சிதம்பரம் சொன்னார், "இஸ்லாத்தை அந்நிய மதமாகக் கொள்ளமுடியாது" என்று!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Saharanpur (UP), Nov 3 (ANI): Home Minister P Chidambaram on Tuesday
said that india cannot view Islam as an alien faith.
Speaking at the 30th general session of the Jamiat Ulama-i-Hind here,
Chidambaram said: “We cannot view Islam as an alien faith because this
is the land of your of your birth. All Indians share a cause to fight
communalism.”
“It is a matter of our pride that Islam exists in India along with
other major religions,” he added.
About 10,000 clerics, besides five lakh followers of Jamiat, are
attending the three-day conference, which commenced on November 1.
The conference is being seen as an attempt by the UPA government to
reach out to Islamic scholars. (ANI)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உடனே ஃபத்வா போட்டு விட்டார்கள், "வந்தே மாதரம்" முகம\தியர்களுக்கு ஹராம்
என்று!
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது
First Published : 04 Nov 2009 01:01:48 AM IST
Last Updated :
தேவ்பந்த் (உ.பி), நவ. 3: வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது
என்று ஜமியத் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில்
நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். யோகா
குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் 2006-ல் உத்தரவு
பிறப்பித்தது. அது சரியானதே. நாங்கள் தாயை நேசிக்கிறோம். மதிக்கிறோம்.
ஆனால் வழிபட முடியாது.
ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம்
பாடல் அமைந்துள்ளது.
வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என
உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.
தேசபக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத்
தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல்
பிரச்னையைப் பயன்படுத்தக் கூடாது.
மதரஸôக்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய மதரஸô வாரியம் அமைக்கும்
முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
சச்சார் கமிஷன் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மகளிருக்கு 33
சதவீத இட ஒதுக்கீடு தேவையற்ற ஒன்று என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
பாஜக எதிர்ப்பு: வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
நிறைவேற்றிய பிறகு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அந்த மாநாட்டில்
பங்கேற்றது தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பது போலாகும் என பாரதிய ஜனதா
கட்சி துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்
அவர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விட்டாரா, கிருஷ்ணன், "தாலிபானின் தந்தை பாகிஸ்தான்"!
சொல்லவேண்டுமா, "யார் தாய் என்று கேட்க", பிரச்சினை வந்துவிட்டது!
http://economictimes.indiatimes.com/news/politics/nation/Pak-fathered-Taliban-says-Krishna/articleshow/5194586.cms
ஞாபகம் இருக்கா, முன்பும் "ஆதித்தனார், தமிழர்களின் தந்தை" என்றபோது,
அத்தகைய பிரச்சினையை, தமிழக அறிவுஜீவிகள் அலசித் தீர்த்தனர்!
"இந்திய முஸ்லீம்களா", "முஸ்லீம் இந்தியர்களா" என்பதே அவர்களுக்கு
பிரச்சினையாக உள்ளது. இந்துக்களாக இருந்து முஸ்லீம்களாக மாறிய
முகமதியர்களுக்கு அத்தகைய எண்ணம் வருவது, இஸ்லாமிய மூளைசலவை தான் காரணம்.
மதம் மாறும்போது, கடவுளர்கள் மாற்றப்படுகிறார்கள், கலாச்சாரம்,
குலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம், என அனைத்தயும் மாற்ற
முடியாது என்றாலும், மாற்ற முயல்கிறார்கள். அவ்வாறான தாய்-தந்தையரை
மாற்றும் மனோத்ததுவம், மனப்பாங்கு உருவாக்குவதுதான் இந்திய-
விரோதித்துவம். தாய்நாட்டை வணங்கமேட்டேன் என்றால், இன்னும் 2009ல்,
இவ்வாறு இஸ்லாமிய அமைப்புகள் ஃபத்வா போடுகின்றனர்
என்றால்...................?
இந்தியாவின் உள்துறை அமைச்சர், இவ்வளவு கேவலமாக இருக்கிறார் என்பது
என்னசொல்ல? சர்தார் பட்டேலும்தான் இருந்தார். சிங்கம் உட்கார்ந்த
இடத்தில், சிறுநரி. இதற்காகவே, ஜனாதிபதி இவரை பதவியில் இருந்து விலக
வேண்டும். இல்லை, ஏதாவது இருந்தால், சிதம்பரமே விலகவேண்டும். நிச்சயமாக,
இந்தியசரித்திரத்தில், செவ்வாய்கிழமை ஒரு கருப்புநாள்தான். செக்யூலரிஸ
போலிகளின் உருவங்கள் வெளுத்ததில் ஓரளவிற்கு மகிழ்ச்சிதான். அந்த பிரியாணி
கொடுத்த உ.அ விட ஒன்றும் இல்லாதவனாக இருக்கும், இவனை இந்தியர்கள்
நிச்சயம் மறக்கமாட்டார்கள்.
முசுலிம்களைப் பன்றி என்று கூறும் வந்தே மாதரம் பாடலை
எதிர்த்து முசுலிம் மாநாட்டுத் தீர்மானத்திற்கு வரவேற்பு
கோவையில் நவ. 30, டிச.1, 2 நாள்களில்
அலை அலையாகக் கழகப் பிரச்சாரப் பணிகள்
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானங்கள்
சென்னை, நவ. 5_ முசுலிம்களைப் பன்றி என்று இழிவுபடுத்தும் வந்தே மாதரம்
பாடலை எதிர்த்து உ.பி. முசுலிம்கள் மாநாட்டுத் தீர்மானத்தை வர-வேற்பது
உள்ளிட்ட பல தீர்மானங்கள் திரா-விடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்-
தில் நிறைவேற்-றப்பட்-டன.
……………………………….
தீர்மானம் எண் 4: தஞ்சாவூரில் நடை-பெற்ற (10.10.2009) திரா-விடர் கழகப்
பொதுக்-குழு-வில் நிறைவேற்றப்-பட்ட தீர்மானங்களை வரவேற்று அவற்றின்
அடிப்படையில் செயல்-படவேண்டுமாய் கழகத் தோழர்களை இக்-கூட்-டம் கேட்டுக்-
கொள்-கிறது.
சிறப்பாக திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளராக வீ. அன்புராஜ் தெரிந்-
தெடுக்கப்பட்டதை திரா-விடர் கழகத் தலை-மைச் செயற்குழு கூட்-டம்
மகிழ்ச்சியுடன் வர-வேற்கிறது. தீர்மானம் எண் 5: உத்தரப்பிரதேச மாநி-
லத்தில் நடைபெற்ற முசுலிம்களின் மாநாட்-டில் வந்தே மாதரம் பாடலுக்கு
எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்-பாக சங் பரிவார் பிரச்-சினையைக்
கிளப்பியுள்-ளது. அப்பாடல் முசு-லிம்-களைப் பன்றி என்-றெல்லாம் அவதூறு
செய்வதால், நீண்ட காலமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்-பட்டு
வந்திருக்கிறது என்பதை திராவிடர் கழகத் தலைமைச் செயற்–குழு சுட்டிக்-
காட்டி, முசுலிம் மாநாட்-டின் தீர்மானத்தை இக்கூட்-டம் வரவேற்கிறது.
தமிழக சட்டமன்றத்-தில் அந்தப் பாடலைப் பாட முதலமைச்சராக-விருந்த திரு.
சி. ராஜ-கோபாலாச்சாரியார் முனைந்ததையும், அதற்குக் கடும் எதிர்ப்பு
கிளம்பியதால், (1938 இல்) அத்-திட்-டம் கைவிடப்பட்-டது என்பதையும் இக்-
கூட்-டம் நினைவூட்டுகிறது.
உ.பி. முஸ்லிம் மாநாட்-டுத் தீர்மானத்தை மதச் சார்பற்ற சக்திகள் வர-
வேற்கவேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்-கொள்கிறது.
இது பிரச்சாரமா, பிளவு உண்டாக்கும் யுக்தியா என்று நமது "திராவிட"
சகோதரர்கள் தாம் சொல்லவேண்டும்!
On Nov 7, 4:58 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வரிகள் ..??? இப்படி ஒரு விஷயத்தை இதுவரை
> கேள்விப்பட்டதில்லையே.
>
> -சுபா
>
> 2009/11/6 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
வந்தே மாதரம்
In Devanagari script
वन्दे मातरम्
सुजलां सुफलां मलयजशीतलाम्
शस्यश्यामलां मातरम् |
शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनीम्
फुल्ल कुसुमित ध्रुमदलशोभिनीम्,
सुहासिनीं सुमधुर भाषिणीम्
सुखदां वरदां मातरम् ||
தமிழில்
தாய்க்கு வாழ்த்து
நல்ல நீர்களும், சுவை கனிகளோடும்
இதமான காற்றடிக்கும், அறுவடை பச்சையினால்
நிறைந்திருக்கும் தாயே, உனக்கு வணக்கம்
இன்பமான மதி ஒளி நிறைந்த இரவுகள்
பூக்கள் மலரும் செடிகள்
தேனான மொழிகளை பேசுபவள்
ஆசிகளின் ஊற்று
தாயே, வணக்கம்.
இதுதான் இந்தியாவின் தேசீய சங்கீதம் என ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.
இதில் முஸ்லீம்கள் எங்கே, பன்றி எங்கே? இன்னும் 7/8 பத்திகள் ஒரிஜினல்
பாட்டில் உள்ளன. ஒன்றிலும் முச்லிம், பன்றி பத்தி பேச்சு இல்லை
விஜயராகவன்
> > > எதிர்த்து முசுலிம் மாநாட்டுத் தீர்மானத்திற்கு வரவேற்பு- Hide quoted text -
>
> - Show quoted text -
வந்தே மாதரம்!
'தாய்க்கு வணக்கம்' என்ற இந்த மந்திரம் பாரத தேசம் முழுவதும் ஒலித்து
அனைத்து இந்தியரையும் ஒருங்கிணைத்து இந்தியாவின் சுதந்திரத்தைப் பெறச்
செய்தது.
