தமிழ் மரபு என்பது பரந்து, விரிந்து ஆழ்ந்து கிடக்கிறது. இதில்
மிகப்பழமையான மரபுகள் இன்றும் வாழ்வதுண்டு, சில மறக்கப்படுவதுமுண்டு.
அப்படி மறக்கப்பட்ட மரபுகளாக நாம் பௌத்தம், சமணம் இரண்டையும் காண்கிறோம்.
இது பற்றிய அக்கறை சிறிதேனும் இருப்பது நல்லது. ஏனெனில் இனிமேல் பௌத்தம்
என்பது வீறுகொண்டு எழுந்து சநாதன தர்மத்தை அழித்துவிடப்போவதில்லை.
திருஞானசம்பந்தர் மேற்கொண்ட தீவிர சமண வெறுப்பிற்கும் இப்போது
அவசியமில்லை. 21ம் நூற்றாண்டு இந்தியா நீண்ட பயணத்திற்குப் பின் ஒரு
முதிர்ந்த, சகிப்புத்தன்மை கொண்ட இந்தியாவாக உருவாகியுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது இன்று தாரக மந்திரமாக உள்ளது.
மேலும் நன்கு யோசித்துப் பார்த்தால் சித்தார்த்தன் ஒரு இந்து முனி. அவன்
கண்ட கொள்கைகள் பின் புத்த மதமாக மாறுகிறது. அவன் ஒரு நல்ல இந்துவாகவே
வாழ்ந்து மறைந்திருப்பான். இதே போல்தான் மகாவீரர் போன்ற
பெரியவர்களுக்கும். வைதீக எதிர்ப்பாளன் என்பதால் அவன் இந்து இல்லை என்று
கொள்வதற்கில்லை. பார்ப்பனீயத்தை வேறேடு பிடுங்குவேன் என்று கங்கணம்
கட்டிய இராமசாமி நாயக்கர் கடைசிவரை தன் இந்து அடையாளத்தைக் கைவிடவில்லை.
தன் அழகான இராமசாமி என்ற பெயரையும் மாற்றிக்கொள்ளவில்லை. அவரின் பிரதான
இவான்சலிஸ்ட்டான பாரதிதாசன் கூட பாரதி மேல் கொண்ட காதலால் பாரதியை `ஐயர்`
என்று விழிப்பதிலும், பாரதியின் மனைவி காலில் விழுந்து வணங்குவதிலும்
தயங்கவில்லை. இவையெல்லாம் ஒருவன் தமிழ் இந்து என்பதற்கான அடையாளங்கள்.
அடிப்படையாக இவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்தார்களே தவிர மரபை அழிக்க
வேண்டுமென்று சொல்லவில்லை. பெரியாரின் வாழ்வைக் கூர்ந்து கவனித்தால் இது
புரியும் (பின்னால் வந்தவர்கள் அதை இனவாதக்கருதுகோளாக மாற்றியது
காலத்தின் கொடுமை).
மேலும் 21ம் நூற்றாண்டு உந்து சக்தியாக வேலியற்ற உலகம், பெண்கள்
விழிப்புணர்வு, ஒடுக்கப்பட்டோர் விழிப்பு போன்றவை முன் நிற்கின்றன.
இணையம் வெகுவாக நமது கால, இடவெளிகளைக் குறைத்துவிட்டது. இந்நிலையில்
அருதப் பழசான இனவாதம் பேசுவதோ, தூய்மைவாதம் பேசுவதோ காலமுரணாக அமையும்.
இந்தியாவின் கொடை கிழக்காசியா முழுவதும் ஓங்கி நிற்கிறது. முன்பு நாம்
`குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தோம்`. இப்போது அப்படி
இல்லை. பல நாடுகளுக்கும் போகும் வாய்ப்புள்ளது. இணையம் நம் வீட்டிற்கு
உலகைத் தினம் அழைத்துவருகிறது. இந்நிலையில் நமது வேற்றுமைகளைக்
கொஞ்சமேனும் மறந்து நமது `பொதுப் பாரம்பரியம்` பற்றி அக்கறை கொள்ள
வேண்டிய அவசியம் தோன்றுகிறது.
அறிவியல் முதிர்ந்துள்ள 21ம் நூற்றாண்டில் பல்வேறு இனத்தவரும்
அறிவியலுக்கு இணக்கமான கருத்துக்கள் பௌத்த சமயத்தில் மட்டுமே உள்ளன என்று
கருதுகின்றனர். நான் அறிந்தவரை எத்தனையோ வெள்ளையர் பௌத்தமதத்தைத்
தழுவிவிட்டனர். இப்பெரும் மதம் தமிழகத்தில் கோலோட்சிய காலத்தை நாம் ஏன்
வெறுப்புடன் ஒதுக்க வேண்டும்? நம் மூதாதையர் செய்திருக்கக்
காரணமிருக்கலாம். இல்லை சமகாலத்தில் பௌத்த-சிங்கள இனவாதம் நம் வெற்றுப்பை
வளர்க்கலாம். ஆயினும் இனவாதத்தை நல்லறிவு கொண்டே விலக்க வேண்டும். இருள்
இருக்கும் இடத்தில் ஒளி பாய்ச்ச வேண்டும்.
நான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்றிருந்த போது இஸ்கான் இயக்கத்தினர்
ஒரு பெரிய மானியம் கொடுத்து வைணவத்துறையொன்றை அங்கு நிருவி இருந்தனர்.
அதே போல் இந்திய ஜெயின் பிரிவினர் சமணக்கருத்துக்கள் உலகறியும் வண்ணம்
செய்ய அங்கு இதற்கென துறை அமைத்திருந்தனர். ஆனால், இந்த வட இந்திய
ஜெயின்களுக்கு செழுமையான ஒரு சமண காலம் தமிழகத்தில் இருந்தது என்பது
தெரியவில்லை. நான் சொல்லச் சொல்ல ஆச்சர்யத்துடன் கேட்டனர்.
தமிழகத்தில் மட்டும்தான் இவ்விரு அவைதீக சமயங்களின் சுவடுகள் ஏறக்குறைய
முற்றும் அழிக்கப்பட்டுள்ள நிலை காண்கிறோம். என்னதான் நாத்திகம்
பேசினாலும் வைதீக மார்க்கத்தில் ஆழமாகக்கால் ஊன்றிய மாநிலமாக தமிழகமே
இந்தியாவில் தனித்து நிற்கிறது!!
மின்தமிழில் தற்சமயம், விநோத்ராஜன் பௌத்தம் பற்றிப் பேசுகிறார்.
பானுகுமார் சமணம் பற்றிப் பேசுகிறார். இவர்கள் இருவரும் உண்மையில் இந்து
சகோதரர்களே. அவர்களுக்கு ஒரு மரபு அழிவது கண்ணில் படுகிறது,
நமக்குப்படவில்லை. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் பெயர் கொண்ட நாம் இவ்விரு
சமயங்கள் பற்றிய இலக்கிய, சரித்திர, சமயக் கோட்பாடுகளை, சேதிகளை அறிந்து
கொள்ளுதல் நலம்.
மிகமுக்கிய பொருளாதார நொக்கம் ஒன்றும் என் வேண்டுகோளின் பின்னால் உள்ளது.
21ம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்று நம்பப்படுகிறது. நான் அமெரிக்கா,
ஐரோப்பாவை விட்டு ஆசியாவில் இருப்பது இவ்வளர்ச்சியில் பங்களிக்கவே. அதில்
எனக்கு ஆத்ம திருப்தியுண்டு. இந்த மறக்கப்பட்ட ஆசியா இன்று வீறுகொண்டு
எழுகிறது. நமது பண்டைய உறவுகளை புதுப்பிக்க நம் பண்டைய மரபுகள் பற்றி
அக்கறை கொள்ளுதல் அவசியம். நம் ஒவ்வொருவருள்ளும் ஒரு புத்தன், மகாவீரன்
ஒளிந்து கொண்டுதான் வாழ்கிறான். ஏனெனில், பௌத்தத்தின் நற்பண்புகள் பல
வைணவத்தால் உட்செறிக்கப்பட்டுள்ளன. இதை ஏ.கே.இராமானுஜன் தமது ஆழ்வார்கள்
பற்றிய நூலில் குறிப்பிடுவார். அதே போல் 63 நாயன்மார்களை உருவாக்கிய
சைவம் சமணத்தின் பல கூறுகளைத் தன்னுள் இன்றும் வைத்துக் கொண்டுள்ளது. நம்
இரத்தத்தில் ஆப்பிரிக்க இரத்தமும் ஓடுகிறது என்று சொல்வதால் நம்
இரத்தத்தை சுத்தம் செய்ய முடியுமோ? (இது இனவாதிகளுக்கான பேச்சு). எனவே
ஜோசப் கேம்பல் சொல்வது போல் புதிய ஆக்கம் என்பது இந்தியாவில் முன்பிருந்த
மரபுகளை உள்வாங்கிக்கொண்டு, உட்செரித்தே வளர்ந்திருக்கின்றன என்று கொள்ள
வேண்டும். புதுக்கவிதை மரபுக்கவிதையின் வேரில் தோன்றி நிற்பது போல.
21ம் நூற்றாண்டுத் தமிழன் பல மரபுகளின் தோளில் நின்று இன்று உலகைக்
காண்கிறான். நம்மைத் தாங்கும் தோள் பற்றிய அக்கறை நமக்கு அவசியம்
வேண்டும்.
அன்புடன்,
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறக்கொடைமூலம் நிறுவப்பட்ட
Department of Vaishnavism
Department of Jainology
Department of Christian Studies
போன்ற துறைகள் இப்பல்கலையின் 125ஆம் ஆண்டு தொடங்கியதன் நினைவாக நிறுவப்பட்டு இயங்கிவருகின்றன
இவை செம்மொழித் துறைகளான சமஸ்கிரிதம் அறபிக் பெர்சியன் மற்றும் செம்மொழி அல்லாத தமிழ் (இரண்டு பேராசிரியர்களின் குடுமிபிடிச் சண்டையால் இலக்கியம் மற்றும் மொழித்துறையானது) ஹிந்தி, ஃப்ரெஞ்ச், ஜெர்மனி, ஜப்பானிய மொழித்துறைகளில் இருந்து வேறுபட்டது.
இவை எல்லாம் இல்லாத காலத்தில் தனிகரில்லாத உயர்வுடன் விளங்கிய துறைகள் தமிழ் (மு.வ), சமஸ்கிரிதம் (டாக்டர் வே.ராகவன்) தத்துவ இயல் (டாக்டர்.டி.எம்.பி.மஹாதேவன்)
டாக்டர் டி.எம்.பி அத்வைத தத்துவத்தில் உலகம் போற்றிய பேராசிரியர். அவர் காலத்தில் நான் ஆராய்ச்சி மாணவனாக இருந்த காலத்தில் அவர் துறையில் பல புத்த பிக்குகள் மாணவர்களாக வந்து படித்தனர். அவர்கள் எங்களுடன் இருந்தபோது தாய்லாந்தில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை புத்த பிக்குவாக இருப்பதும் எப்போது வேண்டுமானாலும் இறக்க இருக்கும் கடும் மரணதண்டனைக் கைதிகளுக்கு அணிவிக்கும் காவி உடையை அணிந்து இவ்வுலகை விட்டு மரணமடைந்தவன் என்ற பிக்குவின் நிலையை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்று சொல்லுவார்கள். அதுபோன்றே சில மாணவகள் காவியைக்களைந்து பேண்ட் ஸர்ட்டுடன் மறுநாள் வகுப்புக்கும் வந்ததுண்டு
டி.எம்.பி பிறப்பால் ஒரு ஆசாரி பரமாச்சாரியார் காஞ்சி பெரியவர் அவரைப் பெரிதும் மதித்து அவருடன் அத்வைதம் பேசுவதுண்டு. அக்கால்த்தில் ஒரு ஐரோப்பியப் பெண் அவரிடம் மாணவராக சேர்ந்து அத்வைதம் கற்று காஞ்சிப் பெரியவரின் ஆசிபெற்று மற்ற மாணவர்களைவிடத் தெளிவாக அத்வைதம் பேசுவதுண்டு
இன்றைக்கு விட்டாலும் கூடத் தானே பேருந்து ஏறி காஞ்சி செல்லும் அளவு காஞ்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண்மணி இன்றைய மாண்புமிகு ஸ்பெயின் அரசியார்
தன்னுடைய பேரிளம் வயதில் வைணவத்தில் முனைவர் பட்டப் பெற்ற மற்றொரு பெண்மணி சரோஜினி வரதப்பன்
இங்கே பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. பார்ப்பவர் இல்லை அப்படியே பார்த்தாலும் பார்வை சரியில்லை
நாகராசன்
-------Original Message------- |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil |
|
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்
ஸித்தார்த்தர், வர்தமாநர் இவர்களை ஹிந்து, பௌத்தம், ஜைநம் என்னும்
அளவுகோல்களுடன் தனித்தனியே மதிப்பிடுமுன் பொதுவாக அக்கால அரசகுலம்
பெற்றிருந்த முதிர்ச்சியையும், உயர்ந்த தகுதியையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். துறவு மனப்பான்மை அவர்களிடம் இயல்பாக அமைந்திருந்தது.சுகர்
அரசரான ஜநகரை நாடினார். இராமபிரான் ‘நான் முனிவர்களுக்கு நிகரானவன்;
அரசபோகக் கவர்ச்சியால் சற்றும் ஈர்க்கப்படாதவன்’ என்று சற்றுப்
பெருமிதத்தோடு கூறுவதையும் காண்கிறோம். பாரத இதிஹாஸத்திலிருந்து இதற்கான
பல எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும். பீஷ்மர் அணிமணிகளுடன்
மாளிகையில் வாழ்ந்தாலும் ஒட்டுதல் இல்லாமல் வாழ்ந்தவர். இளங்கோவடிகள் வரை
அரச குலத்தோரிடம் இப்போக்கைக் காணமுடிகிறது. பல மன்னர்கள் புறத்துறவை
மேற்கொள்ளாவிட்டாலும் அகத்துறவோடு அரசுகட்டிலில் இருந்தனர். போக வாழ்க்கை
வாழ்ந்திருந்தால் வடக்கிருத்தல் அத்தனை எளிதாக இருந்திராது.
ப்ரம்ம வித்யை தொடர்ந்து அரசகுலத்தில் நிலை கொண்டதாக இருந்தது என்றும்
அனுமானம் செய்துகொள்ளலாம். இக்கருத்தை உறுதி செய்யும் கண்ணன் ‘ராஜ
வித்யா’ என்றே கீதையில் பெயர் சூட்டியுள்ளான்
தேவ்
> 21ம் நூற்றாண்டு...
>
> read more »
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
The feet of Abidhaba: At the popular level, the practical teachings of the Pure Land became widespread and continued to be influential. Its popularity among lay believers prompted various artistic projects, and a significant number of the extant Goryeo Buddhist paintings are of figures celebrated in Pure Land doctrines.
அறவாழி அந்தணன் திருமால் என்று நிரூபிப்பது. பின் பௌத்தம் பேசும் Pure Land doctrines என்பதை திருநாடு ஏள்தல் என்று வரையறுப்பது என்பதையெல்லாம் நம்மாழ்வார் தீர்க்கமாகச் செய்து வைத்து ஸ்ரீ சம்பிரதாயம் நிலைக்க வழிவகுக்கிறார்.
அடுத்து, Bodhisattvas are beings who have received an assurance of future enlightenment, and they have taken a vow to attain Buddhahood and save all sentient beings. Numerous bodhisattvas are seen as the embodiment of the Buddhist virtue of compassion and have become the subject of ardent devotion in the Mahayana Buddhist tradition. எப்போதும் அபிதாபாவுடன் எட்டு போதிசத்வர்கள் இருப்பர்.
இந்த எண்மர் வேறு யாருமில்லை. வள்ளுவர் சொல்லும் எண் குணம்தான் அது!
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
அடுத்து, The majority of Goryeo bodhisattva paintings are of Avalokiteshvara and Kshitigarbha. Avalokiteshvara is most frequently portrayed in the Water-Moon representation. Despite some variations, the bodhisattva is most often presented as seated on a rocky outcrop, gazing towards the bottom left corner of the painting, where the boy pilgrim Sudhana usually appears. Some of the common iconographical features include bamboo stalks and a kundika bottle. (இது குறித்து வினோத் சமீபத்தில் எழுதியிருந்தார்)
என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது 1385-ல் அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் காட்சியில் இருந்தமை. ஜெர்மனின் குட்டன்பர்க் உருவாக்கும் முன்னமே கொரியாவில் அச்சு இயந்திரங்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.
பலர் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து கொண்டிருந்தனர். வெறும் கண்ணால் பார்த்தாலே இன்று 800 வருடங்களுக்கு முன் அச்சிட்ட ஒரு புத்தகம் இத்தனை நேர்த்தியாக இருக்க முடியுமா? என்று ஆச்சர்யப்படாமல் இருக்கமுடியவில்லை!
இந்த ஒரு பெருமை மிகு நாட்டுடன் தமிழகம் கலாச்சார தொடர்பை மீட்டெடுக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுவது தவறா? நீங்களெல்லாம் எனக்கு ஆதரவு தாருங்கள். உங்களிடமுள்ள சேதிகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
கண்ணன்
அன்பர்களே:
தமிழ் மரபு என்பது பரந்து, விரிந்து ஆழ்ந்து கிடக்கிறது. இதில்
மிகப்பழமையான மரபுகள் இன்றும் வாழ்வதுண்டு, சில மறக்கப்படுவதுமுண்டு.
அப்படி மறக்கப்பட்ட மரபுகளாக நாம் பௌத்தம், சமணம் இரண்டையும் காண்கிறோம்.
இது பற்றிய அக்கறை சிறிதேனும் இருப்பது நல்லது. ஏனெனில் இனிமேல் பௌத்தம்
என்பது வீறுகொண்டு எழுந்து சநாதன தர்மத்தை அழித்துவிடப்போவதில்லை.
திருஞானசம்பந்தர் மேற்கொண்ட தீவிர சமண வெறுப்பிற்கும் இப்போது
அவசியமில்லை. 21ம் நூற்றாண்டு இந்தியா நீண்ட பயணத்திற்குப் பின் ஒரு
முதிர்ந்த, சகிப்புத்தன்மை கொண்ட இந்தியாவாக உருவாகியுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது இன்று தாரக மந்திரமாக உள்ளது.
மேலும் நன்கு யோசித்துப் பார்த்தால் சித்தார்த்தன் ஒரு இந்து முனி.
அவன்
கண்ட கொள்கைகள் பின் புத்த மதமாக மாறுகிறது. அவன் ஒரு நல்ல இந்துவாகவே
வாழ்ந்து மறைந்திருப்பான். இதே போல்தான் மகாவீரர் போன்ற
பெரியவர்களுக்கும்.
அவர்களுக்கு ஒரு மரபு அழிவது கண்ணில் படுகிறது,
நமக்குப்படவில்லை. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் பெயர் கொண்ட நாம் இவ்விரு
சமயங்கள் பற்றிய இலக்கிய, சரித்திர, சமயக் கோட்பாடுகளை, சேதிகளை அறிந்து
கொள்ளுதல் நலம்.
ஏனெனில், பௌத்தத்தின் நற்பண்புகள் பல
வைணவத்தால் உட்செறிக்கப்பட்டுள்ளன. இதை ஏ.கே.இராமானுஜன் தமது ஆழ்வார்கள்
பற்றிய நூலில் குறிப்பிடுவார். அதே போல் 63 நாயன்மார்களை உருவாக்கிய
சைவம் சமணத்தின் பல கூறுகளைத் தன்னுள் இன்றும் வைத்துக் கொண்டுள்ளது.
21ம் நூற்றாண்டுத் தமிழன் பல மரபுகளின் தோளில் நின்று இன்று உலகைக்
காண்கிறான். நம்மைத் தாங்கும் தோள் பற்றிய அக்கறை நமக்கு அவசியம்
வேண்டும்.
அன்புடன்,
நா.கண்ணன்
காஞ்சியின் பவுத்தர்களின் வளாகம் என்ன ஆயிற்று என்னும் விநோத் ராஜன்
அவர்களின் வினா நியாயமானது; அதற்கு விடை காணவேண்டும்.
முனைவரின் நோக்கத்திலிருந்து இழை திசை மாறுமானால் தனி இழையில் இவற்றை
விளக்கலாம்
தேவ்
On Nov 27, 9:43 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அன்பின் ஐயா,
>
> பொதுவாக, யான் எல்லா இழைகளையும் படிப்பதில்லை. இழையின் தலைப்பைப் பார்த்துதான்
> படிப்பேன். :-)
>
> செல்வன் ஐயா எழுதியிருந்த இழை வேறொருவர் சுட்டியதால் (தனி மடலில்) என்
> கவனத்திற்கு
> வந்தது. (ஆமாம். யார் அவர்? ஞான ஓளி என்ற பெயரில் தனி மடலில் மிந்தமிழில் வரும்
> சில
> இழைகளில் என் பெயர் வந்தாலோ, சமணச் செய்திகள் வந்தாலோ தனி மடலில் கவன ஈர்ப்பு
> செய்கிறார் :-)) அவர் இதை படித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். :-)
>
> @ கண்ணன் ஐயா,
>
> 2010/11/27 N. Kannan <navannak...@gmail.com>
> கைவிட்டனர். வைராக்கியம் உடையவர்களே...
>
> read more »
உங்கள் மேற்தரவுகளுக்கு நன்றி.
நான் `இந்து` என்ற பதத்தை சமகால நோக்கில்தான் பயன்படுத்துகிறேன்.
அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி உள்ளே இருக்கும் சாப்பல்
பக்கம் போகாமல் சுற்றிப் போய்விடுவேன். பயம். கிறிஸ்தவனாக
மாற்றிவிடுவார்களோ என்று :-)) இந்த மனோநிலை நம்மில் பெரும்பாலோருக்கு
அந்நியமானவற்றிடம் இருக்கும். பௌத்தம், சமணம் இவைகளை தற்போது அறிந்து
கொள்வதால் எங்கே தமது மதம் நலிவுறுமோ என்ற அச்சம் சிறிதேனும் உருவாக
சாத்தியமுண்டு. அதை சமணப்படுத்தவே அவ்வாறு கூறினேன்.
சமணம் `இந்து` என்ற குடையின் கீழ் வாராது என்று இப்போது சொல்வது
முரண்நகை. சத்யநாராயண பூஜை மற்றும் எத்தனையோ இந்து வழிபாடுகள்
உட்புகுந்துவிட்டன. காலத்தின் முன் எந்தவொரு கொள்கையும், மொழியும்,
சம்பிரதாயமும் air tight/water proof ஆக இருப்பதில்லை. கசிவுகள் இருந்து
கொண்டேதான் இருக்கும். செல்வன் சுட்டியபடி செமத்திய மதங்களாகிய யூதம்,
கிறிஸ்தவம், இஸ்லாம் இவை இந்தியா வந்த பின் இந்திய வடிவம் கொண்டுள்ளன.
அது இயற்கையானது. ஆகப்பெரும்பான்மையின் முன் சிறுபான்மை தலை குனிந்துதான்
ஆக வேண்டும் (பெரும்பான்மை என்பதை mainstream, trend என்று நோக்குக).
சமணம் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறது என்று நான் அறிவேன். ஆனால் பௌத்தம்
அது போல் வாழ்கிறதா? அப்படியெனில் எங்கே? அதை ஆவணப்படுத்த முடியுமா?
தஞ்சையில் உள்ள சமணக்கோயில் ஒன்றை நான் ஆவணப்படுத்தியுள்ளேன்.
சமயத்தின் அகம், புறம் என்று ஏதோ சொல்ல வருகிறீர்கள். புரியவில்லை.
சமணத்தின் புறமாக வைணவம் எப்படி அமைகிறது?
பார்ஸ்வநாதர் கொள்கை என்றால் என்ன?
க.>
2010/11/28 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
மனநிலை, சமனப்படுத்தவே
தேவ்
> 2010/11/28 Banukumar Rajendran <banukuma...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மனநிலை - விளக்கம்:
மனோதர்மம், மனோவேகம், மனோராஜ்யம், மனோகாரகம், மனோகல்பநா, மனோயோஜநா,
மனோதத்வம், மனோபலம், மனோவ்யாதி, மனோபா(bh)வம், மனோநாசம், மனோரஞ்ஜநம்,
மனோரமா, மனோஹரா, மனோன்மணி - வடமொழிச் சொற்களில் ’மநஸ்’ என்பது ’மநோ’
என்று பரிவர்த்தநமாகும்.
'நிலை' தமிழ் சார்ந்த சொல்லாதலின் இவ்விதிக்குத் தேவையில்லை;
மன நிலை என்றே எழுத வேண்டும்.
மன வேற்றுமை சரியா? மனோ வேற்றுமை சரியா ?
மன மாற்றம், மனோ மாற்றம் - எது சரி ?
