இன்னும் கொஞ்சம் தொழில் நுட்பர்கள் கூட உழைத்தால் த.ம.அயின் சேகரங்கள்
அனைத்தையும் பட்டியலிட முடியும். அப்போதுதான் நமது சேகரங்களின் வளம்
தெரியும். பலர் நமது வலைப்பக்கங்கள் பக்கமே வருவதில்லை, எனவே தெரிந்து
கொள்ளாமல் இருக்கின்றனர்.
எப்படியும் நமது ஒலிப்பதிவுகள் அட்டவணைப்பட வேண்டும்.
இந்த மன்றத்தில் நிறையப் பேர் தினமும் சேருகின்றனர். யார், யாருக்கு
என்னின்ன திறமைகள், யாருக்கு நேரமிருக்கிறது, யாருக்கு ஆர்வமிருக்கிறது
என்பதெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை.
எங்கே? அடி ஆழத்திலிருந்து `இதோ நானிருக்கிறேன்` எனும் குரல் கேட்பது போலில்லை?
கண்ணன்
2009/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> http://www.tamilheritage.org/old/text/ebook/ebookcat.html.
2009/12/1 N. Kannan <navan...@gmail.com>
இந்த மன்றத்தில் நிறையப் பேர் தினமும் சேருகின்றனர். யார், யாருக்கு
என்னின்ன திறமைகள், யாருக்கு நேரமிருக்கிறது, யாருக்கு ஆர்வமிருக்கிறது
என்பதெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை.
திவாஜீ! திவாஜீ! நீங்கள் க்ரோம்பேட்டை எமைடியில் வகுப்பு எடுத்தபோதே, அக்கரை சீமையிலெருந்து அக்கரையாக்கேட்டேனே, ஞ்யாபகம் இருக்கோ? அப்போது இருபது பேர் போல வந்தார்களாமே? அவர்கள் ஏன் வாளாயிருக்கிறார்கள், ஐயா>?
உத்தமம், த ம அ இரண்டும் சமகாலக் குழந்தைகள். த ம அக்கான அஸ்திவாரம்
1990களின் இறுதியிலும், தமிழகத்தில் 2000 ஆண்டு நடந்த இரு நிகழ்வுகளிலும்
போடபடுகிறது.
தமிழின் முதல் நாவல் எனக் கருதப்படும் அத்தியூர் அவதானி சரித்திரம்,
திரு.நரசைய்யா அவர்களின் உதவியால் மின்னாக்கம் பெறுகிறது (சிட்டியின்
திறனாய்வுக் கட்டுரை முக்கியம்)
பாரதிதாசன் `பாரதமாதா` குறித்து எழுதிய அரிய புத்தகமொன்று திரு.மாலன்
அவர்கள் உதவியால் மின்னாக்கம் பெறுகிறது. இது பாரதிதாசனை ஒரு தேசபக்தனாக
இனம் கட்டும் புத்தகம்.
சித்தி ஜுனைதா பேகம் அவர்களை த.ம.அ மின்னுலகில் அறிமுகப்படுத்துகிறது.
இதில் இரு சிறப்புகள். தமிழின் ஆரம்பகாலத்தில் உருவான பெண்
எழுத்தாளர்களுள் சித்தி முக்கியமானவர். சிறுபான்மையினரான முஸ்லிம்
சமூகத்தில் பிறந்தவர்.
தமிழின் முதல் OCR புத்தகம் வெளியாகிறது.
தமிழில் அண்டகோளம் பற்றிப் பேசும் பூகோள பகோள விஷயத்தை ஸ்ரீரங்கம்
மோகனரங்கன் அறிமுகப்படுத்துகிறார்.
தமிழுக்கும் சிந்து சமவெளி நாகரீகத்திற்குமுள்ள தொடர்பு மற்றும் தமிழின்
பழமை பற்றிப் பேசும் அரிய ஆவணங்களின் மின்னாக்கம்...
இப்படி...
திவாஜியும், ரங்கனும் team up ஆன பின் பல அரிய புத்தகங்கள் நம் கைவசம்
வந்து சேர்ந்துள்ளன. இது போன்ற செய்திகளை மேலும் பிரகாசிக்கச் செய்ய
இம்மாதிரி பட்டியல் உதவி செய்யும். நமது புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள்
இன்ன பிற பட்டியிலிட ஆர்வமுள்ளவர் வந்துதவக் கோருகிறோம்.
கண்ணன்
2009/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>: