தமிழர்களின் பாராமுகமும் உயர்நவிழ் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்
வரலாற்றில் உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்ட அரசுகளில் ஒன்றாக விளங்கிய தமிழ் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக அடிமைப் படுத்தப்பட்டு இருந்தது. பேரரசுகளாக வாழ்ந்தும் சூழ்ச்சிகளாலும் குடும்ப சண்டைகளாலும் அரச பரம்பரைகள் அழிந்துபோனது. தொடர்ச்சியான ஆளுமை இல்லாத சமூகமாக தமிழர்கள் 700 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும் எதிர்ப்புணர்ச்சி அவ்வப்போது பல வழிகளில் வெளிப்பட்டது. ஆனால் இவைகளில் சூழ்ச்சியில்லை, தந்திரமில்லை தமிழர் என்ற உணரவில்லை. இதனால் பிறர் சூழ்ச்சிகளுக்கும் தந்திரங்களுக்கும் மீண்டும் அடிமையானோம். அடிமைத்தனம் நமக்கு எதிலும் பற்று இல்லாத ஒரு தன்மையைக் கொடுத்துவிட்டது. இருப்பினும் புதிய தலைமைகள் உருவானபோது விழிப்புணர்வு போன்ற நிலை ஏற்பட்டாலும் தலைமையின் மேல் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையால், அவர்களை அவர்களின் திறனுக்கும் மேலாக கருதியதால் வீறுகொண்டு எழுந்தவுடன் மீண்டும் வீழ்ந்தோம், மீண்டும் மீண்டும் வீழ்ந்தோம்.
கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறிய மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்.
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம் என்றேன். சூம்பல் தோளை
வழங்கா தகையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய்
யானும் என்தன் குற்றத்தால் ஏகின்றேனே.
- ராமச்சந்திரக் கவிராயர்
முதல் இழப்பு
1911 ல் சித்தூர் மாவட்டம் என்பது உருவாக்கப்பட்டது. இது ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தை பிரித்து அமைக்கப்பட்டது. மாவட்டத்தின் அளவைப் பெரிதாக்க வடாற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியை சித்தூருடன் இணைத்தனர். பின்னாளில் இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஏற்பட்ட மொழிவாரி மாநிலம் என்ற திட்டம் வருவதற்கு முன்னாலேயே பொட்டிஸ்ரீராமுலு (சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்து இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர், காமராஜர், அண்ணா போன்ற தமிழர் தலைமை உருவானதும் தனி ஆந்திரம், அதுவும் சென்னையை தலைநகராகக் கொண்டு, வேண்டுமென்று உண்ணாநிலையில் உயிர் விட்டார்) என்பவரின் போராட்டத்தின் விளைவாக சென்னை மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, சித்தூர் மாவட்டத்தின் தமிழ் நாட்டுப்பகுதிகளை நாம் நமதாக்கிக்கொள்ளவில்லை.
இதனால் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட பொழுது சில பகுதிகளைக் கொடுத்துதான் அதே அளவு பகுதிகளைப் பெறமுடிந்தது (மா.பொ. சி. போன்றோரின் போராட்டத்தால்)
இந்த இழப்பு நடை பெற்றபோது மின்டோ-மார்லி சீர்திருத்தின்படி தேர்தல்கள் ஏதும் நடக்காமல் இருந்தாலும் காங்கிரஸ் தமிழகத்தின், இந்தியாவின் மிகப்பெரியக் கட்சியாக இருந்தது. அங்கு தமிழர் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பில்லை. திராவிடம் என்பது அரசியலாகவில்லை. தீங்கை மட்டுமே விளைத்த ஆற்காட்டு நவாப் இதில் தலையிட்டிருக்க வேண்டுமென நினைத்துக்கூட இருக்க மாட்டார்.
இரண்டாவது இழப்பு
இந்தியா விடுதலை அடைந்தவுடன் போட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தையடுத்து எவ்வித கொருதலுமின்றி இந்திய அரசு சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திர மாநிலத்தை உருவாக்கியது.
தமிழர் முதல்வராக (மாகனத்தின் பிரதமராக) இருந்தார். திராவிடம் தளைத்தோங்கி கிளை விட்டு வளர்ந்திருந்தது. தமிழர் பகுதிகளை தக்கவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை - கண்டு கொள்ளவில்லை.
மூன்றாவது இழப்பு (பேரிழப்பு)
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட முடிவு செய்தபோது, மைசூர் அரசும் (கடற்கரை இல்லாத சிறிய பரப்பளவைக் கொண்டது) கொச்சி-திருவாங்கூர் அரசும் தங்கள் பகுதிகளை விரிவாக்க முயற்சித்தனர்.
