்நடை போட கேள்வி முக்கியம்.
தனித்தமிழ் தளிர் நடை போட அறிவியல் பூர்வமான அலசல் மிக முக்கியம். நாம்
நன்மைதான் செய்கிறோம். சில நேரங்களில் பாவக்காய் கசப்பு என்று
ஒதுக்குகிறோம். ஆனால் கசப்பில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணம்
ஆய்வாளர்களுக்குப் புரியும். நாம் இனிக்க, இனிக்கப் பேசவில்லை, வெறும்
முகஸ்துதி செய்யவில்லை என்பதே இவர்களின் மனக்குறை. ஆயின், இது செய்யாமல்
தமிழை உயர்த்தியவன் பாரதி. அவன் வழியில் இயங்குவது தவறா?
நாம் நிற்போம் எனும் உறுதியுடன் செயல்படுவோம். உங்கள் எல்லோரின்
நல்லாதரவில்தான் இச்செயற்பாடு நடக்கிறது. இக்குற்றச்சாட்டு நம்
எல்லோருக்கும் விடப்பட்டிருக்கும் சவால். இதை வாய்ப்பாகக் கொண்டு அல்லன
அகற்றி, நல்லன செய்து மீண்டு வருவோம்.
நன்றி.
நா.கண்ணன்
> வகொவி தன் கருத்து நிலைப்பாட்டை விளக்கியுள்ளார், அதற்கு பதிலளிக்கும்
> பொறுமை நமக்கு உண்டு, அதை விடுத்து அவர் வாயை மூடுங்கள் என்பது என்ன
> நாகரீகமென்று புரியவில்லை.
கண்ணன்
உங்கள் கருத்துகளை சரியாக விளக்கி விட்டீர்கள். ஒருவர் பட்டத்தை அல்லது
அடை மொழியை போடாமல் சாதாரண பெயரைப்போட்டால் அது குற்றமாம்; அதை விட
அற்பத்தனத்தை எங்கும் பார்க்கமுடியாது.
மாலைமுரசு செய்தியை இங்கு போட்டாவாக அளித்த செழியனுக்கு நன்றிகள்.
அந்த கோரிக்கை வைத்திருக்கும் நபர்கள் யார் என்பது:
முன்னாள் துணைவேந்தர் பொற்கோ
பொன்னவைக்கோ
இறையரசன்
பூங்குன்றன்
அரணமுறுவல்
சுந்தர ஜெயபாலன்
சி.ஆர்.செல்வகுமார்
பெஞ்சமின் லெபோ
சஹாயராஜ்
இப்படி தமிழகத்தின் சீனியர் அகாதமிக்குகளே இப்படி சகிப்பின்மையை
வெளிப்படுத்துவது, தமிழகத்திற்க்கு, தமிழுக்கும் நல்லதல்ல
வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன்
மாலைமுரசுச் செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு விவாதிப்பது சரியல்ல
முதலில் இது பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியது. அதில் என் பெயர்
குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தி இணையத்தில் வெளியான பாவணரைத்
தரக்குறைவாக் குறிப்பிட்டு விக்கி மாதிரி வெளியாகியிருந்த செய்தி.
அவர்கள் மின் தமிழ் வழியாகவே பாவாணர் பற்றி ஒரு செய்தி இணையத்தில்
வெளியானதை அறிந்துகொண்டனர். அந்தச் செய்தியை எழுதியவர் விஜய ராகவன்
என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அதுவே மாண்புமிகு
முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அத்தளத்தை முடக்க
வேண்டும் என்றும் சைபர் பிரிவு அதற்குக் காரணமானவர்களின் மீது நடவிக்கை
எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மாலை முரசில் செய்தி வேறுவிதமாக மாற்றப்பட்டு மின் தமிழ் இணைய
தளம் தமிழக அறிஞர்களை இழிவுபடுத்தும் விவாதங்களை அனுமதிக்கிறது எனவே
அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் வெளியானது
மறுநாள் தமிழ் அறிஞர்கள் அரசு அலுவலர்களை நேரில் சந்தித்து விவாதிக்கப்
போவதாகச் செய்தி வந்தது. என் பெயர் வந்ததால் என் கருத்தை வாய் வழியாக
எடுத்துச் சொல்லி அந்த மடலாடல் குழுவில் குறிக்கப்பட்டுள்ள மூன்று
இழைகளின் விவாதப் போக்கைப் பார்த்தாலே விவாதம் திசை திரும்பும்போதும் நடை
மாறும்போதும் போதுமான எச்சரிக்கைச் செய்திகள் வந்திருப்பதை நீங்கள்
பார்க்கலாம் என்று குறிப்பிட்டேன்
என் தனிக்கருத்து என்னவென்றால் இணையம் மட்டற்ற கட்டற்ற கருத்துத் தளம்.
