--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On 9/11/11, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> வணக்கம்.
>
> திருவண்ணாமலை மாவட்டத்தின் தகவல்கள் அடங்கிய ஒரு பகுதியினை இன்று நமது
> வலைப்பக்கத்தில் தொடங்குகின்றோம். இப்பகுதியில் படிப்படியாக இம்மாவட்டத்தின்
> சிறப்பினை வலியிறுத்தும் பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
> இம்முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து சில பயணங்களை ஏற்பாடு செய்து தானே
> பயணமும் செய்து பேட்டிகளையும் மேற்கொண்டு இம்முயற்சியில் உதவியவர் ஸ்ரீமதி
> சீதாலட்சுமி அவர்கள்.இப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி எங்கள் பயணத்திற்கும்
> உதவிய அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர் டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களுக்கு
> தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.
>
>
> *திருவண்ணாமலை மாவட்டம்*
> திருவண்ணாமலை<http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=529&Itemid=671>பகுதிக்குச்
> செல்க!
>
>
> திருவண்ணாமலை மாவட்ட விவரங்கள் பல அடங்கிய விரிவான இந்தப் பேட்டி கடந்த ஆண்டு
> தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பதிவாக்கப்பட்டது. இப்பேட்டியை பதிவு செய்தவர்
> ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். அவருக்கும் இப்பேட்டியில் உதவிய திரு.ப்ரகாஷ்
> சுகுமாரன், மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றி.
>
> தொடரும்...
>
> அன்புடன்
> சுபா
> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
http://kaviyinkural.blogspot.com
http://mazalaiootru.blogspot.com
http://kaviugi.blogspot.com/
http://crcmittapalli.blogspot.com/
கூத்தனூர் அப்பன்
..இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..
Leg and foot swelling during air travel is common and typically harmless. The most likely culprit is inactivity during a flight. Sitting with your feet on the floor for a long period causes blood to pool in your leg veins. The position of your legs when you are seated also increases pressure in your leg veins. This contributes to foot swelling by causing fluid to leave the blood and move into the surrounding soft tissues.
To relieve foot swelling during a flight:
Foot swelling isn't a serious problem if it lasts only a short time. But excessive swelling that persists for several hours after you resume activity may be due to a more serious condition, such as a blood clot in the leg (deep vein thrombosis) — especially if the swelling occurs in only one leg and is accompanied by leg pain. If you experience these signs and symptoms, seek prompt medical attention.
If you're at increased risk of blood clots — because you recently had major surgery or you take birth control pills, for example — consult your doctor before flying. He or she may recommend wearing compression stockings during your flight. In some cases, the doctor may prescribe a blood-thinning medication to be taken before departure.
--விமான பயணத்தின் போது கால் வீக்கம் வரலாம் அம்மா.உங்களுக்கு வந்தது அதுவா என தெரியவில்லை.
நண்பர்களே,கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
கூத்தனார் அப்பன்..இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..தவறான இணைப்பினை வழங்கியிருந்தேன்.. கீழுள்ள இணைப்பில் இப்பகுதிக்குச் செல்லலாம்.!இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!சுபா
நல்ல தகவல்கள்! நன்றி -- சீதாம்மா, சுபா, ப்ரகாஷ், புனிதவதி இளங்கோவன் ... எல்லாருக்கும்!சுபா, அடுத்த முறை இந்தியா போகும்போது ... ஒரு/பல நல்ல ஒலிபெருக்கி, பதிவுக் கருவிகளை எடுத்துச் செல்லுங்கள். நான் குறிப்பது ... வெளிநாடுகளில் பயன்படுத்தும் ... கழுத்திலோ / கழுத்துப் பட்டையிலோ மாட்டிக்கொள்ளும் ஒலிபெருக்கி (a type of collar microphone). அது இல்லாதது தமிழக ஒலிப்பதிவுகளுக்குப் பெரும் குறை.1995-இல், தமிழ் மாநாட்டின்போது, நான் வேண்டிய, எனக்குத் தேவையான, சுவரொளியில் கட்டுரையைப் பரப்பும் கருவி அமையவில்லை.
