பெண்ணியம் பற்றியோ சொல்லவே வேண்டாம்.
ஆனால், ஏன் இப்படி?
http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/12/03-pregnant-padma-lakshmi-poses-naked.html
எது-எதற்கோ தமிழர்கள் ஆர்பரிக்கிறார்கள்!
ஜனாதிபதி வான-ஊர்தியில் சென்றால், அதில் ஒரு தமிழன் என்று செய்தி!
சந்திராயன் என்றால் அதில் ஒரு தமிழன்!
யாரோ நோபல் பரிசு பெற்றால், தமிழன் நோபல் பரிசு பெற்றான் என்பது!
இப்பொழுது என்ன சொல்லப் போகிறர்கள்?
தமிழச்சிகள் என்ன செய்ய போகிறார்கள்?
தமிழகச் சூழலில் கூட ஆபிரகாமிய விழுமிய கருத்தாக்கத்தில் இல்லாமல், சங்க
காலத்தமிழ் கண்ணோட்டத்துடன் நோக்கும் போதும் நம் எதிர்கொள்ளல்
வித்தியாசப்படுகிறது.
மீண்டும் ஆசாரமான கண்ணோடத்துடனும், சுயமாக தரித்துக் கொண்டுள்ள 'தனித்த,
சுத்த' விழுமியங்களோடு எதிர்கொள்ளும் போதும் வித்தியாசப்படுகிறது.
மானுடவியல் நோக்கில் பார்த்தால் இவரை தமிழச்சி என்று சொல்ல முடியாத
ஐரோப்பிய முகவெட்டு. மீண்டும் கேள்வி எழுகிறது, 'யார் தமிழன்/தமிழச்சி?'
என்பதை எவ்வகை அலகுகளால் நிர்மாணிப்பது என்று?
கலை நோக்கில் பார்க்கும் போது கேமிரா செய்யும் செப்பிடி வித்தை
ஆச்சர்யமாக இருக்கிறது. இவரது படங்களைப் பார்த்தால் நேரில் பார்க்கும்
போது மிகச் சாதரணமாக இருக்கும் இவர்தானா உலக அழகி மாடல் போல் போஸ் தருவது
என்று இருக்கிறது.
பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதொரு பெரிய கேள்வி. இதுவரை
அது ஆணின் உடமையாக உள்ளது. பெரியார் விடுதலையில் பெண் உடல் விடுதலையும்
ஒன்று. அந்நோக்கில் இப்பெண் சொல்வது சரியென்று படுகிறது. அவர் உடல், அவர்
பாடு!
தமிழக சினிமாவை நாம் குடும்பத்தோடு பார்க்கிறோம். ஜெர்மன் விழுமியங்களை
வைத்துப் பார்த்தால் பல படங்கள், பாடல் காட்சியில் 'பெரியவர்க்கு
மட்டும்' எனும் சான்றிதழ் பெறும். ஜெர்மனியில் இருந்தால் இப்படங்கள்
சிறுவர்கள் நோக்க முடியாத பின்னிரவு ஒளிபரப்பாக அமையும் (செமி
போர்னோகிராஃபி வகை). ஆனால் குழந்தை குட்டிகளோடு நடு வீட்டில் உட்கார்ந்து
பார்க்கிறோம்.
உலகம் சுருங்கி எல்லா விழுமியங்களையும் சந்தைப் பொருளாதாரம் கபளீகரம்
செய்து வரும் காலக்கட்டத்தில் பல கேள்விகள் அர்த்தமற்றுப் போகின்றன.
கண்ணன்
2009/12/4 Vedaprakash <vedamved...@yahoo.com>:
> http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/12/03-pregnant-padma-lakshmi-poses-naked.html
>
பாற்சமன்பாடு (Gender Equality) பற்றி இந்த நூற்றாண்டில் அதிகமாகப்
பேசப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன. அந்நிலையில் இந்தியாவில் இதைப்
பிரச்சனை பண்ணுவது முரண்நகையாக அமைய வாப்புண்டு. ஏனெனில் உலகிலேயே
வேரெங்கும் காணாத அளவில் கும்பமேளாவின் போது 'நங்கா சாதுக்கள்' (நிர்வாண
சாமியார்கள்) நடமாடுகிற நாடு அது. ஜைனத்துறவிகள் ஆடை உடுத்துவதில்லை.
இதையெல்லாம் ஏதோ காரணங்கள் சொல்லி இந்தியா சமாளித்துவருகிறது. சென்ற
கும்பமேளாவில் இந்த நங்கா சாதுக்களுடன் சேர்ந்து கொள்ளப் போன ஒரு நங்கா
பெண்மணியை போலிஸ் தூக்கி உள்ளே போட்டுவிட்டது. காலத்தின் விதிகள்
மாறுவதைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது!
க.>
2009/12/4 N. Kannan <navan...@gmail.com>:
Nothing wrong if Tamils take pride in Tamil achievers , as long as it
is not overdone. They can be good role models for the younger
generation
Vijayaraghavan
On 4 Dec, 02:36, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> பெண்களைப் பற்றி நிறைய விவாதங்கள்!
>
> பெண்ணியம் பற்றியோ சொல்லவே வேண்டாம்.
>
> ஆனால், ஏன் இப்படி?http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/12/03-pregnant-pa...
தமிழச்சிக் கலக்குகிறாள் அங்கே, தமிழச்சி கலங்குகிறாள் இங்கே
தமிழனும் கலங்குகிறான், தமிழன் பதறுகிறான் இப்பாரதத்தில்.
நாகரிகத்தின் அநாகரிகமா, அப்பண்பாட்டுச் செருக்கின் சீரழிவா
நிர்வாணம் அகோரமா, விகாரமா, அசிங்கமா, ஆபாசமா? [1]
புத்தரை வெல்லும் நிர்வாணமா ஜைனத்தை வெல்லும் நிர்வாணமா
இல்லை, கிரேக்க-ரோமானிய நிர்வாணத்தையும் வெல்லும் அவமானமா
நிர்வாணத்திலும் சமதர்மம் பார்க்கும் அம்மணமான பெண்மையே
உன்னை மூட முடியாதலால் மூடுகிறேன் எனது கண்களை. [1]
பத்மா லட்சுமி, அம்மா தாயே, தெய்வமே பயமாக இருக்கிறது!
பத்மஸ்ரீக்கள், கலைமாமணிகள் நோக்க நோகடிக்கவே
சுபாஷினி அலி, பார்வதி கான், என்று கேள்விப்பட்டிருக்கிறோம்
சல்மான் ருஸ்டியின் பத்தினி நீ, கண்ணகியையும் வென்றுவிடாய். [2]
தமிழன் பாடினான் ஓரக்கண்ணால் பார்த்தாலே “பிள்ளத்தாச்சி”
தமிழச்சி நீயோ கண்களைக் கட்டுகிறாய், நீயும் ஒரு “பிள்ளத்தாச்சி”
அச்சம், நாணம், மடம், கற்பு, பயிர்ப்பு என்ற ஐங்குணங்கள்
அச்சம்கொண்டு நாணிமடத்துடன் கற்பைவிட்டு பயிர்ப்போடு பெயர்ந்தன. [3]
பத்மஸ்ரீக்களின் கலக்கல்களின்று மீள்வதற்குள், நீ மீறிவிட்டாய்.
“தமிழச்சி”களின் “முலைகள்” கவிதைக் கொடுமைகள் தீருவதற்குள்
தமிழச்சி நீ குனிந்து விட்டாய், நாங்கள் தலை குனிந்துவிட்டோம்.
கைகால்களை சேர்த்து குவித்துவிட்டாய், நாங்களும் கூனிக்குருகிவிட்டோம்.
[4]
கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம் பாடப்பட்டது அன்று
அதெல்லாம் பார்க்கமுடியாது என்ற குஷ்புவிற்கு காட்டுகிறாய் நீ இன்று
மனம் மாறினால் மணம் மாறுகிறது, மணம் மாறினால் மனம் மாறுகிறது.
இருமனம்-திருமணம், பலமனம்-பலமணம் குஷ்பு மாறுகிறது, நாறுகிறது. [5]
அம்மணத்தில் எம்மணம் பொதுமையானதென ஆயும் கம்யூனிஸ தந்தைல்லை
நிர்வாணத்தில் பகுத்தறிவோடு புகுந்து பார்க்க பெரியாரின் சகோதரனுமில்லை
அம்மணியின் அந்தரங்கங்களைப் பேச நான் மோஹனரங்க புருஷனுமில்லை
இம்மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுக்கொண்ட அந்நியன் நான். [6]
பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதிலில்லைப் பிரச்சினை
அவ்வுடலின் நிர்வாணம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் சர்சை
ஒழுங்கு-ஒழுங்கீனம் என்று நிர்வாணத்தின் சாரம்-ஆசாரம் கண்டு
பகுத்தறிவோடு தரச்சான்றிதழ் கொடுக்கும் பன்னாட்டு நிருவனங்களுமில்லை
[7]
நங்காசாதுக்களுடன் நங்கைசென்றால் தடுப்பது பாரதமில்லை இந்தியா
நங்கைகளையும் மறுத்து, நிர்வாணங்களை அரங்கேற்றுவது இவ்விந்தியா
ஜைன நங்காக்களையும் மறுப்பதும் பெரியாரியம் பேசி கல்லடிப்பதும் தமிழகம்
பாரதத்திற்கு சமாளிக்கவேண்டிய நிலையில்லை, நாரிகளுக்குத்தான் உள்ளது. [8]
காமத்தைக்காதலாக்கி இச்சைகளைக்கொச்சைப்படுத்தி நடத்துவது புனிதப்போர்!
நிர்வாணத்தை நிருவானமாக்கி சித்தாந்தம் பேசி மயக்குவது உலகத்துவப்போர்.
பாற்சமன்பாடுசெய்ய பால்சமத்துவம் பேசும் பால்கார சண்டைகள் வேண்டாம்
பாற்கடலைக்கடைந்தால் மகனெப்படி பிறப்பானென்ற பகுத்தறிவும் வேண்டாம்.
[9]
நிர்வாணத்தில் நிர்மலமில்லாவிடில் மலமிகும் அம்மணவாழ்க்கையில்
அம்மணத்தை படமிட்டு சமத்துவம் பேசினால் தாயும் வேசியாகுவாள்
நிருவானத்தில் பொதுவுடமை கொண்டால், கொண்டவள் பங்கு போடப்படுவாள்
இப்பெண்மை நிர்வாணத்தில் வேண்டாம் எனக்கு சமத்துவம், சகோதரத்துவம் [10]
அம்மனை அம்மத்தை மறைத்தது தொழில்நுட்பமாவென ஆயும் தகுதியில்லை
நிர்வாணம் அடையத்துடிக்கும் புத்தனாகி போதிமரத்திடியில் தங்க நேரமில்லை
நிரியானம் அடைய வடக்கிருக்க நிருவாண தீட்சையும் பெறவில்லை
நிருவானம் பார்க்க அருகனுமில்லை, அந்த அருகதையும் எனக்கில்லை.[11]
பாசநேசமுள்ள மகளின் தந்தை நான் அன்பு-பண்புடைய அக்காளின் தம்பி நான்
ஆசாபாசமுள்ள கொண்ட தங்கையின் அண்ணன் நான்; பாரததேசத்தவன் நான்
மனைவியின் நிர்வாணம் எனக்குத்தானெண்ணும் பொறாமைக் கணவன் நான்
அவை தவறென்றால் நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்! [12]
இந்தியக் கலை, இலக்கிய, மத மரபுகளை இம்மண்ணின் பண்பாட்டோடு
இணைத்து ஆராய்வதே முறை.
தேவ்
On Dec 5, 7:12 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> hi,
>
> My humble opinion - its in the depiction. art nudes are have been in vogue
> for long.
>
> take the famous sittanavasal paintings - they are nudes as well
>
>
> my all time favorite has been this sculpture - i dont see the nude in this,
> but just the artistic flair.
>
> http://farm2.static.flickr.com/1211/531014239_119117f317.jpg
>
> But to do so when you are carrying a child, maybe is an extension as well.
> we have numerous instances in sculpture where a lady delivering a baby is
> portrayed in stone. and these are found in our temples.
>
> www.varalaaru.com/images/jun08/magapperu.jpgwww.varalaaru.com/images/may08/kalai/DSCN7166.jpg
>
> rgds
> vjhttp://www.poetryinstone.in
> Here the language of stone surpasses the language of man
>
> 2009/12/5 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
>
> > பெண்மை தரமிழந்துவிட்டது
> > ஆண்மை அவற்றைத் தடுக்கும் ஆண்மை இழந்துவிட்டது
>
> > இந்தச் சூழலில் இன்னும் பெண்களுக்கு சம உரிமை வேண்டுமாம்
>
> > எது சம உரிமை
>
> > குறைந்த அளவு ஆண்களைப் போல் முழுவதும் துணியால் மூடி இருக்கலாமே
>
> > பாரத மாதா என்கிறோம் நாம்
>
> > தாய்மையை, பெண்மையை, புனிதத்தை, எல்லாவற்றையுமே சீரழித்துவிட்டார்கள் பெண்கள்
>
> > பெண்மையை போற்றுதும் பெண்மையைப் போற்றுதும் என்றே நாம் கொண்டாடி வருகிறோம்
> > அவர்கள் புரிந்து கொள்ளாமல் அவரகளை அவர்களே போற்றாமல் சீரழிந்து
> > வருகிறார்கள்
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> > 5-12-09 அன்று, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> எழுதினார்:
> ...
>
> read more »
Vj
--
Sent from my mobile device
"விஜய்.நம் மரபில் Art nudes என்று தனியே கிடையாது"Dear sir,
I refered to art nudes in my mail not with reference to Indian art ( atleast of that period). I gave the examples of nudes in our own backyards after that.
However, for argument sake, let me indulge in this
உடல் என்பது பற்றியே பேச்சு!
ஆணுடல், பெண்ணுடல் என்பது பற்றி.
:-)க(-:
2009/12/5 sk natarajan <sknatar...@gmail.com>:
தேவ்
On Dec 5, 8:09 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> Men were no exception !! Even though there is puranic story behind, the
> representation - the majestic Bhikshandana in Kanchi kailasantha and the
> same in tanjore bronze are superb examples of male nudes.
>
> http://www.poetryinstone.in/lang/ta/2008/09/26/sculpture-from-an-auth...
>
> rgds
> vjhttp://www.poetryinstone.in
> Here the language of stone surpasses the language of man
>
> 2009/12/5 vj kumar <vj.epist...@gmail.com>
>
> > Just a note, the royal pallava portrait queens in the aadhi varaha
> > cave r not techically nudes. They are wearing a very transparent
> > garment ( almost like a diaphanous viel)..but ....
>
> > Vj
>
> > On 12/5/09, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> > > "விஜய்.நம் மரபில் Art nudes என்று தனியே கிடையாது"
>
> > > Dear sir,
>
> > > I refered to art nudes in my mail not with reference to Indian art (
> > atleast
> > > of that period). I gave the examples of nudes in our own backyards after
> > > that.
