இவ்விழா குறித்த சேதியை உங்கள் வலைப்பதிவில், முகமண்டலத்தில், சிட்டியில்
பகிர்ந்து கொள்ளுங்களேன்.
வருவோர் வரட்டும். சேதி அறிந்து கொள்வோர் அறிந்து கொள்ளட்டும்!
இன்றைய என் பதிவு: http://emadal.blogspot.com/
நன்றி.
கண்ணன்
On Aug 19, 10:01 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களே,
எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துக்
கொண்டிராமல் உரிய நேரத்தில் தொடங்கி விடுங்கள்.்
என்ன நகழ்ந்தது என்று பின்னர் ஒரு விரிவான அறிக்கையும்
கொடுங்கள். வரமுடியாத அனைவருக்கும் பயனாக
இருக்கும்.
ரெ.கா.
விழா சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள். சென்ற வாரத்தில்
விழாச் சிலவினங்களுக்கு என் பங்காக $ 100 காசோலை
மெயில் செய்துவிட்டேன்.
(அ) உ/ஊ உயிர்மெய் விலங்குத் தளையுடைப்புச் - வரிவடிவச் சீர்மை
(ஆ) விக்கிபிடியா முயற்சியில் கிரந்தம் - தமிழ் பிரச்சினை
பற்றி வினோத் குறிப்பிடுகிறார். என் தீர்வுப் பரிந்துரை:
கிரந்தம் எழுதினால் அதைத் திருத்தும் குழு
டையாகிரிட்டிக்கு குறியீடு வைத்தால்
உச்சரிப்பு மயங்காது
- இவ்விரண்டையும் குறிப்பிட்டு 2-3 பக்கம்
எழுதி என் ஏற்புரையாக அனுப்பிவைக்கிறேன்.
எனக்கு இக் கூட்டத்தில் கௌரவம் அளிக்க
இருக்கும் நண்பர்களுக்கு நன்றி.
நா. கணேசன்
கோவை, சத்தியமங்கலம் கல்லூரிகளில் பொறியியல்
மாணவர் கட்டுரைப் போட்டி - 3000 கட்டுரைகள்
இந்தியா முழுக்க வந்துள்ளன. அதன் விழாவில்
என் உரையைக் கேட்க உள்ளார்கள். அதற்கும்
தயார் பண்ணனும்.
சுபா, எனது உரைகளை அனுப்பி வைக்கிறோம்.
கண்ணன்
2009/8/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
இதில் வருகிற மருத்துவர் தி.வாசுதேவன் என்பவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்யும் என் நண்பர் தானே? சொல்க கணேசன்,, யோகியார் --- On Thu, 8/27/09, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote: |
இதில் வருகிற மருத்துவர் தி.வாசுதேவன் என்பவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்யும் என் நண்பர் தானே? சொல்க கணேசன்,,
யோகியார்
நாராயணா! என்று ஒவ்வொருமுறையும் அவர் விளிக்கும் போது ஜிவ்வென்று இருக்கும்.
இன்னும் தரிசனம் கிடைக்கவில்லை.
க.>
2009/8/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
2009/8/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
On Aug 28, 6:19 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> வணக்கம்,
>
> "மயங்க நிலை மரபு!" என்பது பழைய தமிழ்த் தொடராகும்.
>
பழைய இலக்கியமா?
> புதுமைகள் அலை அலையாகத் தோன்றி, பின்னர் சில மட்டும் நிலையாக நின்றால் அது
> மரபாக மாறும்.
>
> கடல் கடந்து போனாலும் நெஞ்சில் கரை கடந்த அன்போடு பலர் ஒன்றாக இணைந்து, நன்றாக
> செயற்படுகின்ற தமிழ் மரபு அறக்கட்டளை/மின்தமிழ்க் குழுமம் நாளும் ஓங்குக என
> அகமகிழ்ந்து பாராட்டுவோம்.
>
> த.ம.அ சிட்டுக்கு அகவை எட்டு
> அம்மொட்டுக்கு இயற்றுவோம் நல் மெட்டு
> அதைக் கேட்டு மகிழ்ந்து கைத்தட்டு.
>
த.ம.அ. விழாவுக்குக்
கை தட்டுவோம்! கை கொடுப்போம்!
எல்லோரும் வந்தவுடன் சுமுகமாக அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு
நமக்கு எழுத்துதான் தெரியும். முகம் தெரியாது. என் பாசுரமடல்களை மட்டும்
படித்துவிட்டு, லாஸ் ஏன்சலெஸ்ஸில் ராம் அவர்களை அவர் அண்ணா வீட்டில்
சந்தித்தபோது அவரால் நம்பவே முடியவில்லை. `என்ன ஓய்! இவ்வளவு மாடர்ன்னா
இருக்கிறீர். நான் கட்டுக்குடுமியோட ஒரு ஆளை எதிர்பார்த்தேன்!` என்று ஒரு
போடு போட்டார்.
இதை `நிழல்வெளி` என்று இதனால் சொன்னான். இதன் முகம் வேறு. நிஜமுகம் வேறு.
