கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம்
இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகை செய்யும் டேஸ் 16 (TAMIL ALL
CHARACTER ENCODING 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு,
தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல்
தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதி இக் கடிதத்தை எழுதியிருப்பதோடு, தன்
கடிதத்தின் மீது தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை
குறித்து தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் அறிஞர்களின் குழுவை அமைத்து, கலந்து ஆலோசித்து, பின்னர் இது
தொடர்பான வேறு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் தனது கடிதத்தில்
தெரிவித்துள்ளார் முதல்வர்.
உலகம் முழுவதும் மின்அஞ்சல், குறுந்தகவல், தமிழ்ப் பதிப்புத்துறைக்குப்
பயன்படும் இந்த ஒருங்குறி (யுனிகோட்) மென்பொருளைப் பரிந்துரைத்ததில்
அப்படி என்ன இமாலயத் தவறு நேர்ந்துவிட்டது? ஒரு தவறும் இல்லை. இதில்
பிரச்னை வெறும் ஐந்து எழுத்துகளின் வரிவடிவம்தான். அவை-ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ.
இந்த ஐந்தெழுத்துகளும் சம்ஸ்கிருத வார்த்தைகள் என்பதாக முதல்வருக்கு
நெருக்கமானவர்கள் சிலர் எழுப்பிய பிரச்னையின் காரணமாகத்தான் இப்போது இந்த
டேஸ் 16 மென்பொருளுக்கான தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு
கூறுகிறார் முதல்வர்.
இந்த ஐந்து வரிவடிவங்களும் தமிழர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட
வரிவடிவங்கள். தமிழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்து மணிப்பிரவாளம்
புழங்கிய காலத்தில், சம்ஸ்கிருதத்தில் இருந்த, ஆனால் தமிழில் இல்லாத
ஒலிப்புகளுக்கான வரிவடிவம்தான் இவை. இந்த வரிவடிவம் வேறு எந்த
வடமொழியிலும், அல்லது திராவிட மொழிக் குடும்பத்திலும்கூட கிடையாது.
தமிழில்தான் இந்த ஐந்து எழுத்துகளும் துல்லியமான ஒலிப்புமுறைக்காக
வரிவடிவம் தரப்பட்டன.
இன்றைய நடைமுறையை உதாரணமாகச் சொல்வதென்றால், ஆங்கில எழுத்து ஊ-ல்
தொடங்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது இப்போது நாம்
முன்னொற்றாகப் ஃ பயன்படுத்தி ஃபெயில், ஃபெலோஷிப், ஃபிரன்ட்ஸ் என்று
எழுதுவதைப் போன்ற ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் மேற்சொன்ன 5
வரிவடிவங்களும். "பஸ் மோதி பசு மரணம்' என்பதை "பசு மோதி பசு மரணம்' என்று
எழுதினால் எத்தனை பொருள் மாறுபாடு ஏற்படும்? அக்காரணம் கருதி, தமிழர்
பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த வரிவடிவம்.
சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லாத ஒரு தமிழ்ச் சமூகத்தை
உருவாக்குவது வரவேற்கத்தக்கதுதான். பாராட்டுக்குரியதுதான். தமிழ் உணர்வு
உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்தான். இன்றைய நாளில் "பேருந்து மோதி பசு
மரணம்' என்று எழுதவும் அதைப் பாமரரும் புரிந்துகொள்ளவும்கூடிய சூழல்
ஏற்பட்டுள்ளது. "காமாக்ஷியம்மன் கோயில்' என்பதுபோய், இப்போது "அருள்மிகு
காமாட்சி அம்மன் ஆலயம்' என்று எழுதும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த
பத்து ஆண்டுகளில் இந்த சம்ஸ்கிருத ஒலிப்புக்கான தமிழ் வரிவடிவங்கள் தானே
வழக்கொழிந்துபோகும் நிலை உருவாகலாம். ஆனால், இந்த வரிவடிவங்களுக்காகத்
தமிழ் மொழியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிறுத்திவைப்பது எந்த வகையில்
சரியானது? மேலும், தமிழில் பஞ்சாங்கம், ஜோதிடநூல்கள் அச்சிடுவோர் இந்தச்
சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, இவை
கணினியில் இடம்பெறாமல் தடுப்பது முறையாகுமா?
மேலும், முந்தைய தலைமுறையின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை
செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த
வரிவடிவங்களை நீக்கிவிட்டு வெளியிடுதல் சரியானதாக இருக்குமா? ஒரு
படைப்பில் "ஜன்மபூமி' என்றிருந்தால் அதை "சன்மபூமி' என்றும்,
"அருட்பெரும்ஜோதி' என்பதை "அருட்பெரும்சோதி' என்றும் வெளியிட்டால் அது
செம்பதிப்பு ஆகுமா? ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுத முடியுமா? ஸ்டாலினை
ச்டாலின் என்று அழைப்பதா? ரஜினி காந்தை ரசினி காந்த் என்றும், ஐஸ்வர்யா
ராயை ஐசுவர்யா ராய் என்றும் அச்சிடுவதா?
சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால்,
தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய
தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே
நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின்
பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத
நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத
சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை
திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த
ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை
விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக்
கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக
இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை
வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்
Link:
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=329497&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%B8,%20%E0%AE%B7,%20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7,%20%E0%AE%9C,%20%E0%AE%B9?
Grantha letters, with different properties and virama, need to be
in Grantha block, and they are in Gov. of India proposal.
The letters that have some similarity with Tamil block letters
cannot be removed as their properties and script orthography
is quite different. This aspect happens for other scripts in Unicode
also.
N. Ganesan
> Link:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&arti...
Who are these முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சிலர்? Why is the
government going back on it's recommendations due to some unknown
persons, whose main qualification is that they are "close"to the CM?
The TN government owes an explanation to the people? After making a
hue and cry about the Central government Unicode proposals on the
spurious issue that it was not consulted, now some unknown persons are
making the TN go back on it's own recommendations.
Retrogresive ideas are given prominence and taken up for
implementation
Vijayaraghavan
These are political actions, and elections are on the way.
But central Govt. committee of experts' views will eventually
find its way into computer web.
N. Ganesan
Vijaaraghavan
> N. Ganesan- Hide quoted text -
>
> - Show quoted text -
On Nov 9, 4:50 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> Don't underestimate the power of stupid politics to torpedo good plans
>
> Vijaaraghavan
>
Yes. Mainly there is a person, it depends on how much
vc-s are confused. There is one vc close to cm
& it all depends. We've to wait & see politics' effect.
N. Ganesan
அவருக்கு, என் மீது தனி அன்பும், அக்கறையும் உண்டு.
எனக்கும் சரி, அவரிடம் மதிப்பும், மரியாதையும் அளப்பரியது.
அவரிடம் நான் மாணவனாக இருந்ததில்லையே தவிர, அவரது தொல்காப்பிய உரைதான்
எனக்கு இலக்கணக் கையேடு.
எனக்கும் சரி, "தினமணி" ஆசிரியர் குழுவைச் சேர்ந்த செய்தி ஆசிரியர்
இரா.சோமசுந்தரம், உதவி ஆசிரியர்கள் இடைமருதூர் கி.மஞ்சுளா, ச.ம.ஸ்டாலின்,
ஆறுமுககண்ணன் போன்றோருக்கும் தமிழில் "ஸ, ஷ," முதலான ஐந்து எழுத்துகள்
இல்லாமல் போனால், மாறிவிட்ட சமுதாயச் சூழலிலும், நடைமுறையிலும் பல
உச்சரிப்புகளை நம்மால் கையாள முடியாது என்பது கருத்து.
நேற்றுகூட திருச்சியிலிருந்து உதவி ஆசிரியர் ச.ம.ஸ்டாலின், இந்த
எழுத்துகளை நாம் வரித்துக் கொள்ளாவிட்டாலும் தமிழ்ச் சமுதாயம்
ஏற்றுக்கொண்டே தீரும் என்று என்னிடம் வாதிட்டார்.
அது ஒருபுறம் இருக்க, அறிஞர் தமிழண்ணலைப் பொறுத்தவரை, அவர் உண்மையாகவே
ஒரு வாழும் நக்கீரர்.
அவர் தவறு என்று கருதுவதை முக்கண் முதல்வனே ஏற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ள மறுப்பவர்.
"ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ" ஆகிய எழுத்துகளுக்கு ஆதரவாக எழுதப்பட்ட
தலையங்கத்துக்கு மறுப்புத் தெரிவித்து ஐயா தமிழண்ணல் ஒரு கடிதம்
எழுதியிருக்கிறார்.
அவரது கடிதம் இதுதான்.
"ஸ, ஷ, முதலான ஐந்து எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கு வரிசையில்
சேர்ப்பதால், தவறு ஏதும் நிகழ்ந்துவிடாதென" எழுதியிருப்பதை ஏற்க இயலாது.
கம்பர் வடமொழிக் காப்பியத்தைத் தமிழில் எழுத முனைந்தபோது ஸீதா, ஹநுமந்,
இராக்ஷஸ், இலக்ஷ்மண் என எல்லாவற்றையும் எளிதில் பாடியிருக்கலாம்.
இராமன், சீதை, இலக்குவன் என்றெல்லாம் எழுதியதேன்?
இராக்ஷஸ் - அரக்கர் ஆனது எவ்வாறு?
குகன் - என்பதில் குஹன் என்ற ஒலி வந்துவிடுகிறதே.
உயிர், மெய், ஆய்தம் ஆகிய முப்பத்தோர் எழுத்துகளைத் தவிர்த்து,
ஓரிடத்திலேனும் தமிழுக்குப் புறம்பான ஒலிகளை இணைத்துள்ளாரா?
இவ் எழுத்துகளும் தமிழ் எழுத்துகளே என எண்ணும் "விதி" அரசு வழியில்
புகுத்தப்படுமானால், மொழிச் சீர்குலைப்பாளர்களுக்கு
வழிவகுத்ததாகிவிடும்.
இப்போதே ஸ்ருதி, இலக்ஷ்மி என்றெல்லாம் ஆயிரம் பெயர்கள்
பெருவழக்காகிவிட்டன.