>
> > > However, for argument sake, let me indulge in this
>
> > >http://upload.wikimedia.org/wikipedia/commons/b/be/Chola_fresco.png
>
> > > this is part of the famous chola frescos from the big temple - Raja raja
> > > chola period - say around 1010 AD. Notice the state of the dancers ( The
> > > Temple inscriptions list 400 dancers commissioned for the temple)
>
> > > Now, see this famous panel from mallai, conservative dating to between
> > 630
> > > -730 AD, the milkmaids and common women folk are shown wearing breast
> > bands.
>
> >http://www.poetryinstone.in/lang/en/2009/02/06/govardhana-the-hillock...
> > .
> > >> ..
>
> > >> > my all time favorite has been this sculpture - i dont see the nude in
> > >> this,
> > >> > but just the artistic flair.
>
> > >> >http://farm2.static.flickr.com/1211/531014239_119117f317.jpg
>
> > >> > But to do so when you are carrying a child, maybe is an extension as
> > >> well.
> > >> > we have numerous instances in sculpture where a lady delivering a baby
> > >> > is
> > >> > portrayed in stone. and these are found in our temples.
>
> >www.varalaaru.com/images/jun08/magapperu.jpgwww.varalaaru.com/images/...
> ...
>
> read more »
க.>
2009/12/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
எதுங்கய்யா முதிர்ச்சி? இன்றைய இந்த தமிழ்நாட்டு தமிழச்சியின் வெளிப்பாடு
தான் வெள்ளையர்களின் முதிர்ச்சியோ? என்றால், சீடர்கள் நிறைய
முதிர்ச்சியுடன் தயாராகித்தான் வருகிறார்கள் ! வாசியுங்கள். இந்த அழகில்
இந்த விளக்கம் ஃபேஸ் புக்கில் வேறு இடப்பட்டதாக்கும்.
http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2009/11/16.html
சித்தன்
தேனீயாரே, ‘உடல் அல்ல நான்’ என்று நம் தத்துவம் சொல்லும் போது, உடல் ஏன்
நம்மை இவ்வளவு இம்சிக்கிறது? ;-)
> http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2009/11/16.html
>
சித்தன் பயமாகத்தான் இருக்கு! இந்த வலையுலகம் (bloggosphere) நான் அறியாதது.
இரண்டு வகையில் ஞானம் பிறக்கும்.
ஒன்று எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்த பின், பாலும் கசந்ததடி கிளியே!
படுக்கை நொந்ததடி! என்று.
இரண்டாவது, எதையும் அனுபவிக்காமல் உலக நடப்பை கவனித்து வந்தால் பொறி தட்டும்.
உலகம் மிகச்சுருங்கிவிட்டது என்று கூடச் சொல்லத்தோன்றவில்லை. எப்போதும்
உலகம் திறந்த வீடாகத்தான் இருந்திருக்கிறது. கீழுருந்து மேலும்,
மேற்கிலிருந்து கிழக்கிற்குமென்று.
இந்தியா ஒரு முழு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் தொடங்குகிறது.
கைக்கிளை..பெருந்திணை...
க.>
கடின உழைப்பின் விளைவு, மரகத வண்ணம் பூசி நம்மை ஆயிரம் ஆண்டுகள் ஒரு நொடியில் பயணித்த சிலை, பத்து நிமிடம் பேச்சு வரவில்லை.
அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை ஆனேன் - அவள் உயிர் பெற்றாள்.
விஜய் எங்கேயோ போயிட்டீங்க :-)
அழகின் மகாரசிகர்கள் இந்தியர்கள்.
ஆனால் நமது அழகியல் கண்ணோட்டம் மிகவும் வக்கிரமாகிவிட்டது இப்போது.
வேதாந்த தேசிகன் ஒரு பாசுரத்திற்கு விளக்கம் தரும் போது
மகாபாரதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். நம்ம பாஞ்சாலி ஜலக்கீரிடை
செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு சர்வ லக்ஷணங்களும் பொருந்திய உடல்.
மிகப்பெரிய அழகி அவள். அவளுடன் குளிக்கும் மற்ற பெண்களே இவளைக் கண்டு
பொறாமை கொள்கின்றனராம். அப்படி வருகிறது மகாபாரத ஸ்லோகம்.
அழகை, அழகென்று பார்ப்பதில் என்ன தவறு?
ஆண், பெண் உடல் அழகை முழுவதும் காட்டும் வண்ணம் (நிர்வாணமல்ல) broadway
show உண்டு. மிகவும் அற்புதமாக இருக்கும். இறைவன் படைப்பில் எல்லாமே
அழகுதான்.
நீங்கள் பேசுகின்ற அம்பாள் அழகு பற்றி லா.ச.ரா சொக்கிப்போய் எழுதுவார்.
க.>
2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>:
//விஜய் எங்கேயோ போயிட்டீங்க :-)
வேதாந்த தேசிகன் ஒரு பாசுரத்திற்கு விளக்கம் தரும் போது
மகாபாரதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். நம்ம பாஞ்சாலி ஜலக்கீரிடை
செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு சர்வ லக்ஷணங்களும் பொருந்திய உடல்.
மிகப்பெரிய அழகி அவள். அவளுடன் குளிக்கும் மற்ற பெண்களே இவளைக் கண்டு
பொறாமை கொள்கின்றனராம். அப்படி வருகிறது மகாபாரத ஸ்லோகம்.//
கண்ணன் ஐயா, நீங்களும் எங்கேயோ போயிட்டீங்க !
பெருமாளின் பேராண்மைக்குமுன் அடியார்கள் பெண்களாகி விடுவதை
ஸ்வாமி தேசிகன் விளக்கும் அழகு அது;
‘பக்தி: ச்ருங்கார வ்ருத்யா பரிணமதி’ என்பார்.
ஸ்ரீ ராமாநுஜ தர்சநத்தின் ப்ரதாந ப்ரதிதந்த்ரங்களை அக்கால கட்டத்தில்
அவர் தர்க்கபூர்வமாக நிலைநாட்டியிராவிட்டால் தரை
மட்டமாக்கியிருப்பார்கள்.
தேவ்
Dec 5, 12:50 pm, "N. Kannan"
> அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து
> புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை
> ஆனேன் - அவள் உயிர் பெற்றாள்.
//விஜய் எங்கேயோ போயிட்டீங்க :-)
வேதாந்த தேசிகன் ஒரு பாசுரத்திற்கு விளக்கம் தரும் போது
மகாபாரதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். நம்ம பாஞ்சாலி ஜலக்கீரிடை
செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு சர்வ லக்ஷணங்களும் பொருந்திய உடல்.
மிகப்பெரிய அழகி அவள். அவளுடன் குளிக்கும் மற்ற பெண்களே இவளைக் கண்டு
பொறாமை கொள்கின்றனராம். அப்படி வருகிறது மகாபாரத ஸ்லோகம்.//
கண்ணன் ஐயா, நீங்களும் எங்கேயோ போயிட்டீங்க !
பெருமாளின் பேராண்மைக்குமுன் அடியார்கள் பெண்களாகி விடுவதை
ஸ்வாமி தேசிகன் விளக்கும் அழகு அது;
‘பக்தி: ச்ருங்கார வ்ருத்யா பரிணமதி’ என்பார்.
ஸ்ரீ ராமாநுஜ தர்சநத்தின் ப்ரதாந ப்ரதிதந்த்ரங்களை அக்கால கட்டத்தில்
அவர் தர்க்கபூர்வமாக நிலைநாட்டியிராவிட்டால் தரை
மட்டமாக்கியிருப்பார்கள்.
தேவ்
ஓவராகத் தெரியவில்லை.