தனி மனிதச் சிந்தனைகளுக்கு மட்டுறுத்துனர் என்று ஒருவர் இருப்பதே தவறு
என்று கருதுபவன்.
என்னுடைய வருத்தமெல்லாம் ஒரு சிலர் இணைய எழுத்துரிமை என்பது எழுதாத
எழுத்து என்பதால் தனி மனிதரைத் தர்க்குறைவாக எழுதினால் தப்பே இல்லை என்று
கருதுவதும் எழுதுவதும் மின் தமிழில் ஆரம்பித்துள்ளதே என்பதுதான்
மின் தமிழ் கருத்தில் கொள்ள வேண்டியது மறைந்த அறிஞர்களையும் வாழும்
அறிஞர்களையும் வசை மொழி பாடுவது தேவையா என்ற ஒரு கருத்து மட்டுமே
இதைத் தவிர மின் தமிழ் தன் நடையை மாற்றிக்கொள்ளவோ மக்கள் மன்றத்துக்கும்
அரசாங்கத்துக்கும் தன்னிலை விளக்கம் அளிக்கவோ அவசியமான சிக்கல் எழவில்லை
மாலை முரசுச் செய்தி பத்திரிக்கைச் செய்தி என்ற அளவில் படித்து அதற்கான
மதிப்பீட்டைக் கொடுத்துவிட்டு மறந்துவிட வேண்டிய ஒன்று
நாகராசன்
2012/8/24 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஏற்கெனவே திருக்குறளை திருத்தி விசமம் செய்ததால் வள்ளுவர் மீது உண்டான களங்கங்களை நீக்கவே எனது ஆய்வுகள். எனது ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் நன்கு நிதானமாக படித்துப் பாருங்கள். அவற்றின் நோக்கம் உங்களுக்குப் புலப்படும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வலைப்பூ - தனிப்பட்ட கருத்தை ஒருவருக்கென்று இல்லாமல் பொதுவாக எழுதி வெளியிடல்
மடலாடல் - கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பில் தன் கருத்து என்ன என்று வெளியிடுதல்
மடலாடல் தளத்தில் இழையை ஒட்டியும் வெட்டியும் எழுதுவதற்குப் பயிற்சி
தேவை. கட்டை போடவும் மொக்கை அடிக்கவும் வெறும் வார்த்தைகளே போதும்
நாகராசன்
2012/8/24 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
அன்பின் ராஜசங்கர்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ராஜசங்கர்!
அன்றொரு நாள் தமிழகத்தில் ஸ்ரீராமன் சிலையின் மீது செருப்பு மாலை போட்டு
ஊர்வலம் நடத்தினார்களே. அப்போது எத்தனை கோடிக்கணக்கான உள்ளங்கள்
புண்ணாயின? யார் மீது வழக்குத் தொடுத்தார்கள்?
மொடைத்தலைக்கும் முழங்காலும் முடிச்சுப்போட்டு இப்போது தமிழ் மரபு
அறக்கட்டளை மீது அவதூறு செய்கிறார்கள். மடலாடற்குழு என்பதன் இயக்கத்தைப்
புரிந்தோர் செய்யும் செயலல்ல இது. எத்தனை மடலாடற்குழுக்கள் பச்சை
பச்சையாக இனவாதக்கருத்துக்களை அள்ளி வீசுகின்றன. வழக்கு என்று தொடுத்தால்
இணையத்தில் எழுதும் ஒவ்வொருவர் மீதும் வழக்குத்தொடரலாம்.
பொதுமன்றத்தில் இல்லாமல் ஆர்வமுள்ளோர் அமர்ந்து பேசும் ஒரு குழுவில்
ஒருவர் மட்டுறுத்தப்படவில்லை என்பது பொதுப்பிரச்சனை ஆவது உலகிலேயே
இதுதான் முதல்முறை. அதுவும் எழுத்து, பேச்சுரிமையை சமமாக
வழங்கியிருக்கும் இந்தியாவிலிருந்து வருகிறது இக்கோரிக்கை!
இக்கோரிக்கையில் கையெழுத்து இட்டிருக்கும் பல பேராசிரியர்கள் மின்தமிழ்
குழுமத்தின் இழைகளை வாசித்து இருப்பார்களா என்பதே சந்தேகம். வாசித்து
இருந்தால் மட்டுறுத்தர்கள் மேலோ, தமிழ் மரபு அறக்கட்டளையின் மீதோ குற்றம்
சாட்டாமல், அக்கருத்தை சொன்னவர் மீது மட்டும் பிரச்சனையைக்
குவித்திருப்பர். எனவே இப்பிரச்சனையில் காழ்ப்பும், பொறாமையும் மறைந்து
இருப்பது வெள்ளிடை மலை.
நா.கண்ணன்
என் கருத்தில் உங்களுக்கு மறுப்பு இருக்கலாம். ஏன் உங்கள் கருத்தையும் நான் மறுக்கலாம். ஆனால் நான் உங்களைத் திட்டினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? :)))
மடலாடல் குழுவில் மூன்று இழைகளில் தமிழ் அறிஞர்கள் பற்றி தரக்குறைவான
எழுத்துக்களை ஒரு சிலர் எழுதியபோது அந்த மடலாடல்குழு அதைக்
கட்டுப்படுத்தவில்லை
என்பது
அது உண்மையல்ல என்பது அந்த இழைகளைப் படித்த அனைவருக்கும் தெரியும்.
நாகராசன்
2012/8/24 Sri Sritharan <ksth...@hotmail.com>:
On Aug 24, 10:14 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> வகொவி தன் கருத்து நிலைப்பாட்டை விளக்கியுள்ளார், அதற்கு பதிலளிக்கும்
> பொறுமை நமக்கு உண்டு, அதை விடுத்து அவர் வாயை மூடுங்கள் என்பது என்ன
> நாகரீகமென்று புரியவில்லை.
உங்கள் கருத்துகளை சரியாக விளக்கி விட்டீர்கள். ஒருவர் பட்டத்தை அல்லது
அடை மொழியை போடாமல் சாதாரண பெயரைப்போட்டால் அது குற்றமாம்; அதை விட
அற்பத்தனத்தை எங்கும் பார்க்கமுடியாது.
அந்த கோரிக்கை வைத்திருக்கும் நபர்கள் யார் என்பது:
முன்னாள் துணைவேந்தர் பொற்கோ பொன்னவைக்கோ இறையரசன் பூங்குன்றன் அரணமுறுவல்
சுந்தர ஜெயபாலன்
சி.ஆர்.செல்வகுமார்
பெஞ்சமின் லெபோ சஹாயராஜ்
இப்படி தமிழகத்தின் சீனியர் அகாதமிக்குகளே இப்படி சகிப்பின்மையை
வெளிப்படுத்துவது, தமிழகத்திற்க்கு, தமிழுக்கும் நல்லதல்ல
வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன்
திரு வகொவி, திரு கண்ணன், நண்பர்களே,
2012/8/24 Karuannam Annam <karu...@gmail.com>:
நீங்கள் மட்டுறுத்துனராகப் பணியாற்றியிருந்தால் அதன் நடைமுறச் சிக்கலை உணர முடியும்
மின் தமிழ் என்பது சீரியஸான தலைப்புகளிலும் இலகுவான அரட்டைகளிலும் கடுமை
காட்டாத அணுகுமுறையில் நிகழும் நிகழ்வு
இரண்டுபேர் மோதிக்கொண்டால் விலக்கிவிடும் வேலை மட்டுறுத்துனர் செய்ய இயலாது
நாகரிகமான அணுகுமுறை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது
நாகரிகம் இழையில் பங்குபெறுவோர் நடப்பதில் நிலைக்கிறது.
மட்டுறுத்துனர்கள் ஒருவரை நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள் என்று சொல்ல
முடியுமே ஒழிய அவர்களை நாகரிகப்படுத்தும் வேலையைச் செய்ய இயலாது என்பதை
ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
நாகராசன்
2012/8/24 seshadri sridharan <ssesh...@gmail.com>:
இந்த இழையில் நிதானித்து பல அன்பர்களின் கருத்துக்களை அறிந்த பின்னே எழுதவேண்டும் என்று காத்திருந்தேன். ஏனெனில், லண்டன் குழு சந்தித்தபோது மின் தமிழ் மடலாடும் தன்மையையும், தரத்தையும் உயர்த்துவது பற்றி பேசினேன். என் கருத்தை எழுதுமாறு கண்ணனும், ஸுபாஷிணியும் சொன்னார்கள். அதற்குள் இந்த மாலை முரசு செய்தி வேறொரு கோணத்தில் பிரச்னையை முன் கொணர்ந்தது. தொடராக, பல கருத்துக்கள். அவற்றில் திரு.கண்ணன் இருமுறை சொன்னதும், மின்தமிழ் மடலாடற்குழு பொறுப்பாளர்களின் அறிக்கையும் எனக்கு மிகவும் சரியாக படுகிறது. வெ.சா. அவர்களின் கருத்து ஊன்றி கவனிக்கவேண்டியது. ராஜாசங்கர், ‘...இருக்கும் தமிழ்குழுமங்களில் அரட்டையை குறைவாகவும் செய்யும் காரியங்களை நிறைவாகவும் செய்யும் குழுமம் இது ஒன்று தான்...’ என்று சொல்வதை, நான் வழி மொழிகிறேன். கடந்த மூன்று நான்கு வருடங்களில் மின் தமிழுடன் எனக்கு பரிச்சியம். தமிழ் மரபு காக்க கடுமையாக உழைக்கும் தமிழ் மரபு கட்டளைக்கு, உறுதுணையாக மின் தமிழ் உலா வருகிறது. இத்தனைக்கும் மேலாக, நான் அதன் வரப்பு உயரவேண்டும் என்பது என் அவா. இந்த இழையுடன் தொடர்பு கொண்டது அல்ல. தேவை வரும் போது, அதை பற்றி எழுதுகிறேன். இப்போது குட்டை குழப்பவது நல்லது அல்ல.