அண்மையில் திரு சுப அண்ணாமலை அவர்கள் பேச்சைப் பதிவு செய்ய முனைந்தபோது தேடினேன். ஒரு lousy microphone கூடக் கிடைக்கவிலை! ஆனால் ... ஊர் நெடுக எல்லாரும் செல் ஃபோன் பயனர்! என்னத்தைச் சொல்ல?Anyway, please do arrange for some hand-held and collar microphones ... the next time you go to தமிழகம்!அன்புடன்,ராஜம்பி. கு. எனக்கு இப்பொ தொலைபேசி வசதி சரியாக இல்லை. நான் ஊருக்குப் போயிருந்தப்போ இங்கே கொஞ்சம் கொழப்பம். எல்லாம் சரியானவுடன் சீதாம்மாவுடன் பேசுகிறேன், இடையில் ஒரு கொசுறுச் செய்தி: எனக்குக் கால் வீக்கம் முதன்முறையாகக் கண்டது 10 ஆண்டுகளுக்கும் முன் இந்தியா போனபோது (2001). அங்கே யாரும் அதைக் கண்டுக்கவில்லை, நான் வலியால் துடித்தபோதும். அமெரிக்கா வந்தவுடன் வீக்கம் ஓடிப்போச்சு. அதே போல ... இந்த முறையும் ... பன்னிக்குட்டி மாதிரி வீங்கத் தொடங்கிய பாதங்கள் முயல் குட்டிகள் போல் ஆயின. யாரும் ஒன்றும் செய்ய முடியலை. பிறகு அமெரிக்கா திரும்பியபோது ... ஹாங்காங் விமான நிலையத்தில் 4 மணிக்கூறு காத்திருந்தபோது காலில் வீக்கம் வடிவதை உணர்ந்தேன்! அதிசயமாக இருந்தது. ஆனாலும் ... காத்திருந்து மீண்டும் விமானம் ஏறி அமர்ந்து கொஞ்ச நேரம் கழித்துத்தான் மெதுவாகக் காலுறையை நீக்கிப் பார்த்தேன் -- நல்ல வியப்புக் காத்திருந்தது. வீக்கம் வடிந்திருந்தது. கலி திரும்பியபின் ... இன்றுவரை காலில் வீக்கம் திரும்பவில்லை (knock on wood!).நடக்கும் நிலத்தின் கோளாறோ ... காந்த திசையின் கோளாறோ ... எதுவோ ... புரியவில்லை! எல்லாம் கலிகாலம்! :-)On Sep 17, 2011, at 11:25 AM, Subashini Tremmel wrote:--நண்பர்களே,கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
கூத்தனார் அப்பன்..இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..தவறான இணைப்பினை வழங்கியிருந்தேன்.. கீழுள்ள இணைப்பில் இப்பகுதிக்குச் செல்லலாம்.!இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!சுபா"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Internal Server Error
The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request.
Please contact the server administrator, webm...@tamilheritage.org and inform them of the time the error occurred, and anything you might have done that may have caused the error.
More information about this error may be available in the server error log.
Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
திருவண்ணாமலை பதிவுகள் பகுதியில் இன்று மேலும் ஒரு அங்கம்..செங்கம் பகுதியில் வாழும் லம்பாடி இன மக்கள் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றேன். இன்றைய வெளியீட்டில் சிறு விளக்கமும், படங்களும் ஒரு விழியப் பதிவும் உள்ளது.
அன்புடன்சுபா
2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
லம்பாடி ஆதிக் குடிகள் பற்றி மேலும் சில ஒலிப்பதிவுகளும், விளக்கங்களும் தொடரும்..!அன்புடன்சுபா
***********************
அம்மே, சோட்டாணிக்கர பகவதி ! ரக்ஷிக்கணே -
தேவ்
On Sep 22, 10:41 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> //. அந்தப் பெண்களின் தாவணி முகத்தை மறைப்பதற்குப்போல; மார்பகத்தை மறைக்க
> இல்லை!//
>
> *பகவதி ப்ரஜ்ஞாபாரமிதா தேவி*
>
> http://4.bp.blogspot.com/_JfSgdhRZ4wQ/SqwR9mETqJI/AAAAAAAAAMc/QPuAq8R...
>
> http://greatmiddleway.files.wordpress.com/2011/03/copia-de-prajnapara...
2-ஆம் பகுதியையும் படித்தேன். நல்ல விளக்கங்கள்! நன்றி, குழுவினர் அனைவர்க்கும்.எனக்கு ஒரு சிறு ஊரல்! அதாவது ... இந்த லம்பாடி இனத்துப் பெண்கள் தாலி (கையில் அணிகிறார்களே, அது) அதற்கும் ... சங்க இலக்கியப் பாடல்களில் சொல்லப்படும் "தொடி"க்கும் தொடர்பு இருக்கலாமோ என்று. குறிப்பாக மூன்று பாடல்கள் என்னைப் பல ஆண்டுகளாக நெருடிக்கொண்டிருக்கின்றன: புறநானூறு 83-85 (நக்கண்ணையார் பாட்டு). இதில் 83-இல் வரும் "தொடி கழித்திடுதல்" (கவனிக்க: கழிந்திடுதல் இல்லை) என்பதைப் புரிந்துகொள்ள ... இந்த லம்பாடியினரின் பழக்கம் ஏதாவது சாவி தருமா?ஒரு கேள்வி, சுபா + குழுவினர்க்கு. அந்தத் தாலிக்கு அவர்கள் மொழியில் என்ன பெயர் சொல்லுகிறார்கள்?அன்புடன்,ராஜம்
அன்புடன்சுபா
> Sep 22, 10:41 pm, Vinodh Rajan
> *பகவதி ப்ரஜ்ஞாபாரமிதா
> தேவி*
> From what I could infer, all these Indian taboo's related to the
> female
> anatomy (& sexuality as a whole) seems to be recent - infact quite
> alien !