இவர் காலத்தில் திருவாய் மொழி உத்ஸவத்திற்குத் தடை நேர்ந்தது;
வாதத் திறமையால் மீண்டும் நிறுவினார்;
ரக்ஷா க்ரந்தங்கள், விரோத பரிஹாரம், பரமத பங்கத்தின் உபோத்காதம்
இவை அக்காலத்தில் நிலவிய ப்ரச்னைகளின் ஆழத்தை நமக்கு உணர்த்துகின்றன.
இவர் வாழ்ந்ததும் ஆராமம் சூந்த அரங்கத்தில் அன்று; வாதத்தினவு மிக்க
மதவாதியர் நிறைந்த காஞ்சீபுரத்தில்.
’வயம் து ஹரிதாஸாநாம் பாதரக்ஷாவலம்பகா:’என்று உடைந்த மரவடிகளைத் தலையில்
தரித்த
பரம ஸாத்விகரான இப்பெருந்தகை ’பரமதப்போர் பூரித்தோமே’என்று கூறக்காரணம்
யாது?
ஒரு புறம் பரமபத ஸோபாநம், கோபால விம்சதி, அச்யுத சதகம்,பாதுகா ஸஹஸ்ரம்
போன்ற ரஸாநுபவம் மிக்க நூல்கள்; மறுபுறம் ரக்ஷா க்ரந்தங்களும், வாத
நூல்களும்.
ஸ்ரீபாஷ்யத்தைப் பலமுறை ப்ரவசநம் செய்து அதில் வல்லவர்களைத் தயார்
செய்யக்காரணமும்
ஸித்தாந்த ஸ்தாபநமேயாக வேண்டும் - த்ரிம்சத்வாரம் ச்ராவித சாரீரக
சாஸ்த்ர:..
‘பரமத பங்கம்’ வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இயற்றியது என்றும்
சொல்கின்றனர்;
அறிஞர்கள் கூறுவதும், நூல்களில் பெறும் அகச்சான்றும் ஒத்திசைந்து
செல்கின்றன.
அடியேன் புரிந்து கொண்டதை எழுதினேன்; இவற்றை மறுத்து நீங்கள்
வேறுவிதமாக நிறுவினால் அப்பீல் ஏது?
தேவ்
சதாவுக்குத் தன் காதலைத் தெரிவிக்கும் விதமாக விக்ரம் ஒரு பாடலை (மானச
சஞ்சரரே?) பாடுவார். சதா அதைப் புரிந்துகொள்ள மாட்டார். ஆனால், உடன்
அந்தப் பெட்டியில் உள்ள அனைவரும் அதே பாடலைப் பெருங்குழுவாகப் பாடத்
தொடங்கிவிடுவார்கள். காதலுக்காகத் தொடங்கிய பாடல், முரட்டுக் கச்சேரியாக
மாறிவிடும்.
தமிழச்சியின் நிர்வாணத்தை விமர்சிக்கத் தொடங்கிய இந்த இழை, ஆன்மா,
ஆன்மீகம் எனத் திசை மாறியதைக் கண்டதும் எனக்கு 'அந்நியன்' நினைவுக்கு
வந்தான். எந்தத் தலைப்பைத் தொட்டாலும் அதைத் தனக்கு விருப்பமான
திசைக்குத் திருப்புவதற்கு ஒரு தனித் திறன் வேண்டும். :-)
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
தேவ்
அண்ணா கண்ணன், நீங்கள் அந்நியர் அல்லர்;
நீங்கள் ஒரு கலக்குக் கலக்கி நிர்வாண திசைக்குத்
திருப்பி விடலாமே.
தேவ்
மூடி வைக்க வைக்க, அதன் மீதான ஆர்வம் கூடுகிறது. அதற்காக ஒரேயடியாக
மூடினாலும் ஆர்வம் போய்விடுகிறது.
குழந்தையாக இருக்கும்போது நிர்வாணம் இயற்கை; வளர வளர வளர்கிறது செயற்கை.
அந்தமான் பற்றிய ஒரு பதிவினை அண்மையில் படித்தேன்.
http://andamantamizhosai.blogspot.com/2009/12/blog-post_04.html
/கற்காலத்தினின்று இன்னும் வெளிவராத, உடை பற்றிய எண்ணம் கூட இல்லாத, ஜரவா
என்ற பழங்குடியினர் இங்கு வசிக்கின்றனர். இன்னும் பல பழங்குடியினர் இங்கு
வசித்தாலும் அவர்கள் நம்மைப் போல நாகரீக மனிதர்களாய் வலம் வர, இந்த ஒரு
இனம் மட்டுமே நிர்வாணமாகக் காடுகளில் வசிக்கின்றனர்./ எனக் க.நா.சாந்தி
லெக்ஷ்மணன் எழுதியுள்ளார்.
ஆடை உடுத்துவதே நாகரிகம் எனக் கருத முடியுமா? ஆடை உடுத்தியவர்கள் எல்லாம்
நாகரிகமானவர்களா என்ன?
நிர்வாணம் என்பது ஒரு தத்துவம்; இயக்கம்; வாழ்வியல் முறை. அது தவறாகாது;
வீட்டில் தனியே இருக்கும்போது ஆடையின்றி இருப்போர் உண்டு; வெளியே
செல்லும்போது மட்டும் பிறருக்காக ஆடை அணிவார்கள். இது ஒரு வகையில் வேடம்
தான்.
தந்தை பெரியாரும் நிர்வாணமாகச் செல்லும் துணிவு பெற்றவர்தான்.
/பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும்
துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத்
துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை
பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு
பெரியாரியவாதிகளுக்கு இருந்தது./
http://www.yarl.com/forum3/index.php?showtopic=10028&pid=175095&mode=threaded&show=&st=0
உண்மையில் நிர்வாணத்தைக் கண்டு மனிதன் அஞ்சுகிறான். அது, உண்ணக் கூடாத
உணவு என அவன் தனக்குத் தானே கருதுகிறான்.
புறத்திலிருந்து திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பாக இருக்கும்
நிர்வாணத்திற்கு அழகு அதிகம். நிர்வாணத்தை இயல்பாக எடுத்துக்கொள்ளும்
சமூகமே முதிர்ந்த சமூகம்!
1. திக நண்பர்களையேக் கேட்டுவிட்டேன், அவர்கள் அத்தகைய நிர்வாண
புகைப்படத்தைக் காடுவதில்லை [மங்கள முருகேசன் புத்தகத்தில் ஒரு படம்
இருக்கிறது. ஆனால் உடையோடத் தான் இருக்கிறது].
2. ஈரோட்டில் உள்ள நினைவகத்திலும் இல்லை. "பெரியார் படத்திலும்"
காட்டவில்லை! யாரிடமாவது இருந்தால் வெளியிடுங்கள் அவரது "துறவுநிலையை"ப்
பார்த்துவிடுவோம்.
3. நண்பர்களுக்கு இன்னும் புரியாமல் இருப்பது நிர்வாணத்தின் மர்மம்தான்.
பெரியாரைப்பற்றி உதாரணம் கொடுத்துள்ளதால், நான் அதிலேயே அலச
விரும்புகிறேன்.
4. ஈரோட்டில் பலமுறைச் சென்று பெரியாரைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி
இருக்கிறேன்.
i. ஒரு பெரியவர், அவர் ஒரு கவிதை நூலே
வெளியிட்டிருக்கிறார்.
ii. அதில் அவர் குறிப்பிடுவதாவது, பெரியார் பவானி
ஆற்றங்கரையில் பல பெண்களுடன் "அவ்வாறே" இருப்பாராம்.
iii. அந்த நிர்வாணத்தையும் புகைப்படங்களாக
வெளியிடுவதுதானே?
iv. இன்னும் யதார்த்தமாக பல கேள்விகளைக்
கேட்கலாம்.
v. ஆனால், உண்மை / உண்மை நிலை பற்றி பேசும்போது
கோபம் வரும்!
