"பல்லவர்களை"ப் பற்றி "சரித்திர" ஆசிரியர்கள் பற்பல கதைகள் விட்டுக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதாவது கேள்வி கேட்டால் ஓடிவிடுகிறார்கள்.
ஆகவே, "தில்" உள்ளவர்கள், மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதில்
கொடுக்கவும்!
2. Vincent A. Smith, The Oxford History of India, Clarendon Press,
London, 1923, pp.205-6.
தயவு செய்து தாங்கள் குறிப்பிட்டதற்கு ஆதாரத்தைத் தரவும்.
According to Vincent A. Smith2 the Pallavas were unknown to Europeans
மிகவும் கவனமாகப் படித்துப் பார்த்தேன்:
Another name, by which Mahabalipuram was known to earlier mariners, at
least since Marco Polo's days, is "seven pagodas" as
seven tall structures were visible from farwhile approaching. Carr
(1869) refers to the account given by William chambers after his
second visit to Mahabalipuram in 1776 that "according to the natives
of the place, the more aged people among them, remembered
to have seen the tops of several
pagodas....................................................
இங்கு என்குமே "பல்லவர்" என்ற வார்த்தை இல்லையே. "ஏழு பகோடா" (!)
என்றுதான் கூறுகின்றனர்!
இந்த புத்தகம் என்னிடத்தில் இல்லை: Chambers William. 1869 Some account
of the sculptures and Ruins at Mavalipuram, a place a few miles north
of Sadras, and known to Seamen by the name of the Seven Pagodas, in
The Seven Pagodas (Ed. Carr. M.W.) New Delhi, pp 1-29.
ஒருவேளை திரு. நரசய்யா அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
On Nov 30, 8:42 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> Dear sir
>
> *http://drs.nio.org/drs/bitstream/2264/506/1/Migration_Diffusion_4_67.pdf
>
> rgds
> vj
> *
>
| We are working on a project Pallava Mallai and Prof Swaminathan is leading it. In fact for a site seminar in Jan 2010 we are working on. A map of the "the coasts of Malabar and Coromandel presented to the King by William de l'Isle at Amsterdam " dated 1723 mentions "les 7 pagodas". The name of teh site is "Miah-bali-puram or Mauvelivaram, i. e., 7 pagodas" (from N S Ramaswamy's work) Narasiah |
இதையும் படித்துப் பார்த்தேன்.
பல விஷயங்கள் உள்ளன [எப்படி நாணயங்கள் மறைதிருக்கக்கூடும் முதலியன].
ஆனால், "பல்லவர்" என்ற வார்த்தை என் கண்களில் படவில்லை.
எனக்கு வயதாகிவிட்டது. கண்கள் பிரச்சினை இருக்கிறது. கண்ணாடி
போட்டிருக்கிறேன். ஒருவேளை நான் சரியாக பார்க்கவில்லையோ என்றும்
தோன்றுகிறது!
ஒருவேளை இருக்கிறது என்றால் சொல்லவும்.
On Dec 1, 7:08 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> Dear Sir
>
> Please refer to this work
>
> http://library.britishcouncil.org.in/IndiaCollections/DissertationsAn...
>
உங்களது "கற்கள் / சிற்பங்கள் பேசுவது" மிகவும் அருமை. உங்களிடத்தில்
நான் தெரிந்து கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது.
ஜான் ஃபைத்ஃபுல் ஃபிளீட் (John Faithful Fleet), நம்பிக்கையுடன் எப்படி
இந்தியாவில் நூற்றுக்கணக்கான வம்சாவளிகள் (dynasties) இருந்துள்ளன என்று
ஒரு புத்தகம் எழுதினான்.
அப்பொழுது "பல்லவர்" பற்றி ஆராய்ந்தபோது திகைதான்.
ஏனெனில் அத்தகையவர் இல்லவே இல்லை!
ஆனால் உள்ள சிற்பங்கள் தோராயமாக 4 முதல் 7 வரை நூற்றாண்டுகளை CEச்
சேர்ந்தது என்று ஒப்பீடு (comparative and relative chronology)
முறைப்படி தேதியைக் குறித்தனர்.
தென்மேற்கு ஆசிய நாடுகளில் இருந்த "பல்லவர்களின்" கல்வெட்டுகளோ
அகழ்வாய்வு அடுக்குகளின் தேதிப்படி "பல்லவ"காலத்திற்கு (pre-Pallavan
period) முன்னே சென்றன!
அவர்களது சிற்பக்கலை (comparing with sculpture, so-called style and
dating them accordingly) / வரிவடிவ (script - it could start only from
Asokan i.e, c.272 BCE and no before) ஒப்பீடுகள் தவறு என்று நன்றாக
அறிந்து கொண்டனர்.
இங்கும் கல்வெட்டுகள் என்று அத்தாட்சி கொண்டு, அந்த சிற்பங்களின்
சொந்தக்கரர்கள் யார் என்று பார்த்தால் மஹாபாரத காலத்திற்குச் செல்கிறது,
அதாவது 3102 BCE.
c.272க்கு முன்னால் எந்த தேதி சென்றாலும், அது இந்தியாவில்
செல்லுபடியாகாது, சரித்திர காலமாகாது (pre-historic)! அப்படியொரு சரத்து!
On Dec 3, 7:16 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> நீங்கள் சொல்வது சரிதான் - பல்லவர் என்று அவரது குறிப்பில் இல்லை. நீங்கள்
> தொடருங்கள்.
>
> விஜய்http://www.poetryinstone.in
> Here the language of stone surpasses the language of man
>
> 2009/12/3 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>
பல்லவர்கால தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஏதேனும் தகவல்கள் உள்ளனவா?
மகேந்திர குடைவரைகள் நூலில் இருந்து - ( திவாகர் சார் உபயம் )
சிராப்பள்ளி அந்தாதி
ஒரு பாடலின் இறுதி எழுத்தையோ, அசையையோ, சொல்லையோ, சீரையோ அல்லது அடியையோ முதலாகக் கொண்டு அடுத்த பாடலை அமைக்கும் இலக்கிய வகை அந்தாதி எனப்படும். தமிழ்நாட்டில் காலத்தால் பழமையான அந்தாதிகளாக முதலாழ்வார்களாகக் கருதப்படும் பொய்கையார், பூதத்தார், பேயார் பாடிய திருவந்தாதிகள் மூன்றையும் குறிப்பிடலாம். திவ்விய பிரபந்தத்தில் திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் அந்தாதி இடம்பெற்றுள்ளது. நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி என 87 பாசுரங்களைப் பாடியுள்ளார். சைவ உலகின் கண்ணாகக் கருதப்படும் காரைக்கால் அம்மையாரின் ‘பிறந்து’ எனத் தொடங்கி ‘பிறந்து’ என்றே முடியும் அற்புதத் திருவந்தாதியும் காலத்தால் முற்பட்டதாகும். சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்து அந்தாதியும் குறிப்பிடத்தக்கது. இத்தகு அந்தாதி இலக்கியங்களுள் ஒன்றாகக் கல்லில் மலர்ந்திருக்கும் சிராப்பள்ளி அந்தாதி நூறு கலித்துறைப் பாடல்களால் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விலக்கியத்தைப் படைத்தவர் தம்மை ‘தமிழ் நாராயணன்’ என்றழைத்துக் கொள்வது நினைந்து மகிழத்தக்கது. இவர் தந்தையார் பெயர் மணியன். ‘மாட மதிரை மணலூர் மதில் வெம்பையோடமர் சேஞலூர் குண்டூர் இந்நீடிய நற்ப்பதிக்கோன் நாராயணன்’ என்று இவரை அடையாளப்படுத்தும் கல்வெட்டு. இவ்விலக்கியத்தைக் கவி நாராயணன் கற்பந்தல் நிழலில் வைத்துள்ளதாகப் பெருமைப்படுகிறது.