இந்த கீதம் பிறந்து எங்கும் பரவி ஒலித்த கதை சுவையானது.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (பிறப்பு 26-6-1838, இறப்பு 8-4-1894)
எழுதிய 'ஆனந்த மடம்' என்ற அற்புதமான நாவலில் வரும் கீதம் 'வந்தே
மாதரம'.வங்கத்தில் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கந்தலபாதா என்ற ஊரில்
பிறந்த பங்கிம் சந்திரர் ஹூக்ளியில் மோஷின் கல்லூரியிலும் பின்னர்
கல்கத்தாவில் பிரஸிடென்ஸி கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார்.
அதே சமயத்தில் நான்கு வருட காலம் தீவிரமாகப் படித்து சமஸ்கிருதத்திலும்
பாண்டித்தியம் பெற்றார். தனது இருபதாம் வயதிலேயே டெபுடி மாஜிஸ்ட்ரேட்
பதவியைப் பெற்றார் அவர். அவரது நேர்மையாலும் நீதியைப் பரிபாலிக்கும்
உணர்வாலும் எப்படியேனும் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிலைப்படுத்திக்
கொள்ள வேண்டும் என்றிருந்த வெள்ளை வர்க்கத்தினருடன் அவருக்கு அடிக்கடி
மோதல் உருவானது.
பகவத் கீதையில் ஆழ்ந்த ஈடுபாடும் அளவிலா பக்தியும் கொண்டவர் பங்கிம்.
ஒரு முறை அவர் நோய்வாய்ப்பட்ட போது டாக்டர் அவருக்கு மருந்தை எழுதிக்
கொடுத்து அதை உட்கொள்ளச் சொன்னார்.
பங்கிமோ புன்னகை பூத்தார்.
டாக்டருக்குக் கோபம் வந்தது.
"நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்" என்று கூவினார்.
பங்கிம் கேட்டார், 'எப்படி?'
"மருந்து உட்கொள்ளாவிடில் அது தற்கொலை தானே!"
"மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்று யார் சொன்னது?"
"அப்படியானால் அந்த மருந்தைக் காண்பியுங்கள்"
பங்கிம் தனது படுக்கையின் அருகில் இருந்த பகவத் கீதையைச் சுட்டிக்
காட்டினார்.
இந்த பகவத்கீதையின் கொள்கை முழுவதும் ஆனந்த மடம் நாவலில் காணலாம்.
கீதையின் பன்னிரெண்டாவது அத்தியாயத்திலிருந்து நான்கு சுலோகங்களை ஆனந்த
மடம் நூலை அர்ப்பணிக்கும் போது அவர் எடுத்துக் கூறியிருந்தார்.
பக்தியுடன் அனைத்துக் கர்மங்களையும் இறைவனுக்கு அர்ப்பணி என்பதே அந்த
சுலோகங்களின் சாரம்!
1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடக்கும் போது பங்கிமுக்கு வயது 19
தான். தாய் நாட்டைத் தளையிலிருந்து விடுவிக்க ஆர்வமிக்க இளைஞர்கள்
அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கிளர்ந்தெழுவது தான் 'ஆனந்தமடம்.'
வங்க தர்சன் என்ற பத்திரிக்கையில் 1880ஆம் ஆண்டு ஆரம்பித்து இரண்டு
ஆண்டுகள் தொடர்ந்து ஆனந்த மடம் பிரசுரமானது. 1882ல் முதல் முதலாக புத்தக
ரூபத்தில் பிரசுரமானது. அவர் வாழ்ந்த காலத்திலேயே ஐந்து முறை ஆனந்த மடம்
பிரசுரிக்கப்பட்டது! வந்தே மாதரம் தேசமெங்கும் மெதுவாகப் பரவ
ஆரம்பித்தது. அரவிந்தர் வந்தே மாதரத்திற்குப் புதிய பரிமாணத்தைத்
தந்தார். வந்தே மாதரத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இன்றளவும்
அதுவே சிறந்த மொழி பெயர்ப்பாகத் திகழ்கிறது.
வந்தே மாதரத்துடன் தமிழகத்தின் தொடர்பு அலாதியானது. 1907ஆம் ஆண்டு,
சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு திலகரின் பக்தரான பாரதியார்,
வ.உ.சி.யுடன் சென்றார். அப்போது வந்தே மாதரம் முழு எழுச்சியுடன் தேசீய
மந்திரமாக ஆகி விட்டிருந்தது.
ஆனால் வந்தே மாதரத்தின் வலிமையை தீர்க்க தரிசன நோக்குடன் உணர்ந்த மகா கவி
பாரதியார் அதை 1905ஆம் ஆண்டே மொழி பெயர்த்து அதை சக்கரவர்த்தினி
இதழிலும், பின்னர் மீண்டும் 1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி
இந்தியா இதழிலும் வெளியிட்டார்.
"இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை" என்று ஆரம்பித்து அற்புதமாக
வந்தே மாதரத்தை மொழி பெயர்த்த மகாகவி மீண்டும் இன்னொரு முறை அதை மொழி
பெயர்த்தார். அதற்குரிய காரணமாக அவர் கூறியது: "முன்னொரு முறை முழுதும்
அகவலாக ஒரு மொழி பெயர்ப்பு எழுதியிருந்தேன். ஆனால் அது பாடுவதற்கு
நயப்படாதாகையால் இப்போது பல சந்தங்கள் தழுவி மொழி பெயர்ப்பெழுதப்
பட்டிருக்கிறது"
"நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும்" என்று ஆரம்பித்து நயமான மொழி
பெயர்ப்பை இரண்டாம் முறை தந்ததிலிருந்தே பாரதி வந்தே மாதரத்தின்
விசுவரூபத்தை நன்கு தீர்க்க தரிசனமாக உணர்ந்திருந்ததை அறியலாம்.
13-3-1909 தேதியிட்ட இந்தியா இதழில் தனது புதிய மொழி பெயர்ப்பை அவர்
வெளியிட்டார்.
"வங்காளி பாஷையிலே ஏழு கோடி என்றே கூறியிருக்கின்றது. ஆனால் அது
வங்காளத்தை மட்டிலுமே குறிப்பிட்டது. 30 கோடி இந்தியா முழுமையின் ஜனத்
தொகை' என்ற குறிப்புடன் முதல் மொழி பெயர்ப்பில் "முப்பது கோடி வாய்
நின்னிசை முழங்கவும்" என்று மாற்றிய பாரதியார் இது நீண்ட நெடுங்காலம்
இந்தியாவின் இதய கீதமாகத் திகழ இருப்பதை தீர்க்க தரிசனத்துடன் உணர்ந்து
தனது புதிய மொழி பெயர்ப்பில், "கோடி கோடி குரல்களொலிக்கவும" என்று பாடி
எத்தனை கோடி இந்திய ஜனத் தொகையானாலும் அத்துணை பேரும் ஒலிக்கப் போவது
அல்லது ஒலிக்க வேண்டுவது வந்தே மாதரமே என்று தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தி
விட்டார்.
"வந்தேமாதரம் என்போம்; எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"
என்று மகாகவி பாரதியார் வந்தே மாதரத்தின் அர்த்தத்தை இரண்டாம் அடியில்
எடுத்துச் சொல்லி தேசீய உணர்வைத் தமிழகமெங்கும் பரவச் செய்தார்.
வந்தே மாதரத்தின் அருமை பெருமைகளை சாகா அமர வரிகள் மூலம் அவர் பல
கவிதைகளில் பாடிப் பெருமிதம் அடைந்தார்.
வந்தே மாதரம் தென்னாட்டை முழுதுமாக ஆக்கிரமித்தது.
பாரதியாரின் மந்திர கீதத்தைப் பாடியவாறே சுதந்திரப் போர் வீரர்கள் வீதி
வீதியாக வலம் வருவது வழக்கமானது!
இந்த கீதம் பிறந்தது எப்படி?
ஒரு முறை, 1875ஆம் ஆண்டை ஒட்டி இருக்கக்கூடும், பங்கிம் சந்திரர்
கல்கத்தாவின் பரபரப்பான வாழ்க்கையை விட்டுச் சற்று விடுமுறை ஓய்வு எடுக்க
எண்ணினார். சொந்த ஊரான கந்தலபாதாவிற்கு ரயிலில் ஏறினார். சொந்த ஊர்
நெருங்கியது. எங்கு நோக்கினும் பசுமை! பச்சைப் பசேலென மரகதப் போர்வை
போர்த்தியது போல இருந்த காட்சி அவரைப் பரவசப்படுத்தியது. அவர் உணர்வு
விசுவரூபம் எடுத்தது. அகன்ற தாய் நாட்டின் வற்றிடாத ஜீவ நதிகளும்,
பூத்துக் குலுங்கும் மலர்களும், செடி கொடிகளும், பழ வகைகளும் இன்னும்
எண்ணி மாளா அளவற்ற செல்வமும் அவர் மனக் கண் முன் விரிந்தன. அன்னையின்
விசுவரூபதரிசனத்தைப் பெற்ற அந்தக் கணத்தில் உதித்தது அந்த கீதம்!
"வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்
சஸ்ய சியாமளாம் மாதரம்; வந்தேமாதரம்"
காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை ஒலித்த கீதம் இங்கிலாந்தில் இருந்த
இந்தியப் புரட்சி வீரர்களின் கீதமாகவும் ஆனது.
வந்தே மாதரம் இந்திய சுதந்திரத்தின் கரு. அந்தக் கரு உருவாகிப் பெரிதாகி
இந்திய சுதந்திரத்தை ஈட்டித் தந்தது.
அந்த மாபெரும் சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியரின்
கடமையாகும்.
V
On Nov 7, 5:31 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> திரு.விஜயராகவன்.
>
> விளக்கத்திற்கும் இரண்டு பத்திகளுக்கு நன்றி.
> முழு பாடலையும் சிரமப்படாமல் கொஞ்சம் எழுதுங்கள். ஒருமுறை படித்து புரிந்து
> கொள்ள நிச்சயம் உதவும். யாரோ சென்னார்கள் என உணர்ச்சிவசப்படுவதற்கு பதிலாக
> முழுதையும் படித்து தெரிந்து கொண்டு இதில் பிரச்சனை இருக்கிறது/இல்லை என
> சிந்தித்து எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
> அன்புடன்
> சுபா
>
> 2009/11/7 விஜயராகவன் <viji...@gmail.com>
முதல் மொழிப்பெயர்ப்பு:http://www.lakshmansruthi.com/tamilbooks/
bharathiar/bharathi18.asp
இரண்டாம் மொழிப்பெயர்ப்பு: http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi19.asp
V
On Nov 7, 5:31 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> திரு.விஜயராகவன்.
>
> விளக்கத்திற்கும் இரண்டு பத்திகளுக்கு நன்றி.
> முழு பாடலையும் சிரமப்படாமல் கொஞ்சம் எழுதுங்கள். ஒருமுறை படித்து புரிந்து
> கொள்ள நிச்சயம் உதவும். யாரோ சென்னார்கள் என உணர்ச்சிவசப்படுவதற்கு பதிலாக
> முழுதையும் படித்து தெரிந்து கொண்டு இதில் பிரச்சனை இருக்கிறது/இல்லை என
> சிந்தித்து எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
> அன்புடன்
> சுபா
>
> 2009/11/7 விஜயராகவன் <viji...@gmail.com>
//தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே! (வந்தே)
6.
ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ! (வந்தே// - முதல்
மொழிப்பெயர்ப்பு
//அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை
மருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ;
தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே. (வந்தே)
5.
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வ// - இரண்டாம் மொழிப்பெயர்ப்பு.
பாரத மாதாவை, துர்கா தேவி ஆகவும், மஹாலக்ஷ்மி ஆகவும், சரஸ்வதி ஆகவும் ,
பூஜா தேவதாமூர்த்தியாக உருவகப்படுத்துவது தான் பிரச்சினையோ ?
மூல வடிவம்:
//तुमि विद्या तुमि धर्म, तुमि ह्रदि तुमि मर्म
त्वं हि प्राणाः शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारै प्रतिमा गडि मन्दिरे-मन्दिरे ॥
त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी
कमला कमलदल विहारिणी
वाणी विद्यादायिनी, नमामि त्वाम्
नमामि कमलां अमलां अतुलाम्
सुजलां सुफलां मातरम् ॥//
//துமி வித்³யா துமி த⁴ர்ம, துமி ஹ்ரதி³ துமி மர்ம
த்வம்² ஹி ப்ராணா: ஸ²ரீரே
பா³ஹுதே துமி மா ஸ²க்தி,
ஹ்ரு²த³யே துமி மா ப⁴க்தி,
தோமாரை ப்ரதிமா க³டி³ மந்தி³ரே-மந்தி³ரே ॥
த்வம்² ஹி து³ர்கா³ த³ஸ²ப்ரஹரணதா⁴ரிணீ
கமலா கமலத³ல விஹாரிணீ
வாணீ வித்³யாதா³யிநீ, நமாமி த்வாம்
நமாமி கமலாம்² அமலாம்² அதுலாம்
ஸுஜலாம்² ஸுப²லாம்² மாதரம் ॥//
ஸ்ரீ அரவிந்தரின் மொழிப்பெயர்ப்பு:
//Thou art wisdom, thou art law,
Thou art heart, our soul, our breath
Though art love divine, the awe
In our hearts that conquers death.
Thine the strength that nervs the arm,
Thine the beauty, thine the charm.
Every image made divine
In our temples is but thine.
Thou art Durga, Lady and Queen,
With her hands that strike and her
swords of sheen,
Thou art Lakshmi lotus-throned,
And the Muse a hundred-toned,
Pure and perfect without peer,
Mother lend thine ear,
Rich with thy hurrying streams,
Bright with thy orchard gleems,
Dark of hue O candid-fair
//
http://it.answers.yahoo.com/question/index?qid=20071123230728AAwfiq4
**************************************************************
துர்கா தேவியை - வீரத்தின் உருவகமாகவும், மஹாலக்ஷ்மி - செல்வத்தின்
உருவகம், சரஸ்வதி - கல்வியின் உருவகம் ; என வைத்துக்கொள்வதில் என்ன
பிரச்சினை ??
****************************************************************
அகண்ட பாரதம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, காந்தாரமும், தக்ஷசீலமும்,
சிந்தும், பாதி பஞ்சாபும் இந்தியா இல்லை என்று ஆகிவிட்டது.
இன்னும் இந்தியவை சுருக்க பார்க்கிறார்க்ள் :-((((((((((((((((((
V
It is a shameful thing that considering the vote bank, Chidambaram has endorsed the view of the clerics! It is a pity that the Congress which revolted against British with this great song, now endorses the views of teh Islamics fundamentalists. We need not bother about our great Draviada kazhakam people! we know their stand from the beginning. Narasiah --- On Sat, 11/7/09, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote: |
V-P's wife wonders fuss about 'Vande'
PTI - STAFF WRITER 20:26 HRS IST
http://www.ptinews.com/news/366671_V-P-s-wife-wonders-fuss-about--Vande-
Rampur (UP), Nov 7 (PTI) Days after a Muslim body asked the community
not to recite Vande Mataram, Vice President Hamid Ansari's wife today
wondered why the national song had become "a subject of discussion".
"If someone recites Vande Mataram why do others make that a subject of
discussion? We have also been reciting poet Iqbal's 'Saare Jahan Se
Aacha' in the same spirit," Salma Ansari said here.
Speaking at a school function, Ansari asked the Muslim leaders to work
with a missionary zeal to bring about its development of the
community.
Jamiat Ulama-e-Hind had on Tuesday asked members of the community not
to recite 'Vande Mataram' on the ground that some verses of the
national song were against the tenets of Islam.
.........................................பாவம் அந்த கிழவர்கள், நிறைய
விஷயங்கள் சொல்வார்கள்! கேட்டுக்கொண்டே இருக்கலாம்!!
On Nov 8, 6:19 am, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> It is sad enough the Islamic fundamentalists cry foul about Vande Mataram.
> Sadder the DK should understand the hymn in its own way; saddest of all is
> not a single Congress leader starting from Sonia (Mother Sonia to Kazhaka
> kaNmaNikal) down to the last member no one has condemned the Muslim Fatwa!
>
> Is thisSecularism?
>
> I am ashamed as I was once a four anna member of the Congress party!
> Narasiah
>
> 2009/11/8 N. Kannan <navannak...@gmail.com>
>
> > இது மிகக்கேவலமாக இல்லை?
>
> > நம் அன்பிற்குரிய ஏ.ஆர்.ரகுமான் இப்பாடலை எவ்வளவு அற்புதமாக இசை அமைத்து தேசிய
> > ஒற்றுமைக்கு வித்திட்டு இருக்கிறார். அவர் அதில் `மம்மா சலாம்` என்றுதான்
> > சொல்லுவார். சலாம் என்று சொல்லிவிட்டால் அன்பு போய்விடுமா என்ன? கேவலமாக
> > இருக்கிறது.
>
> > என் பெண் பனராஸில் சில மாதங்கள் படித்த போது முஸ்லிம் தெருக்களில் அவள்
> > பாதுகாப்பாக இருந்ததாக உணர்ந்திருக்கிறாள்.
>
> > முஸ்லிம் மக்களுக்கு நல்ல கல்வி அறிவு, வேலை வாய்ப்பு போன்றவற்றை வழங்க
> > வேண்டும். அவர்களுக்கு இயல்பாக இந்திய (தேசிய) உணர்வு பீரிடும்.
>
> > மதம் ஒரு தடையல்ல. இந்தோனீசியாவிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
> > அங்கு ஒரு முஸ்லிம் கலைஞன்தான் `இராமாயணம் தோல்பாவைக் கூத்தை` நடத்துகிறான்.
> > கேட்டால் அது பாரம்பரியம், இது மதம் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறான். போவது
> > மசூதிக்கு, ஆனால் பெயரைப்பார்த்தால் ஹரி விபீஷன் பிர்மான் என்று இருக்கும்.
> > என்னடா இப்படி கலந்து அடிக்கறே? என்றால் அது கலப்பு என்றே தெரியாவண்ணம் அங்கு
> > கலாச்சாரம் ஊறிக்கலந்திருப்பது தெரியும்.
>
> > இந்தியாவிற்கு முன்மாதிரியாக இந்தோனீசியா இருக்க வேண்டும். பாகிஸ்தானோ,
> > மலேசியாவோ, அரபு நாடுகளோ இருக்கக்கூடாது. இந்த மண்ணில் பிறந்தவன் அடிப்படையாக
> > இந்தியவன். அவனுக்கு இந்த மண்ணின் இயல்பு இருப்பது இயற்கை. வலுக்கட்டாயமாக அவன்
> > மீது மாற்று அடையாளங்களை திணிக்கக்கூடாது.
>
> > கண்ணன்
>
> > 2009/11/8 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
அப்போது, இந்தப் பாடலின் மூலம் என்ன, எதிர்ப்பு எப்படி உருவாயிற்று
ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணி குறித்து எனது விரிவான கட்டுரை ஒன்று
திண்ணை இதழில் வந்தது.. இங்கே படிக்கலாம் -
வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச
விரோத விஷ விருட்சங்களும்
http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115735972528194365.html
இதில் ஒரு பகுதி கீழே. இந்த இஸ்லாமியக் குருட்டு வெறியை லாகிக்கலாக
extrapolate செய்தால் அது எங்கெங்கெல்லாம் இட்டுச் செல்லும் என்று
பாருங்கள்..
-----------------------------
எதிர்ப்பு வாதத்தின் விபரீத பரிமாணங்கள்:
தேசியப் பாடலின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். மண்டையை உடைத்துக்கொண்டு
தேடினாலும், இதில் இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று
புரியவில்லை. முகமது நபி தேவதூதர் இல்லை என்றும், அல்லா கடவுள் இல்லை
என்றும் ஏதாவது இருக்கிறதா? “மாதரம்” (தாயே) என்ற சொல் தான் இருக்கிறதே
தவிர கடவுள், தெய்வம் என்று எந்தச் சொற்களும் கூட இல்லை. இது ஒரு சமய
சார்புடைய பாடல் என்று கருதுவதற்கு முகாந்திரமே இல்லை.