5. உள்ளேயிருக்கவேண்டிய நிர்வாணம் வேறு, வெளியேயிருக்க வேண்டிய நிர்வாணம்
வேறு.
6. இதைப் புரிந்து கொள்ளாமல், புரிந்தும் புரியாதது மாதிரி "நிர்வாண
அத்வைதம்" பேசினால், ஒரு பிரயோஜனமும் இல்லை.
7. அதுதான் முன்பு கேட்டேன் "மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்ய
முடியுமா?" என்று. பிறகெதற்கு மனிதர்களுக்கு கழிவறை, மறைவு, மறைப்பு
எல்லாம். அதையும் [1, 2, 3, 4.....] எல்லாமே வெளியிலேயே செய்யலாமே?
8. நிர்வாணம் மனத்தில் இருக்கிறது உடலில் இல்லை என்றெல்லாம் வாதம்.
அவ்வாதம் புரிவோர் நிர்வாணமாக உலா வருவார்களா?
9. நிர்வாணம் தத்துவம் என்றெல்லாம் வாதம் கூடுகிறது.
i. ஆனால் மஹாவீரருடைய நிரிரானத்திலும் புத்தருடைய
நிர்வாணத்திலும் வேறுபாடு இருந்தது [நேற்று இதனைக் குறிப்பிட்டுக்
காட்டினேன்].
ii. ஏசுவின் "ஏலி ஏலி! லாமா சபக்தானி" என்ற
அலரலுக்கும், அல்லாவின் மறைப்பிற்கும் அங்குதான் அர்த்தம் உள்ளது.
முதலில் இந்த நிர்வாணங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
iii. இங்குதான் மேலைநாடு/கீழைநாடு; இந்தியா/இந்தியா
அல்லாதவர்கள்;
iv. குழந்தைகளுடன் பார்ப்பேன்/ குழநெதகளுக்குத்
தெரியாமல் பார்ப்பேன்;
v. இரவில் காட்டுவார்கள் / பகலில் காட்டமாட்டார்கள்
என்ற வாதங்களுக்குப் பொருள் கிடைக்கும்.
10. நிர்வாண சிற்பங்கள், தெய்வங்கள் பற்றி தனியாக எழுதுகிறேன்.
வேதபிரகாஷ்
06-12-2009
நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!
அம்மணத்தில் எம்மணம் பொதுமையானதென ஆயும் கம்யூனிஸ தந்தைல்லை
நிர்வாணத்தில் பகுத்தறிவோடு புகுந்து பார்க்க பெரியாரின் சகோதரனுமில்லை
அம்மணியின் அந்தரங்கங்களைப் பேச நான் மோஹனரங்க புருஷனுமில்லை
இம்மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுக்கொண்ட அந்நியன் நான். [6]
ஈ.வே.ரா அவர்கள் அத்துணிவை தமிழகத்தில் காட்டவில்லை. ஜெர்மனியில்தான்
காட்டியிருக்கிறார் ;-) பெர்லின் நகரில் நிர்வாண சபையென்று ஒன்றுண்டு.
அதில் சேர்ந்து ஆண், பெண் என்று எல்லோரும் நிர்வாணமாக எடுத்துக்கொண்ட
புகைப்படமிது. நான் பார்த்திருக்கிறேன்.
அவர் துறவறத்தை எண்ணியெல்லாம் அப்படிச் செய்யவில்லை. ஒரு சமூக
எதிர்ப்பாக. சமூக கட்டுப்பெட்டித்தனத்தை கட்டுடைக்கும் முகமாக அதை
செய்தார்.
ஜெர்மனியில் இதுவொரு பெரிய விஷயமே இல்லை. நாங்கள் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு
செய்திருந்தோம். அதில் பரத நாட்டியம் முடிந்து, பெல்லி டான்ஸ்
ஆரம்பமானது. அதைச் செய்தவர் ஒரு ஜெர்மன் மாது. அவர் இதை பெல்லி டான்ஸ்
என்று சொல்லமாட்டார். அதை கீழத்திய நடனம் என்பார். அது இந்தியாவிலிருந்து
ஜிப்சி எனும் நரிக்குரவர்கள் கொண்டு சென்றது என்பது சரித்திரம்.
எல்லோரையும் ஆடச்சொன்னார். நாகப்பாம்பு போல் நெளியும் புன்னாக வராளி
இசையில் திடீரென்று நடுவில் பார்த்தால் ஒரு ஜெர்மன் முழு நிர்வாணமாக.
பலர் முதலில் கவனிக்கவில்லை. சரி! இப்ப என்ன செய்வது? நம்ம ஊராக
இருந்தால் பிடறியைப் பிடித்துத்தள்ள ரசா, பாசமாகியிருக்கும். ஒன்றும்
சொல்லாமல் பாடல் தொடர்ந்தது. நடனம் முடிந்தது. அவனும் பிறகு போய் உடை
மாட்டிக்கொண்டான். ஏதோ அவனுக்கு அப்படி ஆட வேண்டுமென்று
தோன்றியிருக்கிறது. ஆடினான். அதை ஜெர்மானியர்கள் சமாளித்தவிதம் அபாரம்,
முதிர்ந்த போக்கு.
கவன ஈர்ப்பு என்பது முக்கியம். உலகில் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.
மின்தமிழிலேயே கவனம் செலுத்த ஆயிரம் இழைகள் உள்ளன. நம் கவனம் வக்ரமான
விஷயங்களிலும், பிரச்சனைக்குரிய விஷயங்களிலும் இருந்தால். அதைப்பற்றியே
எண்ணி, அதைப்பற்றியே பேசுகிறோம். மனசு மாசுபடுகிறது.
ஏனிந்த நிலையென்று யோசிக்கிறேன்! இந்தக் கவன ஈர்ப்பு இங்கு
அவசியமில்லையென்று தோன்றுகிறது. (ஐயா சாமி, இது பொதுவான பேச்சு.
அண்ணாகண்ணனுக்கல்ல ;-)
க.>
இக்கேள்வியை தமிழகச் சூழலில் இருந்து நேர்கொள்வதற்கும்
ஐரோப்பிய/அமெரிக்கச் சூழலில் இருந்து நேர் கொள்வதற்கும் நிறைய
வித்தியாசங்கள் உள்ளன.
தமிழகச் சூழலில் கூட ஆபிரகாமிய விழுமிய கருத்தாக்கத்தில் இல்லாமல், சங்க
காலத்தமிழ் கண்ணோட்டத்துடன் நோக்கும் போதும் நம் எதிர்கொள்ளல்
வித்தியாசப்படுகிறது.
மீண்டும் ஆசாரமான கண்ணோடத்துடனும், சுயமாக தரித்துக் கொண்டுள்ள 'தனித்த,
சுத்த' விழுமியங்களோடு எதிர்கொள்ளும் போதும் வித்தியாசப்படுகிறது.
மானுடவியல் நோக்கில் பார்த்தால் இவரை தமிழச்சி என்று சொல்ல முடியாத
ஐரோப்பிய முகவெட்டு. மீண்டும் கேள்வி எழுகிறது, 'யார் தமிழன்/தமிழச்சி?'
என்பதை எவ்வகை அலகுகளால் நிர்மாணிப்பது என்று?
கலை நோக்கில் பார்க்கும் போது கேமிரா செய்யும் செப்பிடி வித்தை
ஆச்சர்யமாக இருக்கிறது. இவரது படங்களைப் பார்த்தால் நேரில் பார்க்கும்
போது மிகச் சாதரணமாக இருக்கும் இவர்தானா உலக அழகி மாடல் போல் போஸ் தருவது
என்று இருக்கிறது.
பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதொரு பெரிய கேள்வி. இதுவரை
அது ஆணின் உடமையாக உள்ளது. பெரியார் விடுதலையில் பெண் உடல் விடுதலையும்
ஒன்று. அந்நோக்கில் இப்பெண் சொல்வது சரியென்று படுகிறது. அவர் உடல், அவர்
பாடு!
தமிழக சினிமாவை நாம் குடும்பத்தோடு பார்க்கிறோம். ஜெர்மன் விழுமியங்களை
வைத்துப் பார்த்தால் பல படங்கள், பாடல் காட்சியில் 'பெரியவர்க்கு
மட்டும்' எனும் சான்றிதழ் பெறும். ஜெர்மனியில் இருந்தால் இப்படங்கள்
சிறுவர்கள் நோக்க முடியாத பின்னிரவு ஒளிபரப்பாக அமையும் (செமி
போர்னோகிராஃபி வகை). ஆனால் குழந்தை குட்டிகளோடு நடு வீட்டில் உட்கார்ந்து
பார்க்கிறோம்.
உலகம் சுருங்கி எல்லா விழுமியங்களையும் சந்தைப் பொருளாதாரம் கபளீகரம்
செய்து வரும் காலக்கட்டத்தில் பல கேள்விகள் அர்த்தமற்றுப் போகின்றன.
கண்ணன்
2009/12/4 Vedaprakash <vedamved...@yahoo.com>:
> http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/12/03-pregnant-padma-lakshmi-poses-naked.html
>
விழுமியம் எனும் சொல் Value என்பதைக் குறிக்கிறது.
அப்படித்தான் இதுவரை நான் கேட்டறிந்தது.
க.>
உங்கள் இருவருக்கும் நன்றி. Value என்பதை `விழுப்பம்` என்றே சொல்லலாம்
என்பது ஒரு பரிந்துரை. நான் சமகால இலக்கியத்தின் மூலமாகவே தமிழுக்குள்
வருகிறேன். எனவே விழுமியம் என்ற பயன்பாடு. எப்படி புதிய, புதிய சொற்கள்
தமிழுக்குள் நுழைகின்றன என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. விடுதலை என்ற
சொல் பாரதிக்கு முன் கிடையாது என்பார்கள். ஒருமுறை வ.செ.கு அவர்களுடன்
பேசிக்கொண்டிருந்த போது இந்த ‘மற்றும்’ போட்டுப் பேசுவது அண்ணாவிற்குப்
பிறகு வந்தது என்றார். அதற்கு முன்னால் முத்துக்கண்ணப்பனார் விளக்கியபடி,
‘கண்ணனும், ராமனும்’ கோவிந்தனும், என்றுதான் எழுதி வந்தனர்.
அண்ணாவிற்குப் பிறகு கண்ணன், கோவிந்தன் மற்றும் ராமன் வந்தனர் என்று எழுத
ஆரம்பித்தனர். (அதாவது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதும் போது and
எனும் சொல்லிற்கு தமிழ் தேவைப்படுகிறது. மின்தமிழில் அவ்வப்போது வரும்
மொழிபெயர்ப்பு உதவி சுட்டுவது நாம் இயல்பான தமிழிலிருந்து மெல்ல, மெல்ல
விலகிப்போகிறோம் என்பதே). இப்போது தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள்
புதுவகையான தமிழில் பேசுகின்றனர். நமது பள்ளியில் தமிழ் மொழியின் தரம்
எந்நிலையில் உள்ளது என்பதும் இன்னொரு காரணமாகும்.
மொழி என்பது ஆற்று நீரோட்டம் போல் வேகமும், சுழியும், ஆழமும் கொண்டு
ஓடுகிறது. ’நற்றமிழ்’ இழை போல் ஓரிழை எப்போதும் ஓடிக்கொண்டு இருக்க
வேண்டியதின் அவசியம் புரிகிறது.
கண்ணன்
2009/12/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> கஷ்டப்பட்டு values என்பதற்கு விழுமியம் என்று கண்டுபிடிக்கத்
> தேவையில்லை. ஏற்கனவே சொல் இருக்கிறது. விழுப்பத்திற்குத் தரும் பொருளே values
விஜயராகவன்
On 6 Dec, 23:10, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ரங்கன், ஹரிகி:
>
> உங்கள் இருவருக்கும் நன்றி. Value என்பதை `விழுப்பம்` என்றே சொல்லலாம்
> என்பது ஒரு பரிந்துரை. நான் சமகால இலக்கியத்தின் மூலமாகவே தமிழுக்குள்
> வருகிறேன். எனவே விழுமியம் என்ற பயன்பாடு. எப்படி புதிய, புதிய சொற்கள்
> தமிழுக்குள் நுழைகின்றன என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. விடுதலை என்ற
> சொல் பாரதிக்கு முன் கிடையாது என்பார்கள். ஒருமுறை வ.செ.கு அவர்களுடன்
> பேசிக்கொண்டிருந்த போது இந்த ‘மற்றும்’ போட்டுப் பேசுவது அண்ணாவிற்குப்
> பிறகு வந்தது என்றார். அதற்கு முன்னால் முத்துக்கண்ணப்பனார் விளக்கியபடி,
> ‘கண்ணனும், ராமனும்’ கோவிந்தனும், என்றுதான் எழுதி வந்தனர்.
> அண்ணாவிற்குப் பிறகு கண்ணன், கோவிந்தன் மற்றும் ராமன் வந்தனர் என்று எழுத
> ஆரம்பித்தனர். (அதாவது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதும் போது and
> எனும் சொல்லிற்கு தமிழ் தேவைப்படுகிறது. மின்தமிழில் அவ்வப்போது வரும்
> மொழிபெயர்ப்பு உதவி சுட்டுவது நாம் இயல்பான தமிழிலிருந்து மெல்ல, மெல்ல
> விலகிப்போகிறோம் என்பதே). இப்போது தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள்
> புதுவகையான தமிழில் பேசுகின்றனர். நமது பள்ளியில் தமிழ் மொழியின் தரம்
> எந்நிலையில் உள்ளது என்பதும் இன்னொரு காரணமாகும்.
>
> மொழி என்பது ஆற்று நீரோட்டம் போல் வேகமும், சுழியும், ஆழமும் கொண்டு
> ஓடுகிறது. ’நற்றமிழ்’ இழை போல் ஓரிழை எப்போதும் ஓடிக்கொண்டு இருக்க
> வேண்டியதின் அவசியம் புரிகிறது.
>
> கண்ணன்
>
> 2009/12/7 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:
>
>
>
> > கஷ்டப்பட்டு values என்பதற்கு விழுமியம் என்று கண்டுபிடிக்கத்
> > தேவையில்லை. ஏற்கனவே சொல் இருக்கிறது. விழுப்பத்திற்குத் தரும் பொருளே values
> > என்பதுதான்.- Hide quoted text -
>
> - Show quoted text -
On Dec 6, 12:27 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/12/6 Annakannan <annakan...@gmail.com>:
உங்களோடு ஒத்துப் போகிறேன். என்னவெனில் சிலர் சில ஆங்கிலச்
சொற்களுக்கு தமிழ் என்ன என்ற கேள்வியை இணையத்தில் போடுகிறார்கள்.
யார் என்ன சொல் சொன்னாலும் இன்னொருவர் அதில் குறை கண்டு
பிடிப்பார். சிலர் தமிழின் வேருக்கே போய் புதைந்து போன சொற்களைப்
பிடுங்கி எடுத்து அதனை நவீனத் தமிழுக்கு ந்டுவில் வைக்கிறார்கள்.