கவனம். அப்புறம் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை என்று சம்மந்திச் சண்டை
வந்துவிடப்போகிறது :-))
க.>
2009/8/28 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:
அன்பார்ந்த தமிழ் மரபு அறக்கட்டளையின் அறிஞர்களே
அனைவருக்கும் வணக்கம்
நம்முடைய பழைய மரபுகளை பாதுகாத்து அவற்றை வருங்கால தலைமுறையினருக்கு ஒப்பற்ற ஒரு செல்வமாக விட்டுச் செல்லவேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்ட இந்தத் தமிழ் மரபு அறக்கட்டளை
திரு கண்ணன், திருமதி சுபாட்ரெம்மல் அவர்களின் கருத்திலே கருவாகி உருவாகி அவர்களின் அயராத உழைப்பாலும், மின் தமிழ் அறிஞர்களின் பங்களிப்பாலும் வியப்பூட்டும் வகையில் ஒரு காலப் பெட்டகமாக வளர்ந்து
இன்று தன்னுடைய எட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடிமகிழ, தன்னை வளர்த்து ஆளாக்கிய அனைவருக்கும் நன்றி கூறும் விதமாக நம் அனைவரையும் இங்கே ஒன்று சேர்த்திருக்கிறது
இவ்விழா சிறப்பாக நடை பெற்று நம் மரபுகளின் பெருமையை உலகறியச் செய்யும் , இனியும் நம் மரபுகளைக் காத்து பல்லாண்டுகள் இந்தத் தமிழ் மரபு அறக்கட்டளை சிரஞ்சீவியாய் வாழும் ,மரபு காக்க தொண்டு செய்யும் என்னும் மகிழ்ச்சியோடு விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடுவோம்
இங்கே வந்திருந்து இவ்விழாவை சிறப்பாக நடத்த விருக்கும் அனைத்து நல்லறிஞர்களுக்கும் இந்த மரபு அணிலான தமிழ்த்தேனியின் அன்பும் ,மரியாதையும் கலந்த நன்றி
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
தமிழ் மரபு அறக்கட்டளை 8 ஆம் ஆண்டு விழா - சென்னையில் வரும் 30.8.2009
அன்று நடைபெற உள்ளது. சென்னை, மயிலாப்பூரில் உள்ள கே.என்.சண்முகசுந்தரம்
அரங்கில் நடைபெறும் இந்த விழா பிற்பகல் 2 மணிக்கு துவங்குகிறது.
விழாவில் எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி முன்னிலை வகிக்கின்றார். தமிழ்
எழுத்தில் மரபு எனும் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணனும், புதிய
விழிப்பின் முன்னோடி ஜி.சுப்ரமணிய அய்யர் எனும் தலைப்பில் பெ.சு.மணி
அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.இதனைத் தொடர்ந்து தமிழ் மரபு
அறக்கட்டளையின் மின்னுலகப் பணிகள் எனும் தலைப்பில் நரசய்யாவும்,
மின்னாக்கம்; செய்முறை வழிமுறைகள் எனும் தலைப்பில் மருத்துவர்
தி.வாசுதேவனும், மின் செய்தி தயாரித்தல் எனும் தலைப்பில் சுகுமாரன்
ஆகியோரும் உரைநிகழ்த்த உள்ளனர்.
இதனையடுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகளை
விரைவுபடுத்தும் வழிகள் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுச் செல்வர்களாக
திரு.நரசய்யா, முனைவர்.நா.கணேசன்,திரு.திவாகர். ஆகியோர் சிறப்பு
செய்யப்பட உள்ளனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் மரபு அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.
http://sangamamlive.in/index.php?/content/view/5175/31/
என் குறிப்பு:
இம்மாதிரி மின்னிதழ்கள் செய்தி வெளியிடும் போது அச்சுப்பிரதி மாதிரியே
வெளியிடுவது வேடிக்கை. தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு இணைப்புக்
கொடுத்தால் என்ன? இணையத்தின் உயிர்நாடியே இணைப்பில்தானே உள்ளது! அது என்ன
அறக்கட்டளை என்று கேட்போருக்கு ஒரு சொட்டு நொடியில் ஒரு உலகத்தையே காட்ட
முடியுமே!
ஆயினும், இச்சேதி வெளியிட்ட சங்கமத்திற்கு எம் நன்றிகள்.
அப்ட்ணா..
கருங்கிருதத்தில் சிக்கப்பட்டெ..
தெலுங்கிருதத்தில் (சொல்ப) 'அரைநிறை'ங்கறீங்...? ;-p
இப்பிடிக்கி.../பூபதி <என்கிற>பண்ச்'ச கரும.. கிரேமர்பொலிஸ்)
_________________________________
வாசுதேவ (வசு + தெய்வம்) குடும்பகம்..
வசு = எண்குணத்தான்/எட்டாஞ் சக்கரம்..?)
________________________________
On Aug 27, 9:49 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/8/28 kaviyogi vedham <kaviyogi_ved...@yahoo.com>
கோவப்படாதீங்க எசமான் ! சமூகத்துல சொல்றபடியே
செய்துறலாம்.
தேவ்
http://sangamamlive.in/index.php?/content/view/5175/31/
இதில் த.ம.அ.கட்டளை குறித்த செய்திகளையும் இணத்து விட்டனர்.
தேவ்
அதுதான் சொன்னேனே `ஜாம்பவான்கள்` நடத்தும் விழாவென்று.
வாழ்க!
க.>
பிகு: ஆனால் நம் சேவியின் உள்ளே ஒரு குட்டிச்சாத்தான் உட்கார்ந்து கொண்டு
நம் `index.html' பக்கத்தை உருமாற்றம் செய்து கொண்டே (சீன மொழிக்கு)
இருக்கிறது. அதை எப்படி விரட்டுவது என்று தெரியவில்லை. இங்கு ஏதேனும்
பேய் ஓட்டுநர் உண்டோ?
2009/8/30 devoo <rde...@gmail.com>:
//கீதாம்மா மற்று நாச்சியார் பெயரில் எழுதும் பெண்மணி, பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பாதியிலேயே கிளம்பிவிட்டனர்//
என் தம்பியின் அவசர அழைப்பின் பேரில், நான் 4-30 மணி அளவில் கிளம்பினேன். பெ.சு. மணி அவர்கள் பேசி முடிக்கும்வரையில் இருந்தேன். தி.வா. வின் மின்னாக்கம் தான் மிகவும் ஆவலுடன் பார்த்துத் தெரிந்து கொள்ள நினைத்திருந்தேன். முடியவில்லை. கிளம்பவேண்டிய கட்டாயம். தேவ் அவர்களிடம் சொல்லி விட்டே கிளம்பினேன்.
~--~---
க.>
2009/8/31 Chandra sekaran <plastic...@gmail.com>:
சீன மொழி ஒரு போர்வையே.
UTF-8 Encoding மாற்றிவிட்டு.
View Source பாருங்கள்:
எல்லாம் Spam Links.
On Aug 30, 5:03 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அடடா! வாயு வேகம். மனோ வேகம்.
>
> அதுதான் சொன்னேனே `ஜாம்பவான்கள்` நடத்தும் விழாவென்று.
>
> வாழ்க!
>
> க.>
க.>
2009/8/31 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
http://www.tamilheritage.org/ ஐ http://www.tamilheritage.org/xyz.html
[Index என்ற சொல்லோ main போன்ற சொற்களோ வராதவாறு ] என்றவாறு எதாவது ஒரு
புதுப்பெயருக்கு Temporary Redirect செய்யுங்கள். பேய் அதை பிடிக்காமல்
இருக்கலாம்.
V
நிரந்தரத்தீர்வு வரும் வரை. தற்காலிகமாக ஒன்று செய்துபாருங்கள்..
.
30 ஆகஸ்ட் மரபுத் தமிழ்க் குழுமத்துடன் முதல் சந்திப்பு கிடைத்தது.
இந்தக் குழுமத்திற்கு என்னால் எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்று
இன்னும் சொல்ல முடியவில்லை. ஆனால் நிறையக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் என்
வழி வருமென்பது தெரிந்தது.
திரு தேவராஜன்,திருமதி கீதா,,திரு சந்திர சேகர்,திரு ஓம் சுப்ரமண்யம்,
தம்பி வாசுதேவன்,திவாகர், பெரியவர் இன்னாம்பூர், இவர்கள் அனைவரின் தமிழ்
ஆளுமை என்னை இன்னும் ஆச்சரியத்தில் இருந்து விடுபட முடியாமல்
இருத்தி வைக்கிறது.
திரு.திருப்பூர் மணியின் பேச்சைக் கேட்காமல் எழுந்து வந்தது வருத்தமே.
மீண்டும் எல்லோரையும்சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று
நினைக்கிறேன்.
எனக்கு வழி காட்டிய கீதா சாம்பசிவத்துக்கு நன்றி.
On Aug 31, 9:19 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> அட ஆமாம்......
> இதை .htaccess பைல் வழியாக செய்யலாம் தானே!!
> நல்ல ஐடியா...
> நன்றி!!
>
> 2009/8/31 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
>
>
> > இது ஒரு நல்ல யோசனைதான். இன்று மாற்றிப்பார்க்கிறேன்.
> > நன்றி வினோத் ராஜன்.
> > -சுபா
>
> > 2009/8/31 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
>
> >> நிரந்தரத்தீர்வு வரும் வரை. தற்காலிகமாக ஒன்று செய்துபாருங்கள்..
>
> >>http://www.tamilheritage.org/ஐhttp://www.tamilheritage.org/xyz.html
> >> [Index என்ற சொல்லோ main போன்ற சொற்களோ வராதவாறு ] என்றவாறு எதாவது ஒரு
> >> புதுப்பெயருக்கு Temporary Redirect செய்யுங்கள். பேய் அதை பிடிக்காமல்
> >> இருக்கலாம்.
>
> >> V
>
> --
> M.S.Murali (B+ve)
> 99430-94945
> ----------------------------www.visualmediaa.com- Hide quoted text -
>
> - Show quoted text -