அப்படியானால், “தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? இஸ்லாம்
தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே “அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம்” என்றல்லவா பாரதப் பண்பாடு கூறி வருகிறது? ஒருவேளை,
பெண்மையையும், இயற்கையையும் போற்றுவது இஸ்லாமிற்கு எதிரானதா? “அல்லா”
என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும் ஆண் கடவுள் மற்றும் தெய்வீகம் பற்றிய ஒரு
குறுகிய அராபியக் கருத்து மட்டுமே (சமய அடிப்படையில் மட்டுமல்ல, எந்த
அடிப்படையிலும்) போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரியதா? இது ஒரு
காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான நிலைப்பாடு அல்லவா? கொஞ்சம்
சிந்தியுங்கள் - “இஸ்லாமுக்கு எதிரானது” என்று இமாம்கள் கூறும் இந்த
சொத்தை வாதத்தை வைத்து வந்தே மாதரம் பாட மறுப்பவர்களை அங்கீகரித்தால்
எதையெல்லாம் அங்கீகரிக்க வேண்டும்?
1) வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும்
பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற
பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில்
போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” - திலகம் வைத்துக் கொள்வது
இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை
இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது
“வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா?
சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு உடனே அதை ஏற்றுக்கொண்டு “ஆமாம், ஆமாம்,
முஸ்லீம்கள் பாட வேண்டாம்” என்று சொல்லி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்த
வேண்டாமா? நாகூர் ரூமி உடனே இதற்கு வக்காலத்து வாங்கி பல அரபு
மேற்கோள்களுடன் ஒரு புத்தகம் எழுத வேண்டாமா?
2) தமிழ் மறை என்று நாம் எல்லாரும் ஏற்றுக்கொண்ட திருக்குறள்? “அகர முதல
எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது இஸ்லாமிற்கு எதிரானது, அதை
மாற்றி “அலிஃப் முதல எழுத்தெல்லாம் அல்லாஹு முதற்றே உலகு” என்று மாற்றித்
தான் படிப்போம் என்றாலும் மற்ற குறள்களை என்ன செய்வது? “தீதின்றி வாழும்
திரு”, “செய்யவள்”, “தாமரையினாள்” – லட்சுமியைப் பற்றி எத்தனை இடங்களில்
வருகிறது? இஸ்லாமுக்கு எதிரான இந்த நூலை முஸ்லீம்கள் படிக்க வேண்டும்
என்று அரசு கட்டாயப் படுத்தலாமா - கூடவே கூடாது ! திருக்குறளே இல்லாத
தமிழ்ப்பாட நூல்களில் சிலம்பும், கம்பராமாயணமும், திருமுறைகளும் எதற்கு?
தூக்கு இவை எல்லாவற்றையும் !
3) தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச்
சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத
வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு
எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள்.
எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!
4) இப்படி, இந்த இமாம்கள் கூறும் “இஸ்லாமுக்கு எதிரான” விஷயங்களுக்கு
ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி பாராளுமன்றத்தில் பேசும் அர்ஜின் சிங், இந்த
தேசத் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கி திண்ணையில் கட்டுரை எழுதிய கற்பக
விநாயகம் – இந்தக் காஃபிர்கள் உயிரோடு இருப்பதே இஸ்லாமுக்கு எதிரானது
அல்லவா? அர்ஜுன் சிங்கும், க.வி.யும் ஜிகாதிகளின் கையால் மரணத்தை ஏற்றுக்
கொண்டு ஜஹன்னும் (இஸ்லாமிய நரகம்) போகத் தயார் தானா?
இதெல்லாம் விபரீதமான கற்பனை போலத் தோன்றலாம். வந்தே மாதரத்தை எதிர்க்கும்
இமாம்களிடம் போய் இதில் வரும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் –
பதில்கள் எப்படி வருகின்றன என்று. பாரதப் பண்பாடு என்பதே இஸ்லாமுக்கு
எதிரானது என்ற முடிவில் தான் அது வந்து நிற்கும். ஏழாம் நூற்றாண்டு
அராபியப் பாலைவனத்தின் கற்பனைகளுக்கு எட்டாத எந்த விஷயத்தையும்
“இஸ்லாமுக்கு எதிரானது” என்ற ஒற்றை வாதத்தின் மூலம் அவர்கள்
நிராகரிப்பார்கள் (ஆனால் அதி நவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள், எறி
குண்டுகள், ராக்கெட்டுகள் எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானவை அல்ல –
அவையெல்லாம் ஜிகாதில் துணை புரிவதற்காக அல்லாவால் அனுப்பப் பட்டவை!!)
-----------------------------
உலகில் மிக அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட நாடு இந்தோனீசியா.
பாகிஸ்தான் உருவான கையோடு ஜின்னா அங்கு போயிருக்கிறார். அவர்கள் சராங்,
தொப்பியோடு, தங்களது ரூபாய் நோட்டில் விநாயகர் படம் போட்டு, இராமாயண
தோல்பாவையெல்லாம் நடத்துவதைக் கண்டு, நம் ஜின்னா நொந்துவிட்டார். இது
என்ன காஃபீர்கள் வழக்கம் என்ன இது என்று கேட்டிருக்கிறார். சுகார்த்தோ
நாங்கள் எங்கள் பாரம்பரியத்தையும், மதத்தையும் குழப்பிக்கொள்வதில்லை
என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
உலகின் முதல் முஸ்லிம் நாடான இந்தோனீசியாவை முஸ்லிம்கள் பின்பற்றுவதா,
மதத்தின் பெயரால் அண்ணனும், தம்பியுமாக வாழும் இந்தியர்களைச் சூதாடும்
மதி கெட்டோர் பேச்சைக் கேட்டு வந்தே மாதரத்திற்கு பட்வா போடுவதா என்று
தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் பெற்ற தாயை மதி, பின் உனக்கு வாழ்வளிக்கும் மண்ணை மதி, அதன்
பின்னால் மதத்தை மதி!
கண்ணன்
க.>
2009/11/8 Vedaprakash <vedamved...@yahoo.com>:
முழுப்பாடையும் தமிழில் கேட்டீர்கள், கொடுத்தேன். எனக்கு கவிதை நயம்,
கவிதை மனம் எல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு தெரிந்த தமிழில் போட்டு
விட்டேன். சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் மூன்று வெர்ஷன்களைப் பார்த்து
எனக்கு தோன்றியது. முடியும் வரை மூல் சமஸ்கிருத வெர்ஷனை பின்பற்றி
இருக்கேன்.
==============================
எழுபது கோடி கைகள்
வாளுடன் எழும்போது
எழுபது கோடி குரல்கள் உன் பெயரை
கடல்களுக்கு நடுவில் கர்ஜிக்கும் போது
யார் உன்னை அபலை என்பது
பல பலங்களின் பொக்கிசமாகி
நீதான் அன்னை நீதான் எஜமான்.
காற்பவளே,எழுந்து காப்பாற்று.
எதிரியை நிலத்திலிருந்து கடலுக்குள்
ஓட்டி விடுதலையான
அன்னையே, வணக்கம்
நீதான் விவேகம், நீதான் அறம்
நீதான் இதயம், ஆனமா, மூச்சு
நீதான் மரணம் வெல்லும்
புண்ணிய காதல்.
புஜபலம் உன்னால்
நீதான் அழகு நீதான் நயம்
ஆலய படிமங்கள்
உன் பிரதி
தாக்கும் கைகளும்
மின்னும் வாள்களும்
உடைய நீதான் துரகை
தாமைரையாள் லக்ஷ்மியும்
அறிவுமகள் வாணியும் நீயே
தூய்மை, நிகரில்லா செம்மை
நலநீர்களும்,சுவை கனிகளோடும்
உள்ள தாயே வணக்கம்
கருநிறத்தாள்,அணியுடன் கேசமாம்
தெய்வீக் குறுநகையாள்
செல்வக்கொழிப்பை கொடுப்பவள்
அன்னையே வணக்கம்
============================
On 7 Nov, 12:31, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> திரு.விஜயராகவன்.
>
> விளக்கத்திற்கும் இரண்டு பத்திகளுக்கு நன்றி.
> முழு பாடலையும் சிரமப்படாமல் கொஞ்சம் எழுதுங்கள். ஒருமுறை படித்து புரிந்து
> கொள்ள நிச்சயம் உதவும். யாரோ சென்னார்கள் என உணர்ச்சிவசப்படுவதற்கு பதிலாக
> முழுதையும் படித்து தெரிந்து கொண்டு இதில் பிரச்சனை இருக்கிறது/இல்லை என
> சிந்தித்து எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
> அன்புடன்
> சுபா
>
> 2009/11/7 விஜயராகவன் <viji...@gmail.com>
> > > - Show quoted text -- Hide quoted text -
தேவ்
> ...
>
> 추가 정보 »- 원본 텍스트 숨기기 -
>
> - 원본 텍스트 보기 -
கல்கத்தாவில் 3 வருடம் தங்கினாலும் , வங்காளியை நல்ல அளவு கற்கவில்லை ,
வீணாப்போன வாய்ப்பு.
நீங்கள் அதை விரும்பினால், சந்தோஷம்தான்
விஜயராகவன்
On 8 Nov, 14:42, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> நன்றாக இருக்கிறது திரு விஜயராகவன். வங்காள மொழி தெரியுமா?
> தெரிந்தால் நல்ல பல வங்க சாஹித்யங்களை மொழிபெயர்ப்புகள் செய்து
> உதவுங்களேன். உங்கள் தமிழே போதும் அழகாக இருக்கிறது.
>
“லக்னோ: தேசபக்திப் பாடலான வந்தேமாதரத்துக்கு, இஸ்லாமிய மாநாட்டில்
எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட, “பத்வா’ குறித்து, இஸ்லாமிய
அறிஞர்கள் விளக்கம் அளித் துள்ளனர்.
சமீபத்தில், உ.பி., தியோபந்த்தில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் தேசபக்திப்
பாடலான, “வந்தே மாதரம்’ பாடலை முஸ்லிம்கள் பாடுவதற்குத் தடை விதித்து,
“பத்வா’ பிறப்பிக்கப் பட்டது. இது நாடு முழுவதும் சலசலப்பைக் கிளப்பியது.
இந்நிலையில், பத்வா குறித்து தங்கள் நிலைப் பாட்டை இஸ்லாமிய அறிஞர்கள்
தெரிவித் துள்ளனர். அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டக் குழுவின்
தலைவர் மவுலானா கல்பே சாதிக், அனைத்திந்திய ஷியா தனிநபர் சட்டக்குழுவின்
தலைவர் மிர்ஜா முகமது அத்தர், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர்
சட்டக்குழுவின் தலைவர் ஷாயிஸ்தா அம்பேர் ஆகியோர் கூறியிருப்பதாவது:
முஸ்லிம்கள் தாய் நாட்டை நேசிக்கின்றனர்.
வந்தே மாதரம் பாடலை மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஏற்றுக் கொண் டார். அதனால்
அதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். சம்ஸ்கிருத, இந்தி, உருது அறிஞர்கள்
கூடி, “வந்தே’ எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்பதைக் கூற
வேண்டும்.அச்சொல், “மரியாதை’ என்ற பொருளில் கையாளப்பட்டிருந்தால் அதை
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். “வழிபாடு’ என்ற பொருளில் இருந்தால் அந்தப்
பாடலை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Some clerics soften stand on 'Vande Mataram'
TNN 10 November 2009, 02:49am IST
http://timesofindia.indiatimes.com/india/Some-clerics-soften-stand-on-Vande-Mataram/articleshow/5213892.cms
MUZAFFARNAGAR: Six days after the Jamiat-Ulema-e-Hind passed a
resolution asking Muslims not to sing Vande Mataram on the grounds
that it was
‘‘un-Islamic’’, the community’s clerics have reportedly softened their
stand. The change of heart came after spiritual leader Sri Sri Ravi
Shankar, visited Deoband on November 8, 2009, and met Jamiat leaders.
The issue was discussed at a one-hour-long meeting, at which Maulana
Margub Ur-rehman of Darul-Uloom, Darul Iftah in charge Mufti Habibur
Rehman, Mufti Ehsaan Qasmi and Usman Mansoorpuri of the Jamiat were
present. At the end of it, the ulema said they did not have any
objection to the national song and had left it to the conscience of
Muslims who could decide for themselves whether they wanted to sing
the song or not.
The fatwa department of Darul Uloom had issued an edict in 2006,
describing the recitation of Vande Mataram as anti-Islamic. Darul
Uloom’s vice-chancellor Maulana Abdul Khalik Madrasi, however, said
that a fatwa was not an order but a guiding principle. ‘‘People may
abide by it or ignore it,’’ he said, adding that the seminary issued
fatwas only when someone approached them ‘‘to seek guidance’’.
Maulana Madrasi, however, made it clear that the seminary could not
withdraw the edict which was issued three years ago.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
பேரண்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்கள் திரு. ஜடாயு மற்றும் திரு. நரசைய்யா அவர்களுக்கு!
தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
என்ன அண்ணே இப்படி பேசுகிறீர்கள்! கொஞ்சம் வார்த்தை களில் கண்ணியம் காட்டியிருக்கக்கூடாதா? ஒரு நாட்டின் பிரஜையாகிய தாங்கள் மற்றொரு பிரஜையாகிய என்னைப் போன்ற இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசுவதுதான் தேசத்தந்தை காந்தியடிகள், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் போன்றோர் காட்டித்தந்த வழிமுறையா? எங்கே அண்ணே உங்கள் வார்த்தைகள் எங்கே அண்ணே நம்முடைய தேசத்திற்காக தியாகம் செய்த மாமேதைகள்! இந்த மின் தமிழ் குழுமத்தில் இஸ்லாமியர்களும் பங்கு பெறுகின்றனர் என்பதை மறந்துவிட்டீர்களோ!
ஆமாம் அய்யா! தேச விடுதலைக்காக தன் இன்னுயிரை நீத்தவர்களில் கொடிகாத்த குமரன் மட்டும்தான் உங்களுக்குத் தெரியும் ஆனால் இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு தங்கள் வாழ்க்கையை அற்பணித்து செத்து மடிந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான் அவரை நயவஞ்சகமாக கொண்றது ஒரு ஆங்கில குரங்குகள் பின்னர் திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806-ஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.
ஜாலியன் வாலாபாக் அதாவது இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக்களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.
இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.
பேரண்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்கள் திரு. ஜடாயு மற்றும் திரு. நரசைய்யா அவர்களே முஸ்லிம்கள் நாமெல்லாம் உங்கள் பார்வையில் தேசதுரோக நச்சுப் பாம்புகள் தானே. அதனால் தானே இன்று சிறுபாண்மை யினருக்கு 3.5% சதவீத குறைந்த இட ஒதுக்கீடு அதனால் எங்கள் குழந்தைகளும் சகோதரர்களும் பஞ்சர் கடைகளை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் நீங்களோ பதவிகளில் அமர்ந்து மக்களின் வரிப்பணத்தை சுரண்டுகிறீர்கள்!
2) இஸ்லாமியக் குருட்டு வெறி, இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று புரியவில்லை, சமய சார்புடைய பாடல்
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் முதல் கடமை அப்படியிருக்க அதை விட்டுவிட்டு பாரதமாதாவை வணங்கும் விதமாக பாடல் இருந்தால் அதை ஏற்று எங்கள் இஸ்லாத்தை விட்டுவிட சொல்கிறீரா? அப்படியானால் சகோதரரே நீங்கள் இங்கு இந்துத்துவாவை எங்கள் மீது சாட்டுகிறீரா? அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் அவனே அதற்கு தகுதியானவன் இரு குருட்டு வெறி என்று சொல்வதில் தவறு கிடையாது. அல்லாஹ் இவ்வாறுதான் எங்களுக்கு கட்டளையிடுகிறான் படியுங்கள்
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (திருக்குர்ஆன் 25:73)
3) தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? பெண்மையையும், இயற்கையையும் போற்றுவது இஸ்லாமிற்கு எதிரானதா?
இஸ்லாம் பெண்மை பற்றி இவ்வாறு கூறுகிறது!
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவருக்கு உதவிகள் செய்வீராக” என்றனர். இப்னு உமர்(ரலி) : திர்மிதீ.
இஸ்லாம் தாயை பற்றி இவ்வாறு கூறுகிறது!
“அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தந்தை” என்றார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்
இஸ்லாம் பெற்றோர்களுக்கு பரிவுகாட்டும் வாங்கும் மார்க்கம்!
“அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி(ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன். “முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள். அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம், திர்மிதீ
பெற்ற தாயை அரவணைக்க இஸ்லாம் போதிக்கிறது!
“நபி(ஸல்) காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடி வந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார், அவரைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்” அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள் என்றனர். அஸ்மா பின் அபீபக்கர்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.
4) “அல்லா” என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும் ஆண் கடவுள்
அல்லாஹ் ஆண் கடவுள் என்று எங்கேயாவது கூறியிருக்கிறானா? அல்லது படித்திருக்கிறீரா? ஏன் தேவையில்லாம்ல் உளருகிறீர்! நீங்கள் மனிதர்களாக இருப்பதால் இறைவனும் மனிதனாக இருப்பான் என்பது உங்கள் ஐதீகம் இதனால்தான் உங்களை விட சக்திவாய்நதவன் கடவுள் எனறு எண்ணி 10 கைகளை கொடுக்கிறீர்கள். நீங்கள் சிவனையும், பார்வதியையும், அர்த்தனாரீஸ்வரனையும் வணங்குவீர்கள் இதை பற்றி விமர்சனம் செய்யலாம் ஆனால் எனக்கு என் மார்க்கம் தடை விதிக்கிறது. இதோ அல்லாஹ்வின் கண்ணியமான அறிவுரை
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.(திருக்குர்ஆன் 6-108)
5) இது ஒரு காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான நிலைப்பாடு அல்லவா?
ஆம் இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் இஸ்லாத்தின் மீது உறுதியாக இருக்கிறோம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அந்த செயல் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம் இதை காட்டுமிராண்டித்தனம் என்றால் இந்துக்களாகிய நீங்கள் தெய்வ வழிபாடு என்று கூறி குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்து பிறகு உயிருடன் எடுத்துவிடுகிறீர்களே அது என்ன ?
6) வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும்
ஆம் ஏன் பொருந்தாது! சிவனுடைய பாடலில் தவறு இருப்பது கண்டு நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றுதானே தமிழ்க்கவிஞர்கள் அருமை நக்கீரர் பாடுகிறார்கள் அவ்வாறு இருக்க பாடலில் குறை இருந்தால் உங்கள் வழிமுறையைத் தானே நாம் பின்பற்றுகிறோம்.
7) தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா?
உங்கள் யோசனைக்கு நன்றி! இதை முடிந்தவரை தமிழ் முஸ்லிம்களிடம் எடுத்துச் சென்று ஃபத்வா கொடுக்க முயற்சிக்கிறேன்.
8) நாகூர் ரூமி உடனே இதற்கு வக்காலத்து வாங்கி பல அரபு மேற்கோள்களுடன் ஒரு புத்தகம் எழுத வேண்டாமா?
அட! நாகூர் ரூமி எதற்கு நானே இருக்கிறேன்! என்னால் கூட உங்களுக்கு விளக்கம் அளிக்க முடியுமே! இஸ்லாத்தில் 1000 பேர் அல்ல கோடானு கோடி மக்கள் தவறை விளக்கிக்க்காட்ட உள்ளனர் ஒருவரை மட்டும் ஏன் நம்புகிறீர்.
9) தமிழ் மறை என்று நாம் எல்லாரும் ஏற்றுக்கொண்ட திருக்குறள்?
சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே! திருக்குரள் தமிழ்மறைதான் திருக்குர்ஆன் தான் உலகப் பொதுமறை இதில் என்ன சந்தேகம். இதை நான் கூறவில்லை அல்லாஹ்தான் தன் திருமறையில் கூறுகிறான் சற்று அந்த வசனத்தை படிக்கிறீரா?
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. (10:37)
10) தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு.
சகோதரரே! தேசியக் கொடியில் சக்கரம் இருப்பது நம் நாட்டில் உள்ள மாநிலங்களைக் குறித்துதானே தவிர வேறொன்றுமில்லை. தேசியக் கொடியில் விலங்கினங்கள் இல்லை இது நமது தேசத் தலைவர்களின் அழகிய நடைமுறை! சத்யமேவ ஜயதே என்பது என்ன வாய்மையே வெல்லும் என்பதே! ஆம் உண்மைதான் எப்போதும் வெல்லும் இது சமஸ்கிருத்தில் இருந்தால் என்ன அரபியில் இருந்தால் என்ன பொதுவான வார்த்தைதானே! சிவனே வெல்லும் அல்லது பார்வதியே வெல்லும் என்று இருந்தால்தானே சர்ச்சை உருவாகும்.
11) அர்ஜுன் சிங்கும், க.வி.யும் ஜிகாதிகளின் கையால் மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜஹன்னும் (இஸ்லாமிய நரகம்) போகத் தயார் தானா?
சுவர்கம் நரகம் ஆகியவற்றை தீர்மாணிக்கும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது நீங்கள் அதை கூற தகுதியற்றவர்.
12) வந்தே மாதரத்தை எதிர்க்கும் இமாம்களிடம் போய் இதில் வரும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் – பதில்கள் எப்படி வருகின்றன
இமாம்களை ஏன் கேட்கிறீர்கள் என்னிடம் கேளுங்கள் நானே போதும். ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம் என்பார்கள் தமிழல் நான் ஒரு சோறாக இருக்கிறேன் என்னிடமே பதம் பார்க்கவும்!
13) ஆனால் அதி நவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள், எறி குண்டுகள், ராக்கெட்டுகள் எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானவை அல்ல – அவையெல்லாம் ஜிகாதில் துணை புரிவதற்காக அல்லாவால் அனுப்பப் பட்டவை!
ஆம் சகோதரர்களே! நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த முஸ்லிம்களின் பாபர் மசூதியை இடித்தற்கு உங்கள் தெய்வம் ராமன்தான் படையை அனுப்பினாரா? அல்லது கிருத்தவ தேவாலயத்தை தீயிட்டு கொழுத்த வடநாடுகளில் உங்கள் தெய்வம் தான் தீ மூட்டித் தந்தாரா? அல்லது கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் அப்பாவி சாமியார்களை சொந்த மாநில முதலமைச்சரே கொண்றுவிட அவருக்கு உங்கள் தெய்வமாகிய அனுமான் தான் தன் வாலில் மண்ணென்னை பிடித்து ஊற்றி இலங்கையை எறித்தது போல் எறித்துவிட்டு அப்பாவி முஸ்லிம் பெண்களை மாணபங்கம் செய்தாரா? உங்களுக்குத்தான் வாய் உள்ளதோ!
ஜிஹாத் பற்றி விளக்கம் தேவையெனில் அதற்கும் ஒரு கட்டுரையை வரைகிறேன் அதற்கு முன் கீழ்கண்டவைகளை படியுங்கள்!
ஜிஹாது என்பது இரண்டு வகைப்படும்
சொந்த நாட்டுக்காக சொந்த நாட்டு மக்களின் உடமைகளை காக்க எதிரிநாட்டினரின் மீது படையெடுப்பது ஜிஹாது எனப்படும் அதாவது இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனா மீது படையெடுப்பதற்கு சமமாகும். மற்றொன்று தீன் கல்வி அதாவது திருமறை மற்றும் நபிவழியை மக்களுக்க போதித்து ஒரு ஆசிரியராக இருப்பதும் ஜிஹாது எனப்படும் மற்றொன்று விளக்கம் கூற வேண்டுமானால் கீழே உள்ள நபிமொழியை படியுங்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் போரில் பங்கெடுக்க விரும்புகிறேன். (அது பற்றி) உங்கள் ஆலோசனையைக் கேட்க வந்துள்ளேன்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “அவரைப் பற்றிக் கொள், ஏனெனில் சுவர்க்கம் அவரது காலடியில் உள்ளது” என்று கூறினார்கள். முஆவியா பின் ஜாஹிமா(ரலி) : நஸயீ, அஹ்மத், ஹாகிம்.
அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:- "எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ் விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
''யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும்'' (முஸ்லிம், திர்மிதீ)
உங்கள் வார்த்தை பிரயோகத்தால் தமிழ்பண்பாட்டை கப்பலேற்றிவிடாதீர்கள், இங்கு பெரிய தமிழ் சான்றோர்கள் உள்ளனர் அவர்களை தமிழராகிய உங்களால் தலைகுனிவு வரக்கூடாது என்பதே என் பேரவா? இதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்த நில்லடா! இந்தியன் என்று சொல்லடா இதயத்தை இந்தியர்களுக்கு என்று சொல்லடா? இந்திய உணர்வுடன் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது எனக்கும் பேச உரிமை உள்ளது! வந்தே மாதரம் என்ற பாடலை எதிர்க்க நாட்டு குடிமகன் என்ற அந்தஸ்து உள்ளது அது போதும் எங்கள் உரிமையை கூற. தயவு செய்து எங்கள் மார்க்கத்தை இழிவாக பேசாதீர்கள் எங்கள் உரிமைகளை பரிக்காதீர்கள்!
குறிப்பு
நாங்கள் தேசத் துரோக நச்சுப்பாம்பு என்ற பட்டம் பெற்றது ஒரு தமிழனால் என்று மரணிக்கும் வரை கூறுவோம்! அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான்!
அல்ஹம்துலில்லாஹ்!
குறிப்பு
முஸ்லிம்களாகிய நாங்கள் தேசத் துரோக நச்சுப்பாம்பு என்ற பட்டம் பெற்றது ஒரு தமிழனால் என்று மரணிக்கும் வரை கூறுவோம்! அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான்!
அல்ஹம்துலில்லாஹ்
பேரண்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்கள் திரு. ஜடாயு மற்றும் திரு.
நரசைய்யா அவர்களுக்கு!
தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
என்ன அண்ணே இப்படி பேசுகிறீர்கள்! கொஞ்சம் வார்த்தைகளில் கண்ணியம்
காட்டியிருக்கக்கூடாதா? ஒரு நாட்டின் பிரஜையாகிய தாங்கள் மற்றொரு
பிரஜையாகிய என்னைப் போன்ற இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசுவதுதான்
தேசத்தந்தை காந்தியடிகள், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் போன்றோர்
காட்டித்தந்த வழிமுறையா? எங்கே அண்ணே உங்கள் வார்த்தைகள் எங்கே அண்ணே
நம்முடைய தேசத்திற்காக தியாகம் செய்த மாமேதைகள்! இந்த மின் தமிழ்
குழுமத்தில் இஸ்லாமியர்களும் பங்கு பெறுகின்றனர் என்பதை
மறந்துவிட்டீர்களோ!
இதோ வந்தே மாதரம் பாடலுக்கு தாங்கள் முற்படுத்திய குற்றச்சாட்டுக்களும்
ஒரு முஸ்லிம் என்ற தரப்பில எனது பதில்களும்!
1) தேசதுரோக நச்சுப் பாம்புகள்
ஆமாம் அய்யா! தேச விடுதலைக்காக தன் இன்னுயிரை நீத்தவர்களில் கொடிகாத்த
குமரன் மட்டும்தான் உங்களுக்குத் தெரியும் ஆனால் இஸ்லாமியர்கள் எந்த
அளவுக்கு தங்கள் வாழ்க்கையை அற்பணித்து செத்து மடிந்தார்கள் என்பது
உங்களுக்கு தெரியுமா?
'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது
மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான் அவரை நயவஞ்சகமாக கொண்றது ஒரு
ஆங்கில குரங்குகள் பின்னர் திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை
வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின்
வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய
தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806-ஆம்
ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில்
திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால்
துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம்
வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.
சகோதரரே ஜான்சி ராணி லட்சுமிபாய் மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தெரியும்
ஆனால் இஸ்லாமிய குடும்ப பெண்கள் பற்றி தெரியுமா இதோ இந்திய விடுதலைப்
போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம்
பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்புவின் குடும்பப் பெண்கள். பேகம்
ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்
ஜாலியன் வாலாபாக் அதாவது இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான
ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது
பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த
மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர்
என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக்களை
சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக்
கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை
அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
அவர்களின் கருத்துப்படி
இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும்
முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை
விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின்
விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.
பேரண்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்கள் திரு. ஜடாயு மற்றும் திரு.
நரசைய்யா அவர்களே முஸ்லிம்கள் நாமெல்லாம் உங்கள் பார்வையில் தேசதுரோக
நச்சுப் பாம்புகள் தானே. அதனால் தானே இன்று சிறுபாண்மையினருக்கு 3.5%
சதவீத குறைந்த இட ஒதுக்கீடு அதனால் எங்கள் குழந்தைகளும் சகோதரர்களும்
பஞ்சர் கடைகளை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் நீங்களோ பதவிகளில்
அமர்ந்து மக்களின் வரிப்பணத்தை சுரண்டுகிறீர்கள்!
2) இஸ்லாமியக் குருட்டு வெறி, இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று
புரியவில்லை, சமய சார்புடைய பாடல்
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் முதல் கடமை
அப்படியிருக்க அதை விட்டுவிட்டு பாரதமாதாவை வணங்கும் விதமாக பாடல்
இருந்தால் அதை ஏற்று எங்கள் இஸ்லாத்தை விட்டுவிட சொல்கிறீரா?
அப்படியானால் சகோதரரே நீங்கள் இங்கு இந்துத்துவாவை எங்கள் மீது
சாட்டுகிறீரா? அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் அவனே அதற்கு தகுதியானவன் இரு
குருட்டு வெறி என்று சொல்வதில் தவறு கிடையாது. அல்லாஹ் இவ்வாறுதான்
எங்களுக்கு கட்டளையிடுகிறான் படியுங்கள்
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு
நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது
விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (திருக்குர்ஆன்
25:73)
3) தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? பெண்மையையும்,
இயற்கையையும் போற்றுவது இஸ்லாமிற்கு எதிரானதா?
இஸ்லாம் பெண்மை பற்றி இவ்வாறு கூறுகிறது!
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப்
இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்)
அவர்கள் “அவரைப் பற்றிக் கொள், ஏனெனில் சுவர்க்கம் அவரது காலடியில்
உள்ளது” என்று கூறினார்கள். முஆவியா பின் ஜாஹிமா(ரலி) : நஸயீ, அஹ்மத்,
ஹாகிம்.
அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:- "எவர் எம்மால் ஏவப்படாத
அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ் விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்.
அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரீ, முஸ்லிம்)
''யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு
சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது
உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி
நிலையாகும்'' (முஸ்லிம், திர்மிதீ)
உங்கள் வார்த்தை பிரயோகத்தால் தமிழ்பண்பாட்டை கப்பலேற்றிவிடாதீர்கள்,
இங்கு பெரிய தமிழ் சான்றோர்கள் உள்ளனர் அவர்களை தமிழராகிய உங்களால்
தலைகுனிவு வரக்கூடாது என்பதே என் பேரவா? இதை முதலில்
புரிந்துக்கொள்ளுங்கள்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்த நில்லடா! இந்தியன் என்று சொல்லடா
இதயத்தை இந்தியர்களுக்கு என்று சொல்லடா? இந்திய உணர்வுடன் இந்த கட்டுரை
வரையப்பட்டுள்ளது எனக்கும் பேச உரிமை உள்ளது! வந்தே மாதரம் என்ற பாடலை
எதிர்க்க நாட்டு குடிமகன் என்ற அந்தஸ்து உள்ளது அது போதும் எங்கள்
உரிமையை கூற. தயவு செய்து எங்கள் மார்க்கத்தை இழிவாக பேசாதீர்கள் எங்கள்
உரிமைகளை பரிக்காதீர்கள்!
குறிப்பு
நாங்கள் தேசத் துரோக நச்சுப்பாம்பு என்ற பட்டம் பெற்றது ஒரு தமிழனால்
என்று மரணிக்கும் வரை கூறுவோம்! அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான்!
அல்ஹம்துலில்லாஹ்!
On Nov 8, 7:42 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> நன்றாக இருக்கிறது திரு விஜயராகவன். வங்காள மொழி தெரியுமா?
> தெரிந்தால் நல்ல பல வங்க சாஹித்யங்களை மொழிபெயர்ப்புகள் செய்து
> உதவுங்களேன். உங்கள் தமிழே போதும் அழகாக இருக்கிறது.
>
பாருங்க இதுக்குத்தான் சொன்னேன்.
இப்போ வேதபிரகாஷுக்கு சந்தோஷம்தானே!
அன்பரே, மின்தமிழ் ஒரு சர்வதேச இயக்கம். நமது வேர்கள் இந்தியாவில்
இருந்தாலும் நாம் பல்வேறு நாட்டுப்பிரஜைகள். பேசும் தமிழ் மொழியால்
இணைகிறோம்.
இந்திய தேசியமென்பது 60 ஆண்டுகளுக்குப்பிறகும் இன்னும் ஒரு
உருவாக்கத்தில்தான் இருக்கிறது. எனவே இந்திய அரசியல் பிரச்சனைகளை
தொடர்ந்து இங்கு இடும்போதும், அதைப்பற்றிய அபிப்பிராயங்களைத் தொடர்ந்து
பேசிக்கொண்டிருக்கும் போதும் மின்தமிழ் அதன் சர்வதேசத்தன்மையை
இழந்துவிடும். எல்லா நாட்டிற்கும் பிரச்சனைகள் உள்ளன. அதையே பேசிக்கொண்டு
இருக்க முடியாது. எதை வைத்து நம்மால் கூட முடியுமோ, அதைக்கொண்டு ஆக்கம்
செய்வோம்.
மின்தமிழ் மடல்களின் சாரமான விஷயங்கள் இருக்கிறதா? என யோசித்து
எழுதுங்கள். விடுதலை பத்திரிக்கைச் செய்திகளைத் தொடர்ந்து எதிர்த்து
வந்தால் விடுதலை விரும்பிகள் வந்து சண்டை போடுவர்.
இந்த சந்தைக்கூச்சலில் சத் விஷயங்கள் கேட்காமலே அடிபட்டுப் போகும்.
வேதப்பிரகாஷால் பிரச்சனைக்குரிய விஷயங்களை அலசுவதைத்தவிரவும் வேறு
ஆக்கபூர்வமாகவும் அலச முடியும். அவருக்கு திறன் இருக்கிறது, கற்ற கல்வி
இருக்கிறது, மதிபுலன் இருக்கிறது.
ஆவண செய்யவும்.
நா.கண்ணன்
ஆண்டவனின் மகிமையால் அனைவருக்கும் சாந்தியும், அன்பும், சந்தோஷமும்
நிலவுவதாக!
1. "எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை" என்கிறது ஒரு
தெய்வம்! [நான்தான் வேதபிரகாஷ் எனும்போது, நான் அவ்வாறெல்லம்
சொல்லமாட்டேன். சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எனக்குத் தெரியும்,
நான்தான் இந்த உலகத்தில் வேதபிரகாஷ் என்று].
2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு
மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்?
3. அதுமட்டுமா? "என்னைத் தவிர மேலேயோ,
கீழேயோ................இல்லை........", என்றெல்லாம் ஒரு தெய்வம்
சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது.
4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது!
5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன்
அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான்.
6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில்
இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது!
தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டைதான்!
7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, "என் தெய்வம்தான்
தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை", என்று
எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்!
8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள்
சண்போடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான்.
9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்:
http://islamindia.wordpress.com/ தொடருவோம், அலசுவோம், எந்த
பிரச்சினையும் இல்லை.
10. ஆண்டவனின் கிருபையினால் "கடைசி தினம்" வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே,
மரணிக்கும் வரை பிரச்சினை செய்யவேண்டாம். இதற்கும் "தமிழன்" பெயரை
இழுக்கவேண்டாம்!
ஆண்டவனின் மகிமையால் உங்கள் அனைவருக்கும் சாந்தியும், அன்பும், சந்தோஷமும் நிலவுவதாக!
சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்கள் அறிவுரைகளுக்கு தக்க அறிவுரைகள் பகவத்கீதையிலிருந்தும் ஏன் திருக்குர்ஆனிலிருந்தும் கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா?
1. "எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை" என்கிறது ஒரு தெய்வம்!
சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே தாங்கள் இங்கு சுட்டிக்காட்டும் வாக்கியம் இந்துமத்திலும் உள்ளது. அதாவது உங்கள் கிருஷ்ண பரமாத்மா மனிதர்களை நோக்கி தன்னையே கடவுள் என்றும் தன்னிடமே சரண் புக வேண்டும் என்றும் கூறுகிறார். அப்படியானால் அவர் தன்னை மட்டுமே கடவுள் என்றுதானே கூறுகிறார்.
பகவத் கீதையில் கிருஷ்ணன் தன்னை ‘பரமேஸ்வரன்' என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்; அதாவது, அவருடைய பக்தர்கள் அவரை "தேவாதிதேவன்' கடவுளர்க்கெல்லாம் கடவுள் என்று நம்புகின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் - 'நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்' (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)
இதையே பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான் அதை மறுக்கிறீரா?
எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே." (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)
இந்துக்களின் வேதங்களின் அடிப்படையில் பார்த்தால் மனிதன் செய்யும் பாவங்களை விடுவிப்பவர்தானே கடவுளாக முடியும். சரி சற்று யோசியுங்கள் நீங்கள் 10 பாவங்களை செய்கிறீர்கள் அந்த 10 பாவங்களையும் 1 கடவுள் மன்னிப்பாரா அல்லது 10 கடவுள்களும் ஒவ்வொரு பாவங்களை மன்னிப்பார்களா? உங்களுடைய ஒரு பாவம் கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை எனில் அவர் மன்னிக்கமாட்டார் அப்படியென்றால் மற்ற 9 பாவங்களை முறையே ஈஸ்வரன், விநாயகர், முருகன் மன்னிக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம் இப்படிப்பட்ட நிலையில் கிருஷ்ணனுக்கு என்ன மரியாதை இருக்கிறது.
சரி, சிவன் ஒரு பாவத்தை மன்னிக்கவில்லை உடனே பார்வதியிடம் தாங்கள் செல்கிறீர்கள் அவரும் மன்னிக்கவில்லை உடனே அர்த்தநாரீஸ்வரனிடம் செல்கிறீர்கள் அந்த இருவரும் சிவன் மற்றும் பார்வதியின் பாதி அங்கமே அப்போ சிவனும் பார்வதியும் தனித்தனியாக இருக்கும் போது மன்னிக்கமாட்டேன் என்று கூறிய வாக்கை அர்த்தநாரீஸ்வரராக இருக்கும்போது மன்னிப்பார்களா? தங்கள் வாக்கை மாற்றிக்கொள்வார்களா? வாக்கு மாற்றுவது இறைவனின் இயல்பா! எனவேதான் இஸ்லாம் ஒரு கடவுள்தான் உள்ளது மற்றொரு கடவுள் இல்லை என்று கூறுகிறது. மேலும் அல்லாஹ் என்ற சொல் அரபுச் சொல்லாகும் அதற்கு தமிழ் விளக்கம் கொடுப்பதாக இருந்தால் அது ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும் தான் அர்த்தம்.
2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்?
ஒரு தெய்வம் தான் உலகத்தில் உள்ளது பல தெய்வம் இருந்தால் தெய்வீகம் எப்படி வரும் அப்படியானால் பல தெய்வங்கள் ஒன்றோடொன்று கருத்து வேறுபாடு கொண்டு சண்டையில் நிற்கும் இதற்கு ஆதாரம் தங்களிடமே உள்ளதே அதாவது மாம்பழ கதைதான்” (ஈஸ்வரன், பார்வதி, விநாயகர், முருகன் தகராறுகள்)
3. அதுமட்டுமா? "என்னைத் தவிர மேலேயோ, கீழேயோ................இல்லை........", என்றெல்லாம் ஒரு தெய்வம் சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது.
சகோ. வேதபிரகாஷ் கிருஷ்ணனின் வாக்கை பாருங்கள்
'நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்' - (கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ், சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள், மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான், மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய், வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து , போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன், ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே, ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155
சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இந்த திருச்சிற்றம்பலப் பாடலுக்கு விளக்கமென்ன?
4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது!
மனிதன் குலம், கோத்திரமாக வாழந்து வருபவன் அவன் கடவுளை அவ்வாறுதான் எடைபோடுகிறான் எனவேதான் ஒரு தெயவம் என்று கூறாமல் அவனுக்கு அம்மா, அப்பா, பிள்ளை என்று குடும்பத்தை உருவாக்கிவிடுகிறான். விநாயகரை கடவுள் என்கிறீர்கள் சரி அந்த விநாயகருடைய தலையை யுத்த களத்தில் வெட்டி விடுகிறார்கள் ஆனால் சக கடவுள்கள் அவரை காப்பாற்ற முடியவில்லை உடனே சிவன் யானையின் தலையை அணிவித்து அவரை யானைமுகத்தான் என்று கூறுகிறார். இந்த கதையை படிக்கும் போது ஒரு கடவுள் மற்ற கடவுளுக்கு குறித்த நேரத்தில் உதவ இயலவிலலை என்றுதானே வருகிறது. அப்படியானல் கடவுள்களுக்கு பலவீனம் உள்ளதோ? ஆனால் கடவுள் எனப்படுபவருக்கு தீங்கு ஏற்படாது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவேதான் உங்கள் கொள்கையை மறுக்கி றோம்.
5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன் அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான்.
கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்பட்டார் என்று சட்ட மேதை அம்பேத்கார் கூறுகிறார்.
இது மனித இயல்பு மனிதனை திருத்த முடியாது. ஆனால் ஆதிபராசக்தி என்று கூறுகிறீர்கள் ஆதிபராசக்தி என்பதற்கு அர்த்தமென்ன ஆதி – பரா – சக்தி (அதாவது உலகம் தோன்றியதற்கு முன் உள்ளது ஆதி எனப்படும் பரா என்பது எல்லாவற்றையும் பெரியது எனப்படும், சக்தி என்பது எதற்கும் இல்லாத ஆற்றல் எனப்படும்) இதற்கு முழுமையாக விளக்கம் தர வேண்டுமானால் உலகம் தோன்றியதற்கு முன் தோன்றி எல்லா வஸ்துக்களையும் விட பெரிய அளவு கொண்டு ஒரு மிகப் பெறும் ஆற்றல் படைத்தவன் என்று பொருள்படும். அதைதான் ஈஸ்வரன், பிதா, அல்லாஹ் என்று ஆதிகாலத்தில் மக்கள் கூறிக் கொண்டு வந்தனர் ஆனால் பிற்காலத்தில் வந்த மனிதர்கள்தான் அந்த ஆதி+பரா+சக்தி-யை முக்கடவுளாக அதாவது 3 கடவுள்களாக பிரித்து 10 கைகளை கொடுத்து ஒரு புராணத்தையும் கொடுத்து அதன் ஒவ்வொரு கைகளிலும் ஆயுதத்தை கொடுத்து அழகு பார்த்தன. சகோதரர் வேத பிரகாஷ் அவர்களே இந்த மனிதர்களை தாங்கள் என்ன கூற இயலும், அல்லது அந்த ஆதிபராசக்தி தன்னை விக்ரஹமாக வணங்க கூறியதா?
இதோ விக்ரஹ் வணக்கத்தை கூடாது என்று பறைசாற்றும் பைபிள் வசனம்
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையு மாயிருக்கிறது.
5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கி றார்கள்.
ஆனால் பாவம் கிருத்தவ நண்பர்கள் இயேசு நாதர், மரியாள், மற்றும் சிலுவைகளை விக்ரஹங்களாக வழிபடுகின்றனர் அந்தோ பரிதாபம்!
6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில் இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது! தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டைதான்!
நான் அல்லாஹ்தான் கடவுள் என்கிறேன் அது பெயர் இல்லை மாறாக அது மேலே குறிப்பிட்ட படி தமிழில் ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும் தான் அர்த்தம். மேலும் ரஹ்மான் என்கிறோம் அதற்கு அளவற்ற அருளாளன் என்று பெயர் ரஹீம் என்று கூறுகிறோம் நிகரற்ற அன்புடையோன் என்று பெயர். இன்னும் அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் உள்ளன அதில் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் இறைவனுடைய தன்மைகள்தான் பொருளே தவிர அவை இறைவனின் பெயரல்ல! இதோ அல்லாஹ்வின் பெயர்களின் தன்மைகள் கொண்ட அஸ்மாவுல் ஹுஸ்னா அட்டாச்மென்டை காணவும்!
சரி, கிருஷ்ணன் என்று கூறுவதற்கு என்ன பொருள்,
ராமன், சீதை, முருகன், என்பதற்கு என்ன பொருள்
7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, "என் தெய்வம்தான் தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை", என்று எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்!
இங்கே ஆணவம் என்ற பேச்சுக்கு இடமில்லை அய்யா! என் புறத்தில் உள்ள நியாயத்தை பேசுகிறேன் நீங்கள் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசுகிறீர்கள் இதில் என்ன ஆணவம். நான் அல்லாஹ் (இறைவன்) கடவுள் என்கிறேன் அந்த சர்வசிருஷ்டியைத் தவிர யாரும் சிருஷ்டிக்க முடியாது என்கிறேன் ஆனால் தாங்களோ பல கடவுள்கள் உள்ளன என்கிறீர்கள். நான் ஆணவம் கொள்வதாக இருந்தால் தாங்கள் என்ன கொள்கிறீர்கள் ஆணவமா? அல்லது அடக்கமா? என்னய்யா! உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?
8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள் சண்டைபோடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான்.
இங்கு வேதபிரகாஷ் மட்டும் வேதனைப் படுகிறான் என்று கூறுகிறீர்கள் உங்களுக்கு மட்டும்தான் உள்ளம் உள்ளதோ எனக்கு இல்லையோ நானும் வேதனைப்படுகிறேன் வேதனைப் படுபவர்களும் வேதனைப்படுகிறார்கள் அதுதான் உண்மை!
9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்: http://islamindia.wordpress.com/ தொடருவோம், அலசுவோம், எந்த பிரச்சினையும் இல்லை.
என்னிடமும் வளைப்புக்கள் உள்ளன அதையும் சற்று படியுங்கள், தங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனில் தமிழ் படிக்கலாம், தமிழ் தெரியவில்லை எனில் ஆங்கிலம் படிக்கலாம். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறுபாண்மை இஸ்லாமி யர்களின் பங்கையும் படிங்கலாம். ஓரளவு தெளிவும் கிடைக்கும்.
http://islamicparadise.wordpress.com
http://amazingmuslims.wordpress.com
10. ஆண்டவனின் கிருபையினால் "கடைசி தினம்" வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே, மரணிக்கும் வரை பிரச்சினை செய்யவேண்டாம். இதற்கும் "தமிழன்" பெயரை இழுக்கவேண்டாம்!
இந்த கட்டுரையின் சாரமும் உங்களின் முதல் முக்கிய நோக்கமுமே வம்புக்கு இழுப்பதுதான் அப்படி வம்புக்கு இழுத்துவிட்டு கிளைமேக்சில் (Climax)ல் பிரச்சினை வேண்டாம் என்பது நியாயமாகப்படுகிறதா? அன்புச் சகோதரரே!
சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்களுக்கு அழகிய அறிவுரை உங்கள் பகவத்கீதையிலிருந்தே கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா?
பகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்
எல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்"
அல்குர்ஆன்: 10:31,32
(நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்த்லிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும் உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார்? இன்னும் அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்?” அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்’ எனப் பதில் கூறுவார்கள். “அப்படியாயின் நீங்கள் (உண்மைக்குப் மாறாக நடப்பதை) தவிர்த்து கொள்ளக் கூடாதா?” என்று கேளும். ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன். இந்த உண்மையை கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன மிஞ்சியிருக்கும்?
பகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்
எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடு விக்கிறேன். துயரப் படாதே."
திருக்குர்ஆன் 25:70
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களு டைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்
புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது
திருக்குர்ஆன் 6:54
நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
பகவத் கீதையில் கடவுள் தன்மை
பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்' என்கிறார்
பகவத் கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்
''மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவ துமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.''
இஸ்லாம்
லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்
பொருள்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்!
நண்பர்களே, வணக்கம்.
ஆண்டவனின் மகிமையால் அனைவருக்கும் சாந்தியும், அன்பும், சந்தோஷமும் நிலவுவதாக!
1. "எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை" என்கிறது ஒரு தெய்வம்! [நான்தான் வேதபிரகாஷ் எனும்போது, நான் அவ்வாறெல்லம் சொல்லமாட்டேன். சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எனக்குத் தெரியும், நான்தான் இந்த உலகத்தில் வேதபிரகாஷ் என்று].
2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்?
3. அதுமட்டுமா? "என்னைத் தவிர மேலேயோ, கீழேயோ................இல்லை........", என்றெல்லாம் ஒரு தெய்வம் சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது.
4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது!
5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன் அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான்.
6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில் இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது! தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டைதான்!
7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, "என் தெய்வம்தான் தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை", என்று எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்!
8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள் சண்டைபோடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான்.
9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்: http://islamindia.wordpress.com/ தொடருவோம், அலசுவோம், எந்த பிரச்சினையும் இல்லை.
10. ஆண்டவனின் கிருபையினால் "கடைசி தினம்" வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே, மரணிக்கும் வரை பிரச்சினை செய்யவேண்டாம். இதற்கும் "தமிழன்" பெயரை இழுக்கவேண்டாம்!
--- On Tue, 10/11/09, சிராஜ் அப்துல்லாஹ் <internatio...@gmail.com> wrote:
From: சிராஜ் அப்துல்லாஹ் <internatio...@gmail.com>
Subject: [MinTamil] Re: மத-அடிப்படைவாதம், வந்தே மாதரம்: சிதம்பரமும், கிருஷ்ணாவும்
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Date: Tuesday, 10 November, 2009, 11:57 AM