இந்த விவாத அமளியில் இறுதியில் ஒரு சொல்லும் உருவாவதில்லை.
சிலர் யாரையும் கேட்காமல் தங்களுக்குத் தோன்றியதை தைரியமாகப்
பயன்படுத்தி விடுகிறார்கள். அது பிடித்துக் கொள்ளுகிறது.
விழுமியம் அப்படித்தான் வந்திருக்க வேண்டும்.
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Monday, December 07, 2009 7:10 AM
Subject: [MinTamil] Re: தமிழச்சி கலக்குகிறாள்!
அஞ்சி ஆராய்ந்து அழகான ஒரு சொல்லைத் தேர்வு செய்தால் துவைத்துக்
காயப்போட்டு விடுவார்கள்; அபிஜித் முஹூர்த்தத்தில், கிடைத்த சொல்லைப்
புழக்கத்தில் விட்டால் சிக்கென்று பிடித்துக் கொள்ளும், ஏன் எதற்கு என்று
யாரும் ஆராய மாட்டார்கள்.
இப்படிப் புழக்கத்தில் வந்தவை பல.
அபிஜித் முஹூர்த்தம் எது என்பதைச் சோதிட வல்லுநர்களே அறிவர்.
தேவ்
அதுவே. நானும் இப்படி அழகாக ஒலிக்கின்ற புதிய சொற்களை ஏற்றுக் கொள்வதைஎன் "விழுமியமாக" கொண்டிருக்கிறேன்.அண்மையில் சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் "குவியம்" எனத் தன் நாவலுக்குத்தலைப்பிட்டுள்ளார். "குவிமையம்" என்பது இடை குறுகி "குவியம்" ஆகியிருக்கலாம்என்கிறார் முன்னுரை எழுதியுள்ள பாவண்ணன். அப்போ இனி ஃபோக்கசுக்கு "குவியம்"வச்சுக்கிடலாமா, ஹரி?ரெ.கா
ரங்கன், ஹரிகி:
உங்கள் இருவருக்கும் நன்றி. Value என்பதை `விழுப்பம்` என்றே சொல்லலாம்
என்பது ஒரு பரிந்துரை. நான் சமகால இலக்கியத்தின் மூலமாகவே தமிழுக்குள்
வருகிறேன். எனவே விழுமியம் என்ற பயன்பாடு. எப்படி புதிய, புதிய சொற்கள்
தமிழுக்குள் நுழைகின்றன என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. விடுதலை என்ற
சொல் பாரதிக்கு முன் கிடையாது என்பார்கள். ஒருமுறை வ.செ.கு அவர்களுடன்
பேசிக்கொண்டிருந்த போது இந்த ‘மற்றும்’ போட்டுப் பேசுவது அண்ணாவிற்குப்
பிறகு வந்தது என்றார். அதற்கு முன்னால் முத்துக்கண்ணப்பனார் விளக்கியபடி,
‘கண்ணனும், ராமனும்’ கோவிந்தனும், என்றுதான் எழுதி வந்தனர்.
அண்ணாவிற்குப் பிறகு கண்ணன், கோவிந்தன் மற்றும் ராமன் வந்தனர் என்று எழுத
ஆரம்பித்தனர். (அதாவது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதும் போது and
எனும் சொல்லிற்கு தமிழ் தேவைப்படுகிறது.
2008/10/16 karth...@gmail.com <karth...@gmail.com>
ஹரி,
வணக்கம். உங்களை இங்கு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி
.
வணக்கம் ரெகா. அடுத்த் ஆட்டத்தில் கார்த்திகை ஈசன் என்று உங்களை வம்புக்கிழுப்பதாகத்தான் இருந்தேன். இளங்கோவன் என்பதும் இரண்டு பெயர்கள் கூடி ஒன்றான ஒருசொல்தானே!
1) இந்த சொற்களுக்கிடையில் இடம் விட்டு எழுதுவதற்கு
இலக்கணம் ஏதும் உண்டா? இப்போதைய அச்சுப் பிரதிகளில்
பெரும் குழப்பம் இருக்கும் போலத் தெரிகிறதே!
நாம் ஒரு நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்புவரை கவிதையாகவே எழுதிக் கொண்டிருந்தோம். இரண்டு விரற்கடை அளவு அகலமுள்ள ஓலைச்சுவடியில் அதிகமான விஷயத்தைத் திணிக்கக் கவிதையால் முடிந்தது. கவிதையில் சீர் பிரிப்பது யாப்பிலக்கணத்தின் கட்டுக்கு உட்பட்டது. ஆகவே we really were never conscious about where to split a word while writing. பிறகு உரைநடை வந்தது. (கல்வெட்டு உரைநடையெல்லாம் இந்தக் கணக்குக்கு உதவாது. செதுக்கிய சிற்பி தப்புத் தப்பாக ஸ்பெல்லிங் போட்டுவிடுவான். அதுவும் மாற்றம் பெறாமல் அப்படியே இடம்பெற்றுவிடும். கம்பராமாயணத்தில் தசரதன் உடலை எரியூட்டிய படலத்துக்கு பள்ளிபடைப் படலம் என்று பெயர். கல்வெட்டில் பள்ளிப்படை என்று இருக்கிறது. இலக்கணப்படி பள்ளிபடை என்று இருக்க வேண்டும். வைமுகோ இரண்டு வடிவங்களையும் ஏற்றுக் கொள்ளகிறார். இதில் என்ன வேடிக்கை ஆகிவிட்டது என்றால், ப்ப என்ற இரண்டு எழுத்துகளையும் சேர்த்து கூட்டெழுத்தாக எழுதுவார்கள். கிட்டத்தட்ட ய மாதிரி இருக்கும். ஓலைச்சுவடியில் புள்ளி வைக்க மாட்டார்கள் (பொத்துக் கொள்ளும் என்பதனால்). பள்ளிப்படை படலம் பள்ளியடைப் படலமாகி விட்டது.
இது பழைய கதை. தவறுகள் நடந்த விதம். இப்போதைய அச்சு வாகனத்தின் டிமான்ட் வேறு விதமாக இருக்கிறது. நாம் சொற்களைச் சேர்த்தெழுதினால் (இதே சொல்லை பாரதியின் manuscriptல் பார்த்தால் 'சேர்த் தெழுதினால்' என்று எழுதியிருப்பான்) சொல் நீளமாகப் போய்விடுகிறது. Word wrap இருப்பதனால் column அகலத்துக்குள் அவ்வளவு நீளமான சொல்லை அமுக்க முடிவதி்ல்லை. ஆகவே தோன்றிய இடங்களிலெல்லாம் தோன்றிய படி பிரிக்கிறார்கள். 'இவ்வாறிருந்திருக்கலாம்' என்றோ 'இவ்வா றிருந்திருக்கலாம்' என்றோ எழுத நம் இலக்கணம் இடம் தருகிறது. இப்படி எழுதினால் மக்களுக்குப் புரியாது என்று ஒரு தியரி வைத்திருக்கிறார்கள். 'இவ்வாறு இருந்து இருக்கலாம்' என்று பிரித்துப் பிரித்து எழுதுகிறார்கள். ('இருந்து' என்றால் மலம் கழித்து என்றுவேறு பொருளிருக்கிறது. 'இருந்து இருந்தால்' என்ன அர்த்தம் வரும்!)
ஆகவே, அச்சு சௌகரியத்துக்காக அவர்கள் கண்டபடி பிரிக்கிறார்கள். அதற்கும் மேல், அடிப்படை இலக்கண அறிவு இல்லாதவர்கள் எழுதுகிறார்கள். அந்த+அளவு அந்த அளவுதான் அந்தளவு, இந்தளவு என்று புணராது; அந்த+ஆண்டு அந்த ஆண்டுதான். அந்தாண்டு, இந்தாண்டு என்று புணராது. ஜூனியர் விகடனைப் பாருங்கள். இப்படித்தான் எழுதுகிறார்கள்.