இராசராசேசுரம் கட்டிய மாமன்னன் வைத்த பெயர் "பெருவுடையார்".
நடுவணரசு வெளியிட்ட அஞ்சல்தலை, நாணயம் இரண்டிலும் "பிருஹத்தீஸ்வரர்" என
பொறித்ததைத் தவறென்று நடுவணரசுக்கு ஒருவர்கூட எடுத்துக் கூறித்
திருத்தவில்லையே!
"ஒலி" என்பது ஒரு மொழியின் உயிர்! ஒலித்திரிபுகளாலேதான் கன்னடமும்,
களிதெலுங்கும், கவின் மலையாளமும் பிறவும் உருவாயின என்பதை மறுத்தலாகாது".
ஐயா தமிழண்ணலின் கருத்திலும் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றன.
நான் முழுமையாகக் கட்சி மாறாவிட்டாலும், ஐயாவின் கடிதம் இந்தப்
பிரச்னையில் எனது நிலையைச் சற்று நிலைகுலைய வைத்திருப்பது உண்மை.
ஆக்கபூர்வமான விவாதங்களும், மோதல்களும், சர்ச்சைகளும் இலக்கிய
வளர்ச்சிக்கு உரம் சேர்க்கும்தானே?
கலாரசிகன்
நன்றி:- தினமணி
எனக்கு அவ்வப்போது ஏதாவது ஐயம் ஏற்பட்டால் தெளிவுபெற உடனடியாகத் தொடர்பு
கொள்வது இருவரை.
முதலாமவர், பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்
முனைவர் தெ.ஞானசுந்தரம்.
இரண்டாமவர், "கவிக்கோ" ஞானச்செல்வன்.
"கவிக்கோ" தினமணி கதிரில் எழுதும் "பிழையின்றித் தமிழ் பேசுவோம்,
எழுதுவோம்" தொடர் வாசகர்களுக்கு மட்டுமல்ல, அடியேன் உள்ளிட்ட "தினமணி"
ஆசிரியர் குழுவுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.
ஸ,ஷ,ஜ,க்ஷ,ஹ ஆகிய பஞ்சபாண்டவ எழுத்துகள் பற்றி "கவிக்கோ" தனது
கருத்துகளைக் கடிதமாக வடித்திருக்கிறார்.
மூத்த தமிழறிஞர் ஐயா தமிழண்ணலின் கருத்துகளை அவர் ஓரிரு ஆண்டுகள் முன்பு
வரையில் வலியுறுத்தி வந்ததாகவும், இப்போது அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்பதும் கவிக்கோவின் கருத்து.
கம்பர் மட்டுமல்லர், வில்லிபுத்தூரார், சேக்கிழார் - இவர்களுக்கு
முற்பட்ட தேவார மூவர், திருவாசகத்தார், திவ்யப் பிரபந்தக்காரர் எல்லாருமே
ஐந்து கிரந்த எழுத்துகளை விலக்கித் தமிழ் எழுத்துகளால் மட்டுமே தம்
படைப்புகளைத் தந்தனர். தமிழ் ஒலிப்படுத்துதல் மட்டுமன்றிச் சில இடங்களில்
மொழிபெயர்த்தும் எழுதினர்.வடமொழிச் சொற்களையோ பெயர்களையோ நாம் தமிழ்
ஒலியமைப்பிலோ, மொழிபெயர்த்தோ சொல்லக்கூடும்.
ஆனால், இன்று நம் தொடர்புகள் விரிந்து பரந்த நிலையில், உலகளாவிய
செய்திகளைச் செய்தியிதழ் போன்ற ஊடகங்கள் எவ்வாறு எழுதிட இயலும்?
"ஜார்ஜ் புஷ்" என்ற பெயரை, "ஸ்டாலின்" என்ற பெயரை "சார்ச்சு புசு"
"சுதாலின்" என்று எழுதினால் சரியாய் வருமா?
ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, "ஸ்புட்னிக்" ஏவுகணைஆகியவற்றை எப்படி
எழுதுவது?
இன்னும் தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய இசுலாமியர் பெயர்களைத் தமிழ்
ஒலிப்படுத்தி எழுதினால் ஏற்பார்களா?
ஒன்று, ஐந்தெழுத்துகளையும் நீக்கி எழுத வழிகாண வேண்டும்.
அல்லது சேர்த்து எழுதுவதை ஏற்க வேண்டும்.
மாற்றி எழுத முடியாத அந்நியப் பெயர்களை, சொற்களை இந்த ஐந்தெழுத்துகளைப்
பயன்படுத்தி எழுதுவது பிழையன்று என்பது நம் கருத்து என்று
எழுதியிருக்கிறார் அவர்.
"கவிக்கோ" ஞானச்செல்வனின் வாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
பெயர்ச் சொற்களுக்கு மட்டும் பஞ்சபாண்டவ எழுத்துகளைப் பயன்படுத்துவது
என்று நாம் தீர்மானித்தால்தான் என்ன?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பெயர்ச் சொற்களுக்கு மட்டும் பஞ்சபாண்டவ எழுத்துகளைப் பயன்படுத்துவது
என்று நாம் தீர்மானித்தால்தான் என்ன?
கலாரசிகன்
நன்றி:- தினமணி
கம்பனைச் சொல்லலாம், ஆழ்வாரைச் சொல்லலாம். அது செவ்விலக்கியப் பேச்சு.
கம்பனின் மனைவி வீட்டில் எப்படிப் பேசினாள் என்று யாரும்
கண்டுகொள்வதில்லை. செந்தமிழ்ப் பாமாலை பாடிய நாச்சியாரின் வீட்டுமொழி
எப்படி இருந்திருக்கும் என்பதைப் புலவோர் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள்
கருத்தெல்லாம் செம்மொழி மீதுதான். அதுமட்டுமா தமிழ்? யாரும் வீட்டில்
மனைவியிடம் கவிபாடுவது இல்லையே!! :-))
ஏன் இவர்களெல்லாம் கல்வெட்டு, செப்பேடுகளில் உள்ள தமிழை மேற்கோள் காட்டுவதில்லை?
அது என்ன பெயர்ச்சொல்லுக்கு மட்டும் கிரந்தம்? "சார்ச்சு புசு"
"சுதாலின்" என்றே சொல்வோமே! என்ன குறைந்துவிட்டது (நல்லவேளை என் பெயரை
வெள்ளைக்காரன் ஒருவனால் மட்டுமே சிதைக்கமுடியும். செந்தமிழ் சிதைக்காது
:-))
கண்ணன்
2010/12/19 தாரகை <thar...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
சும்மாவா? சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களுக்கே தமிழ்பெயர் சூட்ட கிளம்பியவர்களாச்சே நாம்? வேர்டுபிரஸ்ஸை தமிழ்படுத்தலை. படுத்துனா எப்படி இருக்குமோ?
ராஜசங்கர்
2010/12/19 LK <karthik.lv@gmail.com>//பயர்பாக்ஸை நெருப்புநரி, பேஸ்புக்கை முகநூல் //
பதிவுலகத்திற்கு வந்த புதிதில் முழித்தேன் இதற்க்கு அர்த்தம் தெரியாமல்
ஏன் வெள்ளைக்காரன் மட்டும்?
தாய்மொழியாகத் தமிழ் அல்லாதோர் எவர்வேண்டுமானாலும் சிதைக்காலமே.
நல்லவேளை, செந்தமிழ் சிதைக்காது என்று சொல்லிவிட்டீர், தமிழர்
என்றில்லாமல்:-)
ஏனைய மொழிகளிலும் இவ்வாறாக மாற்றி எழுத முடியாத அந்நியப் பெயர்களையும்,
சொற்களையும் எவ்வாறு எழுதுகிறார்கள்?
எ.கா - தமிழ் என்பதை - Tamil/तमिल என எழுதும்போது "ழ்"
ஒலியெழுத்தில்லாததால் அம்மொழியினர் ஏதாவது முயற்சி செய்ய விழைந்தனரா?
> பயர்பாக்ஸை நெருப்புநரி, பேஸ்புக்கை முகநூல், வேர்டுபிரஸ்ஸை எழுத்தச்சு...
இவையெல்லாம் செயற்பொருள் அறியாமல் ஒவ்வொறு அயன்மொழிச் சொல்லுக்கு =
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது.
பேரா ஜெயதேவன் அவர்களின் கருத்து:-
மொழி என்பது கருத்தைச் சுமந்து வருகிற வாகனந்தானே. "சொற்கள் எப்படி
இருந்தால் என்ன?" என்னும் எண்ணம் தமிழ் மக்களிடம் பரவலாக உள்ளது. "வாகனம்
சரியாக இருந்தால்தானே குறித்த இடத்திற்குக் குறித்த நேரத்தில் பயணம்
செய்யமுடியும்! வாகனம் பழுதுடையதாயின், வழிப்பயணம் என்னவாகும்? மொழி
என்னும் வாகனம் சரியாக இருந்தால் தானே அது சுமந்துவரும் கருத்தும்
சரியாகச் சென்று சேரும்? என்பதைப் பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
தமிழரிடையே மொழி உணர்வும், அக்கறையும், முயற்சியும் மங்கி அவர்கள்
பயன்படுத்தும் மொழியில் தமிழ்ச் சொற்களைத் தேடிக் கண்டுபிடிக்கும்
அளவிற்கு அவலநிலை உள்ளது!
"தமிழர் மொழி வேறு, தமிழ்மொழி வேறு" எனக் கருதத்தக்க இழிநிலைக்கான
வாய்ப்பே மிகுதியாகிவரும் சூழலாக உள்ளது!
சிதைக்கலாமே என்றிருக்கவேண்டும்.
> தாய்மொழியாகத் தமிழ் அல்லாதோர் எவர்வேண்டுமானாலும் சிதைக்காலமே.சிதைக்கலாமே என்றிருக்கவேண்டும்.
நான் எப்படி உங்களுடன் வேறுபட முடியும்? தங்கள் உணர்வைப் போற்றுகிறேன்.
நாம் தமிழை மதிக்க வேண்டும். அது சிதைபடாமல் காக்க வேண்டும்.