சமனப்படுத்தவே - விளக்கம்
இங்கு இழை ஆசிரியர் ஒருமை காண்பதை ,சமன் செய்வதைச் சொல்கிறார் என்பது
வெளிப்படை.
(கண்ணன் ஐயா ஒட்டு மொத்தமா நம்ம எல்லாருக்கும் மொட்ட போட்டு
சமணப்படுத்திருவாகளோன்னு யாரும் பயந்திரக்கூடாது பாருங்க; அதனாலதான்
கண்ணுல கண்டதும் ஒடனே ...
பாநுகுமார் ஐயா பவ்யஜீவன் உங்களைப்போலவே ;அவர் கோவப்பட மாட்டார்)
தேவ்
தேவ்
On Nov 27, 11:39 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
பாகவத புராணம் ஐந்தாம் ஸ்கந்தம் 3,4,5,6 அத்யாயங்களில் ரிஷப தேவரைப்
பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சூரிய குலத்தில் ஸ்வயம்புவ மனுவின்
வம்சத்தில் ஆக்நீத்ரர், நாபி இவர்களை அடுத்து ரிஷப தேவர் வரலாறு
கூறப்படுகிறது. மன்னர் நாபிக்கும் மேரு தேவிக்கும் மகனாக இவர்
தோன்றினார். பரமஹம்ஸ தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக அவதூதராக நாடு
துறந்து பரிநிர்வாணம் அடைகிறார். இவர் முக்தி பெற்றது குடகு
மலைப்பகுதியில். வடக்கு தெற்கு என்ற பிரிவினைகள் பாகவதத்தில் இல்லை.
ரிஷபரின் மகனான பரதர் கண்டகி நதிக்கரையில் தவமியற்றிய போது ஒரு
மான்குட்டியிடம் பரிவுகாட்டி அதே நினைவில் உயிர் துறந்ததால் மானாகப்
பிறந்தார்.
பின்னர் ஜட பரதராக மீண்டும் பிறந்து முக்தி பெற்றார்.
சமண மரபில் ரிஷபர் முதல் தீர்த்தங்கரர்; பரதரும் உண்டு, ஆனால்
தீர்த்தங்கரராக ஏற்பரா தெரியவில்லை. இவரது சிலை ச்ரவணபெளகுளாவில் உள்ளது
தேவ்
On Nov 27, 9:43 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அன்பின் ஐயா,
>
> பொதுவாக, யான் எல்லா இழைகளையும் படிப்பதில்லை. இழையின் தலைப்பைப் பார்த்துதான்
> படிப்பேன். :-)
>
> செல்வன் ஐயா எழுதியிருந்த இழை வேறொருவர் சுட்டியதால் (தனி மடலில்) என்
> கவனத்திற்கு
> வந்தது. (ஆமாம். யார் அவர்? ஞான ஓளி என்ற பெயரில் தனி மடலில் மிந்தமிழில் வரும்
> சில
> இழைகளில் என் பெயர் வந்தாலோ, சமணச் செய்திகள் வந்தாலோ தனி மடலில் கவன ஈர்ப்பு
> செய்கிறார் :-)) அவர் இதை படித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். :-)
>
> @ கண்ணன் ஐயா,
>
> 2010/11/27 N. Kannan <navannak...@gmail.com>
> கைவிட்டனர். வைராக்கியம் உடையவர்களே...
>
> read more »
//Abidhaba//
கண்ணன் இது கொரிய உச்சரிப்போ ?
சரியான உச்சரிப்பு அமிதாபர். இவருக்கு அமிதாயுஸ் என்ற பெயரும் உண்டு.
Pure Land என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது நம் பாஷையில் “புத்த
க்ஷேத்திரம்”.
புத்தர்கள் தம்முடைய பிரணிதானத்தின் ஆற்றலினாலும் கல்பகோடி காலங்களில்
சேர்த்த தம் புண்ய பலத்தை பயன்படுத்தியும் நிர்மாணிப்பதே ”புத்த
க்ஷேத்திரம்”
புத்த க்ஷேத்திரம் புத்தர்களால் நிர்மாணிக்கப்படுவது. ஆகையால்,
கிலேசங்கள் ஏதும் அற்று சகலமும் தர்மமயமாக இருப்பதாக கருதப்படுகிறது.
கிலேசங்களூம் மும்மலங்களும் நிறைந்துள்ள இந்த சஹா லோகதாதுவில் (நம்முடைய
பிரபஞ்சம்) தர்மத்தை கடைபிடித்து புத்தத்துவம் எய்துவது மிக கடினமாக
கருதப்ப்படுகிறது. எனவே, புத்தர்களுடைய புத்த க்ஷேத்திரத்தில் மறுபிறவி
எய்தி, அங்கு தர்மத்தை கடைபிடித்தல் மிக எளிதானது.
இவ்வாறானது புத்த க்ஷேத்திரங்கள்.
அமிதாபருடைய புத்த க்ஷேத்திரம் “சுகாவதி” என்று அழைக்கப்படுகிறது.
நம்முடைய சஹா லோகதாதுவில் இருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது.
தவிர, அக்ஷோப்ய புத்தருடைய “அபிரதி” என்று புத்த க்ஷேத்திரமும்,
பைஷஜ்யகுரு புத்தருடைய “வைடூர்ய நிர்பாஸ” புத்த க்ஷேத்திரமும்
பிரசித்தமான புத்த க்ஷேத்திரங்கள். இதைத்தவிர பல புத்தர்களுக்கும் புத்த
க்ஷேத்திரங்கள் உண்டு. எனினும் அவை அவ்வளவு பிரசித்தமானவை கிடையாது.
அனைத்து புத்த க்ஷேத்திரங்களை விடவும் அமிதாபருடைய புத்த க்ஷேத்திரில்
பிறப்பெய்துவது சிறப்பானதாக கருதப்படுகிறது. அமிதாப புத்தருடைய புத்த
க்ஷேத்திரத்தின் சிறப்பியல்புகளுடன் அதில் மறுபிறவி எய்துவதற்கான
வழிமுறையும் எளிது என்பதால்.
அமிதாபருடைய புத்த க்ஷேத்திரத்தை குறித்து இயம்பும் சூத்திரங்கள் மூன்று.
1) சுகாவதி வியூஹ சூத்திரம் - சங்க்ஷிப்த மாத்ருகா
2) சுகாவதி வியூஹ சூத்திரம் - விஸ்தார மாத்ருகா
3) அமிதாயுர்தியான சூத்திரம்
முன்னரே சுகாவதி புத்த க்ஷேத்திரத்தில் பிறப்பெய்துவதற்கான வழிமுறை எளிது
என்று கூறினேன்.
ஏனெனில், அதற்கு தேவையான ஒரே விஷயம் “புத்த நாமானுஸ்மிருதி” புத்தரின்
நாமத்தை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளுதல். புத்தநாமானுஸ்மிருதியை
மட்டுமே முதன்மையாக கொண்டதால், இது மக்களிடையே மிகவும் பிரசித்தமானது.
அமிதாபர் தம்முடைய புத்த க்ஷேத்திரத்தை நிர்மாணிப்பதற்கு லோகேஷ்வரராஜ
புத்தர் முன்னிலையில் எடுத்துக்கொண்ட 48 பிரணிதானங்களில் 18ஆம்
பிரணிதானத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
[...] யே ஸத்த்வா அன்யேஷு லோகதாதுஷ்வனுத்தராயாம் சம்யக்சம்போதௌ
சித்தமுத்பாத்ய மம நாமதேயம் ஷ்ருத்வா ப்ரஸன்னசித்தா மாம் அனுஸ்மரேயு:
தேஷாம் சேத் அஹம் மரணகால சமயே ப்ரத்யுபஸ்திதே பிக்ஷுசங்கபரிவ்ருத:
புரஸ்க்ருதோ [...]
[...] எந்த ஜீவன்கள் தாம் புத்தப்பதவி அடைவதற்காக எண்ணத்தை செலுத்தி, என்
நாமத்தை கேட்டு என்னுடைய நாமத்தையே ஸ்மரணம் செய்கின்றார்களோ அவர்களுடைய
மரணகால சமயத்தில் நான் என்னுடைய பிக்ஷுசங்க சஹிதம் அவர்களுடைய
முன்னிலையில் தோன்றி [...]
ஆக, அமிதாபரே. தன்னுடைய நாமத்தை ஸ்மரணிக்கின்றவர்களை மரணகால சமயத்தில்
தமது போதிசத்துவ பரிவாரங்களுடன் தோன்றி தம்முடைய புத்தக்ஷேத்திரதுக்கு
அழைத்து செல்லுவதாக நம்பிக்கை உள்ளது.
”நமோ அமிதாபாய புத்தாய” என்று நித்தமும் ஸ்மரணித்தாலே சுகாவதியில்
மறுபிறவி எய்திலாம் என்ற நம்பிக்கை இதைச்சார்ந்ததே.
ஜப்பானிய மொழியில், நமோ அமிடா புட்ஸு எனவும் சீனத்தில் நமோ அமிட்டோ ஃபோ
எனவும் ஸ்மரணிப்பர்.
கொரியாவில் எப்படி கண்னன் ?
******
அமிதாபரும் இருக்கும் 8 போதிசத்துவர்கள், அஷ்ட மஹா போதிசத்துவர்களாக
இருக்க வேண்டும்.
அஷ்டமஹாபோதிசத்துவர்கள்
1) அவலோகிதேஸ்வரர்
2) மஹாஸ்தாமபிராப்தர்
3) மஞ்சுஸ்ரீ
4) ஆகாசகர்பர்
5) க்ஷிதிகர்பர்
6) சமந்தபத்திரர்
7) மைத்திரேயர்
8) சர்வநிவாரணநிஷ்கம்பின்
*************
இத்தனை சமாச்சாரங்களும் இந்தியாவில் இருந்து சென்றதே :-)
V
இதைக் கே.ஆர்.எஸ் பார்த்தாரா என்று தெரியவில்லை ;-)
இங்கும் ஆழ்வார் என்ற சொல்லாட்சி வைணவத்திற்கே வழங்கப்படுகிறது (சமணக் கதைகளிலும்).
என் கேள்வி என்னவெனில், சமணத்திற்கு இத்தனை தமிழ்க் கதைகள் இருப்பது போல்
தமிழ் பௌத்தக் கதைகள் எங்கே? என்பதே.
அக்கதைகள், ஐதீகங்கள் தெரிந்தால்தான் நாம் தென்/கிழக்கு ஆசியாவைத்
தமிழகத்துடன் இணைக்க முடியும். அதற்கு இவ்விழை உதவினால் மகிழ்வேன்!
க.>
தமிழ் ஜைனர் ஒருவர் இருந்ததால் தானே இது தெரியவந்தது :-)
தமிழ் பௌத்தர்களில்லாமல் தமிழ் பௌத்த கதைகளை தேடினால் எப்படி :-))
V
On Nov 28, 3:38 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/11/28 Banukumar Rajendran <banukuma...@gmail.com>:
//அப்படி மறக்கப்பட்ட மரபுகளாக நாம் பௌத்தம், சமணம் இரண்டையும் காண்கிறோம்.
தவறு! அவைகள் வேறுப் பெயர்களில் இன்றும் வாழ்கிறது! :-)//
என்கிறார் பானுகுமார். எது உண்மை?
இன்று சமணர்கள் தங்கள் மரபுடன் வாழும் போது பௌத்தர்கள் மட்டும் எப்படி
முற்றும் முழுவதுமாக அழிக்கப்பட்டனர்? தமிழ் சமணம் ஏன் extinct ஆகவில்லை?
அதன் தற்காப்பு நடவடிக்கை என்ன? பௌத்தம் ஏன் கோட்டை விட்டது?
க.>
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
`ஆர்` விகுதி பெறுவதிலிருந்து இது தமிழ் ஒலிப்பு என்று தெரிகிறது. கொரிய
உச்சரிப்பு மிகவும் வித்தியாசப்படும். வாய்ப்பு இருக்கும் போது கேட்டுச்
சொல்கிறேன். நான் இருக்கும் தீவில் ஒரேயொரு சோதாக்கோயில் இருக்கு.
பிரபலமான கோயில்களெல்லாம் வெளியே!
> Pure Land என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது நம் பாஷையில் “புத்த
> க்ஷேத்திரம்”.
>
விநோத், இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. செமத்திய மதங்களிலும்
சொர்க்கம், நரகம் இருக்கிறது. ஆனால் இந்திய மதங்களில் உள்ளது போல்
அவ்வளவு விரிவாக இல்லை!