இன்னொரு வகை இருக்கிறது. நான் அங்கே பணியாற்றிய ஒன்றரை வருடங்களும் தலைதலையாய் அடித்துக் கொண்டு இன்னமும் திருத்த முடியாத விஷயம். எங்கெல்லாம் பெண் வருகிறதோ அங்கெல்லாம் 'பெண்' என்று சொல்லியே ஆகவேண்டும். பெண் கவிஞர், கவிதாயினி என்றெல்லாம் சொதப்புகிறார்கள். கவிஞர், அமைச்சர் எல்லாம் genderless nouns என்ற அடிப்படை இலக்கணம் தெரிந்தால்தானே! கவிஞருக்குப் பெண்பால் கவிதாயினி என்றால், அமைச்சருக்குப் பெண்பால் என்ன? ஏன் ஜெயலலிதாவை முதமைச்சாயினி என்று சொல்லிவில்லை! பத்திரிகையாளர்கள் யோசிக்கவில்லை. யோசிக்கச் சொல்பவன் 'பண்டிதன். அவனுக்கு இலக்கண சொறி பிடித்திருக்கிறது.'
அதைவிடவும் பெரிய ஜோக் என்னவன்றால் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகளைப் பாருங்கள். 'பெண் ரசிகைகள்', 'பெண் சிநேகிதிகள்' என்று எழுதுகிறார்கள். ரசிகையும் சிநேகிதியும் பெண்ணாக இல்லாமல் பின்ன ஆணாகவா இருக்க முடியும்! இதையும் சொல்லிப் பார்த்துவிட்டடேன். பயன்தான் இல்லை.
இதெல்லாம் பிரச்சினையின் மிகச் சிறிய பகுதிதான் ரெகா. இன்னும் நிறைய இருக்கின்றன. பேசலாம்.
2) "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலின் இலக்கண வழு பற்றிப்
பெரிதும் பேசப் பட்டிருக்கிறதல்லவா? இது ஆங்கில இலக்கணத்தைச்
சார்ந்த every = singular என்னும் விதிதானே? தமிழில் இப்படி
விதி இருக்கிறதா?
("பூக்களுமே, சொல்கிறதே" என்பதில் உள்ள பிழை தெளிவாக
இருக்கிறது. அதை விடுங்கள்.)
ஒவ்வொரு என்பது ஆங்கிலத்தில் every, அல்லது each and every என்ற ஒருமையைத்தான் குறிக்கிறது. ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே என்பதுதான் இலக்கணப்படி சரி. எளிய, அன்றாட இலக்கணத்தைச் சொல்கிறேன். யாருக்குமே புரியாது என்று கற்பனை செய்யப்படுகிறதே அதை இல்லை.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது. இப்படிப் பிழைபட எழுதினால், I are always correct, you is not correct. They speaks good English என்று ஆங்கிலத்தில் எழுதிவிடலாம். சொல்லப்போனால், They பன்மை, speaks என்ற பன்மைதானே அதைத் தொடரவேண்டும்! :-)))
நான் எங்கு போவது இப்போது?
எங்கு பார்த்தேன்?
பாரிசில் நண்பர் புஸ்பராஜா வீட்டில்?
பெர்லினில் சுசீந்தரன் வீட்டில்?
ஞாபகம் இல்லை நண்பரே.
ஆனைமுத்து பதிப்பில் இருக்கிறதா? என்று தெரியவில்லை.
பெரிதாக என்ன? பெரியார் இன்னும் சில கிழங்களுடன் அம்மணமாக நிற்கிறார். அவ்வளவுதான்.
ரசிக்கும் படி ஒன்றுமில்லை. அது வெறும் convention க்கு ஒரு எதிர்ப்புத்தானே?
க.>
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Monday, December 07, 2009 1:50 PM
Subject: [MinTamil] Re: தமிழச்சி கலக்குகிறாள்!
ரெ.கா. ஏதோ ஆடை இருப்பதால்தான் ஒளிச்சு மறைச்சு கல்யாணம் கார்த்திகை ஆகிறது.
இவங்க சொல்ற டெக்னில்லாம் ஒண்ணும் ஒத்துவராது.
சிலருக்குத்தான் நிர்வாணம் அழகு. எல்லோருக்குமில்லை ;-)
அந்த வகையில் அந்தப் பெண் கொடுத்து வைத்தவள் (அவள் பெயர் என்ன? ஏதோ ஒண்ணு!)
க.>
2009/12/7 karthi <karth...@gmail.com>:
----- Original Message -----From: Hari KrishnanSent: Monday, December 07, 2009 11:00 AMSubject: [MinTamil] Re: தமிழச்சி கலக்குகிறாள்!
> பெரிதாக என்ன? பெரியார் இன்னும் சில கிழங்களுடன் அம்மணமாக நிற்கிறார். அவ்வளவுதான்.
> ரசிக்கும் படி ஒன்றுமில்லை. அது வெறும் convention க்கு ஒரு எதிர்ப்புத்தானே?
>
> க.>
It is not. In a nudist's colony, the convention is nudity. E.V.R was a
smart guy. He knew the conevntions of the place and chose the
conventions and places he liked. A kind of moral oppurtunism.
Vijayaraghavan
Generally, most people who criticise written Tamil don't focus on
grammer, but only on vocabulary. Even on vocabulary, whether it is
'pure Tamil' or not. So, this diverts all our attention to less
essential aspects of written Tamil.
Vijayaraghavan
On 7 Dec, 03:07, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/12/7 N. Kannan <navannak...@gmail.com>
>
> > ரங்கன், ஹரிகி:
>
> > உங்கள் இருவருக்கும் நன்றி. Value என்பதை `விழுப்பம்` என்றே சொல்லலாம்
> > என்பது ஒரு பரிந்துரை. நான் சமகால இலக்கியத்தின் மூலமாகவே தமிழுக்குள்
> > வருகிறேன். எனவே விழுமியம் என்ற பயன்பாடு. எப்படி புதிய, புதிய சொற்கள்
> > தமிழுக்குள் நுழைகின்றன என்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. விடுதலை என்ற
> > சொல் பாரதிக்கு முன் கிடையாது என்பார்கள். ஒருமுறை வ.செ.கு அவர்களுடன்
> > பேசிக்கொண்டிருந்த போது இந்த ‘மற்றும்’ போட்டுப் பேசுவது அண்ணாவிற்குப்
> > பிறகு வந்தது என்றார். அதற்கு முன்னால் முத்துக்கண்ணப்பனார் விளக்கியபடி,
> > ‘கண்ணனும், ராமனும்’ கோவிந்தனும், என்றுதான் எழுதி வந்தனர்.
> > அண்ணாவிற்குப் பிறகு கண்ணன், கோவிந்தன் மற்றும் ராமன் வந்தனர் என்று எழுத
> > ஆரம்பித்தனர். (அதாவது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதும் போது and
> > எனும் சொல்லிற்கு தமிழ் தேவைப்படுகிறது.
>
> தோ பார்ரா....அங்க ரெகா காலை வாரினா இங்க நாகா காலை வாருகிறார்! தலைவரே, மின்
> தமிழில் சேந்த புதுசுல நான் எழுதின விஷயமே இந்த ‘மற்றும்’ போடறதுக்கு ஒரு
> முற்றும் போடறதைப் பத்திதான். உங்களுக்காக மறுஒலிபரப்பு இங்கே:
>
> > 2008/10/16 karthige...@gmail.com <karthige...@gmail.com>