>
> ***********************
>
> அம்மே, சோட்டாணிக்கர
> பகவதி ! ரக்ஷிக்கணே -
>
> http://www.google.co.in/imgres?q=chottanikkara
> +bhagavathy&um=1&hl=en&client=firefox-a&sa=N&rls=org.mozilla:en-
> US:unofficial&biw=1445&bih=677&tbm=isch&tbnid=kJOY2AhA79ru0M:&imgrefur
> l=http://tourism.webindia123.com/tourism/pilgrimcenters/temples/
> chottanikkaradevi_temple/
> index.htm&docid=x1qBR8fiwvhCBM&w=165&h=194&ei=8YF7Tu3bIYjqrQfin5XaDw&z
> oom=1&iact=hc&vpx=612&vpy=211&dur=542&hovh=155&hovw=132&tx=90&ty=99&pa
> ge=1&tbnh=147&tbnw=131&start=0&ndsp=24&ved=1t:429,r:3,s:0
>
>
>
> தேவ்
>
கூகிலாண்டவருக்கு என்
மேல் கோபம்! பகவதி அம்மன்
ரைக்ஷ என்மேல் படத்
தடுக்கிறார்!
>
> On Sep 22, 10:41 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>> //. அந்தப் பெண்களின்
>> தாவணி முகத்தை
>> மறைப்பதற்குப்போல;
>> மார்பகத்தை மறைக்க
>> இல்லை!//
>>
>> *பகவதி ப்ரஜ்ஞாபாரமிதா
>> தேவி*
>>
>> http://4.bp.blogspot.com/_JfSgdhRZ4wQ/SqwR9mETqJI/AAAAAAAAAMc/
>> QPuAq8R...
>>
>> http://greatmiddleway.files.wordpress.com/2011/03/copia-de-
>> prajnapara...
>>
>> From what I could infer, all these Indian taboo's related to the
>> female
>> anatomy (& sexuality as a whole) seems to be recent - infact quite
>> alien !
>>
>> So called (neo) Indian Ethos projected sound more Victorian than
>> Indian !
>> :-)
>>
>> V
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
திருவண்ணாமலைப் பதிவுகள் தொகுப்பில் இன்று மேலும் ஒரு பதிவு.. (லம்பாடி ஆதிக்குடிகள் பகுதி நாளை தொடரும்)
கட்டுரை படித்தேன்; விழியம் பார்த்தேன், கேட்டேன். அந்தக் குரல் கொடுத்தவர் (பூங்குன்றனா?) அவர்களின் மனம் திறந்த போக்கு என்னைக் கவர்ந்தது -- அதாவது, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற முடிவோடு சொல்லாமல் ... சரியான முறையில் ஆராய்ச்சி செய்யும் தொல்லியல் ஆய்வாளர்கள் பார்த்து முடிவு சொல்ல வேண்டிய வேலை இது ... என்ற் சொல்கிறார்! பாராட்டுக்குரியது!
2-ஆம் பகுதியையும் படித்தேன். நல்ல விளக்கங்கள்! நன்றி, குழுவினர் அனைவர்க்கும்.
..
ஒரு கேள்வி, சுபா + குழுவினர்க்கு. அந்தத் தாலிக்கு அவர்கள் மொழியில் என்ன பெயர் சொல்லுகிறார்கள்?
திருவண்ணாமலைப் பதிவுகள் தொகுப்பில் இன்று மேலும் ஒரு பதிவு.. (லம்பாடி ஆதிக்குடிகள் பகுதி நாளை தொடரும்)
நாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள்ப்ரகாஷ் சுகுமாரன் - திருவண்ணாமலை
...
2011/9/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
லம்பாடி ஆதிக் குடிகள் - 2லம்பாடி இனப் பெண்கள் அணிந்திருக்கும் பாரம்பரிய ஆடை சிவப்பு வர்ணத்தில் அமைந்தது. மங்கள நிறமாக சிவப்பு நிறம் அமைந்திருப்பதால் இந்த வர்ணத்தில் இவர்களது சிறப்பான பாரம்பரிய ஆடை அமைவதை இப்பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆடை பாவாடை, ஜாக்கெட் அத்துடன் முக்காடாகப் பயன்படுத்தும் ஒரு தாவணி அத்துடன் வயிற்றுப் பகுதியை மறைக்கும் வகையில் அமைந்த ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு துணி என்று அமைந்துள்ளது.இந்த ஆடையின் பெயர்களை விளக்குமாறு இந்த மூதாட்டிகளைக் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் உடைகளைப் பற்றி நமக்கு விளக்கமளித்தனர். (ஒலிப்பதிவில் கேட்கலாம்)குறிப்பாகச் சில பெயர்கள்:
- குங்குட்டோ - முக்காடாக தலையில் சுற்றியிருக்கும் தாவணி. இந்தத் தாவணியில் சேர்க்கப்பட்டுள்ள மணிகளையும் ஜரிகைகளையும் இவர்கள் தாங்களே கைகளால் தைத்து தயாரிக்கின்றனர்.
சாட்டியா - இடுப்புப் பகுதியில் அணிந்துள்ள அலங்கரிக்கப்பட்ட துணியின் பெயர். காத்தொளி பேட்டியா - ஜாக்கெட் லேப்போ - பாவாடை பூரியா - மூக்குத்தி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என் தனிப்பட்ட கருத்து: எதற்கெடுத்தாலும் "தாய் தெய்வம்" "fertility" என்று போவது எனக்கு அவ்வளவாக ஒத்துவராது.கருத்துக் கொடுத்தவரே சொல்கிறார் ... இது "வேளாண்மை" செய்த இடம் இல்லை என்று. அப்பொ ... வேற வழியாகவும் நினைத்துப் பார்க்கலாமே -- எயினர் குலம் தங்கள் கருவிகளைத் தீட்டிக் கூர்மைப்படுத்திக்கொள்ள இந்தக் கற்கள் இடம் கொடுத்திருக்கலாமே? இந்தக் காலத்துச் "சாணைக்கல்"; சங்க காலத்து ... "சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்"? அல்லது வேறு ஏதாவது ஒன்று போல?ஏன் எதற்கெடுத்தாலும் ... தெளிவாகத் தெரியாவிட்டாலும் ... அங்கே ஒரு பெண் தெய்வத்தைப் பற்றிய கருத்தைக் கொண்டுவந்து அதற்கு என்று ஒரு குறியீடு ("தாய்" "அணங்கு" "பேய்" ...) என்று சொல்லவேண்டும்? //
மன்னிக்கவும்.
இப்பகுதி முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த பகுதி. திரு பூங்குன்றன் இங்கு குறிப்பிடுவது காடும் மலையும் நிறைந்த குன்று பகுதிகளை என கருதுகிறேன்.
பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்களால் மேய்ச்சல் நிலமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ராமநாதபுரம், டெல்டா விவசாயிகள், கரூர், கிருஷ்ணகிரி பகுதி மக்கள் பல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இங்கே கொண்டு வந்து, சுமார் மூன்று மாதங்கள் வரை தங்குகிறார்கள். பழைய வீடியோ பதிவு உள்ளது. பார்க்கவே அற்புதமான காட்சி. ஒரே சமயத்தில் பல வண்ணங்களில், பல ரகமான 5 அல்லது 10 ஆயிரம் மாடுகள் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக காடுகள், மலைகளையும், கிராமங்களையும் கடந்து செல்லும். பெரும்பாலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அதிகாலை நேரத்தில் ஓட்டி செல்வார்கள். பகல் நேரத்தில் மேய்ச்சல். இரவு நேரத்தில் ஓய்வு என பாதுகாப்பாக பயணிப்பார்கள். இப்போது மேய்ச்சலுக்கு முன் அனுமதி பெற டோக்கன் வாங்க வேண்டும். டோக்கன்களை கருப்பில் விற்றே லட்சாதிபதியான சிலர்.. என் நண்பர்கள்.
தவிர தாய் தெய்வம் என்பதை எந்த காலத்திலும் புறக்கணிக்க முடியாதது. தென் இந்திய கலாச்சாரம் தாய் தெய்வ வழிபாட்டை முதன்மை படுத்தியே இருந்தது. சில நூறாண்டுகளுக்கு முன்புதான் தந்தை ( ஆண் தெய்வ ) வழிபாடு வந்தது.
