சுதந்திரம் பறிபோகிறது...?தினமணி தலையங்கம்

16 views
Skip to first unread message

vich...@gmail.com

unread,
Feb 26, 2010, 10:43:19 PM2/26/10
to மின்தமிழ்
மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி
என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின்
பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து
வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே
தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித்
தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை
நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில
உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே
பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட
அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது
எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது
வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப்
பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும்
சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய
விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட
அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய
அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த
மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப்
பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப்
புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு
நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது
வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது
பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக,
வாழ்வாதாரமாக விவசாயத்தில்

ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக்
காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக
வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின்
நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின்
உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-
அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில்
கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி
செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க
வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால்
நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க
முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார
ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப்
பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள்
நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி
தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக்
கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத்
தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர்
கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு
மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான
பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர்
மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது
பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல்
பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை
பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல்
துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1)
பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற
விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது
மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின்
முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால்
ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு
இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட
கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக்
கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும்.
இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட
பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை
என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல்
எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது
ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல்
எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?

பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை
செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர்
வீட்டை வைத்து இழத்தல்போலும்...''

சீச்சீ... சிறியர் செய்கை!

karthi

unread,
Feb 27, 2010, 12:21:22 AM2/27/10
to mint...@googlegroups.com
எல்லாப் பிரச்சினைகளிலும் இரு பக்கங்கள் உண்டல்லவா?
இங்கு ஒரு தரப்பைத்தான் உரத்துப் பேசுகிறீர்கள்.
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு இந்திய விவசாயிகளிடையே
கூட ஆதரவு இருப்பதாகத்தான் நான் காணுகிறேன். ஆனால்
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயக் குழுக்கள் உரத்த
குரல்கள் பெற்றிருக்கின்றன. விஞ்ஞானிகளிடையேயும் ம.மா.க.வுக்கு
ஆதரவு இருக்கிறது. ஆனால் எதிர்க்கும் விஞ்ஞானிகள் பச்சை இயக்க
ஆதரவு பெற்று உரத்த குரலில் பேசுவதே அதிகம் வருகிறது.
இதனால் எது உண்மை என்பதில் பொதுமக்களுக்கு பெரும்
குழப்பம் நிலவுகிறது.

உங்கள் அரசாங்கத்தின் மேல் உங்களுக்குள்ள தீவிர அவநம்பிக்கையை
அப்படியே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த அரசாங்கம்
முற்றாக மக்கள் விரோத அரசாங்கம் எனக் காட்ட முயலுகிறீர்கள்.
ஆனால் இந்தியாவின் பொருளாதாரம், சமூகம், விவசாயத்திலும் கூட
ஏற்பட்டுள்ள தெளிவான முன்னேற்றங்கள் எனக்கு வேறு வகையான
தோற்றத்தை அளிக்கின்றன.

நான் இதில் எந்தத் தரப்பும் ஏற்கவில்லை. ஆனால் உங்கள் தீவிரத் தாக்குதலே
இதில் கடைசி வார்த்தையாக இருக்கக் கூடாது என்பதால் எழுதினேன்.

ரெ.கா.

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like
> to visit our Muthusom Blogs at:
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

srirangammohanarangan v

unread,
Feb 27, 2010, 2:30:20 AM2/27/10
to mint...@googlegroups.com
திரு  ரெ கா,  திரு  விச்னூ, 
 
விவசாயத்தை  மேம்படுத்த வேண்டும்;    உழவு  வளத்தில்   தன்னிறைவு  எய்த  வேண்டும்,  ஆனால்  அதில்    பல  உள்ளிடர்கள்    இருந்துகொண்டிருக்கின்றன  -  என்ற நிலை   பாரதிக்கும்  முன்பிருந்து (1906)    தொடர்ந்து கொண்டுதான்  இருக்கிறது.   இதை   செங்கல்பட்டை  முன்னிறுத்தி    பாரதி   வரைந்த  கட்டுரையே  காட்டுகிறது.    அவுரியும்,    கரும்பும்   பயிரிடுவதைவிட   நெல்லைப்  பயிரிடுவதில் ஊக்கம்  கொள்ளுங்கள்.    கையில் காசு  புழக்கத்தை விட    வயிற்றில்   உணவு   புழங்கும்   என்றெல்லாம்    புத்திமதி   கூறுகிறான்   கவிஞன். 
 
ஆனால்  அன்று  ஆண்ட  ஆங்கிலேயர்   சென்ற  பின்பும்,   சுதந்திர  இந்தியாவில்    இந்த   விவசாயத்  தன்னிறைவு   எட்டப்பட்டதா?  விவசாயத்  தன்னிறைவு  எட்டினால்    கிராமங்கள்    வேலையாட்களைத்   தன்னிடமே    தக்க வைத்துக்கொள்ளும்.     வேலையாட்களைப்    பெருவாரியாகத்  திரட்டாமல்   பெரும்  முதலீடு  செய்து  நடத்தப்படும்    தொழில்கள்  எப்படி  நடக்கும்   என்பது  ஒரு  கவலையே. 
 
நடக்கும்   விவசாயத்திலும்   ஏன்   வாழ்வியல்  ஆதாரமும்,  அதற்கு  முரணின்றி   லாபமும்  ஒருமிக்க முடியாது.    நாடே  விவசாயத்தைச்  சார்ந்து   இருக்கும்  நாடுதானே?    Prioritization   of  expenditures    ensues    priroritization   of    perceptions    அல்லவா?  
 
நெல்லும் உயிரன்றே  நீரும் உயிரன்றே 
மன்னன்  உயிர்த்தே  மலர்தலை   உலகம்  
 
என்பது   ஒருகாலத்தில்     பார்த்த  பார்வை.     நெல் வளத்திற்கும் நீர் வளத்திற்கும்    அடிப்படையாக   ஆட்சியாளர்களின்    பார்வை வளம்  இருக்கிறது   என்பதையன்றோ  அது  காட்டுகிறது.  
 
சரி  விவசாயம்  என்றால்    அங்கும்    பழைய    மரபுகளையே  சார்ந்து    வேளாண்  தொழில் நடக்க வேண்டுமா?    அல்லது   புதிய  முறைகளைக்  கைக்கொள்ளலாமா? 
 
உதாரணத்திற்கு     இயற்கை  உரங்கள்   பற்றி  எடுத்துக்கொண்டால்  --   எது சரி?     இயற்கை  உரங்களா?    அல்லது    நவீன    தொழில்நுட்பம்  சார்ந்த   ரசாயன  உரங்களா?  
 
இதில்  அந்நியர்   நம்மவர்   என்ற   பாகுபாட்டிற்கு   பெரிதும்  பொருள் இல்லை.  ஏனெனில்    அயல்நாட்டில்    இந்த    செயற்கை உரங்களைக்  கடுமையாக  எதிர்க்கும்    வேளாண்   குழுக்களும்   உண்டு.  
 