அபிதாபர்
புத்தர்
போதிசத்வர்
அவலோக்தேஷ்வர் (இவர் இந்திரலோக/சொர்க்க அதிபதி)
க்ஷீதிகர்பர் (இவர் சிந்தாமணியை ஏந்தியபடி நரகத்தைக் காப்பவர்)
அர்ஹதர்கள் (இவர்கள் ஆழ்வார்கள் போல் சாமான்யமாக வந்து பழகுபவர்கள்)
அபிதாபலோகம் = விண்ணகம் / வைகுந்தம்
புத்தலோகம் = (க்ஷீராப்தி/பாற்கடல்)
போதிசத்வர் = விபவம்
அவலோக்தேஷ்வர் = இந்திரலோகம்
க்ஷீதிகர்பர் = கீழுலகம்
அர்ஹதர் = பூலோகம்
ஆக இப்படி ஒப்புநோக்கினால் அவதாரங்களுக்கான கரு பௌத்தத்தில் இருப்பதைக்
காணலாம். முன்னாலா? பின்னாலா? இது விரிவடைந்தது என்று நானறியேன்.
இதில் ஒரு அழகு என்னவெனில் வெந்நரகம் என்று பேச்சு வழக்கு இருந்தாலும்
நரகத்தைக் காக்கும் க்ஷீதிகர்பரோ, எமதர்மனோ வில்லன்கள் அல்லன். அவர்களது
கடமை ஜீவனை எப்படியும் மீள்பிறாவா உலகிற்கு அனுப்பிவிட வேண்டும் என்பதே!
> ஜப்பானிய மொழியில், நமோ அமிடா புட்ஸு எனவும் சீனத்தில் நமோ அமிட்டோ ஃபோ
> எனவும் ஸ்மரணிப்பர்.
>
> கொரியாவில் எப்படி கண்னன் ?
>
> ******
நீங்கள் முன்பும் இப்படியொரு கேள்வி கேட்டீர்கள். எனக்கு உதவும் ஆங்கிலம்
தெரிந்த பௌத்த கொரியர் யாருமில்லை. மடத்திற்குப் போனால் அங்கு
கொரியந்தான் பேசுகிறார்கள். சுசோன் பேரரசின் போது பௌத்தம் வலுவிழந்து
கன்பூஷியனிசம் வந்துவிடுகிறது. அதன் பிறகு பௌத்தம் அறிந்த கொரியர்கள்
அருகி விட்டனர். இப்போது ஒட்டுமொத்தமாக அமெரிக்க மிஷினரிகள் இவர்களை
கிறிஸ்தவத்திற்கு மடைம்மாற்றிக் கொண்டுள்ளனர். ஊருக்கு ஆயிரம்
தேவாலயங்கள் வந்தவண்ணமுள்ளன.
> *************
>
> இத்தனை சமாச்சாரங்களும் இந்தியாவில் இருந்து சென்றதே :-)
>
முகமதியர்களுக்குத் தொழுகை எப்படி மெக்கா நோக்கியோ, அது போல் கிழக்காசியா
முழுவதும், சொர்க்கம் எங்கே? என்று கேட்டால் இந்தியாவைக் காட்டுகின்றனர்!
சொர்க்கவாசிகளான நாம் இதை மறந்துவிட்டோம் :-(
க.>
இல்லை. இந்திரன் புத்த மதத்திலும் இந்திரன் தான் :-)
அவலோகிதேஸ்வரும் சுகாவதியில் இருப்பவர் தான். அவரின் பூலோக தலம், நம்மூர்
பொதிகை மலை.
கணேசனை கேளுங்கள் கண்டவ்யூஹ சூத்திரத்தை பற்றி நிறைய கூறுவார் :-)
//இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. செமத்திய மதங்களிலும்
சொர்க்கம், நரகம் இருக்கிறது. ஆனால் இந்திய மதங்களில் உள்ளது போல்
அவ்வளவு விரிவாக இல்லை! //
உண்மை.
ஆபிரகாமிய மதங்கள் பேசுவது, நித்திய நரகமும் நித்திய சொர்கமும்.
இந்திய மதங்களில் இரண்டுமே அநித்தியமானவை. புண்ய பாவ பலன்களுக்கு ஏற்ப
ஒருவன் நரகத்தில் பிறப்பதோ அல்லது சொர்கலோகங்களில் பிறப்பதோ.
அவன் புண்ய பாவ கர்மங்கள் கழிந்தவுடன் வேறு உலங்களில் பிறப்பெய்துகிறான்.
நித்திய சொர்கவசமோ அல்லது நித்திய நரகவாசமோ யாருக்கும் கிடையாது.
பிறாவமையே இந்திய மதங்களின் குறிக்கோள்.
அந்த பிறவாமையை எப்படி எய்துவது என்பதில் தான் வேறுபாடுகள் :-)
நம்பினால் நித்திய சொர்கம், நம்பாவிட்ட நித்திய நரகத்தீ (ஆபிரகாமிய
மதங்களை ஒரே வரியில் அடக்க வேண்டுமெனில்) போன்ற ஒவ்வாத கருத்துக்கள்
இந்திய மதங்களில் கிடையவே கிடையாது.
V
AmitAbhah
அமித + ஆப: (bh) -> அமிதாப: ( மிதமிஞ்சிய ஒளி பொருந்தியவர்)
ஒரு ஹிந்தி நடிகர் தமிழ்ப்பெயர் வைத்துக் கொண்டிருக்க
வாய்ப்பில்லை - அமிதாப் பச்சன்
’பச்சன்’ அன் விகுதி, ஆகவே தமிழ்ப்பெயர் என்றால் என்ன சொல்ல ?
தேவ்
On Nov 28, 5:56 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/11/28 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:
அமித + ஆப: -> அமிதாப:
தமிழ் வழக்கப்படி அர் விகுதி சேர்த்தேன்.
கர்மா, ராமா, ராவணா, பாண்டவா என்பதை போல “அமிதாபா” என்று அங்கிலவாக்கத்தை
அப்படியே எழுதிய விருப்பமில்லை :-))
V
இதே போல். சுகாவதியில் பிறப்பதற்கு கீழ்க்கண்ட தாரணியும் பயன்படுத்துவது
உண்டு.
இதற்கு சுகாவதிவ்யூஹ தாரணி என்று பெயர்.
நமோ அமிதாபாய ததாகதாய
தத்யதா
அம்ருதோத்பவே அம்ருத சித்தம்பவே
அம்ருத விக்ரந்தே அம்ருத விக்ரந்தகாமினே
ககன கீர்த்தி கரே ஸ்வாஹா
சமஸ்கிருத வடிவத்தை ஈமே ஓய் என்ற மலேசிய பெண் பாடகர் பாடுகிறார்
http://www.youtube.com/watch?v=pG50ZSPgDgs
சீனர்கள் தினமும் உச்சாடம் செய்ய வேண்டிய “தச சுல தாரணி”களில் இதுவும்
ஒன்று.
http://www.youtube.com/watch?v=D6QB0H-aqDw&feature=related (சீன
உச்சரிப்பில்)
V
--
திரு பாநுகுமார் அவர்களின் விளக்கத்துக்கு நன்றி; எப்பொழுதிலிருந்து
--
>>அவர்களுக்கு யான் பரிந்துரைக்கும் நூல் பாகவத புராணம். ஆதி தீர்த்தன்,
--
//பாநுகுமார் ஐயா பவ்யஜீவன் உங்களைப்போலவே ;அவர் கோவப்பட மாட்டார்//:-)என்னை நேரில் பார்ப்பவர்கள் அதை ஆமோதிப்பார்கள் என்று நினைக்கிறேன்! :-)))))))
நேரில் பார்க்காமலே புரிந்து கொண்டேன்
தேவ்
புத்தர்/ மகாவீரர் கூட சைவராய் பிறந்தவராக இருந்திருக்கலாம்.. ;-)
இயேசு/ முகமது (?) யூதராய் பிறந்தது போல..
திருமந்திரத்தில் புத்தம்/ சமணம் பற்றிய குறிப்புகள் கிடையாதென்று வாசித்த நினைவு.
தேவாரத்தில் கேட்கவே வேண்டாம். பட்டவர்த்தனம்.
திருமந்திரம் புறச் சமயங்களை குறிக்காமல் இல்லை. அதில் புத்தமும் சமணமும் இல்லை.
சைவம் இச்சமயங்களினும் காலத்தால் முற்பட்டதற்கு திருமந்திரம் சான்று.
--
ஆமாச்சு
தாங்கள் ஒரு இணையுலகைக் (a parallel world) காட்டுகிறீர்கள். இங்கு
இருப்பதெல்லாம் அங்கும் இருக்கிறது என்று! தற்போது ஜெயின் பெருமக்கள்
சத்யநாரயண பூஜை, லக்ஷ்மி பூஜை செய்கின்றனர். சமணத்தில் விஷ்ணு
தம்பதியரின் இடம் என்ன?
மேலும், பௌத்த ஜாதகக்கதைகள் பற்றி நான் சொல்லவில்லை. எனது ஆர்வமெல்லாம்,
தமிழகத் துறவிகள் பௌத்தப்பரவலை ஆசியா முழுவதும் செய்வித்துவிட்டு அது
பற்றிய மேலதிகச் சேதிகளை தமிழகத்தில் விட்டுச் செல்லாமல் இருந்திருப்பரா?
ஏன் இங்கு ஒரு கல்வெட்டோ, செப்பேடோ, ஏன் வாய்வழிக் கதைகூட இங்கு இல்லை?
என்பதே! மதம் மாற்றம் முழுக்காரணமாக இருக்க வாய்ப்பில்லை. சமணர்களும்தான்
மதம் மாறியுள்ளனர்!
க.>
On Nov 28, 11:33 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அருவாள் எடுக்க வேண்டிய அவசியமற்ற கேள்விதான் :-)))
என்னை விடச் சிறப்பாக இதற்கு பதில் சொல்லும் திறனுள்ளோர் இங்குண்டு. எனது
புரிதலை, இவ்விழைக்கருவோடு முன் வைக்கிறேன்.
நாம சங்கீர்த்தனம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வினோத் இடுகை
சுட்டியது. பௌத்தத்திலும் பிறப்பற்றுப் போக நாம சங்கீர்த்தனம் உதவும்
எனும் கருதுகோள் எனக்குப் புதிது. நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவம்
பற்றி வேத, இதிகாச, புராணங்களில் நிரம்ப சொல்லப்பட்டிருக்கிறது.
திருவாய்மொழி, நாம சங்கீர்த்தனத்தை வலியுறுத்துகிறது. எனவே பொதுவாக நாம
சங்கீர்த்தனம் செய்ய ஜாதி இடைஞ்சல் பண்ணுவதில்லை. குழந்தையாக இருக்கும்
போது திருப்பூவணத்தில் பல்வேறு பஜனை மடங்கள் இருந்தன. மார்கழி மாதத்தில்
எல்லா ஜாதியினரும் பஜனை செய்து கொண்டு வருவதைக் கண்டிருக்கிறேன்.
கோயில் பூஜை செய்யும் உரிமை சிவாச்சாரியர்களுக்கும்,
பட்டாச்சார்யர்களுக்கும் போகிறது. அதில் சிவாச்சாரியர்கள் தமிழ்
கீர்த்தனங்களை இறைவன் முன் பாடுவதில்லை. அதற்கென ஓதுவார் உண்டு. ஆனால்,
வைணவ கோயில்களில் பட்டாச்சாரியர் திருமால் முன் நாலாயிர திவ்யப்பிரபந்தம்
ஓதுவது நடைமுறை. இராமானுச முனியின் புரட்சிகளில் மற்றொன்று, திரிதண்டி
சந்நியாசிகளும் இறைத்தொண்டில் ஈடுபட்டு கோயிலில் ஆராதனை செய்வது. இது சைவ
நெறியில் அதிகமில்லை. (பேரூர் மடம் மாற்றத்தைக் கொண்டு வருகிறது).
கனபாடிகள் சமிஸ்கிருத பாஷா விருத்திக்கு துணை போகிறார்.
தீக்ஷிதர், சாஸ்திரி = வேத விற்பன்னர்கள். கோயில் தொண்டில்
ஆர்வமில்லாதவர்கள். அகம் பிரம்மாஸ்மி என்று இருந்துவிடுபவர்கள்.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மறு பிறவிக்கொள்கை, வடக்கிருத்தல், வடமொழி பாகதப் பயன்பாடு, உருவ
வழிபாடு, மந்திர உச்சாரணம், தாந்திரிகம், கீர்த்தனம், தல யாத்திரை,
தென் புலத்தார் - தெய்வ வழிபாடு, உயிர்க்கொலை இல்லாத வேள்வி -
அனைத்திலும் பாரதீய மத மரபுகளில் ஒற்றுமை உள்ளது. இவர்களிடையே பிணக்கும்
இருந்துள்ளது, இணக்கமாகவும் வாழ்ந்துள்ளனர்.