கன்னடம் பேசும் இடங்களை ஒருங்கிணைக்க மிகப்பெரும் முயற்சியில் மைசூர் அரசும் இந்தியாவில் உயர்பதவில் இருந்த கன்னடர்களும் பெருமுயற்சி கொண்டனர். எவ்வித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டதால், கன்னடம் பேசுவோர் பெருவாரியாக வாழ்ந்த பகுதிகளை மட்டுமல்லாமல் அம்மொழி மக்கள் இருந்த இடமெல்லாம் தமது என்று போராடிப் பெற்றனர். மொழிவாரி மாநில அமைப்பில் பெருநன்மை அடைந்தவர் கன்னடர்களே.
தமிழர்கள் கர்நாடகத்தின் கடற்கரை பகுதிகளை தமக்கு வேண்டுமெனக் கேட்டிருந்தால் அதை நியாயப்படுத்தியிருக்க முடிந்திருக்காது. ஆனால் கொள்ளேகால், கோலார், மற்றுமிருந்த பல தமிழர் பெருவாரியாக வாழ்ந்தப் புகுதிகளை ஏன் விட்டுக்கொடுத்தார்கள் என்று புரியவில்லை. கோலார் பகுதி கனிவளம் மிக்க பகுதி. கொள்ளேகால் வட்டம் (இப்பொழுது சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பகுதி) 2789 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்பகுதியை நாம் தக்கவைத்திருந்தால் நாம் கோரும் காவிரி நீரின் அளவை கூட்டியிருக்க முடியுமென்பதோடு பெரும் விளைநிலத்தையும் கொண்டிருந்திருக்கலாம்.
Tamil speaking kongu vellala gounders are majority in Kollegal. People in Kollegal speak a variation of Kannada distinct from that spoken in Mysore andBangalore. This dialect of Kannada at times suffixes da when spoken among pals. Kannada as spoken in Kollegal was used in the 2005 film Jogi starring Shivarajkumar.
கொச்சி-திருவாங்கூர் பகுதி மக்களும் மலையாளம் பேசும் பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென்று ஒன்றுகூடி போராடினர். மலபார், காசர்கோடு போன்ற பகுதிகள் கேரளத்துடன் சென்றுவிட்டது. தமிழர் வாழும் பாலக்காடு போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்கவேண்டுமென்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்தனர். பல மொழி பேசும் பகுதியான காசர்கோடு பகுதியை பழங்குடியினர் கூடுதலாக வாழும் பகுதி என்று கருதியதால் தமிழர்கள் வேண்டாமென்று இருந்துவிட்டதாகக் கூறுவதுண்டு. கன்னடர்கள் இன்றும் கோரிவரும் சில பகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருகின்றனர்
ஆட்சியில் காங்கிரசும், எதிர்கட்சியாக இருந்த பொதுவுடமைக் கட்சியும் அதன் தலைவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணமில்லாமல், பிற மாநிலத்தினர் தத்தம் மாநிலமே முதன்மை என்றிருந்தபோதும், இந்தியாவின் ஆட்சியாளர் செய்யும் நாட்டுக்குத் தேவையான ஒன்றென்று ஏதும் செய்யவில்லை.
திராவிடத் தலைவர் ஈ.வே.ரா., தமிழகத்தின் தலைமேல் இன்றுவரை நிறுத்திவைத்திருக்கும் தலைவர், இனிமேல் திராவிட நாடு என்பது புதிதாக வரையறுத்த புகுதிகளுக்குள் உட்பட்டே செயல்படும்/கோரப்படும் என்ற பகுத்தறிவுக் கருத்தை கூறி தன் கடமையை முடித்துக்கொண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா "சீதையை வேண்டிச் சென்ற ராமனிடம் மற்றொரு பெண்ணைக் காட்டி சீதைக்குப் பதிலாக கூட்டிச்செல்லச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பாரோ" அதுபோல தங்கள் கோரிக்கை, தமிழகப் பகுதிகளை இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், பரந்துபட்ட விந்தியமலைக்குக் தெற்கே உள்ள மொத்த பரப்பையும் திராவிட நாடாக இந்தியாவிடமிருந்து பிரிப்பதுதான் தம் கொள்கை என்பது போல் பேரறிஞராக அறிக்கை விடுத்தார். மாற்றவர்கள் தங்களைத் திராவிடர்களாக என்றுமே கருதியதில்லை என்றபோதிலும் அவர்களையும் தம்முடன் சேர்த்து தனிநாட்டை உருவாக்கும் நீண்டகாலத் திட்டம் கொண்டிருந்தார்.