உழவைச்  சார்ந்து   நாடு   இருக்கிறது  என்பது  ஒருபக்கம்   எனில்    உழவர்களின்   வாக்குவங்கிகளைச்  சார்ந்து  அரசியல்    நடக்கிறது.   இவற்றிற்கு   நடுவில்   வேறுபடுத்திக்  காண்பது  எப்படி?   கொள்முதல்   காணவேண்டும்   என்ற   ஆர்வம் இன்று    தள்ளுபடி    வருமா   என்ற  கவலையாக  மாறிப்போன   அவலம்  ஏன்? 
 
வெளிநாட்டுடனான  அரசியல்    வேளாண்   வளத்திற்கு    உரமாக,  அதுவும்  இயற்கை  உரமாக   அமையுமா?  அன்றேல்    பயிர்க்கொல்லியாக,  உள்ளிருந்து  படர்ந்த   நோய்க்கூறாக   முடிந்துவிடுமா?  
 
இது  போல் பல  கேள்விகளையும்,  கருத்துகளையும்    தினமணி    தலையங்கம்  குறித்த    உங்கள்   உரையாடல்    எனக்குத்   தோர்றுவிக்கிறது.   சுகுமாரன்    வேறு  ஏதோ   வேலை  மும்முரத்தில்    இருக்கிறார் போலும்!    அவர்    வந்தால்  இன்னும்     பயன்  மிகும். 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்    

 

Venkatachalam Subramanian

unread,
Feb 27, 2010, 5:27:58 AM2/27/10
to mint...@googlegroups.com
ஓம்.
காந்தியப் பொருளாதாரத்தின் பாற்பட்ட பண்டமாற்று விவசாயம் இங்கு நினைவுகூறற்பாலது.
ஒவ்வொரு குடும்பமும் தமக்கு வேண்டிய பருத்தி ஆடைகளை(கதர்) தாங்களே பயிரிட்டு விளைத்த பஞ்சினின்றும் தாமே நூற்று  அதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நெசவு செய்விக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே உடுத்துவது.
தங்களுக்கு வேண்டிய காய்கறி மற்றும் உணவுப் பொருள்களை அத்தியாவசியமான  சில நீங்கலாக மற்றவற்றை தாமே உற்பத்தி செய்துகொள்வது.
 உபரியாகத் தாம் செய்வித்தவற்றை பலருடன் பகிர்ந்து கொள்ளுதல்.
செழித்த காலநடைகளை  சுகாதாரத்துடன் வளர்த்து பால் பொருள்கள் தயாரிப்பது.
அமுதக் கலவை என்று அழைக்கப்படும் மாட்டுச் சாணம், மூத்திரம் கருப்பஞ்சாறு உரமிட்டு பயிர்செய்தல்.
சாணம் கொண்டு கேஸ் தயாரித்து அடுப்பு எரிபொருள் காண்பது.
அவரவர் அவரவருடைய சுய உதவிகளை மேற்கொண்டு ஆரோக்கிய வாழ்வு பெறுதல்.
செலவினங்களை சமுதாயக் கண் கொண்டு சீர்திருத்தம் செய்து திருமணம் போன்ற சடங்குகளை எளிமையாக்குதல். வீடு தன் நிறைவு பெற்று உய்வடையும் போது கிராமப் பொருளாதாரம் சீரடையும்.
பிட்டுக்கு மண் சுமந்து காட்டினானே அது போன்று தன் கிராம வளர்ச்சிப் பணிகளைத் தாங்களே வீட்டுக்கு ஒருவராக பணிசெய்து நிறைவேற்றிக் கொள்ளுதல்.
 சுயநலம் பொதுநலமாக மாற்ற அனைவரும் சேர்ந்து உழைத்தல். பெற்றோரையும் உற்றாரையும் பாசாங்கு இன்றி கவனித்துக் கொள்ளுதல்.
பணப்பயிர் விவசாயியின் வாழ்க்கையை உயர்த்தும் என்று கூறி அதில் தடுமாறிய விவசாயிகள் ஏராளம்.
மேலும் விவசாய நிலங்கள் காங்க்ரீட் காடுகளாக்கப்பட்ட வேதனை மிகவும் பெரியது.
பெரு முதலைகள் வாயில் விவசாயிகள் மாட்டிக் கொள்வதே நடைமுறையாக இருக்கிறது.-
வாழ்க்கையை வசதியாக்கிக் கொள்வதாக புதிய வரவினங்கள் மிக்கத்தொய்வை ஏற்படுத்திவிடுகின்றன.
பனி உருகும் நிலைபோல பழமைக்கும் புதுமைக்கும் இடையே மனிதன் தவிக்கும் நிலை இன்று உள்ளது.
சீர்பெறச் செய்யவேண்டும்.
ஓம்.வெ.சுப்பிரமணியன்


2010/2/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>

karthi

unread,
Feb 27, 2010, 6:12:06 AM2/27/10
to mint...@googlegroups.com
ஐயா,
 
Idealism என்பது ஒன்று.  Realism என்பது வேறு. இந்தியா இனி காந்தியப் பொருளாதாரத்தைப்
பின் பற்ற முடியாது. அது நடைமுறை சாத்தியமானது அல்ல. மனித இயற்கை அதற்கு
இடம் கொடுக்காது. மேலும் அதிலும் பல உள்ளிடர்கள் (நன்றி: மோகனரங்கன்) தோன்றவே செய்யும்.

srirangammohanarangan v

unread,
Feb 27, 2010, 6:45:09 AM2/27/10
to mint...@googlegroups.com
இருக்கலாம்  திரு  ரெ  கா.   ஆனால் மண்ணின்   நிஜத்தைச்  சார்ந்த   பொருளாதாரத்  தெருட்சி  என்பதை  அடைய,   to  attain  indigeneous   economic   sensibility,    ஒரு   தள்ளிவிடமுடியாத   தூண்டு  கோலாகக்  காந்தியின் பொருளாதாரக்  கருத்துகள்   இயங்க   முடியாதா? 
 
Kindly   correct  me,   where  I  am  wrong,   when  I  say   that   we   need  to  relearn   Gandhi  and   Gandhi's  thoughts  on  issues  of  economics.  Eventhough   we   know  pretty  sure   that   we  will  not  be  able  to  entertain  him   in  practice  blindly. 
 
Srirangam V Mohanarangan  

 

srirangammohanarangan v

unread,
Feb 27, 2010, 6:52:02 AM2/27/10
to mint...@googlegroups.com
The    correct  spelling  is   'indigenous'.     Sorry.

karthi

unread,
Feb 27, 2010, 7:57:07 AM2/27/10
to mint...@googlegroups.com
ரங்கன்,
 
"நடைமுறை சாத்தியமில்லாதது" "மனித இயற்கை அதற்கு இடம் கொடுக்காது" என்ற
இரண்டு சொற்றொடர்கள்தாம் அதன் சாவி.
 
மூலதனத்துவத்துக்கு இந்தியா பழகி விட்ட பின்னர், உற்பத்தித் தொழில் விவசாயத்தைப்
பின் தள்ளி விட்ட பின்னர், இனி விவசாயத்தை முன்வைத்துப் பொருளாதாரம் அமையாது.
விவசாயத்தின் தேவை காலத்துக்குக் காலம் ஏற்றமாகவும் இறக்கமாகவும் இருக்கலாம்.
அரிசியை மிக மலிவாக தாய்லந்தில் பெற்று வாழும் மலேசியா, நெல் விவசாயத்தை
ஒரு போர்த் தந்திரோபாய (strategic) காரணங்களுக்காகத்தான் செய்து வருகிறது.
எல்லா நாடுகளுமே உணவுப் பாதுகாப்புக்காக முக்கிய உணவுகளை வாங்கிக் கிடங்குகளில்
சேமித்து வைக்கும் பழக்கமும் (stockpiling) வந்துவிட்டது. அப்புறம் ஏன் மண் சார்ந்த விவசாயத்துக்கு
முக்கியத்துவம்?
 
மனித இயல்பு ஒரு சுயநல நோக்குடன் தன்னை உயர்த்திக் கொள்வது.
 Adam Smithதான் இன்று உலகை ஆள்கிறார். ஒருவர்
தனது சொந்த புத்தியில் உயரும்போது அடுத்தவர் அதைப் பார்த்து போட்டியிட்டு உயரலாம். இருவரும்
தங்கள் புத்தியாலும் உழைப்பாலும் உயரலாம். அவரவர்களின் உய்ரத்துக்கு அவர்கள் வருவார்கள்.
அது சமமான உயரமாக இருக்காது. சமத்துவமாக இருக்க மனித இயல்பு இடம் தருவதில்லை.
 
காந்தி எல்லாவற்றிலும் எளிமை நோக்கிப் போனார். பொருளாதாரத்தின் கீழ்மட்டங்களில் மட்டுமே
அது ஓரளவுக்கு வெற்றி பெறும். இன்றைய ராட்சச பொருளாதாரத்தில் எளிமை பிழைக்காது.
குறிப்பாக வல்லரசு நிலையையும் பொருளாதார சமூக மேம்பாட்டினையும் அடைந்து விட்ட
இந்தியாவுக்கு இனி இந்த எளிமை பொருந்தாது. இன்னும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள
சிறு ஆப்பிரிக்க நாடுகள் வேண்டுமானால் தங்கள் மீளாத் துயர் தீர காந்தீயப் பொருளாதாரத்தின்
எளிமையைப் பின் பற்றலாம்.
 
காந்தியின் காலத்தில் காந்தீயத்துக்கு ஒரு இடம் இருந்தது; பெரும் கவர்ச்சி இருந்தது. ஆனால் இன்று
இந்தியாவுக்கு காந்தி ஒரு heritage மதிப்பு உள்ள விஷயம், அவ்வளவே. அதன் மேம்பாட்டு வேகத்துக்கும்,
அது கடந்து விட்ட தூரத்துக்கும் காந்தியக் கிராம பொருளாதாரத் திட்டம்  பொருந்தாது.

N. Ganesan

unread,
Feb 27, 2010, 11:10:16 AM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 6:57 am, "karthi" <karthige...@gmail.com> wrote:
> காந்தியின் காலத்தில் காந்தீயத்துக்கு ஒரு இடம் இருந்தது; பெரும் கவர்ச்சி இருந்தது.
>ஆனால் இன்று இந்தியாவுக்கு காந்தி ஒரு heritage மதிப்பு உள்ள விஷயம், அவ்வளவே.
> அதன் மேம்பாட்டு வேகத்துக்கும்,
> அது கடந்து விட்ட தூரத்துக்கும் காந்தியக் கிராம பொருளாதாரத் திட்டம்  பொருந்தாது.
>
> ரெ.கா.
>

காந்தீய பொருளாதாரம் எல்லாம் சொந்த விருப்புகள்.

இப்போதைக்கு வலையில் அடிபடுவது பி.டி. (bio-tech).
சயன்ஸ் இந்தியரும், மேலைநாட்டும் சேர்ந்து முடிபுகளைக்
கண்டறிதல். நடைமுறையாக்கல். உலகம் பிணைக்கப்பட்டுவிட்டது.
பி.டி., ஈழப் பிரச்சினை, யூனிக்கோடு, மொழியியல்,
இந்தியத் தொன்மவியல் எதுவும் இந்தியரால் மாத்திரம்
செய்ய முடியாது.

வீட்டில் காலதரை, பலகணியை திறந்து வைத்தாற்போல் -
மேலைநாட்டு விஞ்ஞானமும், மொழியியலும், ஆர்க்கியாலஜியும்.
இல்லாவிட்டால் வெறும் புராணக் கதைகள் ஆகிவிடும்.

தமிழ்நாடு அரசு கோர்ட்டில் கேசில் உள்ளது:
http://www.vinavu.com/2010/02/09/hrpc-case/
எல்லாருக்கும் ரிக்வேதம் சொல்லித் தரலாமா?
குழந்தைப் பருவத்தில் இருந்தே.

அன்புடன்,
நா. கணேசன்

srirangammohanarangan v

unread,
Feb 27, 2010, 2:48:21 PM2/27/10
to mint...@googlegroups.com
இங்கு     பேசப்படுவதோ    பொருளாதாரம்  --  காந்திய  பொருளாதாரமா?   நவீனமா?     வெளிநாட்டு   அரசியலுக்கும்    வேளாண்   வளத்திற்கும்   உள்ள  தொடர்பு  என்ன?    போன்ற    பிரச்சனைகள். 
 
ஆனால்  இங்கு  வந்து  சம்பந்தமில்லாமல்    இந்த   இழைச்சுட்டியை  நுழைத்து   எதற்கு  இந்த  வேலை    திரு  கணேசனாரே? 
 
திரு  ஹரிகி    அளித்த    தெளிவிற்குப்  பதில்   தாருங்கள்  என்று  கேட்டால்    ‘ஐயோ எனக்கு   நேரமில்லை’  என்கிறீர்கள்.    திரு  தேவ்    கேட்ட  கேள்விகளுக்கு     உங்களிடமிருந்து  பொறுப்பான    பதில்  இல்லை.   கேட்டால்      பிஸி. 
 
ஆனால்    பொருளாதாரம்  பற்றிப்  பேசப்படும்  ஓர்   இழையில்    சம்பந்தமில்லாத     சுட்டிகளை  இடுவதற்கு    செலவழிக்கப்  போதிய   நேரம்  தங்களுக்கு    இருக்கிறது  போலும்! :--))))     

 

N. Ganesan

unread,
Feb 27, 2010, 3:15:04 PM2/27/10
to மின்தமிழ்

On Feb 27, 1:48 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> ஆனால்    பொருளாதாரம்  பற்றிப்  பேசப்படும்  ஓர்   இழையில்
> சம்பந்தமில்லாத     சுட்டிகளை  இடுவதற்கு    செலவழிக்கப்  போதிய
> நேரம்  தங்களுக்கு    இருக்கிறது  போலும்! :--))))
>

எனக்கும் கொஞ்சம் வேளாண்மை தெரியும் என்பதால்.

நா. கணேசன்

srirangammohanarangan v

unread,
Feb 27, 2010, 3:25:55 PM2/27/10
to mint...@googlegroups.com
>>எனக்கும் கொஞ்சம் வேளாண்மை தெரியும் என்பதால்<<
 
மிகவும்  மகிழ்ச்சி.  அப்படியென்றால்    தாங்கள்    இந்த  இழைக்குச்  சம்பந்தமாகப்  பல   கருத்துக்களைத்  தரலாமே.    அதைவிடுத்து    எங்கு  கொண்டு  வந்து   இந்த  இழைகளை  நுழைக்கலாம்    என்று    வேலை  மெனக்கிட்டுச்  செய்வதைப்  போல்தானே   தெரிகிறது,   அதுவும்    உங்களுக்குக்  கொஞ்சம்  தெரிந்த   வேளாண்மை   பற்றியும்   அதற்குச்  சம்பந்தமான    இழையில்  பேசாமல்.?
:--))))

 

devoo

unread,
Feb 28, 2010, 5:05:42 AM2/28/10
to மின்தமிழ்
Feb 27, 10:10 am, "N. Ganesan"

> தமிழ்நாடு அரசு கோர்ட்டில் கேசில் உள்ளது:http://www.vinavu.com/2010/02/09/hrpc-case/
> எல்லாருக்கும் ரிக்வேதம் சொல்லித் தரலாமா? குழந்தைப் பருவத்தில் இருந்தே.<

மரபுச் செல்வர், வேளாண்மை அரசின் பொருளாதாரக் கொள்கை இவை பற்றிய அருட்
செல்வர் திரு மகாலிங்கம் அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்;
அல்லது தமக்குத் தெரிந்த வேளாண்மை குறித்தும் எழுதலாம் அவருக்குக்
கிடைக்கும் குறைவான நேரத்தில்.

முன்பு அநங்கன், அசரீரி குறித்த விவாதம் நடைபெற்றது ; அதுவும் பாதியில்
நிற்கிறது. கேட்டால் விடை கூறுமுன் வேறு பணிகள் குறுக்கிட்டு விட்டன
என்பார் வழக்கம்போல.

பெரியவுக செஞ்சா பெருமாளு சேஞ்சாப்புல

தேவ்

srirangammohanarangan v

unread,
Mar 9, 2010, 12:26:16 PM3/9/10
to mint...@googlegroups.com
நண்பர்களே,   இன்றைய  தலையங்கம்   தினமணியில்   ‘பேரபாயம்  காத்திருக்கிறது’  என்பது  பற்றிப்  படித்தவர்கள்   சிறிது  என்ன  விஷயம்  என்று   விளக்கினால்    நன்றாக  இருக்கும்.    ஒரே   தலையைச்  சுற்றுகிறது.:--((((

devoo

unread,
Mar 9, 2010, 2:20:59 PM3/9/10
to மின்தமிழ்
Feb 26, 9:43 pm, viche...@gmail.com

/// இந்திய- அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு


அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி
செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க
வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால்
நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க
முடியாததாகிவிடும்.

அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும்
உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி *விவசாய விரிவாக்கத்தில்
தனியார்மயத்தைப் புகுத்துவதும், இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப்
பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும்* அனுமதிக்கப்பட இருக்கிறது. ///


கட்டுரையாளரை அச்சுறுத்தும் செய்தி இதுதான்; இந்திய வேளாண்மையில் வெளி்
முதலீடும், அதீதமான வணிக நோக்கும் புகுவதால் விபரீதங்கள் விளையும் என்று
அவர் அஞ்சுவதுதான் இக்கட்டுரைக்கான மையம். இதன் சாதக பாதகங்களைச் சீர்
தூக்கிப் பார்ப்பது அவசியம்

தேவ்


On Mar 9, 11:26 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> நண்பர்களே,   இன்றைய  தலையங்கம்   தினமணியில்   ‘பேரபாயம்  காத்திருக்கிறது’
> என்பது  பற்றிப்  படித்தவர்கள்   சிறிது  என்ன  விஷயம்  என்று   விளக்கினால்
> நன்றாக  இருக்கும்.    ஒரே   தலையைச்  சுற்றுகிறது.:--((((
>

srirangammohanarangan v

unread,
Mar 10, 2010, 8:55:39 AM3/10/10
to mint...@googlegroups.com
என்ன   யாருமே  படிக்கவில்லையா?   அன்றேல்   அதைப்  பற்றிப்  பேச  இஷ்டமில்லையா?
 
யாரோ   ஒருவர்   பணம்  பெண்   என்ற  விஷயங்களில்   சிக்கி  ஊடக  கவனத்தை   ஈர்ப்பதுதான்   பெரும்  முக்கியத்துவம்   வாய்ந்தது   போலும்!   பெரிய  விஞ்ஞானியிலிருந்து    பாமரன்  வரை   இதுதான்   நிலைமையோ?   
 
கொஞ்சம்    குறிப்பிட்ட    தினமணி  தலையங்கத்தைப்  பார்த்து   எங்களைப்  போல    சாதரண  மக்களுக்கு   என்ன  விஷயம்  என்று   விளக்குங்கப்பா !!   
புண்ணியமா  போகட்டும் :--))))

 
On 3/10/10, devoo <rde...@gmail.com> wrote:
Feb 26, 9:43 pm, viche...@gmail.com


srirangammohanarangan v

unread,
Mar 10, 2010, 10:40:43 AM3/10/10
to mint...@googlegroups.com
நல்ல  வேளை !    தேடிப்  பார்த்ததில்   மின்  தேசத்தில்    இந்தத்  தலையங்கம்  பற்றியும்,   அதன்   pros  and  cons  பத்தியும்    இந்தத்  தளத்தில்     அருமை  நண்பர்   திரு  கிருஷ்ணமூர்த்தி  சார்   எழுதியிருக்கிறார். 
 
ஒன்றுமே  வேண்டாது   உலகனைத்தும்  ஆளுவர்  காண்   என்ற  பாரதி  வரியை  உள்  பொதிந்தோ   என்னவோ    வலைத்தளத்தின்  பெயரே    consent to be nothing.    ஆன்மிகம் (அரவிந்தர்  அன்னை  ஈடுபாடு),  அரசியல்,  சமுதாயப்பிரச்சனை  விமரிசனம்   என்று   படிக்க   காத்ரமான   ஒரு  வலைத்தளம்    அன்பர்  திரு   கிருஷ்ணமூர்த்தி  சாருடையது.    படிக்கும்   உற்சாகமும்   விடாது   பேணப்படும்    ஸ்டைலில்  அவருடைய   எழுத்துகள்  அமைவது  கூடுதல்   விசேஷம்.    முக்கியமான   கோணத்தில்   பார்க்கிறார்.  
 
திரு  கண்ணன்   சற்றே   வித்யாசமாகச்  சிந்திப்பவர்.  என்ன  சொல்கிறார்    என்று  பொறுத்திருப்போம்.    திரு  ரெ  கா   இந்நேரம்   அலசலான  பதிலுடன்    வருவார்   என்று  நம்புகிறேன். :--))))    

 

S.Partha sarathy

unread,
Mar 10, 2010, 12:48:57 PM3/10/10
to mint...@googlegroups.com
ஐயா,
உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம்  என்பது உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையம் (National Biotechnology Regulatory Authority) ஒன்றினை உருவாக்குவதற்கான சட்டம் என்ற தற்ப்போது விளக்கம் அளிக்கப்பட்ட்டுள்ளதாக நான் புரிந்துகொண்டுள்ளேன்.

”The NBRA will be an independent, autonomous, statutory agency established by the
Government of India to safeguard the health and safety of the people of India and to
protect the environment by identifying risks posed by, or as a result of, modern
biotechnology3, and managing those risks through regulating the safe development and
deployment of biotechnology products and processes”

என வரைவில் கூறப்பட்டுள்ளது.  For the Draft pl. click
http://dbtindia.nic.in/Draft%20establishment%20plan%20for%20NBRA_28may2008.pdf

ஆனால் மக்களிடத்து அடக்குமுறையைக் கையாண்டால் வன்மையாக கண்டிக்கத்தக்கதே!

அன்புடன்
 பார்த்தசாரதி

2010/3/10 srirangammohanarangan v <ranga...@gmail.com>

karthi

unread,
Mar 11, 2010, 12:41:42 AM3/11/10
to mint...@googlegroups.com
இந்தத் தலையங்கத்திற்கு நன் ஒரு பதில் எழுதியிருந்தேனே!
 
ரெ.கா.
----- Original Message -----

S.Partha sarathy

unread,
Mar 11, 2010, 4:23:22 AM3/11/10
to mint...@googlegroups.com
//எல்லாப் பிரச்சினைகளிலும் இரு பக்கங்கள் உண்டல்லவா?

இங்கு ஒரு தரப்பைத்தான் உரத்துப் பேசுகிறீர்கள்.
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு இந்திய விவசாயிகளிடையே
கூட ஆதரவு இருப்பதாகத்தான் நான் காணுகிறேன்//

திரு ரெ.கா அவர்களே! மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு தேவையா என்ற பிரச்சனைக்கு.....
தேவை என்று பன்னாட்டுக்கம்பெனிகள் தரும் வாதம் :
தண்டுதுளைப்பான் பூச்சியினால் ஆண்டிற்கு சுமார் 40% கத்திரிக்காய் கொள்முதல் நஷ்டமாகின்றது. பிடி கத்திரிக்காய் அறிமுகமானால் அது 20% குறையும் ( முழுவதுமாக அல்ல).
தேவையில்லை என்போர்  தரும் வாதம்:
பூச்சி மருந்து தெளிக்காமல் Bacillus Thuringiensis என்ற பாக்டீரியாவின் புரதத்தின் மூலம் மறபனு மாற்றம் செய்யப்பட்டு விளையும் கத்திக்காய் செடியினை தண்டுதுளைப்பான் பூச்சியிலிருந்து ஓரளவு (20%) காப்பது என்பது தொழில்நுட்பரீதியாக சரிதான். (குறிப்பு: மற்ற பூச்சிகள் தடுக்கப்படமாட்டாது)

செடியைக்காக்கும் ஆனால் அதை உண்ணும் மனிதனைக் காக்குமா என்று ஏதேனும் ஆராய்சிகள் முழுமையாக செய்து இருக்கின்றார்களா? என்பது முதல் கேள்வி.
பன்னாட்டுக் கம்பேனிகளின் பதில் : 90 நாட்கள் வரை சோதனை செய்ததில் எந்த பாதிப்பும் இல்லை. (அதன் பின் ...யாருக்குத்தெரியும்?)

சரி அவர்கள்தான் வியாபரத்திற்காக சொல்கின்றார்கள் ...மக்களுக்காக உள்ள அரசாங்க்த்திடம் நீங்கள் ஆய்வுசெய்தே இதை அனுமதிதரப்போகின்றீர்களா? என்ற கேள்விக்கு
அரசின் பதில்: ஹி..ஹி...அந்தக்கம்பெனிகள்தான் பிரச்சனை இல்லை என்று சொல்கின்றார்களே.

"The company claims that human health concerns due to pesticide use can be addressed with this transgenic Brinjal with its in-built tolerance
• Company promises that through this in-built tolerance, there would be substantial increase in marketable yields. Higher yields would result in higher incomes for farmers, it is expected
 Source:  Briefing Paper, Centre for Sustainable Agriculture,
http://assamagribusiness.nic.in/bt_brinjal_briefing_paper.pdf

2. விதைகள் அவர்களிடமிருந்துதன் வாங்கவேண்டும்,,,பாரம்பரிய முறையில் விதக்கப்பட்ட செடிகளும்  (contaminate) கெட்டுவிடச்செய்து பாரம்பரரிய விதைகள் மறைந்துவிடும். விளைவு?... நாம் கத்திரிக்காய் விதைக்காக அமெரிக்காவிடம் பல்லைகாட்டவேண்டும்,
20% கொள்முதலை அதிகரிக்க இவ்வளவு ரிஸ்க் தேவையா?
என்று அதனை எதிர்ப்போர் கேட்கின்றனர்.

மேலும் அவர்கள் வாதங்களுக்கு சான்றாக பிடிபருத்தினால் ஏற்கனவே விவசாயிகள் படும் கஷ்டங்களை எடுத்துறைக்கின்றனர்.

இந்தியாவின் தலையாய பிரச்சனையாக இதை எடுத்துக்கொண்டு அடம்பிடிக்கும் அரசங்கத்தினை வியாபரிகள் தவிர யார்தான் பாரட்டுவார்கள்?
அன்புடன்
பார்த்தசாரதி



2010/3/11 karthi <karth...@gmail.com>

karthi

unread,
Mar 11, 2010, 6:03:42 AM3/11/10
to mint...@googlegroups.com
அன்பின் பார்த்தசாரதி, (ரங்கனும் கவனிக்க.)
 
இந்த விவரங்களுக்கு மிக்க நன்றி.
 
இயற்கை வேளாண்மை மிகவும் வேண்டப்படுவதே. இதனை
எல்லா நாடுகளும் தங்கள் முதுசொம்மாகக் கருதி முயன்று,
பணம் செல்வழித்துப் பாதுகாக்க வேண்டும். அதிலே வேறுபடும்
கருத்துக்கள் இல்லை.
 
ஆனால் நாளடைவில் நமது மூலாதாரங்கள் குறைந்து, பெருகி வரும்
மக்கள் தொகையின் தேவைகளுக்கு இயற்கை வேளாண்மை
போதுமான உற்பத்தியை அளிக்காது என்று இன்று அச்சம் நிலவுகிறது.
அதற்கான மாற்று வழிகளில் ஒன்றுதான் இந்த பி.ட்டி. அறிவியல்
முறை.
 
90 நாள் சோதனையில் பாதிப்பு இல்லை என்பது அறிவியலின் முடிவு.
இது ஒரு உணவுப் பயன்பாட்டின் தர அளவுகோல் என்று எடுத்துக் கொள்ளலாம்.
பிற உணவுப் பயிர்களும் இந்த வகை தர அளவுகோலின் பரிசோதனைக்கு
உட்பட்டே சந்தைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இதுதான் இப்போதைக்கான
தரக் கட்டுப்பாடு.
 
"அதன் பின் யாருக்குத் தெரியும்?" என்கிறீர்கள். தெரியாதுதான். 180 நாள் சோதனை
செய்யலாமா? அதன் பின்? 360 நாள்? அதன் பின்? எங்காகிலும் நின்று இதுதான் முடிவு
என ஏற்கவே வேண்டும்.
 
இதனை ஏற்க மாட்டோம் என்றால் முன்னேற்றம் இந்தியாவைக் கடந்து போகலாம்.
பிற நாடுகள் இதனை ஏற்று உற்பத்திச் செலவைக் குறைக்க, இந்திய இயற்கைக்
கத்தரிக்காய் விலையில் ஏறும்; உற்பத்தி குறையும். (சாத்தியக் கூறுகளை மட்டுமே
கூறுகிறேன்). இதனால் அரசியல் புரட்சிதான் வெடிக்கும். "ஏன் இந்தியா பிற நாடுகளைப்
பின் பற்றக் கூடாது?" என்ற குரல்கள் அப்போது உரத்து ஒலிக்கும்.
 
விதைகளைப் பயன் படுத்த முடியாது; மீண்டும் வாங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
வாங்கினால் போகிறது! அது குறைந்த/நியாயமான விலைக்கு தாரளமாகக் கிடைக்கும்
என்றால் வாங்குவதில் என்ன தவறோ? இப்போதே சில நடவுகளுக்குப் பின் விதைகள்
நீர்த்துப் போவதும் விவசாயிகள் புதிதாக வாங்குவதும் நடக்கவே செய்கிறது.
 
விதை இல்லாத கொய்யாப்பழம் எங்கள் நாட்டில் விளைகிறது. விதையில்லாத
திராட்சை, விதையில்லா தர்பூசணி சந்தையில் உண்டு. ஆக என்ன புதுமை?
கத்தரிக்காய்க்கு மட்டும் விதை ஏன் முக்கியமாய்ப் போனதோ?
 
ஏராளமான விதைகள் இன்று புழக்கத்தில் இல்லை. அமெரிக்காவில் பாரம்பரிய
விதைகளைச் சேகரித்து நிலத்துக்கடியில் குளிர்சாதன பதனத்துடன் பாதுகாக்கிறார்கள்.
ஒரு அணுவாயதப் போரில் உலகம் அழிந்து போனால் மீண்டும் விவசாயத்தை
உயிர்ப்பிப்பது இதன் நோக்கம்.
 
அரசாங்கத்தின் நேர்மையையும், நிறுவனங்களின் நேர்மையையும் நாம் அதிகம்
சந்தேகிக்கிறோம். இது இயற்கையே. ஆனால் இந்த இரண்டு தரப்பினருக்கும் கூட
கட்டுப்பாடுகள் உள்ளன. Corporate Social Responsibilty இப்போது நிறுவனங்களின் ஒரு
முக்கிய அங்கம். அரசாங்கத்தைத் தட்டிக் கேட்க நாடாளுமன்றமும் நீதிமன்றங்களும்
உள்ளன. Check and balance. இவற்றில் ஓரளாவாவது நம்பிக்கை வைத்தே நாம் வாழ வேண்டியுள்ளது.
இவற்றுக்கு மேல் நான்காம் தூணாக பத்திரிக்கையுலகு இருக்கிறது.
 
பசுமை இயக்கங்கள் முற்றாக அரசியல் நோக்கம் இல்லாதவை அல்ல. பயனீட்டாளர்
இயக்கத்தின் தந்தையான ரால்ஃப் நாடர் அமெரிக்க அதிபராக வேண்டும் என்னும் ஆசையில்
இன்னும் இருக்கிறார் என்பதை மறந்துவிட வேண்டாம்.

N. Kannan

unread,
Mar 11, 2010, 7:02:09 AM3/11/10
to mint...@googlegroups.com
ரங்கன் மற்றும் நண்பர்களே!

மனிதன் என்ற சிந்தனை உயிரி பூமியில் நிலைப்பதற்கு முன்னும் உயிரியில்
சோதனைகள் தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன. இதனை Mutation is
the basis of evolution என்று சொல்வார்கள். உயிரியில் மூலக்கூறில்
மாற்றம் நிகழ்ந்தால் அது எப்போதும் கேடு என்றில்லை. ஆனால், இயற்கை
இச்சோதனைகளை இன்றுள்ளது போல் 180 நாளில் முடிப்பதில்லை. பல கோடி
வருஷங்கள் எடுத்துக்கொள்வதுண்டு. அப்படி மெல்ல, மெல்ல செதுக்கிய
சிற்பங்களே இன்று நாம் உலகில் காணும் உயிரிகள். எனவே அவைகளைக் கொன்று
ஒழித்தல் என்பது போன்றதோர் பெரும் குற்றம் வேறேதுமில்லை.

ஆனால் மனிதன் என்ற சிந்தனை உயிரி தோன்றியபின் ‘கலாச்சாரப் பரிணாமம்’
எனுமோர் புதிய பாதை வடிவெடுக்கிறது. அது முழுக்க, முழுக்க மனித சிந்தனை
வயமான மெய்நிகர் உலகம். உதாரணமாக பொருளாதாரம் என்பதை எடுத்துக் கொள்வோம்.
கோடான கோடி ஆண்டுகள் சோதனை செய்து இயற்கை உருவாக்கிய கத்தரிக்காய்க்கு
இவன் செயற்கையாக உருவாக்கிய ‘காசு’ எனும் மெய்நிகர் பொருளுக்குக் கிரயம்
பேசுவான். பின் மெல்ல, மெல்ல இவன் உருவாக்கிய செயற்கைப் பொருளாதாரம்
மெய்நிகர் எனும் நிலையிலிருந்து மெய்மையாகிப் போய், இயற்கைக்கு என்ன
விலை? என்று கேட்கும் காலத்திற்கு இது இட்டுச் செல்லும். அதுதான் இப்போது
நடக்கிறது. வியட்நாம் போரில் அழித்தொழித்த காடுகளுக்கு அமெரிக்கா என்ன
விலை தரமுடியும்? ஜப்பானியர்களின் குச்சியுண்ணும் பழக்கத்திற்காக
வெட்டப்படும் போர்னியோ காடுகளுக்கு என்ன விலை ஜப்பான் சொல்லப்போகிறது?
உலகின் நுரையீரல் எனப்படும் அமேசான் காடுகளை மெக்டோனால்ட் ஹேம்பர்க்கர்
தேவைக்காக அழித்தொழித்துவிட்டு அதற்கு என்ன விலை அமெரிக்கா பேசப்போகிறது?

உண்மையில் உயிரி தொழில்நுட்பம் நமக்குத் தேவையா?
தேவையில்லைதான். ஆனால், நமது சமூக வாழ்வு என்பதே செயற்கையாகிப் போனதே!
காசு இயற்கையா? மனித உயிரிக்கு என்ன விலை கொடுக்க முடியும்? அன்பின் விலை
என்ன? தாய்மைக்கு விலை வைக்கிறார்கள் என்றொரு இடுகை வந்தது! ஆக, இப்படி
செயற்கையாகிப் போன உலகில் செயற்கை கத்தரி இயல்பான ஒரு வளர்ச்சியே!
ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லுவார், மனித வளர்ச்சியின் ஆரம்பத்திலிலேயே எங்கோ
வழி தவறிப் போயிருக்கிறோம் என்று. அதன் விளைவுதான் இது.

உலகில் எல்லோரும் உண்ணும் அளவிற்கு உணவு இருக்கிறது. ஆயின் ஏன் பட்டினிச்
சாவு? இன்று என்று இல்லை? வள்ளுவன் இருந்த காலத்தில் என்ன பெரிய ஜனத்தொகை
இருந்திருக்கும்? ஆனால் அவன் ஏன் அப்படியொரு குமுறு குமுறி ‘இரந்துண்டு
வாழ வேண்டும் என நிலை வரின் பரந்து கெடுக உலகு இயற்றியான்’ என்கிறான்.
அவ்வளவு பேரறிவு கொண்ட வள்ளுவன் பழியைத்தூக்கி உலகு இயற்றியான் என்று,
‘தாமரைக் கண்ணன்’ மேல் போடுகிறார். இது அடுக்குமா? பட்டினியை
உருவாக்கியது யார்? கடவுளா? மனிதனா?

நல்ல கிரயத்திற்குப் போகவில்லையெனில் கோதுமையை அமெரிக்கா கடலில்
கொட்டுகிறது. ஆப்பிரிக்காவில் கால் வயிறு, அரை வயிறு என என்பு தோல்
போர்த்திய உயிர்கள். ஏன் இந்த நிலை?

குற்றம் தொழில் நுட்பத்திலா? இல்லை மனித மனத்திலா?

இவன் மனத்தளவில் குன்றிக் குறுகிப்போய் செயற்கை வாழ்வை உருவாக்குவான்.
அங்கு ஈவு, இரக்கம், அன்பு இவைகளுக்கு இடமிருக்காது. ஆனால், speculation
economy கொண்டு இந்தோனீசியாவின் பொருளாதாரத்தைக் கவிழ்ப்பான்! அமெரிக்கா
கடன்காரங்கள் வட்டி கட்டவில்லையென அங்குள்ள வங்கிகள் திவாலா ஆனால்
ஒன்றுமறியாத பங்களா தேச ஏழை விவசாயக் குடும்பம் தூக்குப்போட்டுச் சாகும்!
என்ன பயித்தியக்காரத்தனம்?

உணவுப் பற்றாக்குறை என்று சொல்வதும் காசு உள்ளவன்தான். அதற்கான தீர்வு
என்று புதிய தொழில்நுட்பத்தைத் தருபவனும் காசு உள்ளவன்தான். ஏனெனில்
காசுதான் நம்மை ஆள்கிறது! காசேதான் கடவுள்!

நாளைய உலகில் இந்த உலகைப் புரட்டிப் போடக்கூடிய பொருளாதாரக் கொள்கையை
கொண்டு வருபவனே உண்மையான தேவன். அவன்தான் மனிதனை மீண்டும் இயற்கையின்
வழியில் வழி நடத்துவான். அதுவரை நாம் பட்டிமண்டபம் செய்யலாம்!

கண்ணன்

2010/3/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Mar 11, 2010, 8:53:44 AM3/11/10
to mint...@googlegroups.com
On 3/11/10, karthi <karth...@gmail.com> wrote:
இந்தத் தலையங்கத்திற்கு நன் ஒரு பதில் எழுதியிருந்தேனே!
 
ரெ.கா.
 
திரு  ரெ  கா  சார்,   விச்நௌ  போட்ட   தலையங்கத்  தொடுப்பு   வேளாண்  பற்றியும்,  கத்திரிக்காய் பற்றியும்   மையப்படுத்துவது.    இந்தத் தலையங்கம்   அணுசக்தி  ஒப்பந்தம்,  மகளிர் இட ஒதுக்கீடு  என்பன பற்றிப்  பேசுவது.  (தேவ் சாரும் கவனிக்க)
:--)))

 

karthi

unread,
Mar 11, 2010, 9:56:56 AM3/11/10
to mint...@googlegroups.com
ஆமாம், மன்னிக்க. அதே போல் இருந்ததினால் குழப்பம்.
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Thursday, March 11, 2010 9:53 PM
Subject: Re: [MinTamil] Re: சுதந்திரம் பறிபோகிறது...?தினமணி தலையங்கம்



--

S.Partha sarathy

unread,
Mar 11, 2010, 11:53:47 AM3/11/10
to mint...@googlegroups.com
//ஆனால் நாளடைவில் நமது மூலாதாரங்கள் குறைந்து, பெருகி வரும்
மக்கள் தொகையின் தேவைகளுக்கு இயற்கை வேளாண்மை
போதுமான உற்பத்தியை அளிக்காது என்று இன்று அச்சம் நிலவுகிறது.
அதற்கான மாற்று வழிகளில் ஒன்றுதான் இந்த பி.ட்டி. அறிவியல்
முறை.///

இது சரியான மற்றுவழி அல்ல என்பதே பிரச்சனை. பிடிக்கத்திரியின் பண்புகள்
அதை உண்டக்கிய கம்பெனியை தவிர யாருக்கும் தெரியாது என்பது வெளிப்படையான உண்மை. அரசாங்கம் அவர்கள் விளைப்பொருட்களை அப்படியே அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்வதே பிரச்சனை. ஐயா, தொழில் நுட்பத்தை யாரும் எதிர்க்கவில்லை. அவசரகோலத்தில் செயல்படுவதையே எதிர்கின்றனர்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் ..பசுமை புரட்சி. குறியகால உற்பத்தியையே மையமாக வைத்து தற்போது போன்றே அவசரகதியில் பல எதிர்புகளுக்கிடையில் முழுவீச்சில் முனைப்போடு நின்ற எம்.எஸ். சுவாமிநாதன் ....தற்போது விவசாயிகள் பலர்
தற்கொலை செய்துகொள்வதைக் கண்டு வருத்தப்படுகின்றார். இயற்கை வேளாண்மை பற்றி பேசுகின்றார். தற்காலிக்மாக பிடி கத்திரியை அரசு நிறுத்திவைத்திருப்பதற்கு ‘புத்திசாலித்தன்மான முடிவு’ என்கின்றார். ”உயிரிதொழில் நுட்பம் தேவைதன் ஆனால் அது பொதுமக்களின் நல்லதிற்காக இருக்கவேஎண்டும்” என்று ஆலோசனை கூறுகின்றார்.
http://www.hindu.com/2010/02/10/stories/2010021060041000.htm



///90 நாள் சோதனையில் பாதிப்பு இல்லை என்பது அறிவியலின் முடிவு.///

உண்மையில்பாதிப்பு இல்லை அவர்கள் சொல்லவில்லை. பாதிப்பு குறைவு என்றே கூறுகின்றனர்.  90 நாட்களுக்கு பிறகு பிரச்சனைகள் ஏற்பாடது என்று அவர்கள் உத்திரவாதம் ஏதும் தரவில்லை. அப்படியே தந்தாலும் ஆராய்ச்சி செய்யாமல் கொடுக்கும் வாக்குறுதியை எப்படி நாம் ஏற்ருக்கொள்வது.
அது அறிவியல் அணுகுறையுடன் கூடிய முடிவல்ல என்பதே பிரச்சனை. நான் முன்பு குறிப்பிட்டவை இரண்டு பிரச்சனகள் மட்டுமே.