நூற்று நான்கு வரிகளில் இரு பிரிவுகளில் அடங்குமாறு குடைவரையின் அர்த்தமண்டபப் பின்சுவரில் வெட்டப்பட்டிருக்கும் இவ்விலக்கியமே தமிழ்நாட்டளவில் கல்லில் பொறிக்கப்பட்ட முதல் முழு இலக்கியம் எனலாம். இவ்விலக்கியத்தின் தொடக்கத்தில் உலகத்தின் நெற்றியாக உறையூரைச் சுட்டும் நாராயண கவி, அந்நெற்றிக்குத் திலகமாகப் பரமன் அமரும் சிராமலையைக் குறிப்பிட்டு, உறையூரை வளப்படுத்திப் பாயும் பொன்னி நதியை சிவபெருமான் தம் கழுத்தில் கொண்ட வெள்வடம் என்று சிறப்பிக்கிறார். புரமெரித்தது, காலனைச் சாய்த்தது போன்ற இறைவனின் அருட்செயல்களை விதந்தோதி, அத்தகு சிவபெருமானின் திருவடி இணை சேர்வதே வாழ்க்கையின் குறிக்கோளாக வேண்டுமெனச் சுட்டி, ஆங்காங்கே மலைவளம், மலைவாழ் மக்கள் வளம் கூறி இவ்விலக்கியத்தை அமைத்துள்ளார் நாராயணன்.
நூலின் முழு வடிவம் பெற
மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நூலின் ஒரு பகுதியைப் பார்க்கவும்.
On Dec 3, 6:53 am, Satheesh kumar R <svp...@gmail.com> wrote:
> திருமதி. சுபா,...
>
> read more »
>
> இந்த நூலை நான் தஞ்சை நூலகத்தில் இருந்து எடுத்து வருடினேன். இதில் அட்டைப்
> பக்கம் இல்லை, அதனால் எழுத்தாளர் விவரமும் இல்லை. ஆனால் நூலைப் பார்த்தால் ஏதோ
> கல்லூரியின் பாடநூல் போல் தெரிகிறது.
>
> நூலின் தலைப்பு “தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு”
>
முனைவர் ஏ. சுவாமிநாதன், 1997-ல் அச்சான புத்தகம்.
> அன்புடன்,
> சதீஷ்
>
> 3 டிசம்பர், 2009 3:34 pm அன்று, Subashini Tremmel
> <ksubash...@gmail.com>எழுதியது:
>
>
>
> > திரு.சதீஷ்,
>
> > இந்த நூலின் ஆசிரியர் யார்? தகவல் வழங்க முடியுமா?
>
> > அன்புடன்
> > சுபா
>
> > 2009/12/3 Satheesh kumar R <svp...@gmail.com>
>
> >> மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நூலின் ஒரு பகுதியைப் பார்க்கவும்.
> >> பல்லவர்கள் காலம் பக்தி இலக்கிய காலம்....
>
> >> சதீஷ்
>
> >> 3 டிசம்பர், 2009 1:10 pm அன்று, vj kumar <vj.epist...@gmail.com>எழுதியது:
> >>> 2009/12/3 V, Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >>> திருத்தொண்டர் புராணம் 12ஆம் நூற்றாண்டு நூலானாலும் எனக் கூட்டி
> >>>> வாசிக்கவும்.
>
> >>>> சீவகசிந்தாமணி 9ஆம் நூற்றாண்டு நூல் - இது பல்லவர்கள் காலம்தான்.
>
> >>>> தி
>
> >>>> On 12/3/09, V, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
> >>>>> என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க..
>
> >>>>> நீங்கள் எதற்காக கேட்டீர்கள் என்று புரியவில்லை.
>
> >>>>> தேவார, திவ்வியப்பிரபந்தங்கள் பாடப்பட்டு அருளப்பட்டது பல்லவர்கள் ஆண்ட
> >>>>> காலத்தில்தான்.
>
> >>>>> நந்திக்கலம்பகம் என்றோர் அருமையான நூல், நந்திவர்ம பல்லவன் புகழ்
> >>>>> பாடப்பெறப்பட்டது.
>
> >>>>> திருத்தொண்டர்புராணப் பாடல்கள் பல்லவர்கால நாயன்மார்கள் பெருமை பேச
> >>>>> எழுதப்பட்டது.
>
> >>>>> முதல் தமிழ்க் கல்வெட்டு மகேந்திரர் காலத்தில் வரையப்பட்டதாகும்.
>
> >>>>> மூவர்கள் தமிழ் பாட ஒவ்வொரு கோயில் உள்ள ஊரும் தவம் கிடந்ததாக கதை
> >>>>> சொல்வர்.
>
> >>>>> முன்னூறு ஆண்டுகள் மூலையில் கிடந்த தமிழை முன்னிலைப் படுத்தியவர்கள்
> >>>>> பல்லவர்களே..
>
> >>>>> திவாகர்
>
> >>>>> On 12/3/09, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
>
> >>>>>> On Nov 30, 5:24 am, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> >>>>>> > 1840ற்கு முன்பு "பல்லவர்களை" சரித்திர ஆசிரியர்களுக்குத் தெரியுமா?
> >>>>>> ...
>
> >>>>>> பல்லவர்கால தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஏதேனும் தகவல்கள் உள்ளனவா?
>
> >>>>>>http://aduththaveedu.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -
முனைவர் ஏ. சுவாமிநாதன், 1997-ல் அச்சான புத்தகம்.
> இந்த நூலை நான் தஞ்சை நூலகத்தில் இருந்து எடுத்து வருடினேன். இதில் அட்டைப்
> பக்கம் இல்லை, அதனால் எழுத்தாளர் விவரமும் இல்லை. ஆனால் நூலைப் பார்த்தால் ஏதோ
> கல்லூரியின் பாடநூல் போல் தெரிகிறது.
>
> நூலின் தலைப்பு “தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு”
>
விஜய்,
சீயமங்கலம், வல்லம், தளவானூர், மண்டகப்பட்டு, பல்லாவரம், குரங்கணில் முட்டம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமல்லவா?
சதீஷ்
சென்னையில்/ சென்னைக்கு அருகில் உள்ள கோவில்களை பற்றி ஒரு நல்ல பிளாக்
http://shanthiraju.wordpress.com/directory-of-temples-around-chennai/
விஜயராகவன்
> > 3 டிசம்பர், 2009 4:48 pm அன்று, vj kumar <vj.epist...@gmail.com> எழுதியது:- Hide quoted text -
On Dec 3, 9:53 am, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
> On Nov 30, 5:24 am, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:> 1840ற்கு முன்பு "பல்லவர்களை" சரித்திர ஆசிரியர்களுக்குத் தெரியுமா?
>
> ...
>
> பல்லவர்கால தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஏதேனும் தகவல்கள் உள்ளனவா?
"பல்லவர்" காலத் தமிழ் இலக்கியங்கள் பட்டியலிஅடப்படுகின்றன, அருமை.
ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் அதில் "பல்லவர்" என்ற பெயர் உள்ளதா
என்பதுதான்?
ஆர்தர் வின்சென்ட் ஸ்மித் சாதாரமான ஆள் இல்லை, நிறைய விஷயங்களை
அறிந்தவன். இந்திய சரித்திரம் இப்படித்தான் எழுதப்படவேண்டும் என்று
தீர்மானித்ததில் முக்கியப் பங்கு வகித்தவன். அவன் பார்வையில் படாமல்
அல்லது திருத்தாமல் எந்த புத்தகமும் வெளிவந்ததில்லை எனலாம்.
"பல்லவர்கள் இந்திய சரித்திரத்தில் இருக்கும் பல மர்மங்களில் ஒன்றாக
இருக்கிறது. பல்லவர்கள் பஹ்லவர்கள், அதாவது வடமேற்கத்தைய பார்த்தியர்கள்
அல்லது பாரசீகர்கள் என்று மேலெழுந்தவாரியாக ஒரு சொல்லின் சப்தத்தின்
ஒப்புமையை மட்டும் வைத்துக் கொண்டு யூகமாகக் கூறுவதை முழுவதுமாக
அடிப்படையற்றது என்று ஒதுக்கப்படுகிறது. அவர்களைப் பற்றிய தெரிந்த
விவரங்கள் எல்லாம் அவர்கள் தென்னிந்திய தீபகற்பத்தைச் சேர்ந்த - இனம்,
குழுமம் அல்லது சமூகக்கூட்டம் என்றேக் காட்டுகிறது. அதாவது, அவர்கள்
ஆரம்பக்கால தமிழ் பாரம்பரியத்தில் முக்கியமான பங்கு வகித்த கிராமிய ஆடு-
மாடு வளர்த்த குறும்பர்கள் என்பவர்களே ஆகலாம் அல்லது அவர்களுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கலாம் / சம்பந்தப்பட்டிருக்கலாம். சில
நேரங்களில் பல்லவர் "காட்டுவாசிகள்" என்றும் விவரிக்கப்படும்போது,
கள்ளர்களுடனும் ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் எனலாம். ஏனெனில் அவர்கள்
எல்லோரும் வெற்றிக்கொள்ளமுடியாத அக்காலத்து வீரவர்க்கத்தினர் ஆவர்
மற்றும் இக்காலத்து "தைரியமான, கட்டுக்கடங்காத மற்றும் வீரதீர பழக்கங்கள்
கொண்ட"வர்களுடன் இணைக்கப்படுகின்றனர். இன்றைய திருச்சி, தஞ்சாவூர், மதுரை
நகரங்களுக்கு இடைப்பட்ட பிரதேத்தை ஆளும் புதுக்கோட்டை அரசன், தான்
கள்ளர் மரபினன் என்றும் பல்லவர் வழிவந்தவன் என்றும் கூறி பெருமைப்பட்டுக்
கொள்கிறான். அவன் தனது மூதாதையரது பழக்க-வழக்கங்களையெல்லாம்
ஒழித்துவிட்டு நவீனகால மரியாதைக்குரிய ஆட்சியாளனாக இருக்கிறான். அவன்
திருச்சியின் கலெக்டரின் ஆலோசனை கூறுபவர்களின் உதவியுடன் ஆட்சி
செய்கிறான்.
பல்லவர்களின் சரித்திரம் எல்லோராலும் முழுவதுமாக மறக்கப்பட்டு விட்டது.
சில உள்நாட்டு மொழிகளில் அங்கும்-இங்கும் அவர்களைப் பற்றியது போல, ஏதோ
சிறு-சிறு குறிப்புகள் இருக்கலாம், இருப்பினும் 1840ற்கு முன்பு
ஐரோப்பியர்களுக்கு நிச்சயமாக உறுதியாக தெரியப்படவில்லை. அப்பொழுதுதான்
அவர்களது கல்வெண்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துக் கொண்டிருந்தன.
அப்பொழுதிலிருந்து பொறுமையுடன் ஆராய்ச்சியாளர்கள் / கண்டுபிடிப்பாளர்கள்
முதலியோருடைய கடும் உழைப்பினால் பல்லவ சரித்திரத்தின் வெளித்தோற்றத்தை
ஓரளவிற்கு திரும்பப் பெற்று, அந்த வம்சாவளியை இந்திய சரித்திரத்தில்
அதற்குரிய இடத்தில் வைத்தார்கள் என்பது ஒரு சாதாரண விஷயமல்ல".
என்று அவன் சொல்லியிருக்கிறான்! [என்னால் முடிந்த அளவிற்கு ஆங்கிலத்தில்
உள்ளதை மொழிபெயர்த்திருக்கிறேன். முன்பே குறிப்பிட்டபடி புத்தகத்தில்
பார்த்து கொள்ளலாம்]
இதில் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக நோக்கத்தக்கது.
> படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
> கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
> அடிமலர் அன்றி வேறொன் றிவினில் குறியா நீர்மைக்
> கொடிநெடுந் தானை மன்னர் கோக்கழற் சிங்கர் என்பார்.
தொண்டைமான்
கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி
புரிந்தோனாவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை
சேர்ந்தவன். இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை
நாட்டை அரசாண்டு வந்தனர்.
பல்லவர்
இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும்,
சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன் ஆட்சி
புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர்,
அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு
வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னும் பெயர்களும், அந்நாடு முன்பு
காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர்
அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும்,
ஒருவகுப்பினரையே குறிப்பன. சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும்
சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று
கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும்
இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.
(தமிழ் விக்கிபீடியா)
தொடர்ந்து தமிழகத்தின் சமஸ்தானாதிபதிகளுக்கும் ‘தொண்டைமான்’ என்னும்
பட்டம் எப்படி ஏற்பட்டது ?
தேவ்
தேவ்
> ...
>
> read more »
> சிற்றரசர்களாகிவிட்ட சூழ்நிலையில் பல்லவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆதி
> அங்கீகாரம் இந்த தொண்டைமான் பட்டம் மட்டுமே.அவர்கள் சோழர்கள் காலத்தில்
> ஆண்டுகொண்டிருந்த பகுதியும் வடதமிழகமாகவே இருந்தது. (புதுக்கோட்டை பற்றிக் >கேட்டீர்களேயானால்,அவர்கள் ஆதியிலேயே பல்லவகுலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் >கொண்டனர்) ?//
எமது சிற்றூரின் ( இலஞ்சி) முக்கிய அங்கம் ‘தொண்டைமான் குளம்’
பிற்காலப் பாண்டியர்களால் சீரமைக்கப்பட்ட இப்பகுதியில்
தொண்டைமானின் பெயரோடு ஒரு நீர்நிலை.
இதைப் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் தொடர்பு படுத்துவதா,
பல்லவ வம்சத்துடன் தொடர்பு படுத்துவதா என்று தெரியவில்லை.
இப்பகுதியின் ஆலயங்கள் எவற்றுக்கும் பல்லவர் தொடர்பு கிடையாது;
புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குச் சொந்தமானது எதுவும் இப்பகுதியில் இல்லை.
தேவ்
தொண்டை - throat ?!
இவர்கள் குரல்வளம் மிக்கவர்கள் போலும். :-)
http://tnenvis.nic.in/floral_gal/cappariszeylanica.jpg
I wonder, Dr.Prabakar may enlighten us more on this person. Probably a
Botany professor?
Kannan
2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>:
பி. சி. சாப்ரா இந்திய தொல்துறை நிர்வாகி தமது “பல்லவர் காலத்தில் இந்தோ-
ஆரியர்களின் கலாச்சார விரிவாக்கம் (கல்வெட்டுகளின்
ஆதரத்துடன்)” [Expansion lof Indo-Aryan Culture During Pallava Rule (as
evidenced by Inscriptions). Munshi Ram Manoharlal, New Delhi, 1965]
என்ற நூலில் பல ஆர்வமூட்டும் விஷயங்களைத் தந்துள்ளார்.
1. 2ம் நூற்றாண்டிலிருந்து CE பல்லவர்களின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி
ஒரு வலுவுள்ள பேரரசாக வளருகின்றது.
2. 7வது நூற்றாண்டில் உச்சநிலையை அடைகின்றது. பிறகு அது வலுவிழந்து9ம்
நூற்றாண்டில் மறைந்துவிடுகிறது [தாங்கள் கொடுக்கும் இலக்கிய ஆதாரங்கள்
எல்லாம் “பல்லவர்கள்” மறைந்த பிறகுதான் உள்ளன. பல்லவர்கள் இல்லாத
காலத்தில் பல்லவர்களைப் பற்றி ஏன் இலக்கியங்கள் குறிப்பிடவேண்டும்?].
3. ஐந்தாம் நூற்றாண்டில் தென்மேற்காசிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள
பல்லவர்களின் கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன. அவை
தென்னிந்திய கிரந்த எழுத்துடன் ஒப்பிடலாம் [ஆனால் அந்த பல்லவ கிரந்த
வரிவடிவங்கள் பிற்காலத்தையது என்று தேதியிடப்படுகின்றன].
4. இந்தியாவில் அசோகனுடைய பிரம்மி எழுத்துவடிவங்கள் c. 272 BCE
காணப்படினும், தென்மேற்காசிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள
கல்வெட்டுகள் பல்லவ-கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன [புத்த மதம் பல
நாடுகளுக்குப் பரவியிருந்தது என்றால் அவர்களது கல்வெட்டுகள் ஏன்
காணப்படவில்லை].
5. எட்டாம் நூற்றாண்டில்தான் ஜாவாவில் இந்தியாவைச் சார்ந்த ஒரு நகரிக்கு
முந்தைய வரிவடிவம் காணப்படுகிறது [N. J. Krom, Hind-Java, Gesch, p.5].
சைலேந்திரிய அரசர்களின் கீழுள்ள ஜாவாவிலும், யசோவர்மனின் கம்போடியாவிலும்
அந்த வரிவடிவன் காணப்படுகிறது [B. R. Chatterji, Indian Cultural
Influence in Cambodia, p.110]. அதாவது வரிவடிவம் ரீதியாக, அதுவரை
“இந்தியத் தாக்கம்” இல்லை!
6. தென்னிந்திய பல்லவர்களின் ஆதிக்க வளர்ச்சி, இந்த தென்மேற்காசிய
நாடுகளில் காணப்படும் பல்லவ தாக்கத்துடன் ஒத்துப்போகின்றது. இதனால்,
கடல்வழி தொடர்பு இருந்திருக்கவேண்டும் எனத்தெரிகின்றது. அதாவது “இந்திய
பல்லவர்கள்” “பல்லவ கால”த்திற்கு முன்பேயே தென்மேற்காசிய நாடுகளில்
இருச்ந்திருக்க வேண்டும்!
7. மேலும் விந்தையான விஷயமென்னவென்றால் இங்குள்ள கல்வெட்டுகள் இஎதியாவின்
சம்பந்தத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை.
8. ஸர் வால்டெர் எல்லியட் என்பார் 7வது நூற்றாண்டுக்கு பல
நூற்றாண்டுகளிக்கு முன்பு பாலார் மற்றும் பெண்ணார் ஆறுகளுக்கு இடைப்பட்ட
பிரதேசத்தில் இருந்த குரும்பர்கள் என்பவர்கள் கப்பல்கள்
வைத்திருந்திருந்தனர். அவர்கள் கடல்வழி வாணிகம் செய்து வந்தனர் [Sir
Walter Elliot, Coins of Southern India, in Numismata Orientalia, pp.
36,37]. அவர்கள் இரட்டைப் பாய்மரக் கப்பலின் சின்னத்தை தமது நாணயங்களில்
பொரித்தனர். ஆனால், பல அத்தகைய நாணயங்கள் அழிக்கப் பட்டுவிட்டன.
அதுமட்டுமல்ல, வால்டர் எல்லியனுடைய சேகரிப்பிலிருந்து குறிப்பிட்ட
அத்தகைய நாணயங்கள் மறைந்து விட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்
[K. V. RamaKrishna Rao, The Riddles of Pallava Script, a paper
presented at the SIHC, 26th Session held ast Bangalore from March 3rd
to 5th, 2006;
….……………………….., The Ship-type coins of Tamizhagam, a paper presented at
THC at Rajapalayam held from Feb. 2nd to 4th 2007
........................................, The Appearance and
Disappearance of Ancient Indian Coins, to appear in "A Festschrift to
Dr Raja Reddy"].
9. அதாவது அந்த பிரதேசத்தில்தான் பல்லவர்களும் ஆட்சி புரிந்து வந்தனர்.
ஆகையால், பல்லவர்களுக்கும் “குரும்பர்களுக்கும்” தொடர்பு இருக்கவேண்டும்.
10. அதே மாதிரி 12ம் நூற்றாண்டு வரை ஆப்பிரிக்க, மத்தியத்தரைக்கடல்
நாடுகளுடன் வியாபாரம் செய்து வந்த கடம்பர்களுக்கும் பல்லவர்களுக்கும்
சம்பந்தம் இருக்க வேண்டும். தண்டிவர்மன் c.775-c.826 CE, அக்கலனிம்மதி
(?) என்ற கடம்ப இளவரசியை மணம் புரிந்துக் கொள்கிறான் [Inscriptions of
Paalava].
வேதபிரகாஷ்
05-12-2009
திரு.திவாகர், விஜய், சதீஷ், மற்றும் நண்பர்களே,சென்னை சுற்று வட்டாரத்தில் ஏதேனும் பல்லவர் காலத்து ஆலயங்கள் இருக்கின்றனவா? அவற்றைப் பற்றிய தகவல் தரமுடியுமா? சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் ஒரு பல்லவர் காலத்து ஆலயம் ஒன்றிற்குச் சென்றிருக்கிறேன். இம்முறை சென்னையில் இருக்கும் போது பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்ல வேண்டும்.
அன்புடன்சுபா
சென்னை பகுதிகள் பல்லவர்கள் நேரடி நிர்வாகத்தில் இருந்ததால் பல பல்லவர்
கால கோவில்கள் உள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலை ஆழ்வார்கள்
பாடியுள்ளனர். ஹிண்டு கட்டுரை படி (http://www.hindu.com/fr/2004/05/21/
stories/2004052102020600.htm)
A Pallava king built the present temple in the eighth century. The
gopuram was also built by a Pallava king - Tondaiman Chakravarthy.
Kodambakkam Sri Vyakrapureeswarar Temple
North Chennai Sri Kailasanathar Temple at Madhavaram This is a
7th century temple built by the Pallava King Nandhivarman II
About Pallava connections to Kodambakkam
http://www.hinduonnet.com/thehindu/fr/2004/01/02/stories/2004010201511200.htm
விஜயராகவன்