இப்படிக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் தமிழ் வளர்ச்சி அணுகுமுறையை போற்றும்
இன்னம்பூரான்--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
Tk U, Jean-Luc.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
Dear Vijay
(and other MinTamil list members)
C.R. Selvakumar has publicly announced both on CTamil
and on தமிழ்மன்றம்
that his name had been included without his permission.
See:
"https://groups.google.com/forum/?fromgroups=#!topic/tamilmanram/G436AKT39oU"
(Subject line: "என் பெயர் தவறுதலாக அறிக்கையில் இடம் பெற்றுள்ளது")
and see
"https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2012-08/msg00054.html"
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
அப்படியானால் மடலாடலில் ஒரு நாகரீகமான அணுகுமுறையே வேண்டாம். அந்த முயற்சி தேவையற்றது என்பது போலல்லவா உள்ளது உங்கள் பக்க கருத்து. இதில் ஒரு மட்டுறுத்துனர்கு வேண்டிய நடுநிலையே இல்லையே.
மாலைமுரசு நாளிதழில் வந்த செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.
-முனைவர் தி.நெ.
--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பழைய நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக மீள் பார்வை செய்து மனதை வ்ருத்திக்
கொள்ள வேண்டாம்
இம்மடலாடல் குழுவில் இடப்படும் பின்னோட்டம் ஒரு சில நேரங்களைத் தவிர மற்ற
நேரங்களில் காலம் தாழ்த்தாமல் வெளியிடப்படுவது உண்மை
ஒரு சில இழைகளும் பின்னூட்டங்களும் மட்டுமே மட்டுறுத்தலுக்கு உட்படுவதும் உண்மை
இங்கே நம் முன் எழும்பியிருக்கும் கேள்வி எழுதும்போது சிலர்
பயன்படுத்தும் பொருத்தமற்ற அல்லது தேவையற்ற வார்த்தைகளைப்
பயன்படுத்தினால் அதை அனுமதிப்பதா அல்லது நீக்குவதா என்பதே
அவ்வாறு வார்த்தைகளின்மீது கைவைத்தால் தணிக்கை என்ற பூதம் கிளம்புமே
திரு.விஜய ராகவன் அவர்களின் கருத்து நிலை அவரது தனிக்கருத்து என்று
கொண்டால் அது சரி அல்லது தவறு என்று விவாதிக்க வாய்ப்பே இல்லை
அவர் ஆழ்ந்த புலமை ஆய்வு இணையத் தேடல் மூலம் வலியுறுத்தும் பொதுக்கருத்தை
ஏற்க முடியாது என்று தள்ளிவிட முடியாது. அதுபோன்றே உங்கள் நிலையும்
கருத்தும் எழுத்தும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள்
இருவரும் ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் உங்கள் கருத்தை வலியுறுத்த
முனைகிறீர்கள். அதை மறுப்பதும் மட்டுறுத்துவதும் இணைய மரபுக்கு மாறானது
ஆனால் நீங்களும் விஜயராகவன் அவர்களும் தகாத வார்த்தைத் தாக்குதல்களைப்
பயன்படுத்தி (பாவாணர் சர்க்கார்) நீங்களே ஒருவருக்கொருவர் அறிவில்லாத
போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் இடையில் நீங்கள் இருவருமே கைபர்
கணவாய் வழியாக வந்தவர்கள் என்று வேறு சிலர் எழுதுவதும் அதைப்
பரிசீலிக்கும் மட்டுறுத்துனர்கள் என்ன செய்ய முடியும்
மட்டுறுத்துனர்கள் நிலை கையறு நிலை
நாகராசன்
2012/8/25 seshadri sridharan <ssesh...@gmail.com>:
இவ்விழை முடிவுற்றது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
நன்றி.
நா.கண்ணன்
2012/8/28 Dr.Durai.Manikandan <mkdur...@gmail.com>: