இருப்பினும் 31-10-2009 அன்று பாரதிய வித்யா பவனில் ஒரு ஐம்பது நபர்கள்
அவரை ஞாபகம் வைத்திருந்து சர்தாரின் 134வது ஜெயந்தி / பிறந்த நாளை
கொண்டாடியுள்ளனர்.
திரு. விட்டல் (மத்திய விஜிகென்ஸ் கமிஷனர்-ஓய்வு), கோபால்சாமி (தலைமை
தேர்தல் ஆணையர்-ஓய்வு) முதலியோர் சர்தாரின் எளிமை, நேர்மை முதலியற்றைப்
பற்றிப் பேசினர்.
படேல் ஒருமுறை அரசு தொலைபேசியில் தனது சொந்த விஷயத்தைப் பேசியதால், அவரே
அதை சொல்லி அதற்குண்டான பணத்தைச் செல்லுத்தினாராம்! அனால் இன்றோ
அத்துறையில் ஊழல் 22,000 கோடி, 60,000 கோடி, 1, 50,000 கோடி என்று
ஏறிக்கொண்டே வருகின்றது!
தேசிய அளவில் நடைபெற்ற ஒரு கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற
மாணவர்களுக்கு திரு. கோபால்சாமி பரிசு வழங்கினார். இளைஞர்கள் "நன்றான
ஆளுமை" பற்றி கட்டுரைகள் எழுதி, ஊழலற்ற இந்தியாவை "கனவு" காண்கின்றனர்!
ஒரு பெரியவரின் / கிழவரின் "கமன்டு": எதோ பேப்பர் பார்த்து வந்தேன். ஒரு
சிலராவது சர்தாரை நினைவில் வைத்துக் கொண்டுப்பதைக் கண்டு மகிழ்ச்சியாக
இருக்கிறது. வந்திருந்தவர்கள் எல்லாம் அழைக்கப் பட்டு வந்துள்ளவர்கள் -
பரிசு வான்கியவர்கள், அவர்களது பெற்றோர்கள். அப்படி பார்த்தால், நான்
மட்டும் தான் இந்த நிகழ்ச்சிற்கே வந்தது போல இருக்கிறது"!
அதுவும் ஒருவிதத்தில் உண்மைதான்!
http://www.indianexpress.com/news/vadodara-remembers-its-sardar-on-his-birth/380066/
The 134th birth anniversary of Sardar Valabhbhai Patel on Friday was
celebrated at his birthplace by numerous people of Karamsad, Anand,
Vallabh Vidyanagar and Vadodara.
In the morning, locals and other prominent dignitaries including
Dinsha Patel, Minister of State for Petroleum and Natural Gas, and
Duleep Mathai, descendant of John Mathai who was independent India’s
second finance minister, took part in a function held in the honour of
the ‘Iron Man of India’.
Similar commemorations were held at Charutar Vidya Mandal and at
Sardar Patel’s birthplace in Karamsad. “Everyone came together and
discussed the various episodes of Sardar Patel’s life. Many NRIs also
attended the function,” said Ramesh Prajapati, administrator of Sardar
Patel Memorial Trust, Anand.
In Vadodara, the Sardar Bhavan Trust on Friday renamed the road from
Lehripura to Kothi Cross roads as Sardar Patel Marg. The route had
been named after Sardar Patel by the Vadodara Municipal Corporation
(VMC) way back in 1962; but it was renamed on Friday in a bid to
refresh public memory.
On Nov 1, 6:40 am, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> இந்திய நாட்டை இணைத்த உண்மையான "The Real Architect of India"
> இந்தியர்கள் மறந்தார்களா அல்லது மறக்கவைத்தார்களா தெரியவில்லை,
>
> இருப்பினும் 31-10-2009 அன்று பாரதிய வித்யா பவனில் ஒரு ஐம்பது நபர்கள்
> அவரை ஞாபகம் வைத்திருந்து சர்தாரின் 134வது ஜெயந்தி / பிறந்த நாளை
> கொண்டாடியுள்ளனர்.
>
> http://www.siv-g.org/index.php/133rd-bday-sardar-patel-topmenu-66/241...
தலைதெறிக்க ஓடிய பயங்கரவாதிகள் : கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி
ஜம்மு காஷ்மீரில் ரசூரி மாவட்டத்தில் 6 பயங்கரவாதிகள் ஒரு வீட்டிற்குள்
நுழைந்தனர். அங்கு குடும்பத்தினருடன் இருந்த இளம் பெண்ணை தங்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் மிரட்டினர். ஆனால்
பெற்றோர்கள் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள்
பெற்றோர்களை அடித்து தாக்கினர். தொடர்ந்து நடந்த சண்டையில் மகன் கையில்
கிடைத்த கோடாரியால் தீவிரவாதியை நோக்கி எறிந்தார்.
போராட்டத்தை பார்த்து கொதித்துப்போன இளம்பெண் ரக்சனா கவுசார் ஒரு
பயங்கரவாதி மீது பாய்ந்து அவரை சுவர் மீது தள்ளி விட்டாள். தொடர்ந்து
அந்த பயங்கரவாதியின் ஏ.கே., 47 ரக துப்பாக்கியை பிடுங்கினார். உடனடியாக
பயங்கரவாதிகளை நோக்கி சுட்டார். இதில் ஒரு பயங்கரவாதி இறந்தார்.
இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மற்றவர்கள் தலைதெறிக்க
தப்பித்து ஓடினர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு இளம் பெண் பயங்கராவதிகளிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி
விரட்டியது குறித்து அப்பகுதி மக்கள் இந்த பெண்ணை பாராட்டினர்.
தினமலரின் தற்போதைய செய்தியில் இடம் பிடித்த ரக்சானா: சபாஷ் இப்படித்தான்
வீரம் பொங்க வேண்டும் என அவர் பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற செய்தியை
தினமலர் இணைய தளத்தின் முன்பக்கத்தில் உள்ள தற்போதைய செய்தியில்
வெளியிட்டு அவருக்கு கவுரவம் சேர்த்தது. இதற்கு தினமலர் வாசகர்கள் பலர்
வரவேற்பு அளித்தும், ரக்சனாவுக்கு வாழ்த்துக்களை தங்களது கருத்துக்கள்
(கமேன்ட்ஸ் ) தெரிவித்தனர். தினமலர் வாசகர்கள் பலர் ரக்சனாவுக்கு கூடுதல்
பாதுகாப்பு வழங்கவேண்டும், அவரை மத்திய அரசு கவுரவிக்க வேண்டும், அரசு
வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இப்பெண்ணை பார்க்க ஜனாதிபதி விருப்பம்: மேலும் நாடு முழுவதும் அவரது
செயலுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பம் குறித்து மத்திய
அரசு அதிகாரிகள் அவரை டில்லிக்கு வரவழைத்து கவுரவித்தனர்.
பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஜனாதிபதி இப்பெண்ணை பார்க்க விருப்பம்
தெரிவித்தார். மத்தியஅமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் இவரை வரவழைத்து
வீரச்செயலை பாராட்டினர். டி. வி., க்களில் சிறப்பு பேட்டி அளிக்கும்
நிகழ்ச்சிக்காக பல காமிராக்கள் இவரை நோக்கி திரும்பியது. பல அமைப்புகள்
இவருக்கு பாராட்டு விழாக்கள் நடத்தின.
நேற்று கூட ( 2 ம் தேதி ) ரக்சானாவின் வீட்டிற்கு வந்த பயங்கராவதிகள்
இவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் வீட்டில்
இல்லை. இந்தச்சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் மத்திய அரசு ரக்சானா
கவுசார் சிறப்பு போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தோடு அல்லாமல்
அவரது சகோதரர் அஜ்ஜாஸ், மற்றும் உறவினர் வக்காலத்து உசேன் ஆகிய
இருவருக்கும் போலீஸ் படையில் பணி நியமன ஆணை வழங்கபப்ட்டுள்ளது. இத்தகவலை
ரசூரி மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட்டு நிருபர்களிடம் தெரிவித்தார்.
இனி கேட்கவா வேண்டும் ரக்சனாவை : பயங்கராவதியை சுட்டுக்கொன்ற ரக்சானா
அப்போது கிராம பாதுகாப்பு கமிட்டியினர் கொடுத்த துப்பாக்கி சுடும்
பயிற்சிதான் எனக்கு அந்நேரத்தில் உதவியது. என கூறியிருந்தார். அரசு
சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு போலீஸ் அதிகாரி ரக்சனானாவுக்கு
இனிமேல் பயங்கரவாதிகளை வேட்டையாட சொல்லியா கொடுக்க வேண்டும். இவர்
போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் வரவேற்பை
பெற்றாலும் , காஷ்மீர் பயங்கரவாதிகள் கலங்கித்தான் போயிருப்பார்கள்
என்பதில் என்ன சந்தேகம்.