திரு பூங்குன்றன் தெரிவித்துள்ள கோ என்கிற கோவேந்தன் என்பதன் அடையாளமாக பொறிக்கப்படும் சின்னம் உண்மை என்பதை அறிய வேண்டும் எனில், இணைப்பில் உள்ள விழியத்தில் நடுகல் ஒன்று அச்சு எடுக்கப்பட்ட காட்சி வரும். அதில் உள்ள வில் வீரனின் தலைக்கு மேல் பூ அலங்காரம் போன்ற ஒரு சின்னம் இருக்கும் அதுவே கோ என்பதன் அடையாள சின்னம். அதை போன்றே ஒரு அடையாளம் பாறையில் சில இடங்களில் வரிகளாக வரையப்பட்டு இருப்பதை காணலாம்.
பெண் தெய்வ அடையாளம் என அவர் குறிப்பிடுவது முக்கோணத்தை தலைகீழாக வரைந்து இடையில் ஒரு கோடு இருப்பது. அந்த அடையாளத்தையும் புகைப்படத்தில் காணலாம்.
தவிர இந்த பாறையை ஒத்த இன்னும் ப்ரம்மாண்டமாக ஏராளமான பாறைகள் அந்த நாகர்கல்லி குன்றில் இருக்கும்போது இந்த ஒரு பாறையில் மட்டும் தங்கள் ஆயுதங்களை மொத்த எயினர்களும் வந்து தீட்ட வேண்டிய அவசியம் என்ன ?
இன்னும் ஒரு மேலதிக தகவல், கல்பூ கேள்விப்பட்டதுண்டா.. ??
சித்த மருத்துவத்தில் உள்ள ரகசியங்களில் ஒன்று. எந்தவித சித்த மூலிகை மருந்தாக இருந்தாலும் அடிப்படை கலவை என ஒன்று உள்ளது. கோவில்களில் கொளுத்தும் கற்பூரம் போன்ற அந்த கலவையில் சேர்க்கப்படும் ஐந்து அடிப்படைகளில் ஒன்று கல்பூ. அறிய மூலிகை பொருளான கல்பூ நான்கைந்து இடங்களில் மட்டும் கிடைக்கிறது. கல்பூ கிடைக்கும் இடம் சித்த மருத்துவர்களால் அதி ரகசியமாக கருதி மறைக்கப்படும். இப்போது பாதரசம் என குறிப்பிடப்படும் மெர்குரியின் தன்மை கொண்ட கல்பூ விலை உயர்ந்த ஒன்று என்பதுடம், அறிய, எளிதில் விளையாத பொருள். குறிப்பிட்ட ஒருவகை பாறைகளுக்கு இடையே ஏற்படும் விரிசல்களில் பூக்கும் கல்பூ. இதை மலை சாம்பிராணி என பொதுபெயரில் சிலர் குறிப்பிடுவர். சுத்தம் செய்யப்படாத கல்பூ நூறு கிராம் விலை நான்காயிரம் என கேள்வி.
சித்திர எழுத்துக்கள் அடங்கிய பாறைக்கு எதிர்புறம் நாகர்கல்லி குன்றின் மறுபுறம் கடுமையான முள் மரங்களையும், உடலை கிழிக்கும் பாறைகளையும், பள்ளங்களையும் தாண்டி சென்றால் இன்றைக்கு உள்ள ஓட்டுமொத்த சித்த மருத்துவர்களில் 60 சதவீதம் பேருக்கு வாழ்வு அளித்துக்கொண்டு இருக்கும் கல்பூ குன்று உள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருவண்ணாமலைப் பதிவுகளில் மேலும் ஒரு தொடர் இன்று உங்களுக்காக..!வந்தவாசி
ஹெல்சிங்கியில் அசோகன் எனப்படும் அஸ்கோ பர்ப்போலா அவர்களிடம் பேசிய போது
குஜராத் இன மக்கள் சங்கத்திற்கு முன்பே தமிழகத்தில் வந்து குடியேறிய
வரலாறு சொன்னார். கண்ணன், பலராமன் கோட்டங்கள் பற்றி சங்கம் விரிவாகப்
பேசுகிறது. வேளிர் குலம் என்பது ஈரானிலிருந்து குஜராத் வந்து பின்
அங்கிருந்து தமிழகம் வந்ததாக அசோகன் சொல்கிறார். எனவே தாங்கள் சுட்டும்
குஜராத் வழகங்கள் சங்கத்தில் இருப்பதில் ஆச்சர்யமில்லை. இந்த
லம்பாடிகளின் வரவு சமீபத்தியதாக இருக்க வேண்டும். அவர்கள் தமிழ் பலுப்பல்
வடநாட்டுப்பலுப்பல் என்பது தெளிவாகத்தெரிகிறது. யார் வீட்டில் தாய்மொழி
வேற்று மொழியாக இருக்கிறதோ அவர்கள் தமிழ்ப் பலுப்பல் வித்தியாசமாக
இருக்கும். எளிதாகக் கண்டுவிடலாம். எப்படியும் லம்பாடிகள் வந்தது,
வாழ்வது, தங்கள் கலாச்சாரத்தை இன்றளவும் தக்க வைத்திருப்பது, ‘ஆவ்சம்
தமிழ்நாடு!’ என்று விளிக்க வைக்கிறது!
சீதம்மாவின் ஆளுமை, அவர்களின் கேள்விகள், தலைமை, துரை, உதயன்,
செல்வகுமார் இவர்களின் பரிவாரம், சுபாவின் சுறு, சுறுப்பு இப்பயணத்தை
த.ம.அ யின் முக்கிய ஆவணப்பதிப்பாக நமக்கு அளிக்கிறது.
கூத்தனூர் சாத்தன் சிலையைப் பார்த்தால் மிகப்பழமையான சிந்து சமவெளி சிற்ப
வடிவம் இருப்பது போல் படுகிறது. தலையென்ற ஒன்று தனியாக இருக்க வேண்டிய
அவசியமில்லை என்றுதோன்றுகிறது. வேற்று கிரக ஆய்வாளர்கள் இம்மாதிரி
வடிவங்கள் பற்றிப் பேசுகின்றனர்.
ஆவ்சம் தமிழ்நாடு! உள்ளே போனால் நமக்குத்தெரியாத பல தமிழ்நாடுகள் இருக்கும் போல....
லம்பாடிகளின் வாழ்வு முன்னேற ஏதாவது அமைப்புகள் உள்ளனவா. பாதுகாப்பற்ற
அவர்கள் மொழியைக் காக்கும் முயற்சிகள் ஏதேனும் உள்ளனவா?
ஆவ்சம் தமிழ்நாடு!
நா.கண்ணன்
2011/9/23 rajam <ra...@earthlink.net>:
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே.
பெரியாழ்வார் திருமொழியாக வரும் இப்பாசுரத்தில் வழக்கொழிந்து போன ஒரு
முறை பற்றி ஆழ்வார் பேசுகிறார். அதுதான் லம்பாடிகள் வாழ்வில் சிறப்பாக
அமையும் ‘ஹோலிப் பண்டிகை’ என்பது. கண்ணன் திருக்கோஷ்டியூரில்
பிறக்கிறான். உடனே மக்கள் எப்படி அதைக் கொண்டாடுகிறார்களாம்? எண்ணெய்,
சுண்ணம் எதிரெதிர் தூவி! கொண்டாடுகிறார்களாம். வண்ணச் சுண்ணம் தூவுவது
‘ஹோலி’ப் பண்டிகை! அது ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்திருக்கிறது.
குஜராத்திலிருந்து இங்கு வந்ததற்கு இதற்கு மேல் ஆதாரம் என்ன வேண்டும்?
வேளிர் குடியினர் குஜராத்திகள். நமது கோனார் இன மக்களுக்கும்,
லம்பாடிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்.
ஒன்று 3000/4000 வருஷத்திற்கு முந்தி வந்த குடி, மற்றது சமீபத்தில்
குடிபெயர்ந்தது!
அவ்சம் தமிழ்நாடு!
நா.கண்ணன்
2011/10/9 N. Kannan <navan...@gmail.com>:
பதிவு முழுமையும் கேட்டேன், சுபா! நெஞ்சை மிகவும் தொட்ட உரையாடல்! யாருக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.'எப்படி இந்த மாதிரிப் பழம்பொருளைக் காத்துவைப்பது' என்று நாம் ஒவ்வொருவரும் உன்னிப்போடு செயல்படலாம் என்று நினைப்பதைத் தவிர வேறென்னவும் சொல்லமுடியவில்லை.
திருவண்ணாமலை பதிவுகள் தொடர்கின்றன...
புரிசை கிராமம்
தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை!
- வீராசாமி தம்பிரார்
- ராகவத் தமிபிரார்
- கிருஷ்ணத் தம்பிரார்
- நடேசத் தம்பிரார்
அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள்.
..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பேட்டியையும் மேலும் பல படங்களையும் காண இங்கே செல்க!அன்புடன்சுபா
சுபாஷினிமனசெல்லாம் குளிர வைத்த பதிவு.கண்ணப்ப தம்பிரானின் மகன்காசி, பேரன் பழனி எல்லோரும் தெரியும். புரிசைக்கு போக ஆசிரியர் ஏர்பாடு செய்த அன்றுகணவரின் போன் வராததால், ஞான் அன்று முழுவதும் எங்குமே போக இயலாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அவர்கள்எல்லோரும் போனபிறகு கணவரின் போன் வந்தது.அன்று மிஸ் பண்னினது எண்டெ துரதிருஷ்டம்கண்ணப்ப தம்பிரானைப்பற்றி பென்னேஸ்வரனும் நிறைய பதிவு செய்துள்ளார்கமலம்Sent: Sunday, 6 November 2011 6:38 PM
From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
Subject: [MinTamil] Re: திருவண்ணாமலை பதிவுகள்
புரிசையில் எங்கள் பயணம் மேலும் தொடர்கின்றது...புரிசை கண்ணப்ப தம்பிரான்புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே இவரது பயிற்சிப் பள்ளி
ரிச்சர்ட் ஃப்ராஸ்கா (Richard Frasca) மிக அழகாகத் தமிழ் பேசுபவர். என் கருத்துப்படி, பிறமொழி accent தடுக்காமல் பேசும் அயல்நாட்டவர் அவர். அவரே மிக நன்றாகத் தெருக்கூத்துப் பகுதிகளை ஆடிக்காட்டுவார்.இவர்போன்றவர்களுக்கெல்லாம் உலக அரங்கில் இடம் கிடைக்காதது ஏன்? அரசியல் புதுமையே! :-) :-) :-)
யுட்யூபில் சில தெருக்கூத்து, திரௌபதி அம்மன் ஆட்டம் இருக்குone from malaysiaவிஜயராகவன்
From: செல்வன்Sent: Monday, November 14, 2011 12:45 AMSubject: Re: [MinTamil] Re: திருவண்ணாமலை பதிவுகள்
2011/11/13 rajam <ra...@earthlink.net>
ரிச்சர்ட் ஃப்ராஸ்கா (Richard Frasca) மிக அழகாகத் தமிழ் பேசுபவர். என் கருத்துப்படி, பிறமொழி accent தடுக்காமல் பேசும் அயல்நாட்டவர் அவர். அவரே மிக நன்றாகத் தெருக்கூத்துப் பகுதிகளை ஆடிக்காட்டுவார்.இவர்போன்றவர்களுக்கெல்லாம் உலக அரங்கில் இடம் கிடைக்காதது ஏன்? அரசியல் புதுமையே! :-) :-) :-)
தமிழ்நாட்டிலேயே தெருகூத்துக்கு அங்கீகாரம் இல்லை. அப்புறம் உலக அளவில் எப்படி கிடைக்கும்?
இதை எல்லாம் குறைந்தபட்சம் விடியோ பதிவாகவாவது இணையத்தில் ஏற்ரவேண்டும்.வருங்கால தலைமுறைக்கு இப்படி ஒரு விஷயம் இருந்தது என்பதாவது தெரியவேண்டும்.
--
செல்வன்
"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
யுட்யூபில் சில தெருக்கூத்து, திரௌபதி அம்மன் ஆட்டம் இருக்கு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருவண்ணாமலை திருக்கோயில்கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம்கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் ஒரு முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம்.இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் உப்பு கொட்டி வைத்திருப்பதைக் காணலாம். முகத்தில் மரு உண்டாகும் போது பக்தர்கள் இம்மரு நீங்க வேண்டும் எனப் ப்ரார்த்தனை செய்து கொண்டு இங்கே சுப்ரமணிய சாமி கோயிலில் உப்பு போடுவது ஐதீகமாக இருக்கின்றது. தங்களின் வேண்டு்தலுக்கு இறைவன் அருள் பாலித்து உப்பு உதிர்வது போல மரு உதிர்வதாக மக்கள் நம்பிக்கை அமைந்திருக்கின்றது.அருணகிரிநாதர் வழிபட்டதோர் இளையனார் குடிகொண்டிருக்கும் ஆலயம் இது.ஒரு சிறு கோயிலுக்குள்லேயே அத்தனை சிற்பங்கள். நான் கேமராவில் பதிவு செய்தவை ஒரு சில மட்டுமே. பெரும்பாலான சிற்பங்கள் வைஷ்ணவ வடிவங்களைக் கொண்டமையாக உள்ளன.விஷ்ணு சக்கரம் பார்வதி தேவியின் முகத்திலிருந்து உதிப்பது போல அமைக்கப்பட்ட ஒரு வடிவம். மிக அரிதான ஒரு கலைச் சிற்பம்.இந்தச் சிற்பக் கலைக்கூடத்தின் சில சிற்பங்களைக் காண இங்கே செல்க!அன்புடன்சுபா
திருவண்ணாமலை திருக்கோயில்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருவண்ணாமலை திருக்கோயில்
கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம்கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் ஒரு முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம்.
அந்தக் கண்ணன்-யசோதை சிற்பம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சரியான முறையில் அந்தக் குழந்தைக்குத் தோப்புக்கரணம் போடத் தெரியவில்லை என்று சொல்வேன்!
From: rajam <ra...@earthlink.net>Date: November 20, 2011 10:45:08 AM PSTCc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
அந்தக் கண்ணன்-யசோதை சிற்பம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சரியான முறையில் அந்தக் குழந்தைக்குத் தோப்புக்கரணம் போடத் தெரியவில்லை என்று சொல்வேன்!
இவையெல்லாம் புராணங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள்.
கண்ணனின் இராசலீலை என்றால், சிவனின் தாருகா வனத்து ரிஷி பத்னிகளைக்
காமுறச் செய்தல். இப்படி இந்து மதம் காமத்துப்பாலை தன்னகத்தே கொண்டு
வளர்ந்திருக்கிறது (தத்துவார்த்தமாக இவைகளுக்கு வேறு அர்த்தம்
இருந்தாலும்).
இந்தப்படங்களெல்லாம் ஏனோ, தானோ என்று வரைந்தவை. ஏகபாத மூர்த்தி,
கஜேந்திரபாதர் போன்ற சிற்பங்களை அழகுறக் காண மதுரை மீனாக்ஷி கோயிலுக்கு
வாருங்கள். ஸ்வாமி சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் காணலாம்.
க.>
2011/11/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
> ராயர் மண்டபம்
> சிவகங்கை தீர்த்தக் குளத்தின் அருகில் அருணகிரிநாதருக்கு முருகன் காட்சியளித்த சன்னிதிக்குப் பின்னே இந்த ராயர் மண்டபம் அமைந்துள்ளது. சிறு மண்டபம். இதில் மேற்சுவரில் சிவபெருமானின் பல்வேறு உருவங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. சிவனுக்கு இத்தனை வடிவங்களா என நம்மை வியக்க வைக்கும் அழகிய ஓவியங்கள் இவை.
>
>
> படங்களைக் காண இங்கே செல்க!
>
> அன்புடன்
> சுபா
>
> 2011/11/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>>
>> அருணகிரிநாதர்
>> திருமதி.கீதா சாம்பசிவம்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
திருமதி.கீதா சாம்பசிவம்
சுபா:
இவையெல்லாம் புராணங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள்.
விஷ்ணு சக்கரம் பார்வதி தேவியின் முகத்திலிருந்து உதிப்பது போல அமைக்கப்பட்ட ஒரு வடிவம். மிக அரிதான ஒரு கலைச் சிற்பம்.இந்தச் சிற்பக் கலைக்கூடத்தின் சில சிற்பங்களைக் காண இங்கே செல்க!அன்புடன்சுபா
--
திருமதி.கீதா,அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் என்ன ? எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர் ?
சுபா
திருவண்ணாமலை பதிவுகள் வெளியீடுகளின் வழி எனது 2011 மார்ச் மாத தமிழக பயணத்தின் போது நான் பதிந்து வந்த தகவல்களை தயாரித்து தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்த்தில் இணைத்து வைத்துள்ளதோடு உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன். உங்களின் பின்னூட்டங்களும் கேள்விகளும் பதில்களும் ஊக்கமளிப்பவையாக இருந்தன. நமது வலைத்தளத்திலும் திருவண்ணாமலைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சில இடம்பெற இந்த முயற்சி உதவி உள்ளது.இந்தப் பதிவின் தொடரை இத்துடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் இவ்வளவு தானா என நினைத்து விட வேண்டாம். எனது பதிவுகள் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து சில பதிவுகளையும் குறிப்புக்களை அவ்வப்போது நாம் இணைத்து வரலாம்.எனது பயணத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதிக்குச் சென்று சில பதிவுகளை ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் திரு.உதயன், திரு.துரை திரு.ப்ரகாஷ் ஆகியோர் சென்று கேட்டு தகவல் பெற்று வந்துள்ளனர். அந்தத் தகவல்களையும் பதிய வேண்டும். அதுமட்டுமல்லாது மின் தமிழ் வாசகர்கள் நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செல்லும் வாய்ப்பு அமைந்தால் அங்கு நீங்கள் காணும் வரலாற்று விஷயங்களைப் பதிந்து வந்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்பயணத்தின் போது என்னுடன் உடனிருந்து உதவிய நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் மறக்க முடியாது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குடும்பத்தினரின் இணைந்த பணி இது என்றாலும் எனக்கு மன நிறைவளிக்கும் வகையில் பயணத்திலும் உதவிய இவர்களை மீண்டும் நினைத்துப் பார்த்து நன்றி கூற விரும்புகிறேன்.