முனைவர் கண்ணன் எதிர்பார்க்கும் ‘லின்ங்க்’ பிடிபடவில்லை
தேவ்
On 11/28/2010 08:17 PM, Banukumar Rajendran wrote:புத்தர்/ மகாவீரர் கூட சைவராய் பிறந்தவராக இருந்திருக்கலாம்.. ;-)
தற்போது இலங்கையில் வசிக்கும் சைவர்கள் முன்னர் சமணர்களாகயிருந்தவர்கள் தான்.
இயேசு/ முகமது (?) யூதராய் பிறந்தது போல..
--
பௌத்த திரிபிடக ஆகமங்களிலும் சிவனை பற்றியோ இல்லை விஷ்ணுவை பற்றியோ
கிடையாது (ஜைன ஆகமங்களும் அப்படியே என்று எண்ணுகிறேன்)
பிரம்மாவும் இந்திரனும் வருகின்றனர். அவ்வப்போது புத்தர் முன்பு
பிரசன்னமாகின்றனர். ஆனால் சிவனை விஷ்ணுவை பற்றியோ எந்த குறிப்பும்
இல்லை.
ஆக, என்ன முடிவுக்கு வரலாம் :) ?
V
On 11/28/2010 08:17 PM, Banukumar Rajendran wrote:
திருமந்திரத்தில் புத்தம்/ சமணம் பற்றிய குறிப்புகள் கிடையாதென்று வாசித்த நினைவு.
தற்போது இலங்கையில் வசிக்கும் சைவர்கள் முன்னர் சமணர்களாகயிருந்தவர்கள் தான்.
தேவாரத்தில் கேட்கவே வேண்டாம். பட்டவர்த்தனம்.
திருமந்திரம் புறச் சமயங்களை குறிக்காமல் இல்லை. அதில் புத்தமும் சமணமும் இல்லை.
சைவம் இச்சமயங்களினும் காலத்தால் முற்பட்டதற்கு திருமந்திரம் சான்று.
--
ஆமாச்சு
நாம சங்கீர்த்தனம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வினோத் இடுகைசுட்டியது. பௌத்தத்திலும் பிறப்பற்றுப் போக நாம சங்கீர்த்தனம் உதவும்எனும் கருதுகோள் எனக்குப் புதிது.
சமண (துறவற) ஆச்சாரம்தான் காரணம். சமணர்கள் (துறவற) கடல் தாண்டக்கூடாது என்பதுவிதி. ஆறு, ஓடைகளை தாண்டலாம். தற்போதைய இலங்கையில் முன்னர் சமணம்இருந்திருக்கிறது. (மகாவம்சம்). கடல் தாண்டக்கூடாது. ஆனால் சமணம் எப்படி இலங்கைபோனது. ஒரே ஒரு காரணம்தான் கூறமுடியும். இலங்கை என்ற ஒரு தனித் தீவு தோன்றவதற்குமுன்னர் இருந்திருக்கலாம். (மயிலையார் இதுப் பற்றி எழுதியிருக்கிறார்)
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காமனை வென்றது என்று குறிப்பிடுவது காம-மார என்பதாக இருக்கும்
"காமனை வென்றவனுடைய 1008 நாமங்களைத் தவிர வேறொன்றையும் என் நா சொல்லாது" எனச் சொல்லி விடைபெறுகிறார்.
"மாரனை வெல்லும் வீர நின்னடி
காமனை வென்றது என்று குறிப்பிடுவது காம-மார என்பதாக இருக்கும்
- பரிபாடல் என்றால், நான் ஓடோடி வந்து விடுவேன் -இன்னம்பூரான்.
நாகராசன் அண்ணாச்சி!
இப்ப அருவாளை என் கழுத்திலே போடுங்கோ!
ஏதோவொரு கிராமத்திலே, post-periyar periodல ஒரு வைணவ குலத்தில்
பிறந்துவிட்டேன். அவ்வளவுதான். பிராமணன் என்றால் பெருமையாகச்
சொல்லிக்கொள்ள முடியாத காலக்கட்டம். கிராமத்தில் சாம்பிளுக்கு குருக்கள்,
கனபாடிகள், ஸ்மார்த்தர்கள், தெலுங்கு, கன்னட பிராமணர்கள் இவள்ளவுதான்
நான் அறிந்த பிராமண குலம். தி.க மேடைகளில் போட்டு வாட்டி எடுக்கிற எந்தக்
குற்றத்தையும் செய்யாத அப்பாவி மக்கள் இவர்கள். இதில் பாதிப்பேர் பரம
ஏழைகள். மீதிப்பேர் ஏழைகள். இரண்டு குடும்பம் கொஞ்சம் செல்வச்செழிப்புள்ள
குடும்பம் (அதில் ஒன்று வந்து உழைத்து முன்னேறிய குடும்பம்). இவ்வளவுதான்
நான் அறிந்த பார்ப்பனர்கள்.
இப்போது பானுகுமார் சங்ககாலத்தில் இருந்த மூன்று வகையான பார்ப்பனர்கள்
பற்றிச் சொல்கிறார். வள்ளுவர் பேசுகிற
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
என்போர் ஜீனப்பிராமணர்கள் போலும்! இதெல்லாம் இப்பத்தானே தெரியுது ;-)
காலச்சுவடு சு.ரா வீட்டில் இருந்த போது அங்கு வந்த ஒரு பிராமணரைப்
பார்த்தேன். அவர் சொல்லிய பார்ப்பனர்களும் அவர்களது கிராம தேவதைப்
பூசைகளும் எனக்குப் பல புதிய சேதியைச் சொல்லின. பறைகள் போல் இவர்கள்
மிகப்பழைய குடிகள் என்பது. இவர்களது tribal ritual தனியாக ஆய்விற்கு
உட்படுத்த வேண்டியவை. சரஸ்வதி மகால் நூலகம் போனால் அங்கொரு வித்தியாசமான
வைணவரைப் பார்த்தேன். அவர் இராமானுஜரை ஆசார்யன் இல்லை என்று சொல்லும்
அந்தணர். அவரது வழிமுறைகள் நான் நாகர்கோயில் பிராமணர் சொன்ன triabal
traits கொண்டவையாக இருந்தன.
ஆக, ஏகப்பட்ட பிராமணர்கள் இருக்கிறார்கள்! நம்ம வாதவூரார் வேதம் ஓதாத
பிராமணர் என்கின்றனர். இப்படி எத்தனையோ ரகம் இருக்கு சார்.
இப்ப அப்படியே அருவாளை கழுத்திலே போடறீகளா? :-))
க.>
இந்து மதத்தில் இருந்து பௌத்தமும், சமணமும் வேறுபட்டதல்ல. சைவம், சமணம்,
பௌத்தம், சாக்தம் போல் எண்ணற்ற அத்தனை இந்திய மதங்களும் இந்து
மதங்கள்தான்.
சமணர்களின் பூமியாக ஒரு காலத்தில் தமிழகம் இருந்தது. இப்போதும்
வைதீகர்கள் பின்பற்றும் பல பழக்கங்கள் சமணர்கள் உருவாக்கியவையே. நம்
இலக்கியங்களில் ஆகப் பெரும்பகுதி சமணர்களுடையது.
சமணத்தையும், பௌத்தத்தையும் பிரித்துவிட்டு தற்போதைய மரபுகள் உயிர்வாழ
முடியாது.
On Nov 28, 4:53 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> தமிழ் நாட்டில் ஜாதிக் கொடுமைக்கு ஆட்பட்ட தலித்துகள் பெளத்தத்தை இந்து
> மதத்துக்கு மாற்றுவழியாகக் கடைப்பிடித்தார்கள். இன்றும் தமிழகத்தில் பெளத்தம்
> தழுவிய தலித்துகளின் சந்ததியினர் வாழுகிறார்கள் ஆனால் பெளத்தம் வாழவில்லை
> அம்பேத்கர் தமிழக தலித்துகள் இந்துமதத்தை விட்டு வெளியேறி பெளத்ததத்தில்
> சேரவேண்டும் என்றும் பெரியார் இந்துமதத்தைவிட்டு வெளியேராமல் உள்ளிருந்தே
> போராடவேண்டும் என்று இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவியதும் பெளத்தர்கள் அதிக
> எண்னிக்கையில் தமிழகத்தில் இல்லாததற்கு ஒரு காரணம்
இதற்கான ஆதாரங்கள் கிடைக்குமா?
On Nov 28, 8:21 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> தற்போது மதம் மாறியவர்கள், புதிய மதம் கொண்ட பிறகு தாங்கள் முன்னம் இருந்த
> மத நூல்களை என்ன செய்வார்கள்?
>
> அதுபோல், சமண, பெளத்த மதத்தில் இருந்தவர்கள் பின்னர் மதம் மாறியபோது,
> சமண, பெளத்த நூல்களை தீக்கு இரையாக்கினார்கள். அதன் காரணமாக பெளத்த
> சமண நூல்கள் அழிந்துப்பட்டன.
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஒரு மாபெரும் மரபு ஒட்டு மொத்தமாக அழிந்தது என்பதை நம்ப முடியவில்லை.
ஜீனாலயங்கள் இன்னும் உள்ளனவே!
பௌத்த விகாரங்கள் எங்கு போயின? சரி, அது கட்டிடம். ஜீனாலயங்களாவது
இந்துக் கோவில் போல் உள்ளது, ஆனால் பௌத்த விகாரங்கள் வித்தியாசமானவை,
அதனால் அழிந்தன என்று சொல்லலாம். ஆனால், மக்கள் மனதில் உள்ள கதைகள்?
அவைகளை எப்படி அழிக்க முடியும்? ஐதீகங்கள்? அவைகளை எப்படி அழிப்பது?
இன்னும் சங்க காலத்துக் கதைகளைச் சொல்லிச் சொல்லித்தானே கழகங்கள் காலத்தை
ஓட்டுகின்றன (செம்மொழி மாநாட்டின் பேரணி ஓடங்களுக்கான கதைகள் எல்லாம்
சங்க காலத்துக்கதைகள்தானே). அப்படி இருக்கும் போது பௌத்த நாட்டார் கதைகள்
என்பவை எங்குள்ளன? பௌத்தம் ஆசியாவில் பரவிய கதைகள் எங்கே? செட்டியார்
சமூகம் எப்படி சோழர்காலத்தில் துரத்தப்பட்டு வெளியேறின என்றெல்லாம்
இன்றும் பேசுகிறார்களே?
தமிழ் மரபு அறக்கட்டளை, தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் ஈனைந்து
சேகரித்துள்ள பல்லாயிரக் கணக்கான ஓலைகளில் ஏதாவது ஒன்றாவது பௌத்த கதைகள்
பேசட்டும்!!
க.>
சில மாதங்களுக்கு முன்பு திருவிளையாடல் புராணம் உரை நடையில் படித்தேன்
(முழுவதுமாக :-) ), அதிலிருந்து தான் சமணர்கள் வேள்வி செய்தனர் என்ற
தகவல் கிடைத்தது.
அதை படித்த பின்பு மனதின் ஒரு மூலையில் சமணர்கள் உண்மையில் அவைதிகளா என்ற
கேள்வியும் எழுகிறது. வேதத்தில் சிவனை பற்றிய குறிப்பு இருபதாலேயே
சைவர்கள் அனைவரும் வைதீக மதத்தினர் என்ற கொள்கையும் தவறென ஒரு சில தீவிர
சைவ மத நூல்கள் மறுபதையும் மேலோட்டமாக படித்ததுண்டு.
On Nov 28, 7:33 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அன்பின் ஐயா,
>
> +ve வாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி!
>
> //சமணம் `இந்து` என்ற குடையின் கீழ் வாராது என்று இப்போது சொல்வது
> முரண்நகை. சத்யநாராயண பூஜை மற்றும் எத்தனையோ இந்து வழிபாடுகள்
> உட்புகுந்துவிட்டன//
>
> :-) முரண்நகையும் இல்லை! நகைமுரணும் இல்லை!
>
> சிலப்பதிகாரத்தில் மூன்று வகை அந்தணர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இளங்கோ!
>
> 1. மாங்காட்டு மறையோன்
> 2. கோசிகன்
> 3. மாடல மறையோன்
>
> கோவலன், மாங்காட்டு மறையோனை எதிர்க் கொள்ளும் போது அவனை வணங்காமல்
> “யாதுநும் ஊர்? ஈங்கு என்வாவெனக்?
> என்று அதிகாரத் தொனியில் கேட்கிறான்.
>
> மாதவியின் கடிதத்தை கொண்டுவந்துக் கொடுக்கும் கோசிகனையும் வணங்கவில்லை.
>
> “யாது நீ கூறிய உரை, ஈது, ஈங்கு..”
>
> என்று கேட்கிறான்.
>
> ஆனால், அடைக்கலக் காதையில் மாடல மறையோனை சந்திக்கும் கோவலன்,
>
> “இடவயிற் புகுந்தோன் தன்னைக்
> கோவலன் சென்று சேவடிவணங்க
> நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்”
>
> மாடலன் அடி வணங்குகிறான்.
>
> ஏன்?
>
> அதற்கும் விடை சிலம்பில் கூறுகிறார் இளங்கோ.
>
> வேள்விகள் மூன்று விதமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
>
> 1. மறக்கள வேள்வி
> 2. மதுக்கொள் வேள்வி
> 3. அறக்கள வேள்வி
>
> முதல் இரண்டும் வைதிகம் சார்ந்தது. மூன்றாவது சமணச் சார்பு உடையது.
>
> மாடல மறையோன் மூன்றாம் பிரிவினன். சேரனுக்கு அறிவுரை வழங்கு மாடலன்
> அரசே மது, கொலை உடைய மறக்கள வேள்வி செய்யாதே. கொலையிலா அறக்கள
> வேள்வி செய் என்று அறிவுறுத்துகிறான்.
>
> “அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
> மறக்கள வேள்வி செய்வோயாயினை “
>
> என்று சேரனை வினவுகிறான் மாடலன்.
>
> இதனால், சமணர்களும் வேள்வி உண்டென்றுப் பெறப்படுகிறது.
>
> நாங்கள் வேள்வியை ஓமம் என்று அழைக்கிறோம். (காட்டு: சாந்தி ஓமம்)
>
> (தற்போது அந்தணன் யார் எனற கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்)
>
> //சமயத்தின் அகம், புறம் என்று ஏதோ சொல்ல வருகிறீர்கள். புரியவில்லை.
> சமணத்தின் புறமாக வைணவம் எப்படி அமைகிறது?
>
> பார்ஸ்வநாதர் கொள்கை என்றால் என்ன?//
>
> தனி இழையில் பார்க்கலாம் ஐயா!
>
> நன்றி!
>
> இரா.பா
> சென்னை
>
> 2010/11/28 N. Kannan <navannak...@gmail.com>
>
> > அன்பின் பானுகுமார்:
>
> > உங்கள் மேற்தரவுகளுக்கு நன்றி.
>
> > நான் `இந்து` என்ற பதத்தை சமகால நோக்கில்தான் பயன்படுத்துகிறேன்.
> > அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி உள்ளே இருக்கும் சாப்பல்
> > பக்கம் போகாமல் சுற்றிப் போய்விடுவேன். பயம். கிறிஸ்தவனாக
> > மாற்றிவிடுவார்களோ என்று :-)) இந்த மனோநிலை நம்மில் பெரும்பாலோருக்கு
> > அந்நியமானவற்றிடம் இருக்கும். பௌத்தம், சமணம் இவைகளை தற்போது அறிந்து
> > கொள்வதால் எங்கே தமது மதம் நலிவுறுமோ என்ற அச்சம் சிறிதேனும் உருவாக
> > சாத்தியமுண்டு. அதை சமணப்படுத்தவே அவ்வாறு கூறினேன்.
>
> > சமணம் `இந்து` என்ற குடையின் கீழ் வாராது என்று இப்போது சொல்வது
> > முரண்நகை. சத்யநாராயண பூஜை மற்றும் எத்தனையோ இந்து வழிபாடுகள்
> > உட்புகுந்துவிட்டன. காலத்தின் முன் எந்தவொரு கொள்கையும், மொழியும்,
> > சம்பிரதாயமும் air tight/water proof ஆக இருப்பதில்லை. கசிவுகள் இருந்து
> > கொண்டேதான் இருக்கும். செல்வன் சுட்டியபடி செமத்திய மதங்களாகிய யூதம்,
> > கிறிஸ்தவம், இஸ்லாம் இவை இந்தியா வந்த பின் இந்திய வடிவம் கொண்டுள்ளன.
> > அது இயற்கையானது. ஆகப்பெரும்பான்மையின் முன் சிறுபான்மை தலை குனிந்துதான்
> > ஆக வேண்டும் (பெரும்பான்மை என்பதை mainstream, trend என்று நோக்குக).
>
> > சமணம் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறது என்று நான் அறிவேன். ஆனால் பௌத்தம்
> > அது போல் வாழ்கிறதா? அப்படியெனில் எங்கே? அதை ஆவணப்படுத்த முடியுமா?
> > தஞ்சையில் உள்ள சமணக்கோயில் ஒன்றை நான் ஆவணப்படுத்தியுள்ளேன்.
>
> > சமயத்தின் அகம், புறம் என்று ஏதோ சொல்ல வருகிறீர்கள். புரியவில்லை.
> > சமணத்தின் புறமாக வைணவம் எப்படி அமைகிறது?
>
> > பார்ஸ்வநாதர் கொள்கை என்றால் என்ன?
>
> > க.>
>
> > 2010/11/28 Banukumar Rajendran <banukuma...@gmail.com>:
> > > மறுபடியும் தவறு. சித்தார்த்தன் காலத்தில் இந்து என்ற ஒரு சமயமில்லை.
> > > சித்தார்த்தன்
> > > பார்ஸ்வநாதர் கொள்கையில் ஈர்ப்பு உடையவராகயிருந்திருக்கிறார்.
இராஜம் அம்மா,
தாங்கள் அறிவிலும் வயதிலும் பெரியவர். முறையாக தமிழ்ப் பயின்றவர். நானோ பொறியாளன் (). என் சுய முயற்சியால் தமிழ்க் கற்றுக வருபவன். தங்கள் கருத்தை மறுத்து எழுதும் அளவிற்கு யான் பெரியவன் அல்லன். ஆயினும், சமணக் கருத்து சிறிதுப் பயின்றிருக்கிறேன் என்பதாலும் தவறான இடத்தை சுட்டுவது முறை என்பதாலும் இதை எழுதுகிறேன். தவறென்றால் என் தலையில் தட்டவும் J
என் கருத்தை இடையிடையே எழுதியிருக்கிறேன்
இந்தப் "போற்றிப் பாடல்" கவுந்தியடிகளுக்குப் பிடிக்கவில்லை!
வரி: 191 – 195
”போதார் பிறவிப் பொதியறை யோரெனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்”
என் உரை: சாரணர் மொழிகளைக் கேட்ட தவ
கவுந்தியடிகள் நெஞ்சம் நெழ்ந்து தம் இருகைகளையும்
தலைமேல் குவித்து, உணர்ச்சி மேலீட்டால்
அருகனை நினைத்து பின்வருமாறு கூறுகிறார்.
எம் செவிகள் காமம், வெகுளி, மயக்கம் ஆகியவற்றை
கெடுத்தவனாகிய அருகனின் திருமொழிக்கு அல்லாமல்
பிற மொழிகளை கேட்காது என் செவிகள், …
இதில் கவுந்திக்கு எங்கே சாரணர் உரையை பிடிக்கவில்லை என்பதை தாங்கள் தான் கூறவேண்டும்.
இரா.பா,
சென்னை
"காமனை வென்றவனுடைய 1008 நாமங்களைத் தவிர வேறொன்றையும் என் நா சொல்லாது" எனச் சொல்லி விடைபெறுகிறார்.
மயிலையார், சமணமும் தமிழும் என்ற தனது நூலில்,
சமண சமயம் தமிழ்நாடு வந்த வரலாறு என்ற அதிகாரத்தில்
கீழ் வருமாறு எழுதுகிறார்.
“ ..இன்னொரு சான்றினாலும் இச்செய்தி உறுதிப்படுகின்றது. மகாவம்சம் என்னும்
பெளத்த மத நூலில், இலங்கையிலே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே
சமண சமயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கி.மு. 377 முதம் 307 வரையில்
இலங்கைத் தீவை அரசாண்ட பாண்டு காபயன் என்னும் அரசன், அநுராதபுரம்
என்னும் நகரத்திலே சோதியன், கிரி, கும்பண்டன் என்னும் நிகண்ட (சமண) மதக்
குருமாருக்குப் பள்ளிகள் கட்டிக் கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது.
வட இந்தியாவை அரசாண்ட சந்திரகுப்த அரசனும் இலங்கைத் தீவை அரசாண்ட
பாண்டுகாபய அரசனும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவர் எனது
கருதத்தக்கது. பாண்டுகாபய அரசன் காலத்தில் சமண சமயத்தவர் இலங்கையில்
இருந்தார்கள் என்றால், அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே சென்றிருக்க வேண்டும்.
வட இந்தியாவில் இருந்து கப்பல் ஏறிக் கடல் வழியே நேரே இலங்கைக்குச்
சென்றிருக்க முடியாது. ஏன்னென்றால், சமணசமயத் துறவிகள், ஆறு முதலிய
சிறு நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்லலாமே தவிர கடலில் பிரயாணம் செய்யக்கூடாது
என்பது அந்த மதக் கொள்கை. ஆகவே, வட இந்தியாவிலிருந்து சமணர் கப்பலேறி
நேரே இலங்கைக்குச் சென்றார்கள் என்று நம்புவதற்கில்லை. அவர்கள் தமிழ்
நாட்டிலிருந்தே இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும். இலங்கைக்கும் பாண்டி
நாட்டுக்கும் இடையில் உள்ள மன்னார் குடாக் கடல் அக்காலத்தில், மிகக் குறுகி
ஆழமற்று ஒரே நாளில் இலங்கைக்குச் செல்லக்கூடிய அண்மையில் இருந்தது
என்பது நினைவு கூரத்தக்கது. ஆகவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்
நாட்டிலும் இலங்கைத் தீவிலும் சமணர் இருந்தனர் என்று துணிந்து கூறலாம்”.
இரா.பா,
சென்னை
--
வைதிக இலக்கியங்களை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்;
ஸித்த - சாரணர்களை அவற்றில் அதிகமாகவே காண முடிகிறது
தேவ்
On Nov 29, 8:39 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> இராஜம் அம்மா,
>
> தாங்கள் அறிவிலும் வயதிலும் பெரியவர். முறையாக தமிழ்ப் பயின்றவர். நானோ
> பொறியாளன் (). என் சுய முயற்சியால் தமிழ்க் கற்றுக வருபவன். தங்கள் கருத்தை
> மறுத்து எழுதும் அளவிற்கு யான் பெரியவன் அல்லன். ஆயினும், சமணக் கருத்து
> சிறிதுப் பயின்றிருக்கிறேன் என்பதாலும் தவறான இடத்தை சுட்டுவது முறை என்பதாலும்
> இதை எழுதுகிறேன். தவறென்றால் என் தலையில் தட்டவும் J
>
> என் கருத்தை இடையிடையே எழுதியிருக்கிறேன்
>
> 2010/11/29 rajam <ra...@earthlink.net>
>
>
>
> > இந்தப் பதிவு "*நாம சங்கீர்த்தனம்*" பற்றியது...
> > கண்ணன் - பேரசிரியர் உரையாடலில் நுழைவதாகத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்!
> > கண்ணனின் பின்வரும் கூற்று என்னைப் பிணைத்தது!
>
> > நாம சங்கீர்த்தனம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வினோத் இடுகை
> > சுட்டியது. பௌத்தத்திலும் பிறப்பற்றுப் போக நாம சங்கீர்த்தனம் உதவும்
> > எனும் கருதுகோள் எனக்குப் புதிது.
>
> > *இந்த "நாம சங்கீர்த்தனம்" தமிழுக்குப் புதிதில்லை!* *இது அந்தக் "கல் தோன்றி
> > மண் தோன்றாக் காலத்திலிருந்து" தமிழருக்குப் பழக்கப்பட்டது. தமிழன் மூச்சுவிடத்
> > தேவையானது புகழ்ச்சி! மன்னனின் புகழ்ச்சிப் பாட்டு இல்லை என்றால் பண்டைக் காலப்
> > புற இலக்கியம் இல்லை. அதுவே கடவுள் பாடல்களிலும் வேறு வடிவம் எடுக்கிறது. Or,
> > is it vice-versa?*
>
> > எப்படிப் புரிந்துகொண்டாலும் சரி...
> > *பரிபாடலிலும்* *திருமுருகாற்றுப்படையிலும்* இந்த "நாம சங்கீர்த்தனம்" உண்டு.
> > வேண்டுமானால் பிறகு பார்ப்போம்.
> > *சிலப்பதிகாரம்* தொடங்குவது "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்"
> > என்று.
> > தொடர்ந்து "ஞாயிறு போற்றுதும்" ... "மாமழை போற்றுதும்" என்று இயற்கையின் "நாம
> > சங்கீர்த்தனம்" செய்கிறார் இளங்கோவடிகள்.
>
> > இங்கே பாருங்கள் "*தருமம் சாற்றும் சாரணர்*" கூற்றாக இளங்கோ அடிகள் தரும்
> > "காமனை வென்றவனுடைய *1008 நாமங்களைத் தவிர* வேறொன்றையும் என் நா சொல்லாது"
> > எனச் சொல்லி விடைபெறுகிறார்.
> > சரி. பின்னர் *மணிமேகலையில்* பார்த்தால்...
> > மணிபல்லவத்தீவில், கோமுகி என்ற பொய்கையிலிருந்து "அமுதசுரபி" மணைமேகலை கைக்கு
> > வந்து சேருகிறது. அப்போது அவள் வாழ்த்திச் சொல்லுவது:
> > "மாரனை வெல்லும் வீர நின்னடி
> > தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் நின்னடி
> > பிறர்க்கறம் முயலும் பெரொயோய் நின்னடி
> > துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி
> > எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின்னடி
> > கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி
> > தீ மொழிக்கு அடைத்த செவியோய் செவியோய் நின்னடி
> > வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி
> > நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி
> > உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி
> > வனங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
> > அடங்காது ... ... ..."
>
> > பிற பின்னர்.
> > அன்புடன்,
> > ராஜம்
>
> > On Nov 28, 2010, at 7:45 PM, N. Kannan wrote:
>
> ...
>
> read more »
:-)
காமன் = மாரன்.
மாரஜித் = மாரனை வென்றவன் என்பது புத்தரின் திருநாமங்களில் ஒன்றாக
சமஸ்கிருத நிகண்டான அமரகோசம் குறிப்பிடுகிறது
சதுர்வித மாரர்களை புத்தர் வென்றதாக பௌத்த ஆகமங்கள் விளம்பும்.
(அமரகோசத்தை இயற்றிய்வர் பௌத்தர் எனவே, ஸர்வஜ்ஞர், மாரஜித் முதலிய
நாமங்களை புத்த பகவானுக்கு உரியதாக செய்துவிட்டார்)
காமனை வென்றவர் என்பது ஜைன மதத்தில் தீர்த்தங்கரர்களுக்கும் பொருந்தும்.
ஜைன திரும்வெம்பாவை பாடல்களை முன்னரே மின் தமிழில் இட்டுள்ளேன்..
மீண்டும் அதை இங்கே இடுகிறேன்.
வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடேலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னம் கண்கள் விழித்திலையோ
**பாரீச பட்டர்**மேல் பாசமும் இத்தனையோ
**மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த**
ஈறேழ் புவிக்கு இறையைப் பாடேலோர் எம்பாவாய். 9
http://www.youtube.com/watch?v=Z6Pg96HEE6s
மாரனொடு காலனை வென்றவரென 23ஆம் தீர்த்தங்கரரான பகவன் ஸ்ரீபார்ஸ்வநாதரை
(பாரீச பட்டாரகர்) குறிப்பிடுகிறார் அவிரோதி ஆழ்வார்.
V
மாரஜித், காமாரி போன்ற பெயர்கள் உணர்ச்சிகளை அடக்கிய அனைவருக்கும்
பொருந்துவன தானே.
மலர்க்கணை தொடுத்த மாரனைப் பொசுக்கிய முக்கட்பிரானுக்கும் அது
பொருந்தும்.
ப்ரம்மசர்ய பங்கம் வராமல் ஆயர் மகளிரோடு குரவை கோத்த கண்ணபிரானுக்கும்
பொருந்தும்
தேவ்
பிரம்மாக்கள் பலர் புத்தமதத்தில். அவர்கள் யாவரையும் சிருஷ்டிகர்த்தாவாக
புத்தமதம் ஏற்றுக்கொள்வதில்லை.
சிருஷ்டிகர்த்தாவாதத்தை பௌத்தமும் (கூட ஜைனமும்) அங்கீகரிப்பதில்லை.
> புத்தர் தன் திருவாய் திறந்து மொழிந்தது
> என்று ஆதாரப் பூர்வமாகச் சொல்ல ஆவணம் ஏதும் இல்லை என்கிறது இந்த இலங்கைக் கதை
புரியவில்லை. எந்த இலங்கை கதை ?
> பறையறைந்து பரப்ப வேண்டுவதில்லை என்று
> கருதியதால் பெளத்தம் குறுகிக் குறுகி விண்டுணர்ந்து சொல்லும் வல்லமை உள்ளோர்
> குறையக்குறைய அது மறைந்தே போகும் வாய்ப்பு உண்டு என்றும் அக்காலத்திலேயே
> கருதப்பட்டது என்க
uh ?
எக்காலத்தில் எவரால் எப்போது ?
V
On Nov 29, 11:30 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> ிந்தியாவில் தோன்றி வெளிநாடுகளுக்குப் பரவிய மதம் என்ற பெருமை புத்த மதத்துக்கு
> உண்டு. ஆயினும் அது மற்றைய மதக் கொள்கைகளைப் போன்று வேர்விடாமல் போனதற்கு ஒரு
> கிளைக்கதை
> இலங்கையில் இருந்து இறக்குமதி
> பெளத்தம் வளர்க்க இயுக்கம் உருவான பின்னணி
> இளவரசாக இருந்த யோகி கெளதம சாக்யமுனிஅரண்மனையை விட்டு வெளியேறி கடுந்தவம்
> புரிந்து இறுதியில் பூரண ஞானம் பெறும் தருவாயில் அவர் போதி மரத்தடியில்
> அமர்ந்திருந்தபோது அவர் தவத்தைக் கலைக்க காம-மார முயற்சி நடந்ததும் அதை அவர்
> முறியடித்து ஞானம் பெற்றதியும் இன்னொரு இழையில் காண்க. (அமராவதி சிற்பம்)
> ஞானம் பெற்ற அவர் புத்தரானார்
> ஞானத்தன் வயப்பட்ட அவர்ாடாது அசையாது ஏழு பகல் ஏழு இரவுகள் போதி மரத்தின்கீழ்
> இருந்ததாகவும் அங்கிருந்து எழுந்த அவர் மேற்கொண்டு செல்லமுடியாமல் இரண்டாவது
> போதி மரத்தின் கீழ் மீண்டும் ஏழு பகல் ஏழு இரவுகள் இருந்ததாகவும் இவ்வாறு ஏழு
> வாரங்கள் போதி மரம் விட்டுப் போதிமரம் நகர்ந்ததாகவும் அப்பொது படம் எடுக்கும்
> பாம்பு (அவன் நானில்லை) அவரைக்காத்ததாகவும் அவ்வாறு நாற்பத்தொன்பது நாட்கள்
> இருந்தபிறகு விழி திறந்து பூவுலகைப் புறம் நோக்கியதாகவும் கதைக்கப்படுகிறது
> கண்டவர் விண்டிலர் என்று மொழியால் வெளிப்படுத்த முடியாத அந்த உணர்வை
> வெளிச்சொல்லாமல் அமைதி காத்தார்
> இந்த வேண்டுகொளை ஏற்று புத்தர் முதன் முதலில் சாரநாத் மான்கள் பூங்காவில்
> (காசிக்குப் போகும்போது கட்டாயம் போவேன். குறைந்தது 60 தடவையாவது சாரநாத்
> போயிருப்பேன்)
> வாய் திறந்ததாகவும்
>
> (இதுவரைக்கும் யேசுவின் வாழ்வும் புத்தரின் வாழ்வும் ஒரேமாதிரி ஏ்சுநாதருக்கு
> 40 நாட்கள. அப்புறம் மலைப் பிரசங்கம் )
>
> அதே நேரம் சொல்லப்படும் கருத்து எல்லாருக்கும் ஏற்கும் மனப்பக்குவம் இல்லாததால்
> தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று ஒரு சிலரே அறியும்
> வண்ணம் பரவியதாகவும் சராசரி மனித வாழ்வில் இருந்து விலகி பிக்ஷுககள்
> சமுதாயதில் இருந்து செத்துப்போனவர்கள் என்று குறிக்கக் காவி அணிந்து குறுகிய
> வட்டத்தில் இருந்த்தாகக் கதைக்கப்படுகிறது
> மற்ற சமயச் சிற்பிகளான ஜரதுஷ்ட்ரா, கன்பூஸியஸ், ஏசு முதலியவர்களிட்மிருந்து
> வேறுபடுத்திக்காட்ட சாக்யமுனி அதாவது அமைதியான முனி என்றே அழைக்கப்படுகிறார்
> எவ்வளவு மேற்கோள் காட்டப்பட்டாலும்
> மறைபொருளை உணர்ந்து மானிடம் காப்போர்
> நாகராசன்
>
> 2010/11/29 devoo <rde...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > வடமொழியில் பெரும் புலமை மிக்க ராஜா பர்த்ருஹரியின் ஆசிரியர் வஸுராதர்
> > ஒரு பௌத்தர்.
>
> > மறு பிறவிக்கொள்கை, வடக்கிருத்தல், வடமொழி பாகதப் பயன்பாடு, உருவ
> > வழிபாடு, மந்திர உச்சாரணம், தாந்திரிகம், கீர்த்தனம், தல யாத்திரை,
> > தென் புலத்தார் - தெய்வ வழிபாடு, உயிர்க்கொலை இல்லாத வேள்வி -
> > அனைத்திலும் பாரதீய மத மரபுகளில் ஒற்றுமை உள்ளது. இவர்களிடையே பிணக்கும்
> > இருந்துள்ளது, இணக்கமாகவும் வாழ்ந்துள்ளனர்.
>
> > முனைவர் கண்ணன் எதிர்பார்க்கும் ‘லின்ங்க்’ பிடிபடவில்லை
>
> > தேவ்
>
> > On Nov 28, 9:45 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> > > அன்பின் நாகராஜன்:
>
> > > அருவாள் எடுக்க வேண்டிய அவசியமற்ற கேள்விதான் :-)))
>
> > > என்னை விடச் சிறப்பாக இதற்கு பதில் சொல்லும் திறனுள்ளோர் இங்குண்டு. எனது
> > > புரிதலை, இவ்விழைக்கருவோடு முன் வைக்கிறேன்.
>
> > > நாம சங்கீர்த்தனம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை வினோத் இடுகை
> > > சுட்டியது. பௌத்தத்திலும் பிறப்பற்றுப் போக நாம சங்கீர்த்தனம் உதவும்
> > > எனும் கருதுகோள் எனக்குப் புதிது. நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவம்
> > > பற்றி வேத, இதிகாச,
>
> ...
>
> read more »
அன்பின் பானு:
தாங்கள் ஒரு இணையுலகைக் (a parallel world) காட்டுகிறீர்கள். இங்கு
இருப்பதெல்லாம் அங்கும் இருக்கிறது என்று! தற்போது ஜெயின் பெருமக்கள்
சத்யநாரயண பூஜை, லக்ஷ்மி பூஜை செய்கின்றனர். சமணத்தில் விஷ்ணு
தம்பதியரின் இடம் என்ன?
மேலும், பௌத்த ஜாதகக்கதைகள் பற்றி நான் சொல்லவில்லை. எனது ஆர்வமெல்லாம்,
தமிழகத் துறவிகள் பௌத்தப்பரவலை ஆசியா முழுவதும் செய்வித்துவிட்டு அது
பற்றிய மேலதிகச் சேதிகளை தமிழகத்தில் விட்டுச் செல்லாமல் இருந்திருப்பரா?
ஏன் இங்கு ஒரு கல்வெட்டோ, செப்பேடோ, ஏன் வாய்வழிக் கதைகூட இங்கு இல்லை?
என்பதே! மதம் மாற்றம் முழுக்காரணமாக இருக்க வாய்ப்பில்லை. சமணர்களும்தான்
மதம் மாறியுள்ளனர்!
க.>
On Nov 28, 11:33 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
> “இடவயிற் புகுந்தோன் தன்னைக்
> கோவலன் சென்று சேவடிவணங்க
> நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்”
>
க.>
விண்ணவன், வேத முதல்வன் ... ..."[இதில் பாருங்கள் -- பல "சமய"க் கடவுளரின் ஒன்றுதலை!]இவை பல சமயக் கடவுளர்களைப் போற்றவில்லை. இவைகள் அருகனின் திருநாமங்கள்.தமிழ்/வட இலக்கியங்களில் காணலாம் அம்மா!
//> படைப்பின் உயிரநிலைப் பொருளான பிரம்மா பூஜ்யத்தை ராஜ்யமாகக் கொண்டு
முட்டை
> வடிவிலான அண்டகோ்ளத்திலிருந்து கீழேிருந்த ஞானம் பெற்ற புத்தர் வாய்மொழி பகரா
> அமைதியில் இருப்பதைப் பார்த்து படைப்புக்குத் தலைவனாக இருக்கும் தானே ஒர்
> படைப்பு ஆயினும் தன்னாலும் அறிய்ப்படாத ஞானம் புத்தரிடம் குடியிருப்பதை அறிந்து
> கீழிறங்கி வந்து புத்தரை வணங்கி மானிடத்தின் ஆசானாய் மண்ணுலகின் ஆசானாய்,
> விண்னுலகு வாழ் தெய்வங்களின் ஆசானாய் இருக்கவேண்டும் என்று வேண்டக்கொண்டதாக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வேறெந்த சமயங்களைப் பற்றி இவை குறிப்பிடுகின்றன?
--
ஆமாச்சு
//பெளத்த/சமண சமயக் குறிப்புகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால்,
பெளத்த/சமண
கருத்துக்கள் அதில் அடங்கி உள்ளன. //
திருமந்திரத்தின் கருத்து பவுத்த/ சமண கருத்துக்களில் அடங்கியுள்ளது
எனவும் கொள்ளலாம்.
அதே! ;-)
--
ஆமாச்சு
பிரம்மா இருக்காரா! போதும்.. ;-)
பொருந்தும்
நித்ய பும்மச்சாரி கிருஷ்ணனுக்கும் நிச்சயமாக பொருந்தும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/29 devoo <rde...@gmail.com>:
On 11/29/2010 10:59 PM, "ம. ஸ்ரீ ராமதாஸ்" wrote:பிரம்மா இருக்காரா! போதும்.. ;-)
//பௌத்த திரிபிடக ஆகமங்களிலும் சிவனை பற்றியோ இல்லை விஷ்ணுவை பற்றியோ கிடையாது (ஜைன ஆகமங்களும் அப்படியே என்று எண்ணுகிறேன்) பிரம்மாவும் இந்திரனும் வருகின்றனர். அவ்வப்போது புத்தர் முன்பு பிரசன்னமாகின்றனர். ஆனால் சிவனை விஷ்ணுவை பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. ஆக, என்ன முடிவுக்கு வரலாம் :) ?//
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ம்ம்ம்..
கோவலனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சது யாருன்னு அப்பவே 5 மெகாபிக்ஸல் கேமரா இருந்தா
தெரிஞ்சிருக்கும்..
.....
.....
.....
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
.....
.....
.....
--
ஆமாச்சு
(Site is being retrieved from archive.org servers. Hence taking a lot
of time to get loaded. so please bear)
V
> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
சமயம் என்றில்லை பல்வேறு தரிசனங்களை (தர்ஶனம்) பற்றி வருகிறது.
அவற்றை “சமயம்” என்ற சொல்லுக்குள் அடக்க இயலுமா என்றறியேன்..
-
V
ஹா ஹா இந்த பிரம்மா சதுர்முக பிரம்மா கிடையாது :-)
V
நன்று.
--
ஆமாச்சு
நீங்க குறிப்பிட்டிருந்த விதம் அப்படியிருந்தது.
நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது.
ஒரே விஷயத்துக்காக எப்படி எல்லாம் லடாய் இருந்திருக்குங்கறதைத் தவிர வேறெதுவும்
இவ்விழையின் நிறைவாய் எனக்கு புலப்படலை.
--
ஆமாச்சு
பிரம்ம + ஆச்சரதி == பிரம்மத்தை சதா மனதில் இருத்தி அந்தப்பாதையில்
நடப்பவர் என்று பொருள் கொள்தலே நலம். (आचरति- ஆச்சரதி என்கிற வடமொழி சொல்
ஒன்றன் வழி நடத்தல் என்று பொருள் படுகிறது) ஆக பிரம்ம சிந்தனயில்
எப்பொழுதும் ஊன்றியவர் (அ) நிலைத்தவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று பொருள்
கொள்ளவே நிரம்ப இடம் உள்ளது. :-)
On Nov 30, 7:21 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> நான் கூட பேஷண்ட்!
> இ
>
> 2010/11/30 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ramada...@amachu.net>:
>
> > On 11/30/2010 12:05 AM, வினோத் ராஜன் wrote:
>
> >>> பிரம்மா இருக்காரா! போதும்..;-)
>
> >> ஹா ஹா இந்த பிரம்மா சதுர்முக பிரம்மா கிடையாது:-)
>
> > நீங்க குறிப்பிட்டிருந்த விதம் அப்படியிருந்தது.
>
> > நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது.
>
> > ஒரே விஷயத்துக்காக எப்படி எல்லாம் லடாய் இருந்திருக்குங்கறதைத் தவிர வேறெதுவும்
> > இவ்விழையின் நிறைவாய் எனக்கு புலப்படலை.
>
> > --
>
> > ஆமாச்சு
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
அது பஜகோவிந்தம் அல்ல மனீஷா பஞ்சகம். :-)
On Nov 30, 7:21 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> நான் கூட பேஷண்ட்!
> இ
>
> 2010/11/30 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ramada...@amachu.net>:
>
> > On 11/30/2010 12:05 AM, வினோத் ராஜன் wrote:
>
> >>> பிரம்மா இருக்காரா! போதும்..;-)
>
> >> ஹா ஹா இந்த பிரம்மா சதுர்முக பிரம்மா கிடையாது:-)
>
> > நீங்க குறிப்பிட்டிருந்த விதம் அப்படியிருந்தது.
>
> > நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது.
>
> > ஒரே விஷயத்துக்காக எப்படி எல்லாம் லடாய் இருந்திருக்குங்கறதைத் தவிர வேறெதுவும்
> > இவ்விழையின் நிறைவாய் எனக்கு புலப்படலை.
>
> > --
>
> > ஆமாச்சு
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
இதற்க்கு சில சரியான உதாரங்கள் விஸ்வாமித்ரர், இராமர், ஸ்ரீ கிருஷ்ணர்,
பகவான் புத்தர், மகாவீரர் (ஜைனர்), ஒழுக்கத்தில் மிகச்சிறந்த பீஷ்மர்,
நீதி நூல் வகுத்த விதுரர், கருணையின் மறு உருவான கருணர், தர்மத்தின்
வடிவான தர்ம புத்திரர், பிரஹலதரும் கூட ஒரு விதத்தில் அப்படி
வைத்துக்கொள்ளாம், ராஜா ரிஷியான ஜனகர், இன்னும் அடுக்கிக்கொண்டே
போகலாம்.
------
மிக்க நன்றி நண்பரே
இதை அங்கேயே நீங்கள் பதிவிட்டிருக்கலாமே.
இன்னும் வலுச் சேர்த்திருக்கும்.
வேத சமயத்தின் பக்கம் பேச ஆளில்லை.
முத்திரை குத்துவார்களோ என்று எல்லாரும் பயந்தால் என்ன
செய்வது ? பா. குமார் முதலில் ஒப்புக்கொண்டார்; பின்னர் வேறு மாதிரி
எழுதுகிறார்
-----
நன்றி தேவ் அவர்களே. நவீன காலத்தில் தோன்றிய ரிஷிகலான சுவாமி
விவேகனந்தரும், அவரது இயக்கமான ராமகிருஷ்ண மடமும் மிஷனும் வேரூன்ற
காரணமாயிருந்த விவேகனந்தரின் சகோதரச்சிடரான சுவாமி ப்ரமானந்தரும் கூட
காயஸ்த என்கின்ற க்ஷத்ரிய குலத்தில் உதித்த மகான்களே. பிற்பாடு
வந்துதித்த மகான் அரவிந்தரும் கூட காயஸ்த குலமே.
இது போன்று இன்னும் பல சான்றுகள். இவர்களனைவரும் வைதீக மதத்தினரே. அனால்
காலத்தை ஒட்டி இவர்கள் ஒரு சில தாந்தரிக உபாசனைகளையும் போற்றி உள்ளனர்.
நான் இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து தளத்திலேயே பதிவிடுகிறேன்.
----
On Nov 30, 11:57 am, Hariharas <hariha...@gmail.com> wrote:
> >>>> நீங்கள் என்ன சொல்லுகிறிர்கள் என்று கேட்க அந்த இடத்தில்தான்
>
> அவருக்கு பஜகோவிந்தம் இயற்றத் தோன்றியதாகவும் அதில் சொன்ன கருத்துக்கள்
> ஆச்சாரியாருக்கும் சண்டாளனுக்கும் பொருந்தும் என்று சொன்னதாகவும் கதை
> உண்டு.
> இதற்கும் ஆதாரம் கேட்பீர்கள் தருவேன்
>
> அது பஜகோவிந்தம் அல்ல மனீஷா பஞ்சகம். :-)
>
> On Nov 30, 7:21 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> wrote:
>
> > நான் கூட பேஷண்ட்!
> > இ
>
> > 2010/11/30 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ramada...@amachu.net>:
>
> > > On 11/30/2010 12:05 AM, வினோத் ராஜன் wrote:
>
> > >>> பிரம்மா இருக்காரா! போதும்..;-)
>
> > >> ஹா ஹா இந்த பிரம்மா சதுர்முக பிரம்மா கிடையாது:-)
>
> > > நீங்க குறிப்பிட்டிருந்த விதம் அப்படியிருந்தது.
>
> > > நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது.
>
> > > ஒரே விஷயத்துக்காக எப்படி எல்லாம் லடாய் இருந்திருக்குங்கறதைத் தவிர வேறெதுவும்
> > > இவ்விழையின் நிறைவாய் எனக்கு புலப்படலை.
>
> > > --
>
> > > ஆமாச்சு
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
முத்திரைக்கெல்லாம் பயப்படலாமோ? நாம் சொன்னாலும் முத்திரை,
சொல்லாட்டுலும் முத்திரை! அதுதான் உலக இயற்கை. ஆயின் மெய்மை அறிதல்
சுகமானது!
க.>
:-))
பாகவத்தில் ஒரு கதையுண்டு. தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணன்,
இந்திரலோகபதியான இந்திரனுடன் விளையாடுகிறான். அடுத்து பிரபஞ்சபதியான
பிரம்மாவுடன் விளையாடுகிறான். பிரம்மா கோகுலத்தை ஒளித்து
வைத்துவிடுகிறார். கண்ணன் உடனே ஒரு கோகுலம் மட்டுமல்ல, சர்வ உலகங்களையும்
சிருஷ்டித்து இன்னொரு பிரம்மாவையும் உருவாக்கிவிடுகிறான். பிறகென்ன
பிரம்மா குழம்பிப்போகிறார். எது எங்கிருந்து வந்தது என்று? :-)))
சமண நெறியில் அந்தணர் உண்டு என்றால். மற்ற சதுர் வர்ணங்களும் இருந்தாக
வேண்டுமே? அடுத்து, இந்தியச் சமூக அமைப்பின் அடிப்படை அலகான ஜாதிகளைச்
சமணம் எப்படிக் கையாள்கிறது?
ஆர்வமுடன் கதை கேட்கும் கூட்டத்தில் ஒருவன்
சின்னக் கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
பானுகுமார் ஐயா,
திருமூலர் காலம் 13-ஆம் நூற்றாண்டு அல்ல! மிகவும் குறைத்துச்
சொல்லிவிட்டீர்கள்!!
சரியான காலம் 33-ஆம் நூற்றாண்டு!!!
ராம் (இராமன்), கிருஷ்ணன் பற்றியும் திருமந்திரத்தில் குறிப்பு
இருப்பதாகத் தெரியவில்லை?! வைணவமும் 33-ஆம் நூற்றாண்டில் முழு
வீழ்ச்சியடைந்துவிட்டதா?!
அகரமும் ஆகி அதிபனும் ஆகி,
திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே!
இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!
முருகா!
--
சிவத்தை அறிவது மாபெரும் தவம்,
சிவத்தை அறியாதவர் சவம்!
சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம்;
சிவம் இல்லையேல் எல்லாம் சவம்!!
சிவம் அறிவது மாபெரும் தவம்;
சிவம் அறியாதது சவம்!!!
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil