திருவண்ணாமலை பதிவுகள்

358 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Sep 10, 2011, 7:08:09 PM9/10/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
வணக்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் தகவல்கள் அடங்கிய ஒரு பகுதியினை இன்று நமது வலைப்பக்கத்தில் தொடங்குகின்றோம். இப்பகுதியில் படிப்படியாக இம்மாவட்டத்தின் சிறப்பினை வலியிறுத்தும் பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து சில பயணங்களை ஏற்பாடு செய்து தானே பயணமும் செய்து பேட்டிகளையும் மேற்கொண்டு இம்முயற்சியில் உதவியவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள்.இப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி எங்கள் பயணத்திற்கும் உதவிய அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர்  டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.


திருவண்ணாமலை மாவட்டம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் தூதுவராகச் சென்று ஸ்ரீமதி சீதாலட்சுமி (சீதாம்மா) அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர்  டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களை மேற்கண்ட பேட்டி இன்று வெளியிடப்படுகின்றது. இப்பேட்டியின் நீளம் 36 நிமிடங்கள்.

இப்பேட்டியில் குறிப்பிடப்படும் செய்திகள் பற்றிய குறிப்புக்கள் கீழ் வருமாறு:

1.முனைவர் பட்ட ஆய்வு தொடர்பான சில செய்திகள்
டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு திருக்குறள் தொடர்பில் அமைந்தமைப் பற்றிய சில செய்திகள்.
திருக்குறளில் பொருளியலில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டதன் காரணம்..
திருக்குறளில் ஏறக்குறைய 190 குறள்களில் சட்டம் பற்றிய கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன என்றும் எவ்வாறு சட்டம் எனும் பொருள் அனுகப்படுகின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.

2.நடைமுறை பணிகள்
தனது பணியில் உள்ள நடைமுறை விஷயங்கள், பொது மக்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
ஜவ்வாது மலைப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்குவது.  
ஜவ்வாது மலையில் ஆட்சியர்  அவர்களின் பணி..
ஜவ்வாது மலையில் ஏறக்குறைய 70,000 மலைவாசி மக்கள் இருக்கின்றார்கள். தற்சமயம் சாலைவசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
இம்மக்கள் வெளி உலகத்திலிருந்து தனித்து இருப்பதால் வெளி உலக வாழ்க்கை நிலை அறியாவர்களக இருக்கின்ற சூழல் இருக்கின்றது. இவர்களுக்கு முடிந்தவரை எஸ்.சி. சான்றிதழ்கள் வழங்க அரசு உதவுவதால் மலைப்பகுதியிலிருந்து வெளிவந்து இம்மக்கள் ஏனைய தொழில்களில் ஈடுப்ட வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே பெண் கல்வியறிவு குறைவான நிலையில் உள்ள பகுதி ஜவ்வாது மலை. 

3.ஜவ்வாது மலை மலைவாழ் மக்கள் வாழ்க்கை முறை
இவர்களின் குழுவைச் சாராத வெளி ஆட்களை இவர்கள் பகுதியில் அனுமதிப்பதில்லை.
திருமணம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் பிடித்தால் தான் நடைபெறும் என்ற வகையில் அமைந்துள்ளது. சாதிப்பிரிவும் கட்டுப்பாடும் இம்மக்களிடயே இல்லை.
பண்டமாற்று முறையாக ஒரு பொருளை பெற இன்னொரு பொறுளைத் தரும் முறை இன்னமும் வழக்கத்தில் உள்ளது. விலைக்குக் கேட்டாலும் கிடைக்காது..
திருமணச் சடங்குகள் அந்த மக்களுக்குள்ளேயே நிகழும். ப்ரோகிதர்களை வைத்து திருமணம் செய்யும் வழக்கம் இவர்களிடையே இல்லை.
இம்மக்கள் இயற்கை விவசாயத்தை செய்கின்றனர். மாறிவிட்ட சமுதாயத்தில் உள்ள மாற்றங்கள் இவர்களைப் பாதிக்காததால் இயற்கை வாழ்க்கை முறை விவசாயம் இன்னமும் இவர்களின் புழக்கத்தில் இருக்கின்றது. 


4.தலித் மக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏறக்குறைய 22% மக்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மிகக் குறைவான சம்பளத்தில் பொருளாதார ரீதியில் வருமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான பற்பல மேம்பாட்டு நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. 

5. ஆலயத் திருப்பணிகள்
திருவண்ணாமலையில் சிதைந்த நிலையில் உள்ள கோயில்களைச் சீரமைத்துப் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. இச்சீரமக்கும் பணியை ஆட்சியர் தொடங்கியிருக்கின்றார்கள். 

6.சோழர்கள்
இவ்வுரையாடல் தொடர்ந்து தமிழக வரலாற்றையும் தொட்டுச் செல்கின்றது.

திருவண்ணாமலையார் கோயிலில் 7ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கூட உள்ளன. இக்கோயிலின் தலவிருட்சம் மகிழ மரம். இதன் அருகில் 
ராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் அவரது மெய்கீர்த்தி அதாவது தனது அளப்பெரிய வெற்றியான கங்கை கொண்டது,  கடாரத்தை வென்ற செய்தி, கடல் பயணங்கள் என்று தனது மெய்கீர்த்தியை தானே சொல்லும் வகையில் அமைந்த கல்வெட்டினை அடையாளம் காணும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. அந்தச் செய்தியையும் இப்ப்பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

ராஜேந்திர சோழன் தனது வாழ் நாளின் கடைசி 3 ஆண்டுகள் இங்கே இருந்திருக்கின்ரார்.
இம்மன்னர் அரச பதவிக்கு வந்த போது அவருக்கு 47 வயதுக்கு மேல். 1014ல் முழு ஆட்சியாளராக பட்டமேற்கின்றார். இறுதியில் தனது மகனிடம் ஆட்சியை ஒப்படத்து விட்டு திருவண்ணாமலைப் பகுதியில் வந்து தங்கி இருந்த செய்தி, அப்போது கூல மந்தையில் ராஜேந்திர சோழன் கோயில் கட்டிய செய்தி,  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசத்தில் இம்மன்னனுக்கு பள்ளிப்படை கோயில் அமைந்துள்ள செய்தி ஆகியன பற்றி விவரிக்கின்றார்.

இப்பேட்டியின் ஒலிப்பதிவைக் கேட்கவும் இப்பதிவைப் படங்களுடன் காணவும் த.ம.அ வலைப்பக்கத்தில் உள்ள திருவண்ணாமலை பகுதிக்குச் செல்க!


திருவண்ணாமலை மாவட்ட விவரங்கள் பல அடங்கிய விரிவான இந்தப் பேட்டி கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பதிவாக்கப்பட்டது. இப்பேட்டியை பதிவு செய்தவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். அவருக்கும் இப்பேட்டியில் உதவிய திரு.ப்ரகாஷ் சுகுமாரன், மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றி.

தொடரும்...

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 
 

coral shree

unread,
Sep 10, 2011, 8:49:29 PM9/10/11
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

மிக நல்ல முயற்சி. சீதாம்மாவிற்கு மனமார்ந்த நன்றிகள். இன்னும் பல மாவட்டங்கள் குறித்த தகவல்கள் இது போல் வர வேண்டும். பலருக்கும், குறிப்பாக மாணவர்களுக்கு பயன்படக்கூடிய பகுதி. பகிர்விற்கு நன்றி.

2011/9/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

கவி.செங்குட்டுவன்

unread,
Sep 10, 2011, 11:53:29 PM9/10/11
to mint...@googlegroups.com
மிகச் சீரிய பணி சிறப்பாக நிறைவேறி இருக்கிறது. தங்களுக்கும் தங்களின்
பணிக்கு உதவியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

On 9/11/11, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> வணக்கம்.
>
> திருவண்ணாமலை மாவட்டத்தின் தகவல்கள் அடங்கிய ஒரு பகுதியினை இன்று நமது
> வலைப்பக்கத்தில் தொடங்குகின்றோம். இப்பகுதியில் படிப்படியாக இம்மாவட்டத்தின்
> சிறப்பினை வலியிறுத்தும் பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
> இம்முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து சில பயணங்களை ஏற்பாடு செய்து தானே
> பயணமும் செய்து பேட்டிகளையும் மேற்கொண்டு இம்முயற்சியில் உதவியவர் ஸ்ரீமதி
> சீதாலட்சுமி அவர்கள்.இப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி எங்கள் பயணத்திற்கும்
> உதவிய அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர் டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களுக்கு
> தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.
>
>

> *திருவண்ணாமலை மாவட்டம்*

> திருவண்ணாமலை<http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=529&Itemid=671>பகுதிக்குச்


> செல்க!
>
>
> திருவண்ணாமலை மாவட்ட விவரங்கள் பல அடங்கிய விரிவான இந்தப் பேட்டி கடந்த ஆண்டு
> தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பதிவாக்கப்பட்டது. இப்பேட்டியை பதிவு செய்தவர்
> ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். அவருக்கும் இப்பேட்டியில் உதவிய திரு.ப்ரகாஷ்
> சுகுமாரன், மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றி.
>
> தொடரும்...
>
> அன்புடன்
> சுபா

> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
http://kaviyinkural.blogspot.com
http://mazalaiootru.blogspot.com
http://kaviugi.blogspot.com/
http://crcmittapalli.blogspot.com/

Subashini Tremmel

unread,
Sep 15, 2011, 2:29:58 PM9/15/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலை மாவட்டம் - 2

இன்று இப்பேட்டிகளின் தொடர்ச்சி இடம்பெறுகின்றது. இரண்டு ஒலிப்பதிவுகள் இந்தப் பேட்டியில் இடம்பெறுகின்றன.

2. கண்ணகி கோயில் - ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கின்றார் முனைவர்.மா.ராஜேந்திரன். இப்பதிவில்:

கண்ணகி அறக்கட்டளை மேற்பார்வையில் நடைபெறும் பணிகள்
கேரளா அரசாங்கமும் தமிழ் நாடு அரசாங்கமும் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளமை
கோயில் மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ள செய்திகள்
சித்திரா பவுர்ணமி அன்று மட்டும் இங்கு வழிபாடு நடைபெறுகின்றது என்ர தகவல் 
தமிழகத்தின் பல இடங்களிலிருந்து இந்த தினத்தன்று ஆண்களும் பெண்களும் பச்சை மஞ்சள் நிறத்தில்  ஆடையணிந்து வந்து வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்திருக்கும் செய்திகள்

என கண்ணகி கோயில் பற்றிய பல செய்திகள் கலந்துரையாடப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, கோயில் சோழர் கால கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ள செய்தி, ராஜராஜ சோழன் அங்கு வந்தமையை கூறும் வகையில் உள்ள ஒரு கல்வெட்டு பற்றிய தகவல்களும் வருகின்றன.


3. அறிமுகப் பகுதி - இதில் முனைவர்.மா.ராஜேந்திரன் தன்னைப் பற்றியும் தனது பணிகள் பற்றிய சில தகவ்ல்களை வழங்குகின்றார்.  தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு. துரை, திரு.செல்வமுரளி, திரு.ப்ரகாஷ், திரு.உதயன் ஆகியோர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்கின்றார்கள். 

இந்த இரண்டு பதிவுகளையும் இங்கே சென்று கேட்கலாம்.

அன்புடன்
சுபா 

2011/9/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Sep 17, 2011, 2:14:48 PM9/17/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram

கூத்தனூர் அப்பன்


kuthanoor.jpg

திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மூட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனூர் அப்பன் சிலை உள்ளது.

கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதி கைகள் போன்ற இரண்டு பக்கத்திலும் பின்னர் கீழ்பகுதி என அமைந்துள்ளது இச்சிலை. சிலை ஏறக்குறைய 10 அடி உயரம் கொண்டது. இச்சிலையின் மேல் ஆங்காங்கே மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து பக்கத்தில் மணிகட்டி ஆலய வழிபாட்டு பொருட்களையும் வைத்து எளிமையான முறையில் கோயில் வழிபாட்டினை செய்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

இவ்வூர் மக்களுடன் பேசி அவர்களை இச்சிலை பற்றி விசாரித்த போது பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. 

இம்மக்கள் இச்சிலையை கூத்தாண்டவர் சாமி என அழைக்கின்றனர்.  வருடத்திற்கு ஒரு முறை ஆடிமாதத்தில் இங்கே சிறப்பாக திருவிழா எடுத்து விஷேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். முப்பூசை எனப்படும் ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றை பலி கொடுத்து அதனை சமைத்து படையல் செய்து இந்தச் சிலைக்கு வழிபாடு செய்கின்றனர்.  

அபிஷேகத்திற்கு வீட்டிற்கு ஒன்றாக குடங்களில் நீர் எடுத்து வரப்படுகின்றது. இந்த நீரைக் கொண்டு இச்சிலையை அபிஷேகம் செய்து பின்னர் எண்ணெய் சீயக்காய் தேய்த்து சுத்தம் செய்து அலங்கரிக்கின்றனர்.  அபிஷேகம் செய்யும் போது 108 குடங்களை வரிசப்படுத்தி ஏணி வைத்து மேலே ஏறி அபிஷேகம் செய்கின்றனர். 

எண்ணெய் சீயக்காய் கொண்டு சுத்தம் செய்த பின்னர் இச்சிலையை முழுதாக மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து அலங்கரிக்கின்றனர்

இந்தக் கிராம மக்களை மேலும் விசாரித்த போது இச்சிலையின் மேல் பகுதியை சிலர் வெட்டி எடுத்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்று இன்றும் வழிபாட்டிற்கு வைத்திருக்கின்றனர் என்ற செய்தியும் கிடைத்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தொல்லியல் ஆய்வுக்காக வந்த ஆய்வாளர்கள் காடுகள் நிறைந்த இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தி இங்கு கிடைத்த சில பொருட்களை ஆய்வுக்காகவும் பாதுகாப்பதற்கும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வுப் பணிகள் முடிந்து அவர்கள் சென்ற பிறகு இந்தச் சிலை அங்கேயே இருந்ததால் ஊர் மக்கள் அதனை வழிபடும் இறைவனாகப் பாவித்து இன்று வரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தச் சிலைக்கு முன் புறத்தில் உள்ள பெரிய நிலத்தில் ஆங்காங்கே சிறிய மேடுகளைக் காண முடிகின்றது. இவை என்னவாக இருக்கும் என விவரம் கேட்டபோது இங்கு வாழ்கின்ற இம்மக்கள் அதற்கான விளக்கம் அளித்தனர். முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்களோ சிற்றரசர்களோ ஏதாவது ஒரு காரணத்திற்காக இப்பகுதியை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது தங்களுக்கு உடனடித் தேவைக்கு மட்டும் கொஞ்சம் பொருட்களை எடுத்துக் கொண்டு ஏனையவற்றை இவ்வகையான ஆழமான குழிகளைத் தோண்டி அவற்றிற்குள் பொருட்களைப் பத்திரமாக புதைத்து வைத்து விட்டுச் சென்று விடுவார்களாம். மீண்டும் தாங்கள் திரும்பி வரும் போது பொருட்களை எடுத்துக் கொள்வார்களாம். காடாக இருந்த இப்பகுதி எதிரிகளிடமிருந்து உடமைப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் இவ்வகையில் உதவி இருக்கின்றது. 

இந்திய தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சியினால் இந்த இடம் கண்டெடுக்கப்பட்டு இச்சிலை பொதுமக்களுக்குத் தெரிய வந்த பின்னரும் கூட இப்பகுதி முழுமையாக ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படாத நிலை இருப்பது தெரிகின்றது. கடந்த கால தொல்லியல் ஆய்வுகளின் போது இப்பகுதில் இவ்வகையில் காணப்படும் இச்சிறு மேடுகளை ஆய்வாளர்கள் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்த போது வழிபாட்டுப் பொருட்கள் சில கிடைத்தன என்று இம்மக்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.  இப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியுள்ளதால் மாவட்ட ஆட்சியாளர் பொது மக்கள் இம்மேடுகளை தோண்டக்கூடாது என தெரிவித்து கட்டளையிட்டிருக்கின்றனர். அதோடு பொது மக்களுக்கும் இவற்றை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு செய்தால் அது கடவுள் குற்றம் என நினைத்து நோய் ஏற்படுவதாக நினைப்பதால் இவற்றை ஏதும் செய்யாமல் ஆங்காங்கே செடிகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர். மக்களின் இவ்வகை நம்பிக்கையே இப்பகுதியில் மறைந்து கிடக்கின்ற ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை இன்னமும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிகின்றது.

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!


அன்புடன்
சுபா

குறிப்பு: இப்பயணத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஏற்பாடு செய்தவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். சீதாம்மாவுடன், நான், ப்ரகாஷ், திருமதி.புனிதவதி இளங்கோவன் அனைவருமே மதியம் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு தானிப்பாடி வந்து இங்கு வந்து சேர்ந்தோம்.  நீண்ட தூரப் பயணத்தால் உடல் நலம் குறைந்திருந்த சீதாம்மா அவர்கள் இந்தப் பேட்டியின் போது கலந்து கொள்ள இயலவில்லை. வாகனத்தில் நாங்கள் பேட்டி முடித்து வரும் வரை காத்திருந்தார்கள்.  அவர்கள் வீக்கத்துடன் இருந்த கால் வலியையும் பொறுத்துக் கொண்டு இப்பயணத்தில் என்னுடன் கலந்து கொண்டது மனதை நெகிழ வைக்கின்றது. 





2011/9/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
kuthanoor.jpg

Subashini Tremmel

unread,
Sep 17, 2011, 2:18:23 PM9/17/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கூத்தனூர் அப்பன்
..

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..


தவறான இணைப்பினை வழங்கியிருந்தேன்.. கீழுள்ள இணைப்பில் இப்பகுதிக்குச் செல்லலாம்.!

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!

சுபா

Subashini Tremmel

unread,
Sep 17, 2011, 2:25:54 PM9/17/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நண்பர்களே,

கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 17, 2011, 6:56:40 PM9/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நல்ல தகவல்கள்! நன்றி -- சீதாம்மா, சுபா, ப்ரகாஷ், புனிதவதி இளங்கோவன் ... எல்லாருக்கும்!
சுபா, அடுத்த முறை இந்தியா போகும்போது ... ஒரு/பல நல்ல ஒலிபெருக்கி, பதிவுக் கருவிகளை எடுத்துச் செல்லுங்கள். நான் குறிப்பது ... வெளிநாடுகளில் பயன்படுத்தும் ... கழுத்திலோ / கழுத்துப் பட்டையிலோ மாட்டிக்கொள்ளும் ஒலிபெருக்கி (a type of collar microphone). அது இல்லாதது தமிழக ஒலிப்பதிவுகளுக்குப் பெரும் குறை.
1995-இல், தமிழ் மாநாட்டின்போது, நான் வேண்டிய, எனக்குத் தேவையான, சுவரொளியில் கட்டுரையைப் பரப்பும் கருவி அமையவில்லை.
அண்மையில் திரு சுப அண்ணாமலை அவர்கள் பேச்சைப் பதிவு செய்ய முனைந்தபோது தேடினேன். ஒரு lousy microphone கூடக் கிடைக்கவிலை!  ஆனால் ... ஊர் நெடுக எல்லாரும் செல் ஃபோன் பயனர்! என்னத்தைச் சொல்ல? 
Anyway, please do arrange for some hand-held and collar microphones ... the next time you go to தமிழகம்!
அன்புடன்,
ராஜம்
பி. கு. எனக்கு இப்பொ தொலைபேசி வசதி சரியாக இல்லை. நான் ஊருக்குப் போயிருந்தப்போ இங்கே கொஞ்சம் கொழப்பம். எல்லாம் சரியானவுடன் சீதாம்மாவுடன் பேசுகிறேன், இடையில் ஒரு கொசுறுச் செய்தி: எனக்குக் கால் வீக்கம் முதன்முறையாகக் கண்டது 10 ஆண்டுகளுக்கும் முன் இந்தியா போனபோது (2001). அங்கே யாரும் அதைக் கண்டுக்கவில்லை, நான் வலியால் துடித்தபோதும். அமெரிக்கா வந்தவுடன் வீக்கம் ஓடிப்போச்சு. அதே போல ... இந்த முறையும் ... பன்னிக்குட்டி மாதிரி வீங்கத் தொடங்கிய பாதங்கள் முயல் குட்டிகள் போல் ஆயின. யாரும் ஒன்றும் செய்ய முடியலை. பிறகு அமெரிக்கா திரும்பியபோது ... ஹாங்காங் விமான நிலையத்தில் 4 மணிக்கூறு காத்திருந்தபோது காலில் வீக்கம் வடிவதை உணர்ந்தேன்! அதிசயமாக இருந்தது. ஆனாலும் ... காத்திருந்து மீண்டும் விமானம் ஏறி அமர்ந்து கொஞ்ச நேரம் கழித்துத்தான் மெதுவாகக் காலுறையை நீக்கிப் பார்த்தேன் -- நல்ல வியப்புக் காத்திருந்தது. வீக்கம் வடிந்திருந்தது. கலி திரும்பியபின் ... இன்றுவரை காலில் வீக்கம் திரும்பவில்லை (knock on wood!). 

நடக்கும் நிலத்தின் கோளாறோ ... காந்த திசையின் கோளாறோ ... எதுவோ ... புரியவில்லை! எல்லாம் கலிகாலம்! :-)


செல்வன்

unread,
Sep 17, 2011, 8:35:36 PM9/17/11
to mint...@googlegroups.com

விமான பயணத்தின் போது கால் வீக்கம் வரலாம் அம்மா.உங்களுக்கு வந்தது அதுவா என தெரியவில்லை.

What causes leg and foot swelling during air travel?

from Sheldon G. Sheps, M.D.

Leg and foot swelling during air travel is common and typically harmless. The most likely culprit is inactivity during a flight. Sitting with your feet on the floor for a long period causes blood to pool in your leg veins. The position of your legs when you are seated also increases pressure in your leg veins. This contributes to foot swelling by causing fluid to leave the blood and move into the surrounding soft tissues.

To relieve foot swelling during a flight:

  • Wear loosefitting clothing.
  • Take a short walk every hour or so.
  • Flex and extend your ankles and knees frequently while you're seated.
  • Shift your position in your seat as much as possible, being careful to avoid crossing your legs.
  • Drink plenty of fluids to prevent dehydration.
  • Avoid alcohol and sedatives, which could make you too sleepy to walk around the cabin.

Foot swelling isn't a serious problem if it lasts only a short time. But excessive swelling that persists for several hours after you resume activity may be due to a more serious condition, such as a blood clot in the leg (deep vein thrombosis) — especially if the swelling occurs in only one leg and is accompanied by leg pain. If you experience these signs and symptoms, seek prompt medical attention.

If you're at increased risk of blood clots — because you recently had major surgery or you take birth control pills, for example — consult your doctor before flying. He or she may recommend wearing compression stockings during your flight. In some cases, the doctor may prescribe a blood-thinning medication to be taken before departure.

--
செல்வன்


rajam

unread,
Sep 17, 2011, 9:27:54 PM9/17/11
to மின்தமிழ்
On Sep 17, 2011, at 5:35 PM, செல்வன் wrote:

விமான பயணத்தின் போது கால் வீக்கம் வரலாம் அம்மா.உங்களுக்கு வந்தது அதுவா என தெரியவில்லை. 

கால் வீக்கத்துக்குக் காரணம் விமானப் பயணம் மட்டும் இல்லை என்று நினைக்கிறேன் செல்வன். நான் 1974-லிருந்து விமானப் பயணம் செய்துவருகிறேன். முதலில் வீக்கம் தொடங்கியது 2001-இல்தான். வயது காரணமாக இருக்கலாம். ஆனாலும் ... விமானப் பயணம் மட்டுமே கால் வீக்கத்துக்குக் காரணம் என்றால் ... எப்படி அது கீழ்த்திசை நோக்கிப் போனபோது மட்டும் தொடங்கியது? ஏன் அங்கே இருந்த நாட்களெல்லாம் (4, 5.5 மாதங்கள்) நீடித்து இருந்தது? பிறகு மேல் திசைப் பயணத்தின்போது வற்றத் தொடங்கியது? என்றெல்லாம் பார்க்கவேண்டும். எனக்குள்ள கருத்துக்களை இன்னொரு நாள் வேறு இழையில் எழுதுகிறேன்.  இது "திருவண்ணாமலை பதிவுகள்" இழை என்பதால் இனியும் நான் குறுக்கிடக்கூடாது, இல்லையா! :-) சுபா கோபித்துக்கொள்ளக்கூடாது! :-)


Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 12:01:28 AM9/18/11
to mint...@googlegroups.com
அருமை சுபா, உங்கள் உழைப்பையும், திறமையையும், இந்த வயதிலும் மோசமான உடல்நிலையிலும் அசராது வந்து அனைத்தையும் காட்டித்தந்திருக்கும் சீதாம்மாவையும், குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,

கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கூத்தனார் அப்பன்
..

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..


தவறான இணைப்பினை வழங்கியிருந்தேன்.. கீழுள்ள இணைப்பில் இப்பகுதிக்குச் செல்லலாம்.!

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!

சுபா

Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 12:02:28 AM9/18/11
to mint...@googlegroups.com
இது கால்வீக்கம் வாஆஆஆஆஆஆஆஆஆஆரம் போலும்!  ஒருமணி நேரம் அல்லது அதிகமாக உட்கார்ந்து கொண்டே இருந்தால் எனக்குக் கால் பாதங்கள் வீங்கிவிடும். நடக்க ஆரம்பித்தால் சரியாகும்.

2011/9/18 rajam <ra...@earthlink.net>

prakash sugumaran

unread,
Sep 18, 2011, 1:39:06 AM9/18/11
to mint...@googlegroups.com
சிலைக்கு முன் புறத்தில் உள்ள பெரிய நிலத்தில் ஆங்காங்கே சிறிய மேடுகளைக் காண முடிகின்றது. இவை என்னவாக இருக்கும் //
மோட்டூர் கிராமம் ( மூட்டூர் அல்ல )
2011/9/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
prakash sugumaran

visit my blog
http://thamizharkoodu.blogspot.com/
see me at THF Hub
http://image-thf.blogspot.com/

Tthamizth Tthenee

unread,
Sep 18, 2011, 1:46:34 AM9/18/11
to mint...@googlegroups.com
பதிவு ஒன்று கேட்கவில்லை
 
பதிவு இரண்டு நன்றாகக் கேட்கிறது
 
பதிவு மூன்று நன்றாகக் கேட்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/9/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

prakash sugumaran

unread,
Sep 18, 2011, 1:47:25 AM9/18/11
to mint...@googlegroups.com
இது தாய் தெய்வத்தின் வடிவம் என்றும், பறவை கல் என்றும் கூட சொல்லப்படுகிறது. இந்த சிலையின் தலை பகுதி விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தான் இந்திய முழுக்க உள்ள அரவாணிகள் ஆண்டுதோறும் ஒன்று கூடி கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தங்களுக்குள் உள்ள பிடித்த ஒருவரை தேர்ந்தெடுத்து முறைப்படி எல்லா சடங்குகளையும் செய்து திருமணம் செய்து கொள்ளும் அரவாணிகள் இறுதி தினத்தில் கணவர்கள் இறந்து விட்டதாக தாலிகளை அறுத்து எறிவார்கள். ஆணாகவோ, பெண்ணாகவோ வாழ முடியாமல் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கும் அவர்களின் அழுகை, வேதனை, ஒப்பாரிகளை நேரில் கண்டால் ஒரு ஜென்மத்துக்கு மறக்காது.

2011/9/18 prakash sugumaran <praka...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 18, 2011, 2:23:42 AM9/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மூட்டுர் என்ற பெயர் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது.. நன்றி ப்ரகாஷ். மாற்றம் செய்து இந்த தகவலையும் உடன் இணைத்து விடுகின்றேன்.

2011/9/18 prakash sugumaran <praka...@gmail.com>



--

Subashini Tremmel

unread,
Sep 18, 2011, 2:35:52 AM9/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இப்பதிவைப் பற்றி எழுதும் போது ஒரு சிந்தனை வந்தது..

இந்தக் கூத்தாண்டவர் சாமியும் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவையும் ஏறக்குறைய 50 ஆண்டு கால கட்டத்தில் ஏற்ப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பனவாக உருவாகி இருக்கின்றது.  முப்பூசை என்பது, ஆடியில் இந்தச் சிலைக்காக பூசை செய்வது என்பன போன்றவை மக்கள் புதிதாக ஏற்படுத்திய சடங்குகள். இந்தச் சிலையை இங்கு பார்த்த மக்களுக்கு இயற்கையோடு இணைந்து நிற்கும் வித்தியாசமான இந்தத் தோற்றம் ஒரு இறைவடிவமாக மனதில் தோன்ற இதற்கென்று சடங்குகள், பூஜைகள், சில நெறிகள் என உருவாக்கி அதனைக் கடைபிடித்து வருகின்றனர். இயற்கையோடு பிணைந்த கிராமத்து வழிபாட்டு அமைப்பை இக்காலத்திலும் இது போன்ற பகுதிகளில் காண முடிகின்றது.

சுபா

2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

 

Subashini Tremmel

unread,
Sep 18, 2011, 2:42:48 AM9/18/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/18 rajam <ra...@earthlink.net>

நல்ல தகவல்கள்! நன்றி -- சீதாம்மா, சுபா, ப்ரகாஷ், புனிதவதி இளங்கோவன் ... எல்லாருக்கும்!
சுபா, அடுத்த முறை இந்தியா போகும்போது ... ஒரு/பல நல்ல ஒலிபெருக்கி, பதிவுக் கருவிகளை எடுத்துச் செல்லுங்கள். நான் குறிப்பது ... வெளிநாடுகளில் பயன்படுத்தும் ... கழுத்திலோ / கழுத்துப் பட்டையிலோ மாட்டிக்கொள்ளும் ஒலிபெருக்கி (a type of collar microphone). அது இல்லாதது தமிழக ஒலிப்பதிவுகளுக்குப் பெரும் குறை.
1995-இல், தமிழ் மாநாட்டின்போது, நான் வேண்டிய, எனக்குத் தேவையான, சுவரொளியில் கட்டுரையைப் பரப்பும் கருவி அமையவில்லை.
ஒலிப்பதிவு தெளிவாக இல்லையா ராஜம் அம்மா? விழியப் பதிவு முழுமையாக செய்ய இயலவில்லை. அதனால் பேட்டி சிறு பகுதி அதிலும் மைக்ரபோன் கேமராவோடு பொறுத்தாமல் என்னுடைய காமராவில் இருந்த மைக்ரபோன் மட்டும் வைத்து செய்தது. பலமான காற்றில் பேச்சில் தெளிவு குறைந்து விட்டது. இதற்கு ஒரு கருவி யோசிக்கிறேன். 

வீடியோ விழியப் பதிவுக்கு மேல் இணைத்திருக்கின்றேன் ஒலிப்பதிவு பேட்டி. அதனை ஒரு முறை சோதனை செய்து விட்டு சொல்ல முடியுமா? ஏனென்றால் இது நான் ப்ரத்தியேகமாக ஒலிப்பதிவுகள் (ஆடியோ மட்டும்) இங்கிருந்து வாங்கிச் சென்ற ஒலிப்பதிவு கருவி.
வீடியோ தெளிவில்லாமல் போய்விடும் என்ற சந்தேகத்தில் தான் தனியாக ஒலிப்பதிவு பேட்டி ஒன்றை முழுமையான பேட்டியையும் இணைத்திருக்கின்றேன். 

சுபா
 
அண்மையில் திரு சுப அண்ணாமலை அவர்கள் பேச்சைப் பதிவு செய்ய முனைந்தபோது தேடினேன். ஒரு lousy microphone கூடக் கிடைக்கவிலை!  ஆனால் ... ஊர் நெடுக எல்லாரும் செல் ஃபோன் பயனர்! என்னத்தைச் சொல்ல? 
Anyway, please do arrange for some hand-held and collar microphones ... the next time you go to தமிழகம்!
அன்புடன்,
ராஜம்
பி. கு. எனக்கு இப்பொ தொலைபேசி வசதி சரியாக இல்லை. நான் ஊருக்குப் போயிருந்தப்போ இங்கே கொஞ்சம் கொழப்பம். எல்லாம் சரியானவுடன் சீதாம்மாவுடன் பேசுகிறேன், இடையில் ஒரு கொசுறுச் செய்தி: எனக்குக் கால் வீக்கம் முதன்முறையாகக் கண்டது 10 ஆண்டுகளுக்கும் முன் இந்தியா போனபோது (2001). அங்கே யாரும் அதைக் கண்டுக்கவில்லை, நான் வலியால் துடித்தபோதும். அமெரிக்கா வந்தவுடன் வீக்கம் ஓடிப்போச்சு. அதே போல ... இந்த முறையும் ... பன்னிக்குட்டி மாதிரி வீங்கத் தொடங்கிய பாதங்கள் முயல் குட்டிகள் போல் ஆயின. யாரும் ஒன்றும் செய்ய முடியலை. பிறகு அமெரிக்கா திரும்பியபோது ... ஹாங்காங் விமான நிலையத்தில் 4 மணிக்கூறு காத்திருந்தபோது காலில் வீக்கம் வடிவதை உணர்ந்தேன்! அதிசயமாக இருந்தது. ஆனாலும் ... காத்திருந்து மீண்டும் விமானம் ஏறி அமர்ந்து கொஞ்ச நேரம் கழித்துத்தான் மெதுவாகக் காலுறையை நீக்கிப் பார்த்தேன் -- நல்ல வியப்புக் காத்திருந்தது. வீக்கம் வடிந்திருந்தது. கலி திரும்பியபின் ... இன்றுவரை காலில் வீக்கம் திரும்பவில்லை (knock on wood!). 

நடக்கும் நிலத்தின் கோளாறோ ... காந்த திசையின் கோளாறோ ... எதுவோ ... புரியவில்லை! எல்லாம் கலிகாலம்! :-)


On Sep 17, 2011, at 11:25 AM, Subashini Tremmel wrote:

நண்பர்களே,

கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கூத்தனார் அப்பன்
..

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..


தவறான இணைப்பினை வழங்கியிருந்தேன்.. கீழுள்ள இணைப்பில் இப்பகுதிக்குச் செல்லலாம்.!

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!

சுபா


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Sep 18, 2011, 4:34:27 AM9/18/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலை பதிவுகள் பகுதியில் இன்று மேலும் ஒரு அங்கம்..செங்கம் பகுதியில் வாழும் லம்பாடி இன மக்கள் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றேன். இன்றைய வெளியீட்டில் சிறு விளக்கமும், படங்களும் ஒரு விழியப் பதிவும் உள்ளது. 


லம்பாடி ஆதிக் குடிகள்

lambadi7.jpg


திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது. (வரை படத்தில் செங்கம் ஊரைக் காணலாம்.)


chengam.jpg


லம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர்.  இவர்கள் மராத்தியும் குஜராத்தி மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) என்னும் ஒரு மொழியைப் பேசுகின்றனர். தற்சமயம இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விட தமிழை பேசுபவர்களாக உள்ளனர்.  இளைஞர்களோ குழந்தைகளோ இம்மொழியைப் பேச அவசியம் இல்லாத நிலை இருக்கின்ற காரணத்தால் இம்மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகி விட்ட நிலை இருப்பதை உணர முடிகின்றது. வயதான சில பெண்களும் ஆண்களும் மட்டும் தங்களுக்குள் இம்மொழியில் உரையாடிக் கொள்கின்றனர். 

ஒரு இடத்திலிருந்து வேறொரு இடம் பெயர்ந்து செல்லும் வகையில் தங்கள் கூடாரங்களையும் கையோடு கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் லம்பாடி இன மக்கள். இந்த போக்கும் தற்சமயம் மாற்றம் கண்டுள்ளது. நிலையாக ஒரே இடத்தில் இருந்து அங்கேயே விவசாயம், கைத்தொழில்கள், கூலி வேலை என சிறு சிறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் இம்மக்கள். இதனால் நிலையான் அகுடிசை, சிறு வீடுகள் என்று இவர்களின் அடிப்படை வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமூகத்து மக்களும் மிகக் குறைந்த் அளவில் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்று சற்று மேம்பாடு அடைந்தும் வருகின்றனர் என்பதைக் காண முடிந்தது. 

சிறப்பு பண்டிகைகள் எனும் போது இவர்களுக்கு ஹோலி பண்டிகை முக்கியமானதாக அமைகின்றது.  ஹோலி பண்டிகையை மிக விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்கின்றனர். 

இவர்களின் திருமண முறை மிக எளிமையானது. வித்தியாசமானதும் கூட. இவர்கள் தமிழ் நாட்டுப் பெண்கள் கழுத்தில் அணிவது போன்று தாலி அணிவதில்லை. மாறாக கைகளின் மேல் புறத்தில் தகட்டால் ஆன ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கின்றனர். கணவனை இழந்த பெண்கள் இதனை அகற்றி விடுகின்றனர்.


விழியப் பதிவையும் படங்களையும் காண இங்கே செல்க..!

லம்பாடி ஆதிக் குடிகள் பற்றி மேலும் சில ஒலிப்பதிவுகளும், விளக்கங்களும் தொடரும்..!

அன்புடன்
சுபா


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 18, 2011, 1:48:05 PM9/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
திறக்க முடியவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=531&Itemid=673

Internal Server Error

The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request.

Please contact the server administrator, webm...@tamilheritage.org and inform them of the time the error occurred, and anything you might have done that may have caused the error.

More information about this error may be available in the server error log.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

++++++++++++++++++++++++++++++++++++++++ 

Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 8:55:43 PM9/18/11
to mint...@googlegroups.com
இது கிட்டத்தட்ட ராஜஸ்தானின் லம்பாடி இனத்தின் பழக்கங்களை ஓரளவு ஒத்திருக்கிறது.  முக்கியமாய்க் கையில் மேல்புறத்தில் அவர்களும் திருமணமானால் வெள்ளியில் வளையல் போன்றதொரு தகட்டை அணிவார்கள்.

2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலை பதிவுகள் பகுதியில் இன்று மேலும் ஒரு அங்கம்..செங்கம் பகுதியில் வாழும் லம்பாடி இன மக்கள் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றேன். இன்றைய வெளியீட்டில் சிறு விளக்கமும், படங்களும் ஒரு விழியப் பதிவும் உள்ளது. 


அன்புடன்
சுபா


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,

கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 


Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 8:56:58 PM9/18/11
to mint...@googlegroups.com
ராஜஸ்தானி மொழியோ?? ஏனெனில் பல ராஜஸ்தானியரோடும் இவர்கள் சரளமாகப் பேசுவதைக் கண்டிருக்கிறேன்.

2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>


லம்பாடி ஆதிக் குடிகள் பற்றி மேலும் சில ஒலிப்பதிவுகளும், விளக்கங்களும் தொடரும்..!

அன்புடன்
சுபா




Subashini Tremmel

unread,
Sep 21, 2011, 4:19:14 AM9/21/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
Dr.Rajam Amma,
 
Please try the link once again. It was a temporary server error and It's fixed now.
 
anbudan
Suba
 


 
2011/9/18 rajam <ra...@earthlink.net>

coral shree

unread,
Sep 21, 2011, 5:19:30 AM9/21/11
to mint...@googlegroups.com
அன்பின் சுபா, சீதாம்மா, பிரகாஷ் சுகுமாரன், தங்கள் மூவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அருமையான பணி. அழகான படங்கள். வாழ்த்துகள் அனைவருக்கும். 

2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>





--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

Subashini Tremmel

unread,
Sep 21, 2011, 1:10:27 PM9/21/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நீங்கள் சொல்வதைப் பார்க்கும் பொது ஒற்றுமை இருப்பது போலத்தான் தெரிகின்றது.  இவர்கள் ஆண் குழந்தைகள் பிறந்தால் அதனையும் பொட்டு என குறிப்பிட்டு கழுத்தில் அணிகின்றனர். ஒஉ ஆண்குழந்தைக்கு ஒரு ஆண் பொட்டு. ஏழு ஆண் குழந்தைகள் என்றால் அதில் ஏழு பொட்டுக்கள் இருக்குமாம். மேலும் விபரங்கள் விரைவில் தொடர்கின்றேன். 

வீடியோ பதிவில் உள்ள இவர்களின் நாட்டியத்தையும் பார்த்தீர்களா ?

சுபா

2011/9/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 21, 2011, 1:11:41 PM9/21/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்பான வாழ்த்துக்கு நன்றி பவளா. இந்தப் பயணம் முழுதுமே மிக சுவாரசியமான அனுபவம் எனக்கு. 

சுபா

2011/9/21 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
Sep 21, 2011, 1:15:04 PM9/21/11
to mint...@googlegroups.com
நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது சுபா தங்களிடமிருந்து............. 

2011/9/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 21, 2011, 7:59:28 PM9/21/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அருமையான படங்கள், பேட்டி, விழியப்  பதிவு ... எல்லாமே பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி! இதற்கான வேலைகள் செய்த அனைவருக்கும் பாராட்டு!
அந்த ஆடவர் ஒருவர் தங்கள் இனத்தின் உட்பிரிவுளை மட மட என்று வாய்பாடு போல ஒப்பித்து ஒரு பட்டியல் தருவது கேட்க நன்றாக இருக்கிறது. அப்புறம் இன்னொன்றும் சுவாரசியமானது ... அந்தப் பெண்களின் தாவணி முகத்தை மறைப்பதற்குப்போல; மார்பகத்தை மறைக்க இல்லை!

Geetha Sambasivam

unread,
Sep 21, 2011, 8:53:16 PM9/21/11
to mint...@googlegroups.com
அம்மா, நீங்கள் கூறுவது உண்மையே.  அவர்களின் முந்தானை முகத்தைத் தான் மறைக்கும்.  ராஜஸ்தானிலும் அவ்வாறே.  முகத்தை மறைத்த வண்ணம் செல்லும் பெண்கள் மார்பகம் திறந்திருப்பதைக் குறித்துக் கவலை கொள்ள மாட்டார்கள்.  கிட்டத்தட்ட ராஜஸ்தானின் பழக்க வழக்கங்களே இவர்களுக்கும். 

@சுபா,
ஆட்டமும் அப்படித் தான் தெரிய வருகிறது சுபா.  இப்போதைய கணினி இணைப்பில் ஒலி கேட்க வழியில்லை என்பதால் ஒலி வரவில்லை.  ஆகையால் மீண்டும் ஒலி இணைப்போடு கேட்க வேண்டும். 

2011/9/22 rajam <ra...@earthlink.net>

Subashini Tremmel

unread,
Sep 22, 2011, 1:09:48 PM9/22/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
நன்றி ராஜம் அம்மா.

இன்று மாலை மேலும் கொஞ்சம் இப்பதிவுத் தொடரி தொடர முடியுமா என்று பார்க்கின்றேன்.

சுபா


2011/9/22 rajam <ra...@earthlink.net>

Vinodh Rajan

unread,
Sep 22, 2011, 1:41:59 PM9/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
//. அந்தப் பெண்களின் தாவணி முகத்தை மறைப்பதற்குப்போல; மார்பகத்தை மறைக்க இல்லை!//

பகவதி ப்ரஜ்ஞாபாரமிதா தேவி



From what I could infer, all these Indian taboo's related to the female anatomy (& sexuality as a whole) seems to be recent - infact quite alien !

So called (neo) Indian Ethos projected sound more Victorian than Indian ! :-)

V

DEV RAJ

unread,
Sep 22, 2011, 2:48:37 PM9/22/11
to மின்தமிழ்
Sep 22, 10:41 pm, Vinodh Rajan
*பகவதி ப்ரஜ்ஞாபாரமிதா தேவி*

From what I could infer, all these Indian taboo's related to the
female
anatomy (& sexuality as a whole) seems to be recent - infact quite
alien !

***********************

அம்மே, சோட்டாணிக்கர பகவதி ! ரக்ஷிக்கணே -

http://www.google.co.in/imgres?q=chottanikkara+bhagavathy&um=1&hl=en&client=firefox-a&sa=N&rls=org.mozilla:en-US:unofficial&biw=1445&bih=677&tbm=isch&tbnid=kJOY2AhA79ru0M:&imgrefurl=http://tourism.webindia123.com/tourism/pilgrimcenters/temples/chottanikkaradevi_temple/index.htm&docid=x1qBR8fiwvhCBM&w=165&h=194&ei=8YF7Tu3bIYjqrQfin5XaDw&zoom=1&iact=hc&vpx=612&vpy=211&dur=542&hovh=155&hovw=132&tx=90&ty=99&page=1&tbnh=147&tbnw=131&start=0&ndsp=24&ved=1t:429,r:3,s:0

தேவ்

On Sep 22, 10:41 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> //. அந்தப் பெண்களின் தாவணி முகத்தை மறைப்பதற்குப்போல; மார்பகத்தை மறைக்க
> இல்லை!//
>

> *பகவதி ப்ரஜ்ஞாபாரமிதா தேவி*
>
> http://4.bp.blogspot.com/_JfSgdhRZ4wQ/SqwR9mETqJI/AAAAAAAAAMc/QPuAq8R...
>
> http://greatmiddleway.files.wordpress.com/2011/03/copia-de-prajnapara...

Subashini Tremmel

unread,
Sep 22, 2011, 4:07:48 PM9/22/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
லம்பாடி ஆதிக் குடிகள் - 2

லம்பாடி இனப் பெண்கள் அணிந்திருக்கும் பாரம்பரிய ஆடை சிவப்பு வர்ணத்தில் அமைந்தது.  மங்கள நிறமாக சிவப்பு நிறம் அமைந்திருப்பதால் இந்த வர்ணத்தில் இவர்களது சிறப்பான பாரம்பரிய ஆடை அமைவதை இப்பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆடை பாவாடை, ஜாக்கெட் அத்துடன் முக்காடாகப் பயன்படுத்தும் ஒரு தாவணி அத்துடன் வயிற்றுப் பகுதியை மறைக்கும் வகையில் அமைந்த ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு துணி என்று அமைந்துள்ளது. 

இந்த ஆடையின் பெயர்களை விளக்குமாறு இந்த மூதாட்டிகளைக் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் உடைகளைப் பற்றி நமக்கு விளக்கமளித்தனர்.  (ஒலிப்பதிவில் கேட்கலாம்)

குறிப்பாகச் சில பெயர்கள்:
  • குங்குட்டோ - முக்காடாக தலையில் சுற்றியிருக்கும் தாவணி. இந்தத் தாவணியில் சேர்க்கப்பட்டுள்ள மணிகளையும் ஜரிகைகளையும் இவர்கள் தாங்களே கைகளால் தைத்து தயாரிக்கின்றனர். 
  • சாட்டியா - இடுப்புப் பகுதியில் அணிந்துள்ள அலங்கரிக்கப்பட்ட துணியின் பெயர்.
  • காத்தொளி பேட்டியா - ஜாக்கெட்
  • லேப்போ - பாவாடை
  • பூரியா - மூக்குத்தி


நாங்கள் பேட்டி காணச் சென்ற கிராமத்தின் பெயர் பரிசல் பட்டு பி.எல்.தண்டா. இங்கு ஏறக்குறைய 450 குடும்பத்தினர் வாழ்கின்றனர். அனைவருமே லம்பாடி இன மக்கள் தான். இவர்கள் இங்கேயே குடியேறி திருமணம் செய்து குழந்தைகள் ஈன்று வாழ்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று சிலர் அரசாங்க வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

இவர்கள் பொதுவாக வீட்டில் இவர்கள் தாய்மொழியில்தான் உரையாடுகின்றனர். ஆனாலும் குடும்பத்தை விட்டு வெளியே வரும் போது தமிழ்மொழி முக்கியமாகிப் போவதால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தாய் மொழியை இளம் குழந்தைகள் மறக்கும் நிலையும் உருவாகி உள்ளது. இங்கேயே பிறந்து வளர்ந்து இங்குள்ள பள்ளியிலேயே கல்வி கற்று நன்கு தேறி திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் பணியாற்றும் திருமதி. லதாமம்மா எங்களைக் காண வந்திருந்தார். லதாமம்மா  இச்சமூக மக்களின் திருமணச் சடங்கை பற்றி விரிவாகக் கூறுவதையும் அதன் பின்னர் திரு.குபேரன் மீண்டும் திருமணச் சடங்கைப் பற்றி விவரிப்பதையும் ஒலிப்பதிவில் கேட்கலாம்.

 
திருமணம் தான் இவர்கள் வாழ்கையில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. திருமணச் சடங்கைப் பற்றி விசாரித்த போது மிக ஆர்வத்துடன் தங்கள் வழக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.


பொதுவாகவே இவர்கள் திருமணம் 4 நாட்கள் நடக்கின்றது. மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாள், அதன் பின்னர் பெண் வீட்டில் இரண்டு நாள்.  மாப்பிள்ளை வீட்டில் இரண்டு நாட்கள் சடங்குகளைச் செய்து முடித்த பின்னர் மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். அதற்குப் பிறகு வீட்டிற்குள் அவர் திருமணம் நடைபெறாமல் வரக்கூட்டாது.

பெண் பார்க்கும் சடங்கு என்பது தமிழர் சமூகத்தில் உள்ளது போன்று நிச்சயதார்த்தம் இல்லாமல் வேறு விதமாக நிர்ணயிக்கப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டார் 5 கிலோ வெல்லம் கொண்டு செல்வர். அத்தோடு சாராயமும் வெற்றிலை பாக்கும் கொண்டு செல்வர். சாராயம், வெல்லம், வெற்றிலை பாக்கை பெண் வீட்டாரிடம் கொடுத்து விட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று முடிவாகின்றது.  திருமணத்தில் மாப்பிளை பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கும் வழக்கமும் இவர்களுக்கு இல்லை.  இந்த மூன்று பொருட்களையும் கொடுத்து 1 ரூபாய் (பரியா பணம்) கொடுத்து விட்டால் கல்யாணம் உறுதி செய்யப்பட்டு விட்டது என முடிவாகின்றது.  பின்னர் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் ஒத்து வராமல் போய் பிரிய வேண்டும் என அவர்கள் நினைத்தால் அந்த ஒரு ரூபாய் பணத்தைத் திருப்பித் தந்து விடுவார்களாம். இப்படித் தந்தால் விவாகரத்து நடந்ததற்குச் சமம்.  அதற்காக திருமணத்திற்காகக் கொடுத்த அதே ஒரு ரூபாயை கணவன் மனைவி இருவரும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதாவது ஒரு 1 ரூபாயைக் கொடுத்தே மண வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளலாம்.  இதனைக் கணவன் மாத்திரம் தான் செய்வது வழக்கம். மனைவி செய்யும் வழக்கமில்லை. பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களின் முன் கணவன் மனைவி வந்து 1 ரூபாயைக் கணவன் கொடுத்து மனவிலக்கு வேண்டும் என்று கேட்டால் மனைவியிடமிருந்து விலகிச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.

இவர்களின் திருமணச் சடங்கு மிக வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது.  திருமண தினத்தின் முதல் நாள் இரவில் பெண் வீட்டில் உள்ள அனைவரும் அழ வேண்டுமாம். தங்கை எப்படி அழவேண்டும் அண்ணன் எப்படி அழ வேண்டும் என முறை வைத்திருக்கின்றனர்.  எப்படி ஒவ்வொருவரும் அழ வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் அனுபவசாலி பெரியவர்கள் கற்றுத் தருவார்களாம். அதனைக் கற்றுக் கொண்டு குடும்பத்தினர் ஒவ்வொருவராக அழ வேண்டும்.


திருமணத்திற்கு முதல் நாள் வீட்டின் மூலையில் ஒரு உலக்கையை வைத்து அதில் கங்கணம் கட்டு விடுவார்கள். பக்கத்தில் ஒரு பானையை வைத்து அதில் நீரை ஊற்றி நிறைத்து வைத்து விடுவார்கள்.  திருமண ஏற்பாட்டுச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் புது மாப்பிள்ளை இந்தத் தண்ணீரில் குளிக்க வேண்டும். இது கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஒரு சடங்கு.  பிறகு மறு நாள் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் தனித் தனியாக தயார் செய்து அலங்கரித்துக் கொண்டு வந்து திருமணச் சடங்கில் தாலி போட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.  திருமணம் பெண் வீட்டில் தான் நடக்குமாம்.  தமிழ் சமூகத் திருமணங்கள் போல கோயில்களில் இவர்கள் திருமணங்கள் நடப்பதில்லை. இக்கால லம்பாடி இனத் திருமணங்கள் தமிழர்கள் வழக்கம் போல கழுத்தில் தாலி கட்டி நடைபெறுகின்றது. கையில் அணியும் தாலி இப்போது வழக்கில் இல்லை.  கணவன் உள்ள வயதான மூத்தாட்டிகள் மட்டுமே இந்த வகைத் தாலியை அணிந்திருக்கின்றனர். 

திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு மதிய வேளையில் ஆடு வெட்டி விருந்து தயாரித்து மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் திருப்திகராம விருந்தளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள்.  பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் விட்டாரை அழைத்துச் சென்று இதேபோல விருந்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதே போல 3 முறை மாற்றி மாற்றி இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுமாம்.

கணவர் இறந்த பெண்கள் தங்கள் கையில் அணிந்துள்ள தாலியை எடுத்து விட வேண்டும். இந்தத் தாலி திருமணம் நடந்த நாள் முதல் கணவர் இறக்கும் வரையிலும் கையில் அணிந்திருக்க வேண்டும். 


கடவுள்

இவர்களின் கடவுள் மூடுபுக்கியா என அழைக்கப்படுகின்றது. ஆண் பெண் என உருவமில்லாத ஒரு கல் வடிவில் அமைந்த ஒரு வடிவமே இவர்கள் கடவுள். 

இப்பகுதியை படங்களுடன் வாசிக்கவும், ஒலிப்பதிவைக் கேட்கவும் இங்கே செல்க.

ஏறக்குறைய 10 நிமிட ஒலிப்பதிவு இது. மழலைத் தமிழில் லம்பாடி இன மூதாட்டிகள் பேசுவதையும் திருமணச் சடங்கைப் பர்றி இம்மக்கள் ஆர்வத்துடன் பேசுவதையும் இந்த ஒலிப்பதிவில் கேட்கலாம்.



தொடரும்

அன்புடன்
சுபா


2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 22, 2011, 4:10:40 PM9/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
திருமதி.கீதா,

பேட்டியின் மேலும் ஒரு பகுதியை இன்று கேட்டேன். இவர்கள் ராஜஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்றே தங்களைக் குறிப்பிடுகின்றனர். நாளை அந்த ஒலிப்பதிவை தயாரித்து பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். 

இன்று ஒரு ஒலிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் கணினி ஆடியோ சரியாகி விட்டால் கேட்டுப் பாருங்கள்.

சுபா

2011/9/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

rajam

unread,
Sep 22, 2011, 9:52:11 PM9/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
2-ஆம் பகுதியையும் படித்தேன். நல்ல விளக்கங்கள்! நன்றி, குழுவினர் அனைவர்க்கும்.
எனக்கு ஒரு சிறு ஊரல்! அதாவது ... இந்த லம்பாடி இனத்துப் பெண்கள் தாலி (கையில் அணிகிறார்களே, அது) அதற்கும் ... சங்க இலக்கியப் பாடல்களில் சொல்லப்படும் "தொடி"க்கும் தொடர்பு இருக்கலாமோ என்று.  குறிப்பாக மூன்று பாடல்கள் என்னைப் பல ஆண்டுகளாக நெருடிக்கொண்டிருக்கின்றன: புறநானூறு 83-85 (நக்கண்ணையார் பாட்டு). இதில் 83-இல் வரும் "தொடி கழித்திடுதல்" (கவனிக்க: கழிந்திடுதல் இல்லை) என்பதைப் புரிந்துகொள்ள ... இந்த லம்பாடியினரின் பழக்கம் ஏதாவது சாவி தருமா?
ஒரு கேள்வி, சுபா + குழுவினர்க்கு. அந்தத் தாலிக்கு அவர்கள் மொழியில் என்ன பெயர் சொல்லுகிறார்கள்?
அன்புடன்,
ராஜம்

Geetha Sambasivam

unread,
Sep 22, 2011, 10:54:29 PM9/22/11
to mint...@googlegroups.com
பொதுவாய் மங்கள் சூத்ர என்றே கூறிப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் நான் இவர்களோடு உரையாடியது எல்லாம் சுத்த ஹிந்தியில்.  ஆகையால் எனக்குப் புரிவதற்காக இப்படிச் சொல்லி இருக்கலாம்.  எங்கள் ராஜஸ்தான் நண்பரைத் தான் கேட்கவேண்டும். அவர் இப்போது சென்னையில் இருக்க வேண்டும். முயல்கிறேன்.

2011/9/23 rajam <ra...@earthlink.net>
2-ஆம் பகுதியையும் படித்தேன். நல்ல விளக்கங்கள்! நன்றி, குழுவினர் அனைவர்க்கும்.
எனக்கு ஒரு சிறு ஊரல்! அதாவது ... இந்த லம்பாடி இனத்துப் பெண்கள் தாலி (கையில் அணிகிறார்களே, அது) அதற்கும் ... சங்க இலக்கியப் பாடல்களில் சொல்லப்படும் "தொடி"க்கும் தொடர்பு இருக்கலாமோ என்று.  குறிப்பாக மூன்று பாடல்கள் என்னைப் பல ஆண்டுகளாக நெருடிக்கொண்டிருக்கின்றன: புறநானூறு 83-85 (நக்கண்ணையார் பாட்டு). இதில் 83-இல் வரும் "தொடி கழித்திடுதல்" (கவனிக்க: கழிந்திடுதல் இல்லை) என்பதைப் புரிந்துகொள்ள ... இந்த லம்பாடியினரின் பழக்கம் ஏதாவது சாவி தருமா?
ஒரு கேள்வி, சுபா + குழுவினர்க்கு. அந்தத் தாலிக்கு அவர்கள் மொழியில் என்ன பெயர் சொல்லுகிறார்கள்?
அன்புடன்,
ராஜம்
அன்புடன்
சுபா

--


Geetha Sambasivam

unread,
Sep 22, 2011, 10:55:36 PM9/22/11
to mint...@googlegroups.com
குங்கட்டோ" என முக்காட்டை அழைப்பதும் ஒத்து வருகிறது.  வட மாநிலங்களில் குங்கட் என்றே முகத்தை மூடும் முக்காட்டை அழைப்பார்கள். அநேகமாய் இவர்கள் பேசுவது ராஜஸ்தானி மொழியாக இருக்கலாம்.

2011/9/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

rajam

unread,
Sep 22, 2011, 11:53:49 PM9/22/11
to mint...@googlegroups.com

On Sep 22, 2011, at 11:48 AM, DEV RAJ wrote:

> Sep 22, 10:41 pm, Vinodh Rajan
> *பகவதி ப்ரஜ்ஞாபாரமிதா
> தேவி*
> From what I could infer, all these Indian taboo's related to the
> female
> anatomy (& sexuality as a whole) seems to be recent - infact quite
> alien !
>
> ***********************
>
> அம்மே, சோட்டாணிக்கர
> பகவதி ! ரக்ஷிக்கணே -
>
> http://www.google.co.in/imgres?q=chottanikkara
> +bhagavathy&um=1&hl=en&client=firefox-a&sa=N&rls=org.mozilla:en-
> US:unofficial&biw=1445&bih=677&tbm=isch&tbnid=kJOY2AhA79ru0M:&imgrefur
> l=http://tourism.webindia123.com/tourism/pilgrimcenters/temples/
> chottanikkaradevi_temple/
> index.htm&docid=x1qBR8fiwvhCBM&w=165&h=194&ei=8YF7Tu3bIYjqrQfin5XaDw&z
> oom=1&iact=hc&vpx=612&vpy=211&dur=542&hovh=155&hovw=132&tx=90&ty=99&pa
> ge=1&tbnh=147&tbnw=131&start=0&ndsp=24&ved=1t:429,r:3,s:0
>
>
>
> தேவ்
>


கூகிலாண்டவருக்கு என்
மேல் கோபம்! பகவதி அம்மன்
ரைக்ஷ என்மேல் படத்
தடுக்கிறார்!


>
> On Sep 22, 10:41 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>> //. அந்தப் பெண்களின்
>> தாவணி முகத்தை
>> மறைப்பதற்குப்போல;
>> மார்பகத்தை மறைக்க
>> இல்லை!//
>>
>> *பகவதி ப்ரஜ்ஞாபாரமிதா
>> தேவி*
>>
>> http://4.bp.blogspot.com/_JfSgdhRZ4wQ/SqwR9mETqJI/AAAAAAAAAMc/
>> QPuAq8R...
>>
>> http://greatmiddleway.files.wordpress.com/2011/03/copia-de-
>> prajnapara...
>>
>> From what I could infer, all these Indian taboo's related to the
>> female
>> anatomy (& sexuality as a whole) seems to be recent - infact quite
>> alien !
>>
>> So called (neo) Indian Ethos projected sound more Victorian than
>> Indian !
>> :-)
>>
>> V
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

Subashini Tremmel

unread,
Sep 23, 2011, 3:50:48 PM9/23/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலைப் பதிவுகள் தொகுப்பில் இன்று மேலும் ஒரு பதிவு.. (லம்பாடி ஆதிக்குடிகள் பகுதி நாளை தொடரும்)




நாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள்
ப்ரகாஷ் சுகுமாரன் - திருவண்ணாமலை


லங்கோ - ஜைனி கோடு எனப்படும் ரேகையின் மத்திய பகுதியில் ( ஜாவா தீவின் அருகில் கடல் பரப்பில் ( பரந்து விரிந்திருந்த குமரி கண்டத்தில் இருந்ததாக சொல்லப்படும் தென்னிலங்கை ) தொடங்கி இலங்கை வழியாக இந்தியாவின் உஜ்ஜைனி வரை செல்லும் ரேகை லங்கோ-ஜைனி ரேகை என்பதாக கருதப்படுகிறது) 12 வது டிகிரியில் அதாவது மத்திய பகுதியில் அமைந்துள்ள திண்டிவனம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் உள்ள சீதோஷ்ணம் மற்றும் சூழ்நிலைகளால் இங்கு முதல்முதலில் உயிர்கள் உருவாகி, பகுப்புற்று நீர், நில வாழ்வன, பறப்பன என பலவித இனங்கள் தோன்றி பிறகு மனித இனம் பிறந்திருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஒரு கருத்து உலவி வருகிறது. நந்தி மலையில் தொடங்கி இப்பகுதிகள் வழியாக ஓடி கடலூர் அருகே கடலில் கலக்கும் தென் பெண்ணையாற்றின் கரைகளில் உருவான மனித நாகரீக வளர்ச்சி பல்வேறு இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கான பல சான்றுகள் பழமை மிகுந்த இந்த மண்ணில் அடிக்கடி கிடைத்து வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது தண்டராம்பட்டு தாலூகாவில் உள்ள இளையான்குன்னி என்ற குக்கிராமத்தில் உள்ள நாகர்கள்ளி என்ற குன்றின் அடிவாரத்தில் தொல் பழமை வாய்ந்த சித்திர எழுத்துக்கள் அடங்கிய பிரம்மாண்டமான பாறை இருப்பது கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதில் உள்ள பெரும்பாலான எழுத்துக்கள் இயற்கையின் சீற்றத்தினாலும், உள்ளூர் மக்களின் அறியாமையாலும் காணாமல் சென்றுள்ளது. கெட்டித்தன்மை இல்லாத இலகு வகையான தன்மை கொண்ட இந்த பாறை மீது கைகளை வைத்து தடவினாலே தூள் தூளாக கொட்டும் நிலையில், பழமை மிக்க இந்த சித்திர எழுத்துக்களை பார்க்கும் மக்கள் அவற்றை தடவி பார்ப்பதால் அவை வேகமாக மறைந்து  வருகிறது. தென்னிந்தியாவில் இதுவரை நான்கு இடங்களில் இது போன்ற எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. திண்டிவனம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ள அவை அனைத்துமே தென் பெண்ணை ஆற்றங்கரைகளில் இருப்பது கவனிக்கத்தக்கது.

இதே போல இப்பகுதியின் அருகே உள்ள பல கிராமங்களில் காடுகளிலும், மலைகளிலும் ஏராளமான கல்வெட்டுக்களும், நடுகற்களும் உள்ளன. இவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ள தகவல்கள் படிக்கப்பட்டு தொகுக்கப்பட்டால் நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழர் வரலாற்றின் மறைந்த பல பக்கங்கள் வெளியாகும். இந்த சித்திர எழுத்துக்கள் குறித்த தகவல் அறிந்தவுடன், ஆர்வத்துடன் இங்கே வந்து பார்வையிட்டு சில நடுகற்களையும், கல்வெட்டுக்களையும் பதிவு செய்து கொண்ட தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை இயக்குனர் பூங்குன்றன் அவர்கள், இவை தாய் தெய்வ வழிபாட்டு காலத்தை சேர்ந்த சித்திர எழுத்துக்கள் என்றும், இதுவரை கண்டறியப்பட்டு உள்ள எழுத்துக்களில் அதிக பழமை வாய்ந்தவை என்றும் தெரிவித்தார்.

இப்பதிவில் ஒரு விழியமும் பல படங்களும் உள்ளன. அவற்றைக் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா



2011/9/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 23, 2011, 8:07:10 PM9/23/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
கட்டுரை படித்தேன்; விழியம் பார்த்தேன், கேட்டேன். அந்தக் குரல் கொடுத்தவர் (பூங்குன்றனா?) அவர்களின் மனம் திறந்த போக்கு என்னைக் கவர்ந்தது -- அதாவது, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற முடிவோடு சொல்லாமல் ... சரியான முறையில் ஆராய்ச்சி செய்யும் தொல்லியல் ஆய்வாளர்கள் பார்த்து முடிவு சொல்ல வேண்டிய வேலை இது ... என்ற் சொல்கிறார்! பாராட்டுக்குரியது!
என் தனிப்பட்ட கருத்து: எதற்கெடுத்தாலும் "தாய் தெய்வம்" "fertility" என்று போவது எனக்கு அவ்வளவாக ஒத்துவராது.
கருத்துக் கொடுத்தவரே சொல்கிறார் ... இது "வேளாண்மை" செய்த இடம் இல்லை என்று. அப்பொ ... வேற வழியாகவும் நினைத்துப் பார்க்கலாமே -- எயினர் குலம் தங்கள் கருவிகளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக்கொள்ள இந்தக் கற்கள் இடம் கொடுத்திருக்கலாமே? இந்தக் காலத்துச் "சாணைக்கல்"; சங்க காலத்து ... "சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்"? அல்லது வேறு ஏதாவது ஒன்று போல?
ஏன் எதற்கெடுத்தாலும் ... தெளிவாகத் தெரியாவிட்டாலும் ... அங்கே ஒரு பெண் தெய்வத்தைப் பற்றிய கருத்தைக் கொண்டுவந்து அதற்கு என்று ஒரு குறியீடு ("தாய்" "அணங்கு" "பேய்" ...) என்று சொல்லவேண்டும்? பண்டை மரபில் தெளிவில்லை என்றால் ... அதை ஒளிவு மறைவு இல்லாமல் ஒப்புக்கொண்டு ... "இப்போது இதை நாங்கள் இப்படிச் சொல்கிறோம்" என்று சொன்னால் ... என் போன்றவர்களுக்குக் கூட அவர்கள் சொல்வதில் நம்பிக்கை எற்படலாம்.
இல்லாவிட்டால் ... சும்மா ... ஆதிகாலத்து ஒரிஜினல் ஆந்த்ரொபாலஜிஸ்ட்ஸ் செய்த தவறுகளை நாம் உறைப்படுத்துவோம். அது நம் தவறு.
அது போக.
மீண்டும் நன்றி, நல்ல பதிவுக்கு!
அன்புடன்,
ராஜம்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Sep 23, 2011, 8:28:57 PM9/23/11
to mint...@googlegroups.com
இந்த பாறை மீது கைகளை வைத்து தடவினாலே தூள் தூளாக கொட்டும் நிலையில், பழமை மிக்க இந்த சித்திர எழுத்துக்களை பார்க்கும் மக்கள் அவற்றை தடவி பார்ப்பதால் அவை வேகமாக மறைந்து  வருகிறது. //

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துப்பாதுகாக்கவேண்டிய பகுதி.  உரியவர்கள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ராஜம் அம்மாவின் வித்தியாசமான பார்வையும் சிந்திக்க வைக்கிறது.

2011/9/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலைப் பதிவுகள் தொகுப்பில் இன்று மேலும் ஒரு பதிவு.. (லம்பாடி ஆதிக்குடிகள் பகுதி நாளை தொடரும்)





 

Kamala Devi

unread,
Sep 23, 2011, 9:58:22 PM9/23/11
to mint...@googlegroups.com
மரபுவிக்கியின் இன்னொரு சித்திரம், வாழ்த்துக்கள்
கமலம்
 

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
Sent: Saturday, 24 September 2011 3:50 AM
Subject: [MinTamil] Re: திருவண்ணாமலை பதிவுகள்

Subashini Tremmel

unread,
Sep 24, 2011, 4:03:58 AM9/24/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/24 rajam <ra...@earthlink.net>

கட்டுரை படித்தேன்; விழியம் பார்த்தேன், கேட்டேன். அந்தக் குரல் கொடுத்தவர் (பூங்குன்றனா?) அவர்களின் மனம் திறந்த போக்கு என்னைக் கவர்ந்தது -- அதாவது, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற முடிவோடு சொல்லாமல் ... சரியான முறையில் ஆராய்ச்சி செய்யும் தொல்லியல் ஆய்வாளர்கள் பார்த்து முடிவு சொல்ல வேண்டிய வேலை இது ... என்ற் சொல்கிறார்! பாராட்டுக்குரியது!

ஆமாம். திரு.பூங்குன்றனின் குரல் தான். வீடியோவை தனியாகப் பதிவாக்கி அவரது குரல் பதிவையும் அதனுடன் சேர்த்து ப்ரகாஷ் இந்த விழியத்தைத் தயாரித்தார்.

சுபா

Subashini Tremmel

unread,
Sep 24, 2011, 4:06:08 AM9/24/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
திருமதி.கீதா,

இது ராஜஸ்தான் மொழியேதான். இதனைத் தெளிவாக நான் பேட்டி கண்டவர்களில் ஒருவர் கூறும் ஒலிப்பதிவை இன்று வெளீயிடுகின்றேன். உங்களால் இவர் குறிப்பிடும் பல சொற்களை மேலும் நன்றாக புரிந்து கொள்ளவும் விளக்கவும் முடியும். எனது தட்டச்சில் பிழையிருந்தால் அதனை குறிப்பிடவும்.

சுபா

2011/9/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 24, 2011, 4:09:53 AM9/24/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram


2011/9/23 rajam <ra...@earthlink.net>
2-ஆம் பகுதியையும் படித்தேன். நல்ல விளக்கங்கள்! நன்றி, குழுவினர் அனைவர்க்கும்.
..
ஒரு கேள்வி, சுபா + குழுவினர்க்கு. அந்தத் தாலிக்கு அவர்கள் மொழியில் என்ன பெயர் சொல்லுகிறார்கள்?

ராஜம் அம்மா - இதனை இவர்கள் மொழியில் பல்லியா (balliya) எனக் குறுப்பிடுகின்றனர்.  

சுபா

Subashini Tremmel

unread,
Sep 24, 2011, 4:29:29 AM9/24/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram

லம்பாடி ஆதிக் குடிகள் - 3

லம்பாடி இன மக்கள் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய படையெடுப்பின் போது இவர்களின் இந்து மன்னன் போரில் தோற்றவுடன் இம்மக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். பின்னர் இப்போதைய ஆந்திரா, கர்னாடகா, தமிழ்நாடு போன்ற மானிலங்களில் நாடோடிகளாக வந்து குடியேறினர். ஆரம்ப காலத்தில் உப்பு வியாபரத்தில் ஈடுபட்டு உழைத்தனர்.  கழுதைகள் மேல் உப்பை ஏற்றி ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்று அவற்றை விறபனை செய்து வருவதை தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் படிப்படியாக இவர்கள் தொழில், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.  இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட சிலர் சொந்தமாக நிலம் வாங்கி ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியேறி அங்கே தொழில் செய்தோ விவசாயம் செய்தோ வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சமூகத்தினருடன் சேர்ந்து குழுவாக ஓரிடத்தில் இருப்பதையே காண முடிந்தது.

காலவோட்டத்தில் மாறுதல் ஏற்படுவது என்பது எல்லா சமூகத்திலும் நடக்கின்ற ஒன்றுதான். ஆனால் அவை படிப்படியாக வழக்கில் இல்லாது போவது மட்டுமின்றி அச்சமூக மக்களே அறியாத நிலை ஏற்படுவதையும் காண்கின்றோம். லம்பாடி இனமக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது.

முன்னர் திருமணம் என்று வரும் போது மானின் கொம்பை வெட்டி எடுத்து அதை பதம் செய்து அதனை யானைத் தந்தம் போன்ற வடிவில் ஒரு வளையல் செய்து அதனை பெண்ணுக்கு அணிவித்துத் தான் திருமண நிகழ்வு நடக்குமாம். இது இப்போது வழக்கில் இல்லை. அதேபோல பெண்கள் திருமணத்திற்கு அணியும் முழு ஆடையையும் அப்பெண்ணே முழுதாகத் தயாரிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒரு ஆடையை முழுமையாக்க ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் எடுக்குமாம். திருமணத்தில் தாலியை அணிந்து திருமணச் சடங்கு முடிந்த பின்னர் மணப்பெண்ணை காளைமாட்டின் மேல் அமர வைத்து ஊர்வலமாக வீட்டிற்கு கொண்டு வருவார்களாம்.

இன்னொரு சுவாரசியமான தகவலும் இவர்களுடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிந்தது. அதாவது குழந்தைகள் பிறக்கும் போது எந்த நாளில் ஒரு குழந்தை பிறக்கின்றதோ அந்த நாளை பிரதிநிதிக்கும் பெயரைத்தான் குழந்தைகளுக்குச் சூட்டுவார்களாம். திங்கள் கிழமை பிறந்த குழந்தைக்கு சோமார் என்றும், செவ்வாய் என்பது மங்களவார் என அழைக்கப்படுவதால் இந்த நாளில் பிறக்கும் பெண் குழந்தைக்கு மங்கினி என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் மணி என்றும் அந்தக் கிழமையின் ஆரம்பச் சொல்லை எதிரொலிக்கும் வகையில் பெயர்கள் அமையுமாம். புதன்கிழமை பிறந்த ஆண் குழந்தை பத்தியா என்றும் பெண்குழந்தை பத்தி என்றும் பெயரிடுவதும், வழக்கமாக இருக்கின்றது. முக்கியமாக அந்தக் கிழமையின் முதல் எழுத்து குழந்தையின் பெயரில் இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் இவர்கள் கடைபிடித்து வந்த வழக்கங்களில் ஒன்று. 

ஆண் குழந்தைகள் இச்சமூகத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றனர். ஒரு தாயாருக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தால் அப்பெண்மணி தன் கழுத்தில் ஒரு சங்கிலியில் இரண்டு பொட்டு இருக்கும் வகையில் ஒரு அட்டிகை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. 5 ஆண் குழந்தைகள் என்றால் ஐந்து பொட்டு, 6  ஆண் குழந்தைகள் என்றால் ஆறு பொட்டு என தனக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ள இவ்வகை அட்டிகையை கழுத்தில் அணியும் வழக்கமும் இவர்கள் சமூகத்தில் உண்டு. ஆனால் இளம் பெண்கள் இதனை அணிவதை தவிர்த்து விட்டனர் என்பதை நேரிலேயே காண முடிந்தது.

இச்சமூகத்தினர் தமிழ் நாட்டில் ஏறக்குறைய 40,000 மக்கள் இருக்கின்றனர். அரசாங்க சலுகைகள் இவர்களுக்கு மற்ற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முகக் குறைவாக கிடைக்கின்ற காரணத்தால் அதிலும் கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் சலுகைகள் குறைவாக அமைவதால் இச்சமூகத்தின் இளைஞர் சமுதாயம் கல்வியில் நாட்டம் செலுத்துவதை விட கூலி வேலை சாக்கடை கழுவும் வேலை என தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணம் ஈட்டுவதற்காகக் கல்வியைப் புறக்கணித்து விட்டுச் சென்று விடுவதாக எங்களுடன் பேசிய மக்கள் தங்கள் மனக்குறைகளையும் பகிர்ந்து கொண்டனர். 

இதனை முழுமையாக ஒலிப்பதிவில் கேட்கலாம். இப்பகுதியும் இதற்குத் தொடர்பான படங்களும், 7 நிமிட மிகச் சுவாரசியமான ஒலிப்பதிவும் இன்று திருவண்ணாமலைப் பதிவுகள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கவும் கேட்கவும் இங்கே செல்க!

அன்புடன்
சுபா




2011/9/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலைப் பதிவுகள் தொகுப்பில் இன்று மேலும் ஒரு பதிவு.. (லம்பாடி ஆதிக்குடிகள் பகுதி நாளை தொடரும்)




நாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள்
ப்ரகாஷ் சுகுமாரன் - திருவண்ணாமலை


...


2011/9/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
லம்பாடி ஆதிக் குடிகள் - 2

லம்பாடி இனப் பெண்கள் அணிந்திருக்கும் பாரம்பரிய ஆடை சிவப்பு வர்ணத்தில் அமைந்தது.  மங்கள நிறமாக சிவப்பு நிறம் அமைந்திருப்பதால் இந்த வர்ணத்தில் இவர்களது சிறப்பான பாரம்பரிய ஆடை அமைவதை இப்பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆடை பாவாடை, ஜாக்கெட் அத்துடன் முக்காடாகப் பயன்படுத்தும் ஒரு தாவணி அத்துடன் வயிற்றுப் பகுதியை மறைக்கும் வகையில் அமைந்த ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு துணி என்று அமைந்துள்ளது. 

இந்த ஆடையின் பெயர்களை விளக்குமாறு இந்த மூதாட்டிகளைக் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் உடைகளைப் பற்றி நமக்கு விளக்கமளித்தனர்.  (ஒலிப்பதிவில் கேட்கலாம்)

குறிப்பாகச் சில பெயர்கள்:
  • குங்குட்டோ - முக்காடாக தலையில் சுற்றியிருக்கும் தாவணி. இந்தத் தாவணியில் சேர்க்கப்பட்டுள்ள மணிகளையும் ஜரிகைகளையும் இவர்கள் தாங்களே கைகளால் தைத்து தயாரிக்கின்றனர். 
  • சாட்டியா - இடுப்புப் பகுதியில் அணிந்துள்ள அலங்கரிக்கப்பட்ட துணியின் பெயர்.
  • காத்தொளி பேட்டியா - ஜாக்கெட்
  • லேப்போ - பாவாடை
  • பூரியா - மூக்குத்தி

 

prakash sugumaran

unread,
Sep 24, 2011, 7:10:01 AM9/24/11
to mint...@googlegroups.com
என் தனிப்பட்ட கருத்து: எதற்கெடுத்தாலும் "தாய் தெய்வம்" "fertility" என்று போவது எனக்கு அவ்வளவாக ஒத்துவராது.
கருத்துக் கொடுத்தவரே சொல்கிறார் ... இது "வேளாண்மை" செய்த இடம் இல்லை என்று. அப்பொ ... வேற வழியாகவும் நினைத்துப் பார்க்கலாமே -- எயினர் குலம் தங்கள் கருவிகளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக்கொள்ள இந்தக் கற்கள் இடம் கொடுத்திருக்கலாமே? இந்தக் காலத்துச் "சாணைக்கல்"; சங்க காலத்து ... "சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்"? அல்லது வேறு ஏதாவது ஒன்று போல?
ஏன் எதற்கெடுத்தாலும் ... தெளிவாகத் தெரியாவிட்டாலும் ... அங்கே ஒரு பெண் தெய்வத்தைப் பற்றிய கருத்தைக் கொண்டுவந்து அதற்கு என்று ஒரு குறியீடு ("தாய்" "அணங்கு" "பேய்" ...) என்று சொல்லவேண்டும்? //

மன்னிக்கவும். இப்பகுதி முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த பகுதி. திரு பூங்குன்றன் இங்கு குறிப்பிடுவது காடும் மலையும் நிறைந்த  குன்று பகுதிகளை என கருதுகிறேன். பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்களால் மேய்ச்சல் நிலமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்  ராமநாதபுரம், டெல்டா விவசாயிகள், கரூர், கிருஷ்ணகிரி பகுதி மக்கள் பல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இங்கே கொண்டு வந்து, சுமார் மூன்று மாதங்கள் வரை தங்குகிறார்கள். பழைய வீடியோ பதிவு உள்ளது. பார்க்கவே அற்புதமான காட்சி. ஒரே சமயத்தில் பல வண்ணங்களில், பல ரகமான 5 அல்லது 10 ஆயிரம் மாடுகள் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக காடுகள், மலைகளையும், கிராமங்களையும் கடந்து செல்லும். பெரும்பாலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அதிகாலை நேரத்தில் ஓட்டி செல்வார்கள். பகல் நேரத்தில் மேய்ச்சல். இரவு நேரத்தில் ஓய்வு என பாதுகாப்பாக பயணிப்பார்கள். இப்போது மேய்ச்சலுக்கு முன் அனுமதி பெற டோக்கன் வாங்க வேண்டும். டோக்கன்களை கருப்பில் விற்றே லட்சாதிபதியான சிலர்.. என் நண்பர்கள்.

தவிர தாய் தெய்வம் என்பதை எந்த காலத்திலும் புறக்கணிக்க முடியாதது. தென் இந்திய கலாச்சாரம் தாய் தெய்வ வழிபாட்டை முதன்மை படுத்தியே இருந்தது. சில நூறாண்டுகளுக்கு முன்புதான் தந்தை ( ஆண் தெய்வ ) வழிபாடு வந்தது.

திரு பூங்குன்றன் தெரிவித்துள்ள கோ என்கிற கோவேந்தன் என்பதன் அடையாளமாக பொறிக்கப்படும் சின்னம் உண்மை என்பதை அறிய வேண்டும் எனில், இணைப்பில் உள்ள விழியத்தில் நடுகல் ஒன்று அச்சு எடுக்கப்பட்ட காட்சி வரும். அதில் உள்ள வில் வீரனின் தலைக்கு மேல் பூ அலங்காரம் போன்ற ஒரு சின்னம் இருக்கும் அதுவே கோ என்பதன் அடையாள சின்னம். அதை போன்றே ஒரு அடையாளம் பாறையில் சில இடங்களில் வரிகளாக வரையப்பட்டு இருப்பதை  காணலாம்.

பெண் தெய்வ அடையாளம் என அவர் குறிப்பிடுவது முக்கோணத்தை தலைகீழாக வரைந்து இடையில் ஒரு கோடு இருப்பது. அந்த அடையாளத்தையும் புகைப்படத்தில் காணலாம்.

தவிர இந்த பாறையை ஒத்த இன்னும் ப்ரம்மாண்டமாக ஏராளமான பாறைகள் அந்த நாகர்கல்லி குன்றில் இருக்கும்போது இந்த ஒரு பாறையில் மட்டும் தங்கள் ஆயுதங்களை மொத்த எயினர்களும் வந்து தீட்ட வேண்டிய அவசியம் என்ன ?

இன்னும் ஒரு மேலதிக தகவல், கல்பூ கேள்விப்பட்டதுண்டா.. ??
சித்த மருத்துவத்தில் உள்ள ரகசியங்களில் ஒன்று. எந்தவித சித்த மூலிகை மருந்தாக இருந்தாலும் அடிப்படை கலவை என ஒன்று உள்ளது. கோவில்களில் கொளுத்தும் கற்பூரம் போன்ற அந்த கலவையில் சேர்க்கப்படும் ஐந்து அடிப்படைகளில் ஒன்று கல்பூ. அறிய மூலிகை பொருளான கல்பூ நான்கைந்து இடங்களில் மட்டும் கிடைக்கிறது. கல்பூ கிடைக்கும் இடம் சித்த மருத்துவர்களால் அதி ரகசியமாக கருதி மறைக்கப்படும். இப்போது பாதரசம் என குறிப்பிடப்படும் மெர்குரியின் தன்மை கொண்ட கல்பூ விலை உயர்ந்த ஒன்று என்பதுடம், அறிய, எளிதில் விளையாத பொருள். குறிப்பிட்ட ஒருவகை பாறைகளுக்கு இடையே ஏற்படும் விரிசல்களில் பூக்கும் கல்பூ. இதை மலை சாம்பிராணி என பொதுபெயரில் சிலர் குறிப்பிடுவர். சுத்தம் செய்யப்படாத கல்பூ நூறு கிராம் விலை நான்காயிரம் என கேள்வி.

சித்திர எழுத்துக்கள் அடங்கிய பாறைக்கு  எதிர்புறம் நாகர்கல்லி குன்றின் மறுபுறம் கடுமையான முள் மரங்களையும், உடலை கிழிக்கும் பாறைகளையும், பள்ளங்களையும் தாண்டி சென்றால் இன்றைக்கு உள்ள ஓட்டுமொத்த சித்த மருத்துவர்களில் 60 சதவீதம் பேருக்கு வாழ்வு அளித்துக்கொண்டு இருக்கும் கல்பூ குன்று உள்ளது.

2011/9/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran

visit my blog
http://thamizharkoodu.blogspot.com/
see me at THF Hub
http://image-thf.blogspot.com/

rajam

unread,
Sep 24, 2011, 12:40:48 PM9/24/11
to mint...@googlegroups.com

On Sep 24, 2011, at 4:10 AM, prakash sugumaran wrote:

என் தனிப்பட்ட கருத்து: எதற்கெடுத்தாலும் "தாய் தெய்வம்" "fertility" என்று போவது எனக்கு அவ்வளவாக ஒத்துவராது.
கருத்துக் கொடுத்தவரே சொல்கிறார் ... இது "வேளாண்மை" செய்த இடம் இல்லை என்று. அப்பொ ... வேற வழியாகவும் நினைத்துப் பார்க்கலாமே -- எயினர் குலம் தங்கள் கருவிகளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக்கொள்ள இந்தக் கற்கள் இடம் கொடுத்திருக்கலாமே? இந்தக் காலத்துச் "சாணைக்கல்"; சங்க காலத்து ... "சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்"? அல்லது வேறு ஏதாவது ஒன்று போல?
ஏன் எதற்கெடுத்தாலும் ... தெளிவாகத் தெரியாவிட்டாலும் ... அங்கே ஒரு பெண் தெய்வத்தைப் பற்றிய கருத்தைக் கொண்டுவந்து அதற்கு என்று ஒரு குறியீடு ("தாய்" "அணங்கு" "பேய்" ...) என்று சொல்லவேண்டும்? //

மன்னிக்கவும்.  

ஒரு தவறும் செய்யாததுக்கு மன்னிப்பு வேண்டுவது தேவையில்லை!!


இப்பகுதி முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த பகுதி. திரு பூங்குன்றன் இங்கு குறிப்பிடுவது காடும் மலையும் நிறைந்த  குன்று பகுதிகளை என கருதுகிறேன்.

அப்படி நினைத்துத்தான் நானும் எழுதினேன்.

பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்களால் மேய்ச்சல் நிலமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்  ராமநாதபுரம், டெல்டா விவசாயிகள், கரூர், கிருஷ்ணகிரி பகுதி மக்கள் பல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இங்கே கொண்டு வந்து, சுமார் மூன்று மாதங்கள் வரை தங்குகிறார்கள். பழைய வீடியோ பதிவு உள்ளது. பார்க்கவே அற்புதமான காட்சி. ஒரே சமயத்தில் பல வண்ணங்களில், பல ரகமான 5 அல்லது 10 ஆயிரம் மாடுகள் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக காடுகள், மலைகளையும், கிராமங்களையும் கடந்து செல்லும். பெரும்பாலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அதிகாலை நேரத்தில் ஓட்டி செல்வார்கள். பகல் நேரத்தில் மேய்ச்சல். இரவு நேரத்தில் ஓய்வு என பாதுகாப்பாக பயணிப்பார்கள். இப்போது மேய்ச்சலுக்கு முன் அனுமதி பெற டோக்கன் வாங்க வேண்டும். டோக்கன்களை கருப்பில் விற்றே லட்சாதிபதியான சிலர்.. என் நண்பர்கள்.

தவிர தாய் தெய்வம் என்பதை எந்த காலத்திலும் புறக்கணிக்க முடியாதது. தென் இந்திய கலாச்சாரம் தாய் தெய்வ வழிபாட்டை முதன்மை படுத்தியே இருந்தது. சில நூறாண்டுகளுக்கு முன்புதான் தந்தை ( ஆண் தெய்வ ) வழிபாடு வந்தது.

திரு பூங்குன்றன் தெரிவித்துள்ள கோ என்கிற கோவேந்தன் என்பதன் அடையாளமாக பொறிக்கப்படும் சின்னம் உண்மை என்பதை அறிய வேண்டும் எனில், இணைப்பில் உள்ள விழியத்தில் நடுகல் ஒன்று அச்சு எடுக்கப்பட்ட காட்சி வரும். அதில் உள்ள வில் வீரனின் தலைக்கு மேல் பூ அலங்காரம் போன்ற ஒரு சின்னம் இருக்கும் அதுவே கோ என்பதன் அடையாள சின்னம். அதை போன்றே ஒரு அடையாளம் பாறையில் சில இடங்களில் வரிகளாக வரையப்பட்டு இருப்பதை  காணலாம்.

பெண் தெய்வ அடையாளம் என அவர் குறிப்பிடுவது முக்கோணத்தை தலைகீழாக வரைந்து இடையில் ஒரு கோடு இருப்பது. அந்த அடையாளத்தையும் புகைப்படத்தில் காணலாம்.

தவிர இந்த பாறையை ஒத்த இன்னும் ப்ரம்மாண்டமாக ஏராளமான பாறைகள் அந்த நாகர்கல்லி குன்றில் இருக்கும்போது இந்த ஒரு பாறையில் மட்டும் தங்கள் ஆயுதங்களை மொத்த எயினர்களும் வந்து தீட்ட வேண்டிய அவசியம் என்ன ?

ஐயா, அமெரிக்க-ஆங்கிலத்தில் சொல்வார்கள்: "my guess is as good as yours"
 
பொதுவாகவே, எனக்கு speculation என்பது அவ்வளவாக ஒத்து வாராது. அதற்காக என் கருத்தைப் பிறர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று வற்புறுத்தவும் மாட்டேன். அவரவர் கருத்து அவரவர்க்கு!


இன்னும் ஒரு மேலதிக தகவல், கல்பூ கேள்விப்பட்டதுண்டா.. ??
சித்த மருத்துவத்தில் உள்ள ரகசியங்களில் ஒன்று. எந்தவித சித்த மூலிகை மருந்தாக இருந்தாலும் அடிப்படை கலவை என ஒன்று உள்ளது. கோவில்களில் கொளுத்தும் கற்பூரம் போன்ற அந்த கலவையில் சேர்க்கப்படும் ஐந்து அடிப்படைகளில் ஒன்று கல்பூ. அறிய மூலிகை பொருளான கல்பூ நான்கைந்து இடங்களில் மட்டும் கிடைக்கிறது. கல்பூ கிடைக்கும் இடம் சித்த மருத்துவர்களால் அதி ரகசியமாக கருதி மறைக்கப்படும். இப்போது பாதரசம் என குறிப்பிடப்படும் மெர்குரியின் தன்மை கொண்ட கல்பூ விலை உயர்ந்த ஒன்று என்பதுடம், அறிய, எளிதில் விளையாத பொருள். குறிப்பிட்ட ஒருவகை பாறைகளுக்கு இடையே ஏற்படும் விரிசல்களில் பூக்கும் கல்பூ. இதை மலை சாம்பிராணி என பொதுபெயரில் சிலர் குறிப்பிடுவர். சுத்தம் செய்யப்படாத கல்பூ நூறு கிராம் விலை நான்காயிரம் என கேள்வி.

சித்திர எழுத்துக்கள் அடங்கிய பாறைக்கு  எதிர்புறம் நாகர்கல்லி குன்றின் மறுபுறம் கடுமையான முள் மரங்களையும், உடலை கிழிக்கும் பாறைகளையும், பள்ளங்களையும் தாண்டி சென்றால் இன்றைக்கு உள்ள ஓட்டுமொத்த சித்த மருத்துவர்களில் 60 சதவீதம் பேருக்கு வாழ்வு அளித்துக்கொண்டு இருக்கும் கல்பூ குன்று உள்ளது.
கல் பூ பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. தங்களைப்போல் காடும் மலையும் குன்றும் பிற அரிய இடங்களையும் சென்று பார்க்கும் வாய்ப்பௌ எனக்கில்லையே என்று எப்போதும் ஏக்கம்.
மற்றபடி, தகவல்களுக்கு மிகவும் நன்றி!
அன்புடன்,
ராஜம் 

Subashini Tremmel

unread,
Oct 1, 2011, 4:07:45 AM10/1/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலைப் பதிவுகளில் மேலும் ஒரு தொடர் இன்று உங்களுக்காக..!


வந்தவாசி

vandavasi.jpg

வந்தவாசி - திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்கிய ஒரு நகர். வந்தவாசி என்றால் தமிழக மக்களுக்கு முதலில் நினைவில் வருவது வந்தவாசி பாய். இந்த நகருக்கும் சரித்திரம் உண்டா என்றால் ஏன் இல்லை என கேட்டு நம்மை வியக்க வைக்கின்றது இந்த நகரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் செய்திகள்.

இந்த ஊரின் சிறப்புக்களையும் குறிப்புக்களையும், இந்திய சரித்திரக் களஞ்சியம் (தொகுதி 6) நூல் ஆசிரியர் ப.சிவனடி, தனது நூலில் வழங்கியிருப்பதை இங்கே நமது வாசிப்பிற்காக இணைக்கிறேன்.

வந்த என்ற சொல்லுக்கு நூறு என்று பொருள். வாசி என்பது வசிப்பவரைக் குறிக்கும். எனவே இதை நூற்றுவர் வாழுமூர் எனக் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் வெள்ளிமலை என்ற பொருளில் இதைத் தளகிரி என்பர்.

இவ்வூர் இன்று அம்பேத்கர் வட ஆர்க்காட்டு மாவட்டத்தின் வந்தவாசிக் கோட்டத்தில் உள்ளது. இது சித்தூரிலிருந்து தென்கிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர், இராணிப்பேட்டையிலிருந்து தெற்கே தென்கிழக்கில் சுமார் 53 கிலோ மீட்டர், திருப்பதியிலிருந்து தெற்கில் சுமார் 110 கிலோ மீட்டர், வேலூரிலிருந்து தென்கிழக்கில் சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூர் சூக்க ஆற்றின் வடக்கே சிறிது தொலைவில் உள்ளது. 

வந்தவாசியில் சலகண்டேசுவரர் கோயில் உள்ளது. வாலாசா மலைக்குத் தவளகிரி என்ற பெயர் உண்டு. இங்கு கோரைப்பாய் முடைவதும், தோல் பதனிடுவதும் பெருந்தொழில்களாகும்.

எங்கள் திருவண்ணாமலை பயணத்தின் இரண்டாம் நாள் வந்தவாசிக்குச் செல்வது ஏற்பாடாயிருந்தது. எங்களுக்கு வந்தவாசி ஊரைப் பற்றி சில தகவல்கள் வழங்க திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர் முனவர்.ம.ராஜேந்திரன் அவர்கள் சரித்திர ஆர்வலர்கள் சிலரை எங்களைச் சந்தித்து தகவல் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அவர்களை நாங்கள் சந்திக்க ஏற்பாடாகியிருந்த இடம் வந்தவாசிக் கோட்டை.


vv3.jpg

கோட்டை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது காண்பதற்கே வருத்தமளிப்பதாக உள்ளது. கோட்டையின் மதில் சுவர்களின் ஒரு பகுதி மட்டுமே காணக்கூடியதாக உள்ளது. சுவர்களைச் சுற்றிலும் ம்ண் புதர்கள் செடிகள் வளர்ந்து பாதையை மறைந்துக் கொண்டுள்ள நிலைக் காணமுடிகின்றது. தமிழ் நாட்டிலுள்ள சிதலமடைந்த எண்ணற்ற கோட்டைகளின் வரிசையில் இதனையும் சேர்க்கலாம்.

இக்கோட்டைப் பகுதிக்கு பின்பகுதியில் குடிசை கட்டிக்கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல.. தமிழகத்தின் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இந்த வந்தவாசிக் கோட்டையைப் பற்றி தெரிந்திருப்பார்களா என்பது ஐயமே!

வந்தவாசிக் கோட்டை மராட்டியரால் கட்டப்பட்டிருக்கலாம் என ப.சிவனடி, தனது நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் நெவாயத்து குடியைச் சேர்ந்த ஆர்க்காட்டு நவாபு தோஸ்து அலியின் (1732 - 1740) வேண்டுகோளுக்கிணங்க அவரின் மருமகனான முகமது தக்கி கான் என்பவருக்கு முகலாயப் பேரரசர் வந்தவாசி ஜாகீரை முதலில் கொடுத்திருந்தார். சந்தா சாகிபும் முகமது தக்கி கானும் சகோதரியரை மணந்திருந்தமையால் நெவாயத்துகளையடுத்து 1744 இல் ஆர்க்காட்டு நவாபுகளான வாலாசாக்கள் முகமது தக்கி கானை நீக்கி விட்டுப் பிரெஞ்சுப் படையதிகாரிகளை வந்தவாசிக் கோட்டைக்குள் விட்டனர். இந்தக் கோட்டை இந்துக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது என்றும் இதன் சுற்றளவு சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் இருக்கலாம் என்றும் இவர் குறிப்பிடுகின்றார். 

தமிழக சரித்திரத்தை அறிந்தவர்களுக்கு வந்தவாசிப் போரின் முக்கியத்துவம் நிச்சயம் தெரிந்திருக்கும்.1760ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள்.தமிழகத்தில் வணிகம் செய்ய வந்த இரண்டு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த குழுக்கள் இந்திய தேசத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொண்ட போர் நடைபெற்ற தினம். ஆங்கிலேயர்களும் ப்ரெஞ்சுக்காரர்களும் எதிர்கால ஆட்சிப் பொறுப்பை முடிவு செய்த ஒரு போர் வந்தவாசிப் போர்.

சரித்திரப் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் தனது வரலாற்றுப் பார்வையில் வந்தவாசி எனும் கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

இரண்டு ஐரோப்பியக் குழுக்கள் தமிழகத்தில் மோதிக் கொண்டார்கள். இதில் தமிழக நவாப் உள்ளிட்ட சிற்றரசர்கள், பொதுமக்கள் பார்வையாளர்களாகவே இருந்தனர். சில நூறு தமிழர்கள் அல்லது இந்தியர்கள் கூலிப்படைச் சிப்பாய்களாக இரு தரப்பிலும் இருந்தனர். ஒரு சில ஆயிரம் உள்ளூர் குதிரைவீரர்கள் யூனுஸ்கான் தலைமையில் ஆங்கில முகாம்களைக் கொள்ளையடிக்கும் எதிர்பார்ப்பில் பிரெஞ்சுத் தளபதி லாலியுடன் சேர்ந்தனர்.  ஐரோப்பியப் போரில் (ஏழாண்டுப் ) போரில் எதிரும் புதிருமாகப் போரிட்டுக் கொண்ட ஆங்கில பிரெஞ்சுப் படைகள் தங்களது காலனியாதிக்கத் தலைவிதியை வந்தவாசிப் போரில் முடிவு கொண்ட விசித்திரமான நிகழ்ச்சி இது. இதில் களநாயகர்களும் கதையின் நாயகர்களும் ஐரோப்பியர்களே. தமிழ் மண்ணில் நடைபெற்ற இப்போரில் இந்தியர்களின் பங்கு எடுபிடித் துணை நடிகர்கள் என்னும் அளவிற்குத்தான் இருந்தது. இதனை ஒரு தேசிய அவமானமென்றும் கூற முடியும் அல்லவா?

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர் முனவர்.ம.ராஜேந்திரன் அவர்கள் கவிஞர் வெண்ணிலா மேலும் சில வரலாற்று ஆர்வலர்கள் இணைந்து வந்தவாசி போரை நேற்றைய வரலாற்றிலிருந்து இன்றைய தகவலுக்காக மக்களிடம் இச்செய்தியைக் கொண்டு சேர்க்கும் வகையில் சென்ற ஆண்டு வந்தவாசிப் போர்ர் நடந்து முடிந்த 250வது ஆண்டின் நினைவாக வந்தவாசிப் போர் - 250 என்ற கட்டுரை தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளனர். அறிஞர்களின் கட்டுரைகளும் வரலாற்று ஆர்வலர்களின் தகவல் தொகுப்புக்களும் வந்தவாசி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், இங்கு சமண மதத்தின் தாக்கம், இங்குள்ள ஆலயங்களின் சில வரலாற்றுத் தகவல்கள ஆகியனவற்றை குறிப்பிடும் வகையில் இந்த கட்டுரை தொகுப்பு நூலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். வந்தவாசிப் போரை மையமாக வைத்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக ஆவணக் காப்பகங்களிலிருந்து திறட்டபப்ட்ட வரலாற்றுச் சான்றுகள், இந்த நூலுக்கு அணி சேர்க்கின்றன. இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள மிக அழகிய தெளிவான வர்ணப் படங்கள் வரலாற்றுச் செய்திகளை விளக்க பெறும் துணை புரிகின்றன. 

வந்தவாசி திருவண்ணாமலையின் சரித்திரத்தில் இடம் பெறும் மிக முக்கியமான ஊர் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

எங்களுக்கு தகவல் வழங்க வந்த திரு.இசாக் வந்த வாசி பற்றியும் வந்தவாசிப் போர் பற்றியும், இக்கோட்டையைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடும் ஒலிப்பதிவினைக் கேட்கலாம். பற்பல தகவல்கள். மிகச் சுவாரசியமான குறிப்புகள் அடங்கிய ஒலிப்பதிவு பேட்டி இது.  (நமது வலைப்பக்கத்தில் சிறு பிரச்சனை தற்சமயம் உருவாகியிருப்பதால் அதனை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. தாற்காலிகமாக http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/vanthavasi.mp3 பக்கத்தில் இந்த ஒலிப்பதிவைக் கேட்கலாம்)


vv14.jpg


விக்கிபீடியாவில் இந்த போர் பற்றிய குறிப்பை http://en.wikipedia.org/wiki/Battle_of_Wandiwash காணலாம்.


vv13.jpg


 (நமது வலைப்பக்கத்தில் சிறு பிரச்சனை தற்சமயம் உருவாகியிருப்பதால் அதனைச் சரி செய்யும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. விரையில் பக்கம் சரியானதும் ஏனைய படங்களையும் இணைத்து தகவல் வழங்குகிறேன்)

அன்புடன்
சுபா

குறிப்பு:
இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள்: ஸ்ரீமதி சீதாலட்சுமி திரு.ப்ரகாஷ் சுகுமாரன். 
பயணத்தில் எங்களுடன் இணைந்தவர். திருமதி புனிதவதி.



2011/9/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>


Dhivakar

unread,
Oct 1, 2011, 4:25:38 AM10/1/11
to mint...@googlegroups.com
வந்தவாசி - வந்த - நூறு - வந்த என்பது தெலுங்கு வார்த்தை. 

தி

2011/10/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Oct 1, 2011, 5:31:49 AM10/1/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நண்பர்களே -  வந்தவாசி பற்றிய பதிவு வலைப்பக்கத்தில் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இங்கே மேலும் பல படங்களையும் இணைத்திருக்கிறேன்; ஒலிப்பதிவையும் கேட்கலாம்.

@திரு.நரசய்யா அவர்களுக்கு - இந்தப் பேட்டி ஒலிப்பதிவைக் கேட்டுப் பாருங்கள். அதில் இசாக் அவர்கள் திரு.முத்தையாவுடன் தாம் தொடர்பில் இருந்ததாகவும் வந்தவாசிப் போர் -250 நூல் தகவல் சேகரிப்பில் இணைந்து பணியாற்றியமையும் பற்றி குறிப்பிடுகின்றார். உங்கள் கருத்துக்களையும் இங்கே வழங்கினால் இப்பகுதிக்கு வளம் சேர்க்கும். 
மதராசப் பட்டினம் நூலில் இது தொடர்பான குறிப்பு பற்றி நான் இன்னமும் ஆராயவில்லை.  வாசிக்கிறேன்.

அன்புடன்
சுபா


2011/10/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 8, 2011, 4:43:49 PM10/8/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலை வரலாற்றுப் பதிவு பகுதியில் இன்று மேலும் ஒரு பதிவு இணைகின்றது.

ரமணாஸ்ரமம்

திருவண்ணாமலை செல்லும் வழியில் கிரிவலம் செல்லும் வழியில் முதலில் வருவது ஸ்ரீரமணாஸ்ரமம். எங்களின் இரண்டாம் நாள் பயணத்தில் இந்த இடத்திற்குச் செல்வதாக எங்கள் பயணத்திட்டம் அமைந்திருந்தது. காலையில் நான் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று வந்தவுடன் தயாராக இருந்த சீத்தாம்மா, திருமதி புனிதவதி, ப்ரகாஷ் நால்வரும் ரமணாஸ்ரமம் செல்ல புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதியிலிருந்து பக்கத்திலேயே ஆசிரமம் என்பதால் குறுகிய நேரத்தில் ஆசிரமத்தை அடைந்தோம். நுழைவாயிலில் வருவோரை வரவேற்கும் வளைவு. இந்த வளைவினைக் கடந்து உள்ளே செல்லும் போது ஆங்காங்கே பெரிய மரங்கள். சிறிய சோலையாக ஆசிரமம் காட்சியளிக்கின்றது.

முழுதும் வாசிக்கவும் படங்களையும் விழியங்களையும் காண நமது வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள ரமணாஸ்ரமம் பகுதிக்குச் செல்க!

அன்புடன்
சுபா

2011/10/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

திருவண்ணாமலைப் பதிவுகளில் மேலும் ஒரு தொடர் இன்று உங்களுக்காக..!


வந்தவாசி


N. Kannan

unread,
Oct 8, 2011, 8:40:24 PM10/8/11
to mint...@googlegroups.com
அன்பின் அக்கா:

ஹெல்சிங்கியில் அசோகன் எனப்படும் அஸ்கோ பர்ப்போலா அவர்களிடம் பேசிய போது
குஜராத் இன மக்கள் சங்கத்திற்கு முன்பே தமிழகத்தில் வந்து குடியேறிய
வரலாறு சொன்னார். கண்ணன், பலராமன் கோட்டங்கள் பற்றி சங்கம் விரிவாகப்
பேசுகிறது. வேளிர் குலம் என்பது ஈரானிலிருந்து குஜராத் வந்து பின்
அங்கிருந்து தமிழகம் வந்ததாக அசோகன் சொல்கிறார். எனவே தாங்கள் சுட்டும்
குஜராத் வழகங்கள் சங்கத்தில் இருப்பதில் ஆச்சர்யமில்லை. இந்த
லம்பாடிகளின் வரவு சமீபத்தியதாக இருக்க வேண்டும். அவர்கள் தமிழ் பலுப்பல்
வடநாட்டுப்பலுப்பல் என்பது தெளிவாகத்தெரிகிறது. யார் வீட்டில் தாய்மொழி
வேற்று மொழியாக இருக்கிறதோ அவர்கள் தமிழ்ப் பலுப்பல் வித்தியாசமாக
இருக்கும். எளிதாகக் கண்டுவிடலாம். எப்படியும் லம்பாடிகள் வந்தது,
வாழ்வது, தங்கள் கலாச்சாரத்தை இன்றளவும் தக்க வைத்திருப்பது, ‘ஆவ்சம்
தமிழ்நாடு!’ என்று விளிக்க வைக்கிறது!

சீதம்மாவின் ஆளுமை, அவர்களின் கேள்விகள், தலைமை, துரை, உதயன்,
செல்வகுமார் இவர்களின் பரிவாரம், சுபாவின் சுறு, சுறுப்பு இப்பயணத்தை
த.ம.அ யின் முக்கிய ஆவணப்பதிப்பாக நமக்கு அளிக்கிறது.

கூத்தனூர் சாத்தன் சிலையைப் பார்த்தால் மிகப்பழமையான சிந்து சமவெளி சிற்ப
வடிவம் இருப்பது போல் படுகிறது. தலையென்ற ஒன்று தனியாக இருக்க வேண்டிய
அவசியமில்லை என்றுதோன்றுகிறது. வேற்று கிரக ஆய்வாளர்கள் இம்மாதிரி
வடிவங்கள் பற்றிப் பேசுகின்றனர்.

ஆவ்சம் தமிழ்நாடு! உள்ளே போனால் நமக்குத்தெரியாத பல தமிழ்நாடுகள் இருக்கும் போல....

லம்பாடிகளின் வாழ்வு முன்னேற ஏதாவது அமைப்புகள் உள்ளனவா. பாதுகாப்பற்ற
அவர்கள் மொழியைக் காக்கும் முயற்சிகள் ஏதேனும் உள்ளனவா?

ஆவ்சம் தமிழ்நாடு!

நா.கண்ணன்

2011/9/23 rajam <ra...@earthlink.net>:

N. Kannan

unread,
Oct 8, 2011, 9:04:01 PM10/8/11
to mint...@googlegroups.com
இன்னொறு குஜராத், லம்பாடி, திவ்யப்பிரபந்தத் தொடர்பு:

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே.

பெரியாழ்வார் திருமொழியாக வரும் இப்பாசுரத்தில் வழக்கொழிந்து போன ஒரு
முறை பற்றி ஆழ்வார் பேசுகிறார். அதுதான் லம்பாடிகள் வாழ்வில் சிறப்பாக
அமையும் ‘ஹோலிப் பண்டிகை’ என்பது. கண்ணன் திருக்கோஷ்டியூரில்
பிறக்கிறான். உடனே மக்கள் எப்படி அதைக் கொண்டாடுகிறார்களாம்? எண்ணெய்,
சுண்ணம் எதிரெதிர் தூவி! கொண்டாடுகிறார்களாம். வண்ணச் சுண்ணம் தூவுவது
‘ஹோலி’ப் பண்டிகை! அது ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்திருக்கிறது.
குஜராத்திலிருந்து இங்கு வந்ததற்கு இதற்கு மேல் ஆதாரம் என்ன வேண்டும்?
வேளிர் குடியினர் குஜராத்திகள். நமது கோனார் இன மக்களுக்கும்,
லம்பாடிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்.
ஒன்று 3000/4000 வருஷத்திற்கு முந்தி வந்த குடி, மற்றது சமீபத்தில்
குடிபெயர்ந்தது!

அவ்சம் தமிழ்நாடு!

நா.கண்ணன்


2011/10/9 N. Kannan <navan...@gmail.com>:

Raja sankar

unread,
Oct 9, 2011, 8:39:07 AM10/9/11
to mint...@googlegroups.com
கண்ணன்,

தமிழ் சினிமா பார்ப்பது இல்லயா?

முறைப்பையன் மீது முறைப்பெண் மஞ்சள் தண்ணி ஊற்றுவது தமிழர் மரபாயிற்றே. மஞ்சள் தண்ணீரில் சுண்ணாம்பு போட்டால் ஒட்டும். அதைப்போட்டு அண்டா அண்டாவாக தண்ணீர் வைத்து ஊற்று இன்றைக்கும் தமிழகத்தின் பல ஊர்களில் நடக்கிறதே.

இது நம்மூர் ஹோலி.

ராஜசங்கர்

2011/10/9 N. Kannan <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 5, 2011, 4:22:47 PM11/5/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலை பதிவுகள் தொடர்கின்றன...

புரிசை கிராமம்

தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை!

  • வீராசாமி தம்பிரார்
  • ராகவத் தமிபிரார்
  • கிருஷ்ணத் தம்பிரார்
  • நடேசத் தம்பிரார்
அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். 

புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இக்கிராமம் தமிழகத்தின் தெருக்கூத்துக் கலைக்கு புகழ் சேர்க்கும் ஒரு மையமாக இன்று திகழ்கின்றது.
 
புரிசை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களுடனான பேட்டியைக் கேட்க இங்கே செல்க!

தனது 14 வயதிலிருந்து தனது தந்தையார் கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து அமைப்பில் கலைஞராக பங்கு பெற்று வருகின்றார். மகாபாரதக் கதை, அரிச்சந்திரன், நல்லத்தங்காள், கோவலன் சரித்திரம், சத்தியவான் சாவித்திரி, நீலி, சிறுதொண்டர் கதைகளை மையமாகக் கொண்டு தெருக்கூத்து கதைகள் அமைக்கப்படுகின்றன. இவர் தந்தையார் நடேசத் தம்பிரான் போலவே இவரும் தனது கலைச்சேவைக்காக தமிழ் நாடு அரசின் கலைமாமணி பட்டம் பெற்றிருக்கின்றார்.

நடேசத் தம்பிரானின் பெரும் முயற்சியினால் தெருக்கூத்து எனப்படும் இக்கலை மிகப் பிரபலமாக வளர்ந்தது. திரு.நடேச தம்பிரான் காலத்தில் தான் தெருக்கூத்து எனும் இக்கலை பிரபல்யம் பெற்றது. இதற்கு நடேசத் தம்பிரான் அவர்களின் பங்களிப்பும் முயற்சிகளும் குறிப்பிடத்தக்க ஒன்று. தமிழ் நாட்டில் புரிசை கிராமம் தெருக்கூத்து கலைக்கு பெயர் சொல்லும் வகையில் அமைந்திருப்பதற்கு இவர் மிக முக்கிய காரணம் என்று குறிப்பிடலாம். பல்வேறு கடினமான முயற்சிகளையும் இவர் தனது நாடகத்தில் மேற்கொண்டவர். வாயிலிருந்து நெருப்பு கக்குவது போல செய்வதற்கு சில வித்தைகளையும். போர் காட்சிகளுக்கு வெடி மருந்துகளை வைத்து காட்சிகளை தத்ரூபமாக அமைக்க முயற்சிகள் மேற்கொண்டவர். இப்படி ஒரு முயற்சியில் பாதிப்பு ஏற்பட்டு தனது கை விரல்களை ஒரு விபத்தில் இழந்தார். ஆனாலும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இவரது கலைச்சேவை தொடர்ந்தது. இவரது துச்சாதனன், ஹிரன்யகசிபு பாத்திரங்கள் மக்கள் மத்தியில் நிறைந்த வரவேற்பை பெற்றன.

தந்தையார் மறைவிற்குப் பின்னர் இக்குழுவின் தலைமைப் பொறுப்பினை ஏற்று தெருக்கூத்துப் பள்ளியினை தொடர்ந்து மேற்பார்வை செய்து வருவதோடு பல இடங்களுக்குச் சென்று தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார் இவர். தற்சமயம் இந்தக் குழுவில் மொத்தம் 17 பேர் இடம்பெற்றிருக்கின்றனர்.  இந்த உறுப்பினர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றனர். தெருக்கூத்து நிகழ்த்த வேண்டுமென்றால் அனைவரும் இணைந்து கொள்கின்றனர்.

subramaniyathambiran.jpg

இவர்கள் தெருக்கூத்து குழுவில் பெண்கள் இடம்பெறுவதில்லை. ஆண்களே பெண்கள் வேடம் போட்டு நடிப்பது வழக்கமாக உள்ளது. 

பாரம்பரியமான இந்தக் கலை அழியக் கூடாது என்ற எண்ணத்தில் தனது மகனையும் தெருக்கூத்து கலையில் இவர் ஈடுபடுத்துயுள்ளார்.  இந்தப் பாரம்பரியக் கலை அழியக் கூடாது. இதனை அழிவதிலிருந்து காக்க பொதுமக்களின் ஆதரவும் மிகவும் அவசியம் என்பதை நாம் மறுக்க முடியாது.  

அன்புடன்
சுபா


2011/10/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Nov 5, 2011, 5:09:09 PM11/5/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
பதிவு முழுமையும் கேட்டேன், சுபா! நெஞ்சை மிகவும் தொட்ட உரையாடல்! யாருக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
'எப்படி இந்த மாதிரிப் பழம்பொருளைக் காத்துவைப்பது' என்று நாம் ஒவ்வொருவரும் உன்னிப்போடு செயல்படலாம் என்று நினைப்பதைத் தவிர வேறென்னவும் சொல்லமுடியவில்லை. 

அன்புடன்,
ராஜம்

Subashini Tremmel

unread,
Nov 6, 2011, 5:31:19 AM11/6/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram


2011/11/5 rajam <ra...@earthlink.net>

பதிவு முழுமையும் கேட்டேன், சுபா! நெஞ்சை மிகவும் தொட்ட உரையாடல்! யாருக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
'எப்படி இந்த மாதிரிப் பழம்பொருளைக் காத்துவைப்பது' என்று நாம் ஒவ்வொருவரும் உன்னிப்போடு செயல்படலாம் என்று நினைப்பதைத் தவிர வேறென்னவும் சொல்லமுடியவில்லை. 

தோண்டத் தோண்டத் குறையாத பொக்கிஷம் போல பல பல விஷயங்களை ஒவ்வொரு முறையும் இவ்வகையில் களப்பணி செய்யச் செல்லும் போது அறிந்து கொள்கிறேன். இவர்களின் பேச்சுக்களை பதிவு செய்வதன் வழி இக்கலைகள் பற்றிய செய்திகள் மக்களை சென்றடையும் என்று நான் நம்புகிறேன்.

சுபா

Subashini Tremmel

unread,
Nov 6, 2011, 5:38:58 AM11/6/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
புரிசையில் எங்கள் பயணம் மேலும் தொடர்கின்றது...

புரிசை கண்ணப்ப தம்பிரான்

புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.  இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே இவரது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை பார்த்து வரவும் வாய்ப்பு கிட்டியது.

kt4.jpg

பயிற்சி பள்ளி

அழகிய எளிமையான முறையில் அமைந்த ஒரு குடில். கண்ணப்ப தம்பிரான் அவர்களின் பெரிய நிழற்படம் ஒன்று சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி செய்வதற்காக சில நாடக உபகரணங்களும் இந்தப் பள்ளியில் உள்ளன.  இந்த குடிலுக்கு உள்ளே நுழைவதற்கு முன் வாசலின் இடது புறத்தில் இந்தப் பள்ளி திறந்து வைக்கப்பட்டதை ஒட்டிய தகவல் கல்லில் பதிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.


kt8.jpg
கண்ணப்ப தம்பிரான்

புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தலைவராக இருப்பவர் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்கள். இவரது தலைமுறையில் இவர் ஐந்தாமவர். பரம்பரை பரம்பரையாக தெருக்கூத்து கலையை வளர்க்கும் கலைஞர்களின் பாரம்பரியத்தில் வருபவர். இவர் தந்தையார் திரு. கண்ணப்ப தம்பிரான் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பின்னர் இவர் இம்மன்றத்திற்கு தலைமையேற்று இந்தக் கலையை தொடர்ந்து வளர்த்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த நான்கு வருடங்களாக ஒரு பயிற்சிப் பள்ளியை அமைத்து அதில் ஆர்வமுள்ளோருக்கு தெருக்கூத்து பயிற்சி வழங்கி வருகின்றார்.

வார இறுதி நாட்களில் தொடர்ந்து 15 வாரங்கள் என்ற வகையில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. சிறு குழந்தைகளுக்கான பயிற்சிகளும் அதில் இடம்பெறுகின்றன. 


மஹாபாரதம் தவிர்த்து ராமாயணக் கதைகள், பாரதியின் பாஞ்சாலி சபதம், தெனாலி ராமன் கதைகள் போன்றவை தெருக்கூத்து கதைக்கருவாக பயன்படுத்தப்படுகின்றது. கொலம்பியாவில் நடைபெற்ற ஐந்தாவது உலக நாடக மானாட்டில் கலந்து கொண்டு தங்கள் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். ப்ரான்ஸ், ஸ்வீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே தெருக்கூத்து நிகழ்ச்சிகளை அறங்கேற்றியிருக்கின்றனர். தமிழகத்தில் புரிசையில் மட்டுமன்றி சிங்கப்பூரிலும் தெருக்கூத்து பயிற்சியை நடத்திவருகின்றார். 

துரைசாமி தம்பிரான் காலத்தில் தோல்பாவை ஆட்டமாக ஆரம்பித்த இந்தக் கலை பின்னர் தெருக்கூத்துக் கலையாக உருவெடுத்து மாற்றம் கண்டிருக்கின்றது.  தற்சமயம் இக்கலை மக்களின் கவனத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்றே இவர் குறிப்பிடுகின்றார்.

kt12.jpg
பேட்டி: கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன், சுபா, திருமதி.புனிதவதி இளங்கோவன்

காலத்திற்கேற்றவாறு மாற்றங்களைப் புகுத்துவதோடு மக்கள் மத்தியில் இக்கலையை கொண்டு செல்ல உழைக்கும் இவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

பேட்டியையும் மேலும் பல படங்களையும் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா

2011/11/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலை பதிவுகள் தொடர்கின்றன...

புரிசை கிராமம்

தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை!

  • வீராசாமி தம்பிரார்
  • ராகவத் தமிபிரார்
  • கிருஷ்ணத் தம்பிரார்
  • நடேசத் தம்பிரார்
அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். 

..

coral shree

unread,
Nov 6, 2011, 5:51:25 AM11/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்பின் சுபா,

தங்களுடைய புரிசைப்பயணக் கட்டுரை அருமையாக அமைந்துள்ளது. மனதைத் தொட்ட சங்கதிகள். ஊன்றி கவனித்து, அக்கறையுடன் எழுதியமைக்கு வாழ்த்துகள் சுபா.

2011/11/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Geetha Sambasivam

unread,
Nov 6, 2011, 9:05:15 PM11/6/11
to mint...@googlegroups.com
உங்கள் ஊக்கமும், விடாமுயற்சியும் தொடர்ந்து உங்களுக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தரட்டும். ஆக்கபூர்வமான இம்மாதிரியான பேட்டிகளை உலகுக்கு அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

2011/11/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
புரிசையில் எங்கள் பயணம் மேலும் தொடர்கின்றது...


 
பேட்டியையும் மேலும் பல படங்களையும் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா

Kamala Devi

unread,
Nov 6, 2011, 9:16:15 PM11/6/11
to mint...@googlegroups.com
சுபாஷினி
மனசெல்லாம் குளிர வைத்த பதிவு.
கண்ணப்ப தம்பிரானின் மகன்காசி, பேரன் பழனி எல்லோரும் தெரியும். புரிசைக்கு போக ஆசிரியர் ஏர்பாடு செய்த அன்று
கணவரின் போன் வராததால், ஞான் அன்று முழுவதும் எங்குமே போக இயலாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அவர்கள்
எல்லோரும் போனபிறகு கணவரின் போன் வந்தது.அன்று மிஸ் பண்னினது எண்டெ துரதிருஷ்டம்
கண்ணப்ப தம்பிரானைப்பற்றி  பென்னேஸ்வரனும் நிறைய பதிவு செய்துள்ளார்
கமலம்
 

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
Sent: Sunday, 6 November 2011 6:38 PM
Subject: [MinTamil] Re: திருவண்ணாமலை பதிவுகள்

Subashini Tremmel

unread,
Nov 13, 2011, 1:46:01 PM11/13/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்பு கமலம்,

நீங்கள் இவரிடம் தானே நாடகப் பயிற்சி மேற்கொண்டீர்கள். சிங்கையில் தற்சமயம் இவர்களது பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகின்றதாம் நீங்கள் தொடர்ந்து கலந்து கொள்கின்றீர்களா?

நீங்களும் தெருக்கூத்து நாடகங்களை மேடையில் அரங்கேற்றுகின்றீர்களா? சிங்கையில் இது தொடர்பாக நடைபெறும் தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன். கலைகளில் ஆர்வம் உள்ளவரகளுக்கு இது பயனுள்ள சுவாரசியமான தகவலாக அமையும்.

சுபா

2011/11/7 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

சுபாஷினி
மனசெல்லாம் குளிர வைத்த பதிவு.
கண்ணப்ப தம்பிரானின் மகன்காசி, பேரன் பழனி எல்லோரும் தெரியும். புரிசைக்கு போக ஆசிரியர் ஏர்பாடு செய்த அன்று
கணவரின் போன் வராததால், ஞான் அன்று முழுவதும் எங்குமே போக இயலாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அவர்கள்
எல்லோரும் போனபிறகு கணவரின் போன் வந்தது.அன்று மிஸ் பண்னினது எண்டெ துரதிருஷ்டம்
கண்ணப்ப தம்பிரானைப்பற்றி  பென்னேஸ்வரனும் நிறைய பதிவு செய்துள்ளார்
கமலம்
 

From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
Sent: Sunday, 6 November 2011 6:38 PM
Subject: [MinTamil] Re: திருவண்ணாமலை பதிவுகள்

புரிசையில் எங்கள் பயணம் மேலும் தொடர்கின்றது...

புரிசை கண்ணப்ப தம்பிரான்

புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.  இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே இவரது பயிற்சிப் பள்ளி 

Subashini Tremmel

unread,
Nov 13, 2011, 1:46:44 PM11/13/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
உங்களின் இனிய சொற்களுக்கு நன்றி திருமதி.கீதா.  தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

சுபா

2011/11/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

rajam

unread,
Nov 13, 2011, 6:09:23 PM11/13/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
தமிழ்த் "தெருக்கூத்து" பற்றிப் படித்துத் தேர்ந்த ஒரு நண்பர் ரிச்சர்ட் ஃப்ராஸ்கா (Richard Frasca). அவரும் ஜார்ஜ் ஹார்ட் போலவே ஒரு தமிழ்ப் பெண்ணை மணந்தவர். திரௌபதிக் கதை பற்றி ஆராய்ந்தவர்.  (http://www.amazon.com/Theatre-Mahabharata-Terukkuttu-Performances-South/dp/0824812905/ref=sr_1_2?s=books&ie=UTF8&qid=1321222881&sr=1-2

"Theatre of the Mahabharata: Terukkuttu Performances in South India" என்ற தலைப்பில் இவருடைய ஆய்வு நூலைப் பார்க்கலாம்.

ரிச்சர்ட் ஃப்ராஸ்கா (Richard Frasca) மிக அழகாகத் தமிழ் பேசுபவர். என் கருத்துப்படி, பிறமொழி accent  தடுக்காமல் பேசும் அயல்நாட்டவர் அவர். அவரே மிக நன்றாகத் தெருக்கூத்துப் பகுதிகளை ஆடிக்காட்டுவார்.  
இவர்போன்றவர்களுக்கெல்லாம் உலக அரங்கில் இடம் கிடைக்காதது ஏன்? அரசியல் புதுமையே! :-) :-) :-)


செல்வன்

unread,
Nov 13, 2011, 6:45:08 PM11/13/11
to mint...@googlegroups.com


2011/11/13 rajam <ra...@earthlink.net>

ரிச்சர்ட் ஃப்ராஸ்கா (Richard Frasca) மிக அழகாகத் தமிழ் பேசுபவர். என் கருத்துப்படி, பிறமொழி accent  தடுக்காமல் பேசும் அயல்நாட்டவர் அவர். அவரே மிக நன்றாகத் தெருக்கூத்துப் பகுதிகளை ஆடிக்காட்டுவார்.  
இவர்போன்றவர்களுக்கெல்லாம் உலக அரங்கில் இடம் கிடைக்காதது ஏன்? அரசியல் புதுமையே! :-) :-) :-)


தமிழ்நாட்டிலேயே தெருகூத்துக்கு அங்கீகாரம் இல்லை. அப்புறம் உலக அளவில் எப்படி கிடைக்கும்?

இதை எல்லாம் குறைந்தபட்சம் விடியோ பதிவாகவாவது இணையத்தில் ஏற்ரவேண்டும்.வருங்கால தலைமுறைக்கு இப்படி ஒரு விஷயம் இருந்தது என்பதாவது தெரியவேண்டும்.
--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"





Vij

unread,
Nov 13, 2011, 7:00:06 PM11/13/11
to mint...@googlegroups.com
யுட்யூபில் சில தெருக்கூத்து, திரௌபதி அம்மன் ஆட்டம் இருக்கு
 
 
 
one from malaysia
 
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

rajam

unread,
Nov 13, 2011, 7:29:19 PM11/13/11
to mint...@googlegroups.com



On Nov 13, 2011, at 4:00 PM, Vij wrote:

யுட்யூபில் சில தெருக்கூத்து, திரௌபதி அம்மன் ஆட்டம் இருக்கு
 
 
 
one from malaysia
 
விஜயராகவன்
பார்த்தேன். சகிக்கலெ. முந்தி மாதிரி இல்லெ. :-( :-( :-(

 
 
 
Sent: Monday, November 14, 2011 12:45 AM
Subject: Re: [MinTamil] Re: திருவண்ணாமலை பதிவுகள்
 


2011/11/13 rajam <ra...@earthlink.net>
ரிச்சர்ட் ஃப்ராஸ்கா (Richard Frasca) மிக அழகாகத் தமிழ் பேசுபவர். என் கருத்துப்படி, பிறமொழி accent  தடுக்காமல் பேசும் அயல்நாட்டவர் அவர். அவரே மிக நன்றாகத் தெருக்கூத்துப் பகுதிகளை ஆடிக்காட்டுவார். 
இவர்போன்றவர்களுக்கெல்லாம் உலக அரங்கில் இடம் கிடைக்காதது ஏன்? அரசியல் புதுமையே! :-) :-) :-)


தமிழ்நாட்டிலேயே தெருகூத்துக்கு அங்கீகாரம் இல்லை. அப்புறம் உலக அளவில் எப்படி கிடைக்கும்?

இதை எல்லாம் குறைந்தபட்சம் விடியோ பதிவாகவாவது இணையத்தில் ஏற்ரவேண்டும்.வருங்கால தலைமுறைக்கு இப்படி ஒரு விஷயம் இருந்தது என்பதாவது தெரியவேண்டும்.
--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Kamala Devi

unread,
Nov 13, 2011, 7:52:46 PM11/13/11
to mint...@googlegroups.com
இல்லை சுபாஷினி,
கண்ணப்ப தம்பிரானிடம் ஞான் பயிற்சி பெறவில்லை. கூத்துப்பட்டறை முத்துசாமி,தஞ்சாவூர் பல்கலைக்கழக
பேராசிரியர் ராமானுஜம், மலையாளத்தில் டாக்டர் மத்தாயி, ஆங்கிலத்தில் டாக்டர், கிருஷ்ண சர்மா., போன்றோர்தான் என்டெ ஆசிரியர்கள். என் டெ நாடகங்கள் தெருக்கூத்து அம்சங்கள் கொண்டவையல்ல. ஆனால் தெருக்கூத்து பற்றித்தெரியும்.
படித்திருக்கிறேன்
தம்பிரானின் மகன் காசித்தம்பிரான்,பேரன் பழனி போன்றோர் என்னோடு சென்னையில் பயிற்சியில் இருந்தார்கள்
கூத்தின் கூறுகள் தெரியாமல் மேடை எழுத்து கற்பிக்க முடியாது.
 தவிரவும் இப்பொழுது ஞான் மேடை நாடகத்துறையில் இல்லை. மேடை எழுத்து, இயக்கம், எல்லாம் விட்டு 10 வருடங்கள் ஆகிவிட்டன.எனக்கான துறை அல்ல. அவ்வளவு சிரமம்--இயக்கம் என்பது.ஆனால் இருந்தவரை குறிப்பிட்ட சில சாதனைகள் செய்திருக்கிறேன்.
இப்பொழுது  வகுப்புகள் எடுக்கிறேன்.வானொலி , தொலக்காட்சி, மேடைநாடக எழுத்து, என கற்பிக்கிறேன்.
ஞான் நாடகத்துறையில் விருது பெற்ற அனுபவம், சர்வதேச ரீதியில் போட்டியில் எழுதி வெற்றி பெறுவேன் என்றே தெரியாமல்
எழுதப்போன அனுபவங்கள், என விரைவில் எழுதும் எண்ணமுண்டு.அப்பொழுது நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.
கமலம்



From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
Sent: Monday, 14 November 2011 2:46 AM
Subject: Re: [MinTamil] Re: திருவண்ணாமலை பதிவுகள்

Subashini Tremmel

unread,
Nov 19, 2011, 3:47:38 AM11/19/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
தண்டோரா


thandora1.jpg

தமிழக கிராமங்களில் இன்றும் தகவல் பரிமாற்றத்திற்கு தண்டோரா பயன்படுத்துகின்றனர் என்பதை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. புரிசையில் தெருக்கூத்து பற்றிய பதிவுகளைச் செய்து முடித்து திரும்பும் போது ஊர் மக்களுக்கு ஒரு கோயில் திருவிழா தொடர்பான செய்தி சொல்வதற்காக ஒரு தண்டோராக்காரர் வந்திருந்தார். அவரது தண்டோராவை பதிவு செய்திருக்கிறேன். இங்கே கேட்டுப் பாருங்களேன்!

அன்புடன்
சுபா


2011/11/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 19, 2011, 3:53:02 AM11/19/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நண்பர்களே - எழுதும் போது தோன்றியது.. தண்டோராக்காரர் என்னும் சொல் வழக்கில் உள்ளதா.. அல்லது இவர்களுக்கு வேறு ஏதேனும் பெயர் உண்டா..?

சுபா

2011/11/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 19, 2011, 4:01:13 AM11/19/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/11/14 Vij <vcv...@hotmail.com>

யுட்யூபில் சில தெருக்கூத்து, திரௌபதி அம்மன் ஆட்டம் இருக்கு
 

இந்த முதல் யூடியூப் படம் மட்டும் தான் பார்த்தேன். மிக நன்றாக இருக்கின்றது. தெருக்கூத்தை சமூக நலனுக்காக பயன்படுத்தலாம் என நினைத்து செயலாற்றும் இந்தச் சமூகப் பணியாளர்களுக்கு பாராட்டுக்கள். ஏனையவற்றையும் பார்க்கிறேன்.

சுபா
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Nov 19, 2011, 4:14:57 AM11/19/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/11/14 Vij <vcv...@hotmail.com>
..
 

இது ஏதோ சாலையில் குதித்துக் கொண்டு ஓடுவது போல இருக்கின்றது. ஒழுங்கான நடனமாக இல்லையே.. :-(
இப்படி ஒரு பூஜையை நான் இதுவரை பார்த்ததில்லை. மண்ணால் துரியோதனன் சிலை செய்திருக்கின்றார்கள் என நினைக்கிறேன். அதனை திரௌபதி வேஷத்தில் வரும் ஒருவர் காலால் மிதித்து நாசம் செய்கிறார்.  இதற்கு பாடுகளம் எனப் பெயர் . என்ன விதமானன சடங்கு இது என்று அறிந்தவர்கள் விளக்க முடியுமா?

சுபா

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Nov 19, 2011, 4:25:21 AM11/19/11
to mint...@googlegroups.com

http://www.youtube.com/watch?v=_dOYWMzEr-g&feature=related

படுகளம் என்றால் போர்க்களம். களத்தில் துரியோதனனை எதிர்கொண்டு பீமன் வதம் செய்யும் தத்ரூபமான காட்சியே துரியோதனன் படுகளம் என்ற பெயரில் தெருக்கூத்தாக நடித்து காட்டப்படுகிறது. 11 நாட்கள் மகாபாரத இதிகாசம் குறித்த தெருக்கூத்து மற்றும் தொடர் சொற்பொழிவு நடத்தப்படுகிறது. இறுதியாக துரியோதனன் படுகளத்துடன் விழா நிறைவடையும். படுகளம் நிகழ்ச்சியில் 1 டன் களிமண்ணை கொண்டு வந்து, சுமார் 10 அடி நீளத்தில் உருவபொம்மை அமைப்பார்கள். துரியோதனனாக சித்தரிக்கப்பட்ட அந்த பொம்மைக்கு பல்வேறு வண்ணங்கள் பூசி கண் திறப்பர். பின்னர், மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜை செய்வர்.

அப்போது, பீமன் வேடம் அணிந்து வந்த தெருக்கூத்து கலைஞர் துரியோதனனை படுகளத்தில் எதிர்கொண்டு கதாயுதத்தால் தாக்குவார். அப்போதும் துரியோதனன் மரணம் அடையாததால், உயிர் எங்கே உள்ளது என கேட்பார். அப்போது, தொடையில் உள்ளது என துரியோதனன் கூறுவதாக மற்றொரு தெருக்கூத்து கலைஞர் பதில் சொல்வார். பிறகு ஆவேசமடைந்த பீமன் உருக்கொண்ட கலைஞர், கதாயுதத்தால் துரியோதனன் தொடையில் தாக்குவார். அங்கிருந்து பீறிட்டு எழும் சிவப்பு சாயத்தை ரத்தமாக கருதி, திரௌபதி வேடம் அணிந்திருந்த கலைஞர், தனது தலைமுடியில் பூசிக்கொள்வார். இத்தகைய துரியோதனன் படுகளத்தை துக்க நிகழ்ச்சியாக பாவித்து, பக்தர்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு சென்று நீராடுவார்கள்.

-------------

படுகளம் என்பது போரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி. கொங்கின் பொன்னர் சங்கர் கதையிலும் படுகளம் உண்டு.

இப்போது பொன்னர் சங்கர் கதையை பாடும் போது படுகள பகுதியை தனியாகவே கொண்டாடுவார்கள். படுகளத்தில் அண்ணன்மார் மாண்ட இடம் வரும் போது கூட்டதில் இருப்பவர்களுக்கும் அருள் வந்து இறந்தது போல் படுத்துகொள்வார்கள். பின்பு பூசாரி உடுக்கை அடித்து தங்காள் பாடிய பகுதியை பாடி எழுப்புவார். அப்போது அவர்கள் கையில் அரிவாளை தந்து வாழை மரத்தை வெட்டச்செய்வார்கள்.

இன்றும் இதை கூவாண்டம் பள்ளம் எனும் இடத்தில் பொன்னர் சங்கர் திருவிழாவின் போது பார்க்கலாம். ஊருக்கு ஊரு கதையாக பாடும் போதும் நடக்கும்.



ராஜசங்கர்



2011/11/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 19, 2011, 5:19:25 AM11/19/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ரொம்பநாட்களாக (அதாவது 75 வருடங்களாக) தண்டோராப்பிரியனான எனக்கு இது நல்லதொரு சுபசூசகம், ஸுபாஷிணி, டும்! டும்! டும்!
இரவல் வாங்கிக்கலாமோ, நன்றி முரசடித்து?
இன்னம்பூரான்

2011/11/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 19, 2011, 12:14:14 PM11/19/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan, Subashini Kanagasundaram
இதைப் பதியும் போதே உங்கள் தண்டோராவைத் தான் நானும் நினைத்தேன் திரு.இன்னம்புரான் :-)

சுபா

2011/11/19 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Nov 19, 2011, 2:59:33 PM11/19/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலை திருக்கோயில்
 
thiruvannamalaitemple1.jpg

இன்றைய பதிவில் உங்களை திருவண்ணாமலை ஆலயத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.

படத்தொகுப்பைக் காண இங்கே செல்க!

++++++++++++++++++++++++++++++++++++++++

திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு சிவத்தலம்.
 
 
"7ம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கற்கசுதை மாடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
 
அண்ணாமலையார் கோயிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள், ஒய்சள மன்னர்கள், விஜய நகர மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகள் மிகுதியாக உள்ளன.
 
விஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோயிலின் கருங்கல் திருப்பணியைத் தொடங்கி வைத்தனர். இக்கோயிலிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகத் தொன்மையானது. இக்கோபுரம் கி.பி.1063ல் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
 
கி.பி. 14ம். நூற்றாண்டில் ஒய்சளர்களுடைய துணைத் தலைநகராகத் திருவண்ணாமலை விளங்கியது. அண்ணாமலையார் கோவிலிள்ள வல்லாள மகாராஜா கோபுரம் மூன்றாம் வல்லாள் மகாராஜாவால் (1291-1342) கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள மன்னரின் திருப்பணி என்பர்.
 
ஒய்சள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்ச நிலையை அடைந்தது. கிருஷ்ண தேவராயர் (1509 - 1529) தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின்  கிழக்குக் கோபுரத்தைக் கி.பி. 1516இல் கட்ட ஆரம்பித்தார். இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் எனப்படுகிறது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களிலேயே மிக உயர்ந்ததாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும்.
 
சிவகங்கை குளமும் ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானவையாகும். விஜநகர கால கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.
 
இராய கோபுரத்தின் மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று  யானையை வேட்டையாடி அடக்கி வருவதுபோல் உள்ள ஓவியமாகும். இந்த ஓவியங்கள் விஜய நகர அரசு கால ஓவியக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
 
நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சீரிய திருப்பணிகளை மேற்கொண்டு அண்ணாமலையார் கோவிலில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தியுள்ளனர். இக்கோயிலின் சிறப்புமிக்க குடமுழுக்கு விழா 1976ஆம் வருடம் (4-4-1976) நடைபெற்றது.
 
அண்ணாமலையார் கோவிலின் கருவறைத் தெய்வம் அருணாசலேஸ்வரர் என்ற சிவபெருமான் ஆவார். இறைவன் கருவறையில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்மன் உண்ணாமலை எனப்படுகின்றார். அம்மன் கருவறை முழுதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. அம்மன் சனனதிக்கு வெளியிலுள்ள மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகள் உள்ள அஷ்டலட்சுமி மண்டம் உள்ளது. விநாயகர் சன்னதியும் கம்பத்து இளையனார் (முருகன்) சன்னதியும் இக்கோவிலிலுள்ள இதர முக்கிய சன்னதிகளாகும்."
 
நன்றி: தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் - V.கந்தசாமி

Subashini Tremmel

unread,
Nov 20, 2011, 3:37:49 AM11/20/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலை திருக்கோயில்
கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம்


கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் ஒரு முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம்.
 
இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் உப்பு கொட்டி வைத்திருப்பதைக் காணலாம்.  முகத்தில் மரு உண்டாகும் போது பக்தர்கள் இம்மரு நீங்க வேண்டும் எனப் ப்ரார்த்தனை செய்து கொண்டு இங்கே சுப்ரமணிய சாமி கோயிலில் உப்பு போடுவது ஐதீகமாக இருக்கின்றது. தங்களின் வேண்டு்தலுக்கு இறைவன் அருள் பாலித்து உப்பு உதிர்வது போல மரு உதிர்வதாக மக்கள் நம்பிக்கை அமைந்திருக்கின்றது.

அருணகிரிநாதர் வழிபட்டதோர் இளையனார் குடிகொண்டிருக்கும் ஆலயம் இது.

ஒரு சிறு கோயிலுக்குள்லேயே அத்தனை சிற்பங்கள். நான் கேமராவில் பதிவு செய்தவை ஒரு சில மட்டுமே. பெரும்பாலான சிற்பங்கள் வைஷ்ணவ வடிவங்களைக் கொண்டமையாக உள்ளன. 

thiruvannamalai-uppu2.jpg
விஷ்ணு சக்கரம் பார்வதி தேவியின் முகத்திலிருந்து உதிப்பது போல அமைக்கப்பட்ட ஒரு வடிவம். மிக அரிதான ஒரு கலைச் சிற்பம்.


இந்தச் சிற்பக் கலைக்கூடத்தின் சில சிற்பங்களைக் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா

2011/11/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 20, 2011, 3:39:13 AM11/20/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
சிறு திருத்தம்..

"அருணகிரிநாதர் வழிபட்ட இளையனார்" என்று இருக்க வேண்டும்.
சுபா

2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

திருவண்ணாமலை திருக்கோயில்
கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம்


கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் ஒரு முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம்.
 
இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் உப்பு கொட்டி வைத்திருப்பதைக் காணலாம்.  முகத்தில் மரு உண்டாகும் போது பக்தர்கள் இம்மரு நீங்க வேண்டும் எனப் ப்ரார்த்தனை செய்து கொண்டு இங்கே சுப்ரமணிய சாமி கோயிலில் உப்பு போடுவது ஐதீகமாக இருக்கின்றது. தங்களின் வேண்டு்தலுக்கு இறைவன் அருள் பாலித்து உப்பு உதிர்வது போல மரு உதிர்வதாக மக்கள் நம்பிக்கை அமைந்திருக்கின்றது.

அருணகிரிநாதர் வழிபட்டதோர் இளையனார் குடிகொண்டிருக்கும் ஆலயம் இது.

ஒரு சிறு கோயிலுக்குள்லேயே அத்தனை சிற்பங்கள். நான் கேமராவில் பதிவு செய்தவை ஒரு சில மட்டுமே. பெரும்பாலான சிற்பங்கள் வைஷ்ணவ வடிவங்களைக் கொண்டமையாக உள்ளன. 

thiruvannamalai-uppu2.jpg
விஷ்ணு சக்கரம் பார்வதி தேவியின் முகத்திலிருந்து உதிப்பது போல அமைக்கப்பட்ட ஒரு வடிவம். மிக அரிதான ஒரு கலைச் சிற்பம்.


இந்தச் சிற்பக் கலைக்கூடத்தின் சில சிற்பங்களைக் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா


2011/11/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலை திருக்கோயில்


 

Subashini Tremmel

unread,
Nov 20, 2011, 3:42:00 AM11/20/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
அருணகிரிநாதர்
திருமதி.கீதா சாம்பசிவம்

thiruvannamalai-aruna1.jpg

 
திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.
 
என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

மேலும் வாசிக்கவும் படங்களைக் காணவும் இங்கே செல்க!

2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலை திருக்கோயில்

Subashini Tremmel

unread,
Nov 20, 2011, 3:51:11 AM11/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி ராஜசங்கர். இன்னமும் இச்சடங்குகள் வழக்கில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சுபா

2011/11/19 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Nov 20, 2011, 3:51:42 AM11/20/11
to mint...@googlegroups.com


2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலை திருக்கோயில்
கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம்


கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் ஒரு முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம்.

~ நேற்று இரவு கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமியை நினைத்துப் படுத்துக்கொண்டேன். இன்று காலை உங்கள் அற்புதமான கருவூலம்.
நன்றி, ஸுபாஷிணி.

ranganathan venkatachariar

unread,
Nov 20, 2011, 5:50:03 AM11/20/11
to mint...@googlegroups.com
தங்களுடய பகிர்வுக்கு மிகவும் நன்றி 
அரங்கநாதன்/உட்டிரமேருறேர் 

2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Nov 20, 2011, 1:37:37 PM11/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Geetha Sambasivam
மிக நன்றி, கீதா! பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் கட்டுரை! 


rajam

unread,
Nov 20, 2011, 1:45:08 PM11/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மிக வித்தியாசமான சிற்பங்கள்! நன்றாக இருக்கின்றன. நன்றி, சுபா!
உப்பும் மிளகும் ஒரு சிறு பொதியாகக் கட்டிக் கோயிலில் போடுவது பழைய வழக்கம்போல நினைப்பு. இதுபற்றி மேலும் தகவல் திரட்டினால் தெளிவு கிடைக்கும்.
அந்தக் கண்ணன்-யசோதை சிற்பம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சரியான முறையில் அந்தக் குழந்தைக்குத் தோப்புக்கரணம் போடத் தெரியவில்லை என்று சொல்வேன்!
:-) :-) :-)


rajam

unread,
Nov 20, 2011, 5:20:18 PM11/20/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
அந்தக் கண்ணன்-யசோதை சிற்பம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சரியான முறையில் அந்தக் குழந்தைக்குத் தோப்புக்கரணம் போடத் தெரியவில்லை என்று சொல்வேன்!

இன்றைய நாளில் ... மூளை ஆற்றலைச் சிறப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் ... இப்படியும் செய்கிறார்கள் ... : 

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs 

:-) :-) :-)

Begin forwarded message:

From: rajam <ra...@earthlink.net>
Date: November 20, 2011 10:45:08 AM PST
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 21, 2011, 2:53:47 PM11/21/11
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
ராஜம் அம்மா,

இந்தக் கோயில் ஒரு கலைக்கூடம். இந்த ஆலயத்தின் எல்லா பகுதிகளிலும் உள்ள சிறபங்களை பதிவு செய்தால் ஒரு சிறந்த இணைய கலைக்கூடம் அமைத்து இவற்றை தனித்தனியாக ஆராய்ச்சி செய்யலாம். என்னால் ஒரு சில மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. அதோடு சில இடங்களீல் பதிவு செய்ய அனுமதி இல்லை. உதாரணமாக உமையம்மை சன்னதிக்குள் அபாரமான சில கலைச்சிற்பங்கள் உள்ளன.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. ஆனால் அவசரம் அவசராமாக எல்லாம் பார்த்து வந்தேன். மீண்டும் ஒரு முறை நிச்சயம் செல்ல வேண்டும். ஒரு நாள் முழுதும் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து இவற்றை ரசிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. 


2011/11/20 rajam <ra...@earthlink.net>
..
அந்தக் கண்ணன்-யசோதை சிற்பம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சரியான முறையில் அந்தக் குழந்தைக்குத் தோப்புக்கரணம் போடத் தெரியவில்லை என்று சொல்வேன்!

அது சிரித்துக் கொண்டே தோப்புக் கரணம் போடுகின்றது.. :-)
அந்த ஹனுமார் சிற்பத்தை பாருங்களேன்.. சந்தோஷமாக ஆடுவது போல அழகாக இருக்கிறது இல்லையா..?

சுபா

Subashini Tremmel

unread,
Nov 21, 2011, 2:54:17 PM11/21/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ராயர் மண்டபம்

சிவகங்கை தீர்த்தக் குளத்தின் அருகில் அருணகிரிநாதருக்கு முருகன் காட்சியளித்த சன்னிதிக்குப் பின்னே இந்த ராயர் மண்டபம் அமைந்துள்ளது. சிறு மண்டபம். இதில் மேற்சுவரில் சிவபெருமானின் பல்வேறு உருவங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. சிவனுக்கு இத்தனை வடிவங்களா என நம்மை வியக்க வைக்கும் அழகிய ஓவியங்கள் இவை.


thiruvannamalai-sivan9.jpg

படங்களைக் காண இங்கே செல்க!


அன்புடன்
சுபா

2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Nov 22, 2011, 7:01:29 PM11/22/11
to mint...@googlegroups.com
சுபா:

இவையெல்லாம் புராணங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள்.

கண்ணனின் இராசலீலை என்றால், சிவனின் தாருகா வனத்து ரிஷி பத்னிகளைக்
காமுறச் செய்தல். இப்படி இந்து மதம் காமத்துப்பாலை தன்னகத்தே கொண்டு
வளர்ந்திருக்கிறது (தத்துவார்த்தமாக இவைகளுக்கு வேறு அர்த்தம்
இருந்தாலும்).

இந்தப்படங்களெல்லாம் ஏனோ, தானோ என்று வரைந்தவை. ஏகபாத மூர்த்தி,
கஜேந்திரபாதர் போன்ற சிற்பங்களை அழகுறக் காண மதுரை மீனாக்ஷி கோயிலுக்கு
வாருங்கள். ஸ்வாமி சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் காணலாம்.

க.>

2011/11/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>


>
> ராயர் மண்டபம்
> சிவகங்கை தீர்த்தக் குளத்தின் அருகில் அருணகிரிநாதருக்கு முருகன் காட்சியளித்த சன்னிதிக்குப் பின்னே இந்த ராயர் மண்டபம் அமைந்துள்ளது. சிறு மண்டபம். இதில் மேற்சுவரில் சிவபெருமானின் பல்வேறு உருவங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. சிவனுக்கு இத்தனை வடிவங்களா என நம்மை வியக்க வைக்கும் அழகிய ஓவியங்கள் இவை.
>
>

> படங்களைக் காண இங்கே செல்க!
>
> அன்புடன்
> சுபா
>
> 2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>>
>> அருணகிரிநாதர்
>> திருமதி.கீதா சாம்பசிவம்
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Subashini Tremmel

unread,
Nov 26, 2011, 5:09:56 AM11/26/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருமதி.கீதா,

அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் என்ன ? எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர் ?

சுபா

2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அருணகிரிநாதர்
திருமதி.கீதா சாம்பசிவம்



 

Subashini Tremmel

unread,
Nov 26, 2011, 5:12:20 AM11/26/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/11/23 N. Kannan <navan...@gmail.com>

சுபா:

இவையெல்லாம் புராணங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள்.

புராணக் கதைகளுக்கு உருவம் கொடுக்கும் அரிய செயல் இல்லையா..? நமது கோயில்கள் ஒவ்வொன்றையும் அதிலும் பழமையான கோயில்களைப் பார்க்கும் போது இச்சுவர் சிற்பங்களைப் பார்த்து வியக்காமல் இருக்க முடிவதில்லை கண்ணன்.

நிச்சயம் ஒரு முறை மதுரை கோயிலுக்கு மீண்டும் செல்ல வேண்டும். 

சுபா



--

Geetha Sambasivam

unread,
Nov 26, 2011, 6:39:14 AM11/26/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
//விஷ்ணு சக்கரம் பார்வதி தேவியின் முகத்திலிருந்து உதிப்பது போல அமைக்கப்பட்ட ஒரு வடிவம். மிக அரிதான ஒரு கலைச் சிற்பம்.//



ஶ்ரீவித்யை உபாசகர்களால் இதை விளக்க இயலும். அருமையான சிற்பம்.  கருத்துப் பொதிந்த சிற்பமும் கூட.

2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

thiruvannamalai-uppu2.jpg
விஷ்ணு சக்கரம் பார்வதி தேவியின் முகத்திலிருந்து உதிப்பது போல அமைக்கப்பட்ட ஒரு வடிவம். மிக அரிதான ஒரு கலைச் சிற்பம்.


இந்தச் சிற்பக் கலைக்கூடத்தின் சில சிற்பங்களைக் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா




 

--

Geetha Sambasivam

unread,
Nov 26, 2011, 6:41:28 AM11/26/11
to mint...@googlegroups.com
பதினைந்தாம் நூற்றாண்டு சுபா.  தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இன்று தான் பார்க்கிறேன். :))))

2011/11/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருமதி.கீதா,

அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் என்ன ? எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர் ?

சுபா


Subashini Tremmel

unread,
Nov 26, 2011, 5:20:01 PM11/26/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலைப் பதிவுகள் தொடர்கின்றன.. மேலும் சில காட்சிகள்..  இங்கே ..!





2011/11/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
..

Subashini Tremmel

unread,
Nov 27, 2011, 3:44:27 AM11/27/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலைச் சிற்பங்களை விளக்கும் ஒரு பதிவு திருமதி.கீதாவின் கார்த்திகை தீபம் பற்றிய விளக்கத்துடன் இணைந்து வருகின்றது.

சிற்பங்கள் 2


இப்பகுதியில் பல சிற்பங்களை இணைத்திருக்கின்றேன். பல மிக மிக வித்தியாசமானவை. பலவற்றின் பெயர் எனக்குச் சரியாத் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திற்கும் எண்கள் வழங்கியிருக்கிறேன். இச்சிற்பங்களின் பெயர் அறிந்ததவர்கள் எண்ணைக் குறிப்பிட்டு பெயர்களை வழங்கினால் நான் இணைத்து வைக்க உதவியாக இருக்கும். நன்றி.

சுபா

2011/11/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 27, 2011, 6:01:50 AM11/27/11
to mint...@googlegroups.com
கொடிமரத்துக்கு மேலே ராவணேஸ்வரன் கைலையை ஆட்டிப்பார்க்கும் சிற்பம் .

கொடிமரத்தில் ஏக பாதர்/ அதை நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்

எட்டாவது ராஸலீலையின் ஒரு பகுதி, கோபிகை யாரோ அல்லது ராதை கண்ணனிடம் தன் உடையைக் கேட்கிறாள்.   கண்ணனின் இரு கரங்களிலும் உடை.

அடுத்ததும் ராஸலீலைச் சிற்பம்னு தோணுது.  மற்றவைகளை ஆராய்ந்து பார்க்கணும்.


14. பகீரதன்?

பதினேழு கஜசம்ஹார மூர்த்தியா?

18. பிரம்மாவின் தலையைக்கொய்த பைரவர் தலையைக் கையிலேந்தும் கோலம்?



2011/11/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Nov 27, 2011, 11:18:10 PM11/27/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மிக வேறுபட்ட நோக்கைத் தரும் சிற்பங்கள்! நல்ல வேளை, படத்தில் பிடித்தீர்கள்! ஒவ்வொரு கோயிலிலும் அதன் காலத்துக்கும் அந்தக் கோயிலை உருவாக்க ஆதரித்த மக்கள்/மன்னர்களுக்கும் தக்கபடிச் சிற்பங்கள் அமைந்திருக்கும்போல. மதுரைக் கோயிலிலும் பெண்ணின் மகப்பேறு காலச் சிற்பம் உண்டு, ஆனால் இந்த அளவு வெளிப்படையாக இல்லை என்று நினைக்கிறேன். 

Subashini Tremmel

unread,
Dec 3, 2011, 6:29:25 AM12/3/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
திருவண்ணாமலை பதிவுகள் வெளியீடுகளின் வழி எனது 2011 மார்ச் மாத தமிழக பயணத்தின் போது நான் பதிந்து வந்த தகவல்களை தயாரித்து தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்த்தில் இணைத்து வைத்துள்ளதோடு உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன். உங்களின் பின்னூட்டங்களும் கேள்விகளும் பதில்களும் ஊக்கமளிப்பவையாக இருந்தன. நமது வலைத்தளத்திலும் திருவண்ணாமலைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சில இடம்பெற இந்த முயற்சி உதவி உள்ளது.

இந்தப் பதிவின் தொடரை இத்துடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் இவ்வளவு தானா என நினைத்து விட வேண்டாம். எனது பதிவுகள் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து சில பதிவுகளையும் குறிப்புக்களை அவ்வப்போது நாம் இணைத்து வரலாம். 

எனது பயணத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதிக்குச் சென்று சில பதிவுகளை ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் திரு.உதயன், திரு.துரை திரு.ப்ரகாஷ் ஆகியோர் சென்று கேட்டு தகவல் பெற்று வந்துள்ளனர். அந்தத் தகவல்களையும் பதிய வேண்டும். அதுமட்டுமல்லாது மின் தமிழ் வாசகர்கள் நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செல்லும் வாய்ப்பு அமைந்தால் அங்கு நீங்கள் காணும் வரலாற்று விஷயங்களைப் பதிந்து வந்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். 

இப்பயணத்தின் போது என்னுடன் உடனிருந்து உதவிய நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் மறக்க முடியாது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குடும்பத்தினரின் இணைந்த பணி இது என்றாலும் எனக்கு மன நிறைவளிக்கும் வகையில் பயணத்திலும் உதவிய இவர்களை மீண்டும் நினைத்துப் பார்த்து நன்றி கூற விரும்புகிறேன்.


final1.jpg

எங்களை சென்னையிலிருந்து திருவண்ணாமலை அழைத்துச் சென்று பயணத்தில் கூடவே இருந்து வாகனமோட்டி உதவி செய்தவர் இவர்.  ஒரு முன்னாள் ராணுவ வீரர். 

அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான விஷயங்களை நான் பார்த்து விட்டால் வாகனத்தை நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொள்வேன். சலிக்காமல் வாகனத்தை நிறுத்தி நான் புகைப்படங்கள் எடுத்து முடித்து வரும் வரை காத்திருந்து அழைத்துச் சென்றார்.
ஒரு சமயம் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது வாகனத்தை நிறுத்தி என்னிடம் தன்னை ஒரு படம் எடுக்க முடியுமா எனக் கேட்டார். அந்தப் படம் தான் நீங்கள் இங்கே பார்ப்பது. 

இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ப.கிருஷ்ணன் அவர்களின் உருவச்சிலை. இங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு அவருக்கு இராணுவ முறையில் வணக்கம் தெரிவித்தார். பின்னர் ஒரு புகைப்படம் எடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார். அவரது நாட்டுப் பற்று மனதை நெகிழ வைத்தது.


Mrajendran1.jpg

திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் டாக்டர்.ம.ராஜேந்திரன் (மார்ச் 2011). எங்கள் பயணத்தின் பதிவுகளுக்கான எல்லா உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாது எங்களை வீட்டிற்கு அழைத்து அருமையான விருந்தும் பரிமாறினார். இவரது அன்பான துணைவியாரின் மதுரை நகர சமையலின் காரத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டேன். இவரது மகள் வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட குழந்தை. திறமை மிக்கவள்.  இவர்கள் இனிதே பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


final4.jpg

திருமதி.புனிதவதி இளங்கோவன். எங்களுடன் பயணத்தில் இணைந்து கொண்டவர். எனது பேட்டிகளின் போது பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி பதிவுகள் சிறப்பாக வந்திட துணை புரிந்தார். இவர் ஒரு தகவல் பொக்கிஷம். சைவ சித்தாந்தம் தேவாரத் திருமுறைகள், வரலாறு, பெண்ணியம் என பல துறை வல்லுனர். முன்னாள் தமிழ்நாடு ஆல் இந்தியா ரேடியோ இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது நட்பு கிடைத்ததில் நான் மனம் மகிழ்கிறேன்.


final3.jpg
அட்வகேட் ஷங்கர். நான் எதிர்பார்க்காத நேரத்தில் எங்களுடன் இணைந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலைப் பற்றிய நல்ல அறிமுகத்தை எனக்கு வழங்கினார். இவரை அறிமுகம் செய்து கொண்டதில் மிகவும் மகிழ்கிறேன்.


final2.jpg

ப்ரகாஷ் சுகுமாரன். மின்தமிழில் எனக்கு அறிமுகமாகி சீத்தாம்மா வழியாக நல்ல நட்பாக உறுவாகி இருப்பவர். என்னை சென்னையிலிருந்து அழைத்துச் சென்று கூடவே இருந்து எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து பல செய்திகளை அவ்வப்போது வழங்கிக் கொண்டும் இருப்பவர்.  நன்றி ப்ரகாஷ்.


final5.jpg

ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நான் செல்ல காரணமாக இருந்தவர். இவரது ஆக்கமும் ஊக்கமும் எனது இயற்கையான வேகத்தை மேலும் அதிகப் படுத்தும் தன்மை கொண்டது. இவரது துணையுடன் மேலும் பல பதிவுகள் இன்னமும் செய்வோம்.

சீதாம்மா - மீண்டும் தமிழகம் வரும் போது மீண்டும் இணைந்து சில காரியங்களை நாம் செய்ய வேண்டும். செய்வோம். உங்களுக்கு இறைவன் திடமான உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சுபா



 

2011/11/28 rajam <ra...@earthlink.net>
final1.jpg
final5.jpg
Mrajendran1.jpg
final2.jpg
final4.jpg
final3.jpg

Geetha Sambasivam

unread,
Dec 3, 2011, 6:34:09 AM12/3/11
to mint...@googlegroups.com
அருமையான நன்றி நவிலலும், அழகான அறிமுகமும்.  நன்றி சுபா. உங்களுக்கு உதவிய அனைவருக்கும் நாங்களும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2011/12/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலை பதிவுகள் வெளியீடுகளின் வழி எனது 2011 மார்ச் மாத தமிழக பயணத்தின் போது நான் பதிந்து வந்த தகவல்களை தயாரித்து தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்த்தில் இணைத்து வைத்துள்ளதோடு உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன். உங்களின் பின்னூட்டங்களும் கேள்விகளும் பதில்களும் ஊக்கமளிப்பவையாக இருந்தன. நமது வலைத்தளத்திலும் திருவண்ணாமலைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சில இடம்பெற இந்த முயற்சி உதவி உள்ளது.

இந்தப் பதிவின் தொடரை இத்துடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் இவ்வளவு தானா என நினைத்து விட வேண்டாம். எனது பதிவுகள் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து சில பதிவுகளையும் குறிப்புக்களை அவ்வப்போது நாம் இணைத்து வரலாம். 

எனது பயணத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதிக்குச் சென்று சில பதிவுகளை ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் திரு.உதயன், திரு.துரை திரு.ப்ரகாஷ் ஆகியோர் சென்று கேட்டு தகவல் பெற்று வந்துள்ளனர். அந்தத் தகவல்களையும் பதிய வேண்டும். அதுமட்டுமல்லாது மின் தமிழ் வாசகர்கள் நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செல்லும் வாய்ப்பு அமைந்தால் அங்கு நீங்கள் காணும் வரலாற்று விஷயங்களைப் பதிந்து வந்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். 

இப்பயணத்தின் போது என்னுடன் உடனிருந்து உதவிய நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் மறக்க முடியாது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குடும்பத்தினரின் இணைந்த பணி இது என்றாலும் எனக்கு மன நிறைவளிக்கும் வகையில் பயணத்திலும் உதவிய இவர்களை மீண்டும் நினைத்துப் பார்த்து நன்றி கூற விரும்புகிறேன்.



 
 

annamalai sugumaran

unread,
Dec 3, 2011, 11:21:30 AM12/3/11
to mint...@googlegroups.com
சுறுசுறுப்பு சுபாஷினியின் சுற்றுபபிரயாணத்துக்கு உறுதுணையாக இருந்து உதவிய நண்பர்கள் அனைவருக்க்கும் பாராட்டுக்கள்;
அன்புடன் 
சுகுமாரன் 



2011/12/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

It is loading more messages.
0 new messages