முதலில் பிடி கத்திரி வேலைசெய்யும் முறையைப் பார்ப்போம்.
இந்த பிடி கத்திரியை கண்டுபிடித்தது 
Monsanto என்ற அமெரிக்கக் கம்பெனி உதவியுடன் மாஹிகோ (Maharashtra Hybrid Seed
Company Ltd. (Mahyco)) என்ற கம்பெனி. மண்ணிலுள்ள Bacillus thuringiensis என்ற பாக்டீரியாவிலிருந்து எடுக்கபட்ட Cry1Ac மரபணு உட்பட மூன்று அயல் மரபணுக்கணுக்களை உட்செலுத்தப்பட்டது இந்த பிடிகத்திரிக்காய். தண்டுதுளைப்பான் புழு செடியை உட்கொள்ளும்போது திசுவுடன்
Cry1Ac புரதமும் புழுவின் வயிற்றினுள் செல்கின்றது. அங்கு pH 9.5 க்கும் அதிகமாக இருபதினால் இந்த புரதம் கரைந்து என்சைம்களால் படிகங்களாக் மாறுகின்றன. இந்த படிகங்கள் கண்ணாடித்துண்டுகள் போன்று இருப்பதால் செரிமானம் நடக்கும் இடத்தில் துளைகளை ஏற்படுத்தி இறுதியில் புழுவை இறந்துவிடச்செய்கின்றன.
source: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்
 http://moef.nic.in/downloads/public-information/Bt%20Brinjal%20Primer.pdf

இதை சாப்பிடும் மனிதன் மற்றும் மற்ற உயிரினங்களின் கதி? அதெற்கெல்லம் பயந்தால் விளைச்சலை  பெருக்குவது எப்படி என்று இந்தியாவின் மக்களுக்காக இரவு பகலாக ஆராய்ச்சி செய்த Monsanto மற்றும் மாஹிகோ கம்பெனிகளுக்கு ஆதரவு தருகின்றார் விவசாய அமைச்சர் பவார்.

அன்புட்ன்

srirangammohanarangan v

unread,
Mar 11, 2010, 12:09:33 PM3/11/10
to mint...@googlegroups.com
On 3/11/10, S.Partha sarathy <spsar...@gmail.com> wrote:
//ஆனால் நாளடைவில் நமது மூலாதாரங்கள் குறைந்து, பெருகி வரும்
மக்கள் தொகையின் தேவைகளுக்கு இயற்கை வேளாண்மை
போதுமான உற்பத்தியை அளிக்காது என்று இன்று அச்சம் நிலவுகிறது.
அதற்கான மாற்று வழிகளில் ஒன்றுதான் இந்த பி.ட்டி. அறிவியல்
முறை.///

இது சரியான மற்றுவழி அல்ல என்பதே பிரச்சனை. பிடிக்கத்திரியின் பண்புகள்
அதை உண்டக்கிய கம்பெனியை தவிர யாருக்கும் தெரியாது என்பது வெளிப்படையான உண்மை. அரசாங்கம் அவர்கள் விளைப்பொருட்களை அப்படியே அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்வதே பிரச்சனை. ஐயா, தொழில் நுட்பத்தை யாரும் எதிர்க்கவில்லை. அவசரகோலத்தில் செயல்படுவதையே எதிர்கின்றனர்.
 
நன்றி  திரு பார்த்தசாரதி  சார்.    மனிதர்க்குத்   தொடர்ந்த   நன்மையும்,  அதிக   நன்மையும்     எப்படி  ஏற்படுமோ   அப்படி   எதையும்   யோசித்துச் செய்வதே    அறிவுடைமை,  அக்கறையுடைமை,   பொதுநலம்  பேணல்.   அதைவிடுத்து  --  ஏதோ  ஒன்று   எப்படியோ   வந்தால்  சரி,    தலைவலிக்குத்  தானே    மருந்து  கேட்டாய்,   வயிற்று  வலி    வந்தால்   அப்புறம்  பார்த்துக்கொள்ளலாம்;    நன்மையும்  தீமையும்    எதிலும்   கலந்தேதான்   இருக்கும்;   ரொம்ப  யோசித்தால்   எதையுமே   செய்ய  முடியாது ---   இவை  போன்ற   பார்வை  மங்கலான   அணுகுமுறைகளை   முன்னிறுத்தும் போதுதான்    அச்சம்  கூடுகிறது.  
 
எண்ணித்  துணிக    கருமம்   துணிந்தபின்   
எண்ணுவம்  என்பது  இழுக்கு      

 

Swarna Lakshmi

unread,
Mar 13, 2010, 12:06:08 PM3/13/10
to mint...@googlegroups.com
மனிதர்கள் ப்ரம்மாவாக முடியாது. கடற்கரையில் நின்று இங்கொன்றும் அங்னொன்றுமாக சிப்பிகளை தேடி மகிழலாம், எப்போதாவது முத்தும் கிடைக்கலாம், கப்பலில் பயணிக்கலாம், கடல்வாழ் உயிரினங்களை சுவைக்கலாம் - அவற்றில் ஒன்றைக்கூட படைக்க முடியாது. இயற்கையை வெல்ல வேண்டியதில்லை - அதோடு இயந்து வாழ்ந்தாலே போதும். ஆயிரமாயிரம் வருஷங்களாக எப்படி கத்தரிக்காய் பயிரடப்பட்டதோ அப்படியே தொடர்வதே புத்திசாலித்தனம் - இதற்காக செலவு செய்யும் பணத்திற்கு சில லட்சம் மரங்களை நட்டால், போகிற வழிக்குப் புண்ணியம்.


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 11 March, 2010 10:39:33 PM

Subject: Re: [MinTamil] Re: சுதந்திரம் பறிபோகிறது...?தினமணி தலையங்கம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW!.

srirangammohanarangan v

unread,
Mar 16, 2010, 11:54:27 AM3/16/10
to mint...@googlegroups.com
தாற்காலிகமாக   இந்த  அணு சக்தி  உற்பத்தியின்  போது  விளையக்கூடும்  பாதக  விளைவுக்கான   நஷ்ட  ஈடு  பற்றிய   மசோதா   ஒத்திவைப்புபோல் படுகிறதே.   நண்பர்கள்   கருத்து  என்ன?
Reply all
Reply to author
Forward
0 new messages