ஒரு மொழி என்பதும், மனிதன் என்பதும் வேறல்லவே. ஒவ்வொரு மனிதரிடமும்
தற்காப்பு சக்திகள் இயற்கையாகவே படைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் இன்றளவும்
இத்தனை மொழிகள் வாழுகின்றன. அதே நேரத்தில் எல்லைகள் அறுபடும் உலகில்,
கலப்பு என்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவு நடந்து வருகிறது. உலகப்
பொதுமொழியாக ஆங்கிலம் உயர்வது மகிழ்ச்சியான சேதி என்றாலும். அதன்
மொழிச்சிதைவைக் கண்டு மிரளாமலும் இருக்கமுடியவில்லைதான். இனிமேல் அதன்
சிதைவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எத்தனை லட்சம் அந்நிய
மொழிச்சொற்களை தன்வயப்படுத்திவிட்டது ஆங்கிலம். இன்று உலகின் அத்தனை
ஞானமும் ஆங்கில மொழிக்குள் வந்துவிட்டது. அது பலம். ஆனால், நம்மவூரு
வாத்தியார் பேசுவதும் ஆங்கிலம்தான். இந்திய ஆங்கிலத்தைக் கண்டு நகைப்பேன்
அடிக்கடி. ஆனால் சிங்கப்பூர் போனால் சிங்கிளீஸ். கொரியா போனா கொங்குளீஸ்.
ஆஸ்திரேலிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், தென்னாப்பிரிக்க ஆங்கிலம்.
கிளைத்து கலக்குகிறது. Everything has a price!
When you talk about Tamil Language. I want people to look at it
holistically. கவிதை மொழி மட்டும் தமிழ் மொழி அல்ல. வீட்டில் புழங்கும்
மொழிக்குப் பெயரென்ன?
நன்றி.
கண்ணன்
2010/12/19 தாரகை <thar...@gmail.com>:
On Dec 20, 6:14 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் கண்ணன்
>
> நான் எப்படி உங்களுடன் வேறுபட முடியும்? தங்கள் உணர்வைப் போற்றுகிறேன்.
>
> நாம் தமிழை மதிக்க வேண்டும். அது சிதைபடாமல் காக்க வேண்டும்.
>
> ஒரு மொழி என்பதும், மனிதன் என்பதும் வேறல்லவே. ஒவ்வொரு மனிதரிடமும்
> தற்காப்பு சக்திகள் இயற்கையாகவே படைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் இன்றளவும்
> இத்தனை மொழிகள் வாழுகின்றன. அதே நேரத்தில் எல்லைகள் அறுபடும் உலகில்,
> கலப்பு என்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவு நடந்து வருகிறது. உலகப்
> பொதுமொழியாக ஆங்கிலம் உயர்வது மகிழ்ச்சியான சேதி என்றாலும். அதன்
> மொழிச்சிதைவைக் கண்டு மிரளாமலும் இருக்கமுடியவில்லைதான். இனிமேல் அதன்
> சிதைவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எத்தனை லட்சம் அந்நிய
> மொழிச்சொற்களை தன்வயப்படுத்திவிட்டது ஆங்கிலம். இன்று உலகின் அத்தனை
> ஞானமும் ஆங்கில மொழிக்குள் வந்துவிட்டது. அது பலம். ஆனால், நம்மவூரு
> வாத்தியார் பேசுவதும் ஆங்கிலம்தான். இந்திய ஆங்கிலத்தைக் கண்டு நகைப்பேன்
> அடிக்கடி. ஆனால் சிங்கப்பூர் போனால் சிங்கிளீஸ். கொரியா போனா கொங்குளீஸ்.
> ஆஸ்திரேலிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், தென்னாப்பிரிக்க ஆங்கிலம்.
> கிளைத்து கலக்குகிறது. Everything has a price!
>
> When you talk about Tamil Language. I want people to look at it
> holistically. கவிதை மொழி மட்டும் தமிழ் மொழி அல்ல. வீட்டில் புழங்கும்
> மொழிக்குப் பெயரென்ன?
>
> நன்றி.
>
> கண்ணன்
>
அன்பின் ந. கண்ணன், நா. கண்ணன்
வணக்கம்.
யூனிக்கோடில் வருகிற கிரந்தத்தை
தமிழர் வேற்றுமொழிச் சொற்களுக்கு
பயன்படுத்த முடியும். உ-ம்:
அன்றாட வாழ்க்கையில் உபயோகமாகும்
ஆங்கிலச் சொற்கள்.
செந்தமிழை தமிழ் எழுத்துக்கொண்டு
எழுதலாம்.
ஆனால், செந்தமிழ் இடம்தரா
எழுத்துக்களை எழுத ஒருவழி
ஞானபாரதி இண்பிட் கொலோனில்
முன்மொழிந்தார். அதுவோ,
அல்லது கிரந்த லிபியோ உதவும்.
இன்னொரு பாஷை வார்த்தைகளை
வேறொரு லிபியில் எழுத முடியும்.
அப்பொழுது தமிழர் இடர்ப்படும்
பலமொழியார் கூட்டங்களில்
உச்சரிப்பு பிரச்சினைகள் இருக்காது.
உலகம் சுருங்குவதால், தமிழர்
பல்வேறு மக்கள் கூடும் கூட்டங்களில்
கலக்கும் சூழ்நிலை காணமுடிகிறது.
க்ரந்த லிபி, டையாக்கிரிடிக்ஸ் -
இரண்டு வழிகளால் சுலபமாய்
அயற்சொற்களை எழுத முடியும்.
சிறு முயற்சியால் க்ரந்த லிபி
எழுத்துக்கள் படிக்க வருங்கால
தமிழர் தெரிந்துகொள்ள இயலும்.
நா. கணேசன்
> 2010/12/19 தாரகை <thara...@gmail.com>:
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
>
> --
> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/- Hide quoted text -
The whole debate is meaningless because for the last few hundred years
grantha characters are part of Tamil alphabet and people have been
using it all this time.
Tamil Unicode supports these 5 grantha characters as well as one more
grantha character for sha (as in Shankar or sharma). Tamilnadu govt
TACE16 implementation has also grantha letters. 99% of internet Tamil
writers don't give a second thought about which keys to use.
There are some silly people who refuse the obvious in front of their
eyes like in this link
http://www.vallamai.com/?p=1424
Discussions about grantha in Tamil raise most heat and no light
whatsoever
Vijayaraghavan
On Dec 19, 12:29 pm, யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswa...@gmail.com>
wrote:
> தமிழ் என்பதை தாமில் என்று மட்டும் இந்திக்காரர்கள் சிதைக்கவில்லை.
> சிதம்பரத்தை சிதாம்பரம் என்கிறார்கள். கனிமொழியை கானிமொஷி என்கிறார்கள்.
>
> இவ்வளவு ஏன்? என் பெயரை அநியாயத்துக்கு கெட்ட வார்த்தை தொனிப்பது போல
> உச்சரிக்கிறார்கள். அவர்கள் அடுத்த மொழியை நாசூக்காக கையாள வேண்டும் என்று
> எப்போதும் கவலைப்படுபவர்கள் அல்ல. நாம் ஓசைக்கு அதிக முக்கியத்துவம்
> கொடுக்கிறோம்.
>
> கிரந்த எழுத்துக்கள் ஓசை சார்ந்த விஷயம் மட்டுமே என்கிற தெளிவு நமக்கு வந்து
> விட்டால் பல பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
>
> இந்தப் பஞ்சபாண்டவர்கள் வருவதால் நம்முடைய மொழியின் தொன்மையும் சிறப்பும்
> எந்தவகையிலும் சிதைவடையாது. எல்லாம் நம் மனக்கதவுகளைத் திறந்து வைக்கிறதைப்
> பொறுத்தது.
>
> கண்ணன் சொன்னது போல கம்பர் வீடடிலும் வில்லிபுத்தூரார் வீட்டிலும் என்ன
> பேசினார்கள் என்பது நமக்குத் தெரியாது.
>
> தன்னுடைய வீட்டுப்பத்திரத்தை தமிழில் எழுதிய தியாகய்யர் தெலுங்கில்
> கீர்த்தனைகளாக இயற்றித் தள்ளியிருக்கிறார்.
>
> தன் காதலிகளுக்கு தமிழில் கடிதங்கள் எழுதியதாக சொல்லப்படும் சியாமா சாஸ்திரி
> சம்ஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.
>
> முன்பு இந்தி வேண்டாம், சமஸ்கிருதம் வேண்டாம் என்று சொல்லி நம்முடைய மொழிவளம்
> மற்றும் தொடர்புகளை நாசப்படுத்திய கும்பலின் தொடர்ச்சிதான் இப்படி கிரந்த
> எழுத்துக்களை எதிர்க்கின்றன. ஆனால் இப்போது விழிப்புணர்வு அதிகம். அதிக
> நாட்களை இவர்களை யாரும் அதிகம் பொருட்படுத்திக் கொண்டு இருக்கமாட்டார்கள் என்று
> நினைக்கிறேன்.
>
> அன்புடன்
>
> பென்னேஸ்வரன்
>
> --------------------------------------------------------------------------------------------------------------------
> *K.Penneswaran,* Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
> 5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
> Phone: *9910031958* # <http://www.vadakkuvaasal.com/>http://www.vadakkuvaasal.com
> <http://www.kpenneswaran.com>http://www.kpenneswaran.com
>
> 2010/12/19 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
>
>
> > மனச் சிதைவு ஆளுமைச் சிதைவு மாதிரி மொழிச்சிதைவு
> > நான் தினம் நடைபயிலும் பெசண்ட் நகரில் Moon Walk என்ற இசை ஒலிநாடாக்கள்
> > விற்பனை நிலையம் உண்டு.
> > தமிழக அரசு தமிழில் பெயர் எழுத வேண்டும் என்ற சட்டம் இயற்றிய பின்னர் அதன்
> > பெயர்
> > Moon Walk நிலவில் நட
> > அப்ப எங்க பாட்டி ஊட்டின
> > நிலாச்சோறு Noon Meals மாதிரி Moon meals ஆ
> > என்ன ரத்தம் கொதிக்குதா
> > ரத்தம் கொதிக்குதுன்னா Blood boils அடே அது வறுத்த கறி
> > எனக்கு Daiabetis
> > அப்படின்னா சர்க்கரை நோய் அது இனிக்குமா
> > என்னய்யா நீ இப்படியெல்லாம் மொழிய பேக்குறே
> > நான் கைப்புள்ளயா இருக்கும்போது ஹார்லிக்ஸ் விளம்பரத்தில வ்ர்ர மாதிரி குடிக்க
> > மாட்டேன் அப்படியே சாப்பிடுவேன்
> > என்னது கொலை நடக்குமா
> > murder will walk
> > கொலை விழும்னா
> > Murder will fall
> > புரிஞ்சுபோச்சு
> > இதான் மொழிச்சிதைவுன்னு
> > நாகராசன்
>
> > 2010/12/19 தாரகை <thara...@gmail.com>
>
> >> > தாய்மொழியாகத் தமிழ் அல்லாதோர் எவர்வேண்டுமானாலும் சிதைக்காலமே.
>
> >> சிதைக்கலாமே என்றிருக்கவேண்டும்.
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
செல்வன்
உண்மைகளை சொல்லி சிலரை குழப்பி விடாதீர்கள்
விஜயராகவன்
பஞ்ச பாண்டவரா? எண்ணுவதில் எதோ கோளாறு.
தமிழ் கீபோர்டில் 6 கிரந்த எழுத்துகள் உள்ளன
ஶ, ஸ, ஷ, ஹ, ஜ, க்ஷ (ஸ்ரீ வேறு).
தமிழ்நாடு அரசின் டேஸ்-16 முடிவிலும் இவ்வாறும் உள்ளன.
விஜயராகவன்
எல்லாவற்றையும் யோசிக்க வேண்டியுள்ளது. எட்டாம் நூற்றாண்டிலேயே அக்கதை
என்றால் 21ம் நூற்றாண்டில் வாழ்வு இன்னும் குழம்பிப்போயிருக்கிறது.
செல்வன் நண்பர் பேசுவது போல்தான் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
க.>
2010/12/21 விஜயராகவன் <vij...@gmail.com>:
Can some one explain : "What,accoding to the authour the following
sentence means....?
"If we lose the ability to listen & steadfastly remain in the dark,"
Without any malice...
Regards
--
SHS
===
I don't like to find excuses if you were insinuating the comments
passed over in English about the perils of mixing Thamizh with English
in our conversation.
Though, we need to agree whichever language we are discussing about
the perils of mixing Thamizh with English, the genuine concern
persists.
> தமிழருடன் ஆங்கிலத்தில் கதைக்கும் தமிழரே இந்நிலைக்கு முழுகாரணம்.
அதில் எவ்வித ஐயமும் இல்லை
> நான் ஆங்கிலம் கலந்து பேசுவது உண்மை.ஆனால் பட்டிகாட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தால் என்
> பேச்சுதமிழில் இன்னும் சோறு ரைஸ் ஆகாமலும், பொண்ணு டாட்டர் ஆகாமலும், தண்ணி
> வாட்டர் ஆகாமலும் இருக்கு. நெக்ஸ்ட் ஜெனெரேஷன் என்ன ஆகுமோ?:-)
இவ்வளவு அழகாக எடுத்துரைத்துவிட்டு, இறுதியில் "அடுத்த தலைமுறையினர்" என
பட்டிகாட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தால் என கூறியிருப்பின்
பாராட்டத்தக்க நிலையாக இருந்திருக்கும்.
> இப்ப சொல்லுங்க...தமிழுக்கு எதிரி கிரந்தமா, நாமா?
> உண்மைகளை சொல்லி சிலரை குழப்பி விடாதீர்கள்
சில உண்மைகள் விஜயராகவன் போன்றோரைக் குழப்புமேயன்றி, தமிழுக்கு எதிரி
என்னும் பேருண்மை அயல்மொழிச் சொற்களின் கலவையே என்பதில் எவ்வித ஐயமும்
இல்லை.
ஆண்டாள் காலத்தில் கிரந்தே எழுத்துகள், இருந்திருப்பின் ஏன் சிரீதரா
என்று தன் கவிதையில் எழுதவேண்டும்?
ஆக,கிரந்த எழுத்து ஆண்டாள் காலத்திற்கு பிறகு தான் என்பது தெளிவல்லவா?
பட்டருடன் பேசும்போது நிச்சயமாக ஸ்ரீதரன் என்று சொல்லியிருக்கமாட்டார்,
"சீதரன்" என்று சொல்லியிருக்க வேண்டிய நிலையாகத்தான் இருந்திருக்கும்.
> அவள் தோழி லக்ஷ்மியாவோ, ஸ்ரீமதியாகவே இருந்திருந்தால் எப்படி அழைத்திருப்பாள்?
- இலக்குமி (அ) இலட்சுமி
- சீதேவி
> எட்டாம் நூற்றாண்டிலேயே அக்கதை.
8ஆம் நூற்றாண்டா அல்லது அதன் பிற்பாடா?
கிரந்தமே - அயல்மொழிச் சொல். கிரந்தம் தமிழுக்கு கெடுதல் இல்லையெனில்
அதற்கு சரியான தமிழாக்கச்சொல் உருவாக்கி ஓர் இணக்க நிலையை கொண்டவராத
கிரந்த ஆதரவாளர்களால் தான் கெடுதலே.
இந்த "பேருண்மை"யால் தான், ஒருவித அயன்மொழி கலந்த தமிழில்லாமல்,
தமிழர்கள் படிப்புக்கும், வேலைக்கும், பேச்சுக்கும் அயன்மொழிகளுக்கு
தாவுகிறார்களா?
விஜயராகவன்
தூயதமிழ், தொலகப்பிய தமிழ், வட சொல் ஒரி இ தமிழ், கிரந்தம் கலபற்ற தமிழ்,
அயல் மொழி கலப்பற்ற தமிழ் - ஆதரவாளரே , நீங்கள் இன்னும் இன்னும் தமிழை
சோப்பு போட்டு துவைத்துக் கொண்டே இருங்கள் நாம் ஆங்கிலத்தில் படித்து,
உழைத்து முன்னேறலாம். மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதை விட, நீங்கள் ஏன்
அப்படிப்ப்ட்ட தொலகாப்பிய தமிழில் மருத்துவ புஸ்தகம் ஒன்று எழுதி
ஆயிரக்கனக்கில் அதை விற்று "உங்கள் தமிழை"வளர்க்கக் கூடாது?
க்ரேஸ் அனாடமி என்ற புஸ்தகம் 150 வருடங்களாக புகழ் பெற்ரது. அதை "உங்கள்
தமிழில்"எழுதி 5000 ப்ரதி விற்பனையாகுமா என பாருங்கள். அப்போது புரியும்
தமிழர்கள் உங்கள் தமிழை முழுவதும் நிராகரித்து விட்டார்கள் என்று
விஜயராகவன்
> ஆண்டாள், சிரீதரா! என்று தன் கவிதையில் விழித்தாலும் பட்டருடன் பேசும்ஆண்டாள் காலத்தில் கிரந்தே எழுத்துகள், இருந்திருப்பின் ஏன் சிரீதரா
> போது நிச்சயமாக ஸ்ரீதரன் என்றுதான் சொல்லியிருப்பாள்.
என்று தன் கவிதையில் எழுதவேண்டும்?
ஆக,கிரந்த எழுத்து ஆண்டாள் காலத்திற்கு பிறகு தான் என்பது தெளிவல்லவா?
பட்டருடன் பேசும்போது நிச்சயமாக ஸ்ரீதரன் என்று சொல்லியிருக்கமாட்டார்,
"சீதரன்" என்று சொல்லியிருக்க வேண்டிய நிலையாகத்தான் இருந்திருக்கும்.
"முயற்சிக்கிறோம்" எனப் பெயர்ச்சொல்லைத் தவறாக வினையாக்குவதைத் தவிர்க்க
நாம் "முயன்றிடலாம்" அல்லது "முயன்று பார்க்கலாம்" அல்லது (பண்ணி-
மொழியில்) "முயற்சி பண்ணலாம்"
>
> கிரந்தத்தால் தமிழ் கெடாது. நாம் கெடுத்து விடுவோம்.
>
> அன்புடன்
>
> பென்னேஸ்வரன்
>
~சேது
அயல்மொழிச் சொற்களின் கலவைக்கும், அன்றாட உழைப்பின் ஊதியத்திற்கும்
நன்றாகவே முடிச்சுப்போடுகிறீர்கள்:-)
நல்ல முயற்சி!
"முயற்சிக்கிறோம்" எனப் பெயர்ச்சொல்லைத் தவறாக வினையாக்குவதைத் தவிர்க்க
நாம் "முயன்றிடலாம்" அல்லது "முயன்று பார்க்கலாம்" அல்லது (பண்ணி-
மொழியில்) "முயற்சி பண்ணலாம்"
நன்றி விஜயராகவன்:-)
> மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதை விட, நீங்கள் ஏன் அப்படிபட்ட தொலகாப்பிய தமிழில் மருத்துவ புஸ்தகம்
> ஒன்று எழுதி ஆயிரக்கனக்கில் அதை விற்று "உங்கள் தமிழை"வளர்க்கக் கூடாது?
ஊக்கத்திற்கு நன்றி:-) முயற்சி செய்வோம்.
மற்றவர்களை ஏளனம் செய்வதை விட, நீங்கள் ஏன் அப்படியான கிரந்த எழுத்து
தமிழில் உங்கள் துறையில் நூல் ஒன்றை எழுதி ஆயிரக்கணக்கில் அதை விற்று
"உங்கள் கிரந்தைத்தை"வளர்க்கக் கூடாது?
> க்ரேஸ் அனாடமி என்ற புஸ்தகம் 150 வருடங்களாக புகழ் பெற்ரது. அதை "உங்கள் தமிழில்"எழுதி
> 5000 ப்ரதி விற்பனையாகுமா என பாருங்கள்.
கிரே அவர்களின் உடற்கூற்றியல் பற்றிய நூல் பல ஆண்டுகளாக இருந்துவரும் ஓர்
மேற்கோள் குறிப்புதவி நூல். பெரும்பான்மையான மருத்துவர்களே, அந்நூலை
நூலத்தில் தேவைப்படுமின் பயன்படுத்துவது வழக்கம். ஏனெனில், பல
உடற்கூற்றியல் பற்றிய நூல்கள் இருப்பதாலும், கிரே உடற்கூற்றியல் பற்றிய
நூல் தமிழில் சிறிதளவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதுவும் நூலக மேற்கோள்
குறிப்புதவி நூல்களாக. காலத்திற்கு ஏற்றவாறு சான்றமைந்தக் கட்டுரை
நூல்களை தமிழில் ஆண்டுதோறும் கொண்டவர ஓர் விருப்பமுள்ளது.
> அப்போது புரியும் தமிழர்கள் உங்கள் தமிழை முழுவதும் நிராகரித்து விட்டார்கள் என்று.
அந்தோ! அந்தோ பழைய நைந்த தமிழரொடு நானிருந்தேனே! - பாவேந்தர்
ஏன் உங்கள் தமிழ் என்ற பிரிவினை?
நம் தமிழ், நம்மவர் தமிழ் என பெருமைப்படவேண்டும்.
அதைவிடுத்து "உங்கள் தமிழ்" எனும்போது ஓர் மொழிவெறிக் கொள்கை தொனிக்கும்
நிலையையன்றோ ஏற்படுத்துகிறீர்!
பிளவுண்டாக்கும் மற்றும் தீங்கிழைக்கும் குழுவினர் இருக்கும் வரைக்கும்
இவ்வாறாக ஓலமிட்டு ஒப்பாரிப் பாடல்கள் கேட்பது வியப்பில்லையே!
பொன்னானத் தமிழ் மேனியிலே - ஒரு
பொல்லாத நோய் வந்ததென்ன!
தங்கத் தமிழ்த் திருமேனியிலே - ஒரு
தகாத நோய் வந்ததென்ன...
நன்றி.
சிம்பிள் விளக்கம். மரபுக்கவிதைகளில் அதைப் போல் சொற்றடர்கள் தான் ஆட்சி
புரிந்தது. அதனால்தான் 20ம் நூற்றாண்டில் மரபுக்கவிதை எழுதிய பாரதியார்
கூட அதைப் போல் எழுதினார். மரபுக் கவிதை கன்வென்ஷஙளையும், மற்ற இலக்கிய ,
விஞ்ஞான, தொழில்நுட்ப எழுத்து தேவைகளையும் ஒன்றாக்காதீர்கள்
புதுக்கவிதைகள் கூட அதைப்போல் மரபுக்கவிதை நியதிகளை பின்பற்றுவதில்லை
99% மக்களுக்கு 99% தேவைகளில் மரபுக்கவிதை வேண்டாம்.
விஜயராகவன்
அதனால்தான் 20ம் நூற்றாண்டில் மரபுக்கவிதை எழுதிய பாரதியார்
கூட அதைப் போல் எழுதினார்.
சரி, அப்ப ஆண்டாள், சிரீதரா! என்று தன் கவிதையில் விழித்தாலும் பட்டருடன்
பேசும் போது நிச்சயமாக ஸ்ரீதரன்
என்றுதான் சொல்லியிருப்பாள் என்ற வாக்கியத்திற்கு, கொரியா கண்ணன்
கூறியதில் பிழையில்லை என்று அடியேன் வழிமொழிந்தால் - போற்றி,போற்றி என
பாடியிருப்பர்.
நகைச்சுவை தான்:-))))
> 99% மக்களுக்கு 99% தேவைகளில் மரபுக்கவிதை வேண்டாம்.
அட! எங்கிருந்து இச் சான்று?
சிரீதரா! என்று தன் கவிதையில் விழித்தாலும்
விஜயரகாவ்ன்
திருவிளையாடற் புராணமும், இலஞ்சி முருகன் உலா - எந்த ஆண்டில்
எழுதப்பட்டது?
"தமிழுக்கு எதிரி என்னும் பேருண்மை அயல்மொழிச் சொற்களின் கலவையே என்பதில்
எவ்வித ஐயமும் இல்லை."என்பது உங்கள் மகாவாக்கியம். அதை உங்கள் தமிழ் என
சொல்வதில் தவறில்லை. நடைமுறைத்தமிழ், எல்லா அயல் மொழி வார்த்தைகலையும்
சேர்த்து, மக்கள் தமிழ்.
விஜயராகவன்
திருவிளையாடற் புராணமும், இலஞ்சி முருகன் உலா - எந்த ஆண்டில்
எழுதப்பட்டது?
உண்மை தான் பெருந்தகையீர்.
அடியேனின் பிழையைக் கண்டீர். நானோ நம் குழும அண்ணாவிற்கு நேர்த்தியாக
சுட்டிக்காட்ட அத் தொடர்ச்சியை - "ஆண்டாள், சிரீதரா! என்று தன் கவிதையில்
விழித்தாலும் பட்டருடன் பேசும்"..... தட்டச்சு செய்திருந்தேன்.
ஏனோ தெரியவில்லை, மற்றவர்களைவிட அடியேனுக்கு நற்பலன்:-)
அருமையான கருத்து.
சற்று, "உங்களுக்கு" என்பதைவிட "எனக்கு" என்று அவ்விடங்களில்
போட்டுவிட்டு - ஒரு முறை படித்துப் பாருங்கள். உங்களுக்கும் அக்கருத்து
நன்றாகவே பொருந்தும்.
வாழ்த்துக்கள்:-)
> > 99% மக்களுக்கு 99% தேவைகளில் மரபுக்கவிதை வேண்டாம்.
>
> அட! எங்கிருந்து இச் சான்று?
உங்கள் சராசரி ஒரு நாளிலேயே எவ்வலவு மரபுக்கவிதை உங்கள் வேலையிடத்திலும்,
பேஷண்டுகளிடமும் , குடும்பத்திலேயும், நண்பர்கள் சகபாடிகளிடமும்
செலவாச்சு என பாருங்கள்
விஜயராகவன்
ஏன் உங்கள் தமிழ் என்ற பிரிவினை?
நம் தமிழ், நம்மவர் தமிழ் என பெருமைப்படவேண்டும்.
அருமை.
இணையத்தில் எழுதுபவர்கள் அனைவரும் இயன்றவரை கிரந்தம் தவிர்த்தே எழுதுகிறார்கள். பெயர்கள் மட்டுமே கிரந்தத்தில் எழுதுகிறார்கள். ஒரு நொடி நினைத்துப் பார்த்தால் நல்ல தமிழில் எழுத முடிகிறது. இயன்றவரை நல்ல தமிழில் எழுதுவோம். இது அனைவருக்கும் வேண்டுகோள்.
ஐயம் தெளிய இப்படியாக விடையளித்தால் - என்ன சொல்வது என்று தெரியவில்லை!
> தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் விவரங்கள் உள்ளன.
நன்றி.
நடைமுறைத்தமிழ் - சரி.
அதென்ன, மக்கள் தமிழ்?
ஏனோ தெரியவில்லை, மற்றவர்களைவிட அடியேனுக்கு நற்பலன்:-)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Dec 21, 4:57 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/12/21 தாரகை <thara...@gmail.com>
>
> > > ஆண்டாள், சிரீதரா! என்று தன் கவிதையில் விழித்தாலும் பட்டருடன் பேசும்
> > > போது நிச்சயமாக ஸ்ரீதரன் என்றுதான் சொல்லியிருப்பாள்.
>
> > ஆண்டாள் காலத்தில் கிரந்தே எழுத்துகள், இருந்திருப்பின் ஏன் சிரீதரா
> > என்று தன் கவிதையில் எழுதவேண்டும்?
> > ஆக,கிரந்த எழுத்து ஆண்டாள் காலத்திற்கு பிறகு தான் என்பது தெளிவல்லவா?
>
> > பட்டருடன் பேசும்போது நிச்சயமாக ஸ்ரீதரன் என்று சொல்லியிருக்கமாட்டார்,
> > "சீதரன்" என்று சொல்லியிருக்க வேண்டிய நிலையாகத்தான் இருந்திருக்கும்.
>
> மேற்கோள்:
> ===========================
> முகிழ்தரு முலைநின் மெய்யா முதலெழுத் தைம்பத் தொன்றிற்
> றிகழ்தரு மாகா ராதி *ஹாகார* மீறாச் செப்பிப்
> புகழ்தரு நாற்பத் தெட்டு நாற்பத்தெண் புலவ ராகி
> அகழ்தரு கடல்சூழ் ஞாலத் தவதரித் திடுவ வாக.
>
> (இ - ள்.) முகிழ்தரும் முலை - அரும்பு போலும் முலையையுடைய
> மாதே, நின் மெய்யாம் முதல் எழுத்து ஐம்பத்து ஒன்றில் - நினது
> வடிவமாகிய ஐம்பத்தொரு முதலெழுத்துக்களில், திகழ்தரும் - விளங்கா
> நின்ற, ஆகாரம் ஆதி *ஹாகாரம் *ஈறாச் செப்பிப் புகழ்தரும் நாற்பத்தெட்டும்
> - ஆகாரம் முதல் ஹாகாரம் இறுதியாகக் கூறிப் புகழப்பட்ட நாற்பத்தெட்டு
> எழுத்துக்களும், நாற்பத்து எண் புலவர் ஆகி - நாற்பத்தெட்டுப்
> புலவர்களாகி, அகழ்தரு கடல்சூழ் ஞாலத்து - தோண்டிய கடல் சூழ்ந்த
> நிலவுலகில், அவதரித்திடுவ ஆக - அவதரித்திடுவனவாக.
>
> நாற்பத்தெட்டெழுத்து -* வடமொழி உயிரெழுத்தில் ஆகாரம் முதலிய *
> *பதினைந்தும் ககரம் முதலிய முப்பத்து மூன்றும் ஆம். க்ஷ முதலியன *
> *கூட்டெழுத்து ஆதலின் விலக்கப்பட்டன. சீர் நிரம்புதற்கு ஹாகாரம் என *
> *நெடிலாக்கிச் சாரியை கொடுத்தார்*.
> ================================
> மேற்கோள் முடிவு.
>
> திருவிளையாடற் புராணம்.
> நன்றி:http://www.tamilvu.org/slet/l41d0/l41d0pa3.jsp?x=35மற்றும் இதைத்
> தனிமடலில் கவனத்துக்குக் கொண்டுவந்த நண்பருக்கும்.
>
> இந்த எழுத்துகள் தமிழிலக்கியத்தில் நெடுங்காலமாகப் பயின்று வந்திருக்கின்றன.
> இது ஒரு சான்று. இலஞ்சி முருகன் உலா இன்னொரு சான்று.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
கவிஞரே,
சங்கப்பலகை தந்தபடலம்
http://nganesan.blogspot.com/2010/12/sangap-palakai-alittatu.html
கிரந்த எழுத்துக்களைத் தமிழ் மன்னர்கள் வேறுப்பாடு உடையன என்று
கருதியதாகத் தெரியவில்லை. கல்வெட்டுக்களில் தமிழும் கிரந்தமும் கலந்தே
வருகின்றன. மகேந்திர வர்மன், இராஜராஜ சோழன் போன்றோர் கிரந்த எழுத்துக்களை
தமிழல்லா இந்திய மொழிச் சொற்களை எழுதப் பயன்படுத்தி உள்ளர். திருப்பாவை,
திருவெம்பாவை, திவ்வியப் பிரபந்தம், தேவாரம் போன்ற நூல்கள் கிரந்தத்தில்
எழுதியதும் உள்ளன.
இது தொடர்பாக, கல்வெட்டறிஞர் செ. ராசு அவர்கள் (ஈரோடு), சிற்பி,
நாச்சிமுத்து - எனக்குச் சொல்லிய திருவிளையாடற் படலம் - சங்கப் பலகை தந்த
படலம் - முக்கியமானது. தமிழின் அழகில் தலைசிறந்த புராணங்கள் ஐந்து என்ப.
அவற்றில் ஒன்றாம் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணப் பாடல்களும்,
நாட்டார் ஐயா உரையும் தருகிறேன். ந. மு. வே. நாட்டாரின் கபிலர் என்னும்
நூலை பெற்றுப் படிக்க வேண்டும்.
மதுரையிலே தமிழ்ச் சங்கப் பலகையில் கவிபாடும் மனிதராய் இடம்பெற்றவை
சம்ஸ்கிருத எழுத்துக்கள் என்று பாடியுள்ளார். தமிழ்ப் புலவோராய்
வீற்றிருந்த எழுத்துக்கள் என்ன?
" உயிரும் மெய்யுமாக ஸம்ஸ்கிருத நெடுங்கணக்கு மொத்தம் 49 எழுத்துக்களைக்
கொண்டது என்பர். ஆனால் தமிழ் நாட்டிலோ அதிகப்படியான எழுத்துக்களைக்
கொண்டு 51 எனவும், 52 எனவும் இருவிதமாகக் கொள்ளப்படுகிறது.
நாற்பத்தொன்பதுடன் ள, க்ஷ ஆகிய இரண்டையும் சேர்த்து 51-ஆகக் கருதுவர்.
“ஷ்ப” என்ற எழுத்தையும் சேர்த்து ஐம்பத்திரண்டாகவும் கருதுவர்.” Thirty
Pallava copper Plates, The Tamil Varalatru Kazhakam, Page 34.
நா. கணேசன்
http://nganesan.blogspot.com/2010/12/sangap-palakai-alittatu.html
உங்கள் தமிழ் தொல்காபியத்தமிழ், கிரந்தமில்லாத தமிழ், வட சொல் ஒரி ஈ
தமிழ், பிற்மொழிகள் கலவாத தமிழ்.
விஜயராகவன்
எங்கிருந்து இச் சான்று என்று கேட்டதிற்கா இவ்வளவு சுற்றிவளைத்த விடை:-)
இறுதியில் சான்றில்லையா...
உங்கள் நற்கருத்து பரவட்டும் வினைதீர்த்தான் அவர்களே.
அப்படியெல்லாம் இல்லை விஜயராகவனாரே:-)
அடியேன் இன்றளவும் ஒரு தமிழ் மாணவன் தான். இக்குழுமத்தில் இருப்பதே தமிழை
செம்மையாகவும், செழுமையாகவும் திருவாளர்கள் ஹரிகி., நா.கண்ணன், நா.கணேசன்
மற்றும் பலரோடு உரையாடி அறிந்துகொள்ள விழையும் அவா. அவ்வளவே:-)
ஐயன்மீர், தொடரட்டும் உங்களின் தீந்தமிழ் பணி.
> அன்புரிமை யாதலால் ஆகுமொரு காதலால்
> ‘அரி‘த்தனன் காணு மென்றே!
> (அண்மைக் காலமாக நானே பல தட்டுப்பிழைகளைச் செய்கிறேன் என்பதும் உண்மை:)
நம் சான்றுகள் வாழ்க்கையிலிருந்து வருவன; ப்ரத்யக்ஷ அனுபவம் முதல் சான்று
விஜயராகவன்
இது எந்தப் பேயாழ்வார்? :-)
சொன்னால் விரோதமிது! ஆகினும் சொல்லுவேன்...
என்று ஆழ்வார்கள் சொல்வது மறந்தும் மானிடனைப் பாடேன் என்பதாச்சே!! ;-)
பரிசிலுக்கு வரும் ஆழ்வார் யார்? :-))
க.>
என்னிடம் ஸ்பெஷம் கிரந்தம் ஒன்றுமில்லை. எந்த தொழில் சம்பந்த, விஞ்ஞான
புஸ்தகத்தையும் பாருங்கள், கிரந்தம் கலக்காத, அயல் சொற்கள் இல்லாத தமிழை
பார்க்க முடியாது. உதாரனம்- ரெஃப்ரிஜிரேஷன் . நான் ஒன்றும் செய்யவே
வேண்டாம், புத்தகங்கள் எழுதுபவர்களும், அதை விலை கொடித்து
வாங்குபவர்களும் இதைத் தமிழ் என எடுத்துக் கொள்கிறனர், அது போதும்.
தொல்காப்பிய மொழிதான் உண்மைத் தமிழ் என்றால், அப்படி மருத்துவ புத்தகம்
எழுதுவது உங்கள் வேலை
விஜயராகாவ்ன்
மாணவன் பேசுகிர பேச்சா இது!!"தமிழுக்கு எதிரி என்னும் பேருண்மை
அயல்மொழிச் சொற்களின் கலவையே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை."
மாணவனுக்கு வேண்டிய மனோபாவம் உங்களிடம் இல்லை. உங்கள் வார்த்தைகள் ஒரு
ஐடியாலஜி. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை நடகாது தரகையாரே.
விஜயராகவன்
http://www.kamalagaanam.blogspot.com
----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 21 December 2010 22:07:04
Subject: Re: [MinTamil] Re: தினமணி தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?
க.>
--
ஆண்டு 1915 ஆக இருக்கும்
தேவ்
On Dec 21, 9:48 am, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:
> இத்தகவல்களைக் கூறிய ராகவன் உண்ணி, தகவல் நூலின் பெயரையும் கூறினார்.
> இப்போது எனக்கு நினைவில்லை.ஆனால்” பியூட்டி ஒஃப் ட்ராவிடியன் லேங்குஜி “ல்,
> வந்த தகவலும் தமிழர்கள் சிலிர்த்துப் பெருமிதம் கொள்ளும் தகவலே.
> bபியூட்டி of dravidian languages, எழுதியவர்---சுப்ரமணியம் ஐயர்.--ஆண்டு--1715ம்
> ஆண்டு
> கிட்டுமிடம் ---கன்னமாரா நூல்நிலையம்.
>
> http://www.kamalagaanam.blogspot.com
>
> ----- Original Message ----
> From: N. Kannan <navannak...@gmail.com>
> To: mint...@googlegroups.com
> Sent: Tuesday, 21 December 2010 22:07:04
> Subject: Re: [MinTamil] Re: தினமணி தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?
>
> 2010/12/21 Kamala Devi <saahith...@yahoo.com.sg>:
> > உல்சவ விசேஷத்துக்காக வந்திருந்தார்கள், 5 ]ம் குலோத்துங்கனின் அவையில்
> > கூடியிருந்த வேளையில்,
> > வாடி வதங்கிய ஒரு பேயாழ்வார், கவிதை,அல்ல, பாமாலை புனைந்து வந்திருந்தார்,
> > ஏதாவது பரிசில் கிட்டுமென்று.
>
> இது எந்தப் பேயாழ்வார்? :-)
>
> சொன்னால் விரோதமிது! ஆகினும் சொல்லுவேன்...
>
> என்று ஆழ்வார்கள் சொல்வது மறந்தும் மானிடனைப் பாடேன் என்பதாச்சே!! ;-)
>
> பரிசிலுக்கு வரும் ஆழ்வார் யார்? :-))
>
> க.>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to
நான் தனியாக அப்படி எழுதவே வேண்டாம். வணிக ரீதியில் பிரசுரக்கப்படும்
எல்லா விஞ்ஞான, தொழில்நுட்ப நூல்கள் மற்றும் விவாதங்கல் கிரந்தம் கலந்த ,
ஆங்கிலத்திலிருந்த கடன் வாங்கிய சொற்களை சரளமாக பிரயோகிக்கின்றன. எந்த
தமிழ் விஞ்ஞான பிரசுராலயத்தின் புத்தகங்களை பாருங்கள்.
வணிக ரீதியல் எழுதுபவர்களுக்கும், பிரசுரிப்பவர்களுக்கும்,
வாங்குபவர்களுக்கும் தமிழில் எழுதி/படித்து பிழைப்பு ஒரு நிர்பந்தம்;
மொழி என்பது அவர்களுக்கு பிழைப்பு மையம், அதனால் அவர்கள் எல்லோருக்கும்
புரியும் தமிழை எழுதுகின்ரனர். தமிழில் எழுதுவது உங்களுக்கு
பொழுதுபோக்கு, அதனால் நடைமுறைத்தமிழை இகழ்ந்து, அயல்மொழி கலப்பை
எதிர்க்கலாம்.
விஜயராகவன்
விஜயராகவன்
China bans English words in media
China's state press and publishing body says the use of foreign words
is eroding the purity of Chinese
China has banned newspapers, publishers and website-owners from using
foreign words - particularly English ones.
China's state press and publishing body said such words were sullying
the purity of the Chinese language.
It said standardised Chinese should be the norm: the press should
avoid foreign abbreviations and acronyms, as well as "Chinglish" -
which is a mix of English and Chinese.
The order also extends existing warnings that applied to radio and TV.
China's General Administration of Press and Publication said that with
economic and social development, foreign languages were increasingly
being used in all types of publications in China.
It said such use had "seriously damaged" the purity of the Chinese
language and resulted in "adverse social impacts" on the cultural
environment, reported the People's Daily newspaper.
If words must be written in a foreign language, an explanation in
Chinese is required, the state body said.
<http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12050067>
2010/12/21 தாரகை <thar...@gmail.com>:
>> Tamils conversing in English about perils of Tanglish:-)
>
> I don't like to find excuses if you were insinuating the comments
> passed over in English about the perils of mixing Thamizh with English
> in our conversation.
>
> Though, we need to agree whichever language we are discussing about
> the perils of mixing Thamizh with English, the genuine concern
> persists.
>
>> தமிழருடன் ஆங்கிலத்தில் கதைக்கும் தமிழரே இந்நிலைக்கு முழுகாரணம்.
>
> அதில் எவ்வித ஐயமும் இல்லை
>
>
>> நான் ஆங்கிலம் கலந்து பேசுவது உண்மை.ஆனால் பட்டிகாட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தால் என்
>> பேச்சுதமிழில் இன்னும் சோறு ரைஸ் ஆகாமலும், பொண்ணு டாட்டர் ஆகாமலும், தண்ணி
>> வாட்டர் ஆகாமலும் இருக்கு. நெக்ஸ்ட் ஜெனெரேஷன் என்ன ஆகுமோ?:-)
>
> இவ்வளவு அழகாக எடுத்துரைத்துவிட்டு, இறுதியில் "அடுத்த தலைமுறையினர்" என
> பட்டிகாட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தால் என கூறியிருப்பின்
> பாராட்டத்தக்க நிலையாக இருந்திருக்கும்.
>
>
>> இப்ப சொல்லுங்க...தமிழுக்கு எதிரி கிரந்தமா, நாமா?
>> உண்மைகளை சொல்லி சிலரை குழப்பி விடாதீர்கள்
>
> சில உண்மைகள் விஜயராகவன் போன்றோரைக் குழப்புமேயன்றி, தமிழுக்கு எதிரி
> என்னும் பேருண்மை அயல்மொழிச் சொற்களின் கலவையே என்பதில் எவ்வித ஐயமும்
> இல்லை.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> நான் ஆங்கிலம் கலந்து பேசுவது உண்மை.ஆனால் பட்டிகாட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தால் என்இவ்வளவு அழகாக எடுத்துரைத்துவிட்டு, இறுதியில் "அடுத்த தலைமுறையினர்" என
> பேச்சுதமிழில் இன்னும் சோறு ரைஸ் ஆகாமலும், பொண்ணு டாட்டர் ஆகாமலும், தண்ணி
> வாட்டர் ஆகாமலும் இருக்கு. நெக்ஸ்ட் ஜெனெரேஷன் என்ன ஆகுமோ?:-)
பட்டிகாட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தால் என கூறியிருப்பின்
பாராட்டத்தக்க நிலையாக இருந்திருக்கும்.
China bans English words in media
China's state press and publishing body says the use of foreign words
is eroding the purity of Chinese
1970 களில் நடைபெற்ற நிகழ்ச்சி. எம் பகுதியில் ஒரு டூரிங் கொட்டகை. அதில்
வெள்ளிக்கிழமைதோறும் புதுப்படம் மாற்றுவார்கள். ஒருமுறை ஒரு ஹிந்தி படம்
வெளியானது. ’சீனத்து அம்மன்’ நடித்தது என்று ஊர் முழுக்க விளம்பரம்
செய்யப்பட்டது. அம்மணியர் பக்தி புஞ்ஜிதமாகப் படம் பார்க்கக் குழுமினர்.
திரையில் நடிகை ஜீனத் அமன் ஆட்டம் போட்டார். அவர் என்ன பரதநாட்டியமா
ஆடுவார் ? கொட்டகை உரிமையாளர் தாய்க்குலத்தின் வெறுப்பைப் பெற்றார்
தேவ்
http://www.kamalagaanam.blogspot.com
செய்யப்பட்டது. அம்மணியர் பக்தி புஞ்ஜிதமாகப் படம் பார்க்கக் குழுமினர்.
திரையில் நடிகை ஜீனத் அமன் ஆட்டம் போட்டார். அவர் என்ன பரதநாட்டியமா
ஆடுவார் ? கொட்டகை உரிமையாளர் தாய்க்குலத்தின் வெறுப்பைப் பெற்றார்
தேவ்
--
பிற மொழியினர் உச்சரிப்புக்காகக் கூடுதல் எழுத்துக்களைச் சேர்ப்பதில்லை,
நாம் மட்டும் ஏன் சேர்க்க வேண்டும் ?
All human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.
(Article 1 of the Universal Declaration of Human Rights)
அனைத்தும் உண்மைதான் செல்வன்.
தமிழின் 'ழ’ வுக்கென எந்தெந்த மொழிகளில் வரிவடிவம் உள்ளது என்பதே பலரும்
தற்போது கேட்டுவரும் கேள்வி. முன்னர் யார் மாற்றியிருந்தாலும் தமிழ்
வரிவடிவை மாற்றும் உரிமையும் யாருக்கும் இல்லை என்பதும் தற்போதைய
நிலைப்பாடு
தேவ்
On Dec 21, 10:45 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/12/21 devoo <rde...@gmail.com>
>
> > பிற மொழியினர் உச்சரிப்புக்காகக் கூடுதல் எழுத்துக்களைச் சேர்ப்பதில்லை,
> > நாம் மட்டும் ஏன் சேர்க்க வேண்டும் ?
>
> பிறமொழியினர் சேர்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
>
> தமிழில் ஸ,ஹ,ஜ எல்லாம் சேர்ந்து பல நாறு ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 16ம்
> நூற்றாண்டில் ஆங்கிலத்தில் ஆகிய U, J, W எழுத்துக்கள் சேர்க்கபட்டன.இவையும்
> ஒரிஜினல் ஆங்கில எழுத்துக்கள் இல்லை.செமிட்டிக் மொழியிலிருந்து கடன் வாங்கியவை.
>
> பெர்னார்ட்ஷா காலத்தில் ஆங்கில எழுத்துக்களை ஒட்டுமொத்தமாக மாற்றும் திட்டம்
> முன்மொழியபட்டது.ஷாவியன் ஆல்பபெட்ஸ்
> <http://www.omniglot.com/writing/shavian.htm>என அழைக்கபடும் அந்த
> எழுத்துக்கள் இங்கே இருக்கு
>
> [image: shavian.gif]
>
> Sample text in Shavian
>
> [image: udhr_shavian.gif]
>
> Translation
>
> All human beings are born free and equal in dignity and rights. They are
> endowed with reason and conscience and should act towards one another in a
> spirit of brotherhood.
> *(Article 1 of the Universal Declaration of Human Rights)*
>
> --
> செல்வன்
>
> "கம்யூனிஸ்டுகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் அரசாங்கத்தை கடவுளாக
> கருதி கடவுளால் செய்யகூடிய காரியங்கள் அனைத்தையும் அதனிடம் ஒப்படைக்கிறார்கள்"-
> ரஷ் லிம்பா
>
கற்றவர்கள் அறிந்தே மொழிக்கலப்புக்கு வழிகோலுகின்றனர், கல்லாதவர்களோ
தமக்கு வரும் பிறமொழிச் சொற்களையே தம்முடைய தாய்மொழிச் சொல்லென்று
பிழையாக உணர்ந்து கொள்கின்றனர். இத்தகைய நிலை தமிழுக்கு மட்டுமின்றி,
எந்த மொழியின் வளர்ச்சிக்கும் ஏற்றம் அளிக்காது என்பதை உலக மொழிகள்
சிலவற்றிற்கு நேர்ந்த நிலைகள் மெய்ப்பிக்கின்றன. - திரு கூ.வ. எழிலரசு.
> தொல்காப்பிய மொழிதான் உண்மைத் தமிழ் என்றால், அப்படி மருத்துவ புத்தகம்
> எழுதுவது உங்கள் வேலை
எழுதுவோம் விஜயராகவன், நன்றி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மொழியியல் (linguistics) துறையில் ... International Phonetic Alphabet (IPA) என்ற ஒரு குறியீட்டுமுறை உருவாக்கியதும் இந்த மாதிரி முயற்சிக்கு ஒரு சான்று
மாணவர்கள் பேசும் காலம் தான் இது:-)
> மாணவனுக்கு வேண்டிய மனோபாவம் உங்களிடம் இல்லை.
மாணவனுக்கு வேண்டிய சிறப்பியல்புகள் காலத்திற்கு ஏற்றவகையில் மாறிவுள்ளதை
அறியாமல் நீங்கள் இருந்தால், அது உங்களின் தவறேயன்றி மாணவனல்ல:-)
> உங்கள் வார்த்தைகள் ஒரு ஐடியாலஜி
எமது கொள்கை - அழகுத்தமிழ் - மற்ற மொழிச்சொற்கள் கலவாத்தமிழ் - "கொள்கை"
என்கிற அழகுச்சொல்லை பயன்படுத்தாமல் ஓர் ஆங்கிலச்சொல்லை பயன்படுத்தும்
அவல நிலையை நினைத்து என்ன சொல்ல!
மற்ற மொழிச்சொற்கள் கலவாத்தமிழ் பயன்படுத்தினால் அழகு என்றால் - உடனே
அப்படியானவர்களுக்கு பட்டமளிக்க முன்நிற்கும் விஜயராகவனாரே, சற்று பொறுமை
காக்க.
> கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை நடக்காது தரகையாரே.
நடக்காது என்பது நலிந்தோரின் குரல், நடக்க வாய்ப்புள்ளது என்பது
உறுதியானோரின் குரல்.
அதை வேண்டுமென்று பிறமொழிச்சொற்களைத் தமிழில் எழுதுவதிற்கு பதிலாக
அடைப்புக்குறியில் "அடுத்த தலைமுறை" (Next Generation) என்று
எழுதியிருந்தால் இரு மொழிக்கும் பெருமையல்லவா.
அதை வேண்டுமென்று பிறமொழிச்சொற்களைத் தமிழில் எழுதுவதிற்கு பதிலாக
அடைப்புக்குறியில் "அடுத்த தலைமுறை" (Next Generation) என்று
எழுதியிருந்தால் இரு மொழிக்கும் பெருமையல்லவா.
நாம் தான் எதற்கும் காரணம் கூறுபவர்களாச்சே!
கற்றவர்கள் அறிந்தே மொழிக்கலப்புக்கு வழிகோலுகின்றனர்.
நாம் தான் எதற்கும் காரணம் கூறுபவர்களாச்சே!
கற்றவர்கள் அறிந்தே மொழிக்கலப்புக்கு வழிகோலுகின்றனர்.
நீங்கள் ஒரு ஆளா அல்லது கமிட்டியா?
விஜயராகவன்
கொள்கையும் ஐடியாலஜியும் வேற. நீங்கள் 'என் கொள்கை காலை 6.30 முன்
எழுந்துவிட வேன்டும்' என சொல்லலலாம். அது ஐடியாலஜி ஆகாது. அயல் மொழிச்
சொற்களை பயன்படுத்த மாட்டேன் என்றால், இப்படித்தான் குழப்பங்கள் வரும்.
நீங்களே அதை டெமான்ஸ்ட்ரேட் செய்து விட்டீர்கள்.
விஜயராகவன்
மாற்றத்தின் தேவையை வரவேற்கும் , ஒப்புக்கொள்ளும் அறிஞர்களும் நம்மில்
இருப்பது ஆறுதலான விஷயம்.
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 15
என்னுடைய நிலைப்பாட்டை ஓர் ஒப்புமை மூலம் விளக்குகிறேன். தமிழ் மகள்
ஒருத்தி, சால்வாரோ, கால்சட்டையோ போடுவதால் தமிழ் மகள் அல்ல என்று
ஆகிவிடாது; அவள் கெட்டுப்போய்விட்டாள் என்று சொல்ல முடியாது. மொழியும்
அது போன்றதே. தமிழ் வேறு சொற்களையோ எழுத்துகளையோ சேர்த்துக்கொள்வதால்
தமிழ் மொழி அல்ல என்று ஆகிவிடாது; கெட்டுப்போய்விட்டது என்று சொல்ல
முடியாது. இரண்டும் காலத்தின் தேவைக்கு வேண்டியதை ஏற்றுக்கொள்வது ஆகும்;
புதிய வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்றதும் ஆகும். இது என்னுடைய நிலைப்பாடு.
சுவடி யுகத்திலிருந்து அச்சு யுகத்திற்குத் தமிழ் வந்த போது நெகிழ்ந்து
கொடுத்தது. நெடுங்கணக்கில் எகர ஏகாரத்தையும், ஒகர ஓகாரத்தையும் வடிவில்
வேறுபடுத்தியது, சொற்களுக்கிடையே இடம் விட்டது, நிறுத்தக் குறிகளைப்
பயன்படுத்தியது, புறச் சந்தியைக் குறைத்தது, தமிழ் எண்களைத் தசம முறையில்
மாற்றி எழுதியது, பின்னால் அராபிய எண்ணுக்கு மாற்றிக்கொண்டது ஆகியவை
தமிழ் ஏற்றுக்கொண்ட சில மாற்றங்கள். தற்போது கணினி யுகத்திற்கு வந்துள்ள
போது நெகிழ்ச்சியின் தேவை மீண்டும் எழுந்துள்ளது. இப்போது மாற்றத்தை
மறுப்பது, வரலாற்றை மறுக்கும் பார்வை. அது, தமிழின் வருங்காலத்தைக்
கேள்விக்குறி ஆக்கும்.
http://www.vallamai.com/?p=1495
தேவ்
சுவடி யுகத்திலிருந்து அச்சு யுகத்திற்குத் தமிழ் வந்த போது நெகிழ்ந்து
கொடுத்தது. நெடுங்கணக்கில் எகர ஏகாரத்தையும், ஒகர ஓகாரத்தையும் வடிவில்
வேறுபடுத்தியது, சொற்களுக்கிடையே இடம் விட்டது, நிறுத்தக் குறிகளைப்
பயன்படுத்தியது, புறச் சந்தியைக் குறைத்தது, தமிழ் எண்களைத் தசம முறையில்
மாற்றி எழுதியது, பின்னால் அராபிய எண்ணுக்கு மாற்றிக்கொண்டது ஆகியவை
தமிழ் ஏற்றுக்கொண்ட சில மாற்றங்கள். தற்போது கணினி யுகத்திற்கு வந்துள்ள
போது நெகிழ்ச்சியின் தேவை மீண்டும் எழுந்துள்ளது.
பேயாழ்வார் என்ற சொல்லாட்சி கேரளத்தில் உள்ளதா? பரிசில் கேட்கும்
”ஆழ்வார்” என்பது ஆக்சிமொரான் :-)
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே.
என்பது ஆழ்வார்கள் கொள்கை.
இது குறித்த என் அன்னாளைய மடலொன்று:
http://thirumozi.blogspot.com/2007/08/075.html
கண்ணன்
2010/12/22 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
On Dec 22, 7:30 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் கமலம்:
>
> பேயாழ்வார் என்ற சொல்லாட்சி கேரளத்தில் உள்ளதா? பரிசில் கேட்கும்
> ”ஆழ்வார்” என்பது ஆக்சிமொரான் :-)
>
> சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
> என்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன்,
> தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
> என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே.
>
> என்பது ஆழ்வார்கள் கொள்கை.
>
> இது குறித்த என் அன்னாளைய மடலொன்று:
>
"அந்நாளைய”
> http://thirumozi.blogspot.com/2007/08/075.html
>
> கண்ணன்
>
> 2010/12/22 Kamala Devi <saahith...@yahoo.com.sg>
>
>
>
>
>
> > இத்தகவல்களைக் கூறிய ராகவன் உண்ணி, தகவல் நூலின் பெயரையும் கூறினார்.
> > இப்போது எனக்கு நினைவில்லை.ஆனால்” பியூட்டி ஒஃப் ட்ராவிடியன் லேங்குஜி “ல்,
> > வந்த தகவலும் தமிழர்கள் சிலிர்த்துப் பெருமிதம் கொள்ளும் தகவலே.
> > bபியூட்டி of dravidian languages, எழுதியவர்---சுப்ரமணியம் ஐயர்.--ஆண்டு--1715ம்
> > ஆண்டு
> > கிட்டுமிடம் ---கன்னமாரா நூல்நிலையம்.- Hide quoted text -
>
> - Show quoted text -
http://www.kamalagaanam.blogspot.com
----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, 22 December 2010 21:30:31
Subject: Re: [MinTamil] Re: தினமணி தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?
அன்பின் கமலம்:
http://thirumozi.blogspot.com/2007/08/075.html
கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to
>>ஆனால், மறுக்கமுடியாதபடி குறைந்தது அறுநூறு வருடங்களாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் சில எழுத்து ஒலி வடிவங்களை ஏற்க மறுத்தால், தயங்கினால், அதன் காரணம்தான் என்னவாக இருக்க முடியும்? பதில் அவரவர் மனசாட்சியிடம் இருக்கிறது. வடமொழி ஒரு குறிப்பிட்ட இனத்துக்குச் சொந்தமானது என்ற மாயையிலிருந்து விடுபட நேர்மை வேண்டும். <<
’மதங்க சூளாமணியார்’ திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் தேவியார். தூய
வடமொழிப்பெயர் ஏற்கெனவே வழக்கில் இருந்தது. ஷண்முகம், தனுஷ்கோடி என்ற
பெயர்களும் அண்மைக்காலம்வரை வெகுவாக வழக்கில் இருந்தன. வடமொழியில்
பெரும்புலவரான அப்பைய தீக்ஷிதர் தம் தமிழ்ப்பெயரை மாற்றிக்கொள்ளவில்லை;
சிறந்த ஸ்ம்ருதி நிபந்த க்ரந்தம் எழுதியவரின் பெயர் ‘தோழப்பர்’. வைணவர்
புழங்கும் தமிழ்ச் சொற்கள் கணக்கில் அடங்கா.
வைணவர் வடமொழிக்கு நிகராகத் தமிழைப்பேசி வரும்போதே சில தளங்களில் அதை
மெல்ல வடமொழிக்கும் மேலே வெகு இயல்பாக வைத்து விடுகின்றனர்.
’வடநூற் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில்
நின்று காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே’ என்று பாடியவர்
குமரகுருபரர்.
தமிழின் சீரிளமைத் திறத்தைக் கண்டு வியக்கும் புகழ்பெற்ற இலக்கியத்தின்
தலைப்பு ‘மனோன்மணீயம்’. வடசொல் தலைப்பில் பல நூல்கள் தமிழில்
எழுதப்பட்டன.
யார் யார் எதை எதை எதெதோடு எப்போது கலந்தனர் ?
தேவ்
> taller than him; he is better than me என்பதையும் ஏற்றுக் ...
>
> read more »
"வேற" என சொல்லத் தெரிந்தவருக்கு மொழிபெயர்ப்பு தெரியவில்லையா!
வேண்டுமென்றால், மற்றொரு பொருள் பன்மொழி தருகிறேன் - "கருத்துப்பாடு".
முடிந்தால் நீங்கள் ஒன்று அளியுங்கள், இவ்விழைக்கு பெருமை சேர்க்கும்:-)
> அயல் மொழிச்சொற்களை பயன்படுத்த மாட்டேன் என்றால், இப்படித்தான் குழப்பங்கள் வரும்.
> நீங்களே அதை டெமான்ஸ்ட்ரேட் செய்து விட்டீர்கள்.
குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கே குழப்பமா:-)
யார் எந்த ஒரு கூற்றின் உண்மையை மெய்ப்பிக்கிறார்கள் என்பது
தெள்ளத்தெளிவு:-)
எப்படி இருந்தாலும் நன்மை தான்:-)
நல்லது செல்வன்:-)
பேச்சுத்தமிழ் மட்டுமின்றி எழுதும் தமிழிலும் அவ்வாறே கடைப்பிடிக்க
முயலுங்கள்.
வாழ்த்துகள்:-)